பெரும்பான்மையாக , அகதியாக சென்றவர்களுக்கு பல நாடுகளில் குடிமகன்
அந்தஸ்து கிடைத்து விட்டது என நினைக்கிறேன். அதனால் அகதியாக
சென்றவர்களில் 90% பேர்கள் , இப்போது அகதிகள் இல்லை என நம்புகிறேன்.
விஜயராகவன்
விஜயராகவன்
----- Original Message -----From: Kannan NatarajanSent: Sunday, August 30, 2009 7:40 PMSubject: [MinTamil] அவியல் - நாள் நல்ல நாள்எழுத்துக்கும், எழுத்தாளர்களுக்கும் அங்கீகாரம், ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் எழுதுவதால் மட்டும்தான் கிடைக்கும் என்பதில்லை. வியாபார சஞ்சிகைகளில் எழுதாமல் இருந்திருந்தாலும்,
பிரபலமாகி இருப்பார்கள் என்பதில் சந்தேகம் என்ன?
- புதுமைப் பித்தனும்
- தி.ஜானதிராமனும்
- ஜெயகாந்தனும்
எழுதியவர் தமிழ்நாட்டில் வளர்ந்து, வசிப்பவர். அதனால் அனுபவம் இல்லாதவர்
தோணி ஏறுதல்,
migrant psychosis இவற்றை பற்றி எழுதினால், அதற்கு அவ்வளவு க்ரெடிபிலிடி
இல்லை.
மேலும், பல நாடுகள் அகதிகளுக்கு குடிமகன் அந்தஸ்து கொடுப்பத்தை
இளக்காரமாக பார்ப்பது சரியில்லை. அந்த விஷயத்தில் இந்தியா, ஸ்ரீலங்கா
அரசுகளே பெரும் குற்றவளிகள்; முக்கியமாக ஸ்ரீலங்கா அரசு. லட்சக்கணக்கான
தோட்டத்தமிழர்களை திரிசங்கு சுவர்கத்தில் வைத்துள்ளது. இந்திய அரசும் ஈழ
அகதிகளுக்கு குடிமகன் நிலை கொடுக்காமல், முகாம்களில் வைத்துள்ளது.
> எளிதாகச் சொல்லிவிட்டீர்! ஆனால் அப்படியானா அகதிகளின் கடுந்துயரிலும், மறவாத
> விருந்தோம்பல். மற்ற நாட்டு தமிழர்கள் அனைவருக்கும் நம் மனம் வேண்ட(டுத)ல்.
கடந்த 60 வருட காலங்களில் 100-150 மில்லியன் மக்கள் உலகெங்கிலும் அகதிகளக
சென்று , வாழும் நாட்டை மாற்றினர் . அதனால் உலகம் எப்படி அகதிப்
பிரச்சினையை சமாளிப்பது என்பதில் அனுபவம் கொண்டுள்ளது. அகதிகளாகவோ, சுய
விருப்பத்துடன் சென்றனரோ, அந்தந்த நாட்டில் குடிமகன்களாக ஆனவர்கள் ,
வாழ்க்கையில் சுபிட்சம் அடைவார்கள் என நம்புவோம்.
விஜயராகவன்
சிறீதரன்
நீங்கள் அங்குள்ள பெயர்களையும் , மற்ற சொற்களையும் விகி கொள்கைப்படி
Current Tamil Usage, Reliable primary/ secondary sources ஒத்து போகும்
படி எழுதினால், அது தவறு ஒன்றும் இல்லை என நினைப்பேன். நீங்களே, அதை
நிச்சயப் படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் என குறிப்பிட்டது சரிதான்,
நீங்கள் கம்யூனிஸ்டை பொதுவுடமை என எழுத வேண்டும் என அடம் பிடிக்காதது
நல்லது.
விஜயராகவன்
சமீபத்தில் எழுத்தாளர் ஆர்.வியின் முதலாம் நினைவுநாள் விழா முடிந்து வெளியே வரும்போது நண்பர் "சொல்கேளான்" ஏ.வி.கிரி அன்புப் பரிசாக அவர் எழுதிய "சிந்திக்க வேண்டுகிறேன்..." கவிதைத் தொகுப்பைப் பரிசளித்தார்.

"சமுதாய
சீர்கேடுகளாலும் அவலங்களாலும் பாதிக்கப்படாவிட்டால், அவன் என்ன கவிஞன்?
தன்னுணர்வு மட்டுமே கவிதை என்று தனக்காகத் தன்னைப் பற்றியே எழுதக் கொள்ளும் கவிதையை அவர் தனக்குத் தானே படித்துக் கொள்ளட்டும்" என்கிற சமூகப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட கவிதைகள் ஏ.வி. கிரியுடையது.
தேவாரம் திருவாசகம்
தெரியாது
இராமாயணம்... மகாபாரதம்
பைபிள் குர்ரான்
திருப்பாவை திருவெம்பாவை
கந்தர் சஷ்டி... சுப்ரபாதம்
பெரியபுராணம்
ஆழ்வார் பாசுரம்
எதுவும் எனக்குத்
தெரியாது
ஒன்றுமட்டும்
தெரியும்
"தீதும் நன்றும்
பிறர் தர வாரா..."

ஆகா! இன்றைய நற்சிந்தனையாக இதை நான் காண்கிறேன்!!
க.>
2009/9/20 N. Kannan <navan...@gmail.com>
இது எங்கேயோ போயிடும் போலருக்கே. அதிலே நான் கட் பண்ண விட்டுப்போன
வரிகளையும் சேர்த்தால் இவ்வளவுதான் :
> ஈரமுள்ள நெஞ்சத்தில்தான் காதல் துளிர்க்கும். காதலிக்கத் தெரிந்தவர்களிடம் தான் இரசனை இருக்கும். >இரசனை இருந்தால் மட்டுமே எழுத்தாளனாக முடியும்.
இதிலேயும் வம்பு வருமோ?
க.>
2009/9/20 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
ஓம்.
தமிழ் அகராதிகளும் அவற்றை உருவாக்கியவர்களும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
- சதுரகராதி:-இதை உருவாக்கியவர் வீரமா முனிவர்.1732-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
- பெப்ரியசு அகராதி:- பெப்ரியசு. 1779-ஆம் ஆண்டு வெளிவந்தது.
- ராட்லர் தமிழ் அகராதி- பாகம் 1:- இதை தொகுத்தவர் ராட்லர்.1834
- ராடர் தமிழ் அகராதி- பாகம் 2:-1837-இல் வெளிவந்தது.
- ராட்லர் தமிழ் அகராதி-பாகம் 3:-1839-இல் வந்தது.
- ராட்லர் தமிழ் அகராதி- பாகம் 4:-1841-இல் வந்தது. ..............,,,,,,,
சூப்பர் ஐடியா!
நமது விக்கி உருவானவுடன் உங்கள் தலைமையிலேயே தற்காலத் தமிழ் அகராதி
(உள்ளது உள்ளபடி) தயாரிக்க ஆரம்பிக்கலாம்.
க.>
2009/9/21 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
--
விக்கி என்றால் எல்லோரும் தேர் இழுப்பதுதானே! பயமற்க.
க.>
2009/9/21 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

தமிழ்
நாடக இயலுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் ஆற்றியிருக்கும் பங்களிப்பு
வார்த்தையில் அடங்காது. தமிழ் நாடகம் என்பது பல அவதாரங்களை எடுத்து,
பல்வேறு தாக்கங்களுக்கு உள்பட்டு நாளும் பொழுதும் மாற்றங்களை
ஏற்றுக்கொண்டு வளர்ந்த ஒரு கலையாக நம்முன் காட்சி அளிக்கிறது.
சென்னை பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை பேராசிரியர் வீ.அரசு
குறிப்பிடுவதுபோல, தமிழ் அரங்க மரபு என்பது,

மதுரை
செல்லும் போதெல்லாம் தமிழண்ணலை நேரில் சந்தித்து அளவளாவ வேண்டும் என்று
பலமுறை நினைத்தும் நடக்கவில்லை. எனது எண்ணம் சமீபத்தில் அன்பர்
அகமுடைநம்பியால் நிறைவேறியது. அவர் எழுதிய "பாரதி பாவலன்" நூல் வெளியீட்டு
விழாவில் தமிழண்ணலைச் சந்தித்து அளவளாவ முடிந்தது அடியேன் பெற்ற பாக்கியம்.
முனைவர் இராம.பெரியகருப்பன் என்று சொன்னால் தெரியாதவர்களுக்கும் கூட
"தமிழண்ணல்" என்று சொன்னால் சட்டெனத் தெரியும். தமிழண்ணலைத்
தெரிந்தவர்களுக்கோ "வாழும் நக்கீரன்" என்று அவரை அழைப்பதில் அலாதி இன்பம்.
தவறு கண்டால் சுட்டிக் காட்டும் தமிழண்ணல், தவறுகளைத் திருத்துவதிலும்
முனைப்புக் காட்டுபவர்.
செம்மொழி ஆய்வு மையம் மைசூரிலிருந்தபோது, அதன் கருத்துரைஞர் குழு
உறுப்பினர்களில் தமிழண்ணலும் ஒருவர். அப்போது, தொல்காப்பியம்,
திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, இரட்டைக் காப்பியம் உள்ளிட்ட 41 பழந்தமிழ் நூல்களுக்கு "மரபு வழிப் பதிப்பு" கொணர்வது என்று முடிவெடுத்தது அந்தக் கருத்துரைஞர் குழு.
அற்புதமான முயற்சி அல்லவா?
அது காலத்தின் கட்டாயம் அல்லவா?
இத்தனை நாள்கள் செய்யாமல் விட்டதே தவறல்லவா?
அது என்ன "மரபு வழிப் பதிப்பு" என்றுதானே கேட்கிறீர்கள்?
பழந்தமிழ் நூல்கள் அனைத்தும் இன்று எழுத்துப் பிரித்துப்
பதிப்பிக்கப்படுகின்றன. இந்தப் பதிப்புகள் பலவும் தவறாகவும் உள்ளன.
மக்களுக்குப் போய்ச்சேர வேண்டும் என்பதற்காக பதம் பிரித்து
வெளியிடப்படுவதில் தவறில்லை. அதற்கு, மூலம் எப்படி இருக்கிறது என்பது
தெரியவேண்டியது அவசியமாகிறது.
உதாரணத்திற்கு, "கொழுநன் தொழுதெழுவாள்"
என்றுதான் பரவலாகக் குறள் பதிப்பிக்கப்படுகிறது. ஆனால் மூலம்
"கொழுநந்றொழுதெழுவாள்" என்றுதான் இருக்கிறது. ஆகவே, மூலமும்
ஆவணப்படுத்தப்பட்டால் மட்டுமே உண்மைப் பொருள் நிலைபெறும் என்பது
தமிழண்ணலின் கருத்து மட்டுமல்ல, தமிழ்மொழி சிதைந்துவிடக் கூடாது என்று
நினைக்கும் அவரின் கருத்தும் கூட.
இப்படியே போனால் பதம் பிரித்து,
பதம் பிரித்து மூலம் சிதைந்துவிடும் அபாயம் நிச்சயமாக உண்டு. எதிர்கால
மக்களுக்கு ஏடுகளைத் தேடிப்போக முடியாத நிலையில், அதே வடிவில் பதிப்பித்து
காலாகாலத்திற்குப் பழைய பதிப்பை அளிப்பதே இதன் நோக்கம். இதன் மூலம்,
பிரித்துப் பதிப்பித்தவை சரியா தவறா என தெளிவுபடுத்திக்கொள்ள முடியும்.
ஏடுகள் சிதைந்த நிலையில் இப்பதிப்புகள் ஏடுகளின் வழிப்பட்ட மீட்டுருவமாக என்றென்றும் நிலைபெறும். ஏடுகளில் உள்ளபடியே, சிறிதும் பிரிக்காமல் எப்படி இருந்திருக்குமோ அதேபோல பதிப்பிப்பதும், அதன்மூலம் அவற்றை ஆவணப்படுத்துவதும்தான் மரபு வழிப் பதிப்பின் நோக்கம்.
41
பழந்தமிழ் நூல்கள் ஏறத்தாழ ஓராண்டு காலம் உழைத்து தமிழறிஞர் பலரால்
உருவாக்கப்பட்டு அச்சுக்கு ஆயத்தமாய் உள்ளன என்கிறார் தமிழண்ணல். மேலும்,
தமிழண்ணல் கூறுவதுபோல, இதுபோன்ற "மரபு வழிப் பதிப்பு" அரசால் மட்டுமே
கொணரப்பட வேண்டும். அப்போதுதான் அரசு "அங்கீகார இசைவு" பெற்ற நூலாகவும்
அது அமையும். அதன்மூலம், அவரவர் கண்டபடி திருத்துவது தவிர்க்கப்படும்.
தமிழண்ணலின் கருத்துதான் இந்த விஷயத்தில் அடியேனின் கருத்தும். இனியும் தாமதிக்காமல், உலகத் தமிழ் மாநாட்டில் தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, இரட்டைக் காப்பியம், பதினெண் கீழ்க்கணக்கில் 17 நூல்கள், முத்தொள்ளாயிரம் உள்ளிட்ட 41 நூல்கள் "மரபு வழிப் பதிப்"பாக வெளியிடப்பட வேண்டும். தேவைப்பட்டால் ஒரு பதிப்பாசிரியர் குழு அமைக்கப்பட்டு இந்த முயற்சி விரைவுபடுத்தப்பட வேண்டும்.
கால்
நூற்றாண்டு காலத்துக்கு முன், தங்களது பேச்சாலும், எழுத்தாலும், நட்பு
நாடிக் கரம்கோர்த்த விதத்தாலும் என்னைக் கவர்ந்தவர்கள் இருவர்.
ஒருவர்,
அப்போது இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளராக இருந்த கவிஞர் திருமலைராஜன்.
அவருடைய தொடர்பு இப்போது அறவே இல்லை.
இன்னொருவர், கவிஞர் கிருஷ்ணன் பாலா.
எனது புத்தகக் குவியலை அவ்வப்போது தூசி தட்டி ஒழுங்குபடுத்துவது வழக்கம்.
அப்படி ஒழுங்குபடுத்தும்போது ஆகஸ்ட் 19, 1989இல்
கவிஞர் கிருஷ்ணன் பாலா கையொப்பம் இட்டு எனக்குப் பரிசளித்த "இந்த இராஜபாட்டையில்" என்கிற கவிதைத் தொகுப்பு கண்ணில்பட்டது.
கவிஞர் கிருஷ்ணன்
பாலாவின் கவிதைத் தொகுப்பில் "மேய்ப்பன் இல்லாத ஆடுகள்" என்கிற கவிதையை
இப்போது படித்தாலும் பொருத்தமாக இருக்கிறது.
அந்தக் கவிதையிலிருந்து ஒரு சில வரிகள்...
எளிமையைப்
போதித்த
எங்கள்
அண்ணலின்
கொள்கைகளை
நமது
தலைவர்கள்
ஏ.ஸி. கார்களில்
ஏந்திப்
பரப்புகிறார்கள்...
சுதேசி வேகம்
போய் -
அந்நிய மோகம்
ஆட்கொண்டு விட்டதால்
எங்கள்
காந்தியைக் கூட
அந்நியன்
காட்டும்போதுதான்
"ஆகா, அருமை, அற்புதம்"
என்கிறோம்...
நன்றி:- ஞாயிறு கொண்டாட்டம் (தினமணி)
நன்றி:- தினமணி
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி:- தினமலர்


சிவராத்திரி தினத்தன்று காலையில் புறப்பட்டு, தஞ்சாவூர் சென்று மூன்று காலப் பூஜைகளில் மூன்று வெவ்வேறு சிவன் கோயில்களில் பங்கு கொண்டு விட்டு, இரவு அரங்கநாதபுரம் வந்து சிவன் கோயில் பூஜையில் கலந்து கொள்வாராம்.
இந்த தகவலில் சற்று தவறு இருப்பதாக நினைக்கிறேன் .
சிவராத்திரி அன்று முதல் காலமே மாலையில் தான் ஆரம்மித்து கடைசி காலம் மறுநாள் விடியலில் முடியும் .
எனவே காலையில் சென்று தரிசிப்பது என்ற தகவல் தவறானது என நினைக்கிறேன் .
சரியா தேவ் !
.
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
"சிவராத்திரி தினத்தன்று காலையில் புறப்பட்டு, தஞ்சாவூர் சென்று மூன்று காலப் பூஜைகளில் மூன்று வெவ்வேறு சிவன் கோயில்களில் பங்கு கொண்டு விட்டு, இரவு அரங்கநாதபுரம் வந்து சிவன் கோயில் பூஜையில் கலந்து கொள்வாராம். --
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
இதுவரை இல்லாததை அடைய எண்ணினால்
இது வரை செய்யாததை செய்யவேண்டும் !
தேவ்
நன்றி திரு தேவ் ,
வழக்கமாக நான் இந்த நான்கு கால பூஜையையும் நான் நான்கு கோவிலில் கழிப்பேன் .
சிவராத்திரிக்கும் சித்தர்மரபுக்கும் சம்பந்தம் உண்டு .
மேலும் புதுவைக்கு விசேஷ சம்பந்தம் உண்டு .
அன்றுதான் சிவபெருமான் தன கைப்பட திருச்சிற்றம்பலமுடையான் என கையெப்பம் இட்ட திருவாசக ஓலையை எடுத்து பூஜை செய்வார்கள் .
வருடம் ஒரு முறைதான் .
,புதுவையில் தான் அந்த ஓலை இருக்கிறது அம்பலதாடியர் மடத்தில்
அதனால் தான் காலையில் உபவாசம் தவிர விசேஷ பூஜைகள் சிவராத்த்திரிக்கு உண்டா என்ற என்றேன் .
அன்புடன் ,
ஏ சுகுமாரன் .



எழுந்தது,. படிக்கலாம் என்று கணினியை திறந்தால், புத்த்ம்புதிய இலக்கிய செய்திகளை, கோர்வையாகத் தருகிறார், . மின்னுகிறது.
நற்காலையிது.இன்னம்பூரான்2009/11/29 Kannan Natarajan <thar...@gmail.com>கவிஞர் பேனா.மனோகரன், தமிழக அரசின் காவல் துறையில் சுமார் 30 ஆண்டுகள் பணியாற்றி, பணி நிறைவு பெற்றவர்.
இரசிக்க வைத்தன. ஒரு கவிதை என்னை மீண்டும் ஒரு முறை படிக்கவைத்தது. "தீ இனிது..."
காக்கிச் சட்டைக்குள் இருந்து கவிதை பிறக்கிறது என்றால், சற்றே வியப்பாகத்தான் இருக்கிறது.
கல்லுக்குள் ஈரம் இருப்பது போல...
வேப்பமரத்திடம் விசாரணையும், சிட்டுக்குருவியிடம் சந்தோஷமும், மாநகரமும் நரகமும்
உண்மைதான்.
கீழ்வெண்மணியில்
ஏர்வாடியில்
தருமபுரியில்
கோத்ராவில்
குடந்தையில்
பானிபட்டில்
ஈழத்தில்
ஈராக்கில்
பூமிப்பந்தின்
எங்காவது ஒரு மூலையில்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
மனித ஜீவிதம்
எரிதலும் உயிர்த்தலும்!கலாரசிகன்
நன்றி:- தினமணி


இத்தனை பெருமைகளும் ஒருங்கே அமைந்த பெருமகனார்தான் திருவாரூர் வி. கலியாணசுந்தரனார் அவர்கள்.
1908இல் திரு.வி.க. வரைந்த முதல் நூலான "சதாவதானம் நா.கதிரைவேற்பிள்ளை அவர்கள் சரித்திரம்" தொடங்கி, அவரது 54 நூல்களையும் 24 தொகுதிகளாக வழங்கி இருக்கிறார்கள். அது மட்டுமன்றி, "திரு.வி.க. முன்னுரைகள்" மற்றும் "திரு.வி.க. தமிழ்க் கொடை" அறிமுகம் ஆகிய இரு நூல்களையும் சேர்த்தால் 26.
1972லிருந்தே கவியரசரின் எண்ண ஓட்டத்தில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. இந்தக் கால கட்டத்தில் கவியரசர் "கண்ணதாசன்" என்கிற இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தி வந்தார்.
விழுப்புரத்திலிருந்து என்னைச் சந்திப்பதற்காகவே கொட்டும் மழையில் சிதம்பரம் வந்திருந்தார் இளவல் கோ.செங்குட்டுவன்.
"இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா?" என்றபடி அவர் பரிசளித்த புத்தகத்தைப் பார்த்ததும் வியந்தேன் என்பதைவிட அதிர்ந்தேன் என்பதுதான் உண்மை.
"பாவலர் சரித்திர தீபகம்" என்பது அந்தப் புத்தகத்தின் பெயர்.
......
இந்தப் புத்தகத்துக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் இந்தூர் (ம.பி.) கனடியன் மிஷன் பள்ளித் தலைமையாசிரியர் ஆஸ்பரி என்கிற வெள்ளைக்காரர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
"படித்த தமிழ்மகன் எவனிடமும் இந்தப் புத்தகத்தின் பிரதி இல்லாமல் இருக்கலாகாது என்று!"


