அரசாணையில் திருக்குறளின் அளவைக் குறைத்திருப்பது வியப்பையும்,அதிர்ச்சியையும் அளிக்கிறது. புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யும் பணிகளுக்காக மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவரான நாகநாதனைத் தலைவராகக் கொண்ட குழு சென்ற ஆண்டு அமைக்கப்பட்டது. பின்னர் மெட்ரிக் பள்ளிகளில் 10-ம் வகுப்பு தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைப்பது குறித்து அரசுக்கு அறிக்கைதர பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ராஜராஜேஸ்வரி தலைமையில் இன்னொரு குழு அமைக்கப்பட்டது. இது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் அறிக்கை தந்திருக்கிறது.
அரசு அந்தக் குழுக்களின் பரிந்துரைகளைப் பரிசீலித்து அதனை ஏற்க, பள்ளி கல்வித்துறைச் செயலர் 26-7-2007-ல் அரசாணை வெளியிட்டுள்ளார். இந்த அரசாணைப்படி குறைக்கப்பட்ட பாடத்தில் திருக்குறளும் அடங்கும்.
10-ம் வகுப்பு பாடத்தில் திருக்குறளிலிருந்து,
புகழ்,
வெகுளாமை,
இடனறிதல்,
ஊக்கமுடைமை, என நான்கு அதிகாரங்கள் இடம் பெற்றன. இவற்றுள்,
இடனறிதல்,
ஊக்கமுடைமை, ஆகிய இரு அதிகாரங்களிலும் பத்து பத்து வரிகள் - அதாவது, இருபது வரிகள் நீக்கப்பட்டுள்ளன.
நம்முடைய கேள்வி, இந்த இருபது வரிகள், மாணவர்களுக்கு ஒரு சுமையா?
திருக்குறளைக் கூடுதலாகப் படிப்பது நல்லதுதானே?
குறைக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே அளவில் குறைந்த குறளின்மேல் ஏன் கைவைக்க வேண்டும்?
இந்த இருபது வரிகள் மாணவர்களுக்கு ஒரு சுமையா?
நீக்கப்பட்டவைகளில் ஐந்து வரிகளைக் கொண்ட குறுந்தொகைப் பாடலும் உண்டு. இந்தப் பாடல் நீக்கத்திற்கு வேண்டுமானால் ஒரு சமாதானம் சொல்ல முடியும். அதாவது, அது அகப்பாடல், காதல் சம்பந்தமான பாடல் என்று சொல்லலாம். 16 வயதிலே குறுந்தொகைக் காட்சியைக் காட்ட வேண்டாம் என்று குழு நினைத்திருக்கலாம். ஆனால் குழு ஒன்றைக் கவனிக்க மறந்துவிட்டது. மாணவர்கள் ஏற்கெனவே காதல் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். திரைப்படத்திலும்,தொலைக்காட்சியிலும் காணாத காட்சியா குறுந்தொகைக் காட்சி? திரைக்காதலுக்குப் பதிலாக ஓர் ஆரோக்கியமான காதலை அவர்கள் குறுந்தொகையில் தரிசித்து விட்டுப் போகட்டுமே!
கவிஞர் தமிழ் ஒளியின் "அந்தரத்தில் மேடை அமைத்தார்'' என்ற பாடல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல. பாரதி, பாரதிதாசனுக்குப்பின் தமிழுலகம் அறியப்பட வேண்டிய கவிஞர் தமிழ் ஒளி. எனவே அவர் பாடல்கள் பாடத்தில் வருவதுதான் சரியாக இருக்கும். மேலும் "அந்தரத்தில் மேடை அமைத்தார்'' என்ற கவிதை அறிவியல் வளர்ச்சியையும், மனித ஆற்றலையும் வெளிப்படுத்துவது. இதை ஏன் நீக்க வேண்டும்? இளைய தலைமுறை தமிழ் ஒளியை அறிய வேண்டாம் என்று நினைக்கிறார்களா? நீர்த்துப்போன கவிதைகளை எல்லாம் பாடப்புத்தகத்தில் நிறுத்திக்கொண்டு, அடர்த்தியான கவிதைகளை அவசர அவசரமாக நீக்குவதேன்?
உரைநடைப் பகுதியில் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் எழுதிய மனையியல் என்ற கட்டுரை எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்து,துணைப்பாடத்தில் இரண்டு கதைகள் நீக்கப்பட்டுள்ளன.
நீக்கப்பட்ட ஒரு கதை அசோகமித்திரனின் "விடிவதற்குள்" என்ற சிறு கதையாகும். சென்னை நகரில் தண்ணீர் பஞ்சத்தால், விடிவதற்குள் தண்ணீர் பிடித்து வைப்பதற்காக அலையும் ஒரு குடும்பத்தலைவியின் கதை இது. தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும்போது, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பதைச் சித்திரிக்கும் கதை இது.
தண்ணீர்த் தட்டுப்பாட்டை இப்படி படம்பிடித்துக் காட்டினால், அரசு மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்ற எண்ணமோ தெரியவில்லை; நீக்கிவிட்டார்கள். இது ஒரு யதார்த்தமான கதை. ஒரு வாழ்க்கைப் பதிவு. அப்படித்தான் குழு பார்த்திருக்க வேண்டும். ஆனால் குழு அரசியல் நோக்கில் கணக்குப்போட்டு கழித்தல் வேலையைச் செய்திருக்கிறது. இப்படிப் பார்த்தால் வாழ்க்கையின் சிரமங்களைச் சித்திரிக்கும் எந்தக் கதையும் பாடப் புத்தகத்தில் இடம் பெற முடியாமல் போய்விடும்.
முற்போக்கு எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாளின் "மண்ணாசை" நீக்கப்பட்ட, இன்னொரு கதை. இந்தக் கதையின் நீக்கத்திலும் அரசியல் இருக்கிறது.
பட்டாளத்தில் வேலைபார்த்து சொந்த மண்ணுக்குத் திரும்பும் பட்டாளத்தார் தாம் கொண்டுவந்த பணத்தை எல்லாம் நிலத்தில்கொட்டி மா, பலா, கொய்யா என்று மரங்களை வளர்த்து, தன் வாழ்க்கையையே அவற்றோடு பிணைத்துக்கொள்கிறார்.
அவருடைய மகன் கொஞ்சம் தோட்டத்தை வைத்துக்கொண்டு, மீதித் தோட்டத்தை எல்லாம் மனைகளாகப் பிரித்து, புதிய நகரை உருவாக்கப்போகும் நபர்களுக்கு விற்க ஏற்பாடு செய்து, கடைசியில் தோட்டம் விற்கப்படுகிறது. பத்திரத்தைப் பதிவு செய்துவிட்டு வரும் பட்டாளத்தார், அதற்குள் மரங்கள் வெட்டப்படுவதைப் பார்த்து, மரத்தோடு மரமாய் சரிந்து விழுகிறார். மரணப் படுக்கையில் நாள்கள் ஓடுகின்றன. மண்ணாசைதான் உயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் அவருடைய மைத்துனர், தோட்டத்திற்குப்போய் மண் எடுத்து வந்து, தண்ணீரில் கரைத்து பட்டாளத்தார் வாயில் ஊற்றுகிறார். சிறிது நேரத்தில் ஒரே விக்கலோடு உயிர்போய்விடுகிறது.
இந்தக் கதையைப் பாடத்திலிருந்து விலக்குவதில் ஓர் உள்ளார்ந்த அரசியல் இருப்பதாகத் தெரிகிறது. நிலங்களைக் கையகப்படுத்தும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும், பெரும் தனியார் நிறுவனங்களுக்கும் மக்கள் மத்தியில் இப்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்தச் சூழலில் "மண்ணாசை" கதையைப் படித்தால் மண்ணாசை அதிகமாகுமே என்ற எண்ணமும் இக்கதையை நீக்க ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
தமிழ் ஒளி, சோலை சுந்தரபெருமாள் போன்றவர்கள் முற்போக்குச் சிந்தனையாளர்கள். முற்போக்கு வாசத்தை மாணவர்கள் நுகர்ந்துவிடக் கூடாது என்பதும் குழுவின் குறிக்கோளாக இருந்திருக்க வேண்டும். திருக்குறளின் அளவைக் குறைப்பது என்பது குழுவின் நோக்கமாக இருந்திருக்காது. தாங்கள் அரசியல்நோக்கில் எடுத்த முடிவை அமலாக்க "திருக்குறளிலேயே சில குறள்களை எடுத்துவிட்டோம்" என்று காரணம் காட்டுவதற்குத்தான் திருக்குறளிலும் கைவைத்திருக்கிறார்கள் என்று கருதத் தோன்றுகிறது.
மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கைதான். அதற்காக மாணவர்கள் சிரமப்படும் பாடங்களில் சுமையைக் குறைக்க வேண்டுமே தவிர, சிந்திக்க வைக்கும் பாடங்களை நீக்கக்கூடாது.
தமிழக அரசு தாமதம் செய்யாமல் தன்னுடைய அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும்.
ஆஹா நல்ல உதாரணம். வாழ்க தமிழ்த் தேனீ
On 10/26/07, Thamizth Thenee <rkc...@gmail.com > wrote:நண்பர்களே இந்தக் கட்டுறையைப் படித்தவுடன்
இதே மாதிரி அசட்டு ஆச்சான் ராமாயண காலத்திலேயும் இருந்தார்கள் என்று
ஞாபகம் வந்தது
திரு லக்ஷ்மணன் ஆதி சேஷனின் அவதாரம்
அவர் இப்போது நான் எழுதப்போகும் விஷயத்துக்குஎன்னை மன்னித்து அருள்
பாலிப்பாராக
ஸ்ரீராமன் வனவாசம் சென்றாயிற்று ,ஸ்ரம பரிகாரம் செய்து
கொண்டிருக்கின்றனர் அனைவரும்,
அப்போது ஒரு அசட்டு ஆச்சான் ஓடி வந்து ல்க்ஷ்மணன்
காதில் பரதன் சேனை பரிவாரங்களோடு வந்து கொண்டிருக்கிறான் என்று ஒரு
விபரீதக் குரலில் சொன்னான்
லக்ஷ்மணன் ஆதி சேஷனின் அம்ஸமல்லவா உடனே கோபம் தலைக்கேறியது
ஸ்ரீராமனிடம் வந்து இதெப்படி ஞாயமாகும் நாம்தான் நாட்டையே பரதனுக்கு
கொடுத்துவிட்டு கானகமேகிவிட்டோமே இன்னும் நம்மை தொந்தரவு செய்ய பரதன்
எதற்கு இங்கு வருகிறான் ,....என்று கோபத்துடன் வினவ
ஸ்ரீராமன் ல்க்ஷ்மணனை அமைதிப்படுத்தி
நடப்பதைப் பார் ஆவேசம் கொள்ளாதே என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே
கண்ணில் பட்டது பரதனின் சிறமேற் கூப்பிய கைகளும் தொழுத தேகமும் ,அழுத
கண்களும், பரிதாபத்தின் மொத்தஉருவமாக
வந்து கொண்டிருக்கும் காட்சி
பரதன் ஸ்ரீராமனிடம் வந்து ஸ்ரீராமா ,என் மூத்த தமையனே என்னை இவ்வாறு
சோதனை செய்யலாமா,,?
என் தாய் கைகேயியின் வாக்கை தாங்கள் பெரிது பண்ணலாமா..? தாங்கள் உடனே
நாட்டுக்கு வந்து ராஜ்ய பரிபாலனத்தை ஏற்றுக் கொள்ளாவிடில் உயிரை
மாய்த்துக் கொள்வதைவிட வேறு வழி இல்லை என்று புலம்பினான் பரதன்
ஸ்ரீராமன் லக்ஷ்மண்ணனைத் திரும்பிப் பார்த்தான்
அதில் பல அர்த்தம் தெரிந்தது
லக்ஷ்மண்ணன் தலை குனிந்தான்
அதில் ஒரு அர்த்தம்
" அட அஸட்டு ஆச்சான் "
என்று அடியேன் நினைக்கிறேன்
அன்புடன்
தமிழ்த்தேனீ
On 10월26일, 오전2시20분, "srirangammohanarangan v" < ranganvm...@gmail.com>
wrote:
> உரையாசிரியர்கள் எல்லாரும் ஒரே படித்தாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும்
> ஒவ்வொரு தன்மை கொண்டவராக இருக்கின்றார்கள். அதுவும் மதநூல்களைப்
> பொறுத்தவரையில் என்றாலோ கேட்கவே வேண்டாம். ஏதோ சில
> உரையாசிரியர்களிடத்தில்தான் தாம் உரைக்கும் விஷயங்களைப் பற்றிய மிகச்
> சிறந்த அக்கறை, உள்ளபடியே பதிவு செய்தல், இடர்ப்பாடுகளை இயல்பான
> முறையில் நீக்கிக் காட்டுதல் இவையெல்லாம் இருக்கும். இந்த குணங்கள்
> எல்லாம் மிக சீர்மையுடன் திகழக் கூடிய ஒர் உரையாசிரியர்
> ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் கடைசி ஆசிரியரான ஸ்ரீமணவாள மாமுனிகள்.
> (காலம் 13, 14ஆம் நூர்றாண்டு) இவரிடத்தில் நகைச் சுவையும்
> இயல்புறக் கலந்து இருந்ததை இவருடைய சரிதையைச் சொல்லும்
> 'யதீந்திரப்ரவணப் பிரபாவம்' என்ற நூலைப் படிக்கும் பொழுது கண்டேன்.
>
> ஆழ்வார் திருநகரியினின்று அப்பொழுதுதான் ஸ்ரீரங்கத்தில் வந்து
> வசிக்கத் தொடங்யிருக்கிறார். வடமொழியும் தமிழ்மொழியும் திகழ்ந்த
> நாவர். ஸ்ரீராமானுஜரின் வேதாந்த உரையான ஸ்ரீபாஷ்யமும், நம்மாழ்வாரின்
> திராவிட வேதம் ஆகிய திருவாய்மொழியும் ஒருங்கே வல்ல நிறைமதியாளர்.
> ஸ்ரீராமானுஜருக்குப் பிறகு விசிஷ்டாத்வைத தர்சனத்தை வெறும் வடமொழி
> ஜாலமாக அடித்துவிடாமல், திருவாய்மொழியின் தெளிதேன் மணம் வீச
> வளர்ந்தோங்கச் செய்யவேண்டும் என்ற ஆர்வம் மிக்கவர். அவருடைய குருவான
> திருவாய்மொழிப்பிள்ளையும் அவருக்கு இட்ட கட்டளையும் அதுவே.
> 'திருவாய்மொழிக்கே உன் வாழ்வு' என்பதுதான். பல அறிஞர் பெருமக்கள்
> வைணவத்தில் அவரால் ஈர்க்கப்பட்டு திருவாய்மொழியின் திருமால் நெறிக்கே
> தம் நெஞ்சு பறிகொடுக்கத் தொடங்கினர்.
> ஸ்ரீரங்கம் கோவிலில் கைங்கர்யத்தில் ஈடுபடுவதும், திருவாய்மொழியை ஈடு
> வியாக்யானத்திற்கேற்ப விரித்துரைப்பதுமே வாழ்வு என்றிருந்தவருக்கு உறவினர்
> அதிகம். ஒவ்வொருவராக மரிப்பதும், அப்பொழுதெல்லாம் தம் இலட்சியப்
> பணி தடங்கல் உறுவதும் பெரும் மனக் கஷ்டத்தை ஏற்படுத்தவே பேசாமல்
> சந்நியாசி ஆகிவிட்டார். அப்பொழுது இந்த தீட்டு ஆசாரம் உறவு என்ற
> நிர்பந்தங்கள் எதுவும் தனக்கு இராது என்று.
>
> அவருடைய உண்மையான ஈடுபாட்டைப் பார்த்து பல வித்வான்கள் தங்கள்
> குடும்பம் தங்கள் நண்பர் குடும்பம், உறவினர் குடும்பம் என்று அனைத்து
> சுற்றத்தாரையும் சேர்த்துக் கொண்டு ஜீயரை (வைணவத்தில் சந்நியாசிக்குப்
> பெயர்) பார்க்க வந்தார்களாம். அதில் முக்கிய குடும்பத்துப் பெண்மணி
> ஏற்கனவே ஜீயரின் பெருமை தெரிந்தவர். ஆச்சியார் என்ற பேருடைய அந்தப்
> பெண்மணி முன்னரே ஜீயருக்கு இவர்கள் வரும் சேதியைத் தெரிவித்தல்
> நலமாக இருக்கும் என்று எண்ணி ஜீயரிடம் சேவை புரியும் ஒருவரை
> அழைத்து விஷயத்தைச் சொல்லி கூடத்தில் சீடர்களுக்கு வகுப்பு எடுத்துக்
> கொண்டிருக்கும் ஜீயரிடம் சொல்லிவிடுமாறு கூறினாள்.
>
> அவர் என்ன நினைத்தரோ! கிடுகிடு என்று ஓடிப்போய் ஜீயரிடம் காதோடு, '
> எல்லா வித்வான்களும் திரண்டு உங்களை நோக்கி வந்துகொண்டு
> இருக்கிறார்களாம்! சீக்கிரம் மறைவிடத்திற்குப் போய்
> ஒளிந்துகொள்ளுங்கள்.' என்று பதறியிருக்கிறார். ஜீயரும் ' என்னடா இது!
> நாம் யாருக்கும் நோகும்படி எதுவும் செய்யவில்லையே. நம்மை எதிர்த்து ஏன்
> வரப்போகிறார்கள்? சரி ஏதாவது கோபதாபத்தில் நடப்பதற்குள் நாம் உள்ளே
> சென்று இருப்போம். கோபம் அடங்கியதும் வருவோம்' என்று உள்ளே போனார்.
> அவர்கள் வந்தபின்னர்தான் தெரிந்தது கோபத்தில் வரவில்லை. இவ்வளவு
> நாள் தாங்கள் எல்லாம் வடமொழிக் கல்வியே சிறப்பு என்று
> இறுமாந்திருந்தது போக இப்பொழுது திருவாய்மொழியின் ஈடுபாட்டில்
> ஜீயரின் வழிகாட்டலுக்குத் தங்களை ஆட்படுத்திக் கொள்ள வந்திருக்கிறார்கள்
> என்று.
>
> விஷயம் தெரிந்து வெளியில் வந்த ஸ்ரீமணவாளமாமுனிகள், அப்பொழுதும்
> தமது கோபத்திற்கு இடம் கொடுக்காது முதலில் தனக்கு வந்து காதோடு
> எச்சரிக்கை சொன்ன பேர்வழியைக் கூப்பிட்டு, 'உன் பெயர் என்ன?' என்று
> கேட்டாராம். அதற்கு அவர் 'அடியேன் ஸ்ரீராமானுஜ தாசன்' என்றாராம்.
> அதைகேட்டு சிரித்துவிட்டு ஜீயர், ' இல்லை இல்லை உன் பெயர் இனிமேல்
> அசட்டு ஆச்சான்' என்று கூறவும் அத்தனை பேரும் சிரிப்பிலும்
> கேலியிலும் ஆழ்ந்துவிட்டார்கள்.
>
> அதாவது ஒழுங்கா ரிப்போர்ட் பண்ணத் தெரியணும். அதுவும் ஒரு கலை.
> இல்லைன்னா அசட்டு ஆச்சான்தான்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
> நன்றி:http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20071026132651&Title=Edit...
>
> On 10/27/07, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> wrote:
>
> > ஆஹா நல்ல உதாரணம். வாழ்க தமிழ்த் தேனீ
>
திருக்குறளே சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும்
ஹைகூ வடிவம்
அதையும் குறைப்பதென்பது தமிழ் தமிழ் என்று
தமிழை வளர்க்கிறோம் என்று அரசியல் பண்ணும் அரசியல்வாதிகளின் உள்
நோக்கத்தை வெட்டவெளிச்சமாக்கும்
என்பது தெள்ளத் தெளிவாகிறது
ஒரு குடும்பம் மட்டும் பிழைத்தால் போதாது
மக்கள் புறிந்து கொண்டால் நாடே பிழைக்கும்
அன்புடன்
தமிழ்த்தேனீ
இதைப் பாருங்க : http://amachu.net/blog/?p=68 (நானும் இந்தத் துறை தான்
சாமியோவ்...)
இதையும்: http://amachu.net/blog/?p=96
அரசாங்கத்தை வலியுறுத்தலாம்! ஆனால் பாவம்.. யார் தமிழர் எனக் கண்டு
பிடிப்பதிலும், தமிழைக் காத்தது யார் எனப் போட்டிப் போடுவதிலும் அவர்கள்
நேரம் போகிறது.. பதில் கிடைக்குதான்னு நானும் விவரம் அறிந்ததிலிருந்து
கவனிச்சுட்டு வரேன்... நேர விரயம் தான் மிச்சம்..
அதை விடுங்க! தமிழுக்கு ஆதாரம் தாய், தந்தை, தாத்தா, பாட்டி...
தாயே தமிழை தள்ளி வைக்கறதைப் பார்த்தாச்சு: http://amachu.net/blog/?p=4
ரொம்ப தூரத்துல இல்லை. எங்களில்லத்தின் கீழ்தளத்தில் :-)
அவங்க பிள்ளைக்கு என்னால வேலை கொடுக்க முடியாதே.. ;-) உங்களால? தமிழால?
கையாலாகாத் தனம் அரசாங்கத்துக் கிட்டே மட்டுமில்லை..
அரசாட்சியா இருந்தா அரசாங்கத்தைக் கை காட்டிட வாய்ப்புண்டு.. நாம நம்மையே
இல்ல ஆட்சி செய்துக்கிட்டிருக்கோம்.. மக்களாட்சி... மண்ணாங்கட்டி...
"அறம் செய விரும்பு" சொல்லிக் கொடுக்க எத்தனைப் பேர் வீட்ல பாட்டி
இருக்காங்க? எல்லாம் ஏ பாஃர் ஆப்பிள் தான்...
சென்னை "தமிழ்"நாட்டின் தலைநகர்.. தூள்...
அறுபது வருஷம் ஆச்சு.. அரசியல் சாசனமே அதிகார பூர்வமா தமிழில்
இருக்கான்னுத் தெரியல.. நாட்டுல ஆட்சி இதை வச்சு நடக்குதாமுல்ல..
எல்லாரும் மறுபடியும் மறுபடியும் ஒன்னு இராமாயணத்துக்கு/ குறளுக்கு/
தேவாரத்துக்கு/ பிரபந்தத்துக்கு இத்யாதிகளுக்கு இருக்கற உரையையே இப்படி
மாத்தி அப்படி மாத்தி, தங்களோடதையும் சேர்த்து எழுதறாங்க.. ம்ம்ம்..
இல்லைன்னா இராவணன், வாலி எட்சட்ரா இப்படி..
800 களில் வட்டாரத்துக்கு பிரசவம் பார்க்க ஒரு மருத்துவச்சி இருந்தது
போய்.. ஆங்கிலம் தெரிஞ்சாத் தான்.. மருத்துவம் படிக்கலாம்.. அதைப்
படிச்சாத்தான் அங்கரிக்கப் பட்டு வைத்தியம் பார்க்கலாமுங்கற நிலை...
சரி அப்படியாச்சும் நிறைய மருத்துவர்கள் உருவாக வாய்ப்பு இருக்கான்னா..
இருக்கறது ஆறேழு கல்லூரி.. வருஷத்திற்கு வெளி வரும் டாக்டர்கள்
ஆயிரத்துக்கும் சொற்பம்.. 289 மார்க் கட் ஆஃ்ப் வாங்கினவன் 290 மார்க்
வாங்கினவனைக் காட்டிலும் திறமையில்லாதவன்னு சொல்லித் தள்ளிவிடும் தேர்வு
முறை.. நானும் ரொம்ப யோசிச்சுக்கிட்டேயிரிக்கேன் விடைக் கிடைக்கல! :-(
இவங்க எல்லாம் படிச்சு வந்துட்டாலும் இங்க வாழும் மக்களுக்காக உழைத்துக்
கொட்ட வாய்ப்புள்ளவர்கள்.. அய்யோ பாவம்.. இவங்களால அரசுக்கு வருவாய்
எதுவும் அதிகமில்லை... அந்நிய செலாவணியும் தான்.. அரசாங்க குறியே அதுலத்
தான் இப்போ இருக்கு... இப்படி இருக்கறவங்கக் கிட்டேர்ந்து எப்படி?
அதனாலையோ என்னவோ மருத்துவக்கல்லூரிகளும் பெருகல.. மருத்துவர்களும்
தான்..
உயர்வானத் தொழில் உழவுத் தொழிலுன்னு வள்ளுவர் சொன்னதெல்லாம் வயல்
வரப்புலேயே குழித் தோண்டி புதைக்க வேண்டியதுதான்...
ஆனா வெளியிலிருப்பவர்களுக்கு உழைத்துக் கொட்டும் மஹா புருஷர்கள்...டாலர்
டாலடிக்குதுல்ல.. கத்தைக் காசு வரும்.. ஆஹா.. அற்புதம்.. விளைவு 200+
பொறியியல்(?) கல்லூரிகள்.. எனக்குத் தெரிஞ்சு இந்த லிஸ்டல லேட்டா சேர்ந்த
எத்தனைக் கல்லூரிகளில் சிவில், மெக்கானிகல், கெமிக்கல் இருக்குன்னுத்
தெரியல..
பிள்ளைகளும் தமிழ் சிரமம்னு பதினோராவதுல பிரெஞ்சு, ஜெர்மன், சமஸ்கிருதம்
கத்துக்கறாங்க. இந்த மொழியெல்லாம் அத்தனாம் வகுப்புலதான் ஆரம்பப்
பாடமேங்கறதுனால எளிமையா மதிப்பெண் வாங்கலாங்கறதுனால...
இதையெல்லாம் என்ன செய்ய?
அன்புடன்,
ஆமாச்சு
தளம் பார்த்தேன். மகிழ்ச்சி..
Best viewed on Internet Explorer 6.0 என கீழிடப் பட்டுள்ளது.
இதனை அனைத்து உலாவிகளிலும் பார்க்க வசதியாகச் செய்யவும்...
அன்புடன்,
ஆமாச்சு
I am not able to read the mail. The tamil fonts are
not readable. How can I read the mail. please help
me.
Thanks & Regards
V Ramachandran
--- nanthan <nan...@bigpond.com> wrote:
5, 50, 500, 5000 - Store N number of mails in your inbox. Go to http://help.yahoo.com/l/in/yahoo/mail/yahoomail/tools/tools-08.html
செவ்விலக்கியப் பரிட்சியமில்லாமல் 'எனக்கும் தமிழ் தெரியும்' என்று
சொல்லிக் கொள்வதை விட கூவத்தில் குளித்து விடலாம்!
இணையம் தமிழை வளர்க்கும் என்ற ஆர்வத்தில்தான் நாங்கள் மின்வெளியில்
முதலில் குதித்தோம். ஆனால், 90% இணைய எழுத்து கிசு, கிசு, வம்பு, சினிமா,
தனிமனிதத் தாக்குதல், சாதியச் சண்டைகள் என்று இருக்கிறது. எல்லா
மடலாடற்குழுக்களும் இதில் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் மாட்டிக்கொண்டு
முழிக்கின்றன. நன்றாக எழுதக்கூடியவர்களும் அபவாதத்திற்குப் பயந்து
மின்வெளியை விட்டு ஓடியே விட்டனர். (மர்மக்கும்மல்கள் இங்குதான் அதிகம்).
எனவேதான் மின்தமிழில் வெட்டியான விஷயங்களை உள்ளே விடுவதில்லை. சும்மாப்
பொழுது போக்க ஆயிரம் 'வம்பு மடங்கள்' உள்ளனவே!
சினிமாவின் தாக்கம் தமிழர் வாழ்வில் மிக அதிகம். 'சினிமாவாப் பார்த்து
திருந்தாவிட்டால் சினிமாவைத் திருத்த முடியாது'
மொழி அரசியல் என்பது தமிழக வரலாறு என்று ஆகிப்போனபின் இங்கு உண்மையான
தமிழ் வளர்ச்சியைக் காண்பது துர்லபம். கல்வி என்பது நீதித்துறை போல்
சுதந்திரமாக (?) இயங்க வேண்டும். கல்வியின் தரத்தை உயர் மட்டக் கல்விக்
குழுதான் தீர்மானிக்க வேண்டும். இக்குழுவில் வெளிநாட்டுத்தமிழ்
அறிஞர்களும் இடம் பெற வேண்டும். சர்வ தேச அளவில் தமிழ்த் தரம்
தீர்மானிக்கப்பட வேண்டும். தமிழ் என்பது தமிழகத்திற்கும் மட்டும்
சொந்தமன்று. இன்று 22 நாடுகளில் அது புழங்குகிறது. வழி நடத்தும் பொறுப்பு
தமிழ் மண்ணிடம் உள்ளது. இதைத் தமிழகம் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
ஆங்கிலத்தின் தாக்கமில்லாத எந்த மொழியும் உலகில் இல்லை. எல்லா மொழிகளுமே
ஆங்கிலக் கலப்பைக் கண்டு அஞ்சுகின்றன.
தமிழர்கள் சுய உணர்வுடன் விழிப்புற வேண்டும். நல்லோர் கனவு மெய்ப்பட வேண்டும்.
அலோ!
??
கட்டாயமில்லை. இலக்கியம் படைத்தோரே அதற்கு சாட்சி.
யாரைச் சொல்கிறீர்கள்? :-)
அலோ!
அன்புடன்
தமிழ்த்தேனீ
On 10월28일, 오후6시44분, "இரவா" <vasudevan...@gmail.com> wrote:
ஒரு உதாரணம் ஞானசம்பந்தர்..
அன்புடன்
ஆமாச்சு
அப்படிப்போடு அருவாளை! :-)
ஞான சம்மந்தருக்கு செவ்விலக்கியப் பரிட்சயமில்லை என்று வேறு யாரிடமாவது
சொல்லிவிடாதீர்கள்! [பருமொழி இடுகையை இன்னொருமுறை வாசியுங்கள்.
புரிந்துவிடும்!]
அலோ!
தமிழ் நண்பர்களே தேர்தல் வரப் போகிறது
அதற்காக வாக்குப் பதிவாளர் அட்டை
தயாரிக்கிறது அரசாங்கம்
இது வரை மூன்று முறை வீட்டுக்கு
வந்து புகைப்படம் வாங்கிக் கொண்டு போனார்கள்
ஆனால் என் மருமகளுடைய வாக்காளர் அட்டையில்
வேறு யாருடைய புகைப்படமோ ஒட்டி கொடுத்தார்கள்,
அதை அவர்களிடமே திருப்பிக் கொடுத்தேன்
,மீண்டும் வேறு ஒரு புகைப்படம் வேண்டுமென
கேட்டார்கள் கொடுத்து அனுப்பினேன்
ஆண்பால் பெயர் கொண்ட வாக்காளர் அட்டையில்
பெண்ணின் புகைப்படம் படம், பெண்பால் பெயர் கொண்ட வாக்காளர் அட்டையில்
ஆணின் புகைப்படம், முதியோர் வாக்காளர் அட்டையில் இளைஞ்ஞர்களின்
புகைப்படம்,எப்படி இவ்வளவு தவறுகள்
நிகழ்கிறது,இதெற்கெல்லாம் யார் காரணம் ....!!?
ஏற்கெனெவே நாங்கள் அனைவரும் எங்கள் வீட்டிலிருந்து
அவர்கள் அழைப்பை ஏற்று ஒரு பள்ளிக்கு சென்று
பணியில், கல்லூரிகளில் விடுப்பு எடுத்துக் கொண்டு
வரிசையில் வெய்யிலில் கால் கடுக்க நின்று
புகைப்படம் எடுத்துக் கொண்டோம்
அது என்னவாயிற்று என்றே தெரியவில்லை
அதற்குப் பிறகு இவ்வளவும் நிகழ்ந்து,மீண்டும்
ஒரு அறிவிப்பு காகிதம் கொடுத்திருக்கிறார்கள்
அதில் மீண்டும் பொது மக்கள் அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து,
முகவ்ரி ஆதாரத்துடன் வர வேண்டும் என்று
குறிப்பிட்டு இருக்கிறார்கள்,அதுவும் பற்றாக் குறைக்கு
,குறிப்பிட்ட தினத்திலிருந்து ,ஏழு தினங்களுக்குள் வராவிட்டால்
பெயரை நீக்க ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது
என்றும் கேட்கிறார்கள்…!!!!!!?
தேர்தலில் நிற்கும் அவர்களுக்கு வாக்களிக்க
ஒரு வாக்காளர் அட்டை பொதுமக்கள்
வாங்கிக் கொள்ள இத்தனை பாடு படவேண்டுமா....?
பாவம் வயதான மக்கள்,
உதவி செய்து அழைத்துக் கொண்டு
போகக்கூட ஆளில்லாத மக்கள்,
பாவம் விடுப்பு எடுக்க வழியில்லாத
பணி செய்வோர்,
பள்ளிக்கூடங்கள் ,மருத்துவ மனைகள்
இன்னும் அவசரகால உதவித் துறையில்
வேலை செய்வோர் அத்துணை பேரும் பாவம்
சரி நம் தலைஎழுத்து என்று மனதைத் தேற்றிக் கொண்டு
அவர்கள் கொடுத்த கடிதத்தை படித்துப் பார்த்தேன்
நம் அரசாங்கத்தில் தமிழை வளர்க்கப் ,
எத்தனையோ நல்ல முயற்ச்சிகள் எடுக்கிறார்கள்
தமிழ் நாடு ,தமிழ் மக்கள்,தமிழ் நம் தாய் மொழி
அப்படிப்பட்ட நிலையில்
அவர்கள் கொடுத்த கடிதத்தில்
இருக்கும் வாசகம் பார்த்து அதிர்ந்தேன்
,முதல் வாக்கியமே
தாங்கள் சாதாரணமாக வசித்து வருவது அற்றுப் போய்விட்டது என்ற
அடிப்படையில்
உங்கள் பெயர் நீக்க கருதப்பட்டுள்ளது
எனவே தற்போது 1950 ஆம் ஆண்டு
மக்கள் பிரநிதிநித்துவ சட்டம் விதி22(சி)-யின் கீழ் வழங்கப்பட்டுள்ள
அதிகாரங்கனைக் கொண்டுமேற் சொன்னவாறு உங்கள் பெயரை நீக்க
ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு,
கீழே குறிப்பிட்டுள்ள தேதியிலிருந்து ஏழு தினங்களுக்குள் தங்களுடைய
பதில் எனக்கு வந்து சேர வேண்டும்.
ஏன் இப்படி யாருடைய தவறு ,யாருடைய அலட்ஷியம்
நம்மை இத்தனை பாடு படுத்துகிறது
எனக்குப் புறியவே இல்லை
உங்களுக்காவது புறிகிறதா என்று பாருங்கள்
அவர்கள் கொடுத்த கடிதத்தின் நகல் எடுத்து அனுப்பி இருக்கிறேன்,
இணைக்கிறேன்
அன்புடன்
தமிழ்த்தேனீ
On 10월28일, 오후10시35분, ஆமாச்சு <shriramad...@gmail.com> wrote:
> கற்றது தமிழ், தமிழ் எம் ஏ பார்த்துட்டு வரேன் :-)
>
> இதைப் பாருங்க :http://amachu.net/blog/?p=68(நானும் இந்தத் துறை தான்
திரு - குரு இரண்டு ஞானசம்பந்தர் உண்டு
தருமையாதீன தோற்றுவித்தவர்..
பலர் கற்றுத் தேர்வார்கள்..
சிலர் கற்பிக்கவேப் பிறப்பார்கள்..
இவர்கள் இத்தகையோர்..
அது நாம் தான் ;-)
மதுரை, உறையூர், தஞ்சை எல்லாம் போய் என இருந்து இன்று மொத்தமும்
சென்னைக்குக் கீழ் வந்து.. இது எல்லாத்துக்கும் மேல மொத்த பாரத்தை
பாரதத்தின் மேல போட்டு மையப் படுத்தி நம்மல நாமலே கஷடப்படுத்திக்
கிட்டிருப்போம்..
போன வாரம் கிராமத்துக்கு போயிருந்தேன்.. அறுபது வருஷம் கழித்து
தெருவுக்கு தார் சாலை வந்திருக்கு.. பாருங்க நான் வருமான வரி கட்டறேன்..
என்ன மாதிரி நிறைய பேர்.. விவசாயமும் நெசவும் எங்க கிராமத்து வருமானம்..
இதன் பொருட்டு இவ்வணிகர்களும் ஆடிட்டரை வச்சு சரி செஞ்சது போக நிச்சயம்
ஏதோ கட்டுவாங்க.. இந்ந வருமானத்தை எங்க கிராமத்துக்கே செலவு செய்திருந்தா
எத்தனையோ வருடத்துக்கு முன்னாடி ரோடு போட்டிருக்கலாம்..
நாங்க தமிழக அரசைக் கேட்க.. அது மத்திய அரசை நோக்க.. மார்ச் 31 சிதம்பரம்
பொட்டியத் தொறந்து என்ன சொல்றாருன்னு வாய் பிளந்து வருடா வருடம் பார்க்க
வேண்டியிருக்கு..
நான் சொல்றது சரியான்னு தெரியாது.. பெருசா எகனாமிக்ஸ் படிக்கல.. ஆனால்
உணர்ந்தது உரைத்தேன்.. நான் கட்டும் வரி என் கிராமத்துக்குப் போய்ச்
சேருமா?
தாங்கள் நான் சொல்ல வருவதை புரிந்துக் கொள்ளவில்லை அல்லது நான் சரியாக
விளக்கவில்லை! மையப் படுத்துவதில் உள்ள சிக்கலைச் சொன்னேன். state list,
central list, concurrent list மூன்றும் உண்டே!
பொறுப்பை, பாரத்தை ஒரு அமைப்பின் மீது மையப் படுத்துவதால் ஏற்படும் சுமை
பெரிதாகத் தோன்றுகிறது. தமிழ் தேனி அரசை(யே) காட்டியதால் அதிலுள்ள
சிக்கலை விளக்க முற்பட்டேன்.
> நகரவாசிகள் கோடிக்கணக்கில் கட்டுகின்றார்களே, அந்த வருவாயிலிருந்து தான்
> கிராமங்களை முன்னேற்ற முடியும்.
>
கொஞ்சம் முரண்படுகிறேன்.
ஆனால் இத்தலைப்பு இத்தறிக்கு இது பொருந்தாது. இதனைத் துவக்கியது அரசை
மட்டும் பொறுப்பாக்குவது கூடாது எனச் சொல்லவே.
ஆனால் இது குறித்து ஆராய http://dharampal.net உகந்த தளமாக
பரிந்துரைக்கிறேன்.
அன்புடன்,
ஆமாச்சு.
உண்மையாகச் சொன்னால் பல திட்டங்கள் அரசு போட்டாலும் அவை நிறைவேற்றப்
படும்போது ,ஏற்படும் சிக்கல்களையும்
அதற்குறிய அதிகாரிகள்,உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் ,அல்லது
அத்திட்டத்தின் அவ்வப்போதைய நிலைமையை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்
எத்தனை திட்டங்கள் ஒப்புதல் ஆணை போடப்பட்ட பின்னரும் காகித
வடிவிலே ,நிறைவேற்றப் படாமல் உள்ளது ,
அல்லது கால தாமதம் ஆகிறது,
அடியேனும் 60 ஆண்டு காலமாக அரசின் செயல் பாடுகளைக் கவனித்து
வருபவன் ,பொதுமக்களில் ஒருவன் என்கிற முறையில்
அதனால்தான் சொல்லுகிறேன்
மக்கள் நலத்திட்டங்கள் மக்கலை சென்றடைகிறதா முறையாக
என்று பார்ப்பதும் அர்சின் வேலைதான்
தரை மட்டமான ஜப்பான் நிமிர்ந்துவிட்டது, பாலைவனம்க்க இருந்த நாடுகள்
பசுமைய்யய் விட்டன,
ஆனால் பசுமையாய் சுபிக்ஷ்மாய் இருந்த நம்நாடு
இப்போது சரியான தார்ச்சாலைகள்,கூட இல்லாமல்
எஅத ஒரு வசதியும் இல்லாமல் ,வரி மொத்தம் கட்டினாலும் அந்த வரிப்பணத்தில்
பொதுமக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லாமல்,மேலும் பொது மக்களை
துன்புறுத்துகிற விதமாகவே போடப்படும் சட்டங்கள்,உதாரணத்துக்கு தலைக்
கவசம்,மக்கள் மேல் உன்மையிலேயே அக்கறை இருக்குமானால் சட்டங்களை
தீர்மானமாக போடவேண்டும் ,அவற்றை கடைப் பிடிக்க மக்களை
ஊக்குவிக்கவேண்டும்,அதை விடுத்து உறுதியே இல்லாமல்,
போடவேண்டும் ,போடலாம் ,போட்டாலும் போடலாம் போடாவிட்டாலும் பரவாஇல்லை
என்றெல்லாம் சட்டம் போட்டுவிட்டு,அதை சாதகமாக காவல்துறையினர் உபயோகிப்பதை
தடுக்க வேண்டும்,இப்போது காவல் துறையினர் அவர்களுக்கு இஷ்டம் இருந்தால்
கண்டுகொள்ள மாட்டார்கள்,அவர்களுக்கு
தேவையானால் சட்டத்தை நீட்டுவார்கள் என்னும் நிலை உள்ளது
எல்லா நாட்டிலும் வருமான வரி வாங்குகிறார்கள்,இல்லையென்று
சொல்லவில்லை,ஆனால் அரசு வாங்கும் வருமான வரியில் சில சதவிகிதமாவது மக்கள்
நலனுக்குப் போகிறது,நம் நாட்டில் அப்படி நடக்கவில்லையோ என்கிற என்
ஆதங்கம் உண்மைதான்
ஆளுபவர் நேர்மையில் திடமாக இருந்தால்
அனைத்து திட்டங்களும் சரியாக செயல் படும் ,அல்லது
நேர்மை தவறும் இடங்களை சரி செய்து நல்ல திட்டங்களை
மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டியது அரசின் கடமையே
ஆகவே நடத்துனரைத்தான் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது
பொறுப்பாளர்களைத் தானே கேட்க முடியும்
அன்புடன்
தமிழ்த்தேனீ
> ஆனால் இது குறித்து ஆராயhttp://dharampal.netஉகந்த தளமாக
தளத்தில் "லகலகலக" எனும் வரிசையில் என்.எஸ்.கிருஷ்ணன் - மதுரம் அளிக்கும்
ஒரு துண்டு இருக்கிறது. கட்டாயம் எல்லோரும் பார்க்க வேண்டும். (பதிவர்கள்
மட்டுமே பார்க்கமுடியும், எனவே பதிந்து கொள்ளுங்கள்) சுதந்திரம் என்பது
ஒன்று சுபீக்ஷம் என்பதொன்று. 50க்கும் 60க்கும் இடையில் வரக்கூடிய
சுபீக்ஷத்தைக் கனவு காண்கிறார். இந்தியா பலதுறைகளில் தன்னிறைவு
கொண்டுள்ளது. ஆயினும் என்.எஸ்.கிருஷ்ணனின் பல் கனவுகள் இன்னும் கனவாகவே
உள்ளன.
அலோ!
முப்பால் தமிழ்ப்பால் முனைப்பால்
ஈரடிக் குறள்பால் வைத்தான்
ஓரடியோ, ஈரடியோ உலகிற்கே
தேனடிகள் வைய்யகமே போற்றடிகள்
வள்ளுவன் தான் அடிகள்
பல்லடிகள் ஆய்ந்தெடுத்து தேடித்தேடி
ஆழ்ந்தெடுத்து ஆய்வுதனை தோய்ந்தெடுத்து
இட்டு வைத்தான் ஈரடியாய்
ஓரடியாய் பூமிதனை,மாற்றடியாய் வான்வெளியில்
மூவடியாய் வாமனனே தேர்ந்தெடுத்தான்
மஹாபலியின் தலைமேல்
ஈரடியால் உலகளக்க முடியாதா வாமனனால்
இரடியால் வள்ளுவன் தான் உலகளக்க
ஒரு சந்தர்ப்பம் அளிக்கத்தானே தானே
மூவடியை தேர்ந்தெடுத்தான் வாமனனும்
வள்ளுவனோ ஈரடியால் ஈரேழுலகும்
சுலபமாய் அளந்திட்டான், சுருக்கமாய் முடித்திட்டான்
தலையாய சீரடிகள் வள்ளுவனின் ஈரடிகள்
அறத்துப் பால், பொருட்பால்,காமத்துப் பாலென்று
முப்பால் வைத்தான் தமிழ் முனைப்பால் வைத்தான்
முதற்பால், புறந்தள்ளி , இடைப்பால் அகந்தள்ளி
கடைப்பால்என்னும் காமத்துப்பால்-மட்டுமதை
முனைப்பால் கொண்டு முயங்கும், மாதரரே
முதற்பால் முதலில் கொள்வீர்,
நிலையில்லாப் பால் இடைப்பால்
உழைப்பால் வரும்,போகும்
கடைப்பால் காமத்துப்பால்,கடையில் வரும்
முதற்பால் இடைப்பால் ஏற்றமோடு
நாம் கொண்டால்
தானே வரும் களிப்பால் ,
கடைப்பால் காமத்துப்பால்
அன்புடன்
தமிழ்த்தேனீ
On Oct 31, 3:15 pm, "இரவா" <vasudevan...@gmail.com> wrote:
> > ஆயம்: thami...@googlegroups.com- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
>
> - Show quoted text -
--
அன்புடன்
தமிழ்த்தேனீ
On Nov 2, 2:07 pm, "இரவா" <vasudevan...@gmail.com> wrote:
> வருமான வரி வாங்குவது, நடுவணரசு. நில வரி வாங்குவது மாநில அரசு. வீட்டு வரி
> வாங்குவது ஊராட்சி. இதில், எந்த வரியைக் கொண்டு உங்கள் ஊருக்குச் சாலை
> போடுவது?
>
> ஓவ்வொருவரும் உங்களைப் போலவே கேட்கவாரம்பித்தால், உங்கள் கிராமம் மட்டுமல்ல,
> ஊரிலுள்ள எந்த கிராமமும் முன்னேறாது. அந்தந்த கிராமத்தின் வருவாயைக் கொண்டு
> எந்த கிராமத்தையும் முன்னேற்ற முடியாது.
>
> நகரவாசிகள் கோடிக்கணக்கில் கட்டுகின்றார்களே, அந்த வருவாயிலிருந்து தான்
> கிராமங்களை முன்னேற்ற முடியும்.
>
> இது நாள் வரை உங்கள் கிராம முன்னேற்றம் தடைப்பட்டிருந்தது ஏன் என்று
> சிந்தித்தோமென்றால், கிராமமுன்னேற்றத்திற்காக ஒதுக்கப் படுகின்ற தொகையில்
> பெரும்பகுதியை, ஊராட்சி மன்றத்தலைவர் தன் கிராமத்திற்கோ அல்லது வேறு
> கிராமத்திற்கோ செலவு செய்திருக்கலாம்.
>
> ஆண்டு தோறும் கிராம வளர்ச்சிக்காக ஒதுக்கப் படுகின்ற தொகை அதிகம். அது எங்கே
> போகிறது என்று விபரம் தெரிந்தவர்கள் கண்காணித்துச் செயல்படுத்தத் தூண்ட
> வேண்டும். அல்லது தட்டிக் கேட்க வேண்டும்.
>
> உதாரமாக, ஆண்டுதோறும் மலையின மக்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப் படுகின்ற
> கோடிகள், என்ன ஆகிறது என்றே தெரியாது. அத்தொகை மலைவாழ் மக்கள் வாழும் பகுதிக்கு
> அருகிலுள்ள கிராமம், நகரம் ஆகிய வளர்ச்சிக்குச் சென்று விடும். சிலர்
> வாய்க்குள்ளும் போய்விடும்.
>
> On 11/2/07, ஆமாச்சு <shriramad...@gmail.com> wrote:
>
>
>
>
>
>
>
> > On Nov 2, 9:03 am, Thamizth Thenee <rkc1...@gmail.com> wrote:
> > > நம் தமிழ் மொழிக்கு,நம் மக்களுக்கு
> > > தாய் நம் அரசாங்கம் ,ஆகவே இந்த அரசாங்கம் என்னும் தாய் நாமைக் கவனிக்க
> > > வேண்டும்
>
> > அது நாம் தான் ;-)
>
> > மதுரை, உறையூர், தஞ்சை எல்லாம் போய் என இருந்து இன்று மொத்தமும்
> > சென்னைக்குக் கீழ் வந்து.. இது எல்லாத்துக்கும் மேல மொத்த பாரத்தை
> > பாரதத்தின் மேல போட்டு மையப் படுத்தி நம்மல நாமலே கஷடப்படுத்திக்
> > கிட்டிருப்போம்..
>
> > போன வாரம் கிராமத்துக்கு போயிருந்தேன்.. அறுபது வருஷம் கழித்து
> > தெருவுக்கு தார் சாலை வந்திருக்கு.. பாருங்க நான் வருமான வரி கட்டறேன்..
> > என்ன மாதிரி நிறைய பேர்.. விவசாயமும் நெசவும் எங்க கிராமத்து வருமானம்..
> > இதன் பொருட்டு இவ்வணிகர்களும் ஆடிட்டரை வச்சு சரி செஞ்சது போக நிச்சயம்
> > ஏதோ கட்டுவாங்க.. இந்ந வருமானத்தை எங்க கிராமத்துக்கே செலவு செய்திருந்தா
> > எத்தனையோ வருடத்துக்கு முன்னாடி ரோடு போட்டிருக்கலாம்..
>
> > நாங்க தமிழக அரசைக் கேட்க.. அது மத்திய அரசை நோக்க.. மார்ச் 31 சிதம்பரம்
> > பொட்டியத் தொறந்து என்ன சொல்றாருன்னு வாய் பிளந்து வருடா வருடம் பார்க்க
> > வேண்டியிருக்கு..
>
> > நான் சொல்றது சரியான்னு தெரியாது.. பெருசா எகனாமிக்ஸ் படிக்கல.. ஆனால்
> > உணர்ந்தது உரைத்தேன்.. நான் கட்டும் வரி என் கிராமத்துக்குப் போய்ச்
> > சேருமா?
>
> > அன்புடன்,
> > ஆமாச்சு
>
> --
> இருக்கும் வரை தமிழ் அணையில்
> அன்புடன்
> இரவா
>
> வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
> இணையம்: www.thamizhkkuil.net
இ ர வாசுதேவன் அவர்களே
உங்கள் தமிழ்குயில் பக்கம் பார்த்தேன்
அடடா எவ்வளவு ஆராய்ச்சி செய்திருக்கிறிர்கள்
உங்கள் பாக்கம் பார்க்கும் போது
மிகவும் பெருமையாக இருக்கிறது
உங்கள் வாழ்க்கை நடைமுறை கூட
மிகவும் நேர்மையாக,நல்ல குறிக்கோளுடன்
அமைத்துக் கொண்ட விதம் என்னக் கவர்ந்தது
அன்புடன்
தமிழ்த்தேனீ
> > ஆயம்: thamiza...@googlegroups.com- Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -
அலோ!
* தாமரைக் கண்ணான் உலகு - வள்ளுவன்
On 11/4/07, Thamizth Thenee <rkc...@gmail.com> wrote:
முப்பால் தமிழ்ப்பால் முனைப்பால்
ஈரடிக் குறள்பால் வைத்தான்
ஓரடியோ, ஈரடியோ உலகிற்கே
தேனடிகள் வைய்யகமே போற்றடிகள்
வள்ளுவன் தான் அடிகள்
பல்லடிகள் ஆய்ந்தெடுத்து தேடித்தேடி
ஆழ்ந்தெடுத்து ஆய்வுதனை தோய்ந்தெடுத்து
இட்டு வைத்தான் ஈரடியாய்
ஓரடியாய் பூமிதனை,மாற்றடியாய் வான்வெளியில்
மூவடியாய் வாமனனே தேர்ந்தெடுத்தான்
மஹாபலியின் தலைமேல்
ஈரடியால் உலகளக்க முடியாதா வாமனனால்
இரடியால் வள்ளுவன் தான் உலகளக்க
ஒரு சந்தர்ப்பம் அளிக்கத்தானே தானே
மூவடியை தேர்ந்தெடுத்தான் வாமனனும்
வள்ளுவனோ ஈரடியால் ஈரேழுலகும்
சுலபமாய் அளந்திட்டான், சுருக்கமாய் முடித்திட்டான்
தலையாய சீரடிகள் வள்ளுவனின் ஈரடிகள்
அறத்துப் பால், பொருட்பால்,காமத்துப் பாலென்று
முப்பால் வைத்தான் தமிழ் முனைப்பால் வைத்தான்
முதற்பால், புறந்தள்ளி , இடைப்பால் அகந்தள்ளி
கடைப்பால்என்னும் காமத்துப்பால்-மட்டுமதை
முனைப்பால் கொண்டு முயங்கும், மாதரரே
முதற்பால் முதலில் கொள்வீர்,
நிலையில்லாப் பால் இடைப்பால்
உழைப்பால் வரும்,போகும்
கடைப்பால் காமத்துப்பால்,கடையில் வரும்
முதற்பால் இடைப்பால் ஏற்றமோடு
நாம் கொண்டால்
தானே வரும் களிப்பால் ,
கடைப்பால் காமத்துப்பால்
அன்புடன்
தமிழ்த்தேனீ
> > ஆமாச்சு.- Hide quoted text -
அன்புடன்
தமிழ்த்தேனீ
அன்புடன்
தமிழ்த்தேனீ
சிறிய அளவிலான நிர்வாக அமைப்பு, அது கிராமமோ நகரமோ, தமது தேவைகள் இது என
தாமே தீர்மானித்து, அதற்கென இயற்றி, ஈட்டி, காத்துக் கொள்ளும் முறை நாம்
விரும்பும் முறை.
தேவைகள் இந்நிர்வாக அமைப்புகளைத் தாண்டும் போது அதனை ஒருங்கிணைத்து
பூர்த்தி செய்து தருவது தாங்கள் சொல்லும் அரசின் பணி.
அந்த அரசும் நாம் தான்..
அன்புடன்,
ஆமாச்சு
ஆம். உண்மைதான். தமிழகத்தில் கண்டிப்பாக அப்படியொரு நிலை இருக்கக்
> தமிழைக் கற்றதால் பாடு படுவது என்பது ஏற்புடையதல்ல.
கூடாது. மற்ற மாநிலங்களில்/ நாடுகளில் இருக்கலாம்.
....
தொடக்கத்திலேயே ஓருண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். அதாவது தமிழ் மருத்துவம் எனக் கருதப்படும் சித்த மருத்துவம் பற்றிய இலக்கியங்கள் குறித்த ஆய்வு என்பதோடு மட்டுமமையாமல் சித்த மருத்துவத்தின் பல்வேறு கூறுகளை இந்நூல் விளக்குகிறது. பல வகைகளில் இதனை இருபத்து ஓராம் நூற்றாண்டில் எழுந்த சித்தமருத்துவ முதல் நூல் எனக் கருதலாம்.
இது, எனது ஆய்வு நூலைப் பற்றிய மதிப்பீடு. ஆங்கிலம் படித்த தமிழர்கள், இந்நூலை ஆங்கிலத்தில் அல்லது வேறு மேலை மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டு தமிழை உலகம் முழுவதற்கும் கொண்டு செல்லுங்கள்! பார்க்கலாம். குழுவில் மடலாடலில் விடுக்கின்ற உதாரெல்லாம் அப்பொது தெரியும்.
இரவாதாகூர் தன் கீதாஞ்சலியை வங்க மொழியில் எழுதினார். பின்னார் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். நோபல் பரிசு பெற்றார்.ஆங்கிலம் தெரியாமல் இருந்து இருந்தால்?தூய தமிழ் உரையாட வேண்டும் என்றாலும் வடமொழி அறிவு வேண்டும்.இல்லேனா அது சுத்த தமிழாக தான் இருக்கும்
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
எவராலும் எனக்கு எந்தத் தேவையும் நிறைவடையப் போவதில்லை! அது எனக்குத் தேவையுமில்லை.
கலப்பைக் கட்டை என்று இன்றும் கிராமத்தில் வழக்குவதுண்டு. ஏன் தெரியுமா? ஏர் ஓட்ட கற்றுக் கொள்ள கரம்பில் ஓட்டிப் பழகுவதற்கு மட்டுமே பயன் படும்.
அதைப்போல, இ-கலப்பையைக் கண்டு பிடித்ததால், தமிழ் வளர்ந்து விடவில்லை.
On Nov 19, 2007 9:33 AM, இரவா <vasude...@gmail.com> wrote:
கலப்பைக் கட்டை என்று இன்றும் கிராமத்தில் வழக்குவதுண்டு. ஏன் தெரியுமா? ஏர் ஓட்ட கற்றுக் கொள்ள கரம்பில் ஓட்டிப் பழகுவதற்கு மட்டுமே பயன் படும்.
அதைப்போல, இ-கலப்பையைக் கண்டு பிடித்ததால், தமிழ் வளர்ந்து விடவில்லை.உங்கள் கணினியில் இருந்து ஈ கலப்பைக்கு போகி கொண்டாடி விடுங்கள்.
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
On 11/21/07, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
On Nov 19, 2007 9:33 AM, இரவா <vasude...@gmail.com> wrote:
கலப்பைக் கட்டை என்று இன்றும் கிராமத்தில் வழக்குவதுண்டு. ஏன் தெரியுமா? ஏர் ஓட்ட கற்றுக் கொள்ள கரம்பில் ஓட்டிப் பழகுவதற்கு மட்டுமே பயன் படும்.
அதைப்போல, இ-கலப்பையைக் கண்டு பிடித்ததால், தமிழ் வளர்ந்து விடவில்லை.உங்கள் கணினியில் இருந்து ஈ கலப்பைக்கு போகி கொண்டாடி விடுங்கள்.எனது காணினியிலிருந்து கலப்பையை நீக்கிவிட்டால், தமிழ் ததழ்ந்து விடுமா?நீக்காமல், உங்கள் ளொள்ளுக்குப் பதில் எழுதிவிட்டால் தமிழ் வலர்ந்து விடுமா?கலப்பை ஒரு எழுதி!அவ்வளவு தான். எழுதியை வைத்துக் கொண்டால் காவியம் பாடி விடமுடியுமா? கலப்பையை வைத்துக் கொண்டால் உழுது பயிர் வளர்த்து, நெற்களஞ்சியத்தை நிறைத்துவிடமுடியுமா?
அன்புடையீர்
கண்ணனின் மடல் பார்த்ததும் தான் இதுவரை வாளாவிருந்தேனே என வருந்தினேன்.
--
On Nov 21, 2007 11:11 AM, இரவா <vasude...@gmail.com> wrote:
On 11/21/07, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com > wrote:
On Nov 19, 2007 9:33 AM, இரவா <vasude...@gmail.com> wrote:
கலப்பைக் கட்டை என்று இன்றும் கிராமத்தில் வழக்குவதுண்டு. ஏன் தெரியுமா? ஏர் ஓட்ட கற்றுக் கொள்ள கரம்பில் ஓட்டிப் பழகுவதற்கு மட்டுமே பயன் படும்.
அதைப்போல, இ-கலப்பையைக் கண்டு பிடித்ததால், தமிழ் வளர்ந்து விடவில்லை.உங்கள் கணினியில் இருந்து ஈ கலப்பைக்கு போகி கொண்டாடி விடுங்கள்.எனது காணினியிலிருந்து கலப்பையை நீக்கிவிட்டால், தமிழ் ததழ்ந்து விடுமா?நீக்காமல், உங்கள் ளொள்ளுக்குப் பதில் எழுதிவிட்டால் தமிழ் வலர்ந்து விடுமா?கலப்பை ஒரு எழுதி!அவ்வளவு தான். எழுதியை வைத்துக் கொண்டால் காவியம் பாடி விடமுடியுமா? கலப்பையை வைத்துக் கொண்டால் உழுது பயிர் வளர்த்து, நெற்களஞ்சியத்தை நிறைத்துவிடமுடியுமா?இரவா,நீங்கள் காவியம் பாடி விட்டால் தமிழ் வளர்ந்து விடுமா? ஓலைச் சுவடியில் எழுதி விட்டத்தில் செருகிகொள்ளுங்கள்.குழுமம் இணையம் எல்லாம் உங்களுக்கு தேவை இல்லை.நியூட்டனின் இயக்க விதிகளை கொஞ்சம் விளக்கவும்.
நாங்கள் பாடி ஓலையில் சுருட்டி வைத்தைத் தேடி எடுத்துச் சென்றவர்கள் எல்லாம் என்னாட்டிற்கு நன்றியைக் கூட சொன்னதில்லை.
வேந்தன்பந்திக்கு மட்டும் முந்துதல் கூடாது! அரங்கிலும் முந்த வேண்டும். உங்களுக்குத் தெரியும் என்றால் சொல்லவேண்டியது தானே? என்னை ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?நான் சொல்வேன், நீங்கள் சொன்ன பிறகு!
On 11/23/07, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
On Nov 23, 2007 12:13 AM, இரவா <vasude...@gmail.com> wrote:
நாங்கள் பாடி ஓலையில் சுருட்டி வைத்தைத் தேடி எடுத்துச் சென்றவர்கள் எல்லாம் என்னாட்டிற்கு நன்றியைக் கூட சொன்னதில்லை.இரவா,அவரக்ள் எடுத்துச்சென்ற ஒரு ஓலையில் மட்டும்தான் எழுதி வைத்திருந்தீர்களா? வேறு இல்லையா? அதை பதிப்பிக்க்லாம்தமிழ் வளருது என்றால் அணுவை பற்றியும் அண்டத்தை பற்றியும் தமிழில் கற்றுத் தெளிய வழி வேண்டும்எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்.அணு என்பன் தன்மை யாது?நீங்க சொல்லவில்லை எனில் நான் சொல்வேன்(:
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)இரவா
வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
அன்புடன்
பனை ஓலை ஒன்றல்ல, ஓராயிரமல்ல! ஒன்பது இலட்சம் ஓலை கிடைத்துள்ளது. யார் பதிப்பது? யார் செலவு செய்வது?இரண்டு திங்களுக்கு முன்பு நாகர்கோயிலுக்கு ஓலையைத் தேடிப் போனேன். அங்கே ஒரு ஆச்சரியம்! இராவணன் இயற்றிய ஒரு நூல் கண்டேன். இது நாள் வரை அதுபோல் கேட்டதுகூட கிடையாது. அதை தமிழில் கொண்டுவர நினைக்கிறேன். யார் செலவு செய்வார்?
ஆய்வு நூலை
, பூங்கொடி பதிப்பகமும், திருமந்திரத்தைக் கிழக்குப் பதிப்பகமும் வெளியிட்டுள்ளன .அன்பின் இரவா:
இக்கட்டுரையை புத்தக அறிமுகம் என்று விக்கிபீடியாவில் போடலாமே? உங்கள்
புத்தகமுகப்பு படம் இருக்கிறதா?
வைணவம் சித்தர் மரபிற்கு எதிரானது அல்லவே. திருமழிசை ஆழ்வார் சித்தர்
போல் வாழ்ந்தவர்தானே. மேலும் ஆழ்வார்கள் 12 பேரும் ஒருமித்த கருத்தோடு
'திருமால் அடியார்களுக்குள்' சாதி வேற்றுமை பார்த்தல் தாயின் கற்பை
சோதிப்பது போல் என்று சொல்லிப் போனதால் வைணவத்தில் 'சித்தர் மரபு' என்று
தனியாக இல்லாமல் போயிற்று என்று சொல்வார் பேரா.தொ.பரமசிவன்.
நா.கண்ணன்
On Nov 19, 1:37am, "இரவா" < vasudevan...@gmail.com> wrote:
>>
> இம்முப்பிரிவுகளிலும் மருத்துவர்கள் உண்டு. இந்தப் பாகுபாட்டினை மிக விரிவாக
> ஆராய்ந்து விளக்கமாக எடுத்துக் கூறுவது இந்நூல். மரபு வழிப்பட்ட இறுக்கமான
> வைணவமும், சைவமும் அதாவது விசிட்டாத்வைதமும் சைவச்சித்தாந்தமும் சித்தர்களை
> ஏற்றுக் கொண்டதில்லை. வைதிக சமயங்கள் இவர்களைப் புறத்தவர்களாக, மரபு
> வழுவியவர்களாக ஒதுக்கி வைத்து வந்துள்ளன. இருப்பினும், புத்தசமயம் வைதிக
> சமயங்களை ஊடுருவியதோடு அவை மக்களிடையே செல்வாக்குக்குப் பெறச் "சித்த சிந்தனை
> உணர்வு" காரணம் என்னும் உண்மையைப் பல கோணங்களிலிருந்தும், பல நிலைகளிலிருந்தும்
> ஆராய்ந்து ஆசிரியர் நிலை நாட்டுவது பாராட்டத்தக்கது.
>
கலப்பைக்கு களங்கமா?
இது தான் காலக்கொடுமைங்கறது.
உங்கள் சண்டையில் எ-கலப்பையைச் சிறுமைப்படுத்துவது எவ்விதத்தில் நியாயம்?
இன்று பெரும்பாலான தமிழர்கள் தமிழில் எழுத உற்ற துணையாக இருப்பது எ-
கலப்பை (இ-கலப்பை அல்லது ஈ-கலப்பை).
தமிழா திரு.சு.முகுந்தராஜ் அவர்களின் பெருமுயற்சியால் உருவானது தான் இந்த
எ-கலப்பை.http://thamizha.com/modules/news/
தமிழா குழுவினர் செயற்கரிய பல செயல்களை தமிழ்க்கணினி மென்பொருள் துறையில்
ஆற்றி வருவது அனைவரும் அறிந்ததே. http://blog.thamizha.com/
இதற்காக அவர்களைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, அவர்கள் உருவாக்கிய
மென்பொருளை இப்படிச் சிறுமைப்படுத்திப் பேசுவது சரியல்ல. உங்களுக்குப்
பிடிக்கவில்லையெனில் உங்கள் கணினியிலிருந்து இப்பொழுதே நீக்கி
விடுங்களேன்.
இன்று பெரும்பாலான தமிழ் இணையதளங்கள், வலைப்பதிவுகள்,மின்னஞ்சல்கள் எ-
கலப்பையைப் பயன்படுத்தி தமிழில்உருவக்கப்படுகின்றன.
விக்கிபீடியாவில் பலர் தமிழ்க் கட்டுரைகளை எ-கலப்பையைப் பயன்படுத்தியே
உருவக்குகின்றனர்.
கலப்பை ஒரு எழுதி தான், அதை வைத்து நெற்களஞ்சியத்தை நிறைக்காவிட்டாலும்,
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவை தமிழால் நிறைக்க எ-கலப்பை தானே
உதவுகிறது?
தமிழ் வளரவில்லையா? இப்டி எழுதுனா எப்டி தமிழ் வளரும்?
// தமிழ் வலர்ந்து //
// பாடத்தை குரைத்தனர் //
// காணினி //
// தமிழ்மரபு அறக்கட்டளை அறிஞ்ஜர்களின்சென்னை சந்திப்பு <-- அறிஞ்ஜர் //
கொடுமை கொடுமைன்னு மின்தமிழுக்கு வந்தா....
இங்கே முனைவர்களே இப்டி தமிழ்க் கொலை செய்தால்...
நல்லகாலம் முருகா!
'மின்தமிழ்'-ங்கறத யாரும் 'மிண்தமிள்'-னு எழுதல!!
உங்களிடம் கலப்பையால், அரிய படைப்பை அளியுங்கள்.தமிழை வளத்தை அதிகமாக்குங்கள்.வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!இரவாகொல்லர்கள் கூட களம் போகிறார்கள்இந்த தளத்தில் எல்லோரும் கொல்லர்களே
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
வேந்தன்
நீங்கள் எதற்கும் போக மாட்டீர்களே! அதற்குப் பெயர் ஒன்றிருக்குமே அப்பெயர் என்ன?
அனுமனுக்கு ஒரு அளவு இருந்தால் அணிலுக்கும் ஒரு அளவு இருக்குமே!அந்த அளவைச் செய்யலாமே!
ஒரு ஆளவுக்கு மேல் என்னால் வெட்டிப் பேச்சு பேச முடியாது. ஒரு கட்டுரையைத் தட்டச்ச பலமணி நேரமாகிறது. பயனுள்ளதைப் பேசுங்கள். எழுதுங்கள்.
--
அதே சமயம், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களே எழுத்துப் பிழைகளுடனும் வாக்கியப் பிழைகளுடனும் எழுதுவதைப் பார்த்தால் வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை. தமிழைப் பிழையில்லாமல் படிப்பதற்கும், எழுதுவதற்கும் தனியாக மதிப்பெண்களைத் தந்து, தமிழ்ப் பாடத்தில் தேர்ச்சிபெற அதைக் கட்டாயமாக்க வேண்டும். (நன்றி: தினமணி)
தமிழை உச்சரிக்கும் போது மிக எச்சரிக்கையாக உச்சரிக்க வேண்டும்
தமிழ் மொழிபோல் இனிமையான மொழியும் இல்லை,
உபயோகிக்க ஆபத்தான மொழியும் இல்லை,ஏனென்றால்
கொஞ்சம் மாற்றி உச்சரித்தாலும் பொருள் மாறிவிடும் அபாயம் வேறு எந்த
மொழியிலும் குறைவான அளவே
ஆனால் தமிழ் அப்படியல்ல
சரியான உச்சரிப்பால் குறைவான வார்த்தைகளை உபயோகப் படுத்தி , நிறைவான ,
மற்றும் தேவையான இடத்திற்கு தக்க
பொருள் அழகாக வரும்படி பேசமுடியக் கூடிய மிக பொருள் பொதிந்த செம்மொழி
தமிழே என்பது உங்களுக்கே தெரியும்
அரசு இப்போதாவது இது போன்ற நல்ல நடவடிக்கைகளை
எடுப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
அன்புடன்
தமிழ்த்தேனீ
ஐந்தாம் என்பது ஐந்ட்டாம்ம் என்று வந்து விட்டது
------------- ------------------------
விஜய் தொலைக்காட்சியில் தமிழ் பேச்சு நிகழ்ச்சியைப் பார்ப்போம் மகிழ்வோம்
அன்புடன்
தமிழ்த்தேனீ