இந்திய கொரிய தொடர்பு பற்றிய ஆய்வில் இன்னொரு மைல்கல்

275 views
Skip to first unread message

இம்சை அரசு

unread,
Jan 11, 2014, 9:28:22 AM1/11/14
to mint...@googlegroups.com, vallamai
எனக்கு வண்டி ஓட்டுனர் வசந்த நகரின் கடற்கரைச் சாலையில் எங்கள் வீட்டுக்கு மறுமுனையில் அமைந்திருக்கும் நடனக் கலைஞர் சந்திரலேகாவின் இல்லத்தில் ஒரு கலைக் கண்காட்சி நடப்பதாகவும் அதற்காக வந்துள்ள கொரிய இளம்பெண்கள் தன்னை அப்பா என்றழைப்பதாகவும் அவருடைய இல்லத்துக்குச் சென்று உணவருந்திப் படம் எடுத்துக் கொண்டதாகவும் சொல்லி அவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்த அழைத்துச் சென்றார்

இந்தக் கண்காட்சி இன்கோ என்றழைக்காப்டும் இந்தோ கொரிய நல்லுறவு அமைப்பின் சார்பில் நடப்பதாக அறிய முடிந்தது 


இந்த நிறுவனம் டி.வி.எஸ் ஹூன்டாய் சென்னை கொரியர் சங்கம் மற்றும் பல கொரிய சென்னை வர்த்தக நிருவனங்கள் இணைந்து உருவாக்கிய ஒன்று என்று குறிப்பிட்டு தற்பொழுது வணிகத் தொடர்பைத் தாண்டி இரு தரப்பு கலை பண்பாடு வரலாறு பற்றி செயல் திட்டங்களை தொடங்கப்போவதாகக் குறிப்பிட்டனர்


கொரியாவிலிருந்து வந்த குழுவினரிடம் பேசியபோது அவர்களும் கொரிய அயோத்தொய தொடர்பு பொருத்தமுடையதாகத் தெரியவில்லை என்றும் தமிழகத்தில் இருக்கும்போது நம்மவர் என்ற உணர்வை எல்லொரும் உணர்வதாகக் குறிப்பிட்டார்கள்

கனடாவில் இருக்கும் ஒரு பேராசிரியர் மொழி அடிப்படையில் கொரிய தமிழ் தொடர்பை ஆய்வதாகவும் வரலாறு பண்புக்கூறு அடிப்படையில் நம்முடன் இணைந்து செயல்பட ஆர்வம் உள்ளதாகக் குறிப்பிட்டனர்

நாள் இன்னும் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்வதாகக் கூறினர்

இந்தக் கண்காட்சி 10 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதிவரை நடப்பதாகவும் அதில் சில ;பொழிவுகள் தமிழக கொரிய உறவு பற்றி இருப்பதாகக் கூறி இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு அழைத்துள்ளார்கள்

நாளை புதிய தகவல்களுடன்

இம்சை அரசு

N. Kannan

unread,
Jan 11, 2014, 12:05:09 PM1/11/14
to மின்தமிழ்
2014/1/11 இம்சை அரசு <radius.co...@gmail.com>



கனடாவில் இருக்கும் ஒரு பேராசிரியர் மொழி அடிப்படையில் கொரிய தமிழ் தொடர்பை ஆய்வதாகவும் வரலாறு பண்புக்கூறு அடிப்படையில் நம்முடன் இணைந்து செயல்பட ஆர்வம் உள்ளதாகக் குறிப்பிட்டனர்

எங்கோ பிழை. கனடாவில் இருக்கும் மிஸ்டர்.கிம் என் பழைய நண்பர். நாமெல்லாம் பேசுவதற்கு முன்பிருந்து இத்தொடர்பு பற்றிப் பேசிவருபவர். அவர் பேராசிரியர் அல்லர். பத்திரிக்கையாளர். கடனா வாழ் தமிழர்கள் பேருந்தில் பேசிக்கொண்டு போகும் தமிழைக் கேட்டு உள்ளுணர்வால் இத்தொடர்பை அறிந்து மேலும் ஆதாரம் தேடியவர். முதன்முறையாக கோவை செம்மொழி மாநாட்டில் இவரைத்தேடி கண்டு கொண்டேன். நம்மவர்கள் மரியாதை நிமித்தம் இவரைப் பேராசிரியர் என்று சொல்ல எல்லோரும் பேராசிரியர் என்று எண்ணத்தொடங்கியுள்ளனர். அதை விளக்கவே எழுதினேன்.

தாங்கள் இது குறித்து மேல் விவரங்கள் தாருங்கள்.

நா.கண்ணன் 

bala subramani

unread,
Feb 14, 2014, 2:22:06 AM2/14/14
to mint...@googlegroups.com
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/korean-consulate-office-opened/article5669516.ece
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>


--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/

N. Kannan

unread,
Feb 14, 2014, 4:08:53 AM2/14/14
to மின்தமிழ்
மகிழ்வான செய்தி!

க.>
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

NAgarajan

unread,
Feb 14, 2014, 4:24:38 AM2/14/14
to mint...@googlegroups.com
கொரியாவில் இருந்து வந்தவர்கள் பல செய்திகள் சொன்னார்கள்

வாள் செய்யக்கூடிய நுட்பத்தைக் கற்றுக் கொடுத்தவர் ஒரு தமிழர் என்று சொன்னார்கள்

அவர்கள் என்னுடைய காரோட்டியை அப்பாவென்று அழைத்தனர்

மெளனகுரு
Sent from my iPad

On 14 பிப்., 2014, at 2:38 PM, "N. Kannan" <navan...@gmail.com> wrote

Thamilthendral Muthupillai

unread,
Feb 14, 2014, 11:47:10 PM2/14/14
to mint...@googlegroups.com, vallamai
இயேசு கிறிஸ்து பேசிய அரமேய மொழி மொழியிலும் அப்பா என்ற வார்த்தை உள்ளது, 

(Αββα = Abba)  என தான் உயிர் விடுமுன் அவர் அழைக்கும் இறுதிக் காட்சியையும் the passion of Christ படத்தில் காண்க.

bala subramani

unread,
Feb 14, 2014, 11:53:45 PM2/14/14
to mint...@googlegroups.com
Korea-Gyeongju-Yangdong.Village-02.jpg

bala subramani

unread,
Feb 15, 2014, 12:01:43 AM2/15/14
to mint...@googlegroups.com
korea1960.jpg

bala subramani

unread,
Feb 15, 2014, 12:18:30 AM2/15/14
to mint...@googlegroups.com
now working on comparative between korean, anthamaan ,srilankan
,minicoy maldives fishing methods and folklores

bala subramani

unread,
Feb 15, 2014, 12:19:22 AM2/15/14
to mint...@googlegroups.com
compartive on korean pottery,iran smelting, agriculture with tamilians

bala subramani

unread,
Feb 15, 2014, 12:34:45 AM2/15/14
to mint...@googlegroups.com
Korea-Gwangju-Gochang_Dolmens_5350-06.JPG

bala subramani

unread,
Feb 15, 2014, 12:35:41 AM2/15/14
to mint...@googlegroups.com
4562638166_d9bafb6c59.jpg

bala subramani

unread,
Feb 15, 2014, 12:36:22 AM2/15/14
to mint...@googlegroups.com
800px-Queen_Suro_Tomb.jpg

bala subramani

unread,
Feb 15, 2014, 1:02:07 AM2/15/14
to mint...@googlegroups.com
ama divers.png

bala subramani

unread,
Feb 15, 2014, 2:49:30 AM2/15/14
to mint...@googlegroups.com

bala subramani

unread,
Feb 15, 2014, 3:00:18 AM2/15/14
to mint...@googlegroups.com

Subashini Tremmel

unread,
Feb 15, 2014, 3:10:05 AM2/15/14
to மின்தமிழ், Subashini Tremmel
இதே வகை டோல்மன் அயர்லாந்திலும் உள்ளது. முன்னர் படம் பகிர்ந்து கொண்டேன் என நினைக்கிறேன்.

bala subramani

unread,
Feb 15, 2014, 3:28:44 AM2/15/14
to mint...@googlegroups.com
maraiyur dolmen

world largest collections are from westernghat of south india only
surrounded by sea
MarayoorDolmen.JPG

bala subramani

unread,
Feb 15, 2014, 3:39:39 AM2/15/14
to mint...@googlegroups.com
korean relations are much before 1000 bc where soloman talks about ayi
country of opir harbour

soloman speaks about ayi

korean speaks about ayutha

tamil kadaiyelu vallal ayi mannan who rules western ghats including
madurai much before pandiyan occupied madurai

claasifications of tamils time and space is needed to study history
through geography



On 15/02/2014, bala subramani <sunke...@gmail.com> wrote:

bala subramani

unread,
Feb 15, 2014, 9:39:32 AM2/15/14
to mint...@googlegroups.com

N. Kannan

unread,
Feb 22, 2014, 9:08:50 PM2/22/14
to மின்தமிழ்
நிச்சிரனின் ‘தாமரைச் சூத்திரம்’ ஓர் கண்காட்சி


நேற்று பல மணி நேரங்கள் ஜப்பான்/மலேசிய சோகோ கக்காய் சர்வதேச நிறுவனம் நடத்திய ஓர் அற்புதமான கண்காட்சியை முக்கியப் பிரமுகராகக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. முக்கியப் பிரமுகர் என்பதால் அந்த கலாச்சார மையத்தின் அனைத்து பரிமாணங்களும் எனக்கு விளக்கப்பட்டன. அதுவொரு நல்ல பாடமாக அமைந்தது. மணிமேகலை காப்பியம் செப்புகின்ற பௌத்த நெறி என்பது நாம் நினைக்கின்ற அளவிற்கும் மேலாக, ஒரு மாபெரும் உலக இயக்கமாக இருந்திருக்கிறது, இருக்கிறது. “நீரதன் புதல்வர் என்ற நினைவகற்றாதீர்” எனும் பாரதியின் வரி காதுகளில் ரீங்காரித்துக் கொண்டே இருந்தது. எத்தகைய ஒரு மாபெரும் பண்பாட்டின் வாரிசுகள் நாம். மேற்கே கிரேக்கம் கிழக்கே ஜப்பான் என்று கோலோடசிய நெறி. தமிழர்களின் முயற்சியால் ஸ்ரீலங்கா, மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து (சியாம்), கொரியா, ஜப்பான்வரை இன்னன்னெறி எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. போதிதருமன் எனும் தென்னிந்தியன் (தமிழன்?) புத்தரின் தரிசனத்திற்கு அளித்த விளக்கம் கலங்கரை விளக்கமாய் நின்று வழிகாட்டுகிறது.

புத்த சூத்திரங்களிலேயே மிகவும் போற்றப்பட்டு, மானுடத்தை வழிநடத்தும் ஓர் சூத்திரமாக தாமரைச் சூத்திரம் விளங்குகிறது. இதற்கு பல்வேறு வியாக்கியானங்கள் பிறந்திருந்தாலும் இருவரின் வியாக்கியானங்கள் மிகவும் போற்றப்படுகி்ன்றன. ஒன்று குமாரஜீவா எனும் நேபாள/இந்தியரின் வியாக்கியானம். அதையொட்டி எழுந்த நிச்சிரனின் வியாக்கியானம்! நிச்சிரன் ஜப்பானியர். இவரது தாமரைச் சூத்திர விளக்கத்தை பின்னால் வந்த மகிகுச்சி ஒரு தேசிய எழுச்சியின் சின்னமாகக் கண்டார். ஆனால் ஜப்பானியர் புத்தர் சொன்ன நல்லொழுக்கத்தை விட்டு தூரப் போய்விட்டதாகவும், தேசம் என்பது படை பலத்தாலோ, அரசரின் மகோந்நதத்தாலோ தீர்மானிக்கபடாமல் மக்களின் மனோபலத்தால், அவர்கள் கொள்ளும் வாழ்வியல் நெறிகளால் அமைக்கப்படவேண்டும் என்றார். இத்தகைய புரட்சிகரக் கருத்தைச் சொன்னதால் இவர் ஜப்பானிய அரசால் சிறை வைக்கப்பட்டார். பின்னால் இரண்டாம் உலகப்போரால் ஜப்பான் சீரழிவு கண்டபோது மகிகுச்சியும் அவரது சீடரான ஜோஷி தோடாவும், ‘வன்முறை/போர் என்பது முட்டாள்கள் நம்மை வழிநடத்துவதால் வருவது, எனவே மக்கள் தம்மை மேம்படுத்திக்கொண்டு அமைதியும் அன்பும் நிறைந்த அரசை நிறுவ வேண்டும் என்று சூளுரைத்து சோகோ கக்காய் அமைப்பை உருவாக்கினர். இது இன்று சர்வதேச இயக்கமாக உலகெங்கும் திரு. தய்சாக்கு இகேதா அவர்களின் தலைமையில் இயங்குகிறது. இவரது உலகு தழுவிய முயற்சி இவருக்கு 360 மேலான கௌரவ முனைவர் மற்றும் உயர் அங்கீகாரத்தை அளித்துள்ளது என்றால் பாருங்களேன். ஆனால் இவர் பெருமையாகச் சொல்லிக்கொள்வது நான் தோடா எனும் தனிமனித பல்கலைக் கழகத்தின் மாணவன் என்பதே. இக்கழகமே நேற்று நடந்த கண்காட்சியை நடத்தியது.

புத்தரின் தலை அலங்காரமாக சிற்பங்களில் காணக்கூடிய சுருள்முடி கிரேக்க சிற்ப சாத்திர வடிவம் என்பது அறிஞர் கருத்து. இதற்கு சான்று கூறுவது போல் ஒரு கோயிலில் புத்தரும் அவருக்குப் பின்னால் அட்லஸ் எனும் கிரேக்க தொன்ம வடிவமும் அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். மிகத்தொன்மையான சுவடிகளின் மின்வடிவம் கண்டேன். மரப்பட்டை, ஓலைச்சுவடிகளில் அவை எழுதப்பட்டுள்ளன. இன்று உலகில் கிடைத்துள்ள மிகப்பழைய சுவடிகள் பௌத்த சுவடிகளே. பெர்லின் நூலகத்தில் கிமு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவடியைக் கண்ணாறக்கண்டுள்ளேன். 

Inline images 1

அஜந்தா எல்லோரா குகை, குடைவரைக் கோயில்களைக் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் சீனாவில் அமைந்திருக்கும் மாகோ குடைவரைக் கோயில்கள் என்பன மனித முயற்சியின் உந்நதம் எனும் அளவிற்கு 800 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டிருக்கும் ஓர் முயற்சியாகும். இக்கோயில்களில் வரைந்துள்ள கூரை ஓவியங்களின் பரப்பளவு மட்டும் 45,000 சதுர மீட்டர்கள் என்றால் இதன் விஸ்தாரணத்தை எண்ணிப்பாருங்கள். உலகின் பிரம்மாண்டமான சமய வளம் என்பது பௌத்த நெறிக்கே சொந்தம் என்று நாம் மார்தட்டிக்கொள்ளலாம். மைக்கேல் ஆஞ்சலோ தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகள் முன்னமே அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல், மாகோ ஓவியங்கள் கூரை ஓவியங்களாக வரையப்பட்டு விட்டன என்பதே உண்மை. இந்தக் கோயில்களில் மட்டும் 40,000 மேலான சுருள் சுவடிகள் இருந்திருக்கின்றன. பெரும்பாலானவை பிரெஞ்சு, ஆங்கில தொல்லாய்வாளர்களால் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன என அறிந்தேன். 

கண்காட்சியின் ஒரு படத்தில் தமிழி எழுத்துக்களைக் கண்டேன். படமெடுக்க முடியாததால் எப்படியாவது அதன் நகலைத்தருமாறு வேண்டியுள்ளேன். கிடைத்தால் இங்கு வெளியிட்டு கருத்துக் கேட்பேன். மிகவும் ஆச்சர்யமான சேதி என்னவெனில் தாமரைச் சூத்திரம் அண்ணல் காந்திக்கு வழங்கப்பட்டு அதை அவர் தினம் வழிபாட்டு பிரார்த்தனையாகக் கொண்டிருக்கிறார் என்பதை ஒரு புத்தகத்தின் நகல் சொன்னது. ஆச்சர்யம் என்னவென்றால் அந்த சூத்திரம் சமிஸ்கிருதத்திலும், தமிழிலும் எழுதப்பட்டிருப்பதே! உடனே நான் வாசித்துக் காட்டினேன். அதில் அவர்களுக்கு மகிழ்ச்சி என்னவெனில் இன்றளவும் அவர்கள் சொல்லும் முறை மிகச்சரியாக இருப்பதாக என் மூலம் கண்டு கொண்டதே! ஏன் இந்த சந்தேகம்? ஆகா! மொழிகளின் இன்னொரு சிக்கலை அது விளக்கியது. அதாவது பண்டைய காலத்தில் இச்சூத்திரங்கள் சமிஸ்கிருதத்திலிருந்து சீனமொழிக்கு மாற்றப்பட்டபோது எழுதிய ஓவிய எழுத்துக்களின் ஒலிவடிவம் மிகச்சரியாக இருந்திருக்கிறது. ஆனால் அதே ஓவிய எழுத்துக்களுக்கு கலாச்சார புரட்சியில் எழுந்த மாண்டரின் மொழிச் சீர்த்திருத்தம் வேறொரு ஒலிக்குறிப்பைக் கொடுத்திருப்பதால் தொன்மையான சமயக் குறிப்புகளின் சரியான உச்சரிப்பு மாண்டரின் மூலம் கல்வி கற்கும் போது மாறிவிடுவதை அறிந்தேன். ஆனால், ஜப்பானிய மொழி தொன்மையான சீன வரி/ஒலி வடிவத்தைத் தக்க வைத்திருப்பதால் ஜப்பானிய உச்சரிப்பே சமிஸ்கிருதத்திற்கு நிகராக இருப்பதாக என் சீன (மலேசிய) வழிகாட்டி சொன்னார். கோம்பே போன்ற ஜப்பானிய ஆய்வார்கள் போதிதர்மர் காஞ்சியைச் சேர்ந்தவர் என்று பண்டைய சீனக்குறிப்பை வைத்துச் சொல்வதை இப்போது பூரணமாக நம்ப முடிகிறது. ஏனெனில் அவரது முக்கிய interpretation சீன வடிவத்தின் ஒலி ‘காஞ்சி’ எனும் தமிழ்ச் சொல்லோடு ஒத்துப்போவதாகச் சொல்வதே! இது எவ்வளவு முக்கியம் என்பது நமது கொரியத்தமிழ் ஆய்விற்கு மிக முக்கியம். நாம் இங்கு அடிக்கடி மேற்கோள் காட்டும் அயுத்தா எனும் சொல்லின் மூல சீன வடிவத்தை முதலில் கண்டு பிடிக்க வேண்டும். பின் அதை ஜப்பானியர் வாயால் சொல்ல வைக்க வேண்டும். அப்போதுதான் அதன் உண்மையான ஒலிபெயர்ப்பு கிடைக்கும். சீனத்திலிருந்து கொரிய மொழிக்கு வரும் போது ஒலிச்சிதைவு நடக்க சாத்தியமுண்டு.

Inline images 2

பௌத்தம் ஒரு பிரம்மாண்டம்! பௌத்தம் ஓர் உலக நெறி! நாம் பௌத்த வழிமுறையினர் என்பதில் பெருமை கொள்ள வேண்டும். மணிமேகலையைப் போற்ற வேண்டும். பௌத்த தமிழ்ச் சுவடிகளைத்தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். எத்தனையோ தொன்மையான மொழிகளில் தாமரைச் சூத்திரம் எழுதப்பட்டிருப்பதை அங்கு கண்டேன். உலகின் மூத்த மொழியெனப்படும் தமிழில் இல்லையே? நமக்கு கிறுக்குத்தான் பிடித்திருக்க வேண்டும். இல்லையெனில் இப்படியானதொரு பாரம்பரியத்தைச் சுவடு கூட இல்லாமல் அழித்திருப்போமா? அதே போல் சமிஸ்கிருதம் எனும் தொன்மையான இந்திய மொழியின் மீது நம்மவர் கொண்டுள்ள கிறுக்குத்தனமா வெறுப்பைக் கிள்ளியெறிய வேண்டும். நம் பாரம்பரியத்தின் உண்மைச் சுவடுகள் அம்மொழியில் மேவிக்கிடக்கின்றன. பௌத்த சுவடிகளை அழித்தது போல் இதையும் அழித்துவிடக்கூடாது. இன்றளவும் சமிஸ்கிருதத்தைப் போற்றிப்பாதுகாக்கும் பிராமண சமூகத்தை நாம் மதிக்க வேண்டும். சமிஸ்கிருத ஓலைச்சுவடிகளுக்கும் கவனம் கிட்ட நாம் பாடுபட வேண்டும். நமது குறுகிய பார்வையை ஒழித்து உலக அளவில் தமிழின் உந்நதத்தைக் காட்ட சமிஸ்கிருதம் அவசியம் என உணர வேண்டும்!

தாமரைச் சூத்திரத்தின் தமிழ் மொழி பெயர்ப்புக் கிடைத்தால் that will be a sensation. We can publish it in the exhibition. இதற்கான முயற்சியை மேற்கொள்வோமா?

மிக்க அன்புடன்
நா.கண்ணன் 

Subashini Tremmel

unread,
Feb 23, 2014, 4:45:52 AM2/23/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-02-23 3:08 GMT+01:00 N. Kannan <navan...@gmail.com>:
நிச்சிரனின் ‘தாமரைச் சூத்திரம்’ ஓர் கண்காட்சி


புத்தரின் தலை அலங்காரமாக சிற்பங்களில் காணக்கூடிய சுருள்முடி கிரேக்க சிற்ப சாத்திர வடிவம் என்பது அறிஞர் கருத்து. இதற்கு சான்று கூறுவது போல் ஒரு கோயிலில் புத்தரும் அவருக்குப் பின்னால் அட்லஸ் எனும் கிரேக்க தொன்ம வடிவமும் அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். மிகத்தொன்மையான சுவடிகளின் மின்வடிவம் கண்டேன்.
அருமையான தகவல்.​

 
மரப்பட்டை, ஓலைச்சுவடிகளில் அவை எழுதப்பட்டுள்ளன. இன்று உலகில் கிடைத்துள்ள மிகப்பழைய சுவடிகள் பௌத்த சுவடிகளே. அமைந்திருக்கும் மாகோ குடைவரைக் கோயில்கள் என்பன மனித முயற்சியின் உந்நதம் எனும் அளவிற்கு 800 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டிருக்கும் ஓர் முயற்சியாகும். இக்கோயில்களில் வரைந்துள்ள கூரை ஓவியங்களின் பரப்பளவு மட்டும் 45,000 சதுர மீட்டர்கள் என்றால் இதன் விஸ்தாரணத்தை எண்ணிப்பாருங்கள்.
இத்தகைய முயற்சிகள் பண்டைய மக்களின் கலை முயற்சிகளை வெளிக்காட்டுகின்றன.
​​
உலகின் பிரம்மாண்டமான சமய வளம் என்பது பௌத்த நெறிக்கே சொந்தம் என்று நாம் மார்தட்டிக்கொள்ளலாம். மைக்கேல் ஆஞ்சலோ தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகள் முன்னமே அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல், மாகோ ஓவியங்கள் கூரை ஓவியங்களாக வரையப்பட்டு விட்டன என்பதே உண்மை. இந்தக் கோயில்களில் மட்டும் 40,000 மேலான சுருள் சுவடிகள் இருந்திருக்கின்றன. பெரும்பாலானவை பிரெஞ்சு, ஆங்கில தொல்லாய்வாளர்களால் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன என அறிந்தேன். 

கண்காட்சியின் ஒரு படத்தில் தமிழி எழுத்துக்களைக் கண்டேன். படமெடுக்க முடியாததால் எப்படியாவது அதன் நகலைத்தருமாறு வேண்டியுள்ளேன். கிடைத்தால் இங்கு வெளியிட்டு கருத்துக் கேட்பேன்.
​இதனைப் பார்க்க எனக்கும் ஆவல் உள்ளது. கிடைக்கும் போது பகிர்ந்து கொள்ளுங்கள்.​

 
மிகவும் ஆச்சர்யமான சேதி என்னவெனில் தாமரைச் சூத்திரம் அண்ணல் காந்திக்கு வழங்கப்பட்டு அதை அவர் தினம் வழிபாட்டு பிரார்த்தனையாகக் கொண்டிருக்கிறார் என்பதை ஒரு புத்தகத்தின் நகல் சொன்னது. ஆச்சர்யம் என்னவென்றால் அந்த சூத்திரம் சமிஸ்கிருதத்திலும், தமிழிலும் எழுதப்பட்டிருப்பதே!
ஆச்சரியம். ​

சரி லோட்டஸ் சூட்ரா என்பது இது இல்லையா?

Inline image 1

 
உடனே நான் வாசித்துக் காட்டினேன். அதில் அவர்களுக்கு மகிழ்ச்சி என்னவெனில் இன்றளவும் அவர்கள் சொல்லும் முறை மிகச்சரியாக இருப்பதாக என் மூலம் கண்டு கொண்டதே! ஏன் இந்த சந்தேகம்? ஆகா! மொழிகளின் இன்னொரு சிக்கலை அது விளக்கியது. அதாவது பண்டைய காலத்தில் இச்சூத்திரங்கள் சமிஸ்கிருதத்திலிருந்து சீனமொழிக்கு மாற்றப்பட்டபோது எழுதிய ஓவிய எழுத்துக்களின் ஒலிவடிவம் மிகச்சரியாக இருந்திருக்கிறது. ஆனால் அதே ஓவிய எழுத்துக்களுக்கு கலாச்சார புரட்சியில் எழுந்த மாண்டரின் மொழிச் சீர்த்திருத்தம் வேறொரு ஒலிக்குறிப்பைக் கொடுத்திருப்பதால் தொன்மையான சமயக் குறிப்புகளின் சரியான உச்சரிப்பு மாண்டரின் மூலம் கல்வி கற்கும் போது மாறிவிடுவதை அறிந்தேன். ஆனால், ஜப்பானிய மொழி தொன்மையான சீன வரி/ஒலி வடிவத்தைத் தக்க வைத்திருப்பதால் ஜப்பானிய உச்சரிப்பே சமிஸ்கிருதத்திற்கு நிகராக இருப்பதாக என் சீன (மலேசிய) வழிகாட்டி சொன்னார்.
 
இல்லையெனில் இப்படியானதொரு பாரம்பரியத்தைச் சுவடு கூட இல்லாமல் அழித்திருப்போமா? அதே போல் சமிஸ்கிருதம் எனும் தொன்மையான இந்திய மொழியின் மீது நம்மவர் கொண்டுள்ள கிறுக்குத்தனமா வெறுப்பைக் கிள்ளியெறிய வேண்டும்.
 
​மொழிகளை வெறுப்பதன் வழி எந்த பலனையும் அடைய முடியாது. அதே சமயம் எந்த மொழியும் வேறு எந்த மொழிக்கும் உயர்ந்தது தாழ்ந்தது என்ற மனப்போக்கும் கண்டிக்கத்தக்கது. நமக்குள்ள பெரும்பாலான பிரச்சனைகளே எந்த மொழி உயர்வு, ​தாழ்வு, பெரிது, சிறிது என்ற மனப்போக்கினால் உருவாகுவனவே. அதை விடுத்து பல மொழிகளை கற்கும் மனப்போக்கு வரும் ஒருவருக்கு பல நன்மைகள் கிடைக்கும். பொருளாதாரன் ரீதியாக மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கையிலும் கூட. மொழி வெறியர்களாக இருப்போர் இதனை மறந்து விடுவதே பிரச்சனையாகின்றது.
​சுபா

N. Kannan

unread,
Feb 23, 2014, 4:55:06 AM2/23/14
to மின்தமிழ்
சுபா

லோட்டஸ் சூத்ரா (தாமரைச் சூத்திரம்) என்பது ஒரு தொகுப்பு. இத்தொகுப்பு ஏறக்குறைய 21 அங்கங்களைக் கொண்டுள்ளது. இத்தொகுப்பு புத்தரின் போதனைகளை முழுமையாக நமக்குக் காட்டுவனவாக உள்ளன. பல்வேறு கதைகளின் மூலம் கருத்து சொல்லப்படுகிறது. இக்கதைகள் காலப்போக்கில் பல்வேறு வடிவங்கள் கொள்கின்றன. ஓவியம், சித்திரம், நடனம், இசை போன்று! இச்சூத்திரத்தின் ஒரு முழுப்பிரதியை பேரா.ரகுவீரா என்பவர் காந்தியிடம் கொடுத்திருக்கிறார். அதைப்படித்த பின் காந்தி அதைத்தன் பிரார்த்தனையில் சேர்த்துக்கொண்டார். 

எனது ஆசை என்னவெனில், இச்சூத்திரத்தின் தமிழ் வடிவம் எங்காவது இருக்கிறதா? என்பதே. கிடைத்தால் சோகோ கக்காய் சர்வதேச நிறுவனத்தின் கவனத்திற்கு என்னால் கொண்டுவர முடியும். பல நாடுகள் சுற்றும் இக்கண்காட்சியில் இடம் பெற வைக்க முடியும்!

நா.கண்ணன் 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Nagarajan Vadivel

unread,
Feb 23, 2014, 11:17:02 PM2/23/14
to மின்தமிழ்

2014-02-23 15:25 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:
எனது ஆசை என்னவெனில், இச்சூத்திரத்தின் தமிழ் வடிவம் எங்காவது இருக்கிறதா?

​இந்தக் கட்டத்தை அடைவதற்குமுன் தெளிவு பெறவேண்டித சில கருத்துக்கள்

1. அந்தணர்கள் சமஸ்கிர்தத்தை அரசர்கள் மூலம் அறிமுகப்படுத்தும் முன்னரே வணிகர்களால் சமஸ்கிரிதம் தமிழகத்தில் அறிமுகப்பட்டது

2. சித்தர்கள் வள்ளுவர்கள் பறையர்கல் என்ற மருத்துவர்கள் சமஸ்கிரித வளங்களை அரிந்தவர்களாக இருந்தார்கள்

3. பெளத்தம் கீழை நாடுகளுக்குப் பரவ மையமாக இருந்தது இலங்கை.  இலங்கையிலும் தமிழகத்திலும் இருந்தவர்கள் தமிழ் பெளத்தம் என்று புதிய பிரிவை உருவாக்கினார்கள்.  முதலில் அது வணிகர்கள் மூலமாகவே பரவியது

5. கொரியாவில் தங்கத்தால் ஆன புத்தர் சிலைகள் உருவாக்கப்பட்டு தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது

6.மேற்குக் கரையில் இறங்கியவர்கள் கிழக்குக் கரை மூலம் கீழை நாடுகளுக்குச் செல்ல ஆற்றுப்பாதை தரைவழிப்பாதையாக அமைந்த பெருவழிப்பாதை கள்ளிக்கோட்டையில் இருந்து புலிகட் வரை அமைந்திருந்தது
7. ஸ்ரீவிஜயனின் ஆதிக்கத்தில் பட்டுப்பாதை இருந்தபோது கிழக்குக் கரையில் வங்கக்கடலில் மலாயாவின் தரைப்பகுதிவழியாகக் கடந்து பிலிப்பைன்ஸ் சீனா கொரியா செல்லும் பாதை இருந்தது

மெளனம்

Dr. N.Kannan

unread,
Feb 24, 2014, 7:58:00 AM2/24/14
to mint...@googlegroups.com



Sent from Samsung Mobile


2014-02-23 15:25 GMT+05:30 N. Kannan <
1. அந்தணர்கள் சமஸ்கிர்தத்தை அரசர்கள் மூலம் அறிமுகப்படுத்தும் முன்னரே வணிகர்களால் சமஸ்கிரிதம் தமிழகத்தில் அறிமுகப்பட்டது

2. சித்தர்கள் வள்ளுவர்கள் பறையர்கல் என்ற மருத்துவர்கள் சமஸ்கிரித வளங்களை அரிந்தவர்களாக இருந்தார்கள்
சமிஸ்கிருத்ததை.பிராமணர்களுடன்.                  மட்டும் இணைத்துப் பார்ப்பது மிகத்தவறு. சீனர்கள், கொரியர்கள் என்று பலரும்   புலமை பெற்றிருந்த மொழி இது. 
>>>

3. பெளத்தம் கீழை நாடுகளுக்குப் பரவ மையமாக இருந்தது இலங்கை.  இலங்கையிலும் தமிழகத்திலும் இருந்தவர்கள் தமிழ் பெளத்தம் என்று புதிய பிரிவை உருவாக்கினார்கள்.  முதலில் அது வணிகர்கள் மூலமாகவே பரவியது
>>>
வணிகத்தொடர்பு என்பது இன்றுவரை உள்ளது. மலேசியாவின் வணிகம் சீனர்கள் கையில். பௌத்தமும் அவர்களிடம்தான் உள்ளதுநம்மாளு     சும்மா.  கிடா  க்வெட்டுது ;)

க.>


5. கொரியாவில் தங்கத்தால் ஆன புத்தர் சிலைகள் உருவாக்கப்பட்டு தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது

6.மேற்குக் கரையில் இறங்கியவர்கள் கிழக்குக் கரை மூலம் கீழை நாடுகளுக்குச் செல்ல ஆற்றுப்பாதை தரைவழிப்பாதையாக அமைந்த பெருவழிப்பாதை கள்ளிக்கோட்டையில் இருந்து புலிகட் வரை அமைந்திருந்தது
7. ஸ்ரீவிஜயனின் ஆதிக்கத்தில் பட்டுப்பாதை இருந்தபோது கிழக்குக் கரையில் வங்கக்கடலில் மலாயாவின் தரைப்பகுதிவழியாகக் கடந்து பிலிப்பைன்ஸ் சீனா கொரியா செல்லும் பாதை இருந்தது

மெளனம்

N. Kannan

unread,
Feb 25, 2014, 4:50:29 AM2/25/14
to மின்தமிழ்
Inline images 1

அச்சாக இதே போன்ற ஒரு சிதைந்தத்தின் பாதுகாப்புக்குகையுள் கண்டேன். உலகின் மிகப்பழமையான ஓலைச்சுவடி பட்டுப்பாதையில் கிடைத்ததாம் கிமு 3ம் நூற்றாண்டு என்று கரியாண்டுக்கணக்கு சொல்கிறதாம். கோபிப்பாலைவனத்தின் சூடும், வெறுமையும் இந்த மரப்பட்டையை இத்தனைகாலம் அழியாமல் காத்திருக்கிறது.

Inline images 2 

பட்டுப்பாதை வழியில் அமைந்திருக்கும் மோகாவு குகைக்கோயில்களில் (குடைவரைக்கோயில்) இப்படி 45,000 ஓலைச்சுவடிகள் கண்டு பிடிக்கப்பட்டனவாம். ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரர்களும் 90% அள்ளிக்கொண்டு போய்விட்டனராம்!

இது போல் தமிழ்ப் பௌத்தம் பேசும் சுவடிகள் வெளிநாடு போயிருக்க சாத்தியமுண்டா? தமிழ்நாட்டில் கோடிக்கணக்கில் ஓலைச்சுவடிகள் இன்றுமுள்ளன அவைகளில் ஏதேனும் பௌத்த தாமரைச்சூத்திரம் பேசும் சுவடிகளா இருக்க வாய்ப்புண்டா? 

எனது கேள்வி என்னவெனில் சமணம், சாக்கியம், வைணவம், சைவம் போன்ற பழம் நெறிகள் தமிழ் மண்ணில் சான்றுகளோடு (கோயில், வழிபாடு, குரு பரம்பரை, சுவடிகள்) இன்றும் காணக்கிடைக்க பௌத்தம் மட்டும் எப்படிக் கூண்டோடு அழிந்தது? சமணர்களைக் கழுவேற்றிய பின்னரும் அந்நெறி அம்மண்ணில் வாழ்கிறதே? பௌத்தத்திற்கு என்னவாயிற்று?

ராஜராஜ சோழன் தேவாரச் சுவடிகளைக் கண்டது போல் எங்காவது கோயில் கருவறையில் ஒளிந்து கிடக்கிறதோ? நாம் அக்கறைப்படாவிடில் அது வெளிவர வாய்ப்பில்லை!

நா.கண்ணன்

bala subramani

unread,
Mar 1, 2014, 1:15:09 AM3/1/14
to mint...@googlegroups.com
82 ஆம் வருடத்தில் இருந்து வருடா வருடம் தென் கொரியா மற்றும் சீனாவில்
இருந்து உவான் சுவாங் தலைமுறை என்று சொல்லி ஒரு குழுவினர் குற்றாலத்தில்
உள்ள செக்கு மலை என்ற பகுதியில் ஏப்ரல் 10 நாள் முதல் 22 வரை தங்கி
வானவியல் மற்றும் மெய் இயல் ஆய்வு செய்து வருவதை கடந்த பயணத்தில் அறிந்து
கொண்டேன்

குற்றால மலைக்கு மேல் உள்ள சிறிய சமவெளியில் உள்ள விளைச்சல் செய்யா
விளைநிலங்களை இனி குடும்பர் என்ற மரபு வழி உழவு வந்த என் நட்பு வட்ட
குழுமம் ஏற்று நடத்துவது என்ற முடிவுக்கு அவர்களை என் சொற்பொழிவின் மூலம்
வர வைத்தேன்

இந்த முறை தென் கொரியா சீனா துறவிகள் என்ன செய்கிறாகள் என்று நம்மால்
புரிந்து கொள்ள முடியும்









http://pothikai.wordpress.com/2012/05/05/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>


--

N. Kannan

unread,
Mar 4, 2014, 11:05:18 PM3/4/14
to மின்தமிழ்
2014-02-23 10:08 GMT+08:00 N. Kannan <navan...@gmail.com>:
நிச்சிரனின் ‘தாமரைச் சூத்திரம்’ ஓர் கண்காட்சி


இக்கண்காட்சியில் கண்ட பிராமி (தமிழி?) எழுத்து பற்றி முன்பு குறிப்பிட்டிருந்தேன். அமைப்பாளர்களிடம் அவ்வெழுத்து கொண்ட படத்தின் மின் நகலைத் தருமாறு வேண்டினேன். நேற்று வந்து சேர்ந்தது. முனைவர்.ஏன்சலா மின் ஹுவே ங் அவர்களுக்கு நன்றி.

நாம் செய்ய வேண்டியது என்னவெனில் இந்தப் பழம் பிராமி (தமிழி?) சொல்லும் சேதி என்ன எனக்கண்டு பிடித்து அவர்களுக்குச் சொல்ல வேண்டியது. இது உலகம் சுற்றும் கண்காட்சி, நமது சேதி முக்கியப்படலாம்.

Inline images 1

இச்சேதி தாங்கும் சித்திரம்

Inline images 2

அடுத்த சேதி

Inline images 3

இதைத்தாங்கி நிற்கும் சித்திரம் (சிற்பம்)

Inline images 4

இக்கடைசிப் படம் கண்காட்சியில் இடம் பெறவில்லை. எனக்காகப் பிரத்யேகமாக கொடுத்துள்ளனர். நண்பர் சேசாத்திரியாரின் உதவியைத் தனிமடலில் நாடியுள்ளேன். அறிந்தோர் பங்கேற்க!

இச்சிற்பம் தரும் விளக்கமென்ன? பலா மரம் போல் தோன்றுகிறது?

நா.கண்ணன்
 

தேமொழி

unread,
Mar 6, 2014, 1:39:49 AM3/6/14
to mint...@googlegroups.com

இங்கு செய்தியில் குறிபிடப்பட்ட மென்பொருளாலும்  அதனை உருவாக்கியவராலும் உதவ இயலுமா?


பிப்ரவரி 20,  2014 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' மதுரை பதிப்பில் வந்த செய்தி.

யாருக்காவது இந்த இளைஞருடன் தொடர்பு உண்டா?






On Tuesday, March 4, 2014 8:05:18 PM UTC-8, N. Kannan wrote:
2014-02-23 10:08 GMT+08:00 N. Kannan <navan...@gmail.com>:
நிச்சிரனின் ‘தாமரைச் சூத்திரம்’ ஓர் கண்காட்சி


இக்கண்காட்சியில் கண்ட பிராமி (தமிழி?) எழுத்து பற்றி முன்பு குறிப்பிட்டிருந்தேன். அமைப்பாளர்களிடம் அவ்வெழுத்து கொண்ட படத்தின் மின் நகலைத் தருமாறு வேண்டினேன். நேற்று வந்து சேர்ந்தது. முனைவர்.ஏன்சலா மின் ஹுவே ங் அவர்களுக்கு நன்றி.

நாம் செய்ய வேண்டியது என்னவெனில் இந்தப் பழம் பிராமி (தமிழி?) சொல்லும் சேதி என்ன எனக்கண்டு பிடித்து அவர்களுக்குச் சொல்ல வேண்டியது. இது உலகம் சுற்றும் கண்காட்சி, நமது சேதி முக்கியப்படலாம்.



இச்சேதி தாங்கும் சித்திரம்



அடுத்த சேதி



இதைத்தாங்கி நிற்கும் சித்திரம் (சிற்பம்)



Suba.T.

unread,
Mar 6, 2014, 3:13:25 AM3/6/14
to மின்தமிழ்
தமிழகத்தில் நம் தொடர்பில் இருக்கும் சிலரால் இதனை வாசித்து பொருள் சொல்ல இயலும். ஆனால் அவர்கலில் பலர் இணையப்பக்கம் வருவது குறிவு. வார இறுதியில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுப் பார்க்கிறேன்.

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

N. Kannan

unread,
Mar 8, 2014, 1:14:57 AM3/8/14
to மின்தமிழ்
சுபா:

நேற்று மீண்டும் அக்கண்காட்சிக்கு ஸ்வேதாவுடன் சென்றேன். செல்லச் செல்ல எவ்வளவோ கற்க முடிகிறது. உலக அரங்கில் தமிழ் தலைதூக்கி நிற்க நாம் பௌத்த ஓலைச்சுவடிகளை வெளியிடவேண்டும். அவை எங்கே யாரிடமுள்ளன. எல்லா மொழியிலும் தாமரைச் சூத்திரம் எழுதப்பட்டிருக்கிறது. தமிழிலும் நிச்சயமாக எழுதப்பட்டிருக்கும். அதைக் கண்டுபிடித்தால் உலகை வலம்வர என்னால் செய்ய முடியும்.

இன்னொன்று நான் அனுப்பிய படத்திலுள்ள எழுத்து ஆப்ஃகான் நாட்டில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அதிலுள்ள படம் சொல்வது என்னவெனில், புத்த விக்ரக வழிபாடு தோன்றுவதற்கு முன் இந்தியர்கள் பலா மரத்தை பௌத்தச் சின்னமாக வழிபட்டு வந்திருக்கின்றனர். எனவே நாம் காணப்போகும் பிராமிச்சேதி கிமு நூற்றாண்டைச் சேர்ந்த்தாக இருக்கலாம். இந்து சமவெளி நாகரீகத்தின் தொடர்காலமாக இருக்கலாம். இச்சன்று கண்டுபிடிக்கப்பட்ட இடம் இந்தோ ஐரோப்பிய எல்லை. எனவே நமது முயற்சி பலனளித்தால் அது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது!

நா.கண்ணன்

Suba.T.

unread,
Mar 8, 2014, 1:22:24 AM3/8/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-03-08 7:14 GMT+01:00 N. Kannan <navan...@gmail.com>:
சுபா:

நேற்று மீண்டும் அக்கண்காட்சிக்கு ஸ்வேதாவுடன் சென்றேன். செல்லச் செல்ல எவ்வளவோ கற்க முடிகிறது. உலக அரங்கில் தமிழ் தலைதூக்கி நிற்க நாம் பௌத்த ஓலைச்சுவடிகளை வெளியிடவேண்டும். அவை எங்கே யாரிடமுள்ளன. எல்லா மொழியிலும் தாமரைச் சூத்திரம் எழுதப்பட்டிருக்கிறது. தமிழிலும் நிச்சயமாக எழுதப்பட்டிருக்கும். அதைக் கண்டுபிடித்தால் உலகை வலம்வர என்னால் செய்ய முடியும்.

நான் அறிந்தவரை சென்னையில் உள்ள கீழ்த்திசை சுவடியகம் ஒரு ஓலைச்சுவடி பெட்டகம். நான் சென்ற ஆண்டு நேரில் சென்ற போது பதிவு செய்த விஷயங்கள்  விரையில் வெளியிடப்படும். என் ஊகம்.. அங்கே இருக்க் வாய்ப்புண்டு. இத்தொகுப்புக்களின் மூல காரணமாக இருந்தவர் காலின் மெக்கன்ஸி. ​​அவர் சேகரிப்பில் 20 % இன்னமும் அங்கே உள்ளது. ஏனையவ லண்டன் பிரிட்டிஷ் நூலகத்த்தில் மெக்கன்ஸி கலெக்‌ஷன் பகுதியில் இருக்கின்றன. இங்கே தேடினால் நிச்சயம் பௌத்த சுவடிகள் கிடைக்க அதிக வாய்ப்புண்டு கண்ணன். நீங்கள் இந்த வகையில் உங்கள் தேடுதலை வைத்துக் கொண்டால் உதவலாம்.

சுபா


For more options, visit https://groups.google.com/d/optout.

N. Kannan

unread,
Mar 8, 2014, 1:32:00 AM3/8/14
to மின்தமிழ்
2014-03-08 14:22 GMT+08:00 Suba.T. <ksuba...@gmail.com>:

நான் அறிந்தவரை சென்னையில் உள்ள கீழ்த்திசை சுவடியகம் ஒரு ஓலைச்சுவடி பெட்டகம். நான் சென்ற ஆண்டு நேரில் சென்ற போது பதிவு செய்த விஷயங்கள்  விரையில் வெளியிடப்படும். என் ஊகம்.. அங்கே இருக்க் வாய்ப்புண்டு. இத்தொகுப்புக்களின் மூல காரணமாக இருந்தவர் காலின் மெக்கன்ஸி. ​​அவர் சேகரிப்பில் 20 % இன்னமும் அங்கே உள்ளது. ஏனையவ லண்டன் பிரிட்டிஷ் நூலகத்த்தில் மெக்கன்ஸி கலெக்‌ஷன் பகுதியில் இருக்கின்றன. இங்கே தேடினால் நிச்சயம் பௌத்த சுவடிகள் கிடைக்க அதிக வாய்ப்புண்டு கண்ணன். நீங்கள் இந்த வகையில் உங்கள் தேடுதலை வைத்துக் கொண்டால் உதவலாம்.

சுபா

மைக்கேல் ஆஞ்சலோவின் சாதனையை பிள்ளைச் சாதனை போல் காட்டும் சீனப்பெருங்கற்கோயில் குடைவரை ஓவியங்கள் 800 வருட பௌத்த சித்தாந்த, கலை, இலக்கியவாதிகளின் சாதனை. 800 வருடங்களாகத் தொடர்ந்து ஒரு மலை குடையப்பட்டிருப்பது உலக சாதனை. அங்கு 40 ஆயிரத்திற்கும் மேல் ஓலைச்சுவடிகள் இருந்தனவாம். அதில் தமிழ்ச்சுவடி இருந்ததா எனத்தெரியவில்லை. மகாயான (பெரும்பாதை) பௌத்தம் பெரும்பாலும் சமிஸ்கிருதம் மூலம் பரவியிருக்கிறது. திரவாட பௌத்தம் தமிழ் மொழியில் போயிருக்க சாத்தியமுண்டா? திரவாட (சிறுவழி) பௌத்தம் தென்னகம், இலங்கை, இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து, மியன்மார், கம்போடியா, வியட்நாம் வரை பரவியிருக்கிறது. பல்லவ கிரந்த எழுத்தை என்னால் கம்போடியாவில் வாசிக்க முடிந்தது. பௌத்த சரிதத்தை அறிந்தோர் முன்வந்தால் தமிழின் பெருமையை உலகறியச் செய்யலாம் என்பது என் எண்ணம்.

நா.கண்ணன் 

N. Kannan

unread,
Mar 8, 2014, 2:05:08 AM3/8/14
to மின்தமிழ்


2014-03-08 14:32 GMT+08:00 N. Kannan <navan...@gmail.com>:

மைக்கேல் ஆஞ்சலோவின் சாதனையை பிள்ளைச் சாதனை போல் காட்டும் சீனப்பெருங்கற்கோயில் குடைவரை ஓவியங்கள் 800 வருட பௌத்த சித்தாந்த, கலை, இலக்கியவாதிகளின் சாதனை. 800 வருடங்களாகத் தொடர்ந்து ஒரு மலை குடையப்பட்டிருப்பது உலக சாதனை. அங்கு 40 ஆயிரத்திற்கும் மேல் ஓலைச்சுவடிகள் இருந்தனவாம். அதில் தமிழ்ச்சுவடி இருந்ததா எனத்தெரியவில்லை. மகாயான (பெரும்பாதை) பௌத்தம் பெரும்பாலும் சமிஸ்கிருதம் மூலம் பரவியிருக்கிறது. திரவாட பௌத்தம் தமிழ் மொழியில் போயிருக்க சாத்தியமுண்டா? திரவாட (சிறுவழி) பௌத்தம் தென்னகம், இலங்கை, இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து, மியன்மார், கம்போடியா, வியட்நாம் வரை பரவியிருக்கிறது. பல்லவ கிரந்த எழுத்தை என்னால் கம்போடியாவில் வாசிக்க முடிந்தது. பௌத்த சரிதத்தை அறிந்தோர் முன்வந்தால் தமிழின் பெருமையை உலகறியச் செய்யலாம் என்பது என் எண்ணம்.

நா.கண்ணன் 



Suba.T.

unread,
Mar 8, 2014, 2:10:29 AM3/8/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-03-08 7:32 GMT+01:00 N. Kannan <navan...@gmail.com>:
2014-03-08 14:22 GMT+08:00 Suba.T. <ksuba...@gmail.com>:

நான் அறிந்தவரை சென்னையில் உள்ள கீழ்த்திசை சுவடியகம் ஒரு ஓலைச்சுவடி பெட்டகம். நான் சென்ற ஆண்டு நேரில் சென்ற போது பதிவு செய்த விஷயங்கள்  விரையில் வெளியிடப்படும். என் ஊகம்.. அங்கே இருக்க் வாய்ப்புண்டு. இத்தொகுப்புக்களின் மூல காரணமாக இருந்தவர் காலின் மெக்கன்ஸி. ​​அவர் சேகரிப்பில் 20 % இன்னமும் அங்கே உள்ளது. ஏனையவ லண்டன் பிரிட்டிஷ் நூலகத்த்தில் மெக்கன்ஸி கலெக்‌ஷன் பகுதியில் இருக்கின்றன. இங்கே தேடினால் நிச்சயம் பௌத்த சுவடிகள் கிடைக்க அதிக வாய்ப்புண்டு கண்ணன். நீங்கள் இந்த வகையில் உங்கள் தேடுதலை வைத்துக் கொண்டால் உதவலாம்.

சுபா

மைக்கேல் ஆஞ்சலோவின் சாதனையை பிள்ளைச் சாதனை போல் காட்டும் சீனப்பெருங்கற்கோயில் குடைவரை ஓவியங்கள் 800 வருட பௌத்த சித்தாந்த, கலை, இலக்கியவாதிகளின் சாதனை. 800 வருடங்களாகத் தொடர்ந்து ஒரு மலை குடையப்பட்டிருப்பது உலக சாதனை.
​இந்த செய்திகள் கூட பிபிஸி பிரசித்தப் படுத்திய பிறகே நமக்கு தெரிய வந்தன. பௌத்தம் பிடிக்காததால் ஒட்டுமொத்தமாக அதன் கலைகளையும் ஒதுக்கி விட்டனரோ நம் மக்கள் என்றும் சிந்திக்க தோன்றுகிறது.

 
அங்கு 40 ஆயிரத்திற்கும் மேல் ஓலைச்சுவடிகள் இருந்தனவாம்.

பெரிய தேடுதல் முயற்சி தேவை.
மலேசிய புத்த நிறுவனங்கள் பொருளாதார வசதியில் பலம் மிக்கவையாயிற்றே. அவர்கள் இதனைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனரா? நாம் ஏதும் கருத்துக்களை முன் வைத்தால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என கேட்டுப் பாருங்கள் கண்ணன்.

சுபா
அதில் தமிழ்ச்சுவடி இருந்ததா எனத்தெரியவில்லை. மகாயான (பெரும்பாதை) பௌத்தம் பெரும்பாலும் சமிஸ்கிருதம் மூலம் பரவியிருக்கிறது. திரவாட பௌத்தம் தமிழ் மொழியில் போயிருக்க சாத்தியமுண்டா? திரவாட (சிறுவழி) பௌத்தம் தென்னகம், இலங்கை, இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து, மியன்மார், கம்போடியா, வியட்நாம் வரை பரவியிருக்கிறது. பல்லவ கிரந்த எழுத்தை என்னால் கம்போடியாவில் வாசிக்க முடிந்தது. பௌத்த சரிதத்தை அறிந்தோர் முன்வந்தால் தமிழின் பெருமையை உலகறியச் செய்யலாம் என்பது என் எண்ணம்.

நா.கண்ணன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Geetha Sambasivam

unread,
Mar 9, 2014, 6:45:49 AM3/9/14
to மின்தமிழ்
தங்கள் தேடுதலில் வெற்றியடைய வாழ்த்துகள்.

Dev Raj

unread,
Mar 10, 2014, 2:10:55 AM3/10/14
to mint...@googlegroups.com
On Friday, 7 March 2014 22:32:00 UTC-8, N. Kannan wrote:
மகாயான (பெரும்பாதை) பௌத்தம் பெரும்பாலும் சமிஸ்கிருதம் மூலம் பரவியிருக்கிறது. திரவாட பௌத்தம் தமிழ் மொழியில் போயிருக்க சாத்தியமுண்டா? திரவாட (சிறுவழி) பௌத்தம் தென்னகம், இலங்கை, இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து, மியன்மார், கம்போடியா, வியட்நாம் வரை பரவியிருக்கிறது.
 

ஐயா,

தெற்காசியாவில் பரவியிருந்த பவுத்தப் பிரிவின் பெயர் தேரவாத பௌத்தம்;
திரவாட பௌத்தம் அன்றுஅதன் சங்கதப் பெயர் தாம்ரபர்ணீய பௌத்தம்
ஏனெனில் அது தென்னிந்தியாவில், ஈழத்தில் நிலை பெற்று வளர்ந்தது. 
தேரவாதம் விபஜ்யவாத பௌத்தத்தின் ஒரு பிரிவாகும். விபஜ்யவாதம் 
என்பது ஸ்தவிர வாத பௌத்தப் பிரிவுகளுள் ஒன்றாகும். 
ஸத்தர்ம புண்டரிக ஸுத்ரம் [Lotus sUtras] மஹாயாநப் பிரிவின்
முக்கியமான நூல்.

தென்னிந்திய பவுத்தம் தாமரைச் சூத்திரங்களுக்கு எந்த அளவு
முதன்மை தந்தது என்று தெளிவாகத் தெரியாத நிலையில்
அதைத் தமிழில் துழாவுவது கடினம் . பவுத்தம் நன்கு தெரிந்த
அன்பர்கள் முனைந்து ஆய்வில் உதவினால் தெளிவு கிடைக்கும்


தேவ்

bala subramani

unread,
Mar 11, 2014, 2:43:14 AM3/11/14
to mint...@googlegroups.com
ஆய் ஆயன் அயை என்ற சொல்லாடல் சாலமன் காலத்தில் இருந்து சுமேரிய வரை
ஆஸ்திரேலிய கொரியா சீனா ஜாவா என்று பல நாடுகளில் இந்த சொல்லாடல்
இருக்கிறது

தமிழகத்தில் கூட ஆய் மன்னர்கள் சிறப்பாக ஆட்சி புரிந்து உள்ளனர்

நமது வரலாற்றை 2300 ஆண்டுகளுக்கு பின்னால் தேட துவங்கினால் மட்டுமே பல
புதிய தரவுகள் வெளிப்படும் இனி



http://en.wikipedia.org/wiki/Ayi_language_(Papua_New_Guinea)

http://en.wikipedia.org/wiki/Ayi_language_(China)

http://en.wikipedia.org/wiki/Ayi_people

On 10/03/2014, Dev Raj <rde...@gmail.com> wrote:
> On Friday, 7 March 2014 22:32:00 UTC-8, N. Kannan wrote:
>>
>> மகாயான (பெரும்பாதை) பௌத்தம் பெரும்பாலும் சமிஸ்கிருதம் மூலம்
>> பரவியிருக்கிறது. *திரவாட பௌத்தம்* தமிழ் மொழியில் போயிருக்க சாத்தியமுண்டா?
>> *திரவாட* (சிறுவழி) பௌத்தம் தென்னகம், இலங்கை, இந்தோனீசியா, மலேசியா,
>> தாய்லாந்து, மியன்மார், கம்போடியா, வியட்நாம் வரை பரவியிருக்கிறது.
>>
>
>
> ஐயா,
>
> தெற்காசியாவில் பரவியிருந்த பவுத்தப் பிரிவின் பெயர் *தேரவாத பௌத்தம்;*
> *திரவாட பௌத்தம் *அன்று*. *அதன் சங்கதப் பெயர் *தாம்ரபர்ணீய பௌத்தம்*.
> ஏனெனில் அது தென்னிந்தியாவில், ஈழத்தில் நிலை பெற்று வளர்ந்தது.
> தேரவாதம் விபஜ்யவாத பௌத்தத்தின் ஒரு பிரிவாகும். *விபஜ்யவாதம்*
> என்பது *ஸ்தவிர வாத* பௌத்தப் பிரிவுகளுள் ஒன்றாகும்.
> *ஸத்தர்ம புண்டரிக ஸுத்ரம்* [Lotus sUtras] மஹாயாநப் பிரிவின்
> முக்கியமான நூல்.
>
> தென்னிந்திய பவுத்தம் தாமரைச் சூத்திரங்களுக்கு எந்த அளவு
> முதன்மை தந்தது என்று தெளிவாகத் தெரியாத நிலையில்
> அதைத் தமிழில் துழாவுவது கடினம் . பவுத்தம் நன்கு தெரிந்த
> அன்பர்கள் முனைந்து ஆய்வில் உதவினால் தெளிவு கிடைக்கும்
>
>
> தேவ்
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
>


--

bala subramani

unread,
Mar 19, 2014, 4:46:41 AM3/19/14
to mint...@googlegroups.com
கொரியா தமிழ் உறவுகளை பற்றி 1990 களில் ஆய்வு செய்தவரும் , கட்டிட
கலையில் அறிஞரும் , முன்னாள் தஞ்சை தமிழ் பல்கலைக் கழக கட்டிட துரையின்
அறிஞரும் ஆன , தென்னிந்திய கொரியா கலாசார கழக thuvakkunarum ஆன எங்கள்
இனிய நண்பர் பேராசிரியர் ராஜ பவுன் துரை இன்று மதுரையில் காலமானார்

என் போன்றவர்களுக்கு பேர் இழப்பு

N. Kannan

unread,
Mar 19, 2014, 6:19:30 AM3/19/14
to மின்தமிழ்
2014-03-19 16:46 GMT+08:00 bala subramani <sunke...@gmail.com>:
கொரியா தமிழ் உறவுகளை பற்றி 1990 களில் ஆய்வு செய்தவரும் , கட்டிட
கலையில் அறிஞரும் , முன்னாள் தஞ்சை தமிழ் பல்கலைக்  கழக கட்டிட துரையின்
அறிஞரும் ஆன , தென்னிந்திய கொரியா கலாசார கழக thuvakkunarum ஆன எங்கள்
இனிய நண்பர் பேராசிரியர் ராஜ பவுன் துரை இன்று மதுரையில் காலமானார்

என் போன்றவர்களுக்கு பேர் இழப்பு


அப்படியா? இது மிகவும் துக்கமான சேதி!

அவர் வாழ்ந்திருந்தால் அவரின் பங்களிப்பை இன்னும் உலகறியச் செய்திருக்கலாம். அவரும் மகிழ்ந்திருப்பார். கடைசிமுறை சென்னைக் கருத்தரங்கில் சந்தித்த போது அவரது ஆய்வை நான் மேற்கோள் காட்டவில்லை என்று கோபப்பட்டார். அத்தகையக ஆய்வுகள் எம் போன்று வெளிநாட்டில் வாழ்வோருக்கு அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. அவரிடம் கேட்டு உசாத்துணை அறிந்து கருத்தரங்கிலேயே நூல் வாங்கி எனது கட்டுரையை மறுவாசிப்பு செய்து அவரின் ஆய்வை உசாத்துணையாக சேர்த்து வெளியீட்டிற்கு அனுப்பினேன். அந்த ஆய்வுக்கட்டுரைக் கோவை வெளிவந்ததா என்பதும் தெரியவில்லை. வந்திருக்க வேண்டும்.

பாலு, என் ஆறுதலைக் குடும்பத்தாருக்குச் சொல்லவும். கொரிய ஆய்வில் ஈடுபடுவோர் மிகக்குறைவு, அதிலொன்று குறைந்துவிட்டது பேரிழப்பு.

நா.கண்ணன்
 

Suba.T.

unread,
Mar 19, 2014, 2:15:39 PM3/19/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-03-19 9:46 GMT+01:00 bala subramani <sunke...@gmail.com>:
கொரியா தமிழ் உறவுகளை பற்றி 1990 களில் ஆய்வு செய்தவரும் , கட்டிட
கலையில் அறிஞரும் , முன்னாள் தஞ்சை தமிழ் பல்கலைக்  கழக கட்டிட துரையின்
அறிஞரும் ஆன , தென்னிந்திய கொரியா கலாசார கழக thuvakkunarum ஆன எங்கள்
இனிய நண்பர் பேராசிரியர் ராஜ பவுன் துரை இன்று மதுரையில் காலமானார்

என் போன்றவர்களுக்கு பேர் இழப்பு

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்கள்.

சுபா



--

bala subramani

unread,
Aug 1, 2014, 12:03:28 PM8/1/14
to mint...@googlegroups.com
http://www.thehindu.com/features/metroplus/twerk-your-way-to-centre-stage/article6268040.ece


Twerk your way to centre stage


Raveena Joseph attends the first Korea -pop festival in South India,
discovering interesting facets to this sub-culture

The backdrop turns bright pink. Four young girls dressed in pink play
suits embellished with silver trickle onto the stage. They take their
place, waiting for a Korean pop song to fill the auditorium, before
grooving uninhibitedly to the music. They bound energetically across
the stage, pony-tails wildly swaying, wide smiles on their face as
they get down on the floor.

The audience breaks into applause as they finish and a band of six
boys dressed in yellow trousers and shiny black jackets, take over.

The first K-pop festival in South India saw numerous such
performances, “For a k-pop performance, you need a unique dress sense
with flashy clothes, distinctive hairstyles and stylish dance moves,”
says Phani Kumar, who has choreographed a bboying performance for the
event.

Drawing a niche crowd of k-pop fans, along with many other Korean
expats, the recent event was a testimony to the k-pop culture finding
its way to the city.

“Psy’s Ganganam Style was the trigger that brought K-pop to centre
stage,” says Rathi Jafer, director of the Inko Center that organised
the event. “K-pop is getting attention, but not a lot of people like
it yet. They will in time, though,” says 19-year-old Anita Rajan, a
fan of the genre, who has been learning Korean to understand K-reality
shows. Korean Pop or K-pop is popular music originating from South
Korea that has found popularity in different parts of the world.

In India, the wave has not come through in a homogenous fashion.

It has, however, taken root in the North-East where the distinctive
audiovisual elements--synthesized music, stylish dance routines,
flashy outfits, bubblegum pop combined with popular music
elements--have found a huge fan base.

The genre has a small but dedicated fan following in Chennai, and it
is constantly growing.

Fans, usually in school and college, are taking to not only the music,
but also the reality shows, soap operas and movies.

“When I started listening to it two years ago, not too many people
were interested in K-pop.

Now I find Korean dramas dubbed in Tamil and articles in Tamil
magazines about the genre,” says Anita.

“The K-pop phenomenon appeals to a younger audience who are active in
the online medium,” says Rathi Jafer.

There are many online communities for fans to share and discuss their
music, but there are very few avenues to actually meet off-line as the
community is still loosely scattered.

“Since I’m a k-popper, I do everything to get noticed,” says
24-year-old Ranjanai Ranganathan who further explains that k-popping
includes “fangirling, admiring the stars and indirectly promoting
their work”. A serious k-popper, Ranjani created Chennai’s Ever
Lasting Friends (E.L.F) Fan club in 2013, which now has over 40
members. When the niche fan base in Chennai gets together, they sing
and dance, exchange posters, and send photos and hand-written letters
to their idols in South Korea.

“Boys don’t seem to like it at all. They have set ideas about clothes
and hairstyles, and feel that the k-pop artists are too effeminate,”
explains 21-year-old Amrutha Varshini on why boys predominantly don’t
take k-pop artists or their music too seriously. “Girls are more open
to checking out the clothes, hair and choreography. They go for the
details-- in K-pop, there’s a lot of focus on the details.”

“K-pop artists have very little autonomy and the industry in South
Korea is like a slave market, which is why they seem very plastic and
manufactured,” says Amrutha. In South Korea, musicians can’t perform
independently and must go through entertainment companies that offer
binding contracts to children right from age 10. “Companies look for
really young kids to groom, so the younger, the better. They don’t get
paid and they can’t leave. When the company thinks they are ready,
they’re placed in a band,” explains Anita about the restrictions that
control talent in the entertainment industry in South Korea.

Despite what goes on behind the scenes, the popularity of the genre
and its artists keep growing. “K-pop artists do a lot of fan service,
which helps you relate to them,” says Amrutha. K-pop stars often
mention fans when they appear on reality shows, wear the T-shirts they
receive and send messages to sick fans through their lyrics, which
gets the fans excited and keeps them involved.

Chennai, still new to this phenomenon, has not acquired the mass
support required for the genre to explode.

However, the enthusiasm of the audience, who were singing along in
Korean and actively encouraging the performances at the K-pop festival
shows that this phenomenon is only going to grow.

Keywords: K-pop, Korean Pop
> http:// <http://ksuba.blogspot.com/>subas-visitmuseum.blogspot.com -
> அருங்காட்சியகம்
> ஓர் அறிவுக் கருவூலம்!
>
> http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
> http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
> http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
> http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
> http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
>

bala subramani

unread,
Aug 12, 2014, 3:49:27 AM8/12/14
to மின்தமிழ்

bala subramani

unread,
Apr 15, 2015, 12:28:12 PM4/15/15
to மின்தமிழ்
 
காயா மரம்

     இக்காலத்தில் இது காசாவென வழங்குகின்றது. இது முல்லை நிலத்திற்குரிய மரம்; கார்காலத்தில் மலர்வது; இதன் மலர் நீல நிறமுடையது. காயா மரத்தின் பூக்கெழு பெருஞ்சினை மெல்லிய மயிலின் கழுத்தைப் போலத் தோற்றுவதாக ஒரு புலவர் பாடுகின்றார்.
 
 
கொரியா நாட்டில் இந்திய கடற்கரை  தாவரங்கள் இருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள் , அதில் ஒன்று தான் காயா மரம்
கடல் நீரோட்டங்கள் கொண்டு செல்வதாகட்டும் ,பறவைகள் வழியில் ஆகட்டும் அடுத்து மனிதர்கள் கொண்டு சென்ற தாவரங்கள் என்று பார்க்க வேண்டும் கொரியா கடலோடிகளின் வரலாறு முழுவதும் வெளி பட வேண்டும்

க்ருஷ்ணகுமார்

unread,
Apr 15, 2015, 12:51:37 PM4/15/15
to mint...@googlegroups.com
தாமரை சூத்திரம்............. LOTUS SUTRA.............

सद्धर्मपुण्डरीकसूत्रम्

ஸத்தர்ம புண்டரீக ஸுத்ரம்.............

இதனுடைய மூலம்........... முழுமையாக...........தேவநாகரி லிபியில் கீழ்க்கண்ட உரலில் காணக்கிட்டும் :-

http://www.dsbcproject.org/node/7926

இதற்கு English Translation கிட்டுகிறது.

முயற்சி எடுக்கப்பட்டால் தமிழாக்கம் சாத்தியம்.

ஔதும்பர புஷ்பத்தை ஒப்பிட்டு (அத்திப்பூ) ஸத்தர்ம புண்டரீக ஸூத்ரத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் :-


மஹாயான சூத்ரங்களில் ப்ராபல்யமான ஸத்தர்ம புண்டரீக ஸூத்ரம் (Lotus sutra) எனும் சூத்ரத்தில் இந்த ஔதும்பர புஷ்பம் பற்றிய குறிப்பு வருகிறது சூத்ரத்தின் இரண்டாம் பாகத்தில். (நன்றி விக்கிபீடியா). அபூர்வம் என்ற கருத்தைப் பகிர வேண்டிய இடங்களில் இந்த புஷ்பத்தைப் பற்றிய குறிப்பு வருகிறது.

तद्यथापि नाम शारिपुत्र उदुम्बरपुष्पं कदाचित् कर्हिचित् संदृश्यते, एवमेव शारिपुत्र तथागतोऽपि कदाचित् कर्हिचित् एवंरूपां धर्मदेशनां कथयति।

தத்யதாபி நாம சாரிபுத்ர உதும்பர புஷ்பம் கதாசித் கர்ஹிசித் ஸந்த்ருச்யதே, ஏவமேவ சாரிபுத்ர ததாகத: அபி கதாசித் கர்ஹிசித் ஏவம்ரூபாம் தர்மதேசானாம் கதயதி. (37)

The Buddha told Shariputra, “A wonderful Dharma such as this is spoken only occasionally by the Buddhas, the Thus Come Ones, just as the udumbara flower appears but once in a great while.”

औदुम्बरं पुष्प यथैव दुर्लभं
ஔதும்பரம் புஷ்ப யதைவ துர்லபம்
कदाचि कहिंचि कथंचि दृश्यते।
கதாசி கஹிஞ்சி கதஞ்சி த்ருச்யதே
मनोज्ञरूपं च जनस्य तद्भवे-
மனோக்ஞரூபம் ச ஜனஸ்ய தத்பவேத்
दाश्चर्यु लोकस्य सदेवकस्य॥१३७॥
ஆஸ்சர்யு லோகஸ்ய ஸதேவகஸ்ய

It is like the udumbara flower,
Which all love and enjoy,
Seldom seen by gods and men,
Appearing but once in [long] periods.







N. Kannan

unread,
Apr 16, 2015, 12:56:28 AM4/16/15
to மின்தமிழ்
2015-04-16 0:28 GMT+08:00 bala subramani <sunke...@gmail.com>:
 
காயா மரம்

     இக்காலத்தில் இது காசாவென வழங்குகின்றது. இது முல்லை நிலத்திற்குரிய மரம்; கார்காலத்தில் மலர்வது; இதன் மலர் நீல நிறமுடையது. காயா மரத்தின் பூக்கெழு பெருஞ்சினை மெல்லிய மயிலின் கழுத்தைப் போலத் தோற்றுவதாக ஒரு புலவர் பாடுகின்றார்.
 
 
கொரியா நாட்டில் இந்திய கடற்கரை  தாவரங்கள் இருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள் , அதில் ஒன்று தான் காயா மரம்
கடல் நீரோட்டங்கள் கொண்டு செல்வதாகட்டும் ,பறவைகள் வழியில் ஆகட்டும் அடுத்து மனிதர்கள் கொண்டு சென்ற தாவரங்கள் என்று பார்க்க வேண்டும் கொரியா கடலோடிகளின் வரலாறு முழுவதும் வெளி பட வேண்டும்

அருமையான சிந்தனை!

“காயா மலர் வண்ணன் கண்ணன்” என்று பாடுகிறார் பெரியாழ்வார். முல்லைத்தலைவன் கண்ணன். காயா மலர்கள் கொரியாவில் உண்டா எனக் காண வேண்டும். நம் பாண்டிய இளவரசி இறங்கிய போது காயா மரத்தைக் கண்டதால் அந்த அரசிற்கு “காயா” அரசு எனப்பெயரிட்டு இருக்கலாம் (நாவலத்தீவு என்று பாரதத்தைப் பண்டைத்தமிழ் சுட்டுவது போல்). இதைப் புரிந்து கொள்ளாமல் கொரிய சரித்திரவியலர், புத்த கயாவுடன் இணைத்து அதைக் ‘கயா அரசு’ எனப்பொருள் கொண்டு விட்டனர் என்று தோன்றுகிறது!

பாலு ‘காயா’ மரத்தின் தாவரவியல் பெயரென்ன? (எங்கே போனார் நம் வேங்கட மணி? :-)

நா.கண்ணன் 

bala subramani

unread,
Apr 16, 2015, 1:17:15 AM4/16/15
to மின்தமிழ்

தேமொழி

unread,
Apr 16, 2015, 2:20:14 AM4/16/15
to mint...@googlegroups.com
பாண்டிய இளவரசி பெளத்த மதத்தினளாக இருந்திருந்தால்... 

அக்காலத்தில் கடலில் பயணம் செய்த பெண்கள் பெளத்த மதப் பெண்கள் மட்டுமே....

அவள் புத்த கயா நினைவாகவும் பெயர் வைத்திருப்பாள்.


..... தேமொழி 

செல்வன்

unread,
Apr 16, 2015, 2:31:21 AM4/16/15
to mintamil
தமிழ்ப்பெண்கள் அக்காலத்தில் கடல் தாண்டிச்செல்லும் செல்லும் வழக்கம் கிடையாது. அது எம்மதப்பெண்ணாக இருந்தாலும்.

(மணிமேகலையை மணிமேகலா தெய்வம் வான்வழியே தூக்கிசெல்வது இங்கே பொருந்தாது. அதுகடற்பயணம் அல்ல )

நிலத்தில் பட்டுப்பாதை வழியே இளவரசி கொரியா சென்றிருக்கலாம்.

bala subramani

unread,
Apr 16, 2015, 9:10:40 AM4/16/15
to மின்தமிழ்

எளிதில் கடக்க முடியாத நீரினை கடல் நீரோட்ட  வழிகளுக்கு ககனம் என்ற சொல்லாடல் இன்றும் நமது ஆழ கடல் மீனவர்களிடம் உள்ளது

2000 வருடங்களுக்கு முன்பே யவனர்களிடமும் ரோமானிய சீன  சாவகத்துடன் தொடர்பு உடையவர்கள் தமிழர்கள்

இன்னமும் நமக்கு தொல்காப்பியத்தின் காலம் தெரியாது
அதனால் முந்நீர் வழக்கம் மகடுவோடு இல்லை என்பது  முழுவதும் பொருந்தாதது

திருவின் செல்வம் பெருங்கடல் கொள்ள
 ஒருதனி வரூஉம் பெருமகன் போலத்
 தானே தமியன் வருவோன் தன்முன்
 மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச்
 சாவக நன்னாட்டுத் தண்பெயல் மறுத்தலின்

இன்று கலிபோர்னியாவின் தமியன் நிலம் மக்கள்  வரை தமிழின் ஆளுமை  மற்றும் சினாவின் பல இஅடங்கல் பாண்டியன் என்ற பெயரிலும் ஆயி என்ற முது பெயர் பழைய பைபிள் காலத்தில் நாடு நிலகடலில் இருந்து நமது பகுதிகளுக்கு சுட்டு பெயரை உள்ளதாலும் குணா கடலில்   இருந்து சீன வரை இருப்பதாலும்

பல நாடுகளில் தமிழ் பெயர்கள் ஊராய் இருப்பதால் கூட்டத்துடன்   சென்று  இருந்தால்  மட்டுமே இதற்கான  சாத்தியம் இருப்பதால்

மற்றும் கீ மு 3 ஆம் நூற்றாண்டில் அசோகரின் மகள் சங்க மித்திரை தந்து உடன் பிறப்புடன்  கடல் பயணம் செய்து இருப்பதாலும் நமது பாண்டியா  இளவரசி கடலில் சென்று இருப்பதை உறுதி செய்யலாம்

கயா என்பதை விட காயா என்ற சதுப்பு நிலைமை பொருந்துவதாக உள்ளது


--

bala subramani

unread,
Apr 16, 2015, 9:13:28 AM4/16/15
to மின்தமிழ்

bala subramani

unread,
Apr 16, 2015, 9:14:21 AM4/16/15
to மின்தமிழ்

N. Kannan

unread,
Apr 17, 2015, 1:35:15 AM4/17/15
to மின்தமிழ்
2015-04-16 21:10 GMT+08:00 bala subramani <sunke...@gmail.com>:கயா என்பதை விட காயா என்ற சதுப்பு நிலைமை பொருந்துவதாக உள்ளது

இன்னொன்றும் தோன்றுகிறது பாலு!

தென்னாசியப் பரப்பில் இந்தியாவின் தாக்கம் தூலமாகத்தெரிகிறது. ஆயின் தூர கிழக்கில் இனிமேல்தான் அதை ஊர்ஜிதம் செய்ய வேண்டியுள்ளது. ஜப்பான், கொரியாவில் நிச்சயம் தமிழ்த்தடங்கள் உள்ளன. சந்தேகமே இல்லை.

தாய்லாந்து நாட்டின் பெயரே கருநீல வண்ணனான கண்ணனின் பெயரான “ஷியாம்” (சியாம்) என்பதே! அதே போல், ஏன் கொரியாவின் முதலரசும் கண்ணன் பெயர் கொண்டு “காயா” என்றழைக்கப்பட்டிருக்கக்கூடாது?

Samguk Yusa  எழுதிய Iryon (CE 1206 -1289 ), கிருஷ்ணனின் இன்னொரு பெயரான Sakrodeveendra பற்றிச் சொல்கிறார். சக்கரம் உடைய தேவேந்திரன் கண்ணன். கண்ணனுக்கு உபேந்திரன் என்ற பெயருமுண்டு. அதாவது இந்திரனின் தம்பி எனும் பொருளில். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, ‘சியாம்’ எனும் நாடு தோன்றும் முன் (?) கொரியாவில் “காயா” அரசு (காயா மலர் வண்ணன்) கண்ணனின் பெயர் கொண்டு நிருவப்பட்டிருக்கலாம். “கடல் வண்ணன் புராணம் ஓதும்” வழக்கம் பற்றி மணிமேகலை பேசுகிறது. 

மேலும் பௌத்தம் தோன்றுமுன் இருந்தது இந்து (சநாதன தர்மம்), பௌத்தம் இந்தியாவில் அழிந்த பின்னும் நின்றது இந்து தர்மம். எனவே கட்டாயமாக கொரிய அரசு பௌத்தம் சார்ந்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டுமென்றில்லை. மேலும் நான் முன்பே இத்தொடரில் எழுதிய படி, Gimhae பகுதியில் மட்டும் சூலாயும் இருக்கிறது. கொரியாவில் வேறு எங்கும் நான் காணவில்லை. இந்த சூலாயுதம் நானாதேசிகளில் ஒரு குழுவின் சின்னம். பௌத்தத்தை இவ்வணிகக்குழு ஆசியா முழுவதும் பரப்பும் முன் இந்து தர்மத்தை பரப்பியிருக்க வேண்டும் (உம். பாலித்தீவு).

இப்படியெல்லாம் யோசித்தால் “காயா” என்பது மரம் சார்ந்தோ (உம்.நாவல் மரம்) அல்லது அம்மரத்துடன் தொடர்புடைய இறைமை சார்ந்தோ உருவாகியிருக்க சாத்தியமுண்டு.

நிச்சயமாக இது கடல்வழி நடந்த ஒன்று. நிலவழி அல்ல என்பது மட்டும் உறுதி.

நா.கண்ணன்

bala subramani

unread,
Apr 17, 2015, 10:38:28 AM4/17/15
to மின்தமிழ்

புத்தம் சமணம்  பரவுவதற்கு முன்பே நமது கடலோடும் திறனும் மக்கள் கூடமாக சென்று வணிகம் செய்த இடத்தில தமது மொழி பண்பாடுகள் மரபுகள் ,தாவரங்கள் விலங்குகள்  பரிமாற்றம் நடந்து உள்ளது

என் ஆய்வுகளில் இந்த நாட்டு கடற்கரை எங்கும் வைணவத்தின் ஆளுமை மேலோங்கி உள்ளது

தமிழின் தொன்மையில் - இலக்கியத்தில் வைணவம் என்ற கோட்பாடுடன் தான் மறைந்த பேராசிரியர் கோவிந்தன் என் போன்றவர்களை ஊக்குவித்தார் ,பரிபாடலில், நான்மணி கடிகையில் மாலவன் வணக்கத்தையும் உணரலாம்

ராமானுஜர் காலத்தில் மீட்ருவாக்கம் தான் செய்து உள்ளார் ,ராமானுஜர் காலத்தில் புத்தம் இங்கு தந்து நிலையை இழந்து உள்ளது என்பதை புத்தத்தை பின் பற்றிய கோளியர்கள் மள்ளர்கள் அவர்களின் நிலை குறைந்ததை வைத்து நாம் மதிப்பு இடலாம்

காயா என்ற சதுப்பு நிலம் அல்லது காய மரம் இருக்கும் பகுதி என்றும் உணரலாம்

சூலம் இன்றும் எங்கள் படகுகளில் சுறாவை கொல்ல பயன் படுகிறது

சீனாவில் உள்ள ஆயி மக்களிடமும் ,சீனா தாய்லாந்து,லாவோஸ் வியட்நாம் பிலிபைன் சாவகம்  நாடுகளில் அதன்  கடற்கரைகளில் நம் தேடுதல் வலிமை பெரும்

ஸ்ரீவிஜய என்ற அரசை விட  விசயத்தார் என்ற தமிழ் வணிகர்களை அவர்களின் மேலாண்மையில் இருந்த அரசை   தான் அனைவரும் உணருகிறார்கள் 

நமது கடலோடும் கால நிலை மிகவும் பழமையானது


ஒரு பெண் தான் கேள்விப்பட்ட நிலபரப்பை நாடி தான் குடும்ப துணையுடன் செல்வாள் அந்த காலத்தில் அந்த இடத்தின் பெயர் என்னவாக இருக்கும்

யவனர்களும் பாரசிக ,சிந்து சுமேரிய எகிப்து  சீனர்களும் நமது மண்ணோடு பல காலமாய் தொடர்பில் உள்ளவர்கள் .............


--

bala subramani

unread,
Apr 17, 2015, 11:02:33 AM4/17/15
to மின்தமிழ்
rare coastal vainavism
261488.jpg

bala subramani

unread,
Apr 17, 2015, 11:11:37 AM4/17/15
to மின்தமிழ்
Image-112.jpg

bala subramani

unread,
Apr 17, 2015, 11:12:49 AM4/17/15
to மின்தமிழ்
113.JPG

bala subramani

unread,
Apr 17, 2015, 11:30:58 AM4/17/15
to மின்தமிழ்

N. Kannan

unread,
Apr 17, 2015, 11:24:15 PM4/17/15
to மின்தமிழ்
பாலு!

இது உண்மையா இல்லை வரதன் யானைக்கு நாமம் சார்த்தியது போலவா?  இப்படியானதொரு படத்தை நான் முன்பின் பார்த்ததில்லை. ஊர்ஜிதமெனில் நிறையப் பேசவுள்ளது!

நா.கண்ணன்

N. Kannan

unread,
Apr 17, 2015, 11:25:30 PM4/17/15
to மின்தமிழ்
இதுவும் கூட ஒரு கிரேக்க அறிஞனுக்கு நாமம் சார்த்தியது போலுள்ளது. கவனமாக இருக்க வேண்டும். தமிழன் திருப்பதிக்கே அல்வா கொடுப்பவன் ;-)

நா.கண்ணன்

bala subramani

unread,
Apr 18, 2015, 9:08:02 AM4/18/15
to மின்தமிழ்
அவர் பேசிய பல விஷயங்களிலே என் நினைவில் இருக்கும் முக்கியமானதொன்று – எகிப்தில் தலைமுறை தலைமுறையாக அரசாண்ட ஃபாரோக்கள், தென்னாட்டிலிருந்து மிசிர தேசத்துக்குச் (எகிப்து) சென்ற வடகலை அய்யங்கார்கள்தான் என்றும், அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும், அதைப்பற்றித் தான் ஒரு நூல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.. அந்த நம்பிக்கையில் ஆங்கிலத்தில் Long Missing Links என்று ஒரு 900 பக்கப் புத்தகம் எழுதி, தன் சொந்தச் செலவிலேயே அச்சிட்டு விற்க முயன்றார். புத்தகம் விற்கவில்லை
 
 
 
 
கடல் கடந்து முதலில் வைணவம் தான் என்று பல தரவுகளோடு வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய லாங் மிஸ்ஸிங் லினக்ஸ் என்ற 900 பக்கம் நூல் அவர் காலத்தில் பல எதிர்ப்பை இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவர்கள் நடுவில் சந்தித்தது
என் எனில் உலகின் மேற்கு கடல் வணிக மூலமாக கிரேக்கம் தமிழன் மெய் இயல் கோட்பாடுகள் வைணவத்தின் மூலமாக பல மேற்கு மக்களை தழுவ வைத்தது என்றும்
 
பின்னர் தோன்றிய கிறிஸ்துவம் இஸ்லாம் அதை அழித்தது என்று ஆதாரங்களோடு எழுதினார்
 
அதே நிலை தென் கிழக்கு பகுதிகளில் புத்தம் மூலமாக நிகழ்ந்தது
 
திருமாலவன்  மாலவன் என்ற கூர்மம் என்று  கடல் சார் தொடர்பில் இருந்த வைணவம் அதன் அழுந்மையை கடல் கடந்து சென்ற கடலை வேலியாக கொண்ட மக்கள் மூலமாக பரவி இருந்தது என்று'கடலில் தொன்மையை தேடும்  நாங்கள் சொன்னால் உங்களுகே நம்ப முடியவில்லை
 
 
'"இது உண்மையா இல்லை வரதன் யானைக்கு நாமம் சார்த்தியது போலவா?  இப்படியானதொரு படத்தை நான் முன்பின் பார்த்ததில்லை. ஊர்ஜிதமெனில் நிறையப் பேசவுள்ளது! ""
 
 
வடுவூராரின்  நூலை படிக்கும் பொழுது வியப்பாக இருக்கும்
எனக்கு தெரிந்து ஒரே ஒருவரிடம் அந்த நூல் இருந்தது
ராமகிருஷ்ண ராவ் அவரிடம் இருக்கும் நூல் பதிவு செய்யும்போது உடையும் என்றதால் யாருக்கும் கொடுப்பதில்லை
 
 
 
ஜப்பானுக்கும் மேலே உள்ள ஆமூர் ஆற்றில் இருந்து குறில் தீவுகளில் இருந்து ,ஜப்பான் கொரிய சீனம் பிலிபைன் பப்புவ நியூ கினியா  சாவகம் சுமத்ரா நக்கவரம் என்று எங்களை போன்றவர்கள் முறைபடுத்தும் போது எங்களுக்கே முதலில் வியப்பை அளிக்கிறது
இடம் விட்டு தங்கி மறுபடியும் இடம் பெயரும் கூட்டமாக உங்களை போல ஜெர்மன்,ஜப்பான் கொரியா ஜெர்மன்  மலேசிய என்று அந்த காலத்திலும் இவர்கள் புலம் எப்யர்ந்து பதினென்  சாத்து என்ற வணிகம் செய்தார்கள் என்பதும் பல மதங்கள்  இவர்களின் மூலமாக பரவியது என்பதும்

கடல் வளர்த்த மொழி பண்பாடு மரபு இந்த கடலை வேலியாக கொண்ட நிலத்தில் இருந்து சென்று இருக்கிறது என்பதும் இன்னும் சில காலத்தில் புரிதலை உருவாக்கலாம்
 
 
அன்புடன்
 
பாலு
 
 
 
 

bala subramani

unread,
Apr 18, 2015, 9:15:22 AM4/18/15
to மின்தமிழ்

bala subramani

unread,
Apr 18, 2015, 9:28:19 AM4/18/15
to மின்தமிழ்

கொரிய தமிழ் வரலாற்று  உறவு பற்றிய  ஆய்வுகள் உலக  இணைய வரலாற்றில் மின் தமிழில் மட்டுமே கடந்த 5 வருடங்களாக /

கொரியாவில்  எப்படி மூவேந்தர் அரசு அரசு இருந்ததோ அப்படி நீங்கள் நான் ஆயிக்குடி  நாகராஜன் ஐயா அவர்கள் என்று மட்டும் இருக்கிறது

கொரியா என்ற பெயர் எந்த பின்புலத்தில் எந்த நூற்றாண்டு வழக்கத்தில் இருக்கிறது

முன்னொரு காலத்தில் இவர்களையும் சீனர்கள் அல்லது மஞ்சள் மாந்தர்கள் என்று உலகம் பார்த்ததா ?

மின் தமிழ் 
பார்வையாளர்கள் ஏன் இந்த இழையில் மட்டும் வருவதில்லை

bala subramani

unread,
Apr 18, 2015, 9:29:12 AM4/18/15
to மின்தமிழ்

Dev Raj

unread,
Apr 18, 2015, 9:42:30 AM4/18/15
to mint...@googlegroups.com
On Saturday, 18 April 2015 06:08:02 UTC-7, s.bala subramani B+ve wrote:
அவர் பேசிய பல விஷயங்களிலே என் நினைவில் இருக்கும் முக்கியமானதொன்று – எகிப்தில் தலைமுறை தலைமுறையாக அரசாண்ட ஃபாரோக்கள், தென்னாட்டிலிருந்து மிசிர தேசத்துக்குச் (எகிப்து) சென்ற வடகலை அய்யங்கார்கள்தான் என்றும், அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும், அதைப்பற்றித் தான் ஒரு நூல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.. அந்த நம்பிக்கையில் ஆங்கிலத்தில் Long Missing Links என்று ஒரு 900 பக்கப் புத்தகம் எழுதி, தன் சொந்தச் செலவிலேயே அச்சிட்டு விற்க முயன்றார். புத்தகம் விற்கவில்லை


வைணவம் அயலகங்களில் பரவியதை மறுக்கும் நோக்கம் இல்லை. 
வடகலை எனும் பிரிவே பிற்காலத்தியது; வடுவூர் ஐயங்கார் அவர்களின்
இக்கருத்தியலில் எந்த அளவு ஆதாரம் உள்ளது புரியவில்லை.


தேவ்

N. Ganesan

unread,
Apr 18, 2015, 9:53:55 AM4/18/15
to mint...@googlegroups.com, vallamai
900 பக்கம் அல்ல. 691 பக்கம். 

அப்போது ஆரியர்கள் என்ற ஐரோப்பியர்களுடன் தொடர்பு காட்ட ஆவலில் எழுந்த எழுத்துக்கள்.
ஆனால், பல்கலைக்கழக ஆய்வுகளுக்கு எதிரானவை. சிந்து சமவெளி ஆரியர்களினது.
வேதம் அங்கே உருவானது என்பது போல. சிந்து நாகரீகத்திற்குப் பின்னரே வேதமும்,
ஆரிய மொழிகளும் இந்தியாவில் ஓங்கலாயின.

தமிழர்களின் லெமூரியா கண்டம், சுமேரியாவில் முதற்சங்கம். (அல்லது, ஆஸ்திரேலியா அருகே)
என்பது போன்ற கற்பனைகள் வடுவூரையங்கார் எழுத்துக்களில். வரலாறில்லை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 18, 2015, 10:35:31 AM4/18/15
to mint...@googlegroups.com, housto...@googlegroups.com, vallamai
> இச்சிற்பம் தரும் விளக்கமென்ன? பலா மரம் போல் தோன்றுகிறது? நா.கண்ணன்

இப்பொழுதுதான் இவ்விழையைப் பார்க்கிறேன். அமராவதி சிற்பங்களா? வடமதுரையா?
red sandstone - looks like from Mathura. Has Govt. of India loaned these for the exhibition.

புத்தர் மானிட உருவத்தில் வழிபடத் தொடங்குவதன் முன்னர் (கிரேக்க சிற்பம் காந்தாரம் வந்தபின்பு),
மரமாக வழிபட்ட காலம். போதி எனப் படும் அரை மரம். அரச மரம்.
அரச மர வழிபாடு சிந்து சமவெளிக் காலத்திலேயே தொடங்கிவிட்டது. காத்யாயனிக்காக.
அவள் வழிபாடு தான் பாவை நோன்புப் பாடல்கள் எல்லாம் - வைணவம், சைவன், சமணம் -

மக்கள் வழிபடும் அரசமரம். அதன் வளைவில் அரைசி - 4300 ஆண்டுமுன்னர். 
ஹரப்பாவில் தோண்டி எடுத்தவர் எனக்கு அனுப்பினது:
நீங்கள் காட்டும் சிற்பங்களில் அரை மரம் புத்தருக்காக வழிபாடு செய்யப்படுகிறது.




from:

நா. கணேசன்

On Tuesday, March 4, 2014 at 8:05:18 PM UTC-8, N. Kannan wrote:
2014-02-23 10:08 GMT+08:00 N. Kannan <navan...@gmail.com>:
நிச்சிரனின் ‘தாமரைச் சூத்திரம்’ ஓர் கண்காட்சி


இக்கண்காட்சியில் கண்ட பிராமி (தமிழி?) எழுத்து பற்றி முன்பு குறிப்பிட்டிருந்தேன். அமைப்பாளர்களிடம் அவ்வெழுத்து கொண்ட படத்தின் மின் நகலைத் தருமாறு வேண்டினேன். நேற்று வந்து சேர்ந்தது. முனைவர்.ஏன்சலா மின் ஹுவே ங் அவர்களுக்கு நன்றி.

நாம் செய்ய வேண்டியது என்னவெனில் இந்தப் பழம் பிராமி (தமிழி?) சொல்லும் சேதி என்ன எனக்கண்டு பிடித்து அவர்களுக்குச் சொல்ல வேண்டியது. இது உலகம் சுற்றும் கண்காட்சி, நமது சேதி முக்கியப்படலாம்.

Inline images 1

இச்சேதி தாங்கும் சித்திரம்

Inline images 2

அடுத்த சேதி

Inline images 3

இதைத்தாங்கி நிற்கும் சித்திரம் (சிற்பம்)

Inline images 4

இக்கடைசிப் படம் கண்காட்சியில் இடம் பெறவில்லை. எனக்காகப் பிரத்யேகமாக கொடுத்துள்ளனர். நண்பர் சேசாத்திரியாரின் உதவியைத் தனிமடலில் நாடியுள்ளேன். அறிந்தோர் பங்கேற்க!

இச்சிற்பம் தரும் விளக்கமென்ன? பலா மரம் போல் தோன்றுகிறது?

நா.கண்ணன்
 

N. Ganesan

unread,
Apr 18, 2015, 10:39:32 AM4/18/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
இன்னொன்று. இவ்வளவு பெரிய அழகான சிற்பங்கள் வடிக்க தமிழருக்கு அக்காலங்களில் அறியார்.
எழுதியிருப்பது தமிழும் அல்ல. பிராகிருதம். வடக்கே இருந்து வேளிர் குடியினர் வந்துகொண்டிருந்தாலும்,
இக் கலைகள் வந்து சேராக் காலச் சிற்பங்கள்.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Apr 18, 2015, 2:10:24 PM4/18/15
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com


18 ஏப்ரல், 2015 ’அன்று’ 10:39 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

இன்னொன்று. இவ்வளவு பெரிய அழகான சிற்பங்கள் வடிக்க தமிழருக்கு அக்காலங்களில் அறியார்.
எழுதியிருப்பது தமிழும் அல்ல. பிராகிருதம்.

என்ன எழுதி இருக்குனு சொல்லிவிட்டு அது பிராகிருதம் என சொல்லலாம்


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

bala subramani

unread,
Apr 19, 2015, 1:37:00 AM4/19/15
to மின்தமிழ்
தமிழர்களின் லெமூரியா கண்டம், சுமேரியாவில் முதற்சங்கம். (அல்லது, ஆஸ்திரேலியா அருகே)
என்பது போன்ற கற்பனைகள் வடுவூரையங்கார் எழுத்துக்களில். வரலாறில்லை.

நா. கணேசன்
 
 
அன்புள்ள  ஐயா

நமக்கு எந்த நம்பிக்கையில் கடவுள்களையும் புராணங்களையும் ,சிலைகளையும் செப்பேடுகளையும் ஒலைசுவடிகளையும் நம்புகிறோமோ அதே முறையில் தான்

1600 களில்  இருந்து தென் ஆப்ரிக்காவை சுற்றி வந்து   கடல் பயணங்கள் செய்த ஆங்கிலேயர்கள் சொன்னதை நமது தமிழ் ஆசிரியர்கள் நம்பினார்கள் 1930 களில்
 
இன்று எப்படி கடவுள் நம்பிக்கை இருந்தாலும் பல கிரகங்களுக்கு ,பல அறிவியல் முறையில் முன்னேறி இருக்கிறோமோ அது போல் தான்
லெமுரியா என்றால் இந்திய பெருங்கடலில் மடகாஸ்கர் -பப்புவ கினிய - நமது நிலம் நடுவில்   கடலில் மூழ்கி உள்ள நிலா பாலங்கள் என்ற முறை மாற்றி கடலில் மூழ்கி உள்ள சில ஆயிரம் தீவுகள் என்ற நிலையிலும் ,அதில் நமது  குமரி மீனவர்களை மீன் பிடிக்க செய்யும் வரையில் கடலில் உள்ள இடிபாடுகளை அடையாளம் கண்டு வரையில் இறங்கி விட்டோம்
நம்பிக்கை இருந்ததால்
இது வரை லெமுரியா என்று சொன்ன தமிழர்களும் இல்லை என்ற தமிழர்களும் நமதி இந்திய பெருங்கடலில் பயணம் செல்ல வில்லை என்பது உண்மை
 
நம்பிக்கை இருந்து முறைகள் தெரிந்தால் சில உண்மைகள் புரியும்
சுமேரிய மற்றும் ஆஸ்திரேலிய தீவுகளுக்கும்   நமக்கும் கடல் வழி நீரோட்ட தொடர்புகள் இன்று உறுதி செய்ய பட்டு வருகின்றன
பல ஆய்வறிஞர்கள் சொன்னவற்றை எடுத்த படங்களை வைத்து நீங்கள் உங்கள் கருதுகோள்களை சொல்வதை  போல அந்த காலத்திலும் செய்தார்கள்
 
இன்னும் ஆய்வுகள் தேவை

--

N. Kannan

unread,
Apr 19, 2015, 2:30:59 AM4/19/15
to மின்தமிழ்
2015-04-18 21:08 GMT+08:00 bala subramani <sunke...@gmail.com>:
அவர் பேசிய பல விஷயங்களிலே என் நினைவில் இருக்கும் முக்கியமானதொன்று – எகிப்தில் தலைமுறை தலைமுறையாக அரசாண்ட ஃபாரோக்கள், தென்னாட்டிலிருந்து மிசிர தேசத்துக்குச் (எகிப்து) சென்ற வடகலை அய்யங்கார்கள்தான் என்றும், அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும், அதைப்பற்றித் தான் ஒரு நூல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.. 

அன்பின் பாலு:

நிச்சயமாக வைணவம் கடல் கடந்து போயிருக்கிறது. ஆயின் தனியாக அல்ல. ஒரு இந்து package ஆகப் போயிருக்கிறது. ஹிந்து, வேத மரபில் நாரணன் பெரியவன், மாலவன், அமரர்கள் தொழுதேற்றும் அரியவன். அம்முறைப்படி அவனைப் பெரியவனாக உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆயின் கூடவே சிவ பரிவாரங்களும் போயிருக்கின்றன. நான் பினாம்பெங்க் அருங்காட்சியகத்தில் இச்சிலைகளைக் கண்டேன். அவையெல்லாம் விஷ்ணு பூமிதான். ஹிந்துக்கள் வாழ்ந்த மண்தான். ஏன் ஏசுவின் போதனைகளில் எத்துணை அளவு வைணவம் கலந்துள்ளது! ஆயினும், வடகலை அங்கு போனது என்று சொல்வது கொஞ்சம் ஆர்வக்கோளாறு. ஏனெனில், வேதாந்த தேசிகர் எனும் ஆளுமை தோன்றும் முன் அப்படியொரு சிந்தனை வைணவர்களிடையே இருந்ததில்லை. இப்போது வடகலை மைய கேந்திரமாக உள்ள அகோபில மடத்துப் பெருமாளே தென்கலை நாமம்தான் சார்த்தியிருக்கிறார் (திருமஞ்சனம் போது கூர்ந்து கவனிக்க வேண்டும்). ஏனெனில், இம்மூர்த்திகளெல்லாம் இப்பிரிவிற்கு முந்தியவை. அப்போது ‘பாதம்’ வைத்து திருமண் சார்த்துவதே மரபு. ஏன், வேதாந்த தேசிகரே அம்முறையே சிறந்தது என்று சொல்கிறார். எனவே வடகலைத் திருமண் சார்த்தும் வழக்கம் பின்னால் அரசியல் காரணங்களுக்காக உருவாகிறது. அது தற்காலிகமானது. தேசிகனின் ஆளுமையை தென்கலையார் என்றும் மறைத்ததில்லை. அவர் ஸ்லோகங்கள் எல்லோர் வீட்டிலும் சொல்லப்படுகின்றன. அவர் கிருபாளு என்பதை அவர் சந்நிதிக்குச் சென்றோர் அறிவர். அவர் வைணவத்திற்கு பெரிய அரண். எனவே இச்சிறு பிரிவுகள் விரைவில் ஒன்றாகிவிடும். 

எனவே இன்னும் அறிவியல் பூர்வமான சான்றுகளோடு நாம் நிருவ முயல வேண்டும்.

நான் சொல்ல வருவது உங்கள் ஆய்விற்கு, உசாத்துணைக்கு உதவும் என்ற நோக்கில் எழுவதே. எங்களையெல்லாம் விட உங்களுக்கு களப்பணி அனுபவம் அதிகம். அதை மதித்தே இதை முன்வைக்கிறேன்.

நா.கண்ணன்

bala subramani

unread,
Apr 19, 2015, 3:46:59 AM4/19/15
to மின்தமிழ்

bala subramani

unread,
Apr 30, 2015, 12:50:38 PM4/30/15
to மின்தமிழ்

N. Kannan

unread,
May 5, 2015, 5:24:12 AM5/5/15
to மின்தமிழ்
பாலு!

என்ன அழகான, பயனுள்ள தொடுப்பு. நமது ‘மிளகுப்பாதை’யை கொரியாவிற்கு கொண்டு செல்லும் ஆவணம் இது.

மிக்க நன்றி. என்னிடம், முழுப்புத்தகமும் உள்ளது.

நா.கண்ணன்

bala subramani

unread,
May 5, 2015, 12:09:20 PM5/5/15
to மின்தமிழ்

N. Kannan

unread,
Jul 11, 2015, 8:08:34 AM7/11/15
to மின்தமிழ்
I am pleased to insert the invitation from World Tamil Academy, Madurai who has organized a one day seminar on Ancient Links between Korea and Tamilnadu. This link is so obvious for any Tamil who visits and lives in Korea but unknown or unbelievable to others. It was indeed a passionate search for me to establish the link scientifically, historically, linguistically and religiously. My American friend Michael Quirk accompanied me in filming Gimhae the home of the dome of a Tamil queen who landed on that soil in AD49. A very ancient story to be retold in Chennai on July 16. You are most welcome to attend. Ms.Moortheeswari, Department of Archeology, Government of Tamilnadu has shown keen interest in this study and she is planning to organize a conference in November 2015 in collaboration with Embassy of Korea in India. Mr.Orissa Balasubramani and Prof. V.Nagarajan who have been with me in searching these links in Tamilnadu join me as panelists on that day. I wish several of my Tamil friends in Korea, particularly Mr.Siva Kumar who understood instantly what I said in Geoje, Korea joins me in Chennai as well. This simply the beginning of a long journey to reestablish an ancient brotherhood lost in Indian history (not in Korean history, though). I thank Sumitra Kannan for exchanging information on her cousin Dr. Jeyanthi who presently teaches Korean at Jawaharlal Nehru University, New Delhi who narrated her the joy of finding the links between Korean and Tamil when she landed in Korea way back in 1980s.  Late, Dr. Pon Rajadurai of Tanjavore Tamil University visited Korea as a researcher and found the same fact independently and presented papers on this subject before.
Ulakathamiz-sangam_2015_Dr.NKannan_Exile_literature_Europe.pdf

தேமொழி

unread,
Jul 11, 2015, 11:47:02 PM7/11/15
to mint...@googlegroups.com, navan...@gmail.com
chapter 2 is missing in the attachmaent

N. Ganesan

unread,
Jul 12, 2015, 11:01:49 PM7/12/15
to mint...@googlegroups.com, navan...@gmail.com


On Saturday, July 11, 2015 at 8:47:02 PM UTC-7, தேமொழி wrote:
chapter 2 is missing in the attachmaent



But page numbers are correctly done. 
Reply all
Reply to author
Forward
0 new messages