நன்றி.
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
என்பதையும்;
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது
என்பதையும்;
"ஊழ் வினை" என்று பொருள் கொள்பவர்கள் அது ஆசீவகக் கருத்தைக் கொண்டுள்ள பாடல் என்று பொருள் கொள்கிறார்கள்.
ஆனால், நம் வாழ்வில் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே இயற்கையில் நடக்கலாம்.
நன்மை செய்பவருக்கு நன்மையும் தீமை செய்பவருக்குத் தீமையும் நடப்பதில்லை என்பதுதான் உலக உண்மை
அவ்வாறு நிகழ்கையில் அவற்றை விதிக்கப்பட்ட நிலையாக விளக்கம் சொல்ல முற்படுவது; விளக்கம் சொல்லவழியில்லாத பொழுது ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு சமாதான "கற்பிதம்" மட்டுமல்ல ஓர் எளிதான வழியும் கூட.
உளவியல் முறையில் கடவுள் விதி ஊழ் போன்ற விளக்கங்கள் மனவலியை எதிரக்கொள்பவர்களை ஆறுதல் படுத்த முயல்கிறது.
நம் வாழ்வில் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே இயற்கையில் நடக்கலாம்.
அதற்கு நாம் தாயாராக இருக்கின்றோமோ என்பதே ஆராயப்பட வேண்டியது.
மல்லல் பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணை அதன் வழியில் நிகழ்வதை எதிர்கொள்கிறது.
புணை யின் பயணம் திட்டமிடப்பட்டது அல்ல. அது புணை வாங்கி வந்த வரமோ, ஊழ்வினைப் பயனோ, அல்லது விதிக்கப்பட்ட விதியோ அல்ல.
எதுவும் அதன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதுதான் உண்மை.
அது போகிற போக்கில் வருவதை எதிர்கொள்வது.
அவ்வாறே மனித வாழ்க்கை. வருவதை எதிர்கொள்வது வாழ்க்கை.
இது உலகாயதம் என்ற தத்துவக்
கருத்தியலின் அடிப்படை , உலகாயதக் கோட்பாடு இந்த உலகத்தைத் தவிர வேறு எதையுமே நம்புவதில்லை
உலகாயதம் குறித்த நல்லதொரு விளக்கம்: