தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 167 & 168 ; நூலரங்கம்
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
(திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௨ – 642)
நாள்: ஆனி 07, 2057 ஞாயிறு 21.06.2026 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்,
தலைமையும் நூலாய்வும் : இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுமையர் உரை:
இசைக்கவி மதியழகன், சிங்கப்பூர்
கவித்திலகம் தங்க மாரியப்பன்
ஆய்விற்குரிய நூல் : கவிஞர் செம்பை சேவியர் எழுதியுள்ள
ஒன்றில் மூன்று – குறட்பா விளக்கம்
நிறைவுரை : அரசறிவியல் பேராசான் தோழர் தியாகு
நன்றியுரை : செல்வி முகிற்செல்வி
ஃஃஃ அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 17 June 2026
(வெருளி நோய்கள் 1576-1580 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1581-1585
பண்ணை விலங்குகள் மீதான அளவுகடந்த பேரச்சம் பண்ணை விலங்கு வெருளி.
விலங்கு வெருளி(zoophobia) உள்ளவர்களுக்குப் பண்ணை விலங்கு வெருளி வர வாய்ப்புள்ளது.
கிரேக்க மொழியில் agros என்றால் பண்ணை என்றும் zoo என்றால் விலங்கு என்றும் பொருள்.
00
பண்ணை(farm) குறித்த வரம்பற்ற பேரச்சம் பண்ணை வெருளி.
பண்ணைகள் மீதான அச்சம் என்பது பொதுவாக வேளாண் தொழிலில் வேதியல் பயன்பாடு, புதிய பண்ணைச் சட்டங்கள், நலக் குறைபாடுகள், பயிர்த் தொற்றுநோய்கள், பண்ணை விலங்குகள் மீதான தொற்று நோய்கள் முதலியன குறித்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
fundum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் பண்ணை.
00
வலைப்பூக்கள் முதலான இணையத்தளங்களில் முதலில் பதிவிட வேண்டும் என்ற பரபரப்பிற்கு ஆளாவதால் ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் பதிவூட்ட வெருளி. இதனைச் சுருக்கமாகப் பதிகை வெருளி எனலாம்.
தவறான பதிவுகளை மேற்கொண்டு பின்னர் மக்களின் எதிர்ப்பிற்கும் காவல் துறையின் வழக்கிற்கும் ஆளாகுபவர்கள், அல்லது ஆளாகுபவர்கள் பற்றிய செய்திகளைப் படிப்பவர்கள், பதிகை வெருளிக்கு ஆளாவர்.
00
நெஞ்சப்பதிவு காட்டி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பதிவி வெருளி.
நெஞ்சுத் துடிப்புகளைப் பதிவுசெய்த பின்தான் திரையகத்தில்(monitor) காட்டுகிறது. இதன் நெஞ்சகச் செயலபாட்டைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, அடிப்படைப்பணியின் அடிப்படையில் heart monitorஐப் பதிவி எனலாம்.
இதயச்சீர்நோக்கி ஆகிய நெஞ்சப் பதிவியின் செயல்பாடு, பழுதாக இருக்குமோ என்ற அச்சம் முதலியன குறித்துக் கவலைகள் கொண்டு பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். இயல்பான நிலையைக் காட்டினாலும், அதன் மூலம் பார்ப்பதால் உயிருக்குக் கேடுவருமோ என அஞ்சுவோர் உள்ளனர்.
00
தான் பதியும் அல்லது பகிரும் படங்களைப் பிறர் பதிவேற்றம் செய்ய மாட்டார்கள் என அளவுகடந்த பேரச்சம் கொள்வது பதிவேறா வெருளி.
பதிவேற்றம் சரியாக அமையாமல் போகிறது என்பதால் பிறர் பதிவேற்றவில்லை எனக் கவலைப்படுவர்.
Turpis என்னும் இலத்தீன் சொல்லிற்கு மோசமான எனப் பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5