என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள். அந்தக் காலத்து பொறிகள் பற்றி நம்
ஹரிகி நிறைய முன்பு எழுதியிருக்கிறாரே!
கம்ப இராமாயணம், சீவக சிந்தாமணி.....
கண்ணன்
மிகவும் மகிழ்வாக உள்ளது. அப்போது எல்லோருக்கும் ஒரே திண்ணைதான்
இருந்தது. இப்போது "செயற்படும் துறைகள் பல பலவாகி" நாம்
பிரிந்துவிட்டோம். அக்கால (7 ஆண்டுகளுக்கு முன்தான் சொல்கிறேன்) அடர்த்தி
இப்போது ஆச்சர்யப்படுத்துகிறது. வெறும் 7 ஆண்டுகளுக்குள்ளேயே எனில்
இராமாயண காலம் எப்போது?......
நீங்கள் பாரதியைச் சுட்டியவுடன் இன்னொரு விளக்கம் கூட வருகிறது...
ஏன் நம் வாழ்வு, கனவிற்குள் கனவு என இருத்தல் கூடாது? கனவில்தான் பறக்க
முடிகிறதே!! நாம் பேசும் பாவைப்பொறிகள், புஷ்பக விமானம் இவை
அப்பரிமாணத்தில் நடக்கக்கூடியவையே.
Afterall, 4000 திவ்யப்பிரபந்தம் முழுவதும் 'கண்ணினுற் சிறுதாம்பு' எனும்
மதுரகவியின் பாசுரங்களை உச்சாடணம் செய்து நம்மாழ்வார் திருவாயால்
(விக்கிரகம் பேசியிருக்கிறது) பெறப்பட்டது என்று சொல்கிறார்கள். இதுவொரு
கனவு நிலை போல் தோன்றுகிறது. பாடல்கள் ஒவ்வொன்றாய் சொல்லச்சொல்ல
நாதமுனிகள் புகைப்பட நினைவுடன் (photographic memory) அவைகளைக் குறித்து
வைத்துக் கொண்டிருக்கிறார். கனவினுள் கனவு எப்படி வருகிறது என்றால்.
திருவாய்மொழியே "தான்" செய்தது இல்லை "செய்யப்பட்டது" என்கிறார்
நம்மாழ்வார். "கட்டுண்ணப்பண்ணுதல்" போல!!
கற்றை இயல்/ அத்வைத ரியலிசம் பேசும் அமித் கோசுவாமி 'ஆக்கம்' என்பதே
இப்படியானதொரு பரிபாஷை, ஒரு கற்றை நிகழ்வு என்கிறார்.
மனித வாழ்வே ஆச்சர்யமானது. இதில் நாம் ஆச்சர்யங்கள் பற்றி அதிசயத்துக்
கொண்டிருக்கிறோம்!!
க.>
2008/10/3 Hari Krishnan <hari.har...@gmail.com>:
<ஹெலிகாப்டர் போல - மேலெழும்பக் கூடியதுஉலக்கை மேலும் கீழும் இயங்குவதுஅதனால் ஹெலிகாப்டர் உலங்கு வானூர்தி எனலாம்வெள்ளை தோலன் பொறியை கண்டு பிடிக்கிறான். நம்மால் அதுக்கு ஒரு தமிழ் சொல்லைக்கூட கண்டு பிடிக்க முடியலேதன்னம்பிக்கை இல்லாத என்புதோல் போர்த்த உடம்பினர் ஆயிட்டோம்அலங்கு = தலையாட்டம் போல் ஆடுவதுஉலங்கு = மேலும் கீழும்
கலங்கு = நால் திசையும்விலங்கு = குறுக்காக் ஓடுவதுநலங்கு =மேலிருந்து கீழாக வருவது(நலங்கு இடுதல்)குலுங்கு = எட்டு திசையும்இலங்கு = கம்முனு இருக்கிறது. ஆடாமல் இருந்தால்தான் அது இலக்கம்
> உலங்கு என்றால் கொசு.
இப்பயன்பாடு ஈழத்தமிழர்களிடம் உள்ளது என்று நினைக்கிறேன்.
ஹரியின் கம்பரசம் இன்பரசம். நன்றி.
க.>
அலங்கு என்றால் அசைதல் என்று பொருள். Moving side to side, swaying. அப்படி அசைகின்ற காரணத்தால் கழுத்தில் அணியும் பூமாலைக்கு அலங்கல் என்று பெயர்.