காலில் விழுதல்

307 views
Skip to first unread message

Suba

unread,
Oct 2, 2018, 10:55:06 AM10/2/18
to மின்தமிழ், Subashini Kanagasundaram
காலில் விழுந்து வணங்குதல் என்பது இப்போது பெருவாரியாக இந்தியச் சூழலில் மறைந்து வருகின்ற ஒரு பண்பாடு எனச் சொல்லலாம். 

தன்னை ஒருவரின் கால்களின் முன் முழுமையாக ஒப்படைப்பது என்பதை  பல்வேறு பார்வைகளோடு தமிழ்ச்சமூகம் காண்கின்றது.

வயதானவர், பெரியவர்கள், பலம் பொருந்தியவர்கள், சாதியில் உயர்ந்தவர்கள், அதிகாரத்தில் உயர்ந்தவர்கள்... இப்படி  ஒரு ஆளுமையின் கீழ் விழுந்து வணங்குவதை ‘நல்ல பண்பு’ என்ற அடிப்படையில் தமிழ்ச்சமூகத்தின் ஒரு பிரிவு காண்கின்றது.

திருமணத்தின் போது, பிறந்த நாளுக்கு, சாமியார்களைப் பார்க்கும் போது  ஆசிர்வாதத்தைப் பெற விரும்பும் போது இது நடைமுறையில் உள்ள ஒரு செயலாக இருக்கின்றது. 

காலில் விழுவது ஆசீர்வாதம் பெறுவதற்காக என்ற ஒரு கருத்துடன் சிலர் தம்மை தாழ்த்திக் கொண்டு காலில் விழும் சடங்குகளை நிகழ்த்தி மன மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றார்கள்.

கடந்த காலங்களை அலசும் போது காலில் விழுவது என்பது வெளிப்படுத்தும் செய்திகள் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன.

  • உதாரணமாக கடன் வாங்கியவர்கள் கொடுக்க முடியாமல் போகும் போது...
  • ஒரு அடிமை தன் எஜமானரிடம் ஒரு வேண்டுதலுக்காக மன்றாடும் போது
  • ஒரு அனுகூலத்தை எதிர்பார்க்கும் போது..
  • மன்னிப்புக் கேட்கும் போது..
  • எப்படியாவது ஒன்றினை சாதிக்க வேண்டும் என நினைக்கும் போது..
காலில் விழுவது நடக்கின்றது.


ஆக, இப்படி பல்வேறு சூழல்களில் இந்தக் காலில் விழுந்து வணங்கும் சடங்கு என்பது தமிழ்ச்சூழலில் நிலவுகிறது.

இன்னொரு அவதானிப்பையும் இந்தக் காலில் விழும் சடங்கில் உற்று நோக்கலாம். தமிழகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதி அமைப்பில் தன்னை உயர் சாதியில் வைத்திருக்கும் ஒருவர் தனக்குத் தாழ்ந்த சாதியில் உள்ள ஒருவர், அவர் வயதில் பெரியவராயினும் கூட  தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் எனும் பட்சத்தில் அவர் காலில் விழுவதில்லை.  

இன்றைய கால கட்டத்தில் காலில் விழும் சம்பிரதாயம் தேவையற்ற ஒன்று எனும் பார்வை விரிவாகி வளர்ந்து வருகின்றது. சுயமரியாதையை வளர்க்கும் இந்தப் பண்பு கல்வி கொடுத்த தெளிவினால் ஏற்படுவது. சாதி ஏற்றத்தாழ்வு தேவையற்றது என நினைப்போர், சாதிக்கட்டமைப்பை விட்டு விலகியோர் தானும் ஒருவர் காலில் விழமாட்டார்கள்; பிறர் தம் காலில் விழுவதையும் ஏற்க மாட்டார்கள்.

சுபா


--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

Innamburan S.Soundararajan

unread,
Oct 2, 2018, 11:03:02 AM10/2/18
to mintamil, Subashini Tremmel
1. தாள் தொட்டு வணங்குவது வட இந்திய கலாச்சாரம். இன்றளவும் மதிக்கப்படும் வழக்கம்.
2. எல்லா மதங்களும், மதப்பிரிவுகளை இதை ஆதரிக்கின்றன. You kneel before the Pope,
அல்லாவை தொழுகிறார்கள். இந்துக்களும், இஸ்லாமியரும், தொழுகை முடிந்த பின் மெளல்வியிடம்
வணங்கி துவா நாடுகிரார்கள். வைஷ்ணவ பரி பாஷை: 'அம்மாவுக்கு ராஜு தெண்டனிட்டு எழுதம் கடிதம்.' அல்லது
'சாஷ்டாங்க நமஸ்காரம்'. இன்றைக்கும் அம்மா வந்தால் உடனே தாள் தொட்டு வணக்குவேன். அது இயல்பாகி விட்டது.
இன்னம்பூரான்

செல்வன்

unread,
Oct 2, 2018, 11:20:56 AM10/2/18
to mintamil, Subashini Tremmel
வடக்கே இது மிக பொதுவான மரபு

என் அம்மா, மாமனார், மாமியார் காலை தொட்டு வணங்கிய வட இந்தியர் மிக அதிகம்.

வயதில் மூத்தவர் எனும் அடிப்படையில் தான் இது அமைகிறது.

நான் என் வாழ்நாளில் (திருமணம் சமயம் மட்டுமே) காலில் விழுந்து வணங்கியவர் மூவர்

தாத்தா..

அம்மா, அப்பா

மாமனார், மாமியார்

வேறு எந்த சாமியார், அரசியல் தலைவர் காலிலும் விழுந்ததில்லை. பெற்றோர், தெய்வம் எனும் இருவரை தவிர யாரும் யாரையும் வணங்கவேண்டியது இல்லை.

தேமொழி

unread,
Oct 2, 2018, 11:24:48 AM10/2/18
to மின்தமிழ்
///சாதி ஏற்றத்தாழ்வு தேவையற்றது என நினைப்போர், சாதிக்கட்டமைப்பை விட்டு விலகியோர் தானும் ஒருவர் காலில் விழமாட்டார்கள்; பிறர் தம் காலில் விழுவதையும் ஏற்க மாட்டார்கள்.///

நன்று. பாராட்டுகள்.🌷

kanmani tamil

unread,
Oct 2, 2018, 11:35:31 AM10/2/18
to mintamil
திருமணத்தன்று கூட யார் காலிலும் விழாத வளர்ப்பு  தான் என் பெற்றோர் காட்டிய பாதை.
ஆனால் காலில் விழுவதற்கும் சாதிக்கும் தொடர்பு இருக்கிறதா என்ன?கண்மணி 

On Tue, 2 Oct 2018 8:54 pm தேமொழி, <jsthe...@gmail.com> wrote:
///சாதி ஏற்றத்தாழ்வு தேவையற்றது என நினைப்போர், சாதிக்கட்டமைப்பை விட்டு விலகியோர் தானும் ஒருவர் காலில் விழமாட்டார்கள்; பிறர் தம் காலில் விழுவதையும் ஏற்க மாட்டார்கள்.///

நன்று. பாராட்டுகள்.🌷

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Oct 2, 2018, 11:40:53 AM10/2/18
to மின்தமிழ்
///

நான் என் வாழ்நாளில் (திருமணம் சமயம் மட்டுமே) காலில் விழுந்து வணங்கியவர் மூவர்

தாத்தா..

அம்மா, அப்பா

மாமனார், மாமியார்///

நான் எண்ணினால் எனக்கு ஐந்து பேர் என்று வருகிறதே!!! கணக்கு உதைக்கிறது🤔

செல்வன்

unread,
Oct 2, 2018, 11:43:02 AM10/2/18
to mintamil
:-)

I meant 3 couples. Grandma was dead during my marriage time 

செல்வன்

unread,
Oct 2, 2018, 11:43:16 AM10/2/18
to mintamil
பெற்றோர், தாத்தா, பாட்டி, மாமனார், மாமியார் காலில் விழுவது அவமானம் அல்ல. விழாமல் இருப்பது தவறும் அல்ல

இது ஒரு மரபு....பின்பற்றுவதும், பின்ப்ற்றாததும் அவரவர் விருப்பம்.

குடும்பம் சாராத நபர்கள் காலில் ஆதாயத்துக்கு விழுவது தான் மிக தவறு



தேமொழி

unread,
Oct 2, 2018, 11:54:43 AM10/2/18
to மின்தமிழ்
///காலில் விழுவதற்கும் சாதிக்கும் தொடர்பு இருக்கிறதா என்ன?///

இனிமேல் கவனித்துப் பாருங்கள்.
அல்லது... இந்த குலப் பின்னணி கூறுபவர் இந்தக் குலப்பின்னணி உள்ளவர் காலில் விழுந்து வணங்குவதைப் பார்த்துள்ளோமா என்று யோசித்தும் பார்க்கலாம்.
A காலில் B விழுதே
B காலில் A விழுமா ... நாம் என்றாவது அது போல பார்த்த நினைவுள்ளதா என யோசித்துப் பாருங்கள் கண்மணி. A & B = variable. இதில் சாமியார்களையும் கருத்தில் கொள்ளலாம்.

Innamburan S.Soundararajan

unread,
Oct 2, 2018, 11:59:29 AM10/2/18
to mintamil
///காலில் விழுவதற்கும் சாதிக்கும் தொடர்பு இருக்கிறதா என்ன?///
~ வழி தவறி விட்டது. 









இன்னம்பூரான்


Malarvizhi Mangay

unread,
Oct 2, 2018, 12:16:08 PM10/2/18
to mint...@googlegroups.com
தேமொழி தம்பதி சமேதரா
ரெண்டு பேரை நிக்க வச்சு ஒரு முறை விழுதல் மாத்திரமே வழக்கம். இப்ப எண்ணுங்கள்
அம்மா அப்பா -=1
மாமனார் மாமியார்=1
இப்பக் கூட்டுங்க கணக்கு சரியா வரும்.

தேமொழி

unread,
Oct 2, 2018, 12:19:51 PM10/2/18
to மின்தமிழ்
நான் ஜெயலலிதா காலில் விழுந்தவர்களை எண்ணி மட்டுமே பழக்கம் மலர்விழி

Sathivel Kandhan Samy

unread,
Oct 3, 2018, 11:10:23 PM10/3/18
to மின்தமிழ்

Satish Kumar Dogra

unread,
Oct 4, 2018, 8:55:54 AM10/4/18
to mint...@googlegroups.com
வடநாட்டில் வயதில் மூத்தவர்களின் காலைத் தொட்டு ஆஸீர்வாதம் பெறுவது வழக்கம். ஆனால் பெண்கள் பெரும்பாலும் யார் காலையும் தொட மாட்டார்கள் பெண்கள் காலைத் தொட்டால் பாவம் ஏறும் என்ற நம்பிக்கை. ஒரே ஒரு நாள் மட்டும் கணவர்-வழிபாட்டு தினமான கர்வா-சவுத் விழாவின்போது  மனைவி கணவரின் கால்களைத் தொடுவார்.

குழந்தை பருவத்தில் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக அம்மாவின் கால்களைத் தொட்டு ஆசீர்வாதம் பெறுவேன். என் அண்ணன் என்னைவிட 4 வருடங்கள்  மூத்தவர் மட்டுமே என்றாலும், அவரைச் சந்திக்கும்போதும், விடை பெறும்போதும் காலைத் தொடுவேன் அம்மா அப்பா இப்பொழுது உயிருடன் இல்லை. மாமனார் மாமியாரைச் சந்திக்கும்போது கால் தொடுவேன். 

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு இயக்கம் எனக்கு ஒரு விருதை வழங்க என் மூத்த அதிகாரியான திரு நடராஜ் ஐ.பி.எஸ் அவர்களை அழைத்தது. அவரிடம் விருதைப் பெற்றபின் "ஆசீரவாதம் தாங்க", என்று கூறி காலைத் தொட்டேன். நாங்கள் இருவரும் ஓயுவு பெற்றவர்கள். அதனால், மரியாதை செலுத்ததைத் தவிர வேறெந்த நோக்கமும் இல்லை. 

வடநாட்டில் பிறந்தவருக்கு இது சர்வசாதாரணம். மரியாதை செலுத்தும் ஒரு முறை மட்டுமே. ஐ.பி.எஸ்ஸில் சேர்ந்த பின் பஞ்சாபிலுள்ள என் சொந்தூருக்கு சென்றிருந்த சமயம் என் பள்ளிக்கூட வாத்தியார் சாலையில் எதிரில் வந்ததைக் கண்டேன். காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கினேன். இன்று நான் எதுவாக இருக்கிறேனோ அதற்கு நீங்கள்தான் காரணம் என்று சொல்வது போல். 


நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 4, 2018, 10:50:42 AM10/4/18
to mintamil
On Thu, 4 Oct 2018 at 18:25, Satish Kumar Dogra <dogra...@gmail.com> wrote:


வடநாட்டில் பிறந்தவருக்கு இது சர்வசாதாரணம். மரியாதை செலுத்தும் ஒரு முறை மட்டுமே.

 
IMG_20150816_084002.jpg

IMG_20150816_084005.jpg

IMG_20150816_084017.jpg

இராமேசுவரம் காசி பாதயாத்திரையின்போது,
மகாராட்டிரம், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், பீகார்  மாநிலங்களில் காலில் விழுந்து வணங்காதவர் யாரையும் நான் கண்டதில்லை.

அன்பன்
கி.காளைராசன்

செல்வன்

unread,
Oct 4, 2018, 10:56:38 AM10/4/18
to mintamil
On Thu, Oct 4, 2018 at 9:50 AM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:


On Thu, 4 Oct 2018 at 18:25, Satish Kumar Dogra <dogra...@gmail.com> wrote:


இராமேசுவரம் காசி பாதயாத்திரையின்போது,
மகாராட்டிரம், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், பீகார்  மாநிலங்களில் காலில் விழுந்து வணங்காதவர் யாரையும் நான் கண்டதில்லை.



ஐயா

அப்படி உங்கள் காலில் விழுந்தவர்கள் "நீங்கள் என்ன ஜாதி, மேல் ஜாதியா, கீழ் ஜாதியா?" என கேட்டு தான் விழுந்தார்களா இல்லை ஜாதி பற்றி எதுவும் கேட்காமல் பக்தியுடன் காலை தொட்டு கும்பிட்டு வணங்கினார்களா? 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 4, 2018, 12:28:58 PM10/4/18
to mintamil
வணக்கம்.

2014ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி 110 நாட்கள் பாதயாத்திரை 
2015ஆம் ஆண்டு நாக்பூர் காசி 30 நாட்கள் பாதயாத்திரை
2016ஆம் ஆண்டு அறுபடைவீடு 60 பாதயாத்திரை
2017ஆம் ஆண்டு அறுபடைவீடு 60 பாதயாத்திரை
யாரும் எங்கும் சாதி மதம் கேட்டதில்லை.
யாத்திரையில் சேர்ந்து கொள்வோரிடம் குருசாமி சாதிமதம் கேட்டதில்லை.  

இந்த ஓட்டுநர் தமிழ்நாட்டுக்காரர் இவரும் சாதிமதம் கேட்டதில்லை.
 
Photo2260.jpg
 
இவர்கள் நாக்பூர் வாசிகள்.
எங்களின் சாதிமதம் கேட்கவில்லை.
IMG_20150718_104911.jpg

தேமொழி

unread,
Oct 4, 2018, 10:49:10 PM10/4/18
to மின்தமிழ்
///பெண்கள் பெரும்பாலும் யார் காலையும் தொட மாட்டார்கள் பெண்கள் காலைத் தொட்டால் பாவம் ஏறும் என்ற நம்பிக்கை///

யாருக்குப் பாவம் ஏறும்? 
தொடுபவருக்கா? தொடப்படுபவருக்கா?
ஏன்?

Innamburan S.Soundararajan

unread,
Oct 5, 2018, 1:04:06 PM10/5/18
to mintamil
///பெண்கள் பெரும்பாலும் யார் காலையும் தொட மாட்டார்கள் பெண்கள் காலைத் தொட்டால் பாவம் ஏறும் என்ற நம்பிக்கை///

யாருக்குப் பாவம் ஏறும்? 
தொடுபவருக்கா? தொடப்படுபவருக்கா?
ஏன்?

~சங்கப்பாடல் ஒன்றில் பெண்கள் காலை தொடுவது சிலாகிக்கப்படுகிறது. 

Satish Kumar Dogra

unread,
Oct 7, 2018, 8:59:26 AM10/7/18
to mint...@googlegroups.com
ஐயா, நீங்கள் கொடுத்திருக்கிற படத்தில் ரமஸான் பண்டிக்கைக்கு ஒரு ஸ்டால் போட்டு தண்ணீரோ வேறொரு குளிர் பானமோ கொடுப்பது போல் தெரிகிறது. குடிப்பவர்களின் வேஷமும் நெற்றியிலுள்ள திருநீறும் பார்த்தால் அவர்கள் இந்துக்களாகவே தோன்றுகின்றன. ஆக, இந்தப் படம் ஜாதிமத வேறுபாட்டுக்கு அப்பாற்பட்ட படமாகவே தெரிகிறது.

ஒருவர் காவி அணிந்து வந்தால் அவருக்கு சாமியார் மரியாதைக் கொடுப்பது நம் நாட்டில் எல்லா மாநிலங்களிலும் உண்டு.

Satish Kumar Dogra

unread,
Oct 7, 2018, 9:10:53 AM10/7/18
to mint...@googlegroups.com
தேமொழி அவர்களே,
யார் தொடச் சொல்கிறாரோ அவருக்குத்தான் பாவம் ஏறும். எங்கள் குடும்பத்தில் மகளின் காலைத் தொடுவது புண்ணியமாக நினைக்கிறார்கள். சில பேர் காலையில் எழுந்ததும் மகளின் கால்களைத் தொடுவார்கள். ஆனால், இப்பொழுது காலம் மாறிவிட்டது. அந்த மரபுகள் கரைந்துவிட்டன.

நான் குழந்தையாக இருந்தபோது எல்லா சடங்களிலும் கண்ணிப் பெண்களுக்கு சாப்பாடு கொடுப்பது, காசு கொடுப்பது, அவர்களின் கால்களைத் தொடுவது வழக்கமாக இருந்தது. உங்களுக்குத் தெரிந்த பஞ்சாப் குடும்பம், அதுவும் இந்து குடும்பம் இருந்தால், கஞ்ஜக் என்ன என்று கேளுங்கள். கஞ்ஜக் என்பது 10-12 வயதில் உள்ள கண்ணிப் பெண். எங்கள் வீட்டில் ஒரு பிறந்த நாள் என்றால் பக்கத்து வீடுகளிலுள்ள 7-8 கஞ்க்கள் அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கு சாப்பாடும், பணமும் கொடுத்து அவர்களின் கால்களை களுவி மரியாதையுடன் அனுப்புவோம்.

Satish Kumar Dogra

unread,
Oct 7, 2018, 9:52:23 AM10/7/18
to mint...@googlegroups.com
தேமொழி அவர்களே,
நவராத்திரை ஆரம்பிக்கப் போகிறது. உங்களுக்குத் தெரிந்த வடநாட்டுக் குடும்பம் இருந்தால் எவ்வாறு கஞ்சக்களுக்கு மரியாதை செலுத்துவார்கள் என்பதைப் பார்க்கலாம். இது ஏறத்தாழ அனைத்து வடஇந்திய மாநிலங்களிலும் அணுசரிக்கப்படும் மரபு.

தேமொழி

unread,
Oct 7, 2018, 11:01:31 AM10/7/18
to மின்தமிழ்
மெய்ப்பொருள் நாயனார்  கதை  சிறுவயதில் படித்தது.

 கஞ்ஜக்   << நன்றி இது குறித்து தேடிப்பார்கிறேன் திரு. டோக்ரா 

..... தேமொழி  



sundararajan srinivasagam

unread,
Oct 11, 2018, 12:18:28 PM10/11/18
to mint...@googlegroups.com

It is said the players of any sport bow down and touch the feet of the coach before they enter the play field, This happens in North India.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Satish Kumar Dogra

unread,
Oct 11, 2018, 12:27:50 PM10/11/18
to mint...@googlegroups.com
A wrestler has to touch the feet of his ustad (Guru). So, too, a person who learns music has to touch the feet of his ustad. This tradition exists not only in North India, but also in Pakistan. 

Reply all
Reply to author
Forward
0 new messages