திருவள்ளுவர் - சர்வக்ஞர் - ஒற்றுமையின் ஒற்றுமை!

396 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Aug 7, 2009, 5:31:19 PM8/7/09
to Min Thamizh
ஏழைகள் வாழும் பணக்கார நாடு இந்தியா என்றார் ஒரு கவிஞர். இந்தியா இயற்கை வளம் நிறைந்த நாடு மட்டுமல்ல, இலக்கிய வளமும் நிறைந்த நாடு. நம்மிடம் இருக்கும் இயற்கை வளங்களைச் சரியாகப் பயன்படுத்தத் தவறியதால்தான் இயற்கையில் வளம்மிக்கவராக, பணக்காரர்களாக இருந்தும் ஏழைகளாக வாழ்கிறோம்.

அதேபோல் வாழ்க்கையை வளப்படுத்தும் இலக்கிய வளத்தை முழுமையாகப் பயன்படுத்தத் தவறியதால் நெறியற்ற வாழ்க்கையை நோக்கி இன்றைய சமுதாயம் பயணிக்கிறது. இயற்கையாலும், இலக்கியத்தாலும் இந்தியா ஒன்றுபட வேண்டும்.

இத்தகைய மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க எங்கோ ஓர் ஆரம்ப எழுத்து உதித்தாக வேண்டும்.

அது இன்று உதிக்க ஆரம்பத்திருக்கிறது.

அதற்கு வித்திட்டிருக்கும் இருபெரும் இலக்கியவாதிகள் அய்யன் திருவள்ளுவரும், அப்பன் சர்வக்ஞரும்.

இப்படி இரு மாநில ஒற்றுமையை ஏற்படுத்திய இந்த இரு மாபெரும் இலக்கியவாதிகளிடமும் மாபெரும் ஒற்றுமை மண்டிக் கிடக்கிறது.

அய்யன் திருவள்ளுவர் ஈரடியில் இந்த வாழ்வியலை அளந்தவர். இரண்டு கண்கள் எப்படி சரியான பாதையில் செல்ல வழிவகுக்கிறதோ அப்படி வள்ளுவரின் ஈரடிகள் வாழ்க்கைப் பாதைக்கு வழிகாட்டியாக உள்ளது என்றால் மிகையில்லை.

சர்வக்ஞர் மூன்றாவது கண்ணிலும் நம்பிக்கை உடையவராக இருந்ததால் - ஆம் சிவன் மீதும் ஆழமான பக்தி கொண்டதால் - மூன்று கண்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது என்று எண்ணியதால் ஓர் அடி ஓர் கண்ணாக மூவடிகளில் அவர் வாழ்க்கைக்கு வழிகாட்டினார் என்று எண்ணத் தோன்றுகிறது.

"நெருப்புக் கிணற்றில் விழுந்ததுபோல் இந்த உலக வாழ்க்கைத் துன்பத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து மீண்டு மேலே வரவேண்டுமென்றால் - இறைவனின் பாதத்தைப் பற்றி மேலேறி வர வேண்டும்" என்கிறது சர்வக்ஞரின் ஓர் பாடல்...

இப்பாடல்பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேராதார்.என்ற குறளின் கருத்தை ஒத்திருப்பதை நாம் அறியலாம்.

"யார் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்க்கைச் சக்கரத்தை நன்கறிந்தவர்களின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு அவர்களைக் குருவாகக் கொண்டு வாழ வேண்டும்" என்கிறார் சர்வக்ஞர்.

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல்

என்று பெரியாரைத் துணைக் கோடல் என்ற அதிகாரத்தில் நமது அய்யனின் குறள்கள் அனைத்தும் அதே கருத்தைத்தான் வலியுறுத்துகின்றன.

"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்; அதனால்
 உழன்றும் உழவே தலை"

இது அய்யன் திருவள்ளுவரின் வரிகள்.

"உலகில் உள்ள அத்தனை திறமைகளிலும் தலைசிறந்தது உழவே. உழவே இந்த வாழ்க்கைச் சக்கரத்தைச் சுற்றுகிறது. அது இல்லை என்றால், இன்றைய இந்த உலகம் பாழ்படும்" இது சர்வக்ஞரின் வரிகள்...

எவ்வளவு ஒற்றுமை பார்த்தீர்களா... இந்த மாபெரும் கவிஞர்களின் மன ஒற்றுமைதான் மாநில ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கிறதோ?

அடுத்து வாய்மையைப் பற்றி சொல்லும்போது...

"வாய்மை பேசுபவனின் முன்னால் இந்த உலகமே தலைவணங்குகிறது. ஒரு தாய் எப்படித் தன் மகனை அன்புடன் அழைத்து அருகில் வைத்துக் கொள்வாளோ அதேபோல இறைவன் அவர்களைத் தன்னருகில் வைத்துக் கொள்கிறார்".

சர்வக்ஞரின் இந்த மூவடி

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்

அதாவது ஒருவன் உள்ளம் அறிய பொய் பேசாமல் வாழ்வானானால் உலகத்தார் எல்லோருடைய உள்ளங்களிலும் இடம்பெற்று போற்றப்படுவான் என்ற நம் ஐயன் ஈரடிக்கு ஒத்தாக உள்ளது என்பது வியப்பே.

எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வழிகாட்டும் இக்கவிகள் எப்படிப் பேச வேண்டும் என்று இந்த உலகிற்குச் சொன்னதிலும் கருத்தொற்றுமை உள்ளது வியப்பை அளிக்கிறது.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்டவடு

நம் அய்யனின் இந்த வைர அடிகளுக்கும் "அன்பான வார்த்தைகள் நிலவு பொழியும் ஒளியைப் போன்றது; அதேசமயம் கடுமையான சொற்கள் காதில் ஆணியை அடிப்பது போன்று கொடுமையானது" என்ற சர்வக்ஞரின் அடிகளுக்கும் எவ்வளவு ஒற்றுமை பார்த்தீர்களா?

எப்படி வாழ வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று கூறிய கவிகள் எப்படி உண்ண வேண்டும் என்று கூறுவதிலும் ஒற்றுமை இருக்கிறது.

மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். 

தான் முன்னர் உண்ட உணவானது நன்கு செரித்துவிட்ட தன்மையைத் தெளிவாக அறிந்து கொண்ட பிறகு ஒருவன் தக்க அளவு மட்டுமே உட்கொள்வானேயானால் அவனுடைய உடம்புக்கு மருந்து என்ற ஒன்று வேண்டியதில்லை.

இன்னொரு குறள் கூறுகிறது.

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல 
துய்க்க துவரப் பசித்து.

ஒருவன் தான் முன்பு உண்ட உணவு செரித்துள்ளதை அறிந்து கொண்டு உடம்பிற்கு மாறுபாட்டினை உண்டாக்காத உணவைக் குறியாகக் கொண்டு மிக நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும்.

உடம்பைப் பேணுவதில் சர்வக்ஞர் என்ன சொல்கிறார் பார்ப்போம்.

பசிக்காத போது உண்ணாதே... ஆம் செரித்துப் பசிக்காமல் உண்ணாதே - அதிக சூடானது அதிக குளிரானது எடுத்துக் கொள்ளாதே - மருத்துவனின் தயவில் வாழாதே... சர்வக்ஞர் நாடோடியாகச் சுற்றித்திரிந்தாலும் - உடல் நலம் இல்லையென்றால் வாழ்க்கை நலம் பயக்காது என்று இச்சமூகத்தின் பால் அக்கறை கொண்ட கவிஞராகத் திகழ்கிறார்.

இப்படி இன்னும் எவ்வளவோ கருத்துகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இவர்களின் பாடலில் கருத்து ஒற்றுமை மட்டுமல்ல; சில சொற்களை இவர்கள் கையாண்ட விதமும் ஒற்றுமையாக இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

உதாரணத்திற்கு அன்பினைப் பற்றி நம் வள்ளுவர் கூறும்போது,

அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு 
என்புதோல் போர்த்த உடம்பு.

அன்போடு பொருந்தி இயங்கும் உடம்பு தான் உயர்ந்தது. அப்படி இல்லாதது எலும்பின் மேல் தோல் போர்த்தப்பட்ட வெற்றுடம்பாகும் என்ற உயரிய கருத்தை எடுத்துரைக்கிறார்.

சர்வக்ஞர் "எலும்பின் மேல் தோல் போர்த்திய இந்த உடம்பிற்கு - ஏன் சாதியின் பெயரைச் சொல்லி வேறுபடுத்துகிறீர் என்கிறார்."

ஆக உயர் பண்பு இருந்தால்தான் இது உடம்பு; அன்பு போன்ற உயர்பண்பும் இல்லாமல் வேற்றுமை பாராட்டக்கூடிய மனப்பாங்கும் இருந்தால் இது வெறும் எலும்பு மேல் போர்த்திட்ட தோல் என இருபெரும் கவிஞர்களுமே உணர்த்துகிறார்கள்.

வள்ளுவர் வாழ்ந்ததோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால். சர்வக்ஞர் காலமும் மிகச் சரியாகக் கணக்கிடப்படவில்லை. ஆனால் 17ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்திலிருந்து அவரைப் பற்றிய கதைகளும் செய்திகளும் உலா வருகின்றன என்பது வரலாறு.

வள்ளுவர் முறையான இல்வாழ்க்கை வாழ்ந்தவர். சர்வக்ஞர் ஒரு துறவியைப்போல நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர் என அறிகிறோம். வள்ளுவரை  நீண்டு வளர்ந்த தாடியுடன் தூக்கி முடிந்த கொண்டையுடன் பார்க்கிறோம். சர்வக்ஞர் முழுதும் மழித்த தலையுடனே காட்சியளிக்கிறார். வள்ளுவரின் கருத்துகளில் சாந்தம் இருந்திருக்கிறது. ஆனால் அதே கருத்துகளை கூறும்போது சர்வக்ஞர் சற்று கனல் பறக்கவே கூறியிருக்கிறார். சர்வக்ஞர் என்று எல்லா பாடல்களின் முடிவிலும் தன் பெயரைப் பதித்திருக்கிறார்.

இப்படி சின்னச் சின்ன வேற்றுமைகளைத் தவிர இந்த இரு கவிஞருக்கும் ஒற்றுமையே மேலோங்கியிருக்கிறது. அதனால் பெங்களூரில் வள்ளுவர் சிலையும், சென்னையில் சர்வக்ஞர் சிலையும் மாநிலங்களின் ஒற்றுமை முயற்சியைப் பறைசாற்றுகிறது. இன்று பக்கத்து மாநிலங்கள் சில காரணங்களுக்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கையில் உறவுப் பாலமாகத் திகழ்கிறார்கள் இவர்கள்.

நம் மாநிலத்தை வணங்குவோம்; மற்றவரின் நியாயமான விருப்பத்திற்கு இணங்குவோம் என்ற உயரிய தத்துவத்தோடு, தேசிய எண்ணம், ஒரே நாடு என்ற எண்ணத்தோடு வாழ்வோம். அதுவே இந்த மகாகவிஞர்களுக்கு நாம் செலுத்தும் வணக்கம் ஆகும்.

தொடரட்டும் இத்தகைய முயற்சிகள்; வளரட்டும் இந்திய ஒருமைப்பாடு.

கட்டுரையாளர்:  தமிழிசை சௌந்தரராஜன் - பா. ஜ. க மாநில பொதுச் செயலாளர்

நன்றி:- தினமணி

N. Ganesan

unread,
Aug 7, 2009, 10:30:52 PM8/7/09
to மின்தமிழ்

இந்தச் சிலைத் திறப்பால் சாதாரண தமிழர் பெங்களூரில்
தாக்கப்படாமல் இருக்கப் பிரார்த்தனைகள்.

நா. கணேசன்

Kannan Natarajan

unread,
Aug 8, 2009, 2:00:44 AM8/8/09
to minT...@googlegroups.com
> இந்தச் சிலைத் திறப்பால் சாதாரண தமிழர் பெங்களூரில் தாக்கப்படாமல் இருக்கப் பிரார்த்தனைகள்.


ஒருவேளை மாகவி இருந்திருந்தால், வரிகள் இப்படி இருந்திருக்குமோ!

கர்நாடகத்து வீரர் தமக்கு
    நல்லியற் திருமந்திர நகர் முத்துக்களை அளிப்போம்!

karuannam annam

unread,
Aug 8, 2009, 2:02:01 AM8/8/09
to minT...@googlegroups.com
OUR WISH IS THAT THERE SHOULD NOT BE ANY DISPUTE IN FUTURE . HOWEVER IF AT ALL A DISPUTE IS THERE IN FUTURE THE FIRST ATTACK WILL BE ON THESE STATUES.
THEN GOVT HAS TO TAKE STEPS TO GUARD THESE STONES RATHER THAN THE PEOPLE.
 
S.VINAITHEERTHAN

 

Kannan Natarajan

unread,
Aug 8, 2009, 2:05:28 AM8/8/09
to minT...@googlegroups.com
> THEN GOVT HAS TO TAKE STEPS TO GUARD THESE STONES RATHER THAN THE
PEOPLE.

One wonders whether Vinaitheerthan would opine the same if the situation was a temple,rather than a statue!
 



N. Ganesan

unread,
Aug 8, 2009, 7:54:43 AM8/8/09
to மின்தமிழ்

On Aug 8, 1:02 am, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> OUR WISH IS THAT THERE SHOULD NOT BE ANY DISPUTE IN FUTURE . HOWEVER IF AT
> ALL A DISPUTE IS THERE IN FUTURE THE FIRST ATTACK WILL BE ON THESE STATUES.

> THEN GOVT HAS TO TAKE STEPS TO GUARD THESE STONES RATHER THAN THE *PEOPLE.*
>
> S.VINAITHEERTHAN
>

இப்பொழுதெல்லாம் காட்சிக்கும், பேச்சுக்கும் முக்கியத்துவம் அதிகம்.
டிவி வந்தபின் சொற்பொழிவுக் கலையிலே மாத்திரம் தமிழ்
சிக்குண்டிருக்கிறது.
மந்திரிகளும், அவைப் புலவர்களும் போய் விழாக் கொண்டாடிவிட்டு
வந்துவிடுவார்கள். சிக்கல் காலத்தில் அந்தப் பகுதியில் வசிக்கும்
மக்களுக்கு இடையூறுகள் நேர இச்சிலைகள் பயன்படும் என்று அஞ்சுகிறார்கள்.

பழ. கருப்பையா ஸ்டாலின் குணசேகரன் தலைமையில் நடக்கும்
ஈரோடு புத்தகக் கண்காட்சியில் அழகாய்ச் சொல்லியுள்ளார்:

” திருவள்ளுவருக்கு... உலகின் மிகச்சிறந்த நூல் திருக்குறள்தான். இதை
எழுதிய
வள்ளுவருக்கு சிலை வைக்க, பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருப்பது
வேதனைக்குரியது. தமிழர்கள் அறிந்திராத கன்னடக் கவிஞரின் சிலையை
தமிழகத்தில்
வைத்தால்தான், பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க முடியும்
என்று
கட்டாயப்படுத்துவது நியாயமல்ல. வள்ளுவரின் சிந்தனைக்கு மேலான சிந்தனை
எதுவுமே
இல்லை. சிலைகள் என்பவை வெறும் அடையாளங்கள்தான். கன்னியாகுமரியில்
வள்ளுவருக்கு
133 அடிக்கு சிலை வைத்துவிட்டதாலேயே, மக்கள் அனைவரின் மனதிலும்
திருக்குறள்
புகுந்துவிட்டது என்று கூற முடியுமா? எனவே பெங்களூருவில் வள்ளுவருக்கு
சிலை
வைக்காவிட்டால் தமிழுக்கு நஷ்டமேற்பட்டுவிடப் போவதில்லை.
தற்போது ஒழுக்கம் இல்லாத சமுதாயம் உருவாகி வருவது கவலைக்குரியது. லஞ்சம்
கொடுத்தால் மட்டுமே வேலைநடக்கும் என்பது வேதனையளிக்கும் நிகழ்வு.
கட்டுப்பாடு,
ஒழுக்கம், நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் தலைமுறையின் தேவை
அவசியமாகியுள்ளது.
அளவுக்கு அதிகமான பணம் சம்பாதிப்பது மட்டும்தான் குறிக்கோள் என்ற
லட்சியத்துடன்
இயங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு போதுமென்ற மனம், பகிர்ந்து
வாழ்தல்
ஆகியவற்றைப் புரியவைக்க வேண்டும் என்றார் பழ.கருப்பையா. ”

எப்பொழுதுமே சாலமன் பாப்பையா, கு. ஞானசம்பந்தன் அளிக்கும் புத்தகங்களை
வியப்பேன். அட்டை பளபளப்பாக, வண்ணப் படம். உள்ளே பக்கங்களோ இருபது
மட்டும்!

This is a visual age, rather than a reading-contemplating age.
SImilar thing happened when Teravada to Mahayana happened,
for mass entertainment, visual imagery took over.

N. Ganesan


> On 8/8/09, N. Ganesan <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > இந்தச் சிலைத் திறப்பால் *சாதாரண தமிழர்* பெங்களூரில்

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Aug 8, 2009, 8:04:26 AM8/8/09
to மின்தமிழ்

On Aug 8, 1:02 am, karuannam annam <karuan...@gmail.com> wrote:

> OUR WISH IS THAT THERE SHOULD NOT BE ANY DISPUTE IN FUTURE . HOWEVER IF AT
> ALL A DISPUTE IS THERE IN FUTURE THE FIRST ATTACK WILL BE ON THESE STATUES.

> THEN GOVT HAS TO TAKE STEPS TO GUARD THESE STONES RATHER THAN THE *PEOPLE.*
>
> S.VINAITHEERTHAN
>

பத்திரிகைச் செய்தி:
http://www.envazhi.com/?p=10137

பண்டமாற்று முறை:
http://mrkundakkamandakka.blogspot.com/2009/08/blog-post.html

சர்வக்ஞர் 1500 ஆண்டுகள் வள்ளுவருக்குப் பிற்பட்ட
காலத்தவர். இது கலைஞர் தமிழ் செம்மொழி என்று வாங்க,
இப்போது இந்தியாவில் எல்லா மொழிகளும் செம்மொழி
என்றானது போல்!

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 8, 2009, 8:09:18 AM8/8/09
to மின்தமிழ்

On Aug 8, 1:02 am, karuannam annam <karuan...@gmail.com> wrote:
>
> > OUR WISH IS THAT THERE SHOULD NOT BE ANY DISPUTE IN FUTURE . HOWEVER IF AT
> > ALL A DISPUTE IS THERE IN FUTURE THE FIRST ATTACK WILL BE ON THESE STATUES.
> > THEN GOVT HAS TO TAKE STEPS TO GUARD THESE STONES RATHER THAN THE *PEOPLE.*
>
> > S.VINAITHEERTHAN
>

ரத்னேஷ் இரு குறள்களைக் காட்டுகிறார்:
http://rathnesh.blogspot.com/2009/08/blog-post.html

புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை

(இகழ்வதையும் பொறுத்துக் கொண்டு மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே
பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்?)

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

(தன்னை மதிக்காதவரின் பின் சென்று உயிர் வாழ்வதை விடச் செத்தொழிவது
எவ்வளவோ மேல்).

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Aug 8, 2009, 8:35:18 AM8/8/09
to minT...@googlegroups.com


2009/8/8 N. Ganesan <naa.g...@gmail.com>

இப்பொழுதெல்லாம் காட்சிக்கும், பேச்சுக்கும் முக்கியத்துவம் அதிகம்.
டிவி வந்தபின் சொற்பொழிவுக் கலையிலே மாத்திரம் தமிழ்
சிக்குண்டிருக்கிறது.
மந்திரிகளும், அவைப் புலவர்களும் போய் விழாக் கொண்டாடிவிட்டு
வந்துவிடுவார்கள். சிக்கல் காலத்தில் அந்தப் பகுதியில் வசிக்கும்
மக்களுக்கு இடையூறுகள் நேர இச்சிலைகள் பயன்படும் என்று அஞ்சுகிறார்கள்.

 
 
 
எனக்குள்ள அச்சமே அதுதான்.  அங்கே யாராவது ஒருவர் சர்வக்ஞர் சிலைக்கு அவமரியாதை செய்துவிட்டால், இங்கே தமிழ்ப் பத்திரிகையைக்கூட வாங்க முடியாது.  வீட்டுக்குள் தமிழ் பேசினால், வெளியே கேட்டுவிடுமோ என்று அஞ்சி, கதவைத் தாளிட்டுக் கொள்ள வேண்டும்.  தமிழ்நாட்டில் பதிவுபெற்ற எங்களுடைய இருசக்கர வண்டியின் எண்தகட்டை மூடுமாறு துணியைப் போட்டுப் போர்த்த வேண்டிவரும்.  நிலைமை அப்படி இருக்கிறது.  பொதுவாக தமிழர்களுக்கு இடைஞ்சல் ஏதும் ஏற்படுவதில்லை என்றாலும், காவிரி, ஹொகனேகல் பட்டியலில் இப்போது வள்ளுவர்-சர்வக்ஞர் போட்டியும் சேர்ந்துகொண்டிருப்பது வேதனைக்குரியது. 
 
இங்கே (பெங்களூரில்) நிலவும் தமிழ் வெறுப்பு, தமிழ்நாட்டில் நிலவும் செங்கிருத வெறுப்பைக் காட்டிலும் வலுவானது.  ஹொகனேகல் பிரச்சினையின்போது, ஓட்டலில் தமிழ்ப் பத்திரிகையைக் கையில் வைத்திருந்த ஒரே காரணத்துக்காக என்னிடம் வம்புக்கு வந்தவர்கள் உண்டு.  அது மேலும் வளராமல் ஒருவகையாகத் தவிர்த்தேன்.
 
நாம் நம் மொழியை வழிபடுவதும், நம்மொழி குறித்துப் பெருமிதப்படுவதும் ஒருபுறம் இருக்கட்டும்.  மற்றவர்களுக்கும் அவரவர் மொழி குறித்த பெருமிதம் உண்டு என்பதையும்; அப்படி அவர்கள் பெருமிதப்படுவது நியாயமானதே என்பதையும் நாம் உணர்ந்தாலொழிய, இப்படிப்பட்ட சிக்கல்கள் தீர வழியே இல்லை.  கன்னடத்துக்கு உயர்வென்றால் தமிழனுக்கு மகிழ்வே; தமிழன் மற்ற மொழியினரை மதிக்கிறான் என்ற செய்தி மற்ற இடங்களில் பரவவேண்டும்.  ஆனால், தற்போதைய பார்வை என்னவோ, ‘தமிழன் மற்ற எல்லா மொழிகளுக்கும் தன்மொழியே பிறப்பூற்று’ என்று (சொம்மனாச்சுக்கும்) சொல்லிக் கொள்கிறான் என்பதுதான்.  ‘சமஸ்கிருதத்திலிருந்து இந்தச் சொல் தமிழுக்கு வந்தது’ என்று சொன்னாலே உடனடியாகத் துடித்தெழும்பும் நம்மைப் போலத்தான் பிறருடைய உணர்வுகளும் இருக்கும் அல்லவா?  அதை நாம் மதிக்கவேண்டும் அல்லவா?
 
சர்வக்ஞருடைய வசனங்களை (மூன்றடி கொண்டவை) மொழிபெயர்ப்பாகப் படிக்கத் தொடங்கியிருக்கிறேன்.  கன்னடத்திலேயே படிக்கவேண்டும் என்ற ஆர்வமும் உண்டு.  ஒருவேளை மொழிபெயர்த்தாலும் பெயர்க்கலாம்!  யார் கண்டது!
 
இப்போதைக்கு ஒன்றே ஒன்று சொல்ல விரும்புகிறேன்.  நான் படித்த சில வசனங்களை வைத்துப் பார்க்கும்போது, வள்ளுவருக்கும் சர்வக்ஞருக்கும் ஒப்பீடு செய்வது நடவாத செயல்.  வள்ளுவரின் உயரம் அப்படிப்பட்டது.  ஆனால், எந்த இரு கவிஞர்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, ‘இவர்தான் உயர்ந்தவர்’ என்று அறுதியிட்டுவிட முடியாது.  என்னுடைய முடிவுக்கு என் மொழிப்பற்றும், வள்ளுவப் பற்றும்கூட காரணமாக இருக்கலாம். 
 
ஒப்பீடுகள், இருவருக்குமிடைய உள்ள ஒத்த கருத்துகள் இவற்றை எடுத்து முன்னிலைப்படுத்த வேண்டியது மிகமிக அவசரமான அவசியம்.  இரண்டு அரசுகளும் ஒன்றிணைந்து கலாசாரப் பரிவர்த்தனை செய்ய முயல்வது மிகவும் அவசியம்.  70களில் சாகித்ய அகாதமி, சென்னையில் இப்படிப்பட்ட மற்ற மொழிக் கவிஞர்களை அழைத்து, கவிதை படிக்கச் செய்வது வழக்கமாக இருந்தது.  அப்படிப்பட்ட முயற்சிகளே இப்போதைய தேவை. 
 
மொழி உணர்வுகளைத் தூண்டும்படியான பேச்சுகளை நிறுத்திக் கொள்வதுகூட ஒரு நல்ல காரியமாக இருக்கலாம்.  உணர்ந்தால் நல்லது. 
 
 


 

--
அன்புடன்,
ஹரிகி.

N. Ganesan

unread,
Aug 8, 2009, 10:06:56 AM8/8/09
to மின்தமிழ்

On Aug 8, 7:35 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/8/8 N. Ganesan <naa.gane...@gmail.com>

இரண்டு புறமும் மொழிவெறி இலங்கையின் இழையப்பச் சிக்கலுக்கு முக்கியக்
காரணம் என்று கருதலாம். வெள்ளையர் போனபின்பு தமிழ்மக்கள் ஒவ்வொன்றாக
இழந்து இப்பொழுது 1983-க்கு முன்னம் என்ன இருந்ததோ அதுவும் பறிபோனது.
30 வருடங்களாய் கல்லூரிக் கல்வி அமையாச் சமுதாயம், பயிர்வளர்க்கும்
மேல்மண் போல இருந்தோர் இந்தியாவுக்கும், மேல்நாடுகளுக்கும், சிங்கை,
மலாயா, ...
என்று புலம்பெயர்ந்துவிட்டனர்.

சிங்களம் போன்ற ஆரிய மொழிகளில் வல்லினத்துக்கு நான்கு எழுத்துக்கள்
உண்டு.
க, க2, க3, க4, ... எனவே த வற்கம் - t, th, d, dh என்று எழுதப்படும்.
ஈழ நாட்டு வழமையில் (ரெ.கா. அவர்களின் முன்னோர் இலங்கையா?)
ratnam, ranjit, ... என்பதைத் ஈழநாட்டார், ... ரட்னம், ரஞ்சிட், ...
என்றெழுதுதல் இதனால் ஏற்பட்டதுதான். கணி, தொழிநுட்பு வளர்ச்சிகளால்
தமிழுக்கும், பிற இந்திய, சிங்கள பாஷைகளுக்கும் பரஸ்பரப் புரிந்துணர்வு
கூடும். கூட வைக்கச் சான்றோர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

நா. கணேசன்

v4vijayakumar

unread,
Aug 8, 2009, 2:35:57 AM8/8/09
to மின்தமிழ்
On Aug 8, 11:02 am, karuannam annam <karuan...@gmail.com> wrote:
...
> THEN GOVT HAS TO TAKE STEPS TO GUARD THESE STONES RATHER THAN THE *PEOPLE.*
...

that is ok, because, people can guard themselves, but these poor
stones can not. :p

N. Kannan

unread,
Aug 8, 2009, 7:14:17 PM8/8/09
to minT...@googlegroups.com
Sir

According to netiquette, all capital statement means loud and aggressive!

Kannan

2009/8/8 karuannam annam <karu...@gmail.com>:

v4vijayakumar

unread,
Aug 9, 2009, 8:13:53 AM8/9/09
to மின்தமிழ்
On Aug 8, 5:35 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
...

> நாம் நம் மொழியை வழிபடுவதும், நம்மொழி குறித்துப் பெருமிதப்படுவதும் ஒருபுறம்
> இருக்கட்டும். மற்றவர்களுக்கும் அவரவர் மொழி குறித்த பெருமிதம் உண்டு
> என்பதையும்; அப்படி அவர்கள் பெருமிதப்படுவது நியாயமானதே என்பதையும் நாம்
> உணர்ந்தாலொழிய, இப்படிப்பட்ட சிக்கல்கள் தீர வழியே இல்லை. கன்னடத்துக்கு
> உயர்வென்றால் தமிழனுக்கு மகிழ்வே; தமிழன் மற்ற மொழியினரை மதிக்கிறான் என்ற
> செய்தி மற்ற இடங்களில் பரவவேண்டும். ஆனால், தற்போதைய பார்வை என்னவோ, ‘தமிழன்
> மற்ற எல்லா மொழிகளுக்கும் தன்மொழியே பிறப்பூற்று’ என்று (சொம்மனாச்சுக்கும்)
> சொல்லிக் கொள்கிறான் என்பதுதான். ‘சமஸ்கிருதத்திலிருந்து இந்தச் சொல்
> தமிழுக்கு வந்தது’ என்று சொன்னாலே உடனடியாகத் துடித்தெழும்பும் நம்மைப்
> போலத்தான் பிறருடைய உணர்வுகளும் இருக்கும் அல்லவா? அதை நாம் மதிக்கவேண்டும்
> அல்லவா?
...

கன்னடா, தெலுங்கு, மலையாளம், இன்னும் பிற மொழிகள் பேசுபவர்களில்
பெரும்பாலானோர் சமஸ்கிருதத்தில் இருந்து தங்கள் மொழி கிளைத்தது என்று
யோசிக்காமல் ஏற்றுக் கொள்வர். தமிழர் மட்டுமே சமஸ்கிருதமின்றி தமிழ்
தனித்து இயங்கவல்லது என்று புரிந்து கொண்டுள்ளனர். தமிழ் தவிர்த்த பிற
மொழி பேசுபவர்களில் எத்தனை பேருக்கு, தங்கள் மொழியில் தமிழ் அல்லது
சமஸ்கிருதம் கலக்காமல் பேச / எழுதத் தெரியும் என்று தெரியவில்லை. இந்நிலை
மாறி, மொழிகளுக்கிடையே ஒரு ஆரோக்கியமான போட்டி ஏற்பட வேண்டும்.

karuannam annam

unread,
Aug 11, 2009, 2:58:21 AM8/11/09
to minT...@googlegroups.com


திரு

கணேசன்,

தமிழில்

ஒரு ,,, இருப்பது அழகியில் தட்டச்சு செய்ய மிகவும் சுலபமாக உள்ளது நண்பரே!

நிறைய இருந்திருந்தால் அதிகத் தலைகள் இருந்தால் அதிக மூக்குகளில் சிந்த வேண்டுமே எனத் தெனாலி இராமன் கவலை தோன்றுகிறது.

அன்புடன்

சொ

.வினைதீர்த்தான் (சிங்களம் போன்ற ஆரிய மொழிகளில் வல்லினத்துக்கு நான்கு எழுத்துக்கள்

உண்டு.
க, க2, க3, க4, ... எனவே த வற்கம் - t, th, d, dh என்று எழுதப்படும்.
ஈழ நாட்டு வழமையில் (ரெ.கா. அவர்களின் முன்னோர் இலங்கையா?)
ratnam, ranjit, ... என்பதைத் ஈழநாட்டார், ... ரட்னம், ரஞ்சிட், ...
என்றெழுதுதல் இதனால் ஏற்பட்டதுதான். கணி, தொழிநுட்பு வளர்ச்சிகளால்
தமிழுக்கும், பிற இந்திய, சிங்கள பாஷைகளுக்கும் பரஸ்பரப் புரிந்துணர்வு
கூடும். கூட வைக்கச் சான்றோர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

நா. கணேசன்

.

karuannam annam

unread,
Aug 11, 2009, 3:00:12 AM8/11/09
to minT...@googlegroups.com
Thank you Mr.Kannan
S.Vinaitheerthan

 
Reply all
Reply to author
Forward
0 new messages