மகிழ்ச்சியான அறிவிப்பு
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா கரத்தரங்க நிகழ்வில் ஐந்து நூல்கள் வெளியிடப்பட உள்ளன.
அந்த நூல்களின் வரிசையில் முதலாவதாக அமைகின்றது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் துணைத் தலைவரும் இந்த அமைப்பின் தோற்றுநர்களில் ஒருவருமான உலகப் புகழ் பெற்ற, சுற்றுச்சூழல் பேராசிரியர் டாக்டர் நா. கண்ணன் அவர்கள் எழுதிய
கிராமத்திலிருந்து உலகு வரை: ஒரு சூழலியல் கதை
என்ற தலைப்பில் அமைந்த தமிழ் அறிவியல் நூல். ஒரு வகையில் சுயசரிதையாகவும் இந்த நூல் அமைகின்றது. பல்வேறு அறிவியல் ஆய்வுகள் பற்றிய தரவுகள் உலகளாவிய ஆய்வுக்கூடங்கள் அங்கு நடைபெறுகின்ற சூழலியல் தொடர்பான ஆய்வுகள் பற்றியும் இந்த நூல் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றது.
காத்திருங்கள்..
22 ஆகஸ்ட் 2026 சனிக்கிழமை நமது வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் இந்த நூல் வெளியீடு காண்கின்றது.
அன்றிலிருந்து நூல் விற்பனைக்குக் கிடைக்கும்.
- தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு பதிப்பகப் பிரிவு.