தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்கள் 📚📚📚

46 views
Skip to first unread message

தேமொழி

unread,
Aug 3, 2026, 4:31:45 PM (8 days ago) Aug 3
to மின்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்கள்

Gemini_Generated_Image_poster.png

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பதிப்பகப் பிரிவின் மேலும் புதிய ஐந்து நூல்கள்...  நூல்களை விரும்பி வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த ஐந்து நூல்களும் நிச்சயம் ஆர்வத்தைத் தூண்டும்.

வெள்ளி விழா நிகழ்வில் சென்னையில் இந்த ஐந்து நூல்களும் விரைவில் வெளியிடப்படும்.

தேமொழி

unread,
Aug 5, 2026, 1:22:34 PM (6 days ago) Aug 5
to மின்தமிழ்

THFi Kannan Book wrapper.jpg

மகிழ்ச்சியான அறிவிப்பு

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா கரத்தரங்க நிகழ்வில் ஐந்து நூல்கள் வெளியிடப்பட உள்ளன. 

அந்த நூல்களின் வரிசையில் முதலாவதாக அமைகின்றது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் துணைத் தலைவரும் இந்த அமைப்பின் தோற்றுநர்களில் ஒருவருமான உலகப் புகழ் பெற்ற, சுற்றுச்சூழல் பேராசிரியர் டாக்டர் நா. கண்ணன் அவர்கள் எழுதிய

கிராமத்திலிருந்து உலகு வரை: ஒரு சூழலியல் கதை

என்ற தலைப்பில் அமைந்த தமிழ் அறிவியல் நூல். ஒரு வகையில் சுயசரிதையாகவும் இந்த நூல் அமைகின்றது. பல்வேறு அறிவியல் ஆய்வுகள் பற்றிய தரவுகள் உலகளாவிய ஆய்வுக்கூடங்கள் அங்கு நடைபெறுகின்ற சூழலியல் தொடர்பான ஆய்வுகள் பற்றியும் இந்த நூல் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றது. 

காத்திருங்கள்..

22 ஆகஸ்ட் 2026 சனிக்கிழமை நமது வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் இந்த நூல் வெளியீடு காண்கின்றது. 

அன்றிலிருந்து நூல் விற்பனைக்குக் கிடைக்கும். 

- தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு பதிப்பகப் பிரிவு.

தேமொழி

unread,
Aug 6, 2026, 11:55:51 PM (4 days ago) Aug 6
to மின்தமிழ்

THFi Themozhi Book wrapper.jpg

மகிழ்ச்சியான அறிவிப்பு

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் ஐந்து நூல்கள் வெளியிடப்பட உள்ளன.

அந்த நூல்களின் வரிசையில் இரண்டாவதாக அமைகின்றது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் செயலாளரும் ஆய்வறிஞருமான முனைவர் தேமொழி அவர்கள் எழுதிய நூல்.

குறளுக்கு உரிமை கோரல்

என்ற தலைப்பில் அமைந்த திருக்குறள் கட்டுரைகள் அடங்கிய நூல். ஒரு வகையில் திருக்குறள் தொடர்பான சிந்தனைகளைத் தூசு தட்டி மறு வாசிப்புக்கு வாசகர்களை அழைத்துச் செல்லும் ஒரு நூல்.

தேமொழி

unread,
Aug 8, 2026, 2:28:09 AM (3 days ago) Aug 8
to மின்தமிழ்

THFi Arul Mervin Book wrapper.jpg

மகிழ்ச்சிக்குறினய அறிவிப்பு


தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் ஐந்து நூல்கள் வெளியிடப்பட உள்ளன.

அந்த நூல்களின் வரிசையில் மூன்றாவதாக அமைகின்றது திரு அருள் மெர்வின் எழுதிய நூல்.

*சங்ககாலத்தில் ஜென்Z*

என்ற தலைப்பில் அமைந்த நூல். சங்கச் செய்யுள்களை இக்காலத்து அறிவியல் துறையில் பணியாற்றும் இளைஞர்களும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.. அவற்றை சமகால செய்திகளோடு தொடர்பு படுத்தி புரிந்து மகிழ முடியும் என்பதற்குச் சான்றாக அமைகிறது இந்த நூலில் எழுதப்பட்டுள்ள 40 கட்டுரைகள். வாசிப்போருக்குச் சங்க இலக்கியத்தை நெஞ்சுக்கு மிக நெருக்கமாக் கொண்டு செல்லும் பாங்கோடு எழுதப்பட்டவை இதில் அடங்கியிருக்கும் கட்டுரைகள்.

தேமொழி

unread,
Aug 8, 2026, 10:42:01 PM (2 days ago) Aug 8
to மின்தமிழ்

THFi Suba Book wrapper.jpg

மகிழ்ச்சி தரும் அறிவிப்பு


தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் ஐந்து நூல்கள் வெளியிடப்பட உள்ளன.

அந்த நூல்களின் வரிசையில் நான்காவதாக அமைகின்றது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் க.சுபாஷிணி எழுதிய நூல்.

மரபணுக்கள் எழுதும் மனித வரலாறு

என்ற தலைப்பில் அமைந்த நூல்.
டிஎன்ஏ அறிவியலின் தொடக்கம் மற்றும் அவை ஏற்படுத்தி இருக்கும் சாதனைகள், டார்வின், அவரின் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றோடு இன்று வரை உலக அளவில் கண்டுபிடிக்கப்பட்ட வெவ்வேறு மனித இனங்களைப் பற்றிய விரிவான அறிவியல் தகவல்களோடு அறிவியலை எளிய தமிழில் கொண்டுவரும் பயிற்சியாக இந்த நூல் வெளி வருகிறது.

தேமொழி

unread,
Aug 10, 2026, 12:52:25 AM (yesterday) Aug 10
to மின்தமிழ்
THFi Kalvettu Book wrapper.jpg

மகிழ்ச்சி தரும் அறிவிப்பு

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் ஐந்து நூல்கள் வெளியிடப்பட உள்ளன.

அந்த நூல்களின் வரிசையில் இறுதியாக அமைகின்றது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டு நம்மோடு 12 ஆண்டுகள் சேர்ந்து பயணித்து கொரோனா காலத்தில் மறைந்த பொறியியலாளரும் கல்வெட்டு ஆய்வாளருமான திரு துரை சுந்தரம் அவர்கள் எழுதிய நூல்.

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் மின்தமிழ் மடலாடர் குழுவில் தொடர்ந்து அவர் எழுதி வந்த கல்வெட்டு பயிற்சி தொடர்பான கட்டுரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. சோழர் கால பல்லவர் கால தமிழ் எழுத்துக்களை பயிற்சி செய்து கொள்ள வரலாற்று ஆர்வலர்களுக்குப் பயனளிக்கும் ஒரு நூல் இது.
Reply all
Reply to author
Forward
0 new messages