அடையாற்றில் வெள்ளம் என்ற செய்தி வந்தவுடன் பலர் அடையாறு பகுதி ( சென்னை 20) பாதிக்கப்பட்டது என்று நினைத்துவிட்டனர். அடையாறு பகுதியில் எல்லாத் தெருக்களிலும் மூன்று நாள்களுக்கு முன்னர் இரண்டு அல்லது மூன்று அடிகள் தண்ணீர் தேங்கியிருந்தது. தாழ்வான வீடுகளில் - குறிப்பாகக் கீழ்த்தள வீடுகளில் தண்ணீர் ஓரடி புகுந்துள்ளது. ஆனால் ராமாவரம், தரமணி போன்ற பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் போன்று கிடையாது. மழை நின்றவுடன் தேங்கிய தண்ணீரும் அடையாறின் பெரும்பகுதிகளில் வடிந்துவிட்டது. சாக்கடைத்தண்ணீர் பிரச்சினை உள்ளது. pumping station பணிகள் தடைபட்டதே அதற்குக் காரணம். ஆகவே பிற பகுதிகள்போன்று மக்கள் அடையாறில் வெள்ளத்தில் சிக்கவோ அல்லது படகில் காப்பாற்றப்படுகிற நிகழ்வோ இல்லை. திருவான்மியூரில் சில பகுதிகள் தண்ணீர் அதிகம்.
பெரிய வெள்ளம் என்பது மேடவாக்கத்திற்குச் செல்லும் சோழிங்கநல்லூர் சாலை, துரைப்பாக்கம் சாலை, வேளைச்சேரி சாலைகளில் இருந்தது. நான் நேரில் அதைப் பார்த்தேன். அதுபோன்றுஅடையாறு மத்திய கைலாஷிலிருந்து ராஜ்பவன் வரை தண்ணீர் அதிகமாகத் தேங்கியது. மணப்பாக்கம், நெசப்பாக்கம், முடிச்சூர் போன்ற பகுதிகளில் தரைத்தள வீடுகள் எல்லாம் மூழ்கியுள்ளன. முதல்தளத்திற்குக்கூட தண்ணீர் புகுந்துள்ளது. நிலைமை இன்னும் முழுமையாக அங்கு சீரடையவில்லை. பெரும்பாலான இடங்கள் குளங்களாகவும் நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் இருந்த இடங்கள். அந்தப் பகுதிகளில் உள்ள இடங்களில் தனியார் பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், கணினிநிறுவனங்கள் , குறைந்த விலையில் மனை வாங்கமுடியும் என்பதால் மத்தியதரக் குடும்பங்கள் மனை வாங்கிய கட்டிய வீடுகள் - இவையே மழைத்தண்ணீர் வடிவதற்கு அல்லது தண்ணீர் ஓடி ஏரி, கடலில் கலப்பதற்குத் தடையாக அமைந்துள்ளன. இது ஒரு சில ஆண்டுகளில் ஏற்பட்டதல்ல. கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்றுள்ள செயல்.
அடையார் பகுதியில் இன்று ( டிசம்பர் 4 ) இரவு மின்சார விநியோகம் தொடங்கியுள்ளது. மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
அடையாறில் மின்சாரம் இல்லாததால், தண்ணீர் ஏற்ற மோட்டார் இயங்கவில்லை. கிரைண்டர், மிக்ஸி இல்லாததால் ஓட்டல்களில் மக்கள் கூட்டம். அங்கும் சாப்பாடு கிடையாது. தோசை, சப்பாத்திதான் உண்டு. சில இடங்களில் பார்சல் கிடையாது என்று சொன்னார்கள் கூட்டம் அதிகமானாதால். பால் கிடைப்பது அரிதாக இருந்தது. இட்லி, தோசை மாவு விற்கும் கடைகள் மூடப்பட்டு இருந்தன. பிரட், மெழுகுவர்த்தி, பிஸ்கட்க்கு கிராக்கி. ஏடிஎம் வசதி அறவே இல்லை. கடைகளில் கிரெடிட், டெபிட் கார்டு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பெட்ரோலுக்கு கிராக்கி.
ந. தெய்வ சுந்தரம்
//If one such lake is to be built imagine the logistics- location, infrastructure and the massiveness(1000 x 1000 x 13ft tank) with all safety measures among living population. And interconnecting such tanks in an already built city!. //
This is the location where the king Thirumalai Naicker excavated the soil to fabricate the bricks required for constructing his palace, Thirumalai Nayakkar Mahal. The pit that was thus formed is seen as tank now. It is approximately 305 M long and 290 M wide, nearly equal area to that of Meenakshi Amman Temple. Built in 1645 A.D.,this is the biggest tank in Tamil Nadu.[2] 7 foot tall Mukuruny Vinayakar idol in Meenakshi Amman Temple is believed to be found during excavation process of this pond.[3]
ஒரு புதிய குடியிருப்புப் பகுதி உருவாக்கப்படுகிறது என்றால், betterment charge வசூலிக்கிறார்கள். பூங்கா நிறுவுவதற்கு இடம் ஒதுக்கச் சொல்கிறார்கள். அதுமாதிரி, ஒரு சிறு குளமும் கட்டவேண்டுமென்று ஆணை இடப்படவேண்டும்.