http://groups.google.ge/group/Thiruppuvanam
அகர முதல்வன் - ஆதி பகவன்
தெய்வப் புலவராம் திருவள்ளுவர் முதற்குறலில் வணங்கிய தெய்வம் எது? என்பதைக் கண்டறிவதே இக் கட்டுரையின் நோக்கம்,
இக்கட்டுரை தர்க்கரீதியாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது, இதில் மறுப்பதற்கு ஏதும் இல்லை! இக்கட்டுரை தொடர்பான அனைத்து ஐயப்பாடுகளுக்கும் என்னிடம் விடைகள் உள்ளன. இக்கட்டுரையின் கருத்தை ஏற்போரும் எதிர்ப்போரும் திருக்குறள்களையே மேற்கோள்களாகக் கொண்டால் நன்று,
ஆதி. பகவன் என்ற சொற்களைச் சிலர் வடசொற்கள் என்று கூறுகின்றனர், இச் சொற்கள் சிறந்த தமிழ்ச் சொற்கள் என்று இக்கட்டுரையிலே விளக்கப்பெற்ள்ளது,
உ
பகவன் முதற்றே உலகு
திருச்சிற்றம்பலம்
அருள்மிகு புலிக்கரை ஐயனார் துணை
ஆனைமுகனே(னோ?) ஆதிபகவன்
நாள் 18-09-2005 (ஆய்வுக் கட்டுரையைப் பல்கலைக்கழகக் கருத்தரங்கில் வாசித்த நாள்) இணையத்தில் வெளியிடும் நாள் 15-07-2010,
அகில உலகிலும் வாழும் மனிதர் அனைவரும் பிறப்பால் ஒன்றே ஆவர், ஆயினும் மனிதர்கள். தாம் பிறந்த நாட்டின் பெயராலும். பேசும் மொழியின் பெயராலும். வழிபடும் கடவுளின் பெயராலும் தமக்குள் பேதம் கண்டுள்ளனர், இவற்றினால் மாறுபட்ட சமூகங்களாக வாழ்கின்றனர், அவற்றுள் மிகவும் தொன்மை மிக்க சமூகத்தினராக இந்தியாவில் இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர்,
உலகில் வாழும் மற்றபிற சமூகத்தினர்(மதத்தினர்) இறைவனின் தூதுவர்களையோ அல்லது இவ்வுலகில் தோன்றி மறைந்த மகான்களின் வடிவங்களையோ வணங்கி வருகின்றனர், ஆனால் தொன்மை மிகுந்த இந்தியச் சமூகத்தார்கள்(இந்துக்கள்) மட்டும் கடவுள்களின் திருவுருவங்களை நேரடியாக வணங்கி வழிபடுகின்றனர்,
தெ(தொ)ன் தமிழர்
உலகில் லெமூரியாக் கண்டம் அழிவதற்கு முன்னரே இவர்கள் அங்கு சமூக வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றனர் என்பது அறிவியல் உண்மை, இன்று. இந்தியச் சமுதாயத்தினருள் மிகத் தொல்பழம் சமுதாயமாக தமிழ்ச் சமுதாயம் விளங்குகிறது, தமிழ் மொழியின் மிகத் தொன்மையான நூல்களாகத் தொல்காப்பியமும். திருக்குறளும் மதிக்கப்படுகின்றன, தொல்காப்பியம் இலக்கண நூலாகக் கருதப்படுகின்றது, திருக்குறள் மட்டுமே அனைவராலும் படிக்கப்படுகின்றது,
கற்றதனாலாய பயன்
மனிதனுக்குத் தேவையான அறம். பொருள். காமம் உள்ளிட்ட எல்லாவற்றையும் உள்ளடக்கியது திருக்குறள், இந்நூலை இயற்றிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் வணங்கிய கடவுள் யார்?
இதைக் கண்டறிந்து. நாமும் அக்கடவுளை வணங்கி வழிபடவேண்டுமல்லவா?
அப்பொழுதுதானே திருக்குறளைக் கற்றதனாலாய பயனைப் பெற முடியும்?
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்பது திருக்குறளின் முதற்குறள், இதில் "ஆதிபகவன்" என்று திருவள்ளுவரால் வணங்கப்பட்ட கடவுள் யார்?
ஆதி பகவன் யார் என்று யாராலும் அறுதியிட்டுக் கூற இயலவில்லை! ஒவ்வொரு அறிஞரும் ஒருவாறாகக் கூறுகின்றனர்,
சிலர். திருக்குறள் என்பது உலகப் பொதுமறை நூலாகும். அவரவர் சமயத்தின் மூலக்கடவுளையே ஆதிபகவன் என்று வள்ளுவர் பொதுவாகக் குறிப்பிட்டுள்ளார் என்றும் கூறுகின்றனர்,
ஆதி என்பது தாயாகும். பகவன் என்பது தந்தையாகும், ஆதிபகவன் என்பது தாயையும் தந்தையையும் வணங்கி எழுதப்பட்டது என்றும் கூறுகின்றனர்,
பகவன். பகலன். பகலவன். என்ற சொற்கள் எல்லாம் கதிரவனைக் குறிப்பன, இது உலகம் தோன்றுவதற்குக் காரணமான இயற்கையையும். சூரியனையும் வணங்கி எழுதப்பட்ட குறள் என்றும் கூறுகின்றனர்,
ஆதி பகவன் என்பர் அனைத்துக் கடவுளருக்கும் தலைமையான கடவுளின் வழிபாடாகும். அதனால் இது சிவ வழிபாடு என்றும் கூறியுள்ளனர்,
திருக்குறளின் மற்றபிற குறள்களில் உலகுஅளந்தான். திருமகள் போன்ற தெய்வங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி ஆதிபகவன் என்பது ஆதிநாராயணனைக் குறிக்கும் என்றும் கூறியுள்ளனர்,
சிலர் முதற் குறள் உட்பட்ட பலகுறள்களில் வடமொழிச் சொல்லும் பொருளும் உள்ளன எனக் கூறுகின்றனர், இதனால் இக்குறள்கள் திருவள்ளுவரால் இயற்றப்படவில்லை என்றும். பின்னாளில் சேர்க்கப்பட்டன என்றும் கூறுகின்றனர்,
திருவள்ளுவர் வாழ்த்திய கடவுளும். வணங்கிய தெய்வங்களும். வசித்த இடமும். வாழ்ந்த காலமும் அறுதியிட்டுக் கூறமுடியாதபடி மிகவும் தொன்மையாக உள்ளன,
திருக்குறளில் உள்ள ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால் ஆனவை, மேலும் அவற்றில் உள்ள ஒவ்வொரு எழுத்தும். சொல்லும் பொருட் செறிவு மிக்கனவாக உள்ளன, இதனால் படிப்போர் ஒவ்வொருவருக்கும் அவர்கள் நோக்கும் எண்ணத்திற்கு ஏற்றாற்போல் புதிய புதிய கருத்துக்களைத் திருக்குறள் வழங்கி வருகின்றது, இதனால் திருக்குறளுக்கு இன்றும் புதிய உரைவளங்கள் தோன்றிய வண்ணம் உள்ளன,
இருப்பினும் இன்றைய நாளில் மக்களால் வணங்கப்படும் கடவுள்களில் ஏதேனும் ஒரு கடவுள் முதற் குறளுக்குப் பொருத்தமானவராய் இருக்கின்றாரா? என்று காண்போம்,
திருக்குறளோ யானை போன்றது! அதனைக் கற்கும் நாமோ மெய்யறிவுக் குருடர்கள் ஆவோம்! யானை தடவிய குருடர் கதையாக முதற்குறளின் ஒவ்வொரு எழுத்தையும். எழுத்துக்களாலான சொல்லையும். சொற்களாலான பொருளையும் காண்போம், அவ்வாறு கண்டால் நமது அறிவிற்கு ஆனைமுகத்தானே ஆதிபகவனாகத் தெரிகின்றார்,
மூல முதல்வன்
ஆதி பகவன் என்ற கடவுளை முதன்முதலாக வணங்கியே தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியுள்ளார், இதுபோல் இன்று எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பும் முதன்முதலாக யானை முகம் கொண்ட விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு அதன் பின்னரே நமது வேலைகளைத் துவக்குகிறோம்,
ஆகையால். முதல் வணக்கத்திற்கு உரிய கடவுள் என்ற முறையில் ஆதிபகவனும் ஆனைமுகத்தானும் ஒருவராகின்றனர்,
வித்தகன் விநாயகன்
இரண்டாவதாக "அகர முதல எழுத்துக்களெல்லாம். ஆதி பகவன் முதற்றே" என்று திருவள்ளுவர் கூறுகின்றhர், முதன் முதல் வணங்கிய கடவுளை எழுத்துக்களுடன் தொடர்புபடுத்திக் குறள் இயற்றியுள்ளார், அப்படியானால். எழுத்துக்களுடன் தொடர்புடைய கடவுள் யார்?
இறைவன் சிவனின் உடுக்கை (துடி)யிலிருந்து வேதங்கள் தோன்றின என்று கூறுகின்றனர், இதனால் இறைவன் சிவனே அனைத்து வேதங்களுக்கும் நாயகனாகச் சைவர்களால் வணங்கப்படுகிறhர், வைணவர்கள் அயக்கிரீவரைக் கலைகளின் கடவுளாகக் குறிப்பிடுகின்றனர், அன்னை கலைவாணி (சரசுவதி). கலைகளின் நாயகியாக விளங்குகின்றhள், ஆனால் இக்கடவுள்கள் யாரும் எழுத்துக்களுடன் இணைத்துப் போற்றப்பட வில்லை,
வேதவியாசர் கூறிட. விநாயகர் தனது தந்தத்தையே ஒடித்துப் புராணம் எழுதியதாகக் கூறப்படுகிறது, இதனால் எழுத்துக்களுடன் தொடர்புடைய கடவுளாக விநாயகர் விளங்குகின்றhர்,
யானை முகனை ஓங்கார வடிவத்துடன் பொருத்திக் கூறுவர், ஒலி வடிவில் மட்டுமின்றி எழுத்து வடிவிலும் யானைத் தலையும். வலமாகச் சுழித்த துதிக்கையும் "ஓம்" என்ற எழுத்துக்கள் வடிவத்திற்கு பொருத்தமாக உள்ளன, பிற கடவுளருக்கு இப்பொருத்தம் பெரும்பாலும் இல்லை, இவ்வாறு விநாயகருக்கு உரிய ஓங்கார வடிவ காட்சிக்குப் பிள்ளையார் பட்டி விநாயகரின் திருஉருவமே எடுத்துக்காட்டாகும்,
ஆதியானவன்
மூன்றாவதாக திருவள்ளுவர். முதன் முதலில் தான் வணங்கிய கடவுளின் பெயரை "ஆதி பகவன்" என்று கூறிப்பிடுகின்றார், தமிழ் இலக்கணப்படி பகர ஒற்று மிகுந்து ஆதிப்பகவன் என்று இருக்க வேண்டும், இடையில் "ப்" இல்லாததால் ஆதிபகவன் என்பது வடநூல் முடிபு என்றும் கூறுகின்றனர்,
தமிழில் இலக்கணச் செறிவுடன் குறள் இயற்றியவர் தெய்வப் புலவர் திருவள்ளுவர், அவர் தனது முதற் குறளையே வடநூல் மரபினைப் பின்பற்றி எழுதியிருக்க மாட்டார் என்பது திண்ணம், அதனால் ஆதி என்ற சொல்லையும் பகவன் என்ற சொல்லையும் திருவள்ளுவர் வேறுபிற குறள்களில் எப்பொருளில் கையாண்டுள்ளார் எனப் பார்ப்போம்,
"ஆதி" என்றால் என்ன பொருள் என்று பார்ப்போம்,
அந்தணர் நூற்கு மறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் (543)
என்ற குறளில் "ஆதி" என்ற சொல்லுக்கு. படைத்தலுக்குக் காரணமாயும். படைத்ததைக் காத்தலும். படைப்பில் குறைகள் ஏற்பட்டால் அதனை நிவர்த்தி செய்தலும் என்று பொருளாகிறது, ஆதி என்ற சொல்லுக்கு இணையாக ஆங்கிலத்தில் Authority என்ற சொல் உள்ளது. "எழுத்தெல்லாம் ஆதி பகவன்" என்றால் எழுத்துக்கள் தோன்றுவதற்கு ஆதாரமானவனாகவும். எழுத்துக்களைக் காப்பவனாகவும். எழுத்துக்களில் குற்றம் குறை ஏற்படாமல் அருள்பவனாகவும் பகவன் என்ற கடவுள் உள்ளார் என்று பொருள், இவ்வாறான பண்புகளைக் கொண்ட கடவுளுக்குப் பகவன் என்ற பெயர் ஏன் வந்தது என்று காண்போம்,
பகுக்கப்பட்டவனே பகவன்
பகச் சொல்லிக் கேளிர் பிரிப்பர் (187) என்ற குறளிலும்.
எள் பக அளவு சிறுமை (889) என்ற குறளிலும்
பக என்ற சொல் உள்ளது, பக என்றால் பகுத்தல். பிரித்தல். பிளவுபடுத்துதல். துண்டாக்குதல் என்பன பொருளாகும், "அன்" என்ற ஆண்பால் பெயர் விகுதி உள்ளது, இதனால் பகவன் என்றால் பகுக்கப்பட்ட ஆண் கடவுள் என்று பொருள்,
அப்படியானால் இன்று நாம் வணங்கும் கடவுள்களில் பகுக்கப்பட்ட. பிரிக்கப்பட்ட. பிளவுபடுத்தப்பட்ட. துண்டாடப்பட்ட கடவுள் யார்? என்று பார்ப்போம்,
நவக்கிரகங்களில் ராகுவும் கேதுவும் தலைதுண்டிக்கப்பட்ட அம்சத்தைக் கொண்டவர்களாக உள்ளனர், அசுரனின் தலையையும் பாம்பின் உடலையும் கொண்டது ராகுவாகும். பாம்பின் தலையையும் அசுரனின் உடலையும் கொண்டது கேதுவாகும், ஆனால் ராகுவும் கேதுவும் இரண்டு கிரகங்களாக உள்ளனர், இறைவன் சிவன் தனது உடலின் சரிபாதியைத் தேவிக்கு வழங்கியுள்ளார், ஆனால் அவரது உடல் பிளவுபடுத்தப்படவில்லை, விநாயகரின் தலை துண்டிக்கப்பட்டது, பின்னர் யானையின் தலை பொருத்தப்பட்டது, இதனால். விநாயகரே தலைபகுக்கப்பட்ட உடலையுடைய கடவுளாக உள்ளார், அவரது கதையைப் படிப்போம்,
அன்னை பார்வதிதேவி தனது உடம்பின் அழுக்கிலிருந்து விநாயகப்பெருமானை உருவாக்கினார், சிவபெருமான் விநாயகாரின் தலையைத் துண்டித்துவிட்டார், பின்னர் யானையின் தலை பொருத்தப்பட்டு விநாயகர் உயிர்ப்பிக்கப்பட்டார், இதனால். விநாயகாரின் உடலானது அன்னை பார்வதிதேவியால் வழங்கப்பட்டது, அவரது தலையானது சிவபெருமானால் வழங்கப்பட்டது, இவ்வாறு பார்வதியும் பரமேசுவரனுமாக. தாயும் தந்தையுமாக. மூலமுதல்வனாக. வேதம் எழுதிய நாயகனாக விநாயகப் பெருமான் விளங்குகின்றார்,
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்ற குறளுக்கு அகர முதலான எழுத்துக்களுக்களின் தோற்றத்திற்கு மூல ஆதாரமானவனும். எழுத்துக்களில் உள்ள குற்றம் குறைகளை நீக்குபவனும். பகுக்கப்பட்ட உடலையுடையவனுமாகிய கடவுளே இவ்வுலகத்திற்கும் உலக மக்களுக்கும் முதன்மையானவன் ஆவான் - என்பது பொருளாகும்,
ஆனால் பிள்ளையார் வழிபாடு வாதாபி கொண்டானுக்கு முன்னாள் தமிழ்நாட்டில் இல்லை என்று கூறப்படுகிறதே! அதற்கான விளக்கத்தைக் காண்போம்,
பிடித்து வைத்தால் பிள்ளையார்
களிமண்ணையோ அல்லது மாட்டுச் சாணத்தையோ பிடித்துவைத்து அதில் அருகம்புள்ளைச் சொருகி விநாயகரைக் கும்பிடும் வழக்கமும். பிள்ளையார் சுழிபோட்டு எழுதத்துவங்கும் வழக்கமும் தொன்று தொட்டுத் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது, மேலும் வெள்ளெருக்கம் பூக் கொண்டு கடவுளை வழிபடும் வழக்கமும் பழந் தமிழரிடத்தில் இருந்துள்ளது,
இரண்டு கைகளையுடைய யானைமுகனின் உருவ வழிபாடு முற்காலப் பாண்டியர் காலத்தில். பிள்ளையார்பட்டியில்;. கி,பி, 4ம் நூற்றாண்டில். கல்லில் வடிக்கப்பட்டுள்ளது, இதனால் கி,பி,6ம் நூற்றாண்டில் வாதாபியிலிருந்து கொண்டுவரப்பட்ட நான்கு கைகளையுடைய விநாயகரின் காலத்திற்கு முன்பே தமிழ் நாட்டில் விநாயகர் உருவ வழிபாடு இருந்துள்ளது தெளிவாகிறது, மேலும் போரின் போது. எதிரி வழிபடும் தெய்வத்தையோ அல்லது மரத்தையோ கொண்டு வருதல் உண்டு, தமிழர்கள். இவ்வாறு செய்வதை வெற்றியின் அடையாளமாகத் கருதினர், இதனால் பழந்தமிழரிடம் விநாயகர் வழிபாடு இல்லை என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்பதே உண்மை,
ஆனை முகத்தனே ஆதிபகவன்
இவ்வாறான காரணங்களால் வள்ளுவர் காலத்தில் ஆதிபகவன் என்று நம்முன்னோரால் வாழ்த்தப்பட்ட கடவுளின் பண்புநலன்கள் அனைத்தும். இன்றைய நாளில் நாம் வணங்கும் ஆனைமுகத்தானுக்கே பொருந்தியமைகின்றன, எனவே. தெய்வப்புலவராம் திருவள்ளுவர் வழி நின்று ஆனைமுகத்தானை நாமும் வாழ்த்தி நம் எழுத்துப்பணியையும். மற்றபிற பணிகளையும் செவ்வனே துவக்குவோம்; நலன்கள் அனைத்தும் பெறுவோம்.
* * * * *
முனைவர், கி, காளைராசன். B.Sc., PGDCA, M.A., M.Phil., Ph.D.,
உதவிப்பதிவாளர் (நிதிப்பிரிவு)
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி - 630 003
10 குருநாதர்கோயில் தெரு,
கோட்டையூர். – 630 106
தொலைபேசி- 94435 01912
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
> எனக்கு ஓர் ஐயம். அது இந்தக் கட்டுரை தொடர்பான ஐயம் என்றும் சொல்லமுடியாது.
> இக்கட்டுரை தொடர்பானது இல்லை என்றும் சொல்ல முடியாது. அதாவது நீங்கள் இதனை
> உங்கள் பல்கலைக் கழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்குமுன் படித்துள்ளீர்கள். அங்கு
> யாரும் இதற்கு மாற்றுக் கருத்துச் சொல்லவில்லையா?
என்னே ஆ ரா தி அவர்களின் மென்மையான அணுகுமுறை !!
கற்க நிறைய உள்ளது
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
ணமோ அரஹந்தாணம் :-)
V
On Jul 15, 4:34 pm, aruran visu <visuaru...@gmail.com> wrote:
> அன்பிற்குரியீர்,
>
> 1.வாதாபி படையெடுப்புக்கு முன்னாள், அதாவது 8-10 நூற்றாண்டுக்கு பிறகுதான்
> ஆனைமுகன் வழிபாடு தென்னிந்தியா வந்ததாக, பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்ட
> கருத்து.
> 2. அறவழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கல்லார்-என்ற குறள் அருகக் கடவுளை
> குறிப்பிடுவதாக இதற்கு முன்னும் பலர் கூறியுள்ளனர்.
> 3. செங்கண்ணான் உலகு என்ற வரிகளும் அருகக் கடவுளையே குறிப்பதாக சொல்லப்
> படுகிறது.
>
> அன்புடன்.
> ஆரூரன் விசுவநாதன்
>
> 15 ஜூலை, 2010 2:24 pm அன்று, kalairajan krishnan
> <kalairaja...@gmail.com>எழுதியது:
>
>
>
>
>
> >http://groups.google.ge/group/Thiruppuvanam
>
> > kalairaja...@gamil.com
>
> > அகர முதல்வன் - ஆதி பகவன் <http://groups.google.ge/group/Thiruppuvanam>
>
> > *அகர முதல்வன் - ஆதி பகவன்
> > *தெய்வப் புலவராம் திருவள்ளுவர் முதற்குறலில் வணங்கிய தெய்வம் எது?
> > *அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
> > பகவன் முதற்றே உலகு*
>
> > என்பது திருக்குறளின் முதற்குறள், இதில் "ஆதிபகவன்" என்று திருவள்ளுவரால்
> > வணங்கப்பட்ட கடவுள் யார்?
> > ஆதி பகவன் யார் என்று யாராலும் அறுதியிட்டுக் கூற இயலவில்லை! ஒவ்வொரு அறிஞரும்
> > ஒருவாறாகக் கூறுகின்றனர்,
> > சிலர். திருக்குறள் என்பது உலகப் பொதுமறை நூலாகும். அவரவர் சமயத்தின்
> > மூலக்கடவுளையே ஆதிபகவன் என்று வள்ளுவர் பொதுவாகக் குறிப்பிட்டுள்ளார் என்றும்
> > கூறுகின்றனர்,
> > ஆதி என்பது தாயாகும். பகவன் என்பது தந்தையாகும், ஆதிபகவன் என்பது தாயையும்
> > தந்தையையும் வணங்கி எழுதப்பட்டது என்றும் கூறுகின்றனர்,
> > பகவன். பகலன். பகலவன். என்ற சொற்கள் எல்லாம் கதிரவனைக் குறிப்பன, இது உலகம்
> > தோன்றுவதற்குக் காரணமான இயற்கையையும். சூரியனையும் வணங்கி எழுதப்பட்ட குறள்
> > என்றும் கூறுகின்றனர்,
> > ஆதி பகவன் என்பர் அனைத்துக் கடவுளருக்கும் தலைமையான கடவுளின் வழிபாடாகும்.
> > அதனால் இது சிவ வழிபாடு என்றும் கூறியுள்ளனர்,
> > திருக்குறளின் மற்றபிற குறள்களில் உலகுஅளந்தான். திருமகள் போன்ற தெய்வங்கள்
> > குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி ஆதிபகவன் என்பது ஆதிநாராயணனைக்
> > குறிக்கும் என்றும் கூறியுள்ளனர்,
> > சிலர் முதற்
>
> ...
>
> read more »
ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது, இதில் மறுப்பதற்கு ஏதும் இல்லை!///என்று நீங்கள் குறிப்பிட்ட பிறகு இதில் மாற்றுக் கருத்துக் கூற வாய்ப்பில்லை. கூறினாலும் நீங்கள் ஏற்கத் தயாரில்லை என்பதையே காட்டுகிறது.
அன்பிற்குரியீர்,
1.வாதாபி படையெடுப்புக்கு முன்னாள், அதாவது 8-10 நூற்றாண்டுக்கு பிறகுதான் ஆனைமுகன் வழிபாடு தென்னிந்தியா வந்ததாக, பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்ட கருத்து.
2. அறவழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கல்லார்-என்ற குறள் அருகக் கடவுளை குறிப்பிடுவதாக இதற்கு முன்னும் பலர் கூறியுள்ளனர்.
3. செங்கண்ணான் உலகு என்ற வரிகளும் அருகக் கடவுளையே குறிப்பதாக சொல்லப் படுகிறது.
அன்பு அய்யா கலைராஜன் அவர்களுக்கு,
உங்கள் கருத்துக்களை மறுக்க வேண்டும் என்றிதை எழுதவில்லை.
திருவள்ளுவர் சித்தர் மரபில் வந்தவர்.சித்தர்கள் உருவ அருவ இரண்டு வழிபாடுகளையும் சொல்வார்கள்.இருப்பினும் உருவ வழிபாட்டில் சொல்லப்பட்ட தெய்வ உருவங்கள் எல்லாம் அருவ வழிபாட்டின் போது நமது உள்ளே நடைபெறும் மாற்றங்களை குறிப்பதற்காக சொல்வார்கள்.
செய்யுள் இயற்றும்போது முதலில் காப்பு செய்யுள் இயற்றுவது மரபு.அதில் முதலாவதாக தும்பிக்கையானை முதலாவதாக வைத்தே இயற்றுவது நெடுங்காலமாக நடைமுறையில் உள்ளது.அந்த அடிப்படையில் நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கலாம்.
ஆனால் திருவள்ளுவரின் குறள் உருவ நிலை கடந்து அருவ நிலையை பற்றியும், சித்தர்களுக்கே சிறப்பான சாகா கல்வி பற்றியும் போதிப்பதனால் அவர் ஆதி பகவன் என்று விநாயகரை சொல்லி இருக்க வாய்ப்பில்லை.
சரி அகர என்றால் என்ன என்று பார்த்தால்சித்தர்கள் அகரம் என்பதனை உயிர் என்று கூறுகிறார்கள்ஆக அகரம் ஆகிய இந்த உயிர்கள் தொடருவதற்குமுழு முதல் காரண கர்த்தா யார் என்றால்ஒன்றான சிவம் ( சிவன் அல்ல)இயங்கா நிலையில் இருந்து சலனத்தின் காரணமாக இயங்கு நிலை பெற்றதனால் உயிர்கள் தோன்றின.
அப்படிப் பட்ட ஆதியில் உள்ள இறைவனைதான் ஆதி பகவன் என்றும்அவரே இந்த உலகு தோன்றுவதற்கு முதலானவர் என்பதனால் முதற்றே உலகு என்றும் கூறி இருக்கிறார்.
ஆக அருவாய் உள்ள இறைவனே ஆதி பகவன் என்பது தெளிவு.
ஏன் இப்படி ஒரு விபரீத பொருள் !
பகவன் ( < பகவத் ) என்பதற்கு தெளிவான சொற்பிறப்பு சமஸ்கிருதத்தில்
உள்ளதே.
பக (Bhaga) என்பதற்கு பொருளாக:
அதிருஷ்டம், சுகம் செல்வாகு, கௌரவம், கீர்த்தி, அழகு என்பதாக 1930’ல்
வெளியான தமிழ்-சமஸ்கிருத அகராதி கூறுகிறது.
-வத் என்றால், கொண்டவன்.. என்பதை குறிக்கும் ஆன்பால் சொற்பகுதி
மேற்கண்ட குணங்களை கொண்டவன், பக-வத். பெண்பால் சொல், பக-வதீ,
இது எழுவாயாக வரும்போது (பிரதம விபக்தி) பகவன் என்று ஆகும்.
சமஸ்கிருத எழுவாய் வடிவமே பொதுவாக தமிழில் ஏற்றுகொள்ளப்படுகின்றது.
(அருகன் < அர்ஹன் < அர்ஹத் நோக்குக )
எவ்வாறாகினும்,
சூடாமணி நிகண்டும்.. பகவன் என்ற சொல்லை புத்தன், ஜினன், சிவன், விஷ்ணு,
பிரம்மாவுக்கு உரியாத கூறுகிறது. விநாயகர் வரவில்லை. :-)
இன்னொன்று,
கணபதி முதலில் தடையை உண்டு பண்ணுபவனாக இருந்து பிறகு தடைகளை அழிப்பவர்
என்ற நிலையை அடைந்தார். தடைகளை (அவர்) உருவாக்காமல் இருக்கத்தான் கணபதியை
வழிப்பட்டிருக்க வேண்டும், காலம் செல்ல செல்ல கணபதி (எல்லா) தடைகளை
நீக்குபவர் என்ற நிலையை அடைந்திருக்கலாம்.
கணபதி விக்னஹர்தாவானது பிற்காலத்திலேயே.
இதை உறுதிப்படுத்தும் வகையில், ஆதிகால பௌத்த சூத்திரங்கள், கணபதியை
தடைகளை உருவாக்கும் யக்ஷனாகத்தான் சித்தரிக்கின்றன. [ பின்னர்
போதிசத்துவரான அவலோகிதேஸ்வரர் கணபதியை அடக்கியதாக கதைகள் உண்டு. ]
V
On Jul 15, 1:54 pm, kalairajan krishnan <kalairaja...@gmail.com>
wrote:
> http://groups.google.ge/group/Thiruppuvanam
>
> kalairaja...@gamil.com
>
> அகர முதல்வன் - ஆதி பகவன் <http://groups.google.ge/group/Thiruppuvanam>
>
> *அகர முதல்வன் - ஆதி பகவன்
> *தெய்வப் புலவராம் திருவள்ளுவர் முதற்குறலில் வணங்கிய தெய்வம் எது? என்பதைக்
> *அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
> பகவன் முதற்றே உலகு*
> *மூல முதல்வன்
> *ஆதி பகவன் என்ற கடவுளை முதன்முதலாக வணங்கியே தெய்வப்புலவர் திருவள்ளுவர்
> திருக்குறளை இயற்றியுள்ளார், இதுபோல் இன்று எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பும்
> முதன்முதலாக யானை முகம் கொண்ட விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு அதன் பின்னரே
> நமது வேலைகளைத் துவக்குகிறோம்,
> ஆகையால். முதல் வணக்கத்திற்கு உரிய கடவுள் என்ற முறையில் ஆதிபகவனும்
> ஆனைமுகத்தானும் ஒருவராகின்றனர்,
>
> *வித்தகன் விநாயகன்
> *இரண்டாவதாக "அகர முதல எழுத்துக்களெல்லாம். ஆதி பகவன் முதற்றே" என்று
> திருவள்ளுவர் கூறுகின்றhர், முதன் முதல் வணங்கிய கடவுளை எழுத்துக்களுடன்
> தொடர்புபடுத்திக் குறள் இயற்றியுள்ளார், அப்படியானால். எழுத்துக்களுடன்
> தொடர்புடைய கடவுள் யார்?
> இறைவன் சிவனின் உடுக்கை (துடி)யிலிருந்து வேதங்கள் தோன்றின என்று கூறுகின்றனர்,
> இதனால் இறைவன் சிவனே அனைத்து வேதங்களுக்கும் நாயகனாகச் சைவர்களால்
> வணங்கப்படுகிறhர், வைணவர்கள் அயக்கிரீவரைக் கலைகளின் கடவுளாகக்
> குறிப்பிடுகின்றனர், அன்னை கலைவாணி (சரசுவதி). கலைகளின் நாயகியாக
> விளங்குகின்றhள், ஆனால் இக்கடவுள்கள் யாரும் எழுத்துக்களுடன் இணைத்துப்
> போற்றப்பட வில்லை,
> வேதவியாசர் கூறிட. விநாயகர் தனது தந்தத்தையே ஒடித்துப் புராணம் எழுதியதாகக்
> கூறப்படுகிறது, இதனால் எழுத்துக்களுடன் தொடர்புடைய கடவுளாக விநாயகர்
> விளங்குகின்றhர்,
> யானை முகனை ஓங்கார வடிவத்துடன் பொருத்திக் கூறுவர், ஒலி வடிவில் மட்டுமின்றி
> எழுத்து வடிவிலும் யானைத் தலையும். வலமாகச் சுழித்த துதிக்கையும் "ஓம்" என்ற
> எழுத்துக்கள் வடிவத்திற்கு பொருத்தமாக உள்ளன, பிற கடவுளருக்கு இப்பொருத்தம்
> பெரும்பாலும் இல்லை, இவ்வாறு விநாயகருக்கு உரிய ஓங்கார வடிவ காட்சிக்குப்
> பிள்ளையார் பட்டி விநாயகரின் திருஉருவமே எடுத்துக்காட்டாகும்,
>
> *ஆதியானவன்
> *மூன்றாவதாக திருவள்ளுவர். முதன் முதலில் தான் வணங்கிய கடவுளின் பெயரை "ஆதி
> பகவன்" என்று கூறிப்பிடுகின்றார், தமிழ் இலக்கணப்படி பகர ஒற்று மிகுந்து
> ஆதிப்பகவன் என்று இருக்க வேண்டும், இடையில் "ப்" இல்லாததால் ஆதிபகவன் என்பது
> வடநூல் முடிபு என்றும் கூறுகின்றனர்,
> தமிழில் இலக்கணச் செறிவுடன் குறள் இயற்றியவர் தெய்வப் புலவர் திருவள்ளுவர்,
> அவர் தனது முதற் குறளையே வடநூல் மரபினைப் பின்பற்றி எழுதியிருக்க மாட்டார்
> என்பது திண்ணம், அதனால் ஆதி என்ற சொல்லையும் பகவன் என்ற சொல்லையும்
> திருவள்ளுவர் வேறுபிற குறள்களில் எப்பொருளில் கையாண்டுள்ளார் எனப் பார்ப்போம்,
>
> "ஆதி" என்றால் என்ன பொருள் என்று பார்ப்போம்,
>
> *அந்தணர் நூற்கு மறத்திற்கும் ஆதியாய்
> நின்றது மன்னவன் கோல் (543)
> *
>
> என்ற குறளில் "ஆதி" என்ற சொல்லுக்கு. படைத்தலுக்குக் காரணமாயும். படைத்ததைக்
> காத்தலும். படைப்பில் குறைகள் ஏற்பட்டால் அதனை நிவர்த்தி செய்தலும் என்று
> பொருளாகிறது, ஆதி என்ற சொல்லுக்கு இணையாக ஆங்கிலத்தில் *Authority * என்ற சொல்
> உள்ளது. "எழுத்தெல்லாம் ஆதி பகவன்" என்றால் எழுத்துக்கள் தோன்றுவதற்கு
> ஆதாரமானவனாகவும். எழுத்துக்களைக் காப்பவனாகவும். எழுத்துக்களில் குற்றம் குறை
> ஏற்படாமல் அருள்பவனாகவும் பகவன் என்ற கடவுள் உள்ளார் என்று பொருள், இவ்வாறான
> பண்புகளைக் கொண்ட கடவுளுக்குப் பகவன் என்ற பெயர் ஏன் வந்தது என்று காண்போம்,
>
> *பகுக்கப்பட்டவனே பகவன்
> **பகச் சொல்லிக் கேளிர் பிரிப்பர் (187) *என்ற குறளிலும்.
>
> *எள் பக அளவு சிறுமை (889)* என்ற குறளிலும்
>
> *பக* என்ற சொல் உள்ளது, பக என்றால் பகுத்தல். பிரித்தல். பிளவுபடுத்துதல்.
> துண்டாக்குதல் என்பன பொருளாகும், "*அன்*" என்ற ஆண்பால் பெயர் விகுதி உள்ளது,
> இதனால் பகவன் என்றால் பகுக்கப்பட்ட ஆண் கடவுள் என்று பொருள்,
> அப்படியானால் இன்று நாம் வணங்கும் கடவுள்களில் பகுக்கப்பட்ட. பிரிக்கப்பட்ட.
> பிளவுபடுத்தப்பட்ட. துண்டாடப்பட்ட கடவுள் யார்? என்று பார்ப்போம்,
> நவக்கிரகங்களில் ராகுவும் கேதுவும் தலைதுண்டிக்கப்பட்ட அம்சத்தைக்
> கொண்டவர்களாக உள்ளனர், அசுரனின் தலையையும் பாம்பின் உடலையும் கொண்டது
> ராகுவாகும். பாம்பின் தலையையும் அசுரனின் உடலையும் கொண்டது கேதுவாகும், ஆனால்
> ராகுவும் கேதுவும் இரண்டு கிரகங்களாக உள்ளனர், இறைவன் சிவன் தனது உடலின்
> சரிபாதியைத் தேவிக்கு வழங்கியுள்ளார், ஆனால் அவரது உடல் பிளவுபடுத்தப்படவில்லை,
> விநாயகரின் தலை துண்டிக்கப்பட்டது, பின்னர் யானையின் தலை பொருத்தப்பட்டது,
> இதனால். விநாயகரே தலைபகுக்கப்பட்ட உடலையுடைய கடவுளாக உள்ளார், அவரது கதையைப்
> படிப்போம்,
> அன்னை பார்வதிதேவி தனது உடம்பின் அழுக்கிலிருந்து விநாயகப்பெருமானை
> உருவாக்கினார், சிவபெருமான் விநாயகாரின் தலையைத் துண்டித்துவிட்டார், பின்னர்
> யானையின் தலை பொருத்தப்பட்டு விநாயகர் உயிர்ப்பிக்கப்பட்டார், இதனால்.
> விநாயகாரின் உடலானது அன்னை பார்வதிதேவியால் வழங்கப்பட்டது, அவரது தலையானது
> சிவபெருமானால் வழங்கப்பட்டது, இவ்வாறு பார்வதியும் பரமேசுவரனுமாக. தாயும்
> தந்தையுமாக. மூலமுதல்வனாக. வேதம் எழுதிய நாயகனாக விநாயகப் பெருமான்
> விளங்குகின்றார்,
>
> *"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்ற குறளுக்கு அகர முதலான
> எழுத்துக்களுக்களின் தோற்றத்திற்கு மூல ஆதாரமானவனும். எழுத்துக்களில் உள்ள
> குற்றம் குறைகளை நீக்குபவனும். பகுக்கப்பட்ட உடலையுடையவனுமாகிய கடவுளே
> இவ்வுலகத்திற்கும் உலக மக்களுக்கும் முதன்மையானவன் ஆவான் - என்பது பொருளாகும்,*
>
> ஆனால் பிள்ளையார் வழிபாடு வாதாபி கொண்டானுக்கு முன்னாள் தமிழ்நாட்டில் இல்லை
> என்று கூறப்படுகிறதே! அதற்கான விளக்கத்தைக் காண்போம்,
>
> *பிடித்து வைத்தால் பிள்ளையார்
> *களிமண்ணையோ அல்லது மாட்டுச் சாணத்தையோ பிடித்துவைத்து அதில் அருகம்புள்ளைச்
> சொருகி விநாயகரைக் கும்பிடும் வழக்கமும். பிள்ளையார் சுழிபோட்டு
> எழுதத்துவங்கும் வழக்கமும் தொன்று தொட்டுத் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது,
> மேலும் வெள்ளெருக்கம் பூக் கொண்டு கடவுளை வழிபடும் வழக்கமும் பழந்
> தமிழரிடத்தில் இருந்துள்ளது,
>
> இரண்டு கைகளையுடைய யானைமுகனின் உருவ வழிபாடு முற்காலப் பாண்டியர் காலத்தில்.
> பிள்ளையார்பட்டியில்;. கி,பி, 4ம் நூற்றாண்டில். கல்லில் வடிக்கப்பட்டுள்ளது,
> இதனால் கி,பி,6ம் நூற்றாண்டில் வாதாபியிலிருந்து கொண்டுவரப்பட்ட நான்கு
> கைகளையுடைய விநாயகரின் காலத்திற்கு முன்பே தமிழ் நாட்டில் விநாயகர் உருவ
> வழிபாடு இருந்துள்ளது தெளிவாகிறது, மேலும் போரின் போது. எதிரி வழிபடும்
> தெய்வத்தையோ அல்லது மரத்தையோ கொண்டு வருதல் உண்டு, தமிழர்கள். இவ்வாறு செய்வதை
> வெற்றியின் அடையாளமாகத் கருதினர், இதனால் பழந்தமிழரிடம் விநாயகர் வழிபாடு இல்லை
> என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்பதே உண்மை,
>
> *ஆனை முகத்தனே ஆதிபகவன்
> * இவ்வாறான காரணங்களால் வள்ளுவர் காலத்தில் ஆதிபகவன் என்று நம்முன்னோரால்
’பகம்’ என்பது அறுநிதித் தொகுதி.
பகவாந், பகவதி, பகஹா, பகதத்தன் என்னும் வடசொற்கள் இதன் அடிப்படையில்
தோன்றியவை. பகவன் தமிழ்ச் சொல்லானால் ’ஆதிப்பகவன்’ என்று ஒற்று
மிகுந்திருக்கும்.
பகலவன், பகவன் என்ன தொடர்பு ?
‘வை’ இருமொழிகளிலும் உள்ளது; வடமொழியில் ‘வை’ வெறும் அசைச்சொல்.
‘சிதார்’ (மண்தின் சிதார்) பதிற்றுப்பத்தில் இடம்பெறும் சொல். சிதார்
என்னும் இசைக்கருவியும் உள்ளது. பிற மொழிகளில் இச்சொல்லைக் காணலாம்.
பதிற்றுப்பத்தை ஆதாரம் காட்ட இயலுமா ?
காயம் பட்டது என்கிறோம்; ‘காயம் கர்னா, காயம் ஹோனா’ என்று ஹிந்தியிலும்
சொல்வர், வேறு பொருளில். ’மால்’ எனும் சொல் குறித்து ஓர் இழையில்
ஆராய்ந்தோம்.
மொழிகளிடையே காணப்படும் ஒலி ஒற்றுமை மட்டுமே காரணம். எல்லா ஒலிகளும்
(வைகரி சப்தம்) கண்டத்திலிருந்தே கிளம்புகின்றன.
‘எல்லையிலாதன *எண்குணம்* ஆனவை எய்திடும் ஆகாதே
இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்தருளப்பெறிலே’ எனும் திருவாசக வரியில்
'எண்குணம்' காணப்படுகிறது
தேவ்
> ...
>
> read more »
இரா.பா
சென்னை
கொள்கிறார்கள்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
//*பக* என்ற சொல் உள்ளது, பக என்றால் பகுத்தல். பிரித்தல்.
பிளவுபடுத்துதல்.
துண்டாக்குதல் என்பன பொருளாகும், "*அன்*" என்ற ஆண்பால் பெயர் விகுதி
உள்ளது,
இதனால் பகவன் என்றால் பகுக்கப்பட்ட ஆண் கடவுள் என்று பொருள்,
அப்படியானால் இன்று நாம் வணங்கும் கடவுள்களில் பகுக்கப்பட்ட.
பிரிக்கப்பட்ட.
பிளவுபடுத்தப்பட்ட. துண்டாடப்பட்ட கடவுள் யார்?//
ஏன் இப்படி ஒரு விபரீத பொருள் !
பகவன் ( < பகவத் ) என்பதற்கு தெளிவான சொற்பிறப்பு சமஸ்கிருதத்தில்
உள்ளதே.
பக (Bhaga) என்பதற்கு பொருளாக:
அதிருஷ்டம், சுகம் செல்வாகு, கௌரவம், கீர்த்தி, அழகு என்பதாக 1930’ல்
வெளியான தமிழ்-சமஸ்கிருத அகராதி கூறுகிறது.
-வத் என்றால், கொண்டவன்.. என்பதை குறிக்கும் ஆன்பால் சொற்பகுதி
மேற்கண்ட குணங்களை கொண்டவன், பக-வத். பெண்பால் சொல், பக-வதீ,
இது எழுவாயாக வரும்போது (பிரதம விபக்தி) பகவன் என்று ஆகும்.
சமஸ்கிருத எழுவாய் வடிவமே பொதுவாக தமிழில் ஏற்றுகொள்ளப்படுகின்றது.
(அருகன் < அர்ஹன் < அர்ஹத் நோக்குக )
எவ்வாறாகினும்,
சூடாமணி நிகண்டும்.. பகவன் என்ற சொல்லை புத்தன், ஜினன், சிவன், விஷ்ணு,
பிரம்மாவுக்கு உரியாத கூறுகிறது. விநாயகர் வரவில்லை. :-)
இன்னொன்று,
கணபதி முதலில் தடையை உண்டு பண்ணுபவனாக இருந்து பிறகு தடைகளை அழிப்பவர்
என்ற நிலையை அடைந்தார். தடைகளை (அவர்) உருவாக்காமல் இருக்கத்தான் கணபதியை
வழிப்பட்டிருக்க வேண்டும், காலம் செல்ல செல்ல கணபதி (எல்லா) தடைகளை
நீக்குபவர் என்ற நிலையை அடைந்திருக்கலாம்.
கணபதி விக்னஹர்தாவானது பிற்காலத்திலேயே.
இதை உறுதிப்படுத்தும் வகையில், ஆதிகால பௌத்த சூத்திரங்கள், கணபதியை
தடைகளை உருவாக்கும் யக்ஷனாகத்தான் சித்தரிக்கின்றன. [ பின்னர்
போதிசத்துவரான அவலோகிதேஸ்வரர் கணபதியை அடக்கியதாக கதைகள் உண்டு.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
திரு கலைராஜன்
புதியதோர் ஆய்வு. முயற்சிக்கு பாராட்டுக்கள்.
ஆதிபகவன் என்பதில் பகவன் என்ற சொல் குறித்து நான் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். அதன் சுட்டி இதோ கீழே:
http://thiruththam.blogspot.com/2010/03/blog-post_21.html
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.
>> பக (Bhaga) என்பதற்கு பொருளாக:
அதிருஷ்டம், சுகம், செல்வாக்கு, கௌரவம், கீர்த்தி, அழகு என்பதாக 1930’ல்
வெளியான தமிழ்-சமஸ்கிருத அகராதி கூறுகிறது. <<
’பகம்’ என்பது அறுநிதித் தொகுதி.
பகவாந், பகவதி, பகஹா, பகதத்தன் என்னும் வடசொற்கள் இதன் அடிப்படையில்
தோன்றியவை. பகவன் தமிழ்ச் சொல்லானால் ’ஆதிப்பகவன்’ என்று ஒற்று
மிகுந்திருக்கும்.
பகலவன், பகவன் என்ன தொடர்பு ?
‘வை’ இருமொழிகளிலும் உள்ளது; வடமொழியில் ‘வை’ வெறும் அசைச்சொல்.
‘சிதார்’ (மண்தின் சிதார்) பதிற்றுப்பத்தில் இடம்பெறும் சொல். சிதார்
என்னும் இசைக்கருவியும் உள்ளது. பிற மொழிகளில் இச்சொல்லைக் காணலாம்.
பதிற்றுப்பத்தை ஆதாரம் காட்ட இயலுமா ?
காயம் பட்டது என்கிறோம்; ‘காயம் கர்னா, காயம் ஹோனா’ என்று ஹிந்தியிலும்
சொல்வர், வேறு பொருளில். ’மால்’ எனும் சொல் குறித்து ஓர் இழையில்
ஆராய்ந்தோம்.
மொழிகளிடையே காணப்படும் ஒலி ஒற்றுமை மட்டுமே காரணம். எல்லா ஒலிகளும்
(வைகரி சப்தம்) கண்டத்திலிருந்தே கிளம்புகின்றன.
‘எல்லையிலாதன *எண்குணம்* ஆனவை எய்திடும் ஆகாதே
இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்தருளப்பெறிலே’ எனும் திருவாசக வரியில்
'எண்குணம்' காணப்படுகிறது
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
3) நுண்மாண் நுழைபுலம் மிக்க வள்ளுவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார் என்பதற்கு தங்களிடம் இக் குறள தவிர வேறு ஆதாரங்கள் உண்டா?
பௌத்தம், ஜைனம் மற்றும் வைதீகத்துக்கு பொதுவாக ஒரு நாகராஜர் இருந்தால்
சொல்லுங்கள் ;)
V
On Jul 16, 4:14 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
>
> 2010/7/15 Vinodh Rajan <vinodh.vin...@gmail.com>
> om_brahmi.JPG
> 11KViewDownload
தமிழ்நூலாக இருந்தால் எல்லாம் தமிழ்ச்சொல்லாக இருக்க வேண்டும் என்பது
இல்லையே !
இந்திரனே சாலும் கரி என்றார்.. இந்திரன் என்பது என்ன தமிழ் சொல்லா ??
எந்த மொழி சொல்லானாலும் அதை பிய்த்து பிடுங்கு நம் இஷ்டத்துக்கு நம்
மொழியில் அர்த்தத்தை கொண்டு வருவது சாத்தியமானதே.
editorial என்பதை ஏடிட்டோரியல் என்று எழுத முடியாதா என்ன ?
புத்தன் என்பதை புதியவன் என்ற ரீதியாக பொருள் கொள்ளலாம்,
அருகன் என்பதை அருகியவன் என்ற ரீதியாக கூட பொருள் கொள்ளலாம்..
ஆனால், இவற்றை இப்படியே பொருள் கொள்ள வேண்டுமா என்றால் இல்லை.. அவற்றின்
வடமொழி பொருள்களே முதன்மையே வந்து நிற்கின்றன. தமிழ் பொருளை அதற்கு
தருவது கருத்து திணிப்பு.
நீங்கள் செய்வதும் அது தான்..
//நாம் முதற் திருக்குறளை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்,
திருவள்ளுவர் பகவனை எழுத்துக்களுக்கு ஆதியானவன் (Authority of Letters)
என்று
குறிப்பிடுகிறார், //
கணபதி வழிபாடு என்பது ஆதிகாலத்தில் தன்னிச்சையான யக்ஷ வழிபாடாக
இருந்திருந்து, பிறகு வைதீகமும் பௌத்தமும் தன்னுள் அவற்றை ஈர்த்தன
விநாயகர் மஹேஸ்வர புத்திரனாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும் பிற்காலத்திலேயே...
இவை அனைத்துமே வள்ளுவரின் காலத்துக்கு சில நூறாண்டுகளுக்கு
பிற்பட்டு...நிகழ்ந்தவை...
வள்ளுவரின் காலத்தில் விநாயகர் வழிபாடு பெருவழக்காக இருந்ததாக
தெரியவில்லை. (சிறு தெய்வ வழிபாடாக ஆங்காங்க இருந்திருக்கலாம்... )
திருவள்ளுவர் காலத்தில் வைதீக கணபதியின் வழிபாடு தமிழ்நாட்டில்
பெருவழக்காக இருந்ததற்கு ஏதேனும் ஆதாரம் இருந்தால் தாருங்கள்...
//முதன் முதலில் எழுத்துக்களை கண்டுபிடித்து
எழுதிக்காட்டியவர் விநாயகர், //
எகிப்தியர்களையும் அரமேயர்களையும் தான் கேட்க வேண்டும்.,. அவர்கள் கணவில்
விநாயகர் வந்தாரா என.
V
On Jul 16, 11:17 am, kalairajan krishnan <kalairaja...@gmail.com>
wrote:
> On 7/15/10, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
>
>
>
> > //*பக* என்ற சொல் உள்ளது, பக என்றால் பகுத்தல். பிரித்தல்.
> > பிளவுபடுத்துதல்.
> > துண்டாக்குதல் என்பன பொருளாகும், "*அன்*" என்ற ஆண்பால் பெயர் விகுதி
> > உள்ளது,
> > இதனால் பகவன் என்றால் பகுக்கப்பட்ட ஆண் கடவுள் என்று பொருள்,
> > அப்படியானால் இன்று நாம் வணங்கும் கடவுள்களில் பகுக்கப்பட்ட.
> > பிரிக்கப்பட்ட.
> > பிளவுபடுத்தப்பட்ட. துண்டாடப்பட்ட கடவுள் யார்?//
>
> > ஏன் இப்படி ஒரு விபரீத பொருள் !
>
> ...
>
> read more »
பகலவனைப்போல் பகவன் தமிழ்ச்சொல் என்று வைத்துக்கொள்வோம்;
பகுத்தறிவுப் பகலவன் - இங்கு மட்டும் இலக்கணப்படி “ப்” ஏன்
தேவையாகிறது ?
தேவ்
On Jul 16, 3:57 am, kalairajan krishnan <kalairaja...@gmail.com>
wrote:
> ...
>
> read more »
’ஆதி பகவன்’ - பண்புத் தொகையாகக் கொண்டாலும் ஆதிப்பகவன் என ஒற்று மிகும்
தேவ்
On Jul 15, 7:37 am, kalairajan krishnan <kalairaja...@gmail.com>
wrote:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
திரு காளை ராசன் தன் கருத்தை வலியுறுத்துவதில் கவனமாக
இருக்கிறார். அது இயல்பும்கூட. அவர் கருத்துச் சரியாகவும் இருக்கலாம். ஒரு கருத்தைப் பொது
மன்றத்தில் வைத்த பிறகு அதனைப் படிக்கிற அனைவரும் தங்கள் கருத்தைச் சொல்ல அது
மாற்றுக் கருத்தாக
இருந்தாலும் உரிமை உண்டு . அதற்குப் படைப்பாளி பதில் சொல்லக் கடமைபட்டவர். ஒவ்வொருவரும் தன் கருத்து ஏற்கப்பட வேண்டும் என நினைப்பது நியாயமான உணர்வாக இருப்பினும் சரியான கருத்து அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும் என்பது அதைவிட முக்கியமானது. அதற்குப் படைப்பாளி உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் தேவை. அப்பொழுதுதான் அறிவுப் பரவல் சரியாக நடக்கும்.
இதே கருத்தை மற்றொரு இழையிலும் அவர் தந்துள்ளார். அதற்கான காரணம் தெரியவில்லை.
அன்புடன்
ஆராதி
திரு காளை ராசன் தன் கருத்தை வலியுறுத்துவதில் கவனமாக இருக்கிறார். அது இயல்பும்கூட. அவர் கருத்துச் சரியாகவும் இருக்கலாம். ஒரு கருத்தைப் பொது மன்றத்தில் வைத்த பிறகு அதனைப் படிக்கிற அனைவரும் தங்கள் கருத்தைச் சொல்ல அது மாற்றுக் கருத்தாக இருந்தாலும் உரிமை உண்டு . அதற்குப் படைப்பாளி பதில் சொல்லக் கடமைபட்டவர்.
ஒவ்வொருவரும் தன் கருத்து ஏற்கப்பட வேண்டும் என நினைப்பது நியாயமான உணர்வாக இருப்பினும் சரியான கருத்து அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும் என்பது அதைவிட முக்கியமானது. அதற்குப் படைப்பாளி உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் தேவை. அப்பொழுதுதான் அறிவுப் பரவல் சரியாக நடக்கும்.
இதில் பகவன் பக்கம் நான் போகப் போவதில்லை. "ஆதி"யை மட்டும் எடுத்துக்
கொள்கிறேன்.
முதலிலேயே சொல்லி விடுகிறேன். இது நகைச்சுவக்காக எழுதப்படும் பதில்
இல்லை.
ஆதி என்ற சொல் முதல், பழைய என்ற பொருளில் பயன் படுத்துகிறோம். முதல் /
பழைய என்று சொல்வதிலிருந்து, இப்போதிருக்கும் காலத்திலிருந்து, இதன்
சேய்மையை (தொலைவு) நாம் உணரலாம். இதிலிருந்து "ஆதி" என்ற சொல் 'அ' என்ற
சேய்மைச் சுட்டிலிருந்து வந்ததாகக் கொள்ளலாம்.
இதையே நீட்டினால் (extrapolation), "இ" என்ற அண்மைச் சுட்டிலிருந்து
"ஈதில்" (recently) என்ற சொல்லைத் தருவிக்கலாம்.
முதல் / பழைய பகவன் என்று சொல்வதிலிருந்து, இந்த "ஆதி" பகவனைத் தவிர்த்த,
"ஆதி" பகவனுக்கு பிற்பட்ட / புதிய பகவன்கள் பலர் வழக்கில் இருந்திருக்கக்
கூடும் எனக் கொள்ளலாம்.
On 7/17/10, ananda rasa thiruma <aara...@gmail.com> wrote:திரு காளை ராசன் தன் கருத்தை வலியுறுத்துவதில் கவனமாக இருக்கிறார். அது இயல்பும்கூட. அவர் கருத்துச் சரியாகவும் இருக்கலாம். ஒரு கருத்தைப் பொது மன்றத்தில் வைத்த பிறகு அதனைப் படிக்கிற அனைவரும் தங்கள் கருத்தைச் சொல்ல அது மாற்றுக் கருத்தாக இருந்தாலும் உரிமை உண்டு . அதற்குப் படைப்பாளி பதில் சொல்லக் கடமைபட்டவர்.
இதே கருத்தை மற்றொரு இழையிலும் அவர் தந்துள்ளார். அதற்கான காரணம் தெரியவில்லை.அன்புடன்
ஆராதி
திரு.காளை ராசன் அவைகளுக்கு
ஒரு கருத்தை ஆய்வுப் பூர்வமாக விளக்கும்போது அந்த் இலக்கிய காலத்துக்கு முற்பட்ட ஆதாரங்க்ளின் அடிப்படையில் அமைந்த்துதான் ஆராய்ச்சி நெறிமுறை.
விநாயகர் தமிழகத்துக்கு வாதாபியில் இருந்து வந்ததே பல்லவ காலத்தில் என்று ஆதாரக் குறிப்புகள் உண்டு. எழுத்துக்கான கடவுள் கனபதி, யானை முகத்தான் என்று பொதுக் கருத்துக்கள் உண்டு. திருவள்ளுவர் கூறிய ஆதி பகவன் கனங்களுக்கு அதிபதியான கனபதி என்று நிறுவ நீங்கள் திருவள்ளுவருக்கு முந்தைய ஆதாரங்களைக் காட்டவேண்டும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
க.>
பிகு: சம காலத்திலும் பகவான் என்ற சொல்லை இறைவனுக்கும், இறை ஒத்த
மனிதருக்கும் பயன்படுத்துவது காணக்கிடைக்கிறது. உம். பகவான்
ஸ்ரீகிருஷ்ணன், பகவான் ரஜ்னேஷ்
2010/7/20 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
> //முதல் / பழைய பகவன் என்று சொல்வதிலிருந்து, இந்த "ஆதி" பகவனைத் தவிர்த்த,
> "ஆதி" பகவனுக்கு பிற்பட்ட / புதிய பகவன்கள் பலர் வழக்கில் இருந்திருக்கக்
> கூடும் எனக் கொள்ளலாம்.//
>
இன்னம்பூரான்
2010/7/21 N. Kannan <navan...@gmail.com>:
http://thirumozi.blogspot.com/2007/08/073.html
http://thirumozi.blogspot.com/2007/08/073.html
க.>
2010/7/21 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
ஆதி என்பதன் பொருளை நான் கேட்கவில்லை.
ஆதி என்பதற்கு நான் ஒரு பொருளைக் கூறியிருக்கிறேன். "ஆதி" என்ற
சொல்லிற்கும், 'அ' என்ற சுட்டெழுத்திற்கும் உள்ள தொடர்பை
சொல்லியிருக்கிறேன்.
தாங்கள் இதற்கு உடன்பட்டால், இது தொடர்பாக ஏதாவது சொல்லலாம்;
இல்லையெனில், மறுத்து ஏதாவது சொல்லலாம்.
இரண்டுமில்லாமல், 543 என வேறொரு குறளைக் காட்டினால் எப்படி எடுத்துக்
கொள்வது என்று தெரியவில்லை. :-(
தமிழ் இலக்கியத்தில் சிறப்புற்றோங்கி வளரும் குறள் என்ற நீதி நூலைத்
தமிழ் நாட்டில் அறியாதவர் அறியாதவரே ஆவர். இந்நூல் அறம் பொருள் இன்பம்
என்னும் விஷயங்களின் பாகுபாட்டையும் அதனால் அடையும் பயன்களையும்
தெளிவாய்க் கூறுகின்றது. ஆரியருக்கு மனுதர்ம சாஸ்திரம் சுக்கிர நீதி
முதலிய நீதி நூல்கள் எவ்வாறு முக்கியமானவைகளோ, தமிழருக்கு இந்நூலும்
அப்பேர்ப்பட்டதே. இத்தகைய சிறப்பு வாய்ந்த நூலை யியற்றியவர் யார்? அவர்
எக்காலத்தவர்? அவர் சமயம் யாது? என்பவைகளைப் பற்றிச் சுருக்கமாய்
ஆராய்வோம்.
குறளின் நூலாசிரியர் திருவள்ளுவர் என்பர். அவர் கடைச் சங்க காலத்திற்கு
முன்னே இருந்தவர் ஆவர். இக்கடைச் சங்கமோ ஒன்றாவது இரண்டாவது நூற்றாண்டில்
இருந்ததாகத் தமிழ் ஆராய்ச்சி வல்லவர்கள் தக்க நியாயங்களைக் கொண்டு
ஸ்திரப்படுத்தி யிருக்கின்றார்கள். ஆகையால் வள்ளுவர் காலமும் 1, 2
நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே என்று ஏற்படுகின்றது. ஏனெனில் சங்கப்
புலவர்களாகிய நக்கீரர், நல்லந்துவனார், கபிலர், பாணர் முதலானோர்
இத்திருக்குறளின் கருத்திக்களையும் அடிகளையும், அடிகளின் தொடர்களையும்
கையாண்டு இருக்கிறார்கள். இம்மட்டோ! சைவ சமயாசாரியர்களான அப்பர்,
ஞானசம்பந்தர், சுந்தரர் முதலானவர்களும், வைணவ சித்தாந்த தேசிகர்களாம்
நம்மாழ்வார் முதலிய ஞானாசரியர்களும் குறட்பாக்களை
யெடுத்தாண்டிருக்கிறார்கள். இனி அவர் சமயத்தைப் பற்றி ஆராய்வோம்.
இவர் இன்ன சமயத்தினர் என்று துணிந்து கூறுவதற்குத் தகுந்த சான்று இல்லை
என்பார் ஒரு சாரார்; மற்றொரு சாரார் இவரைச் சைவர் என்பர். அவர்கள்
அப்படிக் கூறுவதற்குக் ‘கடவுள் வாழ்த்தில்’ குறளாசிரியர் “எண்குணத்தான்”
என்ற சொற்றொடரை உபயோகப்படுத்தியிருப்பதாலும், அச்சொற்றோடர்
சிவபிரானுக்குத்தான் பொருந்தியுள்ளது என்றும் அவர்கள் கொண்ட கொள்கைக்கு
காரணங் காட்டுவர். மற்றும் அவர்கள் கூறும் மற்றொரு காரணம் ஒளவை அவர்
தமக்கையாம்; அவள் சிவபக்தனாம். ஆகையால் இவரும் சிவபக்தராய்த்தான்
இருந்திருப்பாராம். ஏதொ ஒரு தனிப்பாடலில் “பூவில் அயனும் புரந்தானும்”
என்று கூறிச் சிவனைப் புகழ்ந்திருக்கிறாராம். அதுவும் அவரது சைவ
சமயத்தைத் தெளிவாய்க் கூறுகின்றது என்றும் உரைப்பர். இத்துடன் நில்லாமல்
“நாயனார்” என்ற பட்டம் சிவபக்தருக்குத்தான் உரியது என்றும் இவரும்
அப்பட்டத்தை வகித்ததால் இவர் சைவ சமயியாய்த்தான்
இருக்கவேண்டுமென்றுங்கூறி வாதிடுவர்.
இம்மூன்று கொள்கைகளும் நியாய வாயிலாக யோசிக்குமிடத்து ஒன்றும் நிலைக்கு
நில்லா. “எண் குணத்தான்” என்ற சொற்றொடர் சிவனை மாத்திரமா குறிக்கின்றது?
விஷ்ணுவையும் “எண் குணத்தான்” என்று திருச்சந்த விருத்தம் முதலிய வைணவ
நூல்கள் கதறுகின்றனவே! அருகரையும் “எண் குணத்தான்” என்று அருகநூல்
சாதிக்கின்றது. ஆனால் கடவுள் வாழ்த்தில் “எண் குணத்தான்” என்றும்,
“மலர்மிசை யேகினான்’ என்றும், “பொறிவாயிலைந் தவித்தான்” என்றும், “பகவன்
வேண்டுதல் வேண்டாமை இலான்” என்றும், “அறவாழி அந்தணன்” என்றும் வரும்
சொல்லையும் சொற்றொடர்களையும் உபயோகப்படுத்துவதாலும் அவைகள் அருகருக்கே
உரியவை யென்று நிகண்டு முதலிய நூல்கள் சான்று கூறுவதாலும் “எண்
குணத்தான்” என்று குறளில் வழங்கியிருப்பது அருகரைக் குறித்தே அல்லாமல்
சிவனைக் குறித்து அல்ல. “ஒளவையார் சைவர், அவர் தம்பியாகிய இவரும் சைவர்”
என்பதும், “பூவில் அயனும்” என்ற ஒருதனிப்பாட்டையும் இதற்கு அனுகுணமான ஓர்
ஆதாரமற்ற கதையையும் மேற்கோளாகக் காட்டுவதும் ஒப்புக்கொள்ளத்தக்கன அல்ல.
ஏனெனில்
குறளில் எங்கேயாவது சிவனையாவது சைவ வழிப்பாட்டைப் பற்றியாவது
கூறியிருக்கின்றாரா? மருந்துக்கும் காணோமே!
இதுபோக வைணவர் இவரை வைணவர் என்று கூறுவர். இதற்குக் காரணம், இவர் குறளில்
“தாமரைக் கண்ணான் உலகு” என்று உபயோகப்படுத்தியிருப்பதால் அத்தொடர்
விஷ்ணுவைத்தான் குறிக்குமே யல்லாது, மற்றத்தெய்வத்தைக் குறிக்காது என்ற
பிடிவாதக் கொள்கைதான். “தாமரைக் கண்ணான்” என்ற சொற்றொடருக்கு இந்திரன்
என்ற பொருளிலும், கம்பர் பலதடவையில் உபயோகப்படுத்தி யிருக்கிறார்.
ஆகையால் வைணவர் கூற்று உபயோகமற்ற கூற்றாய் முடிகிறது.
பெளத்தர் என்றாலோ, பெளத்தர்கள் ஜீவனில்லை மறுபிறப்பில்லை என்கிறார்கள்.
கொல்லாமை, புலால் மறுத்தலை இவர்கள் வெறுக்கவில்லை. ஜீவன் உண்டு என்றும்,
மறுபிறப்பு உண்டென்றும், கொல்லாமையையும் புலால் மறுத்தலையும் குறளில்
வற்புறுத்தி யிருக்கிறார். ஆகையால் வள்ளுவர் பெளத்தர் ஆகார்.
ஆனால், இவர் சமணர்தான் என்று சொல்வதற்குத்தக்க நியாயங்கள் உள்ளன. கடவுள்
வாழ்த்தில் பகவன், அறிவன், மலர்மிசை ஏகினான், இறைவன், ஐந்தவித்தான்,
அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்று அருகக் கடவுளுக்குப் பெயராக வழங்கும்
சொற்களை உபயோகப்படுத்தியிருப்பதும், அருகசரணம், சித்தசரணம், சாது சரணம்,
தர்மசரண்ம் என்ற ஜைன சமயத் துதியாகிய நான்கிற்கும் பதிலாகக் கடவுள்
வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்திக் கூறுதலாலும்
இவர் சமணரே என்க. இவர் அருகனைக் குறிக்கும் சொற்களையே சிலப்பதிகாரம்,
சிந்தாமணி, நிகண்டு முதலியவற்றிலும் கூறிருப்பதும் காண்க:- “அறிவன்,
அறவோன், அறிவரம்பிகந்தோன்”, “செறிவன், சினேந்திரன், சித்தன், பகவன்”,
“இறைவன்”, எண் குணத்தான்” ஐவரை வென்றோன்”, மலர்மிசை நடந்த
மலரடி”—சிலப்பதிகாரம்.” பகை நண் போடிப்பான்” –சிந்தாமணி “அறவாழி அந்தணன்”
–திவாகரம், ஆயினும் சிலர் “உலகியற்றியான்” அந்தணர் நூல் “மறப்பினும்
ஒத்துக் கொள்ளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்” “அறு
தொழிலோர் நூன் மறப்பர்” என்று திருக்குறளில் வழங்கியிருப்பதைக் கொண்டு
சமணக் கொள்கையை மறுக்க எழுவோர் பரிமேலழகர் வைதீக மதக் கொள்கைகளையும்
கதைகளையும் யுக்திக்குத்தகுந்தவாறு புகட்டி வலிந்து பொருள் கொள்வதை
ஆராய்ச்சி செய்யாதவரேயாவர். ஆனால், சமணக் கொள்கைகளையும் கதைகளையும்
ஆதாரமாகக் கொண்டு சொல் கடந்த வழியே பொருள் நோக்கினால் பரிமேலழகரே வலிந்து
பொருள் கொண்டாரென்று தெரியும்.
தொல்காப்பியச் சூத்திரத்தில் “வினையினீங்கிய” என்ற செய்யுளுக்கு
பொருத்தமான பொருள் நோக்கில் வினையில் கொஞ்ச காலம் சம்பந்தப்பட்டிருந்து
பின்பு நீங்கிய அறிவையுடையவன் இறைவனாகும் என்று புலப்படுகிறது. இவ்
வடைமொழிகள் அருகருக்கு பெருந்தி இருப்பதுபோல மற்ற தெய்வங்களுக்குப்
பொருந்த வில்லை. ஜைனர் கொள்கைப் பிரகாரம் அருகர் வினையிலே சிலகாலம்
கிடந்து பிறகு அதனின்று நீங்கி அறிவையடைந்து விளங்கினார் என்றும் மற்ற
தெய்வங்களுக்கு வினையே இல்லையென்றும் புராணங்கள் கூறுகின்றன். ஆகையால்
தொல்காப்பியர் மதமும் ஜைனம் என்றே தெளிவாகின்றது.
-------------------------------------------
-------------------------------------------
2010/7/21 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.
அடி அளந்தான் யார்?
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
அவியுணவை உண்ணுபவர்கள் யார்?
--
செல்வன்
www.holyox.blogspot.com
"The United States did not invent slavery. It invented freedom.Someone name me another country on earth that fought a civil war to make men equal"- Rush Limbaugh
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அன்புடையீர்,
ஒரு நூலின் கருத்தை ஆய்வு செய்யும்போது அந்நூலையே அஹாரம் காட்டுவது Internal criticism எனப்படும். ஆதி என்பதும் பகவன் என்பதும் எங்கெங்கு அந்நூலில் பயன்படுத்தப் பட்டது என்பதை ஆய்வது ஒரு வகை ஆய்வு. அவ்வாறு செய்து எதேனும் ஆதாரங்கல் திரட்டியுள்ளீர்களா?
அகர முதல்வன் - ஆதி பகவன்
தெய்வப் புலவராம் திருவள்ளுவர் முதற்குறலில் வணங்கிய தெய்வம் எது? என்பதைக் கண்டறிவதே இக் கட்டுரையின் நோக்கம்,
இக்கட்டுரை தர்க்கரீதியாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது, இதில் மறுப்பதற்கு ஏதும் இல்லை! இக்கட்டுரை தொடர்பான அனைத்து ஐயப்பாடுகளுக்கும் என்னிடம் விடைகள் உள்ளன. இக்கட்டுரையின் கருத்தை ஏற்போரும் எதிர்ப்போரும் திருக்குறள்களையே மேற்கோள்களாகக் கொண்டால் நன்று,
ஆதி. பகவன் என்ற சொற்களைச் சிலர் வடசொற்கள் என்று கூறுகின்றனர், இச் சொற்கள் சிறந்த தமிழ்ச் சொற்கள் என்று இக்கட்டுரையிலே விளக்கப்பெற்ள்ளது,
உ
பகவன் முதற்றே உலகு
திருச்சிற்றம்பலம்
அருள்மிகு புலிக்கரை ஐயனார் துணை
ஆனைமுகனே(னோ?) ஆதிபகவன்
நாள் 18-09-2005 (ஆய்வுக் கட்டுரையைப் பல்கலைக்கழகக் கருத்தரங்கில் வாசித்த நாள்) இணையத்தில் வெளியிடும் நாள் 15-07-2010,
அகில உலகிலும் வாழும் மனிதர் அனைவரும் பிறப்பால் ஒன்றே ஆவர், ஆயினும் மனிதர்கள். தாம் பிறந்த நாட்டின் பெயராலும். பேசும் மொழியின் பெயராலும். வழிபடும் கடவுளின் பெயராலும் தமக்குள் பேதம் கண்டுள்ளனர், இவற்றினால் மாறுபட்ட சமூகங்களாக வாழ்கின்றனர், அவற்றுள் மிகவும் தொன்மை மிக்க சமூகத்தினராக இந்தியாவில் இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர்,
உலகில் வாழும் மற்றபிற சமூகத்தினர்(மதத்தினர்) இறைவனின் தூதுவர்களையோ அல்லது இவ்வுலகில் தோன்றி மறைந்த மகான்களின் வடிவங்களையோ வணங்கி வருகின்றனர், ஆனால் தொன்மை மிகுந்த இந்தியச் சமூகத்தார்கள்(இந்துக்கள்) மட்டும் கடவுள்களின் திருவுருவங்களை நேரடியாக வணங்கி வழிபடுகின்றனர்,
தெ(தொ)ன் தமிழர்
உலகில் லெமூரியாக் கண்டம் அழிவதற்கு முன்னரே இவர்கள் அங்கு சமூக வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றனர் என்பது அறிவியல் உண்மை, இன்று. இந்தியச் சமுதாயத்தினருள் மிகத் தொல்பழம் சமுதாயமாக தமிழ்ச் சமுதாயம் விளங்குகிறது, தமிழ் மொழியின் மிகத் தொன்மையான நூல்களாகத் தொல்காப்பியமும். திருக்குறளும் மதிக்கப்படுகின்றன, தொல்காப்பியம் இலக்கண நூலாகக் கருதப்படுகின்றது, திருக்குறள் மட்டுமே அனைவராலும் படிக்கப்படுகின்றது,
கற்றதனாலாய பயன்
மனிதனுக்குத் தேவையான அறம். பொருள். காமம் உள்ளிட்ட எல்லாவற்றையும் உள்ளடக்கியது திருக்குறள், இந்நூலை இயற்றிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் வணங்கிய கடவுள் யார்?
இதைக் கண்டறிந்து. நாமும் அக்கடவுளை வணங்கி வழிபடவேண்டுமல்லவா?
அப்பொழுதுதானே திருக்குறளைக் கற்றதனாலாய பயனைப் பெற முடியும்?
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்பது திருக்குறளின் முதற்குறள், இதில் "ஆதிபகவன்" என்று திருவள்ளுவரால் வணங்கப்பட்ட கடவுள் யார்?
ஆதி பகவன் யார் என்று யாராலும் அறுதியிட்டுக் கூற இயலவில்லை! ஒவ்வொரு அறிஞரும் ஒருவாறாகக் கூறுகின்றனர்,
சிலர். திருக்குறள் என்பது உலகப் பொதுமறை நூலாகும். அவரவர் சமயத்தின் மூலக்கடவுளையே ஆதிபகவன் என்று வள்ளுவர் பொதுவாகக் குறிப்பிட்டுள்ளார் என்றும் கூறுகின்றனர்,
ஆதி என்பது தாயாகும். பகவன் என்பது தந்தையாகும், ஆதிபகவன் என்பது தாயையும் தந்தையையும் வணங்கி எழுதப்பட்டது என்றும் கூறுகின்றனர்,
பகவன். பகலன். பகலவன். என்ற சொற்கள் எல்லாம் கதிரவனைக் குறிப்பன, இது உலகம் தோன்றுவதற்குக் காரணமான இயற்கையையும். சூரியனையும் வணங்கி எழுதப்பட்ட குறள் என்றும் கூறுகின்றனர்,
ஆதி பகவன் என்பர் அனைத்துக் கடவுளருக்கும் தலைமையான கடவுளின் வழிபாடாகும். அதனால் இது சிவ வழிபாடு என்றும் கூறியுள்ளனர்,
திருக்குறளின் மற்றபிற குறள்களில் உலகுஅளந்தான். திருமகள் போன்ற தெய்வங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி ஆதிபகவன் என்பது ஆதிநாராயணனைக் குறிக்கும் என்றும் கூறியுள்ளனர்,
சிலர் முதற் குறள் உட்பட்ட பலகுறள்களில் வடமொழிச் சொல்லும் பொருளும் உள்ளன எனக் கூறுகின்றனர், இதனால் இக்குறள்கள் திருவள்ளுவரால் இயற்றப்படவில்லை என்றும். பின்னாளில் சேர்க்கப்பட்டன என்றும் கூறுகின்றனர்,
திருவள்ளுவர் வாழ்த்திய கடவுளும். வணங்கிய தெய்வங்களும். வசித்த இடமும். வாழ்ந்த காலமும் அறுதியிட்டுக் கூறமுடியாதபடி மிகவும் தொன்மையாக உள்ளன,
திருக்குறளில் உள்ள ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால் ஆனவை, மேலும் அவற்றில் உள்ள ஒவ்வொரு எழுத்தும். சொல்லும் பொருட் செறிவு மிக்கனவாக உள்ளன, இதனால் படிப்போர் ஒவ்வொருவருக்கும் அவர்கள் நோக்கும் எண்ணத்திற்கு ஏற்றாற்போல் புதிய புதிய கருத்துக்களைத் திருக்குறள் வழங்கி வருகின்றது, இதனால் திருக்குறளுக்கு இன்றும் புதிய உரைவளங்கள் தோன்றிய வண்ணம் உள்ளன,
இருப்பினும் இன்றைய நாளில் மக்களால் வணங்கப்படும் கடவுள்களில் ஏதேனும் ஒரு கடவுள் முதற் குறளுக்குப் பொருத்தமானவராய் இருக்கின்றாரா? என்று காண்போம்,
திருக்குறளோ யானை போன்றது! அதனைக் கற்கும் நாமோ மெய்யறிவுக் குருடர்கள் ஆவோம்! யானை தடவிய குருடர் கதையாக முதற்குறளின் ஒவ்வொரு எழுத்தையும். எழுத்துக்களாலான சொல்லையும். சொற்களாலான பொருளையும் காண்போம், அவ்வாறு கண்டால் நமது அறிவிற்கு ஆனைமுகத்தானே ஆதிபகவனாகத் தெரிகின்றார்,
மூல முதல்வன்
ஆதி பகவன் என்ற கடவுளை முதன்முதலாக வணங்கியே தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியுள்ளார், இதுபோல் இன்று எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பும் முதன்முதலாக யானை முகம் கொண்ட விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு அதன் பின்னரே நமது வேலைகளைத் துவக்குகிறோம்,
ஆகையால். முதல் வணக்கத்திற்கு உரிய கடவுள் என்ற முறையில் ஆதிபகவனும் ஆனைமுகத்தானும் ஒருவராகின்றனர்,
வித்தகன் விநாயகன்
இரண்டாவதாக "அகர முதல எழுத்துக்களெல்லாம். ஆதி பகவன் முதற்றே" என்று திருவள்ளுவர் கூறுகின்றhர், முதன் முதல் வணங்கிய கடவுளை எழுத்துக்களுடன் தொடர்புபடுத்திக் குறள் இயற்றியுள்ளார், அப்படியானால். எழுத்துக்களுடன் தொடர்புடைய கடவுள் யார்?
இறைவன் சிவனின் உடுக்கை (துடி)யிலிருந்து வேதங்கள் தோன்றின என்று கூறுகின்றனர், இதனால் இறைவன் சிவனே அனைத்து வேதங்களுக்கும் நாயகனாகச் சைவர்களால் வணங்கப்படுகிறhர், வைணவர்கள் அயக்கிரீவரைக் கலைகளின் கடவுளாகக் குறிப்பிடுகின்றனர், அன்னை கலைவாணி (சரசுவதி). கலைகளின் நாயகியாக விளங்குகின்றhள், ஆனால் இக்கடவுள்கள் யாரும் எழுத்துக்களுடன் இணைத்துப் போற்றப்பட வில்லை,
வேதவியாசர் கூறிட. விநாயகர் தனது தந்தத்தையே ஒடித்துப் புராணம் எழுதியதாகக் கூறப்படுகிறது, இதனால் எழுத்துக்களுடன் தொடர்புடைய கடவுளாக விநாயகர் விளங்குகின்றhர்,
யானை முகனை ஓங்கார வடிவத்துடன் பொருத்திக் கூறுவர், ஒலி வடிவில் மட்டுமின்றி எழுத்து வடிவிலும் யானைத் தலையும். வலமாகச் சுழித்த துதிக்கையும் "ஓம்" என்ற எழுத்துக்கள் வடிவத்திற்கு பொருத்தமாக உள்ளன, பிற கடவுளருக்கு இப்பொருத்தம் பெரும்பாலும் இல்லை, இவ்வாறு விநாயகருக்கு உரிய ஓங்கார வடிவ காட்சிக்குப் பிள்ளையார் பட்டி விநாயகரின் திருஉருவமே எடுத்துக்காட்டாகும்,
ஆதியானவன்
மூன்றாவதாக திருவள்ளுவர். முதன் முதலில் தான் வணங்கிய கடவுளின் பெயரை "ஆதி பகவன்" என்று கூறிப்பிடுகின்றார், தமிழ் இலக்கணப்படி பகர ஒற்று மிகுந்து ஆதிப்பகவன் என்று இருக்க வேண்டும், இடையில் "ப்" இல்லாததால் ஆதிபகவன் என்பது வடநூல் முடிபு என்றும் கூறுகின்றனர்,
தமிழில் இலக்கணச் செறிவுடன் குறள் இயற்றியவர் தெய்வப் புலவர் திருவள்ளுவர், அவர் தனது முதற் குறளையே வடநூல் மரபினைப் பின்பற்றி எழுதியிருக்க மாட்டார் என்பது திண்ணம், அதனால் ஆதி என்ற சொல்லையும் பகவன் என்ற சொல்லையும் திருவள்ளுவர் வேறுபிற குறள்களில் எப்பொருளில் கையாண்டுள்ளார் எனப் பார்ப்போம்,
"ஆதி" என்றால் என்ன பொருள் என்று பார்ப்போம்,
அந்தணர் நூற்கு மறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் (543)
என்ற குறளில் "ஆதி" என்ற சொல்லுக்கு. படைத்தலுக்குக் காரணமாயும். படைத்ததைக் காத்தலும். படைப்பில் குறைகள் ஏற்பட்டால் அதனை நிவர்த்தி செய்தலும் என்று பொருளாகிறது, ஆதி என்ற சொல்லுக்கு இணையாக ஆங்கிலத்தில் Authority என்ற சொல் உள்ளது. "எழுத்தெல்லாம் ஆதி பகவன்" என்றால் எழுத்துக்கள் தோன்றுவதற்கு ஆதாரமானவனாகவும். எழுத்துக்களைக் காப்பவனாகவும். எழுத்துக்களில் குற்றம் குறை ஏற்படாமல் அருள்பவனாகவும் பகவன் என்ற கடவுள் உள்ளார் என்று பொருள், இவ்வாறான பண்புகளைக் கொண்ட கடவுளுக்குப் பகவன் என்ற பெயர் ஏன் வந்தது என்று காண்போம்,
பகுக்கப்பட்டவனே பகவன்
பகச் சொல்லிக் கேளிர் பிரிப்பர் (187) என்ற குறளிலும்.
எள் பக அளவு சிறுமை (889) என்ற குறளிலும்
பக என்ற சொல் உள்ளது, பக என்றால் பகுத்தல். பிரித்தல். பிளவுபடுத்துதல். துண்டாக்குதல் என்பன பொருளாகும், "அன்" என்ற ஆண்பால் பெயர் விகுதி உள்ளது, இதனால் பகவன் என்றால் பகுக்கப்பட்ட ஆண் கடவுள் என்று பொருள்,
அப்படியானால் இன்று நாம் வணங்கும் கடவுள்களில் பகுக்கப்பட்ட. பிரிக்கப்பட்ட. பிளவுபடுத்தப்பட்ட. துண்டாடப்பட்ட கடவுள் யார்? என்று பார்ப்போம்,
நவக்கிரகங்களில் ராகுவும் கேதுவும் தலைதுண்டிக்கப்பட்ட அம்சத்தைக் கொண்டவர்களாக உள்ளனர், அசுரனின் தலையையும் பாம்பின் உடலையும் கொண்டது ராகுவாகும். பாம்பின் தலையையும் அசுரனின் உடலையும் கொண்டது கேதுவாகும், ஆனால் ராகுவும் கேதுவும் இரண்டு கிரகங்களாக உள்ளனர், இறைவன் சிவன் தனது உடலின் சரிபாதியைத் தேவிக்கு வழங்கியுள்ளார், ஆனால் அவரது உடல் பிளவுபடுத்தப்படவில்லை, விநாயகரின் தலை துண்டிக்கப்பட்டது, பின்னர் யானையின் தலை பொருத்தப்பட்டது, இதனால். விநாயகரே தலைபகுக்கப்பட்ட உடலையுடைய கடவுளாக உள்ளார், அவரது கதையைப் படிப்போம்,
அன்னை பார்வதிதேவி தனது உடம்பின் அழுக்கிலிருந்து விநாயகப்பெருமானை உருவாக்கினார், சிவபெருமான் விநாயகாரின் தலையைத் துண்டித்துவிட்டார், பின்னர் யானையின் தலை பொருத்தப்பட்டு விநாயகர் உயிர்ப்பிக்கப்பட்டார், இதனால். விநாயகாரின் உடலானது அன்னை பார்வதிதேவியால் வழங்கப்பட்டது, அவரது தலையானது சிவபெருமானால் வழங்கப்பட்டது, இவ்வாறு பார்வதியும் பரமேசுவரனுமாக. தாயும் தந்தையுமாக. மூலமுதல்வனாக. வேதம் எழுதிய நாயகனாக விநாயகப் பெருமான் விளங்குகின்றார்,
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்ற குறளுக்கு அகர முதலான எழுத்துக்களுக்களின் தோற்றத்திற்கு மூல ஆதாரமானவனும். எழுத்துக்களில் உள்ள குற்றம் குறைகளை நீக்குபவனும். பகுக்கப்பட்ட உடலையுடையவனுமாகிய கடவுளே இவ்வுலகத்திற்கும் உலக மக்களுக்கும் முதன்மையானவன் ஆவான் - என்பது பொருளாகும்,
ஆனால் பிள்ளையார் வழிபாடு வாதாபி கொண்டானுக்கு முன்னாள் தமிழ்நாட்டில் இல்லை என்று கூறப்படுகிறதே! அதற்கான விளக்கத்தைக் காண்போம்,
பிடித்து வைத்தால் பிள்ளையார்
களிமண்ணையோ அல்லது மாட்டுச் சாணத்தையோ பிடித்துவைத்து அதில் அருகம்புள்ளைச் சொருகி விநாயகரைக் கும்பிடும் வழக்கமும். பிள்ளையார் சுழிபோட்டு எழுதத்துவங்கும் வழக்கமும் தொன்று தொட்டுத் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது, மேலும் வெள்ளெருக்கம் பூக் கொண்டு கடவுளை வழிபடும் வழக்கமும் பழந் தமிழரிடத்தில் இருந்துள்ளது,
இரண்டு கைகளையுடைய யானைமுகனின் உருவ வழிபாடு முற்காலப் பாண்டியர் காலத்தில். பிள்ளையார்பட்டியில்;. கி,பி, 4ம் நூற்றாண்டில். கல்லில் வடிக்கப்பட்டுள்ளது, இதனால் கி,பி,6ம் நூற்றாண்டில் வாதாபியிலிருந்து கொண்டுவரப்பட்ட நான்கு கைகளையுடைய விநாயகரின் காலத்திற்கு முன்பே தமிழ் நாட்டில் விநாயகர் உருவ வழிபாடு இருந்துள்ளது தெளிவாகிறது, மேலும் போரின் போது. எதிரி வழிபடும் தெய்வத்தையோ அல்லது மரத்தையோ கொண்டு வருதல் உண்டு, தமிழர்கள். இவ்வாறு செய்வதை வெற்றியின் அடையாளமாகத் கருதினர், இதனால் பழந்தமிழரிடம் விநாயகர் வழிபாடு இல்லை என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்பதே உண்மை,
ஆனை முகத்தனே ஆதிபகவன்
இவ்வாறான காரணங்களால் வள்ளுவர் காலத்தில் ஆதிபகவன் என்று நம்முன்னோரால் வாழ்த்தப்பட்ட கடவுளின் பண்புநலன்கள் அனைத்தும். இன்றைய நாளில் நாம் வணங்கும் ஆனைமுகத்தானுக்கே பொருந்தியமைகின்றன, எனவே. தெய்வப்புலவராம் திருவள்ளுவர் வழி நின்று ஆனைமுகத்தானை நாமும் வாழ்த்தி நம் எழுத்துப்பணியையும். மற்றபிற பணிகளையும் செவ்வனே துவக்குவோம்; நலன்கள் அனைத்தும் பெறுவோம்.
* * * * *
முனைவர், கி, காளைராசன். B.Sc., PGDCA, M.A., M.Phil., Ph.D.,
உதவிப்பதிவாளர் (நிதிப்பிரிவு)
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி - 630 003
10 குருநாதர்கோயில் தெரு,
கோட்டையூர். – 630 106
தொலைபேசி- 94435 01912
தமிழ் நாட்டு ஜைநர்கள்
- விஜய நகரம் மகாராஜா கலாசாலையில் சரித்திர போதகாசிரியராகிய ஸ்ரீமான் எம்.எஸ்.இராமசாமி அய்யங்கார் (1920ல் எழுதியது)
திருக்குறளுடைய ஆசிரியர் எந்தமதத்தைச் சார்ந்தவர் என்பது ஒரு பெரிய கேள்வியாகவிருந்து வருகிறது. அவ்வாசிரியர் ஜைநரென்று சில பெரிய வித்வான்கள் உறுதியாகக் கூறுகின்றார்கள். அவர் ஹிந்து தெய்வம் எதையும் வணங்கா திருத்தலும் மலர்மிசை யேகினான், எண் குணத்தான் என்று கடவுளைக் குறிப்பிடுதலுமே அவர் ஜைநர் என்று கூறுவதற்குப் போதுமான ஆதாரங்களென்று கருதப் படுகின்றன. ஜைநர்கள் தங்களுடைய ஆசார்யர்களுள் ஒருவரான ஏலாச்சாரியார் என்பவர் குறளை இயற்றியதாக நம்புகிறார்கள். பழைய சிறந்த தமிழ்க்காப்பியங்களுள் ஒன்றாகிய நீலகேசி என்னும் நூலினுடைய உரையாசிரியராகிய சமயதிவாகர வாமன மாமுனிவர் தமது உரையில் திருக்குறளைக் குறிப்பிடும் பொழுதெல்லாம் அதை “எம்மோத்தாதலால்” (எமது வேதம் ஆகையினால்) என்று எழுதி யிருக்கின்றார். இந்தக் கொள்கை உண்மையானால் ஜைநர்கள் கி.பி. முதல் நூற்றாண்ட்டில் தென்னாட்டில் பிரவேசித்துத் தங்கள் மதத்தைத் தமிழ்ப் பாஷை மூலமாக வெளியிட ஆரம்பித்தனரென்று ஊகிக்கலாம்.
ஜைநர்கள் பெரிய வித்யார்த்திகளாய் இருந்தது மல்லாமல் புத்தகங்களை எழுதுபவருமாய் இருந்தனர். அவர்கள் நூற்களையும் சாஸ்திரங்களையும் ஸ்வபாவ மாகவே நேசித்து அவைகளை விருத்தி பண்ணும் முயற்சி யுடையவர்கள். தமிழில் ஜைநர்கள் செய்யப் பட்டிருக்கும் நூல்கள் தமிழர்களுடைய ஐஸ்வர்யங்களுள் மிகவும் விலையுயர்ந்தவை. இலக்கண, இலக்கிய விரோதங்களில்லாமல் சமஸ்கிருத சொற்களைத் தமிழ்ச் சொற்களோடு கலந்து உபயோகிக்கும் முறையைக் காட்டியவர்களும் அவர்களே. கன்னட நூற்களும் ஜைநர்களுக்கு ஏராளமாகக் கடன்பட்டிள்ளன. உண்மையில் அவைகளை முதலில் எழுதியவர்களும் இவர்களே. இங்கு (L.Rice) எல். ரைஸ் என்பவர் எழுதுவது கவனிக்கத் தக்கது; அதாவது: “பன்னிரண்டாவது நூற்றாண்டின் மத்தியகாலம் வரையில் கன்னட நூற்கள் முழுமையும் ஜைநர்களுடையவையே. ஜைந நூற்களே பின்னும் நீண்ட காலம் வரையுல் உயர்ச்சி பெற்று வந்தன. கன்னட பாஷையில் மிகப்பழமை யானவையும், அதிக மேன்மை தங்கியவுமான நூற்களேல்லாம் ஜைநர்களுடையனவே” என்பதே. இன்னும், ரவரண்ட் கிட்டல் என்பவரும் இம்மாதிரியே கூறுகிறார்; அதாவது: “ஜைநர்கள் தங்கள் சமூகத்திற்காக எழுதியது மல்லாமல், சாஸ்திரங்களின் மேலுள்ள இச்சையினாலும் அநேக நூற்களை எழுதி யிருக்கின்றனர். சில சமஸ்கிருத நூற்களைக் கன்னடத்தில் பொழிபெயர்த்து மிருக்கின்றனர்.” என்பதே.
உன்னதமான அஹிம்ஸா விரதம் ஹிந்துவேதாந்த ஆசாரங்களைச் சரிப்படுத்தி இருக்கிறது. ஜைந உபன்னியாசங்கள் காரணமாகப் பிராமணர் மிருகபலியை நிறுத்தி அதற்குப் பதிலாக யாகங்கள் செய்யும் பொழுது மாவினால் மிருகங்கள் செய்து உபயோகப் படுத்து கின்றனர்.
அல்லது
கட்டுரையின் ஒரு பகுதி மட்டுமா ?
V
வள்ளுவனை இந்து என்று பார்த்ததாலேதானே குறள் இத்தனை நூற்றாண்டுகள்
தாண்டியும் இன்றும் நம் கைகளில் உலவுகிறது. சமணர்கள் என்போர் இன்று இந்து
சமுதாயத்தின் ஒரு பகுதியாகத்தானே உள்ளார்கள்? சும்மா ஏதோ ஃபாஷன் போல
வள்ளுவரை சமணர் என்று சொல்வது இருப்பதாகப் படுகிறது. A kind of attention
trading!
க.>
2010/7/24 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
கொஞ்சம் அதையே திருப்பிப்போடுவோம்..
[...] இந்துக்கள் முற்றும் முழுவதும் ஜைனர்கள் மாதிரி என்றால், எதற்கு
நமக்குள் பிரிவு. வள்ளுவரை ஜைனர் என்று சொல்வதில் என்ன தவறு [..]
அதே தான்.. அதே வகையில் யோசித்தால்...
வள்ளுவர் ஜைனர் என்று ஏன் சொல்லக்கூடாது.
வைதீகத்தை ஜைனத்துள் அடக்கி விடலாம் இல்லையா !
இன்னும் சொல்லப்போனால்.. ஜைனர்களின் நம்பிக்கையில் ஆதி தர்மம் ஜைன
தர்மம்.. ஜைன தர்மம் திரிந்தே மற்ற தர்மங்கள் வைதீகம் உட்பட வந்தது
என்று ..
ஜைனரீதியாக பார்த்தால், சனாதனமான தர்மம் ஜைனம் தான்.. ஆதி அந்தம்
அற்றது...
ஆக, ஏன் அனைத்தையும் ஜைனத்துள் அடக்கக்கூடாது ? Taking a Jaina POV.
A whole point of taking a absolute Vaidika POV for everything is
unwanted here.
//வள்ளுவனை இந்து என்று பார்த்ததாலேதானே குறள் இத்தனை நூற்றாண்டுகள்
தாண்டியும் இன்றும் நம் கைகளில் உலவுகிறது.//
ஏன் கண்ணன்,
அதை பௌத்த நூலாகவோ, ஜைன நூலாகவோ இருந்தால்...
மற்ற பௌத்த/ஜைன நூல்களைப்போல் அதுவும் அழிக்கப்பட்டிருக்குமோ ?
ஆக, ஒன்று நிலைக்க வேண்டுமெனில் வைதீகத்தை அனுசரித்தே அனைத்தும் நடைபெற
வேண்டும் என்று கூற வருகிறீர்களா ?
//வள்ளுவரை சமணர் என்று சொல்வது இருப்பதாகப் படுகிறது. A kind of
attention
trading! //
...a necessary one.. IMHO
V
On Jul 24, 8:39 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> திரு.கண்ணனின் வினா நியாயமானது; மற்ற சமயங்களுடன் கூட பொருந்திப் பார்க்க
> இயலும். இன்று, திரு. பானுகுமார் ராஜேந்திரன் வந்திருந்தார். நேமிநாதருக்கும்,
> கிருஷ்ணனுக்கும் உள்ள உறவு பற்றி சுவை படக் கூறினார். ஆர்வம் மிகுந்த இளைஞர்.
> த.ம.அ. வுக்க்காக, அவர் எளிதில் செய்யக்கூடிய பணிகளை பற்றி பேசிக்கொண்டோம்.
> பார்க்கலாம்.
> இன்னம்பூரான்
>
> 2010/7/24 N. Kannan <navannak...@gmail.com>
’ததாகத: ‘ - இப்பெயர் புத்த பகவானுடையதா ? மஹா வீரருடையதா ?
தேவ்
என்னிடம் வெளிநாட்டில் ஏன் சைவ உணவு கொள்கையுடன் இருக்கிறீர்கள் என்று
கேட்கும் போதெல்லாம் நான் என்னை சமணனாக, பௌத்தனாக உணர்கிறேன்.
வேதத்திலும் இக்கருத்து வலியுறுத்தப்ப்டுகிறது என்று தேவ்
சுட்டிக்காட்டினார். இந்திய வம்சாவளியினர் ஒன்றையொன்று அண்டி வாழ்ந்து
வருபவர்கள். பௌத்தம் இன்று தாய்லாந்தால் காக்கப்படுகிறது. ஆனால் அது
தோன்றிய நாட்டில் எங்குள்ளது என்று கேட்டால், அது நம் எல்லோர்
உள்ளத்திலும் ஒளிந்து கொண்டுள்ளது என்பேன். மாற்றிருவில் நாம் சமணர்கள்,
பௌத்தர்கள். இந்து மதம் என்ற ஒன்று இல்லைதானே. நம் பாட்டைகள்
மெருகேறுகின்றன. தாவ் என்பது போல் இந்து என்பதும் ஒரு பாட்டை தான். தடம்
வலுப்பட, வலுப்பட வழிச்சுகம் அதிகம்.
அதுதான் நான் சொல்ல வருவது. வள்ளுவன் என் கண்களுக்கு வைணவனாகப் பட்டால்
அதுவும் உண்மையே. அவன் சைவனாகப் பட்டால் அதுவும் உண்மையே. அவன் ஜீனன்
என்றால் அதுவும் சரியே. அவன் மிகச்சரியாக இந்தியாவை தன் குறளில்
காட்டுகிறான் என்றுதான் பொருள். அதனால்தான் குறள் இன்று நாத்திகராலும்,
ஆத்திகராலும் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.
க.>
2010/7/25 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:
எனக்கும் இதுதான் கேள்வி. ஜைனர்கள் முற்றும் முழுதும் இந்துக்கள்
மாதிரிதான் என்றால் எதற்கு நமக்குள் பிரிவு. வள்ளுவரை இந்து என்று
சொல்வதில் என்ன தபிறகென்னதிற்கு
--
> இரண்டு பகவான்களுக்கும் பொருந்தும்.
> விளக்க சொன்னால் சொல்கிறேன்! :-)
கட்டாயமாக,
உங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்
தேவ்
தாங்கள் எடுத்துக் கொடுக்கும் பண்பு உண்மையான ஜீனனை அடையாளம் காட்டுவது
போல் உள்ளது. உண்மையில் சமணர்கள் என்றால் ஏதோ பாடப்புத்தகத்தில்
படித்ததுதான். களப்பணியாக தஞ்சை சென்ற போது அறம் கூறும் அன்னை
விஜயலக்ஷ்மியைக் கண்ணுறும் பாக்கியம் கிடைத்தது. அவர் நிறையச் சொன்னார்.
மேலும் அதுபோதுதான் நான் ஒரு ஜைனக்கோயிலுக்கு போயிருக்கிறேன். அச்சாக,
இந்துக் கோயில் போல இருப்பதால் மூகாம்பிகையை தரிசிக்க கொல்லூர் போயிருந்த
போது அங்கிருந்த பல சமணக் கோயில்களுக்குள் போய் தெய்வம் யாரென்று
தெரியாமல் வழிபட்டு வந்தது நினைவிற்கு வருகிறது. பின் சரவணபெலகுளா.
அற்புதமான அனுபவம்.
இது எல்லாம் என்னுள் காட்டுவது என்னவெனில், இந்தியச் சமயம் என்பது ஒரு
மகா நதி போல். பல்வேறு கிளை நதிகள் செழித்து, தழைத்து இருந்து பின்
ஏதோவொரு பொது நீரோட்டத்தில் கலந்துவிடுவது போல. 21ம் நூற்றாண்டில் தனி
அடையாளம் என்று சொல்வதே முரண்நகை போல் படுகிறது. ஏனெனில் சாம்பாரில்
கரைந்த காய்கறிகள் போல் எல்லோரும் கரைந்திருக்கிறோம். ஒரு வரலாற்றுப்
பார்வையில் வேண்டுமெனில் சொல்லிப் பெருமைப் படலாம். அதனால்
நேரடிப்பயனென்று ஏதுமில்லை. காலத்தை இனி எதிர் திசையில் ஓட்டமுடியாது.
மல்லிகை வைத்த பாண்டம் போல் இது ஒரு வாசம் தரலாம். அவ்வளவுதான்.
வள்ளுவனை ஒரு இந்துவாகத்தான் பார்க்கமுடிகிறது இப்போது. அவர்தான் சுத்த
ஜீனர் என்றால், இன்னும் மகிழ்ச்சியாக இந்துவாகப் பார்க்கமுடிகிறது :-))
(நான் சொல்ல வருவது புரிகிறதா? என்று தெரியவில்லை)
க.>
2010/7/25 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
l2010/7/25 N. Kannan <navan...@gmail.com>:
திரு.பானுகுமார்,
அன்புடன்
சுபா
வள்ளுவர் சமணர்தான் என்று இன்னும் முழுமையாய் நிரூபிக்கப்படவில்லை.
நம்மாழ்வார் போன்ற ஞானிகளே வள்ளுவன் கூறும் அறவாழி அந்தணன் யாரென்று
மறுவாசிப்பு செய்கிறார்கள் என்றால் வள்ளுவன் குறளில் அதற்கான சான்றுகள்
இருக்க வேண்டும். மேலும், வள்ளுவன் வைதீகத்தை எதிர்ப்பவனாகத்
தெரியவில்லை.
சரி, இதுவொரு காலக்கணக்கு! காலத்தைக் கடந்து உண்மை காணும் முயற்சி.
வள்ளுவன் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி வேண்டும் என்பார் டாக்டர் கலாம்.
இருந்தால் என்ன? நம்மால் நிச்சயம் வாசிக்கமுடியாது (அதாவது இப்போது
சொல்வது போல் பழமையானது குறள் என்றால்!). அப்போது தமிழ் வரி வடிவங்களே
மாறுபட்டு இருந்தன. மழித்தலும் நீட்டலும் வேண்டா! என்று சொன்னவருக்கு
தாடி வைத்துப் பார்ப்பது ஒரு பேஷன்தான்! இல்லையா ;-)
க.>
2010/7/26 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
என்ன இருந்தாலும் இந்த ரங்கனுக்கு சாக்ரடீஸ்ன்னு நினைப்பு. இவ்வளவு ஆகாது
(தாடியைத்தான் சொல்கிறேன் :-))
க.>
2010/7/26 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
நான் கூட குறுந்தாடி வைத்திருக்கிறேன்.(என் வலைப்பக்கம் போனால்
குழந்தையிலிருந்து கிழவன் வரை என்று பரிணாமமே காணலாம் ;-)
என்ன இருந்தாலும் இந்த ரங்கனுக்கு சாக்ரடீஸ்ன்னு நினைப்பு. இவ்வளவு ஆகாது
(தாடியைத்தான் சொல்கிறேன் :-))
க.>
2010/7/26 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
> நான் கூட தாடி வைத்திருந்தேன்,
நீர் நஞ்சுண்ட தேசிகன்! உம்மை அல்ப விஷம் என்ன செய்யும்!?
அத்திம்பேர் உறவு வேறு பலமாக இருக்கிறது (ஓம்! அருணாசலாய நமஹ!)
எல்லாம் விடம் உண்ட கண்டர்கள்!!
க.>
அடப்பாவிங்களா!! விஷம் கொடுக்கறதுன்னே முடிவு பண்ணிட்டீங்களாய்யா ---)))))
--
> கண்ண னூதிடும் வேய்ங்குழல் தானடீ
> காதிலே யமுதுள்ளத்தில் நஞ்சு
>
யப்பா! மூச்சு முட்டுது!
பாரதியை ஆழ்வார் என்று மத்திய கைலாஷ் ஆலயத்தில் வழிபடுகிறார்கள்! சும்மாவா பின்ன?
க.>
2010/7/27 N. Kannan <navan...@gmail.com>:
>
யப்பா! மூச்சு முட்டுது!
பாரதியை ஆழ்வார் என்று மத்திய கைலாஷ் ஆலயத்தில் வழிபடுகிறார்கள்! சும்மாவா பின்ன?
ஹ..ஹா!
இந்த ஆனந்த அநுபூதி தமிழ் பக்தி கலாச்சார வெளிப்பாடு என்று
எண்ணியிருந்தேன். ஆங்கிலேயர்களுக்கு இந்தியத் தாக்கம் இருக்கலாம்.
தூரக்கிழக்கில் உணர்வு பூர்வமாக, ‘அழுவன், தொழுவன்’ என்று ஆனந்தித்து
வழிபாடு செய்வது மிகக்குறைவு. பௌத்தமா? தாவா? ஷிந்தோவா? என்று
தெரியவில்லை. கிறிஸ்தவத்தில் இம்முறை இருக்கிறது. குறிப்பாக காஸ்பல்
முறையில். இஸ்லாமில் சூஃபி முறைகளில் வட்டமிட்டு ஆடிக்களிக்கும் முறை
உள்ளது (குறிப்பாக துருக்கியில் இது பிரபலம்).
பாரதி ஆழ்வார் வழி என நினைத்திருந்தேன். நீங்கள் சொல்வதைப் பார்த்தால்
அது ஆங்கிலத்தாக்கமென்று தெரிகிறது. ஆயினும் அவனிடம் சிற்சில நேரங்களில்
பிரகாசமான உள்ளொளிக் கவிதைகள் பீறிட்டு வெளிப்படுகின்றன. அவன் ஆழ்வாரா?
இல்லையா? என்பது வேறு விஷயம் :-))
க.>
தமிழ் நாட்டு ஜைநர்கள்
- விஜய நகரம் மகாராஜா கலாசாலையில் சரித்திர போதகாசிரியராகிய ஸ்ரீமான் எம்.எஸ்.இராமசாமி அய்யங்கார் (1920ல் எழுதியது)
திருக்குறளுடைய ஆசிரியர் எந்தமதத்தைச் சார்ந்தவர் என்பது ஒரு பெரிய கேள்வியாகவிருந்து வருகிறது. அவ்வாசிரியர் ஜைநரென்று சில பெரிய வித்வான்கள் உறுதியாகக் கூறுகின்றார்கள். அவர் ஹிந்து தெய்வம் எதையும் வணங்கா திருத்தலும் மலர்மிசை யேகினான், எண் குணத்தான் என்று கடவுளைக் குறிப்பிடுதலுமே அவர் ஜைநர் என்று கூறுவதற்குப் போதுமான ?ஆதாரங்களென்று கருதப் படுகின்றன.
ஜைநர்கள் தங்களுடைய ஆசார்யர்களுள் ஒருவரான ஏலாச்சாரியார் என்பவர் குறளை இயற்றியதாக நம்புகிறார்கள். பழைய சிறந்த தமிழ்க்காப்பியங்களுள் ஒன்றாகிய நீலகேசி என்னும் நூலினுடைய உரையாசிரியராகிய சமயதிவாகர வாமன மாமுனிவர் தமது உரையில் திருக்குறளைக் குறிப்பிடும் பொழுதெல்லாம் அதை “எம்மோத்தாதலால்” (எமது வேதம் ஆகையினால்) என்று எழுதி யிருக்கின்றார். இந்தக் கொள்கை உண்மையானால் ஜைநர்கள் கி.பி. முதல் நூற்றாண்ட்டில் தென்னாட்டில் பிரவேசித்துத் தங்கள் மதத்தைத் தமிழ்ப் பாஷை மூலமாக வெளியிட ஆரம்பித்தனரென்று ஊகிக்கலாம்.
ஜைநர்கள் பெரிய வித்யார்த்திகளாய் இருந்தது மல்லாமல் புத்தகங்களை எழுதுபவருமாய் இருந்தனர். அவர்கள் நூற்களையும் சாஸ்திரங்களையும் ஸ்வபாவ மாகவே நேசித்து அவைகளை விருத்தி பண்ணும் முயற்சி யுடையவர்கள். தமிழில் ஜைநர்கள் செய்யப் பட்டிருக்கும் நூல்கள் தமிழர்களுடைய ஐஸ்வர்யங்களுள் மிகவும் விலையுயர்ந்தவை. இலக்கண, இலக்கிய விரோதங்களில்லாமல் சமஸ்கிருத சொற்களைத் தமிழ்ச் சொற்களோடு கலந்து உபயோகிக்கும் முறையைக் காட்டியவர்களும் அவர்களே. கன்னட நூற்களும் ஜைநர்களுக்கு ஏராளமாகக் கடன்பட்டிள்ளன. உண்மையில் அவைகளை முதலில் எழுதியவர்களும் இவர்களே. இங்கு (L.Rice) எல். ரைஸ் என்பவர் எழுதுவது கவனிக்கத் தக்கது; அதாவது: “பன்னிரண்டாவது நூற்றாண்டின் மத்தியகாலம் வரையில் கன்னட நூற்கள் முழுமையும் ஜைநர்களுடையவையே. ஜைந நூற்களே பின்னும் நீண்ட காலம் வரையுல் உயர்ச்சி பெற்று வந்தன. கன்னட பாஷையில் மிகப்பழமை யானவையும், அதிக மேன்மை தங்கியவுமான நூற்களேல்லாம் ஜைநர்களுடையனவே” என்பதே. இன்னும், ரவரண்ட் கிட்டல் என்பவரும் இம்மாதிரியே கூறுகிறார்; அதாவது: “ஜைநர்கள் தங்கள் சமூகத்திற்காக எழுதியது மல்லாமல், சாஸ்திரங்களின் மேலுள்ள இச்சையினாலும் அநேக நூற்களை எழுதி யிருக்கின்றனர். சில சமஸ்கிருத நூற்களைக் கன்னடத்தில் பொழிபெயர்த்து மிருக்கின்றனர்.” என்பதே.
உன்னதமான அஹிம்ஸா விரதம் ஹிந்துவேதாந்த ஆசாரங்களைச் சரிப்படுத்தி இருக்கிறது. ஜைந உபன்னியாசங்கள் காரணமாகப் பிராமணர் மிருகபலியை நிறுத்தி அதற்குப் பதிலாக யாகங்கள் செய்யும் பொழுது மாவினால் மிருகங்கள் செய்து உபயோகப் படுத்து கின்றனர்.
விக்ரக ஆராதனையும் தேவாலய நிர்மாணமும் தென்னிந்தியாவில் பெரும்பாலும் ஜைநர்களினாலேயே ஏற்பட்டன. சைவகோயில்களில் சந்நியாசிகளைக் கும்பிடுவது ஜைநப் பழக்கத்தில் நின்று நேராகவே கடன் வாங்கப்பட்டிருக்கின்றது. ஜைநர்களா லேற்பட்ட மற்ற எல்லாத் திருத்தங்களை விட மேலானவை, திராவிடர்களுடைய ஞான, நீதி, அபிவிருத்திக்குக் காரணமா யிருந்தனவும், ஜைந கல்விக் கழகங்களுக்கும் பிரசாரங்களுக்கும் போட்டியாக ஏற்படுத்தப்பட்டனவுமான பாடசாலைகளேயாம்.------------
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அனேகமாக தாமரை மலரில் இருப்பது போன்ற தோற்றம் ப்ரும்மனுக்கும், சரஸ்வதிக்கும், லக்ஷ்மிக்கும்,புத்தருக்கும், மஹாவீரருக்கும்ஒரு ஒற்றுமை தெரிகிறதுமுதன் முதலில் மலர் மிசை ஏகியவன் ஸ்ரீமன் நாராயணனின் நாபிக்கமலத்திலிருந்து அருள் புரியும் ப்ரும்மன்ஆக பிரும்மனுக்கும் ஏனைய மலர்மிசை ஏகியவர்களுக்கும் சாந்தம், படைக்கும் திறன், கருணை, தம் குடையின் கீழ் அனைவரையும் கட்டிப்போடும் திறமை ஆகியவைகளில் ஒற்றுமை தெரிகிறதுமலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் :என்றால் ஸ்ரீமன் நாராயணனை துதிப்போர்க்குஎல்லா நலமும் கிட்டும் என்பதாகவும் இருக்கலாம்அன்புடன்தமிழ்த்தேனீ
Do you mean to imply, the phrase originated as a derogatory term for
the Jainas ?
V
On Jul 27, 8:24 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> ஐயா,
>
> //
> மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
>
> இக்குறளில்
> எதை மழித்தல்
> எதை நீட்டல்
> என்று குறிப்பிட வில்லை
> //
>
> இக்குறள் “கூடா ஒழுக்கம்” என்ற அதிகாரத்தில் கூறப்படுகிறது.
>
> மழித்தல்=கொட்டை அடித்தல்
> நீட்டல்=முடியை நீளமாக வைத்துக் கொள்ளல்.
>
> சமணர்கள்= முடியை பிடுங்குபவர்கள். பெரிய மயிர் பிடிங்கினு நினைப்போ? என்ற
> சொல்வழக்கு கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
>
> இரா.பா
>
> On 7/27/10, kalairajan krishnan <kalairaja...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > On 7/26/10, N. Kannan <navannak...@gmail.com> wrote:
>
> >> 2010/7/26 Banukumar Rajendran <banukuma...@gmail.com>:
> >> > ஆனால், ஆராய்ச்சி என்று வரும் போது, நம் Mental model களைத் தள்ளி
> >> > வைத்துவிட்டு, மெய்ப் பொருள் காணுதல் அறிவு என்றவாறு உண்மை காணுதல் நம்
> >> கடன்.
> >> > தேவர் சமணர் என்றால் அதில் என்ன பிணக்கு?!!
>
> >> வள்ளுவர் சமணர்தான் என்று இன்னும் முழுமையாய் நிரூபிக்கப்படவில்லை.
> >> நம்மாழ்வார் போன்ற ஞானிகளே வள்ளுவன் கூறும் அறவாழி அந்தணன் யாரென்று
> >> மறுவாசிப்பு செய்கிறார்கள் என்றால் வள்ளுவன் குறளில் அதற்கான சான்றுகள்
> >> இருக்க வேண்டும். மேலும், வள்ளுவன் வைதீகத்தை எதிர்ப்பவனாகத்
> >> தெரியவில்லை.
>
> >> சரி, இதுவொரு காலக்கணக்கு! காலத்தைக் கடந்து உண்மை காணும் முயற்சி.
>
> >> வள்ளுவன் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி வேண்டும் என்பார் டாக்டர் கலாம்.
> >> இருந்தால் என்ன? நம்மால் நிச்சயம் வாசிக்கமுடியாது (அதாவது இப்போது
> >> சொல்வது போல் பழமையானது குறள் என்றால்!). அப்போது தமிழ் வரி வடிவங்களே
> >> மாறுபட்டு இருந்தன. *மழித்தலும் நீட்டலும் வேண்டா!* என்று சொன்னவருக்கு
> >> தாடி வைத்துப் பார்ப்பது ஒரு பேஷன்தான்! இல்லையா ;-)
>
> >> க.>
>
> > மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
>
> > இக்குறளில்
> > எதை மழித்தல்
> > எதை நீட்டல்
> > என்று குறிப்பிட வில்லை
>
> > மழித்தல் என்றதும் என் நினைவிற்கு வருவதெல்லாம் சுன்னத்துக் கலியாணம் தான்
> > நீட்டல் என்றதும் என் நினைவிற்கு வருவதெல்லாம் காது வளர்த்துக் கொள்வதுதான்
>
> > அன்புடன்
> > கி. காளைராசன்
>
> > நான் நினைப்பது எல்லாம் முகம்மதியர்கள் மழித்துக் கொள்ளும் சுன்னத்துக்
>
> > --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com