நூல்கள் சில

1,174 views
Skip to first unread message

தேமொழி

unread,
Feb 25, 2021, 4:01:03 PM2/25/21
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) ›
மூலம் வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0777:
ஒளவையார் அருளிய நல்வழி
சுந்தர சண்முகனார் எழுதிய நயஉரை
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0777.html
____________________________

PM0776:
இலக்கியத்தில் வேங்கட வேலவன்
முனைவர் சுந்தர சண்முகனார்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0776.html
____________________________

PM0775:
இனியவை நாற்பது - இனிய உரை
உரையாசிரியர்: சுந்தர சண்முகனார்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0775.html
____________________________

PM0774:
நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை- மூலமும்
பேராசிரியர் சுந்தர சண்முகனார் உரையும்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0774.html
____________________________


On Sunday, February 7, 2021 at 11:44:06 PM UTC-8 தேமொழி wrote:
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) ›
மூலம் வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0773:
நாயன்மார் திறம்
திரு. வி. கலியாண சுந்தரனார்
____________________________

PM0772:
தமிழ்க்கலை (சொற்பொழிவுகள்)
தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனர்
____________________________

PM0771: 
1.  ஆலமும் அமுதமும் (கட்டுரைகள்)
திரு.வி. கலியாணசுந்தரனார்

2. தமிழ் நூல்களில் பௌத்தம் (சொற்பொழிவு )
திரு.வி. கலியாணசுந்தரனார்
____________________________

PM0770:
மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்
தொகுத்து எழுதியர்: முல்லை பிஎல். முத்தையா
____________________________


On Wednesday, January 27, 2021 at 4:01:31 PM UTC-8 தேமொழி wrote:

மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) ›
மூலம் வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0769:
சேறைக் கவிராசபிள்ளை இயற்றிய
வாட்போக்கி என்னும் "இரத்தினகிரியுலா"
ஸ்ரீநிவாசையர் ஆராய்ச்சி, குறிப்புரையுடன்
____________________________

PM0768:
768_01: சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றிய
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி

768_02: திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி
சிறுமணவூர் முனிசாமி முதலியார் எழுதியது
____________________________


On Friday, January 22, 2021 at 1:04:47 PM UTC-8 தேமொழி wrote:
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) ›
மூலம் வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0767:
767_01: மாயூரம் துலா காவேரி கும்மி
சிறுமணவூர் முனிசாமி முதலியார் எழுதியது

767_02: ஸ்ரீ மாணிக்கவாசகர் சரித்திர கும்மி.
ஆவிடையார் கோவில் ஆத்மனாதய்யர் எழுதியது
____________________________

PM0766:
766_01: சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்
நூலாசிரியர் : கவியரசு. கு. நடேசகவுண்டர்

766_02: திருப்பேரூர் இரட்டை மணி மாலை
ஆசிரியர்: திரு. சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார்;
கோவை கோ.ந. முத்துக்குமாரசாமி எழுதிய உரையுடன்
____________________________


On Wednesday, January 20, 2021 at 1:34:20 PM UTC-8 தேமொழி wrote:
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) ›
மூலம் வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0765:
காளமேகப் புலவர் பாடிய
திரு ஆனைக்கா உலா
____________________________

PM0764:
764_01: சிதம்பரக்கும்மி.
திருப்போரூர் டி. கோபால் நாயகர் 

764_02: அனுசூயைசரித்திரக் கும்மியும்,
கோரக்கும்பார்சரித்திரக் கும்மியும்
இராமநாதபுரம் பத்மாஸனி அம்மாள் இயற்றியது
____________________________

PM0763:
அரிச்சந்திரன் கும்மி
அனுமந்தராயன்
____________________________

PM0762:
திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளை
குளத்தூர்க்கோவை. (4611-5049 )
பிள்ளையவர்களின் "பிரபந்தத்திரட்டு" பகுதி 38
____________________________


On Friday, December 18, 2020 at 5:33:17 PM UTC-8 தேமொழி wrote:
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) ›
மூலம் வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்

PM0761: 
அண்ணாவின் நாடகங்கள் -2
(வேலைக்காரி & கண்ணாயிரத்தின் உலகம்!)
கா. ந. அண்ணாதுரை (அறிஞர் அண்ணா)
பொருளடக்கம்
1. வேலைக்காரி
2. கண்ணாயிரத்தின் உலகம்!
____________________________

PM0760:
அண்ணாவின் நாடகங்கள் (6)
(நன்கொடை, கண்ணீர்த்துளி,  இரக்கம் எங்கே ?,
கல்சுமந்த கசடர்,  ராகவாயணம் &புதிய மடாதிபதி)
கா. ந. அண்ணாதுரை (அறிஞர் அண்ணா)
பொருளடக்கம்
1. நன்கொடை
2. கண்ணீர்த்துளி
3. இரக்கம் எங்கே ?
4. கல்சுமந்த கசடர்
5. ராகவாயணம்
6. புதிய மடாதிபதி
____________________________

PM0759:
நிலையும் நினைப்பும் & ஏ, தாழ்ந்த தமிழகமே!
(சொற்பொழிவுகள்)
கா. ந. அண்ணாதுரை (அறிஞர் அண்ணா)
பொருளடக்கம்
1. நிலையும் நினைப்பும் .
2. ஏ, தாழ்ந்த தமிழகமே!
____________________________


On Friday, November 27, 2020 at 1:07:51 PM UTC-8 தேமொழி wrote:
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) ›
மூலம் வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0758:
கபோதிபுரத்துக் காதல் (குறும் புதினம்)
அறிஞர் அண்ணா (கா. ந. அண்ணாதுரை)  
____________________________

PM0757:
மாஜி கடவுள்கள்
அறிஞர் அண்ணா (கா. ந. அண்ணாதுரை)
____________________________

PM0756:
மேனகா ( நாவல்) - முதல் பாகம்
வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
____________________________

PM0755:
அ. மாதவையாவின் "மணிமேகலை"
(ஆங்கில வாசகர்களுக்கு தமிழ் இலக்கியங்கள்)
____________________________


On Saturday, November 21, 2020 at 12:35:40 AM UTC-8 தேமொழி wrote:

மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) ›
மூலம் வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0754:
திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய
வியாசைக்கோவை. (4160 - 4610)
____________________________

PM0753:
மணிமேகலை ஆராய்ச்சி
ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை
____________________________

PM0752:
ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்.
ஆசிரியர் வித்துவான் கனகசபைத்தம்பிரான்
____________________________

PM0751:
"சொர்ணபுரி அம்பிகை பிள்ளைத்தமிழ்"
____________________________

PM0750:
இந்திய இலக்கியச் சிற்பிகள் : நா. பார்த்தசாரதி
திருப்பூர் கிருஷ்ணன்
____________________________

PM0749:
கம்பரும் வால்மீகியும்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை
____________________________

PM0748:
தாயார் கொடுத்த தனம் (கட்டுரைகள்)
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை
____________________________


On Sunday, September 27, 2020 at 4:30:22 PM UTC-7 தேமொழி wrote:
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) ›
மூலம் வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்

PM0747:
சிவமஹிம்ந ஸ்தோத்திரம் (# 747_01)&
&
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி தோத்திரம் (#747_02)
____________________________

PM0746:
சிவதத்துவ விவேகம் (அப்பைய தீட்சிதர் எழுதியது)
சிவஞான சுவாமிகள் மொழிபெயர்த்தருளியது
____________________________

PM0745:
ஒளவையார் தனிப்பாடல்கள்
புலியூர்க் கேசிகன்
____________________________

PM0744:
ஒளவையார் செய்தருளிய குறள் (ஞானக்குறள்)
மூலமும் வடிவேலு முதலியார் எழுதிய விசேஷ விருத்தியுரையும்
____________________________

PM0743:
ஔவையார் பாடல்கள் (4)
(ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, வாக்குண்டாம்)
மூலமும் ஆறுமுக நாவலர் உரையும்
____________________________

PM0742:
1. தாவிப் பாயும் தங்கக் குதிரை
2. கள்வர் குகை  (சிறுவர்களுக்கான சிறுகதைகள்)
ஆசிரியர்: பாவலர் நாரா. நாச்சியப்பன்
____________________________

PM0741:
பஞ்ச தந்திரக் கதைகள்
ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்
____________________________


On Tuesday, July 28, 2020 at 1:24:27 PM UTC-7 தேமொழி wrote:
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) ›
மூலம் வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்

PM0740:
தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி
பாடிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை
____________________________

PM0739:
திருவுத்தரகோசமங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ்
(வி. மு. சுப்பிரமணிய ஐயர் குறிப்புரையுடன்)
____________________________

PM0738:
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத் தமிழ்
புளியங்குடி முத்துவீரக் கவிராயர் இயற்றியது
____________________________


On Wednesday, July 15, 2020 at 7:41:52 PM UTC-7, தேமொழி wrote:
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) ›
மூலம் வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0737:
கடல்வீரன் கொலம்பஸ்
(வரலாற்றுக் கட்டுரைகள்)
எழுதியவர் : நாரா. நாச்சியப்பன்
____________________________

PM0736: 
சிந்தனையாளர் மாக்கியவெல்லி (வரலாறு / சரித்திரம்)
எழுதியவர்: நாரா. நாச்சியப்பன்
____________________________

PM0735:
நக்கீரதேவ நாயனார் அருளிய
திருமுருகாற்றுப்படை - மூலமும்
எஸ். வையாபுரி பிள்ளையவர்கள் உரையும்
____________________________


On Friday, July 10, 2020 at 10:37:29 AM UTC-7, தேமொழி wrote:

மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) ›
மூலம் வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0734:
ஒரு கோட்டுக்கு வெளியே (நாவல்)
சு. சமுத்திரம்
____________________________

PM0733:
சாமியாடிகள் (நாவல்)
சு. சமுத்திரம்
பாகம் 1 (அத்தியாயம் 1-16); 

பாகம் 2 (அத்தியாயம் 17-40);
____________________________

PM0732:
வளர்ப்பு மகள் (நாவல்)
சு. சமுத்திரம்
____________________________

PM0731:
வாடா மல்லி (நாவல்)
சு. சமுத்திரம்
பாகம் 1 (அத்தியாயம் 1-21); 

பாகம் 2 (அத்தியாயம் 22-43);
____________________________


On Wednesday, June 17, 2020 at 11:01:40 AM UTC-7, தேமொழி wrote:

மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) ›
மூலம் வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்

PM0730:
சயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப் பரணி
ஆங்கில மொழிபெயர்ப்பு - கௌசல்யா ஹார்ட்
____________________________

PM0729:
(இரு பகுதிகள்)
729_01  :  "ஸ்ரீ சுப்பிரமணியக்கடவுள் க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத் தமிழ்"
காஞ்சீபுரம் ஸ்ரீ சிதம்பர முனிவர் எழுதியது
729_02: சின்னப்ப நாயக்கர் இயற்றிய  "பழனிப்பிள்ளைத்தமிழ்"
____________________________

PM0728:
இந்திய இலக்கியச் சிற்பிகள் - உமறுப்புலவர்
சி. நயனார் முகமது
சாகித்திய அக்காதெமி - முதல் வெளியீடு 2001
____________________________

PM0727:
இந்திய இலக்கியச் சிற்பிகள் - ஒளவையார்
தமிழண்ணல்
சாகித்திய அக்காதெமி- முதல் பதிப்பு 1998
____________________________

On Sunday, June 7, 2020 at 3:57:30 PM UTC-7, தேமொழி wrote:
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) ›
மூலம் வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள் - நூல்கள் :

PM0726:
தொல்காப்பியர்
ஆசிரியர்: தமிழண்ணல்
____________________________

PM0725:
தமிழ்த் தாத்தா-டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்கள் வாழ்வும் இலக்கியப் பணியும்
கி.வா. ஜகந்நாதன்
____________________________

PM0724: 
உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை
ஆசிரியர்: ச. சாம்பசிவனார்
____________________________


On Tuesday, May 19, 2020 at 1:14:08 AM UTC-7, தேமொழி wrote:
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) ›
மூலம் வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்

கி. ஆ. பெ. விசுவநாதம் - நூல்கள் 

PM0723:
ஐந்து செல்வங்கள் (கட்டுரைகள்)
____________________________

PM0722:
திருக்குறள் கட்டுரைகள்
____________________________

PM0721:
அறிவுக் கதைகள் நூறு
____________________________


On Thursday, May 14, 2020 at 10:42:08 AM UTC-7, தேமொழி wrote:
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) ›
மூலம் வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள் 

PM0720:
முத்துச் சிப்பி (நாவல்)
சரோஜா ராமமூர்த்தி
-------------------------------

PM0719:
இருளும் ஒளியும் (நாவல்)
ஸரோஜா ராமமூர்த்தி
-------------------------------


On Tuesday, May 12, 2020 at 4:33:18 PM UTC-7, தேமொழி wrote:
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) ›
மூலம் வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள் 

PM0718:
பார்வதி பி.ஏ. (புதினம்)
அறிஞர் அண்ணா
-------------------------------

PM0717:
கோமளத்தின் கோபம் (சிறுகதைகள்)
அறிஞர் அண்ணா
-------------------------------

PM0716: 
எட்டு நாட்கள் (கட்டுரைகள்)
அறிஞர் அண்ணா 
-------------------------------

தேமொழி

unread,
Feb 28, 2021, 11:45:17 PM2/28/21
to மின்தமிழ்
thulir.JPG

அறிவியல் நூல் 
--------

தேமொழி

unread,
Mar 2, 2021, 1:31:03 AM3/2/21
to மின்தமிழ்


சனாதன சக்திகள் பின்னங்கால் பிடரியில் இடிபட, ஓட்டம் பிடிக்க பெரியார் எனும் அறிவுப் போராயுதம் தேவை!

March 01, 2021

எழுச்சித் தமிழர் திருமாவளவன் முழக்கம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் பாபு ஜெயகுமார் எழுதிய நூலை வெளியிட்டு ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மதுரையில் இன்று நான் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு இங்கே வந்திருக்கிறேன். இந்தச் சிறப்பான வாய்ப்பை எனக்கு அளித்த தமிழர் தலைவருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் வரலாற்றை சாமி. சிதம்பரனார் முதன் முதலாக எழுதினார்.  ஆசிரியர் அவர்களும் எழுதி பல தொகுதிகள் வந்திருக்கின்றன. பாபு ஜெயகுமார் எழுதிய இந்நூல் உலகெங்கும் பரவிட வேண்டும். சுரண்டல் நிறைந்த ஆதிக்க சமூகத்தை எதிர்த்து நிற்க நமக்கு பெரியார் தேவைப்படுகிறார்.

இன்னும் எத்தனையோ எண்ணிக்கையில் பெரியார் திரைப்படத்தைத் தயாரிக்க முடியும் என்று நமது ஞான. இராசசேகரன் அய்.ஏ.எஸ். அவர்கள் இங்கே சொன்னார்.

தமிழ்நாட்டின் தனித்தன்மைக்குக் காரணம் பெரியார்
காரணம், பெரியார் என்றால் கருத்துச் சுரங்கம் என்று பொருள். இந்தியாவில் - உலகில் புதிய சிந்தனைக்கு வித்திட்டவர் தந்தை பெரியார். புதிய சமூக மாற்றத்திற்கு வித்திட்டவர் அவர். இன்று தமிழ்நாடு மதவாதத்தை எதிர்த்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் பெரியார்.

நூலாசிரியர் பாபு ஜெயக்குமார் இந்நூலில் முன்னுரை யாக எழுதியதை விமானத்தில் வரும்போது படித்தேன்.

பார்ப்பனர்களுக்கு அடிமையானதமிழ் மன்னர்கள்
ஜனநாயக மரபு என்பது தமிழ்நாட்டில் இங்கிலாந்து நாட்டுக்கு முன்பே மலர்ந்திருக்கிறது. 1215ஆம் ஆண்டு வாக்கில் தான் இங்கிலாந்தில்கூட ஜனநாயகம் பற்றி பார்க்க முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே உத்தரமேரூரில் உள்ளாட்சி ஜனநாயகம் மலர்ந்து விட்டது.

ஆனாலும் நமது சோழ அரசர்களும் பாண்டியர் களும், பல்லவர்களும், நாயக்கர் மன்னர்களும், பார்ப் பனர்களின் மேலாண்மைக்குத் தான் துணை போயிருக்கிறார்கள்.

அவர்கள் கல்விக் கூடம் வைத்துச் சொல்லிக் கொடுத் தது எல்லாம் பார்ப்பனர்களுக்குத்தான். சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளவை எல்லாம் வேதங்களும், உபநிஷத்துக்களும்தான்.

11ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்கள் தென்னார்க் காடு மாவட்டத்தில் எண்ணாயிரம் என்னும் கிராமத்தில் ஒரு பெரிய கல்விக் கழகம் கண்டனர். 140 மாணவர்கள் கற்றனர். 14 ஆசிரியர்கள்; ஆசிரியர்களுக்கும் மாணவர் களுக்கும் நாள்தோறும் நெல் அளந்து தரப்பட்டது. 45 வேலி நிலம் இதற்காக ஒதுக்கப்பட்டது. வேதங்களும், சமஸ்கிருத இலக்கணமும், மீமாம்ச வேதாந்த தத்துவங் களும் சொல்லித் தரப்பட்டன.

புதுச்சேரிக்கு அருகில் திருபுவனத்தில் சோழ அரசர்கள் ஒரு கல்லூரி ஏற்படுத்தினர். 72 வேலி நிலம் அதற்காக ஒதுக்கப்பட்டது. 260 மாணவர்கள், 12 ஆசிரி யர்கள் இருந்தனர். இதிகாசங்களும் மனுதர்மமும் கற்பிக் கப்பட்டன. 12ஆம் நூற்றாண்டில் திருவாவடு துறையில் ஒரு கலைமன்றம் கண்டனர். சமஸ்கிருதத்தில் உள்ள சாரக சமிதை, அஷ்டாங்க இருதய சமிதை இரண்டும் பாடங்கள் (உத்தரமேரூர் கல்வெட்டு பராந்தக சோழன் தீட்டியது - மேற்படி புத்தகம் பக்கம் 454).

தமிழ் வேந்தர்கள் பார்ப்பனர்களுக்கு அடி பணிந்து கிடந்தனர். கிராமங்கள் எல்லாம் அவர்களுக்கு இனா மாக தாரை வார்க்கப்பட்டன. 'மங்கலம்', 'மங்கலம்' என்று பெயர் உள்ள கிராமங்கள் எல்லாம் நமது மன்னர்களால் பார்ப்பனர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப் பட்டவையே! அந்தக் கிராமங்களில் பார்ப்பனர்கள் வரி வசூல் செய்துகொள்ளலாம் (மூன்று வேதங்கள் படித்த வர்களுக்குத் திரிவேதிமங்கலம், நான்கு வேதங்கள் படித்தவர்களுக்கு சதுர்வேதி மங்கலங்கள் என்று பெயரிட்டு நிலங்கள் இனாமாக அளிக்கப்பட்டன).

பார்ப்பனர் அல்லாதாருக்கு கல்வி கற்பிக்கப்பட வில்லை. அதற்கான எந்த முயற்சிகளையும் நமது அரசர்கள் எடுக்கவேயில்லை.

17ஆம் நூற்றாண்டில் மதுரை வந்த ராபர்ட் டி நொபிலி எழுதியுள்ளார் - மதுரையில் 10 ஆயிரம் மாணவர்கள் பயின்றனர். அவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள். சமஸ்கிருத பாடம் மட்டும் சொல்லிக் கொடுக்கப்பட்டது என்று எழுதியுள்ளார்.

களப்பிரர் இருட்டடிக்கப்பட்டதேன்?
பவுத்தம் சனாதனத்தை எதிர்த்தது  விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்தப் பவுத்தம் இந்தியாவிலேயே இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது. மன்னர்களைக் கையில் போட்டுக் கொண்டு ஒழித்தது.

களப்பிரர்கள் ஆட்சியில் பார்ப்பனர்களுக்கு என்று அளிக்கப்பட்ட சலுகைகள், இனாம் நிலங்கள் எல்லாம் தடை செய்யப்பட்டன. அதனால்தான் களப் பிரர் ஆட்சியை இருண்ட காலம் என்பார்கள். பார்ப்பனர்கள் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் நடந்தவை அனைத்தையும் இருட்டடித்து விட்டனர்.

தந்தை பெரியார் 1879இல் பிறந்தார் - அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1881ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கு (சென்சஸ்) எடுக்கப்பட்டது. 99 விழுக்காடு  கல்வியற்றவர்கள் என்கிறது அந்தக் கணக்கெடுப்பு!

அப்படிப்பட்ட ஒரு நாட்டில் இன்றைய தினம் கல்விப் புரட்சி ஏற்பட்டுள்ளது என்றால் அதற்காக வித்திட்டவர், பாடுபட்டவர், போர்க் கொடி தூக்கியவர், களங்கள் கண்டவர் தந்தை பெரியார்.

மீண்டும் ஆரியம் தலைதூக்குகிறது. பெரியார் இல்லை, இல்லை, கலைஞர் இல்லை என்ற தைரியத்தில் துள்ளுகிறார்கள்.

இதனை நாம் எதிர் கொள்ள வேண்டும். அதற்கு நமக்குக் கிடைத்த ஒரே ஆயுதம், போர் ஆயுதம் பெரியார் பெரியார்தான்!

சனாதன சக்திகள் இங்கு கால் ஊன்ற முடியாததற்குக் காரணம் பெரியாரே!
சனாதனம் இங்கே கால் ஊன்ற முடியாததற்குக் காரணம் பெரியார்தான்.  அந்தளவு இந்த மண்ணைப் பக்குவப்படுத்தி இருக்கிறார் தந்தை பெரியார்.

ஒரு போதும் சனாதன சக்திகளைத் தமிழ்நாட்டில் அனுமதிக்கப் போவதில்லை.

தேர்தலில் தக்கப்பாடம் கற்பிப்போம்!
தேர்தலில் தக்கப் பாடம் கற்பிப்போம்! விடுதலை சிறுத்தைகளையும் சேர்த்து மூன்று குழல் துப்பாக்கி என்று எங்களை அடையாளப்படுத்தினார் தமிழர் தலைவர் ஆசிரியர். அதில் உறுதியாக இருப்போம் - நிற்போம்.

சனாதன மதவாத சக்திகளை பின்னங்கால் பிடரியில் இடிபட இந்தப் பக்கம் திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு  வடக்கே விரட்டியடிப்போம் - விரட்டியடிப் போம் என்று எழுச்சியுரை ஆற்றினார் எழுச்சித் தமிழர் திருமாவளவன்.

சென்னை புத்தகக் காட்சியில் இயக்க நூல்கள் வெளியீடு

periyar-book.JPG
periyar-book-release.jpg
----------

தேமொழி

unread,
Mar 3, 2021, 4:34:20 AM3/3/21
to மின்தமிழ்
sangachurangam - book.JPG

கடவுள் ஆயினும் ஆக 

நாம் இதுவரை பார்த்த எல்லாவற்றையும் வேறொன்றாகப் பார்க்க வைக்கிற பாலா சாரின் தொடர்முயற்சிகளின் இன்னொரு பரிமாணம்தான் இந்தச் சங்கச் சுரங்கம்.

“சங்க இலக்கியம் என்பது ஹரப்பா, மொகெஞ்சதரோ பற்றிய மீள்நினைவாக இருக்கலாம், கீழடியில் இருந்த நகர நாகரிகத்தின் நேரடிப் பதிவாக இருக்கலாம்” என்கிற கருத்து இந்தியத் துணைக்கண்டத்தை, சங்க இலக்கியம் இல்லாமல் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்னும் அரிய முன்வைப்புக்கு அடித்தளமாகிறது.

இந்த முதல் பத்தின் ஒவ்வொரு உரையும், உரையின் இறுதியில் சுரங்கத்திலிருந்து அரங்கத்திற்கு என அவர் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் ஒவ்வொரு பாடலும், அப்பாடலை முன்னிறுத்தி அவர் நிகழ்த்தும் உரையாடலும் சங்க இலக்கியத்தின் வழி நம் சமகாலத்தை மறுவாசிப்புச் செய்ய உதவுகின்றன.

– ச.தமிழ்ச்செல்வன்

தேமொழி

unread,
Mar 3, 2021, 4:54:53 AM3/3/21
to மின்தமிழ்
நன்றி:  https://www.viduthalai.page/2021/03/blog-post_83.html

"உ.பி.யில் பெரியார் பிறந்திருந்தால் இந்தியாவிலேயே பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கும்!"

தொகுப்பு: மின்சாரம்

March 01, 2021 

* பெரியார் திரைப்பட இயக்குநர் ஞான. இராசசேகரன் அய்.ஏ.எஸ். (ஓய்வு)
உலகில் எல்லா மொழிகளிலும் பெரியார் பற்றி நூல்கள் தேவை

* முனைவர் கே. சுபாஷினி (ஜெர்மனி) கருத்துரை

சென்னை - நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி அரங்கில் நேற்று (28.2.2021) பிற்பகல் 3.45 மணியளவில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா இயக்க வரலாற்றில் குறிப்பிடத் தக்கதாகும்.

தந்தை பெரியார் பற்றிய நூல்கள் தமிழில் ஏராளமாக வெளி வந்துள்ளன என்றாலும், ஆங்கிலத்தில் வெளிவரும் நிலையில்தான் உலகெங்கும் சென்று அடையும் என்ற ஒரு கருத்து எல்லாத் திசைகளிலும் கூறப்படும் கருத்தாகும்.

சிறியதும், பெரியதுமாக 88 நூல்களை ஆங்கிலத்தில் கழகம் கொண்டு வந்துள்ளது என்றாலும், மேலும் விரிவான நூல்கள் ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வருகின்றது.

அந்த வகையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் வேண்டுகோள்படியும் வழிகாட்டு தலின்படியும்  'டெக்கான் கிரானிக்களில்' பணியாற்றும் பாபு ஜெயகுமார் அவர்களால் எழுதப்பட்ட "Periyar E.V. Ramasamy A Man Ahead of His Time" எனும் 253 பக்கங்களில் 20 தலைப்புகளில் 'எமரால்டு' பதிப்பகத்தினரால் பதிப்பிக்கப் பட்டது. அந்நூலின் வெளியீட்டு விழா நேர்த்தியான முறையில் வெளியிடப்பட்டது.

விழாவிற்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை ஏற்றார். 'எமரால்டு' பதிப் பகத்தின் உரிமையா ளரும், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தின் மாநிலத் துணைத் தலைவருமான கோ. ஒளிவண்ணன் வரவேற்புரையாற்றினார்.

அவர் தனது வரவேற்புரையில் - உலகில் பல நாடுகளிலும் வழக்கமாக நடத்தப்பட்டு வந்த புத்தகக் கண்காட்சிகள் கரோனா காரணமாக நடத்தப்படாத நிலையில், விதி விலக் காக சென்னையில் மட்டும், தங்குத் தடையின்றி நடைபெற்று வருவதைக் குறிப்பிட்டபோது பலத்த கரஒலி எழுந்தது.

உலக முழுவதும் ஆங்கிலம் கோலோச்சும் இந்தக் கால கட்டத்தில், தந்தை பெரியார் பற்றி ஆங்கிலத்தில் இப்படி ஒரு நூல் வெளிவருவது சிறப்பானது - எனது தந்தையார் கோபாலகிருஷ்ணன் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் பற்றி  Periyar the Father of Tamil Race  எனும் என்ற நூலை  30 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டுள்ளதையும் குறிப்பிட்டார்.

(தமிழில் "தமிழர் தலைவர்" எனும் நூல் சாமி. சிதம்பரனார் எழுதிய முதல் பகுதியும், 'உலக தலைவர் பெரியார்' எனும் பெயரில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் எழுதப்பட்ட ஏழு தொகுதிகளும் கவிஞர் கருணானந்தம் அவர்களால் எழுதப்பட்ட தந்தை பெரியார் எனும் வாழ்க்கை வரலாற்று நூலும் A Pen Portrait of Periyar Ramasamy    என்ற  Prof. தருமலிங்கம் அவர்களால்   எழுதப்பட்ட நூலும் ஏற்கெனவே வெளி வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது). கே.எம். பாலசுப்பிரமணியம் அவர்கள் Periyar E.V. Ramasamy என்ற தலைப்பில் (1943இல்) ஆங்கிலத்தில் எழுதினார். 

முனைவர் சுபாஷினி (Director Tamil Heritage Foundation):
மலேசியாவைப் பூர்விகமாகக் கொண்டு ஜெர்மனியில் வாழ்ந்து வரும் - ஆய்வாளர் முனைவர் கே. சுபாஷினி தன் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

ஜெர்மனியில் வாழ்ந்து வரும் எனக்கு இந்நூலில் தந்தை பெரியார் ஜெர்மனியில் ஆறு நாட்கள் சுற்றுப் பயணம் செய்த தகவல் கிடைத்து மகிழ்கிறேன்.  "Exploring the world" எனும் தலைப்பில் 18 பக்கங்களில் தந்தை பெரியாரின் உலக சுற்றுப் பயணம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. உலகை வலம் வந்து பல அனுபவங்களை அறிந்து மனித குலத்துக்குத் தேவையான கருத்துகளைப்  பெரியார் வழங்கியுள்ளார்.

மலேசியாவும் - வெண் தாடி வேந்தரும்:
நான் பிறந்த மலேசியாதான் பெரியார் பயணித்த முதல் வெளி நாடாகும். 11 மாதங்கள்  அய்ரோப்பாவில் சுற்றுப் பயணம் செய்து தந்தை பெரியார் எழுதி வந்த பிரயாணக் குறிப்புகள் மிகவும் பயனுள்ளவையாகும்.

வெண்தாடி வேந்தர் பெரியார் என்று இன்று அவரைப் பாராட்டுகிறோம். வெறும் மீசையோடு மலேசியாவுக்கு வந்த பெரியார் தாடியோடு வெளி வந்தார். வெண்தாடி பெரியாராக வெளி வந்ததற்கு எங்கள் மலேசியாதான் காரணம் என்று நினைக்கும் பொழுது பெருமையாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

பெரியார் அவர்களைப் பற்றிய நூல்கள் பிரெஞ்சு, ஸ்பானிஸ் மொழிகளிலும் வர வேண்டும். புதிய தலைமுறைக்குப் போய்ச் சேர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஞான. இராசசேகரன் அய்.ஏ.எஸ். (ஓய்வு):
பெரியார் திரைப்படப் புகழ் (பெரியார் படத் திரைக்கதை மற்றும் இயக்குநர் - தேசிய விருது பெற்றது 'பெரியார்' திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது) ஞான இராசசேகரன் அவர்கள் தன் உரையில் முக்கியமாக முத்திரை பதித்தது போல குறிப்பிட்டதாவது:

இந்த ஆங்கில நூலை பாபு ஜெயக்குமார் நேர்த்தியான ஆங்கிலத்தில் வெகு சிறப்பாக செறிவாக எழுதியுள்ளார் - அவருக்கு என் பாராட்டுக்கள்.

வினோதமான மாமனிதர் பெரியார்:
பெரியார் ஒரு வினோதமான மா மனிதர்! நம் நாட்டில் காலத்தைக் கடந்த இரு தலைவர்களில் ஒருவர் திருவள்ளுவர். இன்னொருவர் பெரியார் ஆவார். 2000 ஆண்டு கடந்தும் பேசப்படக் கூடியவர்கள். காலத்தைக் கடந்து சிந்தித்தவர் பெரியார். திருவள்ளுவருக்குக் காவி சாயம் பூசுகின்றனர். பெரியார் சிலையைச் சேதப்படுத்துகின்றனர் என்பதிலிருந்தே இவர்கள் யாருக்கு எதிரிகள் என்பது விளங்குகிறது.

பெரியார் மட்டும் உத்தரப்பிரதேசத்தில் பிறந்திருந்தால், இந்தியாவே மாறியிருக்கும். இந்தியாவிலேயே தமிழ்நாடு தனித் தன்மையோடு விளங்குகிறது என்றால் காரணம் பெரியார் அவர்களே!

தமிழ்நாடும் கேரளமும்:
கேரள மாநிலத்தில் கூட சமூக நிலை என்ன? வர்க்கப் பிரச்சினையில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு அளவுக்குச் சமூகப் பிரச்சினையில் போதிய அளவு விழிப்புணர்வு இல்லை என்று கம்யூனிஸ்ட் தலைவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். பெரியார் போல சமூகப் புரட்சித் தலைவர் இங்கு உருவாகவில்லை என்று யதார்த்தமாக ஒப்புக் கொள்கின்றனர்.

பெரியார் பற்றிய நூல் இந்தியா முழுமைக்கும் தேவைப்படும் கால கட்டம் இது. மதவாத சக்திகளை எதிர் கொள்ள வடக்கே பெரியார் என்ற போர் ஆயுதம் இல்லை. பெரியார் இந்தியா முழுமைக்கும் மிகவும் தேவை.

சமீபத்தில் உ.பி. லக்னோ சென்றபோது தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பெரிய அதிகாரிகளின் நெற்றியில்கூட திருநீறும், குங்குமமும் பரவலாகக் காணப்படுவதைக் கண்டேன். பெரியாரின் அருமை பிற மாநிலங்களுக்குச் சென்றால்தான் விளங்கும்.

பெரியார்பற்றி இன்னும் மூன்று திரைப்படங்கள் எடுக்கலாம்:
பெரியாரைப்பற்றி திரைப்படம் எடுத்தேன். இன்னும் மூன்று பெரியார் படங்களை எடுக்கலாம்; அவரின் பொது வாழ்வு என்பது அவ்வளவு அடர்த்தியும், ஆழமும் கொண்டது என்று குறிப்பிட்டார். திரைப்பட இயக்குநர் ஞான. இராசசேகரன் அய்.ஏ.எஸ்.(ஓய்வு).
periyar-book-release.jpg

periyar-book-release2.jpg
----------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Mar 3, 2021, 11:40:26 PM3/3/21
to மின்தமிழ்
suba-at-book-fair.JPG

வழக்கறிஞர் லிங்கன் எழுதியிருக்கும் " மீனவர்களும் அரசியல் பிரதிநிதித்துவமும் " எனும் நூலுக்கு மூத்த வழக்கறிஞர் தி. லஜபதிராய் எழுதிய
அணிந்துரை :

மீனவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் அல்லது மீனவர்களுக்கான அரசியல் அதிகாரப் பங்கினைப் பற்றி திரு.லிங்கன் அவர்கள் எழுதியுள்ள இக்கட்டுரைத் தொகுப்புகள் கடற்கரைகளில் மட்டுமின்றி தமிழக அரசியல் வட்டங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடியவை. கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் இலட்சம் மீனவர்களுக்குப் பிரதிநிதியாக தமிழகத்தில் இதுவரையில் நிகழ்ந்த 15 தேர்தல்களில்; திருமிகு.லூர்தம்மாள் சைமனும் திருமிகு.பெர்னாட் என இருவர் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களாக விளங்கியதைச் சுட்டிக் காட்டும் லிங்கன் அவர்கள் தற்போது கிள்ளியூர் தொகுதியில் 35 விழுக்காடு மீனவர்கள் வாழ்வதைத் தனது நூலில் குறிப்பிடுகிறார். தற்போது நிகழவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கிள்ளியூராவது மீனவர் சமூகத்திற்கு ஒதுக்கப்படும் சாத்தியக்கூறை நண்பர் லிங்கனின் நூல் உருவாக்கும் என நம்பலாம்.

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தங்கள் ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றை இழந்தது ஒருவகையில் கன்னியாகுமரி அரசியல்வாதிகளின் அரசியல் பிழையாகத்தான் கருத முடியும். கன்னியாகுமரி மாவட்டம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஓட்டளிப்பது அபூர்வமாகவே நிகழும்  என்ற காரணத்தால் ஒரு சட்டமன்றத் தொகுதியை இழந்த கன்னியாகுமரி மாவட்ட மக்கள் போராட்டங்களில் ஈடுபடாதது வியப்பளிக்கவில்லை. எல்லைப் போராட்டத்திற்குப் பிறகு தற்போது நீண்ட அரசியல் மந்த நிலையில் இருக்கும் திரு.எம்.ஜி.ஆரின் நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்றாக கன்னியாகுமரி மாவட்டம் மதவாத அரசியல் சோதனைக் கூடமாகவே பயன்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தை இன்றுவரை பிடித்திருக்கும் வகுப்பு  வாத வக்கிர அரசியலின் குறியீடாக  விளங்கும் மண்டைக்காடு வகுப்புக் கலவரம் 1981-82 காலகட்டத்தில் அன்றைய முதல்வர் திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சிக்கட்டிலில் இருந்தபோது நிகழ்ந்தது. காலம் காலமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நெருக்கமான உறவுகளாக வாழ்ந்து வந்த சிறிது வணிகர்களாகவும் விவசாயத் தொழிலாளர்களாகவும் குறு நில விவசாயிகளாகவும் இருந்து வரும் கடற்கரையோர நாடார்களும் மண்ணின் மைந்தர்களான மீனவர்களும் மோதிக் கொண்டதில் இருதரப்புமே சேதமடைந்தனர்.

மீனவர் சமூகம் கடற்கரையோரக் கிராமங்களில் வசிப்பதால் கிள்ளியூர் தொகுதியைத் தவிரப் பிற தொகுதிகளில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை எனத் திரு.லிங்கன் குறிப்பிடுகிறார். மீனவர்களது அரசியல் பங்களிப்பின் மூலமே உரிமைகளைப் பெற முடியும் என்ற அவரது கூற்றுக்கு  மாற்றுக் கருத்து இருக்க இயலாது. 

மீனவர் சமூகங்களே பின்னர் வள்ளம்¸ தோணி¸ கப்பல்  மூலம் வணிகம் செய்யும் சமூகங்களாக மாறியது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இரண்டாயிரம் வருடங்களுக்கு  மேல் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் மீனவர் சமூகம் வன்முறை சமூகமாகச் சித்தரிக்கப்பட்டு விளிம்பு நிலையில் தள்ளப்பட்டிருப்பதை இன்று நாம் காண முடியும். இந்த உழைப்பாளர் சமூகம் தங்களது இடத்தைப் பெற அரசியல் அதிகாரம் அவசியம் வேண்டும். திரு.லிங்கன் அவர்களது நூல் அதற்கு அடிகோலும்.

 
-தி.லஜபதிராய்
22.01.2021

தேமொழி

unread,
Mar 6, 2021, 4:12:26 AM3/6/21
to மின்தமிழ்
MEGA SALE OF SELECT PUBLICATIONS4th edition : 1 - 22 March 2021

The French Institute of Pondicherry is once again organising a Mega Sale of some of its old publications with discounts ranging from 20% to 80%. These discounts will be applicable only on select publications, for a limited period, i.e. 1st to 22nd March 2021, and till stocks last.

The list of discounted books can be viewed by clicking on the links below:

Click here for the order form.

Note: Several titles have been added in the Indology list that did not figure in the 3rd edition.

------

தேமொழி

unread,
Mar 6, 2021, 9:14:49 PM3/6/21
to மின்தமிழ்
Lincoln Book.jpg

வழக்கறிஞர் லிங்கனின் மீனவர்களும் அரசியல் பிரதிநிதித்துவமும் என்ற நூலும் கடற்கரை என்ற இருமாத இதழும் நேற்று சென்னை புத்தகக் காட்சி அரங்கில் வெளியீடு கண்டன.
இன்று காலை தோழர் லிங்கனின் நூலை எடுத்துப் புரட்டினேன்.

தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டு பல்வேறு கூட்டணி பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இந்த நூல் வெளிவந்துள்ளது.

தமிழ்நாட்டு அரசியலில் மீனவர்களுக்கான பிரதிநிதித்துவம் எவ்வகையில் உள்ளது என்பதை அலசும் நூலாக இந்த சிறுநூல் அமைகிறது.

பழங்குடியின பட்டியலும் மீனவர்களும் என்ற தலைப்பில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 542வது பிரிவு கூறும் விளக்கம், பழங்குடி மரபு பற்றி விளக்குகிறது. அத்தோடு பிரிவு 366 (24), அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 342 வகைப்படுத்தல் விளக்கப்படுகிறது. ஒரு சமூகத்தைப் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கான விவரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதற்கு முந்தைய பகுதியில் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட கடலோரச் சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல், தேர்ந்தெடுக்கப்பட்ட  ஆண்டு, அவர்கள் சார்ந்த கட்சிகள் என்ற ஒரு பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. விரைவாக இவ்வளவு விபரங்களையுமா அறிந்துகொள்ள விரும்புவோருக்குப் பயனளிக்கும் பகுதி.

மீனவர்களின் பழங்குடியின வாழ்க்கை முறை பற்றி ஒரு பகுதி பேசுகிறது. சங்க இலக்கியங்களில் மீனவர்கள் வாழ்க்கை முறை, அம்பா பாடல்கள், காற்றின் வகைகள், மீனவர்களுக்காக நாட்காட்டி ஒன்று இருக்கின்றது என்ற புதிய செய்தி, கடலின் நீர் ஓட்டத்தைப் புரிந்து கொள்ளும் வகையிலான விளக்கம், மீனவர்களின் சமயங்கள் மற்றும் வழிபாடுகள், மீனவர்களுக்கான பஞ்சாயத்து அவர்களது பொருளாதாரம் வாழ்விடம் எனச் சுருக்கமாக ஆனால் மிகச் செறிவாக இந்தப் பகுதி விளக்குகிறது.

இதனையடுத்து கச்சத்தீவும் தமிழக மீனவர்களும் என்ற ஒரு தலைப்பு. நெடுநாளாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் கச்சத்தீவு என்ற ஒரு நிலப்பகுதி பற்றிய கலந்துரையாடல்கள் பற்றிப் புரிந்துகொள்ளத் தகவல் தேடிக்கொண்டிருந்த எனக்கு இந்த பகுதி சட்ட அடிப்படையிலான மற்றும் அரசியல் விளக்கமாக அமைவதைக் காண்கிறேன். இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் பற்றிய செய்திகளும் இப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன.

பின் இணைப்பு பகுதியில் இந்தியா இலங்கை இடையே வரலாற்று ரீதியிலான எல்லை தொடர்பான ஒப்பந்தம் மிக விரிவாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நூலின் விலை ரூ. 60/-. இந்த சென்னை புத்தகக் காட்சி விழாவில் கட்டாயம் வாங்கி நமது வீட்டுப் புத்தக அலமாரியில் வைக்க வேண்டிய ஒரு நூல்.

தோழர் லிங்கனுக்கு எனது நல்வாழ்த்துக்கள்!.

-சுபா

தேமொழி

unread,
Mar 7, 2021, 10:28:33 PM3/7/21
to மின்தமிழ்
china.jpg

இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் ஏராளமான புதிய வரவுகளைக் காண முடிந்தது. ஆழி பதிப்பகத்தின் வெளியீடாக "சீனா -சீரும் சிறப்பும்" என்ற தலைப்பிலான ஒரு தொகுதி வெளிவந்துள்ளது. சீனாவின் பண்பாட்டு விழுமியங்களைத் தனித்தனி தலைப்புகளில் ஆறு நூல்களாக இந்த தொகுப்பு அடங்குகின்றது. நுண்கலைகள் தொழில்நுட்பம் கலாச்சாரம் சமையல் கலை என வெவ்வேறு தலைப்புகளில் நூல்களில் வண்ணப் படங்களுடன் ஒவ்வொரு நூல்களும் இருக்கின்றன. புத்தகக் காட்சியில் சிறப்பு விலையில் நூல் கிடைக்கின்றது.
-சுபா

தேமொழி

unread,
Mar 12, 2021, 9:40:27 PM3/12/21
to மின்தமிழ்


தமிழில் 'செல்லாத பணம்' நாவலுக்காக எழுத்தாளர் இமையத்துக்கு 
2020-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது

imayam gets award.JPG

[...]

"1994-ல் இருந்தே எனக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படும் என்ற பேச்சுகள் நிலவி வந்தன. இப்போது விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நீதிக்கட்சித் தலைவர்களையும் திராவிட இயக்க முன்னோடிகளையும் இந்தத் தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன். சாகித்ய அகாடமி விருது பெற்ற இரண்டாவது திராவிட இயக்க எழுத்தாளர் நான். இதற்கு முன் 'பிசிராந்தையார்' நூலுக்காகப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சாகித்ய அகாடமி விருது பெற்றிருந்தார். திராவிட இயக்கச் சிந்தனைகளே என் எழுத்துகளுக்கான அடிப்படை. தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகிய நால்வருக்கும் இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன்" என்றார்.

வாழ்த்துகள் இமையம்!

தேமொழி

unread,
Mar 13, 2021, 4:54:59 AM3/13/21
to மின்தமிழ்
book review.JPG
வாருங்கள் படிப்போம்- 42
புத்தகத் திறனாய்வு
தவ்வை- அகிலா
திறனாய்வு: முனைவர் பிரேமா
Time: Mar 13, 2021
7.30 மணிசனிக்கிழமை

Join Zoom Meeting

Meeting ID: 865 7250 2558
Passcode: 249146
அனைவரையும் பங்கேற்க அன்போடு அழைக்கிறோம்
----

தேமொழி

unread,
Mar 14, 2021, 3:25:37 AM3/14/21
to மின்தமிழ்
azhanadu.JPG
azhanadu2.JPG


" அழ நாடு "
சமீபத்திய வாசிப்பில்
ஒரு தரமான நூல்.
தேனி மாவட்டத்தின் தொல்லியல் சின்னங்கள் அனைத்தையும் முழுமையாக தொகுத்துள்ளார் ஆசிரியர்..
தோழர் அ.உமர் பாரூக்.
தேனி மாவட்டமானது கல்வெட்டுகளில் அழநாடு என்று அழைக்கப்பட்டதால் நூலின் தலைப்பும்
அழநாடு.
தேனி...
முழுமையான ஒரு வரலாற்று சிறப்பு மிகுந்த பகுதி.
காலத்தால் மிகப் பழமையான தொல்லியல் சான்றுகளை தன்னகத்தே கொண்ட ஒரு மாவட்டம்.
நடுகல் வரலாற்றில் காலத்தால் மிக மூத்த நடுகல் புளிமான்கோம்பை நடுகல் தேனிமாவட்டம்தான்.
நடுகல் இருப்பிடம், கல்வெட்டு வாசகம், கண்டுபிடித்த வரலாறு என்று அனைத்துத் தகவல்களையும் இந்நூல் பதிவு செய்கிறது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க தொல்லியல் ஆவணமான பாண்டியர்
செப்பேடான சின்னமனூர் செப்பேடு கிடைத்ததும் தேனிதான்.
தேனி மாவட்டத்தில் உள்ள கற்பதுக்கை, குத்துக்கல்.. நடுகல்..
பாறை ஓவியம். ஈமச்சின்னம், நாணயம்,
ஓலைச்சுவடி
அனைத்தின் முழு விபரங்களும் உள்ளது.
50 க்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்களின் விபர பட்டியல்.
கண்ணகி கோட்டம்..
கோவில் அமைப்பு..
கல்வெட்டு விபரம்..
சிறப்பாக பதிவாகியுள்ளது.
உத்தமபாளையத்தில் உள்ள சமணர் படுக்கை .. கல்வெட்டு விபரம்.. இருப்பிடம்.
தேனி மாவட்டத்தில்
உள்ள அனைத்துக் கோவில்களின் விபரம்.
கோவில்களின் இருப்பிடம். செல்லும் வழி.. கல்வெட்டுச் செய்திகள்.
முழு விபரங்களும் மேற்கோள் நூல்களுடன் பதிவாகியுள்ளது.
தேனி மாவட்டத்தின் முழுமையான தொல்லியல் கையேடாக இந்நூல் வந்துள்ளது.
வாழ்த்துகள்
தோழர் உமர் பாரூக்.
வாசித்ததில் மகிழ்வு..
அன்புடன்..
மா.மாரிராஜன்.
பதிப்பக விபரம்..
டிஸ்கவரி புக்பேலஸ்.
6 மஹாவீர் காம்ப்ளக்ஸ்.
முனுசாமி சாலை.
K.k.நகர்.
சென்னை 600078.
Ph. 044-48557525
8754507070
184 பக்கம்..
விலை ..
ரூ 180.

தேமொழி

unread,
Mar 14, 2021, 3:34:03 AM3/14/21
to மின்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் நூல்வெளியீடுகள்
https://www.commonfolks.in/ இங்கு விற்பனைக்கு உள்ளது 

THFi-Books.jpg
-----

தேமொழி

unread,
Mar 15, 2021, 4:46:18 AM3/15/21
to மின்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் நூல்வெளியீடுகள்
விற்பனைக்கு உள்ளன 
THFi-Books.jpg
-----------

Vishalini Viswanathan

unread,
Mar 16, 2021, 5:25:46 PM3/16/21
to mint...@googlegroups.com
தமிழ் மரபு அறக்கட்டளை நூல்கள் சென்னையில் எங்கு கிடைக்கும்.... 



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/8a7f3530-eef7-411e-b11f-bec747e36776n%40googlegroups.com.

தேமொழி

unread,
Mar 16, 2021, 5:32:40 PM3/16/21
to மின்தமிழ்
On Tuesday, March 16, 2021 at 2:25:46 PM UTC-7 rmsv...@gmail.com wrote:
தமிழ் மரபு அறக்கட்டளை நூல்கள் சென்னையில் எங்கு கிடைக்கும்.... 


THFi Books.JPG


ஜோதிவேல் அவர்களை
தொலைபேசியில் +91 9884912020 
தொடர்பு கொண்டு மூன்று நூல்களையோ அல்லது தனித்தனியாகவோ வாங்கிக் கொள்ளலாம்.  

------

Vishalini Viswanathan

unread,
Mar 17, 2021, 12:08:20 AM3/17/21
to mint...@googlegroups.com
மிக்க நன்றி

தேமொழி

unread,
Mar 17, 2021, 12:57:18 AM3/17/21
to மின்தமிழ்

முடிவின்றி நீளும் ஈழத்தமிழ் அகதிகளின் துயரம்

-- நரசய்யா

sri-lankan-tamil-refugees.jpg

ஆசிரியர்: வி.சூரியநாராயண் 
தமிழில்: பெர்னார்ட் சந்திரா 
வெளியீடு: காலச்சுவடு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் மூத்த பேராசிரியராக, தென்கிழக்கு ஆசியா ஆய்வு மையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வி.சூரியநாராயண், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அகதிகளைப் பற்றித் தீவிரமாக ஆய்வு செய்தவர். அவருடைய ஆய்வுப் பணிக்காக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அமைப்பின் பாராட்டுதலைப் பெற்றவர். அவருடைய சிறந்த நூல்களில் ஒன்றான ‘Refugee Dilemma: Sri Lankan refugees in Tamil Nadu’ என்ற ஆங்கில நூலை ‘அகதியின் துயரம்’ என்று தமிழில்பெர்னார்ட் சந்திரா மொழிபெயர்த் திருக்கிறார்.

நான்காவது ஈழப்போர் 2009ல் முடிந்துவிட்டபோதிலும், தமிழ்நாட்டில் தங்கியிருந்த அகதிகளில் மிகச் சிலரே இலங்கை திரும்பினர் என்பதையும் அப்போது அங்கிருந்த அரசியல் நிலைமையின் காரணமாக, பல ஈழத் தமிழர்கள் இலங்கைக்குச் செல்ல விரும்பவில்லை என்பதையும் தமிழகத்தில் அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடிந்ததையும் இந்நூல் விளக்குகிறது.

முதல் இரண்டு அத்தியாயங்கள் அகதிகளின் பிரச்சினைகளையும் சர்வதே நிலைப்பாட்டையும் சாதாரண வாசகர்கள் கூடப் புரிந்துகொள்ளும் விதத்தில் எடுத்துச் சொல்கின்றன. ‘அதிதி தேவோபவ’ என்ற அத்தியாயத்தின் இறுதி வரிகள் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். “1991, மே 21ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள், ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தனர். தமிழ் மக்களின் மேன்மைக்குச் சான்று பகிரும் விதமாக ஒரு இலங்கைத் தமிழ் அகதி கூட துன்புறுத்தப்படவில்லை. சகிப்புத் தன்மைக்கும் நல்லெண் ணத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய அத்தருணம், நேசத்தோடு நினைவில் கொள்ளவேண்டியதாகும்.”

‘துன்பத்திலிருக்கும் தீவு’ என்ற அத்தியாயம் இலங்கையின் புலம் பெயர்ந்த தமிழர்களின் வரலாற்றை எடுத்துரைக்கிறது. 1971 ஏப்ரல் மாதத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்காவால் வெடித்த ஜே.வி.பி.யின் கிளர்ச்சி அந்நாட்டை உருக்குலைத்ததையும் 1987ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தம் எவ்வாறு சீர்குலைக்கப்பட்டு, இலங்கையின் பிரிவுக்கு காரணமாக அமைந்தது என்பதையும் ஆசிரியர் தெளிவாக்குகிறார்.

மூன்றாவது அத்தியாயத்தில் உள்ள ‘இலங்கை ஒரு ஒட்டுமொத்த பார்வை’, ‘ஒற்றுமை இல்லாத தமிழர்கள்’ என்ற இரண்டு பகுதிகள் மிக முக்கியமானவை. இவை இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை இன்னும் நெருக்கமாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன. படிப்படியாக மாறிக்கொண்டு வந்த அரசியல் நிலைப்பாட்டை இப்பகுதிகளில் காண முடிகிறது.

‘அகதிகள் தீவு’ என்ற அத்தியாயத்தில் கூறப்படும் விவரங்கள் நமக்கு அதிர்ச்சி ஏற்படுத்துகின்றன. “எனது மகன் யாழ்ப்பாணத்தில் இருக்கிறான். மனைவி கொழும்பில், தந்தை வன்னியில், வயது முதிர்ந்த நோயாளி அம்மா தமிழ்நாட்டில், உறவினர்கள் ஃபிராங்க்ஃப்ர்ட்டில், ஒரு சகோதரி பிரான்சில், நானோ அலாஸ்காவில் வழி தவறிப் போன ஒட்டகத்தைப் போல ஆஸ்லோவில் இருக்கிறேன். விதிக் குரங்கினால் சிதறடிக்கப் பட்டபஞ்சுத் தலையணைகளோ எங்கள் குடும்பங்கள்?” என்று ஜெயபாலன் என்பவர் சொல்லியுள்ள பகுதி நம் மனதைப் பிழிகிறது.

மனித உரிமைகள் மீறல் என்ற பகுதி நான்காவது ஈழப்போரின் அழிவுகளைப் பற்றிச் சொல்கிறது. “ஐக்கிய நாடுகள் சபையின் முடிவுப்படி, அப்போரின் இறுதி மாதங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,000லிருந்து 70,000 வரை இருக்கலாம் எனவும் இரண்டு தரப்பினரின் அட்டூழியத்தினாலும் ஏறத்தாழ 30 வருடப் போரினாலும் 1,50,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கணக்கிடப்படுகிறது” இந்தப் பகுதி வாசகரின் இரத்தத்தை உறைய வைத்துவிடுகிறது. தேசிய அகதிகள் சட்டத்தின் தேவையைப் பற்றிய அத்தியாயமும் முக்கியமான ஒன்றாகும். அந்த அத்தியாயத்தில் ஆசிரியர் சூரியநாராயண் தீர்மானமான கருத்துகளை முன்வைக்கிறார். எப்போது ஈழத்தழிழ் அகதிகள் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்புவார்கள் என்று அவர் எழுப்பும் கேள்வி, நூலைப் படித்து முடித்த பின்னரும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

---

தேமொழி

unread,
Mar 19, 2021, 5:35:29 PM3/19/21
to மின்தமிழ்
book review.JPG
வாருங்கள் படிப்போம்
புத்தகத் திறனாய்வு:43
கோபல்ல கிராமம் - கி.ரா
திறனாய்வு: கவிஞர் உமா மித்ரா

Time: Mar 20, 2021 
*சனிக்கிழமை மாலை 7.30 மணி

Join Zoom Meeting

Meeting ID: 880 3204 1442
Passcode: 971400
திறனாய்வில் பங்கேற்க அன்போடு அழைக்கிறோம்
--------

தேமொழி

unread,
Mar 20, 2021, 5:01:28 AM3/20/21
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) ›
மூலம் வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்


PM0781:
தனித் தமிழ்க் கிளர்ச்சி
(அம்மானை நூல்)
புலவர் சுந்தர சண்முகனார்
____________________________

PM0780:
புத்தர் பொன்மொழி நூறு (செய்யுள் நூல்)
புலவர் சுந்தர சண்முகனார்
____________________________

PM0779:
இயல் தமிழ் இன்பம்
முனைவர் சுந்தர சண்முகனார்
____________________________

PM0778: 
நாலடியார் நயவுரை
புலவர் சுந்தர சண்முகனார்
____________________________

தேமொழி

unread,
Mar 24, 2021, 12:43:53 AM3/24/21
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) ›
மூலம் வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்

PM0785: 
திருக்கேதீச்சரத்துக் கௌரிநாயகி பிள்ளைத்தமிழ்
சி. இ. சதாசிவம்பிள்ளை அவர்கள் இயற்றியது.
____________________________

PM0784: 
முன்னீச்சரத்து ஸ்ரீவடிவாம்பிகை பிள்ளைத்தமிழ்
ஆக்கம்: சொக்கன்
____________________________

PM0783: 
வயிரவன் கோவில் வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்
சேந்தன்குடி வி. நடராச கவிராயரவர்கள் இயற்றியது
____________________________

PM0782:
கடையம் (வளைசை) கலியாணியம்மை பிள்ளைத்தமிழ்
திருப்புலியூர் அழகிய திருச்சிற்றம்பல தேசிகர் இயற்றியது
____________________________

தேமொழி

unread,
Apr 8, 2021, 8:14:46 PM4/8/21
to மின்தமிழ்
udumalai2.JPG

உடுமலை வரலாறு நூல் அறிமுக இணைய வழிக் கருத்தரங்கு 
இது ஒரு ஊரின் வரலாறு அன்று, உலக நாகரீகத்தையும், உலக மக்களுக்கான அரிதிற்கிடைக்காத அணிகலன்களையும் அள்ளிக்கொடுத்த பகுதி கொங்கு நாடு, ஏராளமான  கல்வெட்டுகளையும், தொன்மை சார்ந்த பகுதிகளையும் அந்த மண்ணில் பதித்தும், பதிந்தும் வைத்துக்கொண்டுள்ள பகுதி  கொங்கு நாடு.  அதனின் ஒரு பகுதியே தென் கொங்கு நாடு.  இந்தத் தென் கொங்கு நாட்டின் மையப்பகுதியே உடுமலைப்பேட்டை. 
இந்த உடுமலையின் வரலாறு என்பது  பெருங்கற்காலம் முதல் தற்போதைய நாகரிகக் காலம் வரை தொகுத்துள்ளனர். பெருங்கற்காலத்தின் எச்சங்களாக மெட்ராத்தி, குரும்பபாளையம், கொங்கல் நகரம், கோட்டமங்கலம், கெடிமேடு போன்ற பகுதிகளில் இருக்கும்  புதிர்நிலைக்கற்களையும், கற்திட்டைகளையும், கல்வட்டங்களையும் வரிசையாகப் பதிவு செய்து பெருங்கற்காலத்தின் ஆழங்கால் பதித்து உடுமலையின் சுற்றுவட்டாரச் சுவடுகளை அழகாகப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், சமணர் காலத்திற்குச்சான்றாக  அயிரை மலை எனும் ஐவர்மலையும், அதற்கு அருகில் நரிப்பாறை எனும் பகுதியில் இருக்கும் சமணர் படுக்கைளையும், பதிவு செய்துள்ளனர்.  திருமூர்த்தி மலை என்பது சமணர் சின்னமாக இருந்தாலும் தற்போது இது பிரம்மா, விஷ்ணு, திருமால் என திரிமூர்த்தி என பிரித்து வழிபட்டு வருகின்றனர்.
தளிஞ்சி, அமராவதி, மறையூர், குதிரை ஆறு எனும் மேற்குத் தொடர்ச்சி மலையினுள் இருக்கும் நதிகளையும் ஆவணப்படுத்தி உள்ளனர்.
மேலும் சங்க இலக்கியத்தில்  கடையெழு வள்ளல்களை அடுத்து எட்டாவது வள்ளலாக தமிழுக்குத் தலைகொடுக்கத் துணிந்த குமணவள்ளல் குறித்தும்  இந்த நூலில் பதிவு செய்துள்ளனர்.
மேலும், கி பி. 1 ஆம் நூற்றாண்டு ஆறாம் நூற்றாண்டு வரையிலும், ஏட்டாம் நூற்றாண்டு முதல் சிற்றரசர்களின் ஆட்சியைப் பற்றியும், 11 ஆம் நூற்றாண்டு வீரசோழ, வீரகேரளர், வீரராசேந்திரன், குலோத்துங்கன், என 13 ஆம் நூற்றாண்டு வரை சிற்றரசர்களின் ஆட்சியையும் பதிவு செய்துள்ளனர்.
13 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு பாளையக்காரர்களின் ஆட்சியையும்,  அதற்குப் பிறகு ஆங்கிலேயர் ஆட்சியினையும், உடுமலை வரலாற்றின் பக்கங்களில் வரலாறாகப் பதிவு செய்துள்ளனர்.
இதில், வரலாறு எனில் பொதுவாக ஊர் வரலாறு , ஊர் மக்களின் வரலாறு எனப் பதிவு செய்திருப்பார்கள். ஆனால் இந்த உடுமலை வரலாற்றில் மட்டுமே  விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து,  விளையாட்டு வரலாறு என ஒவ்வொரு விளையாட்டிற்கும் தனித்தனிப் பக்கங்கள் ஒதுக்கி எழுதியுள்ளனர். இது பொதுவான ஊர் வரலாற்றில் இல்லாத செய்தியாக இதனைப் பதிவு செய்யலாம். மேலும் இதில், 

1. உடுமலை இலக்கிய வரலாறு
2. நமது மண்ணின் நகரமன்றத்தலைவர்கள் வரலாறு
3. நமது மண்ணில் நிகழ்ந்த இந்தியதேசிய விடுதலைப்போராட்ட வரலாற
4. நமதூரில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம்
5. நமது மக்களின் மொழிப்போராட்டம்
6. கல்விக்கான வரலாறு
7. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவை. கோவையின் மான்செஸ்டர் உடுமலை. 
8. உடுமலை பஞ்சாலைகளின் வரலாறு
9. உடுமலை கல்வி வரலாறு
10. பாரம்பரியம் மிக்க உடுமலையின் நீதி மன்ற வரலாறு
11. ஏழுகுளப்பாசன  வரலாறு
12. உடுமலையில் விளையாட்டுகளின் வரலாறு

தேமொழி

unread,
Apr 9, 2021, 2:34:31 PM4/9/21
to மின்தமிழ்
Kala Pani.JPG
Kala Pani2.JPG

வாருங்கள் படிப்போம்
புத்தகத் திறனாய்வு: 45

"காலா பாணி"- டாக்டர் மு.ராஜேந்திரன் இஆப
திறனாய்வு: முனைவர் இரா.செங்கொடி
Apr 10, 2021 சனிக்கிழமை மாலை 7.30 மணி

Join Zoom Meeting

Meeting ID: 894 7948 4688
Passcode: 937126

ஆங்கில அரசின் நாடு கடத்தல் ...மருது பாண்டியர் வரலாற்றின் தொடர்ச்சி..
"காலா பாணி"  - முனைவர் செங்கொடி அவர்களின் இத் திறனாய்வில்
பங்கேற்க அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்
நிகழ்வில் ராஜேந்திரன் இஆப அவர்களும் பங்கேற்கிறார்
________________________________________________________________________
விகடன் படிப்பறை - காலா பாணி
- வெ.நீலகண்டன்

பெரிதும் பேசப்படாத வரலாற்றைப் பதிவுசெய்த வகையில் இது முக்கியமான நாவல்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறென்பது பெரும்பாலும் வட இந்தியாவையே சுற்றிச் சுழல்கிறது. பழநி சதி வழக்கு, திருநெல்வேலி சதி வழக்கு, குலசை சதி வழக்கென வாழ்நாளைச் சிறையில் கழித்த, சிறையிலேயே உயிர்நீத்த பல சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பெயர்கள் தமிழக சுதந்திர தின விழாக்களில்கூட உச்சரிக்கப்படுவ தேயில்லை.
வரலாற்றை எழுதும் வட இந்திய ஆசிரியர்களுக்கு 1857-க்குப் பிறகுதான் பார்வை துலங்கும். அதற்கு முன்பு 1806-ல் நடந்த வேலூர்ப் போராட்டம் பற்றியோ, 1801-ல் நடந்த காளையார்கோயில் யுத்தம் பற்றியோ அவர்கள் பதிவு செய்வதில்லை. சிறையுடைப்பு, கெரில்லா யுக்தி, கொடூரத் தாக்குதல்களென வெள்ளையர்களுக்கு எதிராகத் தமிழர்கள் நிகழ்த்திய காளையார்கோயில் யுத்தம்தான் இந்திய சமஸ்தானங்கள் முழுதும் சுதந்திர வேட்கையைத் தட்டியெழுப்பியது. இந்த யுத்தத்தில் பிடிபட்ட போராளிகளையெல்லாம் குடும்பம் குடும்பமாகத் தூக்கிலிட்டுக் கோரத்தாண்டவம் ஆடிய வெள்ளையர்கள், மிஞ்சியவர்களுக்கு அதைவிடவும் ஒரு கொடூர தண்டனை கொடுக்கத் திட்டமிட்டனர். அதுதான் ‘காலா பாணி.’ போராளிகளைக் கப்பலில் ஏற்றிச் சென்று ஏதேனுமொரு தீவில் இறக்கிவிடுவது. இதுவரை பெயர்கூட அறிந்திராத அந்தத் தீவில், இருண்ட ஓர் நாற்சதுர அறைக்குள் வாழ்க்கையைக் கழிக்கிற கொடூர தண்டனை.

படிப்பறை -  காலா பாணி
மருது சகோதரர்களையும் அவர்களின் வாரிசுகளையும் தூக்கிலிட்ட பிறகு, சிவகங்கை மன்னர் வேங்கை பெரிய உடையணத் தேவன், சிறுவனாக இருந்த சின்ன மருதுவின் மகன் துரைச்சாமி, சில பாளையக்காரர்கள் உள்ளடங்கிய 73 பேரை காலா பாணியாக அறிவித்து பினாங்குக்கு நாடு கடத்தினார்கள். அந்தத் துயர வரலாற்றைச் சிறு சிறு புனைவுகளோடு நாவலாக வடித்தெடுத்திருக்கிறார், இந்திய ஆட்சிப்பணி அதிகாரியும் எழுத்தாளருமான டாக்டர் மு.ராஜேந்திரன்.

1801, டிசம்பரில் தூத்துக்குடிக் கோட்டையில் மேஜர் வெல்ஷுக்கும், போர்க்கைதியாக இருந்த தன் கணவனை சின்ன மருதுவின் கருணையால் மீட்டுக்கொண்டு வந்த ஆங்கிலப் பெண் கிறிஸ்டியானாவுக்குமான விவாதத்தில் தொடங்கும் நாவல், 1802, செப்டம்பரில் பென்கோலன் கோட்டையில் வேங்கை பெரிய உடையணத் தேவன் உயிர்நீக்கும் காட்சியோடு நிறைவடைகிறது. இந்தக் கால இடைவெளியில், வெள்ளையர்களின் ஆதிக்கத்துக்கு எதிராக, தீரத்தோடு ஆயுதம் தரித்துப் போராடிய மனிதர்களின் கதை, வாழ்க்கைமுறை, நிர்வாகச்சூழல், வெள்ளையர்கள் நிகழ்த்திய கொடுமைகள், உறவுப்பிணைப்புகள் என அனைத்தையும் தக்க அளவில் உள்ளீடு செய்திருக்கிறார் ராஜேந்திரன்.

பெரிதும் பேசப்படாத வரலாற்றைப் பதிவுசெய்த வகையில் இது முக்கியமான நாவல்.

காலா பாணி
டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப
வெளியீடு:
அகநி வெளியீடு, 3, பாடசாலை தெரு, அம்மையப்பட்டு, வந்தவாசி-604408
இமெயில்: akanive...@gmail.com
விலை : ரூ.650
பக்கங்கள்: 536
---

தேமொழி

unread,
Apr 9, 2021, 2:37:22 PM4/9/21
to மின்தமிழ்

5.3.2021 முதல் 
தினந்தோறும் டெல்டா தொழில் முனைவோர் கூட்டமைப்பு கலந்துரையாடுவோம் நிகழ்வின் ஒரு பகுதியாக 
இரவு 8.10 முதல் 8.20 வரை 
"நூல் நயம்" என்று உரை நல்குகிறார் 
திரு. சொ. வினைதீர்த்தான் 

Zoom ID:76808976869
கடவுச் சொல் இல்லை


தேமொழி

unread,
Apr 9, 2021, 4:04:50 PM4/9/21
to மின்தமிழ்

keezhakkarai.JPG
கிடைக்குமிடம்: https://pages.razorpay.com/Kilakarai

இறைநேசர்கள் நடந்த நிலம் இது. இறைவனுக்கு அடிபணிந்த செய்யிது ஆசியா உம்மாவின் நெற்றித் தடம் பதிந்த கடற்கரை மணல் இது. பல்லாக்கு அவுலியா நடந்து சென்ற கடல் நீர் இது. ஆண்டவனுக்காக உருகிப் பாடிய பாடல்களால் ஆசீர்வதிக்கப்பட்ட மண் இது. அறிவே விடுதலை என்பதை உணர்ந்த மக்கள் இவர்கள். கடலைக் கடந்து பன்னாட்டுப் பண்பாடுகளை ஆரத்தழுவும் மனம் கொண்டவர்கள் இந்த மக்கள். இதுதான் கீழக்கரை. இந்தக் கீழக்கரைக்குத் தனித்துவமான வரலாறு இருக்கிறது. ஆன்மிகத் தலைநகராக, வர்த்தகத் தலைநகராக இருந்த வரலாறு இது. இந்த ஊரின் சரித்திரத்தை 1986இல் எம்.இத்ரீஸ் மரைக்காயர் “கீர்த்திமிகும் கீழக்கரை” என்ற புத்தகமாக எழுதினார். மிகச்சரியாக முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் எஸ்.மஹ்மூது நெய்னா “கீழக்கரை வரலாறு” நூலை எழுதியுள்ளார்.

கீழக்கரை துறைமுக நகரம். உலகிற்கு நமது ஜன்னலாகவும் நம்மைப் பற்றி உலக மக்கள் உணர்ந்துகொள்ள உதவும் வாசலாகவும் வாழும் ஊர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கிறது. கடல் வணிகத்தில் கோலோச்சிய ஊர். கடல் வணிகத் தொடர்பால் இஸ்லாம் அறிமுகமாவதற்கான ஆன்மிக வாசலாகவும் இந்த ஊர் அமைந்தது. இந்து மதமும் இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஏக காலத்தில் வளர்ந்த ஊர் இது. செத்தும் கொடுத்த வள்ளல் சீதக்காதியின் ஊர். கடலோடி திரவியம் தேடுவதற்கு வழிகாட்டிய வணிகத் தளம். ஆன்மிக அருள் கொழிக்கும் பூமி. ஐரோப்பிய ஆவணங்கள் வழியாகவும் தமிழ் மரபு சார்ந்த தொன்மையான ஆதாரங்களின் வெளிச்சத்திலும் இந்த ஊரின் கதையைச் சொல்கிறார் ஜனரஞ்சக வரலாற்று ஆசிரியர் நெய்னா. உலக அளவில் இஸ்லாமிய வாழ்வியல் நெறிக்கான பன்முகப் பண்பாட்டுத் தலங்களைப் பற்றிப் பேசும்போது, அதில் கீழக்கரையும் இடம்பெறும். இறைநேசர்களான சதக்கத்துல்லா அப்பாவும் செய்யிது ஆசியா உம்மாவும் கடல் வணிகத்தில் ஆளுமை செலுத்திய வள்ளல் சீதக்காதியும் தமிழ் மரபுடன் இரண்டறக் கலந்தவர்கள்.

இப்போது ஊடகக் குழுமமும் தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

நூலின் பெயர்: கீழக்கரை வரலாறு
ஆசிரியர்: எஸ். மஹ்மூது நெய்னா
வெளியீடு: இப்போது மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
பக்கங்கள்: 336 விலை: ரூ.300
ஆன்லைனில் வாங்க: https://rzp.io/l/Kilakarai

 
Thanks so very much,

Warmest,
Peer Mohamed, Founder, http://ippodhu.com/ +919884360505


We are the stories we tell ourselves
---

தேமொழி

unread,
Apr 10, 2021, 4:50:14 PM4/10/21
to மின்தமிழ்

reading.JPG

வாசிப்பது எப்படி?
நூலாசிரியர் : செல்வேந்திரன்

நூலில் இருந்து .. 

வாசிப்பது எப்படி?... 

பெரியாரையும் அம்பேத்காரையும் காந்தியையும் வாசித்த ஒருவன் முதன்மையாகத் துறப்பது சாதிய அடையாளத்தைத் தான்.

ஒரேயொரு சூழியல் நூலை வாசித்து விட்டவன் வனப்பகுதியில் பீர் பாட்டிலை உடைத்து வீச மாட்டான்.

பேரிலக்கியங்களை வாசித்த ஒருவன் ஒரு போதும் தன்னை குறுகிய தேசியவாதத்தில் இன அரசியலில் அடையாளப்படுத்திக் கொள்ள மாட்டான்.

சிற்பங்களைப் பற்றிய ஒரேயொரு கட்டுரை வாசித்தவன் கூட குகை ஓவியங்கள் மீது ஐ லவ் யூ என கிறுக்க மாட்டான்.

இந்த உலகைச் செதுக்கிய வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துவிட்ட ஒருவனால் நடிகனின் கட்அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்ய முடியாது.

நமது அறிதல் முறைகளை, தத்துவங்களை வாசித்து விட்ட ஒருவன் ஒருபோதும் ஒரு கார்ப்பரேட் சாமியாரின் காலடியில் பணத்தைக் கொட்ட மாட்டான்.

அரசியல் நூல்களை வாசித்த ஒருவன் இந்த ஜனநாயகத்திற்கு தேசம் கொடுத்திருக்கிற விலை என்ன என்பதறிவான். இந்தக் கட்டுமானம் சிதைக்கப்படாமல் இருப்பதற்கு தன்னால் இயன்ற பங்களிப்பைச் செய்வான்.

உண்மையான சமூக இழிவென்பது அறியாமையே.

மனிதன் பண்பட, இன்னும் மேம்பட்டவனாக மாற, தான் வாழும் பூமியைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கையளிக்க அவன் வாசித்தே ஆகவேண்டும்

     - வாசிப்பது எப்படி புத்தகத்தில் இருந்து ...
#WhatsAppShare

தேமொழி

unread,
Apr 12, 2021, 10:47:59 PM4/12/21
to மின்தமிழ்

எந்தையும் தாயும்
- நரசய்யா

enthaiyum thayum.JPG
source-
https://www.dinamani.com/specials/nool-aragam/2021/apr/12/எந்தையும்-தாயும்-3602466.html

எந்தையும் தாயும்; 
ஆசிரியர் - நரசய்யா; 
பக்.297; ரூ.230; 
பழனியப்பா பிரதர்ஸ், சென்னை; 044-2813 2863. 


தமிழ் இலக்கியத்தில் தனக்கென தனியிடத்தைக் கொண்டுள்ள நரசய்யாவின் புதிய படைப்பு இது. புதுகைத் தென்றல் இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியாகியுள்ளது. தனது வாழ்க்கைப் பயணத்தின் வழியே தேசத்தின் வரலாற்றை விவரித்திருக்கிறார் நூலாசிரியர். தமிழகத்துக்கு வந்த காந்தியை கூட்ட நெரிசலில் சின்னஞ் சிறுவனாக தரிசித்ததில் இருந்து தொடங்குகிறது நரசய்யாவின் நினைவோடை. அவரது தந்தையின் வழியாக தேசத்தின் விடுதலைக்கு விதையாக இருந்த தலைவர்களைப் பற்றி அறிந்த கதைகளையும், பால்ய வயதில் தாம் பார்த்த சுதந்திரப் போராட்டக் களத்தையும் கண் முன்னே காட்சிப்படுத்தியுள்ளார். காந்தியின் மரணம் வரையிலான இந்திய சரித்திரத்தின் சாட்சியக் குறிப்பாக இந்நூல் விளங்குகிறது. வெள்ளி ஓடை போன்ற தெளிவான எழுத்து நடை, வரலாற்று நிகழ்வுகளைக் கூட வெகு எளிமையாக வாசகர்களுக்கு எடுத்துரைக்கிறது. இந்திய சுதந்திரத்தின் இறுதிக்கட்ட நிகழ்வுகளையும், விடுதலைக்குப் பிறகு தேசம் எதிர்கொண்ட சோதனைகளையும் குறுநாவல் போல விவரித்திருக்கிறார் நூலாசிரியர். நாட்டின் அடிமை விலங்கை உடைத்த அருந்தலைவர்களை சமகாலத்துக்கு அறிமுகப்படுத்தும் முக்கியப் பதிவு இந்நூல்.
---

தேமொழி

unread,
Apr 17, 2021, 4:51:47 AM4/17/21
to மின்தமிழ்
Kalaignar Karunanidhi.JPG

வாருங்கள் படிப்போம்
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு தவிர்க்க இயலாத மந்திரச் சொல் " கலைஞர்"
புத்தகத் திறனாய்வு: 46

KARUNANIDHI A LIFE- A.S.Pannerselvan

 திறனாய்வு : 
 எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர் 
 கோ.ஒளிவண்ணன்

 17 ஏப்ரல் 2021 
சனிக்கிழமை மாலை 7.30 மணி

 ZOOM 

 Meeting ID: 
 890 1337 5474

Passcode: 
023038 

பங்கேற்க அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்
 அன்புடன் 
 பேராசிரியர் உமா
--------------------------------------

தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளைத் திறந்து குடிப்பழக்கத்தை ஏற்படுத்தியது திமுகவா?

திமுகவினர் மீது சர்க்காரியா கமிஷன் கூறியதாகக் கூறப்படும் விஞ்ஞான ஊழல், திரை மறைவு இரகசியங்கள் என்ன?

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் திமுகவின் நிலைப்பாடுகள் என்ன?

திராவிடர் கழகத்திலிருந்து அண்ணா வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியதன் உண்மை பின்னணி?

இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் கிளை, வட்டம், நகரம், பகுதி , மாவட்டம்  ஒரு சீரிய கட்டமைப்பு கொண்ட கட்சி திமுக. 
இதற்கு அடித்தளம் இட்ட முன்னோடி யார்?

திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்தது அதிமுக தொடங்குவதற்கான காரணங்கள் காரணகர்த்தாக்கள்?

25 மார்ச் 1989 தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் நடைபெற்ற சம்பவத்தின் உண்மை என்ன? இதன் பின்னணி என்ன?  

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தொலைநோக்குடன் அடித்தளமிட்டது யார்?  இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொழிற்பேட்டைகளை உருவாக்கி தொழில் வாய்ப்புகள் அதிகரித்தது யார்?

தாராளமயமாக்கல் கொள்கையினால் இந்தியாவில் அதிகம் பயனடைந்த மாநிலம் எது?
என்ன காரணம்?

இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை காணவும், ஒரு நூற்றாண்டு சரித்திரத்தை அறிந்து கொள்ளவும்   படிக்க வேண்டிய புத்தகம் ஏ எஸ் பன்னீர்செல்வன் அவர்கள் எழுதியுள்ள கலைஞரின் வாழ்க்கை வரலாறு.

இந்நூலைக் குறித்த திறனாய்வு நாளை மாலை 7.30 மணிக்கு (சனிக்கிழமை 17 ஏப்ரல் 2021) செய்ய உள்ளேன்.

அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நூல் திறனாய்வாளர் - கோ. ஒளிவண்ணன்
------------------------------

"இந்தப் புத்தகத்தின் முதல் வடிவம் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறாகவே இல்லை. இதை எப்படி எழுதலாம் என்பதையும், இந்தியா முழுமைக்கும் புரிந்துகொள்ளும்படியான ஒரு வடிவத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதும் அவ்வளவு எளிதாக இல்லை. யோசித்துப் பார்த்தால் அவரது வரலாறு தனிமனிதக் கதையாகவும், இன்னொரு பக்கம் பார்த்தால் திராவிட இயக்கக் கதையாகவும் சேர்ந்தே இருந்தது. எங்கே தனிமனிதக் கதை முடிகிறது, எங்கே இயக்கக் கதை ஆரம்பிக்கிறது எனச் சொல்லவே முடியவில்லை. எனக்குத் தெரிந்து இளவயது ஆசிரியர் என்ற சாதனை படைத்தவர் கருணாநிதிதான்."

நூலாசிரியர்  - ஏ.எஸ்.பன்னீர் செல்வன் அவர்கள் விகடன் இதழில்...
--------------------------------------

தேமொழி

unread,
Apr 17, 2021, 5:47:14 PM4/17/21
to மின்தமிழ்

வாருங்கள் படிப்போம் - புத்தகத் திறனாய்வு: 46

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு தவிர்க்க இயலாத மந்திரச் சொல் " கலைஞர்"
KARUNANIDHI A LIFE- A.S.Pannerselvan

திறனாய்வு :  எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர் - கோ.ஒளிவண்ணன்
---

தேமொழி

unread,
Apr 24, 2021, 6:37:33 AM4/24/21
to மின்தமிழ்

malaipoo.JPG
வாருங்கள் படிப்போம்
புத்தகத் திறனாய்வு :47
மலைப்பூ - எழுத்தாளர் விழியன்
திறனாய்வு: பெ.உமா மகேஸ்வரி,உதவி பேராசிரியர்
Apr 24, 2021 07:30 PM 
சனிக்கிழமை மாலை 7.30 மணி

Join Zoom Meeting

Meeting ID: 821 6568 7057
Passcode: 247351
பங்கேற்க அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்
----------

நூல் குறித்து:
"குருவிகள் அழகாகக் கூவிக் கொண்டிருக்கின்றன..
சிலுசிலுவென்று காற்று..."
இப்படி ஆரம்பிக்கிறது.. Umanath Selvan  ( விழியன்)அவர்களின் மலைப்பூ நாவல்!
மலைக் கிராமத்தில் வசிக்கும் லட்சுமி அறிவியல் மாநாட்டில் பங்கேற்கிறார்.
முதல் முறையாகக் கேள்வியும் கேட்கிறாள்!
பிரதமர் முன் நடக்கும் இறுதி நாள் நிகழ்வில் அவள் கேட்கும் இரண்டு கேள்விகள் அரங்கத்தையும்,படிக்கும் நம்மையும் உலுக்கி விடுகின்றன! 
எழுத்தாளர் விழியன் அவர்கள் கதையோடு தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டைக் கண்முன் நிறுத்துகிறார்..
"அறிவியல் வானத்திலிருந்து குதிப்பது இல்லை...உன்னைச் சுற்றி என்ன நடக்கிறதுனு முதலில் பாரு .." என்கிறார் அவர்களது ஆசிரியை.
ஊருக்குள் சுற்றிப்  பார்க்கிறார்கள்..
ஒரு மாணவி வாய் திறக்கிறார்..
"டீச்சர் பனை மரத்தை நிறைய வெட்டி சாய்க்கிறாங்க.இதில் நாம் எதாவது ஆய்வு  செய்யலாம்" என்கிறார்.இந்தச் சிறு பொறி ஆய்வறிக்கையாக மாறுகிறது!
"மலைப்பூ "திறனாய்வில் வரும் சனிக்கிழமை மாலை என்னோடு இணையுங்கள்...உங்கள் வீட்டுக் குழந்தைகளோடு!!
( மலைப்பூ வெளியீடு: Puthagam Pesuthu பாரதி புத்தகாலயம், விலை ரூபாய் 95)
-----


இயக்குனர் அகத்தியனின் பகிர்வு

மலைப்" பூ" தந்த மலைப்பு

--------------------------

சில நாட்களுக்குமுன் நள்ளிரவில் தூக்கம் கலைந்தது. படுக்கையில் பக்கத்தில் விழித்துக்கொண்டிருந்தது முகநூல் நண்பர் குழந்தை இலக்கியப் படைப்பாளர் விழியனின்(Umanath selvan) மலைப்' பூ' புத்தகம்.தூக்கம் வரும்வரைக்கும் படிக்கலாம் என்று படிக்க ஆரம்பித்தால் அந்த நள்ளிரவில் என்னைக் குழந்தையாய் மாற்றி கூட்டிக்கொண்டு போனதுமில்லாமல் விடியும்வரை தூக்கத்தைத் தொலைத்துவிட்டு லட்சுமியுடன் பேசிக்கொண்டிருக்கவும் வைத்துவிட்டது. லட்சுமி வேறு யாருமில்லை. மாஞ்சாலை என்னும் மலைக் கிராமத்தில் இருந்து ஐந்து மைல் தொலைவில் இருக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமி.தேசியக் குழந்தைகள் அறிவியல் விழாவில் பங்குபெற முத்துக்குமாரி என்னும் ஆசிரியரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மாணவிகளில் ஒருத்தி. 

இந்த லட்சுமியின் மூலம் விழியன் குழந்தைகளுக்கு ஒளவையைப்போல் ஓதுவது ஒழியேல் என்றும் பாரதியைப்போல் புதியன விரும்பு வையத்தலைமைகொள் என்றும் குழந்தைகளுக்கு குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கிறார். 

ஒரு மலைக்கிராமத்துச் சிறுமியின் துயர்களையும் அந்தக் குழந்தைக்கு அறிவுலகம் காட்டவேண்டிய வழிகளையும்,குழந்தைக்கல்வியை விஞ்ஞானவழியில் அமைத்துக்கொடுக்கவேண்டிய அவசியத்தையும்,தாய்மொழியின் சிறப்பையும்,முறையாக அழைத்துச் செல்லப்படும் குழந்தை தடைகளைத்தாண்டி அடையும் இடத்தையும் மிகத்தெளிவாக குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம் அதேநேரத்தில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒரு குழந்தையின் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் புரிந்துகொள்லும் வண்ணம் மலைப்" பூ" வில் மலைப்பு ஏற்படும் வண்ணம் எழுத்துக்க்களால் காட்சிப்படுத்தி இருக்கிறார். 

ஒரு குழந்தையின் குதூகலத்தோடு படிக்கப்படவேண்டிய இந்தப்புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றிப் பேசி விவரித்து இதைப்படிக்கும்போது உங்களிடம் வரும் குழந்தைமனதை தடுத்துநிறுத்த விரும்பவில்லை. 

இறுதியில் லட்சுமி பிரதமமந்திரியிடம் கேட்கும் அந்தக் கேள்விகள் தமிழகப் பள்ளிகளின் கேள்விகள். அந்தக் குழந்தைமனது பெரியவர்களால் சிந்திக்க முடியாததை சிந்திக்கிறது. 

விழியன் சார் இந்த மலைப்" பூ" ஒவ்வொரு குழந்தையும் படிக்கவேண்டிய புத்தகம். காலம் அனுமதித்தால் இதை ஒரு குழந்தைகள் திரைப்படமாக உருவாக்க முயற்சி செய்யுங்கள். இனி உங்களைத் தேடிப் படிப்பேன். வாழ்த்துக்கள். ஒரு தாத்தாவாய் குழந்தைகளின் சார்பில் நன்றிகள். 

அன்புடன்

அகத்தியன்.

தேமொழி

unread,
Apr 25, 2021, 12:53:58 AM4/25/21
to மின்தமிழ்
வாருங்கள் படிப்போம் 
புத்தகத் திறனாய்வு :47
- மலைப்பூ -
Message has been deleted

தேமொழி

unread,
Apr 25, 2021, 1:15:46 AM4/25/21
to மின்தமிழ்

Tony Joseph - Early Indians

புத்தகத் திறனாய்வு

- ஆலடி எழில்வாணன்

thozhar ezhil vaanan.jpg
மனித பரிணாம வளர்ச்சியில் இந்திய துணைக்கண்டம் பகுதியை அடிப்படையாகக் கொண்டது  “Tony Joseph - Early Indians” என்ற ஆராய்ச்சி புத்தகம். ஆதி இந்தியர்கள் என தமிழிலும் இந்த புத்தகம் பலரை ஈர்த்துள்ளது.

எழுத்தாளர் டோனி யோசப் 30+ ஆண்டுகள் பொருளாதாரம் மற்றும் வணிகம் சார்ந்த பத்திரிக்கைகளில் (Economic Times, Business world and Business Standard) நிருபராக இருந்து ஆசிரியராக உயர்ந்தவர். தன்னை ஒரு நாத்திகவாதியாக அடையாளப்படுத்திக் கொள்ளத் தயங்காதவர் டோனி யோசப். இவருடைய முதல் புத்தகமே உலகப்புகழ் அடைந்தது. பரிணாமம் மற்றும் மரபணு போன்ற தலைப்புகளில் பலர் ஆராய, எழுத மற்றும் வாசிக்க என்பவற்றிற்குத் தானும் ஒரு காரணம் என பெருமை கொள்கிறார் டோனி யோசப்.

அழகாக, உலகத் தரத்தில் வடிவமைக்கபட்ட இந்தப் புத்தகம், பார்த்தவுடன் நம்மை கவரும் “never judge a book by its cover” என்பதைப் பொய்ப்பிக்கிறது. 1926- ல் மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட சிலையைப் பற்றிய ஆய்வுகளை,  2300 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த சுமார் 15 வயது நடனப்பெண், வழக்கத்தைவிட நீளமான கைகள், 24 வளையல்கள், 4 சங்கிலிகள், சிகை அலங்காரம் என அழகாக விவரிக்கிறார்.

“If you want to write, first read” என்ற சொற்றொடருக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் டோனி யோசப். இந்தப் புத்தகத்தில் அவர் மேற்கோள்களாக அடுக்கியுள்ள பல புத்தகங்கள், எழுத்தாளர்கள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் இதரத் தரவுகளே இதற்கு சாட்சி. 260+ பக்கங்களுடைய புத்தகத்தில் Bibliography மட்டுமே பத்து+ பக்கங்கள் என்றால் நினைத்துப் பார்க்கவும்.

இந்நாளில் அரப்பா, கீழடி என்ற செய்திகளால் நாம் ஈர்க்கப்பட, அவற்றை எல்லாம் விஞ்சும் வகையில் சுமார் 65000 - 80000 ஆண்டுகளுக்கு முன்னரே இன்றைய மத்திய பிரதேசத்தில், போபால் அருகில் உள்ள பிம்பேத்கா (Bhimbetka) என்ற இடத்தில் மனித தடம் உண்டு என ஆய்வுகளின் தரவுகளை அடுக்கி முதல் பந்தில் சிக்சர் அடித்து தூள் கிளப்புவது போல், ஆரம்பத்திலேயே இந்தியாவை பற்றிய ஒரு அரிய தகவலை சொல்லி "அட" போட வைக்கிறார் டோனி யோசப்.

நல்ல சமவெளியை சுற்றிலும் ஏழு மலைகள், நீர்நிலைகள், சிறிய விலங்குகள், பாறைகள், குகைகள் என பல இருக்க, சில குகைகளின் சுவற்றில் மனித கைத்தடங்கள், மேலும் அவற்றில் உள்ள கைகளின் அளவை வைத்து அது ஆண், பெண் அல்லது சிறுவர் என கணக்குகளை சொல்லி பிம்பேத்காவை விவரிக்கையில் நாம் ஆச்சரியப்படவில்லை என்றால் குறை நம்மிடமே.

“ பீட்சா (Pizza)”, இது என்ன? என ஒரு காலத்தில் கேட்டவர்கள் நாம். ஆனால் இன்று இது குக்கிராமத்தில் கூட கிடைக்கும் துரித உணவு. நம் இந்திய பகுதியின் 65,000 ஆண்டுகளின் மனித பரிணாமத்தை பீட்சாவோடு ஒப்பிடுகிறார் புத்தக ஆசிரியர். மனித பரிணாம ஆரம்பத்தின் பல்லாயிரம் ஆண்டுகளை பீட்சாவின் அடித்தளமாக (crust), கடந்த 10,000 ஆண்டுகளை பீட்சா மீது பரப்பும் தக்காளி குழைவு (sauce) போல, கடந்த சில ஆயிரம் ஆண்டுகளை பீட்சா மேல் தூவும் பாலாடைக்கட்டி (cheese) என, கடந்த பல நூற்றாண்டுகளை பலவகை உணவுகளை அடுக்குவது (toppings) என எடுத்துரைத்து நம் பரிணாமத்தை பீட்சாவுடன் சுவையாக சொல்லி சிலாகிக்க வைக்கிறார் டோனி யோசப்.

இந்திய துணைக்கண்டத்தில் கடந்த 65,000 ஆண்டுகளுக்கான மனித பரிணாமத்தையும், குறிப்பாக மரபணு ஆய்வு தரவுகளாலும் புரியவைக்கிறார். Haplogroup என்ற மரபணு குழுவால் ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதனின் பல லட்ச ஆண்டுகளின் பரிணாமத்தை மரபணு அறிவியலுடன் குறிப்பாக mtDNA போன்றவற்றை ஆசிரியர் புரியவைத்தது இந்தப் புத்தகத்தின் வெற்றி. 

உதாரணமாக உடல் செரிமானத்திற்கான DNA பற்றி கூறுகையில், ஆரியர்கள் பால் மற்றும் பால் பொருட்களை எளிதாக செரிக்கும் தன்மை உடையவர்கள் என்றும்  திராவிடர்கள் ஆடு, மாடு மற்றும் மீன்களை உண்டு செரிக்கும் தன்மை உடையவர்கள் என்றும் மரபணு வித்தியாசத்துடன் எடுத்துரைத்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.

குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தான் என்பதை உலகமே ஏற்றுக் கொண்ட போதிலும், சமீபகாலம் வரை சீனர்கள் இதனை ஏற்கவில்லை. தங்கள் உருவம், உயரம், சருமம் மற்றும் ரோமத்தின் வித்தியாசங்களை மேற்கோளிட்டு மறுத்தவர்கள், மரபணு ஆய்வின்படி உணர்ந்த பின்னரே ஏற்றனர்.

இது போன்ற ஆச்சரியங்களை மந்திரத்தோடு (Magic) ஒப்பிடுகிறார் டோனி யோசப். அதாவது சிறுவயதி்ல் நாம் மந்திரங்கள் மற்றும்  மந்திரவாதிகளை முதலில் ஆச்சரியமாகப் பார்ப்போம். அதன் பின்புலத்தில் உள்ள யுக்திகள் தெரிந்த பின் சற்று தளர்ந்து “அட இவ்வளவு தானா!” என நினைத்து சில நாட்களுக்குப் பிறகு ஆழமாக உற்று நோக்குவோம். இன்றைய கால கட்டங்களில் மரபணு ஆய்வை மனிதன் உற்றுநோக்குகிறான்.

மனித இனத்தின் தொட்டிலாகத் (Cradle of Human Civilisation) திகழ்கிறது ஆப்பிரிக்கா. மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு இடம்பெயர்வு (Migration) அதி முக்கிய காரணியாகிறது. பல ஆய்வாளர்கள் OoA - Out of Africa என்ற கோட்பாட்டை நம்புகின்றனர்.

ஆடு, மாடு போன்றவற்றின் உணவுக்காக மேய்த்தல் தொழிலுடன் இடம்பெயர்வு நடந்துள்ளது. Steppe (Eurasia தென் கிழக்கு ஐரோப்பா) என்ற இடம் சமமான நீர்நிலைகளுடைய, புல்வெளி நிலப்பரப்புடன் மனிதனுக்கு தோதாக அமைந்திருந்தது. இங்கு தான் வேளாண்மை ஆரம்பித்திருக்க வேண்டும் என டோனி யோசப் ஆதாரத்துடன் எடுத்துரைக்கிறார். வேளாண்மை வளர வளர மனிதனின் இடம்பெயர்வு குறைய ஆரம்பித்து  மக்கட்தொகை மிக வேகமாக உயர்ந்தது. சிலர் இடம்பெயர்வு செய்து இன்றைய ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப் பகுதிகளில் அரப்பா நாகரீகத்தைத் தோற்றுவித்தனர்.

மனித இனத்தின் இடம்பெயர்வு ஆப்பிரிக்காவில் தொடங்கி, ஐரோப்பா சென்று, அங்கிருந்து Steppe நிலப்பரப்பு வழியாக ஆசியா முழுக்க வெவ்வேறு திசைகளில் படர்ந்து, அலாச்கா வழியாக வட அமெரிக்கா, பிறகு தென் அமெரிக்கா என பரவி பல லட்ச ஆண்டுகளாக பரிமாணித்து இன்று பூமி முழுவதுமாக தழைக்கிறது.

தெற்காசிய துணைக்கண்டத்தில், பல திசைகளில், பல காலங்களில் இடம்பெயர்வு நடந்துள்ளது என்பதைப் பல ஆய்வுக் கட்டுரைகளை மேற்கோளிட்டு நிரூபிக்கிறார் டோனி யோசப். குறிப்பாக அரப்பா நாகரீகத்தைப் (Harappa Civilisation) பற்றி இந்தப்  புத்தகம் ஆழமாக அலசுகிறது. கிமு 6000 - ஆவது ஆண்டு காலத்தில் அதிக மக்கட்தொகை கொண்ட பகுதி, நகர நாகரீகம், வேளாண் சிறப்பு, வர்த்தகம், கலை, மொழி என ஏற்றமிக்கதாக விளங்கியது அரப்பா நாகரீகம்.

சாந்தி பாப்பு என்ற தொல்பொருள் ஆய்வாளர், சென்னை அருகே உள்ள அத்திரம்பாக்கத்தில்,  1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் பயன்படுத்திய கற்களாலான ஆயுதங்களை ஆதாரத்துடன் நிரூபித்தார். 

பரிணாம வளர்ச்சியால் எப்படி மனிதனின் உடலும், குணமும் காலப்போக்கில் மாறியதோ, அதனைப் போலவே மனிதன் கட்டுப்படுத்திய விலங்குகளின் தகவமைப்பும் (கொம்பு, பற்கள், வால், முடி) மனிதனுக்கு ஏற்றபடி மாறின. இதற்குத் தாவரங்களும் விதிவிலக்கல்ல. குறிப்பாக விதைகளின் தன்மை, தண்ணீரின் தேவை, வேர்கள் என பல உதாரணங்களை அடுக்குகிறார். பரிணாம வளர்ச்சியால் மனிதனின் இடப்பெயர்வு மிகவும் குறைந்து, ஆயுள் நீடித்து, மக்கள் தொகை பெருகியது. வீரமும், வலுவும் மிக்கவர்களே இடம் பெயர்ந்தனர்.

பல ஆய்வு ஆலோசனைகளுக்கு பிறகு இந்தியர்களை இரண்டாக வகுக்கிறார்கள் 
ANI - Ancestral North Indians (மூதாதைய வட இந்தியர்கள்)
ASI - Ancestral South Indians (மூதாதைய தென் இந்தியர்கள்)
மூதாதைய வட இந்தியர்கள் (ANI)  Steppe வழியாக அரபு, ஆப்கானிஸ்தான் மற்றும் சிந்து சமவெளி வழியாக வந்துள்ளனர். மூதாதைய தென் இந்தியர்கள் (ASI) கடல் பகுதியை ஒட்டிய அரபிக்கடல் வழியாக தென்னகம் வந்துள்ளனர். இன்றும் வட இந்தியர்களின்  மரபணுவில் பால் மற்றும் தானியங்களை உண்டு செரிக்கும் தன்மை கூடுதலாகவும், தென் இந்தியர்களின் மரபணுவில் இறைச்சியை உண்டு செரிக்கும் தன்மை அதிகமாகவும் உள்ளது எனவும் மரபணு ஆய்வுகள் உறுதி செய்கின்றன. ஆரிய, திராவிட என இரண்டு நாகரீகங்களும் விவசாயத்தை சார்ந்துதான் தழைத்துள்ளன.

நீர்நிலைகளை அமைத்து நீராதாரத்தைக் கட்டுக்குள் வைத்திருந்த பகுதி மெசபடோமியாவில் உள்ள ஊருக் பகுதி. வட மற்றும் தென் இந்தியர்கள்  இந்தப் பாதையைக் கடந்து வந்துள்ளதால் நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தனர். அரப்பா, மெசபடோமியா நாகரீகம் போலவே தெற்கிலும் ஒரு நாகரீகம் இருந்திருக்க வேண்டும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இன்று அரப்பாவிலும், கீழடியிலும் மனிதன் நீர் மேலாண்மைக்கான சான்றுகள் பல உள்ளன.

வட மற்றும் தென் இந்தியர்களுக்குள்  மரபணு, உருவம், உணவு, உடை எனவாறு வேறுபாடுகள் பலவாக இருந்தாலும், மொழிதான் இவர்களின் தனித்தன்மையைக் காட்டுகிறது. அரப்பா மொழிக் குடும்பம் திராவிட மொழிக் குடும்பம் என இரண்டு பிரிவுகளாக மொழியால் உருமாறியது.  தென்னிந்திய மக்கள் பேசிய மொழி அவர்களாகவே உருவாக்கியிருக்க வேண்டும். இங்கிருந்துதான் பல சொற்கள் இடப்பெயர்ந்துள்ளன. அதே சமயம் வட இந்திய மொழிகள் அதன் இடப்பெயர்வு பகுதிகளில் பேசிய மொழியைத் தழுவி,  மருவி புதுப் புது மொழிகளாகத் தோன்றி, பலமொழிகளை வழக்கொழிய வைத்துள்ளதைக் குறிப்பிட்ட பகுதியை இந்தப் புத்தகத்தின் முக்கிய பகுதியாக உணர்கிறேன். 

மொழிகளில் திராவிட மொழியின் ஆதிக்கமே உள்ளது என மரபணு ஆய்வு உட்பட பல ஆய்வுகளை மேற்கோள்களாகக் காட்டுகிறார். இதில் மிக சுவாரசியமானதாக, நாக்கை சுழற்றி பேசும் வார்த்தைகள் (Retroflex consonants) திராவிட மொழியின் தனித்தன்மை என நம்மை நிமிர வைக்கிறார் டோனி யோசப். 

கடந்த 2000 ஆண்டுகளாக ஆரிய மொழியினரின் ஆளுமைகள் வட மொழியை  வேத மொழி என்றழைத்து, கடவுளிடம் பேசும் மொழி என நம்பவைத்தனர். இரண்டாம்-மூன்றாம் நூற்றாண்டுகளில், மவுரிய பேரரசு காலத்தில் வேதமொழியாக சமசுகிருதம் இருந்துள்ளது. கடந்த 2000 ஆண்டுகளில் மட்டுமே இந்தியர்கள் 73 இனக்குழுக்களாக இருந்துள்ளனர். இத்தனை சிறிய இடத்தில் 73 இனக்குழுக்கள் என்பது மிக மிக ஆச்சரியமான ஒன்று. இந்த இனக்குழுக்களை பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வர்ணங்களாக, ரிக்வேதமென மவுரியர்கள் வகுத்தனர். அவை அப்படியே காலப்போக்கில் சாதிகளாக, படிநிலைகளாக பல நூற்றாண்டுகள் இருந்துள்ளன. சைவ, வைணவ, புத்தமதம், இசுலாம், கிருத்துவ என பல மதங்களின் ஆளுமையிலும் கடவுளிடம் உரையாடும் வேதமொழி என இன்றும் இதன் தாக்கம் உள்ளது. 

காந்தி, அம்பேத்கர், மார்கசு மற்றும் பெரியாரின் சிந்தனைகள் கூட இந்தப் படிநிலைகளை இன்னமும் மீட்க முடியவில்லை. 

Out of Africa என 60-80ஆயிரம் ஆண்டுகளாக இடம்பெயர்வு, பல திசைகளிலும், பல முறைகளிலும் இடம்பெயர்வு, அரப்பா நாகரீகம், இனக்கலப்பு, பின்னாட்களில் மொழி வேற்றுமை, மொழி ஆளுமை, கடவுள் வழிபாட்டில் மொழி, மதம் என உலகில் வேறெங்கும் இல்லாத படிநிலைகளை இந்திய துணைக்கண்டம் பெற்றுள்ளது. பல கலப்புகள் மற்றும் பல பங்களிப்புகளின் கலவையாகவே இன்று இந்தியர் என்ற ஒற்றை குறியீட்டில் உள்ளோம். ஆனால் உண்மையில் நாம் அனைவரும் குடியேறியவர்களே! 
"YES WE ARE MIGRANTS...."
---

தேமொழி

unread,
May 1, 2021, 1:20:59 AM5/1/21
to மின்தமிழ்
periyar book.jpg

Deccan Chronicle நாளிதழில் பணியாற்றும் ( Political Editor) பாபு ஜெயக்குமார் அவர்கள் எழுதிய 
"Periyar E.V. Ramasamy - A Man ahead of his Time " நூலின் திறனாய்வு... 

வாருங்கள் படிப்போம்
புத்தகத் திறனாய்வு:48

A Man ahead of His Time - G.Babu jayakumar
திறனாய்வு: ரேணுகா குணசேகரன்

*நாள்:May 1, 2021
சனிக்கிழமை மாலை 7.30 மணி

Join Zoom Meeting

Meeting ID: 897 9827 9431
Passcode: 956876

அனைவரும் பங்கேற்க அன்போடு அழைக்கிறோம்

தேமொழி

unread,
May 1, 2021, 1:24:30 PM5/1/21
to மின்தமிழ்


On Friday, April 30, 2021 at 10:20:59 PM UTC-7 தேமொழி wrote:
periyar book.jpg
A Man ahead of His Time - G.Babu jayakumar
திறனாய்வு: ரேணுகா குணசேகரன்

தேமொழி

unread,
May 3, 2021, 4:19:24 PM5/3/21
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) ›
மூலம் வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்

PM0789:
கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்
ரா. பி. சேதுப் பிள்ளை
____________________________

PM0788:
புது வெள்ளம் (சங்கநூற் காட்சிகள் )
கி. வா. ஜகந்நாதன்
____________________________

PM0787: 
அம்பிகாபதி காதல் காப்பியம்
(அருஞ்சொற் பொருளுடன்)
ஆசிரியர் : சுந்தர சண்முகனார்
____________________________

PM0786: 
பெண்ணின் பெருமை
அல்லது வாழ்க்கைத்துணை
திரு வி. கலியாணசுந்தர முதலியார்
____________________________

தேமொழி

unread,
May 4, 2021, 11:27:52 PM5/4/21
to மின்தமிழ்


"தனிமையின் நூறு ஆண்டுகள்"

——   பென்ஸி


"One Hundred Years of Solitude"
("தனிமையின் நூறு ஆண்டுகள்")

உலக இலக்கியத்தின் மிகமுக்கியமான படைப்பாகக் கருதப்படும் நாவல். புனித பைபிளோடும், ஷேக்ஸ்பியரின் படைப்புகளோடும் வைத்துப் போற்றப்படும் நூல். சார்ல்ஸ் டிக்கன்ஸ், லியோ டால்ஸ்டாய் போன்ற காலத்தை வென்று நிற்கும் எழுத்தாளர்கள் வரிசையில் இதன் ஆசிரியரையும் உட்கார வைத்த  நாவல். ஒரே நேரத்தில் விமர்சகர்களாலும் பெரும் அளவிலான வாசகர்களாலும் போற்றப்பட்ட நாவல். புனித பைபிளுக்குப் பிறகு அதிக அளவில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் என எடுத்துக் கொண்டால் அது செர்வான்டீஸின்  "டான்கிஹோடே" ("Don Quixote") நாவல்தான். அதன் பிறகு உலகம் முழுவதும் தமிழ் உட்பட 46 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, 5 கோடிப் பிரதிக்குமேல் விற்பனையாகிச் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் நாவல் காப்ரியல் கார்சியா மார்கஸின் "One Hundred Years of Solitude" ("தனிமையின் நூறு ஆண்டுகள்").

சிறந்த படைப்பிற்காகப் பல இலக்கிய விருதுகளைப் பெற்ற இந்தச் செவ்விலக்கிய நாவல் 1982 ஆம் ஆண்டு மார்கஸிற்கு நோபல் பரிசையும் பெற்றுக்கொடுத்தது. 1967 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியிலும் 1970 ஆம் ஆண்டு ஆங்கில மொழியிலும் வெளியிடப்பட்டன. அற்புதங்களும் யதார்த்தமும் ஒன்றுக்கொன்று ஊடாடும் மாய யதார்த்தம் என்னும் இலக்கிய வகைமையைச் சார்ந்தது இந்த நாவல்.

நாவலுக்குள் செல்வதற்கு முன்பு 'மாய யதார்த்தம்' பற்றிப் பார்ப்போம். 1925 ஆம் ஆண்டு ஜெர்மன் வரலாற்றாய்வாளர், கலைவிமர்சகர் ஃபிரான்ஸ் ரோ (Franz Roh)  தான் 'மாய யதார்த்தம்' (magical realism) என்ற பதத்தை உருவாக்கினார். அதற்குப் புதிய பரிமாணம் கொடுத்தவர் மார்கஸ். இலக்கியத்திற்காக நோபல் பரிசைப் பெற்றுக்கொண்ட  மார்கஸ் தனது ஏற்புரையில்;
‘‘லத்தீன் அமெரிக்காவின் யதார்த்தம் நீங்கள் கற்பனையில் கூடக் காணவியலாத கொடூரங்களையும் விநோதங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அந்த யதார்த்தங்களை விவரிக்க பாரம்பரியமான உத்திகள் எதுவும் எங்களிடம் இல்லை என்பதே அந்தத் தனிமையின் சாரம்" எனக் கூறித் தனது நாவலுக்கு ஒரு முன்னுரையை முன்வைக்கிறார்.
"டான்கிஹோடே" நாவலுக்குப் பிறகு ஸ்பானிஷ் மொழியில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு" என்று பாப்லோ நெருடாவாலும், "ஆதியாகமத்துக்குப் ( Genesis) பிந்தைய படைப்புகளில் ஒட்டுமொத்த மனித குலமும் படிக்க வேண்டிய முதல் படைப்பு” என்று வில்லியம் கென்னடியாலும் புகழப்பட்ட நாவல் ”தனிமையின் நூறு ஆண்டுகள்". 

பின்னாளில் மாய யதார்த்தத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்ட படைப்பாளுமைகளுள் குறிப்பிடத் தக்கவர்களாக இசபெல் அயன்டே (Isabel Allende), டோனி மேரிசன், சல்மான் ருஷ்டி ஆகியோரைச் சொல்லலாம். மாய யதார்த்தம் இவ்வாளுமைகளுக்கு அற்புதமான யதார்த்தமாக அமைந்ததில் வியப்பில்லை. அது நவீன உலகத்தை உண்மையான பார்வையுடன் கூர்மைப்படுத்திக் கொடுத்தது. அத்துடன் அமானுஷ்யக் கூறுகளோடு வடித்துக்கொடுக்கும் புனைவு இலக்கியத்தின் ஒரு வகைமையாகவும் ஆகிப்போனது.
மார்கஸின் அறிவுத்தேடல் நம்மை வியப்பிலாழ்த்தும்.

வளரிளம் பருவத்திலிருந்து நூல்களைத் தேடித்தேடிப் படிக்கத் தொடங்கினார், இயந்திரத்தனமாகப் படித்தார். ஹெமிங்வே, தாமஸ் மேன் (Mann),  அலிக்ஸாண்டர் ட்யூமா (Dumas), ஜேம்ஸ் ஜாய்ஸ், ஃபாக்னர், ஸோஃபகிலீஸ், நெதானியல் ஹாதார்ன், மெல்வில், டி.எச். லாரன்ஸ், காஃப்கா, வெர்ஜீனியா ஊல்ஃப் என நீளும் வரிசை. “நமக்கும் முன்னால் இருக்கும் பத்தாயிரம் ஆண்டு கால இலக்கியங்களைப் பற்றிய ஞானம் சிறு அளவில்கூட இல்லாமல் ஒரு நாவல் எழுத யாராவது உத்தேசிக்க முடியுமா என்று என்னால் கற்பனை செய்துபார்க்க முடியவில்லை” என்று குறிப்பிடுகிறார். அதே நேரத்தில், “நான் வியந்து போற்றிய படைப்பாளிகளைப் போலவே எழுத நான் ஒருபோதும் முயன்றதில்லை. மாறாக, அவர்களை என் எழுத்தில் பிரதிபலிக்காமல் இருக்க என்னால் முடிந்ததையெல்லாம் செய்திருக்கிறேன்” என்று முடிக்கிறார் மார்கஸ்.

1965 ஆம் ஆண்டு மெக்ஸிகோவின் அகாபூல்கா நகரத்திற்கு காரில் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென, "தனிமையின் நூறு ஆண்டுகள்" நாவலை எழுதுவதற்கான உள்ளுணர்வு வெளிப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு இல்லம் திரும்புகிறார். 18 மாதங்களாக இந்த நாவலை எழுதுகிறார். "நான் நாவலை முடித்ததும் என் மனைவி என்னிடம் சொன்னார் - 'உண்மையிலேயே நாவலை முடித்துவிட்டீர்களா ? நமக்கு 12,000 டாலர்கள் கடன் சேர்ந்திருக்கிறது" என்பதை நினைவுகூருகிறார் ஏழை எழுத்தாளர் மார்கஸ்.

கதைக்களம் - 19ம் நூற்றாண்டின் தொடக்கம். பூவன்டீயா குடும்பத்தின் ஏழு தலைமுறை வாழ்க்கையைச் சொல்லி முடிகிறது நாவல். ஜொஸி ஆர்கேடியா பூவன்டீயா தன் மனைவி உர்சுலா இகுவாரா உடன் தன்னிருப்பிடத்தை விட்டு வெளியேறுகிறார். இந்தப் பயணத்தோடு நாவல் தொடங்குகிறது. பயணத்தின் காரணம் தன்னை ஆண்மையற்றவன் எனத் திட்டியவனைக் கொலைசெய்ததுதான். பயணத்தின் இடையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஒருநாள் தன் கனவில் தெரிந்த மகோன்டோ எனும் கண்ணாடிகளின் நகரத்தை அந்த ஆற்றங்கரையிலேயே கட்டமைக்கிறார். சதுப்பு நிலப் பகுதியில் உருவாகும் மகோன்டோ நகரம் நூற்றாண்டுகளின் ஊடாக வளர்ந்து பெருநகரமாக மாறுகிறது. புவன்டீயா வம்சத்தைச் சேர்ந்த ஏழு தலைமுறைகள் அந்த நகரத்தின் வளர்ச்சிக்கும், இருப்பிற்கும், அழிவுக்கும் மையமாகவும் அமைகின்றன. உறக்கமின்மை, கொள்ளை நோய், உள்நாட்டுப் போர், பழிவாங்கல்கள் என அனைத்தும் அந்த நகரத்தின் வரலாற்றை உருவாக்குகின்றன.

ஓர் ஒப்பீட்டிற்காக, கொஞ்சம் உடோபியன் நகரத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் மார்கஸின் மகோன்டா நகருக்குத் திரும்புவோம்.

"உடோபியா":
மதத்தின் பெயரிலான நயவஞ்சகம் ஐரோப்பிய அரசியலின் ஊழல் ஆகியவற்றை மறைமுகமாகச் சாடும் நையாண்டிச் சித்திரம்தான் சர் தாமஸ் மோரின் "Utopia". லத்தீன் மொழியில் 1516 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட நூல். இந்த நுாலில் சர் தாமஸ் மோர், ஒரு தீவைப் படைத்து, அங்குச் சிறப்பான சமூக ஒழுங்குகளை, வாழ்க்கைமுறைமையை, பண்பாட்டைப் பாதுகாக்கக்கூடிய ஒரு சமூகத்தைக் கட்டமைக்கிறார். உடோபியன் மக்கள் மதநம்பிக்கையுடையவர்கள், மதசகிப்புத்தன்மை யுடையவர்கள். அங்கு யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம். நாத்திகம், சூது, வன்முறை, பழிக்குப்பழி ஆகியவை முழுமையாகத் தடைசெய்யப்படுகின்றன.  இந்த நூல் வெளிவந்த பிறகு,  "Utopia" என்ற பதம் "அனைத்தும் முழுநிறைவாக உள்ள, கற்பனையில் மட்டுமே காணக்கூடிய ஓரிடம் அல்லது ஒரு நிலை" எனும் பொருளோடு ஆங்கில அகராதிக்குள் நுழைந்துவிட்டது. 

ஆனால் மார்கஸ் படைத்த மகோன்டா நகரம் உடோபியன் நகரமல்ல. கொலம்பியா நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நகரமாகப் பரிணமிக்கிறது. மகோன்டா நகர மக்களின் உரிமைக்கான போராட்ட எண்ணங்கள், போராட்டங்கள், கொலம்பியா நாட்டின் வரலாற்றுப் பின்னணியை நினைவூட்டுவனவாக இருக்கின்றன. தொடர்ந்து லிபரல் கட்சியின் சீர்திருத்தத்திற்கான போராட்டங்கள், ரயில்வேக்களின் வருகை, ஆயிரம்நாள் யுத்தம், குறிப்பாக கார்பரேட் கம்பெனியான ஐக்கிய பழக் கம்பெனியின் மேலாதிக்கம் கதையில் அமெரிக்கப் பழக் கம்பெனியாக மார்கஸ் படைத்திருப்பார். தொடர்ந்து சினிமாக்கள், தானியங்கி வாகனத் தொழிற்சாலை, வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களைப் படுகொலை செய்யும் நிகழ்வு என ஓர் உண்மையான கொலம்பியா நாட்டின் வரலாற்றைத்தான் மகோன்டா நகரின் வரலாறாக விரித்துக்கொண்டு போகிறார் மார்கஸ்.

benzy.jpg

நாவலில் வரும் தொன்மையான கதைகள் தங்களின் தோற்றத்தையும் அடித்தளத்தையும் குறிக்கின்றன. கதைமாந்தர்கள் புராணக் கதாநாயகர்களை ஒத்திருக்கிறார்கள். ஆங்காங்கே தெளிக்கப்படும் அமானுஷ்யக் கூறுகள் என இந்த மூன்று முக்கியப் புள்ளிகளில் நாவல் பயணிக்கிறது. கர்ப்பத்திலிருந்து தொடங்கும் தனிமை தொடர்ந்து வருகிறது. ஒரே குழுவாக வசித்தாலும், குடும்பத்தில் யாரும் தங்களுக்குள் பேசிக்கொள்வதில்லை. இந்த நாவலில் எல்லா பௌதிக விதிகளையும் உடைக்கிறார் மார்கஸ். அதிகமான கதைமாந்தர்கள் துன்பங்களைச் சுமப்பதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறார்கள். தமக்கு அளிக்கப்பட்டுள்ள விதியை நம்பி ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்கு அமைதி கிடைப்பதாக உணர்கிறார்கள்.

ஜொஸி ஆர்கேடியா குடும்பம் தங்களுக்குப் பிறகு ஆறு தலைமுறைகளோடு வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். ஆறு தலைமுறைகளிலும் ஆண்களுக்கு 'ஜொஸி ஆர்கேடியோ அல்லது அவ்ரேலியானோ' என்ற பெயர்களும் பெண்களுக்கு 'உர்சுலா, அமரேன்டா, ரெமேடியோஸ்' என்ற பெயர்களும் வைக்கப்படுகின்றன. 'ஜொஸி ஆர்கேடியோ' நான்கு முறைகளும், 'அவ்ரேலியானோ' 22 முறைகளும், 'ரெமேடியோஸ்' மூன்றுமுறைகளும், 'அமரான்டா', 'உர்சுலா' இரண்டு முறைகளும் வருகின்றன. எனவே படிக்கும்போது இந்தப் பெயர்கள் ஒரு குழப்பத்தை உண்டுபண்ணும்.

மகோன்டா நகரம் காலப்போக்கில் வளரத் தொடங்குகிறது. வருடக்கணக்காகத் தனித்திருந்த நகரத்திற்கு வெளியிலிருந்து ஆண்டுக்கொரு முறை ஜிப்ஸிகள் சுற்றுலா வரத்தொடங்குகிறார்கள். அவர்களுடன் தொழில்நுட்பமும், மின் கருவிகளும் வருகின்றன. புதிய, தனித்த கொலம்பியா நாட்டிற்கு மகோன்டா நகரத்தின் வெளிச்சம் தெரிகிறது. மகோன்டாவில் புதிய கட்சிகள் தொடங்கப்படத் தேர்தலும் வருகிறது. கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது. எதிர்க்கட்சியாக லிபரல் கட்சி. அவ்ரேலியானோ பூவன்டீயா மக்களுக்கான உரிமைப்போரில் களத்தில் இறங்க, தலைமைப் பொறுப்பு அவரைத் தேடி வந்து தலைவனாக்குகிறது. பல வருடங்கள் யுத்தம் நீடிக்க, ஏமாற்றங்கள் உந்தித் தள்ள அமைதிவேண்டித் தன் இல்லம் திரும்புகிறார் தலைவன். தனது பணிமனையில் தங்க மீனைச் செய்யும் பணியில் முழுவதுமாக ஈடுபடுகிறார், நிற்க.

மகோன்டா நகரம் பெருநகரமாகித் தனித்த நாடாகிறது. சிறு நகரங்களை இணைக்க ரயில்வே நுழைகிறது. கூடவே வெளிநாட்டினர் கால் பதிக்கின்றனர். அப்புறமென்ன அமெரிக்காவிற்கு மூக்கில் வேர்க்க, மகோன்டா நகருக்கு வெளியே ஆற்றின் குறுக்கே தனது மிகப்பெரிய பழத்தோட்டத்தை நிர்மாணிக்கிறது அமெரிக்கப் பழக் கம்பெனி. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுடன் கம்பெனிசெழிக்க, மகோன்டா நகரம் செழிக்கத் தொழிலாளர்கள் கேள்விகள் கேட்கத் தொடங்குகின்றனர். வேலைநிறுத்தம் தொடர, பக்கத்து நாடான கொலம்பியா உதவியுடன் வேலைநிறுத்தம் நசுக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். 1928 ஆம் ஆண்டு கொலம்பியா நாட்டில் நடைபெற்ற "பனானாப் படுகொலைகள்" ளைக் கண்டிக்கும் வகையில் ஆவணப்படுத்துகிறார் மார்கஸ். அத்துடன் சரித்திரத்தில் வளமிக்க நாடுகளின் சுதந்திரங்கள் பாழ்படுத்தப்படும் வரலாறுகளையும், நாட்டின் வளங்கள் சூறையாடப்பட்டுக் கொள்ளையடிக்கப்படும் வரலாறுகளையும் குறியீடுகளாக மார்கஸ் படம்பிடிக்கிறார்.

இது இப்படி இருக்க நாவல் ஒரு பரிதாப சோகமுடிவை நோக்கிப் பயணிக்கிறது. மகோன்டா நகரம் கைவிடப்பட்ட நகரமாக வீழ்கிறது. பூவன்டீயா குடும்பத்தின் அவ்ரேலியானோவும் அமரேன்டா உர்சுலாவும் மிஞ்சுகின்றனர். அவர்களுடைய பிறப்பு அவர்கள் தாத்தாவினால் மறைக்கப்பட்டிருக்கிறது. சகோதர, சகோதரியான அவர்கள் தங்களின் உறவு முறைகள் தெரியாமலே தங்களுக்குள் மணமுடிக்க, பன்றி வாலுடன் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் அமரேன்டா உர்சுலா. எது நடக்கக்கூடாது என்ற பயத்தில் பூவன்டீயா குடும்பம் ஆறு தலைமுறைகளாக, வருடங்களைத் தள்ளினார்களோ அது, 'பன்றி வாலுடன் குழந்தை' - நடந்துவிட, அந்தக் கணத்திலேயே மரணிக்கிறாள் இளம் தாய் உர்சுலா. கடைசி பூவன்டீயா குடும்ப உறுப்பினர் அவ்ரேலியானோ இப்போது, பழைய கையெழுத்தேட்டை வாசிக்கிறான். 'பன்றி வாலுடன் குழந்தை பிறப்போடு மகோன்டா நகரம் துடைத்தெடுக்கப்படும்' என்ற வரியைப் படிக்கும்போதே பெரும் புயல் புறப்பட்டு வரத்தொடங்குகிறது - சுபம்.

2021, பிப்ரவரி 16 ஆம்நாள் மார்கஸின்  (Gabriel García Márquez ——  6 March 1927 - 17 April 2014) 95 ஆம் பிறந்தநாளைமுன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை.   புனித பைபிளுக்குப் பிறகு, தமிழ் உட்பட 46 மொழிகளில் மொழியாக்கம் கண்டு, 5 கோடிப் பிரதிக்குமேல் விற்பனையாகி, விற்பனையில் இன்றும் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் செவ்வியல் நாவலைப்பற்றிய ஒரு சிறிய அலசல் இது. "காக்கைச் சிறகினிலே" மே 2021 இதழில் எனது கட்டுரை "தனிமையின் நூறு ஆண்டுகள்".  இதழ் ஆசிரியர் தோழர் வி. முத்தையா உள்ளிட்ட ஆசிரியர் குழுவிற்கும், ஆசிரியர் குழு இரா. எட்வின் தோழருக்கும் நன்றி. எனது இயற்பெயரிலேயே கட்டுரை வெளிவந்துள்ளது. 

---

தேமொழி

unread,
May 5, 2021, 1:40:21 AM5/5/21
to மின்தமிழ்


அழ நாடு - நூல் மதிப்புரை 

முனைவர்.க.சுபாஷிணி 

அழ நாடு - எனக்குப் பரிச்சயமில்லாத ஒரு பெயர். இதுவே நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை எழுப்பி விடுகிறது. அழ நாடு எனக் குறிக்கப்படுவது எது என்பதை விளக்குவதிலிருந்து நூலாசிரியர் நூலின் பயணத்தை வடிவமைத்திருக்கிறார்.  இன்றைய தேனி மாவட்டத்தின் பழைய பெயர் அழ நாடு. இந்தப் பெயர் கொண்ட பிற்காலப் பாண்டிய மன்னர்கள் காலக் கல்வெட்டுக்கள் பலவற்றை இதற்குச் சான்று அளிக்கின்றார். இது தேனி மாவட்டம் முன்னர் அழ நாடு அல்லது அள நாடு என்று வழங்கப்பட்டு வந்த செய்தியை உறுதிப்படுத்துவதாக அமைகிறது.
azha nadu.JPG
இந்த நூலில் குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பு என்னவென்றால், ஒரு நகரம் அல்லது ஊரைப் பற்றிய வரலாறு என்ற வட்டத்திற்குள் மட்டும் அடங்கிவிடாது, தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறைக்கு புதியவர்களாக இருப்பவர்களுக்கு தொல்லியல் பற்றிய ஓர் அறிமுகம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தையும் மையமாகக் கொண்டு சில குறிப்பிடத்தக்க முக்கிய பகுதிகளையும் இந்த நூலில் இணைத்திருப்பது தான். அந்த வகையில் நூல் தொல்லியல்  துறையில் அடங்கி இருக்கின்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் அவற்றின் விளக்கங்கள், காலம் அறிதல் என்ற வகையில் கி.மு கி.பி என்ற பொதுவான வழக்கங்களில் இருந்து பொ.ஆ.மு, பொ.ஆ என்ற வகையில் வரலாற்று ஆண்டு முறை விவரிக்கப் பட வேண்டியதன் அவசியத்தை விளக்குகின்றது, மிக எளிமையாக.

 அதன் தொடர்ச்சியாக தமிழின் எழுத்து மாற்றங்கள் என்ற தலைப்பில் தமிழி, வட்டெழுத்து, சோழர்கால தமிழ் வளர்ச்சி, கிரந்த எழுத்துக்கள் என சில எளிய விளக்கங்களையும் இணைத்திருக்கிறார். இதைப்போலவே நூலின் இறுதியில் இன்றைய தேனி பகுதி முன்னர் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் ஆட்சி எல்லைக்கு உட்பட்டதாக இருந்தமையால் பாண்டிய மன்னர்கள் பெயர்களைத் தாங்கிய பட்டியலையும் நூலில் இணைக்கின்றார். அந்தவகையில் சங்ககால பாண்டியர், முற்காலப் பாண்டியர்கள், இடைக்காலப் பாண்டியர்கள், பிற்காலப் பாண்டியர்கள் என பாண்டிய மன்னர்கள் பற்றிய நீண்ட பட்டியலும் அதன் பின்னர் மதுரையை ஆட்சி செய்த சுல்தான்களின் பெயர்கள், அவர்களது ஆட்சிக் காலம் அதன் பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற நாயக்க மன்னர்களின் பெயர்கள், காலம் என இந்தப் பகுதி நூலுக்கு பொதுவான பல செய்திகளையும் வழங்குவதாக அமைகிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுத் தடயங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு ஒன்று திரட்டி இந்த நூலில் வழங்க வேண்டும் என்று ஆசிரியர் செய்த முயற்சி நூலில் வெளிப்படுகிறது. அந்த வகையில் இந்த மாவட்டத்தில் உள்ள பாறை ஓவியங்கள், நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், நடுகற்கள், சமணச் சிற்பங்கள், பௌத்த சின்னங்கள், கோயில் கல்வெட்டுகள், கண்ணகி பற்றிய செய்திகள், ஓலைச்சுவடிகள், சதிக்கல், வீரக்கல் செப்பேடுகள் என விரிவான வரலாற்றுச் சின்னங்கள் நூலில் குறிப்பிடப்படுகின்றன.

இந்த நூலில் இடம்பெறுகின்ற அனைத்துத் தகவல்களும் பெரும்பாலும் தமிழகத் தொல்லியல் கழக வெளியீடான ஆவணம் இதழில் வெளிவந்த பல்வேறு
 ஆய்வுக்கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு திரட்டப்பட்ட தகவல்களாக அமைகின்றன. அவற்றோடு தேனி மாவட்டம் பற்றிய ஏனைய பிற வரலாற்று ஆய்வாளர்கள் வழங்கியுள்ள பல்வேறு கட்டுரைகள் நூல்கள், செய்திகள் ஆகியவற்றைத் தாங்கிய தொகுப்பாகவும் அமைகின்றன.

நூலில் குறிப்பாக பாறை ஓவியங்கள் பற்றிய பகுதி மற்றும் புலிமான் கோம்பை கல்வெட்டு  பற்றிய செய்திகள் விரிவாகவே வழங்கப்பட்டிருக்கின்றன. நினைவுச் சின்னங்கள் ஒவ்வொன்றும் அவை இருக்கின்றன நில எல்லை குறியீடுகள் (Google coordinate) வழங்கப்பட்டிருப்பது இந்தச் சின்னங்களைத் தேடிச்செல்லும் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக உதவும் ஒன்று. இதனைத் திட்டமிட்டு நூலை வடிவமைத்த நூலாசிரியர் பாராட்டுதலுக்கு உரியவர்.

தேனி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களை அறிமுகம் செய்துகொள்ள வேண்டும் என விரும்பும் ஒவ்வொருவரும் இந்த நூலை ஒரு கையேடாகவே பயன்படுத்தலாம். அந்த அளவிற்கு நூல் தேனி மாவட்டத்துச் சின்னங்களைப் பட்டியலிட்டு தகவல் வழங்கியிருக்கின்றது. இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு தொல்லியல் பயணத்தைத் திட்டமிட்டு தேனி மாவட்டத்துச் சின்னங்களை நேரில் சென்று காண இந்த நூல் நிச்சயம் வரலாற்று ஆர்வலர்களுக்குப் பயனளிக்கும்.

---
நூல்: அழ நாடு - தேனி மாவட்ட தொல்லியல் சுவடுகள்
நூலாசிரியர்: அ.உமர் பாரூக்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்



தேமொழி

unread,
May 6, 2021, 4:25:45 PM5/6/21
to மின்தமிழ்
Dr.Sivaramakirishnan Books.JPG
1. சிதம்பரத்தின் புவிசார் அமைப்பும் ஊர் உருவாக்கமும் - ரூ100/-
2. இராஜேந்திர சோழனின் ஒடிசா வெற்றி-ரூ100/-
முனைவர்.ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் எழுதிய இரண்டு நூல்கள் - 
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் அணிந்துரையுடன் வெளிவந்துள்ளன. 

நூல்களைப் பெற விரும்புபவர்கள்
Jothi Vel Moorthy 9884912020 
எண்ணில் திரு ஜோதிவேல் அவர்களை தொடர்பு கொள்க. நன்றி!
---

தேமொழி

unread,
May 8, 2021, 3:25:55 AM5/8/21
to மின்தமிழ்
இன்று மாலை 7.30 மணிக்கு ..... 

Thozhar EzhilVannan.JPG
Thozhar EzhilVannan2.JPG

வாருங்கள் படிப்போம்
புத்தகத் திறனாய்வு:49

21 Lessons for the 21st Century” - Yuval Noah Harari
திறனாய்வு: ஆலடி எழில்வாணன்

Time: May 8, 2021
சனிக்கிழமை மாலை 7.30 மணி

Join Zoom Meeting

அனைவரும் பங்கேற்க அன்போடு அழைக்கிறோம்

நிகழ்ச்சி நிரல்:
வரவேற்பு
7.30- 7.35 p.m
 பெ. உமா மகேஸ்வரி
7.35 - 7.40 p.m
 அறிமுக உரை
இளம் பேச்சாளர் ராமர்
7.40 - 8.20 p.m
திறனாய்வு 
ஆலடி எழில்வாணன்
8.20 - 8.25 p.m
ஆய்வு நிறைவுரை:ஆர்வலர் ராஜலட்சுமி
8.25 - 8.40 p.m
கேள்வி - பதில்
8.40 p.m
நன்றியுரை

இந்த வாரத் திறனாய்வாளர் திரு.ஆலடி எழில் வாணன் அவர்களைப் பற்றி...
"Attitude decides your Altitude"
இவரது விருப்பமான மேற்கோள்..
பட்ட மேற்படிப்பு முடித்தபின் மென்பொருள் வல்லுநராக அமெரிக்காவில் மூன்று வருடப் பணி..
திருநெல்வேலி ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி மற்றும் கலை,அறிவியல் கல்லூரிகளின் நிறுவன இயக்குநர்..
2010 முதல்  " Vilpower solutions "  என்னும் கிராமப்புற மேம்பாட்டிற்கான   BPO நிறுவனம்..
படிப்பது ,படைப்பது,விளையாட்டு,
பயணிப்பது இவருக்கு விருப்பமான விஷயங்கள்...
தமிழ் உணர்வு,சமூகம் சார்ந்த சிந்தனை என திராவிட உணர்வு இவருக்குத் தந்தை திரு.ஆலடி அருணா அவர்களிடமிருந்து இயல்பாக அமைந்த ஒன்று..


தேமொழி

unread,
May 11, 2021, 11:05:14 PM5/11/21
to மின்தமிழ்
iraiyanbu.JPG
வெ.இறையன்பு இ...  வேண்டுகோள் 
_________________________

iraiyanbu2.jpg
-----------



தேமொழி

unread,
May 11, 2021, 11:09:40 PM5/11/21
to மின்தமிழ்
வெ.இறையன்பு இ...  -  எழுதியுள்ள நூல்கள்
  1. இலக்கியத்தில் மேலாண்மை
  2. ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
  3. படிப்பது சுகமே
  4. சிற்பங்களைச் சிதைக்கலாமா
  5. பணிப் பண்பாடு
  6. ஆத்தங்கரை ஓரம்
  7. சாகாவரம்
  8. வாய்க்கால் மீன்கள்
  9. நரிப்பல்
  10. Steps to Super Student
  11. சிம்மாசன சீக்ரட்
  12. துரோகச் சுவடுகள்
  13. ஏழாவது அறிவு பாகம்-1
  14. ஏழாவது அறிவு பாகம்-2
  15. ஏழாவது அறிவு பாகம்-3
  16. அரிதாரம்
  17. ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்
  18. பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்
  19. அழகோ அழகு
  20. சின்னச் சின்ன வெளிச்சங்கள்
  21. உள்ளொளிப் பயணம்
  22. ஓடும் நதியின் ஓசை பாகம்-1
  23. ஓடும் நதியின் ஓசை பாகம்-2
  24. மென்காற்றில் விளை சுகமே
  25. முகத்தில் தெளித்த சாரல்
  26. முடிவு எடுத்தல்
  27. நேரம்
  28. காகிதம்
  29. வனநாயகம்
  30. வரலாறு உணர்த்தும் அறம்
  31. ஆர்வம்
  32. ஆணவம்
  33. மருந்து
  34. மழை
  35. திருவிழாக்கள்
  36. இணையற்ற இந்திய இளைஞர்களே
  37. ரயில் பயணம்
  38. விவாதம்
  39. பொறுமை
  40. எது ஆன்மிகம்
  41. வைகை மீன்கள்
  42. பூனாத்தி
  43. வேடிக்கை மனிதர்கள்
  44. முதல் தலைமுறை
  45. நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும்
  46. வாழ்க்கையே ஒரு வழிபாடு
  47. சறுக்கு மரம்
  48. உழைப்பால் உயர்வோம்
  49. சின்னச் சின்ன மின்னல்கள்
  50. திருப்பாவைத் திறன்
  51. திருவெம்பாவை
  52. அன்புள்ள மாணவனே
  53. உச்சியிலிருந்து தொடங்கு
  54. தர்மம்
  55. இயற்கை
  56. மலர்கள்
  57. முதிர்ச்சி
  58. நட்பு
  59. தரிசனம்
  60. சந்தித்ததும் சிந்தித்ததும்
  61. Ancient Yet Modern – Management Concepts in Thirukkural
  62. சுய மரியாதை
  63. இல்லறம் இனிக்க
  64. எது சரியான கல்வி
  65. அச்சம் தவிர்
  66. அவ்வுலகம்
  67. நின்னிலும் நல்லன்
  68. போர்த்தொழில் பழகு
  69. பத்தாயிரம் மைல் பயணம்
  1. வையத் தலைமைகொள்
  1. சிதறு தேங்காய்
  2. வியர்வைக்கு வெகுமதி
  3. மேலே உயரே உச்சியிலே
  4. மனிதன் மாறிவிட்டான்
  5. உன்னோடு ஒரு நிமிஷம்
  6. எப்போதும் இன்புற்றிருக்க
  7. உலகை உலுக்கிய வாசகங்கள்
  8. கேள்வியும் நானே பதிலும் நானே
  9. செய்தி தரும் சேதி
  10. Comparing Titans – Thiruvalluvar and Shakespeare
  11. Random Thoughts
  12. Effective Communication : The Kambar Way
  13. கல்லூரி வாழ்க்கை
  14. நினைவுகள்
  15. பிரிவு
  16. சேமிப்பு
  17. சிக்கனம்
  18. சுத்தம்
  19. தாமதம்
  20. தவம்
  21. தூக்கம்
  22. உடல்
  23. காதல்
  24. கருணை
  25. தனிமை
  26. வாழ்க்கை
  27. வைராக்கியம்
  28. அழகு
  29. நம்பிக்கை
  30. மூளைக்குள் சுற்றுலா
  31. காற்றில் கரையாத நினைவுகள்
  32. நமது அடையாளங்களும் பெருமைகளும்

தேமொழி

unread,
May 14, 2021, 6:41:29 PM5/14/21
to மின்தமிழ்
#WhatsappShare 

வெளிநாடு வாழ் தமிழர்
தோழர்களின்
தமிழ்ப் புத்தகங்கள் ,
குழ
நீங்களும் உங்கள் தோழர்களையும்
இனைத்து
கொள்ளுங்கள் "
நல்ல கருத்துக்கள்
நிறைந்த ,
பல வரலாற்று
சுவடுகளையும்
தினசரி நாளிதழ்களையும் ,
படித்து பயன்
அடையுங்கள்
தோழர்களே!  

பகுதி 1

பகுதி  2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

பகுதி 6 

பகுதி 21

பகுதி 22

காதல் கவிதைகள் குழ

டெலிகிராம் 👇🏻லிங்க்
✦புத்தகங்கள் . தினசரி நாளிதழ்கள்! 
✦வரலாற்று பதிவுகள்
இத்தலத்தில் கிடைக்கும்

தேமொழி

unread,
May 15, 2021, 1:16:48 AM5/15/21
to மின்தமிழ்
சிறப்பு நிகழ்ச்சி 
aasiriyar.JPG
வாருங்கள் படிப்போம்
புத்தகத் திறனாய்வு - 50

குழு உறுப்பினர்,இசை ஆசிரியர் லோ.குமரன்அவர்களின் சிறப்பு இசை நிகழ்வு (7-7.25 p.m)

மற்றும்

"The Dravidian Model"
திறனாய்வு:கி.வீரமணி,தலைவர்,திராவிடர் கழகம்(7.30 p.m onwards)

Time: May 15, 2021 
சனிக்கிழமை
7:30 மணி

Join Zoom Meeting

Meeting ID: 870 0770 1372
Passcode: 226869
--
 

தேமொழி

unread,
May 15, 2021, 6:55:53 PM5/15/21
to மின்தமிழ்

வாருங்கள் படிப்போம்புத்தகத் திறனாய்வு - 50 
திறனாய்வு:கி.வீரமணி,தலைவர்,திராவிடர் கழகம்
"The Dravidian Model"

தேமொழி

unread,
May 17, 2021, 6:16:28 PM5/17/21
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) ›
மூலம் வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்

PM0795: 
சிந்தனைத் துளிகள்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
____________________________
PM0794:
திருவாசகத் தேன்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
____________________________
PM0793:
சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்
(இலக்கியச் சொற்பொழிவுகள்)
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
____________________________
PM0792:
கம்பன் கண்ட ஆட்சியில் -
அரசியல் சமூகம் (சொற்பொழிவு)
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
____________________________
PM0791: 
குறட் செல்வம்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
____________________________
PM0790:
முதற் குலோத்துங்க சோழன்
T. V. சதாசிவ பண்டாரத்தார்
____________________________

தேமொழி

unread,
May 19, 2021, 11:28:28 PM5/19/21
to மின்தமிழ்


jeyaseela stephen.JPG
முனைவர் எஸ்.ஜெயசீல ஸ்டீபன் அவர்கள் வரலாற்று ஆய்வு நூல்கள் பல எழுதி வெளியிட்டுள்ளார், வெளியிட்டும் வருகிறார். இப்போது புதியதாக 'Technology in Tamil Civilization 1514-1845' என்ற நூலை எழுதி அவருடைய நிறுவனமே வெளியிட்டுள்ளது. மூன்று பாகமாக தலைப்பிட்டு 440 பக்கங்கள் குறிப்பாக கல், கட்டிடம் மற்றும் கட்டிட தொழில் நுட்பம், மரம், தச்சர், கப்பல், படகோட்டி, கடல் தொழில் நுட்பம், உலோகம், சுரங்கம் ஆகியவை முதல் பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இரண்டாவது பாகத்தில் நூற்பாலை, கைத்தறி, நெசவாளர், துணி உற்பத்தி, சாயம் ஏற்றுதல், மற்றும் பாய் ஆகியவை, துணியில் வண்ணம் தீட்டுதல், வரைதர், வடிமைத்தல், நீலச்சாயம், அவுரி மற்றும் இது தொடர்பான தொழில் நுட்பம் சொல்லப்பட்டுள்ளது.
மூன்றாவது பாகத்தில் பீரங்கி, பீரங்கி மருந்து, துப்பாக்கி, ராக்கெட் மற்றும் படை சம்பந்தானைவையும், மெழுகு, மாலுமியின் திசைகாட்டி, காற்றாலை, வரைபடம், தாள், அச்சகம், போன்றவைப் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
ஸ்டீபன் ஐயா அவர்கள் ஐந்து மொழி தெரிந்தவர். இவரைப்பற்றி மிக சுருக்கமான வாழ்க்கை வரலாறு, எழுதிய நூல்கள் இந்த தளத்தில் சொடுக்கி தெரிந்து கொள்ளலாம். https://keyilangovan.blogspot.com

--

தேமொழி

unread,
May 19, 2021, 11:46:55 PM5/19/21
to மின்தமிழ்
source - https://www.facebook.com/story.php?story_fbid=5528630987211583&id=100001942107322

jeyaseela stephen.JPG
jeyaseela stephen2.JPG

கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்னர்தான் முனைவர் ஜெயசீல ஸ்டீபன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. முன்னரே அவரின் பல நூலகள் படித்திருந்ததால் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு புதுச்சேரி பல்கலைகழகத்தில் கடல் சார் தொடர்பான கருத்தரங்கில் கிடைத்தது. பின்னர் புதுச்சேரியைப் பற்றி Pondicherry under the French என்ற நூலை படித்த பின் அதை நம் ஊர் மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என ஆவல் எழுந்தது. உடன் ஒரு இயலை (chapter) மொழிபெயர்த்து அவரிடம் வெளியிட அனுமதி கோரினேன். அவர் ஏற்கனவே நியூ  செஞ்சுரி புக் ஹவுஸ் தமிழ் மக்கள் வரலாறு என்ற தலைப்பில் அவருடைய நான்கு நூல்கள் வெளி வந்துள்ளன, அதே தொடரில் ஆறு இயலை மொழி பெயர்த்து கொடுக்க சொன்னார்.
சென்ற ஆண்டு கொரோனா முடக்கக் காலத்தில் இதை எழுதி முடித்து கடந்த ஆண்டு இறுதியில் பிரஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி மக்களின் சமூக வாழ்க்கை 1674-1793 வெளி வந்தது. ஆங்கில நூலில் மொத்தம் 27 இயல்கள் உள்ளன.
இந்த நூல் நன்றாக உள்ளது என்று அடுத்த ஒரு நூலை Tamil Language and Timeless Translations of the Europeans 1543-1887 கொடுத்து மொழிபெயர்க்க சொன்னார். அதையும் முடித்து கடந்த பிப்ரவரி, 2021 மாதம் ’தமிழ் இலக்கிய பயணம் 1543-1887 ஐரோப்பியர் மொழிபெயர்ப்புகளின் வழியே’ நூல் நிய செஞ்சுரி புக் ஹவுஸ் தமிழ் மக்கள் வரலாறு வரிசையில் வெளி வந்துள்ளது.
---

தேமொழி

unread,
May 22, 2021, 5:23:45 AM5/22/21
to மின்தமிழ்
வாருங்கள் படிப்போம்
புத்தகத் திறனாய்வு:51

51a.JPG
51.JPG

வாருங்கள் படிப்போம்
புத்தகத் திறனாய்வு:51

நினைவுகளில் உருகும் பனிக்காடு- ரிஸ்கா முக்தார்

திறனாய்வு: அர்ஷா மனோகரன்

Time: May 22, 2021 
சனிக்கிழமை மாலை 7.30 மணி

Join Zoom Meeting

Meeting ID: 879 7934 7056
Passcode: 366017

திறனாய்வில் பங்கேற்க அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்
---------------------------

வெறுமனே
இருத்தலில் 
என்ன இருக்கிறது?

நான் 
உயிர்த்திருக்க 
நீ அருகிருக்க வேண்டும்

வாழ்தலென்பது
வெறுமனே
நடமாடித்திரிதலில்
இல்லைதானே
சகி?!

-ரிஸ்கா முக்தார்-
---------------------------

தேடாதீர்கள்
என் எழுத்துகளில் 
ஏதுமில்லை
துயர் அடர்ந்த பெருவனங்களைத் 
தவிர..
இப்படியொரு அறிமுகத்தோடு ஆரம்பிக்கிறது ரிஸ்கா முக்தாரின் " நினைவுகளில் உருகும் பனிக்காடு"

"பறத்தலின் நுட்பங்களை 
நானறிவேன்
இருந்தும்
இவர்கள் என்னைப் பறந்திட விடுவதாயில்லை" 
பறத்தலை யாசிக்கும் இவரது சிறகின் துடிப்புகள்  122  பக்கங்களிலும்  கேட்கின்றது!!

" இரண்டாம் காதலில் 
நீ அருந்தும் தேநீர்க் கொப்பையில்
முதல்காதலின் 
முத்தத்தின் சுவை
எங்ஙனம் வந்ததென
ஒரு்கணம்
நீ
திடுக்கிட்டுப் போகிறாய்"
இப்படித் தெறிக்க விட்டிருக்கிறார்!!
கவிஞர் அறிவுமதி அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டுள் ளது போல ஓசையற்ற மௌனத்தின் பெருங்கதறலாய்
அன்பின் பெருமழையைக் கொட்டித் தீர்த்திருக்கிறார்!

முகநூலில் நான் முதலில் வாசிக்கும் இவரது கவிதைகளைப் பார்த்தவுடன் யோசிப்பது "எப்படி பிரிவுத் துயர் என்கின்ற ஒற்றை வார்த்தையைக் கொண்டு ஓராயிரம் கோணங்களில்  இவரால்  கவிதைகளைப் படைக்க முடிகிறது?"

வாருங்கள் படிப்போம் குழுவின் முதல் கவிதை நூலுக்கான திறனாய்வு!
திறனாய்வு செய்பவர் இவரது கவிதைகளின் மிகப் பெரும் ரசிகையான அர்ஷா மனோகரன்!!
----

தேமொழி

unread,
May 22, 2021, 5:29:58 AM5/22/21
to மின்தமிழ்
mazhai.jpg

மழை நின்ற தருணங்கள் : கவிதைகள் 
சனி, ஞாயிறு..கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம்
amazon kindle இல்.. நான் எழுதிய "மழை நின்ற தருணங்கள் " கவிதை தொகுப்பு வெளியாகி இருக்கிறது
செ. வினோத் பரமானந்தன்

---------------
என்னுள் ஒரு கவிதையாய்

என் பதிவுகள்
நடந்தவை,
கடந்தவை மற்றும் பல....

ஒரு குழந்தையின் சிரிப்பு,
நனைத்துப்போன மழை,
வாசித்த முதல் கவிதை,
தினமும் எனை
பாக்காமலேயேபோன அவள்,
இருள் துடைத்த மெழுகுவர்த்தி,
அழகழகாய் பூத்த அடுத்த
வீட்டு ரோஜா,
என் வீட்டிற்கு மட்டும்
சொந்தமாய்த் தெரிந்த நிலா,
துடைத்து வைத்த வானம்,.
துணைக்கு நின்ற
நட்சத்திரங்கள்,
கஷ்டமாய்த் தெரிந்த கணிதம்,
இன்றுவரை நிறுத்தம்
தாண்டியே நிற்கும் 9- மணிப்
பேருந்து,
தேர்வுக்காய் வாங்கியதில்
மிச்சமாகிப் போன வெள்ளைக்
காகிதங்களென


எதுவாகவும்
இருக்கலாம்..
நானும்
கவிதையெனக் கிறுக்கிட
காரணமாய்
முதன் முதலாய் எட்டாம்
வகுப்பில் கிறுக்கிய
நியாபகம்,

நல்லா இருக்குடா இன்னும்
நிறைய எழுது. பெரிய
கவிஞனாக வருவாய்
என்ற அவளும்,
அவளின் வார்த்தைகளும்
இன்றும் "ஒரு கவிதையாய் "
என்னுள்..

இராணுவத் தனிமையில்
தூக்கமில்லா இரவுகளில்,
நான் தொலைந்து
கொண்டிருந்த வேளைகளில்,
என்னுடன் துணை நின்றவை
என் எழுத்துக்கள் மட்டுமே,..



தலை துவட்டியபடியே
நனைத்த மழையை நினைத்துப்
பார்க்கும் முயற்சியே
"மழை நின்ற தருணங்கள் "

என் எழுத்துக்கள் கவிதைக்குரிய
இலக்கணம் மீறி, எல்லை மீறி
எல்லாம் மீறி இருக்கலாம்.
ஆச்சர்யப்படவும் கூட எதுவும்
இல்லைதான் -ஆனாலும்
அனைவரும் அனுபவித்ததை
நினைத்து ஆனந்தப் பட
நிறைய இருக்கிறது..


என் எழுத்துக்களைப்
படித்து -அது யாருக்கும் பிடித்து
நல்ல கவிதையென்றோ
தவறுதலாய் எனைக்
கவிஞனென்று கூறிடும்போதோ
உடலெங்கும் "கரப்பான்பூச்சிகள் "
ஊர்வதாய் ஒரு குறுகுறுப்பு..
உண்மைதனை உண்மையாய்
ஒப்புக் கொள்கிறேன்.....


இது ஆற்றல் இல்லை
என் ஆற்றாமையின்
வெளிப்பாடு...
தனிமை குளிருக்காய்
எனக்கு நானே
அமைத்த வெப்பவேலி
இந்த வேலிக்காய்
வேதனை எத்தனை
கடந்திருப்பேன்

"கவிதை தொகுப்பு"

என் நீண்ட நாளைய
ஆசை கனவு முயற்சி
ஆசையின் ஆரம்பம்
அமர்க்களம் தான்
முடிக்கும் முயற்சியில் தான் களைத்துப் போனதும்
நானும் என் கவிதைகளும்
கண்(GUN ) பிடிக்கிற
கைகளுக்கு கவிதையெல்லாம் தேவையா என்றனர்
கள் படித்தவர்கள்
கூட்டமொன்றை கூட்டியே
பட்டம் தந்தனர்
பைத்தியம் என்று




பரவாயில்லை
எனக்கு நானே
பைத்தியம்
எழுத்து மட்டுமே
வைத்தியம்
புரிந்தவர்க்கு "புரியும்"
நாளையென் எழுத்தும்
முண்டாசு தரியும்.
என் பட்டாளப் பயணம்
ஒரு ஆறு போலத்தான் -என்
பயணத்தில் நான் சேர்த்தது
வளமான வண்டல் மண்ணா?
செழிப்பான செம்மண்ணா?
களையான கரிசல்மண்ணா?
இல்லை ஏதும் விளையாத
தரிசு நிலமா? என்பதில்
கவனமில்லை
என் நாட்டமெல்லாம்
ஓட்டத்தில் தான்.








நன்றாய் தெரியும் எனக்கு
முத்து வேண்டி நான் சேகரித்ததெல்லாம் -
சிப்பியாய் போயிருக்கலாம்.
ஆனாலும் நம்பிக்கையெனக்கு.
" நான்சேர்த்த சிற்பியெல்லாம்
நாளை என் முத்துகளை சேகரிக்கத்தான் "..

எனக்கான முன்னுரை எழுதப்பட்டிருந்தாலும் -என்
கவிதைகளை படித்திடும், உணர்ந்திடும் அனைவருக்கும்
எழும் உள்ளுணர்வுகள் எல்லாமே
எனக்கான முன்னுரைகளே...

என்றும் தேடல்களுடன்,
செ. வினோத் பரமானந்தன்

தேமொழி

unread,
May 29, 2021, 12:26:56 AM5/29/21
to மின்தமிழ்
வாருங்கள் படிப்போம்
புத்தகத் திறனாய்வு:52

vent 52.JPG
வாருங்கள் படிப்போம்
புத்தகத் திறனாய்வு:52

Time: May 29, 2021 
சனிக்கிழமை மாலை 7.30 மணி

Join Zoom Meeting

Meeting ID: 872 6708 2347
Passcode: 277411

அனைவரையும் பங்கேற்க அன்போடு அழைக்கிறோம்
_________________________________________________________________
event 52.JPG

Whispers
ஒரு சமூகத்தின் வரலாறை பேசுவது மட்டும் வரலாற்றுப் புதினங்களின் பொதுமை அம்சம் அல்ல. பிரபுகள், சீமான்களின் குடும்பங்களில் நிலவிய வர்க்க அரசியல் கட்டமைப்புகள், பணம் படைத்த தோட்ட உரிமையாளர்களின் வம்சாவளி கதைகள் குறித்து எழுதுவதும் இதில் அடங்கும். இந்த வகைமையைச் சார்ந்த எழுத்தாளர்தான் ரோஸி குட்வின். அவரின் புதினங்கள் அனைத்தும் தலைமுறைகளின்   கதைகளை எழுதும் வரலாற்று எழுத்தாளர் (Saga Writer) என்றே அவரைச் சுட்டுகின்றன!

புதிதாய் வாங்கிய வீட்டின் இரத்தம் பதிந்த பழைய சரித்திரத்திற்குள் இழுக்கப்படுகிறாள் ஜெசிகா. இருநூறு வருடங்களுக்கு முன், இங்கிலாந்தில் வாழ்ந்த பெரும் பணம் படைத்த சீமான் குடும்பத்தில் நிலவிய வர்க்க அரசியலில், தற்காலத்தை சேர்ந்த தான் எங்கே பொருந்துகிறோம் என்பதை அறிவதற்குள் காலம் கடந்து, தன் குடும்பத்தை இழக்கும் நிலையில் நிற்கிறாள் ஜெசிகா. 

பேசுவோம்  இந்தக் கதை குறித்து இன்னும்..
வரும் இன்று  மாலை..
-------

தேமொழி

unread,
Jun 2, 2021, 2:58:42 AM6/2/21
to மின்தமிழ்

கோடையில் வாசிப்போம்: கொஞ்சம் தொல்லியல், கொஞ்சம் தத்துவம்

கீழடி – வைகை நாகரிகம்,

க. சுபாஷிணி

‘உலக நாகரிகங்கள் வரிசை’யில் முதல் நூலாக ‘கீழடி – வைகை நாகரிகம்’ என்கிற தலைப்பில் குழந்தைகளும் அறிந்துகொள்ளும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. எழுதியவர் தமிழ் மரபு அறக்கட்டளைத் தலைவர் க. சுபாஷிணி.

ஜெர்மனியில் ஆறாம் வகுப்பு படிக்கும் தமிழ்ப் பெண்ணான ஔவை குடும்பத்தினருடன், மதுரை செல்லூரில் வசிக்கும் மாமா செல்வத்தின் குடும்பத்தினரைச் சந்திக்க வருகிறாள்.அங்கு மாமாவின் குழந்தைகள் நிலா, கீரனுடன் கீழடி வைகை நாகரிகம் குறித்து அவள் அறிந்துகொள்கிறாள். மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகம், கீழடி தொல்பொருள் ஆராய்ச்சித் தளம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று தொல்லியல் குறித்து ஆழமாக அறிந்துகொள்கிறாள்.

கதைப் போக்கிலேயே கீழடி ஆய்வின் மையமாக இருந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியே வைகை நாகரிகம் என வலியுறுத்தி ஆராய்ச்சிகளை முன்வைத்துவரும் ஆட்சிப்பணி அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோரும் இந்தக் கதைக்குக் கூடுதல் வலுசேர்க்கிறார்கள்.

பானைகள், அவற்றில் எழுத்துப் பொறிப்பு, சுடுமண் சிற்பங்கள், பண்டைத் தமிழகப் பெயர்கள், கீழடி நாகரிகம் குறித்த காலக்கணிப்பு, சிந்துவெளி நாகரிகத்துக்கும் கீழடி நாகரிகத்துக்கும் இடையிலான தொடர்பு எனப் பல்வேறு தொல்லியல் அம்சங்கள் கதைப்போக்கில் விளக்கப்பட்டுள்ளன. ஜெர்மனி திரும்பும்போது, எதிர்காலத்தில் தானும் ஒரு தொல்லியல் ஆராய்ச்சியாளராக வேண்டுமென உறுதியெடுத்துச் செல்கிறாள் ஔவை.


suba book.JPG
---

தேமொழி

unread,
Jun 5, 2021, 2:24:28 AM6/5/21
to மின்தமிழ்
thozhar olivannan.JPG
thozhar olivannan1.JPG
வாருங்கள் படிப்போம்
புத்தகத் திறனாய்வு:53

The Power of Habit: Why We Do What We Do in Life and Business- Charles Duhigg

திறனாய்வு
பதிப்பாளர் கோ.ஒளிவண்ணன்
Time: Jun 5, 2021 
சனிக்கிழமை மாலை 7.30 மணி

Join Zoom Meeting

அனைவரையும் பங்கேற்க அன்போடு அழைக்கிறோம்
-------

தேமொழி

unread,
Jun 6, 2021, 3:01:20 AM6/6/21
to மின்தமிழ்
book release.JPG
இன்று மாலை இணைய வழியில் நடைபெறும் நூல் அறிமுக விழாவிற்கு அன்புடன் அனைவரையும் வரவேற்கிறோம். 

தேமொழி

unread,
Jun 7, 2021, 3:13:58 AM6/7/21
to மின்தமிழ்
மாணவர்களுக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. 
இதன் சுட்டி  https://ndl.iitkgp.ac.in
இதில் பதிவு செய்து ஆரம்ப பாடம் முதல் சட்டம், அறிவியல், இலக்கியம், பொறியியல் & மருத்துவ மாணவர்கள் பயன் பெறலாம். 
மேலும் இந்த நூலகத்தில் 4.60 கோடி புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தேமொழி

unread,
Jun 12, 2021, 2:02:39 AM6/12/21
to மின்தமிழ்
A.Sivasubramanian book.JPG

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும்
ஆ.சிவசுப்பிரமணியன்
என்சிபிஹெச் வெளியீடு
அம்பத்தூர், சென்னை-98.
தொடர்புக்கு:
044 – 2625 1968
விலை: ரூ.145

(1)
சமூகத்தை எப்படி அச்சவுணர்வு இயக்குகிறது?
- த.ராஜன்


தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான சமூக ஆய்வாளரும், இடதுசாரி அறிவுஜீவியுமான பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனின் சமீபத்திய புத்தகம், ‘பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும்’. இறந்தோரையும் முன்னோரையும் வழிபடும் வழக்கம், அந்த வழிபாட்டு முறையில் ஏற்பட்ட சிதைவுகள், அவ்வழிபாட்டின் எச்சங்கள் ஆகியவற்றைச் சங்க காலப் பாடல்கள் வழியாகவும், புராணங்கள் வழியாகவும், நாட்டார் கதைகள் வழியாகவும் ஒரு புனைவுக்கே உரிய சுவாரஸ்யமான விவரணைகளோடு எடுத்துரைக்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன். அவர் இதுவரை நமக்குத் தந்திருக்கும் அற்புதமான கொடைகளுள் இப்போது இன்னொன்று சேர்ந்திருக்கிறது.

‘இந்தப் பிரபஞ்சம் கதைகளால் ஆனது; அணுக்களால் அல்ல’ என்ற நோயல் காஃபின் வாக்கியம் மிகவும் அர்த்தபூர்வமானது என்பதற்கு இப்புத்தகம் சுட்டிக்காட்டும் ஆவிகள் பற்றிய கருத்தாக்கம் ஓர் உதாரணம். இறந்துபோகிறவர்கள் என்ன ஆகிறார்கள் என்பது புலப்படாததாக இருப்பதால், அதைப் புரிந்துகொள்வது சுலபமான காரியமாக இல்லை. இதேபோல இயற்கை, கனவு, இறப்பு, மனம் ஆகியவையும் புலப்படாத தன்மையைக் கொண்டிருக்கின்றன. பண்டைச் சமூகமானது புலப்படாத இவ்விஷயங்களை மொழிக்குள் கொண்டுவர முயன்றபோது, அவை கதைகளாக வெளிப்பட்டன. புலப்படும் விஷயங்களை மொழிக்குள் கொண்டுவருவதும்கூட ஒருவகையில் கதைதான் என்றாலும் அதை அறிவியல் என்றோ, பகுத்தறிவுக்கு உட்பட்டது என்றோ சொல்கிறோம்.

இந்த இரண்டு அணுகுமுறைக்கும் இடையேயான பாரதூரமான வித்தியாசங்களில் ஒன்று என்னவென்றால், புலப்படும் விஷயங்களுக்கு உட்பட்டுச் சிந்திக்கும்போது அங்கே கற்பனைக்கான எல்லை சுருங்கிவிடுகிறது. இன்னொருபுறம், புலப்படாத விஷயங்களிலிருந்து கிளைக்கும் கற்பனைகளோ கட்டுப்படுத்த இயலாத ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. அதனுடைய ஆற்றல் எவ்வளவு வலிமை மிக்கது என்பதற்கு ஆவிகள் பற்றிய கருத்தாக்கம் மிக நல்ல உதாரணம். ஆயிரமாயிரம் ஆண்டு பழமைமிக்க அந்தக் கருத்தாக்கம் இன்றைய சமூகத்தின் அன்றாட வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஆற்றலாகவும் இருக்கிறது என்பது முக்கியமானது.

இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும் புலப்படாத தன்மையால் விளைந்த அச்சத்திலிருந்து உருவான வழக்கங்கள் என்கிறது இந்நூல். கூட்டு அச்சமாக அது பரிணமித்தபோது அந்த அச்சத்தின் விளைவுகளாக எண்ணற்ற கற்பனைகளும் கதைகளும் நம்பிக்கைகளும் முளைக்கின்றன. உடலில் கண்ணுக்குப் புலனாகாத உயிர் என்று ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கை எழுகிறது. அதாவது, உடல் வேறு, உயிர் வேறு என்று இரண்டாகப் பிரிப்பதில் இந்த நம்பிக்கை நிலைபெறுகிறது. உடலும் உயிரும் வேறுவேறு என்ற கருத்தாக்கத்திலிருந்து விளைந்த கற்பனைகளே மாபெரும் சமூகத்திரளின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அம்சங்களாகின்றன. இன்றைய அன்றாடத்தை இயக்கும் ஆற்றலாகவும் அவை நீடிப்பது உண்மையில் சுவாரஸ்யமான விஷயம்தான். இதற்குக் காரணம், அந்தக் கருத்தாக்கம் கொஞ்சம்கொஞ்சமாக மனித வாழ்க்கையின் வெவ்வேறு கூறுகளோடு பின்னிப்பிணைந்துவிடுகின்றன. மதத்தையும் சாதியையும் கட்டமைக்கும் காரணிகளில் ஒன்றாகவும் இந்த நம்பிக்கைகள் இருக்கின்றன. தொட்டுத்தொட்டு எங்கெல்லாம் இந்த நம்பிக்கைகள் பரவிப்பெருகின என்பதற்கும், தங்களை வெவ்வேறு விதமாக எப்படி உருமாற்றிக்கொண்டன என்பதற்கும் இந்தப் புத்தகம் எண்ணற்ற தரவுகளைத் தருகிறது.

உதாரணமாக, உடல் அழிவுறுவதாகவும், உயிரானது வேறு உடல்களிலோ மறுவுலகிலோ தங்கும் இயல்புடையது என்றும் நம்பியதன் அடிப்படையில்தான் உடலை இழிவானதாகக் கருதும் போக்கு பிற்காலத்தில் நிறுவனச் சமயத்தில் உருவானது என்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன். இதன் நீட்சியாக, சமூகத்தில் வர்க்கப் பிரிவினைகள் உருவாகி, உடல் உழைப்பிலிருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொண்டவர்கள் உடல் உழைப்பும் இழிவானது என்ற கருத்துகளை முன்னிறுத்தினர் என்கிறார். ஆவி போன்ற இத்தகைய நம்பிக்கையின் நீட்சியாகவே ஆன்மா என்ற கருத்தாக்கம் முளைக்கிறது என்றும், நிறுவன சமயங்கள் உருப்பெற்ற பின்னர் இதுவே ‘ஜீவன்’, ‘மனம்’ என்று அழைக்கப்படலாயிற்று என்றும் சொல்கிறார். இப்படியான கருத்தாக்கங்கள் சிக்கலானதும் ஆபத்தானதுமான பிணைப்புகளைச் சமூகத்தில் எப்படியெல்லாம் உருவாக்கியிருக்கின்றன என்பதை அவரவர் கற்பனைக்கு விட்டுவிடலாம்.

கால மாற்றத்துக்கு ஏற்ப சமூகப் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் மாற்றங்கள் ஏற்படும் என்பது யதார்த்தமானது. பண்டை மரபின் நீட்சி இன்றும் தொடர்கிறது எனும்போது அதை எண்ணிப் பெருமைகொள்வதற்குக் காரணங்கள் இருக்கும் அதே நேரத்தில், சில கருத்தாக்கங்களின் நீட்சியை மறுதலிக்க வேண்டியதும் அவசியமாகிறது. ஆவி, மனம், ஆன்மா குறித்த கருத்தாக்கங்களின் விளைவுகளை மிகத் தீவிரமாக விசாரணைக்கு உள்ளாக்க வேண்டும் என்பதையே இந்தப் புத்தகம் வலியுறுத்துவதாக நான் வாசித்துக்கொள்கிறேன்.

இதன் தொடர்ச்சியாக இன்னொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும்: பண்டைச் சமூகத்தின் அச்சத்திலிருந்து உருவான நம்பிக்கைகள் என்று சொல்லும்போது, அப்போதைய சமூகம் குழந்தைத்தனமானது என்ற பார்வை உட்பொதிந்திருக்கிறது. ஆனால், அன்றைய நீட்சிகள் இன்றும் தொடர்கின்றன எனும்போது இந்தப் பார்வை அர்த்தமற்றதாகிவிடுகிறது. அதே நேரத்தில், இந்த நம்பிக்கைகளின் பின்னணியில் அச்ச உணர்வு வியாபித்திருக்குமானால், அதனால் உருவாகும் விளைவுகள் பரிசீலனைக்கு உரியவைதான். இன்றைக்கும் பல்வேறு கருத்தாக்கங்களுக்குப் பின்பாக அச்ச மனநிலை இருப்பதைப் பார்க்கிறோம். உதாரணமாக, காவல் துறை பிரயோகிக்கும் வன்முறையை ஆதரிக்கும் மனதுக்குப் பின்பாக இருப்பது அச்சம்தான். தூக்குத் தண்டனையை ஆதரிக்கும் மனதையும் அச்சமே ஆட்கொண்டிருக்கிறது. இந்த அச்சமானது கூட்டு அச்சமாக மாறும்போது எப்படியான எதிர்விளைவுகளை உருவாக்கும் என்பது வெளிப்படை. அதனால்தான், அரசுகளோ அதிகாரிகளோ எழுத்தாளர்களோ முன்வைக்கும் கருத்துகளுக்கும் தீர்வுகளுக்கும் பின்பாக அச்சம்தான் அடிப்படையாக இருக்கிறது என்று உணர்வோமேயானால் அந்தக் கருத்துகளையும் தீர்வுகளையும் விமர்சித்துக்கொள்வது அவசியமாகிறது. ஒரு நபரின் அச்சமானது கூட்டு அச்சமாக உருப்பெறும்போது, அது உருவாக்கும் விளைவுகள் பேராபத்தாகவும் இருக்கக்கூடும் என்பதற்கு இந்தப் புத்தகம் உருவாக்கும் கதையாடலே சான்று.

- த.ராஜன், தொடர்புக்கு: raj...@hindutamil.co.in

--------------------------
(2)
நூல் அறிமுகம்: பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இறந்தோர் வழிபாடும், முன்னோர் வழிபாடும்

 – முனைவர் மு.ஏழுமலை
May 12, 2021


பேராசிரியர்.ஆ.சிவசுப்பிரமணியம் அவர்களால் எழுதப்பட்டு 2021 பிப்ரவரி மாதத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீடாக தமிழ் ஆய்வுலகத்திற்குக் கிடைக்கப்பெற்றுள்ள நூல் “பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும்”என்னும் நூல்.

பேரா.சிவம் அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் வரலாற்றியல், சமூகவியல், மார்க்சியவியல், மானிடவியல் உள்ளிட்ட துறைசார் அணுகுமுறையோடு தனக்கே உரிய ஆய்வு முறையியலை முன்னெடுத்துச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர். இவருடைய மந்திரம் சடங்குகள், கோபுரத் தற்கொலைகள், பனைமரமே பனைமரமே, தாவர வழக்காறுகள் முதலான நூல்கள் இவரின் ஆய்வு முறையியளுக்கான சான்றுகளாக உள்ளன.

தமிழ்ச் சமூகம் குறித்த அடையாளங்களை மீட்டெடுத்தலுக்கான முறையியலாக: யூகங்களை முன்வைத்த கற்பனாவாத கருத்தியலைத் தவிர்த்து மக்களின் வாழ்வியல் அடிப்படையில் யதார்த்தவாத பின்புலத்தோடு அணுகுதல் என்பது பேராசிரியரின் ஆய்வு அணுகுமுறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டார் வழக்காற்றியலில் தொடர்ச்சியாக இவ்வாய்வு அணுகுமுறையிலான நூல்களை வெளியிட்டு, தமிழ்ச் சமூக அடையாள மீட்டுருவாக்கத்திலும், புதிய தலைமுறையினர் முன்னெடுக்க வேண்டிய ஆய்வு முறைக்கான வழிகாட்டியாகவும் தம் ஆய்வு நால்களைக் கொண்டு வருவதில் சிரத்தையான கள ஆய்வை மேற்கொண்டு செயல்படக்கூடிய செயல்பாட்டாளர்.

பேரா . ஆ . சிவம் அவர்களின் தொடர்ச்சியான செயல்பாட்டு வடிவமாகத் தற்பொழுது வெளிவந்துள்ள “பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும் ” என்னும் நூல் தமிழ்ச் சமூகத்தின் தொடர்ச்சியான வழிபாட்டு மரபை முன்னிறுத்துகிறது. இத்தகைய வழிபாட்டு மரபை தமிழ் மொழியின் இலக்கியம், இலக்கணம், கல்வெட்டு, நடுகற்கள், வாய்மொழி வழக்காறுகள் முதலானவற்றைக் கொண்டு வெளிப்படுத்தியிருப்பது ஆய்வு முறையியலின் நுட்பத்தை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது .

மேலும், இந்நூலின் அமைப்பு முறையியலைப் பொருத்தவரையில் முன்னுரை, தொல் சமயம், இறந்தோர் வழிபாட்டின் சிதைவு, புராண மூதாதையர், இறந்தோர் வழிபாட்டின் எச்சம் என நான்கு தலைப்புகளிலான கருத்தமைவுகள், முடிவுரை, துணைநூற் பட்டியல், கலைச்சொல் ( தமிழ்,  ஆங்கிலம் ) ஒளிப்படங்கள் என ஓர் ஆய்வு முறையியலோடு அமைத்திருப்பது முதல் நிலை வாசகர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் ஆய்வுமுறையியலைக் கற்பிக்கக் கூடியதாகவும் உள்ளது.

இவற்றோடு, தமிழ் இனம் இயற்கை சார்ந்த வாழ்வியல் சூழல்களில் காரணகாரிய உணர்தலுக்கான முயற்சி, உணர்தல், எதிர்வினையாற்றல் முதலான இயக்கங்களைப் புரிந்து கொள்ளச் செய்கிறது. தமிழரின் தொல் சமயம் குறித்து உரையாடும் பேராசிரியர், இயற்கையைக் குறித்த புரிதல் இன்மையும், இயற்கையைக் குறித்த அச்சமும் சமயத்தின் தோற்றத்திற்குக் காரணமாய் அமைந்த நிலையைக் குறிப்பிடுகிறார். இவற்றோடு தொல் சமயத்தின் படி நிலைகளாக: ஆவியம், குலக்குறியம், இயற்கைப் பொருள் சார்ந்த வழிபாடு, உயிரியம், வெறியாட்டு ஆகியவற்றை டைலர், குரோவ்கன் முதலானோரின் வரையறைகளை எடுத்துக்காட்டியும் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் உள்ள குறிப்புகளைச் சான்றுகாட்டியும் விளக்கியிருப்பது, திணை சார்ந்து தமிழர்களிடையே நிலைத்திருந்த தொல் சமய மரபின் இருப்பைப் புரிந்து கொள்ளச் செய்கிறது.

காலந்தோறும் உருவான இலக்கியங்களில் உயிரும் உடலும் பெற்றிருக்கும் கருத்தியல், சாவின் இரு நிலைகளான மருத்துவச் சாவு, உயிரியல் சாவுக்கிடையிலான வேறுபாடு, துஞ்சுதல், மாய்தல் என்ற சொற்கள் குறிக்கும் பொருண்மைகளும் வேற்றுமைகளும், வீரச்சாவு, கடிமரம், கந்து ஆகிய சொற்களும், அச்சொற்களுக்குப் பின் உள்ள மக்களின் விழுமிய நிலை மக்கள் தங்களின் இருப்பிற்கான ஊடாட்டத்தை பேரா. ஆ . சிவம் அவர்களின் தொடர்ச்சியான உரையாடல் உணர்த்துகிறது . இயற்கை வழிபாடு, வெறியாட்டு ஆகிய நிகழ்வுகள் ஆவி குறித்த நம்பிக்கை வணங்கு தெய்வமாக வளர்ச்சியடையும் நிலை முதலானவை ஒரு சமூகத்தின் சிந்தனை நிலையை வெளிப்படுத்துவதோடு, அச்சிந்தனையின் மூலமாக வெளிப்படும் பண்பாட்டு அடையாளங்களையும் விளக்குகின்றன.

‘இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும்’ என்னும் தலைப்பில் தமிழரின் வழிபாட்டினூடாக வெளிப்படும் தமிழரின் வாழ்வியல் குறித்த ஆராயும் பேரா. ஆ . சிவம், சமணம், பௌத்தம் வைதீக சமயங்கள் ஆகியவற்றையே தமிழரின் சமய வரலாறாகக் கற்பித்துக்கொண்டும், சைவம், வைணவம் உள்ளிட்ட சமயங்களே தமிழர் சமயம் என்ற அழுத்தமான பதிவுகளும், இன்னும் ஒரு படி மேற்சென்று சமயம் என்பது ஒற்றைத் தன்மையுடையது என்கிற பரப்புதலும் தொடர்ச்சியாகத் தற்பொழுது முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற சூழலில், தமிழ் இனத்திற்கென ஒரு தொல்சமய மரபு உண்டு என்பதை விரிவான விளக்கத்தின் வழி உணர்த்தியிருக்கிறார் .

இவற்றோடு, தமிழ் இனத்தினரிடையே ஆவிகளின் மீதான நம்பிக்கையாக தன் குடும்பம், குலம், கால் வழி சார்ந்து இறந்தவரையும், முன்னோரையும் முன்வைத்த தொல்சமய மரபின் மூலம் அடைகாத்த நினைவுகளின் படிநிலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

” பண்டைய மக்கள் சிலரின் அகராதியில் கடவுள் என்பதைக் குறிக்கும் வார்த்தைக்கு இறந்த மனிதன் என்பதே பொருளாக இருந்திருக்கிறது” என்ற வில்டியூரெண்ட் அவர்களின் மேற்கோள் மனிதன் இறப்பின் மீது கொண்டிருந்த விழுமியத்தை உணர்ந்து கொள்ளச் செய்கிறது. கற்கால சமூகத்தில் வாழ்ந்த மனிதன் ஆவி மீது கொண்ட நம்பிக்கையால், அந்த ஆவியை நிலை நிறுத்துவதற்கான முயற்சியாக ஓவியம் வரைதல், பதுக்கைகள் ஏற்படுத்துதல், நடுகல் உருவாக்கி வழிபடுதல் முதலான நிலையில் செயல்பட்டுள்ளான். இவ்வாறு ஆவியை நிலை நிறுத்துவதற்கு ஏன் ‘கல்’ பயன்படுத்தினான் என்ற வினா எழுகிறது.

இந்த வினாவிற்கான விடையாக பேராசிரியர் அவர்கள், மிர்சியா எலியட் குறிப்பிடும், ‘புராதண மனிதர்களின் சமய உணர்வானது கடினத்தன்மை, முரட்டுத்தன்மை, நிலைத்த தன்மை என்ற மூன்றும் இணைந்ததாகும். கம்பீரமான தோற்றமுடைய ஒரு பாறை அல்லது கருங்கல்லை விட உயரமானதும் மரியாதையைத் தூண்டுவதுமான வலிமை பெற்ற எதுவும் அச்சமூகத்தில் இல்லை என்ற மேற்கோளைக்கொண்டு விளக்கியிருப்பது, ஒரு சமூகத்தின் வாழ்வியல் சார்ந்த உருவ, அருவ நிலைநிறுத்தல்கள், ஒரு சமூகத்தின் வாழ்வியல் சூழலுக்கும் வாழ்வியல் சூழல் சார்ந்து ஏற்படுத்திக்கொள்ளும் கருத்தியலுக்குமான தொடர்பை அறிந்து கொள்ளச் செய்கிறது.

மேலும், தொல்காப்பியத்தில் காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், பெரும்படை, வாழ்த்துதல் என்றும், புறப்பொருள் வெண்பாமாலை நூலில் கால்காண்டல் கற்கோள் நிலை, கல் நீர்ப்படுத்துதல், கல் நடுதல், கல்முறை பழுச்சல். இல்கொண்டு புகுதல் என்றும் நடுகல் வழிபாட்டின் ஆறு படிநிலைகளை குறிப்பிட்டிருப்பதும், தமிழ் இலக்கியங்களில் பரவலாக நடுகல் குறித்த பதிவுகள் இடம்பெற்றிருப்பதும் ஒரு இனம் சார்ந்த வழிபாட்டு மரபின் தொடர்ச்சிக்கும் பரவலாக்கத்திற்கும் அடையாளமாகிறது .

‘இறந்தோர் வழிபாட்டின் சிதைவு ‘ என்னும் தலைப்பில் பேரா ஆ . சிவம் விவாதிக்கும் கருத்துகள் தமிழ்ச் சமூகத்தினர் உணர வேண்டிய இன்றியமையாத வரலாற்றுத் தன்மை.

சங்க இலக்கியம் உருவான காலத்தையடுத்து வளர்ச்சி பெற்ற நிலவுடைமைச் சமூகம் கட்டமைக்கும் சிந்தனை மரபு என்பது இறந்தோர் வழிபாடு என்கிற இனக்குழுச் சிந்தனையின் அழிப்பின் மீது உருவாக்கப்படுகிறது. தொல்சமயம் நெறி அழிப்பிற்கான செயல்பாடுகளாக இனக்குழு அமைப்பையும், குறுநில மன்னர்களையும் ஒடுக்கி பேரரசு உருவாக்கல், அரசின் தலைமையாக மன்னன் இருத்தல், மன்னனும் கடவுளும் ‘இறை’ என்ற சொல்லால் அழைக்கப்படுதல், மன்னனுக்கு செலுத்தும் வரி இறை’ என்ற சொல்லால் அழைக்கப்படுதல் முதலானவை உருவாகின்றன.

இவற்றின் தொடர்ச்சியாக கடவுள் இருக்கும் இடங்களை கோட்டம் (புறநானூறு), கோயில் (மணிமேகலை) என்ற பெயர்களால் அழைக்கும் வழக்கம் உருவாதல், கோயில்களில் உறையும் தெய்வங்கள் உருவாதல், தெய்வ உருவாக்கத்தோடு அத்தெய்வங்களுக்குரிய புராணங்களையும் உருவாக்குதல் என்ற செயல்பாடுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இத்தகைய சிந்தனைமுறையின் தாக்கம், தொல் சமய அழிவுக்கும் இறந்தோர் வழிபாட்டின் வீழ்ச்சிக்கும் காரணமாகிற போக்கினை பல்வேறு சான்றுகளின் மூலம் பேரா ஆ.சிவம் எடுத்துக்காட்டியிருப்பது, ஒரு சிந்தனைமுறையின் உருவாக்கத் தாக்கம், அதற்கு முற்பட்ட மக்களின் நிலம் சார்ந்த வாழ்வியல், செய்யும் தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் மரபான சிந்தனை அழிவிற்குக் காரணமாகும் என்ற உண்மையை முன்னிறுத்துகிறது.

வடமொழி ஆகமங்களை உள்வாங்கிய வைதிக சமயத்தவரால் கட்டமைக்கப்பட்ட புராண மரபைக் குறித்து ‘புராண மூதாதையர்’ என்னும் தலைப்பில் விரிவான இலக்கிய ஆதாரங்களோடு பேரா ஆ.சிவம் உரையாடல் நிகழ்த்துகிறார். வைதீக சமய நெறியைப் பின்பற்றியவர்கள் தங்களின் சமய நிறுவனமயத்திற்கும் சமய நிலைபெறலுக்கும் தக்க களனாக பல புராணக் கதைகளை உருவாக்கினர். அவற்றில் மனுநீதிச் சோழன் சிபி மன்னன், அகத்தியர் என்ற மூவர் குறித்த புராணக் கதைகள் குறிப்பிடத்தக்கவை.

இக்கதைகள் சங்கமருவிய கால இலக்கியமான பழமொழி நானூறு (மனுநீதிச் சோழன்) தொடங்கி வள்ளலார் காலம் வரையில் பன்முகங்களில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய புராணக்கதையின் எழுச்சி, தமிழ்ச் சமூகத்தின் குலக்குறி மரபு, குல வழியினர் அல்லது கால் வழி மரபு மழுங்கடிக்கப்பட்டு, புராணங்களின் அடிப்படையில் பல கதாபாத்திரங்களை உருவாக்கி புராண மூதாதையர்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புராண மூதாதையர்களை மையமாகக் கொண்டு நீதி, இரக்கம், மருத்துவம், இலக்கியம், இலக்கணம் என்பனவெல்லாம் உருவானதாக ஏற்படுத்தியிருக்கும் மாயை அரசியலை சான்றுகளுடன் எடுத்துக்காட்டியிருப்பதன் மூலம் வரலாற்றின் பொய்த்தன்மையை பிரித்து உணர வேண்டிய கடமை ஒரு இனத்திற்கு உண்டு. இவை மட்டுமின்றி, புராண மூதாதையர்களால் உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கைகளையும் கேள்விக்குட்படுத்தி விடைகாண வேண்டிய கடமையும் உண்டு என்ற விரிவான சிந்தனையோட்டத்திற்குரிய களமாக ‘புராண மூதாதையர்’ பகுதியின் கருத்துகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக மனித இன வரலாற்றில் தொன்மையான இனமாக விளங்கும் தமிழ் இனம் தொடர்ச்சியாக ஒவ்வொரு குறிப்பிட்ட காலங்களிலும் ஒவ்வொரு அரசியல் சூழல்களையும், அவ்வரசியல் சூழல்கள் முன்னிறுத்தும் கருத்தியலையும் எதிர்கொண்ட சமூக அமைப்பாகும். இவ்வாறு மாறுபட்ட பல கருத்தியல்களையும் கடந்து, தமிழினத்தின் தொன்மையான சிந்தனை மரபின் எச்சமாக இடம்பெறும் தொல்சமயக் கூறுகள் மக்களின் வாழ்வியலில் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டுவரை தொடர்ந்து கொண்டு வருவதையும் காண முடிகிறது. இவ்வாறு தமிழினத்தின் சிந்தனைவழி தொடரும் எச்சங்களில் இறந்தோர் வழிபாடு குறித்த சிந்தனைத் தொடர்ச்சியை மையமாகக் கொண்ட பேரா. ஆ.சிவம் அவர்களின் உரையாடல் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

குடும்ப தெய்வம், குல தெய்வம், ஊர்த் தெய்வம், நீர்த் தெய்வம், நோய்த் தெய்வம் என்ற பல் நிலையிலான தெய்வங்களின் வழிபாட்டில் பொங்கலிடுதல், சாமியாடல், படையல் பொருள்கள் முதலான கூறுகளாக இன்றும் மக்களின் வாழ் நிலையோடு உறவாடிக் கொண்டிருப்பதை பேராசிரியரின் உரையாடல் சுட்டிக்காட்டுகிறது. நாட்டார் தெய்வக் கூறுகளை விழுங்கும் வைதீக சமய நெறிகள், வெகுசன இந்துத்துவ முறையியல் முதலான வைதீக அரசியலின் சூழ்ச்சிகளைக் கடந்து இன்றும் மக்களிடையே தொல் சமயம் வழக்கத்தில் உள்ள நிலை, தொல் சமய நெறி உருவாக்கக் கட்டமைப்பின் உண்மைத் தன்மையையும் மக்களின் நம்பிக்கையையும் உணர்த்துகிறது.

தொல் சமயநெறி இந்து என்ற அடையாளத்தவர்களிடம் மட்டுமல்லாமல், இஸ்லாமியர், கத்தோலிக்க சமயத்தினரிடமும் அவரவர் சமயம் சார்ந்த நெறியோடு தொடர்வதையும் பேராசிரியருக்கே உரிய ஆய்வு முறையிலான உரையாடல் வெளிப்படுத்துகிறது. தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைப் புரிந்து கொள்வதற்கான தொடர்ச்சியான ஆய்வு முன்னெடுப்பை இந்நூல் கொண்டுள்ளதை, ” தொல் சமயத்தின் முக்கிய கூறுகளை உள்வாங்கியுள்ள நாட்டார் சமய நெறியானது ஒரு சமய நெறி மட்டுமல்ல. தமிழக அடித்தள மக்களின் சமூகப் பண்பாட்டு வரலாற்றுக்கான கணக்கற்ற தரவுகளைத் தம்முள் வைத்துள்ளது.

இவற்றை நம் கல்விப்புலம் சார்ந்த வரலாற்று வரைவு புறக்கணித்துள்ளது. இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட தரவுகளின் துணையுடன்தான் தமிழகத்தின் உண்மையான சமூகப் பண்பாட்டு வரலாற்றை எழுத முடியும் ” என்ற பேராசிரியரின் வார்த்தைகளாலே உணரலாம். “தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு வரலாற்றைக் கண்டடைவதற்கு பேராசிரியரின் இந்நூல் முதன்மைத் தரவாக அமையும். பண்பாடுசார் ஆய்வுச் சமூகத்துக்குப் புதிய கண்களைத் திறந்து விட்டுள்ளார். பல திறப்புகளை திறனுடை ஆய்வாளர்கள் பெற்றுக்கொள்வதற்கான மடைகளையும் திறந்து காட்டியிருக்கிறார்” என்று முன்னுரையில் பேராசிரியர்
ச. பிலவேந்திரன் குறிப்பிட்டிருப்பதும் மெய்ப்படும் .

தமிழ் இனத்தின் தொன்மையான அடையாளத் தடங்களை எடுத்துக்காட்டியிருக்கும் இந்நூல் தமிழினம் கொண்டாடிக் களிக்க வேண்டியது கடமை .

நன்றி – உங்கள் நூலகம்
-------------------------------------------

தேமொழி

unread,
Jun 14, 2021, 8:50:02 PM6/14/21
to மின்தமிழ்
thagadoor.jpg
ஜூன்14   முதல்   ஜூன் 19 வரை நாளும்  
மாலை 8 மணிக்கு 
இரா. பாலகிருஷ்ணன் இ. ஆ. ப. அவர்களின் "ஜர்னி ஆஃப் சிவிலைசேஷன்"
நூல் ஆய்வரங்கம் 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Jun 18, 2021, 4:32:15 AM6/18/21
to மின்தமிழ்
சோனியாவுக்கு ஸ்டாலின் வழங்கிய புத்தகம்

book.jpeg

’மு.க.ஸ்டாலின் சோனியாவுக்கு பரிசளித்த புத்தகம்’ கூகுளில் தேடும் இளைஞர் பட்டாளம்..!
சிந்துவெளிக்கும் திராவிட பண்பாட்டிற்கும் இடையேயான உறவை உரிய ஆதாரங்களுடன் நிறுவும் புத்தகத்தை, டெல்லிக்கு சென்று சோனியா காந்தியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்திருப்பதன் மூலம், தமிழர்களின் பண்பாடு குறித்து எழுத்தப்பட்ட இந்த நூலுக்கு இந்திய அளவில் கூடுதல் கவனம் கிடைத்திருக்கிறது.

முதலமைச்சராக பதவியேற்றபின் முதல்முறையாக டெல்லி சென்றிருக்கும் மு.க.ஸ்டாலின், நேற்று பிரதமரை சந்தித்த நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும், மனைவி துர்கா சமேதமாக சென்று சந்தித்துள்ளார்.

இதில் முக்கியமான விஷயம், அவர் சோனியாகாந்தியிடம் பரிசளித்த புத்தகம். தமிழில் ஐ.ஏ.எஸ் தேர்வெழுதி வென்று, ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் உள்ளிட்ட முக்கியமான பதவிகள் வகித்த ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘Journey of a Civilization: Indus to Vaigai’ என்ற புத்தகத்தைதான் சோனியாகாந்தியிடம் பரிசாக அளித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த புத்தகத்தை தேர்வு செய்து கொடுத்தது முதல்வரின் தனிச்செயலாளராக இருக்கும் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் என சொல்கிறார்கள். தமிழ் பண்பாட்டிற்கும், திராவிடக் கலாச்சாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தொடந்து செயல்பட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த புத்தகத்தை காங்கிரஸ் தலைவரிடம் பரிசளித்துள்ளது வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

சிந்துவெளிக்கும் திராவிட பண்பாட்டிற்கும் இடையேயான உறவை உரிய ஆதாரங்களுடன் நிறுவும் இந்த நூல், சிந்து நாகரிகம் என்பது தமிழர்களின் நாகரிகம் என்பதை உறுதிப்படுத்துவதுடன், அதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளச் சொல்ல வலியுறுத்தி, பழந்தமிழர்களின் வாழ்வியலின் கட்டமைப்பை தகுந்த அகழாய்வு சான்றுகளுடன் உறுதிப்படுத்துகிறது. தமிழில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதினாலும், இந்த நூலை முதலில் ஆங்கிலத்தில் எழுதியது, தமிழர்களின் வாழ்வியலும், பண்பாடும், நாகரிகமும் ஒட்டுமொத்த உலகிற்கும் சென்றடையவேண்டும் என்ற நோக்கில்தான் என சொல்லியிருப்பார் நூலின் ஆசிரியர் பாலகிருஷ்ணன்.

நூல் ஆசிரியர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
இந்த நூலை மு.க.ஸ்டாலின் டெல்லியில் சென்று, சோனிய காந்தியிடம் கொடுத்த பிறகு, முன்னர் கிடைத்ததை காட்டிலும் இப்போது அதிக கவனம் இந்த நூலுக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறது. அதனால், பலரும் இணையதளத்தில் இந்த ‘Journey of a Civilization: Indus to Vaigai’ நூலை பற்றியும், நூலின் வேரை பற்றியும் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். பண்பாடு என்பது நாகரிகத்தை சுமந்து செல்லும் மக்களுடைய வரலாறுதான் என்று சிந்து வெளி விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும் என்று திடாவிட கலாச்சாரத்தையும், சங்க இலக்கியங்களை பற்றியும் எளிய தமிழில், எல்லோர்க்கும் புரியும் வகையில், பல்வேறு மேடைகளில் பேசியும் எழுதியும் வரும் ஆர்.பாலகிருஷ்ணன் தற்போது ஒடிசா மாநில முதல்வரின் ஆலோசகராக இருக்கிறார். இவரின் இந்த படைப்பு வெளியாகும்போதே வெகுவான வரவேற்பை பெற்றிருந்தது.MK Stalin Meet Soina Gandhi : ’மு.க.ஸ்டாலின் சோனியாவுக்கு பரிசளித்த புத்தகம்’ கூகுளில் தேடும் இளைஞர் பட்டாளம்..!

இப்படி தமிழர்களின் தொன்மம், வரலாறு, நாகரிகம், வாழ்க்கை முறை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை இந்திய அளவில் கவனம் பெற வைக்கும் முயற்சியை எடுத்திருக்கும் முதல்வருக்கு தமிழ் கூறும் நல்லுலகு கடமைப்பட்டிருக்கிறது.

பதவியேற்றதும் தனது டிவிட்டரில் ’Belongs to the Dravidian stock’ என்று சேர்த்துக்கொண்ட மு.க.ஸ்டாலின், திராவிடக் கலாச்சாரத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதும் பெரிதும் பாரட்டப்பட்டு வருகின்றன. இனி, தமிழர்களின் தொன்மங்களை தேடி கண்டுபிடிக்கும், அகழாய்வுகளுக்கும் வீரியம் கொள்ளும் என நம்பலாம்.


Sathivel Kandhan Samy

unread,
Jun 19, 2021, 12:47:37 AM6/19/21
to mint...@googlegroups.com
''தொண்டர் தம் பெருமை சொல்லவும் அரிதே”  - தமிழ் தொண்டாற்றுபவர்  செயற்கரிய செய்யும்  பெரியோர் திரு ஆர்.  பாலகிருஷணன் அவர்களை போற்றுவோம்.                               

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/4b04333f-1d6b-4eaf-a863-f7fa5ccfe8e0n%40googlegroups.com.

தேமொழி

unread,
Jun 19, 2021, 3:55:28 AM6/19/21
to மின்தமிழ்
book-56.JPG
book-56.1.JPG
வாருங்கள் படிப்போம்
புத்தகத் திறனாய்வு:56

Time: 19/6/21
மாலை 7.30 மணி
சனிக்கிழமை

எங்கதெ - இமையம்

திறனாய்வு: உ.பாஸ்கரன்

Join Zoom Meeting

Meeting ID: 884 7881 9393
Passcode: 151304

அனைவரும் பங்கேற்க அன்போடு அழைக்கிறோம்

தேமொழி

unread,
Jun 20, 2021, 4:15:22 AM6/20/21
to மின்தமிழ்
வாருங்கள் படிப்போம்
புத்தகத் திறனாய்வு:57

book-57.JPG

book-57.1.JPG

வாருங்கள் படிப்போம்
புத்தகத் திறனாய்வு:57

Time: 20/6/21
மாலை 5.30 மணி
ஞாயிறு

Seven Habits of Highly Effective People - Stephen R Covey

திறனாய்வு : கோ.ஒளிவண்ணன்

e-Content Development

unread,
Jun 21, 2021, 7:36:45 AM6/21/21
to mintamil
நல்ல தகவல் 



--
With Warm Regards,

S.Edward Packiaraj
Rosary e-Solutions
Trichy-621216
Cell 9786424927
https://vinganam.blogspot.com/  (Science Articles in Tamil )
www.packiam.wordpress.com (web directory)
http:/edwardpackiaraj.blogspot.in (Resume)

தேமொழி

unread,
Jun 25, 2021, 5:06:40 PM6/25/21
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) ›
மூலம் வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்

PM0802:
பண்டார சாத்திரம் - 4, 5
 சன்மார்க்க சித்தியாரும் & சிவாச்சிரமத்தெளிவும் (உரையுடன்)
ஸ்ரீ அம்பலவாண தேசிகர் (திருவாவடுதுறை ஆதீனம்)
____________________________

PM0801:
பண்டார சாத்திரம் -3:
தசகாரியங்கள் 3 (உரையுடன்)
அம்பலவாண தேசிகர், தட்சிணாமூர்த்தி தேசிகர் & சுவாமிநாத தேசிகர்
____________________________

PM0800: 
பண்டார சாத்திரம் -2:
உபதேச வெண்பா (உரையுடன்)
அம்பலவாண தேசிகர் (திருவாவடுதுறை ஆதீனம்)
____________________________

PM0799:
பண்டார சாத்திரம் -1:
அனுபோக வெண்பா (உரையுடன்)
அம்பலவாண தேசிகர் (திருவாவடுதுறை ஆதீனம்)
____________________________

PM0798:
'திருவள்ளுவமாலை'
சங்கப்புலவர்களால் பாடப்பட்டவை
____________________________

PM0797: 
1. சிதம்பரக் குறவஞ்சி  (PM0797_01)
பதிப்பாசிரியர் : மு. அருணாசலம்
---
2.  கண்ணனூர் பத்மாஸனி அம்மாளால் இயற்றிய
ஸ்ரீமத் இராமயண சரித்திரக் கும்மி  (PM0797_02)
____________________________

PM0796: 
ஒட்டக்கூத்தர் இயற்றிய
குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
____________________________

தேமொழி

unread,
Jun 26, 2021, 6:32:41 PM6/26/21
to மின்தமிழ்
black americans.JPG

நூல்: 
அமெரிக்கா
கருப்பின மக்களின் வரலாறு
ஆர்.பெரியசாமி

நூல் மதிப்புரை: கி.ரமேஷ்

இன்று காலைச் செய்தி: “ஜார்ஜ் ஃப்ளாய்டை இரக்கமின்றித் தன் மூட்டால் அழுத்திக் கொன்ற வெள்ளைப் போலீஸ்காரனுக்கு 22 ½ ஆண்டுகள் சிறைத்தண்டனை”(26.06.2021).  இந்த செய்தி நமக்குக் கூறும் விஷயம் என்ன?  இன்றும் அமெரிக்காவில் கருப்பின மக்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது.  அதையும் மக்களைக் காக்க வேண்டிய காவலர்களே செய்கிறார்கள் என்பதுதான்.  இந்தப் படுகொலை சம்பவத்திற்குப் பிறகும் இதே போன்ற செயல்கள் அமெரிக்காவில் அரங்கேறி விட்டன.

அமெரிக்காவின் அடிமை மக்கள் வரலாறு மிகவும் நீண்டது.  அமெரிக்கா உருவாகி, அங்கு தெற்குப் பகுதியில் குடியேறிய ஆங்கிலேயர்கள் தோட்டத் தொழிலில் இறங்கினர்.  அதற்கு ஏராளமான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.  ஆங்கிலேயர்களால் அமெரிக்காவின் உண்மையான பழங்குடி மக்களை அந்த வேலையில் இறக்க முடியாத நிலையில், பிரிட்டிஷ் இந்தக் கேவலமான வேலையைத் தொடங்கியது.  லட்சக்கணக்கில் ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து ஆடு, மாடுகளைப் போல் பிடித்து, கப்பல்களில் அடைத்துக் கொண்டு வரப்பட்ட கருப்பின மக்கள் அங்கு அடிமைகளாகக் கேவலமாக வேலை வாங்கப்பட்டனர்.  சவுக்கடி, சங்கிலிகளால் கட்டி வைத்தல், இன்னும் என்னென்ன கொடூரங்கள் உண்டோ இவையனைத்தும் அங்கு அரங்கேறின.  அவற்றையெல்லாம் படிக்கும் போதே நமக்கு ரத்தம் கொதிக்கும்.  அவ்வளவு கொடூரம்.  அதை விடக் கொடூரம் அவையெல்லாம் ‘சட்டபூர்வமாக்கப்பட்டன’ என்பதாகும்.  இவற்றைத் தெரிந்து கொள்வதற்கு நாம் ஃப்ரட்ரிக் டக்ளஸ் எழுதிய வரலாறு, டாம் மாமாவின் குடிசை போன்றவற்றைப் படிக்கலாம்.  இன்னும் ஏராளமாக எழுதப்பட்டுள்ளன.

பிறகு அங்கு பிரிட்டிஷ் வழக்கப்படி அதில் ஆட்சி செலுத்த முயல, அங்கு குடியேறியவர்களோ ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் அதை எதிர்த்துப் போராடத் தொடங்கினர்.  தொடங்கியது அமெரிக்காவின் சுதந்திரப் போர்.  தோட்ட முதலாளிகள் அடிமைகளை அதில் ஈடுபடுத்த விரும்பா விட்டாலும், சூழ்நிலையால் ஒப்புக் கொள்ள நேரிட்டது.  முதல் முறையாக அதில் ஈடுபட்ட ஏராளமான கருப்பர்கள் சுதந்திரம் பெற்றனர்.  ஆனால் போர் முடிந்ததும், அமெரிக்கா சுதந்திரம் பெற்றதும், வீரமாகப் போராடி அமெரிக்காவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த கருப்பர்களை மீண்டும் முதுகில் குத்தியது அமெரிக்கா.  அது மட்டுமல்ல, இன்று அமெரிக்கா இத்தனை அளவுக்குப் பொருளாதாரத்தில் முன்னேறியிருக்கிறது என்றால் அதில் கருப்பர்கள் பங்கு அளவிட முடியாதது.

அதன் பின்னால் வடபகுதியில் முன்னேறிய முதலாளித்துவத்துக்கும், தென்பகுதி தோட்ட முதலாளிகளுக்கும் போராட்டம்.  வடபகுதி கருப்பர்களுக்கு ஆதரவாகச் செயல்பட, தென்பகுதி விடுதலை பெற முயல, அதிலும் கருப்பர்களின் போராட்டம்.  இரண்டு போர்களிலும் கருப்பர்களின் வீரமும், தீரமும் சொல்லி மாளாது.  அதை வரலாறு பதிவு செய்கிறது.

கடைசியில், நெருக்கடி காரணமாக, ஆபிரகாம் லிங்கன் கருப்பர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துப் பிரகடனம் வெளியிட்டார்.  அதைத் தொடர்ந்த உள்நாட்டு யுத்தத்திலும் வடபகுதி வென்றதால் இது நிரந்தரமானது, சட்டப்படி.  எனினும் இன்னமும் உண்மையான விடுதலை கருப்பர்களுக்குக் கிடைக்கவில்லை.

கடந்த நூற்றாண்டில் நாம் ஃப்ரட்ரிக் டக்ளசைத் தொடர்ந்து மால்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் பெயர்களையும், அவர்கள் நடத்திய போராட்டங்களையும் கேள்விப் பட்டிருப்போம்.  “எனக்கு ஒரு கனவு இருக்கிறது” என்ற கிங்கின் வீர உரை, தோழர் காஸ்ட்ரோவின் “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்ற உரைக்கு இணையானது என்றே சொல்லலாம். 
 
எனினும் முதல் பத்தியில் நான் சுட்டிக் காட்டியபடி, நிறவெறி இன்னமும் அமெரிக்காவில் தொடர்கிறது.  300 வருடப் போராட்டங்களுக்குப் பிறகு ஓரளவு கருப்பர்கள் முன்னேறியுள்ளனர் என்றாலும், சிறிது இடைவெளி கிடைத்தாலும், கு க்ளக்ஸ் க்ளான் போன்ற வன்முறைக் குழுக்கள் அவர்களைத் தாக்கி அழிக்கத் தொடங்கி விடுகின்றனர்.  அமெரிக்காவின் அதிபராகவே ஒரு கருப்பரான பாரக் ஒபாமா வந்தாலும், அவரும் பெருமுதலாளிகளின் விருப்பப்படிதான் செயல்பட்டார்.  பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை.

இப்படிப்பட்ட துன்பமும், துயரமும், வீரமும், தீரமும், தியாகமும் நிறைந்த அமெரிக்க கருப்பின மக்களின் வரலாற்றை தோழர் ஆர்.பெரியசாமியின் எழுத்தில் படிக்கும்போதே மனது விம்முகிறது.  கண்கள் நிறைகின்றன.  முடிந்தால் நாமும் போய் அவர்களுடன் போராட்டத்தில் நின்று விட மாட்டோமா என்ற ஏக்கத்தைத் தூண்டி விடுகின்றது.  நான் போன கரோனா ஊரடங்கில் மால்கம் எக்ஸ் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போதும், தற்போது மார்ட்டின் லூதர் கிங்கின் சுயவரலாற்றைப் படிக்கும் போதும் இப்படித்தான் தோன்றியது.  எப்போதும் நான் அவர்களுடனேயே என்னை அறியாமல் அடையாளப்படுத்திக் கொண்டு விடுகிறேன்.  ஹாலிவுட் படங்களைப் பார்க்கும் போது கூட கருப்பின மக்கள் நடிக்கும் படம் என்றால் அதில் ஒன்றி விடுகிறேன்.  மீண்டும் அத்தகைய உணர்வைத் தூண்டி விட்டது தோழர் பெரியசாமியின் எழுத்து.

  இப்பொழுதும் நான் மொழிபெயர்த்துக் கொண்டிருப்பது ‘சோல்டாட் சகோதரர்’ என்ற கருப்பினப் போராளியின் கடிதத் தொகுப்புதான். 

தோழர் பெரியசாமியின் புத்தகம் ஏராளமான விவரங்களைத் திரட்டி, தொகுத்து எழுதப்பட்டுள்ளது.  ஏராளமான செய்திகள், விவரங்கள், அவற்றை எப்படி அணுக வேண்டும், இன்று அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது உட்பட தோழர் பெரியசாமி மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார்.  ஒரு மனிதரை அவரது தோற்றம் கண்டு எடை போட்டு விடக் கூடாது என்பதற்குச் சிறந்த உதாரணம் தோழர் பெரியசாமி.  அவருடன் பேசி இருக்கிறேன், பழகி இருக்கிறேன்.  தினமும் மாலையில் பாரதி புத்தகாலயத்தில் நான் வருவதற்காகக் காத்துக் கொண்டிருப்பார். வெளியே சென்று தேநீர் அருந்துவோம் அல்லது அவர் கையாலேயே தேநீர் கிடைக்கும்.  அவருக்குள் இருந்த ஆற்றல் முழுதும் வெளிப்பட்டுள்ள புத்தகமாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது. அந்த எளிய மனிதருக்குள் இத்தனை ஆற்றலா!  இதை அவர் இருக்கும் போதே படித்து அவரிடம் என் வாழ்த்தைக் கூறியிருக்க வேண்டும் என்ற குற்ற உணர்வை என்னால் தவிர்க்க முடியவில்லை.  இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு இனி அமெரிக்க மக்கள் வரலாறு (சிந்தன் புக்ஸ்) புத்தகத்தைப் படிப்பதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டது.  அதெல்லாம் படிப்பது எளிதாகி விடும்.

இந்தப் புத்தகத்தில் ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறுகிறார் பெரியசாமி:
”அடிமைகளாகக் கூனிக்குறுகிக் கிடந்த ஆப்ரிக்க கருப்பர்கள் இன்று ஆப்ப்ரிக்க அமெரிக்கர்களாக நிமிர்ந்து நிற்பதற்கு அவர்களுடன் இணைந்து வெள்ளை இன மக்கள் குறிப்பாக வெள்ளைத் தொழிலாளி வர்க்கமும், மாணவர்களும், விவசாயிகளும், கருப்பர்களுடன் இணைந்து நடத்திய கூட்டுப் போராட்டங்கள் அடிப்படையானதாகும்.  இதை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் ஆப்ப்ரிக்கக் கருப்பர்களின் வரலாறைத் தவறாகப் பார்ப்பதாகி விடும்.  இன்னும் சொல்வதானால், வெள்ளையர்களின் ஆதரவும், வலுவான துணையும் இல்லையென்றால் அந்த வரலாறு வேறு எதிர்மறையான திசையில் சென்றிருக்கும்.  எனினும் உழைக்கும் மக்கள் என்ற வகையில் அவர்களது ஆதரவும், துணையும் வரலாற்று ரீதியாக இயல்பானது என்பதால் இந்த ஒற்றுமைக்காக ஐக்கிய அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, அடக்கு முறைகளையும் அவதூறுகளையும் எதிர்கொண்டு அயராது பாடுபட்டது.”

இந்த உண்மையை உலக வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது.  எல்லா இடங்களிலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தில் ஒடுக்கும் இனத்தைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் இணைந்தே நின்றிருக்கிறார்கள்.  கருப்பர் இனப் போராட்டத்தில் வெள்ளை இன மக்களைச் சேர்க்க மறுத்த மால்கம் எக்ஸ் கடைசியில் ஒரு இடத்தில் குறிப்பிட்டார், “இதை நான் முன்பே உணர்ந்திருந்தால், அவர்களைச் சேர்த்துக் கொண்டிருப்பேன்”.  மார்ட்டின் லூதர் கிங்கின் தலைமையில் ஆயிரக்கணக்கில் வாஷிங்டனை நோக்கி பேரணியாகக் கருப்பர்கள் சென்ற போது பல்லாயிரக்கணக்கான வெள்ளையர்களும் சேர்ந்தே சென்றனர்.  1983இல் கு க்ளக்ஸ் க்ளான் இதே போன்ற பேரணி நடத்த முயன்ற போது அந்த நகரத்தைச் சேர்ந்த ‘அனைத்து’ மக்களும் சேர்ந்து எதிர்த்தனர்.  வன்முறைக் குழுவான கு க்ளக்ஸ் க்ளான் வெறியர்களை போலீஸ் காப்பாற்றி அனுப்ப வேண்டி வந்தது.  

இந்தச் செய்தியை அண்ணல் அம்பேத்கார் இப்படிக் குறிப்பிடுகிறார்: 
”தேசிய ஒற்றுமை, (சோகங்களினால் துயரப்படும் சக மனிதர்கள் மீதான ஆழ்ந்த) மானுடப் பரிவு, நீதி, சீர்திருத்தங்களின் பார்வைக் கோணத்திலிருந்து தீண்டாமையை ஒழிப்பது மிகமிகத் தீவீரமான தேவை என்பதனை நியாயமாக நம்பக்கூடிய அனைத்து மக்களும் தீண்டப்படாதோருடன் சேர்ந்து பங்கு பெறுவதற்கு எவ்விதமான ஆட்சேபணையும் அங்கு இருக்கக் கூடாது.”
”வெவ்வேறுபட்ட கருத்துக்களுடனும், அணுகுமுறைகளுடனும் இருக்கிற மக்களுடன் கொள்கைகளில், சமரசம் எதுவும் செய்து கொள்ளாமல் ஒத்துழைப்புத் தந்து செயலாற்றுவது எல்லோருக்குமே ஆதாயம் தருவதாகவே இருக்கும்.”
(மஹத்: முதல் தலித் புரட்சியின் உருவாக்கம். பக்கம் 279, 280, ஆனந்த் டெல்டும்டே)

இதனை ஏன் நான் இங்கு தனியாகக் குறிப்பிடுகிறேன் என்றால், ஒரு குறிப்பிட்ட இனத்தில், குலத்தில், மதத்தில் பிறநது விட்டாலே அவர் அப்படித்தான் இருப்பார் என்ற முடிவுக்கு வந்து விட முடியாது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன்.  இப்போது இந்த உணர்வு மிக அதிகமாகப் பலரிடம் இருப்பதைக் காண்கிறேன்.  அப்படி முத்திரை குத்தி ஒதுக்கி விடுவது முற்போக்கான, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை பலவீனமடையச் செய்து விடும் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன்.  அதைத்தான் வரலாறும் சுட்டிக் காட்டுவதாக நம்புகிறேன்.

ஒட்டுமொத்தத்தில், இந்தப் புத்தகம் ஒடுக்கப்பட்டோருக்கும், மக்களுக்குமான போராட்டத்தில் களத்தில் நிற்கும் அனைவருக்கும் ஒரு ஒளிவிளக்காகத் திகழ்கிறது, உத்வேகம் ஊட்டுகிறது என்பதைக் குறிப்பிட்டு முடிக்கிறேன்.  உங்களின் கைகளில் தவழ வேண்டிய ஆற்றல் மிக்க புத்தகம் இது.

--- கி.ரமேஷ்.

Rajendram Annamalai

unread,
Jun 26, 2021, 6:35:21 PM6/26/21
to mint...@googlegroups.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jun 30, 2021, 4:30:02 PM6/30/21
to மின்தமிழ்
மதுரை தமிழிலக்கியத் திட்டம் (Project Madurai) ›
மூலம் வெள்ளுரை வடிவில்  வெளியிடப்பட்ட அண்மைய வெளியீடுகள்

PM0805: 
பண்டாரசாத்திரம் 10 & 11
ஸ்ரீ அம்பலவாணதேசிகமூர்த்திகள்
சித்தாந்த சிகாமணி (805_01) 

சித்தாந்தப் பஃறொடை (805_02)
____________________________

PM0804: 
பண்டாரசாத்திரம் 8 & 9
ஸ்ரீ அம்பலவாணதேசிகமூர்த்திகள்
நமச்சிவாய மாலை (804_01)

அதிசய மாலை (804_02)
____________________________

PM0803: 
பண்டாரசாத்திரம் 6, 7
ஸ்ரீ அம்பலவாணதேசிகமூர்த்திகள்
உபாயநிட்டை வெண்பா-நிட்டைவிளக்கம் (உரையுடன்)
____________________________

தேமொழி

unread,
Jun 30, 2021, 4:42:48 PM6/30/21
to மின்தமிழ்
d.jpg
கீழடி - வைகை நாகரிகம்
---

தேமொழி

unread,
Jun 30, 2021, 5:15:04 PM6/30/21
to மின்தமிழ்
#whatsappshare

சைவ சித்தாந்த நூல்கள் சில 
கீழே உள்ள இணைப்பில் கிடைக்கும் 

1  அகநூல்
2  அருள் ஒளி-2008
3  இலக்கண விதிமூலங்களும் விதிகளும்
4  இலக்கியக் கட்டுரைகள்
5  காசீ காண்டம்
6  சனாதன சைவ விளக்கம்
7  சமயம்
8  சமயாசாரியர் சந்தானாசாரியர் சரித்திர சங்கிரகம்
9  சர்வஞானோத்ர ஆகம ஞானபாத வசனம்
10  சித்தாந்தச் செழும் புதையல்கள்
11  சிவ ஞான போதம்
12  சிவ ஞான விளக்கம்
13  சிவகாமசேகரம் பிரதிட்டா விதி
14  சிவஞான சித்தித் திறவுகோல்
15  சிவபூசாவிதி
16  சிவபூசை விளக்கம்
17  சிவானந்த விஜயம் (மணிவிழாச் சிறப்பு மலர்)
18  சிவாலய-சில்பங்கள்-முதலியன
19  சிவாலயங்கள்-இந்தியவிலும்-அப்பாலும்-2
20  சிவாலயங்கள்-இந்தியவிலும்-அப்பாலும்-3
21  சிவாலயங்கள்-இந்தியவிலும்-அப்பாலும்-4
22  சிவாலயங்கள்-இந்தியவிலும்-அப்பாலும்-5
23  சுத்த போசன பாக சாத்திரம்
24  சுப்பிரமணிய ஆலய நித்தியபூசா விதி
25  சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
26  சைவ சமயம்
27  சைவ சித்தாந்த ஒழுக்கவியல் அடிப்படைகள்
28  சைவ சித்தாந்த கை நூல்
29  சைவ சித்தாந்த ஞான விளையாட்டு
30  சைவ சித்தாந்த மெய்ப் பொருளியல்
31  சைவ சித்தாந்தமும், விஞ்ஞான உலகமும்
32  சைவ சித்தாந்தம் கூறும் தத்துவங்களும் தாத்துவிகங்களும்
33  சைவ சித்தாந்தம் மறு பார்வை
34  சைவ சிராத்த விதி
35  சைவ தூஷண பரிகாரம்
36  சைவ நற்சிந்தனை (சி. செல்லத்துரை)
37  சைவ நற்சிந்தனை
38  சைவ நெறி-ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 11
39  சைவ நெறி-தரம் 11
40  சைவ மகத்துவம்
41  சைவ வாழ்வியற் சிந்தனைகள்
42  சைவ வினா விடை
43  சைவ வேதாந்த சித்தாந்த ஆராய்ச்சி
44  சைவசித்தாந்த நோக்கில் கைலாசபதி ஸ்மிருதி
45  சைவசித்தாந்த விளக்க விருத்தியில் யாழ்ப்பாண அறிவியல் மேதையின் சுவடுகள்
46  சைவசித்தாந்தச் சம்புடம்
47  சைவத் தோத்திர மஞ்சரி
48  சைவநெறி- தரம் 8
49  சைவநெறி-தரம் 10
50  சைவநெறி-தரம் 6
51  சைவபூஷண சந்திரிகை
52  சைவபோதம் இரண்டாம் புத்தகம்
53  சைவபோதம் முதற்புத்தகம்
54  சைவப் பிரகாசிகை முதற் புத்தகம்
55  சைவப்பிரகாசிகை 5
56  சைவம் வளர்த்த சான்றோர்கள்
57  தத்துவ ஞான சிந்தனையும்
58  நடராஜ வடிவம்
59  நன்னூற் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும்
60  பாரத இதிகாசத்தில் வரும் பாத்திரங்களின் குணவியல்பு
61  புவனேசுவரி மகத்துவம்
62  மதங்க சூளாமணி
63  முத்திராலட்சணம்
64  முப்பொருள் விளக்கம்
65  மூர்த்தியலங்கார விதி
66  யாழ் நூல்
67  விநாயக பரத்துவம்
68  வேத பாரம்பரியமும் சைவ சித்தாந்தமும்
69  வேதாகம நிரூபணம்2
70  வேதாகம நிரூபணம்
71  வைதிகசந்தியாவந்தனவிதி
72  வைரவப் பிரதிட்டா விதி
 



தேமொழி

unread,
Jul 6, 2021, 1:44:13 AM7/6/21
to மின்தமிழ்
முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் 
அவர்களின் 
"தேவார மாண்பும் ஓதுவார் மரபும்"
நூல் குறித்து அறிமுகம் செய்பவர் 
மரபின் மைந்தன் முத்தையா

தேமொழி

unread,
Jul 6, 2021, 2:04:06 AM7/6/21
to மின்தமிழ்
புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசுப் பள்ளி 
ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீமலையப்பன் 
அவர்களின் வலைக்காட்சி

d.jpg
கீழடி வைகை நாகரீகம் - சிறுவர்களுக்கான புத்தகம் | நூல் அறிமுகம்

தேமொழி

unread,
Jul 11, 2021, 5:21:11 AM7/11/21
to மின்தமிழ்
Comrade Mythili Sivaraman.jpeg
வாருங்கள் படிப்போம்

புத்தகத் திறனாய்வு : 63

காம்ரேட் அம்மா ( மகளின் பார்வையில் மைதிலி சிவராமன்)- கல்பனா கருணாகரன்

சிறப்பு அழைப்பாளர்: கல்பனா கருணாகரன்
Associate Professor, IIT Madras

திறனாய்வு மற்றும் ஒருங்கிணைப்பு :பெ.உமா மகேஸ்வரி
Assistant Professor, SDNB Vaishnav College, Chennai*


July 11, 2021 
மாலை 5.30 PM *
ஞாயிறு
* 5-5.30 மணி*  குமரன் அவர்களின் புல்லாங்குழல் இசை நிகழ்வு

Join Zoom Meeting

Meeting ID: 862 6254 5768
Passcode: 089722


பங்கேற்க அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்

தேமொழி

unread,
Jul 12, 2021, 2:31:11 PM7/12/21
to மின்தமிழ்

Mumia Abu Jamal in Mumia Siraiyum Vaazhvum Book Review by K. Ramesh. 
Book Day Website

முமியா: சிறையும் வாழ்வும் – கி. ரமேஷ்

July 12, 2021


அதிகாரம் படைத்தோர் அநீதி செய்தால் என்னவாகும் என்பதற்கு வரலாறு மீண்டும் மீண்டும் உதாரணங்களைக் கொடுத்துக் கொண்டே வருகிறது.  சமீபத்தில் அமெரிக்காவில் ஜார்ஜ் ப்ளாய்ட் ஒரு போலீஸ்காரனால் கழுத்து அழுத்தப்பட்டுக் கொல்லப்பட்டதை நாம் அறிவோம்.  அது போல் உலகம் முழுதும் ஒடுக்கப்பட்டோருக்காகக் குரல் கொடுப்பவர்கள் பலர் அதிகார வர்க்கத்தால் கொலை செய்யப்படுகின்றனர் அல்லது கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டு வாட விடப்படுகின்றனர்.  நாம் அறிந்தது தென்னாப்பிரிக்கச் சிறையில் நெல்சன் மண்டேலா 29 ஆண்டுகள் கழித்தார்.  ஆனால் அமெரிக்காவில் ஒருவர் சுமார் 40 ஆண்டுகளாக வெஞ்சிறையில் மரணதண்டனைக் கைதியாக வெந்து வருகிறார்.  அவர்தான் முமியா அபு ஜமால்.  1981இல் ஒரு போலியான கொலைக்குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டவர் இன்றுவரை சிறையிலேயே கழித்து வருகிறார்.  

மார்ட்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ் போன்று அமெரிக்காவில் தமது கருப்பின மக்களின் விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் முமியா.  1981ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்பதாம்  தேதியன்று அவர் கைது செய்யப்பட்ட போது முன்னோடி வானொலிப் பத்திரிகையாளராகவும், கருப்பினப் பத்திரிகையாளர் சங்கத்தின் பிலடெல்ஃபியா கிளைத் தலைவராகவும் இருந்தார்.  என்பிஆர், மியூச்சுவல் பிளேக் நெட்வொர்க், நேசனல் பிளேக் நெட்வொர்க், டபிள்யூ.யூ.ஹெச்.ஒய், இன்னும் பல வானொலி நிலையங்களில் அவர் ஆற்றிய பணிக்காக விருது பெற்றவர், பரவலாகப் பாராட்டப் பட்டவர்.  “குரலற்றவர்களின் குரலாக” இவர் பிலடெல்ஃபியா நகரில் இவர் அறியப்பட்டார்.

முன்பே தனது 14ஆவது வயதிலேயே ஜார்ஜ் வாலசை ஆதரித்து ஊர்வலம் நடந்த போது அதை எதிர்த்ததற்காகக் கடுமையாகத் தாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார் ஜமால்.  பின்னர் கருப்புச் சிறுத்தைக் கட்சியில் செயல்பட்டார்.  பின்னர் ஒரு பத்திரிகையாளர்களாக பிலடெல்பியா காவல்துறையின் மீது கடும் விமர்சனங்களை வைத்தார்.  விடுமா அதிகார வர்க்கம்.  அவர் ஒரு போலீசைக் கொன்றதாகக் குற்றம் சாட்டிக் கைது செய்து மரணதண்டனையும் பெற்றுக் கொடுத்தது.  ஆனால் பரவலாக எழுந்த கண்டனக்குரலால் 1995இல் நிறைவேற்றப்படவிருந்த மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை.  ஆனால் தொடர்ந்து இன்றுவரை அவர் மரணதண்டனைக் கைதிகள் வைக்கப்படும் சிறையில் வாடி வருகிறார்.  

அவரது சிறை வாழ்க்கை 40 ஆண்டுகளாகத் தொடர்கிறது.  நம்மால் இரண்டு மாதங்கள் வெளியே போகாமல் வைக்கப்பட்ட போது எவ்வளவு சித்ரவதையை மனதளவில் அனுபவித்தோம் என்பதை நாமறிவோம்.  40 ஆண்டுகள் சிறை வாழ்க்கை, அதுவும் மரணதண்டனைக் கைதியாக என்றால்?  நினைக்கவே மனம் நடுங்குகிறது.

ஆனால் அவர் தம்மைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டும், தொடர்ந்து படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும், அதிகார வர்க்கத்தின் மீது தாக்குதலைத் தொடுத்துக் கொண்டும் இருக்கிறார்.  சிறையில் இருந்து கொண்டே அவர் எழுதிய புத்தகமே அதிகார வர்க்கத்தின் முடியைப் பிடித்து ஆட்டி விட்டது என்றால் அவரது எழுத்து எவ்வளவு வீரியமாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

அவர் எழுதிய சில கட்டுரைகளை புத்தகமாக்கி வெளியிட்டுள்ளது சிந்தன் பதிப்பகம்.  அமெரிக்கச் சிறையில் வாடும் கருப்பின மக்களைப் பற்றிய பல புத்தகங்கள் வந்துள்ளன.  அதில் நான் தற்போது சிந்தன் பதிப்பகத்திற்காக மொழிபெயர்த்து வரும் ‘சோல்டாட் சகோதரர்’ உம் ஒன்று.  அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போதுதான் தோழர் மாதவ் இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்தி என்னிடம் கொடுத்தார்.  நான் ஏற்கனவே சோல்டாட் சகோதரரின் கட்டுரைகளைப் படித்து சிலிர்த்துப் போயிருந்தேன்.  இந்தக் கருப்பின மக்கள்தான் எவ்வளவு சிறந்த அறிவாளிகளாக இருக்கிறார்கள் என்று வியந்து போயிருந்தேன்.  எனது எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியது முமியாவின் கட்டுரைகள்.  தனது மரணத்தை எதிர்நோக்கி இருக்கும்போதே கடைசி நிமிடத்தில் கூட லெனினின் ‘அரசும் புரட்சியும்’ படித்து முடித்து விட்டுத் தூக்கு மேடையில் ஏறிய பகத்சிங்கை நாமறிவோம். மரணதண்டனைக் கைதியாக இருந்து கொண்டே முமியா எழுதியிருக்கும் கட்டுரைகளைப் படிக்கையில் மேலும் மேலும் வியப்பு மேலிடுகிறது.  வெளியில் இருந்து உலகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் நாம் கூட இவ்வளவு தெளிவாக சிந்திப்போமா என்று தெரியவில்லை.  

இந்தப் புத்தகத்தை மூத்த மொழிபெயர்ப்பாளர் வை.கோவிந்தசாமி தமிழில் வழங்கியிருக்கிறார்.  வழக்கம் போலவே அது மொழிபெயர்ப்பாக இல்லாமல் ’தமிழிலேயே’ எழுதப்பட்டுள்ளது!

இந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தில் இதனை இரண்டே நாட்களில் படித்து முடித்தேன்.  அதிகார வர்க்கத்தின் கோர முகத்தைக் கிழித்து எறிகிறது அவரது எழுத்துக்கள்.  குறிப்பாக மதத்தைப் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரை நிச்சயமாக அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.  லெனின் கூறிய ஒரு மேற்கோள் எனக்கு நினைவுக்கு வந்தது: “கடவுள் இருக்கிறார் என்றும், இல்லை என்றும் வாதிட்டுக் கொண்டிருப்பவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள்.  இங்கே நிகழ் உலகம் என்று ஒன்று இருக்கிறது”.  (மேற்கோள் கொஞ்சம் முன்னே, பின்னே இருக்கும்.  மன்னிக்கவும்.)  முமியா இப்படிச் சொல்கிறார்:

”எதிர்காலம் குறித்தே அவை தீவீரமாகக் கரிசனப்படுவதால் நிகழ்காலத்தை மறந்து விடுகின்றன.  இந்தப் பூமியில் தங்கள் உதவியோடு உருவாக்கப்பட்ட கொடிய நரகத்தைப் பார்க்காமல் கண்மூடிக் கொள்வதில் திருப்தி கொள்ளும் அளவிற்கு இந்தப் பிரசுர எழுத்தாளர்கள் சொர்க்கம் குறித்த எண்ணத்தில் மிகவும் போதையேறி இருக்கிறார்கள்.”

வாழ்க்கை மீது அவரது நம்பிக்கை இப்படிப் பேசுகிறது:

”வரலாறு முழுக்க நேர்மையானவர்களே தண்டிக்கப்பட்டு வருகின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ள விவிலிய அறிஞராக இருக்க வேண்டியதில்லை.  கடைசி ஆயிரம் ஆண்டுகளாக பூமியானது அதிகாரத்திலிருப்பவர்களின் முழுச் சொத்தாக இருந்து வர, பணிவானவர்களுக்குக் கல்லறையே மரபுரிமையாகக் கிடைத்து வந்தது என்ற போதிலும் ஒருநாள் “பணிவானவர்களுக்கு” இந்த “பூமி மரபுரிமையாகக்” கிடைக்கப் போகிறது.”

அவரது நிறைந்த அறிவு ஒவ்வொரு கட்டுரையின் முன்பும் அவர் காட்டும் எடுத்துக்காட்டுகளில் சுடர் விடுகிறது.  

அவரது ஒரு வாக்கியத்துடன் நிறைவு செய்வோம்:

“அவர்கள் என்னுடைய சாவை மட்டும் விரும்பவில்லை, நான் மௌனமாக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.”

கவலைப்படாதீர்கள் முமியா, உங்கள் மௌனம் அதிகார வர்க்கத்தின் பெரும் கூச்சலை விட வலுவானது.  அது ஒடுக்கப்பட்டவர்களை மீட்கும்.

கி. ரமேஷ்

புத்தகம்: முமியா –  சிறையும் வாழ்வும்
சிந்தன் பதிப்பகம்
பக்கம்: 171
விலை: ரூ.150.
---

தேமொழி

unread,
Jul 17, 2021, 2:34:10 AM7/17/21
to மின்தமிழ்
books.JPG

பெருந்தொற்றைத் தாண்டிய புத்தகப்பயணம்

#நம்வாசிப்பு #நம்வாசிப்பு


புத்தகப் பதிப்பும் விற்பனையும்  கடும் நெருக்கடியில் தத்தளிக்கிறது.

 கொரோனா தொற்றின் முதல் சமூகப் பொருளாதார  அடி புத்தகக் கண்காட்சிகள் மீதே விழுந்தது. எனவே புத்தகத்தில் முதலீடு செய்ய பணம் இல்லாத பதிப்பாளர்கள் ஒரு புறம் இருந்தாலும் புத்தகம் வாங்கவும் வாசிக்கவும் தயாராக இருப்பவர்களிடமும் புத்தகங்கள் சென்று சேரவில்லை.. 

இது புத்தகங்கள் மக்களைச் சென்று சேரும் மதகுகளில் ஏற்பட்டுள்ள தேக்கம்.

இந்தத் தேக்கத்தை உடைக்கும் நோக்குடன் பாரதி புத்தகாலயம், தமிழ் நாடு அறிவியல் இயக்கம் (TNSF)   முன்னெடுக்கும் இயக்கமே “மக்களை நோக்கிப் புத்தகங்கள்”.

 இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகத்தின் 75 மையங்களில் 2021 ஆகஸ்ட் முதல் 2022 பிப்ரவரி வரை பிரம்மாண்ட இயக்கத்தை நடத்தும் திட்டத்தை முன் வைக்கிறோம்.

 ஒவ்வொரு மையத்திலும் ஓரிடத்தில் (அது பள்ளி வளாகமோ, திருமண மண்டபமோ, பொது வெளியிலோ எப்படியானாலும் சரி) அதை அச்சாகக் கொண்டு புத்தகங்களை வீடுகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.

இதைச் சாதிக்க, ஒவ்வொரு மையத்திலும் அதற்கான குழு அமைக்கப்பட வேண்டும். வாசிப்பில் ஆர்வம் உள்ள நபர்களை, அமைப்புகளை இணைத்து ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கலாம்.

 கூடிச்சென்றால் கோடிப் புத்தகம் விற்கலாம்.

புத்தக விற்பனையுடன், வாசகத் தேடலை அடையாளம் காண உதவும் ஒரு படிவத்தை சமூக வலைத்தளம் மூலமும், நேரடியாகவும் எடுத்துச் சென்று சேர்ப்போம். புத்தகத் தேவையை பூர்த்திசெய்வோம். எதிர்காலப் பதிப்பு முயற்சிகளுக்கும் இது உதவும்.

இம்முயற்சியில் இணைகிற எல்லா பதிப்பகங்களின் புத்தகங்களையும் மக்களிடம் கொண்டுசெல்ல 5000 தலைப்புகளிலான புத்தகங்களை பட்டியலிட்டு எடுத்துச் செல்வோம். 

அந்த புத்தகங்கள் பற்றிய அறிமுகக் குறிப்புகளையும் லட்சக்கணக்கில் மக்களிடம் எடுத்துச்செல்வோம்.

புதிய கனவுகளோடு விரிகிற இந்த இயக்கத்தை ஆகஸ்ட் 15 முதல் துவக்குகிறோம். தொற்றுக்காலச் சலிப்புகள் அகலக் கைகளில் புத்தகம் ஏந்துவோம், மக்களைச் சந்திப்போம் புத்தகங்களோடு.

முடிவற்ற நம் வாசிப்புப் பயணத்தில் மறக்கவியலாத நிகழ்வாக இதை மாற்றிக்காட்டுவோம்.

 தேங்கி நிற்கும் வாழ்வின் சக்கரங்களைப் புத்தக நெம்புகோலால் நெட்டித் தடத்தில் கொண்டு செலுத்துவோம்.

 வாழ்க்கை தயங்கி நின்றாலும் வாசிப்பு ஒருபோதும் தடைபடாது என்பதை மீண்டும் நிறுவுவோம்! வாசிக்கும் ஓர் அறிவார்ந்த சமூகத்தைக் கட்டமைப்போம்.

கரம் இணைப்போம் தோழர்களே!!

பாரதி புத்தகாலயம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

தேமொழி

unread,
Jul 19, 2021, 2:17:35 PM7/19/21
to மின்தமிழ்
அரிய தமிழ் நூல்களை ஒலிவடிவில் இலவசமாக தமிழ் கூறும் நல்லுலகிற்குப் படைத்தளிக்கும், தமிழ் மரபு அறக்கட்டளையின் மற்றுமோர் சீரிய முயற்சியான சுவலி ஒலிநூல் செயலியின் வலை பதிப்பு (web version)

---
செயலியைப் பதிவிறக்கம் செய்க: 
suvali link.jpg
----

தேமொழி

unread,
Jul 25, 2021, 2:51:17 AM7/25/21
to மின்தமிழ்
thozhar olivannan.JPG
வாருங்கள் படிப்போம்

புத்தகத் திறனாய்வு : 67

 ஆன்டன் செக்காவ் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்


திறனாய்வு: கோ.ஒளிவண்ணன்பதிப்பாளர் மற்றும் எழுத்தாளர்*

நாள்: 25/7/21
நேரம்: மாலை 6.30 மணி,ஞாயிறு


Join Zoom Meeting

Meeting ID: 839 5743 0377
Passcode: 840418

 அனைவரும் பங்கேற்க அன்போடு அழைக்கிறோம்
---
Message has been deleted

தேமொழி

unread,
Aug 5, 2021, 3:48:22 AM8/5/21
to மின்தமிழ்
தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் 
- எட்கர் தர்ஸ்டன்
எழுதிய நூல் 7 தொகுதிகளும் தமிழில் 

தொகுதி - 1: 

தொகுதி - 2: 

தொகுதி - 3:

தொகுதி - 4:

தொகுதி - 5:

தொகுதி - 6:

தொகுதி - 7:

-----------------------------

தேமொழி

unread,
Aug 5, 2021, 4:44:42 PM8/5/21
to மின்தமிழ்
21 books.jpeg
21 books2.jpeg

#whatsappshare
21 books2.jpeg
21 books.jpeg

தேமொழி

unread,
Aug 7, 2021, 5:12:00 AM8/7/21
to மின்தமிழ்
வாருங்கள் படிப்போம் - புத்தகத் திறனாய்வு : 70
அறியப்படாத தமிழ்மொழி
முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர்

திறனாய்வு:முனைவர் வா.நேரு

நாள்: 7/8/21
நேரம்: மாலை 7.30 மணி,சனிக்கிழமை

Join Zoom Meeting

Meeting ID: 851 8497 4342
Passcode: 256296
*அனைவரும் பங்கேற்க அன்போடு அழைக்கிறோம்

Thozhar Va Nehru1.jpeg
அறியப்படாத தமிழ்மொழி
நூல் உள்ளடக்கம்:
கல்தோன்றி மண்தோன்றா - தமிழ்ப் பொய்யா?
திருக்குறளில் முரண்பாடுகள் ஏன்?
அணுவைத் துளைத்து - தமிழர் அறிவியலா?
முருகன் = தமிழ்க் கடவுளா? சம்ஸ்கிருதக் கடவுளா?
ஆறுபடை வீடுகளில் எத்தனை வீடுகள்?
எது முதல் திணை? - குறிஞ்சியா? முல்லையா?
தமிழ் மறைப்பு அதிகாரம்
துக்கடாக்கள்: 
சொல் = Sol-ஆ? Chol-ஆ?
சித்திரையா? தையா?
திராவிடமா? தமிழா?
தொல்காப்பியத்திலேயே சாதி உண்டா?
சிலப்பதிகார - கம்ப ராமாயணச் சண்டை!
இலக்கண அரசியல்
நாட்டுப்புறத் தமிழ்
சொல், செப்பு, பறை! பூ, அலர், மலர்!
தமிழகத்தின் ஊர் பேர் விகுதிகள்
பின்னுரை

பின்னுரை: அறிவியல் தமிழ், Meme தமிழ், வளர் தமிழ்!
பின் இணைப்பு: வடமொழி விலக்கு அகராதி!


தொழில்நுட்பம் பயின்ற இளைஞர்கள் மொழிநுட்பத்தோடு இயங்குகிறபோது அவர்களும் பெருமை பெறுகிறார்கள்; மொழியும் பெருமை பெறுகிறது.
– கவிப்பேரரசு வைரமுத்து

இந்நூல் தெளிவும், செறிவும், திட்பமும், நலனும் நிறைந்து விளங்கும் ஓர் அரிய நூல். தமிழிலக்கியப் பகுதிகளில் அறியப்படாத இருண்ட பகுதிகளுக்கு ஒளியூட்டும் ஒப்பற்ற பனுவல் இது எனலாம். 
- அ. கலியமூர்த்தி, IPS (Former Superintendent of Police, Tiruchirapalli)

பல தமிழறிஞர்களின் நூல்களைத் தேடித் தேடி படித்தால் கிடைக்கக் கூடிய செய்திகளை, ஒரு பிழிவு போல இந்த நூலில் தொகுத்துக் கொடுத்துள்ளார் கே.ஆர்.எஸ். 
- கா.ஆசிப் நியாஸ், கனடா


தேமொழி

unread,
Aug 7, 2021, 10:38:28 PM8/7/21
to மின்தமிழ்
அறியப்படாத தமிழ்மொழி
முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர்

திறனாய்வு:முனைவர் வா.நேரு
https://youtu.be/Ge_Ti0GQllo

தேமொழி

unread,
Aug 15, 2021, 4:40:27 AM8/15/21
to மின்தமிழ்
சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் :
 இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்திலும் அதற்குப் பின்னும் நிகழ்த்திய சொற்பொழிவுகள்
-  அய்யாமுத்து, அ. 1975, வானதி பதிப்பகம் (சென்னை)
(ஆர்க்கைவ் இணையத்தளத்தில் உள்ள அய்யாமுத்து அவர்களது இந்த நூலை இலவசமாக தரவிறக்கி வாசிக்கலாம்)

தேமொழி

unread,
Aug 20, 2021, 11:07:32 PM8/20/21
to மின்தமிழ்
thohzar olivannan - reviews a book.jpeg

வாருங்கள் படிப்போம்

MAN'S SEARCH FOR MEANING- VIKTOR E FRANKL
திறனாய்வு:   கோ.ஒளிவண்ணன்

21/8/21  -  நேரம் மாலை 7.30 மணி --  சனிக்கிழமை

Join Zoom Meeting

Meeting ID: 868 9346 2463
Passcode: 977526

=========================
சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த புத்தகங்களில் ஒன்றான 
விக்டர் ஃபிராங்கிள் எழுதிய 
மேன்ஸ் சர்ச் பார் மினிங் 
(MAN'S SEARCH FOR MEANING by Victor Frankl) 
என்கிற புத்தகத்  திறனாய்வு

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜி படைகளின் உச்சக்கட்ட அடக்குமுறைகளை வதை முகாம்களில் எதிர்கொண்டு‌, தப்பிப் பிழைத்த மனநல மருத்துவரின் அனுபவங்களின் தொகுப்பு.  மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இருத்தலிய கோட்பாடுகளை (Existentialism)  உள்ளடக்கிய புத்தகம்.


தேமொழி

unread,
Aug 27, 2021, 1:43:29 PM8/27/21
to மின்தமிழ்
vairamuthu.jpeg

வாருங்கள் படிப்போம்
புத்தகத் திறனாய்வு:76

"வைரமுத்து வரை"
1931 முதல் 2021 வரை (தமிழ்த் திரைப்பாடல் வரலாறு)

ஆசிரியர்: பேரா முனைவர் *சு. சண்முகசுந்தரம்

நூல் அறிமுகம்: பேரா முனைவர் சொ. மகாதேவன்

நாள் நேரம்:  28-08-21  சனிக்கிழமை, மாலை 7.30 மணி


Join Zoom Meeting

Meeting ID: 868 9346 2463
Passcode: 977526

அனைவரும் பங்கேற்க அன்போடு அழைக்கிறோம்
_____________________________________________________________
"வைரமுத்து வரை" 
(1931 முதல் 2021 வரை (தமிழ்த் திரைப்பாடல் வரலாறு)

நூலாசிரியர்: பேரா முனைவர் சு. சண்முகசுந்தரம் (காவியா)

நூல் அறிமுகம்: பேரா முனைவர் சொ. மகாதேவன்

சிறப்பு அழைப்பாளர்: பத்மபூஷன் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்

நாள், நேரம்:  28-08-21  சனிக்கிழமை, மாலை 7.30 மணி.

90 ஆண்டுகள் நிறைவு கண்ட தமிழ்த் திரைப்படப் பாடல்களின் முழுமையான வரலாறு.

திரைப்பாடல் ஆசிரியர்கள் அவ்வளவு பேரின் பட்டியலுடன் கூடிய தகவல்கள்.

தமிழ்த் திரையுலகை அரசாண்ட பாடலாசிரியர்கள்.

ஒரே பாட்டெழுதி உச்சம் தொட்ட பாடலாசிரியர்கள்.

பாட்டு எழுதிய பெண் கவிகள்.

முத்தான முதல் வாய்ப்புகள்.

பாடல் பிறந்த கதைகள்.
 
கைமாறிய வாய்ப்புகள்.

வணங்காமுடிக் கவிஞர்கள்.

பாட்டு எழுதும் கிளர்ச்சி அனுபவங்கள்.

ஆறாத காயங்கள், அவமானங்கள்

மெட்டுக்குப் பாட்டா? பாட்டுக்கு மெட்டா?

இன்னும்... இன்னும்... சுவையான தகவல்கள்!

அறிந்துகொள்ள இணையுங்கள்.


தேமொழி

unread,
Sep 11, 2021, 4:27:05 AM9/11/21
to மின்தமிழ்
thozhar olivannan.JPG
Ikigai: The Japanese Secret to a Long and Happy Life
Join Zoom Meeting
Meeting ID: 816 9678 2002 
Passcode: 390839 

தேமொழி

unread,
Sep 11, 2021, 4:28:38 AM9/11/21
to மின்தமிழ்
சூம் இணைப்பு சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது... 

"Ikigai "கோ.ஒளிவண்ணன் அவர்களின் இத்திறனாய்வில் பங்கேற்போர் இதை நகலெடுத்து வரிசைப்படி தங்கள் பெயரை இணைத்துக் கொள்ளவும்...

Join Zoom Meeting

Meeting ID: 816 9678 2002
Passcode: 390839

தேமொழி

unread,
Sep 12, 2021, 2:47:54 AM9/12/21
to மின்தமிழ்
Ambedkar Book.JPG

வாருங்கள் படிப்போம்

புத்தகத் திறனாய்வு:81

எல்லோருக்குமானவரே -பேரா. க.கணேசன்

திறனாய்வு: அ.குமரேசன்,மூத்த பத்திரிகையாளர்,எழுத்தாளர்
சிறப்பு அழைப்பாளர்:பேரா. க.கணேசன்

12/9/21
நேரம் மாலை 6.30 மணி
ஞாயிறு


Join Zoom Meeting

Meeting ID: 816 9678 2002
Passcode: 390839

அனைவரும் பங்கேற்க அன்போடு அழைக்கிறோம்
____________________________
"எல்லோருக்குமானவரே" என்ற புத்தகம், பேராசிரியர் ச. கணேசன் (நாகர்கோவில்) அவர்களால் எழுதப்பட்டுள்ளது. பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. 70 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ரூ.20 மட்டுமே. இந்தச் செய்திகள் மக்களிடம் விரிவாகச் செல்ல வேண்டும் என்பதற்காகக் குறைந்த விலையில் புத்தகத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.

அம்பேத்கர் பற்றிய புதிய கண்ணோட்டங்களையும் புரிதல்களையும் கொடுப்பதாக இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் பேராசிரியர்.

தேமொழி

unread,
Sep 12, 2021, 2:45:42 PM9/12/21
to மின்தமிழ்
Homeland: Dream of a Democrat  - https://www.amazon.in/dp/B09FM88717

This is a collection of selected articles from the HOMELAND magazine which @annadurai_tn founded and edited. 

It's in english and available in KINDLE for free from today 12th Sep 12:30PM IST to 17th Sep 12:30 PM IST 



This book is a collection of articles from the magazine "HOME RULE". 

It's in english and available in KINDLE for free from today 12th Sep 12:30PM IST to 17th Sep 12:30 PM IST

================
Pls share with others
================

#whatsappshare

தேமொழி

unread,
Sep 13, 2021, 11:42:53 PM9/13/21
to மின்தமிழ்
doscount priced books.JPG
நூல்கள் தள்ளுபடி விலையில், பயன் கொள்க . 

தேமொழி

unread,
Sep 15, 2021, 12:26:03 AM9/15/21
to மின்தமிழ்

Book exploring Adyar’s history released

K.R.A. Narasiah Book.JPG

Amazing Adyar, a book compiling select articles written by historian and author K.R.A. Narasiah, was released at an event recently. The articles were written by him between 2013 and 2020, and published in the neighbourhood newspaper Adyar Times.

The 400-page book, published by the Palaniappa Brothers, is divided into three parts — the great institutions of Adyar, the social service organisations and the personalities who lived and live in the locality.

Launching the book, N. Ram, Director, The Hindu Publishing Group (THG), said the origins of the book were very interesting, and they take one back to a very good tradition of local journalism. He said he was struck by the comprehensiveness of the book and that the author had not missed any details. He recalled various institutions and personalities, including S. Balasubramanian, former editor, Ananda Vikatan; agricultural scientist M.S. Swaminathan; and historian and scholar Iravatham Mahadevan.

read more @ https://www.thehindu.com/news/cities/chennai/book-exploring-adyars-history-released/article36444194.ece

---

தேமொழி

unread,
Sep 15, 2021, 5:23:12 PM9/15/21
to மின்தமிழ்
madras book.JPG
11ம் வகுப்பு படிக்கும்  நந்தபாலன் @nandhabalan_archaeologist மற்றும் அவர் நண்பர்கள் இணைந்து எழுதிய "Marvels of Madras" என்ற புத்தகத்தை இன்று (15/09/2021) சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வரின் முதன்மை செயலாளரான உதயச்சந்திரன் IAS அவர்கள் புத்தகத்தை வெளிட்டார். 

About :

A book inspired by the very streets and roads, statues and buildings of madras. Co authored by, us, students, this book paints madras from our perspective, covering it's wide aspects in detail. 
The British, their trade and eventual colonism, their architecture-style, governors and their administration, the canals and buildings they built and madras even before it was known as such! 
This book has been crafted with utmost caution and help of old books, research articles and experts' opinion. The readers will be exposed to the bright and really dark sides of the British era leaving  the ultimate judgement and decision making process to you! Going through the narrative, one is sure to be awestruck by the facts we have poured, amazed and even shed a few drops of tears. Some of us authors have worked to break  stereotypes as "Madras evolved with the British". The readers are asked to bear with any kinds of errors even though age is never an excuse, to err is human after all! Enjoy this journey while we take you back in time, to the vintage streets of madras!

Book name - Marvels of Madras
Language - #english
Publication - #sundaydisturbers
Prize - 450  Rupees. 
#marvelsofmadras #booklaunch #secretary #personalsecretary #udhayachandranIAS #mkstalin #soundmani #tamilan__blood #book #bookstagram #books #booklove #bookforsale #sale #madras

தேமொழி

unread,
Sep 18, 2021, 1:40:46 AM9/18/21
to மின்தமிழ்
subas book review.JPG

இன்று மாலை 7.30 மணிக்கு 

 " INFERNO" முனைவர் சுபாஷிணி அவர்களின் இத்திறனாய்வில் பங்கேற்போர் இதை நகலெடுத்து வரிசைப்படி தங்கள் பெயரை இணைத்துக் கொள்ளவும்

Join Zoom Meeting

Meeting ID: 816 9678 2002
Passcode: 390839


உலகை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் உயிரினங்களில் மிக வேகமாக தன்னை விரிவாக்கி கொண்டிருக்கும் உயிரினம் மனித குலம். 

மனிதர்களுக்கும் வைரஸ்களுக்கும் இடையே நடைபெறும் போர் இப்போதுதான் தோன்றியதா?

டான் ப்ரவுனின் டாவின்சி கோட், ஏஞ்சல்ஸ் அண்ட்  டீமான்ஸ்  எனத் தொடரும் சஸ்பென்ஸ் த்ரில்லர் நாவல்களின் வரிசையில்.... வரலாறு கலை அறிவியல் என்ற மூன்றையும் கொண்டு நமக்கு புது உலகத்தைக் காட்டுகிறார் இந்த நூலின் வழியாக.

இக்கதையைச் சொல்வதற்காக உங்களை இத்தாலிக்கும் துருக்கிக்கும் அழைத்துச் செல்கிறேன்.. எனது நூல் திறனாய்வு உரையின் வழியாக..

நாளை சனிக்கிழமை 
இந்திய-இலங்கை நேரம் மாலை 7:30
ஐரோப்பிய நேரம் மாலை 4
மலேசிய சிங்கை நேரம் இரவு 10

ஒரு விர்ச்சுவல் பயணத்திற்குக் காத்திருங்கள்.
-சுபா

தேமொழி

unread,
Sep 18, 2021, 4:47:47 AM9/18/21
to மின்தமிழ்
வணக்கம்... 

எப்படியோ .. 
வேண்டாமென்று நினைத்து நினைத்தே 
எதையேனும் உனக்கு 
வாங்கி வரும் பழக்கத்தை 
உனக்கும் எனக்கும் பழக்கிவிட்டேன் 
வேறென்ன செய்ய 
அப்பா என்று நீ நீ ஓடிவந்து 
என் கையை விரித்துப் பார்க்கையில் 
ஒன்றுமில்லாது  ஏமாந்து போவாயோ 
என மனசு உடையும் வலி 
எதையேனும் தன் மகனுக்காகக் 
கடன்பாட்டாவது வாங்கி வரும் 
சில அப்பாக்களுக்கே புரியும்!

40க்கும் மேலான நூல்களை எழுதிய, பல விருதுக்களுக்குச் சொந்தக்காரரானா 
கவிஞர் வித்யாசாகர் அவர்களின் கவிதை இது.. 
இன்று அவருடன் நாம்…மாலை 4.45 மணிக்கு.... 


Meeting ID: 769 084 6511
Passcode: 2021

அனைவரும் வருக..

நன்றி

தேமொழி

unread,
Sep 18, 2021, 12:39:09 PM9/18/21
to மின்தமிழ்
DAN BROWN எழுதிய INFERNO புத்தகம் திறனாய்வு. முனைவர் சுபாஷிணி
https://youtu.be/__1LV7whvwo
---

தேமொழி

unread,
Sep 19, 2021, 1:37:11 AM9/19/21
to மின்தமிழ்
நூல் அறிமுகம்: தமிழா? சம்ஸ்கிருதமா?

-- -- மா. மாரிராஜன்

இரண்டு மொழிகளின் ஒப்பீடு, பழமை, சிறப்பு... இது குறித்த மொழியியல் ஆய்வு  நூல்கள் குறித்து ஒரு தேடல்.  புராணம் மற்றும் இலக்கியம் மேற்கோள் இல்லாமல் சுயசார்பின்றி வரலாறு தொல்லியல்த் தரவுகளுடன் கூடிய நூல் மற்றும் கட்டுரைகளைத் தேடிய ஒரு தேடலில்  நண்பரிடம் விசாரித்த போது... "தமிழா ? சம்ஸ்கிருதமா?"   நூலை வாசியுங்கள் என்றார். கரச என்று அறியப்படும் பேராசிரியர் முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள் எழுதிய நூல். 

krs book.JPG
நூல் விவரம்: 
தமிழா? சம்ஸ்கிருதமா?
ஆசிரியர்: முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் (கரச|KRS)
விலை: ₹180
தடாகம் வெளியீடு, முதற் பதிப்பு, ஜனவரி  2021
ISBN: 97893888627191

தமிழா? சம்ஸ்கிருதமா? நூலின் தலைப்பே கல்வெட்டு வடிவ எழுத்துக்களில் அமைந்து இருப்பது  முதல் ஈர்ப்பு.  நான் விரும்பும் இலக்கியச் செல்வர் பேரா.வீ.அரசு அவர்களின் அணிந்துரை அளித்திருப்பது அடுத்த ஈர்ப்பு.  பொதுவாக மொழிக்கலப்பு என்பது இயல்பான நிகழ்வு. ஆனால்,  சம்ஸ்கிருத கலப்பு என்பது திட்டமிட்ட சதிச்செயல் என்ற அணிந்துரையே நூலின் உள்ளடக்கத்தை எடுத்துரைக்கிறது.

அடுத்து..
கரச அவர்கள் நுழையும் முன் ஒரு வேண்டுகோள் மற்றோர் ஈர்ப்பு. 
"நுழையும் முன்.. வேண்டுகோள்!
இந்த நூலுக்குள் நுழையும் முன், ஓர் அன்பு வேண்டுகோள்:
 - வாசிக்கும் போது, உங்களின் தனிப்பட்ட மதப் பிடித்தம்  அரசியல் பிடித்தம் எஃதாயினும், சற்றே மறந்துவிடுங்கள் ! 
 - தற்பிடித்தம் கடந்து, தமிழைத் தமிழாக மட்டுமே அணுகிக் காணுங்கள் ! 
 
தமிழ்மொழியின் தகைமைகளுள் தலையாவது என்னவென்றால், வேறு எந்த இனத்தின் மொழிக்குள்ளும் தன்னை வல்லடியாகத்  திணித்துச் சிதைக்காத அறம் மிக்க மொழி, இத்தமிழ்மொழி!

அதே அறத்தின் சீர்மையை நீங்களும் கைக்கொண்டு, உங்களின் தற்பிடித்தம் கடந்து வாசிக்கவும். உங்களின் பிடித்தம்: இறைவனாக  இருக்கட்டும் (அல்லது) உண்மையாக இருக்கட்டும்! 
உண்மைத் தேடல்தானே இறைத் தேடல்?
 - மனம் ஆரத் தமிழ் உண்மை காண்போம்! 
 - மனம் ஆறத் தமிழ் உண்மை காண்போம்! 
 - மனம் மாறத் தமிழ் உண்மை காண்போம்!" 

"தற்பிடித்தம் கடந்து, தமிழைத் தமிழாக மட்டும் அணுகிக் காணுங்கள்" 
அடடா!!! சுயசார்பு என்று அடிக்கடி நான் பயன்படுத்தும் ஒரு சொல், இங்கே தற்பிடித்தம் என்று ஆரம்பமாகிறதே. நாம் தேடிய நூல் இதுதானோ....?

"நீவிர், தமிழ் போல்,  வாழ்வாங்கு வாழ்க!  வாருங்கள் நூலுக்குள் புகுவோம்!... "

என அழைக்கிறார், நெகிழ்ச்சியுடன் நூலுக்குள் புகுந்தேன்..

முதல் பகுதியில், 
"தமிழ் மொழி, வடமொழியைவிடப் பழமையானதா? ஆதாரம் உள்ளதா?

ஆம்; என விளக்கும் விரிவான விளக்கவுரைகள் மற்றும் அறிவியல் தொல்லியல்த் தரவுகள்.  என்னிடம் இருக்கும் ஐயங்களுக்குத்  தெளிவான விளக்கம் தந்தன. 

பிராகிருதம்=பிர + கிருதம் - Raw form
மேம்படாத வடிவம்..

சம்ஸ்கிருதம் = சம்ஸ் + கிருதம் - Refined form
மேம்பட்ட வடிவம்..

மேம்படாத கரடுமுரடான மொழிதானே முதலில் தோன்றியிருக்கும். அதாவது, பிராக்ருதத்தின் "தம்மம்" என்பதுதான் சம்ஸ்கிருதத்தில் "தர்மம்".

புரிய ஆரம்பித்தது.  சம்ஸ்கிருதத்தின் மூலம் தெரிய வருகிறது. கரடுமுரடான தமிழி எழுத்துக்களும், மேம்பட்ட தமிழ் எழுத்துக்களும் தமிழே. 
தோற்றமும் தமிழே.. வளர்ச்சியும் தமிழே..   வேறு எங்கிருந்தும் எதையும் பெறாமல் சுயம்பு மொழி இது.

நிறைய விளக்கங்கள், அறிவியல் ரீதியான ஆய்வுகள் என்று ஒவ்வொரு மொழியின் வேர்ச்சொல்லுக்குள் புகுந்து அடித்து ஆடுகிறார் ஆசிரியர். ஆசிரியருக்குத்  தமிழ், சம்ஸ்கிருதம் உட்பட 12 மொழி தெரியுமாம்!!!!!!!

முழுமையாக வாசித்ததில் ஒரு தெளிவு கிடைத்தது. சம்ஸ்கிருதத்தை விட தமிழ் மொழி பழமையானதா? என்ற கேள்விக்கு; ஆம், என்ற பதிலை 
25 பக்கத்தரவுகள் மூலம் வரலாறு அறிவியல், தொல்லியல் ரீதியாக ஆதாரத்துடன் நிறுவுகிறார்.

அடுத்த பகுதி..
"எவருடைய காலத்தில் தமிழ், பிறமொழிக் கலப்பு இல்லாமல் இருந்தது?"

தெளிவான, சரியான ஆய்வியல் வாதம் வைக்கப்படுகிறது. மொத்தத்தில் நான் தேடிய நூல் இதுதான் என்று கூறமுடியாது.  நான் தேடிய நூல்களுள் இதுவும் ஒன்று என்று நிச்சயமாகக் கூறலாம்.


---

தேமொழி

unread,
Sep 19, 2021, 5:56:21 AM9/19/21
to மின்தமிழ்
வாருங்கள் படிப்போம்

புத்தகத் திறனாய்வு:83

ஞாயிறு மாலை 6.30 மணி
19/9/21


திருடன் மணியன் பிள்ளை- ஜி.ஆர்.இந்துகோபன்

திறனாய்வு:உ.பாஸ்கரன்,மன இயல் நிபுணர்,தமிழக சிறைத்துறை

சிறப்பு அழைப்பாளர்கள்

திரு.மணியன் பிள்ளை
குளச்சல் மு.யூசுப்
( மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர்)

Join Zoom Meeting

Meeting ID: 816 9678 2002
Passcode: 390839

அனைவரையும் பங்கேற்க அன்போடு அழைக்கிறோம்

Dr. Mrs. S. Sridas

unread,
Sep 19, 2021, 5:00:59 PM9/19/21
to mint...@googlegroups.com
வணக்கம். இந் நூல் தரவிறக்கம் செய்யத்தக்க வகையில் (PDF) கொள்வனவுக்குக் கிடைக்குமா?
கிடைத்தால் நன்றாக இருக்கும். தயவு செய்து அறியத்தரவும்.
நன்றி.

Dr. Mrs. S. Sridas




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/3e989c1d-9fa8-47ce-9c66-d1325c0113ccn%40googlegroups.com.

தேமொழி

unread,
Sep 19, 2021, 9:16:38 PM9/19/21
to மின்தமிழ்
ஆமசானில் கிண்டில்  பதிப்பாகக்  கிடைக்கிறது 

தமிழா? சம்ஸ்கிருதமா?

-----
முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் (கரச|KRS) 
அவர்களின் மற்றொரு நூலையும் ஆமசான் கிண்டில் பதிப்பாக படிக்க இயலும் 
அறியப்படாத தமிழ்மொழி

👆 இந்த அறியப்படாத தமிழ்மொழி நூல் குறித்து சுப வீரபாண்டியன் உரை 
அறியப்படாத தமிழ்மொழி - என்ன சொல்கிறது 

தேமொழி

unread,
Sep 19, 2021, 9:29:46 PM9/19/21
to மின்தமிழ்
balabarathi.JPG

கவிதையையும் வாளாக ஏந்திய ஒரு போராளியின் படைப்புகள்


“இலக்கியம் ஒரு தனிமனிதருக்கோ, சமூகத்துக்கோ என்னவெல்லாம் செய்கிறது என்று பேசுகிறவர்கள் யார் யார் தெரியுமா? இலக்கியம் படைக்கிறவர்களும் படிக்கிறவர்களும்தான்!” - இப்படியொரு கருத்தைத் தூக்கிப்போட்டார் ஒரு நண்பர். அதுவொரு நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளப்பட்டு, சிரிப்பலை பொங்கியது. “ஆம், இலக்கியம் படைக்கிறவர்கள் தங்களுடைய தலைக்குப் பின்னால் ஒரு ஒளிவட்டம் இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். படிக்கிறவர்கள் ஆகா ஓகோவென்று புகழ்ந்து அந்த நினைப்பைப் பளபளப்பாக்குகிறார்கள். அதன் பிறகு அந்த ஒளிவட்டம் விழுந்துவிடக்கூடாதென்று அவர்கள் படுகிற பாடு இருக்கிறதே…” என்று மற்றொரு நண்பர் இழுக்க, அதுவொரு சுவையான விவாதமாகவே மாறியது.

“உண்மையாகவே தங்களுடைய படைப்புத்திறனால், அல்லது மாறுபட்ட கோணங்களால் வாசகர்களை ஈர்க்கிறவர்கள் இருக்கிறார்கள். சில பேர் ரசிகர் மன்றம் போல ஏற்படுத்திக்கொள்கிறார்கள். அங்கே இங்கே தங்களைப் பற்றி ஏதாவது பேசவும் எழுதவும் ஏற்பாடு செய்கிறார்கள்…” என்றார் இன்னொருவர்.

வேறொரு சிறிய இலக்கியப் பகிர்வுக் கூட்டத்தில் பேசிய அன்பரொருவர், “பூமியையே புரட்டிப்போடுகிற நெம்புகோல்தான் தங்களுடைய எழுத்துகள் என்று தலைநிமிர்ந்து சுற்றி வருகிற எழுத்தாளர்கள் பலர், மக்களின் பிரச்சினைகளுக்காக நடத்தப்படும் தெருமுனைப் போராட்டங்களுக்குக்கூட வருவதில்லை,” என்றார். சிற்றரங்கில் பெரும் அமளியே ஏற்பட்டு அடங்கியது. நிகழ்ச்சி முடிந்து தேநீர்க் கடையில் எல்லோருமாகக் கூடியபோது அந்த அமளி பற்றிப் பேச்சு வந்தது. “போராட்டங்களில் பங்கேற்கிறோம் என்றால் இவர் பேசியதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. பங்கேற்பதில்லை என்றால் எதிர்வினையாற்றும் தகுதி நமக்கில்லை. பிரச்சினைகள் பற்றி எழுதுகிறவர்கள் போராட்டங்களில் பங்கேற்கத் தேவையில்லை என்று கருதினால் அதைத் தயங்காமல் சொல்லவும் தடையில்லை. எதற்காகக் கூச்சல் போட வேண்டும்,” என்றேன்.

இலக்கியத்தைச் சாக்கிட்டு நடைபெறும் பல கூட்டங்கள், படைப்புகளின் உள்ளடக்கம், சித்தாந்தம், அரசியல், அழகியல் பற்றிய வாத-எதிர்வாதங்களாக இல்லாமல் இவ்வாறு தனிப்பட்ட விமர்சனங்களாகவும் கண்டனங்களாகவுமே முடிகின்றன. சில நேரங்களில், அந்தக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதே இப்படித் தாக்குவதற்காகத்தானோ என்ற எண்ணம் கூட ஏற்படுகிறது. கொள்கை ஒருமைப்பாட்டுடன் இயங்குகிறவர்களிடையேயும் சிலர், ஏதோவொரு தகுதி மட்டத்தை வரைந்து வைத்துக்கொண்டு, அதற்குள் வராதவர்களை ஆட்டத்தில் சேர்த்துகொள்வதில்லை. மிகப் பரவலாகச் சென்றடைகிற படைப்புகள் கூட மொத்த மக்கள்தொகையோடு ஒப்பிடுகையில் மிகக்குறுகிய வட்டத்திற்கு உள்ளேதான் அடங்குகின்றன. அதற்குள்ளேயே இவ்வளவு அக்கப்போர்களா!

இப்படியான அக்கப்போர்களுக்குள் அகப்படாதவர், சமூகப் பணிகளன்றி தன்னை முன்னிலைப்படுத்துவதற்கென குழு சேர்க்காதவர், போராட்டங்களில் பங்கேற்பதில்லை என்ற விமர்சனத்திற்குப் பொருத்தமற்றவர், அரசியல், சமூகம், பண்பாடு, இலக்கியம் என காலூன்றிய தளங்களிலெல்லாம்  ஆக்கப்போர்களை நடத்திக்கொண்டிருப்பவர் பாலபாரதி. கவிஞர் பாலபாரதி என்று மட்டும் சொல்லி இவரை அறிமுகப்படுத்திவிட முடியாது. மார்க்சிய இயக்கப் பாதையில் ஒரு பயணி, பெண்ணுரிமைப் போராளி, தொழிற்சங்கக் களமாடி, மக்களின் போராட்ட வழிகாட்டி, நயமிகு சொற்பொழிவாளி, கூர்மிகு ஊடக வாதாடி என்றெல்லாம் சேர்த்துச் சொன்னால்தான் மூன்று முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பங்களித்திருப்பவரின் அடையாளம் முழுமையுறும்.

தொடக்கத்தில் இவர் திண்டுக்கல் நகரிலிருந்து ‘வண்ணக்கதிர்’ பகுதிக்குக் கவிதைகள் அனுப்பிய நாகலட்சுமியாகத்தான் அறிமுகமானார். பின்னர் படிப்படியாக ஒரு களப்போராளியாக, சமூக அக்கறையாளராக, இயக்கத் தொண்டராக ஒவ்வொரு தளத்திலும் இவரது முழக்கங்களைச் செய்தியாக எழுதியது எனக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பு. அப்படிப்பட்ட அருமையான, அழகான வாய்ப்புகளில் ஒன்றுதான் ‘நம் பதிப்பகம்’ வழியாக ‘பால பாரதி கவிதைகள்’ தொகுப்பை வாசித்தது.

அரசியல் கூர்மையுடன் கருத்துச்சுவை, உறுதியிலிருந்து புறப்படும் நகைச்சுவை, மக்களை நேசிக்கும் அக்கறைச்சுவை, அழகியலோடு உறவாடும் சொற்சுவை, அத்தனை வெளிப்பாட்டிலும் உறைந்திருக்கும் நேர்மைச்சுவை, மாற்றத்திற்காக உழைக்கும் வியர்வைச்சுவை என்ற அறுசுவை விருந்தாக அனைத்துக் கவிதைகளும் புத்தக இலையில் பரிமாறப்பட்டிருக்கின்றன. அவற்றைச் சுவைப்பது இனிமையான அனுபவம் என்றால், மாதிரிக்காகச் சில கவிதைகளைக் காட்டுவதென்பது கடுமையான அனுபவம். ஒரு நல்ல கவிதைக்கு அடிப்படையாவது எது? கருப்பொருளா, வடிவமா, தொடக்கமா, முடிப்பா, உருவகமா, உவமையணியா என்று பாகுபடுத்திக்காட்ட முடியாத படைப்பாக அது இருப்பதுவேயாகும். அதே போல, ஒரு நல்ல கவிதைத் தொகுப்புக்கு அடிப்படையாவது, முதல் கவிதையா, இடையில் வருவதா, இறுதியாக இடம்பெற்றிருப்பதா என்று பிரித்துக்காட்ட முடியாத ஆக்கங்களைக் கொண்டிருப்பதுதான். இந்தத் தொகுப்பு அத்தகையது.

ஆண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குகிற காலம் வந்தால் எப்படி இருக்கும் என்ற எதிர்காலக் கற்பனையின் மூலம், பெண்களின் நிகழ்கால உண்மை நிலையை உணர்த்துகிற கவிதையைச் சொல்லலாம்தான். அப்படிச் சொன்னால், சுயமரியாதைப் போராளியின் படைப்புகளல்லவா, மற்ற கவிதைகள் நாங்களென்ன அடுத்த படியிலா நிற்கிறோம் என்று சண்டைக்கு வரும். பெண்ணைக் காப்பாற்றாத பெண் கடவுளையும் காப்பாற்ற வாளை உருவுகிறது ஒரு கவிதை. ஒற்றைப் பறவையின் துடிப்பை நிதானமாக அறுவடை செய்யும் அற்பத்தனத்தில் காறி உமிழ்கிறது மற்றொரு கவிதை, மூன்றாம் வகுப்புக்குச் செல்வதற்கான தேர்ச்சி அட்டை கிடைத்த குழந்தைகக்குச் சிறகு முளைக்கும் ரகசியத்தைப் புரிந்துகொள்ள நம்மை இரண்டாம் வகுப்புக்குப் போகச்சொல்கிறது ஒரு கவிதை. எவ்வளவு தேர்ச்சி பெற்றும் ஒரே வகுப்பில் நிறுத்திவைக்கிற பாடமுறையை முட்டிக்கால் போட வைக்கிறது இன்னொரு கவிதை. மண்ணைக் கவ்வச் செய்வதாகவும் வேரோடு வீழ்த்துவதாகவும் சவால் விடுத்து மனிதகுலத்தின் உயிர்களான மண்ணையும் வேரையும் தாழ்த்தலாமா என்ற உறுத்தலை ஏற்படுத்துகிறது வேறொரு கவிதை. 

“எல்லா சாதனைகளையும்
கூறிவிட்டீர்களா
ஏழ்மையில் வாழ்வதே
இவர்களின் சாதனை
என்பதையும் இணைத்துக்கொள்ளுங்கள்”

-இப்படி எந்தவொரு கவிதையை மாதிரிக்கு எடுத்துக்காட்டினாலும் மற்ற கவிதைகள் கோபித்துக்கொள்ளும். அத்தனை கவிதைகளிலும் கவிஞரோடு இணைந்து நிற்கிற அனுபவம் வாய்க்கிறது.

குழந்தைகளின் உலகத்தைப் பாடுகிற கவிதைகளைப் பற்றியே தனியாகப் பேசுகிற நிகழ்ச்சிகளை நடத்தலாம் – அவ்வளவு செறிவானவை. 
“பரீட்சையில்
பாஸ் பண்ணுவது
முக்கியமல்ல – அதிகமா
மார்க் வாங்குவதுதான்
முக்கியம் என்றேன்
விடுமுறை முக்கியமில்லையா
என்றாள் குழந்தை”.
-ஒவ்வொன்றிலும் கவிஞரின் குழந்தை நேசம், குழந்தையின் கன்னத்திலிட்ட முத்தத்தின் ஈரம்.

ஏழைக் குடிசைக் கூரையின் வழியாக நிலா தெரிகிறது என்பதற்காக குடிசையிலேயே இருக்கவிடுவதை ரசிக்க முடியுமா, பெட்ரோலும் மொபைலும் இன்ன பிறவும் முதலாளிகளின் விற்பனைப் பொருள்களாக இருக்கின்றன என்பதற்காக அவை முதலாளித்துவச் சரக்குகளாகிவிடுமா என்றெல்லாம் கவிஞருக்கு எதிராகத் திரும்பிக் கேட்கவைக்கிற கவிதைகளும் ஒன்றிரண்டு இருக்கின்றன.

வாழ்க்கைக் காட்சிகள் கவிதையாக மாறியிருக்கின்றன. அது வாசித்தலின் ரசனையைத் தருவதோடு, வாழ்க்கைக் காட்சிகளை கவிதையாகப் பார்ப்பதில் படைத்தலின் சுகத்தையும் நாட வைக்கிறது. உழைப்புப் பூக்களின்  வண்ணமும் வாசமும் மிக்க மாலையென ‘பாலபாரதி கவிதைகள்’ கோர்க்கப்பட்டிருக்கிறது. 

-அ. குமரேசன்

**********

பால பாரதி கவிதைகள்
வெளியீடு:
நம் பதிப்பகம்
26/2 காவேரி தெரு,
சாலிகிராமம்,
சென்னை – 600 093
பக்கங்கள்: 144  விலை: ரூ.170
தொடர்புக்கு: 9566110745
nampublication2021[at]gmail.com

[‘பாலபாரதி கவிதைகள்’ புத்தகம் குறித்து, ‘தீக்கதிர்’ ஞாயிறு (செப்.19, 2021) இணைப்பாகிய ‘வண்ணக்கதிர்’ இதழின் புத்தக மேசை பகுதியில் எனது கட்டுரை -அ. குமரேசன்]

தேமொழி

unread,
Sep 19, 2021, 10:57:47 PM9/19/21
to mintamil
63 நாயன்மார்கள்
இணைப்பில் ...... 

63 nayanmars.pdf

RM S Viswanathan

unread,
Sep 20, 2021, 3:56:20 AM9/20/21
to mint...@googlegroups.com, selvam...@gmail.com
I am giving herewith the contact details of Publishers. Please check with them. They can able to give you a better Idea on the same.

Thadagam
Venkateshwara Complex, No. 112, Thiruvalluvar Salai, Kamaraj Nagar, Thiruvanmiyur, Chennai, Tamil Nadu 600041 



--
Thanks & Regards,

------------------------------------------------------------------
S. Viswanathan
Chennai

------------------------------------------------------------------
It is loading more messages.
0 new messages