பெருமதிப்புக்குரிய திரு பாண்டியராஜா பரமசிவம் அவர்களேநீங்கள் சொன்ன திருத்தம் எனக்கும் அப்போது தோன்றியது.அதே ஆமை(ஓமை)யைக் குறிக்க ஒரு திருத்தம் செய்ய எண்ணினேன்.எப்படியோ விடுபட்டு போய்விட்டது.இப்போது நீங்கள் சொன்னது எனக்கு மிகச்சரி எனப்பட்டது.அதற்கு ஒரு திருத்தம் செய்திருக்கிறேன்.ஓமை என்பது ஓமை மரத்தைக்குறிக்குமா? ஆமையை குறிக்குமா எனும் ஐயமும் எழுந்தது.எனவே அதே ஆமையைக் குறிக்கவே மீண்டும் ஓமையை அங்கு குறித்தேன்.ஆமை என்று எழுதினால் பழைய சொல் தன்மை மாறி விடுமோ என்ற ஐயத்தில் அப்படி எழுதினேன்.அதே ஆமை என்று குறிக்க திருத்தம் செய்துள்ளேன்............
அம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து
அரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கம்.
வேங்கை வரித்த திண்கால் ஓமை
ஆங்கு அஃதே அவிந்த வாறும்
அசைவுறு காலை முரண்தர முரலும்
..................பொழிப்புரைபகுதியில் திருத்தம்__________________________________
..........அதே ஆமை அவ்வாறு இறந்தது போல கிடந்த நிலை மாறி திடீரென்று அசையும் தன்மைக்கு வந்தது.ஆமை முதுகில் ஒரு நில அதிர்வு போல நிகழ்ந்த அந்த அச்சத்தில் சிறகை பட பட என்று அடித்துக்கொண்டு நாரை கலக்கம் அடைந்து அருகில் உள்ள ஒரு மரக்கிளையில் தஞ்சம் அடைகிறது................... தாங்கள் ஒரு ஆழ்ந்த சுவையோடு இந்த செய்யுளைப் படித்து எனக்கு ஊக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி.அன்புடன் ருத்ராசனி, 16 ஆகஸ்ட், 2025அன்று 11:22:02 PM UTC+5:30 மணிக்கு Pandiyaraja Paramasivam எழுதியது: