1. ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 16 : கோயில் தருமகருத்தாவாக வேலைபார்த்தது ++ 2. தோழர் தியாகு எழுதுகிறார் 221 : அவலமான கல்விச் சூழல் 2/2

11 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Sep 24, 2023, 7:40:07 PM9/24/23
to thiru thoazhamai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Dr. Ku.Muthukumar, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, limra...@gmail.com, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, antony louis, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, rajendran krishnan, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, Batchaa Thiruchi, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, H...@ammkitwing.in, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan s, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, chitr...@gmail.com

தோழர் தியாகு எழுதுகிறார் 221 : அவலமான கல்விச் சூழல் 2/2

 


ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்      25 September 2023      அகரமுதல


(தோழர் தியாகு எழுதுகிறார் 220 : அவலமான கல்விச் சூழல் 1/2 – தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார்

அவலமான கல்விச் சூழல் 2/2

வருங்காலங்களில் அரசுக் கல்லூரிகள் புதிய பாடத்திட்டங்களுடன் தமிழ்நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட வேண்டும்.

தனியார் தன்நிதிக் கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதி நிறுத்தப்பட வேண்டும்.

பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் போதிய உள் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும், தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமிக்கவும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். கூடவே உயர் கல்வித்துறையில் நடக்கும் இலஞ்ச–ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதோடு, அவற்றைத் தடுத்து நிறுத்தக் கல்வியாளர்கள் தலைமையிலான கண்காணிப்புக் குழுக்களை அமைக்கவும் அரசை வலியுறுத்த வேண்டும்.

NAAC, NBA, NIRF போன்ற தரக் குறியீடுகள் தற்போது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன. இது தேசியக் கல்விக் கொள்கையிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் நோக்கமே தனியார் உயர்கல்வி நிறுவனங்களை முன்னிலைப் படுத்துவதும், உயர்கல்வியில் தனியார்மயத்தை உறுதியாக்குவதும் ஆகும். NAAC, NBA, NIRF ல் அதிக மதிப்பெண்களைப் பெறும் கல்லூரிகள், அரசின் நேரடிக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்குப் பெறுவதுடன், அவற்றுக்கு நிதி உதவியும் கிடைக்கிறது. இதனால் தனியார் கல்லூரிகள், NAAC, NBA, NIRF தரவரிசை பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. கடந்த எட்டு ஆண்டுத் தரவுகளைத் தொகுத்துப் பார்த்தால் இத்தரக்குறியீடுகளில் தனியார் கல்லூரிகளே முன்னிலையில் உள்ளதோடு பெரும்பான்மையாகவும் இருப்பதை அறிய முடியும். இதற்காகத் தனியார் கல்வி நிறுவனங்கள் பல முறைகேடுகள் செய்வது, தவறான தரவுகளைத் தருவது என்ற போக்கில் செயல்படுகின்றன.

இந்தத் தர வரிசை முறை, கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளையும், கல்வியின் தரத்தையும் பெருமளவில் பாதித்துள்ளது. கற்றல் -கற்பித்தல் செயல்பாடுகளை வெறும் தரவுகள் பதிவேற்றும் வேலையாகவும், தரவுகளை அலங்கரித்து அதிகாரிகளைக் கவரும் வேலையாகவும் மாற்றியுள்ளது. எனவே இது போன்ற தர மதிப்பீட்டு முறைகளின் உள்நோக்கத்தையும் அதில் உள்ள முறைகேடுகளையும் இக்குழு கடுமையாக எதிர்க்கிறது.

Outcome based education (OBE), மாணவர்களை மையப்படுத்திய திறன் மேம்பாட்டுக் கல்வி (Student centric education, Skill development) நான் முதல்வன் போன்றவை கற்றல்-கற்பித்தலில் தற்போது முதன்மைப் பொருளாகியுள்ளது. இத்திட்டங்களின் வாயிலாகக் கல்வியின் உள்ளடக்கத்தினைத் தீர்மானிக்கும் பணி, நேரடியாகத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

மத்திய-மாநில அரசுகளும், பல்கலைக்கழக நிருவாகமும். இந்நிறுவனங்களும் தங்களது மூலதனப் பெருக்கத்திற்கு மாணவர்களுக்கு எது தேவையோ அதையே பாடத்திட்டமாக மாற்ற முயல்கின்றனர். மேலும் Skill development, Naan Mudhalvan போன்ற திட்டங்கள், மாணவர்களைத் தொழிற்சாலை இயந்திரத்தின் துணை உறுப்புகளாக ( நட் & போல்ட் ஆக) மாற்ற முயல்கின்றன. சமுதாய வளர்ச்சிக்குத் தொழிற்கல்வி அவசியமே. ஆனால் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய முழுமையான கல்வியை ஒதுக்கிவிட்டு ஓர் இயந்திரத்தின் துணை உறுப்புகளாக மாற்றக்கூடியக் கல்வியை ஏற்க முடியாது.

NEET, CUET, NeXT இன்னும் பல போட்டித்தேர்வுகளைத் தடைசெய்ய இக்குழு குரல் கொடுக்க வேண்டும். பள்ளிக் கல்வியில் NGO, Edutech நிறுவனங்களின் பங்களிப்பைத் தமிழக அரசு அனுமதித்துள்ளது. இது பள்ளிக் கல்வியை Edutech மற்றும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கான தொடக்கமாகும். மேலும் அரசுப் பள்ளிகளில் அனைவருக்குமான இலவச – தரமான கல்வியை வழங்குவதற்கு மாற்றாகப் படிப்பதற்கும், கூட்டல்-கழித்தல் போடவும், போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயாரிப்பதற்கும் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் இலவச – கட்டாயக் கல்வி, அறிவியல் பூர்வமான தாய்மொழி வழிக்கல்வி ஆகியவற்றைச் செயல்படுத்தவும், கல்வியில் உள்ள ஏற்றத்தாழ்வை ஒழிக்கப் பொதுப்பள்ளி, அருகமைப்பள்ளி முறையைச் செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டுப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரையான பள்ளிகள் இணைப்பு (School merger) என்பதை அடியொற்றித் தமிழ்நாட்டிலும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், கள்ளர்-சீர்மரபினர் நலப்பள்ளிகள், பழங்குடியின நலத்துறைப் பள்ளிகள், வனத்துறைப்பள்ளிகள் மற்றும் இந்து அறநிலையத்துறைப் பள்ளிகளை அரசுப் பள்ளிகளோடு இணைப்பதற்கான கொள்கை முடிவைத் தமிழக அரசு எடுத்துள்ளது. இக்கொள்கை முடிவைக் கைவிடுவதற்குத் தமிழக அரசை இக்குழு வலியுறுத்துவதோடு இப்பள்ளிகளின் மேம்பாட்டிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்.

தேசியக் கல்விக் கொள்கை 2020 படிப்படியாக ஒன்றிய – மாநில அரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்தச் சொல்லி வாரம் ஒரு சுற்றறிக்கை பல்கலைக்கழக நல்கைக் குழுவிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் மாநில அரசோ இந்தி – சமற்கிருதத்தைத் தாண்டி மற்ற பரிந்துரைகளுக்குப் பெரிய அளவில் எதிர்ப்புக் காட்டுவதில்லை. மாநிலக் கல்வி அதிகாரிகளோ, பேராசிரியர்களோ, பல்கலைக்கழக நல்கைக் குழு சொல்லுவதைக், குற்றாய்வே(விமரிசனமே) இன்றி, அப்படியே செயல்படுத்துகின்றனர். இதற்கான விவாதங்களும் இல்லை. இந்தக் கூட்டுதான் அரசுப் பள்ளிகள்/கல்லூரிகளின் சீரழிவிற்கான காரணங்களில் ஒன்றாகும். எனவே கல்வியில் பெரும்பான்மை மக்கள் நலன்களைப் பாதிக்கும் ஒன்றிய – மாநில அரசின் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்துப் பரவலாக அம்பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப் படும்.

மாணவர்கள் உரிமை பாதுகாக்கப்பட மாணவர் பேரவைகள் கல்லூரிகளில் தேர்தல் மூலம் அமைக்கப்பட வேண்டும். உயர் கல்வி நிறுவனங்களின் சனநாயக மீறல், செயல்பாடுகள் கண்காணிக்கப்பட வேண்டும். ஏதிலிகள், மாற்றுப் பாலினத்தவர்கள், என்று அனைவருக்குமான நலன்களைப் பாதுகாக்கும் கல்விக் கொள்கை தேவை.

மாணவர் அமைப்புகளின் போராட்டங்கள், ஒப்பந்த ஆசிரியர்களின் போராட்டங்கள், அரசு பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் போராட்டங்கள், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டங்கள், தனியார் பள்ளி மற்றும் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டங்கள், சனநாயக அமைப்புகளின் போராட்டங்கள் எனத் தனித்தனியே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றிற்கு மக்கள் கல்விக் கூட்டியக்கம் கோரிக்கைகளின் அடிப்படையில் ஆதரவை நல்கும்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 249

+++

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 16 : கோயில் தருமகருத்தாவாக வேலைபார்த்தது

 


ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்      25 September 2023      அகரமுதல


(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 15 : 55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம் – தொடர்ச்சி)

9. நான் கோயில் தருமகருத்தாவாக வேலைபார்த்தது

  • தெய்வ பக்தி என்பது என்னுடன் பிறந்திருக்க வேண்டு மென்று நினைக்கிறேன். என் தாய் தந்தையர் எனக்குச் சம்பந்தம் என்று பெயரிட்ட காரணத்தை முன்பே எழுதியிருக்கிறேன். தினம் பூசை செய்யும் அவர்கள் என்னைச் சிறு வயது முதல் பக்தி மார்க்கத்தில் செலுத்தினார்கள் என்பதற்கு சந்தேகமில்லை. நான் சுமார் 2 வயது குழந்தையாய் இருந்தபோது என் தகப்பனார் சிவபூசை செய்த பூக்களை யெடுத்து அவரது பாதக்குரடு ஒன்றை எடுத்து அதன் பேரில் என் தகப்பனார் செய்வதுபோல பூசை செய்ததாக என் தாயார் எனக்குப் பிறகு கூறியிருக்கிறார்கள். இது எனக்கு ஞாபகமில்லை. ஆயினும் இது நேர்ந்திருக்க வேண்டுமென்று நம்புகிறேன். என் தாயார் பொய் சொல்லவேண்டிய காரண மில்லை.

எனக்கு ஞாபக சக்தி உ.தித்த காலமுதல், சாதாரணமாக என் விளையாட்டெல்லாம் பெரும்பாலும் பிள்ளையார், மீனாட்சி அம்மன், வெங்கடேசப் பெருமாள் இவர்களுடைய செப்பு அல்லது மர விக்குரகங்களை வைத்து அவற்றுக்கு அலங்காரம் செய்து, உற்சவம் செய்வதேயாம். சனிக்கிழமை வந்தால், முன்னாள் வெள்ளிக்கிழமை என் தாயார் விசேட பூசை செய்த பூக்களை வைத்துக்கொண்டு நான் என் நேர் மூத்தவராகிய ஆறுமுகத்துடன் சாமி தூக்கி விளையாடுவோம்.

அன்றியும் என் தகப்பனார் சென்னையில் ஏகாம்பரேசுவரர் கோயிலுக்கும் பெரிய காஞ்சீபுரம் கோயிலுக்கும் தரும கருத்தாவாயிருந்தபடியால் அக்கோயில்களின் உற்சவங்களுக்கு என்னையும் என் தமையனையும் அடிக்கடி அழைத்துக் கொண்டு போன படியால் கோயில்களின் உற்சவங்களைப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த சந்தோசம் ஏற்பட்டது.

மேலும் எங்கள் கல்விப் பயிற்சிக்கு இன்றியமையாததாக எண்ணி எங்கள் தகப்பனார் எங்கள் பள்ளிக்கூடத்து, கோடை விடுமுறை தோறும் எங்களை வெளியூர்களுக்கு அனுப்புவார். அச்சமயங்களில் ஆங்காங்குள்ள கோயில்களைப் பார்ப்பதே எனக்குப் பெரிய ஆனந்தமாயிருந்தது. எனது 10 அல்லது 11 வயதில் நான் பார்த்த காஞ்சீபுரம், தஞ்சாவூர், மதுரை முதலிய இடங்களிலுள்ள பெரிய கோயில்களின் அழகிய, உருவங்கள் அப்படியே என் மனத்தில் பதிந்திருக்கின்றன. அக் கோயில்களையெல்லாம் ஒரு முறை பிறகு நான் பார்த்திருக்கிறேன் ஆயினும் அவற்றை முதன் முதல் நான் பார்த்த போது எனக்குண்டான சந்தோசம் பிறகு கிடைக்கவில்லை. என்னுடைய 21-ஆவது வயதில் (எனக்கு ஞாபகமிருக்கிறபடி) என் தகப்பனார் எனக்குச் சிவதீட்சை செய்துவைத்தார் எங்கள் குருக்களாகிய திருவாலங்காடு குருக்களைக் கொண்டு.

என் தமையனார் ப. ஐயாசாமி முதலியார் சில வருடங்கள் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் தருமகருத்தாவாக நியமிக்கப்பட்டு வேலை பார்த்து வந்தார். அவர் 1900-வது வருடம் மாவட்ட உரிமையியல்(முன்சீப்பாக) நியமிக்கப்பட்ட போது நான் அக்கோயில் தருமகருத்தாவாக நியமிக்கப்பட்டேன். அது முதல் 1934-ஆம் வருடம்வரையில் அவ்வேலை பார்த்துவந்தேன். இந்த 24 வருடங்களும் என்னுடன் வேலை பார்த்து வந்த தருமகருத்தாக்களுடனாவது மேற்பார்வை(ஓவர்சியர்)களுடனாவது கோயில் சிப்பந்திகளுடனாவது சச்சரவு வழக்கின்றி நடந்தேறிய தென்று சந்தோசத்துடன் இங்கு எழுதுகிறேன்.

என் காலத்தில் நேர்ந்த சில சீர்த்திருத்தங்களைப்பற்றி எழுத விரும்புகிறேன். அதற்கு முன்பாக உற்சவப் பத்திரிகையில் கண்டபடி, மணிப்பிரகாரம் உற்சவங்கள் நடந்தேறுவதில்லை. உற்சவங்களையெல்லாம் இலக்கினப்படியும் பத்திரிகைகளில் கண்ட மணிப்பிரகாரம் நடத்தும்படி ஏற்பாடு செய்தேன், தருமகருத்தாக்கள் கோயில் பணத்தை நேராக வாங்கவும் கூடாது, நேராகச் செலவழிக்கவும் கூடாது என்று ஏற்பாடு செய்தேன். எல்லா தேவத்தான வரும்படியும் முன்பு பாங்கில் கட்டப்பட்டுச் செலவெல்லாம் காசோலை மூலமாகச் செய்யப்பட வேண்டுமென்று ஏற்படுத்தினேன். இவ்விரண்டு ஏற்பாடுகளையும் இங்கு எழுதியது. ஏதோ தற்புகழ்ச்சியாகவல்ல. இவற்றை மற்ற கோயில் தருமகருத்தாக்கள் பின்பற்றி நடந்தால் தேவத்தானங்களைப்பற்றி மற்றவர்கள் குறைகூற அதிக இடமிராதென்று தெரிவித்துக்கொள்வதற்கே எழுதுகிறேன்.

என் காலத்தில் கோயிலுக்குக் கோபுரமில்லாக் குறை நிவர்த்தியாயது. அதை முடித்துவைத்த பெருமை திருவல்லிக்கேணியிலிருந்த கோபுரம் செட்டியார் என்று பெயர்பெற்ற இரண்டு சகோதர்களுக்கு உரித்தாம். (அவர்கள் பெயர் எனக்கு ஞாபகமில்லை.) அவர்களுக்கு என்னால் இயன்ற அளவு உதவி செய்தேன். அன்றியும் என் காலத்தில் திருமயிலை கோயில் குளமானது கருங்கல்லால் அமைக்கப்பட்டது. அதற்கு முன்பு இரண்டு சிறு படித்துறைகள் தவிர மற்ற பாகமெல்லாம் துருக்கல்லாய் இருந்தது. இதைப்பற்றிய சில விவகாரத்தை எழுத விரும்புகிறேன்.

இப்பெரிய வேலையை ஆரம்பித்தபோது கோயிலில் இதற்காக ஒரு சன்னியாசி சேமித்து வைத்த 5000 உரூபாய் தானிருந்தது. இதை முடிக்க வேண்டுமென்று நான் ஆரம்பித்த போது மைலாப்பூர்வாசிகளில் பலர் இப்பெரிய வேலைக்கு குறைந்தபட்சம் ஓர் இலட்சமாவது பிடிக்குமே, இவரால் என்ன முடியப்போகிறது என்று கூறினார்கள். “சுவாமி யிருக்கிறார்” என்று அவர் மீது பாரத்தைச் சுமத்தி இவ்வேலையை ஆரம்பித்தேன். இதற்காகப் பணம் சேர்ப்பதற்குப் பல உபாயங்கள் தேடினேன். பல செல்வவந்தர்களிடம் யாசித்தேன். தம்பிடி காலணா உண்டியில் மாத்திரம் சுமார் 8000 உரூபாய்கள் சேர்த்தேன். எதிலும் போதுமான வரும்படி வரவில்லை. ஒருநாள் பரமசிவத்தின் கருணையினால் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன் படி படியின் செலவின் பொருட்டு 108 உரூபாய் கொடுப்பவர்களுக்கு அவர்கள் பெயரால் ஒரு கல்வெட்டு படித்துறையில் போடப்படும் என்று பிரசுரம் செய்தேன். உடனே விரைவில் குளத்தை முற்றிலும் கருங்கல்லாய் ஆக்கவேண்டிய பணம் வந்து சேர்ந்துவிட்டது!

ஒருமுறை ஆளுநர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து சில துரைசானிகளும் துரைகளும் வந்திருப்பதாகவும் அவர்கள் மயிலை கபாலீசுவரர் கோயிலைப் பார்க்க விரும்புவதாகவும் சொல்லி அனுப்பினார். அதற்கு நான் அவர்கள் கோயிலுக்குள் கொடிமரம் வரையில் பார்க்கலாமென்றும் அன்றியும் கோயிலுக்குள் நுழையும் முன் அவர்கள் தங்கள் காலணிகளைக் களைந்துவிட்டுத்தான் வரக்கூடும் என்று பதில் சொல்லி அனுப்பினேன், என்னிடம் கடிதம் கொண்டு வந்த ஐரோப்பியர் இரண்டாவது நிபந்தனைக்கு அவர்கள் உடன்படுவது கடினம் என்று தெரிவித்தார். அதற்கு நான் அப்படி செய்யா விட்டால் அவர்கள் கோயிலுக்குள் வரக் கூடாது என்று மறுத்தேன். பிறகு அமெரிக்கச் சீமான்களும் சீமாட்டிகளும் தங்கள் பாதரட்சைகளைக் களைந்துவிட்டே கோயிலுக்குள் வந்தனர்.

இன்னொருமுறை பிரம்மோற்சவத்தின்போது ஐந்தாம் நாள் (இ)ரிசபவாகன உற்சவத்தைப் பார்க்க மாடவீதியில் ஒரு வீட்டின் மெத்தையின் பேரில் ஆளுநரும், அவரது மனைவியும் சில சிநேகிதர்களுடன் வந்திருந்தனர். சுவாமி அவ்வீட்டிற்கு எதிரில் வந்தபோது சுவாமியை வாகனத்துடன் அவர்கள் இருந்தபுறம் திருப்பிக் காட்டவேண்டும் என்று அந்த வீட்டின் சொந்தக்காரர் கேட்டார். அப்படி செய்யமுடியாது அவர்கள் சுவாமியை நேரில் தரிசனம் செய்ய வேண்டுமென்றால் கீழே இறங்கிவந்து நேராகத் தரிசனம் செய்யட்டும் என்று பதில் உரைத்தேன்.

இவ்விரண்டு விசயங்களையும் நான் எழுதியது நான் இவ்வாறு செய்துவிட்டேன் என்று தற்பெருைமயாகச் சொல்லுவதற் கல்ல. நாம் நம்முடைய மதத்தையும் ஒழுக்கத்தையும் நாமே தாழ்த்திக்கொள்ளலாகாது என்று எனது நண்பர்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டே.

மற்றொருதரம் சென்னை நகராட்சித் தலைவர் (Municipal chairman) ஆக இருந்த ஓர் ஆங்கிலேயர் இரண்டு குதிரைகள் பூட்டிய வண்டியில் பிராடிசு சாலை வழியாக அடையாறு மன்றத்திற்கு(கிளப்புக்கு)ப் போய்கொண்டிருந்தபொழுது எதிரில் பஞ்ச மூர்த்திகள் வரப் பெரும்கும்பலாய் இருந்தபடியால் தான் போவதற்கு இடைஞ்சலாய் இருக்கிறதென்று சொல்லி, சுவாமிகளை ஒருபுறம் ஒதுக்கும்படி கேட்டனுப்பினார். அதற்கு நான் மனிதனுக்காகத் தெய்வத்தை ஒதுங்கச்செய்வது ஒழுங்கல்ல, தெய்வத்திற்காக மனிதன் தான் ஒதுங்கிப் போகவேண்டும் என்று சொல்லி அனுப்பினேன். அதன்பேரில் இந்த அதனப்பிரசங்கி பதில் யார் சொன்னது என்று விசாரிக்க, அருகிலிருந்த காவல் ஆய்வாளர் என் பெயரைச் சொல்லி அவர் பிடிவாதக்காரர் என்று சொன்னாராம். அதன் மேல் அந்த ஐரோப்பியர் தன் வண்டியைப் பக்கத்து வீதி வழியாக சுற்றிக்கொண்டு சென்றனராம். நம்மிடத்தில் தவறில்லாத போது நாம் ஒருவருக்கும் பயப்படவேண்டியதில்லை என்பது என் அபிப்பிராயம்.

1924-ஆம் வருடம் எனக்குச் சிறிய நீதிமன்ற நீதிபதி வேலை யானபோது ‘உன் நீதிமன்றத்திலேயே ஏதாவது கோயில் விவகாரங்கள் தீர்ப்புக்கு வரலாம். ஆகவே நீ கோயில் தருமகத்தா வேலையை விட்டு விலகிக்கொள்வது நியாயம்’ என்று சர் சி. பி. இராமசுவாமி ஐயர் அவர்கள் சொன்னதின்பேரில் அரை மனத்துடன் மயிலை கபாலீசுவரர் கோயில் தருமகருத்தா வேலையினுன்றும் விலகினேன்

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 16 : கோயில் தருமகருத்தாவாக வேலைபார்த்தது

 


ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்      25 September 2023      அகரமுதல


(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 15 : 55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம் – தொடர்ச்சி)

9. நான் கோயில் தருமகருத்தாவாக வேலைபார்த்தது

  • தெய்வ பக்தி என்பது என்னுடன் பிறந்திருக்க வேண்டு மென்று நினைக்கிறேன். என் தாய் தந்தையர் எனக்குச் சம்பந்தம் என்று பெயரிட்ட காரணத்தை முன்பே எழுதியிருக்கிறேன். தினம் பூசை செய்யும் அவர்கள் என்னைச் சிறு வயது முதல் பக்தி மார்க்கத்தில் செலுத்தினார்கள் என்பதற்கு சந்தேகமில்லை. நான் சுமார் 2 வயது குழந்தையாய் இருந்தபோது என் தகப்பனார் சிவபூசை செய்த பூக்களை யெடுத்து அவரது பாதக்குரடு ஒன்றை எடுத்து அதன் பேரில் என் தகப்பனார் செய்வதுபோல பூசை செய்ததாக என் தாயார் எனக்குப் பிறகு கூறியிருக்கிறார்கள். இது எனக்கு ஞாபகமில்லை. ஆயினும் இது நேர்ந்திருக்க வேண்டுமென்று நம்புகிறேன். என் தாயார் பொய் சொல்லவேண்டிய காரண மில்லை.

எனக்கு ஞாபக சக்தி உ.தித்த காலமுதல், சாதாரணமாக என் விளையாட்டெல்லாம் பெரும்பாலும் பிள்ளையார், மீனாட்சி அம்மன், வெங்கடேசப் பெருமாள் இவர்களுடைய செப்பு அல்லது மர விக்குரகங்களை வைத்து அவற்றுக்கு அலங்காரம் செய்து, உற்சவம் செய்வதேயாம். சனிக்கிழமை வந்தால், முன்னாள் வெள்ளிக்கிழமை என் தாயார் விசேட பூசை செய்த பூக்களை வைத்துக்கொண்டு நான் என் நேர் மூத்தவராகிய ஆறுமுகத்துடன் சாமி தூக்கி விளையாடுவோம்.

அன்றியும் என் தகப்பனார் சென்னையில் ஏகாம்பரேசுவரர் கோயிலுக்கும் பெரிய காஞ்சீபுரம் கோயிலுக்கும் தரும கருத்தாவாயிருந்தபடியால் அக்கோயில்களின் உற்சவங்களுக்கு என்னையும் என் தமையனையும் அடிக்கடி அழைத்துக் கொண்டு போன படியால் கோயில்களின் உற்சவங்களைப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த சந்தோசம் ஏற்பட்டது.

மேலும் எங்கள் கல்விப் பயிற்சிக்கு இன்றியமையாததாக எண்ணி எங்கள் தகப்பனார் எங்கள் பள்ளிக்கூடத்து, கோடை விடுமுறை தோறும் எங்களை வெளியூர்களுக்கு அனுப்புவார். அச்சமயங்களில் ஆங்காங்குள்ள கோயில்களைப் பார்ப்பதே எனக்குப் பெரிய ஆனந்தமாயிருந்தது. எனது 10 அல்லது 11 வயதில் நான் பார்த்த காஞ்சீபுரம், தஞ்சாவூர், மதுரை முதலிய இடங்களிலுள்ள பெரிய கோயில்களின் அழகிய, உருவங்கள் அப்படியே என் மனத்தில் பதிந்திருக்கின்றன. அக் கோயில்களையெல்லாம் ஒரு முறை பிறகு நான் பார்த்திருக்கிறேன் ஆயினும் அவற்றை முதன் முதல் நான் பார்த்த போது எனக்குண்டான சந்தோசம் பிறகு கிடைக்கவில்லை. என்னுடைய 21-ஆவது வயதில் (எனக்கு ஞாபகமிருக்கிறபடி) என் தகப்பனார் எனக்குச் சிவதீட்சை செய்துவைத்தார் எங்கள் குருக்களாகிய திருவாலங்காடு குருக்களைக் கொண்டு.

என் தமையனார் ப. ஐயாசாமி முதலியார் சில வருடங்கள் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் தருமகருத்தாவாக நியமிக்கப்பட்டு வேலை பார்த்து வந்தார். அவர் 1900-வது வருடம் மாவட்ட உரிமையியல்(முன்சீப்பாக) நியமிக்கப்பட்ட போது நான் அக்கோயில் தருமகருத்தாவாக நியமிக்கப்பட்டேன். அது முதல் 1934-ஆம் வருடம்வரையில் அவ்வேலை பார்த்துவந்தேன். இந்த 24 வருடங்களும் என்னுடன் வேலை பார்த்து வந்த தருமகருத்தாக்களுடனாவது மேற்பார்வை(ஓவர்சியர்)களுடனாவது கோயில் சிப்பந்திகளுடனாவது சச்சரவு வழக்கின்றி நடந்தேறிய தென்று சந்தோசத்துடன் இங்கு எழுதுகிறேன்.

என் காலத்தில் நேர்ந்த சில சீர்த்திருத்தங்களைப்பற்றி எழுத விரும்புகிறேன். அதற்கு முன்பாக உற்சவப் பத்திரிகையில் கண்டபடி, மணிப்பிரகாரம் உற்சவங்கள் நடந்தேறுவதில்லை. உற்சவங்களையெல்லாம் இலக்கினப்படியும் பத்திரிகைகளில் கண்ட மணிப்பிரகாரம் நடத்தும்படி ஏற்பாடு செய்தேன், தருமகருத்தாக்கள் கோயில் பணத்தை நேராக வாங்கவும் கூடாது, நேராகச் செலவழிக்கவும் கூடாது என்று ஏற்பாடு செய்தேன். எல்லா தேவத்தான வரும்படியும் முன்பு பாங்கில் கட்டப்பட்டுச் செலவெல்லாம் காசோலை மூலமாகச் செய்யப்பட வேண்டுமென்று ஏற்படுத்தினேன். இவ்விரண்டு ஏற்பாடுகளையும் இங்கு எழுதியது. ஏதோ தற்புகழ்ச்சியாகவல்ல. இவற்றை மற்ற கோயில் தருமகருத்தாக்கள் பின்பற்றி நடந்தால் தேவத்தானங்களைப்பற்றி மற்றவர்கள் குறைகூற அதிக இடமிராதென்று தெரிவித்துக்கொள்வதற்கே எழுதுகிறேன்.

என் காலத்தில் கோயிலுக்குக் கோபுரமில்லாக் குறை நிவர்த்தியாயது. அதை முடித்துவைத்த பெருமை திருவல்லிக்கேணியிலிருந்த கோபுரம் செட்டியார் என்று பெயர்பெற்ற இரண்டு சகோதர்களுக்கு உரித்தாம். (அவர்கள் பெயர் எனக்கு ஞாபகமில்லை.) அவர்களுக்கு என்னால் இயன்ற அளவு உதவி செய்தேன். அன்றியும் என் காலத்தில் திருமயிலை கோயில் குளமானது கருங்கல்லால் அமைக்கப்பட்டது. அதற்கு முன்பு இரண்டு சிறு படித்துறைகள் தவிர மற்ற பாகமெல்லாம் துருக்கல்லாய் இருந்தது. இதைப்பற்றிய சில விவகாரத்தை எழுத விரும்புகிறேன்.

இப்பெரிய வேலையை ஆரம்பித்தபோது கோயிலில் இதற்காக ஒரு சன்னியாசி சேமித்து வைத்த 5000 உரூபாய் தானிருந்தது. இதை முடிக்க வேண்டுமென்று நான் ஆரம்பித்த போது மைலாப்பூர்வாசிகளில் பலர் இப்பெரிய வேலைக்கு குறைந்தபட்சம் ஓர் இலட்சமாவது பிடிக்குமே, இவரால் என்ன முடியப்போகிறது என்று கூறினார்கள். “சுவாமி யிருக்கிறார்” என்று அவர் மீது பாரத்தைச் சுமத்தி இவ்வேலையை ஆரம்பித்தேன். இதற்காகப் பணம் சேர்ப்பதற்குப் பல உபாயங்கள் தேடினேன். பல செல்வவந்தர்களிடம் யாசித்தேன். தம்பிடி காலணா உண்டியில் மாத்திரம் சுமார் 8000 உரூபாய்கள் சேர்த்தேன். எதிலும் போதுமான வரும்படி வரவில்லை. ஒருநாள் பரமசிவத்தின் கருணையினால் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன் படி படியின் செலவின் பொருட்டு 108 உரூபாய் கொடுப்பவர்களுக்கு அவர்கள் பெயரால் ஒரு கல்வெட்டு படித்துறையில் போடப்படும் என்று பிரசுரம் செய்தேன். உடனே விரைவில் குளத்தை முற்றிலும் கருங்கல்லாய் ஆக்கவேண்டிய பணம் வந்து சேர்ந்துவிட்டது!

ஒருமுறை ஆளுநர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து சில துரைசானிகளும் துரைகளும் வந்திருப்பதாகவும் அவர்கள் மயிலை கபாலீசுவரர் கோயிலைப் பார்க்க விரும்புவதாகவும் சொல்லி அனுப்பினார். அதற்கு நான் அவர்கள் கோயிலுக்குள் கொடிமரம் வரையில் பார்க்கலாமென்றும் அன்றியும் கோயிலுக்குள் நுழையும் முன் அவர்கள் தங்கள் காலணிகளைக் களைந்துவிட்டுத்தான் வரக்கூடும் என்று பதில் சொல்லி அனுப்பினேன், என்னிடம் கடிதம் கொண்டு வந்த ஐரோப்பியர் இரண்டாவது நிபந்தனைக்கு அவர்கள் உடன்படுவது கடினம் என்று தெரிவித்தார். அதற்கு நான் அப்படி செய்யா விட்டால் அவர்கள் கோயிலுக்குள் வரக் கூடாது என்று மறுத்தேன். பிறகு அமெரிக்கச் சீமான்களும் சீமாட்டிகளும் தங்கள் பாதரட்சைகளைக் களைந்துவிட்டே கோயிலுக்குள் வந்தனர்.

இன்னொருமுறை பிரம்மோற்சவத்தின்போது ஐந்தாம் நாள் (இ)ரிசபவாகன உற்சவத்தைப் பார்க்க மாடவீதியில் ஒரு வீட்டின் மெத்தையின் பேரில் ஆளுநரும், அவரது மனைவியும் சில சிநேகிதர்களுடன் வந்திருந்தனர். சுவாமி அவ்வீட்டிற்கு எதிரில் வந்தபோது சுவாமியை வாகனத்துடன் அவர்கள் இருந்தபுறம் திருப்பிக் காட்டவேண்டும் என்று அந்த வீட்டின் சொந்தக்காரர் கேட்டார். அப்படி செய்யமுடியாது அவர்கள் சுவாமியை நேரில் தரிசனம் செய்ய வேண்டுமென்றால் கீழே இறங்கிவந்து நேராகத் தரிசனம் செய்யட்டும் என்று பதில் உரைத்தேன்.

இவ்விரண்டு விசயங்களையும் நான் எழுதியது நான் இவ்வாறு செய்துவிட்டேன் என்று தற்பெருைமயாகச் சொல்லுவதற் கல்ல. நாம் நம்முடைய மதத்தையும் ஒழுக்கத்தையும் நாமே தாழ்த்திக்கொள்ளலாகாது என்று எனது நண்பர்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டே.

மற்றொருதரம் சென்னை நகராட்சித் தலைவர் (Municipal chairman) ஆக இருந்த ஓர் ஆங்கிலேயர் இரண்டு குதிரைகள் பூட்டிய வண்டியில் பிராடிசு சாலை வழியாக அடையாறு மன்றத்திற்கு(கிளப்புக்கு)ப் போய்கொண்டிருந்தபொழுது எதிரில் பஞ்ச மூர்த்திகள் வரப் பெரும்கும்பலாய் இருந்தபடியால் தான் போவதற்கு இடைஞ்சலாய் இருக்கிறதென்று சொல்லி, சுவாமிகளை ஒருபுறம் ஒதுக்கும்படி கேட்டனுப்பினார். அதற்கு நான் மனிதனுக்காகத் தெய்வத்தை ஒதுங்கச்செய்வது ஒழுங்கல்ல, தெய்வத்திற்காக மனிதன் தான் ஒதுங்கிப் போகவேண்டும் என்று சொல்லி அனுப்பினேன். அதன்பேரில் இந்த அதனப்பிரசங்கி பதில் யார் சொன்னது என்று விசாரிக்க, அருகிலிருந்த காவல் ஆய்வாளர் என் பெயரைச் சொல்லி அவர் பிடிவாதக்காரர் என்று சொன்னாராம். அதன் மேல் அந்த ஐரோப்பியர் தன் வண்டியைப் பக்கத்து வீதி வழியாக சுற்றிக்கொண்டு சென்றனராம். நம்மிடத்தில் தவறில்லாத போது நாம் ஒருவருக்கும் பயப்படவேண்டியதில்லை என்பது என் அபிப்பிராயம்.

1924-ஆம் வருடம் எனக்குச் சிறிய நீதிமன்ற நீதிபதி வேலை யானபோது ‘உன் நீதிமன்றத்திலேயே ஏதாவது கோயில் விவகாரங்கள் தீர்ப்புக்கு வரலாம். ஆகவே நீ கோயில் தருமகத்தா வேலையை விட்டு விலகிக்கொள்வது நியாயம்’ என்று சர் சி. பி. இராமசுவாமி ஐயர் அவர்கள் சொன்னதின்பேரில் அரை மனத்துடன் மயிலை கபாலீசுவரர் கோயில் தருமகருத்தா வேலையினுன்றும் விலகினேன்

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 16 : கோயில் தருமகருத்தாவாக வேலைபார்த்தது

 


ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்      25 September 2023      அகரமுதல


(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 15 : 55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம் – தொடர்ச்சி)

9. நான் கோயில் தருமகருத்தாவாக வேலைபார்த்தது

  • தெய்வ பக்தி என்பது என்னுடன் பிறந்திருக்க வேண்டு மென்று நினைக்கிறேன். என் தாய் தந்தையர் எனக்குச் சம்பந்தம் என்று பெயரிட்ட காரணத்தை முன்பே எழுதியிருக்கிறேன். தினம் பூசை செய்யும் அவர்கள் என்னைச் சிறு வயது முதல் பக்தி மார்க்கத்தில் செலுத்தினார்கள் என்பதற்கு சந்தேகமில்லை. நான் சுமார் 2 வயது குழந்தையாய் இருந்தபோது என் தகப்பனார் சிவபூசை செய்த பூக்களை யெடுத்து அவரது பாதக்குரடு ஒன்றை எடுத்து அதன் பேரில் என் தகப்பனார் செய்வதுபோல பூசை செய்ததாக என் தாயார் எனக்குப் பிறகு கூறியிருக்கிறார்கள். இது எனக்கு ஞாபகமில்லை. ஆயினும் இது நேர்ந்திருக்க வேண்டுமென்று நம்புகிறேன். என் தாயார் பொய் சொல்லவேண்டிய காரண மில்லை.

எனக்கு ஞாபக சக்தி உ.தித்த காலமுதல், சாதாரணமாக என் விளையாட்டெல்லாம் பெரும்பாலும் பிள்ளையார், மீனாட்சி அம்மன், வெங்கடேசப் பெருமாள் இவர்களுடைய செப்பு அல்லது மர விக்குரகங்களை வைத்து அவற்றுக்கு அலங்காரம் செய்து, உற்சவம் செய்வதேயாம். சனிக்கிழமை வந்தால், முன்னாள் வெள்ளிக்கிழமை என் தாயார் விசேட பூசை செய்த பூக்களை வைத்துக்கொண்டு நான் என் நேர் மூத்தவராகிய ஆறுமுகத்துடன் சாமி தூக்கி விளையாடுவோம்.

அன்றியும் என் தகப்பனார் சென்னையில் ஏகாம்பரேசுவரர் கோயிலுக்கும் பெரிய காஞ்சீபுரம் கோயிலுக்கும் தரும கருத்தாவாயிருந்தபடியால் அக்கோயில்களின் உற்சவங்களுக்கு என்னையும் என் தமையனையும் அடிக்கடி அழைத்துக் கொண்டு போன படியால் கோயில்களின் உற்சவங்களைப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த சந்தோசம் ஏற்பட்டது.

மேலும் எங்கள் கல்விப் பயிற்சிக்கு இன்றியமையாததாக எண்ணி எங்கள் தகப்பனார் எங்கள் பள்ளிக்கூடத்து, கோடை விடுமுறை தோறும் எங்களை வெளியூர்களுக்கு அனுப்புவார். அச்சமயங்களில் ஆங்காங்குள்ள கோயில்களைப் பார்ப்பதே எனக்குப் பெரிய ஆனந்தமாயிருந்தது. எனது 10 அல்லது 11 வயதில் நான் பார்த்த காஞ்சீபுரம், தஞ்சாவூர், மதுரை முதலிய இடங்களிலுள்ள பெரிய கோயில்களின் அழகிய, உருவங்கள் அப்படியே என் மனத்தில் பதிந்திருக்கின்றன. அக் கோயில்களையெல்லாம் ஒரு முறை பிறகு நான் பார்த்திருக்கிறேன் ஆயினும் அவற்றை முதன் முதல் நான் பார்த்த போது எனக்குண்டான சந்தோசம் பிறகு கிடைக்கவில்லை. என்னுடைய 21-ஆவது வயதில் (எனக்கு ஞாபகமிருக்கிறபடி) என் தகப்பனார் எனக்குச் சிவதீட்சை செய்துவைத்தார் எங்கள் குருக்களாகிய திருவாலங்காடு குருக்களைக் கொண்டு.

என் தமையனார் ப. ஐயாசாமி முதலியார் சில வருடங்கள் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் தருமகருத்தாவாக நியமிக்கப்பட்டு வேலை பார்த்து வந்தார். அவர் 1900-வது வருடம் மாவட்ட உரிமையியல்(முன்சீப்பாக) நியமிக்கப்பட்ட போது நான் அக்கோயில் தருமகருத்தாவாக நியமிக்கப்பட்டேன். அது முதல் 1934-ஆம் வருடம்வரையில் அவ்வேலை பார்த்துவந்தேன். இந்த 24 வருடங்களும் என்னுடன் வேலை பார்த்து வந்த தருமகருத்தாக்களுடனாவது மேற்பார்வை(ஓவர்சியர்)களுடனாவது கோயில் சிப்பந்திகளுடனாவது சச்சரவு வழக்கின்றி நடந்தேறிய தென்று சந்தோசத்துடன் இங்கு எழுதுகிறேன்.

என் காலத்தில் நேர்ந்த சில சீர்த்திருத்தங்களைப்பற்றி எழுத விரும்புகிறேன். அதற்கு முன்பாக உற்சவப் பத்திரிகையில் கண்டபடி, மணிப்பிரகாரம் உற்சவங்கள் நடந்தேறுவதில்லை. உற்சவங்களையெல்லாம் இலக்கினப்படியும் பத்திரிகைகளில் கண்ட மணிப்பிரகாரம் நடத்தும்படி ஏற்பாடு செய்தேன், தருமகருத்தாக்கள் கோயில் பணத்தை நேராக வாங்கவும் கூடாது, நேராகச் செலவழிக்கவும் கூடாது என்று ஏற்பாடு செய்தேன். எல்லா தேவத்தான வரும்படியும் முன்பு பாங்கில் கட்டப்பட்டுச் செலவெல்லாம் காசோலை மூலமாகச் செய்யப்பட வேண்டுமென்று ஏற்படுத்தினேன். இவ்விரண்டு ஏற்பாடுகளையும் இங்கு எழுதியது. ஏதோ தற்புகழ்ச்சியாகவல்ல. இவற்றை மற்ற கோயில் தருமகருத்தாக்கள் பின்பற்றி நடந்தால் தேவத்தானங்களைப்பற்றி மற்றவர்கள் குறைகூற அதிக இடமிராதென்று தெரிவித்துக்கொள்வதற்கே எழுதுகிறேன்.

என் காலத்தில் கோயிலுக்குக் கோபுரமில்லாக் குறை நிவர்த்தியாயது. அதை முடித்துவைத்த பெருமை திருவல்லிக்கேணியிலிருந்த கோபுரம் செட்டியார் என்று பெயர்பெற்ற இரண்டு சகோதர்களுக்கு உரித்தாம். (அவர்கள் பெயர் எனக்கு ஞாபகமில்லை.) அவர்களுக்கு என்னால் இயன்ற அளவு உதவி செய்தேன். அன்றியும் என் காலத்தில் திருமயிலை கோயில் குளமானது கருங்கல்லால் அமைக்கப்பட்டது. அதற்கு முன்பு இரண்டு சிறு படித்துறைகள் தவிர மற்ற பாகமெல்லாம் துருக்கல்லாய் இருந்தது. இதைப்பற்றிய சில விவகாரத்தை எழுத விரும்புகிறேன்.

இப்பெரிய வேலையை ஆரம்பித்தபோது கோயிலில் இதற்காக ஒரு சன்னியாசி சேமித்து வைத்த 5000 உரூபாய் தானிருந்தது. இதை முடிக்க வேண்டுமென்று நான் ஆரம்பித்த போது மைலாப்பூர்வாசிகளில் பலர் இப்பெரிய வேலைக்கு குறைந்தபட்சம் ஓர் இலட்சமாவது பிடிக்குமே, இவரால் என்ன முடியப்போகிறது என்று கூறினார்கள். “சுவாமி யிருக்கிறார்” என்று அவர் மீது பாரத்தைச் சுமத்தி இவ்வேலையை ஆரம்பித்தேன். இதற்காகப் பணம் சேர்ப்பதற்குப் பல உபாயங்கள் தேடினேன். பல செல்வவந்தர்களிடம் யாசித்தேன். தம்பிடி காலணா உண்டியில் மாத்திரம் சுமார் 8000 உரூபாய்கள் சேர்த்தேன். எதிலும் போதுமான வரும்படி வரவில்லை. ஒருநாள் பரமசிவத்தின் கருணையினால் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன் படி படியின் செலவின் பொருட்டு 108 உரூபாய் கொடுப்பவர்களுக்கு அவர்கள் பெயரால் ஒரு கல்வெட்டு படித்துறையில் போடப்படும் என்று பிரசுரம் செய்தேன். உடனே விரைவில் குளத்தை முற்றிலும் கருங்கல்லாய் ஆக்கவேண்டிய பணம் வந்து சேர்ந்துவிட்டது!

ஒருமுறை ஆளுநர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து சில துரைசானிகளும் துரைகளும் வந்திருப்பதாகவும் அவர்கள் மயிலை கபாலீசுவரர் கோயிலைப் பார்க்க விரும்புவதாகவும் சொல்லி அனுப்பினார். அதற்கு நான் அவர்கள் கோயிலுக்குள் கொடிமரம் வரையில் பார்க்கலாமென்றும் அன்றியும் கோயிலுக்குள் நுழையும் முன் அவர்கள் தங்கள் காலணிகளைக் களைந்துவிட்டுத்தான் வரக்கூடும் என்று பதில் சொல்லி அனுப்பினேன், என்னிடம் கடிதம் கொண்டு வந்த ஐரோப்பியர் இரண்டாவது நிபந்தனைக்கு அவர்கள் உடன்படுவது கடினம் என்று தெரிவித்தார். அதற்கு நான் அப்படி செய்யா விட்டால் அவர்கள் கோயிலுக்குள் வரக் கூடாது என்று மறுத்தேன். பிறகு அமெரிக்கச் சீமான்களும் சீமாட்டிகளும் தங்கள் பாதரட்சைகளைக் களைந்துவிட்டே கோயிலுக்குள் வந்தனர்.

இன்னொருமுறை பிரம்மோற்சவத்தின்போது ஐந்தாம் நாள் (இ)ரிசபவாகன உற்சவத்தைப் பார்க்க மாடவீதியில் ஒரு வீட்டின் மெத்தையின் பேரில் ஆளுநரும், அவரது மனைவியும் சில சிநேகிதர்களுடன் வந்திருந்தனர். சுவாமி அவ்வீட்டிற்கு எதிரில் வந்தபோது சுவாமியை வாகனத்துடன் அவர்கள் இருந்தபுறம் திருப்பிக் காட்டவேண்டும் என்று அந்த வீட்டின் சொந்தக்காரர் கேட்டார். அப்படி செய்யமுடியாது அவர்கள் சுவாமியை நேரில் தரிசனம் செய்ய வேண்டுமென்றால் கீழே இறங்கிவந்து நேராகத் தரிசனம் செய்யட்டும் என்று பதில் உரைத்தேன்.

இவ்விரண்டு விசயங்களையும் நான் எழுதியது நான் இவ்வாறு செய்துவிட்டேன் என்று தற்பெருைமயாகச் சொல்லுவதற் கல்ல. நாம் நம்முடைய மதத்தையும் ஒழுக்கத்தையும் நாமே தாழ்த்திக்கொள்ளலாகாது என்று எனது நண்பர்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டே.

மற்றொருதரம் சென்னை நகராட்சித் தலைவர் (Municipal chairman) ஆக இருந்த ஓர் ஆங்கிலேயர் இரண்டு குதிரைகள் பூட்டிய வண்டியில் பிராடிசு சாலை வழியாக அடையாறு மன்றத்திற்கு(கிளப்புக்கு)ப் போய்கொண்டிருந்தபொழுது எதிரில் பஞ்ச மூர்த்திகள் வரப் பெரும்கும்பலாய் இருந்தபடியால் தான் போவதற்கு இடைஞ்சலாய் இருக்கிறதென்று சொல்லி, சுவாமிகளை ஒருபுறம் ஒதுக்கும்படி கேட்டனுப்பினார். அதற்கு நான் மனிதனுக்காகத் தெய்வத்தை ஒதுங்கச்செய்வது ஒழுங்கல்ல, தெய்வத்திற்காக மனிதன் தான் ஒதுங்கிப் போகவேண்டும் என்று சொல்லி அனுப்பினேன். அதன்பேரில் இந்த அதனப்பிரசங்கி பதில் யார் சொன்னது என்று விசாரிக்க, அருகிலிருந்த காவல் ஆய்வாளர் என் பெயரைச் சொல்லி அவர் பிடிவாதக்காரர் என்று சொன்னாராம். அதன் மேல் அந்த ஐரோப்பியர் தன் வண்டியைப் பக்கத்து வீதி வழியாக சுற்றிக்கொண்டு சென்றனராம். நம்மிடத்தில் தவறில்லாத போது நாம் ஒருவருக்கும் பயப்படவேண்டியதில்லை என்பது என் அபிப்பிராயம்.

1924-ஆம் வருடம் எனக்குச் சிறிய நீதிமன்ற நீதிபதி வேலை யானபோது ‘உன் நீதிமன்றத்திலேயே ஏதாவது கோயில் விவகாரங்கள் தீர்ப்புக்கு வரலாம். ஆகவே நீ கோயில் தருமகத்தா வேலையை விட்டு விலகிக்கொள்வது நியாயம்’ என்று சர் சி. பி. இராமசுவாமி ஐயர் அவர்கள் சொன்னதின்பேரில் அரை மனத்துடன் மயிலை கபாலீசுவரர் கோயில் தருமகருத்தா வேலையினுன்றும் விலகினேன்

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages