நானிலத் தெய்வங்களும்; மக்கள் வழிபட்ட தெய்வங்களும்

410 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Mar 4, 2019, 2:02:17 PM3/4/19
to mintamil

சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும்; விருதுநகர், வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரியும் இணைந்து 13.12.2010 முதல் 22.12.2010 வரை ‘சங்க இலக்கியத்தில் தொல்காப்பிய இலக்கியவியல் கோட்பாடுகளின் தழுவலும் விலகலும்’ என்ற பொருண்மையில் நடத்திய பத்து நாள் பயிலரங்கில் 19.12.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2.30 மணி

அளவில் “சொல்லிய முறையாற் சொல்லப்படும் தெய்வங்களும், பிற தெய்வங்களும்” என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட இவ்வுரையின் பிரதி  பதிப்பிக்கப்படவில்லை.


         நானிலத் தெய்வங்களும்; பண்டைத் தமிழர் வழிபாடுகளும்


முன்னுரை:

தொல்காப்பியம் அகத்திணையியல் 5ம் நூற்பா, அகப்பாடல்களில் இடம்பெறக் கூடிய நான்கு திணைகட்குரிய தெய்வங்களை வரையறுக்கிறது. ஆயினும் சங்க அகப்பாடற் செய்திகளுக்கும்; அந்நூற்பாவின் வரையறைக்கும்  உள்ள இடைவெளியை அளந்தறிவதாக இக்கட்டுரை அமைகிறது.


தொல்காப்பிய வரையறை:    

“மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே“ என்ற நூற்பா நான்கு

திணைகட்குரிய தெய்வங்கள் யார் யார் எனச் சுட்டுகிறது. இளம்பூரணர் ‘மேய’ என்ற சொல்லுக்கு ‘மேவிய’ என்று பொருள் கூறுகிறார். நச்சினார்க்கினியர் ‘மேய’ என்ற சொல்லுக்கு ‘காதலித்த‘ என்று பொருள் கூறுகிறார். சோமசுந்தர பாரதியார் ‘மேய’ என்ற சொல்லுக்கு ‘உறைவிடமாகிய’ என்று பொருள் கூறுகிறார். சிவலிங்கனாரும், மு.அருணாச்சலம் பிள்ளையும்; இளம்பூரணரின் ‘மேவிய’ என்ற உரைக்கு ‘விரும்பிய’ என்று அடிக்குறிப்பு தருகின்றனர்.

மாயோன்    - திருமால்                         சேயோன் - முருகன்

வேந்தன்      - இந்திரன்                         வருணன் - மழைக்கடவுள்

என்றே இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சோமசுந்தர பாரதியார் ஆகிய மூவரும் பொருள் கூறுகின்றனர். சிவலிங்கனார் ‘வேந்தன்’ என்பது மன்னனைக் குறிப்பதாகக் கொள்கிறார்.


முல்லைத்திணையும் வழிபாடுகளும் :

முல்லைநிலத் தெய்வமாக மாயோன் சுட்டப்பட்டிருப்பினும்; கலித்தொகை தவிர்ந்த பிற தொகைநூல்களில்; முல்லைத்திணைப் பாடல்களில் திருமால் பற்றிய குறிப்பு இல்லை. தலைவியின் கற்பு தெய்வமாகப் போற்றப்  பெற்றது. முன்னோர் வழிபாடு காக்கைக்குச் சோறிடுவதன் மூலம் புலனாகிறது. நீர்நிலைகளிலும், கரைகளிலும், மரா மரத்திலும், தெய்வம் உறைவதாக நம்பி முறைப்படி தொழுதனர்.. பிற தெய்வக்குறிப்புகள் பல உள்ளன.

முல்லைநில மக்கள் திருமாலை வழிபடுவதை முல்லைக்கலிப் பாடல்கள் மட்டுமே சுட்டுகின்றன (பா-104,105,108).

தலைவன் வருவான் என்று ஆற்றி இருக்கும் தலைவியின் கற்பு கடவுள் தன்மை வாய்ந்தது என்ற குறிப்பு கிடங்கிற் குலபதி நக்கண்ணன் என்ற புலவரால் சொல்லப்பட்டுள்ளது.

”கடவுட் கற்பின் அவன் எதிர் பேணி

மடவை மன்ற நீ எனக் கடவுபு

துனியல் வாழி தோழி சான்றோர்

புகழு முன்னர் நாணுப

பழி யாங்கு ஒல்பவோ காணுங்காலே”(குறுந்தொகை 252) எனும்

பாடல் தலைவி தோழியைப் பார்த்துக் கூறுவதாகும். இங்கு தலைவியின் கற்பு கடவுள் தன்மை உடையது என்ற கொள்கை சிறப்பிடம் பெற்றுள்ளது.

காக்கைக்குச் சோறிடுவதைப் பலியிடல் என்று காக்கைப்பாடினியார் தோழி கூற்றாகச் சுட்டுவதால் இயற்கை எய்திய முன்னோரை வழிபட்ட வழக்கம் முல்லைத் திணைப் பாடலில் புலப்படுகிறது.

“திண்தேர் நள்ளி  கானத்து அண்டர்

பல்லா பயந்த நெய்யிற் தொண்டி

முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு

எழுகலத்து ஏந்தினும் சிறிதே என் தோழி

பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு

விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.”(குறுந்தொகை- 210)

இப்பாடல் ஏழு கலங்களில் நெய் பெய்த வெண்ணெல் வெண்சோறு வைத்துக் காக்கைக்குப் பலியிட்ட வழக்கத்தைக் கூறுகிறது.

நீர்நிலைகளிலும், கரைகளிலும், மரா மரத்திலும், தெய்வம் உறைவதாக நம்பி முறைப்படி தொழுத பின்னர் ஆயர் ஏறு தழுவினர்.

“துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும்

முறையுளி பராஅய்ப் பாய்ந்தனர் தொழூஉ”(முல்லைக்கலி- பா-101)

எனும் பாடலடிகள் மேற்சுட்டிய கருத்தைச் சுட்டுகின்றன.

திருமால், காமன், கண்ணன், பலராமன், சிவன், முருகன், கூற்றுவன், நான்முகன், திருமகள், பூமகள் ஆகிய பல தெய்வங்களும் உவமைகளாக முல்லைக்கலிப் பாடல்களில் எடுத்தாளப் பட்டுள்ளனர்.(பா.-103 -109)


நெய்தல் திணையும் வழிபாடுகளும்:

வருணன் நெய்தல் திணைக்குரிய தெய்வமாகச் சுட்டப்படினும் சங்க இலக்கியத்தில் ஒரு பாடலில் கூட வருணன் பற்றிய குறிப்பு இல்லை. சுறாக்  

கொம்பு; ஊர்க்காவல் தெய்வம், கடல் தெய்வம், நீர்நிலைத் தெய்வம், கடவுள் மரம் போன்ற வழிபடு தெய்வங்களைச் சங்க இலக்கிய நெய்தல் திணைப் பாடல்களில் காண இயல்கிறது. உவமைகளாகப் பிற பல தெய்வங்களும் இடம் பெறுகின்றனர்.

பட்டினப்பாலை சுறாவின் கொம்பை நட்டு பரதவர் வழிபட்ட செய்தியை,

”சினைச் சுறவின் கோடு நட்டு

மனைச் சேர்த்திய வல்லணங்கினால்

………………………………………………..

புன்றலை இரும்பரதவர்”(அடி.- 86-90) எனும் பாடற்பகுதியில் எடுத்து

உரைக்கிறது. (உரையாசிரியரே சுறாவின் கொம்பை நட்டு வருணனை வழிபட்டனர் என்கிறார். இதற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லை.)

போந்தைப் பசலையார் என்ற புலவர் புகார் நகரத்துக் காவல் தெய்வத்தை நோக்கித் தலைவன் சூளுரைத்ததாகப் பாடியுள்ளார்.

“கொடுஞ்சுழிப் புகார்த் தெய்வம் நோக்கி

கடுஞ்சூள் தருகுவன் “(அகநானூறு- பா-110) எனும் அடிகள் நோக்குக.

புகார் நகரின் காவல் தெய்வம் சம்பாபதி என்று சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் செய்தி உள்ளது. 1982ல் கள ஆய்வு செய்தபோது கூட சம்பாபதி என்று சுதை உருவம் ஒன்றை சாயாவனத்தின் வயல் காட்டிற்கு நடுவே பொதுமக்கள் காட்டினர்.

எழூஉப் பன்றி நாகன் குமரனார் நீர்த்துறைத் தெய்வத்தை தாயார் வணங்கச்

செல்வது குறித்துத் தோழி தலைவனுக்கு அறிவுறுத்துவதாகப் பாடியுள்ளார்.

“.............................................................அந்தில்

அணங்குடைப் பனித்துறை கைதொழுது ஏத்தி

யாயும் ஆயமொடு அயரும் …..”(அகநானூறு- பா- 240) அதனால்

பகலில் தலைவியைச் சந்திக்க ஏதுவாக இருக்கும் என்று அறிவுறுத்துகிறாள்.

சாகலாசனார் நெய்தல் நிலமக்கள் தெய்வமாக வழிபட்ட மரத்தில் இருந்த பறவைக்கூட்டைத் தம் பாடலில் புனைகிறார்.

“கடவுள் மரத்த முள்மிடை குடம்பை”(அகநானூறு- பா-270) என்பது  

மரத்தை வழிபாடு செய்தமையைத் தெரிவிக்கிறது.

கடலை ஒரு பெண்தெய்வமாக நெய்தல்நில மக்கள் வழிபட்டனர் என்பது அம்மூவனார் பாடலில் தெரிகிறது. அந்திக்காலத்தில் கடல் தெய்வம் கரையில் நிற்பது போல் தலைவி தனித்துக் கடற்கரையில் இரங்கி நிற்பது பற்றித் தோழி,

“...............................................................அந்திக்  

கடல்கெழு செல்வி கரை நின்றாங்கு

நீயே கானல் ஒழிய …….”(அகநானூறு- பா- 370) எனும் பாடலடியில்

கூறுவது காண்க.

இராமன், சிவன், திருமால், காமன், முருகன், பலராமன், முதலிய  தெய்வங்கள் உவமைகளாக நெய்தல் பாடல்களில் எடுத்தாளப் பெற்றுள்ளனர். (அகநானூறு- பா.- 70, 120, 360& கலித்தொகை- பா.- 123,124,127,134,140,143,147,150)


மருதத்திணையும் வழிபாடுகளும் :

எந்த ஒரு சங்க இலக்கியப் பாடலும் இந்திரனைத் தெய்வமாகச் சுட்டவே  இல்லை. இரட்டைக் காப்பியங்கள் தாம் இந்திரனைத் தெய்வநிலைக்கு ஏத்துகின்றன.

சிவலிங்கனார் குறிப்பிடுவது போல வேந்தன் என்னும் சொல் மன்னனைக் குறிப்பிடுகிறது என்று கொள்வது சங்க இலக்கியத்திற்குப் பொருத்தமாகப் படுகிறது.ஏனெனில் நற்றிணை(பா.- 150, 167, 170, 180, 237, 300, 320, 340, 390) யில்  உள்ள மருதப் பாடல்களும், ஐங்குறுநூற்றில் உள்ள மருதப் பாடல்களும் (வேட்கைப்பத்து பா.-1-10, பா.- 54, 56, 61&78) அகநானூற்றில் பல பாடல்களும் மன்னனைப் போற்றுகின்றன. மன்னனின் செயல்கள், அவனது ஆட்சிக்கால நிகழ்வுகள் உவமைகள் ஆகின்றன.

வேங்கை மரம், நீர்த்துறைத் தெய்வம், ஊரெல்லைத் தெய்வம், திருச்செந்தூர் முருகன், கொற்றவை முதலிய தெய்வங்களும் மருதத் திணைப்  பாடல்களில் வழிபாட்டிற்கு உரியவை ஆகின்றன. கற்புக்கடவுள் அருந்ததி, திருமகள், முதலிய தெய்வங்களும் உவமைகளாகின்றன.

“எரிமருள் வேங்கைக் கடவுள்“ என்று வேங்கைமரம் தெய்வமாக வழிபடப் பட்டமை பற்றிய குறிப்பு நற்றிணைப் பாடல் 216ல் உள்ளது.

(தொடரும்)

கண்மணி


kanmani tamil

unread,
Mar 4, 2019, 3:15:05 PM3/4/19
to mintamil

நீர்த்துறைத் தெய்வத்தைத் தாய் வழிபட்ட பாங்கினை ஆவூர் மூலங்கிழார்,

“கள்ளும் கண்ணியும் கையுறையாக

நிலைக்கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாய்

நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி

தணிமருங்கு அறியாள் யாய் அழ …”(அகநானூறு- பா- 156) என்று

தாய் மேல் இரக்கம் தோன்ற வருணிக்கிறார்.

இடையன் நெடுங்கீரனார் ஊர்காவல் தெய்வத்தை வழிபட்ட பாங்கினை,

“பழம்பல் நெல்லின் வேளூர் வாயில்

நறுவிரை தெளித்த நாறு இணர் மாலை

பொறிவரி இனவண்டு ஊதல் கழியும்

உயர்பலி பெறூஉம் உருகெழு தெய்வம் “(அகநானூறு- பா- 166) என்ற

பாடலில் விரிவாகப் பேசியுள்ளார்.

பரணரின் மருதத்திணைப் பாடல் திருச்செந்தூர் முருகனை வழிபட்டுத் தலைவன் உரைத்த சூள் பற்றிப் பாடுகிறது.( அகநானூறு- பா- 266) மருதனிள நாகனாரும் ‘ஆலமர் செல்வன் அணிசால் மகனா’கிய முருகனைப் போற்றுகிறார் (கலித்தொகை- பா.- 81, 83, 93).  

பெருங்காட்டில் கொற்றவைக்கு நிகழும் வழிபாடு பற்றி மருதக்கலிப் பாட்டில் மருதனிள நாகனார் பாடுகிறார்.(பா- 89)

சாகலாசனார் கற்புக்கடவுளாகிய அருந்ததியை மருதத் திணைத் தலைவிக்கு ஒப்பிடுகிறார்.(அகநானூறு- பா- 16) ஓரம்போகியார் மருதத் திணைத் தலைவி திருமகளின் மங்கலம் பொருந்தியவள் என்கிறார்.(அகநானூறு- பா- 316)


குறிஞ்சித் திணையும் வழிபாடுகளும்:

முருகன் பெரிதும் போற்றப்படுகிறான்.(குறுந்தொகை- பா.- 1, 111;நற்றிணை- பா.- 82, 173, 225, 273; ஐங்குறுநூறு- பா.- 245, 247, 249& அகநானூறு- பா.- 22,98)

மிகப் பழைய மரத்தை தெய்வமாக வழிபடும் போக்கு குறிஞ்சித்திணை மாந்தரிடமும் இருந்தது.(நற்றிணை- பா- 83) செங்கடம்பு எனும் மரா மரத்தை முருகனின் அம்சமாக வணங்கினர்(குறுந்தொகை- பா- 87).

குறிஞ்சி நிலத்தில் முருகன் மட்டுமின்றி கொல்லிப்பாவை என்ற பெண்தெய்வ வழிபாடும்  போற்றப்பட்டமை புலப்படுகிறது.நற்றிணைப்(பா.- 185, 192, 201) பாடல்கள் கொல்லிப்பாவை பற்றி விரிவாக வருணிக்கின்றன. பரணர் குறுந்தொகை 89ல் கொல்லிப்பாவையைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

பிற பல தெய்வங்களையும் குறிஞ்சி நில மக்கள் வழிபட்டனர் என்பது,

“வேற்றுப் பெருந்தெய்வம் பலஉடன் வாழ்த்தி“(குறுந்தொகை- பா-263)

தாய் தன் மகளுக்காக வழிபட்டதாகப் பெருஞ்சாத்தன் எனும் புலவர் பாடி

இருப்பதிலிருந்து தெரிகிறது.    

பல குறிஞ்சித்திணைப் பாடல்கள் ‘அணங்கு’ என்ற பொதுச்சொல்லைப் பயன்படுத்தினாலும் உரையாசிரியர்கள் முருகன் என்றே பொருள் கூறுகின்றனர். (நற்றிணை- பா.- 47, 165, 288, 322, 376, 385; அகநானூறு- பா-72) சில குறிஞ்சித் திணைப் பாடல்கள் கடவுள் என்று சுட்டுமிடங்களிலும் உரையாசிரியர் முருகன் என்றே பொருள் கூறுகின்றனர்(குறுந்தொகை- பா- 105; நற்றிணை- 251, 351& ஐங்குறுநூறு- பா- 243,259). இப்போக்கு ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை. ஏனெனில் தமிழகத்தில் சங்க காலத்தில் நீர்த்துறையிலும், ஊரெல்லையிலும்  காவல் தெய்வங்களை வைத்து வழிபட்டமையையும், மரங்களைத் தெய்வமாக வழிபட்டமையையும் இதுகாறும் கண்டோம். கடவுள், தெய்வம் என்ற பொதுப் பெயர்களால் பிற திணைகளிலும் வழிபாடு நிகழ்ந்தமைக்குச் சங்க இலக்கியம் சான்று பகர்கிறது.

எண்

நூல்

பாடல்  

எண்

புலவர்

பொதுச்சொல்

திணை

1

குறுந்தொகை

203

நெடும்பல்லியத்தன்

கடவுள்

மருதம்

2

ஐங்குறுநூறு

23

ஓரம்போகியார்

அணங்கு

மருதம்

3

ஐங்குறுநூறு

76

ஓரம்போகியார்

தெய்வம்

மருதம்

4

அகநானூறு

136

விற்றூற்று மூதெயினனார்   

கடவுள்

மருதம்

5

கலித்தொகை

82

மருதனிள நாகனார்

புத்தேளிர்

மருதம்

6

கலித்தொகை

84

மருதனிள நாகனார்

கடவுள்

மருதம்

7

ஐங்குறுநூறு

182

அம்மூவனார்

கடவுள்

நெய்தல்


முடிவுரை:

தொல்காப்பியம் சுட்டும் தெய்வங்களில் மாயோன் முல்லைக்கலியிலும், முருகன் குறிஞ்சிப் பாடல்களிலும் இடம் பெறுகின்றனர். வேந்தன் மருதத் திணையில் மன்னனாகவே இனம் காணப்படுகிறான். வருணன் வழிபாடு காணக்  கிடைக்கவில்லை. சுறாக்கொம்பை வருணன் என உரையாசிரியரே கூறுகிறார்.

குறிஞ்சி நிலத்தில் கொல்லிப் பாவையும் வழிபடப் பட்டது.

முருகனாகக் கருதப்பட்ட மராமரம் குறிஞ்சியில் மட்டுமின்றி;  முல்லையிலும் வழிபடப் பட்டது.

முல்லை நிலத்தில் தலைவியின் கற்பு தெய்வமாகப் போற்றப்  பெற்றது. முன்னோர் வழிபாடு இருந்தது. நீர்நிலைகளிலும், கரைகளிலும் தெய்வம் உறைவதாக நம்பி முறைப்படி தொழுதனர்.

வேங்கை மரம், நீர்த்துறைத் தெய்வம், ஊரெல்லைத் தெய்வம் முதலிய வழிபாடுகள் மருதத் திணைப்  பாடல்களில் காணப்படுகின்றன. திருச்செந்தூர் முருகன் நெய்தல் நிலத்தில் எழுந்தருளி இருப்பினும் மருதப் பாடலில் போற்றப்படுகிறான். கொற்றவையும், அருந்ததியும், திருமகளும் போற்றப்படுகின்றனர்.

ஊர்க்காவல் தெய்வம், கடல் தெய்வம், நீர்நிலைத் தெய்வம், கடவுள் மரம் போன்ற வழிபடு தெய்வங்களைச் சங்க இலக்கிய நெய்தல் திணைப் பாடல்களில் காண இயல்கிறது

எல்லா நிலங்களிலும் கடவுள், தெய்வம், அணங்கு புத்தேளிர் எனப் பொதுப் பெயர்களால் வழிபடுதெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பழைய மரங்கள், நீர்க்கரைகள், நீர்த்துறைகள், ஊர்க்காவல் தெய்வங்கள் அனைத்து நிலங்கட்கும் பொதுவாகின்றன. தொல்காப்பியம் சுட்டாத பல தெய்வ வழிபாடுகள் இருந்தமை உவமைகள் மூலம் புலனாகின்றன.            

 (முற்றும் )

கண்மணி

                       



 

 


N. Ganesan

unread,
Sep 30, 2019, 4:01:10 AM9/30/19
to மின்தமிழ், vallamai, Kanaka Ajithadoss, Banukumar Rajendran, Rajendra Prasad P
SK wrote>   'நாநிலத் தெய்வங்களும்; மக்கள் வழிபட்ட தெய்வங்களும்' என்று நானே ஒரு கட்டுரை   எழுதி மின்தமிழில் பகிர்ந்து கொண்டேனே. அதை வாசித்துப் பாருங்கள். தொல்தமிழருக்கு  முருகன், கொற்றவை, இயற்கை மட்டும் தான்.

நன்றி. தேடிப் படித்தேன். யாரும் படித்தார்களா என அறியேன். மறுமொழிகள் எதுவும் காணோம்.

SK<<<

பட்டினப்பாலை சுறாவின் கொம்பை நட்டு பரதவர் வழிபட்ட செய்தியை,

”சினைச் சுறவின் கோடு நட்டு

மனைச் சேர்த்திய வல்லணங்கினால்

………………………………………………..

புன்றலை இரும்பரதவர்”(அடி.- 86-90) எனும் பாடற்பகுதியில் எடுத்து

உரைக்கிறது. (உரையாசிரியரே சுறாவின் கொம்பை நட்டு வருணனை வழிபட்டனர் என்கிறார். இதற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லை.)

>>>


ஆதாரங்கள் நிறைய உண்டு. தமிழ் இலக்கிய மரபில் ஒரு தொடரைப் புரிந்துகொள்ள மற்ற இலக்கியங்களைப்
பார்க்கவேண்டும். ரிக்வேதத்தில் பெருந்தெய்வம் வருணன். ஆரியர் வருகைக்கு முன்னரே இருந்த
விடங்கர் வழிபாட்டுடன் இயைந்துவிட்டவன் என்பதை என் 2007 கட்டுரையில் விரிவாகக் காட்டியுள்ளேன்.
சிந்து முத்திரைகளில் வெளிப்படும் சமயம், வழிபாடு. இக் கலைவரலாற்றுக் கட்டுரையால் இந்து எழுத்தில் -
முத்தம் சுமார் 400 - எது மகரம் எனப் படிக்க பார்ப்போலா போன்றோரால் முடிந்தது, ஐராவதமும்
முதலில் முருகு எனச் சொல்லிக் கொண்டிருந்தவர், “உன் கட்டுரையால் விளங்கிற்று” என்று இறுதி ஆண்டுகளில்
சொன்னார்.

மகரம் (முதலை). எனவே, கடலுக்கு மகராலயம் என்ற பெயர் வட, தென் மொழிகளில் உண்டு.
மகரம் கிழக்குக் கடற்கரையில் முற்றிலும் அழிபட்டபின், அதற்குச் சப்ஸ்டிட்யூட் ஆக,
வலிய சுறா மீனைத் தேர்ந்தெடுத்தனர். அதனால் தான் வருணனின் சின்னம்,/அடையாளம்/குறியீடு
சுறா மீன் என்று கொண்டனர். அந்தப் பிற்கால நிலையைத் தான் பட்டினப்பாலை காட்டுகிறது.

“மலர்மிசை ஏகினான்” என்ற தொடரை வள்ளுவரின் கடவுள் வாழ்த்தில் காண்கிறோம்.
அதன் பொருளை அறிய ஒவ்வொரு நூற்றாண்டிலும் உள்ள சமணத் தமிழ் இலக்கியங்கள் கைகொடுக்கின்றன.
ரா. பானுகுமார் எழுதிய கட்டுரை காண்மின்:

அதே போல, வருணன் சமயம் பேசப்படுகிறது பட்டினப்பாலையில் என்றறிய நூற்றாண்டு தோறும்
உள்ள செவ்வியல் இலக்கியங்களை - தமிழ், வடமொழி - படித்தால் அறியலாகும். தனி இழையில்
தருகிறேன்.  

> உரையாசிரியரே சுறாவின் கொம்பை நட்டு வருணனை வழிபட்டனர் என்கிறார்.
> இதற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லை  

ஆதாரம் சிந்துவெளியில் இருந்து, திருவானைக்காப் புராணம் வரை - சுமார் 4500 ஆண்டுகள் - உண்டு.

ஒன்று மறைந்த பின், அதனிடத்தை மற்றவை கொண்டு நிரப்புவர். உ-ம்:
(1) ரிக் வேதத்தில் வரும் சோமா என்ன பயிர் என மறைந்தபோது, கேரளாவில் கொல்லங்கோட்டில் கிடைக்கும்
ஒஉ கொடியைப் பயன்படுத்தலாயினர்.
(2) கீழடி ரிப்போர்ட்டைப் பாருங்கள். நாளை (அக். 1) ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கை
பற்றிய ஆவணம் கையெழுத்து ஆகிறது. அதற்கால, பேரா. உல்ரிக் நிக்லாஸ் இங்கே வந்துள்ளார்.
மரையானின் மருப்பு போர்க்கருவியாக இருந்ததும், கலப்பையில் கொழிவாக இருந்ததும்,
மக்கள் அழித்ததும் கீழடி காட்டுகிறது. மரையானைப் பற்றி நிறையப் பேசும் இந்திய இலக்கியம்
சங்க இலக்கியம் தான். சம்ஸ்கிருதத்தில் ரிஷ்யசிருங்கர் மரையான் கொம்பு தரித்தவர்.
திமில் இல்லாத காளைகள் இந்தியாவில் வளரவில்லை. எங்கோ பார்த்தது. அதைவைத்து
யூனிகார்ன் முதலில் சிந்துவெளியில் செய்தனர். அந்தக் காளைகளைப் பற்றிய அறிவு
பிற்கால தலைமுறைகளுக்கு அறைய, மறைய, சிந்து முத்திரைகள் மரையானின் முகத்தைக்
காட்ட ஆரம்பித்தன. மரையான் பேர் எவ்வளவு அழகு! Cow-like Antelope என்பது நேர் மொழிபெயர்ப்பு.
மரையானின் தலை - யூனிகார்ன் முத்திரையில்:
image.png

இதைப் போலத்தான், வருணனுக்கு சுறாக் கோட்டை வைத்து வழிபடலும்.
ஒரிஜினல் மகரம் (முதலை) அழிந்துவிட்டதால் ஏற்பட்ட ஸப்ஸ்டிட்யூட்.
அது ஏற்பட்ட காலத்தில் வருணன் வழிபாடு காட்டுவது பட்டினப்பாலை.

நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Oct 1, 2019, 2:21:10 AM10/1/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
NG >> அதே போல்தான், சுறாக் கோட்டை வைத்து அணங்கினோன் ஆகிய வருணனைப் பரதவர் வழிபடுதலும்,
அணங்கினோன் மனையாகும் அணங்கு (உ-ம்: பராயனார்) - இரு பெருந்தெய்வங்களுக்கு மாத்திரம்
மட்டிலுமே கோடு வைத்துப் பூசை செய்வத் சங்க காலத் தமிழர் மேற்கொண்ட சமயம் என்பதும்.
வேத இலக்கியங்களை ஆராய்வதால் தான் கின்னரம் (= ஆந்தை, தமிழ் நிகண்டுகளில்) உற்பத்தி,
ஆந்தை (< ஆண்டலை) பலி போன்றவை பற்றிய தெளிவு கிடைக்கிறது.

SL >> சங்க காலத் தமிழர் என்று யாரையெல்லாம் குறிக்கிறீர்கள்?
ஆண்ட்ரே ஸ்ஜோபெர்க் கூறியபடி தமிழகத்தில் ஒரு பன்மைச் சமுதாயம் இருந்தது.
வேத நெறிப்பட்டோர் சங்ககாலத் தமிழகத்தில் இருந்தனர்......எந்த அளவுக்கு? (பரிபாடல் திரட்டு காலத்தால் பிற்பட்டது. அது மதுரை தாமரைப்பூ போல் இருந்தது என்கிறது. அந்த அமைப்பு 7ம் நூற்றாண்டினது.)  தொல்தமிழகம் என்பது கி.மு.3ம் நூற்றாண்டு ஆதலால் நீங்கள் சொல்லும் கருத்திற்கு ஏற்புடை மதிப்பு கிடையாது.     
யாகம் செய்வாயாக ; வேள்வி செய்வாயாக ; என்று ஒவ்வொரு மன்னனையும் பார்த்துத் தம் பக்கல்  இழுப்பதைத்தான் புறநானூறிலும் , பத்துப்பாட்டிலும் சிலப்பதிகாரத்திலும் பார்க்கிறோமே. 7ம் நூற்றாண்டு வரை இதே நிலை தான் நீடித்தது. இந்த வருணப் பாகுபாட்டைக் கண்டுகொள்ளாத ஒரு நாகரிகம் தான் திணைமாந்தர் நாகரிகம். பரதவர் திணைமாந்தர். அவர்களுக்கு வருணனைப் பற்றி எல்லாம் அக்கறை கிடையாது. இயற்கை பற்றி மட்டுமே அக்கறை. ஒரு வகையில் அது ஒரு உன்னதமான உயர்ந்த நாகரிகம்..

இதை ஓரளவு ஏற்கலாம். வேளிர் நாகரீகம் என்பது திடீரென கி.மு. 800 வாக்கில் தமிழகத்தில் தோன்றுகிறது. உலக முழுதும்
மென்ஹிர்கள் உண்டு -பெருங்கற்கால புதைவிடங்களில். ஆனால், வேளிர் வருகையால் உடையாநத்தம், மோட்டூர், சித்தன்னவாசல்
போன்ற இடங்களில் அந்த மென்ஹிர்கள் பெரிதாகவும், அழகாகவும் “மழுவாள் நெடியோன்” ஆகின்றன. இது வேததின் வருணன்.
அசுரர்களின் தலைவன் எனப்படுபவன். குடிமல்லத்தில் வருண விடங்கரைப் பார்த்தாலும், வருணனின் மழு தெரியும்.
தென்னிந்திய சிவன் மூர்த்தங்களில் ஒரு கையில் மழு இருப்பதன் சூக்குமம் இதுதான். மழுவாள் நெடியோன் ஆன, மகர மீனின்
மேல் நிற்கும் வருணன் குடிமல்லத்தில் பரசுராம ஈசுவரன் என பல்லவர், சோழர் காலத்தில் அழைக்கப்படுகிறான். இதையெல்லாம்
விளக்கமாக எழுதியுள்ளேன்,
தமிழர்களும், பின்னர் இந்தியா முழுமையும் வேத கால வருணனின் அமிசங்களை உள்வாங்கிக்கொண்ட சிவ லிங்க
வழிபாட்டைப் படைத்துக்கொள்கின்றனர். வருணனாக வடிக்கப்பெற்ற குடிமல்லம் லிங்கம், இந்தியாவின்
முதல் சிவ லிங்கம் எனப்படுகிறது. இந்தியாவின் மூத்த லிங்கம் குடிமல்லம் என எழுதியவர் ஆனந்த குமாரசாமி.

ரிக்வேதத்திற்கு முன்பு ஏற்பட்டது அதர்வண வேதத்தின் பல பகுதிகள் என்பர் வேதவியலார் (Ref. The Roots of Hinduism, A. Parpola, 2015, OUP). அதர்வ வேத ஆரியர்கள், சிந்து த்ராவிடர்களுடன் கலந்து இந்த மழுவாள் நெடியோன் வழிபாடு வருகிறது. அதனால், ரிக்வேதத்தில் வருணனை அசுரர்களில் தலையாயவன் என்று பாடியுள்ளனர். வருணன் என்னும் அசுரன் பற்றி ஏராளமானோர் எழுதியுள்ளனர். உ-ம்: ஆர். என். தண்டேகர், Asura VaruNa, 
Annals of the Bhandarkar Oriental Research Institute, Vol. 21, No. 3/4 (1939-40), pp. 157-191

Journal of the American Oriental Society, Vol. 39 (1919), pp. 100-103
  etc. etc., 

Due to the incoming of VeLirs intho South India, mazhu-vaaL neDiyOn in the form of huge "Anthropomorphic Axe" monoliths (thanks to IRON chisel technology) in megalithic burial grounds, and his wife, Gauri worship in Religion gets primacy. This couple is primary even today
in Hinduism as a whole

Let us see how Buddhists interpret the VaruNan, principal Asura of the Veda,  and the Sea Goddess story for the benefit of
their Religion and its growth across South East Asia. This happens around 3rd century CE, right towards the end of Sangam Age.
-------------
 
மணிமேகலா தெய்வம்
- கம்போடிய நாட்டிய நாடகம்.

மீனவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வணங்கிய கடல் தெய்வம் என்னும் அணங்கை,
“மணிமேகலா தெய்வம்” ஆக்குகிறார்கள், கடலோடிகளான பௌத்தர்கள். சமணர்கள்
கடுமையான உணவுப் பழக்கங்கள், துறவு போன்றவற்றால் இந்தியாவை விட்டு பெருமளவில்
பயணிக்கவில்லை. பௌத்தர்களின் கடல் வாணிகத்திற்கான குறியீடு என
மணிமேகலா தெய்வம் உருவாகிறது. மணி மலையிலே பிறப்பது. ஆனால், கடல்
வணிகத்தால் உலகெங்கும் கொண்டுசெல்லப்பட்டு கொள்ளவும், கொடுக்கவும் செய்யும்
விலையுயர் பண்டம். மற்ற பொருள்கள் எல்லாவற்றுக்கும் கடல்வணிகக் குறியீடு “மணி”.
அதை வைத்திருப்பவள் கடலம்மா.

புலங் கொள்நிதிக் குவையோடு
      புழைக் கைம்மா களிற்றினமும்
நலங்கொள்நவ மணிக்குவையும்
      சுமந்தெங்கும் நான்றொசிந்து
கலங்கள் இயங்குமல்லைக்
      கடல் மல்லைத் தலசயனம்
வலங்கொள்மனத் தாரவரை
       வலங்கொள்என் மடநெஞ்சே  - திருமங்கையாழ்வார்,

மழுவாள் நெடியோன், அசுரர் தலைவன். குடிமல்லம் இவனுக்காக (=வருணனுக்காக)
வடிக்கப்பெற்றது. இப்போது இந்தியாவின் முதல் “சிவ” லிங்கம். பரசுராமேசுவரன்
எனப் பல்லவர், சோழர் காலங்களில் அழைக்கப்படுபவர். இவனை, “பரசுராம அசுரன்”
என்று பௌத்தக் கதைகள் செய்கின்றன. இந்தப் பரசுராம அசுரனுக்கும், மணிமேகலா
தெய்வத்துக்கும் நடக்கும் போட்டிதான் கம்போடியா நாட்டின் தேசிய நாடகம்.
பார்த்து மகிழுங்கள்:
பரசுராம அசுரனும், மணிமேகலா தெய்வமும்:

Manimekhala is seen in wat paintings across Mainland Southeast Asia depicting scenes from Mahajanaka.[2] In Thailand and Cambodia, she is considered a goddess of lightning and the seas. In the classical dance traditions of Thailand and Cambodia, sacred dramatic dances depict the goddess Manimekhala, Ramasura (Parashurama), and Arjuna; according to legend, the phenomena of thunder and lightning is produced in the clash of Manimekhala's crystal ball and Parashurama's axe. In Cambodia, these dance dramas are used in propitiation ceremonies called buong suong tevoda and were performed to invoke the rains to fall.[4]  

தமிழிலே ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என பௌத்த நூலாக இருப்பது மணிமேகலை காப்பியமே.
வீரசோழியம் கடவுள் வாழ்த்து புத்த பகவானது. அவ்வளவுதான்/ இன்னும் பல நூல்கள் நமக்குக் கிடைத்திருந்தால்
கம்போடியாவுக்கு தமிழ் பௌத்தர்கள் எப்படி மணிமேகலா தெய்வத்தின் புராணத்தைக்
கொடுத்தார்கள் என இன்னும் விளங்கியிருக்கும்,  இத் தெய்வத்தைத் துதிக்குமுகமாக. மாதவிக் கணிகையின் மகள் மணிமேகலை எனப் பெயர்பெற்றாள்.

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages