Fwd: கடவுளுக்கான இலக்கணம் சொன்னவன்-வள்ளுவன்

2 views
Skip to first unread message

thaayumaanavan venkat

unread,
Feb 17, 2009, 11:57:07 PM2/17/09
to minTamil

தமிழன்புடன்.
வெங்கட்.தாயுமானவன்.

என் படைப்புகளோடு கைகுலுக்க சொடுக்கவும்
www.kvthaayumaanavan.blogspot.com






---------- Forwarded message ----------
From: thaayumaanavan venkat <thaayum...@gmail.com>
Date: 2009/2/18
Subject: கடவுளுக்கான இலக்கணம் சொன்னவன்-வள்ளுவன்
To: nobleh...@gmail.com


1330 குறட்பாக்களில் செந்நாபோதன் கடவுளுக்காக சொன்னது 10 
குறட்பாக்கள்தான்.ஆனால் அத்தனையும் முத்துகள். 
கடவுள்வாழ்த்து என்பது வெறும் வாழ்த்தாக மட்டும் அமையாமல்- கடவுளின் தன்மைக்கே 
இலக்கணமாக விளங்குகிறது என்பதே உண்மை. 
வள்ளுவன்-இந்து-கிறிஸ்துவன்-இசுலாமியன்-சமணன்-இன்னு்ம் என்னென்ன சொன்னாலும் சரி 
அவன் அனைவருக்கமான கடவுளுக்கு இலக்கணம் வகுத்தவன். 

1.முதல் குரலில் உலகின் தோற்ற முதலுக்கு அவன் சொல்லும் மூலம்- ஆதி பகவன். 
நம்மிடம் எப்போதும் ஒரு குறை உண்டு-அதாவது யாராவது சொன்னதை அப்படியே தலை மீது 
வைத்துக்கொண்டு ஆடுவது. ஆயிரம் கருத்துகள் அலைமோதினாலும் மெய்பொருள் நோக்கியே 
இருக்க வேண்டும் நம் பயணம். 
நானேகூட ஏதோ சொல்கின்றேன்- நீங்கள் திடமான யோசனைக்கு பின்னரே அதை ஆமோதிப்பதோ 
அல்லது எதிர்ப்பதோ. 

இந்த ஆதி பகவனைத்தான் வள்ளுவனின் தாய் ந்தை ஆக்கிவிட்டார்கள் நம்மவர்கள். 

கணிதம் படித்தவர்களுக்கு ஆதியை பற்றி கொஞ்சம் அதிகமாய் தெரியக்கூடும். 
வரைபடதாளில் இரண்டு அச்சுக்கோடுகள் வெட்டிக்கொள்ள மையமாய் வளர்வு நிலைக்கும் 
தேய்வு நிலைக்கும் அப்பாற்பட்டு சுழிய நிலையில் இருக்கும் புள்ளிக்கு ஆதி 
என்றுபெயர். 
ஆதியில் தோற்றமும் இல்லை.மறைவும் இல்லை. 
ஆதியில் வளர்வும் இல்லை தேய்வும் இல்லை. 
ஆதியில் இருளும் இல்லை ஒளியும் இல்லை.ஆனால் தோன்றாததும் மறையாததும்,வளராததும் 
தேயாததும்,இருளாத்தும் ஒளிராததுமான அனைத்துமே ஆதிக்குள் அடக்கம். 
இருளின் முடிவில் ஒளியின் துவக்கம். ஒளியின் முடிவில் இருளின் துவக்கம். 

அந்த ஆதிதான் கடவுள்.ஆம் அந்தாதிதான் கடவுள்.முடிவில் 
தொடக்கத்தையும்,தொடக்கத்தில் முடிவையும் பதுக்கி வைத்தவன். 

ஆதி நிலை என்பது ஒருமை நிலை. அங்கு சிந்தனையும் இல்லை செயலும் இல்லை. அடுத்த 
நிலையில் கடவுள் ஆதியை பகுக்கிறான். பகுப்பதால் அவன் பகவன். ஒன்றை 
இரண்டாக-இரண்டை மூன்றாக-பகுக்கிறான். 
இவ்வாறு சகலத்தையும் உள்ளடக்கிய ஆதியை பகுப்பதன் மூலம்- உலகின் தோற்ற முதலுக்கு 
அடிகோலுபவன் கடவுள். 
எனவே "ஆதி பகவன் முதற்றே உலகு"- என இலக்கணம் வகுத்தான். 

2. இரண்டாம் குறளில் வள்ளுவன் கடவுளுக்கு தரும் இன்னொரு பட்டம்"வாலறிவன்"- 
கடவுள் சாதாரண அறிவன் கிடையாது. அவன் வாலறிவன். 
வாலறிவன் என்றால் தூய அறிவு நிறைந்தவன். இல்லாமையையும், அறியாமையையும் 
விரட்டுவதே அறிவு சமுகத்தின்  தலையாய பணி. 
அறியாமை என்பது அறியாத ஒன்றை அறிந்து கொள்வதன்று. தவறாக அறிந்து கொண்டதை சரியாக 
அறிந்துகொள்ளுதல். 
தவறான் ஒன்றை கற்றுக்கொண்ட பின்னரே சரியான் ஒன்றை அறிந்து கொள்வது மனித இயல்பு. 
அதுவே கற்றல். 
இருந்துகொண்டே மறைதலையும், மறைந்த படியே காட்டுதலையும் செய்யத்தலைபட்டவன் 
கடவுள். உலக இயக்கத்திற்கு இம்மாயத் தன்மை இன்றியமையாத ஒன்று. 
மெய்யை மெய்யாகவும்- பொய்யை பொயாகவும்-அறிந்து கொள்ள அந்த வாலறிவனை தொழுதலே 
கற்றலின் ஆய பயன். 

3.மலர்மிசை ஏகியவனின் மானடி சேர்ந்தால் நிலைசை நீடு வாழலாம்- இது குறள்பாடம். 
பேதம் அந்த மலர்மிசையை மகாவிஷ்ணுவிடம் எடுத்து சென்றுவிட்டது. 
காரணம் அவனே மலர்மிசையில் உள்ளவன் என்பதால். 
மலர்மிசை என்பது ஒவ்வொரு மனிதரின் மனம் ஆகும். ஆயிரம் இதழ் விரித்த தாமரை 
என்கிறோமே அங்குதான் திண்ணமான எண்ணமாகவும், உறுதியான உணர்வாகவும் கடவுளை 
வைத்திருக்க்க முடியும். 
கடவுளை சட்டை பையில் வைத்துகொள்வதும், money purse இல் வைத்துகொள்வதும் என்பது 
வேறு. 
கடவுள் மனித மனங்களில் ஏகியவன். அவனுடைய அடியை சேர்தல் சிறப்பு. 
இங்கு அடிமுடி தேடிய கதையை நினைவு படுத்தி கொள்க. 

4.வள்ளுவன் கடவுளுக்கு சொன்ன அடுத்த் தன்மை- "வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்". 
ஆதியை பகுத்தவனுக்கு உலகின் மேல் வேண்டுதலும் வேண்டாமையும் எப்படி இருக்க 
கூடும். 
பகவான் ரமணர் வெப்ப படுத்தினாலும் 100 டிகிரியில் நீர் ஆவியாகும். சாமான்ய 
மனிதர் யார் வெப்ப படுத்தினாலும் 100 டிகிரியில் ஆவியாகும். கடவுள் வாலறிவன் 
இல்லையா? தூய அறிவுக்கு ஏது விரு்ப்பும் வெறுப்பும். 
காந்தத்தோடு சேர்ந்த இரும்பு காந்தமாகிவிடும். வேண்டுதல் வேண்டாமை அற்றவனின் 
தாள் சேர்ந்தால் துன்பம் கிடையாது. விருப்பு வெறுப்பற்ற நிலையில் நாமும் 
கட்வுள் தன்மை எய்திவிடுகிறோம். 

5.ஆதி தன்மை என்பது நடுனிலை தன்மை. வரைபடத்தாளில் நடுனாயகமாய் அமர்ந்திருக்கும் 
கடவுள்- எந்த கால் பகுதி பற்றியும் ஏக்கமோ-தாக்கமோ கொள்வதில்லை. நல்லவை கெட்டவை 
போன்ற இருவினைகள் பால் சேராதவன் கடவுள். அதனால்தான் கீதையில் கிருஷ்ணனால் 
அப்படியிருக்க முடிந்தது. 

6. பொறி வாயில் ஐந்தவித்தல் அடுத்த தன்மை. அப்ப்டி அவித்தால் பொய் தீர் ஒழுக்க 
நெறி நின்று- நீடு வாழலாம். 
கண் தன் மெய் தன்மையை பெறும் வரைக்கும்- கயிற்றை பாம்பாகவே காட்டி 
கொண்டிருக்கும். காது இறந்தகால ஓசையையும் எதிர்கால ஓசையையும் மட்டுமே 
கேட்டுக்கொண்டிருக்கும். நிகழ்கால செவிட்டு காதுகள் எல்லாம் கேட்காதுகள் அதாவது 
கேட்கா காதுகள். செவிகள் மெய் தன்மை பெறுகையில் எங்கும் ஒலிக்கும் பரநாதத்தை, 
விசுநாதத்தை கேட்கும். 
பொய் தீர்க்கும் ஒழுக்கம் என்பதே பொறிகளை அவித்தல்தான்.கடவுள் ஐந்தவித்தவன். 
அப்படி அவித்தால் நீங்களும் யாரும் கடவுளே. இங்கு கடவுளுக்கு உருவமோ பெயரோ 
கிடையாது. தன்மை மட்டுமே. 

7.பதிலீடுகள் இல்லாதவன் கடவுள். அவன் ஒருவன் மட்டுமே. அதனால்தான் அவனுக்கு உவமை 
இல்லை. இதை வள்ளுவர் சொல்லும் பாங்கு அலாதியானது. 
"தனக்கு உவமை இல்லாதான்"-என்கிறார். தன்னிலையில் வைத்து சொல்கிறார். 
முன்னிலையிலோ படர்க்கையிலோ சொல்லவில்லை. தனக்கு உவமை இல்லா நிலையில் த்ன்னை 
உருவாக்கி கொள்ளும் ஒவ்வொருவரும் கடவுளே. 
தனக்கு உவமை இல்லா நிலையில் மனக்கவலைகள் ஏது? 

8.கடவுளை சுட்ட வள்ளுவன் பயன்படுத்தும் அடுத்த வார்த்தையை கவனியுங்கள். 
"அறவாழி அந்தணன்..." பின்னொரு இடத்திலே சொல்லுவான் "அந்தணர் என்பவர் 
அறவோர்.."என்று. ஆக, கடவுள் என்பவன் அறத்தின் வழி நின்று வாழ்பவன். அறவாழியை 
அடைந்தால் பிறவாழியை எளிதில் நீந்தி கடக்கலாம். பிறவாழி நீந்த நீங்களும் 
அறவாழியாகும் தன்மையை பெறுங்கள் என சொல்லாமல் சொல்கிறான் வள்ளுவன். 

9.எட்டு குணங்களால் நிறைந்த இறைவனை வணங்காவிடில், கோளும் பொறியும் குணமற்று 
போய்விடும்.(இந்த எட்டு குணங்கள் பற்றி விரிவாக அடுத்த பதிவில் இட இருப்பதால் 
இங்கு சுருக்கமாக முடிக்கிறேன்) எட்டு குணம் என்பது அனைவராலும் அடையப்பட் 
கூடியதே. 

10.பிறவியை அறுப்பவன் கடவுள். மெய்யறிவு பெறுபவன் மீண்டும் பிறக்க மாட்டான். 
இறைவனின் பாதம் தொட்டவர்கள் பிறவி கடல் கடப்பார்கள். மற்றவர்கள் அதிலேயே 
கிடப்பார்கள். 

கடவுளுக்கு என்று மேற்சொன்ன அத்துனை தன்மைகளையும் நாமும் பெற முனைவோம். தமிழன்புடன்.



வெங்கட்.தாயுமானவன்.

என் படைப்புகளோடு கைகுலுக்க சொடுக்கவும்
www.kvthaayumaanavan.blogspot.com





devoo

unread,
Feb 18, 2009, 1:43:11 AM2/18/09
to மின்தமிழ்
//Feb 18, 9:57 am, thaayumaanavan venkat

விருப்பு வெறுப்பற்ற நிலையில் நாமும்

கட்வுள் தன்மை எய்திவிடுகிறோம் -

’மம ஸாதர்ம்யமாகதா:’

அருமையான விளக்கம்.
ஒரு கருத்தை உடன்பாட்டு முறையிலும், எதிர்மறையாகவும்
(அந்வயம், வ்யதிரேகம்) வலியுறுத்துவது பாரத இலக்கியங்களில்
தொன்றுதொட்டு இருந்து வரும் மரபு.
வள்ளுவர் முதல் ஆறு குறட்பாக்களில் உடன்பாடாகவும்,
தொடர்ந்து வ்யதிரேகமாகவும் கூறுவார்.
கீதையிலும் இம்முறையைக் காணலாம்.

தேவ்

Reply all
Reply to author
Forward
0 new messages