ஐந்திரம் -- ஐந்திறம் -- ?? இப்போது உண்டா?

508 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Jun 28, 2022, 1:13:20 AM6/28/22
to மின்தமிழ்
சில நாள்களுக்கு முன்னர் எனக்கு ஒரு கைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் என்னுடைய தொடரடைவு இணையதளத்தைப் பாராட்டிப் பேசினார்.அதனைத் தான் பெரிதும் பயன்படுத்துவதாகவும் கூறினார். அடுத்து அவர் சொன்னது என்னைத் திடுக்கிட வைத்தது. தொல்காப்பியத்திற்குத் தொடரடைவு அமைத்த தாங்கள். அதின் பாயிரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்திரத்துக்கும் ஏன் தொடரடைவு அமைக்கக்கூடாது என்று வினவினார். தொல்காப்பியச் சிறப்புப்பாயிரத்தில் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்று பனம்பாரனார் பாராட்டியிருப்பது தெரியும் என்றும் ஆனால் அந்த ஐந்திரம் என்ன என்று கேள்விப்பட்டதில்லை என்றும்கூறினேன்.அதற்கு அவர். அந்த ஐந்திரம் என்றநூல் மயன் என்ற நாஞ்சில்நாட்டுத் தமிழன் எழுதிய நூல் என்றும் அது இப்போது இருப்பதாகவும் கூறினார். அதுவே தொல்காப்பியத்துக்கு முதல்நூல் என்றும் கூறினார். மேலும் அந்த ஐந்திரம் என்ற நூலை எனக்கு அனுப்பிவைப்பதாகக் கூறியவர் எனக்கு அதனை அனுப்பியும்வைத்துவிட்டார். அது 892 நூற்பாக்களைக் கொண்ட ஒரு பெரியநூல்.உரையும் எழுதப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ஐந்திரம் அல்ல என்றும்,அது ஐந்திறம் என்றும் கூறினார். எனக்கு ஒரே குழப்பமாகவுள்ளது. இதைப் பற்றித் தமிழறிஞர்கள் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள விரும்பிக்றேன். நன்றி
ப.பாண்டியராஜா.

தேமொழி

unread,
Jun 28, 2022, 2:08:32 AM6/28/22
to மின்தமிழ்

எனக்கு நம்பிக்கை இல்லை ஐயா.
 
"ஐந்திறம்"
ஆசிரியர்:மயன்
பதிப்பாளர்:சென்னை : தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் , 1986
துறை / பொருள்: இலக்கணம்
ஆவண இருப்பிடம்: தமிழ் இணையக் கல்விக்கழகம்
https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp1jZYy#book1/

1ainthiram.jpg
ainthiram.jpg


இது பிற்காலம் - சரஸ்வதி மகால் ஓலையில் இருந்தது.  அதைப்  படித்து ஒருவர் மனனம் செய்து வைத்திருந்தார். அவரை எழுத வைத்து வெளியான நூல் என்பது கட்டுக்கதைபோல இருக்கிறது.

1. ஐந்திரம் என்ற நூல் இருந்திருந்தால் இலக்கியங்களில் எவரேனும் குறிப்பிட்டிருப்பர்
2. பிற இலக்கியங்களில் ஐந்திரம் வரிகள் மேற்கோள்களாகக்  கொடுக்கப்பட்டு இருந்திருக்கும்.

இந்த இரண்டும் முறைகளும் வரலாறு  நெடுகிலும் தமிழறிஞர்  கண்களில் தட்டுப்படாமல் இருந்திருக்காது   ...
இலக்கியத் தமிழறிந்தவர்,   தமிழ் ஆய்வாளர், பேராசிரியர்  ஆன நீங்கள்  நீங்கள் அறிந்திருந்தால்  சொல்லுங்கள்

அந்த ஓலைச் சுவடிகளாவது இருந்தால் காட்டட்டும், கார்பன் டேட்டிங் செய்து படி எடுக்கப்பட்டு எழுதப்பட்டிருந்த ஓலை எக்காலம் என தொடக்கப்புள்ளி வைக்கலாம்

அர்த்த சாஸ்திரம்  என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள், அதுவும் தஞ்சை  மகாலிலிருந்தது கிடைத்தது என்று ஒருவர் சொல்லி வெளிப்பட்டது என்றும் படித்த நினைவு.  

நம்பிக்கை வரவில்லை

 


Mohanarangan V Srirangam

unread,
Jun 28, 2022, 2:17:51 AM6/28/22
to min tamil
கூத்தநூல் பற்றியும் இப்படி உண்டு 

*** 

தேமொழி

unread,
Jul 12, 2022, 1:25:17 AM7/12/22
to மின்தமிழ்

///விழாவுக்கு தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் தலைமை வகித்துப் பேசுகையில், ‘ஆண்டுதோறும் சுவடிகளும்-கல்வெட்டுக்களும் புதிது புதிதாக கண்டறியப்படுகின்றன. எந்த நிலையிலும் உ.வே.சா. வுக்கு பிறகு புதிய சுவடிகளை நூல்களாக வெளியிடுகிற வாய்ப்பு ஏற்படவேயில்லை. ஐந்திரம் போன்ற கற்பனை நூல்களைத்தான் நாம் நம்ப வேண்டியுள்ளது. எனவே இதுபற்றிய அறிவியல் கண்ணோட்டம் உருவாகவேண்டும்’ என்றாா். ///

சென்னை, தரமணியில் உள்ள உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழிலக்கியம் மற்றும் சுவடியியல் புலம் சாா்பில்தமிழக அரசின் நிதியுதவியுடன் கல்வெட்டியல் குறித்த கோடை கால பயிற்சி முகாம் கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து இருபது நாள்கள் நிறுவனத்தில் பயிலும் முதுநிலை, முதுநிலை ஆய்வு, ஆய்வு மாணவ, மாணவிகளுக்கு தொல்லியல் துறை அறிஞா்கள் வாயிலாக நாள்தோறும் பயிலரங்குகள் நடத்தப்பட்டன. மேலும், ஒரு நாள் கல்விக் கள ஆய்வுப் பயணமாக கடந்த ஜூன் 29-ஆம் தேதி மாமல்லபுரத்துக்கு மாணவா்களை அழைத்துச் சென்று பல்லவா் காலத்துக் குடைவரைக் கோயில்களில் உள்ள சிற்பங்களின் நுட்பங்கள் விளக்கப்பட்டன. இந்தநிலையில் பயிற்சியின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
[...]
விரிவான செய்திக்கு
https://www.dinamani.com/tamilnadu/2022/jul/10/சங்க-இலக்கியங்களில்-திருமுருகாற்றுப்படைஅதிக-பதிப்புகளைக்-கண்டுள்ளது-3877425.html
Reply all
Reply to author
Forward
0 new messages