ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 21 July 2026 அகரமுதல
https://www.youtube.com/shorts/BPyneuPxLKg?feature=share
தமிழே விழி! தமிழா விழி!
அன்பு கெழுமிய அனைவருக்கும் வணக்கம்.
திருமண அழைப்பிதழ்களில் சிரேசுட்ட குமாரன், கனிசுட்ட குமாரத்தி என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். தமிழில் மூத்த மகன், மூத்த மகள், இளைய மகன், இளைய மகள் என்று குறிக்கக் கூடாதா?
மேலும் திருவளர்ச் செல்வன், திருவளர்ச் செல்வி எனக் குறிக்கின்றனர். திருவளர்ச்செல்வன் என்று குறித்தால் கடைசிக் குழந்தை என்று பொருள் என்கின்றனர். அவ்வாறெல்லாம் பொருள் கிடையாது.
திரு என்றால் செல்வம், பெருமை எனப் பல பொருள்கள். திரு வளர் என்றால்
திரு வளர்ந்த, திரு வளர்கின்ற, திரு வளரும், என்று பொருள்.
எனவே, இடையில் ‘ ச் ‘ குறிப்பிடாமல் திருவளர் செல்வன், திருவளர் செல்வி என்றே குறிப்போம். வணக்கம்.
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம் ! இனத்தைக் காப்போம்!
உழுலன்பின் இலக்குவனார் திருவள்ளுவன்