1. புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.16-20 ++ 2. ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1671-1675 : இலக்குவனார் திருவள்ளுவன்

7 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
May 19, 2022, 6:43:13 PM5/19/22
to thiru thoazhamai, தமிழ் மீட்சிப் பாசறை, 119maa27s...@gmail.com, Raghavendra A, Headmaster - MM Higher secondary school, Thirunagar, 40. Anuragam Kalaignaan, ap.a...@gmail.com, ayyanathan k, Balakrishnan Thirugnanam, Bharathy S, sivakumar pandari, Sivakumar P, Chandra Sekar, தமிழ் யாப்பியல் ஆய்வாளர் பேரவை, World Tamil Forum, kavia...@yahoo.co.in, Chandar Subramanian, kalvettu, ymha.vaddukoddai, Kanagu Chandran, manjula.k, mkindu, Mumbai Kumanarasa Lemuriya Publications, lankasri, ne...@tamilwin.com, online...@thehindutamil.co.in, Newsofthe Transtamils, poongundran, kunathogai kunathogai, SENTHIL KUMARAN, Dhinasari, drtami...@gmail.com, Gnanam Magazine - ஞானம், hills...@gmail.com, IE Tamil, Murugesan M., in...@tyouk.org, jeyamohan....@gmail.com, kambane kazhagam, Kanaga Dharshini, Karthikasa...@gmail.com, 156. karu Murugesan, KaviMari Kaviarasan, kavitha directions, Kaviyodai, kovai...@gmail.com, Lakshmi Kumaresan, manaa lakshmanan, me...@tyouk.org, mgayat...@gmail.com, Mu.ilangovan ??.?????????, mullaicharamtamil, nagg...@yahoo.com, Vairamuthu, pandiya raja, puduvaibloggers kuzhu, tamil_ulagam kuzhu, kuzhu, tamilmanram kuzhu, தமிழ் சிறகுகள், thamizh...@googlegroups.com, theyva-thamizh, வல்லமை, pulavar...@gmail.com, puviya...@hindutamil.co.in, r.divyar...@gmail.com, Sarala M.S, Seetha Ramachandran, Arivukkarasu Su, tamizham...@gmail.com, Thakatuur Sampath, thamizhmu...@gmail.com, thi...@journalist.com, Viduthalaidaily Viduthalai, Elangkumaran Nallathambi, Vijaya Raghavan, riaz66 ahmed, tamilnesan, பொழிலன், p.kalai...@gmail.com, poova...@gmail.com, pon malar, yuvar...@gmail.com, ldml...@gmail.com, vydh...@yahoo.com, esukur...@gmail.com, drkadavur...@gmail.com, lalithas...@gmail.com, vathi...@gmail.com, josephse...@gmail.com, gganesh....@gmail.com, advocate....@gmail.com, gitasr...@gmail.com, ilakkanat...@gmail.com, mint...@googlegroups.com, thilagav...@gmail.com, shankar...@gmail.com, arunch...@gmail.com, pondhan...@yahoo.com

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1671-1675 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1671-1675 : இலக்குவனார் திருவள்ளுவன்



(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1661 -1670இன் தொடர்ச்சி)
1671. வளைசப் பூவியல்Anthoecology
1672. வளைசப் பொருளியல்Ecological Economics
1673. வளைசப் பொறியியல்  Ecological Engineering
1674. வளைசலியல்
Ecology – சூழ்நிலையியல், சூழ்வியல், சூழலியல், சூழியல், சூழ்நிலை ஆய்வு இயல், சுற்றுப்புறச் சூழலியல், சூழ்நிலை ஆய்வு, வாழிடவியல், சுற்றுப்புறத் தூய்மை  இயல், உயிர்ச்சூழலியல், உயிரின வாழ்க்கைச் சூழல் ஆய்வியல், உயிரியச் சூழ்நிலையியல் எனப் படுகின்றன. இவற்றுள் கடைசி மூன்றும் பொருள் விளக்கப்படி சரிதான். என்றாலும்   Bioecology / Bionomics என உள்ளமையால் அவற்றைச் சேர்ந்தன. எனவே, இங்கே பொருந்தாது.   Eco என்னும் கிரேக்கச் சொல்லிற்கு மனை அல்லது சுற்றுப்புறம் எனப் பொருள். Environmentology என்பதை நாம் சூழலியல்/சூழியல் என்பதால் இதனையும் அவ்வாறே கூறுவது பொருட் குழப்பமாகும். சுற்றுப்புறவியல் – Ecology  எனலாம் என முதலில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், நாம் சுற்றுப்புறச் சூழல், சுற்றுப்புறம், சூழல் என என்ன சொன்னாலும் ஒரே பொருளையே உள்ளத்தில் நிறுத்துவோம். எனவே பயன் பாட்டுக் குழப்பம் வரலாம். சுற்றுப்புற இயல் என்பதைச் சுற்றியல் எனச் சுருக்கினால் சுழல்வதையும் புற இயல் என்றால் புற வெளியையும் குறிக்கும் என்பதால் சுருக்கியும் பயன்படுத்துவது ஏற்றதாக இல்லை. எனவே, வேறு சொல் பயன்படுத்துவது நல்லது என எண்ணினேன். எனவே, சுற்றுப்புறத்தைக் குறிப்பிடும் வளவு, வளைசல் இரண்டில் ஒன்றைப் பயன்படுத்தலாம். வளவு பொதுவாக ஒரு சுற்றடைப்பிற்குள் உள்ள வீடுகளைக் குறிக்கும்.  எனவே, சுற்றுப்புறப் பகுதியைக் குறிப்பிடும் வளைசல் என்பதைப் பயன்படுத்தி வளைசலியல் –  Ecology எனலாம். Oecology என்பது Ecology என்பதன் மாற்று எழுத்தொலிப்பு வடிவம்.  
Ecology / Oecology
1675. வளரிளம்பருவ உளவியல்        Adolescent Psychology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்வகைமைச்சொற்கள் 3000

+++

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.16-20

 அகரமுதல



(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.11-15 தொடர்ச்சி)

16. முல்லை யேமுத லாகிய

நல்லி யல்புறு நானிலத்

தெல்லை மேவிய யாவரும்

இல்லை வேறிவ ரின்றியே.

17. முல்லை யாயர் குறிஞ்சியின்

எல்லை காணி னிறவுளர்

செல்லி னெய்தல் தமிலரே

ஒல்லி வாழி அழவரே.

வேறு

18. தூ யகைத் தொழிலி னோடேர்த் தொழிலொடு வணிகந் துன் னி

ஆயமுத் தொழிலி னோடாங் கமைகுடித் தொழில்க உ ளெல்லாம்

ஏயவ ருயர்வு தாழ்வ தின்றியே புரிந்து நாளும்

தாயவுத் தொழிலுக் கேற்பத் தனித்தனிப் பெயர்பெற் றாரே,

19. பானுரை போலப் பஞ்சிற் பட்டி.னன் மயிரிற் பொன்னின்

நானிரைத் துள்ளங் கொள்ள நுணிகிய சாய மேற்றி

மேனிலத் தவர்மக் கொள்ள விழைதரு வனப்பிற் றாகப்

பூநிரைத் தணியா ராடை புதுமையி னெய்வார் நெய்வார்.

20. ஐவகைப் பொன்னிற் றாரி னவிர்மணி யொடுகல் மண்ணில்

கைவகைக் கலனும் பன்மைக் கருவியு மேனந் தானும்

செய்வகைப் படியே தட்டார் திறன் மிகு தச்சர் கொல்லர்

மெய்வகைக் குயவர் கண்ணார் வேதர்கற் றச்ச ரானார்.

குறிப்பு:

17. இறவுளர்- குறிஞ்சி நிலமக்கள். ஒல்லி-பொருத்தி, 18. குடித்தொழில் – வெளுத்தல், மழித்தல் முதலியவை. 19. பால் நுரை, நூல் விரைத்து – நூற்களை வரிசையாகப் பாய்ச்சி, பூ-பூ வேலைப்பாடு. 20. தாரு-மரம். கற்றச்சு-சிற்பம். 21. ஓவம். சித்திரம்

(தொடரும்)

இராவண காவியம்

புலவர் குழந்தை

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages