வாழ்த்துக்கள் பாலு!
இவ்வகைச் செயற்பாட்டிற்கும் மின்தமிழ் பாலமாக இருப்பதை உரியவர்கள் கண்டு
கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
தமிழர் தன்னம்பிக்கை பெற்று, அன்புடனும் நட்புடனும் உறவாடிட வாழ்த்துகிறேன்.
நா.கண்ணன்
அடிக்கடி நண்பர்களுடன் வணிக நோக்கு இல்லாமல் ஆய்விற்காக சென்று வருகின்றேன் .
இது போன்று தமிழக கடலில் கலக்கும் அணைத்து ஆறுகளிலும் இன்றைய செய்மதி
மற்றும் மரபு சார் தொழில் நுட்பங்களை வைத்து ஆய்வுகள் செய்யும் தேவை
நமக்கு இருக்கிறது
தமிழக ஆறுகளை பற்றி ஆய்வு செய்யும் சிந்தனைகள் உள்ளவர்கள் அணுகவும்
7 கோடி மக்களுக்கும் மேல் உள்ள தமிழகத்தில் , வீட்டில் பொது இடங்களில்
தமிழ் பேசுபவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள் , பல நிலங்கள் வணிக
நோக்குடன் பிற மாநில மொழி மக்களுக்கு தொடர்ந்து விற்கப்பட்டு வருகின்றது
ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகள் , முதலிடு செய்பவர்களுக்கு
வருமானத்தையும் அங்கு வாழும் மக்களுக்கு கெடுதல்களையும் செய்து
வருகின்றது
கனிம வளங்கள் என்ற பெயரில் இயற்க்கை வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றது
கடலையும் விட்டு வைக்க வில்லை
ஏரிகளை காட்ட வேண்டும் என்று அழைத்து சென்றால் ,கல்லூரி கட்ட சிந்தனை
செய்கின்றார்கள்
தொல்லியல் இடங்களுக்கு அழைத்து சென்றால் கூட அங்கு உள்ள இடத்தின மதிப்பை
பற்றிய எண்ணமே சிலர்க்கு இருக்கின்றது
மயங்க வைக்கும் மலைகளை காட்டினால் கல்லின் மதிப்பை எடை போடுகிறார்கள்
இந்த நிலையில்கூட நம் மொழியின் பண்பாடுகளை காக்க நாம் யார் என்று ஆய்வு
செய்யும் கட்டாயம் நமக்கு உள்ளது .
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/
தமிழக தொல்லியல்துறையை போல் இங்கும் அறிஞர்களின் பற்றாக் குறை
ஆனால் புதிய கண்காணிப்பாளராக ஒரிசா புவனேஸ்வரில் பணிப்புரிந்த தமிழகத்தை
சேர்ந்த திருமதி பெருங்களத்தூர் மகேஸ்வரி அவர்கள் நியமிக்கப்பட்டு
உள்ளார் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன்
குமரிக்கடல் ,பூம்புகார் மற்றும் தமிழக கடல் சார் தொல்லியல் ஆய்வுகளுக்கு
அவரின் நியமனம் மிகவும் உதவும்
சென்னை இந்திய தொல்லியல்துறையின் உதவி கண்காணிப்பாளராக உள்ள எங்கள் நலம்
விரும்பி கொங்கு நாட்டின் வன்னியர் வலசு என்ற ஊரை சார்ந்த திருமதி
முனைவர் மூர்த்திச்வரி அவர்களிடம் நிறைய பேசினோம்
திருமதி முனைவர் மகேஸ்வரி மற்றும் திருமதி முனைவர் மூர்த்திச்வரி
இருவரும் தமிழகத்தின் தொல்லியல் ஆய்வுகளை புதிய தலத்தில் கொண்டு
செல்வார்கள் என நம்புகிறேன் , நானும் உலக தொல்லியல் தொழில் நுட்பங்களை
தமிழகத்தில் கொண்டு ஆய்வுகள் செய்ய நிச்சயம் முயலுவேன்
அமராவதி ஆற்றங்கரை நாகரிகத்தை செய்மதிகளின் மூலம் மற்றும் ஆற்றங்கரை
களத்தில் ஆய்வுகள் செய்வது பற்றி பேசினோம்
வரும் நவம்பர் 30 ஆம் நாள் கோவை PSG COLLEGE OF ARTS <DIPLOMO IN
EPIGRAPHY AND ARCHAEOLOGY இல் படிக்கும் கோவை தொல்லியல் பயிற்சி
மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் அறிவுரை கொடுப்பது பற்றியும்
சென்னை ஜமீன் பல்லாவரத்தில் , திரிசூலம் ரயில் நிலையம் அருகில்
ஆசியாவின் முதல் கல் கை கோடரி எடுத்த இடத்தில அமைய விருக்கும் THE MADRAS
STONE AXE FACTORY நினைவு சின்னம் தொடர்பாகவும்
( இந்த நிகழ்வுகள் நடந்தால் ,விமான நிலையத்திற்கு வரும் உலக மக்களுக்கு
தமிழகத்தை பற்றிய புரிதலை புதிய கோணத்தில் பார்க்க வைக்கும் ,
இங்கு தமிழக தொல்லியல் தொடர்பான அணைத்து செய்திகளும் இருக்கும் படியாக
அமைக்க போகிறோம் )
உலக நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழகம் வந்தால் வாங்கி
செல்லும்படியாக நமது தொன்மை மரபு தொடர்பான நினைவு சின்னங்கள் செய்வதற்கான
ஏற்பாடுகள் குறித்தும் பேசினேன்
இன்றைய மாலை பொழுது மிகவும் பயன் உள்ளதை அமைந்தது
வரும்வழியில் நானும் தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் நண்பர்
செல்வாவிடம் என் நீண்ட நாள் ஆசையான
உலக நாடுகளில் பணிபுரிந்து தமிழகம் திரும்பும் தென் மாவட்ட நடுத்தர
குடும்ப நண்பர்களுக்கு ,சென்னையில் தங்கி செல்லும்படியனா ஒரு தங்குமிடம்
அமைக்கவும் , அந்த இடம் தமிழர்க்ள வாழும் உலக நாடுகளை பற்றிய தகவல்
மையமாகவும் அமைய வேண்டும் என்ற விருப்பத்தை பற்றியும் தெரிவித்தேன் ,
என் ஆய்வு சுமைகளையே என்னால் தாங்க முடிய வில்லை
திரிசூலத்தில் அதற்கான ஏற்பாடுகளை தகுந்த நண்பர்கள் மூலம் செய்ய வேண்டும்
சென்னை வந்தால் தற்காலிகமாக தங்குமிடம் தமிழகம் திரும்பும் தென்
மாநிலத்தை சேர்ந்த உலக தமிழர்களுக்கு வெகு நாள் சிக்கலாய் இருந்தது
தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்
உயிர் பயம் இல்லாதவர்கள் ,குடும்ப சுமைகள் இல்லாதவர்கள் தொடர்பில் வரலாம்
,எதிர்பாராத சம்பவங்கள் நிறைந்ததாக காட்டு பயணங்கள் இருக்கும்
தமிழகத்தின் உண்மையான தொன்மை குறித்து இது போன்ற ஆய்வுகள் உதவும்
அதே போல் சுற்று சூழல் சுற்றுலாவிற்கு திட்டங்கள் அமைக்க இது போன்ற
ஆய்வுகள் உதவும்
அன்புடை பாலு ஐயா
ஃபேஸ்புக்கும் கூகிள் மடலாடலும் இரண்டிவிதக் கொள்கைகளின் அடிப்படையில் இயங்குவது
ஃபேஸ்புக்கில் எழுதுவது நான் என் எழுத்துக்கு நான் பொறுப்பு என்று
முகவரியுடன் கருத்தை வெளிப்படூத்தும் தளம். அதை உங்கள் நட்பு சுற்றம்
உறவு என்று நீங்கள் விரும்பும் அல்லது அவர்கள் உங்களை விரும்பும் உறவு
அடிப்படையில் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. நட்பாக நீடிக்க விரும்பவில்லை
என்றால் விலகிக் கொள்ளவும் சிலருடன் பகிர்ந்துகொள்ள விரும்பாதவற்றை
விலக்கிக் கொள்ளவும் வழி உள்ளது
கூகிள் மின் அஞ்சல் தன்னைப் பற்றி அடையாளம் காட்டிக் கொள்ளாமல் தன்
பெயரைப் போடாமல் தன் கருத்துக்கு பொறுப்பேற்காமல் மற்றவர்களின்
கருத்துடன் மாறுபாட்டிருந்தால் அதை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைக்கும்
இடம் கூகிள் மின் அஞ்சல்
விவாதாத்தைக் கட்டுக்கு வைக்கவும் தளத்தின் அடிப்படைக் கொள்கைகளை நிலை
நிறுத்தவும் மட்டுறுத்துநர்கள் விழிப்புடன் இருந்து ஆற்றுப்படுத்துவது
கூகிள் மின் அஞ்சல் மடலாடல் குழுவில் அவசியமாகிறது.
விருப்பமில்லாதவர்கள் வெளியேறவும் பொருத்தமில்லாதவர்களை வெளியேற்றவும்
கூகீள் மடலாடலில் வழியுண்டு
ஃபேஸ் புக்கில் உள்ள கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் கூகிள்
மடலாடலில் இல்லை. ஃபேஸ்புக்கில் கட்டுப்பாடு உங்கள் கையில். கூகிள்
மடலாடலில் கட்டுப்பாடு மட்டுறுத்துநரிடம்
ஃபேஸ் புக்கில் எழுதியதை இங்கே இணைப்பாகக் கொடுத்து படிக்க
விருப்பமுள்ளவர்கள் படிக்க வழி செய்தால் பேஸ்புக்கில் எழுதியதை இங்கே
பகிர்ந்துகொள்ள முடியும் என்ற கருத்தைத்தான் உங்களுக்குச் சொன்னேண்
மற்றபடி மின் தமிழில் பின்னூட்டம் என்பது எல்லா இடுகைக்கும் கிடைப்பதில்லை.
ஒருவேளை இங்கே நீங்கள் உங்கள் ரசிகர்களையோ அல்லது எதிர்ப்பாளர்களையோ
அதிகம் திரட்டவில்லைபோல் தோன்றுகிறது
வாய்ப்பாடு கணித சூத்திரம்போன்று எல்லாரும் எற்றுக்கொள்ளும்
கருத்துக்களுக்கு மின் தமிழ் பின்னூட்டமெல்லாம் கொடுக்காது
தேவைப்பட்டால் முடிவான முடிவுகளுக்கெல்லாம் முடிவில்லாமல் பின்னூட்டம்
தொடரவும் இங்கே வாய்ப்புண்டு
சுருக்கமாகச் சொன்னால் வை ராசா வை போல் பின்னூட்டத்துக்கு அதிர்ஷ்டக்
காத்து அடிக்கவேணும்
நீங்கள் லெஸ் வெகாசுக்குப் போய்ப் பெறும் மகிழ்ச்சி இங்கே செலவில்லாமல் கிடைக்கும்
நாகராசன்
2012/11/22 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:
> ஃபேஸ் புக்கில் உள்ள கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் கூகிள்
> மடலாடலில் இல்லை. ஃபேஸ்புக்கில் கட்டுப்பாடு உங்கள் கையில். கூகிள்
> மடலாடலில் கட்டுப்பாடு மட்டுறுத்துநரிடம்
>
உண்மையாக கூகுள் மட்டுறுத்தர்களுக்கு அதிக பலம் தருவதில்லை. சில
நேரங்களில் சில கடிதங்களைத் திருத்தும் வசதியைத் தரலாம். நாளிதழில் வரும்
கடிதங்கள் பெரும்பாலும் திருத்தப்பட்டே வெளிவருகின்றன. அந்த வசதி
கூகுளில் இல்லை. கூகுள் நம்பிக்கையின் அடிப்படையில் அமைகிறது. ஒருவரை
நம்பி நாம் மாட்டுறுத்தலிலிருந்து எடுக்கிறோம். எடுத்த இரண்டாவது நாளே
அவர் மீண்டும் வம்பு செய்கிறார் எனில், எழுதிய மடலை ஒன்றும் செய்ய
முடிவதில்லை. குறிப்பாக, வலைத்தளத்தில் ஒரு இழை முற்றுப்பெற்றுவிட்டது
என்று சொன்ன பிறகும் தனிமடல் சுற்றில் பதிலிடமுடிகிறது. இப்படி
இருக்கக்கூடாது. குழும வலைப்பக்கத்தில் தேவையற்ற பதிவுகளை அகற்ற
முடிகிறது, ஆயின் ஆயிரம் பேருக்குப் போய்விட்ட மடலை என்ன செய்வது? இது
போன்ற முரண்பாடுகள்.
மடலாடல் என்பதை துஷ்பிரயோகம் செய்வேன் என்று கங்கணம் கட்டிச்
செயல்படுவோரை ஒன்றும் செய்ய முடியாது. ஒரு ஊரில் கொலை, கொள்ளை
இருக்கக்கூடாது என்பதற்கு காவல் துறை இருக்கிறது. காவல் இருக்கிறது
என்பதைவிட பொதுவாக மனசாட்சிக்குப் பயந்துதான் ஊரில் அமைதி வாழ்கிறது. அது
போல்தான் மடலாடல் குழுமங்களும். அவரவர் மனசாட்சிக்குப் பயந்து
நல்லவர்களாக இருக்க வேண்டும். அடாவடித்தனம் செய்தால் மட்டுறுத்தர்களால்
அதிகமாக ஒன்றும் செய்துவிடமுடியாது. மட்டுறுத்தர் = காவல்துறை என்பதல்ல
இங்கு.
நாகரீகமடைந்த பொறுப்புள்ள மனிதர்கள் கருத்துப் பறிமாறிக்கொள்ள உருவானது
மடலாடல். முற்றுப்புள்ளி.
நா.கண்ணன்
அன்பின் கண்ணன்,
நீங்கள் முற்றுப்புள்ளி வைத்தது எனக்கு சம்மதமில்லை. மட்டுறுத்தனர் குழு என்று ஒன்று இயங்கும்போது, கீழ்க்கண்ட வாசகங்கள் (சிவப்பு மசி) மின் தமிழில் தேங்கி நிற்பது கண்டனத்துக்கும்/மட்டுறுத்தலுக்கும் உரியவை என்பது என் கருத்து.
நான் சில வருஷங்களாக எழுதிவருகிறேன். திரிகடுகம் என்ற இழையில் எனக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன். என் எல்லையை வகுத்துள்ளேன். நான் அந்த இழையின் இலக்கையும் கூறியிருக்கிறேன். ஒரு மாணவனின் உவகையால் ‘வெள்ளிடை மலை’ என்ற சொல்லை உபயோகித்தேன். அதற்கு, சில பின்னூட்டங்களுக்குப் பிறகு, திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள் ‘வெள்ளிடை மகர உகர லை இல்ல. அதுவரைக்கும் பொழச்சது. :)))’ என்று நவம்பர் 2, 2012 அன்று பதிவு செய்தார். ‘முலை’ என்ற சொல்லை இப்படி யாதொரு பிரமேயமில்லாமல் முன்வைப்பதில் அவருக்கு என்ன ஆனந்தம் என்று எனக்கு புரியவில்லை. இலக்கியத்தில் பெண்களின் அங்க அவயவங்களை வருணிப்பது உண்டு. (‘...நப்பின்னை நங்காய் மலர் கொங்கை மீது...’) ஆனால், சம்பத்தாசம்பந்தமில்லாமல் அவர் இப்படி சொற்கூத்து நிகழ்த்தியது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது. உடனுக்குடன், ‘குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும். இதற்கு யாரும் விடை சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். இழையின் மையக் கருத்து, மனத்தில் பதியமுடியாத நேர நெருக்கடியில் உள்ளேன்.’ என்று சொல்லிவிட்டார். ஆனால், நீங்கள் சொன்ன மாதிரி, ‘ஆயின் ஆயிரம் பேருக்குப் போய்விட்ட மடலை என்ன செய்வது?’ இழையிம் மையக்கருத்தில் என்ன புரியவில்லை, அவருக்கு? அதை சொல்ல என்ன தயக்கம் ? என்ன ‘நேர நெருக்கடியோ?’ என் போறாத காலம். இதற்கு பிறகு நான் மின் தமிழில் எழுதுவதை கணிசமாகக் குறைத்து விட்டேன். Better to fade away, than to stop. இத்தனைக்கும் அவ்வப்பொழுது என் இழைகளில் புகுந்து, நான் இதை குப்பையில் போட்டுவிட்டேன். நான் படிப்பதில்லை என்று பெருமிதம் கொள்வார். அது அவர் உரிமை.
இது போகட்டும்.
‘நெருப்பு என்றால் என்ன? அக்னி என்றால் என்ன? உண்மை தெரிஞ்சாகனும் சாமி’ என்ற இழையில், திரு ஹரிகி ‘மின்தமிழ்ல வந்து தமிழ் கத்தக்கச் சொல்லுங்க அவன... சும்பன்..’ என்ற அசிங்கமான கருத்தை பதிவு செய்தார். அவர் கேட்டுக்கொள்ளாவிட்டால் கூட நான் விடை அளிக்கவில்லை. அவர் பாடு. மின் தமிழ் பாடு. இதற்குப் பிறகு, தமிழார்வ கட்டுரைகளை (அவை பல தலைப்புகளில் தொடங்கப்பட்டவை. ஆம். நான் தமிழ் எவாஞ்சலிஸ்ட் தான்.) பரணில் தான் ஏற்றி வைக்கவேண்டும். அல்லது கொளுத்த வேண்டும். இது போகட்டும்.
எனக்கு மானம், வெட்கம் கிடையாது. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று சொல்லிலும், செயலிலும் ஈடுபட்டபின், I don’t care. ஆனால், என் அன்னையின் ஆணையை சிரமேற்றி, பொருத்தமான முகாந்திரம் கொடுத்து, நான் ‘அம்மா சொல்படி ராஜூ’ என்ற இழையை தொடங்கினவுடன் தன்னை கோணங்கியாக பாவித்து கொண்டு, என் அம்மா வேறுயாரோ என்ற பொருள்பட அந்த பரிசுத்தமான இழையை மாசுபடுத்தினார். சிலமுறை என் மேல் மறைமுக தாக்குதல் அவர் நடத்தியது உண்டு. ஆனால், என் அன்னையை அவர் அவமதித்தது எனக்குப் பொறுக்கவில்லை. அந்த கால கட்டத்தில் மின் தமிழில் எனக்கு பாலபருவம். அவர் முதிய புலவர். அதனால், ‘வருக’ என்று தான் பண்புடன் பதில் அளித்து, தொடரை நிறுத்தி விட உத்தேசித்தேன். சுபாஷிணி தான் ஆபத்பாந்தவனாக வந்து என்னை காப்பாற்றினார்.
நீங்கள் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், இதையெல்லாம் எழுதியிருக்கமாட்டேன்.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
22 11 2012
பணிவான வணக்கங்கள்.
மனதை வருத்தும் விஷயங்கள்.
//நாகரீகமடைந்த பொறுப்புள்ள மனிதர்கள் கருத்துப் பறிமாறிக்கொள்ள உருவானது
மடலாடல். முற்றுப்புள்ளி.//
We presume the dialogue in MinTamil happens between well educated,
Internet etiquette savvy who are socially responsible. Period.
எனும் பொருளில்தான். அதுதான் முன்னமே சொன்னேன், கூகுள் நம்பிக்கையின்
அடிப்படையிலேயே குழுமம் நடத்த தளத்தைத் தயாரித்துள்ளது. ஒருவரை நம்பி
நாம் மட்டுறுத்தல் இன்றி உலவ விடுகிறோமெனில் அவருக்கு மேற்சொன்ன குணங்கள்
உள்ளன என்று பொருள். பெரியோர் சபையில் மட்டுறுத்தர் எனும் கோதாவில்
அதட்டி, மிரட்ட என்றுமே நான் கூச்சப்படுகிறேன். என்னை யாரும் அப்படிச்
செய்வது எனக்குப் பிடிக்காது. எல்லாம் எல்லோருக்கும் வெளிச்சமாகப்
படுகிறது என்பது இன்னும் என் கூச்சதைக் கூட்டுகிறது. நான் என்ன சொல்ல
மேல்?
மிக்க ஆதரவுடன் (sympathetically எனும் பொருளில்)
நா.கண்ணன்
2012/11/22 Innamburan Innamburan <innam...@gmail.com>:
> பாருங்களேன், என் நப்பாசையை. கணிசமாக குறைத்து விட்டேன் என்று சொன்ன கையோடு,
> 'தமிழ் இலக்கிய உலகம்' என்ற புது இழையை தொடங்கி இருக்கிறேன். எல்லாம் பூர்வஜன்ம
> வாசனை போல.
நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.
நம் வாழ்வே ஆதரவானவர்களுக்கு அன்பு செய்யத்தான் என்று நான் நம்புகிறேன்.
நன்றி.
நா.கண்ணன்
இந்த மடல்களுக்கு பின்னூட்டம் வரவில்லை என்பதால் இன்றுடன் இடுவதை நிறுத்திக்கொள்கிறேன்நான் முகநூலில் எழுதி வருவதை இங்கும் எழுத வேண்டும் என்று பேராசிரியர் நாகராஜன் அவர்களுடன் பேசும்போது அவர் சொன்னதால் இங்கும் அதை போஸ்ட் செய்தேன்அனைவருக்கும் நன்றி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நான் பாலுவின் இழைகளை முழுக்க படித்து வருகிறேன். பின்னூட்டம் போடுவது இல்லை. அவரது முயற்சிகளை பதிவு செய்யும் இழை என்பதால் இது ஒரு வரலாற்று பதிவு என்றே கூறலாம். பேஸ்புக்கில் எழுதுவது கூகிள் சர்ச்சில் வராது. பொது இனையத்தில் ஏறாது. அதனால் இதை பாலு மின் தமிழில் பதிவு செய்வது தமிழ் அகழ்வாராய்ச்சி வரலாற்றை படிப்பவர்களுக்கு உதவியாக அமையும்.
நானும் நிறைய நேரம் செலவழித்து அறிவியல், வரலாற்று கட்டுரைகளை எழுதுகிறேன். அதிகம் பின்னூட்டம் வருவது இல்லை. அதை பற்றி நான் கவலைபடுவதும் இல்லை.பின்னூட்டம் வாங்குவது தனிக்கலை. பதிவின் ரீச்சை அளக்க அது உதவாது.
அதனால் பாலு இதை தொடர்ந்து பதிப்பிக்க வேண்டும் என கேட்டுகொள்கிரேன்
நமக்கு என்ன தெரியும் என்பதை விட
நமக்கு தெரிந்தவைகளை நாம் எப்படி சபையில் அளிக்க போகிறோம் என்பதில் தான் நமது கவனம் இருக்க வேண்டும்
நண்பர் நாக இளங்கோவனின் அழைப்பின் பேரில்
நேற்று புதுவைக்கு பெரியவர் ராம்கி மற்றும் நண்பர் நாக இளங்கோவனுடன் ,
ராம்கி அவர்களின் காரில் சென்று புதுவையில் நடந்த தொல்லியல் துறையின்
ஐம்பதாவது வருட நிறைவு நிகழ்ச்சியின் விழாவை திரு ரவிக்குமாரின் மணற்கேணி
அமைப்பு நடத்திய விழாவில் கலந்துக்கொண்டோம்
நிறைய நண்பர்கள் வந்து இருந்தார்கள்
தமிழர்களத்தின் நண்பர்கள் ஆனந்தன் மற்றும் பிரகாஷ் அவர்களின் அன்பு கலந்த
விருந்தோம்பலும் மிகவும் நெகிழ வைத்தது
கல்வெட்டியல் பயிற்சி படிக்கும் கல்லூரி தமிழ் பேராசிரியை உடல்
நலக்குறைவுடன் சென்னையில் இருந்து கிளம்பி வந்து நிகழ்ச்சியை பார்த்து
விட்டு சென்றது ,நம்பிக்கையை வர வைத்தது
கனடா வாழ் தமிழர் செல்வகுமார் நிகழ்ச்சியை மன நிறைவுடன் பார்த்ததும்
எனக்கு மிகவும் பிடித்த எங்கள் விழுப்புரம் நண்பர்கள் ரவிகார்த்திகேயன்
,வீரராகவன் வந்ததும்
இந்திய தொல்லியல் துறையின் ரமேஷ் போன்ற தொல்லியல் நண்பர்களின் பாசமும்
ரவிக்குமார் அவர்களின் முதல் அறிமுகமும் ,
அதனால் நிகழ்ச்சிக்கு பேச வாய்ப்பு கொடுக்கிறோம் என்று சொல்லி நேரம்
இல்லாமையால் பேச வாய்ப்பு கிடைக்காமல் போனதும்
நிகழ்ச்சியில் பெரியவர்கள் சொன்னதையே திருப்பி திருப்பி பேசி கடந்த பல
வருடங்களில் வீழ்ந்துகிடக்கும் தொல்லியல்துறைக்கு தானும் ஒரு காரணம்
என்று தெரியாமல் பிடித்த மைக்கை விடமால் இருந்ததும்
நிகழ்ச்சி தெளிவாக இலக்கு நோக்கி இல்லை என்று என் போல அலைந்தவர்கள் நினைத்தாலும்
எனக்கு மிகவும் பிடித்தது காரில் செல்லும்போது நாங்கள் பேசிய பல வரலாற்று
தரவுகள் குறித்த சொல்லாடல்கள்
அனுபவம் வாய்ந்த ராம்கி அவர்களுக்கும் , முக நூல் நண்பர் நாக இளங்கோவன்
அவர்களுக்கும் நன்றிகள் பல ,என் ஒருநாளை பயனுள்ளதாகியதர்காக
நிகழ்ச்சியை பற்றி எழுத நேரம் போதாது
இருந்தாலும் நான் கடலில் சென்று பார்த்த புதுவை கடலில் உள்ள மூழ்கிய
எரிமலை பற்றிய பேச்சு பயணத்தில் வந்தது
அதை பற்றிய பதிவுகள் நண்பர் நாக இளங்கோவனுக்காக
தேவை என்றால் நான் கடலில் செய்த ஆய்வுகளை பற்றி படிக்க விருப்பம்
இருந்தால் எழுதுகின்றேன்
http://www.volcanolive.com/unnamed36.html
http://www.volcano.si.edu/world/region.cfm?rnum=03
> http://www.youtube.com/watch?v=njEjvAkwmlU&feature=bf_prev&list=UUOh0PJBPc76oLqWnxcwqWrw<http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DnjEjvAkwmlU%26feature%3Dbf_prev%26list%3DUUOh0PJBPc76oLqWnxcwqWrw&h=FAQGzfwslAQGmBMxdSDqC85mx__N3v9XAv_EYZIijjgJPQg&s=1>
2012-2017 வரை தென்கிழக்கு கடல் என்று அழைக்கப்படும்
தூத்துக்குடியில் இருந்து குமரிமாவட்ட நீரோடி வரை உள்ள கடல் பகுதிகளை
முழுமையாக ஆய்வு செய்து அதற்க்கு குமரிக்கடல் என்று பெயர் வைக்கும்
நோக்கில் நகர்ந்து வருகிறேன்
வருடங்களில் நான்குமாதங்கள் ஆழ கடலில் உயிரை பணயம் வைத்து தொடர்ச்சியாக
செயல் பட விரும்பும் கடல் சார் துறைகள் சார்ந்த நண்பர்கள் தொடர்பில்
வரவும்
கடந்த சில வருடங்களில் பலர் உருவாகி உள்ளனர் ,உயிரை பணயம் வைத்து பணிபுரிகிறார்கள்
இன்று காலை மீன் வள ஆய்வாளர் வைதீஸ்வரன் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்த
நேரம் எனக்கு மனம் நெகிழ்ந்தது
எத்தனை மீனவர்கள் இன்று ஆய்வாளர்களாக மாறி உள்ளார்கள் என்று கணக்கிட்டோம்
, பாண்டிய நாட்டின் மூழ்கிய நிலங்களை அரசின் உதவிகள் இல்லாமல் தேட
முடியும் என்ற புரிதல் எனக்கு
இந்த முயற்சிகள் வரலாறு என்பது பேசப்படுவதற்காக மட்டும் அல்ல
மக்களின்பயன்பாட்டிற்கு கூடத்தான் என்று கடலில் உள்ள மூழ்கிய நிலங்கள்
எப்படி மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது என்பதை உணரவைக்க தான் இந்த
முயற்சிகள் ,
இதில் பல நுண்ணிய பின்புலங்கள் உள்ளன
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அறிவியல் தமிழுடனும் அன்புடனும்,
டாக்டர். மு. செம்மல்
Founder of Philocine - The Philosophical Aspect of Medicine
> நிகழ்ச்சியில் பெரியவர்கள் சொன்னதையே திருப்பி திருப்பி பேசி கடந்த பல
> வருடங்களில் வீழ்ந்துகிடக்கும் தொல்லியல்துறைக்கு தானும் ஒரு காரணம்
> என்று தெரியாமல் பிடித்த மைக்கை விடமால் இருந்ததும்
>
> நிகழ்ச்சி தெளிவாக இலக்கு நோக்கி இல்லை என்று என் போல அலைந்தவர்கள் நினைத்தாலும்
>
Balu! How right you are! What is lacking is objectivity in such
research. Tamils are essentially emotional and get involved too
personally in every argument including research. Finally what is
expressed is not the TRUTH but simply once own EGO :-) This is very
common. Do you remember how difficult it is to conduct a research
session in such meetings (மைக்கைப் பிடித்தால் வேறு யாருக்கும் கொடுக்க
மனம் வராத அளவிற்கு தங்கள் சிந்தனையே அமிர்தம் என்று இருக்ககூடியன்
தமிழன் :-)
Tamils need to respect their heritage without bias. Accept it as it is
and preserve it. Many people want to see history as they want to see
it, instead of seeing it 'as it is'. If one claims that Tamil heritage
is really ancient, we need careful arguments, plausible theories, lots
of field work, and publications in reputed journals. Instead, each
speaker considers himself as his own 'journal'. Peer review is still
unheard of in Tamil research. We do not have the decency to accept our
errors and progress further objectively. What one sees is
'megalomaniacs' who finds refuge in ones own ego :-)
நாம் உலகின் மூத்தகுடி என்று நிறுவுவதன் நோக்கம் என்ன? தன்னம்பிக்கை
வருவதற்குத்தானே? பெரியவர் என்றால் என்ன பொருள்? காலத்தின் கனிவு,
முதிர்ச்சி, விவேகம் இவை இருக்க வேண்டும் என்பதுதானே? உலகின் மூத்த குடி
என்று நிறுவுவதிலேயே கூச்சல் குழப்பம் எனில், எதற்கு நிறுவுகிறோம் என்பதே
கேள்விக்குறியாகிறதே!!
நாம் நாகரீகமானவர்கள், பண்பு மிக்கவர்கள், உலகிற்குப் பாடம்
சொல்லித்தரவல்லது எம் பண்பாடு. இதுதான் நாம் நிறுவமுயலவேண்டும். நாம்
சொல்லவரும் பண்புகள் நம்மிடம் உள்ளதா? என்ற கேள்வியுடன், அடக்கத்துடன்
ஆய்வுக்குள் நுழைதல் மதி!
நா.கண்ணன்
இன்னும் என் முழுமையான ஆய்வுகளும் நான் தேடி செல்லும் இலக்குகளும் அதற்காக உருவாக்கி கொண்டு இளைய தலைமுறைகளின் செயல்களும் என் வாழ் நாள் காலத்தில் பிறரால் புரிந்து கொள்ள முடியாது என்று தான் நினைக்கிறேன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மாறுதல் நடக்கும்
2012/11/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
> திரு ஒரிஸ்சா பாலு அவர்களுக்கு வணக்கம்
> மேடையேறி பேச வாய்ப்பளித்தால்
>
> இங்கே கூடியிருக்கும் அனைத்து பெரியோருக்கும் வணக்கம் என்று கூறிவிட்டு
>
> பேச எடுத்துக் கொண்ட கருப்பொருளைப் பற்றி ,மணித்துளிகளை வீணாக்கமல் பேச நாம்
> காற்றுக் கொள்வேண்டும்
> தொல்லியல், வரலாறு, அகழ்வாராய்ச்சி துறை சம்பந்தப்பட்ட கருத்தரங்குகள்,
> ஜர்னல்களில் உங்கள் ஆய்வை நீங்கள் பதிப்பிப்பது உங்கள் ஆய்வுகளை >வருங்கால தலைமுறையினர் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.
>
செல்வன்
Balu is a gross root social, political, environmental, cultural
activist. He does lot of evangelism. He is an amateur scientist. We
can't expect scientific publication from him. We should not force him
to do so. Science itself is like an ant hill, constructed by the work
of millions of individual scientists. Science has been
institutionalized and it has to express itself only through an
Institution. So we can't expect that from Balu. As a gross root
activist, his work is vital. He tries to bridge several factions of
Tamil inquiry.
Kannan
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டீர்களோ?
I was only defining what you are. Your work will be classified as
semi-scientific. As Selvan expects you can't publish your work in
scientific journals, especially peer reviewed International journals.
You may need a back up from an Institution. This does not discredit in
anyway your hard work. An Activist is different from a scientist.
Green peace is essentially an activist's organisation where several
scientists co-operate and work. Having said that there must be several
other International journals which might be interested in publishing
individual's work. You may try some Indian journals first.
I was only helping to clarify the common man's view of calling
somebody as a 'scientist' and the professional way of calling a person
'scientist'. Please do not take it personal. It was only a
clarification on coinage of words.
As you know I do and always appreciate your effort.
Kannan
நன்றி. நீங்கள் தங்கமான மனிதர். உங்களை வருத்தமடைய வைத்தால் நான் தான்
முதலில் வருந்துவேன். I was simply defining things.
>
> இன்னும் சில வருடங்கள் ஆய்வும் செய்ய முடியும்
>
> என் ஆய்வு நிறுவனம் பல அறிவியல் மேதைகளை உருவாக்கும்
>
> என்னையும் வெளிபடுத்தும்
தமிழகத்தின் நிலமை என்னவெனில் பட்டம் பெற்று, பல்கலைக் கழகங்களில்
இருப்போர் உங்களைப் போல் நிஜமான (ஒரிஜினல் என்று வாசிக்கவும்) ஆய்வு
செய்வதில்லை. ஆனால் நிறுவன ஆதரவற்ற தாங்கள் களப்பணி செய்து புதியவை கண்டு
சொல்கிறீர்கள். ஆயினும் அறிவியல் சஞ்சிகைகள் நிறுவனங்கள் வழியாக வரும்
ஆய்வுகளையே வெளியிடுகின்றன. அந்த அத்தாட்சி அவசியப்படுகிறது. அதைத்தான்
சொல்ல வந்தேன். அதனால் நீங்கள் விஞ்ஞானமே செய்தாலும் நிறுவனம் உங்களை
விஞ்ஞானி என்று சொல்லாது. அது உங்கள் தவறல்ல, நிறுவனப்படுத்தப்பட்டுவிட்ட
அறிவியலின் பிழை (Hope I explain the complexity of the situation).
Kannan
கண்ணன் ஜி,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Thank you Sir.
Being critical is part of my present nature. I could have picked it up
from Germans or from my wife :-) Any critical person is not liked by
many because he/she cautions you and tries to set you close to the
'truth'. Most interestingly, we want to see what we want to see but
not what IS out there (truth). Probably, Jiddu Krishnamurti could have
influenced me. I don't know. People think that I'm not pleasant
because my talk is rather 'direct'. No, in person I am quite likable
:-) Balu knows that well.
Kannan
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பாலு,
25.11.2012
2012-2017 வரை தென்கிழக்கு கடல் என்று அழைக்கப்படும்
தூத்துக்குடியில் இருந்து குமரிமாவட்ட நீரோடி வரை உள்ள கடல் பகுதிகளை
முழுமையாக ஆய்வு செய்து அதற்க்கு குமரிக்கடல் என்று பெயர் வைக்கும்
நோக்கில் நகர்ந்து வருகிறேன்
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ --
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சுருக்கமாகச் சொன்னால் வை ராசா வை போல் பின்னூட்டத்துக்கு அதிர்ஷ்டக்
காத்து அடிக்கவேணும்
நீங்கள் லெஸ் வெகாசுக்குப் போய்ப் பெறும் மகிழ்ச்சி இங்கே செலவில்லாமல் கிடைக்கும்
நாகராசன்
இன்று மிகவும் மாறுப்பட்ட நாள்
ஒருபுறம் உடலை உருக்கும் இருமல் சளி வாந்தி காய்ச்சல் வலி
மறுபுறம் தொடர் அழைப்புகள் ,
எனக்காக கோவையில் இருந்து வந்து இன்றைய நிகழ்வை தொடர இருந்த உளவியல்
மற்றும் புள்ளியல் துறையை சேர்ந்து தொல்லியல் படிக்கும் இளைஞர்கள்
என் வீட்டை நோக்கி தனது கல்லூரி அருங்காட்சியகத்தில் வைக்க என்னுடிய
தொல்லியல் சேகரிப்பை வாங்க வந்து கொண்டு இருக்கும் கோவை அரசுக்கல்லூரி
மாணவ செயலாளர் சிவபாலன்
தர்மபுரியில் இருந்து என் நண்பர் பார்த்திபன் அனுப்பிய தொல்லியல்
கையேடுகளை பேருந்தில் இருந்து வாங்க வேண்டிய நிலை
அதே சமயத்தில் தமிழகத்தில் ஏறபடும் நில அதிர்வுகளை ,கடற்கரை நீரோட்டம்
அலைகளின் வீக்கம் மற்றும் மடங்கல் தொடர்பான இணைய வேலைகள்
ஆழ கடலோடும் மீனவர்கள் தொடர்பான பணிகள்
என்று தொடர்ச்சியான் நிகழ்வுகள்
முதலில் கோவை தொல்லியல் இளைஞர்களை வழிப்படுத்தி
அவர்களின் இன்றைய பொழுது முழுவதும் அவர்களை கைபேசி மூலம் வழி
படுத்திக்கொண்டே அவர்களை
ஆசியாவின் முதல் கை கோடரி கண்டுபிடிக்கப்பட்ட ஜமீன் பல்லாவரம்
செல்லவைத்து, திரிசூலம் ரயில் நிலையத்தில் அவர்களை இறங்க வைத்து இடங்களை
பார்வை இட வைத்து , பண்டைய பாண்டியர் கோயில் உள்ள திரிசூலத்தில் அவர்களை
கல்வெட்டு சிற்பங்கள் பார்வை இடவைத்து
பின்பு அவர்களை எழும்பூரில் உள்ள தொல்லியல் துறைக்கு செல்லவைத்து , என்
தொல்லியல் நண்பர்களுடன் அவர்களுக்கு தேவையான அறிவை தொல்லியல்
அருங்காட்சியகத்திலும் பின்பு அவர்களை சென்னை பல்கலைக்கழக வரலாறு மற்றும்
தொல்லியல் துறையில் உள்ள அருங்காட்சியகத்திற்கு செல்ல வைத்து நண்பர்கள்
மூலம் அவர்களின் இன்றைய பொழுதை பயனாகக முடிந்தது
இனிமேல் கைபேசி மூலம் ஆய்வு பயண திட்டங்களை வழிபடுத்தும் முறைகளை வகை
படுத்தலாம் என்றும் நினைக்கிறேன் , அதற்கான வரை முறைகளை உருவாக்க
வேண்டும்
பின்பு கோவை அரசுக்கல்லூரி செயலர் சிவபாலனை அன்புடன் வரவேற்று அவரின்
வரலாற்று துறை தலைவர் பெருமாள் அவர்களிடம் பேசி என்னிடம் இருந்த
விலைமதிக்க முடியாத தொல்லியல் பொருட்களை அவர்களின் அருங்காட்சியகத்திற்கு
அன்பளிப்பாக அளித்தேன்
பின்பு கோவை அரசுக் கலை கல்லூரியுடன் இணைந்து செய்ய வேண்டிய பணிகள் பற்றி
பேசினேன் , என்னை கோவைக்கு அழைத்து உள்ளார்கள்
பின்பு அவரையும் பேருந்து நிலையம் சென்று வழியனுப்பி
என் நண்பர் புவி சுழற்சி பாதுகாப்பு பேரவை தலைவர் சேகுவேரா அவர்களிடம்
தர்மபுரி தொல்லியல் கையேடுகள் குறித்து சொல்ல அந்த பொறுப்புகளை அவர்
ஏற்றுக்கொண்டார்
பின்பு உடல்நலக்குறைவுடன் என் கடல் பணிகளை இணையத்தில் தொடர்ந்தபோது ,
உடனுக்குடன் நிறைய நண்பர்கள் இணையத்தில் வந்தார்கள்
தமிழக தொன்மையை பாதுகாக்க மரபுகளை சீர்படுத்த
ஒரு ERP மென்பொருள் cultural resource management மரபு வள ஆதார மேலாண்மை
திட்டம் ஒன்றை கடல் மற்றும் நிலம் தொடர்பாக தொடங்கி உலகமெங்கும் உள்ள
தமிழரை பற்றி இது வரை சேகரிக்கப்பட்டுள்ள தரவுகளை முறைப்படுத்தி ,இனி
மேல் தேட தேட வேண்டிய தரவுகளுக்கான முனைவு திட்டத்தையும்
வரலாறு என்பது தமிழரின் வாழ்வியலுக்கு அவசியமான மென்பொருள் என்பதையும்
,அதை பல துறைகளுக்கும் (கடலிலும் மற்றும் நிலத்திலும் ) பயன்படுத்தலாம் ,
அதைக்கொண்டு தமிழர்களை தொழில் முனைவர்கள் ஆக்க முடியும் என்ற நிலைக்கும்
நாம் வரவேண்டும்
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
30.11.2012கோவையில் இருந்து வந்த diploma தொல்லியல் படிக்கும் பிற துறை மாணவர்களுக்காக இன்று குன்றத்தூர்,அமரம்பேடு ,நாவலூர்,மாகாணியம் மலைகளுக்கு நேற்றுசென்று வந்தோம்நிறைய பேர்கள் வருவதாக இருந்த மரபு பயண திட்டத்தில் திடீர் என்று தொல்லியல் பயிற்சியாளரின் மன மாற்றத்தால் தகர்க்கப்பட்டு இளைஞிகள் இளைஞர்கள் திட்ட பயணத்தை இருந்தி நேரத்தில் எங்கு தொல்லியல் தேர்வில் மதிப்பெண் போடுவதை நிறுத்தி விடுவாரோ என்று பயணத்தை நிறுத்திக்கொள்ள , மூன்றே மூன்று மாணவர்கள் மட்டும் தான் நம்முடிய தமிழின் தொன்மையை அறிந்துகொள்ள மட்டுமே தொல்லியல் பயிற்சியில் சேர்ந்ததாக சொல்லி வந்தார்கள்சென்னை ஏற்பாடுகள் முழுவதும் என் செலவில் செய்யப்பட்டது ,முழுவதும் மாணவர்கள் என்பதால் இலவசமாய் செய்தேன் , என் பல வருட அனுபவங்களை அவர்கள் எளிதாக புரிந்துக்கொண்டு அவர்களும் உருவாக வேண்டும் என்றுகூடவே இருந்த பேராசிரியை அவர்களும் படிப்பு பாதிக்கும் என்றும் மற்றும் உடல் நிலை காரணமாக மிகவும் பக்குவத்துடன் ஒதுங்கி கொண்டார் , அவரின் உடல் நலம் மற்றும் மாணவிகள் வராதது கூட ஒரு காரணமாய் அமைந்தது
வராத மாணவிகள் போனில் அழுதது மிகவும் மன அழுத்தத்தை கொடுத்தது .
I presume you digitized your rare artifacts before donating it. You may like to start a thread on your collection here. After all, Digital Tamil is our business :-)
Kannan
>படுத்தலாம் என்றும் நினைக்கிறேன் , அதற்கான வரை முறைகளை உருவாக்க
>வேண்டும்
>
we can plan for virtual museum
ஆனால் தொல்லியல் துறையில் இருக்கும் சாந்தி பாப்பு அவர்கள் பத்மாவதி
அக்கா, வள்ளி ஆச்சி ,வசந்தி அக்கா ,மூர்திச்வரிஅக்கா ,மகேஸ்வரி அக்கா
,மங்கையர்கரசி அக்கா ,மாக்சிகாந்தி அக்கா ,தங்கை வெற்றிச்செல்வி , தங்கை
தீபிகா சங்கரலிங்கம் போன்றவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்
நிலைமை மாறும்
30.11.2012 மாலை
தமிழார்வ பைத்தியம் பிடித்து மின்னாக்க பட்டறை வைத்த போது பல மின் தமிழர்கள் வந்து தொண்டு செய்யப்போவதாக சொன்னர்கள். ஒருவர் கூட வரவில்லை. பயிற்சி முகாம்களிலும் அப்படியே. என்னால் ஆனதை செய்யும்போது கூட கல்லடி, சொல்லடி! அதனால் பாலுவுக்காக மருகி போகிறேன்.
சிகாகோ கோயிலில் நான் அத்தனை சிரத்தையுடன் கேட்டதையெல்லாம் அங்கிருந்த தமிழ் பெருமக்கள் ஒரு காதால் கூட வாங்கமால் இருந்ததை நீங்கள் கவனித்து இருக்கிறீர்கள். அத்தனை பராமுகமும், மமதையும்,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நான் அடிக்கடி செல்லும் மாகாணியம் மலையை பார்த்தவர்களில் நம் குழும பெரியவர் இன்னாம்பரன் , சுபா , அண்ணன் தேவ் , நண்பன் சந்திரா போன்றவர்கள் அந்த மலையின் அழகை சொல்வார்கள்
--
தேவ்
On 1 Dec, 12:00, Innamburan Innamburan <innambu...@gmail.com> wrote:
> மாகாணியத்தின் மஹாத்மியம் பற்றி ஒரு சிரிய கட்டுரை எழுதுகிறேன், பாலு. நான்
> அதன் போதையில் ஆழந்தவன்.
> இன்னம்பூரான்
>
> 2012/12/1 s.bala subramani B+ve <sunkenl...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > நான் அடிக்கடி செல்லும் மாகாணியம் மலையை பார்த்தவர்களில் நம் குழும பெரியவர்
> > இன்னாம்பரன் , சுபா , அண்ணன் தேவ் , நண்பன் சந்திரா போன்றவர்கள் அந்த மலையின்
> > அழகை சொல்வார்கள்
>
> > இன்னும் அந்த மலைகளில் நமது தொன்மை பல நூறு இருக்கிறது
>
> > உடல் ஒத்துழைக்க மறுக்கிறதே என்ற கவலையை தவிர நடப்பதில் நிறைய சுகம் ,போதை
> > இருக்கிறது
>
> > அந்த மலையை பார்த்தவர்கள் சொல்வார்கள்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
..
அடிக்கடி உங்கள் மடல்களில் உடல்நலம் பற்றி அறிந்தோ அறியாமலோ.. வருகிறது. உங்கள் உழைப்பு தமிழுக்கு இன்னும் நிறைய தேவை என்பதால்.. உழைப்பினூடே... ஓய்வையும் ஒரு கலையாகப் பழகிக் கொள்ளுங்கள்.
மன உளைச்சல்களிருந்தாலும்... மனம் அமைதிப்பட சற்றே தியானப்பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் மேற்கொள்ளுங்கள். இதைச் சொல்வது மிகச் சுலபம் முறையாகச் செய்வது கொஞ்சம் கடினம்தான் என்றாலும்...முயலுங்கள்.. உங்களால் முடியும்...நீங்கள் இன்னும் நிறைய செய்யப் போகிறீர்கள்..உங்களால் முடியும்.. இறையருள் தொடரும்.வாழ்க!திருவேங்கடமணி2012/12/1 s.bala subramani B+ve <sunke...@gmail.com>
நான் அடிக்கடி செல்லும் மாகாணியம் மலையை பார்த்தவர்களில் நம் குழும பெரியவர் இன்னாம்பரன் , சுபா , அண்ணன் தேவ் , நண்பன் சந்திரா போன்றவர்கள் அந்த மலையின் அழகை சொல்வார்கள்இன்னும் அந்த மலைகளில் நமது தொன்மை பல நூறு இருக்கிறதுஉடல் ஒத்துழைக்க மறுக்கிறதே என்ற கவலையை தவிர நடப்பதில் நிறைய சுகம் ,போதை இருக்கிறதுஅந்த மலையை பார்த்தவர்கள் சொல்வார்கள்--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
Dr.T.K.Thiruvengada Mani
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
எழுதுங்கள் திரு.இன்னம்பூரான்.என்னிடம் பல படங்கள் உள்ளன. அதனை இணைத்து ஒரு முழு பதிவாக, பயணப் பதிவாக இணைத்து வைப்போம்.
ஒரிசா பாலு என்கின்ற சிவ பாலசுப்ரமணியின் அன்றாட வாழ்வியல் குறிப்புகள்
01.12.2012
இன்று காலை எங்கள் மின்தமிழ் நண்பர் தமிழ்த் தேனீ அவர்களும் என் உடல் நலம் குறித்து பேசினார்மின் தமிழ் நண்பர் முனைவர் வெங்கடமணி அவர்களும் பேசி உடல் நலன் அவசியம் குறித்து அக்கறையுடன் பேசினார்மரபு காவலர் தமிழ்ச்செல்வன் அவர்களும் உடல் நலன் குறித்து பேசினார்
--