Fwd: 'சரி' என்னும் சொல்

160 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 9, 2015, 8:32:09 AM2/9/15
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Saturday, February 7, 2015 at 8:11:41 PM UTC-8, கடிச்சம்பாடி wrote:
>
> அதெல்லாம் சரி.
> இந்த 'சரி' என்னும் சொல்லின் மூலம் என்ன? இது தமிழ்ச் சொல்லா, அல்லது வேறேதேனும் மொழிச் சொல்லா? எத்தனை நாட்களாகத் தமிழ் வழக்கத்தில் இருக்கிறது? பழந் தமிழ் நூல்கள் எதிலும் இதன் ப்ரயோகம் இருக்கிறதா?
>
> சங்கரன்.
>

> எத்தனை நாட்களாகத் தமிழ் வழக்கத்தில் இருக்கிறது?

நல்ல கேள்வி. கல்வெட்டுக்களில் சரித்தல் என்ற பொருளில் வருகிறது.
”வெள்ளப் பெருக்கால் அழிந்த நிலங்களையும் சரி செய்துள்ளனர்.”

பாலிமொழியில் புத்த ஜாதகக் கதைகளில் உள்ளது எனக் கண்டேன்.
Sari

Sari according to Payogasiddhi=sarisa (sadisa) cp. sarī- vaṇṇa J
ii.439 (=samāna -- vaṇṇa, C.).

Sarikkha

Sarikkha (adj.) [cp. Sk. sadṛkṣa, fr. sadṛś=P. sadisa] like,
resembling S i.66; J i.443; iii.262.

Sarikkhaka

Sarikkhaka (adj.) [=sarikkha] in accordance with, like J iv.215; PvA
206, 284. See also kamma˚.

Sarikkhatā

Sarikkhatā (f.) [fr. sarikkha] resemblance, likeness J iii.241 (taŋ˚
being like that); VvA 6 (cp. kamma˚).

Sarikkhatta

Sarikkhatta (nt.) [fr. sarikkha] likeness DhsA 63; as sarikkhakatta
(kamma˚) at DhsA 347.

http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/contextualize.pl?p.3.pali.1982911

சரிக்கல் (சரித்தல்), சரிவு/சார்வு, சரிபார்த்தல், சரி - என்னும் தமிழ்ச் சொற்களை
நோக்கினால் இவை த்ராவிடச் சொல் வேர் கொண்டவை என்பது தெளிவு.

நா. கணேசன்

> --
> Swaminathan Sankaran


On Monday, February 9, 2015 at 1:14:37 AM UTC-8, Rajagopalan wrote:
>
> 'சார்' என்ற சொல்லே அடிப்படை. ஒன்றை முறையானதென்று கருதி ஏற்றுக்கொண்டு அதன் வழி நடத்தல் 'சார்ந்திருத்தல்'. 'சரி' என்பது, முறையானதென்று ஏற்றுக்கொண்டதற்கான குறிப்புச் சொல். 'சரி' என்று ஏற்றுக்கொண்டுவிட்டால் 'சார்பு' வந்துவிடுகிறது.


ஆங்கிலத்தில் "leaning towards some thing" . சார்வு/சார்பு, சரிவு.
leaning (சரிதல் - நீதிபதி ஒருதலையாய் சரிஞ்சுட்டாரு) என்ற
மூலச்சொல், ஒப்புநோக்கல் என்ற பொருளையும் ஏற்கிறது. அப்போது “சரி” என்றாகிறது.

சரித்தல், சரிக்க- என்றால் சாய்த்தல். சரிவு. இரு பொருளை ஒப்பிடுதலுக்கு
சரிவருதல், சரிபார்த்தல் என்று துணைவினைகளைப் போட்டு ஒப்பீடு என்று
ஏற்படுத்தினர். பின்னர் “சரி” - OK, alright என்ற பொருளும்
ஏற்றப்பட்டுவிட்டன.

சரி- எனத் தொடங்கும் சொற்களைப் பார்த்தால், ”சரி(வு)/சார்வு நோக்கல்” =
ஒப்பு நோக்கல் என்று துணைவினை
சேர்தலால் ஏற்பட்டு, பின்னர், சரி = ஒப்பானது, சமமானது (சரிசமானம்,
டிச்சுகுழி போல).
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF&searchdomain=headwords&matchtype=start&display=utf8

கணேசன்

> அ.ரா

Visit arajagopalan.blogspot.com

--

Dev Raj

unread,
Feb 9, 2015, 9:13:39 AM2/9/15
to mint...@googlegroups.com
On Monday, 9 February 2015 05:32:09 UTC-8, N. Ganesan wrote:
Sari

Sari according to Payogasiddhi=sarisa (sadisa) cp. sarī- vaṇṇa J
ii.439 (=samāna -- vaṇṇa, C.). 

கணேசர் ஐயா,

நீங்கள் சுட்டும் எ கா ப்ரயோக ஸித்தியை ஆதாரம் காட்டுகிறது.
Prayogasiddhi பாகத மொழிகளில் Payogasiddh என ஆகும்.
ஸத்₃ருʼஶ [சங்கதம்] பாலியில் '' ஸரிஸ” அல்லது “ஸதிஸ” என வடிவம் பெறும்.

நீங்கள் தந்துள்ள ஆதாரங்களின்படியே  ஸத்₃ருʼஶ  > ஸரிஸ > ஸரி
என்பதே சரி :))


தேவ்



Dev Raj

unread,
Feb 9, 2015, 9:22:29 AM2/9/15
to mint...@googlegroups.com
ஸத்₃ருʼஶ
सदृश [ sadṛśa ] 
m. f. n. like , resembling , similar to (gen. instr. , loc. , or comp.) or in (instr. loc. , or comp.) Lit. RV. (accord. to Lit. Pat. on Lit. Pāṇ. 6-2 , 11 Vārtt. 2 also compounded with a gen.  conformable , suitable , fit , proper , right , worthy Lit. MBh. Lit. Kāv.  [ sadṛśam ] ind. suitably , well Lit. Uttarar.




ஸதி



தேவ்

N. Ganesan

unread,
Feb 9, 2015, 9:28:49 AM2/9/15
to mint...@googlegroups.com
சரி என்பது நேராகவே சரிவு/சார்வு என்பதிலிருந்து வரும்.
ஸதிர்க்‌ஷம் என்பது சரி, சரிவு/சார்வு என்பனவற்றுக்கு தேவையில்லை அல்லவா?
”வெள்ளப் பெருக்கால் அழிந்த நிலங்களையும் சரி செய்துள்ளனர்.” 
இதற்கெல்லாம் - சரி-வண்ணம் = சமான-வண்ணம் (பாலி) தமிழே,

சத்ருக்‌ஷம் என்பது சரி என ஆகவில்லை. தமிழ் தெரியாத
சம்ஸ்கிருத மேலைநாட்டு அறிஞர் அப்படி எழுதியிருந்தாலும்.

நா. கணேசன்

 


தேவ்



N. Ganesan

unread,
Feb 9, 2015, 9:42:23 AM2/9/15
to mint...@googlegroups.com, vallamai
ஆம் தேவ் ஐயா. ஸத்ருஸ, ஸத்ருக்‌ஷ எல்லாம் ஸதிச என்றாகும். ஆனால் சரி என்று ஆகாது - பாலி, ப்ராகிருதத்தில்.

சரி என்ற பாலி/ப்ராகிருதச் சொல் சரிவு/சார்வு - சரிபார்த்தல் என்னும் தமிழ்ச்சொல் வட இந்தியாவில் தமிழ் மொழி
இந்தி போன்றவை ஆக மொழிமாற்றம் நிகழ்ந்தபோது ஏற்றசொல். sari is a loan word from Dravidian in to Indo-Aryan languages.

 சரி என்பது நேராகவே சரிவு/சார்வு என்பதிலிருந்து வரும்.
ஸதிர்க்‌ஷம் என்பது சரி, சரிவு/சார்வு என்பனவற்றுக்கு தேவையில்லை அல்லவா?
”வெள்ளப் பெருக்கால் அழிந்த நிலங்களையும் சரி செய்துள்ளனர்.” 
இதற்கெல்லாம் - சரி-வண்ணம் = சமான-வண்ணம் (பாலி) தமிழே,

சத்ருக்‌ஷம் என்பது சரி என ஆகவில்லை. தமிழ் தெரியாத
சம்ஸ்கிருத மேலைநாட்டு அறிஞர் அப்படி எழுதியிருந்தாலும்.

நா. கணேசன்

Dev Raj

unread,
Feb 9, 2015, 9:44:55 AM2/9/15
to mint...@googlegroups.com
On Monday, 9 February 2015 06:28:49 UTC-8, N. Ganesan wrote:
சரி என்பது நேராகவே சரிவு/சார்வு என்பதிலிருந்து வரும்.
ஸதிர்க்‌ஷம் என்பது சரி, சரிவு/சார்வு என்பனவற்றுக்கு தேவையில்லை அல்லவா?
”வெள்ளப் பெருக்கால் அழிந்த நிலங்களையும் சரி செய்துள்ளனர்.” 
இதற்கெல்லாம் - சரி-வண்ணம் = சமான-வண்ணம் (பாலி) தமிழே,
சத்ருக்‌ஷம் என்பது சரி என ஆகவில்லை. தமிழ் தெரியாத
சம்ஸ்கிருத மேலைநாட்டு அறிஞர் அப்படி எழுதியிருந்தாலும்.


அப்படியானால் ப்ரயோக ஸித்தியை எடுத்துக்காட்டத் தேவையென்ன ?
அதில் காட்டப்படுவது சங்கதச் சாயையன்றோ !
‘பயோகஸித்தி’ ஜாதகக் கதையன்று. அதன் ஆசிரியர்  வநரதந மேதங்கரர்
தனியாக ‘ஜிந சரிதம்’ எனும் தலைப்பில் புத்தர் குறித்து எழுதியவர்.

On Monday, 9 February 2015 05:32:09 UTC-8, N. Ganesan wrote:
பாலிமொழியில் புத்த ஜாதகக் கதைகளில் உள்ளது எனக் கண்டேன். 
Sari 
Sari according to Payogasiddhi=sarisa (sadisa) cp. sarī- vaṇṇa J 
ii.439 (=samāna -- vaṇṇa, C.). 

Sarikkha 
Sarikkha (adj.) [cp. Sk. sadṛkṣa, fr. sadṛś=P. sadisa] like, 
resembling S i.66; J i.443; iii.262. 
 

என்னவோ போங்க ! மகர விடங்கர்தான் எங்கள காப்பாத்தணும்,
வேற என்ன சொல்ல


தேவ்

N. Ganesan

unread,
Feb 9, 2015, 9:51:42 AM2/9/15
to mint...@googlegroups.com, vallamai


On Monday, February 9, 2015 at 6:44:55 AM UTC-8, Dev Raj wrote:
On Monday, 9 February 2015 06:28:49 UTC-8, N. Ganesan wrote:
சரி என்பது நேராகவே சரிவு/சார்வு என்பதிலிருந்து வரும்.
ஸதிர்க்‌ஷம் என்பது சரி, சரிவு/சார்வு என்பனவற்றுக்கு தேவையில்லை அல்லவா?
”வெள்ளப் பெருக்கால் அழிந்த நிலங்களையும் சரி செய்துள்ளனர்.” 
இதற்கெல்லாம் - சரி-வண்ணம் = சமான-வண்ணம் (பாலி) தமிழே,
சத்ருக்‌ஷம் என்பது சரி என ஆகவில்லை. தமிழ் தெரியாத
சம்ஸ்கிருத மேலைநாட்டு அறிஞர் அப்படி எழுதியிருந்தாலும்.


அப்படியானால் ப்ரயோக ஸித்தியை எடுத்துக்காட்டத் தேவையென்ன ?
அதில் காட்டப்படுவது சங்கதச் சாயையன்றோ !

சங்கதம் என்பது த்ராவிட மொழிகள், ஈரனிய மத்ய ஆசிய மொழிகள், முண்டா மொழிகளின்
கூட்டுக் கலவை. 

சரி என்ற பாலி/ப்ராகிருதச் சொல் சரிவு/சார்வு - சரிபார்த்தல் என்னும் தமிழ்ச்சொல் வட இந்தியாவில் தமிழ் மொழி
இந்தி போன்றவை ஆக மொழிமாற்றம் நிகழ்ந்தபோது ஏற்றசொல். sari is a loan word from Dravidian that entered Indo-Aryan languages.

என்னவோ போங்க. இது இந்த ட்க்ஷனரி எழுதினவருக்கு தெரியவில்லை. அவ்வளவுதான்.

நா. கணேசன்
 
‘பயோகஸித்தி’ ஜாதகக் கதையன்று. அதன் ஆசிரியர்  வநரதந மேதங்கரர்

Seshadri Sridharan

unread,
Feb 9, 2015, 10:37:01 AM2/9/15
to mintamil
2015-02-09 19:01 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
> அதெல்லாம் சரி.
> இந்த 'சரி' என்னும் சொல்லின் மூலம் என்ன? இது தமிழ்ச் சொல்லா, அல்லது வேறேதேனும் மொழிச் சொல்லா? எத்தனை நாட்களாகத் தமிழ் வழக்கத்தில் இருக்கிறது? பழந் தமிழ் நூல்கள் எதிலும் இதன் ப்ரயோகம் இருக்கிறதா?
>
> சங்கரன்.


செரி என்பதே மூலச்சொல். ''அட செர்தான் போ'' என்ற நாட்டுப்புற வழக்கில் இன்றும் வழங்குகின்றது. மலையாளத்தில் ''செரி ஆணோ'' என்ற வழக்கை நோக்குக. செரி என்பது சேர்தல் கருத்துடைய இணக்க கருத்து. செருப்பு என்றால் இணையான காலணி. செறிவு என்பதும் சேர்க்கை, திரட்சி கருத்து கொண்டதே.   இணக்கம் இணை ஒரேவேரில் தோன்றிய சொல் என்பதை நோக்குக.

கைத்தொழுவான்.
 

N. Ganesan

unread,
Feb 9, 2015, 11:00:22 AM2/9/15
to mint...@googlegroups.com, Santhavasantham, vallamai
இருக்கலாம், திரு. சேசாத்திரி. 

(1) ஞெமை மரம் நமை மரம் என்கிறோம். கொங்கிலே வெங்கால மரம். வடகொங்கு ஊரான
பெங்களூரு கல்வெட்டில் வெங்காலூரு. கொங்குநாட்டின் ஓர் உள்நாடு வெங்காலநாடு என
கொங்குமண்டல சதகம். ஞெமை > நமை போல செரி > சரி??

(2) ஞெள்- ’கருமை, இருள்’ ஞெள்+து = ஞெண்டு/நெண்டு. இது நண்டு, நள்ளி ஆகிறது.
நள்ளமலை > நல்லமலை கிருஷ்ணபெண்ணை (கரிய பெண்ணை - கம்பன்).

நள்ளுதல், நட்பு, நண்பர் என்பதில் உள்ள வேர் நள்- என்பதுடன் ஞெள்- “கருமை” வேர்
சேர்ந்து நள்- ‘கருமை’ ஆகிறது. நள்- >நல்- > அல் ‘இரவு’. அலவன் ‘இரவில் திரியும் நண்டு’.

(3) செல்- இதிலிருந்து ஹிந்தி உருவாக்கும் சொல் சலோ. நெசவு (நெய்-) > நசநச (நயம்)
https://groups.google.com/forum/#!msg/mintamil/smy0zOfxBYs/6goAMvZqoggJ

N. Ganesan

 

Dev Raj

unread,
Feb 9, 2015, 11:48:51 AM2/9/15
to mint...@googlegroups.com
On Monday, 9 February 2015 06:51:42 UTC-8, N. Ganesan wrote:
சரி என்ற பாலி/ப்ராகிருதச் சொல் சரிவு/சார்வு - சரிபார்த்தல் என்னும் தமிழ்ச்சொல் வட இந்தியாவில் தமிழ் மொழி
இந்தி போன்றவை ஆக மொழிமாற்றம் நிகழ்ந்தபோது ஏற்றசொல். sari is a loan word from Dravidian that entered Indo-Aryan languages.


சரி/செரி - சமானம் எனும் பொருளில் பாலி , அர்த மாகதி, சௌரஸேநி 
அகராதிகளில் சொல்லப்படுகிறதா ?

அதே பொருளில் சங்க இலக்கியத்தில், சிலம்பில், பவுத்த
இலக்கியமான மணிமேகலையில் கையாளப்பட்டுள்ளதா ?


தேவ்

Seshadri Sridharan

unread,
Feb 10, 2015, 4:59:31 AM2/10/15
to mintamil
2015-02-09 19:01 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
செரி என்பதே மூலச்சொல். ''அட செர்தான் போ'' என்ற நாட்டுப்புற வழக்கில் இன்றும் வழங்குகின்றது. மலையாளத்தில் ''செரி ஆணோ'' என்ற வழக்கை நோக்குக. செரி என்பது சேர்தல் கருத்துடைய இணக்க கருத்து. செருப்பு என்றால் இணையான காலணி. செறிவு என்பதும் சேர்க்கை, திரட்சி கருத்து கொண்டதே.   இணக்கம் இணை ஒரேவேரில் தோன்றிய சொல் என்பதை நோக்குக.

கைத்தொழுவான்.

இருக்கலாம், திரு. சேசாத்திரி. 

N. Ganesan

'திங்கிற சோறு ஒடம்புல ஒட்டமாடெங்குது' என்ற கருத்தோடு ''செறித்தல்'' என்ற சொல்லை கவனித்தால் அதுவும் உடலோடு பொருந்துவதையே சுட்டுகிறது. பல இடத்து வெள்ளநீர் ஒன்று திரண்டு உருவான குளத்தை தெலுங்கர் செருவு (cheruvu) என்கின்றனர். ஆக செரி என்பது இணக்கம் என்ற நேர் பொருள் தரும் சேர்க்கைக் கருத்து ஆகும். இந்த செரி (செர்) என்பது சிற் என்ற மூலத்தில் இருந்து தோன்றியதா என்று ஆராயவேண்டும். ஏனென்றால் குளத்திற்கு சிறை என்ற சொல் இருந்ததாக கூறுகிறார் பேரா. இரா. மதிவாணர். artery தமிழில் சிறை எனப்படுகிறது, artery பல குருதிக் குழாய்களின் சேரிடம் என்பதை நோக்குக. அப்படியானால் இ > எ > அ என இந்த சிற் - செர் - சர் > சரி திருந்து இருக்க வேண்டும்.  

Dev Raj

unread,
Feb 10, 2015, 7:57:04 AM2/10/15
to mint...@googlegroups.com
On Tuesday, 10 February 2015 01:59:31 UTC-8, திங்களன் கைத்தொழுவான் wrote:
'திங்கிற சோறு ஒடம்புல ஒட்டமாடெங்குது' என்ற கருத்தோடு ''செறித்தல்'' என்ற சொல்லை கவனித்தால் அதுவும் உடலோடு பொருந்துவதையே சுட்டுகிறது.


செறி , செரி இரண்டும் வேறான சொற்கள் 

செறி, (p. 510) [ ceṟi, ] கிறது, ந்தது, செறியும், செறிய, v. n. To be or become thick, as foliage, hair, &c., to be close, dense, crowded, நெருங்க. 2. To be compact, well joined, firm, fast, to be thick-set--as a person; be close--as the teeth; to be thickly beset,இணைய. 3. To be copious, abundant, plentiful, மிக. 4. To be intense, excessive, surpassing, expanded, diffused, இறுக. 5. To accrue, accumulate, சேர. 6. To bathe. be immers ed, குளிக்க. 7. To join, unite with, belong to, பொருந்த. 8. To become diffused; to mix, insinuate itself, அளாவ. 9. To live in close union, as a family, &c., இளைய. (p.) கன்மத்தாற்செறியப்பட்டவுடம்பிலே. In bodies formed by the influence of former deeds. செறிந்தாற்போல. Near together and in re gular order--as a grove of trees.

செறிந்தகாடு, s. A thick forest.
செறிந்தபகல், s. Broad day light.
செறிந்தவெட்டு, v. noun. Close cut ting.
செறிமயிர், s. Thick hair. (நை.)
செறி, v. noun. Closeness, denseness.
செறிவு, v. noun. Thickness, closeness, நெருக்கம். 2. Abundance, fulness, மிகுதி. 3. Diffusion, insinuation, permeation, expansion, கலப்பு. 4. Union, mixture, பொருந்துகை. 5. [in rhet.] One of the ten குணவலங்காரம். 6. A hole or hollow in a tree, மரப்பொந்து. (சது.) மரச்செறிவுக்குள்ளே சூரியன்பெரிதாய்த்தோன்றுகி றது. The sun appears large through the cluster of trees.


செறிவு - அடர்த்தியை. நெருக்கத்தைக் குறிப்பது.
’பொருட் செறிவு’ இலக்கியவாதிகள் கையாளும் சொல்.

’செறி’ உணவுச் செரிமானத்தைச் சுட்டாது.
வல்லின , இடையின வேறுபாடு தெரிந்துகொண்டு எழுத வேண்டும் , சேச்சா


தேவ்
 

N. Ganesan

unread,
Feb 10, 2015, 8:13:22 AM2/10/15
to mint...@googlegroups.com, vallamai, Santhavasantham, housto...@googlegroups.com
சேர்த்து/சார்த்து (சேர்வு/சார்வு) என்னும் சொற்களும் நோக்குக.  சார்த்து - சாத்து - இதுவே, சாந்து என்று சங்க இலக்கியத்தில்
சாத்து/சாந்து தன்/பிற-வினை ஜோடி ஆகி, சாந்து > சந்து > சந்தனம் என ஆகியது. சந்தனம் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து வந்த மரம். முதலில் பொதியிலில் பயிராகியது. எனவே, பொதிகை தென்றல், சந்தனம் மலய வர்ணனையில் வடமொழி இலக்கியங்களிலே 2000 வருஷமாய் இருக்கிறது. 

சேர்-/சார்-, செரி-/சரி- சரிபார்த்தல் - சரிச்ச/சரிக்க எல்லாம் பாலி மொழியில் இருக்கிறது. இதற்கு மூலம் என சதிருஷ, சத்ருக்‌ஷ என்ற சொற்களில் இருந்து என வடமொழியாளர் காட்டுவர்.  சரிச்ச/சரிஞ்ச/சரிவு, சார்வு/சேர்வு என்னும் தமிழ்ச்சொற்களே இவை என்று இன்னும் வடமொழி அகராதிகளில் காட்டினார் இல்லை.

Original Sanskrit Texts on the Origin and History of the People of India, Their Religion and Institutions: Inquiry whether the Hindus are of Trans-Himalayan origin, pg. 93

https://books.google.com/books?id=PGLZAAAAMAAJ&pg=PA93&dq=sadisa+sarisa&hl=en&sa=X&ei=Xv7ZVIuIC4n0oASKv4DoDg&ved=0CCcQ6AEwAQ#v=onepage&q=sadisa%20sarisa&f=false













சரிச்ச/சரிக்க, சாரிச (< சாரிய) போன்றவற்றைத் தமிழின் சரிக்க/சரிச்ச/சாரிய - ஒப்புநோக்கல், என்னும் அடிப்படையான சொற்களுடனும் பொருத்திப் பார்க்கவும். சதிருக்‌ஷ/சதிருஷ- என்பவை சாதிச/சதிச என்றாவது இயல்பு. அத்துடன் திராவிட மொழிகளின் சரிக்க/சரிச்ச, சாரிய/சாரிச- எல்லாம் சேர்கிறது.

CDIAL entries:
sadŕ̊śa 13120 sadŕ̊śa ʻ of the same appearance, like ʼ TS. 2. sādr̥śa -- (with ā after tādŕ̊śa -- &c.?) ŚāṅkhŚr. [sa -- 2, √dr̥ś]
1. Pa. Pk. sadisa -- , sarisa -- ʻ like ʼ, NiDoc. satriśa, Or. sarisā (whence sarsiā ʻ coeval, rival ʼ), H. sarissaras, OMarw. sīrasaü, M. sarsā(or < sadŕ̊kṣa -- ); OSi. -- sey ʻ like ʼ, Si.  ʻ likeness, manner ʼ.
2. Pa. sādisa -- ʻ like ʼ; Pk. sārisa -- , sālisa -- ʻ like ʼ, sāri(s)sa -- n. ʻ likeness ʼ; Si. halu ʻ like ʼ, sari ʻ likeness ʼ EGS 190.
Addenda: sadŕ̊śa -- . 2. sādr̥śa -- : WPah.kṭg. sáyh ʻ similar, like ʼ.

sarṣápa 13281 sarṣápa m. ʻ mustard seed ʼ ṢaḍvBr.
Pa. sāsapa -- m. ʻ mustard seed ʼ, Pk. sarisava -- , sāsava<-> m.; S. sarhya f. ʻ mustard or Sinapis glauca ʼ; L. sarheõ (Ju. sarhiū̃), sarhõ f. ʻ the oil seed Brassica campestris ʼ, awāṇ. sariā ʻ rape seed ʼ; P. sarheõsarhõ f. ʻ rape seed ʼ; WPah. (with śarṣ -- assim. from sarṣ -- ) bhal. śe\rio m. ʻ mustard ʼ, kiũth. śīraś, (Joshi) śerō f. ʻ Sinapis dichotoma ʼ; Ku. sarsyū̃ ʻ mustard ʼ, N. sarsiũ; A.xariyah ʻ the oil seed Brassica nigra ʼ; B. sarisāsarsā ʻ mustard ʼ, Or. sorisa; Bi. sarisõ°sosarsõ ʻ B. campestris ʼ, Mth. sariso; Bhoj. sarso ʻ mustard ʼ; H. sarsõ°so f. ʻ Sinapis dichotoma ʼ; G. sarsav m. ʻ rape seed ʼ, sarsiyũ n. ʻ rape seed oil ʼ; M. śirīsśiras m. ʻ S. dichotoma ʼ, śirśī f. ʻ esculent vegetable like mustard ʼ.
sarṣapataila -- .
Addenda: sarṣápa -- , sariṣapa -- m. lex.: WPah.kṭg. śérśɔ m. ʻ mustard ʼ, J. śerśō m. (pl.?).
sārṣapa -- .

நா. கணேசன்

Dev Raj

unread,
Feb 10, 2015, 8:17:31 AM2/10/15
to mint...@googlegroups.com
On Monday, 9 February 2015 06:51:42 UTC-8, N. Ganesan wrote:
................இந்தி போன்றவை ஆக மொழிமாற்றம் நிகழ்ந்தபோது ஏற்றசொல். ......

இந்தி பேச்சுவழக்கில் ‘ஸஹி’ என்பதே காணப்படுகிறது.

சரியான பேச்சு என்பதற்கு सही बात है [ஸஹி பாத் ஹை] என்பர்
ஏறத்தாழ 6,40,000 முடிவுகள் (0.33 நொடிகள்) 
ஸஹமத் ஹோனா - எனவும் உள்ளது
தேவ்


N. Ganesan

unread,
Feb 10, 2015, 8:20:56 AM2/10/15
to mint...@googlegroups.com
செறி(வு), சேர்-/சார்- : இரண்டும் வேறானவை தான்.

நா. கணேசன்
 

தேவ்
 

Seshadri Sridharan

unread,
Feb 10, 2015, 10:33:04 AM2/10/15
to mintamil
2015-02-10 18:27 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
’செறி’ உணவுச் செரிமானத்தைச் சுட்டாது.
வல்லின , இடையின வேறுபாடு தெரிந்துகொண்டு எழுத வேண்டும் , -   தேவ்

 செறி, செரி இரண்டனுக்கும் பொருந்துதற் கருத்தே பொருள். அது செரிமானத்திற்கும் பொருந்தும் கருத்தே.

Dev Raj

unread,
Feb 11, 2015, 5:36:32 AM2/11/15
to mint...@googlegroups.com
On Monday, 9 February 2015 06:51:42 UTC-8, N. Ganesan wrote:
சரி என்ற பாலி/ப்ராகிருதச் சொல் சரிவு/சார்வு - சரிபார்த்தல் என்னும் தமிழ்ச்சொல் வட இந்தியாவில் தமிழ் மொழி
இந்தி போன்றவை ஆக மொழிமாற்றம் நிகழ்ந்தபோது ஏற்றசொல். sari is a loan word from Dravidian that entered Indo-Aryan languages.
 

பாலி அகராதியில் ‘ஸரி’ காணப்படவில்லை .
பாலி அகராதி தரும் பொருள் -



ஹிந்தியில், மராட்டியில் ‘சரி’ இல்லை;
‘ஸஹி’ என்பதே வழக்கம்; கையொப்பம் எனவும்
பொருள் படும்.

க்யா ஹார் மேʼ, க்யா ஜீத் மே'
கிஞ்சித் நஹீʼ ப₄யபீ₄த் மேʼ 
கர்த்தவ்ய பத்₂ பர் ஜோ பீ₄ மிலா, 
யே பீ₄ ஸஹீ வோ பீ₄ ஸஹீ ।  
                               [அடல் பிஹாரி வாஜபேய ஜீ]

வெற்றியில் என்ன ? தோல்வியில் என்ன ?
இம்மியளவும் அச்சம் எதற்கு ?
கடமைப் பாதையில் கிடைப்பது எதுவோ,
இதானாலும் சரி, அதானாலும் சரி !

ஸத்₃ருʼஶ  >  “ஸதிஸ > ஸஹீ - என ஆகியிருக்கலாம்.
தென்னக மொழிகளில் சரி, ஸெரி உள்ளது; அதுவும்
பிற்கால வழக்காக



தேவ்

N. Ganesan

unread,
Feb 11, 2015, 8:46:52 AM2/11/15
to santhav...@googlegroups.com, mintamil, vallamai


On Wednesday, February 11, 2015 at 1:43:21 AM UTC-8, devraj wrote:
மின் தமிழ்க் குழுமத்தில் இவ்விவாதம் கடிச்சம்பாடி ஐயாவின் வினாவுடன் 
தொடங்கியது -

On Saturday, February 7, 2015 at 8:11:41 PM UTC-8, கடிச்சம்பாடி wrote: 
> அதெல்லாம் சரி. 
> இந்த 'சரி' என்னும் சொல்லின் மூலம் என்ன? இது தமிழ்ச் சொல்லா, அல்லது வேறேதேனும் மொழிச் சொல்லா? எத்தனை நாட்களாகத் தமிழ் வழக்கத்தில் இருக்கிறது? பழந் தமிழ் நூல்கள் எதிலும் இதன் ப்ரயோகம் இருக்கிறதா? 
> சங்கரன். 
On Monday, 9 February 2015 05:32:09 UTC-8, N. Ganesan wrote:
நல்ல கேள்வி. கல்வெட்டுக்களில் சரித்தல் என்ற பொருளில் வருகிறது. 
”வெள்ளப் பெருக்கால் அழிந்த நிலங்களையும் சரி செய்துள்ளனர்.” 
பாலிமொழியில் புத்த ஜாதகக் கதைகளில் உள்ளது எனக் கண்டேன். 
Sari 

புத்த ஜாதகக் கதையில் எந்த இடத்தில் Sari உள்ளது ?
அப்பகுதியை எடுத்துக்காட்ட முடியுமா ? 


அடுத்த அடியிலேயே புத்த ஜாதகக் கதைகளில் எங்கே ”சரி” இடம்பெறுகிறது
எனக் கொடுத்திருந்தேனே. cp. sarī- vaṇṇa J  ii.439 (=samāna -- vaṇṇa, C.). 
நீங்களே என் வரிகளை தருவதை நோக்குவோம்.

எனக்குத் தெரிய, தமிழின் ”சரி” என்பது முதலில் இலக்கியங்களில் பயில்வது இங்கே தான்.
cp. sarī- vaṇṇa J  ii.439 (=samāna -- vaṇṇa, C.). கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு
எல்லாவற்றிலும் உள்ள சரி. சரிவண்ணம் = சமானவண்ணம். J என்பது ஜாதகக் கதைகள் (புத்தம்).


On Monday, 9 February 2015 05:32:09 UTC-8, N. Ganesan wrote:
Sari 
Sari according to Payogasiddhi=sarisa (sadisa) cp. sarī- vaṇṇa J 
ii.439 (=samāna -- vaṇṇa, C.). 
 

அஜந்தா ஓவியத்தில் வரையப்பட்டுள்ள புத்த ஜாதகக் கதை இது.

Prof. Dieter Schlingloff, Studies in the Ajanta paintings: identifications and interpretations
Ajanta Publications, 1987, Delhi, 431 pages
இந்தப் புஸ்தகத்தில் 137-ஆம் பக்கத்தில் உள்ளது.

ஆங்கிலத்தில் எழுதுவதன் முன்னம் கலைவரலாற்றுப் பேராசிரியர்
தன் ஜெர்மன் மொழியில் எழுதிய கட்டுரையிலும் முழுக்கப் படிக்கலாம்.

எனக்குத் தெரிய, தமிழின் ”சரி” என்பது முதலில் இலக்கியங்களில் பயில்வது இங்கே தான்.
cp. sarī- vaṇṇa J  ii.439 (=samāna -- vaṇṇa, C.). கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு
எல்லாவற்றிலும் உள்ள சரி. சரிவண்ணம் = சமானவண்ணம். J என்பது ஜாதகக் கதைகள் (புத்தம்).
சேர்-/சார்-, செரி-/சரி- என்று பலரும் இவ்விழையில் குறிப்பிட்ட எல்லா திராவிடமொழிகளிலும்
உள்ள சேர்த்தி/சார்த்தி ஒப்பு நோக்கும் பொருள் கொண்ட “சரி வண்ணம்” = “சமான வண்ணம்”.
சரி என்றே சிந்து மாகாணத்தின் சிந்தி மொழியில் இன்றளவும் இருப்பதும் தந்துள்ளேன்.

”ஸத்₃ருʼஶ  >  “ஸதிஸ > ஸஹீ - என ஆகியிருக்கலாம்” (தேவ்)
ஆம். அவ்வாறே நானும் நினைக்கிறேன். 

ஆனால், புத்த ஜாதகக் கதைகளிலும், சிந்து மொழியிலும், எல்லா திராவிட மொழிகளிலும்
உள்ள சரி திராவிட மூலம் கொண்ட சொல். சரி என்னும் தமிழ்/த்ராவிடச் சொல் சத்ருக்‌ஷ (அ) சத்ருஷ
என்பவற்றில் இருந்து பிறப்பதன்று என்பது தெளிவு. சரி என்ற சொல்லுக்கு பாலி, ப்ராகிருத மொழிகளில்
சரிச்ச, சரிக்க என்றிருப்பது சரி- என்ற சொல்லின் வினைவடிவங்கள்.

John Muir, 1871:


567. sukumäla-tanu-ggivo+ agaliya-koramta-niyara-sarivanno+ |
ramanam anuyattamäni sutthu kayä cakkaväi vi ||
i: a= -ggivä amaliya- — -sari-vannä.
Mit einem zarten, dünnen Hals, in der (Körper)farbe einem Haufen
makellos reiner Korenta(-blüten) ähnlich, ihrem Geliebten folgend
ist schön ausgeführt auch das caA;rawÄ;a-Weibchen.

 



 






































































 
ஐயா சுட்டும் எ கா ப்ரயோக ஸித்தியை ஆதாரம் காட்டுகிறது.
Prayogasiddhi பாகத மொழிகளில் Payogasiddh என ஆகும்.
ஸத்₃ருʼஶ [சங்கதம்] பாலியில்  “ஸதிஸ” என வடிவம் பெறும்.

ஐயா தந்துள்ள ஆதாரங்களின்படியே  ஸத்₃ருʼஶ  >  “ஸதிஸ”  என்றாகிறது.

 ஸத்₃ருʼஶ
सदृश [ sadṛśa ] 
m. f. n. like , resembling , similar to (gen. instr. , loc. , or comp.) or in (instr. loc. , or comp.) Lit. RV. (accord. to Lit. Pat. on Lit. Pāṇ. 6-2 , 11 Vārtt. 2 also compounded with a gen.  conformable , suitable , fit , proper , right , worthy Lit. MBh. Lit. Kāv.  [ sadṛśam ] ind. suitably , well Lit. Uttarar.



ஸதி
On Monday, 9 February 2015 06:51:42 UTC-8, N. Ganesan wrote:
சரி என்ற பாலி/ப்ராகிருதச் சொல் சரிவு/சார்வு - சரிபார்த்தல் என்னும் தமிழ்ச்சொல் வட இந்தியாவில் தமிழ் மொழி
இந்தி போன்றவை ஆக மொழிமாற்றம் நிகழ்ந்தபோது ஏற்றசொல். sari is a loan word from Dravidian that entered Indo-Aryan languages.

பாலி அகராதியில் ‘ஸரி’ காணப்படவில்லை ;
ஹிந்தியில், மரட்டியில் ‘சரி’ இல்லை;
‘ஸஹி’ என்பதே வழக்கம். 

க்யா ஹார் மேʼ, க்யா ஜீத் மே'
கிஞ்சித் நஹீʼ ப₄யபீ₄த் மேʼ 
கர்த்தவ்ய பத்₂ பர் ஜோ பீ₄ மிலா, 
யே பீ₄ ஸஹீ வோ பீ₄ ஸஹீ ।  
                               [அடல் பிஹாரி வாஜபேய ஜீ]

N. Ganesan

unread,
Feb 12, 2015, 9:54:17 AM2/12/15
to santhav...@googlegroups.com, vallamai, mintamil, housto...@googlegroups.com
On Tuesday, February 10, 2015 at 10:50:33 AM UTC-8, nahupoliyan wrote:

தெலுங்கர் ஸரே என்பது கேட்கலாமே.. [ஸரெக உந்தி.


 சரி என்பதைத் தான் அப்படிச் சிலர் சொல்கிறார்கள்.
J. P. L. Gwynn,  ATelugu-English dictionary gives the usage of sari
sari

sari I. n1 end[ing], finish, completion; selawalu reepaTitoo ~ the holidays will come to an end tomorrow; atani wamśam antaTitoo ~ his line of descent ended there; niikuu naakuu ~ (orniikuu naakuu cellu) the association (or the friendship) between you and me is over. 2 equality, matching, evenness, similarity, likeness; waaDikii wiiDikii ~ that man and this man are a match for each other; aayana sampaadanaki aawiDa kharcuki ~ ki ~ what she spends is equal to what he earns; ~ leeni or ~ kaani matchless, unequalled; eeTi iitaku lanka meetaku ~ the reward is worth the effort (proverb meaning lit. the grazing to be had on the island and the effort of swimming the river to reach it are equal). 3 correctness, propriety; daanni gurinci miiru winnadi ~ kaadu what you have heard about it is not correct; siggu leekapootee ~ lit. if there is no shame, it is all right (said with sarcasm, meaning you/he/she/they ought to feel ashamed); so also buddhi leekapootee ~ you/he/she/they ought to have more sense). 4 s.g appropriate, fitting, typical or characteristic; aa pani ceyyaDam aayanakee ~ (or aayanakee cellu) only he is a fit person to do that work; adi niikee ~ or adi niikee cellu that is typical of you. II. adj. equal, even; ~ sankhya even number; ~ ujjii an equal ( = sama ujjii); see also sariyayna. III minor sentencein reply to a demand or request yes!, all right!, o.k! (colloq).

C. P. Brown's dictionary suggests "sari" is from sadRSha, but sEr-/cAr- (seri-/sari-) of Tamil gives directly the word, sari in all Dravidian languages.
"sari" is not from  sadRSha. The earliest use of the Dravidian word, sari as in sari-vaNNam is in Buddhist jaataka stories as shown before.
In inscriptions, cari is used. Probably, KaaLamEkam, that people's poet, first uses in our Literature.

C. P. Brown's (I convert Telugu words to ISO transliteration for ease of reading).

"sari (p. 1316) [ sari ] sari. [from Skt. sadr̥śaḥ.] n. The end. aṁtamu. Similarity, likeness. sāmyamu, samānamu, samamu. Propriety, fitness, yuktamu. [From Skt. saraḥ.] n. A garland, wreath. hāramu. See also sariya. ā vaṁśamu itanatō sari that family terminates with him. sarilēni māṇikyamu a matchless gem. pelasariki at the end of the month. nelasariki up to that day. nīku nāku sari there is an end of everything between us. sarikāni vāru those who are not equals. "sarikāni vāritō sarasamāḍeḍuvāni." (Kālahas. §. 66.) he who takes liberties with such as are not his equals. sarikānipani improper behaviour or conduct. sarikisari tit for tat. gōdhumulu biyyāniki gōdhumulu biyyāniki sarikisari istāru they barter wheat for an equal quantity of rice.sarikisari cēsināḍu he repaid them according to what they had done. sari. adj. Equal, like. samamu, īḍaina. Just, right, proper, fit, correct, suitable, yuktamaina, tagina, Corresponding to. Even, level, not odd, miṭṭapallamululēni. Ended, finished, samāptamu. ataniki sarilēḍu he has no equal. rātri ayinā sarē pagalu ayinā sarē be it day or be it night. idi sarikādu this is not right. ī utsavamu nēṭitō sari this feast is finished with this day. adv. Equally. samānamugā, sarigā. Fully, pūrṇamugā. "jaladhi tōjaladhiyu saribōrukaraṇi." DRY. 2224. "saribalkumani yadalcu." T. iii. 143. sari (interj.) Well! Yes! very well! very good! Aha! Aha! Oh! bāgāye; aṁgīkārārthamu. sarikaṭṭu sari-kaṭṭu. v. n. To be equal or similar. dr̥ṣṭāṁmagu. v. a. To attempt, yatniṁcu. See saripaḍu below. sarikaḍacu sari-kaḍaṭsu. v. n. To exceed, excel. muṁdumiṁcu, mīru, atikramiṁcu. sarigā sari-gā. adv. Equally, abreast, properly, rightly, correctly, in good order, completely, fully. samamugā, ౛tagā, ౛ోḍugā, yuktamugā, nyāyamugā, kramamugā, saṁpūrṇamugā, ā reṁḍu pallakīlu sarigā vaccucuṁḍenu the two palanquins were coming on abreast. sarigealpulu sari-gelpulu. n. Quits (at dice or games), samānamaina jayamulu. sarigonu sari-gonu. v. a. To resemble. samānamagu. To kill, destroy. caṁpu, rūpumāpu. M. VII. iv. 277. sī sariyanna viriponna sarigonnagarimacēgaṁbhī ramagunābhigāṁcudāni." T. iv. 62. saricēyu ari-chēyu. v. a. To arrange or put in order, to put straight, to level or make even. To complete, end or finish. To equalize, kramaparacu, vaṁkara lēkuṁḍā cēyu, miṭṭapallamulu lēkuṁḍā cēyu, mugiṁcu, samānamu cēyu. To ruin, nāśamucēyu, saricūcu sari-ṭsūṭsu. v. a. To compare, review, collate. saṁpratiṁcu, sarigānuṁḍajūcu. saritūgu sari-tūgu. v. a. To counter balance, to be equal in weight, to be equal. samānamagu. saripaḍu, saritāku or sarikaṭṭu sari-paḍu. v. n. To be equal, fit, suit, agree. To be on good terms. To be complete, to be finished, expended, exhausted. samānamagu, jatapaḍu, anukūlamagu, posagu, yuktamagu, ayipōvu. ā biyyamu saripaḍipōyinavi the rice is all done. mīku saripaḍitē uṁcukoṁḍi keep it if you like it. mēmaṁṭē saripaḍaka not being on good terms with us. saripaḍani discontented. saripuccu or saripeṭṭu sari-putstsu. v. a. To equalize, samamucēyu. To finish, end, complete, consume. mugiṁcu, kājēyu, kāryāṁtamucēyu. saripōvu sari-pōvu. v. n. To be equal, become equal, samānamagu. To fit, suit, agree. To be finished or terminated. To be expended, spent. To be ruined, or destroyed, ayipōvu, vyayamaipōvu, naśiṁcu. To be reconciled, samādhānamagu. A. vi. 90. nōṭiki saripōyinaṭṭu māṭlāḍināḍu he said everything that came to his tongue. avi nīku saripōtavavi these will suit you. nīvu tiṭṭinadānikini nēnu koṭṭinadānikani saripōyinavi the blows I have given are a fair payment for your abuse. ā biyyamu ā tapēlāku saripōyinavi the rice was just enough to fill the vessel. saripoddu or sariproddu sari-poddu. n. Midnight, artharātri. P. iii. 45. saribittaramu sari-bittaramu. n. A kind of wrestling. malla baṁdhaviśēṣamu. saribēsulu sari-bēsulu. n. A kind of game played by boys, pillakāyalu āḍē oka āṭa. "guḷludāguḍumucciḷlu gōlipeṭṭelēlapāṭalu, saribēsu līlakūtalādigāśaiśavakrīḍalāḍi." Vish. vii. 212. sariyagu sari-y-agu. v. n. To become equal, samānamagu, to be destroyed, naśiṁcu. sariyaina sari-y-aina. adj. Equal, like; just, right, proper, fit. Corresponding to. Level, straight; even, not odd. samamaina, yuktamaina, tagina, nūṭiyaina, īḍaina, aviṣayamaina, miṭṭapallamulu lēni. sarilēni sari-lēni. adj. Matchless, unequalled. asamānamaina. sarivaccu sari-vatstsu. v. n. To match, be alike, samānamagu. sarisamānamu sari-samānamu. (a pleonasm.) n. Equality. samamu, tanaku sarisamānamu evarulēranukonucunnāḍu he imagines that he has no equal. sarēgadā sarē-gadā. interj. Very well! "

Similar to Tamil, sari exists in Kannada, Malayaalm, Tulu ... also. All these are Dravidian root, 
and not from  sadr̥śaḥ (which becomes sadisa, possibly sadisa turns into sahii in Hindi).
sari in Dravidian is quite distinct, and to do with சேர்-சார்-(செரி/சரி).

N. Ganesan

 

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Malarvizhi Mangay

unread,
Feb 13, 2015, 12:02:24 AM2/13/15
to mint...@googlegroups.com
SeriAno enru malayalathil eluthy ulleerkale athil tannaharam moomu suzhi na.pottulleerkal .avvarenral  'is it ok man' enpathaha annmahanaik kurippathaaha porulpadum.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Feb 13, 2015, 3:50:32 AM2/13/15
to mintamil
செரி ஆணு (ஆகும்)

கைத்தொழுவான்.

N. Ganesan

unread,
Feb 13, 2015, 7:22:34 AM2/13/15
to mint...@googlegroups.com, vallamai
செரி ஆணு = தமிழில், செரி ஆகணும்.

சரி செரி என்றும் தமிழில் உண்டு. ஸிஃபி தளத்தில் வந்த சிறுகதை. அத் தளம் மறைந்து நாளாகிறது.


>> Fullstory
சாமி
ஏக்நாத்
HdSôj
புகைப்படமெடுப்பவன் வருவது முன்பே தெரிந்திருந்ததால் மூக்காண்டியை அழைத்து முகச்சவரம் செய்திருந்தார் ஆண்டியய்யா. இப்போது அழகுணர்ச்சி கூடிவிட்டதாக நினைத்துக்கொண்டவர் இரண்டு கைகளாலும் முகத்தைத் தடவிப்பார்த்தார்.ஒழுங்காகச் சவரம் செய்யப் படாததால் தாடையின் கீழ் பக்கம் சரசரவென்று இருந்தது. மூக்காண்டியை அழைத்தால் இப்படித்தான் வேலைப் பார்ப்பான்.இடப்பக்க மீசையை வேறு கொஞ்சம் குறத்துவிட்டான். பெரிய திருகிய மீசைதான் அவருக்கு அழகே. வழக்கமான கம்பீரம் குறைந்தது போலிருந்தது. மீண்டுமொருமுறை மீசையைத் திருக்கிக்கொண்டார்.மீசை ஆணின் முக வெளிப்பாட்டைத்தீர்மானிப்பது.கம்பீரத்தைத் தருவது. திருகிய பெரிய மீசை இருந்தால் பேச்சிலும் ஒரு தொனி வந்துவிடுகிறது. கரகர குரலில் கொஞ்சம் அதிகாரம் கலந்த பேச்சு இருந்தால்தான் மீசைக்கு மரியாதை போல. ஆண்டியய்யா பேச்சிலும் அப்படியொரு தொனி.எதிராளியை பயங்கொள்ளவைக்கும் தொனி.

ஆனால் ஆண்டியய்யாவின் இளமை வீரம் செறிந்த்தாகாவும் இருந்திருக்கிறது. கருப்பசாமிக்கோயில் முன்பு வந்த தகராறில் போலிஸ்கார் ஒருவரை ஒரு கையால் தூக்கி தூர எறிந்ததை ஊர் முழுவதும் பேசுவார்கள்.ஆண்டியைய்யாவின் தங்கையும் எதிர்வீட்டு முத்தம்மா பாட்டியும் சந்தித்துக்கொண்டால் அவரது இளமைகால வீரம்தான் பேச்சின் பெரும் பகுதியாக இருக்கும்.

"அணையில தண்ணிய அடச்சி வச்சிட்டானுவோ ,இருக்கது ஆழ்வார்க்குறிச்சி குளத்து தண்ணிதான்.இந்தத் தண்ணிக்குப் பாப்பாங்குளத்துக் காரனும் பரும்புக்காரனுவோளும் சண்டைப் போட்டுட்டு இருக்க, நம்மூருக்கு எங்கிருந்து தண்ணி வர? எல்லோரும் வந்து ஆண்டியைய்யாட்ட சொன்னாங்க. சத்தம் போடாம மறுநாள் ராத்திரி ஆளுகளை கூட்டிட்டுப் போனாரு. கிழ்பக்க மடைய புடுங்கித் தண்ணிய திருப்பிட்டு ராத்திரி பூரா அங்கேயே இருந்தாரு,இத கேள்விப்ப்ட்டு பாப்பாங்குளத்துக்காரனுவோ வந்துட்டானுவோ.'எவனாவது மடை கிட்ட வந்தா ஒருத்தனுக்கும் உயிரு இருக்காதுன்னு கையில அருவாளை வச்சிட்டு ஒத்த ஆளா சத்தம் போட்டாரு. ஒரு பய முன்ன வரலையே.'

பிச்சம்மா இதைச் சொல்வாள். இதுக்குச் சற்றும் குறைவில்லாத மற்றொரு வீரச்செயலைச் சொல்வாள் ஆண்டியய்யாவின் தங்கை.

தாத்தாக்கள் வரலாறாகவும், பேரன்கள் அந்த வரலாறைச் சுமப்பவர்களாகவும் இருப்பது யார் விட்ட சாபமோ?

''தாத்தா, போட்டாக்காரரு வந்துட்டாரு "என்றான் பேரன்.இந்த ஐந்து வயது பேரனுக்குத் தாத்தாதான் சேக்காளி. தாத்தாவின்றி அவனும் அவனின்றி தாத்தாவும் வெகு நேரம் இருந்ததில்லை. மகன் வயிற்றுப் பேரன்.

வீட்டுத்தோட்டத்து வாதமடக்கி மர நிழலில் அமர்ந்து பாக்கு உடைத்துக்கொண்டிருந்தவர் எழுந்தார். தரையில் கிடந்த துண்டையெடுத்து உதறினார். தனியாக உடைத்து வைக்கப்பட்டிருந்த பாக்குகளை ஒரு கையால் எடுத்துக்கொண்டு மறு கையில் பேரனைத்தூக்கி முத்தமிட்டார்.

"மீசை குத்துது."
"வலிக்கவாடா செய்யுது"
"கீச்சமா இருக்கு"
"நீயும் வளர்ந்தா இதுமாதிரி மீச வளரும்"
'நான் பெரிசா வளப்பேன்"
'எம்புட்டுப் பெருசா?"
"இவ்வளவு பெரிசா'என்று இரண்டு கைகளையும் விரித்துக்காடினான்.
"அப்படியால கள்ளப்பயல".என்று சிரித்துவிட்டு மீண்டுமொருமுறை முத்தம் கொடுத்தார்.
வாசலில் கருப்பு பேண்டும் வெள்ளை சட்டையும் அணிந்த ஓர் இளைஞன் வெறுப்பாக உட்கார்ந்திருந்தான். ஆழ்வார்க்குறிச்சியிலிருந்து சைக்கிளில் வந்த களைப்பு முகத்தில். அருகில் பூதத்தானும் மந்திரமும் இருந்தார்கள்.
"நீ தான் போட்டாக்காரனாடே?"
"ஆங்.."
"அழ்வார்க்குறிச்சியில நீ யாருடே"
"சொள்ளமுத்து தெரியுமா?"
"எந்த சொள்ளமுத்து?"
"பட்டாளத்து..."
"ஆமா,அவனுக்கு நீ என்ன உண்டும்?"
"எங்கப்பாதான் அவரு"
"சர்யா போச்சு போ. அவரு மவனாடா..இப்ப எப்படி இருக்கான் உங்கப்பன்?"
"நல்லா இருக்காரு"
"ஒரு காலத்துல ரெண்டு பேரும் இங்கேயிருந்து விருதுநகர் சந்தைக்கு வண்டியில சாமான் கொண்டு போயிருக்கோம்.மறக்கமுடியுமா அதெல்லாம். அவன்ட்ட நான் கேட்டம்னு சொல்லு. சும்மா இருந்தாம்னா ஒரு எட்டு இங்கவந்து பார்க்க சொல்லு."
"ஆங்.."
"செரி நீ எங்கவச்சு எடுக்க போற?"
"மொகம் மட்டும்தான..இந்தா கிழ்பக்கம் சொவத்து முன்னால நின்னுங்க?"
"செத்த நில்லு வாரேன்" என்றவர் வீட்டுக்குள் போனார்.
கண்ணாடியில் முகம் பார்த்தார். தலைமுடியையும் மீசையையும் நன்றாக சீவினார்.பிறகு மீசையை திருகினார். மந்திரமும் பூதத்தானும் வெளியில் நின்று அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தனர். 
"கெழத்துக்கு வயசு கொறையுதுன்னு நினைப்பு?"என்றான் பூதத்தான்.
பொந்தன் நமட்டுச்சிரிப்பு சிரித்தான். 
"ஏம்ல சிரிக்கியோ?"
"இவ்ளவு வயசுலயும் தெடமாதான் இருக்கே"
"எழுபத்திரண்டு வயசுலாம் ஒரு வயசால,ஒங்க தாத்தன் தொண்ணூத்தியெட்டு வயசுவரைக்கும் கல்லு மாதிரிலா இருந்தாரு.அப்பமும் ஒரு மூட்டை சாக்கை முதுவுல தூக்கிட்டு வந்துருவாரே...நீ அரை மூட்டை கடலையே தூக்கதுக்கே வாப்பாருதே"
"சும்மாவா..பொங்குன சோத்தை பானையோட திங்குத ஆளுலா அவரு"
புகைப்படக்காரர் கேமராவில் கோணம் பார்த்தார். முகத்தில் கொஞ்சம் தோரணைக்காட்டி கைகளை விறைப்பாக வைத்துக்கொண்டு நின்றார் ஆண்டியய்யா.
"ஏம் இப்படி நிக்கியோ? வழக்கமா இருக்கத மாதிரி இருங்க"
"ஆங்.."
திரும்பவும் அதே விறைப்பு. சிறிது நேரம் ஒழுங்குபடுத்திவிட்டு படம் எடுத்தார்.
"தம்பி நல்லா வரும்லா"
"இருக்குத மொகம் அப்டியே வந்துரும்."
"என்னைக்குத் தருவே"
"இன்னா ரெண்டு நாள்ல"
"ரெண்டு நாளோ, மூனு நாளோ, சரியா என்ன கெழமைனு சொல்லு."
"இன்னைக்குப் பொதனா, வெள்ளிக்கிழமை மத்தியானம்."
"செரி' என்றவர், பூதத்தானிடம் திரும்பி, "ஏல அப்பம் படம் வரைதவனை சனிகெழம வரச்சொல்லிரு. கோயில்ல மத்த வேலையெல்லாம் ஒழுங்கா நடக்கா? பந்தக்காரன் போன வருஷம் போட்ட மாதிரி தொங்கலா பந்தலை போட்டுறாம?"
"அதெல்லாம் சரியா இருக்கும். இப்பவும் தொங்கலா போட்டம்னா துட்டுக் கெடைக்காதுன்னு சொல்லியாச்சுலா" 
"பூக்காரனுக்கு எவ்வளவு பணம்னு பேசியாச்சா?"
"போன தடவை கொடுத்ததோட அதிகமா வேணுமாம், வெல வெலதாச்செல்லாம் ஏறிப்போச்சுங்காம்""சரி கூட பத்தம்பத கொடுக்க சொல்லுங்க, வேறென்ன செய்ய?"
"ஆங்.."
"சரி சாப்டேலால"
"நாலு மணிவரைக்குமா மனுஷன் சாப்புடாம இருப்பான்"
"அப்பண்ணா நீத்தண்ணி மோராவது குடிச்சுட்டுப் போங்கல"
"அதெல்லாம் வேண்டாம்" என்று சொல்லிவிட்டு கிளம்பினர்.

இரண்டு மூன்று நாட்களாகத் திடீர் மழை பெய்திருந்தது.தொடர் மழை இல்லையென்றாலும் தூறல் நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டிருந்தது. வீட்டைச் சுற்றிலும் இளம் பச்சை நிறத்தில் புற்கள், இப்போதுதான் பிறந்த குழந்தை மாதிரி தலை காட்டிக் கொண்டிருந்தன.
வீட்டு வாசலின் இடப்பக்கம் முருங்கை மரத்தினடியிலிருந்த சிறு திரட்டில் கொத்துமல்லி செடிகள் முளைத்திருந்தன. தானாக முளைத்த செடிகள்.
ஆண்டியய்யா கொத்துமல்லிச்செடிகளை ஒவ்வொன்றாக பிடுங்கினார். பேரன் அவரது தோளில் சாய்ந்துகொண்டிருந்தான்.
"இந்தாப்பா.. இத கடிச்சுத் தின்னு. உடம்புக்கு நல்லது."
"நீயும் தின்னு தாத்தா"
"ஏ போக்கிரியாண்டி, ஒனக்கு கொடுத்தா நீ,எனக்குத் தாரியாங்கும், தின்னுடா' என்றவர் அருகில் புளியங்கொட்டையிலிருந்து வெடித்து வளர்ந்திருந்த சிறு செடியைப் பிடுங்கினார்.
குழந்தைகளோடு பேசுவது நடப்பது இனிமையானது. தாமே குழந்தையாகி பின்னோக்கி வாழ்வது.ஆண்டியய்யா குழந்தையாகியிருந்தார்.

இம்மாதிரி இருவரும் பாசத்தில் நனைகிற நாட்களில் கொஞ்ச தூரம் நடப்பது வழக்கம்.மிஞ்சிப்போனல் வேல் டீக்கடை வரை. இன்னும் நடக்கலாம் என்றால் கோவன்குளம் ரயிலடிவரை. இந்த நடையின் போது பேரனுக்குச் செம்புலிஙகம் கதையிலிருந்து மலைக்கள்ளன் கதைவரை சொல்லிக்கொண்டே போவார். ஆனால் அவன் விருப்பமாகக் கேட்பது மந்திரமூர்த்திக்கதை.குடும்பக் கோயில் கதை.இதில் சங்கிலிபூதம் அவனுக்கும் விருப்பமாகி இருந்தது. ஆனால் இலேசில் முடிகிற கதையல்ல, இரண்டு நாள் முழுக்க வில்லடித்துப் பாடப்படுகிற கதை. கொஞ்சம் கொஞ்சமாக பேரனது மூளைக்குள் ஏற்றிவிட்டார்.

கோயிலில் பூடங்கள் வெள்ளையடிக்கப்பட்டிருந்தன.மொத்தம் சிறியதும் பெரியதுமாக இருப்பத்தேழு பூடங்கள். அந்த திறந்தவெளி கோயில் வளாகத்தில் அனைத்துப் பூடங்களும் பளிச்சென்று இருந்தன. நான்கு வண்டி ஆற்றுமணல், கோயில் வளாகம் முழுவதும் தரையில் பரப்பபட்டிருந்தன. வில் கதை கேட்க வருபவர்கள் நிம்மதியாக உட்கார இந்த ஏற்பாடு.

பந்தல் வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் தென்னந்தட்டிகளும் கம்புகளுமாக கோயில் அடைசலாக இருந்தது.
பூதத்தார் பூடத்துக்கு முன்பாக நின்றைருந்தான் அந்த ஓவியன். அவனது வலப்பக்கம் படப்புச்சோறுக்கு அடுப்பு மூட்டுவதற்கான மூன்று பெரிய கற்கள் தரையில் கிடந்தன. சதுர அளவில் இருந்த ஒரு கல்லை எடுத்து பூடத்துக்கு முன்பு போட்டு ஏறினான். வரைவதற்கு வாகாக இருந்தது. பென்சிலால் வரையலானான். அவனது கையில் மாடலாக ஆண்டியய்யாவின் புகைப்படம்.

கோயில் வாசல் படியைத்தொட்டு வணங்கிவிட்டு உள்ளே வந்த ஆண்டியய்யாவிடம் ஏழுட்டு வழவு சப்பாணி,"என்ன மாமோவ்,ஒம்மதான் வரைய போறாம் போலுக்கு" என்றான்."ஆங்.. அப்படியா.. என்னத்தை வரையுதாம்னு பாப்பமே"என்றவர், அவனுக்குப் பின் பக்கம் நின்றுகொண்டு கவனித்தார்.

அந்த ஓவியன் அவரை ஒரு மாதிரி பார்த்துவிட்டு,தன் வேலையைத் தொடர்ந்தான்.
முகம், மீசை, கண்கள், இவற்றுக்குத்தான் அவரது புகைபடங்கள் தேவையாயிருந்தது. தலையில் கிரீடம், கையில் பெரிய அறுவாள்.போன்றவையெல்லாம் ஏற்கெனவே வரையப்பட்டிருக்கிற அடையாளங்களின் அடிப்படையில் அவனே வரைய வேண்டும்.

பென்சிலால் வரைந்துவிட்டு கல்லிலிருந்து இறங்கி கொஞ்சம் தள்ளி நின்று தான் வரைந்ததைப் பார்த்தான். பிறகு கழுத்தை சாய்த்து கோணலாகப் பார்த்தான். வலது கை கீழிறங்கியிருந்த்து.சரி செய்தான்.

ஆண்டியய்யா அதைப் பர்த்துவிட்டு அந்த ஓவியனிடம் கேட்டார்.
'எம் மூஞ்சு மாதிரி வரும்லா"
'வரைஞ்சு முடிஞ்சதும் பாருங்க"
"அப்பதான் எல்லாம் தெரிஞ்சுருமே" என்றவரிடம் சப்பாணி,'ஏம்யா பறக்கேரு.அதான் ஒம்ம போட்டாவை கையில் வச்சிருக்காருலா?"என்றான்.

இதற்கு முன்பெல்லாம் இப்படியல்ல. பூடங்களில் சாமியை வரைவது இல்லாதிருந்தது.கடந்த இரண்டு கொடைகளுக்கு முன்பு,மேலத்தெரு கருப்பசாமி கோயிலில் பூடத்தில் படம் வரைந்திருந்தார்கள் எப்போதும் இல்லாத அதிசயமாக.
அதிலிருந்து இங்கும் வரைய வேண்டும் என்ற பேச்சு வந்து இப்போது நிறைவேறி விட்டது. சங்கத்துக்கு வருடம் ஒரு முறை தலைவர் மாறி கொண்டே இருப்பார்.ஆண்டியய்யா பல முறை தலைவராயிருந்திருக்கிறார்.அப்போதெல்லாம் இப்படியொரு பிரச்சனை வந்திருந்தால் வேண்டாமென்று சொல்லியிருப்பார்.இப்போது கூட சொல்லிப்பார்த்தார். பெரும்பாலானோர் தங்கள் பிடியில் உடும்பாக இருக்க இவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.பிறகு பூதத்தாரை எப்படி வரையலாம் என்று பேசிப் பேசி இவரே மாடலாகவும் போனார்.

அச்சு அசலாக ஆண்டியய்யாவின் உருவம் பூடத்தில் இருந்தது. அவருக்குப் பூரிப்பு தாளவில்லை. கையில் பெரிய அறுவாளுடனும் நெருப்புத்தெறிக்கும் கண்களுடன் ஆக்ரோஷமாக வந்திருந்தது படம். அதையே பார்த்துக்கொண்டிருந்தவருக்குத் தமது இளமை காலம் கண்முன் வந்து கனவு தந்து போனது. தமது தோற்றம் பற்றி அவருக்கே ஒரு கெத்து. பேரன் பூடத்தின் முன்பு நின்று 'தாத்தா தாத்தா என்று அழைத்தான்."ஏல சாமிடா அது..கும்புடு"

"இல்ல தாத்தா நீதான்"
'பூதத்தாருப்பா.... கும்புடலைனா சாமி அடிக்கும்"
'போ தாத்தா நீதான் அது"
"ஏய்..அப்படி சொல்லபடது. சாமிடா"
"நீதான் அது. உன்னய போயி கும்புடசொல்லுதியே தாத்தா....சேக்காளிய யாராவது கும்புடுவாங்களா?"



 
 

N. Ganesan

unread,
Feb 13, 2015, 8:38:02 AM2/13/15
to santhav...@googlegroups.com, mintamil, vallamai


On Wednesday, February 11, 2015 at 6:07:41 PM UTC-8, Rajagopalan wrote:
//சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே" என்றார் மஹாகவி.
அவருக்கு முன் இச்சொல்லை யார் பயன்கொண்டுள்ளனர் ?//



பாரதிக்கு முன்பே சரி என்கிற சொல்லை, ஒப்பு, சமம் என்ற பொருளில், காளமேகப்புலவர் கையாண்டிருக்கிறார்.

மீனுக்கும் பேனுக்கும் சிலேடை.

மன்னீரி லேபிறக்கும் மற்றலையி லேமேயும்
பின்னீச்சில் கொத்தும் பெருமையால் - சொன்னேன்கேள்
தேனுந்து சோலைத் திருமலைரா யன்வரையில்
மீனும்பே னும்சரிஆ மே.



காளமேகத்தின் கலைமகள் துதி

வெள்ளைக் கலைஉடுத்து வெள்ளைப் பணிபூண்டு 
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் – வெள்ளை 
அரியா சனத்தில் அரசரோடு என்னைச் 
சரியா சனம்வைத்த தாய்



கல்வெட்டுக்களிலே சரிப்படுத்தல், சரிசெய்தல் இருக்கின்றன. கம்பன்
சரி இலது = ஒப்பு இல்லாதது என்கிறான்.

'பேச அரிது ஒருவர்க்கேயும் பெரு விலை இதனுக்கு;  ஈதுக்
கோ, சரி இலது' என்று எண்ணும் ஒளி மணிப் பூணும், தூசும்,
மூசு அரிக்கு உவமை மும்மை மும்மதக் களிறும், மாவும்,
கேசரிதனக்குத் தந்தான் - கிளர் மணி முழவுத் தோளான்.

ஈதுக்கோ சரி இலது -    இதற்கொப்பான பொருள் இல்லை.

-----------------

சீனிச்சக்கரைப் புலவர், புகையிலை விடுதூது

புகையிலையினால் செய்யப்படும் பொடியின் மகிமை,
    "வாடைப் பொடிகதம்ப மானவெல்லா முன்னுடைய
     சாடிப் பொடிக்குச் சரியுண்டோ"
என்ற கண்ணியிலே சொல்லப் பெறுகின்றது.
 
Similar to Tamil, sari exists in Kannada, Telugu, Malayaalm, Tulu ... also. All these are Dravidian root,  and not from  sadr̥śaḥ (which becomes sadisa, possibly sadisa turns into sahii in Hindi). sari in Dravidian is quite distinct, and has to do with சேர்-சார்-(செரி/சரி). We have seen sari attested even in the days of Buddha jaataka stories.

N. Ganesan


 
நா. கணேசன்
 

தேமொழி

unread,
Feb 13, 2015, 5:50:22 PM2/13/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

///
ஸிஃபி தளத்தில் வந்த சிறுகதை. அத் தளம் மறைந்து நாளாகிறது.
///

இது தகவலுக்காக...தடம் மற்றும் நோக்கமல்ல ...


ஸிஃபி 2010 இல் தனது வணிக நோக்கில் மாற்றம் செய்து கொண்டதாகத் தெரிகிறது.



இன்றைய "ஸிஃபி"  இங்கு >>>> http://tamil.samachar.com/
"ஸிஃபி"  "சமாச்சார்" ஆக மாறியுள்ளதாகத் தெரிகிறது.


அன்றைய ஸிஃபி ...
படமாக கீழே


..... தேமொழி

N. Ganesan

unread,
Feb 13, 2015, 7:47:40 PM2/13/15
to santhav...@googlegroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com
இரண்டு திருப்புகழில் நாம் பயன்படுத்தும் ‘சரி’:

திருப்புகழ் 312 கன க்ரவுஞ்சத்தில்  (காஞ்சீபுரம்)

தனதொரங் குட்டத் தெட்பல டுக்குஞ்
     சரியலன் கொற்றத் துக்ரவ ரக்கன்
          தசமுகன் கைக்குக் கட்கம ளிக்கும் ...... பெரியோனுந்

நீடும் தனது ஒர் அங்குட்டத்து எள் பல் அடுக்கும் சரி
அலன்
 ... அப்படி நசுக்கும் தனது (சிவனது) ஒப்பற்ற பெரு விரலின்
எள் நுனி அளவுக்கும் ஈடாகாதவனும்,

கொற்றத்து உக்ர அரக்கன் தச முகன் கைக்குக் கட்கம்
அளிக்கும் பெரியோனும்
 ... வீர உக்ரம் கொண்ட அரக்கனும்,
பத்து முகத்தினனும் ஆகிய இராவணனுடைய கைகளுக்கு வாள்
ஒன்றைப் பரிசாக அளித்த பெரியவனுமாகிய சிவபெருமானும்,

--------------------------------------------------------------

திருப்புகழ் 474 கரிய மேகமெனும்  (சிதம்பரம்)

சரி இலாத சயம்பவியார் முகில் அளக பார பொ(ன்)னின்
சடையாள் சிவை சருவ லோக சவுந்தரியாள் அருள் கந்த
வேளே
 ... தனக்கு ஒப்பில்லாத சுயம்புவான தேவதை, மேகம்
போன்ற கூந்தல் பாரத்தை உடையவள், பொன் நிறமான சடையை
உடையவளாகிய சிவை, எல்லா உலகங்களுக்கும் மேம்பட்ட அழகு
உடையவள் ஆகிய உமை பெற்று அருளிய கந்தவேளே.
Reply all
Reply to author
Forward
0 new messages