தமிழ்மரபு அறக்கட்டளை நிகழ்வுகள் - நவம்பர் 2025

226 views
Skip to first unread message

தேமொழி

unread,
Oct 30, 2025, 2:47:58 PMOct 30
to மின்தமிழ்
ilakiyakoodal 12.jpg

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
மதுரைக்கிளை ஏற்பாட்டில்
இணையவழி நூல் திறனாய்வு  நிகழ்ச்சி
இலக்கியக்கூடல்  - 12
__________________________________________________________

முனைவர்  க. சுபாஷிணி எழுதிய
“தொல் மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும்“

நூலைத் திறனாய்வு செய்பவர்:
கவிஞர் சிவகாமி பிரியா

நாள் : நவம்பர்  1, 2025; சனிக்கிழமை, இந்திய  நேரம் மாலை 6.00 மணி

Join Zoom Meeting:https://us06web.zoom.us/j/84159419415?pwdOHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09
Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi

தொடர்புக்கு:
மு. சுலைகா பானு, பா. சுரேஷ்
இலக்கியக்கூடல் பொறுப்பாளர்கள்
தமிழ் மரபு  அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
மதுரைக்கிளை 

நூல் கிடைக்குமிடம் :

தேமொழி

unread,
Nov 2, 2025, 12:43:13 PMNov 2
to மின்தமிழ்
ilakiyakoodal 12.jpg

முனைவர் சுபாஷிணியின்
தொல்மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும்
-நூல்திறனாய்வு: கவிஞர் சிவகாமிபிரியா

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இலக்கியக்கூடல்  - 12 [நவம்பர்  1, 2025]
https://youtu.be/OGEIYLyphNE
________________________________

நூல் கிடைக்குமிடம் :
https://www.commonfolks.in/books/d/tholmanitha-inangalum-manithakula-idapeyarvum
________________________________


தேமொழி

unread,
Nov 4, 2025, 11:44:13 PMNov 4
to மின்தமிழ்
390.jpg 

திசைக்கூடல் - 390
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்
வையத் தலைமை கொள் பிரிவு வழங்கும் நிகழ்ச்சி
__________________________________________________
தலைப்பு :
"இந்திய அறிவு முறைமை (IKS) வளர்ச்சியில் பெண்களின் பங்கு"

சிறப்புரையாளர்:
முனைவர் சகோ. அ.ஆரோக்கிய ஜெயசீலி,
முதல்வர், அக்சிலியம் கல்லூரி, வேலூர்.


நோக்கவுரை :
முனைவர் க.சுபாஷிணி,
தலைவர்,  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.

நாள்: நவம்பர் 08, 2025, சனிக்கிழமை,  இந்திய நேரம்  மாலை 6.00 மணி

Join Zoom Meeting:
https://us06web.zoom.us/j/84159419415?pwd=OHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09

Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi

தொடர்புக்கு:
திருமிகு.கலைவாணி
வையத் தலைமை கொள் பொறுப்பாளர்.

தேமொழி

unread,
Nov 9, 2025, 9:04:02 AMNov 9
to மின்தமிழ்
390.jpg
இந்திய அறிவு முறைமை (IKS) வளர்ச்சியில் பெண்களின் பங்கு
—முனைவர் சகோ. அ.ஆரோக்கிய ஜெயசீலி
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் திசைக்கூடல்—390
வையத் தலைமை கொள் நிகழ்ச்சி [நவம்பர் 08, 2025]
https://youtu.be/eeYoGe71Arw
____________________

தேமொழி

unread,
Nov 12, 2025, 11:18:42 PMNov 12
to மின்தமிழ்

391.jpg

திசைக்கூடல் - 391

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்
வையத் தலைமை கொள் பிரிவு வழங்கும் நிகழ்ச்சி
____________________________________________________________________

குழந்தைகள் தினச் சிறப்பு நிகழ்ச்சி -
குழந்தைகளின் பார்வையில் அறிவியல்


சிறப்புரையாளர்:
ஜெர்மனி, கொரியா, சிங்கை மற்றும்
தமிழகம் வாழ் குழந்தைகளின் உரைகள்

தலைமையுரை:
முனைவர் க.சுபாஷிணி,
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.

வாழ்த்துரை:
முனைவர் அ.கா.விஸ்வநாதன், இ.கா.ப.
காவல்துறை தலைமை இயக்குநர்(பணி நிறைவு), தமிழ்நாடு.

நாள்: 15, நவம்பர் 2025,சனிக்கிழமை,  இந்திய  & இலங்கை நேரம்  மாலை 6.00 மணி

தேமொழி

unread,
Nov 16, 2025, 12:27:14 PMNov 16
to மின்தமிழ்
391.jpg

குழந்தைகளின் பார்வையில் அறிவியல்
குழந்தைகள் தினச் சிறப்பு நிகழ்ச்சி

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்
வையத் தலைமை கொள் பிரிவு வழங்கும் நிகழ்ச்சி [நவம்பர் 15,2025]
https://youtu.be/7BUXKoyeDlE
---

தேமொழி

unread,
Nov 19, 2025, 5:18:47 AMNov 19
to மின்தமிழ்
rajula.jpg 

மலேசியா - இந்தியா கடற்பயணங்கள்
https://www.youtube.com/watch?v=FNIocP7Nrtk

---
1900-களில் ஸ்டேட் ஆஃப்  மெட்ராஸ் (State of Madras), எஸ்.எஸ். ரஜுலா (S.S. Rajula) ஆகிய கப்பல்கள்  பிரிட்டிஷ் இந்தியாவின்  இந்தியர்களை வாழ்வாதாரம், வணிகம் ஆகியவற்றுக்காக  அக்கரைச் சீமையான மலேசியா சிங்கப்பூர் நாடுகள்  நோக்கிப்  பயணிக்க உதவிய நீராவிக் கப்பல்கள். அவை  தென்கிழக்காசியா நோக்கிப் பயணித்த அக்காலத் தமிழர் வாழ்வியலில் மறக்கமுடியாத வரலாற்றுச் சின்னங்கள். கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பால் உடல் நலிவுறும் வகையில் இளம் வயதில் தான் செய்த கப்பல்  பணத்தையும் அக்கால வரலாற்றையும் நினைவு கூர்கிறார் மலேசியத் தமிழரான ஜோகூர் திரு. வடிவேலு அவர்கள்.  இக்காணொளி தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுக்  காணொளி வரிசையில் இணைக்கிறது. பார்த்து  தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வீர். நன்றி.
முனைவர் தேமொழி
செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

தேமொழி

unread,
Nov 19, 2025, 5:32:41 PMNov 19
to மின்தமிழ்
கடந்த ஆண்டு நான் மலேசியா சென்றிருந்தபோது ஜொகூர் பாரு நகரில் செய்த பதிவு இது. இதில் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் வடிவேலு அவர்கள் அவரது இளமைக்கால கப்பல் பயணம் பற்றி கூறுகிறார்.

இவர்கள் குடும்பத்தவர்கள் தமிழ்நாட்டில் வேலூர் ஆற்காடு பகுதியில் இருந்து மலாயாவிற்கு ரப்பர் தோட்டங்களில் பணிபுரிய ஒப்பந்த கூலிகளாக வந்தவர்கள்.

State of Madras என்ற பெயர் கொண்ட கப்பலில் ஆறு நாள் பயணம்.

இவரது விவரிப்பில் கேட்டுப்பாருங்கள்.

--  சுபா  

தேமொழி

unread,
Nov 20, 2025, 4:02:33 AMNov 20
to மின்தமிழ்

johur temple heritage center logos.jpg 

ஜோகூர் இராஜமாரியம்மன் கோவில்-இந்திய மரபுடைமை மையம்
https://youtu.be/2EomDNGD49o

---
கடந்த 19, 20  ஆம்  நூற்றாண்டுகளில்   பிரிட்டிஷார்   ஆட்சிக் காலத்தில் மலேசியாவிற்குக் குடியேறிய தமிழர்கள் அங்கு தங்களின் நாட்டார் தெய்வங்களுக்குக் கோயில் எழுப்பி வழிபட்டனர். அவற்றுள் ஒன்று ஜோகூர் இராஜமாரியம்மன் கோயில். இக்கோயிலின் சிறப்பு, இங்குத் தமிழர் தங்கள் பண்பாடு, வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் "இந்திய மரபுடைமை மையம்" ஒன்றை அமைத்திருப்பது. தமிழர்கள் தங்கள் மரபினை வரலாற்றை அறிய உதவும் இவ்விடத்தை முனைவர் சுபாஷிணி இக்காணொளி  மூலம் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.  
 இதன் தோற்றம் வளர்ச்சி குறித்து மலேசியத் தமிழர்களான  திருவாளர்கள் வடிவேலு, சேதுபதி, வேணுகோபால் ஆகியோர் முனைவர் க. சுபாஷிணியின் நேர்காணலில் விவரம் அளிக்கிறார்கள். அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் எமது நன்றி.  

தேமொழி

unread,
Nov 20, 2025, 4:04:45 AMNov 20
to மின்தமிழ்
suvali - heritage week.jpg

திருச்சிராப்பள்ளி, அகில இந்திய வானொலி நிலையம்,
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையம்
இணைந்து வழங்கும்

""பாரம்பரியப் பெட்டகங்கள்""

 பங்கேற்பவர்கள்:
முனைவர் இரா.கலைக்கோவன்,  பேராசிரியர்கள் அர. அகிலா, மு நளினி

உலகப் பாரம்பரிய வாரச் சிறப்புத் தொடர்:
1. அப்பருக்குச் சோறூட்டிய அழகன் கோயில்
[19-11-2025 புதன்கிழமை ஒலிபரப்பு]

Message has been deleted

தேமொழி

unread,
Nov 20, 2025, 2:59:16 PMNov 20
to மின்தமிழ்
மலாயாவிற்கு தமிழர்கள் புலம்பெயர்ந்த வரலாற்றோடு மலேசிய மண்ணில் எழுப்பப்பட்ட கோயில்களின் வரலாறும் இரண்டறக் கலந்து இருக்கின்றது. 

மலேசியாவின் பெருநகரங்கள் சிறு நகரங்கள் தோட்டங்கள் என எல்லா இடங்களிலும் மாரியம்மன் கோயில்களைக் காணலாம். 

எளிய மக்களின் தெய்வம் மாரியம்மன். பஞ்சத்தில் அடிபட்டு உயிர் வாழ்வதற்காகத் தங்கள் சுற்றத்தாரையும்  உறவுகளை விட்டு மிகத் தூரமான இடங்களுக்குப் பயணம் செய்த தமிழ் மக்கள் தங்கள் பயணத்தில் அவர்களோடு கொண்டு சென்றது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கை மாரியம்மன் என்ற தாய் தங்களைக் காப்பாற்றுவாள் என்ற ஓர் அடிப்படையான நம்பிக்கை. 

மாரியம்மன் ஆலயங்களை எளிய தமிழ் மக்கள் புலம்பெயர்ந்த எல்லா நாடுகளிலும் தீவுகளிலும் நாம் இப்போதும் காணலாம். 

அப்படி ஒரு கோயில் தான் இந்த ராஜமாரியம்மன். தொடக்கத்தில் எளிய மாரியாத்தாவாக இருந்த அம்மன் படிப்படியாக இன்று அழகிய கோபுரங்களுடன் கூடிய ராஜமாரியம்மனாக வளர்ச்சி கண்டிருக்கின்றாள். ஜோகூர் மாநிலத்தில் தமிழ் மக்களின் பொருளாதார மேம்பாடு உயர உயர மாரியம்மன் கோயிலும் மேம்படுத்தப்பட்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பிற கோயில்களை விட இந்தக் கோயிலின் சிறப்பு என்னவென்றால் இவர்கள் ஓர் அருங்காட்சியகத்தை உருவாக்கி இருக்கின்றார்கள். தமிழர்களின் மரபு மையமாக இது அமைகிறது. கடந்த நூற்றாண்டில் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வந்த கப்பல்கள் பற்றிய தகவல்களும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களும் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டு வரலாற்று ஆர்வலர்கள் இத்தகைய காணொளிகளைப் பார்க்கும்போது 200, 300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து பிழைப்பதற்காகச் சென்ற மக்கள் இன்று தங்கள் வாழ்க்கையில் முன்னேறிப் பல நாடுகளில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் காணொளிக் காட்சியாக அறிந்து கொள்ளலாம். 

கடந்த ஆண்டு மலேசியாவின் ஜோகூர் மாநிலத்திற்கு நான் சென்றபோது செய்யப்பட்ட பதிவு. 


-- சுபா 

தேமொழி

unread,
Nov 20, 2025, 11:13:58 PMNov 20
to மின்தமிழ்

Buddhist.jpg
புத்த மகாவிகாரை கோலாலம்பூர்
காணொளி: https://youtu.be/FCQVmCwh4tE

---
இக்காணொளியில்  கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட் பகுதியில் உள்ள 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த  புத்த மகாவிகாரையை அறிமுகப்படுத்துகிறார்  முனைவர் கௌதம சன்னா
Buddhist Maha Vihara—Brickfields Buddhist Temple

காணொளி உருவாக்கம் உதவி—நன்றி:
முனைவர் கௌதம சன்னா
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர்

முனைவர் க. சுபாஷிணி  

தேமொழி

unread,
Nov 21, 2025, 10:27:14 PMNov 21
to மின்தமிழ்

museum title.jpg

மலாய் மானிடவியல் அருங்காட்சியகம்
https://youtu.be/SqRTABxh1iQ


மலாய் மானிடவியல் அருங்காட்சியகம்
Malay World Ethnology Museum
இக்காணொளியில்  கோலாலம்பூர்  மலாய் மானிடவியல் அருங்காட்சியகத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார்  முனைவர் க. சுபாஷிணி.  மலாய் மானிடவியல் அருங்காட்சியகம் கோலாலம்பூரில் தேசிய அருங்காட்சியகம் உள்ள வளாகத்திலேயே உள்ளது. மலாக்கா வரலாறு மற்றும் இனவியல் பொருட்கள் பல இங்குக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. மலாய் பாரம்பரியப் பொருட்கள் மற்றும் பண்பாட்டில் உள்ள பல்லாங்குழி, பட்டம், பம்பரம் ஆகிய விளையாட்டுள், இசைக்கருவிகள், பொழுது போக்கு, உணவு தயாரிப்பு,  திருமண வழக்குகள் சார்ந்த பொருட்களாக இங்கு  பாதுகாக்கப்படுவனவற்றில்  தமிழர் பண்பாட்டு வழக்குகள் உள்வாங்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
இக்காணொளி தமிழ் மரபு அறக்கட்டளையின் காணொளி வரிசையில் இன்று இணைக்கிறது. பார்த்து  தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வீர். 

தேமொழி

unread,
Nov 22, 2025, 7:07:00 PMNov 22
to மின்தமிழ்
museum title card.jpg
மலேசிய தேசிய அருங்காட்சியகம்
பூஜாங் பள்ளத்தாக்கு தொல்பொருள் காட்சியகம் 
The National Museum in Kuala Lumpur, Malaysia
---
மலேசியா தேசிய அருங்காட்சியகத்தின் பூஜாங் பள்ளத்தாக்கு தொல்பொருள் காட்சியகத்தில்  தமிழ்நாட்டின் பண்பாட்டுடன் தொடர்பு கொண்டுள்ள புத்த இந்து மத  தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை குறித்தும்,  பூஜாங் பள்ளத்தாக்கு தொல்பொருள் அகழாய்வுகள் குறித்து அங்குள்ள விளக்கங்களையும் இக்காணொளியில் முனைவர் க. சுபாஷிணி விவரிக்கிறார். 
இக்காணொளி தமிழ் மரபு அறக்கட்டளையின் காணொளி வரிசையில் இன்று இணைக்கிறது. பார்த்து  தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வீர். 

நன்றி.
முனைவர் தேமொழி
செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
---



தேமொழி

unread,
Nov 23, 2025, 4:25:11 AMNov 23
to மின்தமிழ்
heritage week radio show 2.jpg
திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையமும்,
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையமும்

இணைந்து வழங்கும்
2025 - உலக பாரம்பரிய வார சிறப்புத் தொடர் நிகழ்ச்சிகள்  (நவம்பர் 19- 25)

""பாரம்பரியப் பெட்டகங்கள் - 2""

பங்கேற்பவர்கள்:
முனைவர் இரா.கலைக்கோவன்,  பேராசிரியர்கள் அர. அகிலா, மு நளினி

உலகப் பாரம்பரிய வாரச் சிறப்புத் தொடர்:
பெருந்திருக்கோவிலும் பாறை அகழ்வுகளும்
[20-11-2025 புதன்கிழமை ஒலிபரப்பு]
https://suvali.tamilheritage.org/பெருந்திருக்கோவிலும்-ப/

---

தேமொழி

unread,
Nov 23, 2025, 11:33:53 PMNov 23
to மின்தமிழ்
scott road.jpg

கோலாலம்பூர் ஸ்காட் சாலை தமிழர் கோயில்கள்
https://youtu.be/4qbiVQ1w_TA

---
ஸ்ரீ மகா முனீஸ்வரர், அருள்மிகு வீர அனுமான் ஆலயம், கிருஷ்ணர் கோயில், ஸ்ரீ கந்தசாமி கோயில்  என தமிழர்கள் வழிபடும் கோயில்கள் நிறைந்த கோலாலம்பூர் ஸ்காட் சாலையையும் அங்குள்ள தமிழர்களின் கோயில்களையும் கடைகளையும் இக்காணொளியில் விளக்குகிறார் முனைவர் க. சுபாஷிணி
[Kuil Sri Maha Muneswarar Temple, Sree Veera Hanuman Temple, Kuil Sri Krishna Temple, Sri Kandaswamy Temple at Scott Road, Brickfields, Kuala Lumpur, Malaysia]

இக்காணொளி தமிழ் மரபு அறக்கட்டளையின் காணொளி வரிசையில் இன்று இணைக்கிறது. பார்த்து  தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வீர்.
நன்றி.
முனைவர் தேமொழி
செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
---

மலேசியாவின் முக்கிய பெருநகரங்களில்.. குறிப்பாக பினாங்கு கிள்ளான் ஈப்போ கோலாலம்பூர் ஜொகூர் பாரு போன்ற இடங்களில் தமிழ் மக்கள் பெருவாரியாக குடியேறினார்கள். தோட்டக்காடுகளில் 200 300 ஆண்டுகள் கால வாக்கில் ஒப்பந்த தொழிலாளர்களாக வந்த மக்களும் நாளடைவில் இந்த பெருநகரங்களுக்கு வந்து சேர்ந்தார்கள்.

பொருளாதார பலம் அதிகரிக்கும் வேளையில் அவர்களது சமய நம்பிக்கை வளம் பெறும் வகையில் கோயில்களை மிக நேர்த்தியாக தமிழ் மக்கள் உருவாக்கி எழுப்பியிருக்கின்றார்கள்.

இந்த பரிணாம மாற்றத்தை வளர்ச்சியை இந்த வீடியோ காணொளியில் பகிர்ந்து இருக்கின்றேன்.

புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் மக்கள் எப்படி படிப்படியாக வளர்ச்சி கண்டார்கள் என்பதை ஆய்வு செய்யும் ஒவ்வொருவருக்கும் இக்காணொளி நிச்சயம் பயனளிக்கும்.
-- சுபா
---

தேமொழி

unread,
Nov 24, 2025, 10:47:58 PM (14 days ago) Nov 24
to மின்தமிழ்
Singapore .jpg
சிங்கப்பூர்
---
தமிழர்கள் தங்களின் வாழ்வாதாரம் காரணமாக அமெரிக்கா ஆஸ்திரேலியா இங்கிலாந்து  கனடா ஐரோப்பிய நாடுகளுக்கென்று செல்லத் தொடங்கிய சென்ற நூற்றாண்டின் பிற்பகுதிக்கு முன்னர்; அக்கரைச்சீமையான 'சிங்கப்பூர்' தமிழர்கள் தொழில் காரணமாகச் சென்று வாழும் நிலமாக இருந்தது.  மலேசியா-சிங்கப்பூர் தனித்தனி நாடாவதற்கு முன்னரே தமிழர்களின் பங்களிப்பும் தாக்கமும் சிங்கப்பூரில் உண்டு. இன்று பல இனங்கள் இணைந்து வாழும் நாடாக, பொருளாதாரத்தில், தொழில்நுட்பத்தில் பெரும் வளர்ச்சி பெற்று உலகின் சிறந்த நாடுகள் வரிசையில் முதல் 15 நாடுகளுக்குள் ஒன்றாக,   வளர்ந்த ஆசியப் பொருளாதார ஆசியப் புலிகள் என்னும் நான்கு  நாடுகளில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.  இந்நாட்டின் வரலாற்றைப் பற்றி முனைவர் க. சுபாஷிணி இக்காணொளியில் விவரிக்கிறார். 
இக்காணொளி தமிழ் மரபு அறக்கட்டளையின் காணொளி வரிசையில் இன்று இணைக்கிறது. பார்த்து  தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வீர்.
நன்றி.
முனைவர் தேமொழி
செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
---


--- 

தேமொழி

unread,
Nov 24, 2025, 10:55:04 PM (14 days ago) Nov 24
to மின்தமிழ்
heritage week radio show 3.jpg

திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையமும்,
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையமும்
இணைந்து வழங்கும் . . .
2025 - உலக பாரம்பரிய வார சிறப்புத் தொடர் நிகழ்ச்சிகள்  (நவம்பர் 19-25)

""பாரம்பரியப் பெட்டகங்கள் - 3""


பங்கேற்பவர்கள்:
முனைவர் இரா.கலைக்கோவன்,  பேராசிரியர்கள் அர. அகிலா, மு நளினி

உலகப் பாரம்பரிய வாரச் சிறப்புத் தொடர்:
விண்வருடும் இராஜேந்திரப் பெருமிதம்
[21-11-2025 வெள்ளிக்கிழமை  ஒலிபரப்பு]
https://suvali.tamilheritage.org/விண்வருடும்-இராஜேந்திரப/
---

தேமொழி

unread,
Nov 24, 2025, 11:27:08 PM (14 days ago) Nov 24
to மின்தமிழ்
heritage week radio show 4.jpg

திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையமும்,
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையமும்
இணைந்து வழங்கும் . . .
2025 - உலக பாரம்பரிய வார சிறப்புத் தொடர் நிகழ்ச்சிகள்  (நவம்பர் 19-25)

""பாரம்பரியப் பெட்டகங்கள் - 4""


பங்கேற்பவர்கள்:
முனைவர் இரா.கலைக்கோவன்,  பேராசிரியர்கள் அர. அகிலா, மு நளினி

உலகப் பாரம்பரிய வாரச் சிறப்புத் தொடர்:
சிற்பச் செழுமையின் சிகரம்
[22-11-2025 சனிக்கிழமை  ஒலிபரப்பு]
https://suvali.tamilheritage.org/சிற்பச்செழுமையின்/
---



""பாரம்பரியப் பெட்டகங்கள் - 1""


 பங்கேற்பவர்கள்:
முனைவர் இரா.கலைக்கோவன்,  பேராசிரியர்கள் அர. அகிலா, மு நளினி

உலகப் பாரம்பரிய வாரச் சிறப்புத் தொடர்:

தேமொழி

unread,
Nov 26, 2025, 2:41:48 AM (13 days ago) Nov 26
to மின்தமிழ்

new malaysia tamilians title.jpg

இதுவும் கடந்த ஆண்டு நான் செய்த பதிவுகளில் ஒன்று.
இதில் சுவாரஸ்யமான பல செய்திகள் வருகின்றன. குறிப்பாக 1969ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி ராகினி ஆகியோர் மலேசியாவில் ஜொகூர் மாநிலத்திற்கு வந்த போது தங்கள் இல்லத்தில் தங்கிய செய்திகளையும் குறிப்பிடுகின்றார். அதோடு மற்ற கலைஞர்கள் மதுரம் ஆகியோர் வந்திருக்கின்றார்கள். மலேசியாவிற்கு பயணம் செய்வது தமிழ்நாட்டு சினிமா கலைஞர்களுக்கு 1960 களிலேயே தொடங்கிவிட்டது என்பதை இச்செய்திகளின் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம்.
-- சுபா 
மலேசியத் தமிழர்களுடன் ஒரு நேர்காணல்
https://youtu.be/2oI4jm1dPOY

---
தாங்கள் அறிந்த மலேசியத் தமிழர்  குறித்த செய்திகளைப் பகிர்ந்து கொண்ட  திருவாளர்கள் வடிவேலு, சேதுபதி, வேணுகோபால்  ஆகியோருக்கு நன்றி. நேர்காணல் செய்த  முனைவர் க. சுபாஷிணி அவர்களுக்கும் நன்றி. இக்காணொளி தமிழ் மரபு அறக்கட்டளையின் காணொளி வரிசையில் இன்று இணைகிறது. பார்த்து  தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வீர்.

நன்றி.
முனைவர் தேமொழி
செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
---

மலாய் மானிடவியல் அருங்காட்சியகம்
Malay World Ethnology Museum
இக்காணொளியில்  கோலாலம்பூர்  மலாய் மானிடவியல் அருங்காட்சியகத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார்  முனைவர் க. சுபாஷிணி.  மலாய் மானிடவியல் அருங்காட்சியகம் கோலாலம்பூரில் தேசிய அருங்காட்சியகம் உள்ள வளாகத்திலேயே உள்ளது. மலாக்கா வரலாறு மற்றும் இனவியல் பொருட்கள் பல இங்குக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. மலாய் பாரம்பரியப் பொருட்கள் மற்றும் பண்பாட்டில் உள்ள பல்லாங்குழி, பட்டம், பம்பரம் ஆகிய விளையாட்டுள், இசைக்கருவிகள், பொழுது போக்கு, உணவு தயாரிப்பு,  திருமண வழக்குகள் சார்ந்த பொருட்களாக இங்கு  பாதுகாக்கப்படுவனவற்றில்  தமிழர் பண்பாட்டு வழக்குகள் உள்வாங்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
இக்காணொளி தமிழ் மரபு அறக்கட்டளையின் காணொளி வரிசையில் இன்று இணைக்கிறது. பார்த்து  தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வீர். 

நன்றி.
முனைவர் தேமொழி
செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
--- 

தேமொழி

unread,
Nov 26, 2025, 3:49:46 AM (13 days ago) Nov 26
to மின்தமிழ்
heritage week radio show 5.jpg

திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையமும்,
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையமும்
இணைந்து வழங்கும் . . .
2025 - உலக பாரம்பரிய வார சிறப்புத் தொடர் நிகழ்ச்சிகள்  (நவம்பர் 19-25)

""பாரம்பரியப் பெட்டகங்கள் - 5""


பங்கேற்பவர்கள்:
மருத்துவர் இரா கலைக்கோவன்,
விரிவுரையாளர் ஹேம லைலா, பேராசிரியர் மு நளினி
                                                                                                                                                           
உலகப் பாரம்பரிய வாரச் சிறப்புத் தொடர்:
"தேவன் கோவிலும் தேவியர் கற்றளிகளும்"
[23-11-2025 ஞாயிற்றுக்கிழமை  ஒலிபரப்பு]
https://suvali.tamilheritage.org/தேவன்-கோவிலும்-தேவியர்-க/
---

தேமொழி

unread,
Nov 26, 2025, 3:53:09 AM (13 days ago) Nov 26
to மின்தமிழ்
school1.jpg
தமிழின் சிறப்பினை உலகெங்கும் கொண்டு செல்ல தமிழ் மொழியின் ஆவணங்களைப் பாதுகாத்து அவற்றைக் கணினி மயமாக்கும் பணியினைச் சிறப்பாகச் செய்து வருகிறது உலகளாவிய முறையில் இயங்கி வரும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு. இந்நிறுவனத்தின் வெள்ளி விழா ஆண்டான இவ்வாண்டில், அமைப்பின் செயலாளர் முனைவர் தேமொழி அவர்களின் நூலான, 'வள்ளுவர் குறள் ஆத்திசூடி முறையில்', என்ற நூல் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையால் நன்கொடையாக வழங்கப் பட்டது. குறள்களின் தொகுப்பாக அமைந்த இந்த நூல் சென்னை புலியூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு (24-11-2025 அன்று) அன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. வள்ளுவரின் குறள்வழி நின்று மாணவர்கள் சிறப்படையவும் தமிழ் மொழியின் மரபுகளைக் காத்திடவும் தூண்டுகோலாக இந்நிகழ்வு இனிதே நடைபெற்றது.

school2.jpg 
school3.jpg
book kural.jpg
-----------------------------------------

தேமொழி

unread,
Nov 26, 2025, 6:25:50 AM (13 days ago) Nov 26
to மின்தமிழ்

thaninayagam event.jpg

நண்பர்களே..
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் 24 ஆகஸ்ட் 2025 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை இந்த வெள்ளி விழா ஆண்டு முழுவதும் தமிழுக்கு மாபெரும் தொண்டாற்றிய "தமிழ்த்தூது டாக்டர் சேவியர் எஸ் தனிநாயகம்" அவர்களைப் பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்திருந்தோம்.

அந்த வகையில் ஒரு நிகழ்வு நாளை மறுநாள், வருகின்ற 28-11-2025 வெள்ளிக்கிழமை நண்பகல் மதியம் மூன்று மணிக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் (மெரினா) ஒரு பன்னாட்டு கருத்தரங்கத்தை இணைந்த வகையில் ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

நிகழ்ச்சி அறிவிப்பினைப் பகிர்கிறோம்.

ஆய்வில் ஆர்வமுள்ள வரலாற்றில் நாட்டம் கொண்ட தமிழ் மொழியில் பற்று கொண்ட அனைவரும் இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் வந்து கலந்து கொள்ளலாம்.

உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்

தேமொழி

unread,
Nov 26, 2025, 9:55:44 PM (12 days ago) Nov 26
to மின்தமிழ்
title.jpg 
மலேசிய புதைப்பிட அகழாய்வு தொல்பொருட்கள்
https://youtu.be/TbZblIJqxDA
---

மலேசிய தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிப்  படுத்தப்பட்டுள்ள  மலேசிய புதைப்பிட அகழாய்வு தொல்பொருள் தடயங்கள் குறித்து விளக்கம் அளிக்கிறார் முனைவர் க. சுபாஷிணி.  இக்காணொளி தமிழ் மரபு அறக்கட்டளையின் காணொளி வரிசையில் இன்று இணைகிறது. பார்த்து  தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வீர். நன்றி.

முனைவர் தேமொழி
செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
---
           

தேமொழி

unread,
Nov 26, 2025, 9:57:31 PM (12 days ago) Nov 26
to மின்தமிழ்
title2.jpg

 2025 - உலக பாரம்பரிய வாரச் சிறப்பு வெளியீடுகளாகத் தென்கிழக்கு ஆசியத் தமிழர் வாழ்வியல் வரலாறு தொடர்பான காணொளிகள் நாளும் தொடர்ந்து வெளியிடப்பட்டது.
இவற்றைக்  கண்டு அயலகத் தமிழர் தொடர்பான செய்திகள் அறியலாம்.
--

மலேசியா - இந்தியா கடற்பயணங்கள்

ஜோகூர் இராஜமாரியம்மன் கோவில்-இந்திய மரபுடைமை மையம்
https://youtu.be/2EomDNGD49o
--
புத்த மகா விகாரை கோலாலம்பூர்
https://youtu.be/FCQVmCwh4tE
--
மலாய் மானிடவியல் அருங்காட்சியகம்
https://youtu.be/SqRTABxh1iQ
--
மலேசிய அருங்காட்சியகம்—பூஜாங் பள்ளத்தாக்கு தொல்பொருள் காட்சியகம்
https://youtu.be/QMJzGFiNNzY
--

கோலாலம்பூர் ஸ்காட் சாலை தமிழர் கோயில்கள்
https://youtu.be/4qbiVQ1w_TA
--
சிங்கப்பூர்
https://youtu.be/Jl0lL8Y1XYo
--
மலேசியத் தமிழர்களுடன் ஒரு நேர்காணல்
https://youtu.be/2oI4jm1dPOY
--
மலேசிய புதைப்பிட அகழாய்வு தொல்பொருட்கள்
https://youtu.be/TbZblIJqxDA
--
தவறவிட்டவற்றைப் பார்க்க இச்சுட்டிகள் உதவும்.  நன்றி.

தேமொழி

unread,
Nov 27, 2025, 6:07:58 AM (12 days ago) Nov 27
to மின்தமிழ்

19-25.jpg 

திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையமும்,
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையமும்
இணைந்து வழங்கும் . . .
2025- உலக பாரம்பரிய வார சிறப்புத் தொடர் நிகழ்ச்சிகள்  (நவம்பர் 19-25)

""பாரம்பரியப் பெட்டகங்கள்""

பங்கேற்பவர்கள்: முனைவர் இரா.கலைக்கோவன், குழுவினர்

1. அப்பருக்குச் சோறூட்டிய அழகன் கோயில்  [19-11-2025]
2. பெருந்திருக்கோவிலும் பாறை அகழ்வுகளும் [20-11-2025]
3. விண்வருடும் இராஜேந்திரப் பெருமிதம் [21-11-2025]
4. சிற்பச் செழுமையின் சிகரம் [22-11-2025]
5. தேவன் கோவிலும் தேவியர் கற்றளிகளும் [23-11-2025]
6. குன்றில் தோன்றிய கோவில்கள் [24-11-2025]
https://suvali.tamilheritage.org/குன்றில்-தோன்றிய-கோவில்க

தேமொழி

unread,
Nov 27, 2025, 3:08:31 PM (11 days ago) Nov 27
to மின்தமிழ்

19-25logos.jpg 

திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையமும்,
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையமும் இணைந்து வழங்கிய  . . .
 
2025- உலக பாரம்பரிய வார சிறப்புத் தொடர் நிகழ்ச்சிகள்  (நவம்பர் 19-25)
""பாரம்பரியப் பெட்டகங்கள்""
பங்கேற்பவர்கள்: முனைவர் இரா.கலைக்கோவன் - குழுவினர்
-------

1.  அப்பருக்குச் சோறூட்டிய அழகன் கோயில்   [19-11-2025]
https://suvali.tamilheritage.org/அப்பருக்குச்-சோறூட்டிய
--
2.  பெருந்திருக்கோவிலும் பாறை அகழ்வுகளும்   [20-11-2025]
https://suvali.tamilheritage.org/பெருந்திருக்கோவிலும்-ப/
--

3.  விண்வருடும் இராஜேந்திரப் பெருமிதம்   [21-11-2025]
https://suvali.tamilheritage.org/விண்வருடும்-இராஜேந்திரப/
--

4.  சிற்பச் செழுமையின் சிகரம்   [22-11-2025]
https://suvali.tamilheritage.org/சிற்பச்செழுமையின்/
--

5.  தேவன் கோவிலும் தேவியர் கற்றளிகளும்   [23-11-2025]
https://suvali.tamilheritage.org/தேவன்-கோவிலும்-தேவியர்-க/
--

6.  குன்றில் தோன்றிய கோவில்கள்   [24-11-2025]
https://suvali.tamilheritage.org/குன்றில்-தோன்றிய-கோவில்க
--
7.  எங்கும் எதிலும் மரபுரிமை   [25-11-2025]
https://suvali.tamilheritage.org/எங்கும்-எதிலும்-மரபுரிமை/

திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையமும், டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையமும் இணைந்து வழங்கிய; பாரம்பரியப் பெட்டகங்கள் - 2025- உலக பாரம்பரிய வாரச் சிறப்புத் தொடர் நிகழ்ச்சி ஒலிப்பதிவுகளை தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் 'சுவலி' ஒலிப்பேழை மூலம் மறுவெளியீடு செய்ய அனுமதி அளித்ததற்கு டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்களுக்கு எங்கள் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏
-----

தேமொழி

unread,
Nov 27, 2025, 7:17:04 PM (11 days ago) Nov 27
to மின்தமிழ்
thaninayagam event2.jpg

 ”தமிழறிஞர் சேவியர் எஸ்.தனிநாயகம் அவர்களின் தமிழ்ப்பணிகள்” என்ற தலைப்பில் 28/11/2025  மதியம் 3 மணிக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் (சேப்பாக்கம்) சிறப்புரை வழங்குகிறேன்.
அனைவரும் வருக!
--சுபா 

தேமொழி

unread,
Nov 28, 2025, 5:36:12 PM (10 days ago) Nov 28
to மின்தமிழ்
முனைவர் சேவியர் எஸ். தனிநாயகம் அவர்களின் தமிழ்ப் பணிகள்: சென்னை பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரிலக்கியத் துறையும், தமிழ் மேம்பாட்டுச் சங்கம்/பல்கலை மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி) ஆகியன இணைந்து நடத்திய முனைவர் சேவியர் எஸ். தனிநாயகம் அவர்களின் தமிழ்ப் பணிகள் குறித்த சிறப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம் நவம்பர் 28, 2025 வெள்ளிக்கிழமை, பிற்பகல் 3 மணிக்கு தந்தை பெரியார் அரங்கம் (F50), சென்னை பல்கலைக்கழகத்தில், சிறப்பாக நடைபெற்றது.
18.jpg

14.jpg
4.jpg
13.jpg
10.jpg
கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்படப் பேராசிரியர்களும் கல்வியாளர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைத் தமிழக முதலமைச்சரின் செயலாளர் முனைவர் ம.சு. சண்முகம், இஆப அவர்கள் தலைமையேற்று, கருத்தரங்கைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் முனைவர் கோ. பழனி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

முனைவர் ம.சு. சண்முகம் அவர்களின் எழுச்சிமிகு தலைமை உரை: கல்வியே உயர்வு
தலைமையுரையாற்றிய முனைவர் ம.சு. சண்முகம் அவர்கள், மாணவர்களுக்கு ஊக்கமும் விழிப்புணர்வும் அளிக்கும் வகையில் தனது உரையை ஓர் எழுச்சிமிகு உரையாக அமைத்துக் கொண்டார். அவர் மாணவர்கள் தமிழ் மொழியைப் பெருமையுடன் கற்க வேண்டியதன் அவசியத்தையும், ஆய்வுப் பணிகளில் ஈடுபட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
அவர் தனது உரையில், மாணவர்கள் அலைபேசியில் தங்கள் நேரங்களைத் தொலைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். இதனை விளக்க, "கடலில் குளிர்ச்சியாகக் கிடந்த ஆமை, கொதிக்கும் நீரில் ஆரம்பத்தில் சுகமாகக் கிடக்கும்; ஆனால் நீர் கொதிக்கக் கொதிக்க வெப்பம் ஏற, அதன் வாழ்க்கையே அதில் மடிந்துவிடும். அதுபோலத்தான், கைப்பேசி  திரையில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் செலுத்துவதால், இப்பொழுது குனிந்திருந்தால் வாழ்க்கையிலும் குனிந்து கொண்டே இருப்பீர்கள்," என்ற கதையையும் குறிப்பிட்டு உணர்த்தினார். தமிழ் மொழியில் கற்பது எந்த வகையிலும் தரக்குறைவு அல்ல என்பதை அழுத்தமாகக் கூறிய அவர், தமிழ் வழிக் கல்வியில் பயின்றவர்கள்தான், எந்தச் சவால்களைக் கேட்டாலும், அதற்கான முன்மொழிவோடு வந்து, அந்தத் துறைகளில் திறமை வாய்ந்தவர்களாக வெளியில் வரும்போது, அவர்களுக்கான உண்மையான அங்கீகாரம் கிடைக்கும் என்று வலியுறுத்தினார். இதற்குச் சிறந்த உதாரணமாக, ஆர். பாலகிருஷ்ணன் இஆப அவர்களை மேற்கோள் காட்டினார்.

மேலும், "வாசிப்புப் பழக்கம் கட்டாயம் இருக்க வேண்டும். அதுவே உங்கள் நினைவாற்றலை அதிகப்படுத்தும்" என்றும், ஆரம்பத்தில் மகிழ்ச்சி தரும் அற்ப விஷயங்கள், எதிர்காலத்தில் உங்களுக்கு ஒருபோதும் சந்தோஷத்தைத் தராது என்றும் எச்சரித்தார். மாணவர்கள் தன்மானத்தோடும் தன்மதிப்போடும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்றும், "நாம் தகுதி பெற்றவர்களாக இருக்கும்போது, யாருடைய தயவும் தேவை இல்லை. அந்தத் தகுதியே உங்களுக்கு அங்கீகாரத்தையும் மதிப்பையும் பெற்றுத் தரும்," என்று கூறி, கல்வியால் தேர்ச்சி அடைய மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.

ஆய்வுக் கட்டுரைகளும் அர்ப்பணிப்பும்:
இந்த நிகழ்ச்சியில் இரண்டு ஆய்வுரைகள் வழங்கப்பட்டன.
[1]
"முனைவர் சேவியர் எஸ். தனிநாயகம் அவர்களின் உலகளாவிய தமிழ்ப் பணிகள்" என்ற தலைப்பில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் க. சுபாஷிணி அவர்கள் ஆய்வுரை வழங்கினார். அவர் தன்  உரையில் தனிநாயகம் அடிகளின் பணிகள் குறித்து அனைத்துக் கருத்துக்களையும் மாணவர்களுக்குச் சொல்லிவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்தார்.
முனைவர் சுபாஷிணி அவர்களின் உரையில் தனிநாயகம் அடிகளின் முக்கியப் பணிகள் குறித்து வழங்கப்பட்ட தகவல்கள் சில:
 * அடிகள் 13 உலக மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்.
 * தமிழாராய்ச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்த முதல் அறிஞர் அவரே ஆவார்.
 * "Tamil Culture" என்ற புகழ்பெற்ற ஆங்கில ஆய்விதழைத் தொடங்கி நடத்தியவர்.
 * யுனெஸ்கோவுடன் இணைந்து தமிழ் மொழியின் சிறப்புகளைப் பன்னாட்டு அளவில் எடுத்துரைத்தவர்.
 * உலகின் பல பல்கலைக்கழகங்களில் தமிழ் படிப்புகள் தொடங்கவும், தமிழை உலகெங்கும் கொண்டு செல்லவும் அரும்பாடுபட்டவர்.
குறிப்பாக, தனிநாயகம் அடிகள் உலக நாடுகளில் ஆற்றிய பணிகள் குறித்தும், உலகத் தமிழ் மாநாட்டின் தலைநகரமாகச் சென்னையில் மாநாடு நடைபெற அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் அவர் வழங்கிய வரலாற்றுச் செய்திகள், மாணவர்கள் மத்தியில் தனிநாயகம் அடிகளின் மீது மேலும் பெருமையையும் மரியாதையையும் ஏற்படுத்தியது.

[2]
தொடர்ந்து, கந்தசாமி நாயுடு கல்லூரியின் முதல்வர் முனைவர் வா. மு. சே. முத்துராமலிங்க ஆண்டவர் அவர்கள், "தனிநாயக அடிகளும் உலகத் தமிழ்க் கல்வியும்" என்ற தலைப்பில் ஆய்வுரை வழங்கினார். முனைவர் ஆண்டவர் அவர்கள் தனது உற்சாகமான உரையின் மூலம் மாணவர்களின் கைத்தட்டல்களைத் தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருந்தார்.

அன்பளிப்பும் நிறைவும்:
நிகழ்ச்சியின் முடிவில், முனைவர் தேமொழி அவர்கள் எழுதிய 'திருவள்ளுவர் குறள் ஆத்திச்சூடி முறையில்' என்ற  நூல், கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.  இந்தச் சிறப்பான கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களும் கல்வியாளர்களும் கலந்து கொண்டு, நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். திரு. கிருஷ்ணகுமார், துணைச் செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, நன்றியுரை வழங்கினார்.

தமிழின் தொன்மையையும், தனிநாயகம் அடிகளின் உலகளாவிய பங்களிப்பையும் இளைய தலைமுறையினரிடமும், கல்வியாளர்களிடமும் கொண்டு சேர்த்ததில் இந்நிகழ்ச்சி மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது.


அர்ஷா
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

https://thf-news.tamilheritage.org/2025/11/28/முனைவர்-சேவியர்-எஸ்-தனிந/ 

தேமொழி

unread,
Nov 29, 2025, 12:20:03 AM (10 days ago) Nov 29
to மின்தமிழ்
தனிநாயகம் அவர்களின் தமிழ்ப் பணிகள் 
குறித்த சிறப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம்
நிகழ்ச்சியின் குறும்படங்கள் சில . . .  :

பண்டைய தமிழ்நாட்டின் வணிகம்
https://youtu.be/Vketx7GqJwc
---
தனிநாயகம் என்பவர் யார்?
https://youtu.be/Rl9kwSz7qWg
---
தனிநாயகம் அடிகளாரின் தமிழ்ப்பணிகள்
https://youtu.be/cqhzbx9siPw
---
முயன்றால் வெற்றி நிச்சயம்: முனைவர் க. சுபாஷிணி
https://youtu.be/NEn9guvWOJg
---

தேமொழி

unread,
Nov 29, 2025, 4:24:43 AM (10 days ago) Nov 29
to மின்தமிழ்
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி வெள்ளி விழா கண்ட தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு அவ்விழாவில் இவ்வாண்டு முழுவதும் தமிழறிஞர் டாக்டர் சேவியர் எஸ். தனிநாயகம் அவர்களின் தமிழ்ப்பணிகள் குறித்த செய்திகளைக் குறிப்பாக இளம் தலைமுறையினரிடம் பரவலாக்கம் செய்ய வேண்டும் என்று வெளிப்படுத்தியது. அதன் முதல் நிகழ்வாக நேற்று (28-11-2025) தந்தை பெரியார் அரங்கம், சென்னை பல்கலைக்கழகத்தில் அப்பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ்த்  துறை சார்ந்த மாணவர்கள் மத்தியில் ஆய்வுக் கருத்தரங்கை அரங்கேற்றியது.

நிகழ்வின் தொடக்கமாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறை தலைவர் முனைவர் கோ. பழனி அறிமுகவுரையாக தமிழறிஞர் தனிநாயகம் அவர்களின் சிறப்பினை எடுத்துக்கூறினார். அடுத்ததாக கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கிய முனைவர் ம. சு. சண்முகம் இ.ஆ.ப, முதலமைச்சர் அவர்களின் செயலாளர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம், அவர்களை அறிமுகப்படுத்தி வரவேற்றார். தொடர்ச்சியாக ஆய்வுரை நிகழ்த்தவிருந்த முனைவர் க. சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, அவர்களையும் மற்றும் முனைவர் வா. மு. சே. முத்துராமலிங்க ஆண்டவர், முதல்வர், கந்தசாமி நாயுடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவர்களையும் அறிமுகப்படுத்தி வரவேற்றார்.

தலைமையுரையாக பேசிய சண்முகம் அவர்கள் தனிநாயகம் அடிகளார் எடுத்த முன்னெடுப்பு எவ்வாறு தமிழுக்குப் பெருமை கொள்ளும் வகையில் தனியடையாளம் பெறச்செய்து, தாயகம் மற்றும் அயலகத்தில் வாழ்பவர்கள் என உலகத் தமிழர்களை ஒன்றிணைத்தது என்று எடுத்துரைத்தார். அவ்வகையில் தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பான அயலகத் தமிழர் திருநாளில் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுத்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக வாசிப்பின் தேவையையும் அதன் விளைவாக ஏற்படும் கற்பனை மற்றும் அறிவுக் கூர்மை சார்ந்த திறன் மேம்பாட்டை உணர்த்தினார். மேலும் மாணவர்கள் திறனை வளர்த்து தன்நம்பிக்கையோடு மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் முன்னேற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தனிநாயகம் அவர்களின் உலகளாவிய தமிழ்ப்பணிகள் என்ற தலைப்பில் ஆய்வுரையைத் தொடங்கிய சுபாஷிணி அவர்கள் தனிநாயகம் பற்றி முதலில் தன் தாயார் மூலம் அறிந்ததாகவும் அவரின் தமிழ்ப்பணிகள் தனக்கு ஒரு முன்னுதாரணம் என்று பெருமையாகச் சொன்னார். தனிநாயகம் பற்றி தமிழ்த் துறை சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் மத்தியில் உள்ள விழிப்புணர்வு பற்றிக் கேட்டறிந்தார். அவரின் தமிழ்ப்பணிகளை தெரிந்து கொள்வது ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும் என்று அவர் எழுதிய மூன்று முக்கிய நூல்களை எடுத்துக்காட்டினார். உரையின் தொடர்ச்சியாக தனிநாயகம் அவர்களின் தமிழ்ப்பணி தொடர்பான முக்கிய நிகழ்வுகள் (காலவரிசை அடிப்படையில்), மலேசியாவில் நடந்த
முதல் உலகத் தமிழ ஆராய்ச்சி மாநாடு, வெளிக்கொணர்ந்த தமிழ் அச்சுப்பதிப்பு நூல்கள், போன்ற தகவல்களை மாணவர்களுக்கு சுபாஷிணி அவர்கள் காட்சிப்படுத்தினார். இத்தகவல்களை ஆர்வமிகுந்த மாணவர்கள் குறிப்பு எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து பேசிய சுபாஷிணி தன்னுடைய பயணம் தனிநாயகம் வழியில் அமைந்திருப்பதாகவும், அவ்வாறு செயல்பட்டதன் மூலம் தமிழ் உலகிற்குத் தன்னால் லெய்டனில் உள்ள ராஜராஜன் குறித்தச் சூளாமணி விகாரை பற்றிய ஆனைமங்கலச் செப்பேடு தொடர்பான தகவல்களை ஆய்வு மூலமாக வெளிக்கொணர முடிந்தது என்றும் அதனை ஒரு நூலாக வெளியிட்டு ஆவணப்படுத்தியதையும் மகிழ்ச்சியோடு கூறினார். இவ்வழியில் மாணவர்கள் முன்னுதாரணமாக ஒருவரைத் தேர்ந்தெடுப்பதன் அவசியத்தைச் சொல்லி வாழ்வில் உயர்ந்த நோக்கங்களை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். பல்வேறு மொழிகளைத் தெரிந்திருந்தால் தமிழின் இலக்கியச் செல்வங்களை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கலாம் இல்லையென்றால் அது தற்பெருமைச் சார்ந்ததாகவே இருக்கும் என்று தமிழ்த் துறை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

அடுத்த ஆய்வுரையாகத் தொடர்ந்த ஆண்டவர் அவர்கள் சுருங்கச் சொல்லி விளங்கவை என்கிற பாணியில் தனிநாயகம் அவர்களின் தொண்டு எவ்வாறு தமிழுக்கான வெளிச்சத்தை உண்டாக்கி, இலங்கை, மொரீசியஸ் போன்ற அயல் நாடுகளில் தமிழ் மொழியை நாணயங்களில் இடம்பெறச் செய்தது என்பதை மாணவர்கள் மத்தியில் உரக்கச் சொன்னார்.

நிகழ்ச்சியின் நிறைவாக தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் துணைச் செயலாளர் திரு. கிருஷ்ணகுமார், சென்னையைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளில் இருந்து வருகைபுரிந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இணைந்து செயல்பட்ட சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.

நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பொதுச் செயலாளர் முனைவர் தேமொழி எழுதிய வள்ளுவர் குறள் - ஆத்திச்சூடி முறையில் என்கிற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் தமிழ் மரபு அறக்கட்டளையின் கடந்த 24 ஆண்டுக்காலச் சாதனைகள் அடங்கிய பட்டியல் வினியோகிக்கப்பட்டது.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பொதுநலம் சார்ந்த இக்கருத்தரங்கு தனி அமைப்பாகச் செய்வது சாத்தியமென்றாலும் பல்வேறு கல்விக்கூடங்கள் மற்றும் அடுத்த தலைமுறையினரான மாணவர்களையும் இணைத்துச் செயல்படுவதன் மூலம்தான் அது சமூகத்திற்கு நன்மை பயக்கும் என்பது நோக்கத்தக்கது. அவ்வகையில் சென்னைப் பல்கலைக்கழகத்துடனான இக்கருத்தரங்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்தது.

ஜெரின்

தமிழ் மரபு அறக்கட்டளை
29-11-2025
a.jpg
​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​---------------------------------------------

On Friday, November 28, 2025 at 9:20:03 PM UTC-8 தேமொழி wrote:
தனிநாயகம் அவர்களின் தமிழ்ப் பணிகள் 
குறித்த சிறப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம்
நிகழ்ச்சியின் குறும்படங்கள் சில . . .  :

பண்டைய தமிழ்நாட்டின் வணிகம்
https://youtu.be/Vketx7GqJwc
---
தனிநாயகம் என்பவர் யார்?
https://youtu.be/Rl9kwSz7qWg
---
தனிநாயகம் அடிகளாரின் தமிழ்ப்பணிகள்
https://youtu.be/cqhzbx9siPw
---
முயன்றால் வெற்றி நிச்சயம்: முனைவர் க. சுபாஷிணி
https://youtu.be/NEn9guvWOJg
---
https://thf-news.tamilheritage.org/2025/11/28/முனைவர்-சேவியர்-எஸ்-தனிந/ 
Reply all
Reply to author
Forward
0 new messages