--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/4caa4c4d-89c8-492f-8b7b-9c0cdf37d149n%40googlegroups.com.
அனைவருக்கும் வணக்கம்!ஆம்.1930ல் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த புகைப்படம் பல வகையிலும் கருத்தை ஈர்க்கிறது.புகைப்படத்திற்கான ஆங்கில விளக்கத்தில் ‘phallic temple of Nandi’ என்றவாறான தலைப்பு நம்மை அடிமைப்படுத்தியவர்கள் நம் பாரத இறை நம்பிக்கையை எந்த அளவு தவறாகவும், ஆன்மீகத்தினின்று விலகியும் புரிந்து வந்துள்ளார்கள் என்பதை வெட்டவெளிச்சம் ஆக்குகிறது.
அனைவருக்கும் வணக்கம்!ஆம்.1930ல் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த புகைப்படம் பல வகையிலும் கருத்தை ஈர்க்கிறது.புகைப்படத்திற்கான ஆங்கில விளக்கத்தில் ‘phallic temple of Nandi’ என்றவாறான தலைப்பு நம்மை அடிமைப்படுத்தியவர்கள் நம் பாரத இறை நம்பிக்கையை எந்த அளவு தவறாகவும், ஆன்மீகத்தினின்று விலகியும் புரிந்து வந்துள்ளார்கள் என்பதை வெட்டவெளிச்சம் ஆக்குகிறது. தலைப்பில் மேலும் வழிபாடு செய்பவரில் பலர் பெண்கள் என்கிறது ,(most of the worshippers are women ) வழிபாடு செய்பவர்களை பக்தர்கள் என அழைப்பது இந்திய பண்பாடு, இதில் ஆண்கள் பெண்கள் பாகுபாடு எந்த ஆய்வின் அடிப்படையில் என்பதை அறியோம்.கி்பி 1757ல் கிழக்கிந்திய கம்பெனி எனத் துவங்கியது முதல் இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட 1930ம் ஆண்டு வரை எடுத்துக் கொண்டால் 1757க்கு முந்தைய இந்தியாவை எந்த அளவு பண்பாட்டளவிலும் ஏனைய பிற சமூக நெறி நடைமுறையிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் புரட்டி எடுத்து இருக்க முடியும் என்பதை புகைப்படத்தின் ஆங்கில தலைப்பு பறைசாற்றுகிறது.சிவப்பு வட்டமிடப்பட்டு தனித்து கவனம் ஈர்க்கும் புகைப்படத்தின் பகுதிகள் மூலம், பிரிட்டிஷார் செய்த மிகப் பெரிய மன்னிக்க முடியாத சமூக மாற்றப் புகுத்தலை உணரமுடிகிறது.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/78627959-ca36-47cb-a7f7-183176ce1411n%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/78627959-ca36-47cb-a7f7-183176ce1411n%40googlegroups.com.
‘லிங்க’ என்ற வடமொழிச் சொல் பல பொருள் கொண்டது.பொதுவாக ’ Sign ‘ என்ற பொருளின் அடிப்படையில் தான் சிவாலயங்கள் அமைந்துள்ளன.
//திருப்புன்கூர் நந்தியின் கதை என்ன?//நந்தன் என்ற பக்தனுக்கு சிவபெருமான் எவ்வாறு நந்தியை விலகச்சொல்லி அருள் புரிந்தார் என்பதே ஆன்மீகப் புரிதல்.
//அந்த நந்தனை பிரிட்டிஷார் வெளியில் நிற்க வைத்தார்களா? என்பதுதானே கேள்வி//
மிக தேவையான அறிவுபூர்ணமான கேள்விகளைத் தான் கேட்கிறோம் என நினைத்து,
பலப்பல இன்றியமையாத கேள்விகளை வசதியாக மறக்கிறோம்.
தமிழக சிவாலயங்களில் யாவற்றிலும் 63 நாயன்மார்களில் ஒருவராக தெய்வமென
சிவனடியார்களால் வணங்கப்படும் நந்தனார் என்ற பெருந்தகையை பிரிட்டிஷார் வெளியில்
நிற்க வைத்தார்களா என்ற கேள்வி இந்து சமய இறை நம்பிக்கையை கொச்சைப் படுத்துவதாக
முனைவர் தேமொழி அறியாதது வியப்பே.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/58aa3059-b5a4-4627-ae08-4b76f42903b3n%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/5159a1fd-83d0-4b78-841f-30ed55de6d37n%40googlegroups.com.
நந்தனார் வாழ்ந்த காலமும்,பிரிட்டிஷார் இந்தியரை காலனிப்படுத்தத் துவங்கிய காலமும் குறைந்தது 10 நூற்றாண்டுகளாவது இடைப்பட்டதாகும்.இயேசுவின் சிலுவையேற்றத்திற்கு சில யூதர் காரணம் எனும்போது தற்போதைய இஸ்ரேல் பிரதமர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் தங்களின் பார்வையில் மிக அறிவுபூர்ணமானதே 😀
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/abf7b48d-3aea-4cc0-8ffe-b3de858139edn%40googlegroups.com.
ஊழ்வினை,மறுபிறப்பு, செய்யும் தொழில் சார்ந்த வகையில் நால்வர்ணத்தவர் என்ற கட்டமைப்பும்(பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்), அத்தகைய கட்டமைப்பை வடிவமைத்த ஆதிபகவனின் நற்றாள் பணிந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவாறு எந்த பிற நாட்டுப் பண்பாட்டில் தலையிடுதலோ, படையெடுப்போ செய்தறியாது அறநெறியில் வாழ்ந்த முன்னோர்களை குற்றம் சாற்ற முற்படுவது ஒருபுறம்.
அறிவார்ந்த கருத்துகள் என்ற பெயரில் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற போர்வையில் நுழைந்து, இரு நூற்றாண்டுகளுக்குள் பண்பாட்டுச் சீரழிவை மேற்கொண்ட பிரிட்டிஷாருக்கு (நந்தனை வெளியே நிற்க வைத்தார்களா என ) நற்சான்றிதழ்!//சிறு பிள்ளைகள் போல அங்கு இங்கு கைகாட்டக் கூடாது மற்றவர் மீது குறை சொல்லக் கூடாது. //மற்றொரு புறம் நிகழ்வு காலத்தில் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியாயிருப்பினும்( முன்னாள் தமிழக முதல்வர் மகள் குடும்பமிருந்தாலும் சரி , அடிப்படை வசதியில்லா ஏழையாயிருப்பினும் சரி, ‘பிறப்பு’ சார்ந்த சாதி அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு முன்னுரிமை, 70 வருடங்களுக்கு மேலும் இன்னமும் தொடர வேண்டும் என்ற அபாண்ட உரிமைப் போராட்டம்.இது மற்றவர் மீது குறை அல்ல, நம்மவர் மீது. இது சரி தானே!
அந்த ஸர்ப் எக்ஸல் காணொளிக்கு நன்றி! அது கூறும் செய்தியாவது ஸர்ப் எக்ஸல் நிறுவனமோ தங்கள் பொருளை விளம்பரம் செய்வதற்கு ஒரு கதையை தேர்ந்தெடுத்தனர் ,நீங்களும் நானும் நம் பகுத்தறிவை விளம்பரம் செய்ய ஒவ்வோர் கருத்தை தேர்ந்தெடுத்தோம்.ஆனால் வள்ளுவப் பெருந்தகை கூற விழைவதோ, கற்று அதனால் பயன் என் கொல்? வாலறிவன் நற்றாள் தொழார் எனின்! என வழி காட்டுகிறான்.//குற்றம் நம் மக்களிடம் இருந்ததாக வரலாற்றுத் தகவல்கள் சான்றுகள் தரும் பொழுது// இந்த நம் மக்கள் பட்டியலில் வள்ளுவனை இணைக்கமாட்டீர் என நம்புகிறேன். நன்றி!
ஊழ்வினை,மறுபிறப்பு, செய்யும் தொழில் சார்ந்த வகையில் நால்வர்ணத்தவர் என்ற கட்டமைப்பும்(பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்), அத்தகைய கட்டமைப்பை வடிவமைத்த ஆதிபகவனின் நற்றாள் பணிந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவாறு எந்த பிற நாட்டுப் பண்பாட்டில் தலையிடுதலோ, படையெடுப்போ செய்தறியாது அறநெறியில் வாழ்ந்த முன்னோர்களை குற்றம் சாற்ற முற்படுவது ஒருபுறம்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/d1916f06-0c90-4672-8c75-26c0ae0458ffn%40googlegroups.com.
//பிறப்பு" அடிப்படையில் என்பதை ஏன் மறைக்கிறீர்கள்?//மறுக்கவில்லை கண்டிப்பாக, ஏனெனில் நம் எல்லா செயல்பாடுகளுக்கும் நாம் பிறந்தது தானே அடிப்படை,நீங்களும் நானும் ஏனைய மற்ற எவரும் பிறக்காமல் இந்த கருத்துப் பரிமாற்றம் எவ்வாறு சாத்தியம்?ஆனால் அது ‘முதல்’ மட்டுமே முடிவு ஆகாது, மாற்றத்துக்கு உட்பட்டது.
எல்லாமே பிறப்பு என ஆகாது.
பிறப்பவர் தொழில் அடிப்படையில் வேற்றுமைக்கு உள்ளாவது உலக நியதி. சிவிகை பொறுப்பவனுக்கும் அடிப்படை பிறப்பு, ஊர்ந்தவனுக்கும் அடிப்படை பிறப்பு. அப்படியெனில் சிறப்பின் வேறுபாடு செய்தொழில் காரணமாக அமைவதை மறுப்பவர்களும், கானல் நீரில் தாகம் தீர்த்துக் கொள்கிறேன் என்பவர்களும் ஒரே தரமே, உண்மையைக் கண்டு அஞ்சும் மூடர்கள் என்ற ஒரே தரமே.
ஆகவே தான் பிறப்பு சார் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு சிறிதும் ஒவ்வாத ஒன்று.
''''1610ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 22ஆம் நாள் நொபிலி எழுதிய கடிதமொன்று மதுரை நாயக்க மன்னரின் கல்வியமைப்பைப்பற்றி நமக்கு அறியத் தருகிறது. ‘மதுரையில், 10,000 கக்கும் மேலான எண்ணிக்கையில் மாணவர்கள் கல்வி கற்றனர். அவர்கள் வகுப்பொன்றுக்கு 200 முதல் 300 வரை என்ற எண்ணிக்கையில் பல வகுப்புகளில் கல்வி கற்றனர். அவர்களெல்லோரும் பிராமணர்களே, அவர்களுக்கு மட்டுமே உயர்தரக்கல்வியைக் கற்பது தனிவுரிமையாக்கப்பட்டிருந்தது. அவர்கள் வாழ்வாதாரத்திற்குப் பொருள் தேடி அல்லல்படாது கருத்தூன்றிக் கல்வி கற்கும் பொருட்டு அவர்களுக்காக மன்னர் சிறந்த வகையில் கொடைகள் வழங்கியிருந்தார்’ (History of the Nayaks of Madura, p.257.). இவ்வாறு இந்தியாவில் காலம் காலமாக மக்களின் வரிப்பணம் பார்ப்பனர் கல்வி என்பதற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது என்பதும், கல்வி கற்கும் உரிமையும் சமய சட்டங்கள் மூலம் அவர்களுக்கே அளிக்கப்பட்டிருந்தது என்பதும்தான் இந்தியாவின் சமூக அநீதியின் வரலாறு. வைதீக சமயத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்.
Ref :
History Of The Nayaks Of Madura, Sathyanath Aiyar, 1941, pp.257
https://archive.org/details/in.ernet.dli.2015.156898/page/n267/mode/2up
தொடக்கத்தில் லிங்க என்ற சொல்லுக்கு ஒற்றைப் பொருள் கொடுத்தீர்கள். இப்போதோ அநித்யா அனாத்மா என புத்தரின் போதனையை இரு சொல்லுக்குள் எளிமைப்படுத்த முயற்சிக்கிறீர்.வள்ளுவர் விமரிசனுக்கு உட்பட்டவர் என்றால் புத்தரும் தானே!
திருக்குறளைத் திரிக்கும் முயற்சிகள் !!!!!என்ன கொடுமை !!!!ஊழ்வினை,மறுபிறப்பு, செய்யும் தொழில் சார்ந்த வகையில் நால்வர்ணத்தவர் என்ற கட்டமைப்பும் அத்தகைய கட்டமைப்பை வடிவமைத்த ஆதிபகவனின் நற்றாள், யாவுமே வள்ளுவனை முழுமையாகப் படித்தால் தான் உணர முடியும்.‘அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை’அரசன், அந்தணர், சிவிகை பொறுத்தான் வெவ்வேறு தொழில்கள் என திருக்குறள் எடுத்துரைக்கும்போது, திரிப்பதற்கு என்ன உண்டு.வள்ளுவன்= அறியாமை இருளகற்றும் பகலவன்.அநித்யம், அனாத்மா என வடமொழி மீது வெறுப்பு பாராட்டாது பற்று பாராட்டுவது புத்தருக்கு மட்டும் விதிவிலக்கு?👏👏👏👏
திருக்குறளைத் திரிக்கும் முயற்சிகள் !!!!!என்ன கொடுமை !!!!ஊழ்வினை,மறுபிறப்பு, செய்யும் தொழில் சார்ந்த வகையில் நால்வர்ணத்தவர் என்ற கட்டமைப்பும் அத்தகைய கட்டமைப்பை வடிவமைத்த ஆதிபகவனின் நற்றாள், யாவுமே வள்ளுவனை முழுமையாகப் படித்தால் தான் உணர முடியும்.‘அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை’அரசன், அந்தணர், சிவிகை பொறுத்தான் வெவ்வேறு தொழில்கள் என திருக்குறள் எடுத்துரைக்கும்போது, திரிப்பதற்கு என்ன உண்டு.வள்ளுவன்= அறியாமை இருளகற்றும் பகலவன்.அநித்யம், அனாத்மா என வடமொழி மீது வெறுப்பு பாராட்டாது பற்று பாராட்டுவது புத்தருக்கு மட்டும் விதிவிலக்கு?👏👏👏👏
// எதற்கு இழையின் விவாதத்திற்குத் தொடர்பு இன்றி மொழி பிரச்சனையும் உள்ளே நுழைகிறது//மொழி என்பதை கருத்து கூற வரும் கருவியாகப் பார்க்க வேண்டுமேயன்றி, மொழி வெறுப்பு கூடாதுஎன்ற புரிதலுக்குத் தான் சபாஷ் சொன்னேன்.பொதுவாக மனோன்மணீயம் சுந்தரனாரின் ஆரியம் போல் உலக வழக்கொழிந்து என்றவாறு துவங்கி ,பிரிட்டிஷாரால் புனையப்பட்ட ஆரிய திராவிட பிரிவினைப் பொய்யுரையால் வடமொழியைப் பற்றிய தமிழுலகத்தின் புரிதல் சொல்லும்படியாக ஒரு ஆரோக்கிய கருத்துப் பரிமாற்றத்துக்கு ஏதுவாக இல்லை .மேலும் நம் இந்திய பண்பாட்டின் ஆன்மாவை,இதயத்தைப் புரிந்துகொள்ளாத, மேற்கத்திய மற்றும் இடது சாரி, இந்து விரோத கொள்கையுடை நுனிப்புல் மேயும் அரைகுறை வடமொழிப் புலவரெனக் கூறிக் கொண்டு இந்து சமய நூல்களுக்கு முரணான பொருளை கற்பிப்பவர் மிகைந்துள்ளனர்.எ-டு- ஆட்ரி ட்ரஷ்கே, தேவ்தத் பட்நாயக்
எல்லாமே பிறப்பு என ஆகாது.ஏன்?? விளக்கம் தேவை.பிறப்பு என்பது நம் தேர்வுக்கு உட்படாத தத்துவம்.செய்தொழில் என்பது நம் தேர்வுக்கு உட்பட்டது.செய்தொழிலுக்கு மூலம்/அடிப்படை பிறப்பு. பிறப்புக்கும் அடிப்படை முற்பிறப்பின் வினை.நம் தேர்வுக்குஉட்படாத தத்துவம் என்பது ஆதனால் தான்.அதாவது பிறப்பு என ஒன்று நிகழ்ந்த பின் தான் செய்தொழில் தேர்வு சாத்தியம்.ஆகவே தான் வள்ளுவப் பெருந்தகை எல்லாவுயிர்க்கும் பிறப்பு ஒக்கும்எனக் கூறி, செய்தொழில் வேற்றுமையான் (செய்தொழிலின்) சிறப்பு ஒவ்வா என்றார்.
//பிறப்பவர் தொழில் அடிப்படையில் வேற்றுமைக்கு உள்ளாவது உலக நியதிதான் ..ஏனென்றால் தொழில்கள் பலவகை. அதில் உயர்வு தாழ்வில்லை.பல்லக்கின் உள்ளே இருப்பவர் பணக்காரராக இருக்க வேண்டும் என்பதில்லைநடமாடும் நிலையில் இல்லாதவராக உதவி தேவை உள்ளவராகவும் இருக்கலாம்,கால் செயலிழந்த போலியோ அட்டாக் ஆனவராகக் கூட இருக்கலாம்.தூக்கிச் செல்பவர் அவருக்கு உதவுபவராக இருக்கலாம்.இப்பொழுது குறளை மீண்டும் படியுங்கள் - செய்யும் தொழிலுக்கு புது விளக்கம் கிடைக்கும்//ஏனெனில் தங்கள் விளக்கம் அற்புதமானது என்பதில் ஐயமில்லை, இது வெறும் ஏட்டு அறிவாக மட்டும் நிற்காத மட்டும்.நம் விவாதப் பொருளான நந்தனாரின் இறை பக்தியை தொடர்பு படுத்தி நோக்குவோம்.தங்கள் விளக்கப்படியான இத்தகைய உன்னத எண்ணத்துடன் தன் தொழிலைச் செய்ததன் வாயிலாகத்தான் நந்தனாரும் நந்தி விலக , தங்கு தடையன்றி இறை தரிசனம் பெற்றார் என்ற கருத்தும் ஏற்புடையதாய்தெரிய வேண்டுமேயன்றி, நந்தனாரை உயர்வு தாழ்வு நோக்கங்கொண்டு அக்காலத்தியவர் நடத்தினர் என்றஎதிர்மறை கருத்து ஊகம் தவறானது என்பது என் கருத்து.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/20b98de8-ff8b-463e-9642-0f776b954780n%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/19596916-44ae-4f12-8338-8ca68d4cd288n%40googlegroups.com.
சிவசிவ
# ஊழ்வினை,மறுபிறப்பு, செய்யும் தொழில் சார்ந்த வகையில் நால்வர்ணத்தவர் என்ற கட்டமைப்பும் (பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்), அத்தகைய கட்டமைப்பை வடிவமைத்த ஆதிபகவனின் நற்றாள் பணிந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவாறு எந்த பிற நாட்டுப் பண்பாட்டில் தலையிடுதலோ, படையெடுப்போ செய்தறியாது அறநெறியில் வாழ்ந்த முன்னோர்களை குற்றம் சாற்ற முற்படுவது ஒருபுறம்.#
'நால்வர்ணத்தார் என்னும் கட்டமைப்பை ஆதிபகவன் வடிவமைத்தார்' என்பதற்கான தரவுகளை எந்த சமய நூலிலிருந்து மேற்கோள் காட்ட போகின்றீர்?
‘பிறப்பொக்கும் எல்ல உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ என்று திருவள்ளுவர் கூறியதின் பொருள் என்ன?
உயிர்கள் தன்மையால் ஒரே இலக்கணத்தை உடையவை. ஆதலின் செய்தொழில் தன்மையால் வேற்றுமை காண்பது ஏன்? என்பது அக்குறளின் பொருளாகும். ‘இஸ்கான்’ அமைப்பில் உள்ளவர் வேத மதத்தின் வர்ணாசிரம கோட்பாடுகளுக்கு இக்குறள் உடன்படுவதுபோல் காட்டி பேசுவது தற்கால வழக்கமாக உள்ளது. இத்தகைய செயல் உண்மையைத் திரித்தலாகும். சிவசிவ
மு. கமலநாதன்
சிவசிவ
#பிறப்பவர் தொழில் அடிப்படையில் வேற்றுமைக்கு உள்ளாவது உலக நியதி#
உலக நியதியை நிர்ணயித்தவர் மானுடர். அதனைக் கொண்டு கீழோர் மேலோர் என பகுத்து ஒதுக்க எந்த உலக நியதியில் எங்கு கூறப்பட்டுள்ளது?
அதற்கு கடவுளை உடன் அழைத்து ஏன் நியாயப்படுத்த முயலுகின்றீர்? இத்தகைய நியதிகளை சமய நூல்களைக் கொண்டு நியாயப்படுத்த முற்பட்டால் அந்த சமய நூலில் குறிப்பிட்ட பகுதியை பதிவேற்றவும்.
அந்நூல் இந்திய மதங்களில் எந்த மதத்தைச் சார்ந்து நூல் என்பதனையும் எக்காலத்தில் அந்நூல் இயற்றப்பட்டதென்பதையும் தெளிவுற பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு செய்தால் மட்டுமே தங்களின் கருத்து சான்றுடையதாக இருக்கும். இல்லையேல் அது வெற்று கூற்று எனப் புறந்தள்ள வேண்டி வரும். சிவசிவ
மு. கமலநாதன்
சிவசிவ
#சிவிகை பொறுப்பவனுக்கும் அடிப்படை பிறப்பு, ஊர்ந்தவனுக்கும் அடிப்படை பிறப்பு. அப்படியெனில் சிறப்பின் வேறுபாடு செய்தொழில் காரணமாக அமைவதை மறுப்பவர்களும், கானல் நீரில் தாகம் தீர்த்துக் கொள்கிறேன் என்பவர்களும் ஒரே தரமே, உண்மையைக் கண்டு அஞ்சும் மூடர்கள் என்ற ஒரே தரமே. #
அடடா என்ன சாதூரியமான பேச்சு!
தொழில் வேற்றுமை என்பது பிறப்பால் அமைவதல்ல. அது சூழ்நிலையின் காரணத்தால் அமைவதாகும். நேற்றைய நாவிதரின் பிள்ளை இன்று மருத்துவர். மருத்துவரைப் பார்த்து நாவிதர் என்றால் உலகம் சிரிக்கும்.
கானல் நீரைக் கண்டு அதுவே உண்மையெனப் போகும் தற்குரிகளுக்கு மட்டுமே செய்தொழில் வேற்றுமை நிரந்தரமானதாகத் தெரியும். 21ஆம் நூற்றாண்டிலும் கற்றோர் மத்தியில் இவ்வளவு அறியாமை இருப்பது கண்டு வேதனைப்பட வேண்டியுள்ளது.
மு. கமலநாதன்
‘அறத்தின் பயன் இதுவென்று கூற வேண்டா’ என்பதன் பொருள் தொழில் வேற்றுமையானது நல்வினை தீவினைக்கான பயன் அல்ல என்பதாகும்.
குன்றக்குடி அடிகளார் உரை: சிவிகை ஊர்ந்து செல்வோன் - தூக்கிச் செல்வோனிடையில் உள்ள வேறுபாட்டை அறத்தின் பயன் என்று கூறும் பழக்கம் உடைய சமுதாயத்தை மறுத்துக் கூறியது.
திருக்குறளை தத்தம் வசதிக்குத் திரிக்க முற்படுவது தவறான செயலாகும்.
#மாறாக வடமொழியை முறையே அறிந்த தமிழறிஞர்களும், ஸ்வாமி ஓங்காரானந்தா போன்ற ஆன்மீகப் பெரியோர்களும் ,முனைவர் நாகசாமி போன்ற தொல்லியல் வல்லுநர்களும் திருக்குறளின் உட்கருத்து, இந்து சமய கொள்கைகளுக்கு எங்ஙனம் மிகப் பொருந்துகிறதென முக்கிய ஒப்பீடுகளுடன் முறைபட வலியுறுத்தியுள்ளனர்.#
தாங்கள் குறிபிட்ட இருவருமே வைதிக நெறியினை ஏற்றுக் கொண்டோர். பானையில் உள்ளதுதானே அகப்பையில் வரும்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/6f51c4c1-ba9e-4ce5-b0d1-3b58edbf7dban%40googlegroups.com.
“பிறப்பெனும் பேதைமை நீங்க சிறப்பெனும் செம்பொருள் காண்பதறிவு’
மாணிக்கவாசகர் ‘செம்பொருள்’ என்பதற்குச் சிவபெருமானை குறிப்பிடுகிறார். ஆதலின் ‘செம்பொருள்’ என்பது இயல்பிலேயே மலங்கள் அற்றவனைக் குறிக்கும். அவ்வாறு இயல்பிலேயே மலங்களற்ற பரம்பொருள் அருளிய போதனையையேற்று அவனை உணர்தலே பிறப்பு இறப்பிலிருந்து மீள வழிகோலும் என்பது அக்குறளின் பொருளாகும்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/a0b3c0b1-dc77-419b-bcb7-2b2f36934478n%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e5d0efc7-ff7f-4cc5-8d83-13d953b1fbdbn%40googlegroups.com.
சிவசிவ
#இதைச் சொல்பவர், பிறப்பு என்பதே முன் வினைப் பயன் காரணமாகத் தான் என்ற இந்து மதக் கோட்பாட்டை ஏற்கிறீரா? #
முதலில் “இந்து மதம்” என்பது எந்த மதம் என்பதை விளக்க வேண்டுகிறேன். அவ்வாறு விளக்க தக்க சமய நூல் தரவுகளை முன் வைக்கவும்.
வினைப்பயனே பிறவிக்குக் காரணமென்பதை பெரும்பாலான இந்திய மெய்யியல்கள் ஏற்கும். ஆனால் அவற்றில் இறை இருப்பை ஏற்ற மெய்யியல்களும் ஏற்காத மெய்யியல்களும் ‘வினை’ –யை உயிருக்கு ஊட்ட ஒருவன் வேண்டுமென்றும் வேண்டாவென்றும் முரண்படும்.
#அவ்வாறு ஏற்பீர் எனில், சிவிகை பொறுப்பவனும் ஊர்ந்தவரும் தத்தம் கடமையை செவ்வனே செய்ய அந்த தொழிலின் சிறப்பு வேறுபாட்டை அறிந்தால் தானே சரிவர பணியாற்ற இயலும்.#
‘அறிவு’ என்பது எதனைக் குறிக்கின்றது? உயிர் பெறும் அனுபவங்களைப் பொருத்து ஒவ்வொருவரும் அறிவு பெறுகின்றார்.
ஆகையால், சிவிகையில் அமர்பவனும் அதனைச் சுமப்பவனும் அவரவர் தொழிலில் பெற்ற அனுபவத்தால் அறிவு உடையவரே ஆவார்.
இதில் மேலோர் கீழோர் எனப் பகுத்து ஒதுக்க கற்றுக் கொடுத்த ‘அறிவுடையோர்’ யார்?
மேலோர் கீழோர் எனப் பகுத்து ஒதுக்கும்போதே 'நான்' உயர்ந்தவன் என்னும் செருக்கு வரும். ஆணவம் என்னும் பொருளின் வெளிப்பாடே உயிருக்கு ஏற்படும் செருக்கு ஆகும். அதுவே இந்திய மெய்யியல்களில் 'அறியாமை' என்று கூறப்படுகின்றது. இவ்வாறு அறியாமையில் வாழ்ந்து வீழ்வோர் பிறப்பு இறப்பு என்னும் கடலை விட்டு கரையேற இயலுமா? எதற்கு பொய்மையான சமய போதனை செய்ய முற்படுகின்றீர்?
மு. கமலநாதன்
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/b3d6f327-e052-422d-8bea-5485ebbe9c2cn%40googlegroups.com.
சிவசிவ
“நந்தனாரை பிரிட்டிஷார் வெளியே
நிற்க வைத்தார்களா” என்ற கேள்வியின் வன்மத்தை கண்டிக்கிறீரா்?
நந்தனார் போன்றோர் சிவாலயங்களுக்குள் செல்லக்கூடாதென்னும் வழமை தமிழ் நாட்டில் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வந்துள்ளது. இதனை ஆங்கிலேயரா செய்தனர்? தங்களை வைதிகச் சைவர் என்று கூறிக் கொண்டு வைதிக நெறிகளைப் பிற்காலத்தில் ஏற்றுக் கொண்ட சைவரே இத்தகைய தீண்டாமையைச் செய்தனர்.
நந்தனாரின் வரலாற்றை திசைதிருப்ப வேண்டி திருத்தொண்டர் புராணத்தில் மேலும் புனைக்கதைகளை இடைச்செருகல் செய்ததற்கு இத்தகைய வைதிகச் சைவரே காரணமானார்.
இறைவன் காட்சி கொடுத்த மாத்திரத்திலேயே ஆன்மா
நயன தீக்கைப் பெற்று மல நீக்கம் பெறுமென்பது சைவ கோட்பாடாகும். நந்தனாருக்கு அவ்வாறு
நடந்தது திருபுன்கூரில். அக்காலமே அவர் உடலும் ஆன்மாவும் தூய்மை பெற்றதென்பது திருத்தொண்டர்
புராணத்தில் மற்ற நாயனாருக்குக் கூறும் வரலாற்றிலிருந்து பெறப்படும்.
ஒரு புலையோருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தான்
என்பதை ஏற்றால் சூத்திரருக்கு மோட்சமில்லையென்று கூறும் வைதிக நெறி பொய்த்து விடும்.
அதற்காக நந்தனார் வரலாற்றில் பிற்கதை இடைச்செருகல் செய்யப்பட்டது.
பதினான்காம் நூற்றாண்டில் சேக்கிழார் புராணத்தை எழுதிய உமாபதி சிவாச்சாரியாரின் நூலில் கூறப்படும் திருந்தொண்டர் புராணத்தின் மொத்த பாடல் எண்ணிக்கையிலிருந்து தற்கால திருத்தொண்டர் புராணத்தில் 23 பாடல்கள் மேற்கொண்டு உள்ளன. ஆகையால் இன்றைய திருத்தொண்டர் புராண அச்சு நூல் இடைச்செருகல் செய்யப்பட்ட நூலே என்பதில் ஐயமில்லை. இவ்வாறு இடைச்செருகல் செய்தோர் அதனில் சொற்களை மாற்றி அமைத்திருக்க மாட்டார் என்பதில் ஐயமேதுமுண்டோ. சிவசிவ.
ஆகையால் தேமொழியின் கூற்றை கண்டிப்பதை விட தமிழகத்தில் உள்ள வைதிகச் சைவரிடையே இருக்கும் தீண்டாமையைக் கண்டிக்கிறேன்.
மு. கமலநாதன்
#தொழில் வேறுபாடு என்றால் மேலோர் கீழோர் உயர்வு தாழ்வு என்ற அடிப்ப்டையில் மட்டும் தான் என நீங்கள் புரிந்து கொண்டால் , அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது.#
என்னே பேதமையான விளக்கம்!
தேமொழி பதிவேற்றிய நிழற்படம் கூறும் கருத்தையொட்டிதானே
தாங்கள் அதனை நியாயப்படுத்த திருவள்ளுவரையும் இந்து மதத்தையும் துணைக்கு அழைத்தீர்.
இப்பொழுது “மேலோர் கீழோர் உயர்வு
தாழ்வு என்னும் அடைப்படையில்தான் என நீங்கள் புரிந்து கொண்டால், அதற்கு நான் பொறுபேற்க முடியாது” என்றால் இது கயமை அல்லவா. சிவசிவ
அப்புறம் வினைப்பயனை மேற்கோள் காட்டியதின் நோக்கமென்ன? விளக்குவீர்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/b9fcb0b4-2c3a-46d9-81ce-05624860b446n%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/2aa24949-72cd-4ad2-a13a-eb9b32d35053n%40googlegroups.com.
இயேசு கிறிஸ்துவை தேவதூதராகக் கொண்ட christianity தமிழில் கிறித்துவம் எனப்படுகிறது.
Islam என்பது இஸ்லாம் அல்லது இஸ்லாத்து என தமிழில் அழைக்கப்படுகிறது.
கிறிஸ்து, இஸ்லாம் இவ்விரண்டின் தமிழாக்கத்தில் கி,இ ஆகிய முதல் எழுத்துக்கள் தமிழில் எவ்வித மாற்றத்தையும் அடைவதில்லை.
மாறாக வடமொழியிலோ சிவனை ஆதிக்கடவுளாகக் கருதும் மதம் சிவ என்பதின் சி என்ற முதல் எழுத்து சை என மருவி சைவ என்றும், விஷ்ணுவை ஆதிக்கடவுளாகக் கருதும் மதம் விஷ்ணு என்ற சொல்லின் முதல் எழுத்து வி என்பது வை என மருவி வைணவ என்றும் தமிழில் அழைக்கப்படுகின்றன.
அதே போல் தான் கணபதி காணபத்யம் என, சூர்ய என்பது சௌர்ய என, குமர என்பது கௌமார மற்றும் சக்தி என்பது சாக்தம் என முதலெழுத்து வடமொழி அடிப்படையிலான மருவுதல் , வடமொழி வேத, தமிழ் இணைப்பை நிலை நாட்டுகிறது.
இவ்வாறு சைவ என்ற சொல்லே , வடமொழியின் தாக்கத்தை உணர்த்துகையில், வடமொழி அடிப்படையில் சைவ என்ற மருவிய பெயரை மட்டும் வைத்துக் கொள்வார்களாம், ஆனால் அந்த சொல் இடம் பெற்ற வேதத்தை கழற்றி விடுவார்களாம்.
//மகளிரும் சூத்திரரும் பிரணவத்தை சேர்க்காது 'நமசிவாய' என்னும் மந்திரத்தை மட்டுமே ஓத வேண்டும் என்னும் விதி கூறப்படுகின்றது.//
அது அக்காலத்து விதியாக இருந்திருக்கலாம். ஆனால் அவை நிரந்தரமன்று.
உமாபதி சிவாச்சாரியார் பற்றியதில் அவரே அந்தணர் எனவும், அவர்தம் சீர்திருத்தம் ஏற்றுக் கொள்ளப் பட்டிருப்பதும் பதிவாகியுள்ளன ,ஆதாரத்துடன். தவிரவும் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தைச் சுருக்கித் திருத்தொண்டர் புராண சாரம் என்னும் பெயரிலும், சேக்கிழாரின் வரலாற்றைச் சேக்கிழார் புராணம் என்னும் பெயரிலும் எழுதினார் என உள்ளதேயன்றி.இதில் நீங்கள் கூறியது போன்ற இடைச்செருகல் என எதுவும் இல்லை.
நான் கூறுவதெல்லாம், இந்து மதம் சீர்திருத்தம் பலவற்றை ஏற்று வீறு நடை போடும்போது, வடமொழி தமிழ் பிரிவினை, மேல் சாதி, கீழ் சாதி பிரிவினை பேச்சுக்கள் யாவும் சமூக ஒருங்கிணைப்பைத் தளர்த்து இந்திய பண்பாட்டை தகர்க்கும் தீய உள்நோக்கமுடைச் செயல்களே யன்றி, இந்தியாவின் வலிமையான நேர்மையான இறையாண்மை உண்மையை அறிய உதவாதவையே.
//மகளிரும் சூத்திரரும் பிரணவத்தை சேர்க்காது 'நமசிவாய' என்னும் மந்திரத்தை மட்டுமே ஓத வேண்டும் என்னும் விதி கூறப்படுகின்றது.//
அது அக்காலத்து விதியாக இருந்திருக்கலாம். ஆனால் அவை நிரந்தரமன்று.
As the vociferous battle for women’s freedom and equality rages on in the country, it would not be an exaggeration to say that the journey, in many ways, began in Madras.
Way back in 1921, Madras was the first legislature in British India to pass the women’s suffrage resolution by a considerable majority.
This meant that for the first time, women were recognised as ‘people’ by the State, thereby given the right to vote on the same condition as men.
As the news spread, the world was captivated by the women of Madras. Congratulatory messages poured in from across the world.
In The Hindu, dated July 2, 1921, Lady Constance Lytton, the renowned British suffrage activist, wrote, ‘Please offer the women of South India my most heartfelt congratulations on their winning the vote. I am thrilled and it seems like a dream the way the experience in our own Island (Britain) has borne wonderful fruit.’
Australia’s Women’s Service Guild, France’s Action Speciale de la Femme and the British Dominion Women’s Citizen Union too extended their greetings and hoped other provinces would soon follow suit. They did.
Within months, Bombay Presidency and the United Province passed similar resolutions.
Interestingly, it was the Madras Council’s resolution that reflected the most decisive mandate in comparison to others.
Of the 90-odd members present in the Council, 40 voted for the recommendation, 10 opposed it and 40 remained neutral.
Dorothy Jinarajadasa, of the Women’s Indian Association, who attended both the debates in Madras and Bombay recorded: ‘It took only an hour and a half of debate to show that the Madras Council was preponderously in favour of granting women suffrage. On the contrary, though Bombay is noted everywhere for the advanced education and free status of womanhood, it took three days of ‘hard verbal fighting’ to wear down the opposition.’
However, the news of women gaining the right to vote was not unanimously welcomed in Madras.
N. Subrahmanya Aiyar, in his column Impressions of the Week in The Hindu, sceptically described the resolution an attempt of foreign-inspired pseudo progressives to disturb the relative function of the sexes already perishing under the unhealthy modern influence.
Echoing similar disdain, a reader from Saidapet, in a letter to the editor, exclaimed, ‘It is not a matter of congratulations that the legislative council should have resolved to extend suffrage to Indian women. For progress, man must be both the controller in politics and civics. His sex stands for performance, conformity and therefore, for uniformity, essential for common good and justice.’
By taking the lead in swimming against the current, Madras laid the foundations for a tradition of progressive gender politics. Indomitable women leaders like Muthulakshmi Reddi, Lakshmi Sahgal, and Jayalalithaa are emblematic of the same.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/351abead-a114-4291-b1f3-e1c980dfa063n%40googlegroups.com.