
தாயானாள் என் தலைவி
புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ்வரித்
திதலை அல்குல் முதுபெண்டு ஆகி,
துஞ்சுதியோ, மெல்அம்சில் ஓதி? என,
பல்மாண் அகட்டில் குவளை ஒற்றி,
உள்ளினென் உறையும் என்கண்டு, மெல்ல
முகைநாண் முறுவல் தோற்றி,
தகைமலர் உண்கண் கை புதைத்ததுவே! (நற். 370: 5-11)
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
பொருள்:
புதல்வனைப் பெற்றுத் தந்ததனால் தாய் என்று பெயர் பெற்று, அழகிய வரிகளுடன்
வெண்புள்ளி போன்ற தேமலையும் உடைய அடிவயிற்றினைக் கொண்டவள் படுத்திருந்தாள்.
அப்போது அங்கே வந்த தலைவன், 'முதுமை அடைந்ததால்' இவ்வாறு தூங்குகிறாயோ?
என்று கூறியவாறே அவளது வயிற்றில் குவளை மலரால் ஒற்றினான்.
அவள் கண் விழித்து, முல்லையின் மொட்டுப்போல் புன்னகை பூத்து,
அழகிய மைபூசப்பெற்ற கண்களைக் கையால் மூடிக்கொண்டாள்.
My beloved blessed our clan with a son;
Praising her, I stroked her stomach with a bloom of kuvalai,
She smiled gently with her teeth shining, like the mullai buds.
And covered her kohl-rimmed eyes with her hands.