சங்கத்தமிழ் நாள்காட்டி : சங்க இலக்கியப்பாடல்கள் - விளக்கங்கள் ஓவியங்களுடன்

54 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 30, 2025, 6:12:27 PM (10 days ago) Sep 30
to மின்தமிழ்

Screenshot 2025-10-01.jpg
முள்ளம்பன்றி வேட்டையாடிய கானவர்

வன் கைக் கானவன் வெஞ்சிலை வணக்கி,
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு,
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட,
வேட்டுவலம் படுத்த உவகையன், காட்ட
நடுகால் குரம்பைத் தன் குடிவயின் பெயரும்! (நற். 285:3-7)
        மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்

பொருள்:
வலிய கையையுடைய கானவன், தன் கொடிய வில்லை வளைத்து
அம்பைத் தொடுத்து ஆண் முள்ளம்பன்றியைக் கொன்றான்.
அதனை எடுத்துக்கொண்டு வேட்டையில் வெற்றியடைந்த மகிழ்ச்சியோடு
காட்டின் உள்பகுதியில் உள்ள தன் சிறிய குடிலுக்குள் சென்றான்.
மனையிலிருந்த நாய்கள் அவனைக் கண்டு சுற்றி விளையாடின.

A strong-handed forester splits the chest of a porcupine
With his dart and takes home its body,
His heart overflowing with the joy of triumph!
As he reaches his hut, all his pet-dogs
Gleefully bark and surround him.

*படத்தில் கூட முள்ளம்பன்றியைப் பார்த்திராதவர்களும் 
அது எப்படி இருக்கும் என்று தெரியாதவர்களும் இருக்கிறார்கள் !!!!
🦔

தேமொழி

unread,
Oct 1, 2025, 5:08:29 PM (9 days ago) Oct 1
to மின்தமிழ்
Screenshot 2025-10-02.jpg

இறகினை அம்பில் கட்டும் வேட்டுவர்

கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடுபிணன்
இடுமுடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது,
புனிற்று நிரை கதித்த, பொறிய முதுபாறு
இறகு புடைத்து இற்ற பறைப் புன்தூவி
செங்கணைச் செறித்த வன்கண் ஆடவர்! (நற். 329:2-6)
          மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

பொருள்:
பாலை நிலத்தின் வழியில் கொலைசெய்யப்பெற்றவர்களின் பிணங்கள்
புதைக்கப்படாமல் நாற்றம் வீசியபடி, அங்கங்கே கிடந்தன. அவற்றின்
அருகில் இருந்த புள்ளிகளை உடைய, புதிதாகக் குஞ்சு பொரித்த பருந்து,
அந்தப் பிணங்களை உண்ணாமல் சிறகடித்துப் பறக்கும்.
அப்போது உதிர்ந்த அதன் இறகினை எடுத்த கானவன்,
தனது அம்பின் ஒரு பக்கத்தில் இறுகக் கட்டினான்.

Unable to feed upon the corpses of the wayfarers,
Killed and left unburied by the brigands;
An aged vulture sheds soft feathers as it flies away from the stink,
The brigands collect them and fasten to their blood-stained darts.

தேமொழி

unread,
Oct 2, 2025, 9:01:30 PM (7 days ago) Oct 2
to மின்தமிழ்
Screenshot 2025-10-03.jpg
தாயானாள் என் தலைவி

புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ்வரித்
திதலை அல்குல் முதுபெண்டு ஆகி,
துஞ்சுதியோ, மெல்அம்சில் ஓதி? என,
பல்மாண் அகட்டில் குவளை ஒற்றி,
உள்ளினென் உறையும் என்கண்டு, மெல்ல
முகைநாண் முறுவல் தோற்றி,
தகைமலர் உண்கண் கை புதைத்ததுவே! (நற். 370: 5-11)
          உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்

பொருள்:
புதல்வனைப் பெற்றுத் தந்ததனால் தாய் என்று பெயர் பெற்று, அழகிய வரிகளுடன்
வெண்புள்ளி போன்ற தேமலையும் உடைய அடிவயிற்றினைக் கொண்டவள் படுத்திருந்தாள்.
அப்போது அங்கே வந்த தலைவன், 'முதுமை அடைந்ததால்' இவ்வாறு தூங்குகிறாயோ?
என்று கூறியவாறே அவளது வயிற்றில் குவளை மலரால் ஒற்றினான்.  
அவள் கண் விழித்து,  முல்லையின் மொட்டுப்போல் புன்னகை பூத்து,
அழகிய மைபூசப்பெற்ற கண்களைக் கையால் மூடிக்கொண்டாள்.

My beloved blessed our clan with a son;
Praising her, I stroked her stomach with a bloom of kuvalai,
She smiled gently with her teeth shining, like the mullai buds.
And covered her kohl-rimmed eyes with her hands.

தேமொழி

unread,
Oct 3, 2025, 9:10:25 PM (6 days ago) Oct 3
to மின்தமிழ்
Screenshot 2025-10-04.jpg

ஆதரவு அற்றதாகியது அருள்

பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்துக்
கவை முடக் கள்ளிக் காய் விடு கடு நொடி
துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார், நத்துறந்து,
பொருள்வயின் பிரிவார்ஆயின், இவ் உலகத்துப்
பொருளே மன்ற பொருளே,
அருளே மன்ற ஆரும் இல்லதுவே! (குறுந். 174)
          வெண்பூதி

பொருள்:
மழை பெய்யாத பாலை நிலத்தில்
கள்ளிச் செடியின்  காய்வெடித்துச் சிதறும்போது
எழும் சத்தத்தால்  இணைப் புறாக்கள் அஞ்சி ஓடும்.
இத்தகைய கொடிய பாலை வழியில் தனியாகப்
போவது பாதுகாப்பற்றது என்று கருதாமல், நம்மை விட்டுப்
பொருள் தேடிச் சென்றான் தலைவன். அப்படியென்றால், இவ்வுலக வாழ்க்கைக்கு
எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் பொருள்தான் உயர்வானதோ?
அருளை ஏற்பார் யாரும் இல்லையோ?

Irrespective of hardships faced on the parched way
Where a pigeon couple part away
On hearing the sound of the kalli fruit crack,
If he still goes away in search of wealth,
Then in this world wealth is all that matters;
Love doesn't matter at all.

தேமொழி

unread,
Oct 4, 2025, 8:10:42 PM (5 days ago) Oct 4
to மின்தமிழ்
Screenshot 2025-10-05.jpg
அதுதான் எங்கள் ஊர்

கல்லென் கானத்துக் கடமா ஆட்டி
எல்லும் எல்லின்று! ஞமலியும் இளைத்தன!
செல்லல் ஐஇய! உது எம் ஊரே! (குறுந். 179:1-3)
          குட்டுவன் கண்ணன்

பொருள்:
ஆரவாரமுடைய காட்டில் குறவர்கள், கடமாவை வேட்டையாடி
முடிக்கவே அன்றைய நாள் கழிந்தது. உடன்வந்த வேட்டை நாய்களும் சோர்ந்தன.
இவ்வேளையில் செல்ல வேண்டாம். ஐய! எம் ஊர் அதோ இருக்கிறது.

Having hunted bison in the noisy forest the whole day
The hunting dogs are tired; daylight too has dimmed;
My Lord! Our town is nearby.
(An invitation to stay at her town)

தேமொழி

unread,
Oct 5, 2025, 7:50:47 PM (4 days ago) Oct 5
to மின்தமிழ்
Screenshot 2025-10-06.jpg

காண்பார் அல்லவா தோழி!

சென்ற நாட்ட, கொன்றைஅம் பசுவீ
நம்போல் பசக்கும் காலை, தம்போல்
சிறுதலைப் பிணையின் தீர்ந்த நெறிகோட்டு
இரலை மானையும் காண்பர்கொல், நமரே! (குறுந். 183:1-4)
ஒளவையார்

பொருள்:
நம்மைப் பிரிந்து தலைவர் சென்ற நாட்டில், கார் காலத்தில்
நம்மைப் போல் பசலை படர்ந்த கொன்றை மரத்தின் மலர்களையும்,
சிறிய தலையையுடைய பெண்மானைப் பிரிந்த முறுக்கிய கொம்புகளைக் கொண்ட இரலை ஆண் மானையும் அவர் காண்பார் அல்லவோ, தோழி!

In the town he has gone to, yellow flowers bloom
Just like my freckles, during monsoon;
A blackbuck with gnarled horns stands
Separated from it's small headed doe.
Will my lover see them?

தேமொழி

unread,
Oct 6, 2025, 7:44:18 PM (3 days ago) Oct 6
to மின்தமிழ்
Screenshot 2025-10-07.jpg
கண் வலையில் அகப்பட்ட என் நெஞ்சம்

... மாண்தகை நெஞ்சம்
மயில்கண் அன்ன மாண் முடிப் பாவை
நுண் வலைப் பரதவர் மடமகள்
கண் வலைப் படூஉம் கானலானே! (குறுந். 184: 4-7)
          ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன்

பொருள்:
மயிலின் தோகையைப் போன்ற நீண்ட கூந்தலை உடையவளும்,
செம்மையாக உருவாக்கப்பெற்ற பாவை போன்றவளுமான அவள்,
நுண்ணிய வலைகளையுடைய பரதவரின் மகள். இளமை பொருந்திய அவளது
கண் வலையில் அகப்பட்டு அங்குள்ள கடற்கரைச்
சோலையிலேயே என்னுடைய நெஞ்சம் தங்கிவிட்டது.

She's the daughter of fisherfolk with fine nets;
My blessed heart has been snared
By the eyes of that beauty,
With hair that's dark like eyes in peacock feathers.

தேமொழி

unread,
Oct 7, 2025, 7:18:30 PM (3 days ago) Oct 7
to மின்தமிழ்
Screenshot 2025-10-08.jpg

இன்பநுகர்வும் துறவும்

கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையோடு
அள்இலைத் தாளி கொய்யுமோனே,
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே! (புறம். 252)
          மாற்பித்தியார்

பொருள்:
வெண்மையான அருவி நீர் படுவதால்
தில்லை மரத்தின் இலையின் நிறம் பழுப்பு நிறமாக மாறும்.
அப்படிப் பழுப்பு நிறம் பெற்ற சடை முடியுடன் இப்போது
தாளி இலையைப் பறிக்கிறார் துறவி.
இவரே, முன்பு தன் மனைவியைக் கவரும் வகையில்
சொல்வலை வீசி வேட்டையாடுபவனாக விளங்கினார்.

The roaring white waterfalls dulled
His braided hair to the color of thillai leaves.
He who now gathers fresh leaves in a forest as an ascetic,
Once hunted his homebound naïve woman with his words.

தேமொழி

unread,
Oct 8, 2025, 8:28:52 PM (2 days ago) Oct 8
to மின்தமிழ்
Screenshot 2025-10-09.jpg

வென்று வந்தான்

யார்கொலோ, அளியன் தானே? தேரின்
ஊர்பெரிது இகந்தன்றும் இலனே! அரண்எனக்
காடுகைக் கொண்டன்றும் இலனே! காலைப்
புல்லார் இனநிரை செல்புறம் நோக்கி,
கையின் சுட்டிப் பைஎன எண்ணி,
சிலையின் மாற்றியோனே! (புறம். 257:5-10)
          பெயர் அறியப்படாத புலவர்

பொருள்:
யார் அவன்? இரங்கத்தக்கவன்! ஆராய்ந்து பார்த்தால் இவன் தன்
ஊரை விட்டுச் சென்றதும் இல்லை. காட்டிற்குச் சென்று
மறைந்துகொண்டதும் இல்லை. இன்று காலையில்
பகைவரின் ஆநிரைகள் செல்லும் வழியைப் பார்த்து
அவற்றைக் கவர்வது பற்றி எண்ணி, மீட்க வந்த கரந்தை வீரர்கள் அனைவரும்
நடுகல் ஆகும்படியாகப் போரிட்டு அழித்து வந்துள்ளான்.

He hadn't stepped out of his town
Nor camouflaged himself in the forest till now;
Yet, he watched and counted the enemy's cattle,
And seized them with the help of his bow.

தேமொழி

unread,
Oct 9, 2025, 7:43:27 PM (12 hours ago) Oct 9
to மின்தமிழ்
Screenshot 2025-10-10.jpg

முன்னெச்சரிக்கையுடன் செல்க!

ஏறுஉடைப் பெருநிரை பெயர்தர, பெயராது
இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த
வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்!
செல்லல், செல்லல், சிறக்க நின் உள்ளம்! (புறம். 259:1-4)
          கோடை பாடிய பெரும்பூதனார்

பொருள்:
ஆநிரைகளைக் கவர்ந்து வரும் வீரர்கள் அந்த ஆநிரைகளின் பின்னால் செல்லாமல், மீட்க வரும்
கரந்தை வீரரை எதிர்கொள்வதற்காக இலை சூழ்ந்த காட்டில் தங்கள் தலையை
மறைத்துக்கொண்டு வில்லுடன் பதுங்கி இருப்பர். எனவே காவல்
புரிவோரைக் கருதாமல் செல்லற்க! உனது முயற்சி வெற்றி பெறட்டும்.

O' warrior, wait, don't rush forward;
Beware of skilled archers who stay back
Hiding in the leafy forest, as the herd
Of bulls and cows they stole move ahead.
Reply all
Reply to author
Forward
0 new messages