தமிழகம் விற்பனைக்கு..... தமிழக
முதல்வர் ஒப்பந்தம்... இப்படி விரைவில் செய்தி வந்தாலும் ஆச்சரியப்பட
ஏதும் இல்லை... நாம் தான் நடுத்தெருவில் நின்று பிச்சை எடுக்கவும் ஆயத்தமாக
இருக்க வேண்டும்...
எச்சரிக்கை:
எல்லோருக்கும்
வணக்கமுங்க... நேற்று(ஜூலை-2-2010) நான் படித்த செய்தி எனக்குள் பகீர்
என்று தூக்கி வாரிப் போட்டது.. என்னன்னு கேட்குறீங்களா? இதோ அந்த செய்தி
படிங்க முதல்ல... ஏன் இந்த பகீர் என்பது குறித்து செய்தியினைத் தொடர்ந்து சொல்லுகிறேன்....
நாமக்கல், மேட்டுப்பாளையத்தில் அதிக
ப்ளாட்டினம்-சுரங்கத்துறை உதவியுடன் தோண்ட உடன்பாடு
விலை உயர்ந்த பிளாட்டினம் கனிம
படிவங்கள், தமிழகத்தில் நாமக்கல், கோவை மாவட்டங்களில் மிக அதிக அளவில்
இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் ஆய்வு
செய்யப்படுவதற்கான ஒப்பந்தம், முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் ஜுலை.1
அன்று கையெழுத்தானது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும்
நிலத்திற்கடியில் படிந்துள்ள வெண்தங்கம் எனப்படும் பிளாட்டினம் கனிமத்தைக்
கண்டறிவதற்காக இந்திய புவியியல் ஆய்வுத் துறை கடந்த மூன்று ஆண்டுகளாக ஆய்வு
செய்து வருகிறது. இதன் பயனாக, இதுவரை மேட்டுப்பாளையம் முதல் நாமக்கல் வரை
பல்வேறு பகுதிகளில் நிலத்திற்கு அடியில் பிளாட்டினம் படிமங்கள் இருப்பதாகக்
கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது கண்டறியப்பட்டுள்ள
பிளாட்டினம் கனிமங்களை வணிக நோக்குடன் ஆய்வு செய்யவும், அக்கனிமங்களை
பயன்படுத்தி பல்வேறு தொழில்களைத் தொடங்கவும், மேலும் புதிய இடங்களில்
கனிமங்கள் குறித்து ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளவும் தமிழ்நாடு கனிம நிறுவனம்,
இந்திய புவியியல் ஆய்வுத்துறையுடன் இணைந்து விரிவான அளவில் நடவடிக்கைகள்
மேற்கொள்ள, நேற்று மாலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் அடிப்படையில் கோவை மேட்டுப்பாளையம்
மற்றும் நாமக்கல் வரை பூமிக்கடியில் உள்ள பிளாட்டினம் படிமங்களை
வெட்டியெடுப்பதற்கான சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை கோட்டையில் முதலமைச்சர் கருணாநிதி
முன்னிலையில் அவரது அறையில் நடைபெற்ற இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்,
கொல்கத்தாவில் உள்ள இந்திய புவியியல் ஆய்வுத்துறை டைரக்டர் ஜெனரல்
என்.கே.தத்தா, தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை
இயக்குனர் டாக்டர் க.மணிவாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வின்போது, சட்ட அமைச்சர்
துரைமுருகன், சுரங்கத் துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர், தமிழக தொழில்துறை
முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நிதித்துறை முதன்மை செயலாளர் சண்முகம்,
தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் பொதுமேலாளர் வி.மனோகரன் தமிழ்நாடு புவியியல்
மற்றும் சுரங்கத்துறை ஆணையர் தங்க கலியபெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.
நாயர் மற்றும் இந்திய புவியியல் ஆய்வுத்துறையின்
இயக்குனர் நாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தமிழகத்தில் கடந்த 2,3 ஆண்டுகளாக பிளாட்டினம்
கனிமத்தை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு கனிம நிறுவனத்துக்கு, இந்திய புவியியல்
துறை இப்பணியில் உதவி வருகிறது. இதில், நாமக்கல் மாவட்டம்
சத்தம்பூண்டியிலும், மேட்டுப்பாளையத்திலும் பிளாட்டினம் படிமங்கள் இருப்பது
உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் மிக அதிக அளவில் இருப்பது
தெரியவந்துள்ளது.
சத்தம்பூண்டி பகுதியில் 27 சதுர கி.மீ.
பரப்புக்கு பிளாட்டினம் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோல்,
மேட்டுப்பாளையம் பகுதியில் 5 சதுர கி.மீ. பகுதியில் பிளாட்டினம் உள்ளது.
ஆனால், இன்னும் 150 கி.மீ. பகுதியில் பிளாட்டினம் உள்ளது.
தற்போது, 30 மீட்டர் ஆழம் மட்டுமே
தோண்டியுள்ளோம். இன்னும் 200 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை தோண்டும்போது
மிக அதிக அளவில் பிளாட்டினம் கிடைக்கக்கூடும். உலகில் தற்போது,
தென்னாப்பிரிக்காவில்தான் அதிக அளவில் பிளாட்டினம்
வெட்டியெடுக்கப்படுகிறது. உலகில் கிடைக்கும் 100 சதவீத பிளாட்டினத்தில் 70
சதவீதம் தென்னாப்பிரிக்காவில்தான் கிடைக்கிறது.
இந்தியாவில் ஒரிசாவில் மட்டும் ஓரளவு பிளாட்டினம்
கிடைத்து வருகிறது. ஆனால், தமிழகத்தில்தான் முதல்முறையாக மிக அதிக அளவில்
கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் தமிழகத்தையே
சேரும். மத்திய அரசு, பிளாட்டினம் கண்டறிவதில் உதவி மட்டுமே அளிக்கும்.
பிளாட்டினம் இருக்கும் இடங்களில் கனிமத்தை வெட்டியெடுப்பதில் தனியாரை
ஈடுபடுத்துவது, அதை விற்பனை செய்வது என அனைத்திலுமே தமிழக அரசுதான்
முழுபங்கு வகிக்கும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் இப்போது கிடையாது.
இன்னும் அந்த அளவுக்கு பணிகள் செல்லவில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்கள்.
இது தாங்க
அந்த பகீர்க்கான காரணம்...
விவசாயம்
வளரணும்... அப்போது தான் ஒரு நாட்டின் பொருளாதாரம் மேம்படும் இது தான்
உண்மையான பொருளாதார வளர்ச்சி... இது அனைவரும் அறிந்தது... என்ன தான் தொழில்
துறையில் வளர்ச்சி ஏற்பட்டாலும் அதன் மூலம் ஏற்படும் பொருளாதார
வளர்ச்சி... நிலையானது அல்ல. என்பதனை இந்த ஆட்சியாளர்கள்
உணரவில்லை..போலும். ஏன் பொருளாதார வல்லுனர் எனப்போற்றப் படும் நம்ம பிரதமர்
கூட அறியவில்லை போலும்.. தமிழ் தமிழர்கள் என பேசும் நம் முதல்வரும்
அறிந்திருக்கவில்லையா? இது தான் நம் கேள்வி..
இன்று
கடனால் தத்தளித்த விவசாயிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து விவசாயிகள்
மனதில் மதிப்பினைப் பெற்ற கருணாநிதி தான்... இன்று இந்த நாமக்கல் மாவட்டம்
மற்றும் மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகளின் வாழ்க்கையில் மாபெரும் ஆப்பு
வைக்க களம் இறங்கி இருக்கிறார்... என்பதனையே இந்த மத்திய அரசுடனான
பிளாட்டினம் ஒப்பந்தம் காட்டுகிறது..
இதற்கும்
பத்திரிகைகள் ஜால்ராக்களை கையில் எடுத்து.. பிளாட்டினம் தமிழகத்தில் வெட்டி
எடுக்கப்பட்டால்... தமிழகம் வளம் கொழிக்கும் மாநிலமாக மாறிவிடும் என்று
கதை கட்டி வருகிறது... (பார்க்க... தினத்தந்தி ஜூலை 2)
எப்படிங்க
வளம் கொழிக்கும்...
தமிழகத்தில் இன்று பரவலாக விவசாயம் செய்வோரும்
சரி விவசாய நிலமும் சரி குறைந்து கொண்டே வருகிறது... எப்படி வளம்
கொழிக்கும்...
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் ஆனால்..
நாமக்கல்,ஈரோடு,திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்கள்... விவசாய மாவட்டங்களை
அதிகம் உள்ளடக்கிய பகுதிகள்... கடந்த சில ஆண்டுகளாக விவசாய நிலங்கள்...
வீட்டு மனைகளாக மாறி வருகிறது.. இதனையும் அரசு தடுத்த பாடில்லை... இதற்கு
காரணம் ஆட்கள் பற்றாக்குறை.. ஆனால்.. இதற்கு தீர்வு காணாமல்... ஊரக
வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் இருந்த சில விவசாய வேலை ஆட்களையும் தினம்
தினம் சுற்றுலா அழைத்து செல்வது போல அழைத்து சென்று.. வெட்டி மாநாடு நடத்த
விட்டுள்ளனர்... ஆமாங்க... உங்க பக்கத்துல ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துல
வேலை செய்யுறவங்களை போயி பாருங்க.. புரியும்... நான் சும்மா சொல்லுறதா
நினைக்காதீங்க... வேலைக்கு ஆட்கள் இல்லைனு வேண்டும் என்று குறை
சொல்வதாகவும் நினைக்காதீங்க... நானும் மத்திய அரசு ஊழியரின் மகன் தானுங்க..
ஆமாங்க... எங்க அம்மாவும்... ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துல பயனாளி... இனி
எப்பவுமே இவங்க ஓட்டு சூரியனுக்கு தானாம்.. ஏன்னு கேட்டா.. வேலை செய்யுறமோ
இல்லையோ கூலி தர்றாங்க... என்றார்... போதுமுங்களா? நானும் என் அம்மாவிடம்
இங்கு வேண்டாம் வீட்டில் இருக்க வேண்டியது தானே.. இருக்கும் மாடுகளை
பார்க்கலாம்னு சொன்னா கேட்க மாட்டேன்னு சொல்லுறாங்க.. காரணம்..
சொல்லப்போனால்.. தினசரி அதிக பட்சம் 3 மணி நேரம் தான் வேலை செய்வார்களாம்..
சரி இது ஒரு
பக்கம்... விவசாயிகளுக்கு மாநில அரசும் மத்திய அரசும் ஆப்பு வச்ச கதை
எல்லோரும் தெரிஞ்சது தான்...
இப்போ இன்னொரு பக்கம் கோவை ஈரோடு
நாமக்கல் விவசாயிகளுக்கு ஆப்பு வைக்க ரெடி ஆகிட்டு இருக்காங்க...
ஆனால்..
இந்த ப்ளாட்டினம் கதையை என்ன சொல்லுறது...
விவசாயிகள்
மக்கள் விழிப்படைய வில்லை எனில்.. இன்று காவிரி நீருக்கும், முல்லை
பெரியாருக்கும் கையேந்து நிலைதான் நாளைய நம் உணவுத் தேவைக்கும்...
இந்த
பிளாட்டினத்தால்.. தமிழக அரசின் வருமானம் உயரலாம்... ஆனால்.. மக்களின்
வாழ்வு உயராது...
இப்போதைக்கு
நிலம் கையகப்படுத்துதல் இல்லை என்று சொல்கிறது அரசு.. ஆனால்.. இன்று இல்லை
என்றாலும் என்றாவது ஒருநாள் பிளாட்டினம் இருப்பது உறுதிப் படுத்தப்
பட்டால்.. நிச்சயம் நிலம் கையகப் படுத்துதல் திட்டம் அமலுக்கு வரும்..
அப்பகுதி விவசாயிகளும் அம்போ என்ற நிலைக்குத் தள்ளப் படும் சூழல்
உருவாகும்...
இந்த நிலை
வர வேண்டுமா?
மக்கள்.. நடுத்தெருவில் .. அதன் மூலம் நாட்டின்
வருமானம் பெருகும்
வளம் கொழிக்கும் என்றால்..
மக்களை அரசு
இன்றே நடுத்தெருவில்...
நாடு நாடாக அனுப்பி பிச்சை எடுக்க வைக்கலாம்..
நாட்டின் வளம் பெருகும்... மக்களின் நலனுக்காக செலவிடும் வாய்ப்பும்
குறையும்...
இந்தியா
விவசாய நாடு... ஆனாலும் பல விளைபொருட்கள் இன்று இறக்குமதி செய்யப்
படுகிறது... நம் நாடு உணவு உறபத்தியில் சிறந்து விளங்கினாலே போதும் இந்த
உலகிற்கே உணவளிக்கும் நாடாக மாறிவிடும்.. பொருளாதாரமும் உயரும்...
இங்கே
விவசாயம் மூலம் அரசுக்கும் சரி ஆட்சியாளர்களுக்கும் சரி எந்த வகையிலும்
வருமானம் இல்லை என்பதனை நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.. ஆம் விவசாய
உற்பத்திக்கு வரி இல்லை.. அதுவே இந்த விவசாய நிலத்தினை தொழில் திட்டங்களாக
மாற்றினால் வரியும் உண்டு.. தங்களுக்கு பங்கும் உண்டு என்பதனை நன்கு
உணர்ந்து நமக்கு நாமம் பூசக் கற்று வைத்துள்ளனர்...
மக்களாகிய
நாம் தான் உனர வேண்டும்... இன்று நாம் மின்சாரத்தினை உற்பத்தி செய்ய இடம்
அளித்து அருகில் உள்ள மாநிலங்களுக்கு தர அனுமதிக்கிறோம்.. ஆனால்.. அவர்கள்
காவிரி நீர் தர மறுக்கின்றனர்...
அதே
போலத்தான்... இங்கு விளையும் காய்கறிகள் தான் பரவலாக அந்த மாநில
காய்கறித்தேவையினை பூர்த்தி செய்கிறது... ஆனால்... அவர்களின் அக்கறையினை
முல்லைப் பெரியார் அணை விசயத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள்...
இதுவரை
அருகில் இருந்தவர்கள் தான் நமக்கு ஆப்பு வைத்தார்கள்.. இன்று... நமக்காக..
என்று.. கூறியவர்கள்... நமக்கு இதுவரை நாமம் மட்டுமே பூச நினைத்தவர்கள்..
மொத்தமாய் ஆப்பு வைக்க தயார் ஆகிட்டு இருக்காங்க...
தமிழர்களே!!!
தமிழர்களே!!!
நீங்கள் என்னை கடலில் தூக்கிப் போட்டாலும் நான் கட்டு மரமாகத்
தான் மிதப்பேன்..
அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்
என்று
தத்துவம் பேசுபவர்... நமக்கு ஆப்பு வைக்க தயார் ஆகிக் கொண்டிருக்கிறார்...
என்றே நினைக்கத் தோன்றுகிறது...
ஆனால்.. இது
குறித்து யாரும் மறுப்பு தெரிவிக்க வில்லை என்பது மிகப் பெரிய
ஆச்சரியத்தினை நமக்கு அளிக்கிறது.. இதுவரை எந்த விவசாய அமைப்புகளோ எதிர்
கட்சிகளோ இது குறித்து எந்த வித கருத்தினையும் அளித்ததாகத் தெரியவில்லை...
ஏன் இந்த
மவுனம்...? என்றும் தெரியவில்லை.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்கள்
பகுதியில் பரவலாக அனைத்து ஊர்களிலும் உள்ள பொது ஆழ்குழாய் கிணற்றிற்கு
அருகில் சுமார் 200 மீட்டர் அளவில் போர் அமைத்து மண் மாதிரிகள்
சேகரித்தனர்.. இது குறித்து அப்போது விளக்கம் கேட்கப் பட்டபோது.. நிலத்தின்
தன்மை நிலத்தடி நீரின் தன்மை பரிசோதனைக்காக என்ற தகவலே கிடைத்தது..
இன்று தான்
தெரிகிறது.. காரணம்..
நீங்கள்
இதனை ஒரு செய்தியாக படித்தால்... இதனை ஒரு கட்டுரையாக நினைத்துப்
படித்திருந்தால்... பதில் கருத்துரையினை தயவு செய்து கருத்து சொல்ல
வேண்டும் என்ற நினைப்பில் கருத்திட நினைத்தால் .. தயவு செய்து
கருத்துரையிடாதீர்கள்..
இந்த
தமிழகத்தின் எதிர்கால வளம் குறித்து .. இந்த உலகத்தினை பாதுகாக்கும் இயற்கை
ஆர்வலராய்... இருந்தால்.. மட்டும் உங்கள் கருத்துரையினை இடுங்கள்..
இத்துடன் இணைக்கப் பட்டுள்ள வீடியோ காட்சியினைப் பாருங்கள்.... நாளை இந்த
பிளாட்டினம் மூலம் கிடைக்கும் வளத்தின் மூலம் பசிக்கு
பிளாட்டினத்தினயும்,பணத்தினையும் உண்ண முடியுமா? சிந்தியுங்கள்>..
உங்கள் கருத்துக்களை உரித்தாக்குங்கள்...
மேலும்
குறித்த முழுமையான தகவல் சேகரிப்போடு விரைவில் இன்னும் விளக்கமாக உங்களின்
பார்வைக்கு வைக்கிறேன்.... தமிழா நீ தமிழன் என்று சொல்லப்பட்டே... ஏமாற்றப்
படப் போகிறாய்... இதனை உணர்வாய்... முதலில்... கண் கெட்ட பின் சூர்ய
நமஸ்காரம் எதற்கு என்ற தமிழ் பழமொழியை கொஞ்சம் நினைத்துப் பார்க்க மறந்து
விடாதே...
நேற்று... இன்று ....
நாளை.....
நாளை தின்ன என்ன
செய்வாய்... சிந்திப்பாய்.. இந்த வீடியோவினைப்பாருங்க>...
http://www.youtube.com/watch?v=4H7WPl05yJs&feature=player_embedded