ஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா? ..

38 views
Skip to first unread message

PonRameshKalam

unread,
Jun 21, 2016, 11:10:01 AM6/21/16
to பொன்ரமேஸ் கலாம்
சமீபத்தில் முகநூலில் படித்த ஒரு  கதையை இங்கு உங்களிடம் பகிர்கிறோம்.காசாளரும் காஷாயமும்:

பற்றற்ற ஞானிக்கு பல கதை சொல்வார்கள்! ஞானியாய் ஒருவன் இருக்க குடும்பம் துறக்க வேண்டாம்; காடு செல்ல வேண்டாம்; காஷாயம் தரிக்க வேண்டாம்; அது போல இல்லாமல் குடும்ப வாழ்க்கையில் உள்ளவனும் ஞானியாக இருக்கலாம்! அது எப்படி முடியும்? ஒரு வர்ணனை இங்கே!!

ஒரு வங்கியின் பெரிய பிரிவு! எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் பிரிவு அது! ஒரு பெரிய மாநகரத்தின் முக்கியமான மையப் பகுதியில் அது இருந்தது!!  அந்த வங்கியில் ஒரு காசாளர் பணியாற்றி வந்தார்! அவருக்கு அந்தப் பணியில் இருபதாண்டுகள் அனுபவம்!! மிகச் சுறுசுறுப்பான ஒருவர்! அதிகமாக லீவு போட மாட்டார்! சரியான நேரத்தில் பணிக்கு வருவார்! வேலை முடிய தாமதமானாலும் முடித்து விட்டே திரும்ப செல்வார்!! 

அந்தக் கேஷியரின்  குடும்பம் பெரியது! அவர் மனைவி இல்லத்தை பராமரித்துக் கொண்டிருந்தார்! அவருடைய வயது முதிர்ந்த  தாய் தந்தை இவர் ஒரே மகன் என்பதால் இவருடனேயே தங்கியிருந்தனர்! அதுவன்றி கணவனை இழந்த அவருடைய அக்காள் ஒருவர் தன் சிறு வயது மகனுடன் இவர் வீட்டில் அடைக்கலம் ஆகியிருந்தார்! அதுவன்றி இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள்! மகள் கல்லூரிப் படிப்பு படிக்க மகன் ஹைஸ்கூலில் படித்தான்! அவர் அக்காள் மகனும் அதே பள்ளியில் படித்தான்! 

காசாளர் தன்னுடைய வருமானத்தை வைத்து குடும்பத்தை பராமரித்து வந்தார்! அவர் வசிக்கும் வீடு சொந்த வீடு என்பதால் ஓரளவு அவரால் சமாளிக்க முடிந்தது! ஆயினும் வரவுக்கும் செலவுக்கும் இழுபறி என்பது போல்தான் அவர் நிலை! குழந்தைகளின் பள்ளி, கல்லூரி பீசுக்கு பணம் இருந்தாக வேண்டும்! அதுவன்றி மாதா மாதம் ஒரு சிறிய தொகையையேனும்  சேமித்தாக வேண்டும்! ஏனென்றால் திடீரென்று முதிய பெற்றோருக்கு உடல்நலமில்லாமல் போகலாம்! இன்னும் எதிர்பாராத உறவினர் திருமணம் போல செலவுகள்! அவரும் எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தார்! இருந்தாலும் மாதா மாதம் கடைசி வாரத்தில் அவர் மனம் பக் பக் கென்று அடித்துக் கொள்ளும்! திடீரென்று ஏதேனும் அதிகப்படி செலவு வந்து விட்டால் என்ன செய்யவென்று!!!

அவர் சரியாக காலை 9 மணிக்குள்ளாகவே வங்கிக்கு வந்து விடுவார்! மிக எளிமையான உடைகளே அணிந்திருப்பார்! அவர் பணிக்கு தேவையான பணம் தயாராக இருக்கும்!  ஒரு ஐம்பது லட்சத்தை எடுத்து தன் அறையில் வைத்துக் கொண்டு பணியை ஆரம்பிப்பார்!  கால் மணி நேரம் கழிந்த பின் கடும் கும்பல் சேரும்! பணத்தை எண்ணிக் கொடுத்து மாளாது! அதுவும் நிறைய நிறுவனங்கள் உள்ள பகுதி என்பதால் சர்வசாதாரணமாக பல லட்சங்கள் பணம் வரும்/போகும் !! அந்தக் காசாளர் அத்தனைப் பணத்தையும் பொறுமையாக எண்ணி வாங்குவார்/கொடுப்பார்! ஒரு நாள் கூட அவர் கணக்கில் தவறே இராது!  பணி நேரம் முடியும் போது ஒவ்வோரு நாளிலும் அவர் சராசரியாக நான்கைந்து கோடி ரூபாய்களை எண்ணிக் கொடுத்திருப்பார் !! அவர் பணத்தை எண்ணும்  வேகம் பிரமிப்பை ஊட்டும்! ஆனால் தவறே இராது!!  மாலை பணி முடிந்த பின் அமைதியாகக் கிளம்பி வீட்டுக்கு செல்வார்! ஒவ்வொரு நாளும் அவருக்கு வீட்டில் ஏதேனும் ஒரு வேலை காத்திருக்கும்! அதையும் செய்து முடிப்பார்!! இப்போது பாருங்கள் அவர் குடும்பம் மிக எளிமையான முறையில் வாழ்கிறது! எளிமையான உடை, உணவு எல்லாமே எளிமைதான்!!

ஆனால் அந்தக் காசாளர் தம் கைகளால் எண்ணும்  தொகையோ தினமும் நான்கைந்து கோடி ரூபாய்க்கு மேல்!! அத்தனை ரூபாய்களை எண்ணுகிறாரே தவிர அவருக்கு நன்றாகத் தெரியும் இது தன்னுடைய செல்வம் அல்ல என்று! ஆனாலும் எண்ணுகிறார் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறார்! பின்பணியை முடிக்கிறார்!!

எத்தனைக் கோடி ரூபாய் பணத்தை எண்ணினாலும் அது தன்னுடைய பணமில்லை என்று உணர்ந்து அந்தக் காசாளர் எண்ணுகிறார் அல்லவா? அதே போல எவ்வளவு செல்வம் இருந்தாலும், எத்தனை நல்ல குடும்பம் இருந்தாலும், எத்தனை பாசமான மனைவி, குழந்தைகள் இருந்தாலும், அல்லது இதற்கு  மாறாக இருந்தாலும்  அந்தக் கேஷியர் போல இதெல்லாம் என்னுடையதல்ல என்பதை நினைவில் வைத்துக் கொண்டே வாழுங்கள், உங்கள் கடமைகளை செய்யுங்கள், ஆனால் எந்த நேரத்திலும் 'இது என்னுடையது' என்ற எண்ணத்திற்கு மட்டும் ஆளாகாமல்  செய்யுங்கள்  அந்தக் கேஷியரைப் போல!! நீங்களும் ஒரு ஞானி ஆகி விடுவீர்கள்!!

ஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா? 
செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்தாலோ வீட்டில் உள்ள பாட்டி அல்லது அம்மா திட்டுவார்கள். இந்நாளில் செய்வது நல்லதல்ல என்றும் சொல்வார்கள். ஆனால் பலரும் அதை நம்பாமல், அது வெறும் மூட நம்பிக்கை என்று என்று கூறி, அவர்களை மதிக்காமல் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்து கொண்டோ பலரும் வருவோம். இருப்பினும், பழங்காலம் முதலாக பின்பற்றப்பட்டு வரும் இப்பழக்கத்திற்கு பின்னால் நிச்சயம் ஏதேனும் ஓர் காரணம் இருக்கும். நம் முன்னோர்கள் எந்த ஒரு காரணம் இல்லாமலும், எதையும் பின்பற்றமாட்டார்கள். எனவே நம் முன்னோர்கள் சொல்வதை தெய்வ வாக்காக எடுத்துக் கொண்டு அதைப் பின்பற்றுங்கள். 
Inline image 1
துர்கை மற்றும் லட்சுமி தினம் இப்பழத்திற்கு பின்னணியில் வேறு பல உண்மைகளும் உள்ளன. அதுமட்டுமின்றி, இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய் கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் செவ்வாய் கிழமையானது துர்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது.

Inline image 2
செலவு கூடாது செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள் செவ்வாய் கிழமை. இந்நாளில் லட்சுமி நம்மை தேடி வருவாள் என்பதோடு, இந்நாளில் நம்மிடம் உள்ள லட்சுமியை மற்றவருக்கு தானம் செய்தால், லட்சுமி சென்றுவிடுவாள் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர். இதனால் பலரும் இந்நாளில் பண வரவை எதிர்பார்ப்பதோடு, பணத்தை செலவிடமாட்டார்கள்.
Inline image 3
வீட்டை சுத்தம் செய்யமாட்டார்கள் எப்படி முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ மற்றும் நகத்தை வெட்டவோ மாட்டார்களோ, அதேப் போல் இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி செய்வதால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம்.
Inline image 4
துரதிர்ஷ்டம்
செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டுவது, ஷேவிங் செய்வது, நகம் வெட்டுவது போன்ற செயல்கள் துரதிர்ஷ்டத்தை வழங்குவதாக நம்பிக்கை உள்ளது. இதற்கு காரணம் செவ்வாய் கிழமை துர்கை மற்றும் லட்சுமிக்கு உரியது என்பது மட்டுமின்றி, வேறு சில காரணங்களும் இருக்கக்கூடும். அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Inline image 5
ஜோதிடத்தின் படி... 
இச்செயல்களை ஒருவர் மேற்கொண்டால், அவரது வாழ்நாளில் இருந்து 8 மாதங்கள் குறைவதாக ஜோதிடம் சொல்கிறது. ஒருசில லாஜிக்குகளைக் கொண்டு ஜோதிடர்கள் இதனைச் சொல்கின்றனராம். செவ்வாய் கிழமையில் செவ்வாய் குடிக்கொண்டிருக்கிறாராம். மனித உடலில், செவ்வாய் இரத்தத்தில் குடியிருக்கிறார். இரத்தத்தில் இருந்து தான் முடி வளர்கிறது. எனவே செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகக்கூடுமாம். 
Inline image 6
செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகள் மற்றொரு ஜோதிடர் கூறுவதாவது, முடியின் நிறம் கருப்பு. நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது. செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஆளுகிறது. உண்மையிலேயே சனி தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது. ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், சனி கிரகத்தின் சக்தி குறைந்து, பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாகக்வடும். எனவே தான் செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்ட வேண்டாம் என்று சொல்கிறார்களாம். இதுப் பற்றி எந்த ஒரு ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படாவிட்டாலும், நம் முன்னோர்கள் இதை நம்பி பின்பற்றி வருகின்றனர். 
Inline image 7
Inline image 8
அப்படி என்ன சாதித்தார் ரகுராம் ராஜன்... இதைப் படியுங்க... 
 மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தமக்கு 2-வது முறையாக பதவி நீட்டிப்பு வேண்டாம் என்று அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரகுராம் ராஜன் போனால் போகட்டும் என சுப்பிரமணியன் சுவாமி போன்ற வலதுசாரிகள் கூச்சலிடுகிறார்கள்... ஆனால் ரகுராம் ராஜன் போய்விட்டால் இந்தியாவின் எதிர்கால "இருட்டு" குறித்து பெரிதும் கவலை கொள்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். அப்படி என்னதான் செய்தார் ரகுராம் ராஜன்? 2013-ல் ரிசர்வ் வங்கி ஆளுநராக ரகுராம் ராஜன் பதவியேற்ற போது நாட்டின் நிலைமை இதுதான்.. நாட்டின் பொருளாதாரம் தத்தளித்தது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70 ஆக இருந்தது. நாட்டின் பணவீக்கம் 10%-க்கு மேல் அதிகரித்திருந்தது. அந்நிய முதலீடுகள் வேகமாக வெளியேறின. ரகுராம் ராஜன் பதவியேற்ற பின்னர்.... அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டைத் திரும்பப் பெறுவது நிறுத்தப்பட்டது சில மாதங்களிலேயே 10 முதல் 15 பில்லியன் டாலர்கள் முதலீடு இந்தியாவுக்கு வந்தது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து போகாமல் தடுக்கப்பட்டது. இதற்காகவே ஊடகங்கள் "ராஜன் எபெக்ட்" என புகழாரம் சூட்டின. 10% ஆக இருந்த பணவீக்கம் 6% ஆகக் குறைக்கப்பட்டது. சிறு வங்கிகளுக்கான உரிமங்களை அதிகப்படுத்தினார். வாரா கடன்கள் குறித்து வெளிப்படைத்தன்மையை உருவாக்கினார் வங்கிகள் தங்களது நட்டங்களை பதிவு செய்தது வங்கிகள் தங்களது வாரா கடன்களை வசூலித்து நிதிநிலவரத்தை சரி செய்ய கெடு வைத்தார். கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்களை மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்தினார். நாட்டின் சகிப்பின்மை தன்மை வெளிப்படையாகவே விமர்சனங்களை முன்வைத்தார். ரகுராம் ராஜனுக்குப் பின்னர் என்னவாகும்? உலகமே பொருளாதார மந்த நிலையை நோக்கி நகரும்போது இந்தியாவும் தப்பாது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நிலை உள்ளது. இதனால் இந்தியா உட்பட உலக நாடுகளின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்திக்கும். வாரா கடன்களை வசூலித்தல் உள்ளிட்ட ராஜன் நடவடிக்கைகள் அப்படியே நிறுத்தப்படும் இந்திய பொதுத்துறை வங்கிகளின் நிலைமை மேலும் படுமோசமாகும் அபாயம்..
Inline image 9

-- 



-நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு "சரித்திரமாக" இருக்க வேண்டும்.-ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்..
-Time is the most valuable thing in the world. – Edison
-Imagination is more important than knowledge. -Albert Einstein.

எண்ணம் போல் வாழ்வு....     
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.....
செழிக்கட்டும் விவசாயம்......

With Regard....
                                                      
PonRAMESH Kalam,M.Sc.,M.Phil.,Ph.D
(Pursuing)
Asst.Prof of Physics,
Nehru memorial college(Autonomous),
Puthanampatti,
Thiruchippalli- 621 007.

Cell   : +919750895059.
           +917200514876.

          

Reply all
Reply to author
Forward
0 new messages