தோழமைகளுக்கு, வணக்கம், மத்திய அரசின் ரயில்வே துறையால் தமிழ்நாடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது நீங்கள் அறிந்ததே. தொழில் நிமித்தமோ, அலுவல் நிமித்தமோ நீங்கள் ரயிலில் செல்ல முனையும் போது பயணச்சீட்டு கிடைக்காமல் திண்டாடி இருப்பீர்கள். தென்தமிழ்நாடு மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் கல்லூரி படிப்பு முடித்து வேலைவாய்ப்பிற்காக போதிய ரயில் வசதி இல்லாமலும் தென் மாவட்டத்திலிருந்து பெங்களூரில் நர்சிங் படிக்க செல்லும் மாணவிகள் ரயில் இல்லாமல் அவதிபடுகின்றனர். நமது குரலை ஓங்கி ஒலிக்க வாய்ப்பு அருகில் வந்திருக்கிறது. எங்களோடு சேர்ந்து உங்களையும் குரல் எழுப்ப அழைக்கிறோம். வருகின்ற இரயில்வே பட்ஜெட்டில் குமரியில் இருந்து தமிழ்நாட்டு நகரங்கள் வழியாக குறிப்பாக நாகர்கோவிலிருந்து பெங்களூர் மற்றும் மங்களூர்க்கு தினசரி இரவு நேர ரயில்கள் இயக்க வேண்டும் என்பதை அரசுக்கு முக்கிய கோரிக்கையாக எடுத்து செல்லுங்கள். இந்த மின்னஞ்சலில் இணைக்கப்பட்டுள்ள கோப்பை தங்கள் லெட்டர் பேட் அல்லது தங்கள் சார்ந்துள்ள அமைப்பின் லெட்டர் பேட் அல்லது தங்களின் அலுவலக லெட்டர் பேட் - ல் பிரின்ட் அடித்து அதில் குறிப்பிடபட்டுள்ள முகவரிகளுக்கு ரூபாய் 5 தபால் தலை ஒட்டி அனுப்புமாறு மிக தாழ்மையுடன் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக கேட்டுகொள்கிறேன். குறிப்பு: 1. இந்த மின்னஞ்சலை நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு (Forward) மறு அஞ்சல் செய்யவும். 2. தங்களின் கடிதத்தை ஸ்கேன் பண்ணி தங்களுடைய பேஸ்புக்கில் பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். மற்றவர்களுக்கு இது தூண்டுகோலாக அமையும். Thanks & Regards, P.Edward Jeni Secretary Kanyakumari District Railway User's Association (KKDRUA) IInd Floor, 4 Gandhi Street, Kottar, Nagercoil -629002,Kanyakumari District G.S.M : +91 9443002949 Visit our Facebook : www.facebook.com/Kanniyakumari http://kkdrua.blogspot.com http://groups.yahoo.com/group/kkdrua/join "Have a nice day" |
தோழமைகளுக்கு,
வணக்கம்,
மத்திய அரசின் ரயில்வே துறையால் தமிழ்நாடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது நீங்கள் அறிந்ததே. தொழில் நிமித்தமோ, அலுவல் நிமித்தமோ நீங்கள் ரயிலில் செல்ல முனையும் போது பயணச்சீட்டு கிடைக்காமல் திண்டாடி இருப்பீர்கள். தென்தமிழ்நாடு மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் கல்லூரி படிப்பு முடித்து வேலைவாய்ப்பிற்காக போதிய ரயில் வசதி இல்லாமலும் தென் மாவட்டத்திலிருந்து பெங்களூரில் நர்சிங் படிக்க செல்லும் மாணவிகள் ரயில் இல்லாமல் அவதிபடுகின்றனர்.
நமது குரலை ஓங்கி ஒலிக்க வாய்ப்பு அருகில் வந்திருக்கிறது. எங்களோடு சேர்ந்து உங்களையும் குரல் எழுப்ப அழைக்கிறோம். வருகின்ற இரயில்வே பட்ஜெட்டில் குமரியில் இருந்து தமிழ்நாட்டு நகரங்கள் வழியாக குறிப்பாக நாகர்கோவிலிருந்து பெங்களூர் மற்றும் மங்களூர்க்கு தினசரி இரவு நேர ரயில்கள் இயக்க வேண்டும் என்பதை அரசுக்கு முக்கிய கோரிக்கையாக எடுத்து செல்லுங்கள்.
இந்த மின்னஞ்சலில் இணைக்கப்பட்டுள்ள கோப்பை தங்கள் லெட்டர் பேட் அல்லது தங்கள் சார்ந்துள்ள அமைப்பின் லெட்டர் பேட் அல்லது தங்களின் அலுவலக லெட்டர் பேட் - ல் பிரின்ட் அடித்து அதில் குறிப்பிடபட்டுள்ள முகவரிகளுக்கு ரூபாய் 5 தபால் தலை ஒட்டி அனுப்புமாறு மிக தாழ்மையுடன் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக கேட்டுகொள்கிறேன்.
குறிப்பு:
1. இந்த மின்னஞ்சலை நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு (Forward) மறு அஞ்சல் செய்யவும்.
2. தங்களின் கடிதத்தை ஸ்கேன் பண்ணி தங்களுடைய பேஸ்புக்கில் பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். மற்றவர்களுக்கு இது தூண்டுகோலாக அமையும்.
Thanks & Regards,
P.Edward Jeni
Secretary
Kanyakumari District Railway User's Association (KKDRUA)
IInd Floor, 4 Gandhi Street,Kottar,Nagercoil -629002,
Kanyakumari District
G.S.M : +91 9443002949
Visit our Facebook : www.facebook.com/Kanniyakumari
http://kkdrua.blogspot.com
http://groups.yahoo.com/group/kkdrua/join
"Have a nice day"