நல்ல நோக்கத்துடன் இக்குழமத்தை ஆரம்பித்த நண்பர்களுக்கு நன்றி.
என்னால் முடிந்த ஒரு சிறு பங்காக ஒரு ஏக்கர் நிலம் ஒன்றில் எவ்வளவு
மரங்கள் நட முடியுமோ அவ்வளவு மரங்கள் நட திட்டமிட்டுள்ளேன். மதுரையில்
உள்ள ஒரு சிறு நிலத்தை ரியல் எஸ்ட்டேடுக்காக ஒதுக்காமல், ஒரு சிறிய
வீட்டிற்குத் தேவையான சின்ன இடம் மட்டும் ஒதுக்கி விட்டு முழு
நிலத்திலும் மரங்கள் நட உத்தேசித்துள்ளேன். இப்பொழுது போர்
போட்டிருக்கிறோம் தண்ணீர் நன்றாக வருகிறது. நீரை வீணாக்காமல் சொட்டு நீர்
பாசனத்திற்கான குழாய்களை நிறுவவும் திட்டமிட்டுள்ளேன். நான்
வெளிநாட்டில் வசிப்பதினாலும் வயதான தந்தையை அதிகம் தொந்தரவு செய்ய
விருப்பம் இல்லாததினாலும் கூடிய வரை தகவல்களைத் திரட்டி அவருக்கு உதவ
எண்ணியுள்ளேன. என் திட்டங்கள் நிறைவேற்ற கீழ்க்கண்ட தகவல்கள் தேவை.
நானும் இணையத்தில் இது தொடர்பாக தேடிக் கொண்டிருக்கிறேன்.
1. செவ்வக வடிவமுள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் எத்தனை மரங்களை நட
இயலும்? நிலத்தை எப்படிப் பிரித்துத் திட்டமிடுவது?
2. என்ன வகையான மரங்களை நடலாம். அந்த மண்ணிற்கு ஏற்ற மரங்களை எவ்வாறு
தீர்மானிப்பது? உதவிக்கு யாரை அல்லது எந்த அலுவலகங்களை நாட வேண்டும்?
மரம் நடும் இயக்கங்கள் (அதற்காகும் செலவுகளை ஏற்றுக் கொண்டால்)
நிலத்திற்கு சென்று சோதித்து உரிய மரங்களை தேர்வு செய்ய உதவுவார்களா ?
3. நான் நன்கு அடர்த்தியாக செழித்து வளரும் மரங்களுடன், பழ மரங்களையும்
சில தென்னை மரங்களையும் நட உத்தேசித்துள்ளேன். அப்படி பல வகைப் பட்ட
மரங்களை ஒரு ஏக்கர் நிலத்திற்குள்ளாகவே வளர்ப்பது சாத்தியமா?
4 இந்த நிலத்தில் வேறு பாசனம் ஏதும் சமீபகாலத்தில் (கடந்த 50
வருடங்களில்) நடந்திருக்கவில்லை ஆதலால் புதர்கள் வளர்ந்த வெற்று இடமாகவே
உள்ளது. ஆனால் நிலத்தடி நீர் இருப்பதினாலும், நிலத்தடி குழாய் போடப்
பட்டிருப்பதினாலும் ஓரளவுக்கு நீர் வசதி உள்ளது. அதை எப்படி குறைந்த
அளவில் பயன் படுத்தி மரங்களை வளர்ப்பது?
5. வீடு கட்ட உத்தேசித்திருக்கும் சிறு பகுதியில் மட்டும் பின்னாளில்,
ஒரு பத்து வருடம் கழித்து வீடு கட்டும் பொழுது வெட்டி விட ஏதுவாக எந்த
வகையான தற்காலிக மரங்களை நடலாம்?
தயவு செய்து மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்களை அளிக்கவும். இது தொடர்பாக
நான் மதுரைப் பகுதிகளில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்,
முகவரிகளையும் முடிந்தால், தெரிந்தால் அளிக்கவும். என்னால் முடிந்த
அளவிற்கு வறண்டு போய் காங்க்ரீட் காடுகளாக மாறி விட்ட அந்தப் பகுதியில்
ஒரு சிறிய பசுமையை உருவாக்க எண்ணியுள்ளேன். இந்த சிறிய முயற்சிக்கு
உங்கள் ஆதரவினை நல்கவும்
அன்புடன்
ராஜன்
--
**************************************************************************************
You received this message because you are subscribed to the Google
Groups "மரம் வளர்ப்போம் வாருங்கள்" group.
To post to this group, send email to letspla...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
letsplanttree...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/letsplanttrees?hl=ta
Visit Also : http://letsplanttrees.blogspot.com
மரம் வளர்ப்போம் - மழைவளம் பெறுவோம் - புவியைக் காப்போம்
அனைவரது அன்பிற்கும் ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி. ஈஸ்வரன் அளித்த
மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்கிறேன். அவர்களிடம் கேட்டு எப்படி
மண் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்வது என்பதை அறிந்து கொண்டு ஏற்பாடு
செய்கிறேன். விபரங்களைக் கேட்டு அறிந்து செயல் படுத்துவதற்கு மட்டுமே என்
தந்தையை கேட்டுக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். அங்கு தோட்ட வேலை செய்ய
ஒருவரையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
என் நோக்கம் வணிக மரங்கள் அல்ல. அந்த மண்ணிற்கு ஏற்ற மரங்களலால் அவற்றை
வெட்ட நேராமல் பிற்காலத்தில் ஏதேனும் சிறிய வருமானம் வருமானால் நல்லது,
வரட்டும். என் நோக்கம் நன்கு அடர்ந்து நிழல் தரும் சோலையை ஏற்படுத்தும்
மரங்களும், பறவைகள் உண்டது போக எங்களுக்கும் ஏதேனும் கனிகள் கொடுக்கும்
மரங்களும், சுற்றுப்புறத்திற்கு தூய்மையான காற்றையும், குளிர்ச்சியையும்,
பசுமையையும் தரும் ஒரு சோலையை அங்கு உருவாக்குவது மட்டுமே. ஒரு நண்பர்
குமிழ் மரம் நடுமாறு யோசனை கூறியிருந்தார்.
வீட்டை குறைந்தது இன்னும் எட்டு வருடங்கள் கழித்து கட்டவே
உத்தேசித்துள்ளேன். வீடு கட்டப் போகும் இடம் சிறிய அளவில் மட்டுமே
இருக்கப் போவதினால் அதில் வேண்டுமானால் ஒரு சோதனை முயற்சியாக சில தேக்கு,
சவுக்கு மரங்களை முயற்சித்துப் பார்க்கிறேன். மற்றபடி நீங்கள் கூறிய
அனைத்து பழ மரங்களையும் அந்த மண்ணுக்கு ஏற்புடைத்தாக இருக்குமானால்
கருத்தில் கொண்டு வாங்கி வளர்க்க ஏற்பாடு செய்கிறேன். மரங்கள் குறித்த
தேர்வுகளுக்கு நன்றி.
பிற்கால வீட்டு உபயோகத்திற்கு மட்டுமாக ஒரு சில தென்னை மரங்கள் மட்டுமே
நடுவதாக இருக்கிறேன். அருகில் உள்ள விவசாய அலுவலகம் எங்கிருக்கிறது
என்பதை அறிந்து என் தந்தையை ஒரு நாள் போய் வரச் சொல்ல வேண்டும். கட்டணம்
செலுத்தி தோட்டத் துறை அலுவலர் அல்லது ஆலோசகர்கள் யாரேனும் நிலத்திற்கு
வந்து நீள அகலங்கள் குறித்து அறிவுரை செய்தாலும் மரக் கன்றுகள் நடுதல்
பராமரித்தல் போன்ற விஷயங்களிலும் சற்று ஆலோசனை செய்பவர்களாக இருந்தால்
நலமாக இருக்கும். அப்படி யாரேனும் செய்வார்களா என்பதும் தெரியவில்லை.
அதையும் நான் விசாரித்தறிய வேண்டும்.
மேலும் தகவல்களையும் மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்களையும்
வரவேற்கிறேன். சொட்டுநீர் பாசனம் குறித்த தகவல்களையும் அளிக்கவும்.
நிலத்தடி நீரை ஒட்டு மொத்தமாக உறிஞ்சி வளரும் மரங்களிலும் எனக்கு
ஆர்வமில்லை. குறைந்த நீர் வளத்தில் அடர்த்தியாக வளரும் மரங்களையே
விரும்புகிறேன்.
என் முயற்சியின் முன்னேற்றங்கள் குறித்துத் தொடர்ந்து இங்கு உங்களிடம்
பகிர்ந்து கொள்கிறேன்
அன்புடன்
ராஜன்
தியாகராஜன் அவர்களின் vignanasir...@gmail.com மெயில் ஐடி முழுமையாக
இல்லை என்று நினைக்கிறேன்.
அன்புடன்
ராஜன்
On Jul 13, 9:59 am, A Eswaran <sivakamieswa...@gmail.com> wrote:
> ராஜன் மிக்க மகிழ்ச்சி! உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். மதுரையில் உள்ள
> தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தினர் தங்களுக்கு உதவுவார்கள். அவர்களின் முகவரி:
> திரு.தியாகராஜன்/ மெயில்: vignanasir...@gmail.com
> 2010/7/13 AGRIINFOMEDIA-Sakthivel <valarumsak...@gmail.com>
>
> > உங்களின் இந்த முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது.www.agrinfomedia.comல் உங்கள்
> > கேள்விகளை கேட்கவும் உங்களுக்கு உதவ காத்திருக்கிறோம்...
>
> > 13 ஜூலை, 2010 4:44 am அன்று, Rajan <rajans...@gmail.com> எழுதியது:
> >> letsplanttree...@googlegroups.com<letsplanttrees%2Bunsu...@googlegroups.com>
> >> For more options, visit this group at
>
> >>http://groups.google.com/group/letsplanttrees?hl=ta
>
> >> Visit Also :http://letsplanttrees.blogspot.com
>
> >> மரம் வளர்ப்போம் - மழைவளம் பெறுவோம் - புவியைக் காப்போம்
>
> > --
>
> > **************************************************************************************
> > You received this message because you are subscribed to the Google
> > Groups "மரம் வளர்ப்போம் வாருங்கள்" group.
> > To post to this group, send email to letspla...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > letsplanttree...@googlegroups.com<letsplanttrees%2Bunsu...@googlegroups.com>
தியாகராஜன் அவர்களின் தொலைபேசி எண் இருந்தாலும் தாருங்கள் நான் அழைத்துப்
பேசுகிறேன்
நன்றி
ராஜன்
Please send the details. As i said in my first post i am not in India.
I live in USA and i am doing this by remote operation only.
Had i been in India i would have personally gone to the various
organization would have planted trees long back. I already wasted
5 years since i bought this land. Now i am aggressively trying to
plant the saplings at the earliest without wasting any further time
Thanks
Rajan
On Jul 13, 10:14 pm, kabheesh S <kabhe...@googlemail.com> wrote:
> Rajan,
> Swami Omkar is planting trees for free of cost thru his trust and the
> trust maintains.They plant trees which r good for environment and nilathadi
> neerai urinchata marangal. like raththa sandhanam, I'll forward those mail
> which were discussed in another group. Could you please give me your contact
> number. I'm coming to india tomorrow. I too have plan like you which i want
> to implement this time.
>
> Sorry for thanglish and english (Tamil font problem :-(()
>
> Kind Regards
> Kabheesh
>
> 2010/7/13 Rajan <rajans...@gmail.com>
> > letsplanttree...@googlegroups.com<letsplanttrees%2Bunsu...@googlegroups.com>
நீரை வீணாக்காமல் சொட்டு நீர் பாசனத்திற்கான குழாய்களை நிறுவவும் திட்டமிட்டுள்ளேன்.
1. செவ்வக வடிவமுள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் எத்தனை மரங்களை நட
இயலும்? நிலத்தை எப்படிப் பிரித்துத் திட்டமிடுவது?
2. என்ன வகையான மரங்களை நடலாம். அந்த மண்ணிற்கு ஏற்ற மரங்களை எவ்வாறு தீர்மானிப்பது? உதவிக்கு யாரை அல்லது எந்த அலுவலகங்களை நாட வேண்டும்?
மரம் நடும் இயக்கங்கள் (அதற்காகும் செலவுகளை ஏற்றுக் கொண்டால்)
நிலத்திற்கு சென்று சோதித்து உரிய மரங்களை தேர்வு செய்ய உதவுவார்களா ?
3. நான் நன்கு அடர்த்தியாக செழித்து வளரும் மரங்களுடன், பழ மரங்களையும்
சில தென்னை மரங்களையும் நட உத்தேசித்துள்ளேன். அப்படி பல வகைப் பட்ட
மரங்களை ஒரு ஏக்கர் நிலத்திற்குள்ளாகவே வளர்ப்பது சாத்தியமா?
4 இந்த நிலத்தில் வேறு பாசனம் ஏதும் சமீபகாலத்தில் (கடந்த 50
வருடங்களில்) நடந்திருக்கவில்லை ஆதலால் புதர்கள் வளர்ந்த வெற்று இடமாகவே
உள்ளது. ஆனால் நிலத்தடி நீர் இருப்பதினாலும், நிலத்தடி குழாய் போடப்
பட்டிருப்பதினாலும் ஓரளவுக்கு நீர் வசதி உள்ளது. அதை எப்படி குறைந்த
அளவில் பயன் படுத்தி மரங்களை வளர்ப்பது?
5. வீடு கட்ட உத்தேசித்திருக்கும் சிறு பகுதியில் மட்டும் பின்னாளில்,
ஒரு பத்து வருடம் கழித்து வீடு கட்டும் பொழுது வெட்டி விட ஏதுவாக எந்த
வகையான தற்காலிக மரங்களை நடலாம்?
நன்றி. அவர்களையும் தொடர்பு கொள்கிறேன்
அன்புடன்
ராஜன்
On Jul 13, 11:10 pm, kabheesh S <kabhe...@googlemail.com> wrote:
> http://vediceye.blogspot.com/2010/05/blog-post_08.html
>
> <http://vediceye.blogspot.com/2010/05/blog-post_08.html>ராஜன் இந்த லிங்க்ல
> விபரம் இருக்கு. மெயில்ல நடந்த டிஸ்கஷனை தேடி அனுப்பறேன். நீங்க இவங்க கிட்ட
> நிலம் இருக்கற இடம் சொன்னா, மரம் நடறதிலருந்து பராமரிப்பு முழுவதும்
> பாத்துப்பாங்க. உங்க முதல் த்ரெட்ட ரொம்ப அவசரமா வாசிச்சிட்டேன் அதான் கவனிக்கல
> நீங்க வெளி நாடுன்னா. ஸாரி. ஊருக்கு போக பேக் பண்ணிட்டு இருக்கும்போது அவசரமா
> மெயில மேய்ஞ்சிட்டுருந்தேன். மரம் பத்தினதுனால உடனே ரிப்ளை பண்ணேன். நானும்
> இந்த ட்ரஸ்ட்ல தான் நிலத்தை நட குடுக்க போறேன் ஊருக்கு போக்கும் போது.
> எதாவது கூடுதல் தகவல் வேணும்னா கேளுங்க
>
> 2010/7/14 Rajan <rajans...@gmail.com>
> ...
>
> read more »
அன்புடன்
ராஜன்
On Jul 13, 11:40 pm, A Eswaran <sivakamieswa...@gmail.com> wrote:
> ராஜன், மதுரை தியாகராஜன் போன்:9488054683/மெயில்:vignanasir...@gmail.com
>
> 2010/7/14 kabheesh S <kabhe...@googlemail.com>
>
> > அய்யோ நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக். bear with me :-(
>
> > 2010/7/14 kabheesh S <kabhe...@googlemail.com>
>
> >http://vediceye.blogspot.com/2010/05/blog-post_08.html
>
> >> <http://vediceye.blogspot.com/2010/05/blog-post_08.html>ராஜன் இந்த
> >> லிங்க்ல விபரம் இருக்கு. மெயில்ல நடந்த டிஸ்கஷனை தேடி அனுப்பறேன். நீங்க இவங்க
> >> கிட்ட நிலம் இருக்கற இடம் சொன்னா, மரம் நடறதிலருந்து பராமரிப்பு முழுவதும்
> >> பாத்துப்பாங்க. உங்க முதல் த்ரெட்ட ரொம்ப அவசரமா வாசிச்சிட்டேன் அதான் கவனிக்கல
> >> நீங்க வெளி நாடுன்னா. ஸாரி. ஊருக்கு போக பேக் பண்ணிட்டு இருக்கும்போது அவசரமா
> >> மெயில மேய்ஞ்சிட்டுருந்தேன். மரம் பத்தினதுனால உடனே ரிப்ளை பண்ணேன். நானும்
> >> இந்த ட்ரஸ்ட்ல தான் நிலத்தை நட குடுக்க போறேன் ஊருக்கு போக்கும் போது.
> >> எதாவது கூடுதல் தகவல் வேணும்னா கேளுங்க
>
> >> 2010/7/14 Rajan <rajans...@gmail.com>
> ...
>
> read more »
தகவல்களுக்கு நன்றி. உங்கள் யோசனைகளைக் கருத்தில் கொள்கிறேன்.
முன்னேற்றம் குறித்தும் எழுதுகிறேன்
அன்புடன்
ராஜன்
> *ஜீவ்ஸ்*http://www.flickr.com/iyappanhttp://photography-in-tamil.blogspot.comhttp://kaladi.blogspot.com
arjunan
Thanks Regards
Venkat
--
--
**************************************************************************************
You received this message because you are subscribed to the Google
Groups "மரம் வளர்ப்போம் வாருங்கள்" group.
To post to this group, send email to letsplanttrees@googlegroups.com
To unsubscribe from this group, send email to
For more options, visit this group at
http://groups.google.com/group/letsplanttrees?hl=ta
Visit Also : http://letsplanttrees.blogspot.com
மரம் வளர்ப்போம் - மழைவளம் பெறுவோம் - புவியைக் காப்போம்
---
You received this message because you are subscribed to the Google Groups "மரம் வளர்ப்போம் வாருங்கள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to letsplanttrees+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.