சக்ரவர்த்தி
வரலாறு பல மன்னர்களையும் இராஜாதி ராஜாக்களையும் நமக்கு தந்திருக்கிறது. மன்னர் என்பவர் பல அதிகாரங்களை தனது கைகளில் வைத்திருந்தார் அதனால் ஒவ்வோருமன்னரும் கல்வேட்டுகளில் சக்ரவர்த்தி என எழுதி வைத்துக்கொள்ளலாம் , உலகம் சில எண்ணிக்கையில் தான் மன்னர்களை இராஜாதிராஜா, மகாராஜா, சக்ரவர்த்தி என வைத்திருக்கின்றது.
அக்பர் சக்ரவர்த்தியை பற்றி சில குறிப்பு அவர் இரவு தொழுகைக்கு பிறகுதான் உணவு உண்ணும் வழக்கம் உடையவர். மேலும் அவர் உணவில் கட்டாயம் பாசிப்பயறுகலந்திருக்க வேண்டும் இல்லையென்றால் அவர் சாப்பிட மாட்டார்.
ஒருமுறை அவரது மெய்காப்பாளர் திவாரி சாப் என்பவர் தனது மகளின் திருமனத்திற்க்கு அக்பரை அழைக்க டில்லியிலிருந்து வெகுதொலைவிலுள்ள ஊர் அன்பான அழைப்பில் அக்பரும் தனது பரிவாரங்களுடன் திருமணத்திற்க்கு புறப்பட்டுவிட்டார்.
அவருக்கும் அவருடன் வந்த பெரிய மனிதர்களுக்கும் காபூலில் இருந்து சமையற்கலைஞரை அழைத்துவந்து அறுசுவை விருந்து படைக்க அங்கே அவருக்கு பிடித்த உணவு பொருளான பாசிப்பயறு மைனஸ், இருந்தாலும் அவர் வந்த இடத்தில் இதை எதிர்பார்க்க கூடாது என்று சாப்பிட ஆரம்பிக்கும் முன்பு உணவு வகைகளை கண்டு ஆச்சர்யபட்டு எல்லொருக்கும் இந்த மாதிரி உணவு வகைகளா என தனது சாக்களிடம் கேட்ட அவரின் சேவகர்களில் ஒருவரோ இல்லை அரசே எல்லோருக்கும் மக்காசோழ ரொட்டி உளுத்தம் பயற்று ஊறுகாய் என போட்டு கொடுக்க மகாராசவிற்க்கு கோபம்
என்னடா எனக்கு மட்டும் இப்படி நல்ல உணவு கொடுத்து விட்டு மற்றவருக்கு வேறுமாதிரி கொடுத்தால் என்னைபற்றி எல்லோரும் என்ன நினைப்பார்கள் என்று சொல்லிவிட்டு அமைதியாக திவாரிசாப்பிடம் எல்லோருக்கும் இதேபோன்று கொடுக்க முடிந்தால் கொடு இல்லை என்றால் மற்றவர்களுக்கு தரும் உணவே எனக்கு கொடு என்று சொல்லிவிட்டார். என்ன செய்ய மகாராஜாவிற்க்கு வரட்டு ரோட்டி கொடுக்க முடியுமா எல்லோருக்கும் அறுசுவை உணவு கொடுக்க வழ்நாளில் இதுவரை நல்ல உணவை பார்க்காத கிராம மக்களும் அறுசுவை உனவை உண்டு மன்னரை வாழ்த்தி சென்றனர்.
அன்று அவர் உணவு உண்ட அந்த கிராமம் சுல்த்தான் பூர் என்று அவரது பெயரில் வழங்கபட்டு வருகிறது.
மானுடராய் பிறக்க மாதவம் செய்தல் வேண்டும்
சிறந்த மனிதராக வாழ வேறு ஒன்றும் செய்ய வேண்டாம் பிறரிடம் பரிவுடன் வாழுங்கள் நாமும் சக்கரவர்த்திதான்
--
உங்கள் வாழ்வு வளம்பெற வாழ்த்தும் சரவணா
சரவணா சுற்றுலா ஒருங்கிணைப்பகம்
091 9819166850
மும்பையிலிருந்து