தென் தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள் - 6 முறப்ப நாடு - ஐந்தாவது தலம்

185 views
Skip to first unread message

Vanakkam Subbu

unread,
Oct 26, 2016, 12:49:40 AM10/26/16
to Thatha_Patty-Google

தென் தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்

 

நவ கைலாச ஐந்தாவது  தலம் - முறப்ப நாடு

சிவனிற்கு எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் நவ கைலாயங்கள் என்று சொல்லப்படும் இந்த 9 கோவில்களும் நாம் முற்பிறப்புகளிலும் மற்றும் இந்த பிறப்பிலும் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களிலிருந்து விடுபட மிகவும் முக்கியமானவை ஆகும். இக் கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கிரகங்கள் ஆட்சி பெற்று விளங்குகின்றன. குறிப்பாக இந்த சிவன் கோவில்கள் ஒன்பதும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் கங்கையைவிட அதிக புண்ணியம் தாமிரபரணி ஆற்றிற்கு உள்ளது என்று “தாமிரபரணி மகாத்மியம்” சொல்கிறது.


      1. பாப நாசம் 2. சேரன்மாதேவி 3. கோடக நல்லூர் இவை மூன்றும் மேலக்கைலாயங்கள் என்றும்


      4. குன்னத்தூர் 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் ஆகியவை நடுக்கைலாயங்கள் என்றும்


      7. தென்திருப்பேரை 8. ராஜபதி 9. சேர்ந்தபூமங்கலம் என்ற கடைசி மூன்றும் கீழ்க்கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.


நவகைலாயங்களும்            -- நவக்கிரகங்களின் ஆட்சியும்.

      1. பாபநாசம்                -- சூரியன்

      2. சேரன்மாதேவி           -- சந்திரன்

      3. கோடகநல்லூர்          -- செவ்வாய்

      4. குன்னத்தூர்              -- இராகு

      5. முறப்பநாடு              -- குரு

      6. ஸ்ரீவைகுண்டம்          -- சனி

      7. தென்திருப்பேரை        -- புதன்

      8. ராஜபதி                   -- கேது

      9 சேர்ந்தபூமங்கலலம்     -- சுக்கிரன்


நமக்கு வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களிற்கு காரணம் நாம் முற்பிறப்பில் செய்த பாவ புண்ணியங்களேயாகும். நமது பாவங்கள் களையப்பட்டாலே இந்தப்பிறப்பில் நமக்கு நடப்பவை எல்லாமே நமது எண்ணப்படியே நடக்கும். நமது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப நமக்கு இன்ப துன்பங்களைத் தருபவை நவக்கிரகங்களாகும். நவக்கிரங்களை திருப்தி செய்யும் போது நமக்கு வரும் துன்பங்களின் வேகத்தினை நாம் குறைத்துக் கொள்ளலாம். நமது கர்மா அல்லது கன்ம வினை என்று சொல்லப்படும் வினையினை முழுமையாக அறுக்கக்கூடியவர் முழுமுதற் கடவுளாம் எம்பெருமான் சிவபெருமானே ஆகும். அவரின் சிவ தலங்களில் நவக்கிரகங்களிற்கு ஆட்சி கொடுத்து மக்கள் தம் பாவங்களை போக்க அவர் அங்கு எழுந்தருளியிருக்கிறார்.


நவ கைலாசம் முறப்பநாடு கைலாச நாதர்


நவ கைலாய தலங்களில் ஐந்தாவதான தலம், இதுவும் தாமிரபரணி நதி்க்கரையில் அமைந்த தலம், அகத்திய முனிவரின் சிஷ்யர் உரோமச மகிரிஷி அகத்தியரின் வேண்டுதலின் படி தாமரை மலர்களை ஆற்றில் விட மலர் 5 ஆவதாக ஒதுங்கிய இடமே முறப்ப நாடு கைலாசநாதர் ஆலயம்.

மூலவர்  : கைலாச நாதர்

அம்பாள்  : சிவகாமியம்மாள்

அமைவிடம் (ஊர்)  : 
முறப்பநாடு, திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில்,  இந்த ஊர் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து 20 கிலோ மீட்டருக்குள் இருக்கும்.

தலச்சிறப்பு ;

 இத்தலத்திலுள்ள சுவாமிக்கு எதிரில் உள்ள நந்தி,  குதிரைத்தலையுடன் காணப்படுகிறார், இத்தலத்திலுள்ள பைரவர் சன்னதியில் இரட்டை பைரவர் உள்ளனர்

பிராத்தனை ; 
இது குரு தலமாக காணப்பெறுவதால் குரு பரிகாரத் தலமாகவும், மற்றும், திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் வேண்ட, கல்வி கேள்விகளில் சிறக்க வேண்டியும் பிரார்த்திக்கின்றனர். 

நேர்த்திக்கடன் ; 

சுவாமி அம்பாளுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி அபிசேகம் செய்தல்.

தலப் பெருமை ;
குதிரை முக நந்தி, அகத்தியரின் சீடரான உரோமச மகிரிஷிக்கு சுவாமி குருவாகக் காட்சி கொடுத்த தலம். இக்கோவிலுள்ள நந்தி குதிரை முகத்துடன் காட்சி அளிக்கிறது. 
                    




























மேலும் தாமிரபரணி நதி இங்கே வடக்கே இருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. அதனாலும் இது சிறப்பாகக் கூறப் பெறுகிறது. இந்த இடத்தில் தாமிரபரணி நதியை தக்ஷிண கங்கை என்ற பெயரில் அழைக்கின்றனர். நதிகளிலேயே மூத்த நதியான தாமிரபரணி நதியின் இந்தக் கரையில் தீர்த்த யாத்திரை செய்வது மிகவும் புனிதமாய்க் கருதப் பெறுகிறது. இந்த ஊரின் இந்தக் கோயிலைக் கட்டியது வல்லாள மஹாராஜா எனச் சொல்வாரும் உளர். ஆனால் சோழ மன்னன் ஒருவனே கட்டியதாகவும் தலவரலாறு கூறுகிறது. எது எப்படி எனச் சரியாக யாருக்கும் தெரியவில்லை என்றாலும் பின்வரும் தலவரலாறே கூறப்பெறுகிறது. 

சோழ மன்னனின் மகள் குதிரை முகத்துடன் பிறக்க, அதன் பாவ நிவர்த்தி வேண்டி சோழ மன்னன் ஒவ்வொரு சிவத்தலங்களாக சென்று பரிகாரம் செய்ய வேண்டி இத்தலம் வந்து, இங்குள்ள தாமிரபரணி நதியில் நீராடி, கைலாச நாதரை வேண்ட , அவர் பாவ விமோசனம் அளிக்க நந்தி எம் பிரானிடம் கூற அவர்மூலம் பாவ விமோசனம் பெறும் போது, மன்னன் மகளின் பாவங்கள் கழிய குதிரை முகம் மாறி வரும் போது, அதன் அடையாளமாக நந்தியின்முகம் குதிரை முகமாக மாறியதாம், மன்னன் மகளின் முற்பிறவிப் பாவத்தை நந்தி ஏற்றுக் கொண்டதாம். எனவேதான் நந்தி குதிரை முகத்தோடு காட்சியருள்கிறார்.

  
               
பைரவர் சன்னதியில் உள்ள இரட்டை பைரவர்களில் ஒருவருக்கு நாய் வாகனமும், மற்றவருக்கு நாய் வாகனம் இன்றியும் உள்ளது.  இதனால் ஒருவர் பைரவர்   என்றும் மற்றவர் வீர பைரவர் என்றும் அழைக்கப்பெறுகின்றனர். இம்மாதிரி வேறு எந்தத் தலங்களிலும் இரட்டை பைரவர் இல்லாதது இத்தலத்தின் சிறப்பாகக் கருதப்பெறுகிறது.

நவக்கிரகத் தலங்களில் இது குரு தலமாக உள்ளது.இங்குள்ள கைலாசநாதர் குருவின் ஆதிக்கம் பெற்றவர், எனவே கைலாசநாதருககு குரு பரிகார பிராத்தனையும் உண்டு.

நாம் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், பற்றாக்குறை இருக்கிறதே என்ற கவலை  இல்லாத மனிதர்களே இல்லை எனலாம், பற்றாக்குறை நீங்க, ஆசைகளை குறைக்க வேண்டும், ஆசைகள் குறைய வேண்டுகிறோம், வணங்குகிறோம். இந்தச் சக்தியை இறைவன்தான் தர முடியும், அதே நேரம் நவீன காலத்திற்கேற்ப, சில சாதனங்களும் நமக்குத் தேவைப்படுகிறது. எப்படியாவது கையில் நாலு காசு இருந்தால்தானே உலகம் நம்மை மதிக்கிறது. ஆசை குறைந்து, கையில் நாலு காசு தங்க, இக்கோவில் உள்ள கைலாச நாதரிடம் வேண்டிக் கொள்தல் வேண்டும்.

தலச் சிறப்பு ; 

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள தலங்களில் ஐந்தாவது தலமாகும், இது நவ கைலாச தலங்களில் நடுவில் அமைந்துள்ள படியால் இதற்கு நடு கைலாசநாதர் என்ற பெயரும் உ்ண்டு. 

இங்கு கைலாச நாதர் குரு அம்சமாக இருப்பதால்,இவருக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, கொண்டக்கடலை நெய்வேத்தியம் செய்யப்பெறுகிறது.

சிவாமியம்மாள் தனி சன்னதியில் காணப்படுகிறாள். எதிரிலுள்ள விநாயகர் சன்னதியில் இரட்டைப் பிள்ளையார் துவார பாலகர்கள் போலக் காணப்படுவதும் இத்தலத்தின் சிறப்பு. மற்றப் பரிவார தேவதைகளில், இரட்டை விநாயகர்கள், சூரியன், அதிகார நந்தி, சப்தகன்னிமார், பஞ்ச லிங்கம், நாயன்மார்கள் வள்ளி, தெய்வானையோடு சுப்ரமணியர் போன்றவர்களும் உள்ளனர். சனீஸ்வரரும் தனியாக இருக்கிறார். 

ஊர் சிறப்பு ; 
சூர பத்மனும், மற்ற அரக்கர்களும்,செய்த கொடுமையைத் தாங்க முடியாத முனிவர்கள், இறைவனிடம் முறையிட்ட இடம் என்பதால் இதற்கு       " முறை(யிட்ட)நாடு " என்ற பொருளில் முறைப்பநாடு என்ற பெயர் வந்ததாம்.

பேருந்துகளில் சென்றால் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து தான் செல்லவேண்டும். காலை ஏழு மணிக்கு மேல் தான் கோயில் திறக்கப் பெறுகிறது. பனிரண்டு மணிக்கு நடை சாத்தினால் மாலை ஐந்து மணி அளவில் கோயில் திறந்து ஏழு மணிக்கெல்லாம் நடை சாத்துகிறார்கள். ஆகவே நேரத்தைத் தெரிந்து வைத்துக் கொண்டு சென்றால் தான் தரிசனம் செய்ய முடியும்.

youtube link:
 

நாமும் நவகைலாயங்களிற்கும் சென்று முறைப்படி எம்பிரான் ஈசனை வழிபட்டு வாழ்வில் சகல வளமும் சகல நலமும் பெற்று வாழ்வோமாக.

 


வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! 

வாழிய பாரதமணித் திருநாடு!   

                                                  

a k a m  S u b b u    

p8oWzbiTy-otfxm1H5LzISutYDSAuZ4gtEQQvJh8

Reply all
Reply to author
Forward
0 new messages