276 தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் - 009 - சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில்

5 views
Skip to first unread message

Vanakkam Subbu

unread,
Jul 13, 2023, 1:52:54 AM7/13/23
to thatha patty
திருச்சாய்க்காடு - சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரை சிவத்தலமாகும்.     பைஞ்சாய் எனும் கோரைப்புற் காடாக இருந்ததால், இத்தலம் இப்பெயர் பெற்றது.

 ஆதிசேடனது நாகமணி ஒளி வீசியதாலும் (இதனை சாய் - ஒளி என்பர்.) இப்பெயர் பெற்றது.

 image.png

இறைவர் திருப்பெயர்: சாயாவனேஸ்வரர், அமுதேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: குயிலினும் நன்மொழியம்மை.

தல விருட்சம்கோரை

தீர்த்தம் : காவிரி, ஐராவத தீர்த்தம்.

வழிபட்டோர்:உபமன்யு முனிவர், இந்திரன், ஐராவதம், இந்திரனின் தாயார், ஆதிசேடன், சம்பந்தர், அப்பர், ஐயடிகள் காடவர்கோன், 

இயற்பகை நாயனார், சேக்கிழார் முதலியோர்

புராணப் பெயர்திருச்சாய்க்காடுமேலையூர்
ஊர்சாயாவனம்
மாவட்டம்நாகப்பட்டினம்
தல வரலாறு 

இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்தாள். தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். அவள் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில், இந்தக் கோவிலையே தனது ஐராவத யானையை வைத்துத் தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான். கோவிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாகக் கூவினாள். (எனவே தான் அம்மனுக்கு "குயிலினும் இனிமொழியம்மை' என்ற திருநாமம் ஏற்பட்டது) உடனே சிவன் தோன்றி, ""இந்திரா! இந்தக் கோவிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபட வேண்டும் என்று நினைக்காமல், இங்கு வந்து வழிபட்டு நலமடைவாயாக, என அருள்புரிந்தார்.

கோவில் அமைப்பு
கோவில் கிழக்கு நோக்கியது
எதிரில் குளம் உள்ளதுமுகப்பு வாயிலைக் கடந்தால் கொடிமரம் இல்லைகொடிமரத்து விநாயகர் மட்டும் உள்ளார்நந்தியும் மாடக்கோயில் உயரத்தில் உள்ளார்வெளிப்பிரகாரத்தில் சூரியன்இந்திரன்இயற்பகை நாயனார்அவர்தம் துணைவி ஆகியோருடைய சன்னிதிகள் உள்ளனநால்வர் சன்னிதியில் மூவரே உள்ளனர்சிவாலயத்துள்ள வழக்கமான சன்னிதிகளைத் தொழுது படிகளேறி வந்தால் மூலவர் நேரே காட்சியளிக்கிறார்பின் வாசல் நெத்தி மண்டபம் மற்றும் அம்பிகையின் சன்னிதிகள் வருகின்றனஇங்கு வில்லேந்திய வேலவர் சன்னிதி விசேடமானதுபஞ்சலோகத்திலான திருமேனி நான்கு கரங்களுடன் கம்பீரமாக உயர்ந்த மயிலுடன் காண்போர் கண்களுக்கு விருந்தாக விளங்குகின்றதுஇவை நெடுங்காலம் முன்பு கடலில் கிடைத்ததாகச் சொல்லப் பெறுகிறதுசுவாமி சன்னிதி வாயிலில் இரு தலப்பதிகக் கல்வெட்டுகள் உள்ளனவாயிலின் மேற்புரம் இறைவன் இயற்பகை நாயனாருக்கு காட்சியளித்தது சித்திரமாக தீட்டப் பெற்றுள்ளதுமூலவர் சதுர ஆவுடையாரில் குட்டையான பாணத்துடன் கூடிய திருமேனிஅவரைச் சுற்றி ஒரு சிறிய பிரகாரம் உள்ளதுவலது பக்கம் நடராஜ சபை உள்ளது.

சிறப்புகள்
 
இயற்பகை நாயனார் தம் மனைவியை இத்தலத்தின் எல்லை வரை அழைத்து வந்து இறைவனுடன் வழியனுப்பி வைத்தார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்), அத்துடன் இயற்பகை நாயனாரின் அவதாரத் தலம் இதுவாகும். 

இயற்பகையார் மிகச் சிறந்த சிவபக்தர்சிவனடியார் யார் வந்துஎதைக் கேட்டாலும் கொடுத்துஅவரை மகிழ்ச்சி அடையச் செய்வதிலேயே மிகுந்த மகிழ்ச்சி அடைவார்அவரைச் சோதிக்க வேண்டிஈசன் ஒருநாள்சிவனடியார் உருக் கொண்டு வந்தார்அடியாரைக் கண்ட மகிழ்ச்சியில் இயற்பகையார் எதுவாயினும் கேட்குமாறு கூறஇறைவனும் அவர் மனைவியைக் கேட்டார்இயற்பகையாரும் தன்னிடம் இருப்பதை ஈசன் கேட்டானே என்று ஆனந்தப்பட்டுமிகுந்த பதிவிரதையான தம் மனைவியை அவர் கூட அனுப்பி வைத்தார்தகவல் அறிந்த சுற்றத்தினர்ஈசனை மறித்துச் சண்டைக்கு அழைக்கஇயற்பகையார் வாளுருவிதம்மைப் போர் செய்து கொன்ற பிறகே அடியாரைத் தொட முடியும் என்று கூறினார்அவரே ஈசனுக்குத் துணையாக ஊர் எல்லை வரை வந்தார்மகிழ்வுற்ற ஈசன் ரிஷபாரூடராய் காட்சியளித்தார் என்பது வரலாறுஇஃது விழாவாக இங்கு கொண்டாடப் பெறுகிறது.

காசிக்குச் சமமான சிறப்புள்ள ஆறு தலங்களுள் ஒன்று. மற்றவை 1. திருவெண்காடு, 2. மயிலாடுதுறை, 3. திருவிடைமருதூர், 4. திருவையாறு 5. திருவாஞ்சியம் .

 சோழர் கால கல்வெட்டுகள் பத்தும், பாண்டியரது மூன்றும் ஆக பதிமூன்று கல்வெட்டுகள் உள்ளன.

 

கோச்செங்கணாரின் மாடக் கோவிலாகும்.

காலை மணி முதல் 12 மணி வரை
மாலை மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
தொடர்புக்கு :- 04364 - 260 151.
 

இயற்பகை நாயனார் வழிபட்டு முக்தி பெற்ற தலம். இயற்பகை நாயனாரின் திருவுருவச் சிலை திருக்கோயில் வளாகத்தில் உள்ளது.

 

இந்திரன் தாயார் தினமும் இத்தலத்தைப் பூஜித்து வந்தனர். அவரது துயர் நீக்க, இந்திரன் இத் திருமேனியைத் தேவலோகம் கொண்டுபோக எண்ணித் தோண்ட, இச் சிவலிங்கமோ, பாதாளம் வரை சென்றிருந்தமையால், அவரை மீண்டும் அங்கேயே எழுந்தருளச் செய்தான். அவ்வடு இன்றும் உள்ளது.

 

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்   :  
சம்பந்தர்   -   1. நித்தலும் நியமம் செய்து நீர் (2.38),                                  
2. மண்புகார் வான்புகார் (2.41);                  

அப்பர்     -   1. தோடுலா மலர்கள் தூவி (4.65),                                  
2. வானத் திளமதியும்பாம்புந் (6.82);

 பாடல்கள்  : கருவூர்த்தேவர் -     தன்சோதி எழுமேனித் (9.12.7)
                        திரைலோக்கிய சுந்தரம் திருவிசைப்பா,    
ஐயடிகள் காடவர்கோன்   -     அஞ்சனஞ்சேர் (11.6.15)
க்ஷேத்திரத் திருவெண்பா;    
பரணதேவ நாயனார்     -     சேர்வும் உடையர் (11.24.92) சிவபெருமான் திருவந்தாதி,         
சேக்கிழார்      -     
இருவரால் அறிய ஒண்ணா (12.3.26) இயற்பகை நாயனார் புராணம்,                                   ஆண்ட அரசு (12.21.189 & 190) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் ,                                   பன்னகப் பூணினாரைப் (12.28.120, 121 & 122) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்;                                    
வரையோடு நிகர் (12.29.147) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.  

தேவாரப்பதிகம்

தோடுலா மலர்கள் தூவித்தொழதெழு மார்க்கண்டேயன் வீடுநாள் அணுகிற்சென்று மெய்கொள்வான் வந்தகாலன் பாடுதான் செல்லும் அஞ்சிப் பாதமே சரணம் என்னச் சாடினார் காலன்மாளச் சாய்க்காடு மேவினாரே.

திருநாவுக்கரசர்

 திருவிழா:

சித்திரை பௌர்ணமியில் தொடங்கி இந்திர விழா 21 நாட்கள் நடைபெறுகிறது.

ஆடி அமாவாசையில் அன்னம்பலிப்பு.

சித்திரைவைகாசி மாதங்களில் இயற்பகை நாயனார் பெயரில் தண்ணீர்ப்பந்தல்.

மார்கழியில் இயற்பகை நாயனாருக்கு நாள் விழாஅதில் நான்காம் நாள் அவருக்கு இறைவன் காட்சி கொடுக்கும் ஐதீகம்.

தினமும் காலப் பூஜைகள் நடைபெறுகின்றன.

அருகாமையிலுள்ள தலங்கள்:

திருநின்றியூர்கீழையூர் திருக்கடைமுடி ), பூம்புகார் பல்லவனீசம் ), புஞ்சைகுறுமாணக்குடி ஆகியன.

பிரார்த்தனை:

எதிரி பயம் இருப்பவர்கள் வில்லேந்திய வேலவரை வழிபட்டு நலம் பெறலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள்நிறைவேறியவர்கள்றைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டுசெய்துபுத்தாடைஅணிவித்துசிறப்புபூசைகள் செய்து நேர்த்திக்கடன்செலுத்துகின்றனர்.

அருட்பா:

பாய்க்காடு கின்ற வொரு பச்சைமுகில்
பரவுஞ்ச்சாய்க்காடு மேவுன் தடங்கடலே

https://www.youtube.com/watch?v=E8YIhHh78EI

https://www.youtube.com/watch?v=_q4SnkZJkdM

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! 

வாழிய பாரதமணித் திருநாடு!   

வணக்கம் சுப்பு

 Vanakkam Subbu

 zGgbcCHwTas05D3TEGRzfeJitXMuFdleP8uz97cCm3eLcDguXidhEufGaerGn9hH.gif

Reply all
Reply to author
Forward
0 new messages