இது இப்போதைக்கு இயலாத ஒன்று. பின்னணி இரைச்சல் எல்லாம், தெருவில் ஓடும் வண்டிகளின் ஓசை. (கடலின் ஓசையை அமுக்கும் அளவுக்கு, அயோத்தி மாநகரில் ஏற்படும் ஒலிகளைக் குறித்து ஐயம் கேட்டவர் இதை கவனிக்கவும். நாம் உட்கார்ந்து பாடம் கேட்கும் இடத்தில், நாம் கவனிக்காத, நம் குரலை அமுக்குகிற இவ்வளவு ஓசை இருந்திருக்கிறது!) ஒலிப்பதிவின் தரத்தைக் கூட்ட என்ன செய்யலாம் என்பதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.)
இல்லை! அது ஐயப்பனில்லை!
இதை வகுப்பில் பங்கேற்பவர்கள்தான் எனக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
--பதிவுகளில் முதல் அரை மணிநேரம் விட்டுப் போயிருந்தது. இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஐந்து சுட்டிகள், ஐந்தாம் வகுப்புக்கானவை.--
அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
--
சென்ற முறை அனுப்பிய பதிவுகளையும் இந்தப் பதிவுகளையும் ரொம்ப நல்ல சமத்து மாணவியாகப் பார்த்தேன்! ;-). சில பதிவுகளை முழுக்கப் பார்க்க முடியவில்லை.மிக நல்ல முயற்சி. சில மாற்றங்கள் செய்தால் ஊத்தூபியில்/ஊக்குழலில்/உன் குழலில் … அட அந்த youtube-லெ மட்டும் பார்த்துக் கேட்கிற என் போன்றவர்களுக்கு உதவும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "kambaraamayanam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kambaraamayan...@googlegroups.com.
To post to this group, send email to kambara...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/kambaraamayanam?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
நண்பர்களுக்கு வணக்கம்.ஆர்வலர்களின் பங்கேற்பும் திரு ஹரிகி அவர்களின் வழிக்காட்டலும் மகிழ்ச்சியளிக்கின்றன. சப்தம் கரைக்கும் நிசப்ததில் நிகழ்வுகள் மறைந்துபோகாமல் உலகோருக்குப் பதிந்து தரும் உங்கள் முயற்சிகள் போற்றுதலுக்குரியவை.
வகுப்பிலெ உக்காந்து மின்மடல் பாக்ற வழக்கம் இல்லெ! (யாரு, ஐயப்பன் கிருஷ்ணனா, என்னெ அடிக்க வரது? ;-) )
வகுப்பின்போது மடிக்கணினி பயன்படுத்துவது அடியேன்தான், அது ஈமெயில் பார்ப்பதற்காக அல்ல, ஹரியண்ணா சொன்னதுபோல் வகுப்பில் விவாதிக்கப்படும் விஷயங்களை உடனுக்குடன் http://blrkrc.tumblr.com என்ற வலைப்பதிவில் தட்டச்சு செய்து ஏற்றுகிறேன். இதனை Live Update ஆகப் படிக்கிறவர்கள் நிறையப் பேர் உள்ளார்கள் : நீங்களும் இப்போது பார்த்து உறுதி செய்துகொள்ளலாம், நூறுக்கும் மேற்பட்ட சிறு பதிவுகள் அங்கே உள்ளன :)வகுப்பை ஒழுங்காகக் கவனிக்காவிட்டால் வலைப்பதிவில் இத்தனை விஷயங்களை டைப் செய்யமுடியாது அல்லவா? ஆகவே, benefit of doubt எனக்கே வழங்குமாறு வேண்டுகிறேன் :))அது சரி, வீடியோ பதிவுதான் இருக்கிறதே, எதற்காக Live Update என்று டைப் செய்யவேண்டும்?வீடியோ பதிவை யுனிகோட் கொண்டு தேடமுடியாது, நாளைக்கே யாராவது நாம் பேசிய ஒரு பாடல் அல்லது கருத்தை முன்வைத்து கூகுளில் தேடும்போது, இந்த விவரம் பளிச்சென்று முன்னே வந்து நிற்கும், அதற்காகதான் உடனுக்குடன் டைப் செய்கிறேன், இதில் பிழை ஏதும் இல்லை என நம்புகிறேன்,என்றும் அன்புடன்,என். சொக்கன்,பெங்களூரு.
--You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
ஓரிரு சனிக் கிழமைகளில் அடியேனும் வந்து கேட்பேன் எனக்குப் பழக்கமான ஒயின் கம்பன் கனிச் சாறுதான் - புலவர் இராமமூர்த்தி
--
இந்த வீடியோக்கள் அனைத்தையும் வரிசையாக நமது த.ம.அ விழியப் பதிவு பகுதியில் இணைத்து வைக்கலாமா? உங்கள் பதிலைச் சொன்னால் வார இறுதியில் இணைத்து வைக்கிறேன்.
--You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "kambaraamayanam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kambaraamayan...@googlegroups.com.
To post to this group, send email to kambara...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/kambaraamayanam.
பதினேழாம் அமர்வு, வரைக்காட்சிப் படலத்தில் முதல் ஐம்பது பாடல்கள் வரை இங்கே:
முதல் பகுதி பார்த்தேன். ஏழிலைப் பாலை, அங்குசம் நிமிரக் கூடாது என்பவை பற்றி திரு ஹரிகி விளக்கம் மூலம் அறிந்தேன்.
முதல் பகுதி பார்த்தேன். ஏழிலைப் பாலை, அங்குசம் நிமிரக் கூடாது என்பவை பற்றி திரு ஹரிகி விளக்கம் மூலம் அறிந்தேன்.கீழ்க்கண்ட பாடலோடு ஐந்து பாடல்களை வாசித்த இளைஞர் சொற்களை ல,ள,ழ உச்சரிப்புடன் அருமையாக வாசித்தார். கம்பனில் இளைஞர்கள் தோய்ந்து படிப்பதைக் காணும்போது வாழையடி வாழையாகத் திருக்கூட்டம் வளரும் என்ற நம்பிக்கை வருகிறது.
கம்பராமாயண முற்றோதலின் இந்த வார அமர்வு, என் வீட்டில் நடைபெற்றது. புனல் விளையாட்டுப் படலத்தை முடித்தோம். உங்கள் பார்வைக்காகப் பதிவுகள் இங்கே:
இருபதாம் அமர்வின் பதிவுகளை அனுப்ப மறந்து விட்டேன். திரு மகேஷ் இல்லத்தில் நடைபெற்ற இருபதாம் அமர்வில் உண்டாட்டுப் படலம், எதிர்கொள் படலம் ஆகிய இரு படலங்களையும் முடித்து, முதன்முறையாக ஒரு அமர்வில் நூறுக்கு அதிகமான பாடல்களை முடித்தோம். ஆகஸ்ட் 31ம் தேதி நடைபெற்ற இந்த அமர்வின் சுட்டிகள் இவை:இருபத்தோராம் அமர்வு நேற்று நடைபெற்றது. உலாவியல் படலத்தையும், கோலங்காண் படலத்தின் ஒரு பகுதியையும் முடித்திருக்கிறோம். எனவே, அடுத்த வாரம் கடிமணப் படலம் தொடங்குகிறது!இந்த வாரப் பதிவுகள் இங்கே:அடுத்த வாரம் கடிமணப் படலம் தொடங்கும். முடிவதற்கு அதற்கடுத்த வாரம் தேவைப்படும். அதற்கும் அடுத்த வாரத்தில் பரசுராமப் படலமும் பாலகாண்டமும் ஒருங்கே முடிவடையும்.கம்பராமாயணப் புத்தகத்தோடு அமர்ந்து இந்தப் பதிவுகளைப் பார்த்தால், வகுப்பில் பங்குபெற்ற அனுபவம் கிட்டும். உங்கள் கருத்துகள்--விமரிசனங்கள், உரை மாறுபாடுகள், கூடுதல் நயங்கள் எல்லாவற்றையும் வரவேற்கிறோம்.
இந்த அமர்வின் பதிவுகள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன. இதுவரை பரசுராமப் படலத்தை முறையாகப் படித்ததில்லை என்ற என் குறை நீங்கியது!கதைப்போக்கில் மட்டுமன்றிக் காப்பிய மாந்தரின் மிகையற்ற இயல்பான நடப்புகளிலும் கம்பன் செலுத்தியிருக்கும் கருத்து அருமை; அதை முற்றோதல் குழுவினர் உணர்ந்து பகிர்ந்துகொண்டதும் அருமை.முற்றோதல் குழுவில் ஓர் அன்பர் குறிப்பிட்டது போல ... இந்தத் தசரதனுக்குத் தடால் தடால் என்று காலில் விழுவதும் மயக்கம் போடுவதும் எவ்வளவு இயல்பாக இருந்திருக்கிறது! இவ்வளவு வில்லாற்றல் மிக்க தன் மகன் சிவதனுசையும் சரி, நாராயண தனுசையும் சரி ... அப்படியே அலாக்காக எடுத்து வளைத்து ஒடித்தும் தனக்கெனப் பெற்றும் வெற்றி கொண்ட நிலையைக் கண்ணால் பார்க்கக் கொடுத்துவைக்கவில்லையே! முதல் முறை அவர் அந்தப் பக்கமே இல்லை; இரண்டாம் முறை மூர்ச்சை நிலை! பாவம்!இப்படி இன்னும் பல சுவையான, புத்தறிவூட்டும் செய்திகள் மிளிர்கின்றன.சொல்லாய்வாளருக்காக -- "நினைவாளன்," "தனி நாயகம்," "மூட்டி விட்டார்" என்ற சொற்களைக் கேளுங்கள்! தமிழைப்பற்றி எப்போதும் செல்வா சொல்வதுபோல் ... "இதில் என்ன புரியவில்லை?" என்றுதான் கேட்கத் தோன்றும்!'நிமித்திகன்' என்ற சொல்லை மட்டுமே அறிந்திருக்கும் மக்களுக்கு "ஒரு நெறி உணர்வான் நினைவாளன்" என்ற சொல் விருந்து!"தனி நாயகம்" என்ற சொல்லாட்சி கிறித்துவத் தமிழின் நிலையைக் காட்டுகிறதோ என்றே நானும் நினைத்திருந்தேன் (தனிநாயக அடிகளார் என்ற பெயரிலிருந்து). இல்லை, இல்லை அது கம்பன் படைப்பு!"மூட்டி விட்டார்" பற்றிச் சொல்லவே வேண்டாம்!கொஞ்சமாவது நேரம் ஒதுக்கி இந்த ஒலி/ஒளிப் பதிவுகளைப் பார்த்துக் கேட்டுச் சுவையுங்கள். குழுவினர் அருந்தும் தேநீர் நமக்குக் கிடைக்காது, ஆனால் இலக்கியச் சுவை கிடைப்பது உறுதி! ;-)
அன்புடன்,ராஜம்
On Sunday, September 29, 2013 4:27:22 AM UTC-7, Hariki wrote:
பரசுராமப் படலத்தையும் பாலகாண்டத்தையும் முடித்து, அயோத்தியா காண்டத்தின் மந்திரப் படலத்தில் முதல் இருபத்தோரு பாடல்கள் வரையில் ஓதி முடித்த இருபத்து நான்காம் அமர்வின் (28.09.2013) சுட்டிகள், நான்கு பகுதிகளாக. மூன்றாம் பகுதியில் பாலகாண்டம் முடிகிறது; நான்காம் பகுதியில் அயோத்தியா காண்டம் தொடங்குகிறது.
--
அன்புடன்,
ஹரிகி.
நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
சேடசோ அவதானி (பதினாறு கவனகர்)
கைகேயியின் கோபத்தில் ஏதோ ஒரு பொய்ம்மை ஊடுருவுகிறது. அதனால்தான் "நாடக மயில்" என்றும் அவளைக் கம்பன் குறிக்கிறானோ?
சரி, பட்டம் கிடைத்தபின் வாளாவிருக்கவொண்ணுமோ! இன்னொரு கேள்வி ... கீதைக்கண்ணனுக்கு ஒரு சங்கு இருந்ததாமே, "பாஞ்சசன்யம்" என்ற பெயர் பெற்றது, அதன் கதை என்ன?எங்கேயோ படித்த நினைவு: அது ஓர் அரக்கனின் எலும்பிலிருந்து தயார் செய்யப்பட்டது என்று. இது உண்மையா? எலும்பிலிருந்து சங்கு செய்ய முடியுமா? உயிரியல் ஆய்வாளர் என்ன சொல்கிறார்கள்?சங்கு என்றாலே என் தெக்கத்தி அறிவுக்குச் சங்குப்பூச்சிதான் தெரியும். அப்புறம் சங்கு மார்க் கைலி தெரியும்!வடக்கில் ஏது கடல்? ஏது சங்கு?தெக்கத்திச் சங்கு எப்படி வடக்கத்திக் கண்ணனுக்குப் போச்சு? ஏற்றுமதி செஞ்சாங்களா? இல்லெ, பாரதப்போரே தெக்கெ நடந்ததா?
மஹாபாரதத்தில் துரோண பர்வம் பதினோறாவது அத்தியாயத்தில், கிருஷ்ணனுக்கு பாஞ்சஜன்யம் கிடைத்த விதத்தை, திருதிராஷ்டிரன் கூறுகிறான். ஒளி வருடி இணைத்திருக்கிறேன்.
உடனே புறநானூற்று வரிகள் (66:5, 8) "நின்னினும் நல்லன் அன்றே … புறப்புண் நாணி வடக்கிருந்தோனே" நினைவுக்கு வந்தன.
2. முடிசூட்டுவிழாவிற்குப் பெண்கள், அதிலும் தாய்மார் + மனைவியர் அழைக்கப்படுவதில்லையோ?
அன்புடன்,
ராஜம்
தீபாவளிக்கு முந்திய அமர்வின் பதிவுகளை இப்போதுதான் பார்த்துக் கேட்க முடிந்தது. நல்ல பதிவுகள்!கேள்வி நாச்சியாருக்கு இரண்டு கேள்விகள் எழுந்தன:1. கோசலைத்தாயார் இராமனிடம் பரதனைப் பற்றிக் குறிப்பிடும்போது "நின்னினும் நல்லனால்" என்று சொல்வது ஏன்? புரியவில்லையே. இராமனைவிடப் பரதன் நல்லவன் என்பது ஏன்?
உடனே புறநானூற்று வரிகள் (66:5, 8) "நின்னினும் நல்லன் அன்றே … புறப்புண் நாணி வடக்கிருந்தோனே" நினைவுக்கு வந்தன.
2. முடிசூட்டுவிழாவிற்குப் பெண்கள், அதிலும் தாய்மார் + மனைவியர் அழைக்கப்படுவதில்லையோ?
சத்தியம் தவறாதவன் ஆகையினாலே, காலாவதியாகிய ஒரு வாக்கைக் குறித்து தசரதன் மனம் மட்டுமே பாடு பட்டுக் கொண்டிருந்தது. அங்கே கோசல மன்னன் இன்னமும் உயிருடன்தான் இருந்தான். இது இன்வேலிட் என்ற காரணத்தால்தான், தன்னிடம் பன்னிரண்டு வருட காலம் தங்கியிருந்த பரதனிடம் கூட இது பற்றி அவன் தெரிவிக்கவில்லை. (தெரிவித்திருந்தால், நடந்திருப்பதே வேறு.
ஐயனே, கனவாதீர்கள், கவலாதீர்கள். எதிர்பார்ப்பைக் குறைத்துகொண்டால் ஏமாற்றமில்லை, ஹரீ!
/மூன்று தாயரிடமும் தம் மக்களிடம் வேற்றுமையற்ற அன்பு நிலவி வந்ததைக் காண்கிறோம். ///ம்ம்ம் … இது என் கேள்விக்கு விடை தரவில்லை. என்னைவிட நல்லவள் என்று வேறு யாரையாவது நீங்கள் பாராட்டினால், எந்த வகையில் என்று தெரிந்துகொள்ள எனக்கு ஆவல் இருக்குமில்லையா? அதேபோல்தான் இதுவும். 'எந்த வகையில்' என்பதுக்கு விடை கிடைக்கவில்லை. அதுக்கென்ன பரவாயில்லை.
சென்ற வார ராமாயண நாடகம் தொடர்கிறது:
ராமன்: (மர உரி அணியும் லட்சுமணனிடம்) ‘இசையினாய், நீ யான் புகல் ஓர் உறுதி கேள்.’
ராமன்: ‘அன்னையர் அனைவரும், வேந்தனும், துயரில் மூழ்கினார், என்னையும் பிரிந்தினர், இடர் உறாவகை உன்னை நீ என்பொருட்டு உதவுவாய்.’
லட்சுமணன்: ‘உனக்கு அடியனேன் பிழைத்தது யாது? நீர் உள எனின் உள மீனும் நீலமும், பாருள எனின் உள யாவும், நானும் சீதையும் ஆர் உளர் எனின் உளேம்?’
லட்சுமணன்: ‘ஒருத்தி சொல் கேட்டு பார்மகள் நைந்து நடுங்க, கான் நடத்தி எனா உய்ந்தனன் காவலன் மைந்தன் என்று சொல் வழங்கினாயோ?’
லட்சுமணன்: ‘ஐய (ராமா), நீ வனம் கொள்வாய் என ஏறின வெகுளியை ஆறினை தவிர்க என ஆணையின் கூறிய மொழியினும் கொடியதாம் (இது).’
லட்சுமணன்: ‘(ராமா), எனைக் கை துடைத்து ஏகவும் கடவையோ?’
இராமன் ஒன்று உரைக்க உன்னிலன். (லட்சுமணன்) வதனம் நோக்கினான், கண்ணின் மிக்க நீர் விழ நெடிது நிற்கின்றான்.
முனிவன் (வசிட்டன்) எய்தினான். குமரரும் சென்னி தாழ்ந்தனர்.
வசிட்டன்: (தனக்குள்) ‘மங்கலத்து நாள் சீரை சாத்தினான், ஊழ்வினை ஒழிக்கற்பாலதோ?’
வசிட்டன்: (தனக்குள்) வெவ்வினை அவள் தர விளைந்ததேயும் அன்று, எவ்வினை நிகழ்ந்ததோ, ஏவர் எண்ணமோ, செவ்விதின் ஒருமுறை தெரியும் பின்.’
வசிட்டன்: (ராமனிடம்) ‘ஐய, நீ கல் தடம் காணுதி என்னின், தானையான் (தசரதன்) வாழ்விலான்.’
ராமன்: ‘அன்னவன் (தசரதன்) பணி ஆற்றுதல் என் கடன், அவன் இடரை நீக்குதல் நின் கடன். இது நெறி.’
வசிட்டன்: ‘(தசரதன் உன்னைச்) சுரம் விரவு என்றான் அலன். (கைகேயி)தனக்கு ஆய்கிலாது வரம் தருவென் என்று ஏன்றது உண்டு.’
ராமன்: ‘ஏன்றனன் எந்தை, ஏவினாள் ஈன்றவள், யான் அது சென்னி ஏந்தினேன். சான்று என நின்ற நீ தடுத்தியோ?’
முனிவன் ஒன்று இயம்ப எண்ணிலன். கணீர் நிலத்து உக (வசிட்டன்) நின்றனன், (ராமன்) போயினான் கொற்றவன் வாயில்.
அந்தணர், அருந்தவர், அவனி காவலர், நகர் உளார், நாட்டு உளார் சிந்தை என் புகல்வது? (ராமன் காட்டுக்குப் போவதால்) தேவரும் உள்ளம் வெந்தனர்.
விழுந்தனர் சிலர், சிலர் விம்மி எழுந்தனர், சிலர் கண்ணீரிடை அழுந்தினர், சிலர் துயரம் கூர்கின்றார்.
(மக்கள்) இரைத்தனர், எழுந்து, ஏங்கி, எங்கணும் தொடர்ந்து பின் செல, (ராமன்) உரைப்பதை உணர்கிலன், தன் மனையை நோக்கினான்.
மக்கள்: ‘(ராமன்) கானகத்து உறைவென் யான் என எழுவதே? எழுதல் கண்டு இருப்பதே? இருந்து அழுவதே? அழகு இவ் அன்பு!’
மக்கள்: ‘(ராமன் வனம் சென்றால்) உலகம் யாவையும் கானமே புகும், எனில் காதல் மைந்தனும் (பரதனும்) தானும் (கைகேயியும்) ஆளுங்கொல்?’
வரம்புஇலர் தொடர இராமன் சானகி இருந்துழி சார்ந்தான்.
சீரையின் உடையினன் வரும்படி பாரா எழுது பாவை அன்னாள் (சீதை) துணுக்கமொடு எழுந்தாள்.
மாமியர் தழுவினர். கணீர்ப் புனல் ஆட்டினர். புலம்ப… இன்னது என்று அறியாள் (சீதை) வள்ளலை நோக்கி…
சீதை: ‘கழலோய், துயர் என்னை உற்றது? இயம்பு.’
ராமன்: ‘பொரு இல் எம்பி புவி புரப்பான், இருவர் ஆணையும் ஏந்தினென், இன்று போய், கல் தடம் கண்டு நான் ஈண்டு வருவென், வருந்தலை நீ.’
நாயகன் வனம் நண்ணலுற்றான் என்றும், மண் இழந்தான் என்றும் விம்மலள், ‘நீ வருந்தலை, நீங்குவன் யான்’ என்ற சொல் செவி சுட தேம்புவாள் (சீதை)
சீதை: (மனத்துக்குள்) ‘ஐயனும் அன்னையும் சொன்ன செய்யத் துணிந்தது தூயதே, என்னை என்னை இருத்தி என்றாய்?’
ராமன்: ‘நின் சே அடிப் போது காட்டு அதர் கடுமைய அல்ல.’
சீதை: ‘நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?’
அண்ணல் (சீதையின்) கருத்து உணர்ந்தனன். எண்ணுகின்றனன், ‘என்செயல்பாற்று’ எனா.
(சீதை) சீரம் புனைந்தனள். வள்ளல்பின் வந்து நின்றனள், கரம் பற்றிய கையினாள்.
ராமன்: ‘(சீதையே), விளைவு உன்னுவாய் அல்லை, போத அமைந்தனை, ஆதலின் எல்லை அற்ற இடர் தருவாய்.’
சீதை: ‘துயரம் இது ஒன்றுமே, என் துறந்தபின் இன்பம்கொலாம்?’
பிறிதொர் மாற்றம் பெருந்தகை பேசலன். நெடுந்தெருச் சென்றனன்.
திருமகள் முன் செல, இளையவன் பின் செலக் காரை ஒத்தவன் போம்படி கண்ட அவ்வூர் உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ!
மக்கள்: ‘வீரன் முன் வனம் மேவுதும் யாம்’ எனாப் போயினர்.
ராமன்: (தன் தாய்மார்களிடம்) ’மன்னரை ஆற்றுமின் நீர்’
மாதராரும் விழுந்து மயங்கினார். ஏத்தினார், வழுத்தினார்…
தாய்மார்கள்: (கடவுளிடம்) ‘(ராமன், சீதை, லட்சுமணனைக்) காத்து நல்குமின் தெய்வதங்காள்!’
முனிவனைக் கைதொழாத் தன்னது ஆருயிர்த் தம்பியும் தாமரைப் பொன்ன்னும் தானும் ஒரு தேர்மிசைப் போயினான்.
வால்மீகி ராமாயணத்திலிருந்து கம்பன் செய்துள்ள பெரிய பெரிய மாற்றங்களில் ஒரு சிலவற்றைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். முக்கியமானது, தசரதனிடம் விடைபெறாமல் இராமன் கான் ஏகுவது. இது வால்மீகி ராமயணத்தில், நீண்ட வாக்கு வாதங்களுக்குப் பிறகு நடைபெறும் ஒன்று. தசரதனுக்கும் இராமனுக்கும் இடையே நடைபெறும் அனைத்து வாதங்களையும் தவிர்த்து, எவ்வளவு சாமர்த்தியமாக கவி, தன் நாடகத்தை அழகு கெடாமல் நகர்த்துகிறான் என்பது சுட்டிக்காட்டப்பட்டது.
இலக்குவனைத் தன்னுடன் வரவேண்டாம் என்று இராமன் உரைக்க, இலக்குவன் துடிதுடித்துப் போய், ‘நீர் உள எனில் உள மீனும் ஆம்பலும்’ என்ற உவமையை வால்மீகியிலிருந்து அப்படியே எடுத்துத்தான் கம்பன் பயன்படுத்துகிறான். ஆனாலும், வான்மீகத்தில், சீதையைக் காட்டுக்கு வரவேண்டாம் என்று முதலில் தடுத்து, பிறகு சம்மதித்து, இவையெல்லாம் நடந்த பிறகே, இலக்குவன் இந்த வாக்கியத்தைப் பேசுகிறான்.
இதன் பிறகு, சீதையைக் கானகத்துக்கு உடனழைத்துச் செல்ல இராமனுக்கு மனத்தில் எண்ணம் இருந்ததா இல்லையா? இருந்தது. இருந்தும் தன் விழைவுக்கு எதிரான ஒரு கருத்தை சீதையின் முன் வைத்தான். இந்தப் பகுதியில் எல்லோரும் ‘எல்லையற்ற இடர் தருவாய்’ என்ற பாடலை மட்டுமே முன்வைத்து, அத்தனைத் துன்பத்துக்கும் சீதைதான் காரணம் என்று வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாடலுக்கு இரண்டு பாடல்கள் முன்னதாக, இராமன் உள்ளக் குறிப்பாகக் கவி இந்தப் பாடலைச் சொல்கிறான்:அண்ணல், அன்னசொல் கேட்டனன்; அன்றியும்,உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்;கண்ணில் நீர்க்கடல் கைவிட நேர்கிலன்,எண்ணு கின்றனன், 'என்செயல் பாற்று?' எனா.அவள் கண்ணில் பெருகும் நீரைப் பார்த்து, அவளைத் தனியாக விட்டு வனம்புக அவனுக்குச் சம்மதமில்லை. இதில் ‘உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்’ என்று கம்பன் ஒற்றை அடியில் குறிப்பிட்டு அவசரமாக நகரும், அந்த, சீதையின் மனத்தினுள்ளே நிறைந்துள்ள கருத்தை உணர்ந்தானே, அதை என்ன வண்ணமாக உணர்ந்தான்? அப்படி அவன் உணர்ந்த சீதையின் மனக் கருத்துதான் என்ன?யாருமே மேற்கோள் காட்டி விளக்காத இந்தப் பாடலில், சொல்லப் போனால், கவனத்துக்குரியதாகவே கருதாமல் பெரும்பாலோனோர் நகர்ந்துவிடும் இந்தப் பாடலில் உள்ள அந்த ‘உள் நிவந்த கருத்து’ என்னவாக இருக்கும் என்றால், சம இடத்தில் வால்மீகி என்ன சொல்கிறாரோ அதே கருத்தாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் கம்பன் நடந்த பாதையே வால்மீகிதான். இந்தப் பாடலுக்கான வால்மீகி ராமாயண இணை-இடத்தையும் சேர்த்துப் படித்தால்தான் இந்தப் பாடலின் பொருள் சரிவரப் பிடிபடும். அதையும் செய்திருக்கிறோம்.
ஆழ்ந்து முற்றோதலிலன் பயன் கவனத்துக்கு வராத பாடலையும் கவனித்துச் சிறப்பு உணரும் வாய்ப்பு என்பதை உணர்கிறேன்.உள் நிவந்த கருத்தையும் விரித்து ஒரு பதிவாகத் தாருங்கள் திரு ஹரிகி .அன்புடன்
இன்றைய கம்ப ராமாயண வகுப்பு Notes, நாடக வடிவில்
********************************
ஏவிய குரிசில் (சுமந்திரன் தேரில் ஏறிய ராமன்) பின் (அயோத்தி மக்கள் எல்லாரும் சென்றனர்).
அந்தியில் வெயில் ஒளி அழிய, இருண்டது
(ராமன்) ஓசனை இரண்டு சென்று ஒரு சோலை எய்தினான். இரத நின்று இழிந்தபின் ராமன் இன் துணை உரைசெறி முனிவரோடு உறையும்காலை…
வேந்தர், வேறுளோர் வட்டம் ஓர் ஓசனை வளைவிற்றாய் சோலையின் புறத்தைச் சூழ்ந்து… தாம் விட்டிலர் குரிசிலை (ராமனை)
(மக்கள்) பைம்புலில்… அயின்றிலர் (சாப்பிடவில்லை), துயின்றிலர் (தூங்கவில்லை), அழுது விம்மினார்.
(ராமனுடன் தங்கிய பலவகை மக்கள்) நவ்வியர், கன்னியர், மைந்தர் (ஆண்கள்), மகளிர்… துயின்றார்
ஏனையரும் இன்னணம் உறங்க… (அப்போது)
ராமன்: (மந்திரி சுமந்திரனிடம்): ‘உன்னால் மேல் நிகழ்வது உண்டு, கேள்!’
ராமன்: ‘அன்பினாரைப் போக்குவது அரிது, ஈண்டு நின்று ஏகல் பொல்லாது, நீ இரதம் இன்னே தூண்டினை மீள நோக்கி…’
ராமன்: ‘சுவட்டை ஓர்ந்து என்னை அங்கே மீண்டனன் என்ன மீள்வர். இது நின்னை வேண்டிற்று.’
சுமந்திரன்: ‘இவ்வயின் நின்னை நீங்கி ஏகி அவ்வயின் (அயோத்தியில்) அனைய காண்டற்கு அமைந்தனன் அடியன்.’
சுமந்திரன்: ‘தேவியும் இளவலும் தொடர செல்வனைக் கானகம் புக உய்த்தேன் என்கோ? கோவினை உடன்கொடு குறுகினென் என்கோ? யாவது கூறுகேன்?’
சுமந்திரன்: ‘மைந்தரைப் பார் இடைச் செலுத்தினேன், தேரிடை வந்தனன் என்கோ? அரசனை(தசரதனை)ச் சொல்லினால் கொலை செய்வேன்கொலோ?’
சுமந்திரன்: ’வேள்வி செய்து பெற்ற நின் சிங்க ஏறு அகன்றது என்று உணர்த்தச் செல்கெனோ? என்னின் கேகயன் நங்கையே நல்லள் போலும்’
(சுமந்திரன்) இன்னன மொழிந்தபின்னரும் அடியுறத் தழுவினன், படி உறப் புரண்டனன்.(ராமன் அவனைக்) கையால் எடுத்து, தழுவி, கண்ண நீர் துடைத்து
ராமன்: ‘பிறத்தல் என்று உற்றபின் பெறுவ யாவையும் திறத்துளி உணர்வது ஓர் செம்மை உள்ளத்தாய், அவலம் உண்டெனா அறம் மறத்தியோ?’
ராமன்: ‘இன்பம் வந்து உறும் எனின் இனியது, ஆயிடைத் துன்பம் வந்துறும் எனில் துறக்கலாகுமோ?’
ராமன்: ‘சூரர் ஆவது வன்மை அன்று, இறப்பினும் திருவெலாம் இழப்ப, எய்தினும் துறப்பிலர் அறம் எனல்’
ராமன்: ‘மன்னர் தொல்குலம், யான் பிறந்து அறத்தின் நின்று இழுக்கிற்று என்னவோ?’
ராமன்: ‘புதல்வனை வனத்துள் விட்டனன் மன்னவன் தனக்கு அது அரும் தவம், தலைக்கொண்டு ஏகுதல் எனக்கு அரும் தவம், இரங்கல் எந்தை நீ?’
ராமன்: ‘முனிவனை (வசிஷ்டரை) இறைஞ்சி, வந்தனை கூறு, எந்தையை அவனொடும் எய்தி, என் சிந்தனை உணர்த்துதி.’
ராமன்: ‘எம்பியை (பரதனை) முறையில் நின்று இனியன இழைத்தி என்று இயம்பி, என் பிரி (தசரதனின்) தனிமையும் தீர்த்தி என்று உரைத்தி’
ராமன்: (பரதனிடம் சொல்லச் சொல்வது) ‘அன்னையால் விளைந்தது கவ்வை என்று நோக்கலன், என்வயின் வைத்த அவ் அருள் அவ்வயின் அருள்.’
ராமன்: ‘வேந்தனை (தசரதனை) அவலம் மாற்றி, பின், வேண்டினன் இவ்வரம் என்று மேலவன் ஈண்டருள் எம்பி (பரதன்) பால் நிறுவி…’
ராமன்: (தசரதனிடம் சொல்லச் சொல்வது) ‘ஏழிரண்டு ஆண்டு நீத்து வந்து உனைத் தாழ்குவன்’ என ‘மாதவன் சொலால் சொல்லி மனம் தெருட்டுவாய்’
ராமன்: ‘முறைமையால் என் பயந்து எடுத்த மூவர்க்கும் நெடு வணக்கம் கூறிப் பின் இறைமகன் (தசரதன்) துயர் துடைத்து இருத்தி’
வணங்கிய தேர்வலான் (சுமந்திரன்) வாள்வழி நோக்கியை (சீதையை) வணங்கி நோக்கினான்.
சீதை: ‘அரசர்க்கு, அத்தையர்க்கு என் வணக்கம் முன் இயம்பி, யான் உடைப் பொன்னிறப் பூவை, கிளி போற்றுகஎன்று என் தங்கயர்க்கு உணர்த்துவாய்’
(இதைக் கேட்ட சுமந்திரன்) பொருமி விம்மினான், சோர்கின்றான். இளைய மைந்தனை(லட்சுமணனை)க் ‘கூறுவது யாது’ என… இனைய கூறினான்.
லட்சுமணன்: ‘என் கோமகற்கு உதவிப் போக்கிய செல்வத்தைக் குழலிமாட்டு அளித்த மெய்யனை அரசன் என்று இன்னம் ஒன்று அறையற்பாலதோ?’
லட்சுமணன்: ‘கானகம் பற்றி புதல்வன் காய் உண, போனகம் பற்றிய பொய் இல் மன்னர்க்கு… (என்) வலிமை கூறு.’
லட்சுமணன்: ‘பரத வேந்தர்க்கு… என் மன்னுடன் பிறந்திலென், தன்னுடன் பிறந்திலென், தம்பி முன் அலன், என்னுடன் பிறந்தயான் வலியேன்’
ராமன்: (லட்சுமணனிடம்) ‘ஐய நீ சீரிய அல்லன செப்பல்!’
(சுமந்திரன் தேரைப்) போநெறிகாட்டினன், ஒருவரும் உணர்வுறாமலே ஓட்டினன்.
· 1
தையல்(சீதை) தன் கற்பும், தன் தகவும், தம்பியும் கருணையும் உணர்வும் வாய்மையும் வில்லுமே சேமமாகக் கொண்டு ஐயனும் (ராமன்) போயினான்.
(ராமன், சீதை, லட்சுமணன்) யோசனை இரண்டு சென்றான். தேரில் போனான் (சுமந்திரன்) செய்தது சொல்லலுற்றாம்.
கடிகை இரண்டு மூன்றில் அயோத்தி கண்டான். முனிவனை (வசிட்டன்) அடியினைத் தொழுதான். படியெலாம் கேட்டு உழந்தான், எலாம் உணர்ந்தான்.
வசிஷ்டன்: ‘அந்தோ! முடிந்தனன் மன்னன்!’
விம்மி, பொன் திணி மன்னன் (தசரதன்) கோயில் (வசிஷ்டன்) சுமந்திரனோடும் புக்கான்
தேர் கொண்டு வள்ளல் (ராமன்) வந்தான் என்று (அமைச்சர்கள்) சுற்றி… (ராமனைக்) கண்டிலர், பாகன் (சுமந்திரன்) நிலை கண்டே தீர்ந்தார்.
வரதன் வந்துற்றான் என்ன மன்னனும் (தசரதன்) மயக்கம் தீர்ந்தான். விழித்து நோக்கி, ‘வீரன் வந்தனனோ?’ என்றான்.
‘இல்லை’ என்று உரைக்கல் ஆற்றான், ஏங்கி முனிவன் (வசிஷ்டன்) நின்றான். ‘நம்பி நடந்திலன்’ என்னும் மாற்றம் சொல்லலும், அரசன் சோர்ந்தான்.
தசரதன்: (சுமந்திரனிடம்) ‘நம்பி சேயனோ, அணியனோ?’
சுமந்திரன்: ‘கானில் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும் போயினன்.’
(தசரதன்) ஆவி போனான்.
கோசலை மறுகி வீழ்ந்தாள். அரற்றலுற்றாள். சுமித்திரையும் ஏங்கி உயிர் சோர, மற்ற தேவியரும் வந்து இரைத்தார்.
(தசரதனின் மற்ற மனைவியர்) வஞ்சமில்லா மனத்தானை வானில் தொடர்வான் மனம் வலித்தார் (உடன்கட்டை ஏறுதல்)
சுமந்திரன் சென்று அரசன் தன்மை சொல, முனிவன் (வசிஷ்டன்) விம்முவான்.
செய்யக் கடவ சிறுவர் ஈண்டையார் அல்லர். தையல் கடலில் கிடந்தானை(தசரதனை)த் தயிலக் கடலின் தலை உய்ர்த்தார்!
வசிட்டன்: (தசரதனின் மனைவியரிடம்) ‘இவற்கு உரிமை செய்யு நாளில் தீயில் ஆவி நீத்திர்’
வசிட்டர்: (தூதர்களிடம்) ‘பரதன் கொண்டு அனைக’ என்று ஏவினான்
(தூதர்கள்) கேகயர் கோன் நகரம் புக போனார்… (அப்போது காட்டில் இருந்த அயோத்தி) மாந்தர்க்கு விளைந்த பரிசு விளம்புவாம்
(காட்டில் அயோத்தி மக்கள்) எழுந்தார், கருமுகிலைக் (ராமனைக்) காணார், புரண்டார், ‘தொடர்தும் தேரின் சுவடு’ என்பார்
தேரின் சுவடு நகரின் மிசைத் திரிய திகிரிக் குறி கண்டார், உயிர் வந்தார், ‘ஆரும் அஞ்சலை, ஐயன் அயோத்தி அடைந்தான்’ என்ன ஆர்த்தார்.
(மக்கள்) உவகையராய் எழில் மா நகரம் (அயோத்தி) எய்தினார். அரசன் பொன்னுலகம் போனான் என்னும் பொருள் கேட்டார். உக்கார்.
’தக்கான் (ராமன்) போனான் வனம்’ என்னும் தகையும் உணர்ந்தார்… இன்னல் சிறையின் இடைப்பட்டார்.
(வசிட்டன்) பன்னற்கு அரிய பல நெறியும் பகர்ந்து பதைப்பை நீக்கினான்…. வரிசிலைக் கை நம்பி (ராமன்) செய்கை நடத்துவாம்.


இன்றைய வகுப்பு Notes: கம்பனின் சொற்களிலேயே
28 டிசம்பர் அன்று நடைபெற்ற பெங்களூரு கம்ப ராமாயண வகுப்பின் Notes, கம்பன் சொற்களிலேயே
(பரதன், சத்ருக்கனன் உள்ளிட்ட அயோத்தி படை ராமனைத் தேடிக் காட்டுக்குள் செல்கிறது)
மந்தரை வழிச் செல்வாரொடும் போதல் கண்டு இளவல் (சத்ருக்கனன்) ஓடி ஆர்த்து அந்தரத்து எற்றுவான்…
சுந்தரத் தோளவன் (பரதன்) விலக்கிச் சொல்லுவான்…
பரதன்: ‘முன்னையர் முறை கெட முடித்த பாவியைச் சின்னபின்னம் செய்து என் சினத்தைத் தீர்வன் நான், என்னை இன்று என் ஐயன் துறக்கும் என்றலால், அன்னை என்று உணர்ந்திலன் ஐயனே!’
பரதன்: ‘ஆதலால், முனியும் என்று ஐயன் அந்தம் இல் வேதனைக் கூனியை வெகுண்டும் என்னினும், போதும் நாம்…’
(காட்டினுள்) அய்யனும் தேவியும் இளைய ஆளியும் வய்கிய சோலையில் (பரதன்) தானும் வைகினான்… அல் அணை நெடுங்கண் நீர் அருவி ஆடினன், கல் அணை கிழங்கொடு கனியும் உண்டனன், வில் அணைத்து உயர்ந்த தோள் வீரன் வைகிய புல் அணை மருங்கில்தான் பொடியின் வைகினான்.
ஆண்தகை ஈண்டிய நெறி எனத் தானும் ஏகினான் காலினே!
கங்கை எய்தினான்.
அப்படை கங்கையை அடைந்த வாயிடை… (குகன்) சீற்றத்தான்… நகை மிகக் கண்கள் தீ நாற நாசியில் புகை உறக் குனிப்புறும் புருவப் போர்விலான்.
குகன்: (தன் படையினரிடம்) ‘சூழ்ச்சியின் ஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுதற்கு, என் உயிர்த் துணைவற்கு ஈகுவான் ஆன்ற பேரரசு நீர் அமைதிர்.’
குகன்: ‘வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே, இவர் போய்விடின் நாய்க் குகன் என்று எனை ஓதாரோ?’
குகன்: ‘ஆழ நெடும் திரை ஆறு கடந்து இவர் போவாரோ? வேழ நெடும்படை கண்டு விலங்கு இடும் வில்லாளோ? தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ, ஏழமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ?’
(ஆற்றின் அக்கரையில்) மொழிந்தனன் மூரிய தேர்வல்லான் (சுமந்திரன்).
சுமந்திரன்: (பரதனிடம்) ‘கங்கை இரு கரை உடையான், நாவாயான், உங்கள் குலத் தனி நாதற்கு உயிர்த்துணைவன், உயர்தோளான், குகன் நெறி எதிர் நின்றனன்.’
பரதன்: ‘மன் முன்னே தழீஇக்கொண்ட மனக்கினிய துணைவனேல், என் முன்னே அவர்க் காண்பென் யானே சென்று’
(பரதன்) எழுந்தான்.
நின்றவனை (குகன்) நோக்கினான், திருமேனி நிலை உணர்ந்தான்.
வற்கலையின் உடையானை, மாசு அடைந்த மெய்யானை, நகை இழந்த முகத்தானை, கல் கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான் (குகன்). வில் கையினின்று இடை வீழ விம்முற்று நின்று…
குகன்: ‘நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான், அயல் நின்றான் தம்பியையும் ஒக்கின்றான், தவ வேடம் தலைக்கொண்டான், துன்பம் ஒரு முடிவில்லை, திசை நோக்கித் தொழுகின்றான், எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு?’
(பரதன்) நாவாயில் ஒரு தனியே தான் வந்தான்.
வந்து எதிர் தொழுதானை வணங்கினான், அவனும் அவன் அடி வீழ்ந்தான், தழுவினான்.
குகன்: ‘எய்தியது என்னை?’
பரதன்: ‘தந்தை முறையினின்றும் வழுவினன், அதனை நீக்க மன்னனைக் கொணர்வான்.’
கேட்டனன் கிராதர் வேந்தன் (குகன்) விம்மினன் உவகை பொங்க.
குகன்: ‘தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை நீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கிப் போயினை… ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா!’
குகன்: ‘என் புகழ்கின்றது ஏழை எயினனே? இரவி என்பான் தன் புகழ்க் கற்றை மற்றை ஒளிகளைத் தவிர்க்குமாபோல், மன்புகழ் பெருமை நுங்கண் மரபினோர் புகழ்களெல்லாம் உன் புகழ் ஆக்கிக்கொண்டாய்.’
பரதன்: ‘எவ்வழி உறைந்தான் நம்முன்?’
குகன்: ‘இவ்வழி, வீர, யானே காட்டுவல், எழுக!’
கடிது சென்றான், கல்லிடைப் படுத்த புல்லின் வள்ளல் (ராமன்) வைகிய பள்ளி கண்டான், பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான்.
பரதன்: ‘இயன்றது என் பொருட்டினால் இவ்விடர் உனக்கு என்ற போழ்தும், அயின்றனை கிழங்கும் காயும் அமிர்தென, வலிய புல்லில் துயின்றனை… மகுடம் சூடும், செல்வமும் கொள்வென் யானே!’
பரதன்: ‘பின்னே போந்தவன் (லட்சுமணன்) பொழுது நீத்தது யாண்டு?’
குகன்: ‘வீரன் (லட்சுமணன்) இமைப்பிலன் நயனம்.’
பரதன்: ‘இராமனுக்கு இளையார் என்று முன்பு ஒத்த தோற்றத்தேமில் யான் என்றும் முடிவிலாத துன்பத்துக்கு ஏது ஆனேன், அவன் (லட்சுமணன்) அது துடைக்க நின்றான்.’
அவ்விடை அண்ணல் (பரதன்) வைகி…
(சூரிய உதயம்)
பரதன்: (குகனிடம்) ‘இவ்விடை கங்கை ஆற்றின் ஏற்றினை ஆயின், எம்மை வெவ்விடர்க் கடலினின்று ஏற்றி வேந்தன்பால் விடுத்தது.’
குகன்: ‘நன்று.’
குகன்: (தன் படையினரிடம்) ‘நாவாய் சென்று நீர் தருதிர்.’
(படகுகள்) வந்தன.
பரதன்: ‘இத்தானைதன்னை ஏற்றுதி விரைவில்.’
(படைகள் அனைத்தும் படகுகளில் ஏறுகின்றன)
28 டிசம்பர் அன்று நடைபெற்ற பெங்களூரு கம்ப ராமாயண வகுப்பின் Notes, கம்பன் சொற்களிலேயே
வற்கலையின் உடையானை, மாசு அடைந்த மெய்யானை, நகை இழந்த முகத்தானை, கல் கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான் (குகன்). வில் கையினின்று இடை வீழ விம்முற்று நின்று…
தூரக்காட்சியில் தொடங்கி கொஞ்சம் கொஞசமாக நெருக்கமாகக் காட்டும் இன்றைய நிழற்படக் கலைஞனைப் போன்ற காட்சி அமைப்பில் கம்பன் சொற்களில் காட்டுகிறானாம். முதலில் மொத்த உருவாக உடை. அணுக்கமாக மாசடைந்த மேனி. மேலும் நெருங்கி முகம், நகையிழ்ந்த இதழ்கள், கண் காட்டும் துயரம் என்று காட்சி நெருங்கி விரிகிறது. நன்றி.
இன்றைய கம்ப ராமாயண வகுப்பு Notes, கம்பனின் சொற்களிலேயே!
(குகன் படகில் அயோத்தி) சேனையும், எல்லை தீர் நகர் மாந்தரும் மகளிர் வெள்ளமும் செறிதிரைக் கங்கை பின் கிடக்கச் சென்றவே.
(பரதன்) தானும் (படகில்) ஏறினான்.
தம்பியும் (சத்ருக்கனன்), தாயர் மூவரும், தேர் வலவனும் (சுமந்திரன்), தூய தோழனும் (குகன்) ஏறலும், (படகு) மேயினான்.
குகன்: (கோசலையைப் பார்த்து, பரதனிடம்) ‘குரிசில், இவர் ஆர்?’
பரதன்: ‘முற்றத்தான் (தசரதன்) பெரும் தேவி, மூன்று உலகும் ஈன்றானை முன் ஈன்றானை பெற்றத்தால் பெறும் செல்வம், யான் பிறத்தலால் துறந்த பெரியாள்.’
(குகன்) அடியின்மிசை நெடிது விழுந்து அழுவான்.
கோசலை: ‘இவன் யார்?’
பரதன்: ‘இன் துணைவன் இராகவனுக்கு.’
பரதன்: ‘இலக்குவர்க்கும் இளையவர்க்கும் எனக்கும் மூத்தான், குகன் என்பான் இந்நின்ற குரிசில்.’
கோசலை: ‘மைந்தீர், காடு நோக்கி மெய்வீரர் பெயர்ந்ததுவும் நலம், காளை (குகன்) இவன் தன்னொடும் கலந்து ஐவீரும் அகல் இடத்தை அளித்திர்.’
குகன்: (சுமித்திரையைப் பார்த்து, பரதனிடம்) ‘ஐய, அன்பின் நிறைந்தாளை உரை!’
பரதன்: ‘(தசரதன்) இளம் தேவி, இராமன் பின்பு பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான் (லட்சுமணன்) தனைப் பயந்த பெரியாள்.’
குகன்: (கைகேயியைப் பார்த்து, பரதனிடம்) ‘யார் இவர் என்று உரை.’
பரதன்: ‘படர் எலாம் படைத்தாளை, பழி வளர்க்கும் செவிலியை… ஒருத்தி அன்றே இடர் இலா முகத்தாளை அறிந்திலையேல், இந்நின்றாள், என்னை ஈன்றாள்.’
இரக்கம் இலாளையும் தன் நல் கையின் (குகன்) வணங்கினான். வந்தது தோணியே.
தாயர் சிவிகையின் ஏற, குகனும் உடன் ஏகினான், (பரதன்) கழிந்தனன் பல காவதம் காலினே.
பரத்துவன் எனும் பேர் மாதவன் வைகிடம் அணுகினன், அவன் வேதியரோடு எதிர் மேவினான்.
மாதவத்தோனை அம்மைந்தனும் (பரதன்) தாழ்ந்து வணங்கினான். (பரத்வாஜ முனிவன்) ஆசிகள் கூறினான்.
பரத்வாஜ முனிவர்: ‘பேரரசு ஆண்டிலை ஐய நீ, முனிவர் தூசு உடுத்து நண்ணுதற்கு உற்றுளது யாது?’
பரதன்: ‘முறை நீங்கி நிலம் கொள்கிலேன். இறைவன் (ராமன்) கொள்கிலன் எனின், உறைவென் கானத்து ஒருங்குடனே.’
உரைத்த வாசகம் கேட்டலும் தவத்தோர்க்கெலாம் உள்ளம் குளிர்ந்தது…
பிற மக்கள் உங்கள் எல்லாருக்கும் நன்றி சொல்லவேண்டும். இந்த வகை முயற்சிக்கு எவ்வளவு கட்டுப்பாடு தேவை என்பது பலருக்கும் புலனாகவில்லையா? ஓதலுக்கும், பொருள் விளக்கத்துக்கும் மட்டுமே 3 மணிக்கூறு செலவழிக்கப்படுகிறது. ஓதும் இடத்திற்கு வந்து போகும் நேரம் அதுக்கும் கூடுதலாக இருக்கும்.
1. ‘கை தொழா(அ)’ என்ற சொல்லின் வடிவு, பொருள் பற்றி ஓர் உரையாடல் அமைந்தது.
இக்காலத்தில் ‘தொழா(அ)’ என்ற வடிவு “தொழாமல்” அல்லது “தொழாது” என்று வழங்கும் என்று நினைக்கிறேன்.
ஒருவேளை, புதுக்கவிதைகளில் ‘தொழா(அ)’ என்ற வடிவு புழங்கலாம். எனக்கு அந்தப் புதுக்கவிதை மரபு தெரியாது!
“தொழா(அ)” என்ற வடிவத்தைத் தொடர்ந்தடுத்து ஒரு வினைச்சொல் வருமானால் அது “செய்யா” எனும் வாய்பாட்டு வினையெச்சம்.
2. “உரறி” என்ற சொல் பற்றிய உரையாடலும் சிறப்பாக அமைந்தது.
இந்தச் சொல் சங்கப் பாடல்களில் இடி, தீ போன்ற இயற்கை மூலகங்களுடன் தொடர்புபடுத்திச் சொல்லப்படுகிறது.
3. 'ஏடு பெயர்த்து எழுதுதல்' பற்றிச் சுவையான குறிப்பொன்று.
“தலைமகள் கூற்று உணர்த்திய சூத்திரம் காலப் பழைமையாற் பெயர்த்தெழுதுவார் விழ எழுதினார் போலும்” (தொல்.பொருள்.அகத். 45, இளம்பூரணர் உரை).
4. உண்மை, வாய்மை, மெய்ம்மை (நிரஞ்சன் கேள்வி): ஏதோ ஒன்றின் தன்மையை அதன் இருப்பால் வெளிப்படுத்துவது ‘உண்மை.’
அதைப் பற்றிச் சொல்லால் வெளிப்படுத்துவது ‘வாய்மை.’ அதை நடைப்படுத்தும் செயல் ‘மெய்ம்மை.’ இப்படிப் புரிந்துகொள்கிறேன்.
5. “ஆறிய சிந்தனை”:: “ஆறி” என்ற சொல்லைப் பார்க்கும்போதும்/கேட்கும்போதும் எனக்குக் கலித்தொகை வரிகளே நினைவுக்கு வரும்.
தலைவியின் காதலைப் பற்றி அறிந்த அவள் வீட்டார் “ஒரு பகலெல்லாம் உருத்தெழுந்து ஆறி, தெருமந்து சாய்த்தார் தலை.” சூடானதே ஆறும், கொதித்ததே ஆறும்.
6. இந்தப் பாவப்பட்ட நாய் ஏன் இந்தப் பாடு படுகிறதோ! “நாயினும் கடையேன்” என்று திருவாசகம் சொன்ன ஒருத்தர் கதறியிருக்கிறார், பாவம்.
அமெரிக்காவில் நாய், பூனை, இவை போன்ற இன்னும் சில உயிரினங்கள் வீட்டுக் குழந்தைகள்போல அன்பு காட்டப்பெற்று வளர்க்கப்படுகின்றன என்பது உலகறிந்த செய்தியே.
எல்லாம் சரீ ... இப்படியே ... 3+ மணிக்கூறுக்கும் மேலாக ஓதும் ஆர்வலர்கள் தத்தம் உடல் நலத்திலும் கருத்துச் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 8-அவுன்சு தண்ணீர்/வெந்நீர் அருந்துவது உடலுக்குத் தேவையும் நல்லதும். :-)
அன்புடன்,
ராஜம்