Re: [தமிழ் மன்றம்] Re: பெங்களூருவில் கம்பராமாயண முற்றோதல்

6 views
Skip to first unread message

rajam

unread,
Sep 15, 2015, 9:35:26 PM9/15/15
to vallamai, Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, தமிழ் மன்றம், kambaraamayanam
இன்னொன்று சொல்ல மறந்தேன். 

'அக்னிப்ரவேசம்’ படித்து இராமனைத் தொழுது கொண்டாடும் அன்பு அடியவர்கள் ஒன்று செய்ய வேண்டுகிறேன் — எனக்காக இல்லை, அந்தச் சீதாதேவிக்காக. 

அட, எனக்காகவும் என்றும் வைத்துக்கொள்ளுங்களேன்.

நீங்கள் உட்கார்ந்திருக்கும் அறையில் குளுகுளுப்பான் (air conditionar), விசிறி வகை (hand fan or electric fan) ஒன்றும் இருக்கக்கூடாது. அன்றொருநாள் ஒரு நண்பர் ‘ஏசி'யைப் போடுமாறு கேட்டது பதிவாகியிருக்கிறது! என் கண்ணிலிருந்து தப்பவில்லை!

மூன்று மணிநேரமும் ஒரு சொட்டுத் தண்ணி குடிக்கக்கூடாது. நொறுக்குத்தீனி எதுவும் கூடாது. இந்தக் கூட்டத்துக்குச் செருப்பில்லாத காலால் நடந்துவந்திருக்கவேண்டும். வாகன வசதியைப் பயன்படுத்தக்கூடாது.

இன்னும் சொல்வேன்! ஆனால் இப்போதைக்கு இது போதும்.



Begin forwarded message:

Subject: Re: [தமிழ் மன்றம்] Re: பெங்களூருவில் கம்பராமாயண முற்றோதல்
From: rajam <ra...@earthlink.net>
Date: September 15, 2015 at 5:52:31 PM PDT
Cc: vallamai <vall...@googlegroups.com>, Madhura Bharati <madhura...@gmail.com>, Ramanan Isaikkavi <tavenka...@gmail.com>, S Ravi <s.r...@alicongroup.co.in>, crazy mohan <crazy...@gmail.com>, rugan arya <rugana...@gmail.com>, Naga Chokkanathan <ncho...@gmail.com>, Kannan S <music...@gmail.com>

ஹ்க்க்கும் க்கும் (அதாவது இருமல், செருமல் எல்லாம்) … முதல் பதிவைக் கேட்கத்தொடங்கியிருக்கிறேன் (அமர்வு 133:1/4).

அதென்ன அவ்ளோ பெரிய பீடிகை?!!! 

உணர்வுள்ள பெண்ணாகப் பிறந்த ஒருத்தி சீதையின் அக்னிப்பிரவேசத்தை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டாள் என்றால் அவளை முதலில் பிடித்துத் தீயில்கூடத் தள்ளவேண்டாம்; சும்மா … சுடுசெங்கல்லைக் கையிலும் தலையிலும் ஏந்தி இராமர் கோயிலை 10 முறை வலம்வரச்செய்தாலே போதும்.

அந்த ராமனுடைய திட்டுதலைப் பற்றி இந்தக் குழு எப்படி அலசப்போகிறது என்று பார்த்துக் கேட்க ஆவலுடையேன். 

இன்றைக்கு ஓரிரண்டு பதிவாவது பார்த்துக்கேட்க முடியும் என்று நினைக்கிறேன்.

பாவம், மகா பாவம் அந்தச் சீதை. 

இவண்,
ராஜம்


On Sep 13, 2015, at 12:16 AM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:


அன்பர்களே,

முற்றோதல் அதன் முடிவுக் கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறது.  நேற்று (12.09.2015) அக்னி பிரவேச காட்சியைத் தொடங்கி, சீதை அக்னியை வலம் வரும் கட்டத்தில் நிறுத்தியிருக்கிறோம்.

இந்தக் கட்டத்தைப் பற்றிய பல பேச்சுகள் பொய்யே என்பதைக் குழுவினரால் உணர முடிந்தது.  நீங்களும் காணவேண்டும் என்பதற்காக இத்துடன் அனுப்பி வைக்கிறோம்.

இன்னும் இரண்டு-மூன்று நாட்களில் (குழு இல்லாமல்) தனிப்பட்ட முறையில் ஹரி கிருஷ்ணன் என்ற விதத்தில் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பைத் தரமுடியும் என்று நம்புகிறேன்.  விநாயக சதுர்த்தி வரையில் பொறுத்திருக்கவும்.  செய்தியுடன் வருகிறேன்.

பகுதி 1

https://www.youtube.com/watch?v=RQLZdtr2QCU

பகுதி 2

https://www.youtube.com/watch?v=_FOWGEDrB5I

பகுதி 3

https://www.youtube.com/watch?v=K86iIAZvJV4

பகுதி 4

https://www.youtube.com/watch?v=thBoTiJ4mFk
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Sep 15, 2015, 9:56:45 PM9/15/15
to rajam, vallamai, Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, தமிழ் மன்றம், kambaraamayanam

2015-09-16 7:05 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
நீங்கள் உட்கார்ந்திருக்கும் அறையில் குளுகுளுப்பான் (air conditionar), விசிறி வகை (hand fan or electric fan) ஒன்றும் இருக்கக்கூடாது. அன்றொருநாள் ஒரு நண்பர் ‘ஏசி'யைப் போடுமாறு கேட்டது பதிவாகியிருக்கிறது! என் கண்ணிலிருந்து தப்பவில்லை!

அது சரி.  சீதம்மாதானே அக்னில எறங்கினாங்க... நீங்க ஏன் இப்படி சூடாகறீங்க?  பத்தாயிரம் பன்னெண்டாயிரம் மைல் தாண்டியும் இப்படி தகிக்குதே.

நான் அப்படி என்ன அநியாயம் பண்ணிட்டேன்?  அந்தக் காட்சிய படிச்சு விளக்கினது என் தப்பா?  ரெண்டு பக்க நியாயத்தையும் எடுத்துச் சொல்லியிருக்கேன்.  என் கருத்தை அப்படியே ஏத்துக்கணும்னு அவசியமில்லைன்னும் சொல்லியிருக்கேன்.  சீதையின் பதில்களைப் படிக்கறப்ப என்னால உணர்ச்சிகள கட்டுப்படுத்திக்க முடியல.  அதையெல்லாம் பாத்தீங்களா இல்லியான்னு தெரியல. 

ஆம்பளைகளா இருக்கறதால ஏசி, மின்விசிறி எதுவுமே இருக்கக்கூடாதா?  அப்பதான் எங்களுக்கு புத்தி வருமா?

'பங்கயத்து ஒருவனும், விடையின் பாகனும்,
சங்கு கைத் தாங்கிய தருமமூர்த்தியும்,
அங்கையின் நெல்லிபோல் அனைத்தும் நோக்கினும்,
மங்கையர் மன நிலை உணர வல்லரோ?


எங்களுக்கு அந்த யோக்கியத இல்லதான்.  உண்மைதான்.  ஆனா ஆம்பள மனசுக்குள்ளயும் துளியூண்டு சத்திய வேட்கையும், ஈரமும் ஏதோ கொஞ்சம் அற்பசொற்ப அறிவும் இருக்கும்னு பெண்களுக்குப் புரியுமோ?

Men are from Mars Women are from Venus.

ஏண்டாப்பா இந்த காட்சிய படிக்கப் பொறுப்பேத்துக்கொண்டோம்னு உண்மைல வேதனைப் படறேன்.

Hari Krishnan

unread,
Sep 15, 2015, 10:11:40 PM9/15/15
to rajam, vallamai, Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, Naga Chokkanathan, Kannan S, தமிழ் மன்றம், kambaraamayanam, RAVI K


2015-09-16 7:26 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

நண்பன் க ரவி என்னை தயவுசெய்து மன்னிக்க வேண்டும்.  இலக்கிய விஷயங்களுக்கு அலுவல் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லியும் மிகப்பழைய மடல் ஒன்றைப் பயன்படுத்தி இந்த 133ம் அமர்வின் மடலை எழுதியதால், யார் ரிப்ளை ஆல் போட்டாலும் அது பழைய அலுவல் முகவரிக்கே போய்விடுகிறது. 

ரவி, மன்னிச்சுக்கப்பா.

இனி விடையெழுதும் அன்பர்கள் அருள்கூர்ந்து இந்த மடலைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.  எத்தனையோ அலுவல்களில் ஈடுபட்டிருக்கும் வழக்கறிஞருடைய அலுவல் முகவரிக்கு மடல்கள் செலுத்தப்பட நான் காரணமாகிவிட்டேன்.  பொதுவில் மன்னிப்புக் கேட்க எனக்கு வெட்கமில்லை.

ஆம்பளைக்கும் கொஞ்சம் கண்ணியம் உண்டு.

rajam

unread,
Sep 15, 2015, 10:11:56 PM9/15/15
to Hari Krishnan, vallamai, Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, தமிழ் மன்றம், kambaraamayanam
இப்பதான் 133:1/4, 45.34 - இல் பார்ப்பும் கேட்பும். மெல்ல மெல்லத்தான் கேட்கவேண்டும்.

///சீதம்மாதானே அக்னில எறங்கினாங்க... நீங்க ஏன் இப்படி சூடாகறீங்க?  பத்தாயிரம் பன்னெண்டாயிரம் மைல் தாண்டியும் இப்படி தகிக்குதே.///

அந்த ராமன் சந்தேகம்தானே சீதையை அந்த முடிவு எடுக்கச்செய்தது? அவளைக் கண்டவுடனே ஆரக்கட்டித்தழுவிக் கொஞ்சி உச்சி மோர அந்த ஆளுக்குத் தெரியவில்லையே, ஏன்? 

ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் உணர்விலும் சீதை இருக்கிறாள். காலமோ இடமோ சூழலோ அவர்களை வேற்றுப்படுத்தாது.


///ஆம்பளைகளா இருக்கறதால ஏசி, மின்விசிறி எதுவுமே இருக்கக்கூடாதா?  அப்பதான் எங்களுக்கு புத்தி வருமா?///

புத்தி வருமோ வராதோ, எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு சில மணிநேரங்களாவது சீதை அனுபவித்த துயரை அவர்களும் அனுபவிக்கவேண்டும் என்பது என் தீராத ஆசை.


--
You received this message because you are subscribed to the Google Groups "kambaraamayanam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kambaraamayan...@googlegroups.com.
To post to this group, send email to kambara...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/kambaraamayanam.

rajam

unread,
Sep 16, 2015, 2:01:01 PM9/16/15
to tamil...@googlegroups.com, vallamai, Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Hari Krishnan, kambaraamayanam
என் கருத்து கீழே இடைச்செருகலாக ...


On Sep 15, 2015, at 6:43 PM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:


2015-09-16 6:22 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
அதென்ன அவ்ளோ பெரிய பீடிகை?!!! 

தேவைங்கறதனாலதான் அந்த பீடிகை. 

கல்லூரியில் சிலப்பதிகார கொலைக்களக் காதை நடத்தறப்ப எங்க ஆசிரியர் (இவர் நான் சொல்ற நாகநந்தி இல்ல, இன்னொருத்தர்)

பீடிகைத் தெருவிற் பெயர்வோன் ஆங்கண்
கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய   
நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர

அப்படின்னு படிக்கறப்ப (அவர் பர்க்லி சிகரெட் பிரியர்) ஓஹோ அந்தத் தெருவுல எல்லாரும் பீடி கையா இருப்பாங்களோன்னு உள்ள புகுந்தது நினைவுக்கு வருது.  சுடுசெங்கல்லை இல்ல.  சுத்த அக்கினியையே விரலிடுக்குல ஏந்தறாங்க இல்ல? அதான்.  :)



சும்மா … சுடுசெங்கல்லைக் கையிலும் தலையிலும் ஏந்தி இராமர் கோயிலை 10 முறை வலம்வரச்செய்தாலே போதும்.

அந்தம்மாவ எப்ப ராமர் தீயில் இறங்கச் சொன்னார்? 


இல்லை. ஆனால் அவள் தீயில் இறங்கும்போது அவன் ஏன் தடுக்கவில்லை? அந்த நேரத்தில் அந்த மனுசனுக்குப் புத்தியும் சமத்தும் ஆருயிர்த்துணைவிமேல் காதலும் எங்கே பறந்துபோயினவோ???



இராமர் கோயிலை வலம் வந்திருக்கணும்னா, இலக்குவன் சிதையடுக்கினதுக்கும் மொதல்ல இலங்கைல இராமர் கோயில் கட்டிட்டு அப்பறமா சிதையடுக்கியிருக்கணும்.  பாவமில்லியா இலக்குவன்?


நான் இன்னும் எல்லாப் பதிவுகளையும் பார்த்துக் கேட்கவில்லை. கேட்டபிறகு ராமனின் வார்த்தைகளைப் பற்றிய என் கருத்தைச் சொல்கிறேன்.

மற்றபடி …

ராமையாவின் கோயிலை வலம்வா என்று நான் சொன்னது இந்தக்காலப் பெண்களுக்கு — ராமனுக்கு ஆதரவாகப் பேசிச் சீதைக்கு நேர்ந்ததை அப்படியே பதிவ்ரதா பாக்யமாக/தர்மமாகக் கருதும் இக்காலப் பெண்களுக்கு. இந்தக் காலத்தில் ராமனுக்குக் கோயில் இருக்குதானே?

என்னைக்கேட்டால் … இலக்குவனுக்கோ பரதசத்துக்கனர்களுக்கோ திருமணமே ஆகியிருக்கக்கூடாது. எல்லாரும் ராமனுக்கே பாதசேவை செய்துகொண்டிருந்திருக்கவேண்டும். நான் சொல்றதெ யாரும் கேட்பதில்லையே! ;-)

ஓ, புரிகிறது, புரிகிறது. அந்தப் பரமாத்மாவின் சங்கு, சக்ரம், பாம்பணை மூன்றும்தானே தம்பியராக அவதரித்திருக்கிறார்கள்! சரிதான். 



2001லன்னு நினைக்கறேன்.  ஒங்க ஊர்ல முதல் கம்பன் விழா நடந்துச்சு.  மணி (நம்ம மணிவண்ணன்தான்) என்னை அந்த விழாவுக்காக அக்னிப் பிரவேசத்தப் பத்தி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார்.  ரொம்ப நீளமா வருமேன்னு தயங்கினேன்.  எவ்வளவு நீளமானாலும் சரின்னு சொன்னார்.  கனலை எரித்த கற்பின் கனலின்னு அந்தக் கட்டுரை இணையத்துல பிரபலம்.  ஆனா பெரியவங்க பார்வை ஏழைங்க மேல விழாது போல இருக்கு.  ம்? (ஜேகேன்னு சொல்வாங்க.  ஜஸ்ட் கிடிங்.)


பாவம், மகா பாவம் அந்தச் சீதை.

நான் எப்ப இல்லன்னு சொன்னேன்?  ஆம்பள பக்கமும் கொஞ்சம் நியாயம் இருக்கு.  அதையும் கொஞ்சம் ஏறெடுத்துப் பாருங்கப்பான்னுதான் சொல்றேன்.  என் கருத்துகளை உங்கள் மேல் திணிக்க விரும்பவில்லை.   I will show you the pointers, come to your own conclusions என்று தெளிவாகவே இரண்டு மூன்றுமுறை சொல்லியிருக்கிறேனே.

இராமன் சீதை மேல எப்ப சந்தேகப்பட்டான்?  (இந்த ஒரு காட்சில சில வார்த்தைகள் அப்படி இருக்கலாம்.  காட்டுல பொறந்த லவகுசர்களை பன்னெண்டு வருஷம் கழிச்சுப் பாக்கறப்ப, இவங்க என் பசங்கதான், எனக்கு நல்லா தெரியும்னு அவங்க கையப் பிடிச்சிட்டுப் போயி ஜனங்க முன்னால ஏன் சொல்லணும்?  கற்புலதான் சந்தேகமிருக்கறதா சொல்லிக்கறீங்களே.  இவங்க யாருன்னே எனக்குத் தெரியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே?

இராமனும் துளியூண்டு பாவம்தான்.  இருந்தாலும் இந்த கட்டத்தில் பேசும் வார்த்தைகளின் சூடு (மூணு நாலே பாட்டுன்னாலும்) தாங்க முடியலன்னு சொல்லியிருக்கேனே..

உங்களைத் தனிப்பட்ட முறையில் நான் குறைசொல்லவில்லையே!!

இந்த (133-ஆம்) அமர்வின் எல்லாப் பதிவுகளையும் பார்த்துக்கேட்ட பிறகு உரையாடுகிறேன். ஒரு பதிவுதான் முடித்திருக்கிறேன். பிறவற்றை உடனே கேட்க இப்பொ அவகாசமில்லை.



சீதை மட்டுமில்ல.  பொருள் சொல்ற இக்கட்டுல அகப்பட்டுகிட்ட நானுங்கூட பாவம்தான். 

இந்த மாதிரியான தன்னிரக்க நிலை எனக்கு அவ்வளவாப் பிடிக்காது, சொல்லிட்டேன். ;-)


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.

rajam

unread,
Sep 17, 2015, 11:04:57 AM9/17/15
to Hari Krishnan, kambaraamayanam, vallamai, தமிழ் மன்றம்
அமர்வு 133, பதிவு 2 தொடக்கம்.

அனையள் ஆகி, அனுமனை நோக்கினாள்,
இனையது இன்னது இயம்புவது என்பது ஓர்
நினைவு இலாது நெடிது இருந்தாள்-நெடு
மனையின் மாசு துடைத்த மனத்தினாள்.

இது எனக்குப் புரியவில்லை. “தன்னாலே தன்குலத்துக்குப் பேர் கெட்டுப்போச்சே”  “இஷ்வாகு குலத்துக்கும் பேர் கெட்டுப்போச்சு, ஜனகமகாராஜாவோட பேரும் கெட்டுப்போச்சு” … “இப்பொ பேர் கெட்டுப்போகலெ, இந்த மாசு துடைத்துவிட்டது” என்ற திருப்தி சீதைக்கு. இதை ஒரு சொற்பொருள் முரணாகத்தான் கம்பன் கொண்டுவந்து வைத்திருப்பதாக ஹரி சொன்னார்.

தன்னுடைய மாசெல்லாம், தன்னாலே ஏற்பட்ட களங்கமெல்லாம் தீர்ந்துவிட்டதாகச் சீதை நினைத்ததாகவும் விளக்கம் சொல்லப்பட்டது.

என் கேள்வி: சீதையினால் ஏற்பட்ட களங்கம்/மாசு என்ன? அது எப்படி யாரால் துடைக்கப்பட்டது?

++++++++++
அமர்வு 133, பதிவு 2 முடிவில்.

ஆமா, இந்த மனுசன் தான் இருந்த இடத்தை விட்டு அகலாமல் வீடணனை அனுப்பிச் சீதையைக் கூட்டிக்கொண்டுவா, அதுவும் … “சீரோடும்” என்று சொல்வானேன்? 

சரி, உங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன் — தேவியை மக்கள் நல்ல கோலத்தில் பார்க்க விரும்புவார்கள் என்றுதான் அப்படியே உருகி உருகி மனத்தில் ஏகப்பட்ட குழப்பதோடு புழுங்கிப்புழுங்கிக் கலங்கிச் சொன்னான் என்று. ஆனாலும் தேவியை அவள் இருந்த கோலத்தில் பார்த்தால்தானே மக்களுக்கு உண்மை புலப்படும்? பிறகு மக்களுக்கு ஒரு சந்தேகமும் வர வாய்ப்பில்லை. அவர்களுக்காக என்று அவளை மீண்டும் அவன் தண்டிக்கவேண்டியதில்லை. ஆனால் கதை இப்போது இருக்கும் வகையில் ஓடியிருக்காது, ராஜாராமனுக்காகவே கதை அமைந்திருக்க முடியாது!!

ஆனாலும் அவள் கிடைத்துவிட்டாள் என்று தெரிந்த நொடியிலேயே வீடணனுடன் தானும் ஓடிப்போய் அவளப் பார்த்துவிட்டுப் பிறகல்லவோ மக்கள் கண்ணில் அவளைக் காட்டவேண்டும்? ‘கண்ணின் அருமணியே இத்தனைக்காலம் எப்படியிருந்தாய்’ என்று அவளை ஆர அணைத்துத் தேற்றிய பிறகல்லவோ பிறர்கண்ணில் அவளை எந்தக்கோலத்தில் காட்டலாம் என்று நினைத்திருக்கவேண்டும்? கொஞ்சம்கூடக் காதல் கனிவு இல்லாத தன் வீரத்தின்மேல் காதல்கொண்ட, ‘தான்மை’ மிகுந்தவனாகத் தோன்றுகிறான் ராமன். தனக்காகவா மக்களுக்காகவா அவள் கோலம்?

Very poor and pathetic characterization. 

Will continue once I hear the rest of the recordings.

அன்புடன்,
ராஜம்



<…deleted for space …>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.

Hari Krishnan

unread,
Sep 17, 2015, 12:10:27 PM9/17/15
to rajam, kambaraamayanam, vallamai, தமிழ் மன்றம்
2015-09-17 20:34 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
இது எனக்குப் புரியவில்லை. “தன்னாலே தன்குலத்துக்குப் பேர் கெட்டுப்போச்சே”  “இஷ்வாகு குலத்துக்கும் பேர் கெட்டுப்போச்சு, ஜனகமகாராஜாவோட பேரும் கெட்டுப்போச்சு” … “இப்பொ பேர் கெட்டுப்போகலெ, இந்த மாசு துடைத்துவிட்டது” என்ற திருப்தி சீதைக்கு. இதை ஒரு சொற்பொருள் முரணாகத்தான் கம்பன் கொண்டுவந்து வைத்திருப்பதாக ஹரி சொன்னார்.

:)
 

தன்னுடைய மாசெல்லாம், தன்னாலே ஏற்பட்ட களங்கமெல்லாம் தீர்ந்துவிட்டதாகச் சீதை நினைத்ததாகவும் விளக்கம் சொல்லப்பட்டது.


இதென்னத்துக்கு இந்த பேசிவ் வாய்ஸ்?  நாந்தானே சொன்னேன்.  சொல்லப்பட்டதுன்னா?
 
என் கேள்வி: சீதையினால் ஏற்பட்ட களங்கம்/மாசு என்ன? அது எப்படி யாரால் துடைக்கப்பட்டது?

தான் அறிந்தோ அறியாமலோ தன் சக்திக்கு உட்பட்டதான சூழலாக இல்லாத போதும் (வான்மீகத்தில் இதை வி-வஸா என்ற சொல்லால் மூன்று இடங்களில் மூன்று முறை விளக்கமளித்திருக்கிறாள்) இராவணனிடத்தில் சிறைப்பட்டது தனக்கு ஏற்பட்ட களங்கமாகக் கருதுவதாகக் கவிஞர்கள் சொல்கிறார்கள்.  கவிஞர்கள் சொல்ற பேசிக் அஸம்ஷன்ஸை ஏத்துக் கொண்டாதான் கதைப் போக்க உணர முடியும்.  இதை உங்களுக்காகச் சொல்லவில்லை.  சபை நடுவில் கேட்டிருப்பதாலே பொதுவாக மற்றவர்கள் இதை உணரவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.  ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு ஏழு...இந்த வரிசைய ஒத்துகிட்டாதான் ரெண்டும் ரெண்டும் நாலு, நாலும் நாலும் எட்டு.  ஹெக்ஸ்ல இந்தக் கணக்கு செல்லுமா?  அங்க வேற அஸம்ஷன்.. வேற அமைப்பு.  மறுபடியும்.  இது அக்காவுக்காகச் சொல்லப்படுவதில்லை.

இந்தக் களங்கத்தை இராமன் இராணவணனோடு யுத்தம் செய்து கொன்றதன் மூலம் துடைத்திருப்பதாக சீதை நம்புவது கவிஞர்கள் சொல்வது.

எல்லை நீத்த உலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன்.

என்னாலயும் முடியும்.  ஆனா அவன்வந்துதான் என்னை விடுவிக்கணும்.

அந்தப் பக்கத்துல இராமன் கிட்கிந்தா காண்டம் நாடவிட்ட படலத்துல அனுமனுக்கு அடையாளம் சொல்றப்ப சொல்றான்:

வரை செய் தாள் வில் இறுத்தவன், அ(ம்) மா முனியொடும்
விரசினான் அல்லனேல், விடுவல் யான் உயிர்" எனா,
கரை செயா வேலையின் பெரிய கற்பினள் தெரிந்து
உரைசெய்தாள்; அஃது எலாம் உணர, நீ உரைசெய்வாய்.

இது நீலமாலை தன்னிடம் வந்து ஒருத்தன் வில்லை உடைச்சிட்டான்னு சொன்னப்ப சீதை தன் மனத்துக்குள் நினைத்துக் கொண்டது.  பக்கத்திலிருந்த நீலமாலைக்கே தெரியாது.  இராமன் சீதைக்கு நேர்ந்த  இந்த மாதிரியான ஒரு மன நிகழ்வை அனுமனிடம் எப்படிச் சொன்னான்?

இப்பதான் அடையாளம் சொல்லிக் கொண்டிருக்கிறான்.  இன்னும் தேடிக்கொண்டு அனுமன் கிளம்பக்கூட இல்லை.  இப்போதே,  அவன் வாக்கிலிருந்தே
 
கரை செயா வேலையின் பெரிய கற்பினள் தெரிந்து
உரைசெய்தாள்

அப்படின்னு சான்றிதழ் வந்தாச்சு.  இதை சந்தேகம்னு நீங்க சொன்னா எப்படின்னு நீங்கதான் சொல்லணும்.

++++++++++
அமர்வு 133, பதிவு 2 முடிவில்.

ஆமா, இந்த மனுசன் தான் இருந்த இடத்தை விட்டு அகலாமல் வீடணனை அனுப்பிச் சீதையைக் கூட்டிக்கொண்டுவா, அதுவும் … “சீரோடும்” என்று சொல்வானேன்? 

சரி, உங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன் — தேவியை மக்கள் நல்ல கோலத்தில் பார்க்க விரும்புவார்கள் என்றுதான் அப்படியே உருகி உருகி மனத்தில் ஏகப்பட்ட குழப்பதோடு புழுங்கிப்புழுங்கிக் கலங்கிச் சொன்னான் என்று. ஆனாலும் தேவியை அவள் இருந்த கோலத்தில் பார்த்தால்தானே மக்களுக்கு உண்மை புலப்படும்? பிறகு மக்களுக்கு ஒரு சந்தேகமும் வர வாய்ப்பில்லை. அவர்களுக்காக என்று அவளை மீண்டும் அவன் தண்டிக்கவேண்டியதில்லை. ஆனால் கதை இப்போது இருக்கும் வகையில் ஓடியிருக்காது, ராஜாராமனுக்காகவே கதை அமைந்திருக்க முடியாது!!

நான் அப்படிச் சொல்லவில்லை.  ஒலி சரியாகக் கேட்கவில்லையா?  இதை ராஜாராமனுக்காக ராஜாராமனே வடித்துக் கொண்டான் என்று நீங்கள் நினைத்தால் உங்களைத் தடுக்க நான் யார்?


பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின்
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி
காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்
"நீ வா" என்ன நேர் இழை கலங்கி
"மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம்
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர்
புக்கேன் பிறன் உளம் புரி நூல் மார்பன்
முத் தீப் பேணும் முறை எனக்கு இல்" என
மா துயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள் 

அப்படின்னு இதைவிட மோசமா கற்பை வலியுறுத்திருக்கற காப்பியத்த உயர்த்திப் பிடிக்கறது நானா?  உயர்த்திப் பிடிக்கறவங்கதான் அதை ஏன் செய்யறாங்கன்னு சொல்லணும்.  இந்த இலக்கணப்படி பாத்தா, சீதைக்கே இது விலைபோகாது.  பிறர் நெஞ்சு புகுந்தாயிற்று.  அப்ப இது களங்கமா இல்ல களங்கமே இல்லியா?

மணிமேகலை என்ன சொல்லுது?

ஆனாலும் அவள் கிடைத்துவிட்டாள் என்று தெரிந்த நொடியிலேயே வீடணனுடன் தானும் ஓடிப்போய் அவளப் பார்த்துவிட்டுப் பிறகல்லவோ மக்கள் கண்ணில் அவளைக் காட்டவேண்டும்? ‘கண்ணின் அருமணியே இத்தனைக்காலம் எப்படியிருந்தாய்’ என்று அவளை ஆர அணைத்துத் தேற்றிய பிறகல்லவோ பிறர்கண்ணில் அவளை எந்தக்கோலத்தில் காட்டலாம் என்று நினைத்திருக்கவேண்டும்? கொஞ்சம்கூடக் காதல் கனிவு இல்லாத தன் வீரத்தின்மேல் காதல்கொண்ட, ‘தான்மை’ மிகுந்தவனாகத் தோன்றுகிறான் ராமன். தனக்காகவா மக்களுக்காகவா அவள் கோலம்?

அது நீங்கள் புரிந்து கொள்வது.  மன்னிக்கவும்.  I beg to differ.  I can say with reasonable confidence that I have spent more than forty years in studying both epics and I have my conviction about my conclusion.  நான் ராமனுக்காக வாதாட வேண்டியதில்லை.  நான் அவன் வக்கீலில்லை.  நிற்க அவனுக்கு வலுவிருப்பதால் நிற்கிறான்.  ஒவ்வொரு ராமர் கோவிலும் சாட்சி.

Very poor and pathetic characterization. 

 வல் இயல் மறவர், தம் வடுவின் தீர்பவர்,
வெல்லினும் வெல்க, போர்; விளிந்து வீடுக;
இல் இயல் அறத்தை யான் இறந்து வாழ்ந்த பின்,
சொல்லிய என் பழி அவரைச் சுற்றுமோ
?

--சுந்தரகாண்டம் உருக்காட்டுப் படலத்தில் சீதை.

சொல்லிய கவிப்பழி என்னைச் சுற்றுமோ!

இதைப் பொதுவில் வைத்து விவாதிப்பதால் ஒரு முன்னெச்சரிக்கைக் குறிப்பு.  அவர்கள் என்னைப் பொதுவில் வைத்துக் கேட்டதால் நான் பொதுவில் விடை சொல்லவேண்டியதாயிற்று.  இந்த விவாதம் திசைமாறியோ மாறாமலோ தொடருமானால், ஒவ்வொரு மடலையும் படித்து விடையிறுக்க எனக்கு இப்போது அவகாசமில்லை.  ஏற்கெனவே இருக்கும் மொழிபெயர்ப்பு நெருக்கடிகளோடு அன்றாட திருப்புகழ் பக்கத்தையும் இழுத்துவிட்டுக் கொண்டிருக்கிறேன்.  படிப்பதற்கும் விளங்கிக் கொண்டு விளக்குதற்கும் கடலளவுக்கும் மேலே இருக்கிறது.  ஒரு நாள் கூட நிறுத்த முடியாத, ஒவ்வொரு நாளும் எழுதியே ஆகவேண்டிய சூழல்.  எனக்குப் பிடித்திருக்கிறது. செய்கிறேன்.  விவாதங்களில் செலவிட எனக்கு நேரமில்லை என்று என் நிலையை சபைக்கு விளக்கியாக வேண்டியிருக்கிறது.  மன்னித்தருளவும்.


Will continue once I hear the rest of the recordings.

அன்புடன்,
ராஜம்

Hari Krishnan

unread,
Sep 17, 2015, 12:20:57 PM9/17/15
to rajam, kambaraamayanam, vallamai, தமிழ் மன்றம்

2015-09-17 21:40 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
எல்லை நீத்த உலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன்.

எழுதும் வேகத்தில் ஓரடி விட்டுப் போனதை கவனிக்கவில்லை.  பின்னால் இது வேண்டுமென்றே மறைத்துவிட்டேன் என்று யாருக்காவது பட்டுவிடக்கூடாது என்பதற்காக முழுப்பாடல்:

அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?

எல்லை நீத்த உலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன்.

rajam

unread,
Sep 17, 2015, 2:37:23 PM9/17/15
to Hari Krishnan, kambaraamayanam, vallamai, தமிழ் மன்றம்
என் கருத்து கீழே இடைச்செருகலாக ...


On Sep 17, 2015, at 9:10 AM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:


2015-09-17 20:34 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
இது எனக்குப் புரியவில்லை. “தன்னாலே தன்குலத்துக்குப் பேர் கெட்டுப்போச்சே”  “இஷ்வாகு குலத்துக்கும் பேர் கெட்டுப்போச்சு, ஜனகமகாராஜாவோட பேரும் கெட்டுப்போச்சு” … “இப்பொ பேர் கெட்டுப்போகலெ, இந்த மாசு துடைத்துவிட்டது” என்ற திருப்தி சீதைக்கு. இதை ஒரு சொற்பொருள் முரணாகத்தான் கம்பன் கொண்டுவந்து வைத்திருப்பதாக ஹரி சொன்னார்.

:)
 

தன்னுடைய மாசெல்லாம், தன்னாலே ஏற்பட்ட களங்கமெல்லாம் தீர்ந்துவிட்டதாகச் சீதை நினைத்ததாகவும் விளக்கம் சொல்லப்பட்டது.


இதென்னத்துக்கு இந்த பேசிவ் வாய்ஸ்?  நாந்தானே சொன்னேன்.  சொல்லப்பட்டதுன்னா?

:-) 


 
என் கேள்வி: சீதையினால் ஏற்பட்ட களங்கம்/மாசு என்ன? அது எப்படி யாரால் துடைக்கப்பட்டது?

தான் அறிந்தோ அறியாமலோ தன் சக்திக்கு உட்பட்டதான சூழலாக இல்லாத போதும் (வான்மீகத்தில் இதை வி-வஸா என்ற சொல்லால் மூன்று இடங்களில் மூன்று முறை விளக்கமளித்திருக்கிறாள்) இராவணனிடத்தில் சிறைப்பட்டது தனக்கு ஏற்பட்ட களங்கமாகக் கருதுவதாகக் கவிஞர்கள் சொல்கிறார்கள். 


அப்படியா? இப்போதுதான் தெரிந்துகொண்டேன். நல்லது.

[இப்படிப்பட்ட கோட்பாட்டை (== 'கற்பெனப்படுவது பிறர் நெஞ்சு புகாமை’ என்றதை) ஒரு பெண்ணின் மனத்தில் பதியவைத்துவிட்ட சமுதாயத்தைப் பற்றிய என் கருத்தை இங்கே எழுத இடமுமில்லை, நேரமுமில்லை. It’s purely controlling, just sick to the core, and disgusting; that’s all I can say for now.]


கவிஞர்கள் சொல்ற பேசிக் அஸம்ஷன்ஸை ஏத்துக் கொண்டாதான் கதைப் போக்க உணர முடியும்.  இதை உங்களுக்காகச் சொல்லவில்லை.  சபை நடுவில் கேட்டிருப்பதாலே பொதுவாக மற்றவர்கள் இதை உணரவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.  ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு ஏழு...இந்த வரிசைய ஒத்துகிட்டாதான் ரெண்டும் ரெண்டும் நாலு, நாலும் நாலும் எட்டு.  ஹெக்ஸ்ல இந்தக் கணக்கு செல்லுமா?  அங்க வேற அஸம்ஷன்.. வேற அமைப்பு.  மறுபடியும்.  இது அக்காவுக்காகச் சொல்லப்படுவதில்லை.

இந்தக் களங்கத்தை இராமன் இராணவணனோடு யுத்தம் செய்து கொன்றதன் மூலம் துடைத்திருப்பதாக சீதை நம்புவது கவிஞர்கள் சொல்வது.

எல்லை நீத்த உலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன்.

என்னாலயும் முடியும்.  ஆனா அவன்வந்துதான் என்னை விடுவிக்கணும்.

அந்தப் பக்கத்துல இராமன் கிட்கிந்தா காண்டம் நாடவிட்ட படலத்துல அனுமனுக்கு அடையாளம் சொல்றப்ப சொல்றான்:

வரை செய் தாள் வில் இறுத்தவன், அ(ம்) மா முனியொடும்
விரசினான் அல்லனேல், விடுவல் யான் உயிர்" எனா,
கரை செயா வேலையின் பெரிய கற்பினள் தெரிந்து
உரைசெய்தாள்; அஃது எலாம் உணர, நீ உரைசெய்வாய்.

இது நீலமாலை தன்னிடம் வந்து ஒருத்தன் வில்லை உடைச்சிட்டான்னு சொன்னப்ப சீதை தன் மனத்துக்குள் நினைத்துக் கொண்டது.  பக்கத்திலிருந்த நீலமாலைக்கே தெரியாது.  இராமன் சீதைக்கு நேர்ந்த  இந்த மாதிரியான ஒரு மன நிகழ்வை அனுமனிடம் எப்படிச் சொன்னான்?

இப்பதான் அடையாளம் சொல்லிக் கொண்டிருக்கிறான்.  இன்னும் தேடிக்கொண்டு அனுமன் கிளம்பக்கூட இல்லை.  இப்போதே,  அவன் வாக்கிலிருந்தே
 
கரை செயா வேலையின் பெரிய கற்பினள் தெரிந்து
உரைசெய்தாள்

அப்படின்னு சான்றிதழ் வந்தாச்சு.  இதை சந்தேகம்னு நீங்க சொன்னா எப்படின்னு நீங்கதான் சொல்லணும்.


‘சந்தேகம்’-னு நான் சொன்னது அந்த ராமன் சொன்ன வார்த்தைகளால்:

'ஊண் திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட,
மாண்டிலை; முறை திறம்பு அரக்கன் மா நகர்
ஆண்டு உறைந்து அடங்கினை; அச்சம் தீர்ந்து, இவண்
மீண்டது என் நினைவு? "எனை விரும்பும்" என்பதோ?

'மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை
அருந்தினையே; நறவு அமைய உண்டியே;
இருந்தனையே? இனி எமக்கும் ஏற்பன
விருந்து உளவோ? உரை-வெறுமை நீங்கினாய்!

'கலத்தினின் பிறந்த மா மணியின் காந்துறு
நலத்தின் நிற் பிறந்தன நடந்த; நன்மைசால்
குலத்தினில் பிறந்திலை; கோள் இல் கீடம்போல்
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய் அரோ. 52

'பெண்மையும், பெருமையும், பிறப்பும், கற்பு எனும்
திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், சீர்மையும்,
உண்மையும், நீ எனும் ஒருத்தி தோன்றலால்,
வண்மை இல் மன்னவன் புகழின், மாய்ந்தவால். 53

… … … 

'யாது யான் இயம்புவது? உணர்வை ஈடு அறச்
சேதியாநின்றது, உன் ஒழுக்கச் செய்தியால்;
சாதியால்; அன்று எனின், தக்கது ஓர் நெறி
போதியால்' என்றனன்-புலவர் புந்தியான்.


சந்தேகம்-னு எளிமையாகச் சொல்லக்கூடாதுதான், ஏனென்றால் அதைவிடக் கொடுமையான/கேவலமான மனநிலை அவனுக்கு. 

[சீதை நிலத்தில் தோன்றியவள் என்பதை இழித்துப்பேசுகிறவனைத் தெய்வமாகக் கொண்டாடும் குலத்தவரே தாய் தந்தை யார் என்று அறியாத நிலையில் ஏதோ ஒரு தோட்டத்தில் கிடந்த குழந்தை ஆண்டாளை ஆழ்வார் என்று சிறப்பிக்கிறது. இதெல்லாம் எனக்குக் குழப்பம்.]

அந்த ராமமனுசனுக்குப் பயங்கரமான assumptions so he was uttering words totally guttering Sita. Inhuman as it is, he had no right to tell her “off,” and say “die.” சீதையைச் 'செத்துப்போ’ என்று சொல்ல அந்த ஆளுக்கு என்ன உரிமை? 'கற்புடையவள் கற்புடையவள் என்று புகழ்ந்தவன் … உன் ஒழுக்கச்செய்தியால் செத்துப்போ’ என்று சொல்கிறான் என்றால் அதை எப்படிப் புரிந்துகொள்வது? 

இங்கே நான் "poor and pathetic characterization” என்று சொல்வது கம்பனின் படைப்பைப்பற்றி, முற்றோதல் குழுவினரின் கருத்தாடல் பற்றியில்லை.



++++++++++
அமர்வு 133, பதிவு 2 முடிவில்.

ஆமா, இந்த மனுசன் தான் இருந்த இடத்தை விட்டு அகலாமல் வீடணனை அனுப்பிச் சீதையைக் கூட்டிக்கொண்டுவா, அதுவும் … “சீரோடும்” என்று சொல்வானேன்? 

சரி, உங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன் — தேவியை மக்கள் நல்ல கோலத்தில் பார்க்க விரும்புவார்கள் என்றுதான் அப்படியே உருகி உருகி மனத்தில் ஏகப்பட்ட குழப்பதோடு புழுங்கிப்புழுங்கிக் கலங்கிச் சொன்னான் என்று. ஆனாலும் தேவியை அவள் இருந்த கோலத்தில் பார்த்தால்தானே மக்களுக்கு உண்மை புலப்படும்? பிறகு மக்களுக்கு ஒரு சந்தேகமும் வர வாய்ப்பில்லை. அவர்களுக்காக என்று அவளை மீண்டும் அவன் தண்டிக்கவேண்டியதில்லை. ஆனால் கதை இப்போது இருக்கும் வகையில் ஓடியிருக்காது, ராஜாராமனுக்காகவே கதை அமைந்திருக்க முடியாது!!

நான் அப்படிச் சொல்லவில்லை. ஒலி சரியாகக் கேட்கவில்லையா? 

சரியாகக் கேட்டிருக்கவில்லையோ என்னவோ, தெரியவில்லை. ஆனாலும் குழுவினரின் குறுக்குப்பேச்சு என்னை மிகவும் அந்நியப்படுத்துகிறது. சிலநேரம் கணினியை நிறுத்திவிடுவேன். 


இதை ராஜாராமனுக்காக ராஜாராமனே வடித்துக் கொண்டான் என்று நீங்கள் நினைத்தால் உங்களைத் தடுக்க நான் யார்?


பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின்
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி
காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்
"நீ வா" என்ன நேர் இழை கலங்கி
"மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம்
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர்
புக்கேன் பிறன் உளம் புரி நூல் மார்பன்
முத் தீப் பேணும் முறை எனக்கு இல்" என
மா துயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள் 

அப்படின்னு இதைவிட மோசமா கற்பை வலியுறுத்திருக்கற காப்பியத்த உயர்த்திப் பிடிக்கறது நானா?  உயர்த்திப் பிடிக்கறவங்கதான் அதை ஏன் செய்யறாங்கன்னு சொல்லணும்.  இந்த இலக்கணப்படி பாத்தா, சீதைக்கே இது விலைபோகாது.  பிறர் நெஞ்சு புகுந்தாயிற்று.  அப்ப இது களங்கமா இல்ல களங்கமே இல்லியா?

மணிமேகலையை நான் உயர்த்திப்பிடிப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. அதைப்பற்றிப்பேச இங்கே இடமில்லை. வேறோர் இடத்தில் தேவையானல் பேசுகிறேன்.

எனக்குத் தெரிந்து சீதை காலத்திலிருந்து மணிமேகலை காலம் வரை … 'பிறர் நெஞ்சு புகுந்தது களங்கம்’ என்று சொன்ன சமுதாயத்தையே நான் சாடுகிறேன். புலவனையோ இலக்கியம் படிப்பவர்களையோ இல்லை. 

ஒரு பக்கம் … ஓர் ஆடவனுக்கு ஒன்றுக்குமேற்பட்ட பெண்ணுறவு என்று அமைத்துக்கொடுத்து, பாவப்பட்ட ஒரு குலத்தையே (== கணிகையர் குலத்தை) உருவாக்கியது. இன்னொரு பக்கம் … ‘பத்தினித்தருமம்’ என்ற நிலையை மட்டுமில்லாமல் எந்தப்பெண்ணும் ‘பிறர் நெஞ்சு புகாத’ நிலையில்தான் கற்புநிலையில் வழாதவள் என்று வரையறுத்தது.

இதெல்லாம் எனக்குக் குழப்பம் தரும் கோட்பாடுகள். விலாவாரியாக அலசமுடியும், ஆனால் இப்போது இங்கேயில்லை.



மணிமேகலை என்ன சொல்லுது?

ஆனாலும் அவள் கிடைத்துவிட்டாள் என்று தெரிந்த நொடியிலேயே வீடணனுடன் தானும் ஓடிப்போய் அவளப் பார்த்துவிட்டுப் பிறகல்லவோ மக்கள் கண்ணில் அவளைக் காட்டவேண்டும்? ‘கண்ணின் அருமணியே இத்தனைக்காலம் எப்படியிருந்தாய்’ என்று அவளை ஆர அணைத்துத் தேற்றிய பிறகல்லவோ பிறர்கண்ணில் அவளை எந்தக்கோலத்தில் காட்டலாம் என்று நினைத்திருக்கவேண்டும்? கொஞ்சம்கூடக் காதல் கனிவு இல்லாத தன் வீரத்தின்மேல் காதல்கொண்ட, ‘தான்மை’ மிகுந்தவனாகத் தோன்றுகிறான் ராமன். தனக்காகவா மக்களுக்காகவா அவள் கோலம்?

அது நீங்கள் புரிந்து கொள்வது.  மன்னிக்கவும்.  I beg to differ.  I can say with reasonable confidence that I have spent more than forty years in studying both epics and I have my conviction about my conclusion.  நான் ராமனுக்காக வாதாட வேண்டியதில்லை.  நான் அவன் வக்கீலில்லை.  நிற்க அவனுக்கு வலுவிருப்பதால் நிற்கிறான்.  ஒவ்வொரு ராமர் கோவிலும் சாட்சி.

Very poor and pathetic characterization. 

 வல் இயல் மறவர், தம் வடுவின் தீர்பவர்,
வெல்லினும் வெல்க, போர்; விளிந்து வீடுக;
இல் இயல் அறத்தை யான் இறந்து வாழ்ந்த பின்,
சொல்லிய என் பழி அவரைச் சுற்றுமோ
?

--சுந்தரகாண்டம் உருக்காட்டுப் படலத்தில் சீதை.

சொல்லிய கவிப்பழி என்னைச் சுற்றுமோ!


இல்லை, சுற்றாது!



இதைப் பொதுவில் வைத்து விவாதிப்பதால் ஒரு முன்னெச்சரிக்கைக் குறிப்பு.  அவர்கள் என்னைப் பொதுவில் வைத்துக் கேட்டதால் நான் பொதுவில் விடை சொல்லவேண்டியதாயிற்று.  இந்த விவாதம் திசைமாறியோ மாறாமலோ தொடருமானால், ஒவ்வொரு மடலையும் படித்து விடையிறுக்க எனக்கு இப்போது அவகாசமில்லை.  ஏற்கெனவே இருக்கும் மொழிபெயர்ப்பு நெருக்கடிகளோடு அன்றாட திருப்புகழ் பக்கத்தையும் இழுத்துவிட்டுக் கொண்டிருக்கிறேன்.  படிப்பதற்கும் விளங்கிக் கொண்டு விளக்குதற்கும் கடலளவுக்கும் மேலே இருக்கிறது.  ஒரு நாள் கூட நிறுத்த முடியாத, ஒவ்வொரு நாளும் எழுதியே ஆகவேண்டிய சூழல்.  எனக்குப் பிடித்திருக்கிறது. செய்கிறேன்.  விவாதங்களில் செலவிட எனக்கு நேரமில்லை என்று என் நிலையை சபைக்கு விளக்கியாக வேண்டியிருக்கிறது.  மன்னித்தருளவும்.


ஹரீ, திருப்புகழ் வேலையைப் பாருங்கள். இங்கே இந்த உரையாடல் தன்பாட்டுக்குப் போகலாம். 

எனக்கும் தலைக்குமேல் சொந்த வேலைகள்.

rajam

unread,
Sep 17, 2015, 8:32:55 PM9/17/15
to தமிழ் மன்றம், vallamai, kambaraamayanam
மீண்டும் சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன். திருப்புகழ் வேலையால் இங்கே என்னோடு வாக்காட ஹரிக்கு நேரம் இருக்காது. ஆனால் முற்றோதல் குழுவினர் யாராவது எழுதினால் மகிழ்வேன். விருப்பமில்லை என்றாலும் பரவாயில்லை.

சரி, இங்கே பார்ப்போம்.

1. 'யாது யான் இயம்புவது? உணர்வை ஈடு அறச்
சேதியாநின்றது, உன் ஒழுக்கச் செய்தியால்;
சாதியால்; அன்று எனின், தக்கது ஓர் நெறி
போதியால்' என்றனன்-புலவர் புந்தியான்.

என்ற பாட்டில் ராமன் சொன்னது: ‘உன் ஒழுக்க நடவடிக்கையால் உணர்வை ஒப்பற்ற முறையில் சிதைத்தாய். நீ செத்துப்போ. அல்லது தகுந்த ஒரு நெறியில் போ’

'ஒண்ணு நீ செத்துப்போ, இல்லே தகுந்த வேற ஒரு நெறியில் போ’ என்று சொன்னான். அந்த தகுந்த வேறு ஒரு நெறி என்ன என்பதை இங்கே உள்ளவர்கள் எனக்கு எடுத்து விளக்கினால் தெரிந்துகொள்வேன்.


2. இலக்குவனை நோக்கிச் சிதை வைக்கும்படிச் சீதை வேண்டியபோது தன் அண்ணனை நோக்குகிறான் இலக்குவன். அந்த அண்ணனும் கண்ணால் இசைவு கொடுக்கிறான். 

இந்தச் சான்றுகள் போதாவா — சிதை தீப்புகுவதுக்கு ராமன் மறைமுகமாகப் பணித்தன் என்றும் இசைந்தான் என்றும் சொல்ல?

குழப்பத்துடன்,
ராஜம்


Begin forwarded message:

Subject: Re: [தமிழ் மன்றம்] பெங்களூருவில் கம்பராமாயண முற்றோதல்
From: rajam <ra...@earthlink.net>
Date: September 17, 2015 at 11:37:18 AM PDT
Cc: kambaraamayanam <kambara...@googlegroups.com>, vallamai <vall...@googlegroups.com>, தமிழ் மன்றம் <tamil...@googlegroups.com>
To: Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
Sep 17, 2015, 10:49:29 PM9/17/15
to rajam, தமிழ் மன்றம், vallamai, kambaraamayanam
2015-09-18 6:02 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
மீண்டும் சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன். திருப்புகழ் வேலையால் இங்கே என்னோடு வாக்காட ஹரிக்கு நேரம் இருக்காது. ஆனால் முற்றோதல் குழுவினர் யாராவது எழுதினால் மகிழ்வேன். விருப்பமில்லை என்றாலும் பரவாயில்லை.


அக்கா,

பெரிய சுமையை அவர்கள் மேல் சுமத்துகிறீர்கள்.  ஜடாயுவைத் தவிர மற்றவர்கள் குழந்தைகள்.  133 வாரங்களாக அவர்களோடு பழகுகிறேன்.  சொக்கன் நல்ல கல்விமான்.  அடக்கமானவர்.  (ஒன்று சொல்கிறேன்.  பி இ படித்துவிட்டு, நல்லவேலையிலிருந்துகொண்டு, தேவையான புகழையும் இந்தச் சின்ன வயசிலேயே சம்பாதித்துவிட்டு, தமிழில் டாக்டர் பட்டம் பெறுவதற்காக பலவழிகளைத் தேடி, ஸாஃப்ட்வேர் நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருந்துகொண்டு, இத்தனைப் பணிச்சுமைகளோடு வாரந்தோறும் பல்வேறு பத்திரிகைகளில் என்னென்னவோ தொடர்களை எழுதிக்கொண்டு, கம்பராமயணத்தையும் படித்துக்கொண்டு, இந்தப் பிள்ளை போனவாரம் என்னிடம் சொல்லியது: அண்ணா நான் பி லிட் பாஸ் பண்ணிட்டேன்.  அடுத்தது I am working my ways towards my goal.  நான் செய்யாத, செய்ய விரும்பாத தேவையில்லை என்று நினைக்கிற ஒன்று.  எனக்கு அது தேவையில்லை.  என் இளவலுக்குத் தேவை.  செய்கிறார்.) எனவே அவராலும் இதற்கு விடையளிக்க முடியாது.   திருமூலநாதன் அவதானி.  என் இளைய மகனுக்கு சுமார் நான்கு வயது பெரியவர், பெரிய மகனுக்கு ஏழுவயதுக்குமேல் சின்னவர்.  IIScயில் டாக்ரேட் செய்துகொண்டு, கூடவே இந்த இலக்கியச் சுமையையும் சுமந்து கொண்டிருக்கிறார்.  மகேஷோ ஷைலஜாவோ இந்த விவாதங்களில் ஈடுபட முடியாதவர்கள்; கூடாதவர்கள்.  குருவி தலையில் பூசணிக்காய்.  நல்லூர் சேதுராமன் ராய்டர்ஸில் பொறுப்பிலிருக்கிறவர்.  இன்னும் சிலரை நான் குறிப்பிடாவிட்டாலும் அனைவரும் ஆர்வத்தால் முதன்முறையாகப் படிப்பவர்கள்.  (ஜடாயு சொக்கனைத் தவிர), இந்த அருமையான டீம் இந்த முற்றோதலின் வெற்றிப் பயணத்தை சாத்தியமாக்கியிருக்கிறது.  இவர்களை அச்சுறுத்த எனக்கு விருப்பமில்லை.  அனுமதிக்கவும் மாட்டேன்.

இது எதற்கும் விடையில்லை, எங்களால் விடை சொல்ல முடியவில்லை என்ற கருத்து சபையில் படிவதற்கு முன்னால் இதைச் சொல்லவேண்டியது என் கடமையாகிறது. 

 
சரி, இங்கே பார்ப்போம்.

1. 'யாது யான் இயம்புவது? உணர்வை ஈடு அறச்
சேதியாநின்றது, உன் ஒழுக்கச் செய்தியால்;
சாதியால்; அன்று எனின், தக்கது ஓர் நெறி
போதியால்' என்றனன்-புலவர் புந்தியான்.

என்ற பாட்டில் ராமன் சொன்னது: ‘உன் ஒழுக்க நடவடிக்கையால் உணர்வை ஒப்பற்ற முறையில் சிதைத்தாய். நீ செத்துப்போ. அல்லது தகுந்த ஒரு நெறியில் போ’

'ஒண்ணு நீ செத்துப்போ, இல்லே தகுந்த வேற ஒரு நெறியில் போ’ என்று சொன்னான். அந்த தகுந்த வேறு ஒரு நெறி என்ன என்பதை இங்கே உள்ளவர்கள் எனக்கு எடுத்து விளக்கினால் தெரிந்துகொள்வேன்.



இந்த ஒரு பாடலுக்கு எவ்வளவு நேரம் எடுத்துப் பேசியிருக்கிறேன்.  குமுறியிருக்கிறேன் என்பது உங்கள் பார்வையில்கூட படவில்லையோ என்று தோன்றுகிறது. 

 
2. இலக்குவனை நோக்கிச் சிதை வைக்கும்படிச் சீதை வேண்டியபோது தன் அண்ணனை நோக்குகிறான் இலக்குவன். அந்த அண்ணனும் கண்ணால் இசைவு கொடுக்கிறான். 

இந்தச் சான்றுகள் போதாவா — சிதை தீப்புகுவதுக்கு ராமன் மறைமுகமாகப் பணித்தன் என்றும் இசைந்தான் என்றும் சொல்ல?

அது பணியில்லை. இசைவுக்கும் உத்தரவுக்கும் உள்ள வேறுபாட்டை உங்களுக்கா நான் பேசுவது!  கம்பன் கழகத்துப் பட்டிமன்றங்களில் பேசுகிறவர்கள் உங்களிடம்தான் தயாராகிறார்களோ?

கம்பன் கழகப் பட்டிமன்றப் பேச்சாளர்கள் திரிப்பதே தொழிலாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.  யூட்யூபில் அவர்களுடைய பல வாதங்களைக் கேட்டிருக்கிறேன், கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  அவர்களைப் போன்றவர்களால்தான் (கவனிக்கவும் அவர்கள்தான் என்று சொன்னேனில்லை, அவர்களைப் போன்றவர்கள்) நல்ல, முறையான, தேவையான, நியாயமான அணுகுமுறைக்குக் குந்தகம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  இதற்கு உங்களைப் போன்ற பெரியவர்களுடைய ஆதரவும் சேர்ந்து கொள்ளத்தான் கொள்ளும் என்றால், துரியோதனனை பீஷ்மர் ஆதரிக்கவில்லையா அப்படி, துரோணர் ஆதரிக்கவில்லையா அப்படி என்று வைத்துக் கொள்கிறேன்.

தென்றலில் மகாபாரதம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  அரசின் மொத்த உரிமையும் (வழவழ!) தர்மனுக்கே உரியது, இருந்தபோதும் அவன் பாதி அரசை அடைந்தான் என்று பல செய்திகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  அங்கே வாசகர்களுடைய மறுமொழிகளைப் பார்த்திருக்கலாம்.  நானே என்னைப் பற்றிப் பேசிக்காள்ள முடியாது.

இராமனையும் தர்மனையும் பற்றி, அவர்கள் தரப்பு நியாயத்தை ஒரு நூறு நூற்றைம்பது வருஷங்களுக்குள் மழுங்கடித்துக் கொண்டிருக்கும் நிலை துரதிர்ஷ்டவசமானது. 

நோயுற்ற கண்ணை சூரியஒளி எப்படி வருத்துமோ அப்படி என்னை நீ வருத்துகிறாய்.--சமஇடத்தில் வான்மீகத்தில் இராமன்.

சூரியஒளி வருத்தினால் சூரியனுடைய தவறன்று.  நோயுற்ற கண்ணின் பிழை. 

மன்னிக்கவும்.  இதில் இறங்கக்கூடாது என்று நினைத்துக் கொள்கிறேன்.  நீங்களே கேட்கும்போது பதில் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.  லட்சணத்துக்கு மடற்குழுக்களிலும் ஃபேஸ்புக்கிலும் நூற்றுக்கணக்கில் திருப்புகழ்த் தொடருக்காக வாழ்த்துத் தெரிவித்திருப்பவர்களுக்கு நன்றிதெரிவிக்கக்கூட நேரமில்லாதவன் என்று நினைத்துக் கொள்கிறேன்.  அந்தக் குற்றஉணர்வே என்னை வருத்துகிறது.

வருகிறேன்.  கையில் மூன்று ஸ்க்ரிப்ட் (மொழிபெயர்ப்புக்கு--இதுதான் என் வருவாய், இன்றைய நிஜம், ஓய்வுபெற்றும் உட்காரமுடியாதவனாய் அமர்ந்த நிலையில் நெடுஓட்டம் ஓடித்தானாகவேண்டுமென தெய்வம் எனக்கு விதித்திருக்கிறது.) எழுதவேண்டிய திருப்புகழுக்கு எழுதியனுப்பியிருக்கும் முன்தவணைகள் நாளாக ஆக ஒவ்வொன்றாய்க் குறைந்துகொண்டிருக்கின்றன.  என்னுடைய தட்டச்சு வேகத்தால் இவ்வளவு நீளத்துக்கு எழுதுவது சாத்தியமாகிறது. 

இனியெப்போதாவது சந்திக்க நேர்ந்தால், பேச நேர்ந்தால் அப்போது இதற்கான என் தரப்புப் பார்வையைத் தருகிறேன்.  நன்றி.  வேலைபூதம் விழுங்கக் காத்திருக்கிறது. 

 
குழப்பத்துடன்,
ராஜம்

rajam

unread,
Sep 17, 2015, 11:16:33 PM9/17/15
to Hari Krishnan, தமிழ் மன்றம், vallamai, kambaraamayanam
ஆ! அங்குள்ள நிலைமை புரிகிறது. 

அமைதி, அமைதி, அமைதி!

அன்புடன்,
ராஜம்

[பி.கு: இங்கேயுள்ள வெள்ளைக்காரங்களுக்கு என்ன எண்ணம்-னா … ‘தமிழருக்கு analytical ability கிடையாது. தட்டைநிலை மொழிபெயர்ப்பைத்தான் செய்யமுடியும். socio-anthro-level ஆய்வு செய்ய அவர்களுக்கு அறிவு கிடையாது … அது இது என்று. அதை நீங்கள், தமிழ்நாட்டுக்குழுவினர், என்றைக்காவது முறியடிக்கவேண்டும்.]

rajam

unread,
Sep 17, 2015, 11:34:43 PM9/17/15
to Hari Krishnan, தமிழ் மன்றம், vallamai, kambaraamayanam
அடடா, இதை நான் கவனிக்கவில்லையே … ஶ்ரீராமா!!!

///அது பணியில்லை. இசைவுக்கும் உத்தரவுக்கும் உள்ள வேறுபாட்டை உங்களுக்கா நான் பேசுவது!  கம்பன் கழகத்துப் பட்டிமன்றங்களில் பேசுகிறவர்கள் உங்களிடம்தான் தயாராகிறார்களோ? ///

வாய்விட்டுச் சிரிக்கவைத்துவிட்டீர்கள், ஹரி!!!

ஆகா, 'அது பணியில்லை உத்தரவு' என்றால் 'ஓகோ அப்படியா' என்று நான் ஏற்றுக்கொள்ளமாட்டேனா?!!!

பட்டிமன்றம், வழக்காடுமன்றம் எல்லாம் எனக்கு ஒத்துவாராது, வரவே வாராது!

சீதைக்குச் சிதை வைக்க ‘உத்தரவு' கொடுத்த மனுசனையும் நான் மன்னிக்கமாட்டேன்; ‘இசைவு' கொடுத்த மனுசனையும் நான் மன்னிக்கமாட்டேன் என்பது தனி விசயம்.

சீப்பட்ட மனுசன்.

சரி, பிறகு பார்ப்போம். இனி இப்போதைக்கு உங்கள் திருப்புகழ் வேலைக்கும் தனிவாழ்க்கையின் கடமைகளுக்கும் இடையில் குறுக்கிடமாட்டேன் என்று உறுதி கூறி விலகிக்கொள்கிறேன்.

அன்பும் ஆசியும்,
ராஜம் அக்கா



Begin forwarded message:

Subject: Re: [தமிழ் மன்றம்] பெங்களூருவில் கம்பராமாயண முற்றோதல்
From: rajam <ra...@earthlink.net>
Date: September 17, 2015 at 8:16:28 PM PDT
Cc: தமிழ் மன்றம் <tamil...@googlegroups.com>, vallamai <vall...@googlegroups.com>, kambaraamayanam <kambara...@googlegroups.com>
To: Hari Krishnan <hari.har...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages