காரைக்குடி கம்பன் கழகத்துக்கு வந்திருந்து முற்றோதலின் ஒரு பகுதியை நடத்த முடியுமா என்று கேட்டிருக்கிறார்கள். கம்பராமாயணம் ஃபேஸ்புக் குழுமத்தில் பார்க்கவும். அவர்களுடைய கேள்வியும் என்னுடைய பதிலும் கீழே:
திரு பழனியப்பன் முத்தப்பன் அவர்கள்:
-------------------------------------------------
தாங்கள்
தங்கள் நண்பர்களுடன் காரைக்குடி மண்ணிற்கு வர இயலுமா. காரைக்குடி கம்பன்
கழகம் வழியாகத் தங்களை அழைக்க முயலுகிறோம். காரைக்குடியில் கம்பராமாயண
முற்றோதலை நிகழ்வின் ஒரு பகுதியை நடத்தலாம்.
-------------------------------------------------
நான்:
-------------------------------------------------
அழைப்புக்கு
மிக்க நன்றி. ஒரு நாள் நிகழ்ச்சியாகத்தானே? முற்றோதலின் ஒரு பகுதி
என்பதற்கு அதுதானே பொருள்? இது குழு முழுவதும்--அல்லது குழுவில்
சிலர்--தங்கள் சம்மதத்தைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறதல்லவா? இது குறித்து
அன்பர்களைக் கருத்துத் தெரிவிக்க வேண்டுகிறேன்.-------------------------------------------------
தென்றல் ஆன்லைனில் இதைப் படிக்க, உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்துப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
--
அன்புடன்,
ஹரிகி.
நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.