கம்பராமாயண முற்றோதல் அமர்வு 134 ...

6 views
Skip to first unread message

rajam

unread,
Sep 21, 2015, 8:48:57 PM9/21/15
to kambaraamayanam, Hari Krishnan
கம்பராமாயண முற்றோதல் அமர்வு 134-பதிவுகளைப் பார்த்துக் கேட்கத்தொடங்கியிருக்கிறேன்.

இங்கே இப்போது வெயிலின் வெப்பம் 88 பாகை. என் வீட்டில் ஏசி வைத்துக்கொள்ளவில்லை, நான் வாழுவது பீசியில்தான்! உங்களால் நினைத்துப்பார்க்க முடியாத அளவில், உடலில் மிகக்குறைந்த உடுப்பே போதும் என்ற நிலை. என்னை அதட்டிக்கேட்க இங்கே யாரும் இல்லை என்ற சொகுசுநிலை!!! வாழ்க்கைக்கு நன்றி!

ஆப்பில் கணினியின் தட்டச்சுப்பகுதி (அதாங்க, விசைப்பலகை) … அப்படியே சும்மா கணகண என்று சூடு; அப்பளம் சுடலாம்! பிசுபிசுப்பு (humidity காரணம்). வெளியே ஓர் இலைகூட அசையாத நிலை. வெப்பத்தில் வாடும் செடிகளுக்கு இப்போதுதான் தண்ணீர் ஊற்றிவிட்டு, கறிவேப்பிலைக்கன்றுகளைத் தடவிக்கொடுத்துப் பேசிவிட்டு வந்தேன்.


'புன்மைசால் ஒருத்தி’யைச் சுடாத அக்கினியும் ராமனும் உரையாடும் பகுதிக்கு வந்திருக்கிறேன்.

///புன்மை சால் ஒருத்தியைச் சுடாது போற்றினாய்;
அன்னது ஆர் சொல்ல? ஈது அறைதியால்' என்றான்.///

அந்த மனுசன் அப்படிக்கேட்டதுக்குப் பின்னாலெ வரும் பல பாடல்களில் விடை இருப்பதாக ஹரி சொன்னார். ராமன்கிட்ட ஹரிக்குக் கொஞ்சம் பயம்-போல! ;-)

சரி, ஹரிக்காகப் பொறுத்துப்பார்க்கிறேன்.

ஆனாலும் … இந்தத் தகிக்கிற வெயிலில் வூட்டுக்குள்ளெ சொகுசா இருந்து கணினியில் இந்தக்கதையைப் பார்த்துக்கேட்பதே எனக்குத் தாங்கலெ. எப்படித்தான் அங்கே குளுகுளு அறையில் இருந்துகொண்டு நொறுக்குத்தீனியையும் மொசுக்கிக்கொண்டு … ஒரு scientific thriller fiction சினிமா பார்க்கிறமாதிரி … சீதைத்தாயாரின் அவலத்தை அலச முடிகிறதோ?!!! நல்ல வேளை ஷைலஜா இந்த அமர்வில் இல்லாதது எனக்கு மிக்க மகிழ்ச்சி.

ஒரு சாதாரண இறைநிகழ்ச்சி, அட பிள்ளையார் சதுர்த்தியைத்தான் எடுத்துக்குவோமே … . மரியாதைக்காகவாவது ‘விரதம்’ இருப்பது வழக்கம், இல்லையா? அந்த மாதிரியான ஒரு சின்ன, குட்டியூண்டு விரதத்தை ‘அக்னிப்ரவேசம்’ காரணமாகக் கடைப்பிடிக்க நம்மவரால் முடியவில்லையா? எங்கள் சீதையின் சிதை அவலம் ஒரு சினிமாப்பொருளாகவா போச்சு? எனக்கு விளங்கவில்லை, IT ஐயன்மீரே.

திரு ஜடாயு அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும் — காமிராமுன் நடந்து பார்வையை மறைக்காமல் செல்வதற்காக.

நுங்கள் தொண்டு தொடரவும். என் தொல்லை தொடரும்.

அன்புடன்,
ராஜம்








rajam

unread,
Sep 21, 2015, 10:47:29 PM9/21/15
to kambaraamayanam, Hari Krishnan
கம்பராமாயண முற்றோதல் அமர்வு 134 2/4:

அளபெடை பற்றி ஒரு சிறு குறிப்பு.

"ஐயுறு பொருள்களை ஆசு இல் மாசு ஒரீஇக்
கையுறு நெல்லி அம் கனியின் காட்டும் என்
மெய்யுறு கட்டுரை கேட்டும், மீட்டியோ?-
பொய் உறா மாருதி உரையும் போற்றலாய்!"

என்ற பாட்டில் வரும் “ஒரீஇ” என்பது சொல்லிசை அளபெடை

அளபெடுக்காமல் வருமானால் 'ஒருவி’ என்று வரும். 

மேற்கொண்டு விளக்கம் தேவையானால் கேட்கவும்.

அன்புடன்,
ரஜம்


--
You received this message because you are subscribed to the Google Groups "kambaraamayanam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kambaraamayan...@googlegroups.com.
To post to this group, send email to kambara...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/kambaraamayanam.
For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Sep 21, 2015, 10:57:53 PM9/21/15
to rajam, kambaraamayanam
2015-09-22 6:18 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
///புன்மை சால் ஒருத்தியைச் சுடாது போற்றினாய்;
அன்னது ஆர் சொல்ல? ஈது அறைதியால்' என்றான்.///

அந்த மனுசன் அப்படிக்கேட்டதுக்குப் பின்னாலெ வரும் பல பாடல்களில் விடை இருப்பதாக ஹரி சொன்னார். ராமன்கிட்ட ஹரிக்குக் கொஞ்சம் பயம்-போல! ;-)

சரி, ஹரிக்காகப் பொறுத்துப்பார்க்கிறேன்.

பின்னால் வரும் பாடல்களில் விடையிருக்கிறது என்று சொல்லவில்லை.  ராமன் கிட்ட எனக்கு எந்த பயமும் இல்லை.  என் பயமெல்லாம் சீதைகிட்டதான்.

2001ம் வருஷம் பே ஏரியா தமிழ்ச்சங்கம் நடத்திய அமெரிக்காவின் முதல் கம்பன் விழாவுக்கு நான் எழுதிய கனலை எரித்த கற்பின் கனலிதான் விழாமலரில் மொத்த இடத்தையும் பிடித்துக் கொண்டிருந்தது. 

அதைப் படித்தால் இப்படி என்னைத் திட்ட மாட்டீர்கள்.  இது மின்பதிப்பாக வரப்போகிறது.  அதற்கு முன்னால் விழா மலரின் பிடிஎஃப் கோப்பை தனிமடலில் அனுப்பியிருக்கிறேன்.  முடிந்தால் படித்துப் பார்க்கவும்.

இதை எழுதிய சமயத்தில் நான் நங்கநல்லூர் (33 அடி ஆதிவ்யாதிஹர) ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகில் குடியிருந்தேன்.  இதை எழுதிமுடித்துவிட்டு, (பகுதி பகுதியாக நான் இங்கே எழுத எழுத அனுப்புவேன், அங்கே மணிவண்ணன் அச்சகத்தில் இருந்தபடி லேஅவுட் செய்துகொண்டிருப்பார்) வீட்டுக்கு வந்திருந்த நண்பன் வீரராகவனுடன் ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போனேன்.

அங்கே ராமர் சன்னதியில் கிட்டத்தட்ட முக்கால் ஆளுயரம் நிற்கும் ராம லக்ஷ்மண சீதாதேவியர் எதிரில் நிற்கும்போது (சத்தியமாய் சொல்கிறேன், no exaggeration) என்னால் அங்கே நிற்கமுடியவில்லை.  அப்படியொரு தகிப்பு என்னுள் பரவியது.  'என்னடா வீரராகவா, இப்படி எழுதியனுப்பிட்டேனே.. இங்க தாயாருக்கு ரொம்ப கோவம் போல இருக்கே' என்று முணுமுணுத்தேன்.  பேச முடியவில்லை.  ராமனை முகம்பார்க்க முடிகிறது, சீதையை ஏறெடுத்தும் பார்க்க முடியவில்லை.  சொன்னால் என்னை பக்தன், எமோஷனல் ஃபூல் என்று சுலபமாக இதயத்தில் சம்மட்டியடியாக சொல்லிவிடலாம்.

பெண்ணியவாதிகளுக்கு ஒருநாளும் ஆண்மனது புரியப்போவதில்லை.  இதைப்பற்றிப் பேசிப் பயனில்லை.  நானும் என் வாழ்க்கையில் மற்ற பல ஆண்களால் நினைத்துப் பார்க்கவும் முடியாத சூழல்களில், துணைக்குத் தோள் கொடுத்து உறுதியாய் நிலைநிற்க மனமொழிமெய்யால் உதவியவன்தான்.  விவரங்களைப் பொதுவில் சொல்லமுடியாது.  என் மனைவியும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் நான் இவற்றைத் தெரிவிக்கமுடியாத நிலையிலிருக்கிறேன்.  இராமாயணமும் அக்னி பிரவேசமும் படிக்கும் பாவத்துக்காக என்னை ஆணாதிக்க வெறியனாகக் கற்பனை செய்துகொள்பவர்கள் செய்துகொள்ளட்டும். 

மேற்படி சம்பவத்தில் துணைநின்றது நான்மட்டுமில்லை.  என் தந்தையும்தான்.  மாமனார் இறந்து 22 வருஷமான பின்னாலும் இன்றும் என் மனைவிக்கு அவர் மாமனார் சொந்தத் தகப்பன்தான். 



ஆனாலும் … இந்தத் தகிக்கிற வெயிலில் வூட்டுக்குள்ளெ சொகுசா இருந்து கணினியில் இந்தக்கதையைப் பார்த்துக்கேட்பதே எனக்குத் தாங்கலெ. எப்படித்தான் அங்கே குளுகுளு அறையில் இருந்துகொண்டு நொறுக்குத்தீனியையும் மொசுக்கிக்கொண்டு … ஒரு scientific thriller fiction சினிமா பார்க்கிறமாதிரி … சீதைத்தாயாரின் அவலத்தை அலச முடிகிறதோ?!!! நல்ல வேளை ஷைலஜா இந்த அமர்வில் இல்லாதது எனக்கு மிக்க மகிழ்ச்சி.


நீங்கள் இப்படியெல்லாம் மனம்வருந்தப் பேசுகிறீர்கள் என்றுதான் நான் பொட்டுத் தண்ணீர்கூட குடிக்காமல் சுமார் நான்குமணி நேரம் பேசியிருக்கறேன்.   நான் எதை மொசுக்கினேன், அல்லது எவ்வளவு முறை தண்ணீர் குடித்தேன் என்று காட்ட முடியுமா?  பாரதி அமர்வுக்குப் பிறகு ஜடாயு கொடுத்த ஒரு கப் ப்ளாக் டீ குடித்தேன்.  அது பதிவாகவில்லை.

காலை 9,30க்கு அமர்வு என்றால், நான் 8,30க்குக் கிளம்புகிறேன்.  என்னை அழைத்துக் கொண்டு போக வரும் மகேஷ் இன்னமும் ஒருமணிநேரம் முன்னால் கிளம்பவேண்டும்.  காலை அமர்வுகள் என்றால் அவர் பாதிநாள் சாப்பிட்டுவிட்டு வருவதில்லை.  எப்போதும் அவருக்காக தயாராக வைத்திருக்கும் சிற்றுண்டியையும் அவரால் அன்று உண்ணமுடியவில்லை.  தாமதமாகிவிட்டது என்று பறக்க வேண்டியிருந்தது.  திருமூலநாதன் எங்கோ வெளியூருக்குப் போய்விட்டு இரவுமுழுக்கப் பயணம் செய்து, காலையில் பெங்களூருவுக்கு வந்திறங்கி, பஸ்ஸிலிருந்து நேரடியாக அமர்வுக்கு வந்துவிட்டார்.  யாரும் எதையும் மொக்கவில்லை.  அங்கே இருந்தது அவல்.  அந்தக் காலைப் பசிக்கு அது எந்த மூலை?  அதுவும் இந்தச் சின்ன வயதுக்காரர்களுக்கு?

பழைய எம்ஜியார் படம் ஒன்று.  படகோட்டி.  அதில் ஒரு பாடலுண்டு. 'தரைமேல் பிறக்கவைத்தான் எங்களைத் தண்ணீரில் மிதக்கவிட்டான்' அதில் ஒருவரி--

ஒருஜாண்வயிறை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்.

 
ஒரு சாதாரண இறைநிகழ்ச்சி, அட பிள்ளையார் சதுர்த்தியைத்தான் எடுத்துக்குவோமே … . மரியாதைக்காகவாவது ‘விரதம்’ இருப்பது வழக்கம், இல்லையா? அந்த மாதிரியான ஒரு சின்ன, குட்டியூண்டு விரதத்தை ‘அக்னிப்ரவேசம்’ காரணமாகக் கடைப்பிடிக்க நம்மவரால் முடியவில்லையா? எங்கள் சீதையின் சிதை அவலம் ஒரு சினிமாப்பொருளாகவா போச்சு? எனக்கு விளங்கவில்லை, IT ஐயன்மீரே.

எங்களுடைய அவதி இப்போது ஊர் சிரிக்கிறதே, போதாதா!  அவர்களால் கேமரா இருக்கிறது என்று நடிக்க முடியவில்லை.  மற்றபடி எங்களுக்கும் உணர்வுகள் உண்டு.  ஆண்களாக இருக்கின்ற பாவத்துக்காக இப்படியெல்லாம் கேவலப்பட வேண்டும் என்று விதித்திருக்கிறது.  பரவாயில்லை.  இந்தத் தோள்கள் எத்தனையோ அவமானங்களையும் வலிகளையும் ஏமாற்றங்களையும் சுமந்து பழகியவை.  அவற்றுக்கல்லாம் முன்னர் இது ஒன்றும்  பொருட்டில்லை.

எங்களுக்கும் உணர்வுகளுண்டு, நாகரிகம் உண்டு, சீதையின்மேல் அளவுகடந்த ப்ரேமையுடையவன் நான்.  இதை விளம்பரப்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியமில்லை.  சென்னைஆன்லைனுக்காக சீதைப் பாத்திரப் படைப்பை எழுதுகையில், இதே காட்சியை விவரிக்கும் கட்டத்தில் எழுதுவதற்கு முதல்நாள், இங்கே மஹாலக்ஷ்மி லேஅவுட்டில் உள்ள மஹாலக்ஷ்மி ஆலயத்தில் அந்தப் பிரதிமையின் முன்னால் ஒருமணிநேரம் தியானத்தில் இருந்து, 'அம்மா எனக்கு வழிகாட்டு' என்று வேண்டிக்கொண்டபிறகுதான் எழுதத் தொடங்கினேன்.  இது உண்மை.  சொன்னால், நான் பிற்போக்குவாதியாகிவிடுவேன்.

பரவாயில்லை.  இதற்காகவெல்லாம் நான் நிகழ்வுகளைப் பதிந்து வலையேற்றுவதை நிறுத்தப் போவதில்லை.

திரு ஜடாயு அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும் — காமிராமுன் நடந்து பார்வையை மறைக்காமல் செல்வதற்காக.

அப்படியே நிகழ்ச்சி முடியும் தருவாயில், உங்கள் ஆலோசனைப்படி, மேசைக்குப் பின்பக்கமாக சுற்றிக்கொண்டு போன மகேஷ் ஒயரில் தடுக்கி விழுவதையும் கண்டுகளிக்கவும்.  சீதையின் சிதையைப் படித்தபடி மொசுக்கியதற்காக தண்டனை. 



--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Sep 21, 2015, 11:07:49 PM9/21/15
to rajam, kambaraamayanam

2015-09-22 8:17 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
என்ற பாட்டில் வரும் “ஒரீஇ” என்பது சொல்லிசை அளபெடை

அளபெடுக்காமல் வருமானால் 'ஒருவி’ என்று வரும். 

மேற்கொண்டு விளக்கம் தேவையானால் கேட்கவும்.

Letsgrammar போன்ற தளங்களைக் கொண்டு நீங்கள் நிறைய உதவிசெய்திருக்கிறீர்கள். 

இரண்டு திருக்குறட் பாக்களைச் சொல்லி இன்னிசை அளபெடையையும் இசைநிரை அளபெடையையும் விளக்கினேனே.

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

மேற்படி இருப்பதுதான் சொல்லிசை அளபெடை?  இதைத்தானே இசைநிரையளபெடை என்றேன்? 

துப்பாய தூஉம் மழையையும் அதே அதிகாரத்தின் இறுதியில், கெடுப்பதூஉம் எடுப்பதூஉம் என்பனவற்றையும் எடுத்துச் சொன்னேனே.

தவறிருந்தால் திருத்திக் கொள்கிறேன்.  இலக்கண விளக்கம் தேவைப்படும் போது அவசியம் உங்களிடம் வருவேன்.  இதற்கு முன்னால் ஒருமுறை அப்படிக் கேட்கவும் கேட்டிருக்கிறேன்.  அல்லவா?

Hari Krishnan

unread,
Sep 21, 2015, 11:36:34 PM9/21/15
to rajam, kambaraamayanam

2015-09-22 8:37 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
இரண்டு திருக்குறட் பாக்களைச் சொல்லி இன்னிசை அளபெடையையும் இசைநிரை அளபெடையையும் விளக்கினேனே.

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

மேற்படி இருப்பதுதான் சொல்லிசை அளபெடை?  இதைத்தானே இசைநிரையளபெடை என்றேன்? 


மேற்படியிருப்பதுதானே சொல்லிசையளபெடை, இதைத்தானே இன்னிசையளபெடையென்றேன்னென்றிருந்திருக்கவேண்டும்.

கெடுப்பதூஉம், எடுப்பதூஉம் ஆகியவற்றில் பயில்வது. 

அளவி என்று எழுதியிருந்தாலும் வெண்டளைபிறழாது என்றாலும் அளைஇ என்று அளபெடுத்திருப்பதால் சொல்லிசை, இன்னிசை அளபெடை. 

கல்லூரியில் படித்த காலத்தில் இவற்றையெல்லாம் எனக்கு விளக்கியவர் யாருமில்லை.  எனக்கு இலக்கணமெடுத்தவர்கள் யந்திரகதியில் நடத்தினார்கள்.  இவையனைத்தும் நானே படித்து நானே புரிந்துகொண்டவை.  பிழையிருக்க வாய்ப்புண்டு.  நீங்கள் தாரளமாகத் திருத்தலாம்.

Jataayu

unread,
Sep 22, 2015, 2:42:00 AM9/22/15
to rajam, kambaraamayanam, Hari Krishnan
கடந்த சில வகுப்புகளாகத் தான்  அமர்வின் போதே நொறுக்குத் தீனி கொறித்தல் மிக அதிகமாகியிருக்கிறது.  அதற்கு  முன்பு வகுப்பு முடியும் வரை   தீனிப் பெட்டகங்கள் திறக்கப் படாது. அதிகபட்சமாக  காபி, தேநீர், தண்ணீர் அருந்துதல் மட்டுமே இருக்கும். வகுப்பு முடிந்து  காமிரா அணைந்த பிறகு தான் தீனி தொடங்கும். 

அதை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.  வீடியோக்களைப் பார்த்தால்  தான்  இப்படி தின்றூ கொண்டே வாசிப்பது எவ்வளவு அருவருப்பான காட்சியாக இருக்கிறது என்பது புரியும்.   குறிப்பாக  காமிராவில் எல்லாருக்கும் முன்பாகத் தெரிபவர்  சாப்பிடும் காட்சியின் விரசம்  இந்த வீடியோக்களின் தரத்தையே குறைத்து விடுகிறது. 

இனி இந்த நடைமுறையைத் தவிர்ப்போம். நமது பழைய நன்னடத்தைக்குத் திரும்புவோம். 



2015-09-22 6:18 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:

--
You received this message because you are subscribed to the Google Groups "kambaraamayanam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kambaraamayan...@googlegroups.com.
To post to this group, send email to kambara...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/kambaraamayanam.
For more options, visit https://groups.google.com/d/optout.

rajam

unread,
Sep 22, 2015, 1:18:26 PM9/22/15
to Hari Krishnan, kambaraamayanam
அன்புள்ள குழுவினருக்கு, வணக்கம்.

ஹரி சொன்னது:

///அப்படியே நிகழ்ச்சி முடியும் தருவாயில், உங்கள் ஆலோசனைப்படி, மேசைக்குப் பின்பக்கமாக சுற்றிக்கொண்டு போன மகேஷ் ஒயரில் தடுக்கி விழுவதையும் கண்டுகளிக்கவும்.  சீதையின் சிதையைப் படித்தபடி மொசுக்கியதற்காக தண்டனை.  ///

இன்னும் எல்லாப்பதிவுகளையும் பார்க்கவில்லை. பார்க்கும்போது மகேஷ் தடுக்கி விழுவதைக் கண்டு களிக்கமாட்டேன். இது ரொம்ப serious ஆன விஷயம். விளையாட்டில்லை. நிஜம்மா சொல்றேன். Building Code முறையைப் பின்பற்றப்படாமல் கட்டிடம் கட்டியவர்களின்மேலும் புழங்குவதற்கு ஏற்றபடி அறையைச் சரியாக அமைக்காதவர்களின்மேலும் எனக்கு அடங்காத சினம் பொங்கும். 

இரண்டாவது பதிவின் தொடக்கத்திலோ என்னவோ திரு ஜடாயுவின் குழந்தைகள் வந்த மாதிரித் தெரிந்தது. வெளியே இரண்டு திறந்த சன்னல்கள் (?) எந்தவகை அடைப்பும் இல்லாமல் இருப்பதாகவும் அசந்துமறந்தால் அப்படியே வெளியே போய்விழ வாய்ப்பிருக்குமென்றும் தெரிந்தது. மிகவும் பயந்துபோனேன். இப்படியெல்லாமா கட்டிடம் கட்டுவார்கள்? குழந்தைகளுக்கு என்ன தெரியும்? பிறர் சொன்ன காப்புச்செய்திகளை விளையாட்டு மும்முரத்தில் மறந்துபோவார்கள். அவர்களை அந்தப் பக்கம் போகவைத்ததே பெருந்தவறு.

இந்த ஊரில் என்றால் மகேஷ் தடுக்கிவிழுந்ததுக்கு அலுவலகப் பொறுப்பாளரின்மேல் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கும்.

சரி, இப்போது நேரமில்லை. பிற்பகலில்/மாலையில் வந்து மற்ற கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.

By the way, நான் ஹரியைத் திட்டவில்லை, இதுகூடவா புரியவில்லை? எல்லாருக்கும் புரியும்படி எழுதத்தெரியாத என் இயலாமையை நினைத்து நினைத்துத் தலையில் அடித்துக்கொள்கிறேன். அந்த ராஜாராமன் தன் இன்னுயிர்த்துணைவியைத்தான் கீழ்ப்படுத்தினான், அவனுலகப் ப்ரஜையாகிய எனக்காவது உதவவேண்டும். 

அன்புடன்,
ராஜம்



Hari Krishnan

unread,
Sep 22, 2015, 11:24:03 PM9/22/15
to rajam, kambaraamayanam
2015-09-22 22:48 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
ஏற்றபடி அறையைச் சரியாக அமைக்காதவர்களின்மேலும் எனக்கு அடங்காத சினம் பொங்கும். 


அது மிகப் புதிய கட்டிடம்.  எல்லாவற்றையும் தயார்நிலையில் வைத்துவிட்டு அவர்கள் உள்ளே வரவில்லை.  வேலை நடந்துகொண்டிருக்கும்போதே வந்திருக்கிறார்கள்.  ஏன் அவ்வாறு செய்தார்கள் என்று சொக்கனுடைய நிர்வாகம்தான் சொல்லவேண்டும்.

அதனால்தான் நாங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது ட்ரில் ஓடும் சத்தம் கேட்கும்.  இன்னபிற சத்தங்கள் கேட்டபடி இருக்கும்.  மற்றபடி அது நூறு சதம் இல்லாவிட்டாலும் 98 சதம் ப்ரொஃபஷனலாகக் கட்டியுள்ள கட்டிடம்தான்.  வேலை நடந்தவண்ணம் இருக்கிறது.  மிகவும் பாதுகாப்பான இடம் என்பதால்தான் மூன்று, நான்கு மணி நேரத்துக்குக் குழந்தைகளை வெளியே விளையாட விட்டுவிட்டு, உள்ளே நாங்கள் உட்கார்ந்து படிக்க முடிகிறது.   குழந்தைகள் வெளியே விளையாட பாதுகாப்பு இல்லாவிட்டால் அப்படி விட்டுவிட்டு வருவோமா?
 
இரண்டாவது பதிவின் தொடக்கத்திலோ என்னவோ திரு ஜடாயுவின் குழந்தைகள் வந்த மாதிரித் தெரிந்தது. வெளியே இரண்டு திறந்த சன்னல்கள் (?) எந்தவகை அடைப்பும் இல்லாமல் இருப்பதாகவும் அசந்துமறந்தால் அப்படியே வெளியே போய்விழ வாய்ப்பிருக்குமென்றும் தெரிந்தது.

ஜடாயுவின் குழந்தைகள் மட்டுமல்ல; சொக்கனின் இரண்டு மகள்களும் அடிக்கடி வருவார்கள்.  வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள மனைவியே மற்ற யாருமோ இல்லாவிட்டால் அவர்களால் என்ன செய்யமுடியும்?  இங்கே அழைத்துவருகிறார்கள்.  நீங்கள் சொக்கன் அவருடைய மகள்களுக்குக் கற்பிக்கும் அழகைப் பார்க்க, கேட்க வேண்டும்.  (ஆம்பளைக்கும் அன்பும் பொறுப்பும் இருக்குதுங்கோ!)

இந்த அமர்வுகளால் எத்தனை சிரமங்கள்!  மகேஷின் மனைவி பிஎச்டி (என்விரான்மென்டல் ஸயன்ஸ்) செய்கிறார்.  கல்லூரியில் கற்பிக்கிறார்.  அவருடைய ஆராய்ச்சிக்காக, தெருவில் நிற்கும் ட்ராஃபிக் கான்ஸ்டபிள்களை பேட்டி எடுக்கும் வேலைக்கு மகேஷ் அடிக்கடி போக வேண்டிவருகிறது.  அதானால்தான் பல சமயங்களில் ஞாயிற்றுக் கிழமைகளுக்கு மாறுகிறோம்.  சில சமயங்களில் காலை 6 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால், அமர்வுகளுக்கு வரும்வரையில் வெளியே சுற்றிக் கொண்டிருந்துவிட்டு, அவசர அவசரமாக என்னை வந்து அழைத்துக் கொண்டு, அமர்வுக்கு வந்து, படித்து முடித்து, அதற்குப் பிறகு இரண்டு மூன்று மணிநேரம் பெங்களூருவின் ட்ராஃபிக்கில் ஊர்ந்தபடி வண்டியோட்டி, மகேஷ் படும் சிரமங்களை நேரில் பார்க்க வேண்டும்.  காஃபி டீ குடிக்க மாட்டார்.  கிடைத்த நேரத்தில்தான் சாப்பாடு.  சிலசமயம் காலை உணவு சாப்பிட்டிருக்க மாட்டார்.  மதியம் எங்கே கிடைக்கிறதோ அங்கே.  என்னை வீட்டில் விட்டுவிட்டு இரவு பத்து மணிக்கு வீடு திரும்பினால் அதற்கு மேல் சாப்பாடு.  இதனால்தான் அவர் அவ்வப்போது அமர்வுகளின் போது கிடைத்ததை உண்கிறார். 

அவருடைய மனைவி ஊருக்குப் போய்விட்டால், ஆராய்ச்சி களப்பணிகளுக்காக வெளியே செல்ல நேர்ந்தால், 5 வயதும் 8 வயதுக்குள்ளுமாக இரண்டு மகன்களைப் பார்த்துக் கொள்ள ஆள் இருப்பார்கள், இருக்க மாட்டார்கள்.   எல்லாவற்றுக்கும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். 

இத்தனை அவதியும் எதற்கு?  இந்தக் கம்பனைக் கற்காவிட்டால் யாருக்கு என்ன நஷ்டம்?  இத்தனை காரியங்களையும் செய்துகொண்டு, வீட்டுப் பொறுப்புகளையும் பார்த்துக் கொண்டு, வேலைக்கும் போனபடி, கூடுதலாக இதையும் செய்கிறார்கள்.  எத்தனைத் தமிழாசிரியர்கள் இப்படிக் கற்கிறார்கள்?  'நாங்க யாருமே கம்பனையோ மத்த யாரையுமே முழுக்க படிச்சதில்லப்பா.  சிலபஸ்ல என்ன இருக்கோ, வருஷா வருஷம் எவ்வளவு மாறுதோ அவ்வளவுதான் படிக்கிறோம்.  என்னமோ எல்லாத்தையும் படிச்சிட்டோம்னு தப்பா கிப்பா நினைச்சுரப் போற.. அப்படி சகலத்தையும் படிக்கிறவர் வேணுகோபால் ஒருத்தர்தான்' என்று 1971-72ல் எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தவர்களில் ஒருவரான திரு கே என் பால சுப்பிரமணியம் எம் ஏ எம் லிட் பி எச்டி சொல்லியிருக்கிறார்.  ஒருமுறை பர்க்லி என்று குறிப்பிட்டிருந்தது இவரைத்தான்.

இப்படி தமிழாசிரியர்களே கற்காத இந்தக் கம்பனைக் இவ்வளவு சிரமப்பட்டு இவர்கள் ஏன் கற்றுக் கொள்ள வேண்டும்?  காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை இன்ஸ்டிட்யூட்டிலும் அலுவலகத்திலும் உழைத்த பின்னால், அதற்கும் மேல் நேரம் ஒதுக்கிக் கொண்டு நான் இத்தனையையும் படித்திருக்கிறேன்.  வாரம் ஆறுநாள் வேலை.  ஞாயிறுகளில் இன்ஸ்டிட்யூடில் ஸ்பெஷல் க்ளாஸ்.  இத்தனை அவதிகளுக்கிடையில்தான் நான் படித்திருக்கிறேன். 

சென்னையில் 104, 106, 108 டிகிரி வெய்யில் அடிக்கும் சமயங்களில் எனக்குக் கிடைத்ததெல்லாம் வெறும் மின்சார ஃபேன்தான்.    இங்கே ஆடையைக் குறைத்துக் கொள்ள முடியாது.  அதிகபட்சம் பனியனோடு இருக்கலாம்.  அவ்வளவுதான்.  இதோ இன்று பெங்களூரு காலை கொதிக்கத் தொடங்கியிருக்கிறது.  பழைய பெங்களூரு இல்லையிது. 

மற்றபடி அங்கே ஆபத்துக்கு எதுவுமில்லை. நாங்கள் படிக்கும் அறைக்கு வெளியே சுமார் 7000, 8000 சதுர அடி ஹாலும், க்யூபிகிள்ஸும் இன்னும் பல வசதிகளும் உள்ளன.  இப்படி நான்கு வெவ்வேறு பகுதிகள் அந்தத் தளத்தில் உள்ளன.  ஒவ்வொரு தளமும் சுமார் பதினைந்தாயிரம் சதுர அடி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.  எனக்குத் தெரியாது.  பார்வையின் அளவில் சொல்கிறேன்.  குழந்தைகள் பாதுகாப்பாகத்தான் இருப்பார்கள். 

நீங்கள் கேமராவில் பார்ப்பது துளியளவு இடம்.  அங்கே மிகப்பெரிய இடமிருக்கிறது.  ஐடி கார்ட் இல்லாமல் உள்ளே நுழையே முடியாது.  கார் பார்க் செய்ய வேண்டுமானால் அதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் உண்டு.  பலவிதமான செக்யூரிடி செக்ஸ் உண்டு.  சாதாரண நாட்களிலேயே உள்ளே சகஜமாக வந்து போகமுடியாத செக்யூரிடி அமைப்புகளைத் தாண்டி, விடுமுறை நாட்களில் நாங்கள் அங்கே அமர முடிகிறது என்றால் அது சொக்கனுடைய பெயர் செய்யும் மாயம். 

நீங்கள் அக்கறையோடு சொல்வது புரிகிறது.  அங்கே கவலைப்பட எதுவுமில்லை என்பதைச் சொல்ல நினைத்து என்னென்னவோ சொல்லியாயிற்று.  உங்கள் நேரத்துக்கு நன்றி.

nchokkan

unread,
Sep 23, 2015, 1:14:46 AM9/23/15
to kambaraamayanam, ra...@earthlink.net
Just to clarify, நான் சொன்ன இரு திறப்புகளும் தீ விபத்து ஏதும் நேர்ந்தால் தீயணைப்புப் படையினர் உள்ளே நுழைவதற்கான வாயில்கள், அவை மூடப்பட்டிருக்கும், தேவையானபோது திறந்துகொள்ளலாம், எந்த ஒரு கட்டடத்திலும் இவற்றை அமைக்கவேண்டும் என்பது சட்டம்.

குழந்தைகள் விளையாடுகிறார்கள் எனும்போது, இயல்பாக அதைத் திறந்துபார்க்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் எச்சரித்தேன்.

மகேஷ் தடுக்கி விழுந்ததுபற்றி: இந்தியாவில் பெரும்பாலான சிறு/ நடுத்தர ஐடி நிறுவன அலுவலகங்களின் Meeting Rooms மாலை நேரங்களில்/ வார இறுதிகளில் இப்படிதான் இருக்கும், பொருள்கள் அங்குமிங்கும் கிடக்கும், மறுநாள் (அல்லது திங்களன்று) காலை அவை சரி செய்யப்பட்டு அலுவலகம் தொடங்கும், இப்படிச் சிதறிக்கிடக்கக் காரணம், அந்த அறைகளில் கூட்டங்களை நடத்துகிறவர்கள்தான் (எங்களைப்போல!) :)

பலர் அறையிலிருந்து வெளியேறும்போது விளக்கைக்கூட அணைத்துவிட்டுச் செல்லமாட்டார்கள், நானே பலமுறை குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன், ‘That's not my job' என்று பதில் வரும், இதையெல்லாம் கவனித்தால் வேலையில் கவனம் போய்விடுமாம் :)

Mahesh Jayaraman

unread,
Sep 23, 2015, 1:41:28 AM9/23/15
to nchokkan, kambaraamayanam, rajam ramamurti
நான் தடுக்கி விழுந்தது இவ்வளவு பெரிய நிகழ்வாக பேசப்படும் என்று நினைத்து பார்க்கவே இல்லை.  நடிகை படபிடிப்பில் கீழே விழுந்தால் தினத்தந்தியில் எப்படி பரபரப்பாக பேசப்படுமோ அப்படி நான் கீழேவிழுந்ததும் பேசப்படுகிறது... thoroughly enjoying it. :-) :-) :-)

--

Thirumulanathan D

unread,
Sep 23, 2015, 2:06:07 AM9/23/15
to Mahesh Jayaraman, nchokkan, kambaraamayanam, rajam ramamurti
மகேஷ்,

கம்பராமாயண வகுப்பைத் தாங்கிநிற்கும் தூணாக, ஹரியண்ணாவைத் தாங்கும் சிறிய திருவடியாக விளங்கும் தாங்கள் "தடுக்கி விழுவது" பதற்றத்தை உண்டுபண்ணுவதில் என்ன வியப்பு? ஆனைக்கு அடி சறுக்கினால் பரவாயில்லை, அனுமனுக்கு அடி சறுக்கலாமா?

rajam

unread,
Sep 23, 2015, 12:24:42 PM9/23/15
to nchokkan, kambaraamayanam
என் பங்குக்கு நானும் தன்னிலை விளக்கம் சொல்லாவிட்டால் என் தலைக்கு நோவு.

என் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகள் என்னை ஒரு paranoid ஆக ஆக்கிவிட்டிருக்கின்றன.

1. பாத்திமாக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் (1958~59 என்று நினைக்கிறேன்). புது வளாகம் அமைந்துகொண்டிருந்த காலம். இரண்டாவது தளம் எழும்பிக்கொண்டிருந்த காலம். சரியான வகையில் சாரம் அமைக்கவில்லையோ என்னவோ, திடீரென்று ஒரு தொழிலாளி தலைகுப்புறக் கீழே விழுந்தது எங்கள் வகுப்பறைச்சன்னல்வழியே தெரிந்தது. பிறகென்ன? கட்டிடம் முடியுமுன்னே தனக்கொரு காவு வாங்கிக்கொண்டது. வகுப்புகள் நின்று மீதிநாள் முழுவதும் விடுமுறை. தொழிலாளியின் குடும்பம் நடுத்தெருவில்.

2. கல்லூரியில் முத்தமிழ் விழா. ஏகப்பட்ட ரோஜா மாலைகள். ஒரு சக ஆசிரியை பூக்களை எடுத்துப்போய் மறுநாள் குல்கந்து செய்துகொண்டுவந்தார்கள். அடுத்த நாள் அவர் வரவில்லை, அவருடைய கணவர் இறந்த செய்தி வந்தது. வீட்டில் electric wiring சரியாக இல்லாமல் எதையோ செய்யப்போய் மின்னதிர்ச்சிக்குப் பலி.

3. கிரிக்கெட் பந்தாட்டம் பார்க்கப்போய்ப் பணக்கார இருக்கையில் முன்வரிசையில் உட்கார்ந்த என் நாத்தனார் ஒருவரின் குழந்தைக்குக் கண்ணில் பந்து அடித்து … பிறகென்ன … கண்ணாடிக்கண் அமைந்தது.

4. என் கணவருக்கு நடந்தது (எங்களுக்குத் திருமணம் ஆவதற்குமுன் நடந்ததாம், பிறகு எனக்குச் சொல்லப்பட்டது). தொழிலகத்தில்  conveyor belt முதன்முதலாகச் செய்யப்பட்டது. இங்கிலாந்துக்கு அனுப்புவதற்காக ஒரு sample துண்டைக் கத்தரிக்கோலால் வெட்ட முயன்றபோது கத்தரியுன் போக்குத் தடுமாறி அவருடைய தலையில் குத்தியது. நல்லவேளை கண்கள் தப்பின. அதன்பிறகு fork lift truck —ஓ வேறு ஏதோ அவரைத் தாடையில் தூக்கியெறிந்து ஒரு பல் சிதைந்தது.

5. போன ஆண்டு, என் மகன் குடியிருக்கும் அடுக்குமாடிக்கட்டிடத்தில் மொட்டைமாடிக்குக் கீழடுத்த மாடியிலிருந்து ஒருவர் கீழே விழுந்ததை என் மகனும் அடுத்த வீட்டுக்காரர்களும் பார்த்திருக்கிறார்கள். நானும் என் மகனிடம் 'கவனமாக இரு, பால்கனியில் கம்பிக்கிராதிமேல் சாயாதே’ என்றும் காரோட்டிப்போகும்போது பத்திரமாகப் போ, வீட்டுக்குப் போனவுடன் செய்தியனுப்பு என்றும் சொல்லித் துளைத்துக்கொண்டேயிருப்பேன். 30 மைலுக்குள்ளாகத்தான் — அதற்குள் அவன் வீடுபோய்ச் சேரும்வரை இங்கே ஒருவகை நிம்மதியின்மைதான்.

இன்னும் பல நடந்திருக்கின்றன.

இவை போன்ற வாழ்வின் அனுபவங்கள் என் மனத்தில் ஒருவகையான அபாய அறிவிப்பைப் பதித்துவிட்டன, பதித்துக்கொண்டேயிருக்கின்றன. அதனால்தான் எனக்கு மிகவும் பயம். Safety and security concerns ஜாஸ்தி.

இங்கே ஒரு துருக்கித்தோழி அவருடைய குழந்தையுடன் வருவார். அவர் கவனம் பூராவும் பேச்சில் இருக்கும் என் கவனம் பூராவும் குழந்தையின்மேல் இருக்கும். சில நாட்கள் சீக்கிரம் கிளம்பிவிடுவார், பேசமுடியவில்லை என்பதற்காக. 

[நான் பிள்ளைத்தாய்ச்சியாக இருந்தபோது மதுரையில் புதுவீடு கட்டிக்கொண்டிருந்தோம். அந்தக் குழந்தை பிறந்து வளரும்போது வீட்டில் எந்தவகைத் தடையும் இருக்கக்கூடாது என்று யோசித்து யோசித்துச் சொல்லி மேஸ்திரிகளைத் தொல்லைப்படுதிய கதையை ஹரிக்குத் தனிமடலில் எழுதுகிறேன். இங்கே எல்லாரும் எப்படி என்னை இன்னும் திட்டலாம் என்று திட்டமிட வாய்ப்புத்தரமாட்டேன்!!! ;-) ]

கவலைப்படாதீர்கள். கடந்த இருநாட்களில் இங்கே நடந்தது எங்கள் சீதையின், சிதையிறங்கிய சீதையின், அவலத்தின் ஒரு இம்மி. நாடகம் நடத்திக்காட்டியவளும் அவளே. பாடல்களைப் படித்தபோது யாராவது ஒருவர் வாய்விட்டு ஒரு வார்த்தை “சீதை ஐயோ பாவம்” என்று புலம்பியிருந்தால் … அவள் அப்படிச் செய்திருக்கமாட்டாள். இதெல்லாம் தெய்வத்தின் குரல்.

வருத்தத்துடன்,
ராஜம்

rajam

unread,
Sep 23, 2015, 3:51:47 PM9/23/15
to Hari Krishnan, kambaraamayanam
///
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

மேற்படி இருப்பதுதான் சொல்லிசை அளபெடை?  இதைத்தானே இசைநிரையளபெடை என்றேன்? 


மேற்படியிருப்பதுதானே சொல்லிசையளபெடை, இதைத்தானே இன்னிசையளபெடையென்றேன்னென்றிருந்திருக்கவேண்டும். ///


இல்லை. சொல்லிசை அளபெடையும் இன்னிசையளபெடையும் வெவ்வேறு

சொல்லிசை அளபெடை, இன்னிசை அளபெடை, இசைநிறை அளபெடை  (அல்லது செய்யுளிசை அளபெடை) என்று மூன்று வகை அளபெடைகளையும் தனித்தனியாகப் புரிந்துகொள்ளவேண்டும். மின்தமிழ் போன்ற குழுமங்களில் கேட்டுப்பார்க்கவும் … ஆகா ஓகோ என்று குதி போட்டு வந்து கூவுவார்கள்.

இப்போது இங்கே இருக்கும் சூழலில் என் சொல் எடுபடுமா என்று தெரியாத நிலையில் என் சொற்களை வீணாக்க விரும்பவில்லை. 

“பகுதி, விகுதி, புகுதி” ஆகிய சொற்களைப் பற்றி எழுதியிருந்தேன், அதுக்கெல்லாம் மறுமொழியே இல்லை. 

மாறாக … நான் மக்களின் safety பற்றிச் சொன்னது மட்டும் தீயாகப்பற்றி அனலாகக் கொளுத்துகிறது. எல்லாம் சிதையிறங்கிய என் சீதையின் சினமே.

தேவையானால் வாய்விட்டுக் கேட்கவும், அளபெடை பற்றி விளக்குவேன் முடிந்தபோது.

அன்புடன்,
ராஜம்




Hari Krishnan

unread,
Sep 23, 2015, 9:58:36 PM9/23/15
to rajam, kambaraamayanam
2015-09-24 1:21 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
இப்போது இங்கே இருக்கும் சூழலில் என் சொல் எடுபடுமா என்று தெரியாத நிலையில் என் சொற்களை வீணாக்க விரும்பவில்லை. 

இங்கே அப்படி என்ன தவறான சூழல், உங்கள் பேச்சு எடுபடாத சூழல் நிலவுகிறது என்று எனக்குத் தெரியவில்லை.
பேசுவது வீண் என்று நினைத்திருந்தால், காலை எழுந்து வந்ததும் கடமையாக இந்தக் கடிதங்களுக்குப் பதிலெழுதிக் கொண்டிருக்க மாட்டேன்.

 
“பகுதி, விகுதி, புகுதி” ஆகிய சொற்களைப் பற்றி எழுதியிருந்தேன், அதுக்கெல்லாம் மறுமொழியே இல்லை. 

நீங்கள் தெரிந்து கொண்டதாகச் சொல்லியிருந்தீர்கள்.  அதைப் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.  எத்தனையோ தெரியும், ஒருசில தெரியாமல் இருந்திருக்கலாம்.  என்ன இப்படிச் சொல்கிறார்களே என்று தோன்றியது.  நான் சொன்ன விளக்கம் எதுவும் பெரிதாக இருந்திருக்க வாய்ப்பில்லை.  இதைப் பற்றி ஜடாயுவால் மேலும் விளக்க இயலலாம்.  இத்தனை நேரம் அலுவலகத்துக்குக் கிளம்பிக் கொண்டிருப்பார்.  அலுவலகம், வலைப்பத்திரிகை என்று அவருக்குப் பல வேலைகள்.  இதனால்தான் அவரால் அமர்வுகளுக்குத் தொடர்ந்து வரமுடிவதில்லை. 

நீங்கள் சொன்ன மற்றவை ஐடி-காரர்களுக்கு.  நான் வெறும் ரிடயர்ட் செகரடரி.  ஏதோ கொஞ்சம் பத்திரிகை, இன்னபிறவற்றுக்குப் பொறுப்பிலிருந்திருக்கிறேன்.  இவ்வளவு ஞானமெல்லாம் என்னிடத்தில் இல்லை.  ஜடாயு ஏதேனும் சொல்லலாம்.  அவருக்கு நேரமிருக்க வேண்டும்.


மாறாக … நான் மக்களின் safety பற்றிச் சொன்னது மட்டும் தீயாகப்பற்றி அனலாகக் கொளுத்துகிறது. எல்லாம் சிதையிறங்கிய என் சீதையின் சினமே.

:)

இதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது.  சீதை உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் தாய்தான்.  நான் வணங்கும் மீனாட்சியும் அபிராமியும் சீதையினுள்தான் இருக்கிறார்கள்.  என்மொழி அவமேயாயினும் என்னைப் பற்றி அவர்கள் அறிவார்கள்.  ஒருபோதும் எனக்குத் தீங்கு கருத மாட்டார்கள்.  என்னைச் சபிக்க அவர்களுக்குத் தெரியாது.  அதற்கெல்லாம் மேலே

வேலா யுதன்சங்கு சக்ராயு தன்விரிஞ் சன்னறியாச்
சூலா யுதன் தந்த கந்தச் சுவாமி சுடர்க்குடுமிக்
காலா யுதக்கொடி யோனரு ளாய கவசமுண்டென்
பாலா யுதம்வரு மோயம னோடு பகைக்கினுமே

--கந்தரலங்காரம்
Reply all
Reply to author
Forward
0 new messages