அன்புடையீர் அனைவருக்கும்,
வணக்கம் மற்றும் வாழ்த்துகள்!
SDG கண்காணிப்பகம் தமிழ்நாடு சார்பாக, மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு மற்றும் காக்கும் கரங்கள் மனித வள அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்யும் இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு கவனம் செலுத்தும் SDG 5: பாலின சமத்துவம் தொடர்பான மாநில அளவிலான எட்டாவது மாநாட்டிற்கு உங்களை வரவேற்கிறோம்.
இந்த முக்கியமான மாநில மாநாட்டில், “அவள் எவ்வாறு கணிக்கப்படுகிறாள்" 1953 முதல் 2023 வரை இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - ஆய்வு அறிக்கை வெளியிட உள்ளோம்.
மாநாட்டின் நோக்கங்கள்
- SDG 5 இலக்கின் 5.2 குறிக்கோளின் கீழ், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் ஒழிப்பதில் நாட்டின் முன்னேற்றம், குறைபாடுகள், மற்றும் சவால்களை ஆராய்தல்.
- கடந்த 70 ஆண்டுகளுக்குமான NCRB தரவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட விரிவான பகுப்பாய்வு மற்றும் முக்கிய கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து, நீண்டகால போக்குகள், கொள்கை தொடர்பான அவசியங்கள் மற்றும் தலையீட்டு தேவைகளை முன்வைத்தல்.
- பல்வேறு பங்குதாரர்கள் — குடிமை அமைப்புகள், பெண்கள் வலையமைப்புகள், சமூக தலைவர்கள், அரசு துறை பிரதிநிதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் களப்பணி செயற்பாட்டாளர்கள் — அனைவரையும் ஒன்றிணைத்து உரையாடல் மற்றும் ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை உருவாக்குதல்.
- தடுப்பு, நீதி, ஆதரவு சேவைகள், விழிப்புணர்வு மற்றும் பொறுப்புக் கூட்டமைப்பு போன்ற துறைகளில் மாநில அளவிலான செயல்படுத்தக்கூடிய பரிந்துரைகளை உருவாக்குதல்.
நீங்கள் இந்த முக்கியமான மாநில மாநாட்டில் கலந்து கொண்டு, உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து, மாநில அளவிலான செயல் திட்டத்திற்கான எண்ணங்களை முன்னெடுக்க வேண்டுகிறோம்.
உங்கள் பங்கேற்பை வரும்
21 மார்ச் 2026க்குள் womens...@hrf.net.in என்ற மின்னஞ்சல் வழியாக உறுதிப்படுத்தவும்.
குறிப்பு: “அவள் எவ்வாறு கணிக்கப்படுகிறாள்” புத்தகத்தின் அச்சுப் பிரதிகள் (தமிழ்) தேவைபடுவோர் வரும் 21 மார்ச் 2026க்குள் 86680 91451 என்ற எண்ணில் உறுதிப்படுத்த வேண்டும். அதன்படி தேவையான பிரதிகள் அச்சிடப்படும். ஒரு பிரதியின் விலை ₹500 (அச்சிடுதல் மற்றும் அஞ்சல் செலவு உட்பட) ஆகும்.பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கவும், பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும் நீங்கள் தரும் நம்பிக்கை மற்றும் பங்கெடுப்புக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
நம்பிக்கையுடனும் ஒற்றுமையுடனும்,
தமிழரசிதுணை இயக்குநர், HRF
+91 86680 91451