கல்வித் தகவல் மற்றும் செய்திகள் - 02/08/2010

62 views
Skip to first unread message

Sankaranarayanan Devarajan

unread,
Aug 2, 2010, 1:20:33 PM8/2/10
to tamila...@googlegroups.com, nallana...@googlegroups.com, namp...@googlegroups.com, il...@googlegroups.com, mutht...@googlegroups.com, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, ITamizh...@googlegroups.com, thamizh...@googlegroups.com, Tamil2Friends digest சந்தாதாரர்கள்

சமூகப் பிரச்னைகளை இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதி வலியுறுத்தல்













சென்னை, ஆக.1: சமூகப் பிரச்னைகளையும், அவற்றின் விளைவுகளையும் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.ஆர். சிவகுமார் கூறினார்.


 தமிழ்நாடு ராஜஸ்தான் சங்கம் மற்றும் ராஜஸ்தான் கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 இதில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், துணை மருத்துவப் படிப்பு, பொறியியல் மற்றும் பள்ளிகள் மாணவர்கள் சுமார் 650 பேருக்கு உயர் கல்விக்காக ரூ.7.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் புதுவை துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் பேசியது:  பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ராஜஸ்தான் சங்கம் பல்வேறு வகையில் உதவி வருவது பாராட்டுக்குரியது. இத்தகைய நல்ல திட்டங்கள் தொடர வேண்டும் என்றார்.

 சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.ஆர். சிவகுமார் பேசியது:

 இளைஞர்கள் சமூக நிகழ்வுகளையும், அவற்றின் விளைவுகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஜாதி, மதம், மொழி ஆகியவற்றால் நாம் ஏன் பிரிக்கப்பட்டிருக்கிறோம்?  ஜாதிவாரியான கணக்கெடுப்புத் தேவை என்று ஏன் கூறுகிறார்கள்? தீவிரவாதம் வளர்ந்துக் கொண்டிருப்பது ஏன்? இயற்கை வளங்கள் சுரண்டப்படுவது ஏன்?

 இது போன்றவற்றையெல்லாம் இளைஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவற்றுக்குத் தீர்வு காணும் சக்தி இளைஞர்களிடம் உள்ளது என்றார். ராஜஸ்தான் சங்க கல்வி உதவித் தொகை குழுத் தலைவர் கன்டிலால் டி. ஷா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து

கொண்டனர்

மாவட்ட விளையாட்டுப் போட்டியில்தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி சாம்பியன்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தனர்.பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட விளையாட்டு ஆணையம் இணைந்து நடத்திய இளைஞர் கலைநிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்தியது. தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் கையுந்து பந்து மற்றும் கூடைபந்து ஆகிய போட்டிகளில் முதலிடம், கபடி போட்டியில் இரண்டாமிடம் பிடித்தனர்.நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டிகளில் மாணவி காருண்யா, குண்டு எறிதல், தட்டு எறிதல் ஆகிய போட்டிகளில் மாணவி பாரதி, தட்டு எறிதல், ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளில் மாணவி லட்சுமி பிரியா, 200மீ, 400மீ ஓட்டம் ஆகிய போட்டிகளில் மாணவி ரம்யா, 800 மீட்டர் ஓட்டத்தில் மாணவி சத்யா, நீளம் தாண்டுதலில் மாணவி கற்பகம், 400 மீ  ஓட்டத்தில் மாணவி கலையழகி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

தொடர் ஓட்டத்தில் லட்சுமி பிரியா, காருண்யா, ரம்யா, சுகன்யா, கலையழகி, சத்யா, ரம்யா, செல்வி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் அதிக புள்ளிகளை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர். பட்டம் வென்ற  மாணவிகளை பாராட்டி, மாவட்ட கலெக்டர் விஜயகுமார் பரிசுகோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினார். வெற்றிபெற்ற கல்லூரி மாணவிகள் மற்றும் பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநர்கள் அகிலா, கிருஷ்ணவேணி ஆகியோரை தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும தலைவர் சீனிவாசன்  பாராட்டினார்.கல்வி நிறுவனங்களின் செயலாளர்  நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர், கல்லூரி ஆலோசகர் ராமமீனாட்சி, முதல்வர் அனுஷாபாஸ்கர், துணை முதல்வர் சசிதரா உடனிருந்தனர்.

தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ளதுணை கமிஷனர் அறிவுரை

கும்மிடிப்பூண்டி :கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் ஆர்.எம்.கே., உறைவிட மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியின் முக்கிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு "பேட்ஜ்' அணிவிக்கும் விழா நடந்தது.பள்ளியின் செயலர் எலமஞ்சி பிரதீப் தலைமை வகித்தார். ஆர்.எம்.கே., பள்ளிகளின் முதன்மை தலைமை ஆசிரியர் சதீஷ், டீன் சகுந்தலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜமுனா ரமணி வரவேற்றார்.விழாவில் மத்திய குற்றப் பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பேட்ஜ் அணிவித்து சிறப்புரையாற்றினார்.விழாவில் அவர் பேசியதாவது:தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். போலீஸ் அதிகாரி, ராணுவ அதிகாரிகள், நம் நாட்டை பாதுகாக்க பல வழியில் பாடுபடுகின்றனர்.அதே போன்று பள்ளியின் முக்கிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள், மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து அவர்களிடம் நல்ல பண்புகள் ஏற்பட ஒத்துழைக்க வேண்டும்.அதன் மூலம் உங்கள் ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் பெருமை தேடித் தர வேண்டும்.இவ்வாறு போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதர் பேசினார்.பள்ளியின் முதன்மை தலைமை ஆசிரியர் சதீஷ் பேசும்போது, "சிறந்த மாணவனுக்கு உதாரணம் படிப்பு, விளையாட்டில் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும்.நம் பள்ளியை சிறந்த பள்ளியாக கொண்டு வரும் பொறுப்பு மாணவர்களாகிய உங்கள் கையில் உள்ளது. சரியான மனோபாவத்துடன் உழைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்' என்று பேசினார். ஒருங்கிணைப்பாளர் இந்து நன்றி கூறினார்

10 நாட்களில் சமஸ்கிருதத்தில் பேச இலவசப் பயிற்சி

சென்னை : சம்ஸ்கிருத பாரதி அமைப்பு, 10 நாட்களில் சமஸ்கிருதத்தில் பேச இலவசப் பயிற்சி அளிக்கும் வகுப்புகளை, சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று முதல் துவங்க உள்ளது.தன்னார்வத் தொண்டு நிறுவனமான சம்ஸ்கிருத பாரதி, சமஸ்கிருத மொழியில் சரளமாகப் பேசுவதற்கான இலவச பயிற்சி வகுப்புகளை, இன்று முதல் 11ம் தேதி வரை நடத்துகிறது. சென்னையில், குரோம்பேட்டை, நங்கநல்லூர், வேளச்சேரி, அடையார், பெசன்ட் நகர், கொட்டிவாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தி.நகர், மாம்பலம், கோடம்பாக்கம், கே.கே.நகர், சேத்துப்பட்டு, வடபழனி, கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், ஷெனாய் நகர், வில்லிவாக்கம், பெரம்பூர் ஆகிய இடங்களில் இந்த வகுப்புகளை நடத்துகிறது.விவரங்களுக்கு 94437 22009 மற்றும் 044-28272632/39 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்

விரைவில் வருகிறது உயிரை காப்பாற்றும் கார்

மெல்போர்ன் : சாலை விபத்து ஏற்படும் சமயத்தில், விபத்து நேராமல் தடுக்கும் பொருட்டு தானாக நிற்கும் தொழில் நுட்பத்துடன் தயாரான கார் விரைவில் வர இருக்கிறது. ரேடார் மற்றும் சோனார் சென்சார் தொழில்நுட்பத்துடன் தயாரான இந்த சிஸ்டம் பொருத்திய காருக்கு முன்னாள் மனிதர்கள், வாகனங்கள் ஏதும் வந்தால் உடனடியாக கார் நிற்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கார்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான நிசான் இந்த முறையை உருவாக்கி உள்ளது. வால்வோ நிறுவனம் இந்த ஆண்டு எஸ்.60 செடன் ரக தயாரிப்பில், கேமரா மற்றும் ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். காருக்கு முன்னாள் யாரும் வந்தால் எச்சரிக்கை செய்யும் போது டிரைவர் வண்டியை நிறுத்தாவிட்டால், கார் புதிய தொழில் நுட்பத்தின்படி தானாகவே நிற்கும். இதனால் சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் பலியை 13 சதவீதமாக குறைக்கும் என தெரிகிறது. சாலை விபத்தில் ஆண்டுக்கு 1400 பேர் மரணமடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிசான் நிறுவனத்தின் பொறியியல்துறை இயக்குனர் மசாவோ புகுஷிமா, பழைய முறையில் கூடுதலாக பார்க்கிங் சென்சார், ப்ளைன்ட் ஸ்பாட் எச்சரிக்கை போன்ற கூடுதல் தொழில் நுப்படங்கள் குறைந்த கட்டணத்தில் கார்களில் பொருத்தப்படும் என தெரிவித்தார்.


--
Always with Affection...
S.Devarajan.
http://www.engalalummudiyum.blogspot.com/
http://engalsakthi.blogspot.com/
www.kalvithagaval.co.cc/


Sankaranarayanan Devarajan

unread,
Aug 2, 2010, 1:23:20 PM8/2/10
to tamila...@googlegroups.com, nallana...@googlegroups.com, namp...@googlegroups.com, il...@googlegroups.com, mutht...@googlegroups.com, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, ITamizh...@googlegroups.com, thamizh...@googlegroups.com, Tamil2Friends digest சந்தாதாரர்கள்

"கரகரப்பிரியா' ராகத்தால் அற்புதம் நிகழ்த்திய நித்யஸ்ரீ

 மதுரை:  ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப் 41 வது ஆண்டு விழாவையொட்டி, மதுரையில்  துவங்கிய கர்நாடக இசைவிழாவில் நித்யஸ்ரீ மகாதேவன் "கரகரப்பிரியா' ராகத்தில் ஆலாபனை செய்து  பாடினார். இவர், இசை மேதை டி.கே.பட்டம்மாள் மற்றும் மிருதங்க மேதை பாலக்காடு டி.எஸ்.மணி அய்யரின் பேத்தி. பாட்டி மற்றும் தாய் லலிதாவிடம் இசை பயின்றவர்.  நேற்று மாலை நித்யஸ்ரீ, "சுருட்டி' ராக வர்ணத்துடன் கச்சேரியை துவக்கினார். பின், தியாகராஜரின் "மனஸாயெடுலோதுனே' பாடலை  "மலயமாருத' ராகம், ரூபக தாளத்தில் பாடினார். "கலிலோ ராஜஸ தாமஸ' என்ற இடத்தில் நிரவல் செய்து, ஸ்வரம் பாடிய விதம் அழகு. "சுனாத வினோதினி' ராகத்தை விரிவாக ஆலாபனை செய்து பாடி, ரசிகர் களின் பாராட்டை பெற்றார். மைசூர் வாசுதேவாச்சார் இயற்றிய  "தேவாதி தேவா ஸ்ரீ வாசுதேவா' ஆதி தாள சாகித்தியத்தை வழங்கி ஸ்வரம் பாடியது நேர்த்தியாக இருந்தது.  கோடீஸ்வரய்யரின்  "பிலஹரி' ராகத்தில் அமைந்த "நீ வா, சரவண பவா' தமிழ் பாடலை வழங்கி, தீட்சிதரின்  "மாமவ மீனாட்சி' வராளி ராகம், மிஸ்ர சாப்பு தாளம் பாடி, பிரதானமாக "கரகரப்பிரியா' ராகத்தில்  அற்புதமாக ஆலாபனை செய்து பாடினார்.  தியாகராஜரின் "ராமா நீயெட' ஆதி தாள சாகித்தியத்தை வழங்கி, கல்பனா ஸ்வரம் பாடியது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. வயலின்- ஹேமலதா, மிருதங்கம்- சிவகுமார், ராஜகணேஷ்-கஞ்சிரா, முகர்சிங்- தீனதயாளன் நேர்த்தியாக வாசித்து கச்சேரியை சிறப்பித்தனர். சந்தான 

கோபாலன்,  மல்லாடி சகோதரர்கள், ஆக.,4 ல் சுதா ரகுநாதன், ஆக.,5 ல் சஞ்சய் சுப்பிர மணியன் பாடுகின்றனர்.


மதுரை காமராஜ் பல்கலை எம்.பி.ஏ., தேர்வு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வியில் ஏப்., 2010க்கான எம்.பி.ஏ., தேர்வுகள் ஆக.19 ல் துவங்குகிறது. தேர்வு குறித்த விவரங்களுக்கு, www.mkudde.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம், என கூடுதல் தேர்வாணையர் சேதுராமன் (பொறுப்பு) தெரிவித்து உள்ளார்

ஹூப்ளி நகரில் ஒரு ஓட்டலில், ஏழை மக்களுக்கு 2 ரூபாய் விலையில் சாப்பாடு

ஹூப்ளி : அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், கர்நாடகாவிலுள்ள ஹூப்ளி நகரில் ஒரு ஓட்டலில், ஏழை மக்களுக்கு 2 ரூபாய் விலையில் சாப்பாடு வழங்கப்படுவது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஹூப்ளியை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து, கூலி வேலைக்காக மக்கள் தினமும் ஹூப்ளிக்கு வந்து செல்கின்றனர். ஏழை தொழிலாளர்களான அவர்கள் மதிய உணவுக்காக, தங்கள் வாங்கும் கூலியில் பாதிக்கும் மேல் செலவிடுகின்றனர். ஹூப்ளியில் செயல்பட்டு வரும் "மகாவீர் இளைஞர் கூட்டமைப்பு' ஏழைத் தொழிலாளர்கள் உணவுக்காக படும் சிரமங்களைக் கண்டு வருந்தியது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், குறைந்த விலையில், அவர்களுக்கு நிறைவான உணவு வழங்க திட்டமிட்டது.அதன்படி, அந்த கூட்டமைப்பு ஒரு சிறிய ஓட்டல் தொடங்கி, ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு 2 ரூபாய் விலையில் தரமான சாப்பாட்டை வழங்கி வருகிறது. இந்த மதிய உணவில், பெரிய ஓட்டல்களில் வழங்கப்படுவது போன்றே 2 சப்பாத்தி, அரிசி சோறு, இனிப்பு, பொறியல் என அனைத்து அம்சங்களும் உண்டு. சைவ ஓட்டலான இதில், தினமும் வெவ்வேறு உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

இது குறித்து, மகாவீர் இளைஞர் கூட்டமைப்பின் செயலர் ஆனந்தகுமார் பாட்வா கூறியதாவது:தினமும் கூலி வேலைக்காக ஹூப்ளிக்கு வந்து செல்லும் ஏழை தொழிலாளர்களுக்காக இந்த ஓட்டல் தொடங்கப்பட்டுள்ளது. இதில், ஏழைகள் மட்டுமல்லாது யார் வேண்டுமானாலும் வந்து சாப்பிடலாம். அவர்களுக்கும் அதே விலையில் உணவு கிடைக்கும்.முதலில், இந்த சேவையை இலவசமாக வழங்க முடிவு செய்தோம். அதன்படி ஓரிரு வாரங்கள் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால், இதனை சிலர் தவறாக பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். ஒருவரே, ஒன்றுக்கும் மேற்பட்ட உணவுகளை வாங்கி வீணடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்கினர். எனவே, வேறு வழியின்றி கட்டணம் நிர்ணயித்தோம்.இரண்டு மாதங்களுக்கு இது நடைமுறைப்படுத்தப்படும். மக்களின் ஒத்துழைப்பை பொறுத்து, உணவை இலவசமாகவே வழங்க திட்டமிட்டுள்ளோம். இந்த ஓட்டலை தொடங்க, எங்கள் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் ஏராளமான உதவிகளை தாமாகவே முன் வந்து செய்துள்ளனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு ஆனந்தகுமார் பாட்வா கூறினார்.

பி.ஜி.பி., பாலிடெக்னிக்கில்; திறன் வளர்ச்சி கருத்தரங்கு

நாமக்கல்: நாமக்கல் பி.ஜி.பி., பாலிடெக்னிக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான திறன் வளர்ச்சி குறித்த கருத்தரங்கு நடந்தது.கல்வி நிறுவன தாளாளர் கணபதி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். பெருந்துறை டி.எம்.டபிள்யு., சி.என்.சி., மைய இயக்குனர் பாரிவள்ளல், திறன் வளர்ச்சி, தனித்திறன் மேம்பாடு, மொழித்திறன், படைப்புத்திறன் குறித்து விளக்கினார்.நிகழ்ச்சியில், விரிவுரையாளர்கள், துறைத்தலைவர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

எளிய வழியில் ஆங்கிலம் கற்றல் பயிற்சி முகாம்

திருச்சி, ஆக. 1: திருச்சி இந்திரா கணேசன் கல்விக் குழும வளாகத்தில் எளிய வழியில் ஆங்கிலம் கற்றல் குறித்த பயிற்சி முகாமின் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.

  இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி, இந்திரா கணேசன் கல்வியியல் கல்லூரி, இந்திரா கணேசன் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆகிய நிறுவனங்களில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்காக இந்தப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

  நிறைவு விழாவுக்குக் கல்லூரி தலைவர் கூ. கணேசன் தலைமை வகித்தார்.   கல்லூரி இயக்குநர் டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

  இ.ஆர். மேல்நிலைப் பள்ளித் தாளாளர் டி.எம். சீனிவாசன் ஆங்கில மொழியின் சிறப்பையும், ஆங்கில மொழியை எளிமையாகக் கற்பது தொடர்பான பல்வேறு உத்திகளையும் விளக்கிக் கூறினார்.

  முன்னதாக, இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி பதிவாளர் மணிமாறன் வரவேற்றார். இந்திரா கணேசன் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ராஜலஷ்மி நன்றி கூறினார்

Sankaranarayanan Devarajan

unread,
Aug 2, 2010, 1:25:37 PM8/2/10
to tamila...@googlegroups.com, nallana...@googlegroups.com, namp...@googlegroups.com, il...@googlegroups.com, mutht...@googlegroups.com, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, ITamizh...@googlegroups.com, thamizh...@googlegroups.com, Tamil2Friends digest சந்தாதாரர்கள்

வாகன ஓட்டுநர் இலவச பயிற்சி

உதகை, ஆக. 1: நீலகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின இளைஞர்களுக்கு சாலைப் போக்குவரத்து நிறுவனம் மூலம் வாகன ஓட்டுநர் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளது:

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாலை போக்குவரத்து நிறுவனத்தின் மூலம் இப்பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படவுள்ளன.

பயிற்சியில் சேர 20 வயதிற்கு குறையாமலும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும், கனரக வாகன ஓட்டுநர் பயிற்சியில் சேர இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பிஎஸ்வி பேட்ஜ் வைத்திருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கிறது.  சேர விரும்புவோர் தங்களது புகைப்படத்துடன், பெயர், விலாசம், வயது, சாதி, ஆண்டு வருமானம், சேர விரும்பும் பயிற்சி ஆகிய விவரங்களைப்  பூர்த்தி செய்து சான்றிதழ்களின் நகல்களுடன் கூடுதல் இயக்குநர், சாலை போக்குவரத்து நிறுவனம், ஓட்டுநர் பயிற்சிப் பிரிவு, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர்-601 201 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்

விவேகானந்தா பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

பரமத்தி வேலூர், ஆக. 1:  பரமத்தி வேலூர் தாலுகா, பாண்டமங்கலம் அருகே உள்ள விவேகானந்தா பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு


மத்திய இணை அமைச்சர் காந்திச்செல்வன் பரிசு வழங்கினார்.

   விவேகானந்தா கல்வி அறக்கட்டளை தலைவரும்,கபிலர்மலை சட்டப் பேரவை உறுப்பினருமான கே.நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.

பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.வி பழனிசாமி வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம் வாழ்த்தி பேசினார். அறக்கட்டளையின் செயலாளர் ஆர்.சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

÷ மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் செ.காந்திச்செல்வன், பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற மாணவி ஆர்.சந்தியாவிற்கு பரிசுகள் வழங்கினார். மேலும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கினார்.

  மெட்ரிக் பள்ளி முதல்வர் வை.செல்வம் நன்றி கூறினார்.

இறைவனை அடைவதற்கு சிறந்த நெறி எது?

மதுரை, ஆக.1:   இறைவனை அடைவதற்கு உள்ள நெறிகளில் சிறந்த நெறி என்பதற்கு மதுரையில் நடைபெற்ற அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் மருதாசல அடிகளார் விளக்கம் அளித்தார்.


      மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள கலைத்தந்தை கருமுத்து தியாகராஜர் செட்டியார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சி மதுரை தியாகராஜர் கலைக் கல்லூரியில் இரு தினங்கள் நடைபெற்றது.

 முதல்நாள் நிகழ்ச்சியில் நன்னெறியாவது எனும் தலைப்பில் பேரூர் ஆதீனம் இளைய பட்டம் கையிலை மாமணி மருதாசல அடிகளார் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியது:  இறைவனை அடைவதற்கு பல நெறிமுறைகள் இருக்கின்றன. அவை தொண்டு நெறி, வழிபாட்டு நெறி, அக வழிபாட்டு நெறி, நன்னெறி என்பன.

 இவற்றுள் நன்னெறியே இறைவனை அடைய மிகச் சிறந்த நெறி என்று சைவ அறிஞர்கள் பலரும் ஏற்றுக்கொண்டு, பின்பற்றி வருகின்றனர்.

மேலும், மனிதனின் அக இருளைப் போக்குவதற்கு நமசிவாய என்ற திருவைந்தெழுத்து மந்திரமே துணை நிற்கும் என்றார்.

  விழாவில், அடிகளாருக்கு கல்லூரித் தாளாளர் கருமுத்து தி.கண்ணன் பொன்னாடை அணிவித்தார். கல்லூரிச் செயலர் உமா கண்ணன், காமராஜர் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) வெ.அழகப்பன், தமிழியல் துறைத் தலைவர் மு.மணிவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தியாகராஜர் கல்லூரி முதல்வர் சு.சுப்பிரமணியன் செய்திருந்தார்.

 தமிழ்த்துறை ஆய்வரங்கம்:   தியாகராஜர் கல்லூரித் தமிழ்த்துறை உயராய்வு மையத்தின் ஆய்வரங்கம் நடைபெற்றது. தமிழ்த்துறைப் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமை வகித்தார்.

 தமிழ்த் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் செ.அஜீபா, சங்கத் தமிழரின் நீரியற் தொழில்நுட்பம் என்ற தலைப்பிலும், இளநிலை ஆய்வாளர் மு.குருபாலன், தொல்காப்பியத்தில் அறம் என்ற தலைப்பிலும், முதுகலை இரண்டாமாண்டு மாணவர் ச.அழகுசுப்பையா, நன்னடை ஒரு விவாத மொழிவு எனும் தலைப்பிலும் ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தனர்.

 ஆன்மிகப் பயிற்சி முகாம்:  பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய வித்யாலயம் சார்பில் மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு சிறப்பு ஆன்மிகப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் மு.கண்ணன் தலைமை வகித்தார்.

பிரம்ம குமாரிகள் இயக்க ஆன்மிகப் பயிற்சியாளர் பி.கே.கோமதி மனமும் தியானமும் எனும் தலைப்பில் உரையாற்றினார்

இந்தியா வல்லரசாகத் திகழ உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

கிருஷ்ணகிரி, : இந்தியா வல்லரசாகத் திகழ உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் எம்.ஜெயக்குமார் கூறினார்.


 கிருஷ்ணகிரி அருகேயுள்ள காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கல்வியியல் கல்லூரியின் 2-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி, ஜெயக்குமார் பேசியது:

நாடு சுதந்திரம் அடைந்தபோது, குறைந்த அளவே பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் இருந்தன. தற்போது, மக்கள்தொகைக்கு ஏற்ப பல்கலைக்கழகங்கள் இல்லை.

வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கை போதிய அளவு இல்லை. நாடு வல்லரசாக வேண்டுமெனில், உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அப்போதுதான் மிகப் பெரிய வளர்ச்சியை அடைய முடியும்.

 கட்டாய கல்வி, சமச்சீர் கல்வி உள்ளிட்டவற்றால் ஆசிரியர் பணிக்கு தேவை அதிகமாக உள்ளது.

ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன் வளர, தினந்தோறும் படிக்க வேண்டும். மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில், தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் தங்களை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

கல்லூரியின் நிறுவனர் பி.பெருமாள் பேசியது:

 கல்லூரி அறக்கட்டளையின் சார்பில் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து, பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கி வருகிறோம்.

மேலும் ஐஏஎஸ் மற்றும் குருப் 1 உள்ளிட்ட தேர்வுகளை எழுதுபவர்களுக்கு கல்லூரி சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

 விழாவுக்கு பாரத் கல்வி அறக்கட்டளையின் தலைவர் பி.வள்ளி பெருமாள் தலைமை வகித்தார். அறக்கட்டளையின் செயலர் கோவிந்தராஜ், கல்லூரி முதல்வர் வி.கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

"தமிழர்கள் திருக்குறளைப் படித்திருக்க வேண்டும்'

கரூர், ஆக.1: தமிழர்களாகப் பிறந்தவர்கள் திருக்குறளைப் படித்திருக்க வேண்டும் என்றார் திருவள்ளுவர் தவச்சாலை நிறுவனர் இரா. இளங்குமரனார்.


  வள்ளுவர் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டு, கரூரிலுள்ள வள்ளுவர் கேட்டரிங் கல்லூரியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா ஆகிய விழாக்கள் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

  வள்ளுவர் நிறுவனங்களின் தலைவர் லோ. கருப்பையா தலைமை வகித்தார். திருவள்ளுவர் தவச்சாலை இரா. இளங்குமரனார் வள்ளுவர் சிலையைத் திறந்துவைத்துப் பேசியது:

  திருக்குறள் ஒரு கட்டுக்கோப்பான நூல். எது நோயை உண்டாக்குகிறதோ, அதைக் கொண்டே அந்த நோயைக் குணப்படுத்துவதுதான் ஹோமியோபதி. இதுகுறித்து திருக்குறளிலும் கூறப்பட்டுள்ளது. திருக்குறளைப் படிப்பதற்காக தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தவர் மகாத்மா காந்தி.

  இதேபோல, அமெரிக்கப் பேச்சாளர் இங்கர்சால் உள்ளிட்டோர் திருக்குறளை முன்னெடுத்தே பேசி வந்தனர். ஆனால், தமிழர்களாகப் பிறந்த நாம், திருக்குறளைத் தெரிந்து வைத்திருக்கவில்லை.

  வலி வராமல் வலிமை இருக்காது. மனதில் மாசு இருப்பதால்தான் நாம் நீர்நிலைகளில் கழிவுகளைச் சேர்ப்பது, சுற்றுச்சூழல் கேடு, ஜாதி, மத பேதங்களில் சிக்குண்டுள்ளோம். நாம் ஒன்றாகக் குரல் கொடுத்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும் என்றார்.

  லோ. கருப்பையா பேசுகையில், கடின உழைப்பும் கடமையைச் செய்யும் துணிவுடன், வள்ளுவத்தின் வழி வாழ்ந்தால் வெற்றி கிடைக்கும் என்றும் தெரவித்தார்.

  நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தொழிலதிபர்கள் ஜெ. தங்கராஜ், பி. தங்கராஜ், வள்ளுவன் அடிபொடிஅனந்தகுமார், வள்ளுவர் கல்லூரி முதல்வர் வை. சிவசங்கரன் ஆகியோர் பேசினர்.

  கல்லூரித் தாளாளர் க. செங்குட்டுவன் வரவேற்றார். நிர்வாகி க. லோகநாதன் நன்றி கூறினார்.

Sankaranarayanan Devarajan

unread,
Aug 2, 2010, 1:30:07 PM8/2/10
to tamila...@googlegroups.com, nallana...@googlegroups.com, namp...@googlegroups.com, il...@googlegroups.com, mutht...@googlegroups.com, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, ITamizh...@googlegroups.com, thamizh...@googlegroups.com, Tamil2Friends digest சந்தாதாரர்கள்


திருநந்திக்கரை அரசு பள்ளியில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு

குலசேகரம், ஆக. 1: கன்னியாகுமரி மாவட்டம், திருநந்திக்கரை அரசு தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வெள்ளிக்கிழமை  மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.


 திருநந்திக்கரை அரசு உயர்நிலைப் பள்ளி அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளியாகும்.  இந்தப் பள்ளி இஸ்ரோ முன்னாள் தலைவர் ஜி. மாதவன் நாயர் பயின்ற பெருமைமிக்கது.

  இப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு அளிக்கப்படுகிறது.  

இதையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் சி. சதீசன் தலைமை வகித்தார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் டி.எஸ். பிரபகுமார் துவக்கவுரை நிகழ்த்தினார்.

  மாவட்ட துணைத் தலைவர் எம். சசிகுமார் அறிமுகவுரை நிகழ்த்தினார்.  உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜே. கோமளன், தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பி. விஸ்வம்பரன், திற்பரப்பு தேவசம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காசி சிவகுமார் ஆகியோர் பேசினர்.

  பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பி. பாலகிருஷ்ணன், அறிவியல் இயக்க ஒன்றியத் தலைவர் டி. விஜயசந்திரன், செயலர் விமலாராணி, பகுதிக் குழுச் செயலர் எஸ்.சி. மனோரஞ்சன் தாஸ், தலைவர் பி.டி. திவாகரன் பிள்ளை, பெற்றோர்- ஆசிரியர் சங்க ஆலோசகர் என். மகேசன், புரவலர் சுகுமாரன் நாயர், தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கத் தலைவர் வினோத் குமார், அறிவியல் ஆடவர் குழுச் செயலர் சுந்தரேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பள்ளி ஆசிரியர் காஜா நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு வண்ணக் குடைகள் வழங்கப்பட்டன. 58 மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது

குமரி அறிவியல் பேரவை சார்பில் சுருளகோட்டில் ஆக.14 }ல் வரைபட கண்காட்சி போட்டி

நாகர்கோவில், ஆக. 1: கன்னியாகுமரி அறிவியல் பேரவை சார்பில் சுருளகோட்டில் இம்மாதம் 14-ம் தேதி வரைபட கண்காட்சி போட்டி நடத்தப்படுகிறது.


  இது தொடர்பாக பேரவையின் அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் வெளியிட்ட அறிக்கை:

  குமரி அறிவியல் பேரவை இவ்வாண்டு நீரும் வாழ்வும் என்னும் தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்துகிறது.

  இந்நிலையில், சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் சுதந்திர இந்தியாவின் நீர்வளம் காப்போம் என்னும் தலைப்பில் வரைபடம் வரைந்து அறிஞர்களிடம் விளக்கும் போட்டி இம்மாதம் 14-ம் தேதி காலை 9 மணிக்கு சுருளகோடு புனித அந்தோனியார் உயர்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.   சிறப்பாக படம் வரைந்து விளக்கம் அளிப்போருக்கு முதல் பரிசாக ரூ. 1000 மற்றும் கேடயமும், 2-ம் பரிசாக ரூ. 500-ம், கேடயமும், 3-வது பரிசாக ரூ. 300-ம் கேடயமும், ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்.

  இந்த போட்டி குறித்த மேலும் விவரங்களுக்கு அமைப்பாளர், குமரி அறிவியல் பேரவை, முளங்குழி அஞ்சல்- 629162 என்ற முகவரியில் அல்லது 99427 58333 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு விவரம் பெறலாம் என்றார்

ஆர்வத்துடன் கற்றால் எந்தத் துறையிலும் வெற்றி பெறலாம்

கோபி, ஆக.1: ஆர்வமாக கற்றால் எந்தத் துறையாக இருந்தாலும் அதில் வெற்றி பெறலாம் என உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் கூறினார்.


÷கோபி கலை, அறிவியல் கல்லூரியில், தகவல் தொழில் நுட்பக் கட்டடம் மற்றும் கூடுதல் மகளிர் விடுதியின் திறப்பு விழா, பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர்  சி.சுவாமிநாதன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

÷கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தலைவர் பி.கருப்பண்ணன் வரவேற்றார். தாளாளர் கே.எம்.நடராஜன் பேசினார். கட்டடங்களை உச்சநீதி மன்ற நீதிபதி சதாசிவம் திறந்து வைத்து அவர் பேசியது:

எந்தத் துறையாக இருந்தாலும் ஆர்வமாக படித்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும். இன்றைய மாணவர்கள் தமிழ்மொழியில் கல்வி கற்று அறிஞர்களாக வேண்டும்.  உங்களுக்கு வேலைவாய்ப்பு இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் உள்ளது. அதனால் ஆங்கில அறிவும் கண்டிப்பாக தேவை என்றார் அவர்.÷

÷கல்லூரி முதல்வர் ஆர்.செல்லப்பன் நன்றி கூறினார்.

÷நிகழ்ச்சியை பேராசிரியர்கள் ராஜகோபால் மற்றும் கே.எம்.தீபா தொகுத்து வழங்கினர்.  ஈரோடு மாவட்ட நீதிபதி ஜெயசங்கரன், நீதிபதிகள் ராமதிலகம், வசந்தலீலா, இருதயராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்

கபடி போட்டி: பழனியாண்டவர் மகளிர் கல்லூரி முதலிடம்

பழனி, ஆக. 1: மாவட்ட அளவில் நடைபெற்ற கபடி போட்டியில், பழனி பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி முதலிடம் பெற்றது.


திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 25 கல்லூரிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பழனி பழனியாண்டவர் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் விளையாட்டுத் துறை உடற்கல்வி இயக்குநர் (பொறுப்பு) திருமகள் தலைமையில் பங்கேற்றனர்.

இதில் பழனியாண்டவர் மகளிர் கல்லூரி 43 புள்ளிகளைப் பெற்று, மாவட்டத்தில் முதல் இடத்தைப் பெற்றது. தவிர குழு போட்டியில் கபடி குழு முதல் இடத்தைப் பெற்று பரிசு வென்றது.

உயரம் தாண்டுதலில் தமிழ்செல்வியும், தடை ஓட்டத்தில் தனலட்சுமி, நித்யா, தமிழ்ச்செல்வி, மகேஸ்வரி ஆகியோரும், 800 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் நித்யாவும் முதலிடம் பெற்றனர். 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பிரியா, 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பரமேஸ்வரி, வட்டு எறிதலில் நர்மதா ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றனர். நீளம் தாண்டுதல் மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனலட்சுமி மூன்றாம் இடம் பிடித்தார்.

மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அணி வீராங்கனைகளை கல்லூரிச் செயலரும், பழனி கோயில் இணை ஆணையருமான ராஜமாணிக்கம், முதல்வர் தேமொழி, உடற்கல்வி இயக்குநர் (பொறுப்பு) திருமகள் மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

கல்வி வளர்ச்சியில் முன்னேறிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது

திருக்கோவிலூர், ஆக.1:  கல்வி வளர்ச்சியில் முன்னேறிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.
÷திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 9 ஊராட்சிகளில் 11,822 குடும்பங்களுக்கு இலவச கலர் டிவியும், 527 குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
÷திருக்கோவிலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஜி.அரியூர், சோழபாண்டியபுரம், வேங்கூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 4,537 குடும்பங்களுக்கு ஜி.அரியூரில் நடைபெற்ற விழாவிலும், ரிஷிவந்தியம் ஒன்றியத்தைச் சேர்ந்த வானாபுரம், சீர்ப்பனந்தல், பாசார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 3,684 குடும்பங்களுக்கு பகண்டை கூட்டுரோட்டில் நடைபெற்ற விழாவிலும், கடுவனூர், இளையனார்குப்பம், அத்தியூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 3,601 குடும்பங்களுக்கு கடுவனூரில் நடைபெற்ற விழாவிலும் என மொத்தம் 9 ஊராட்சிகளைச் சேர்ந்த 11,822 குடும்பங்களுக்கு இலவச கலர் டிவியும், கடம்பூர் கிராமத்தில் 527 குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்பையும் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்பொடி வழங்கினார்.
÷இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.பழனிச்சாமி தலைமையேற்றார், நாடாளுமன்ற உறுப்பினர் ஆதி.சங்கர், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சிவராஜ், ஒன்றிய பெருந்தலைவர்கள் அலமேலு சின்னதுரை, பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
÷விழாவில் அமைச்சர் க.பொன்முடி பேசியது: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 1,104 ஊராட்சிகளில் ஏறக்குறைய 1,028 ஊராட்சிகளுக்கு இலவச கலர் டிவி வழங்கி முடிக்கப்பட்டுள்ளது. இதில் திருக்கோவிலூர் ஒன்றியத்திலுள்ள 52 ஊராட்சிகளில் 51 ஊராட்சிகளுக்கும், ரிஷிவந்தியம் ஒன்றியத்திலுள்ள 53 ஊராட்சிகளில் 48 ஊராட்சிகளுக்கும் இலவச கலர் டிவி வழங்கி முடிக்கப்பட்டுள்ளது.
÷தமிழக முதல்வர் கருணாநிதி பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றி வருகிறார். பொது அறிவு, சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டுமென அனைத்து குடும்பங்களுக்கும் இலவச கலர் டிவியை வழங்கி வருகிறார்.
÷இந்த அரசு பொறுப்பேற்ற பின் அரசுப் பணியில் காலியாக இருந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களிலும், தனியார் துறைகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களிலும் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதிக அளவிலான உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், புதிய தொடக்கப் பள்ளிகளும் அதிகளவில் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகம் கல்வி வளர்ச்சியில் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது என்றார்.
÷விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், அங்கையற்கண்ணி, வேளாண் விற்பனைக்குழுத் தலைவர் ராதாமணி, தனித்துணை ஆட்சியர் (வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி) உமாமகேஸ்வரி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், ஊராட்சித் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Sankaranarayanan Devarajan

unread,
Aug 2, 2010, 1:35:33 PM8/2/10
to tamila...@googlegroups.com, nallana...@googlegroups.com, namp...@googlegroups.com, il...@googlegroups.com, mutht...@googlegroups.com, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, ITamizh...@googlegroups.com, thamizh...@googlegroups.com, Tamil2Friends digest சந்தாதாரர்கள்

அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியருக்கு வித்யா சேவாரத்தினம் விருது

சிதம்பரம், ஆக.1: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியருக்கு காஞ்சி காமக்கோடி பீடம் அறக்கட்டளை, வித்யா சேவாரத்தினம் விருது வழங்கி கெüரவித்துள்ளது.

÷மேலாண்மை துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு சமுதாய நல்லிணக்கம் மற்றும் கற்றல் ஆராய்ச்சி மூலம் மாணவர் சமுதாயத்துக்கு பெரும்பணி ஆற்றி வருவதை பாராட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் ந.பஞ்சநதத்துக்கு ஸ்ரீ சங்கர கலை அறிவியல் கல்லூரி மற்றும் காஞ்சி காமக்கோடி பீடம் அறக்கட்டளை சார்பில் அண்மையில் நடைபெற்ற விழாவில் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வித்யா சேவாரத்தினம் விருதை வழங்கி கெüரவித்துள்ளார்

கவிதைப் போட்டி

விழுப்புரம், ஆக. 1: விழுப்புரம் மாவட்ட திமுக இலக்கிய அணி நடத்தும் முரசொலி அறக்கட்டளை கவிதைப் போட்டி ஆகஸ்ட் 8-ல் விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது.


  இலக்கிய அணி மாவட்ட செயலர் கு.சீத்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா பொறியியல் கல்லூரியில் இப்போட்டிகள் நடைபெறுகிறது.

÷மாவட்ட அளவிலான போட்டிக்கு பள்ளி மாணவர்களுக்கு பன்மணித் திறள் பகுதியில் விடுதலை வாழ்வே வா என்று தொடங்கும் 24 வரி பாடலும், தமிழுணர்ச்சி என்னும் பகுதியில் தமிழுக்கும் அமுதென்று பேர் என்று தொடங்கும் 16 வரிகளும், கல்லூரி மாணவர்களுக்கு நாள் மலர் கவிதையில் தமிழர் திருநாள் தலைப்பில் தை மதி பிறக்கும் நாள் என்று தொடங்கும் பாடல் 34 வரிகளும், தமிழுக்கு அமிழ்தென்று பேர் என்ற பகுதியில் எடா, துதா இங்கு வா தனியே என்று தொடங்கும் 28 வரிகளும் போட்டிக்கு உரிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

÷பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு 3 பேர் வீதமும், ஒவ்வொரு கல்லூரிக்கு 10 பேர் வீதமும் போட்டியில் கலந்து கொள்ளலாம். வரும் மாணவர்கள் தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர்கள் அனுமதி சீட்டுடன் கலந்து கொள்ளவும்.

÷வெற்றிபெரும் மாணவர்களுக்கு முரசொலி அறக்கட்டளையின் சார்பில் மாவட்ட அளவில் முறையே ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,500, ஆறுதல் பரிசு 5 பேருக்கு ரூ.1,000, மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.10,000, ரூ.5,000, ரூ.3,000 எனவும், ஆறுதல் பரிசு 5 பேருக்கு ரூ.2,000 வழங்கப்படும். உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி பங்கேற்றுப் பரிசளிப்பார் என்று கூறியுள்ளார்.

÷போட்டி ஏற்பாடுகளை நகர திமுக இலக்கிய அணித் தலைவர் சீ.விக்கிரமன், செயலர் தி.சம்பத் ஆகியோர் கவனித்து வருகின்றனர்

கிளேடிஓலஸ் விருதுகள் வழங்கும் விழா

சிதம்பரம், ஆக.1: அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல கிராமப்புற விரிவாக்க பணி மற்றும் ஜம்மு மாநில வேளாண் துறை பங்களிப்புடன் வடமாநில வண்ணமலரான கிளேடிஓலஸ் மலர் 2006-ம் ஆண்டு முதல் சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் கிராமத்தில் அறிமுகம் செய்யப்பட்டு சாகுபடி செய்யப்பட்டது.

÷இப்புதிய விரிவாக்க முயற்சியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஊக்கம் தரும் வகையில் கிளேடிஓலஸ் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, சி.முட்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

÷கிளேடிஓலஸ் மலர் சாகுபடி விவசாயிகள் சங்க செயலர் சீனுவாசப் பெருமாள் வரவேற்றார்.

முன்னோடி விவசாயி சீனுவாசப் பெருமாளுக்கு கிளேடிஓலஸ் சுழற்கோப்பை-2010 என்ற விருதை ÷ஜம்மு மாநில வேளாண் விஞ்ஞானி மனோஜ்நாசர் வழங்கி கெüரவித்தார்.

÷கிளேடிஓலஸ் மலர் சாகுபடியுடன் நூல்கோல் சாகுபடி செய்து வெற்றிகண்ட விவசாயி பானுசந்தர், வெற்றிகரமாக கிளேடிஓலஸ் சாகுபடி செய்த விவசாயி கணேசன் ஆகியோருக்கு கிளேடிஓலஸ் சாகுபடியாளர் விருது வழங்கப்பட்டது.

÷அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்க விரிவுரையாளர் முனைவர் தி.ராஜ்பிரவீனுக்கு சிறந்த விரிவாக்க முயற்சி மற்றும் பங்களிப்புக்காக ஜம்மு மாநில வேளாண் துறையின் நிறப்புரட்சி திட்டத்தின் கீழ் சிறப்பான விரிவாக்க நன்சான்றிதழ் வழங்கப்பட்டது.

÷÷தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட, கார்ட்டூன் ஓவியர் வீராசாமியின், கார்ட்டூன் பயிற்சிப் பட்டறையை, விஞ்ஞானி மனோஜ்நாசர் தொடங்கி வைத்தார்.

÷முற்போக்கு எழுத்தாளர் சங்க சி.வெங்கடேசன் வாழ்த்துரையாற்றினார். விவசாயிகள் சங்க செயலர் பானுசந்தர் நன்றி கூறினார்

நல்ல நூல்களைப் படிக்கும் வாய்ப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்

ஈரோடு, ஆக. 1: நல்ல நூல்களைப் படிக்கும் வாய்ப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று, பேராசிரியை இளம்பிறை மணிமாறன் கூறினார்.

÷மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் புத்தகத் திருவிழா நடந்துவருகிறது. இதில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் தலைமை வகித்தார். கவிஞர் நாமக்கல் நாதனுக்கு விருது வழங்கி பேராசிரியை இளம்பிறை மணிமாறன் பேசியது:

÷சொந்தமாகச் சிந்திக்கும் திறனை உருவாக்கி, அதை மேம்படுத்தும் சக்தி புத்தகங்களுக்கு மட்டுமே உண்டு. மக்களிடம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

÷நேர்மை, கருணை, நாணயம், தூய்மை ஆகிய நற்குணங்கள் சமுதாயத்தை விட்டு விலகிச் செல்கின்றன. திருக்குறள் வழி நடப்பது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமாகும். புராண, இதிகாசங்களில் உள்ள தத்துவங்களை அயல்நாட்டவரும் கொண்டாடி வருகின்றனர். நாம் அறியாத பல்வேறு செய்திகள் அந்த நூல்களில் இடம் பெற்றுள்ளன. அடுத்த தலைமுறையை வாழவைக்கும் சக்தி படைத்தவையாக புத்தகங்கள் இருக்கின்றன.

÷பல்வேறு பகுதிகளின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை நூல்களில் இடம்பெற்றுள்ளன. இதுபோன்ற நூல்களைத் தேடிப் பிடித்து, புத்தகமாக்க பலரும் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பல்லாண்டுகளுக்கு முன், ஏடுகளில் இருந்த பல்வேறு பாடல்களைத் தேடிப் பிடிக்க வாழ்க்கையே தியாகம் செய்தவர்கள் பலர். ÷இவ்வாறு கிடைத்த அரிய நூல்கள் நம்மிடம் ஏராளமாக உள்ளன. இளம் தலைமுறையினர் இதுபோன்ற நல்ல நூல்களைப் படித்து, வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்

கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிக் கூடம்

கோவை, ஆக. 1: ஆரம்பக் கல்வியோடு நின்றுவிடும் கிராமப்புற இளைஞர்களுக்காக தமிழக அரசு கோவையில் தொழில் பயிற்சிக் கூடம் அமைத்து பயிற்சி அளித்தால், குறுந்தொழில்களை பாதுக்காக முடியும் என்று தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.


   கோவையில் குறு, சிறு தொழில்களுக்கான மாநாடு நடைபெற்றது. அதை ஒட்டி இச்சங்கத் தலைவர் ஜெ.ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

 குறுந்தொழில் நடத்துகின்றவர்களுக்கு, கடன் வழங்க வங்கிகள் தயக்கம் காட்டிவருவது இன்று வரை தொடர்கதையாகவே உள்ளது. அரசும், உயர்மட்ட வங்கி அதிகாரிகளும் குறுந்தொழில் முனைவோர் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்க குறுந்தொழில் முனைவோர்கள் மட்டும் அடங்கிய கமிட்டி அமைத்து பிரச்னைகளுக்கு தீர்வுகாண வேண்டும்.

  தொழில்பேட்டை அமைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 50 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் கூறியுள்ளது.

கோவையில் குறுந்தொழில் முனைவோர்களால் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் 50 ஏக்கர் நிலம் வரை வாங்க முடியாததால் அரசு அறிவித்துள்ள சலுகைகளை பெற முடியவில்லை.

 ஒரு ஏக்கர் நிலம் வாங்கி குறுந்தொழில் பேட்டையோ, 10 ஏக்கர் நிலம் வாங்கி தொழில்பேட்டையோ அமைக்க மத்திய, மாநில அரசுகள் அனைத்து

வித சலுகைகளையும் காலதாமதமின்றி வழங்க வேண்டும்.

 கிராமப்புறங்களில் ஆரம்பக் கல்வியோடு நின்று, கைத்தொழில் இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசு கோவையில் தொழில் பயிற்சிக் கூடம் அûமைத்து

பயிற்சி அளிக்க வேண்டும். அங்கு தேர்ச்சிபெறும் தொழிலாளர்களை குறுந்தொழில் கூடங்களில் ஓர் ஆண்டு காலம் பணிக்கு அமரச் செய்து, அதன் பின் அத்தொழிலாளர்களுக்கு தொழில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை அரசு வழங்க வேண்டும். இது குறுந்தொழில்களை பாதுகாக்க உதவியாக இருக்கும் என்றார்

இலவச சீருடை மற்றும் நோட்டுபுத்தகங்கள் வழங்கும் விழா

          
      திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் மற்றும் நேயம் அறக்கட்டளை இணைந்து மாற்றுத் திறனுடைய மாணவ
மாணவியர் மற்றும் மாற்றுத் திறனுடையோரின் குழந்தைகளுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா திருச்சி, மரக்கடை,  சையது முர்துசா பள்ளியில் நடைபெற்றது.

     இவ்விழாவிற்கு திருச்சிராப்பள்ளிமாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் மாரிக்கண்ணன் வரவேற்புரையாற்றினார். 
   
     நேயம் அறக்கட்டளையின் தலைவர் மணியன் தலைமையுரையாற்றினார். திருச்சி தொழிலதிபர் எஸ்.பிரதீப், சமூக ஆர்வலர் ஆர்.சுரேஷ் மற்றம் நாகநாதர் உணவகத்தின் மேலாளர் ஏ.ரவி ஆகியோர் தலைமை விருந்தினராக கலந்துகொண்டனர்.

     திருச்சிராப்பள்ளி கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியை டாக்டர். பவித்திரா, திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தின் மேலாளர். மு.இராதாகிருஷ்ணன், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையைச் சார்ந்த கே.சரவணன், அரசு பள்ளியின் ஆசிரியர் ஜா.கிஷோர்டேவிட் மற்றும் திருச்சி ஆர்.எம்.எச் கார்பரேசன் நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.விக்ரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     ஆர்.பாக்கியராஜ், இரா.சுப்பிரமணியன், தேவராஜன், பாலகிருஷ்ணன், கிளமண்ட் மற்றும் மணவாளன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், பொருளாளர் வெங்கட்ராமன் நன்றி கூறினார்.

சென்னை இளைஞருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் படிக்க உதவித்தொகை

லண்டன், ஆக. 1: உலக புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.பில். பயில்வதற்கு சென்னையை சேர்ந்த இளைஞர் பிரசாந்த் வெங்கடராமன் தேர்வாகியுள்ளார்.


சென்னையின் ஸ்ரீவெங்கடஸ்வரா பொறியியல் கல்லூரியில் பயின்ற இவர், தற்போது செயின்ட்-கோபியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மார்ச் 2010-ல் கேம்பிரிட்ஜ் காமன்வெல்த் அறக்கட்டளை மூலம் துவக்கப்பட்ட "பீமானந்தா மோனப்பா உதவித்தொகை' மூலம் தேர்வாகியுள்ள முதல் மாணவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது

சிட்கோ தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 108 ஆக உயரும்: ஸ்டாலின்

கோவை, ஆக. 1: தமிழகத்தில் 2011-ல் சிட்கோ தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 108ஆக உயர்த்தப்படும் என்று, தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கோவை கொடிசியா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறு, குறுந்தொழில்களுக்கான மாநில மாநாட்டில் அவர் பேசியது:

நாட்டின் மொத்த ஏற்றுமதியில் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு சுமார் 40 சதவீதம். அதேபோல உற்பத்தியாகும் ஒட்டுமொத்த ஆலை உற்பத்திப் பொருட்களில் 45 சதவீதம் சிறு, குறுந்தொழில் கூடங்களில் உற்பத்தியாகின்றன. இந் நிறுவனங்களில் சுமார் 6 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

நாட்டிலேயே முதல்முறையாக பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்காக தனிக்கொள்கையை 2008-ல் மாநில அரசு அறிவித்தது.

சிறுதொழில் வளர்ச்சிக்காக 1970-ல் சிட்கோவை முதல்வர் கருணாநிதி தான் நிறுவினார். அதன் பின்னர் 2006-ம் ஆண்டு வரை 78 தொழிற்பேட்டைகள் இயங்கி வந்தன. 2011-க்குள் இதன் எண்ணிக்கை 108 ஆக உயரும்.

சிட்கோ தொழிற்பேட்டையில் 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இங்கு 6,774 தொழில்நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில்

உள்நாட்டு உற்பத்தி ரூ. 11,433 கோடி. ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு ரூ. 3,112 கோடி.

இதன் மூலம் மாநில அரசுக்கு ரூ. 1,080 கோடியும், மத்திய அரசுக்கு ரூ. 660 கோடியும் வருவாய் கிடைத்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மாநில அரசு மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வரவு-செலவு திட்ட மதிப்பீடு ரூ. 282 கோடியே 79 லட்சம். நடப்பு நிதியாண்டில் திட்ட மதிப்பீடு ரூ. 98 கோடியே 26 லட்சம்.

கடந்த 4 ஆண்டுகளில் முதலீட்டு மானியம், வாட் வரி மானியம், மின்னாக்கி மானியம், பின்முனை வட்டி மானியம், குறைந்த அழுத்த மின்மானியம் என மொத்தம் ரூ. 83.73 கோடி அளவுக்கு மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் மானியமாக ரூ. 56.14 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறுதொழில் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு சிறப்பாக உள்ளது. 2010-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி தமிழகத்தில் 6.31 லட்சம் பதிவுபெற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 43 லட்சத்து 92 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இத் தொழில்நிறுவனங்களில் ரூ. 26,136 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றார் மு.க.ஸ்டாலின்

பழனியில் சிந்து சமவெளி நாகரிக ஓவியக் குறியீடுகள்

கரடிக் கூட்டம் மலையில் கண்டுபிடிக்கப்பட்ட 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியக் குறியீடுகள். (வலது) 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைப் பல்லாங்குழிகள்.
பழனி, ஆக. 1: பழனி அருகே சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக ஓவியக் குறியீடுகள் மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட பல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பழனியில் இருந்து கொழுமம் செல்லும் வழியில் உள்ளது கரடிக்கூட்டம். இங்குள்ள கரடிக்கூட்டம் மலையில், கிழக்கு முகமாக உள்ள வழுக்குப் பாறையின் மேலே மூன்று குகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு குகையின் தாழ்வாரத்தில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பழனியை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, தண்டபாணி என்பவருடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டார். இது பற்றி ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்த தகவல்கள்:

இவற்றை பாறை ஓவியம் என்பதை விட ஓவியக் குறியீடுகள் என்பதே சரியானது. இரண்டு குறியீடுகளும் வெள்ளை நிறத்தில் உள்ளன. இடதுபுறக் குறியீடு சதுரமாக 11 செ.மீ நீளம், 11 செ.மீ உயரத்தில் உள்ளது. வலதுபுறக் குறியீடு சரிசமமாக பிரிக்கப்பட்ட நான்கு சதுரம்போல உள்ளது. இதன் நீளம் 10 செ.மீ., உயரம் 9 செ.மீ ஆகும். இவை எதற்காக வரையப்பட்டது என்பது தெரியவில்லை. இவை சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம். இவை சிந்து சமவெளி அகழாய்வில் கண்டறியப்பட்ட குறியீடுகளை ஒத்துள்ளது.

சிந்து சமவெளி அகழாய்வில் 417 குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் விவரம் முழுமையாகத் தெரியவில்லை. தற்போதுள்ள குறியீட்டில் வலதுபுறம் உள்ளது சிந்து சமவெளி குறியீட்டின் 240-வது வடிவத்தையும், இடதுபுறம் உள்ளது 247-வது குறியீட்டையும் ஒத்துள்ளது. இதேபோல குறியீடுகள் தர்மபுரி மாவட்டம் ஓதிக்குப்பம், பாபநத்தம் மற்றும் ஆண்டிமலை பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  அதேபோல மதுரை அருகேயுள்ள கொங்கர் புளியங்குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழந்தமிழ் பிராமி கல்வெட்டிலும் இறுதியில் இக்குறியீடு உள்ளது. சங்க கால தமிழ் மக்கள் இவற்றை எதற்காக பயன்படுத்தினர் என்பது புரியவில்லை. இவற்றில் வலதுபுறம் உள்ளதை இடம் அல்லது மனை என்றும், காலம் அல்லது பொழுது என்றும் படித்துள்ளனர். இடதுபுறம் உள்ளதை வீடாக குறித்துள்ளனர் பலர்.

இவற்றின் மூலம் சிந்து சமவெளி நாகரிகம், தமிழர்களின் பண்பாட்டின் எடுத்துக்காட்டாகும் என்பது தெரியவருகிறது.

2500 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைப் பல்லாங்குழிகள் இந்த மலை, பழனியில் உள்ள கல்வெட்டுகளில் பன்றிமலை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பன்றிமலையின் ஓரத்தில் பெருவழிப்பாதை உள்ளது. பெருவழிப்பாதை என்பது பழங்காலத்தில் மதுரை, பழனி வழியே கேரளத்துக்கு சென்று கடல்வழி வாணிபம் செய்ய பயன்படுத்தப்பட்ட பாதையாகும்.

பன்றிமலையின் ஒருபுறம் மூன்று பாறைப் பல்லாங்குழிகள் உள்ளன. இவற்றில் ஒன்று மட்டும் நன்கு தெரியும் நிலையில், மற்ற இரண்டு பாறைகள் வளர்ச்சியால் மூடப்பட்டுள்ளன. இவற்றை அந்த பெருவழிப்பாதை வணிகர்கள் குகையில் தங்கும் போது பொழுது போக்க பயன்படுத்தியிருக்கலாம்.

பல்லாங்குழி விளையாட்டு தமிழ்நாடு மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், பஞ்சாப், ஒரிசா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, ஜிம்பாப்வே, தான்சானியா ஆகியவற்றின் பழமையான விளையாட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது


Reply all
Reply to author
Forward
0 new messages