சூடாமணிஎன்பது நம் எல்லோருக்கும் தெரியும், சிதாப்பிராட்டி
அந்த அனுமனிடம் தன்னுடைய சூடாமணியைத் தான் உயிருடன்
இருப்பதைத்தெரிவிக்க ஒரு அடையாளமாகக் கொடுத்து
அனுப்பினார் ,இதற்கே 500க்கும் மேல் ஸ்லோகங்கள் உண்டு
என நினைக்கிறேன்,பலர் இதற்கு பாஷ்யமும் எழுதியுள்ளனர்.
இன்னும் ராஜஸ்தானிலும் குஜராத்திலும் இந்தச் சூடாமணி அணியும் வழக்கம்
உள்ளது இது பலரககற்களால் ஆனது நவரத்தினங்களால் செய்யப்படும் ஒரு அணிகலன்
,இதை
தலையில் வகிட்டிலிருந்து ஆரம்பித்து நெற்றி அரம்பத்தில் படும்படியாக
அணிவார்கள் தலையில் தான் கடைசி சக்க்ராவான ஸ்ஹஸ்ராரா இருப்பதால் அது
முக்கியமாக இருந்திருக்குமோ
என நினக்கிறேன்
சூடாமணி தலையில் எப்படி பிரகாசிக்கமோ அதுபோல் விவேகச்சுடர்
சூடாமணியைப்போல் பிராகாசிக்கிறது
அதில் கூறிய கருத்துக்கள் ,,
தெய்வத்தின் அருள் இருக்க ஒருவன் சத்சங்கத்தில் இருப்பான்
சத்சங்கத்தில் இருக்க அவனுக்கு நல்ல குருவும் கிடைப்பார் , ஒரு நல்ல
குரு கிடைக்க நல்ல எண்ணங்கள் உருவாகும் ,
குரு எப்படி இருக்க வேண்டும்?
அவர் நல்லெண்ணங்கள் மட்டும் கொண்டிருக்க வேண்டும் சொல்லிக்கொடுப்பதைக்
கடைப்பிடிக்க வேண்டும் பாபச்செயலகள் செய்யாதிருத்தல் வேண்டும் .
வேதங்களைக் கற்று ஓதி அதன் வழி
நடக்கவும் வேண்டும் தீயஎண்ணங்கள் வரவிடாமலும் அப்படி வந்துவிட்டால்
அதைச்சுட்டெரித்து மனதைவிட்டே நீக்க வேண்டும்
இரக்க சுபாவம் மனித நேயம் கருணை நல்வழி இவைகளுக்கு
வழிகாட்ட வேண்டும்.துக்கம் சுகம் இரண்டையும் சமநிலையாகப்
பாவிக்கவேண்டும் பிறர் சேவை செய்யவேண்டும் தன் நலமில்லாமல் இருக்க
வேண்டும் பற்றை ஒதுக்குப்வராக இருக்க வேண்டும் இதே போல் மஹான்கள்
இப்பவும் இருக்கிறார்கள்
{ஆனால் நம்க்கு பக்குவம் போதாமல் அவர்களைக் கண்டுக்
கொள்ள முடிவதில்லை ,போலி சாமியார்களினால் நம்பிக்கை
குறைந்து போகிறது என நினக்கிறேன் }
அடுத்த நிமிடம் நம் வாழ்வில் நட்ப்பது என்ன்வென்று தெரியாது
ஆகையால் நல்லகாரியத்தை இப்போதே செய்து விடு ஆசை யாரை விட்டது
?ஆசைப்படலாம்,ஆனால் அதிக அளவு அதாவது பேராசைப்படாதே ." பேராசை
பெருநஷ்டம்"ஆசைகள் ஓரளவு அந்தந்த காலங்களில் அனுபவித்தபின்னர் அதையும்
விவேகத்தால் வராமல் பார்த்துக்கொள் ,வந்து விட்டால் தடை
செய்துவிடு நான் என்றச்சொல்லைக் கவனித்து அந்த நான் யார்?
என்று சிந்தித்தல் வேண்டும் .கைவலி என்கிறோம் கை என்பது
நானா ,,,கால் வலி என்கிறோம் கால் என்பது நானா? கால் என்பது நானாக
இருந்தால் "நான் வலி "என்று ஏன் சொல்வதில்லை?"நான் தூங்கிவிட்டேன்
என்பதில் தூங்கியது யார் ?
என் கண்ணா அல்லது நானா ? இவைகளெல்லாம் சிந்திக்கச் சிந்திக்க நம்க்கு
விடைக்கிடைக்கும் ,எல்லா விஷயங்களுக்கும்
"நான் யார்?"என்ற கேள்வி கேட்க ஒரு நாள் ஞானம் வெளிப்படும்
என்று விவேக சிந்தாமணி சொல்கிறது
இந்த ஞானம் ஆரம்பத்தில் கொடுப்பது நல்ல குருதான் அவர்
ஆசியுடன் கடவுள் சித்தமும் இருந்தால் தான் இந்த நிலை கிடைக்கும் .
அன்புடன் விசாலம்
--~--~---------~--~----~------------~-------~--~----~
You received this message because you are subscribed to the Google Groups "ILLAM [இல்லம்], your HOME". This group is affiliated to www.azhagi.com, hosting Azhagi [அழகி], the one'stop Tamil software for "all" your Tamil computing needs.
To post to this group, send email to il...@googlegroups.com
To unsubscribe from this group, send email to illam-un...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/illam?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---