விவேக சூடாமணி முதல் பாகம்

175 views
Skip to first unread message

vishalam raman

unread,
Nov 5, 2008, 12:31:13 PM11/5/08
to இல்லம் (your HOME), namb...@googlegroups.com, pira...@googlegroups.com
விவேக சூடாமணி என்பது ஆத்மாவின் தத்துவங்களைச் சொல்லும்
நூல் ,இதை எழுதியவர் ஆதி சங்கரர் , இது அவரது முதல் ஆன்மீக நூல்.இதில்
அவர் பாமர மக்களுக்கும் புரியும்படி மிக
எளிதாக எழுதியிருக்கிறார்,இதைப் படிக்கப்படிக்க ஆன்மீக வழி
எளிதாக அடைய முடியும் விவேகம் என்பதை இரண்டு விதமாகப்
பிரயோகிக்கலாம் "அந்த மனுசன் ரொம்ப விவேகமான மனுசன் தான்" என்றும்
"அவனுக்கு சின்ன வயதிலேயே விவேகம் வந்து விட்டது என்றும் கூறக்
கேட்டிருக்கிறோம் இந்த அர்த்தத்தில் விவேகம் என்றால் அறிவு ,
ஆன்மீகத்தில் விவேகம் என்பதற்கு உலகத்தில் இருந்தும் காணமுடியாத
இறைவனைப்பற்றி உண்மைகளைத் தெரிந்துக்கொண்டு அதைப்பற்றிச் சிந்தித்து
மேலும் பல உண்மைகளை அறிவது எனலாம் எது தவறு எது சரியானது என்று
சிந்திப்பதும் விவேகம் தான்

சூடாமணிஎன்பது நம் எல்லோருக்கும் தெரியும், சிதாப்பிராட்டி
அந்த அனுமனிடம் தன்னுடைய சூடாமணியைத் தான் உயிருடன்
இருப்பதைத்தெரிவிக்க ஒரு அடையாளமாகக் கொடுத்து
அனுப்பினார் ,இதற்கே 500க்கும் மேல் ஸ்லோகங்கள் உண்டு
என நினைக்கிறேன்,பலர் இதற்கு பாஷ்யமும் எழுதியுள்ளனர்.
இன்னும் ராஜஸ்தானிலும் குஜராத்திலும் இந்தச் சூடாமணி அணியும் வழக்கம்
உள்ளது இது பலரககற்களால் ஆனது நவரத்தினங்களால் செய்யப்படும் ஒரு அணிகலன்
,இதை
தலையில் வகிட்டிலிருந்து ஆரம்பித்து நெற்றி அரம்பத்தில் படும்படியாக
அணிவார்கள் தலையில் தான் கடைசி சக்க்ராவான ஸ்ஹஸ்ராரா இருப்பதால் அது
முக்கியமாக இருந்திருக்குமோ
என நினக்கிறேன்
சூடாமணி தலையில் எப்படி பிரகாசிக்கமோ அதுபோல் விவேகச்சுடர்
சூடாமணியைப்போல் பிராகாசிக்கிறது
அதில் கூறிய கருத்துக்கள் ,,
தெய்வத்தின் அருள் இருக்க ஒருவன் சத்சங்கத்தில் இருப்பான்
சத்சங்கத்தில் இருக்க அவனுக்கு நல்ல குருவும் கிடைப்பார் , ஒரு நல்ல
குரு கிடைக்க நல்ல எண்ணங்கள் உருவாகும் ,
குரு எப்படி இருக்க வேண்டும்?
அவர் நல்லெண்ணங்கள் மட்டும் கொண்டிருக்க வேண்டும் சொல்லிக்கொடுப்பதைக்
கடைப்பிடிக்க வேண்டும் பாபச்செயலகள் செய்யாதிருத்தல் வேண்டும் .
வேதங்களைக் கற்று ஓதி அதன் வழி
நடக்கவும் வேண்டும் தீயஎண்ணங்கள் வரவிடாமலும் அப்படி வந்துவிட்டால்
அதைச்சுட்டெரித்து மனதைவிட்டே நீக்க வேண்டும்
இரக்க சுபாவம் மனித நேயம் கருணை நல்வழி இவைகளுக்கு
வழிகாட்ட வேண்டும்.துக்கம் சுகம் இரண்டையும் சமநிலையாகப்
பாவிக்கவேண்டும் பிறர் சேவை செய்யவேண்டும் தன் நலமில்லாமல் இருக்க
வேண்டும் பற்றை ஒதுக்குப்வராக இருக்க வேண்டும் இதே போல் மஹான்கள்
இப்பவும் இருக்கிறார்கள்
{ஆனால் நம்க்கு பக்குவம் போதாமல் அவர்களைக் கண்டுக்
கொள்ள முடிவதில்லை ,போலி சாமியார்களினால் நம்பிக்கை
குறைந்து போகிறது என நினக்கிறேன் }

அடுத்த நிமிடம் நம் வாழ்வில் நட்ப்பது என்ன்வென்று தெரியாது
ஆகையால் நல்லகாரியத்தை இப்போதே செய்து விடு ஆசை யாரை விட்டது
?ஆசைப்படலாம்,ஆனால் அதிக அளவு அதாவது பேராசைப்படாதே ." பேராசை
பெருநஷ்டம்"ஆசைகள் ஓரளவு அந்தந்த காலங்களில் அனுபவித்தபின்னர் அதையும்
விவேகத்தால் வராமல் பார்த்துக்கொள் ,வந்து விட்டால் தடை
செய்துவிடு நான் என்றச்சொல்லைக் கவனித்து அந்த நான் யார்?
என்று சிந்தித்தல் வேண்டும் .கைவலி என்கிறோம் கை என்பது
நானா ,,,கால் வலி என்கிறோம் கால் என்பது நானா? கால் என்பது நானாக
இருந்தால் "நான் வலி "என்று ஏன் சொல்வதில்லை?"நான் தூங்கிவிட்டேன்
என்பதில் தூங்கியது யார் ?
என் கண்ணா அல்லது நானா ? இவைகளெல்லாம் சிந்திக்கச் சிந்திக்க நம்க்கு
விடைக்கிடைக்கும் ,எல்லா விஷயங்களுக்கும்
"நான் யார்?"என்ற கேள்வி கேட்க ஒரு நாள் ஞானம் வெளிப்படும்
என்று விவேக சிந்தாமணி சொல்கிறது
இந்த ஞானம் ஆரம்பத்தில் கொடுப்பது நல்ல குருதான் அவர்
ஆசியுடன் கடவுள் சித்தமும் இருந்தால் தான் இந்த நிலை கிடைக்கும் .
அன்புடன் விசாலம்

vishalam raman

unread,
Nov 6, 2008, 4:23:34 AM11/6/08
to இல்லம் (your HOME), namb...@googlegroups.com, pira...@googlegroups.com
இரண்டாம் பாகம் ,,,
இந்த நான் என்பதற்கு சாதி இல்லை பேதமில்லை மொழி நாடு குணம் குறை
என்று ஒன்றும் இல்லை
நாம் உலகத்தில் நடக்கும் நாடகத்தில் ஒரு வேஷம்
எடுத்துக்க்கொண்டிருக்க்கிறோம் ,அந்த வேஷம் போட்டுக்கொள்ள நிச்சியம் ஒரு
உடல் தேவை ,இப்போது நாம் ஒரு நடிகன் மேடையில் அந்த வேஷத்துடன்
நடிக்கிறோம் ,பின் நாடகம் முடிந்ததும் வேஷமும்
கலைந்துவிடுகிறது இதே போல்தான் உலகப்பற்று,,,,,,,,
முதலில் பற்றினால் ஒரு வேஷம் போடுகிறோம் ,அது ஒரு நாள் கலையத்தான்
போகிறது , குருவின் தயவால் அவரின் உதவியால் இந்த வேஷம் கலைக்கப்பட்டு
பின் ஆன்மாவை உணர்கிறோம் ,
எல்லா வேதாந்தத்திலும் ஆரம்பத்தில் கயிறு ,பாம்பு
உதாரணம் வரும் ,இருளில் ஒருவன் நடக்கிறான் மொரு சாதாரண
தாம்புக்கயிற்றைக் கண்டு பாம்பு என
நம்பி அலறுகிறான் பின் வெளிச்சத்தில் பார்த்தவுடன் அது கயிறாக
இருக்கிறது ,அதாவது ஞானஒளி வந்தவுடன் அவனுக்கு இது புரிகிறது , தெளிவு
பிறக்கிறது ,அறியாமை என்ற இருளில் அவன் கயிறைப்
பாம்பாக நினைக்கிறான் இதுதான் அவன் மாயையில்
சூழ்ந்திருப்பது ,,,,,,,
எப்போது ஒருவனுக்கு பற்று அகல்கிறதோ அப்போது
ஞானமும் பிறக்கிறது அந்த ஞானம் பிறந்து விட்டால் என்றுமே ஆனந்தம் தான்
துக்கம் அவனை அண்டுவதேயில்லை ,துக்கம் சுகம் ஏழை பணக்காரன் வெயில் குளிர்
எல்லாமே அவனுக்குச் சமம் தான்
"எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்போருள்
மெய்ப்பொருள் காண்பது அறிது "
என்கிறார் திருவள்ளுவர் ,
எந்தப்பொருளையும் அதன் உண்மைக்குணங்களை நன்கு உணர்ந்து பின் தான்
செயல்படவேண்டும்
உலகம் மாயையால் கவரப்பட்டிருக்கிறது அந்த மயக்கத்தில் நாம் விழாமல்
பொருள்களின் உண்மையைப் புரிந்து வழ்ந்தால் அத்வே ஞான வாழ்வாகும்.ஒரு
பெரிய நீரோடையில் பனிக்கட்டி விழுகிறது.. அது மிதந்தபடி பல நாட்கள்
அப்படியே இருப்பதில்லை .மெள்ள நீரில் கரைந்து அத்துடன் சேர்ந்து கலந்தும்
விடுகிறது
சங்கரர் சொல்கிறார் .
" ஒரு கையளவு நீரை எடுத்து இதுதான் கரைந்த பனிக்கட்டி நீர் என்று சொல்ல
முடியுமா? ஆன்மா பனிக்கட்டி என்றால் பிரம்மம் ஒரு கடல்
,,பனிக்கட்டிப்போல் ஆன்மா பிரும்மத்துடன்
கல்க்கிறது இதுவே "அஹம் பிரும்மாம்மி " நானே பிரும்மம் ,,,,,,,,,,

அன்புடன் விசாலம்

AKR Consultants

unread,
Dec 16, 2015, 8:38:34 AM12/16/15
to il...@googlegroups.com

--~--~---------~--~----~------------~-------~--~----~
You received this message because you are subscribed to the Google Groups "ILLAM [இல்லம்], your HOME". This group is affiliated to www.azhagi.com, hosting Azhagi [அழகி], the one'stop Tamil software for "all" your Tamil computing needs.
To post to this group, send email to il...@googlegroups.com
To unsubscribe from this group, send email to illam-un...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/illam?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---




--
Reply all
Reply to author
Forward
0 new messages