என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

3,714 views
Skip to first unread message

Geetha Sambasivam

unread,
Mar 4, 2013, 6:11:40 AM3/4/13
to மின்தமிழ்

கெளரவமா காக்கிறோம்? ஆடம்பரம் செய்கிறோம்!

ஏற்கெனவே என் கல்யாணம் எப்படி நடந்ததுனு எழுதி இருக்கேன்.  அந்தக் கால கட்டத்திலேயே மாற்றங்கள் வந்துவிட்டதாய்ப் பேசிப்பாங்க.  இப்போ இன்று எங்கள் ப்ளாகின் ஆ"சிரி"யர் திரு கெளதமன் அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ள ஒரு பதிவு கெளரவம் காத்தல்.  கெளரவம் காக்கப்படுகிறதா அல்லது உள்ளுக்குள்ளாக பயந்து கொண்டே கெளரவம் காக்கப்படுகிறதாய் நினைக்கிறோமா?  இன்றைய கல்யாணங்களில் எத்தனை எத்தனை ஆடம்பரச் செலவுகள்! :( தவிர்க்க முடியாதா? அல்லது இது தான் கெளரவம் என நினைக்கிறோமா?

எங்கள் ப்ளாக் பதிவில் பத்திரிகைக்கு நாற்பது ரூபாய்னு போட்டிருக்காங்க. அதுவும் தப்பு, அல்லது அவருக்கு உள்ள நிலைமை இன்னமும் புரியலைனு நினைக்கிறேன்.  ஒரு பத்திரிகை நூறு ரூபாயில் இருந்து இருநூறு ரூபாய் வரை ஆகிறது சிலருக்கு.  ஏற்கெனவே திருமணம் குறித்த சில முக்கியமான தகவல்களைப் பதிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கு.  அதைப்  போகப் போகப் பார்த்துக்கலாம். இப்போதைக்கு இன்றைய திருமணங்கள் ஆடம்பரம் நிறைந்தவையே. பத்தாயிரம் ரூபாய்க்குப் பட்டுப் புடைவை (ஒன்றே ஒன்றுக்கான விலை)  எடுத்தாலும் அது நல்ல பட்டுனு உறுதி சொல்ல முடியாது. :)))) அதோடு இப்போது இருபத்தையாயிரத்துக்கும் மேலே பட்டுகள் டிசைன் செய்து வருகின்றன.  அதற்கேற்ற விளம்பரங்களும் வருகின்றன.  அவை எல்லாம் பட்டோ இல்லையோ, வாங்கித் தள்ளுகிறோம்.

அடுத்து முக்கிய உறவினர்க்கு வைச்சுக்கொடுக்கிறது என்ற சம்பிரதாயம்.  அது இரண்டு சூட்கேஸ் நிறைய வாங்கி இருப்பாங்க.  பை, பையாக எல்லாருக்கும் கொடுப்பாங்க. வாங்கிண்டவங்க சந்தோஷமா இருப்பாங்களானா அது இல்லை.  எங்க வீட்டுக் கல்யாணங்களிலேயே பார்த்திருக்கேன். பலருக்கும் குறைதான். அடுத்து மொய் வைக்கிறவங்களுக்குத் திரும்ப அளிக்கும் பரிசுப் பொருள்.  அதுவானும் இப்போதெல்லாம் உபயோகமாக டப்பர்வேர்,  காய்கள் வைக்கும் டப்பா, டிபன் டப்பா, அல்லது சின்னச் சின்ன விக்ரஹங்கள் எனக் கொடுக்கிறாங்க. ஆனால் பெரும்பாலானவர்கள் இன்னமும் மாறாமல் ரவிக்கைத் துணி தான் வாங்கிக் கொடுக்கிறாங்க.  என்னைப் பொறுத்தவரை 40ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருந்தாலும்(அதுக்குக் குறைச்சு ரவிக்கைத் துணியைப் பார்க்கலை) தைத்துப் போட்டுக் கொண்டுவிடுவேன்.  கொடுக்கிறவங்க நம்மளுக்காகக் கொடுக்கையிலே அதைப் பயன்படுத்த வேண்டாமா?  ஆனால் பெரும்பாலனவர்கள் பயன்படுத்துவதில்லை. அதிலும் ஒரு குறை.  இதை எல்லாம் தவிர்க்கலாம்.

இம்மாதிரிப் பல ஆடம்பரச் செலவுகள் இருக்கின்றன.  ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். மஹாராஷ்டிரா, குஜராத்தில் பெண், பிள்ளை இரு வீட்டுக்காரங்களும் திருமணச் செலவைப் பகிர்ந்துக்கணும்.  அதே போல் பெண்ணுக்கு மொய் வைத்தாலும், பிள்ளைக்கு மொய் வைத்தாலும் ஒரே நபர் தான் வசூல் செய்வார்.  வசூல் ஆன பணத்தில் அவங்க குடித்தனத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்துடுவாங்க.  சாப்பாடு மிக மிக எளிமையானதாய் இருக்கும். அதிலும் மஹாராஷ்டிராவில் பெண் வீட்டில் ஐம்பது பேர் எனில் பிள்ளை வீட்டிலும் ஐம்பது பேர்தான் வரலாம்.  கூடுதலாக ஒருத்தர் வந்தால் பிள்ளை வீட்டில் தனியாகக் கொடுக்கணும்.  இப்போது எப்படினு தெரியலை.  



பின் குறிப்பு:  இதற்கு வரும் வரவேற்பைப் பொறுத்து மேலே தொடருவேன்.  நன்றி.  வணக்கம்.

Geetha Sambasivam

unread,
Mar 5, 2013, 2:05:06 AM3/5/13
to மின்தமிழ்

கல்யாணம் பண்ணிப்பார்!



கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப்பார்னு சொல்வாங்க.இரண்டுமே பண்ணியாச்சு.  கல்யாணம் ஒன்றில்லை.  நிறையக் கல்யாணங்கள். அதிலே நாங்களே (நானும் என் மறுபாதியும்) கல்யாண வேலைகளில் பங்கெடுத்துக் கொண்ட கல்யாணங்கள் எங்க கல்யாணம் தவிர ஏழு அல்லது எட்டு இருக்கும். எனக்கு நினைவு தெரிஞ்சு நல்லா அனுபவிச்ச கல்யாணம்னு சொல்லணும்னா என்னோட சித்தி கல்யாணம் தான்.  அசோகமித்திரனின் மனைவியான இவங்க கல்யாணமே நான் விபரம் தெரிஞ்சு பத்துப் பதினோரு வயசிலே அனுபவிச்ச முதல் கல்யாணம்.  அப்போல்லாம் கல்யாணம்னா ஏதோ நாம ஜாலியா இருக்கிறதுக்கு மத்தவங்க பண்ணிக்கிறாங்க என்ற அளவில் மட்டுமே நினைப்பு இருக்கும்.  சொந்தக்காரங்க கூடுவதும், பக்ஷணங்கள் பண்ணுவதும், ஒரே கொண்டாட்டமாய் இருப்பதும், எல்லாத்துக்கும் மேல் பள்ளிக்கு விடுமுறை கொடுத்துவிட்டு வீட்டில் இருப்பதும் எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுத்தது.

என் கல்யாணமே எனக்குக் கொஞ்சம் விளையாட்டாகவே சில சமயம் தோணி இருக்கு.  இதன் தாத்பரியத்தை நான் புரிஞ்சுக்கச் சில வருஷங்கள் தேவைப்பட்டன என்று சொல்வதில் வெட்கம் ஏதும் இல்லை.  போகப்போகத் தான் புரிய ஆரம்பித்தது.  கல்யாணத்தின் ஒவ்வொரு நுணுக்கங்களையும், ஒவ்வொருத்தர் கல்யாணத்திலும் நடக்கும் கலாட்டாக்களையும், வெவ்வேறு சம்பிரதாயங்களையும் நன்கு கவனிக்க ஆரம்பித்தேன். எது எப்படி இருந்தாலும் கல்யாணம் என்பதன் அடிப்படைத் தத்துவம் எதுவும் மாறவில்லை.  சடங்குகள், சம்பிரதாயங்களில் வித்தியாசங்கள் காணப்பட்டாலும் மற்ற வைதிக காரியங்களில் மாற்றம் இல்லை.  கல்யாணம் என்றால் என்ன?  ஏன்?  எதுக்கு? எப்படி? பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் தான் சரியா என்பதை எல்லாம் இங்கே வரும் நாட்களில் அலசுவோம். அவரவர் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.  மறுபடி கொஞ்சம் உடல்நலக்குறைவு என்பதாலும், வேலைகள் இருப்பதாலும் அடுத்த பதிவுக்கு ஓரிரு நாட்கள் ஆகலாம். 

Geetha Sambasivam

unread,
Mar 6, 2013, 2:01:06 AM3/6/13
to மின்தமிழ்

என்ன கல்யாணமடி, கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!




'கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம், தங்கத் தாலி கட்டுற கல்யாணம், என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்,"

இன்றைய முதலமைச்சர் கதாநாயகியாய் நடிச்ச ஏதோ ஒரு படத்தில் வரும் பாடல். (சந்திரோதயம்?) கதாநாயகி வளர்ந்தும் குழந்தையாக இருப்பாளாம். அவள் கேட்கும் கேள்விதான் இது.  சும்மாவானும் மேளம் கொட்டித் தாலி கட்டறதோடு கல்யாணம்ங்கறது முடியறதில்லை.  அதோடு தாலி மட்டும் கட்டிக் கொண்டு நடைபெறும் கல்யாணங்கள் இந்துத் திருமணச் சட்டப்படி செல்லாத திருமணங்கள் ஆகும்.  இந்துத் திருமணங்களில் அது எந்த ஜாதியினரானாலும் சரி, சப்தபதி என்ற ஒன்று நடந்த பின்னரே திருமணம் பூர்த்தியானதாய்க் கருதப்படும்.  அது வரைக்கும் என்னதான் தாலி கட்டிக் கொண்டாலும், அந்தத் தாலியின் புனிதம் குறித்துப் பல சினிமாக்களில், பல நெடுந்தொடர்களில் பக்கம் பக்கமாய் வசனம் பேசினாலும் திருமணம் ஆனதாய்க் கருத முடியாது.  அப்படின்னா, கோயில்லே வைச்சுத் தாலி கட்டிக்கிற கல்யாணங்கள்?

அவையும் செல்லாதவையே.  அங்கேயும் ஹோமம் வளர்த்து அக்னிசாட்சியாய் சப்தபதி நடந்தாலே திருமணங்கள் செல்லும். காதல் ஜோடி அவசரமாய் மாலை மாற்றிக் கொண்டு தாலிகட்டிக்கொள்ளும் திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.  இல்லைனா அவனோ, அவளோ நடுவில் பிரிந்து போனால் கூட என்னனு கேட்டுக்க முடியாது. இப்போதெல்லாம் சப்தபதியோடு நடக்கும் திருமணங்களே பதிவும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.  ஏனெனில் பெண்களோ, பிள்ளைகளோ அதிகம் வெளிநாடுகள் செல்கின்றனர்.  அங்கெல்லாம் திருமணப்பதிவுச் சான்றிதழ் அவசியம் தேவை. ஆகையால் திருமணம் பதிவு செய்யப்படுகிறது.

ஆகவே திருமணம் என்பது சாதாரணமான ஒரு விஷயமே இல்லை.  காலம் பூராவும் அவனும், அவளும் நிலைத்து நின்று இல்வாழ்க்கை வாழ வேண்டும்.  இதைத் தான் ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள்.  ஏனெனில் அவன் மூலமும், அவள் மூலமுமே அந்த வம்சம் விருத்தியாகிறது.  அப்போ திருமணம் வம்ச விருத்திக்கு மட்டுமா?

"எனக்கொரு மகன் பிறப்பான்;
அவன் என்னைப் போலவே இருப்பான்"

எனப் பாடி ஆடுவதற்கா?  அல்லது பெண்ணைப் பெற்றுக் கொண்டு, "அன்புள்ள அப்பா, அப்பப்பா"னு தெய்வத்திருமகள்களைப் பெறுவதற்கா? வம்ச விருத்தி முக்கியம் தான்.  ஏனெனில் ஒவ்வொருவருக்கும் பூர்வ கர்மாக்கள் இருக்கின்றன.  அதைக் கழித்தாக வேண்டும்,  அதற்கு அநேக ஜீவர்கள் பிறந்தாக வேண்டும்.  இதற்குத் தாம்பத்தியமும் அவசியமே.  ஆனால் அதே சமயம் வெறும் வம்ச விருத்தி மட்டுமே திருமணத்தின் காரணம் இல்லை.  திருமணம் என்பது ஒரு பிரமசாரியை கிரஹஸ்தாசிரமத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டி நடைபெறும் ஒரு முக்கியமான சம்ஸ்காரம்.  அதோடு கூட அந்தப் பெண் அவனோடு கூடி இருந்து குழந்தைகள் பெற்றுக்கொள்வதோடு மட்டுமில்லாமல் அற வழியில் இல்லறத்தை நடத்திக்காட்ட வேண்டும்.  இதற்கானதொரு அதி அற்புதமான சேர்க்கையே கல்யாணமும், அதை ஒட்டிய இல்லற வாழ்க்கையும். பிரமசாரி ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?


பி.கு. ரொம்பவே தத்துவார்த்தமாக இருக்காது என இப்போதே சொல்லிவிடுகிறேன்.  கொஞ்சம் சரளமாக, ஜனரஞ்சகமாகவே எழுத எண்ணம்.  எவ்வளவு தூரம் என்னால் முடியும் என்பது தெரியாது.  பார்க்கலாம்.

Geetha Sambasivam

unread,
Mar 7, 2013, 5:55:39 AM3/7/13
to மின்தமிழ்

மணமகளே, மருமகளே வா, வா!


"மணமகளே மருமகளே வா, வா, உன் வலது காலை எடுத்து வைத்து வா, வா, குணமிருக்கும் குலமகளே வா, வா, தமிழ்க் கோயில் வாசல் திறந்து வைப்போம் வா, வா."

மணமகளை புகுந்த வீட்டுக்கு அழைக்கும் இந்தப் பாடல் ஒலிக்காத திருமண தினங்களே இல்லை ஒரு காலத்தில்.  மணமகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் அவள் குணத்தையும், அதனால் வீடு, வாசல் செழிக்கப் போவதையும் எடுத்துச் சொல்லும் பாடல் இது.  வரப்போகும் பெண்ணை சாக்ஷாத் மஹாலக்ஷ்மியாகவே மதித்துப் போற்றிய காலம் ஒன்று உண்டு.  திருமணம் என்பது இரு குடும்பங்கள் இணையும் ஒரு பந்தம்.  அதில் உள்ள ஒவ்வொரு சடங்கும் அர்த்தம் பொதிந்தது.   அவற்றையும் ஒவ்வொன்றாய்ப் பார்க்கப் போகிறோம்.  ஒரு காலத்தில் இப்படி எல்லாம் இருந்த நம் கல்யாணக் காலங்கள் நாளா வட்டத்தில் மறைந்து போய் விட்டன.  அதோடு இல்லாமல், பெண்ணே தன் காதலனைப் பார்த்து,

"கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா? .. ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கிலாமா..தாலியத்தான் கட்டிகிட்டு பெத்துக்கலாமா.. இல்ல புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா'?"

என்று கேட்பதாகப் பாடல்கள் எழுதப் பட்டு அவை தமிழ்நாட்டின் தேசிய கீதமாகவே விளங்கின. இது காலத்தின் கோலம் தான்.  திருமணத்தை இவ்வளவு மோசமாக நாம் நினைக்கும் அளவுக்கு மாறியது திருமணம் என்பதன் உண்மையான அர்த்தம் புரியாமல் வெறும் உடல் இன்பத்துக்காகவே திருமணம் என்று மாறிப் போக ஆரம்பித்தது தான் காரணம்.  உண்மையில் திருமணம் என்பது கணவனோடு கூடி இருந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதோடு அவன் காரியங்கள் அனைத்திலும் அவனுக்குத் துணை நிற்பதற்கே என்பதைப் போன பதிவிலேயே பார்த்தோம்.  அப்படி இருந்த கல்யாணங்களின் பொருள் மாறிப் போய் வியாபாரம் ஆனது எப்போது?

ஒரு காலத்தில் குருகுலம் முடித்த பிரமசாரிகள் வீடு வீடாக பிக்ஷை எடுத்து வருகையில், பெண்ணை வைத்திருப்பவர்கள் அந்த பிரமசாரியின் அபிப்பிராயத்தைக் கேட்டுக் கொண்டு தங்கள் வீட்டுப் பெண்ணை தானமாய்க் கொடுப்பது உண்டு எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.  என் அப்பா வீட்டிலேயே இப்படி நடந்ததாக அப்பா சொல்லி இருக்கிறார்.  அதற்கும் பின்னர் பிள்ளை வீட்டுக்காரர்களே பிரமசாரிப் பையருக்கு ஏற்ற பெண் எங்கிருக்கிறாள் எனத் தேடிச் சென்று பெண் கேட்டுத் திருமணம் செய்து வைப்பதாகவும் கேட்டிருக்கிறேன்.  இப்படிப் பெண்ணைத் தேடிப் பிள்ளை வீட்டினரே சென்றிருக்கின்றனர்.  ஆனால் மாப்பிள்ளையைத் தேடிப் பெண் வீட்டுக்காரர்கள் வர ஆரம்பித்தது ஆங்கிலேய ஆதிக்கத்தின் பின்னரே.



ஆங்கிலேயர்கள் நம்மை ஆள ஆரம்பித்த பின்னரே, குருகுலப் படிப்புக்கு மூட்டை கட்டிவிட்டு நம் பிள்ளைகளுக்கு  ஆங்கிலப் படிப்பும், அதன் காரணமாக மடிப்புக்கலையாமல் உத்தியோக வாழ்க்கையும் ஏற்பட ஆரம்பித்த பின்னருமே நம் கல்யாணங்கள் அனைத்தும் வியாபாரக் கல்யாணங்களாக மாற ஆரம்பித்தன.  அதற்கு முன்னர் வரை குருகுல வாசம் முடிந்து வரும் பிரமசாரிக்கு ஏற்ற பெண் எங்கிருக்கிறாள் எனப் பிள்ளை வீட்டுக்காரர்களே தேடிச் செல்வார்கள்.  ஆனால் பிள்ளைகளுக்கு ஆங்கிலப் படிப்பும் உத்தியோகமும் ஏற்பட்டு அதன் மூலம் கெளரவம் அதிகம் ஆனதாக ஏற்பட்ட உடனே பெண் வீட்டுக்காரர்கள் போட்டிபோட்டுக் கொண்டு பெண்களுக்கு வரதக்ஷணை கொடுத்துப் பையனைத் தேடும் நிலைமைக்கும் ஆளானார்கள்.  இதற்கு அப்போது பெண்களின் விகிதாசாரம் அதிகமாகவும், ஆண்களின் விகிதாசாரம் குறைவாகவும் இருந்ததும் ஒரு காரணம். 


இன்னும் அலசுவோம்.


பி.கு.  படம் உதவி, ராஜராஜேஸ்வரி, jaghamani.blogspot.com

ராஜராஜேஸ்வரி



Geetha Sambasivam

unread,
Mar 10, 2013, 9:19:09 AM3/10/13
to மின்தமிழ்

சில தெரிந்த ஆனால் முக்கியத் தகவல்கள் நினைவூட்டலுக்கு!


நம் நாடு ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் சரியான பாதையில் தான் போய்க் கொண்டு இருந்தது. ஆங்கிலேயர் வந்த பின்னரே இங்குள்ள குருகுல முறைகள் அனைத்தும் சிதற ஆரம்பித்தன.  அவர்கள் வந்ததும் இங்கே தெரிந்து கொண்ட முக்கியமான விஷயம்.  ஏழை பிராமணனாக இருந்தாலும் அவர்களுக்கு உள்ள மதிப்பையும், அரசர்கள் முதல் அனைவரும் அவர்களை ஆசாரியர்களாக மதிப்பதையும் பார்த்துப் புரிந்து கொண்டான்.  ஆசாரியர்களுக்கு இருக்கும் மதிப்பு அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.  அடுத்துப் பசுக்கள் வழிபடப் படுவது. கோயில்களின் முக்கியத்துவம்.  அந்தக் கோயில்கள் யாத்திரிகர்களுக்குப் புகலிடமாகவும் இடம் கொடுப்பது.  கோயிலின் அர்ச்சகர்களுக்குக் கிடைத்த முக்கியத்துவம்.  அரசன் முதல் கடைசிக் குடிமகன் வரை அவர்களுக்குச் செலுத்தி வந்த மரியாதை. ஆகவே இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்த நாட்டின் உள்நாட்டு விஷயங்களில் புகுந்து முதலில் குருகுல முறைக் கல்வியை ஒழித்துக் கட்டினார்கள்.  ஆங்கிலக் கல்வி தான் உயர்ந்தது;  இந்தியக் கல்வி முறையில் எதுவும் இல்லை என்ற எண்ணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் புகட்டினார்கள்.

அடுத்து அவர்கள் செய்தது நம் விவசாய முறையை அழிக்க ஆரம்பித்தது.  பசுக்கள் தான் விவசாயத்துக்கு முக்கியம்.  அவைகள் ஈனும் காளைகளே நிலத்தை உழுதுப் பண்படுத்தப் பயன்பட்டு வந்தன. ராபர்ட் க்ளைவ் இதை ஆய்ந்து ஆராய்ந்து பசுக்களே இந்திய விவசாயத்தின் முக்கிய முதுகெலும்பாக இருப்பதை உணர்ந்து அதையும் ஒழிக்க நினைத்தார்.  இந்தியாவின் முதல் மாட்டு மாமிசம் தயாரிக்கும் இடம் 1760 ஆம் ஆண்டு ஒரு நாளைக்குக் குறைந்தது முப்பதாயிரம் பசுக்களைக் கொல்ல வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்பட ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாய் வங்காளத்தில் மக்களை விடப் பசுக்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. பசுக்களைக் கொல்ல ஆரம்பித்துவிட்டால் இயற்கை உரங்கள் கிடைக்காது. பசு மாட்டின் மூத்திரம் பூச்சிக் கொல்லியாகப் பயன்பட்டு வந்தது.  அதுவும் கிடைக்காது.


1740 ஆம் ஆண்டு இந்தியாவில், குறிப்பாய்த் தமிழ்நாட்டில் ஆர்காடு மாவட்டத்தில் 54 க்வின்டால் அரிசி  ஒரு ஏக்கர் நிலத்தில் உற்பத்தி செய்யப் பட்டது.  இதற்குப் பயன்பட்டவை இயற்கை உரங்களே.  பூச்சிக் கொல்லிகளாகப் பசுமாட்டின் மூத்திரமும், சாணியுமே பயன்படுத்தப் பட்டன.  ஆனால் பசுக்கள் படுகொலை ஆரம்பித்ததும், 1910 ஆம் ஆண்டிற்குள்ளாக 350 பசுக்கொலைக்களங்கள் ஏற்படுத்தப் பட்டு இரவு பகலாக அவை வேலை செய்தன.  இதன் மூலம் கால்நடைகள் குறைய ஆரம்பித்ததோடு உரங்களின் தேவைக்கு இங்கிலாந்து நாட்டையும் அதன் செயற்கை உரத்தையும் நம்ப ஆரம்பித்தது இந்தியா.  பின்னர் சுதந்திரத்துக்குப் பின்னர் செயற்கை உரங்களின் மூலம், "பசுமைப் புரட்சி செய்தது இந்தியா. பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் செல்லப் போகிறார்கள் என்பது தெரிந்ததும் "தி கார்டியன்" என்னும் பத்திரிகை காந்தியைப் பேட்டி கண்டது. அப்போது காந்தி இந்தியா சுதந்திரம் அடைந்ததும் பசுவதைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்படும் எனவும், பசுக்களைக் கொல்லும் இடங்கள் முற்றிலும் அழிக்கப்படும் என்றும் உறுதி கூறினார்.  அதற்கு முன்னரே 1929 ஆம் ஆண்டில் நேருஜி ஒரு பொதுக்கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் பிரதமராகத் தான் நியமிக்கப் பட்டால் தான் செய்யப்போகும் முதல் வேலை பசுவதைத் தடுப்பு என்று முழங்கினார்.  ஆனால் 1947 ஆம் ஆண்டில் இருந்தும் அதன் பின்னரும் பசுக்களைக் கொல்லும் இந்தக் கொலைக்களங்கள்350 இல் இருந்து 36,000 ஆக மாறியதோடு ஆந்திராவிலும் மஹாராஷ்டிராவிலும் ஒரே நேரம் பத்தாயிரம் பசுக்களைக் கொல்லும் தொழில் நுட்பமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதை இங்கே கூறுவதன் நோக்கமே ஆங்கிலப் படிப்பு ஆரம்பித்த பின்னரே வரதக்ஷணைப் பழக்கம் ஏற்பட்டது என்பதைச் சொல்லவே.  அதில் ஆரம்பித்தது எங்கேயோ போய்விட்டது. :(  இப்போ நாம் கல்யாணத்தைக் குறித்துப் பார்ப்போம்.

பிரமசாரி ஏன் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்றொரு கேள்வி எழுந்தது.  அதற்குக் காரணம் இயற்கைக்கு விரோதமாக அனைவராலும் நடக்க முடியாது என்பது ஒன்றே ஆகும்.  எல்லாராலும் நைஷ்டிக பிரமசரியம் அனுசரித்துக்கொண்டு ஸமாவர்த்தனமும் பண்ணிக் கொள்ளாமல் குருவிடமே இருந்து அவருக்குச்சேவை செய்து கொண்டு, சந்நியாச வாழ்க்கை வாழ இயலாது. ஆகவே தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றொரு பொதுவான தர்மத்தை ஏற்படுத்தி உள்ளனர். நல்ல மனோதிடம் உள்ளவர்கள் சந்நியாசியாகவும் ஆகலாம்.  ஆனால் இளமையில் சந்நியாசியாக ஆகவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்துவிட்டுப் பின்னர் அதற்கு விரோதமாக நடக்கக் கூடாது என்பதற்காகவே ஸமாவர்த்தனம் என்பது முடிந்த பின்னர் மாணவன் குருவிடம் அனுமதி பெற்றுக் கொண்டு காசிக்கு யாத்திரை சென்று வந்து பின்னர் திருமணத்துக்கு ஆயத்தம் ஆகவேண்டும்.  திருமணம் வரையில் காசி யாத்திரை போய் வரும் கட்டத்தின் போது அவனுக்கு ஸ்நாதகன் எனப் பெயர்.  ஸமாவர்த்தனம் என்பது இப்போதைய பட்டமளிப்பு விழா போல் ஆகும்.  குருகுல வாசமும் பனிரண்டு வருடங்கள் ஏற்றாக வேண்டும்.  அதற்கு முன்னரே உபநயனமும் முடிய வேண்டும். மனதில் விகல்பமான எண்ணங்கள் உள் புகுமுன்னர் கல்வி உள்ளே சென்று மாணவனை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஏழில் இருந்து பனிரண்டு வயதுக்குள்ளாக உபநயனம் செய்வித்து குருவிடம் ஒப்படைத்தார்கள்.

இந்த உபநயனமும் அனைவருக்கும் பொதுவானது.  மற்ற வர்ணத்தவர் பனிரண்டு வயதுக்கும், பதினாறு வயதுக்கும் உபநயனம் செய்யலாம் எனச் சொல்லி இருக்கிறது.  பிரமசாரியாகவே இருந்தால் சிருஷ்டியின் நோக்கம் தடைப்படும். எல்லாரும் சந்நியாசியானால் அந்த சந்நியாசிகளுக்கு உணவளிப்பது யார்? அதற்காகவேனும் கிரஹஸ்தர்கள் வேணுமே.  ஆகவே இந்தப் பிரபஞ்சம் சரியானபடி நடைபெறவும், ஜீவர்கள் தங்கள் கர்மாவைக் கழிக்க வேண்டிப் பிறப்பெடுக்கவும், திருமணங்கள் தேவையாகின்றன. ஆனால் வெறும் குழந்தை பெற்றுக் கொள்வதும், மனைவியோடு இன்பம் துய்க்கவும் மட்டுமே திருமணம் என்று ஏற்படவில்லை.  அவரவர் தங்களுக்கு விதித்த கடமைகளைச் செய்ய வேண்டும்.  அதற்கு மனைவியின் துணையும் கட்டாயம் தேவை.

ஆதாரம்: தெய்வத்தின் குரல்.

Geetha Sambasivam

unread,
Mar 19, 2013, 4:30:50 AM3/19/13
to மின்தமிழ்



TUESDAY, MARCH 19, 2013

நீ பாதி நான் பாதி கண்ணே!

ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே

TUESDAY, MARCH 19, 2013

நீ பாதி நான் பாதி கண்ணே!

ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே

பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே

பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

ஆண் : நீயில்லையே இனி 
நானில்லையே உயிர் நீயே


படைப்புக்குத் தேவை பெண்ணினமே.  புழு, பூச்சியில் இருந்து அனைத்து ஜீவராசிகளும் பெண் இனம் ஆண் இனத்தோடு இணைந்தே தீரவேண்டும் என்பது இயற்கை வகுத்த நியதி. அனைத்துப் படைப்புகளும் பெண்ணினத்தில் இருந்தே வருகின்றன என்பதையும் அறிவோம்.  இப்படி இயற்கையே பெண்ணைப் படைக்கவும், ஆணை அதற்குத் தேவையான விதையைத் தரவும் எனப் படைத்து இருக்கிறபோது ஆண், பெண் பேதம் எங்கிருந்து வந்தது? பெண்ணுக்கே சுபாவமாகவே துன்பங்களை ஜீரணித்து எதிர்த்து நிற்கும் வல்லமை உண்டு. மநுநீதியில் கூட இதைக் குறித்துக் குறிப்பிடப் பட்டிருக்கிறதாய்ப் பரமாசாரியார் சொல்கிறார்.  க்டும்பத்தைக் கட்டிக்காக்கும் திறமையும் பெண்ணுக்கே உண்டு.  ஆகவே பிரமசாரியானவது அடுத்த நிலைக்குச் செல்லவேண்டித் திருமணம் செய்து கொள்கிறான்.  இதற்காகப் பல வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து ஒரு காலத்தில் தனக்கேற்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்ததாய்ச் சொல்கின்றனர். 

திருமணம் செய்து கொள்ளும் முன்னர் பெண்ணின் குலம், கோத்திரம் போன்றவை விசாரிக்கப் படும்.  ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொள்வது தடுக்கப் படுகிறது.  உறவின் முறை திருமணமும் தடுக்கப்பட்டே இருக்கிறது.  எந்த சாஸ்திரமும் உறவின் முறைத் திருமணத்தை ஆதரிக்கவே இல்லை.  எல்லா கோத்திரக்காரர்களும் வளர்ச்சி அடையவேண்டும் என்பதோடு ஒரே கோத்திரமாக இருந்துவிட்டால் காலப்போக்கில் ஆண்-பெண் விகிதங்கள் குறையும்போது அந்த கோத்திரக்காரர்கள் குறைவாக இருக்க வாய்ப்புண்டு என்பதாலும் ஒரே கோத்திரம் மறுக்கப்படுகிறது.  வெவ்வேறு கோத்திரங்களில் பிறந்தவர்கள் இணைந்தாலே குடும்பம் செழிப்படையும் என்பது தர்ம சாஸ்திரத்தின் பரிந்துரை ஆகும்.  மேலும் மன ஒற்றுமைக்கும் வெவ்வேறு கோத்திரத்தையே சிபாரிசு செய்கிறது சாஸ்திரம்.  அதோடு பெண்ணுக்குப் பதினேழு வயது கட்டாயம் முடிந்திருக்க வேண்டும்.  ஆணுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம்.  இதற்கான காரணமாக ஆயுர்வேதம் கூறுவது என்னவெனில், பெண் பதினாறு வயதில் பூர்ணவதியாக கர்ப்பம் தரிக்க தகுதி வாய்ந்தவளாக ஆகிவிட்ட்டாலும் ஆணுக்கு இருபத்தைந்து வயதில் தான் தந்தை ஆகும் தகுதி ஏற்படுகிறது எனக் கூறுகிறது.  பதினாறு வயதுக்குக் கீழே உள்ள பெண்ணுக்கும், இருபதுக்குக் கீழே உள்ள ஆணுக்கும் பிறக்கும் குழந்தைகள் நோயாளிகளாக ஆரோக்கியம் இல்லாமல் பிறக்கலாம் அல்லது அற்ப ஆயுளில் இறக்கலாம் எனக் கருதி வந்தனர்.

அதற்கும் முன்னால் பால்யத்திலே திருமணம் செய்விக்கும் வழக்கம் இருந்ததா எனத் தெரியவில்லை.  ஆனால் இது குறித்துப் பரமாசாரியார் தெரிவிப்பது என்னவெனில் பெண்ணுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்வித்த வழக்கம் இருந்தது என்றே கூறுகின்றார்.  பால்யத்தில் மனதில் கபடு, சூது தெரியா  பிள்ளைப் பருவத்தில் காமம் உட்புகும் முன்னர் இருவருக்கும் திருமணம் செய்வது வழக்கமாக இருந்ததை நாமெல்லோரு அறிவோம்.  எங்க வீட்டில் என் அம்மாவின் அம்மா அப்படித் திருமணம் ஆனவரே.  ஐந்து வயதுக் குழந்தையாக இருந்தபோது திருமணம் ஆகி இருக்கிறது.  என் தாத்தாவுக்குப் பதினேழு வயது.  அவர் சட்டம் படித்துக் கொண்டிருந்திருக்கிறார்.  ஆகவே என் பாட்டி வயதுக்கு வரும்வரையில் பிறந்தகத்திலும், புக்ககத்திலும் மாறி மாறி இருந்து வந்திருக்கிறார்.  ஐந்து வயது மாட்டுப் பெண்ணை மாமனார் தன் சம்பந்தி வீட்டிற்கு வந்து தங்கள் வீடு இருக்கும் பக்கத்து கிராமத்துக்குத் தூக்கிக் கொண்டு செல்வாராம்.  வாயில் விரலைப் போட்டுக் கொண்டு மாமனார் தோளிலேயே என் பாட்டி தூங்கி விடுவாராம்.  ஆனால் இப்படிச் சிறு வயதில் இருந்து பழகியதால் புக்ககத்து மனிதர்களோடு நெருக்கமும், பாசமும் அதிகம் ஆகும் என்பது அவர்கள் கணிப்பு.

இம்மாதிரியான திருமணங்களால் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் இயல்பாக நட்பு உருவாகி அது காதலாகவும், பாசமாகவும் மாறி, அவர்கள் வாழ்க்கைக்கு நீடித்ததொரு பிணைப்பை ஏற்படுத்தும் என்பது முன்னோர் கணிப்பு.  இப்போதெல்லாம் ஆசையில் தொடங்கினாலும் பின்னர் அது நட்பாகவும் மாறவேண்டும்.  ஏனெனில் ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்றொரு சொல்லாடல் உண்டு.  ஆசை அடங்கினாலும் நட்பு தொடரும்; தொடரவேண்டும்.  இதுவே கல்யாணம் ஆயிரங்காலத்துப் பயிர் என்னும் காரணம்.  தாம்பத்திய இன்பம் என்பது தாம்பத்தியத்தின் ஒரு பகுதியே ஆகும்.  கல்யாணத்தின் குறிக்கோள் அது இல்லை. நட்பின் அடிப்படையில் இளமை முதிர்ந்து ஆசாபாசங்கள் இல்லாத எண்ணங்கள் உதிக்க ஆரம்பிக்கையில் நட்பின் அடிப்படையில் ஒன்றிய உள்ளங்கள் கொண்ட தம்பதிகள் ஒருவருக்குள் ஒருவர் ஆழ்ந்து போவார்கள் என்பதும் கண்கூடு.  

அதோடு முடிந்ததா?  அந்தக் காலத்தில் பெண் பார்ப்பது என்றெல்லாம் இல்லை என்றே கூறுகின்றனர்.  பெண்ணைத் திருமணத்தின் போதே மணமகன் முதல் முறையாகப் பார்க்கிறான் என்பதும் திருமணச் சடங்குகளின்போது சொல்லப்படும் மந்திரங்கள் மூலம் தெரிய வருகிறது.  அவற்றை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம். ஆனால் இப்போதும் தெலுங்கு பேசும் மக்களின் திருமணத்தில் பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் இடையே திரை கட்டுவது வழக்கம்.  பெண்ணை அந்தத் திரை திறந்ததுமே பார்ப்பது மணமகன் முதல் முறையாகப் பார்ப்பது என ஒரு காலத்தில் இருந்து வந்திருக்கிறது.  வட மாநிலங்களில் இப்போதும் திருமணம் முடிந்த முதலிரவின் போது பெண்ணின் முகத்திரையை மணமகன் அகற்றுவது என்பது ஒரு சாஸ்திரம் சார்ந்த சம்பிரதாயமாகவே பார்க்கப் படுகிறது.  அதுவரையிலும் மணமகள் மணமகன் தன்னைப் பார்க்க முடியாமல், "குங்கட்"எனப்படும் முகத்திரை அணிந்தே காணப்படுவாள்.

படம் உதவி: கூகிளார், உஜிலாதேவி ப்ளாக்ஸ்பாட்.

தொடரும்.

நான்கைந்து நாட்களாக விருந்தினர் வருகையால் எதுவும் எழுத முடியவில்லை.  அதுக்கு முன்னாடி யுபிஎஸ் கலாட்டா.  கிட்டத்தட்டப் பத்து நாட்களாக கணினி கிட்டே அதிகம் வராமல் சும்ம்ம்மா முக்கியமான மடல்கள் மட்டும் பார்க்கப்பட்டது ஒரு சாதனை! :))))))) 

Geetha Sambasivam

unread,
Mar 19, 2013, 4:34:52 AM3/19/13
to மின்தமிழ்
வேண்டாம் மறுபடி வேறே அனுப்பறேன்.

2013/3/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>
hihihi some technical error, post padikka please scroll pannunga! a.va.si.
360.gif

Geetha Sambasivam

unread,
Mar 22, 2013, 2:25:54 AM3/22/13
to மின்தமிழ்

// இது அவ்வளவாக உயர்வானதில்லை என்றே அபிப்பிராயம் என்றாலும் இன்றைக்குச் சில வருடங்கள் முன் வரையிலும் பெண் வீட்டுக்காரர்களே பெரும்பாலும் பிள்ளையைத் தேடிச் சென்று கொண்டிருந்தனர். வரதக்ஷணை எனப் பெரும்பணம், மாப்பிள்ளைக்கு மோதிரங்கள், கங்கணம், சங்கிலி போன்ற ஆபரணங்கள், துணிமணிகள் வாங்கப் பணம், அது போக வரனுக்கு தக்ஷணை எனப் பெரும்பணம் கொடுத்து மணமகன்கள் விலைக்கு வாங்கப் பட்டனர். //

@அப்பாதுரை, தைவக் கல்யாண முறையோடு இது எழுதப் பட்டிருப்பதால் தைவ கல்யாணங்களில் வரதக்ஷணை இருந்தது என்ற கருத்துத் தோன்றி விட்டது. தவறு என் மேல் தான். நான் சொல்ல வந்தது என்னவெனில் தைவக் கல்யாணங்களில் பெண்ணை வைத்துக் கொண்டு பிள்ளை தேடி வராமல் பிள்ளையைத் தேடிப் போனது போல் தற்காலத்திலும் சில வருடங்கள் முன்னர் வரை பெண் வீட்டுக்காரர்களே பிள்ளையைத் தேடிப் போய்க் கல்யாணம் ஏற்பாடு செய்தனர் என்பதே. இதுக்குத் தான் வரதக்ஷணை கொடுத்தனர். தைவக் கல்யாணங்களில் இல்லை. :))))))))//


மேலே குறிப்பிட்டவை அப்பாதுரையின் பின்னூட்டத்துக்கு என் பதில்.  இந்தப் பதிவில் தைவக் கல்யாணங்கள் குறித்த விளக்கத்தில் மேற்கண்ட வரிகளும் சேர்க்கப் பட்டிருப்பதில் தைவக் கல்யாணத்தின் பொருளே மாறுபட்டுத் தொனிக்கிறது.  உ.வே.சா. அவர்கள் எழுதிய கல்யாணம் குறித்த சான்றுகள் சுபா மூலம்  கிடைத்துவிட்டன.  விரைவில் அவற்றைப் பகிர்கிறேன். 


/குழந்தை பிறப்பை மட்டுமே ஒட்டித் திருமணங்கள் நடந்தன என்பதும் என் கருத்து. பிரஜா உற்பத்தி நோக்கம் இல்லாத திருமணங்களே இல்லை. இந்துத் திருமணங்களின் பின்னணியில் சந்ததி விருத்தம் மிக ஆதாரமான இடம் பெற்றிருக்கிறது. குழந்தைப் பிறப்புக் குறிக்கோள் இல்லையென்றால் இரண்டாம் திருமணங்கள் பிள்ளைக்கு நடக்க வேண்டிய அவசியம் கிடையாதே? (அதே மனுநீதி மகவின்மைக்குக் காரணம் பெண் என்பது போல் பேசுகிறது) சந்ததி, அதுவும் ஆண் சந்ததி, இல்லையென்றால் ஸ்ரார்த்தம் செய்ய முடியாதே? தனக்கு மட்டுமல்ல, முகமறியாத முன்னோருக்கும் அல்லவா கழிவுக்கடன் செய்ய வேண்டியிருக்கிறது நமது பொன்னான வேதங்கள் சொன்னபடி? அதற்காகவேனும் குழந்தை பிறப்பு அனுசரிக்கப் படவேண்டுமே?//

அப்பாதுரை, திருமணத்தின் ஒரு நோக்கம் சந்ததி விருத்தி, கோத்திர வளர்ச்சி என்று ஏற்கெனவே நானும் கூறியுள்ளேன். மேற்குறிப்பிட்ட கர்மாக்களைச் செய்ய மனைவியின் துணை வேண்டுமல்லவா? அதுவும் சாமவேதிகள் எனில் மனைவி இறந்தாலோ, அல்லது வீட்டுக்கு விலக்காய் இருந்தாலோ, உடல் நலமில்லாமல் எழுந்து நடமாடச் சக்தியற்று இருந்தாளெனிலோ, கணவன் செய்யும் சிராத்தக் கடமைகளில், ஹோமம் என்ற பெயரே கிடையாது. மனைவி இருந்தால் தான் ஹோமம். அதோடு நீங்கள் கூறுவதும் கிரஹஸ்தனின் நித்ய கர்மானுஷ்டானங்களில் ஒன்றே. ஆகவே திருமணத்தின் ஒரு குறிக்கோளான பிள்ளைப்பேறு என்பதிலும் அர்த்தம் பொதிந்தே இருக்கிறது.

ஸ்ராத்தம் தான் சரியான உச்சரிப்பு, சரியான வார்த்தை. ஸ்ரார்த்தம் என "ர்" போடுவது தவறு. ஸ்ரத்தையாகச் செய்வது தான் ஸ்ராத்தம்.


Geetha Sambasivam

unread,
Mar 22, 2013, 11:31:10 PM3/22/13
to மின்தமிழ்


SATURDAY, MARCH 23, 2013

ஆஹா, மங்கள மேளம் கொட்டி முழங்க மணமகள் வந்தாள் தங்கதேரிலே!


அடுத்து ஆஸுரம் என்னும் முறை ஆகும்.  ஆஸுரம் என்றால் ஒரு பெண்ணுக்குப் பொருத்தமில்லாத மாப்பிள்ளை/வரன் பணக்காரனாக இருப்பான்.  நிறையப் பணத்தைப் பெண் வீட்டுக்காரர்களுக்குக் கொடுத்துப் பெண்ணைத் தனக்குக் கொடுக்கும்படி செய்வது தான் ஆஸுரம்.  இங்கே பெண்ணின் சம்மதம் கேட்கப் படுவது இல்லை. பணத்தைக் கொடுத்துப் பெண்ணை அவனுக்குப் பிடித்திருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காகத் திருமணம் செய்து கொள்வான்.  மேலே சொன்னவற்றில் மூன்றாவதான ஆர்ஷத்தில் பசுக்களைக் கொடுத்துப் பெண்ணைப் பெற்றது போல் தான் இதுவும் என நினைத்தீர்களானால் தப்பு. ஆர்ஷ முறைப்படி கல்யாணம் செய்துக்கிறவங்க அநேகமாய் தவ வாழ்க்கையில் ஈடுபட்டவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தவ வாழ்க்கைக்கு உதவக் கூடிய பெண்ணாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதால் அப்படிப் பட்ட பெண் எனில் பசுக்களைக் கொடுத்துப் பெண்ணைப் பெற்றவரிடமிருந்து கன்யாதானம் பெறுவார்கள்.  ஆனால் இங்கேயோ பணத்தைக் காட்டி ஆசை காட்டி வசியம் செய்து பெண்ணைப் பெறுவது என்பது நடப்பதால் இதையும் இரண்டாம்பட்சமாகவே கருத வேண்டும்.

சுமார் முந்நூறு வருடங்கள் முன்பிருந்து சமீப காலம் வரையிலும் பலரும் முதல் மனைவி இறந்து போய்ப் பல வருடங்கள் வயது வித்தியாசத்தில் இரண்டாம் கல்யாணம், மூன்றாம் கல்யாணம் என்றெல்லாம் பண்ணிக் கொண்டது ஆஸுர வகையைச் சேர்ந்தது தான்.



அடுத்தது காந்தர்வ விவாஹம். இதில் பெண்ணும், பையரும் ஒருவருக்கொருவர் மனம் ஈடுபட்டு மனம் ஒன்றிப் போய் அவர்களாகவே பெரியவர்கள் துணையோ, அவர்கள் சம்மதமோ இல்லாமல் பண்ணிக் கொள்வது ஆகும். இந்த காந்தர்வ விவாஹம் என்றதுமே பலருக்கும் நினைவில் வருவது துஷ்யந்தனும், சகுந்தலையும் செய்து கொண்ட காந்தர்வ விவாஹம் தான்.  எவருக்கும் தெரியாமல் இருவரும் செய்து கொண்ட திருமணம் காந்தர்வ விவாஹம் எனப்படும்.  தற்காலங்களில் பெண்ணும், பிள்ளையும் வீட்டை விட்டு ஓடிப் போய்க் கோயில்களில், திருமணப் பதிவு அலுவலகங்களில் செய்து கொள்ளும் திருமணங்கள் கூட ஒரு வகையில் காந்தர்வ விவாஹமே ஆகும்.


அடுத்தது ராக்ஷஸம்.  நம்ம கண்ணனுக்கும் ருக்மிணிக்கும் நடந்தது ராக்ஷஸ விவாஹமே.  என்ன ஆச்சரியமாப் பார்க்கிறீங்களா?  பெண்ணுக்குத் தாய், தந்தை ஏற்பாடு செய்யும் வரன் பிடிக்காமல் வேறொருவரை மணக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்து, அந்தக் குறிப்பிட்ட நபருக்குத் தன் ஆசையையும் தெரிவித்துத் தன்னைத் தன் பெற்றோர் நிச்சயித்திருக்கும் வரனிடமிருந்து காப்பாற்றி அழைத்துப் போகும்படி வேண்டிக் கொண்டாள் எனில் அந்த ஆண் அவள் ஆசையை நிறைவேற்றியாக வேண்டும். தனக்குப் பிடிக்காத இடத்தில் பெண் திருமணம் ஆகிச் செல்வதை ஒருபோதும் நம் சமூகம் அனுமதிக்கவே இல்லை.  ஆகவே ருக்மிணிக்கு சிசுபாலனைப் பிடிக்கவில்லை என்றும் சுயம்வரம் என்பது பெயருக்குத் தான் வைத்திருக்கிறார்கள் என்பதையும் ருக்மிணி கடிதம் மூலம் கண்ணனுக்குத் தெரிவித்ததுமே கண்ணன் ஓடோடியும் வந்து ருக்மிணியைத் தூக்கிச் செல்கிறான்.  இதற்கு நடுவில் தன்னை எதிர்க்க வந்த ருக்மிணியின் சகோதரன் ஆன ருக்மியையும் மற்ற வீரர்களையும்,  சொந்தங்களையும் யுத்தம் செய்து வெல்கிறான்.  இப்படிப் பெண் வீட்டுக்காரர்களோடு போர் புரிந்து ஜெயித்துப் பெண்ணைத் தூக்கிச் சென்று கல்யாணம் செய்து கொள்வது ராக்ஷஸ விவாஹம் ஆகும். இதிலே பெண்ணின் சம்மதம் மிக முக்கியம்.  பெண் தன்னைத் தூக்கிச் செல்பவனோடு செல்ல முழுச் சம்மதம் கொடுத்திருக்க வேண்டும்.

அடுத்துப் பைசாசம். இது மிகவும் அசுரத் தனம்.  ஆஸுரம் எல்லாம் ஒண்ணுமே இல்லைங்கற மாதிரியானது.  ஆஸுரத்திலே பெண்ணின் சம்மதத்தைக் கேட்காவிட்டாலும் பெண் வீட்டுக்காரர்களைப் பணத்தாலே குளிப்பாட்டி சந்தோஷப் படுத்துவான்.  ஆனால் இதிலே பெண்ணின் சம்மதமும் முக்கியமில்லை.  அவளின் உறவினர்களோ, பெற்றோர்களோ எவருமே முக்கியமில்லை.  ஆணின் விருப்பம் ஒன்றே குறியாக அனைவரையும் பகைத்துக் கொண்டு பெண்ணையும் பலவந்தப் படுத்தித் திருமணம் செய்து கொள்வது பைசாசம் ஆகும்.  இதுவும் நிறைய திரைப்படங்களில் பார்த்திருக்கோம்.  இன்னமும் பார்க்கிறோம்.

இதிலே ராக்ஷஸம், பைசாசம் போன்ற விவாஹ முறைகளைக் காட்டு வாசிகளுக்கும், காந்தர்வ விவாஹ முறையை க்ஷத்திரியர்களுக்கும் அனுமதித்திருந்தார்கள்.  என்றாலும் இந்து திருமணச் சட்டத்தின்படி எட்டுவிதமான விவாஹங்களிலும் மந்திரபூர்வமாக விவாஹம் நடைபெறவும் உரிமை உண்டு.  பொதுவாக பிராம்ம விவாஹம் உயர்ந்தது  எனப்பட்டாலும் பல பெண்களுக்கும் பிள்ளை தேடி வந்து கல்யாணம் நடப்பதில்லை.  வயது ஆகிவிட்டால் தைவமாகவோ, ஆர்ஷமாகவோ, பிராஜாபத்யமாகவோ திருமணம் செய்து கொடுக்க வேண்டும்.  இவை நான்குமே பிராமணருக்கு என ஏற்பட்டவை எனினும் மற்றவர்களுக்கும் பெரும்பாலும் இப்படித் தான் இருந்து வருகிறது.  ஆனால் பெண்ணே சுயமாகத் தேர்ந்தெடுக்கும் முறை அரசகுலத்தில் உண்டு.  அதே போல் காந்தர்வ விவாஹமும் க்ஷத்திரியர்களுக்கு அனுமதிக்கப் பட்டிருந்தது.

சரி, இப்போக் கல்யாணங்களின் வகையைத் தெரிந்து கொண்டு விட்டோம். இந்தக் காலத்தில் பெரும்பாலும் தைவமோ, பிராஜாபத்யமாகவோ தான் திருமணங்கள் நடைபெறுகின்றன.  ஆகையால் பெண் பார்த்து நிச்சயம் செய்வதிலிருந்து படிப்படியாக ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.


படம் உதவி கூகிளார்: ருக்மிணி, கண்ணன் படம் வெங்கட் நாகராஜ் பதிவிலிருந்து. :)))))

சகுந்தலை படம் உதவி கூகிளார்

எட்டு வகைத் திருமணங்கள் பற்றிய குறிப்பு எழுத உதவியது


தெய்வத்தின் குரல்
.

Geetha Sambasivam

unread,
Mar 25, 2013, 5:05:59 AM3/25/13
to மின்தமிழ்

MONDAY, MARCH 25, 2013

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?

நாம் கையோடு கை கோர்த்துக் கொள்ளலமா?



பெண் பார்த்தல் என்ற சடங்கு அந்த நாட்களில் இல்லை எனினும், அரசர்கள், பெருந்தனக்காரர்கள் சுயம்வரம் போன்ற ஒன்றை வைத்தும் பெண்ணுக்கேற்ற வரனைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதையும் பார்த்தோம்.  இப்போப் பெண் பார்த்தாச்சு!  பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டாச்சு! பெண்ணின் தலைமயிரைப் பிடித்து இழுத்தாயிற்று.  உண்மையான தலைமயிர் தான் என்றும் உறுதியாகத் தெரிந்தாச்சு. பேசவும் பேசுகிறாள்.  கல்யாணமாகி வந்ததும் பேச்சை நிறுத்துவாளா என்பது வேறு விஷயம்.  இப்போதைக்குப் பெண் ஊமை இல்லை. நடை, உடை, பாவனை எல்லாம் சரி.  பெண்ணைப் பிடித்துவிட்டது.  அடுத்து என்ன?  நிச்சயம் செய்ய வேண்டும்.  இப்போதெல்லாம் நிச்சயதார்த்தம் என்னும் சடங்கே ஒரு சின்னக் கல்யாணம் போல் நடக்கிறது.  ஆனால் அந்த நாட்களில் பென்ணைப் பெற்றவர்களும், பிள்ளையைப் பெற்றவர்களும் ஊர்ப் பெரியவர்களில் சிலர் முன்னே அவர்கள் சாட்சியாக வெற்றிலை, பாக்குத் தட்டை மாற்றிக் கொள்வார்களாம். இதற்குப் பாக்கு, வெற்றிலை மாத்திக்கறதுனு பெயர்.  பெரும்பாலும் தஞ்சை ஜில்லாவில் இன்றளவும் பாக்கு, வெற்றிலை மாற்றினதாய்த் தான் சொல்வாங்க.  என் கல்யாணமும் என் அப்பாவும், அவரின் நண்பர் ஒருத்தர் மட்டுமே சாட்சியாக இருக்கப் பிள்ளை வீட்டுக்காரங்களோடு பாக்கு வெற்றிலை மாற்றிக்கொண்டே முடிவு செய்யப் பட்டது என்பதை ஏற்கெனவே எழுதி இருக்கேன். :))))

கல்யாணம் நிச்சயம் ஆனதும், கல்யாணத்துக்கு முதல்நாள் காலை விரதம் முடிந்ததும் அல்லது மாலை நல்லவேளையில் நடப்பதே உண்மையில் நிச்சயதார்த்தம் ஆகும்.  இதைப் பெரிய நிச்சயதார்த்தம் என்கின்றனர்.  கல்யாணத்துக்கு முன்னாடி பாக்கு, வெற்றிலை மாற்றிக் கொள்வதைச் சின்ன நிச்சியதார்த்தம் என்கின்றனர்.  இது இப்போதெல்லாம் குறைந்த பக்ஷமாகப் பெண்ணின், பிள்ளையின் செளகரியத்தை உத்தேசித்து ஒரு வருடம் முன்னேயே நிச்சயம் செய்து பின்னர் கல்யாணம் செய்கிற மாதிரி இருக்கிறது.  ஒரு சில கல்யாணங்களே நிச்சயம் முடிந்தவுடனேயோ அல்லது மூன்று மாதத்துக்குள்ளேயோ நடக்கின்றன.  திருமணத்தின் ஆரம்பமே நிச்சயதார்த்தம் தான் எப்போவுமே என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.  இதைப் பெண்ணின் தகப்பனார் அளிக்கும் வாக்குறுதி என்னலாம்.

தாம்பூலம் நம் வாழ்க்கையில் மிக உயர்ந்த ஸ்தானம் வகிக்கிறது.  அந்தத் தாம்பூலத்தில் பொருளையோ, பண்டமோ வைக்கிறோமோ இல்லையோ, வெறும் வெற்றிலை, பாக்கு, பழம் என்றாலும் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறது.  ஒரு வெத்திலை, பாக்குக்கு வழியில்லை;  கல்யாணம் பண்ணினாங்களாம்னு சொல்றவங்களைப் பார்த்திருக்கலாம்.  வெற்றிலையின் பசுமை நிறம், சுண்ணாம்பின் தூய வெண்மையோடு, பாக்கின் பழுப்பு நிறம் சேர்ந்து சிவப்பாக மாறுகிறது.  பசுமையான வெற்றிலையில் வைக்கப் படும் கொட்டைப்பாக்கு, ஆவுடையாரையும் பாணத்தையும் குறிப்பதாகச் சொல்கின்றனர்.  உமாமகேசுவரருக்கு ப்ரீதி என வெற்றிலையையும், பாக்கையும் கூறுகின்றனர். திருமணத்தை உறுதி செய்ய மட்டும் தாம்பூலம் பயன்படுவதில்லை.  திருமணம் ஆனதும் முகூர்த்தத் தாம்பூலம் மிக முக்கியம்.  அதோடு பலத்த விருந்துச் சாப்பாடு ஜீரணம் ஆகவும் தாம்பூலம் தரிக்கின்றோம்.  தெய்வ வழிபாட்டிலும் வெற்றிலை, பாக்கு இல்லாமல் செய்ய மாட்டோம். சுமங்கலிகளுக்கு நாள், கிழமைகளிலும் சும்மா வீட்டுக்கு வந்துட்டுப் போனாலுமே தாம்பூலம் கொடுப்போம்.

சம்பந்திகளுக்கு பதில் மரியாதையில் தாம்பூலம் இடம் பெறு,ம்.  பெண்ணின் மாமன்மார், அத்தைமார், பையரின் மாமன்மார், அத்தைமார் போன்றோருக்கும் தாம்பூலம் விட்டுப்போகாமல் நினைவாய்க் கொடுக்க வேண்டும். அவ்வளவு ஏன்?  திருமணச் சடங்குகளிலேயே பெண் மணமகனுக்குத் தாம்பூலம் மடித்துக் கொடுப்பாள்.  பெண்ணின் சகோதரன் பக்குவமாகச் சுண்ணாம்பு, பாக்கு வைத்த தாம்பூலத்தை மடித்துத் தர அதைப் பெண் வாங்கித் தன் கணவனுக்குக் கொடுப்பாள். இதைப் பின்னால் பார்க்கலாம்.  ஆனால் இப்படியாகத் தாம்பூலம் என்பது நம் வாழ்க்கையில் இன்றளவும் மிக முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது.  பெண்ணின் பெற்றோரும், பையரின் பெற்றோரும் மிக மிக முக்கியமான உறவினர், ஊர் மக்கள் முன்னிலையில் இன்னாருடைய பெண்ணை, இன்னாருடைய பையருக்குக் கன்யாதானம் செய்து கொடுப்பதாக உறுதிமொழி கொடுத்து எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துத் தாம்பூலத்தட்டை மாற்றிக் கொள்வதே நிச்சயதார்த்தம்.  பல சினிமாக்களிலும் பார்த்தாச்சு இல்லையா? :))))

வெற்றிலையின் நுனியில் மஹாலக்ஷ்மி, நடுவில் சரஸ்வதி என்னும் வாக்தேவி, காம்பில் ஜ்யேஷ்டா தேவி, இடப்பக்கம் மஹாசக்தி, வலப்பக்கம் பூமி தேவி, உள்ளே மஹாவிஷ்ணு,, வெளியே சந்திரன், ஓரங்களில் ஈசன், பிரம்மா, மேலே இந்திரன், ஆதவன், எல்லாப் பக்கங்களிலும் மன்மதன்  என தேவதைகளின் இருப்பிடமாகக் கூறுகின்றனர்.  இதில் காம்பான ஜ்யேஷ்டாதேவியைக் கிள்ளி எறிந்துவிடுகிறோம். அதோடு தொடர்புடைய நரம்புகளையும் அகற்றிவிட்டே வெற்றிலை தரிக்கிறோம்.  வெற்றிலைக்கு மருத்துவ குணமும் உண்டு.  சின்னக் குழந்தை வயிற்றுப் பொருமலில் அழுது கொண்டே இருந்தால், வெற்றிலை ஒன்றோடு, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை உப்பு, பெருங்காயம் வைத்து அம்மியில் அரைத்துச் சாறு எடுத்து வடிகட்டிக் குடிக்கக் கொடுத்தால் சரியாகும்.  இது என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.  வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி விளக்கில் காட்டி வாட்டிப் பொறுக்கும் பதத்தில் தொப்புளில் வைத்தாலும் வயிற்று வலி சரியாகும். வெற்றிலையின் மகத்துவம் இன்னும் நிறைய என்றாலும் நாம் பார்க்க வேண்டியது நிச்சயதார்த்தம் இல்லையோ?

சமீப காலங்களில் தான் இந்த நிச்சயதார்த்தத்தில் தட்டுத் தட்டாக சீர் வரிசை வைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.   நிச்சயத்தின் போதே பிள்ளைக்கு, பெண்ணுக்கு நகைகள், ஆபரணங்கள் போடுவதும் வழக்கமாகி இருக்கிறது. இதை வைத்துப் பெண்ணின், பிள்ளையின் அந்தஸ்தையும் நிர்ணயம் செய்து கொள்கின்றனர்.  முன் காலத்தில் எத்தனை பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் வெறும், வெற்றிலை, பாக்கு, பழம் உள்ள தட்டு மட்டுமே! :)))) நிச்சயதார்த்தம் முடிச்சாச்சு.  அடுத்துக் கல்யாண வேலை நிறைய பாக்கி இருக்கே!  சீர் வரிசைகள் பத்திச் சொல்ல  வேணுமா?  கல்யாணம் பத்தி விளக்கம் கொடுத்தால் மட்டும் போதுமா?  கல்யாணம் பத்தி மட்டும் போதும்னு நினைக்கிறேன். :))))

படம்: சொந்தமோ சொந்தம்! :))))))


ஏற்கெனவே இதற்கென ஆரம்பித்த இழையில் தொடர முடியாமல் பிரச்னைகள் வருகின்றன.  பழைய பதிவுகள் அழித்தாலும் அழியாமல் பக்கத்திலே வருகின்றது/ அல்லது கீழே போய்விடுகிறது.  ஸ்க்ரோல் பண்ணிப் படிக்க வேண்டி இருக்கு.  ஆகையால் புது இழை துவங்கி இருக்கேன்.  பார்க்கலாம் இதுவானும் சொன்னபடி ஒழுங்கா இருக்கானு. 
329.gif

Geetha Sambasivam

unread,
Mar 26, 2013, 5:32:31 AM3/26/13
to மின்தமிழ்

TUESDAY, MARCH 26, 2013

கோமதி அரசுவின் விளக்கங்கள்!

மறையோர் வழக்காகிய நூல்களில் எட்டுவகை மணத்துள், யாழை ஏந்தி இசைத்துறையில் வல்லவர்களாக, என்றும் பிரியாத இணையர்களின் (தலைவன், தலைவி) கர்தர்வ மணத்தைப் போன்றதாகும்.
அதாவது, களவு கந்தர்வ மணத்தை ஒத்ததாகும்.


மன்றல் எட்டு:

பிரமம்- பிரமச்சாரிகளுக்குத் தானமாக்க கொடுப்பது.
பிரசாபத்தியம்- இரு பெற்றோரும் இசைந்து கொடுப்பது.
ஆரிடம்- ஆவும் ஆனேறும் வாங்கிக் கொண்டு கொடுப்பது.
தெய்வம்- வேள்வி ஆசிரியனுக்குக் கொடுப்பது
காந்தர்வம்- மனம் ஒத்த இருவர் தாமே கூடுவது
அசுரம்- வில் போட்டியில் வென்றவர்க்குக் கொடுப்பது.
இராக்கதம்- விருப்பமில்லாத போது வலிந்து கூடுவது.
பைசாசம்- கள்ளுண்டு மயங்கி கிடக்கும் போதும், தூங்கும் போதும் கூடுவது.
இதனை வடநூலார் இலக்கியப்படுத்துவர். துணைமையோர் என்பது, ஒருவரை ஒருவர் இணை பிரியாத கர்தர்வர். கர்தர்வ முறை கற்பில்லாமலும் நிகழும். ஆனால், தமிழ் முறையில் கற்பின்றி களவே அமையாது என்று சொல்வார் நச்சினார்க்கினியர்./
http://arulalantamizh.blogspot.in/2012/09/1-1038-1047.html//

எங்கள் வீட்டில் உள்ள தமிழ் மொழி அகராதியில் மணம் 8 என்று போட்டு இருக்கும் குறிப்பு:

மணம் 8: பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம், 

இவற்றுட் பிரமசாரிக்குக் கன்னியைத் தீமுன்னர்க் கொடுப்பதுபிரமமணம்.

தலைமகளினத்தாருட் பட்டவளைத்தீமுன்னர்க் கொடுப்பது பிரசாபத்தியமணம்

ஒன்றிரண்டு பசுமெருதும் வாங்கிக் கொண்டு கன்னியை தீமுன்னர்க் கொடுப்பதாரிடமணம்.

வேள்வியால் வந்த கன்னியை தீ முன்னர்க் கொடுப்பது தெய்வமணம்.

கொடுப்பாருங் கேட்பாருமின்றி யிருவருந்தனியிடத்தெதிபட்டுத்தாமே கூடுவது காந்தருவமணம்.

பெண்ணுக்கு பொன்பூட்டிச் சுற்றத்தார்க்குப் பொன்வேண்டுவனகொடுத்துக் கொள்வது அசரமணம்.

பெண்ணும், பெண்ணினத்தாருடன் படாமல் வலிதிற் கொள்வதிராக்கதமணம் துயின்றாளைச் சென்று ஊடுவது பைசாசமணம்.

நீங்கள் அழகாய் விரிவாக கூறிவிட்டீர்கள்.

உங்கள் திருமணங்கள் பற்றிய ஆய்வு கட்டுரையில் நானும் சிறு அணில் போல் சேர்ந்து கொள்கிறேன்.

Geetha Sambasivam

unread,
Apr 6, 2013, 7:08:30 AM4/6/13
to மின்தமிழ்

Saturday, April 06, 2013

கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாணமாலை!


பெண் பார்த்தாயிற்று; பெண்ணைப் பிடிக்கவும் பிடித்துவிட்டது.  அடுத்து உடனே நிச்சயம் தான் செய்ய வேண்டும்.  இதைப்பையன் வீட்டில் செய்தால் லக்னப் பத்திரிகை வாசிப்பது என்றும், பெண் வீட்டில் செய்தால் நிச்சயம் என்றும் சொல்வார்கள்.  பிராமணர் அல்லாத மற்ற இனத்தவரிலேயும் பெண் வீட்டில் செய்வதைப் பரிசம் போடுதல் என்பார்கள்.  பரிசம் போடுகையில் எவ்வளவுக்கு எவ்வளவு உயர்ந்த ரகப் புடைவை, நகை என வைக்கின்றார்கள் என்பதில் போட்டியும் உண்டு. 

பிராமணர்களில் பையருக்குப் பெண் வீட்டில் நிச்சயத்தன்று புதிய வேஷ்டி, அங்கவஸ்திரம் மட்டுமே முன்பெல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள்.  இப்போதெல்லாம் நாகரிகம் பெருத்துப் போக ஆரம்பித்துப் பெண்ணும் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள ஆரம்பித்ததும், பையருக்கு வேஷ்டி தவிர, பான்ட், ஷர்ட், மோதிரம், கைக்கடிகாரம், சங்கிலி அல்லது ப்ரேஸ்லெட் போன்றவற்றில் ஏதேனும் ஒரு ஆபரணத்தை நிச்சயத்தன்றே கொடுக்கின்றனர். பெண்ணுக்கும் பிள்ளை வீட்டில் விலை உயர்ந்த நிச்சயதார்த்தப் புடைவை வாங்குகின்றனர்.  இதற்கான ரவிக்கை தைப்பதற்கென அநேகம் பிள்ளை வீட்டில் பெண்ணிடம் முன்னரே கொடுத்துத் தைத்துக் கொள்ளச் சொல்வது நடக்கிறது.  இதைத் தவிரத் தனியாக நகை போடுபவர்களும் உண்டு.  அநேகமாய் இப்போதெல்லாம் இப்படி ஜவுளி எடுக்கையில் இருவீட்டாரும், பெண்ணும், பிள்ளையும் கலந்து சென்று அவரவர் விருப்பம் போல் எடுத்தும் வருகின்றனர்.  இன்னும் முன்னேற்றம் கண்டவர்களில் பெண்ணும், பிள்ளையும் மட்டுமே தனியாகச் சென்று அவரவர் விருப்பம் போல் எடுத்தும் வருகின்றனர்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண் மும்பையில் பிறந்து வளர்ந்து படித்தவர். மும்பைப் பையர் தவிர வேறு எவரையும் கல்யாணம் செய்துக்க மாட்டேன் என்ற கொள்கைப் பிடிப்புக் கொண்டவர்.  அதோடு வெளிநாடு செல்லவும் மாட்டேன் என மறுப்பார். வெளிநாட்டில் வேலை செய்ப்வர்களைத் திருமணம் செய்து கொள்ளவும் மறுப்பார்.  அவருக்கு ஒரு பையருடன் கல்யாணம் நிச்சயம் செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டன.  அந்தப் பையர் அப்போது மும்பையில் தான் இருந்திருக்கிறார்.  நிச்சயதார்த்தத்துக்கு ஒரு வாரம் இருக்கையில் திடீரென அவருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.  அங்கே குறைந்தது ஆறு மாதம் முதல் ஒருவருஷம் வரை இருக்க வேண்டும்.  தாற்காலிகமாகத் தான் செல்ல வேண்டும். ஆகவே தொலைபேசிப் பெண்ணிடம் தகவல் தெரிவித்துக் கூட அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யப் போவதாகவும், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்குமாறும் கூறி இருக்கிறார்.  அந்தப் பெண்ணிற்கு இது அதிர்ச்சித் தகவல்.  உடனே நிச்சயத்திற்கு எடுத்த புடைவையையும், அதற்காகப் பொருத்தம் பார்த்துத் தைத்து வைத்திருந்த ரவிக்கையையும் பிள்ளை வீட்டிற்குத் திருப்பி விட்டார்.  அந்த நிச்சயதார்த்தமே வேண்டாம் எனச் சொல்லி விட்டார். ஏனெனில் அங்கே போனபின்னர் மனம் மாறிவிட்டால் என்ன செய்யறதுனு அவருக்குக் கவலை, பயம்.  அதன் பின்னர் அந்தப் பெண்ணிற்கு மும்பையிலேயே வேலை பார்க்கும் இன்னொரு பையருடன் ஒரு வருஷம் கழித்துத் திருமணம் நடந்தது.  இது இப்போது தான் நான்கைந்து வருடங்கள் முன்னர் நடந்தது.

இதை என்னவென்று சொல்ல முடியும்?  நம் முன்னோர்கள் இப்படிஎல்லாம் வரலாம்;  அதன் மூலம் மனதில் பாதிப்பு ஏற்படலாம் என்றே யோசித்துத் திருமணம் வரை பெண்ணும், பிள்ளையும் பார்த்துக் கொள்ளக் கூடாது என ஏற்பாடுகள் செய்தனரோ?  நிச்சயதார்த்தம் ஆன பிறகும் கூட எனக்குத் தெரிந்து ஒரு பிள்ளை வீட்டில் பெண் வீட்டில் போய் சீர் வகைகள் அதிகமாய்க் கேட்க, பெண் வீட்டினர், கோபம் கொன்டு நிச்சயதார்த்தப் பொருட்களைத் திரும்ப அனுப்ப, பிள்ளை வீட்டினரும், பிள்ளைக்குச் செய்த சீர் வரிசைகள், பட்சணங்கள், பழங்கள், பாத்திரங்கள் என அனைத்தையும் திருப்பினார்கள்.  இதுவும் பார்த்தேன்;  கேட்டேன்; வேதனை அடைந்தேன். இன்னொரு இடத்தில் கல்யாணத் தேதி குறித்துக்கல்யாணப் பத்திரிகை விநியோகமும் செய்ய ஆரம்பித்த பின்னர், அந்தப் பெண்ணை வேண்டாம் எனப் பிள்ளை வீட்டில் சொல்லிவிட்டுப் பெரிய பணக்கார இடத்தில் பெண் கிடைத்தது என அதே முஹூர்த்தத்தில் கல்யாணம் செய்து கொண்டதும் உண்டு.  பெண் வீட்டிலும் அவசரம் அவசரமாக ஏற்கெனவே  முதலில் வந்து பார்த்துவிட்டு சாதாரண வேலை என இவர்கள் வேண்டாம் என நினைத்திருந்த பையரைத் தேடிப் பிடித்து அழைத்து அதே முஹூர்த்தத்தில் பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்து அவர்கள் தரப்பில் சந்தோஷம் அடைந்தனர்.

"இன்னாருக்கு இன்னார் என்று
எழுதி வைத்தான் இறைவன் அன்று"
என்ற வார்த்தைகள் உண்மை தான் அல்லவா? 

இதை எல்லாம் மீறித் தான் இன்று பல திருமணங்கள் நிச்சயம் ஆகி நடக்கின்றன.  பெரும்பாலும் அனைவரும் பொருத்தம் பார்க்கின்றனர்.  ஆனால் நம் சாஸ்திரமோ ஜோசியத்தையும், பொருத்தத்தையும் வலியுறுத்தவே இல்லை.  அதைக் குறித்துப் பின்னர் பார்ப்போமா?



Geetha Sambasivam

unread,
Apr 9, 2013, 4:02:18 AM4/9/13
to மின்தமிழ்


Tuesday, April 09, 2013

உனக்கும், எனக்கும் தான் பொருத்தம், அதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்!


என்ன ஆச்சரியமா இருக்கா?  உண்மையில் அப்படித்தான். பெண்ணுக்கு மணமகனையும், ஆணுக்கு மணமகளையும் பிடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயம்.  பெண்ணுக்குக் குழந்தை பிறக்குமா என்பதையும் உறுதி செய்து கொள்ளச் சொல்கிறது சாஸ்திரம்.  இதை ஆயுர்வேதம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்கிறது.  பல பெண்களையும் பார்த்திருந்தாலும் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணுக்குத் தக்க மணமகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்ல அந்தப் பெண்ணிற்கும் இந்தத் திருமணத்தில் விருப்பம் இருக்க வேண்டும். நம் இந்து மதம் என்று இன்றைய நாட்களில் அழைக்கப்படும் சநாதன தர்மத்தின் திருமண முறையில் பிரிவு என்பது அவ்வளவாக இல்லை. தம்பதியர் மன ஒற்றுமையோடு வாழுவதையே வலியுறுத்தும்.  திருமண மந்திரங்களும் அதற்காகவே ஓதப்படுகின்றன என்பதோடு மன ஒற்றுமையை உறுதியாக்கும் சக்தியும் கொண்டது.  இன்றைய அவசர யுகத்தில் செய்யப்படும் சுருக்கமான திருமணங்களைக் குறித்துச் சொல்லவில்லை.  ஒரு காலத்தில் முறைப்படி மந்திரங்களைப் பூரணமாக ஓதுவதோடு அதன் அர்த்தங்களையும் பெண்ணும், பிள்ளையும் புரிந்து வைத்துக் கொண்டு கேட்பார்கள்.  மணமகனும் அதன் பொருளைப் புரிந்து கொண்டே திரும்பச் சொல்வார்.

பையரின், பெண்ணின் நக்ஷத்திரத்திற்குப் பொருத்தம் பார்க்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம்.  ஏனெனில் அதற்கேற்றவாறு தகுதியான முஹூர்த்த நாளைப் பார்க்க வேண்டும்.  அதே சமயம் இருவரின் ஜாதகத்திலும் பொருத்தம் பார்த்துத் தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  தகுதி வாய்ந்த நாளைப் பார்ப்பது வான சாஸ்திரத்தில் அடங்குகிறது.  ஆகவே நல்ல வேளையின் நல்ல காலத்தின் ஒத்துழைப்புத் திருமணத்துக்குத் தேவை.  அதை மட்டும் இருவரின் நக்ஷத்திரப் பொருத்தத்தின் மூலம் அறிந்தால் போதும்.  ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டாம்;  அதற்கு அவ்வளவு முக்கியமில்லை என்கிறது தர்ம சாஸ்திரம். நல்ல காலத்தின் பங்கு பல விஷயங்களிலும் இருக்கும் குறைகளை மூடிக் கொண்டு செல்லும்.  மணமக்களுக்கும் நல்ல முஹூர்த்த காலத்துக்கும் சுமுகமான தொடர்பு இருக்க வேண்டும்.  அதை உறுதி செய்ய இருவரின் நக்ஷத்திரங்களும் உதவும்.  ஆகவே நக்ஷத்திரப் பொருத்தம் இருந்தாலே போதும் என தர்ம சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.  களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் எனப்படும் பெரிய பெரிய தோஷங்கள் எல்லாம் திருமணத்தில் ஓதப்படும் முக்கியமான மந்திரங்களின் சக்தியால் அகன்றுவிடும் என்கிறது சாஸ்திரம்.

இதற்கேற்றாற்போல் நாம் நிறையத் திருமணங்களைப் பார்த்திருப்போம்.  எங்க வீட்டிலேயே என் பெரிய நாத்தனார் அத்தை பையரையே திருமணம் செய்து கொண்டதால் அவர்களுக்குள் ஜாதகப் பொருத்தமே பார்க்கவில்லை.  அதே போல் என் மாமனார், மாமியாரும் உறவு என்பதால் பொருத்தமே பார்க்கவில்லை.  இதைத் தவிரவும் என் மாமன்மார் இரண்டு பேருக்கு ஜாதகப் பொருத்தமே இல்லை.  ஆனால் திருமணம் ஆகிக் குழந்தை குட்டிகளோடு சந்தோஷமாக வாழ்ந்தனர்.  பெண்ணுக்கு மூல நக்ஷத்திரம் என்றால் நிர்மூலம் என்றொரு சொலவடை உண்டு.  உண்மையில் அது நிர்மலம் என்றே பொருள் கொள்ள வேண்டும்.  இன்னும் சிலர் ஆணுக்கு மூல நக்ஷத்திரமாக இருந்தாலும் பெண்ணின் அம்மா உயிருடன் இருக்கையில் அவங்களுக்குப் பாதகம் எனச் சொல்கின்றனர்.  மூல நக்ஷத்திரத்துப் பெண்ணும் சரி, மூல நக்ஷத்திரத்துப் பையரும் சரி, மாமியார், மாமனார் இருக்கும் இடங்களில் திருமணம் நடந்து அந்த மாமியார் , மாமனார் 80 வயது வரை இருக்கும் பேறு பெற்றதையும் பார்த்திருப்போம்.  எங்க வீட்டில் பார்த்திருக்கோம்.  பூராடம் நூலாடாது என்பார்கள்.  அப்படிப் பட்ட பூராட நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்கள் சுமங்கலியாக இறந்து போயும் (அதுவும் 75 வயசில்) பார்த்திருக்கிறேன்.

ஜாதகங்களுக்கும், ஜாதகப் பொருத்தத்துக்கும் இன்று நாம் அளிக்கும் முன்னுரிமை அந்தக் காலங்களில் இல்லை.  சாஸ்திரங்களுக்கே முன்னுரிமை கொடுத்திருக்கின்றனர்.  தெய்வத்திடம் பூப் போட்டுப் பார்த்தல், இதிகாசப் புராணப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து அதில் வரும் பக்கங்களுக்கு ஏற்ப முடிவு செய்தல் எனப் பல திருமணங்களும் நடந்திருக்கின்றன. தர்ம சாஸ்திரமே நமக்காக ஏற்பட்டது தான். 
ஜாதகங்களில் இருக்கும் பலன் சொல்லும் பகுதியை நன்கு செயல்படுத்தினால் குடும்ப வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவும்.  அந்தப் பலன் சொல்லும் பகுதியும் ரிஷிகளீன் உபதேசம் என்று பெரியோர் சொல்கின்றனர்.   குடும்ப வாழ்க்கையில் நமக்குத் தேவையானவற்றைத் தேவையான சமயத்தில் பெறுவதில் ஏற்படும் இடையூறுகளைக் களையவே ஜாதக பலன்கள் உதவி இருக்கின்றன.  ஆயுள், ஆரோக்கியம், மகப்பேறு, ஆண் குழந்தைப் பேறு போன்றவற்றைத் தெரிந்து கொள்ள உதவுமே அன்றித் திருமண வாழ்க்கைக்கு அல்ல. ஜாதகங்கள் பார்ப்பது என்னும் பழக்கம் இதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டி ஆரம்பித்திருக்கலாம்.  அது இன்றைய நாட்களில் ஒரு கட்டாயமான சடங்காக மாறியுள்ளது.  பல நற்பலன்களையும் பல கெடுபலன்களையும் அளிக்கிறது.


கருத்து உதவி: திரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் உரை சங்கரா தொலைக்காட்சி, சக்திவிகடன் , மற்றும் வீட்டில் பெரியோர்கள் பலரிடம் பேசியதில் கிடைத்த விபரங்கள்.



Geetha Sambasivam

unread,
Apr 21, 2013, 12:24:12 AM4/21/13
to மின்தமிழ்
Sunday, April 21, 2013

மாமியாரு, மாமனாரை மதிக்கணும்!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஶ்ரீராமநவமிப் பிரசாதத்துக்கு ஏகக் கூட்டம் வந்திருக்கு! :))) இதுவே
மத்தப் பதிவுகளுக்கு இத்தனை வரதில்லை! :P :P

இந்த முறை சென்னைப் பயணத்தின் போது கல்யாணத்துக்குக் காத்திருக்கும்
முதிர் கன்னர்கள் சிலரின் பெற்றோரிடம் பேச நேர்ந்தது. முதிர்கன்னர்கள்
கல்யாணத்துக்குத் தயாராய் இருக்கும் அளவுக்குப் பெண் வீட்டினர் ஆர்வம்
காட்டுவதில்லையாம். "நீங்க ஜாதகம் அனுப்புங்க; நாங்க பார்க்கிறோம்."
என்ற அளவிலேயே பேசறாங்களாம். ஜாதகம் அனுப்பிட்டுக் கேட்டால், பையர்களின்
வேலைத் தகுதி, வாங்கற சம்பளம், சொந்தமாய் வீடு வாங்கியாச்சா? அல்லது
வாங்கும் வசதி இருக்கா? கல்யாணத்துக்கு அப்புறமும் எங்க பொண்ணு
வேலைக்குப் போவா. உடனே எல்லாம் குழந்தை பெத்துக்கச் சொல்லக் கூடாது.
குறைந்தது ஐந்து வருஷங்களாவது ஆகும். அப்படிக் குழந்தை பிறந்தாலும்
அந்தக் குழந்தைக்கும், எங்க பொண்ணுக்கும் சேர்த்து நீங்க தான் செய்யணும்.
"

"எங்க பெண்ணின் சம்பாத்தியத்தில் இருந்து இத்தனை பங்கு எங்களைச் சேர
வேண்டியது. மாசா மாசம் கரெக்டா வந்துடணும். அக்ரிமென்டாகப் போட்டுக்
கொண்டாலும் சரி. பெண்ணை வேலை செய்யலையே என்றெல்லாம் கேட்கக் கூடாது.
செல்லமா வளர்த்திருக்கோம். கோபம் வரும். முன் கோபம் ஜாஸ்தி. நீங்க தான்
அனுசரிச்சுக்கணும். அவ கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுத்து செலவும்
செய்து படிக்க வைச்சிருக்கோம். அதனால் குற்றம், குறை சொல்லக் கூடாது.
அவ்வப்போது நாங்களும் வந்து தங்கிப்போம். ஆனால் சமையல் வேலை எல்லாம்
எங்களால் பார்த்துக்க முடியாது. நீங்க தான் எங்களுக்கும் சேர்த்துச்
செய்து போடணும். " இது ஒரு பக்கம் நடந்து வருகிறது. ஆச்சரியமா இருக்கா?
ஆனால் இது உண்மை. ஏனெனில் பிள்ளை வீட்டுக்காரங்க அனைவரும் எனக்கு
நெருங்கிய சொந்தம். ஒரு சில பெண்களின் ஜாதகங்களை அவங்களுக்கு வாங்கிக்
கொடுத்த விதத்தில் இம்மாதிரிக் கேள்விகளை நானும் எதிர்கொண்டிருக்கிறேன்.
இதிலே பிள்ளை தொழில் நுட்ப வல்லுநராக இருக்கணும் என்ற எதிர்பார்ப்பே
அதிகம். வெளிநாட்டு மோகம் குறைஞ்சிருந்தாலும், பெண்களூருக்குக் கூடப்போக
மாட்டோம் எனச் சொல்லும் பெண்களையும், அவர்களின் பெற்றோரையும்
பார்த்துவிட்டேன். இங்கேயே ஸ்ரீரங்கத்தில் ஒரு பெண்ணைப் பார்த்தப்போ
அவங்க அப்பா, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கத்துக்குள்ளாக உங்க
பையர் வேலை பார்த்துக் கொண்டு வந்தால் எங்களுக்கு ஆக்ஷேபணை இல்லை.
சென்னையே எங்களுக்குத் தொலைவு என்று சொல்லி மறுத்துவிட்டார்.

இப்போ இன்னொரு பக்கத்தையும் பாருங்க. இதுவும் தெரிஞ்சவங்க தான். உறவு
தான். மூன்று வருஷம் முன்னாடி பெண்ணுக்குக் கல்யாணம் செய்தாங்க. பிள்ளை
வீட்டுக்காரங்களும் எனக்குத் தெரிஞ்சவங்களே. தெரிஞ்சவங்கன்னா ரொம்பவே
தெரிஞ்சவங்க. அவங்க பிள்ளையும் இஞ்சினியர். பெண்ணும் ஐடியில் அல்லது
இஞ்சினியராக இருக்கிறார். நல்ல சம்பாத்தியம். பெண்ணுக்கு வேலைக்குப்போக
வசதியாக மாம்பலத்தில் வீடு. காலையில் அந்தப் பெண் தான் எழுந்து எல்லா
வேலைகளையும் கவனிச்சுட்டு, மாமியார், மாமனாருக்கு சமைச்சு வைச்சுட்டுப்
போகணும். மதியம் கையில் கொண்டு போகும் சாப்பாடு தான். சாயந்திரம்
வீட்டுக்கு வருகையிலேயே ஏழு மணி ஆகிடும். மாமியார் சாயந்திரத்துக்குத்
தேவையான சமையலைச் செய்து பிள்ளைக்குப் போட்டுவிட்டுத் தானும் சாப்பிட்டு
விட்டு சுத்தமாகச் சமையலறையை ஒழிச்சு வைச்சுடுவாங்க. இன்னிக்கும்
அப்படித் தான் நடக்கிறது. அந்தப் பெண் வந்தால் இருக்கிற கொஞ்சம்
சாதத்திலும், (அநேகமா வைக்கிறதில்லை. ஒவ்வொரு நாட்கள் இருக்குமாம்)
தண்ணீரை விட்டு வைச்சுடுவாங்க. சாப்பாடு இல்லையானு அந்தப் பெண் கேட்டால்,
"உன் இஷ்டத்துக்கு வந்தால் இங்கே சாப்பாடு பண்ணி வைக்க நான் என்ன
வேலைக்காரியானு பதில் வருமாம். இதிலே மாமனாரின் தூண்டுதல் காரணமாகச்
சமைத்த பாத்திரங்கள், காப்பி குடித்த பாத்திரங்கள்னு எல்லாம் தொட்டி
முற்றம் நிறைய இருக்கும். பசியோடு வரும் பெண் என்னத்தைச் சாப்பிடுவது?

அந்தப் பெண்ணின் பெற்றோர் வீடு அருகேயே இரண்டு தெரு தள்ளி இருப்பதால்
அங்கே போய்ச் சொல்லிக் கிடைச்சதைச் சாப்பிட்டு வருவாளாம். நாளாவட்டத்தில்
குழந்தையும் பிறந்தாச்சு. குழந்தையை மாமியாரோ, மாமனாரோ தூக்குவது கூடக்
கிடையாது. அந்தப் பெண் தானே பெற்றுக் கொண்டாள். ஆகவே அவள் தான்
பொறுப்பு. மீண்டும் பெற்றோர் தான் உதவிக்கு. காலை அந்தப் பெண்
வேலைக்குப் போகும் சமயம் பெண்ணின் தந்தை வந்து குழந்தையைத் தூக்கிச்
செல்வார். மாலை வேலையிலிருந்து திரும்புகையில் அம்மா வீட்டிலேயே
சாப்பிட்டு விட்டுக் குழந்தையை எடுத்துக் கொண்டு வருவாள் அந்தப் பெண்.
அந்தப் பெண்ணின் கணவனோ தன் பெற்றோரைத் தட்டிக் கேட்பதும் இல்லை.
பெண்ணின் பக்கம் பரிந்தும் பேசுவது இல்லை. நடுநிலை வகிக்கிறானாம்
வாய்மூடியாக. இப்போவும் இந்தக் காலத்திலேயும் இப்படியும் அக்கிரமம்
நடக்கிறது. ஒவ்வொருத்தர் பிள்ளைக்குக் குழந்தை பிறக்குமா, நாம கையிலே
எடுத்துக் கொஞ்சுவோமானு காத்திருக்க, இங்கே நேர்மாறாகக் கிடைத்த
அதிர்ஷ்டத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கலை. :(

ஒரு பக்கம் பெண் வீட்டுக்காரங்களின் நிபந்தனைகள், இன்னொரு பக்கம்
பெண்ணைக் கொடுத்து விட்டுத் தவிக்கும் பெற்றோர். அப்பாவிப் பெண்களின்
நிலைமை மாறாமல் இருப்பது தான் மிச்சம். எங்கே போகிறோம்? இது தர்ம பூமி,
கர்ம பூமி என்றெல்லாம் சொல்வது எதுக்காக? இம்மாதிரியான கொடுமைகள்
தொடர்ந்து நடப்பதற்கா? என்ன நாடு இது? என்ன மனிதர்கள் இவங்க? எப்போ
மாறும் இதெல்லாம்? நினைக்க நினைக்கக் கொதிக்கிறது! அந்தப் பெண்ணின்
தங்கை திருமணம் செய்து கொள்ளவே மறுக்கிறார். அக்காவுக்கு வந்தாப்போல்
எனக்கும் அமைந்து விட்டால் என்ன செய்யறது என பயம். :(((
இதெல்லாத்துக்கும் விடிவு எப்போ? ஆங்காங்கே ஒரு சில பெண்களும்,
மாமியார்களும் அத்தி பூத்தாற்போல் ஒத்துப் போகிறதும் நடக்கிறது.
என்றாலும் மருமகள் வேலைக்குப் போய் சம்பாதிக்கவும் செய்யணும்;
வீட்டிலும் எல்லா வேலையும் செய்யணும். நான் மருந்துக்குக் கூட உதவ
மாட்டேன் என்பது எந்த விதத்தில் நியாயம்?

Geetha Sambasivam

unread,
Apr 21, 2013, 12:31:54 AM4/21/13
to மின்தமிழ்
பொதுவாகப் புனர்பூச நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் தாங்கள் வாழ்க்கையில்
ஏதேனும் ஒரு விதத்தில் கஷ்டப்படுவதாய்ச் சொல்வதை நானும்
பார்த்திருக்கேன். ரொம்பவே படுத்தும் என்பார்கள். பரணி தரணி ஆளும்
என்று வழக்கு மொழி இருந்தாலும் பரணியில் பிறந்தவர்களும் கஷ்டப்படுவதையும்
பார்த்திருக்கேன். கேட்டை நக்ஷத்திரம் கோட்டை ஆளும் என ஒரு தரப்பாரும்,
(அவங்க வீட்டில் நிறையக் கேட்டை நக்ஷத்திரக்காரங்க இருப்பாங்க) கேட்டை
கோட்டையை அழிக்கும் என இன்னொரு சாராரும் கூறுகின்றனர். மகத்துப் பெண்
ஜகத்திலேயே கிடையாது என்பாரும் உண்டு. பெண்ணுக்கு மகம் என்றால் எங்க
பிள்ளைக்கு வேண்டாம் என்பவர்களும் உண்டு.

பொதுவாகக் கல்யாணத்திலே நக்ஷத்திரப் பொருத்தம் தான் முக்கியம்.
புனர்பூசம் யாருக்கு இருந்தாலும் அந்த நக்ஷத்திரத்திற்குரிய பெண்ணையோ,
பிள்ளையையோ சேர்த்தால் அதற்கேற்றாற்போல் கல்யாண முஹூர்த்தம்
அமைந்துவிட்டால் பிரச்னை இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. மற்றபடி
நக்ஷத்திரத்தைக் காரணம் காட்டி ஜாதகத்தை மறுப்பதோ, அல்லது எல்லாம்
பொருந்தி வரும் இடத்தை மறுப்பதோ சரியல்ல என்பது என் கருத்து.

Geetha Sambasivam

unread,
Apr 22, 2013, 4:23:34 AM4/22/13
to மின்தமிழ்
Monday, April 22, 2013

எப்படியோ கல்யாணம் நடந்தால் சரிதானா? :(
பிள்ளையின் தாய், தந்தை மருமகளைக் கொடுமை செய்வதையும், பெண்ணின் தாய்,
தந்தையர் போடும் நிபந்தனைகளையும் சென்ற பதிவில் பார்த்தோம். இந்தக்
காலத்தில் நடப்பதைச் சொல்லிவிட்டு முன் காலத்தில் இதே திருமணங்கள் நடந்த
விதத்தை எடுத்துக் காட்டுவதே என் முக்கிய நோக்கம். எப்படி ஒரு
புனிதமாகவும், வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகவும் கருதப்பட்ட திருமண
பந்தம் இன்று எப்படி மாறி இருக்கிறது என்பதைச் சொல்லவே இந்தப் பதிவுகள்.
அடுத்து இப்போ சொல்லப் போவது குறித்து மிகுந்த மனக்கஷ்டத்துடனேயே சொல்லப்
போகிறேன். இந்தக் கல்யாணத்திற்கு நாங்கள் இருவரும் சென்றிருந்தோம்.
அப்படிச் சென்ற சமயத்தில் தான் பெண்ணின் பெற்றோர் எங்களுக்கு முன்
கூட்டியே பதினைந்து வருடங்கள் முன்னர் அறிமுகம் ஆனவர்கள் என்பது தெரிய
வந்தது. என்றாலும் இப்படி ஒரு கொடுமையை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

வடமாநிலத்திலேயே தொழில் புரிந்து அங்கேயே வசிக்கும் தொழிலதிபரின்
மனைவிக்கு ஒரு சிறு பெண் குழந்தை நாங்க பார்த்தப்போ இரண்டு அல்லது மூன்று
வயதுக்குள்ளாக இருக்கும். அதன் பின்னர் நாங்க அந்த ஊரை விட்டே
வந்துவிட்டோம். மறந்தும் போயிட்டோம். ஆனால் மிகவும் பணக்காரர்களான
அந்தப் பெண்ணின் பெற்றோர் பெண்ணுக்குத் திருமணம் செய்ய நினைத்தது சகஜமே.
பெண்ணும் நன்றாகப் படித்திருந்தாள். கார் ஓட்டுவாள். உயர்குலத்தினரின்
நாகரிகப் பழக்க, வழக்கங்கள் அனைத்தும் உண்டு. பெண்ணின் தாய் தென்
மாநிலத்தில் குறிப்பாகச் சென்னையில் வசிக்கும் பையராகப் பார்த்துத்
தேர்ந்தெடுத்தார். இதற்கு உதவி செய்தது பெண்ணின் அம்மாவைப் பெற்றவர்.
அவருக்கு எவ்வளவு தூரம் உண்மை தெரியும் என்பது எங்களுக்கு இப்போது
யோசித்தாலும் விளங்கவே இல்லை. இந்தத் திருமணத்திற்குச் சென்றிருந்த போது
தான் பெண்ணின் தாய் எங்களிடம் வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு நாங்க
ஒரே ஊரில் சில வருடங்கள் வசித்ததையும் எங்க வீட்டு நவராத்திரிக்கு
வந்ததையும் குறிப்பிட்டுக் கூறினார்.

கல்யாணம் மிக விமரிசையாக நடக்கப் பிள்ளையின் பெற்றோருக்குத் தலைகால்,
புரியவில்லை. பெரிய இடத்திலிருந்து மருமகள், ஏற்கெனவே மூத்த மருமகள்
இருந்தாலும் இந்த மருமகள் தான் அவங்களுக்கு அருமையாகத் தெரிந்தாள்.
திருமணம் ஆகிப் புக்ககமும் வந்தாச்சு. பெண்ணின் நடவடிக்கைகள் கொஞ்சம்
புதிராக இருந்தாலும் புதிய இடம், புதிய ஊர், முற்றிலும் புதிய வாழ்க்கை
என நினைத்தனர். திருமணம் ஆகி ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.
அந்தப் பெண் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாள். அதுவும் மூன்று ஷிஃப்ட்
உள்ள கால் சென்டர் வேலையைத் தேர்ந்தெடுத்தாள். இரவு ஷிஃப்டையே அதிகம்
விரும்பினாள். கணவன் மதியம் வீட்டில் இருக்கமாட்டான். இவள் இரவில்
இருக்கமாட்டாள். மதியம் வந்து நன்றாய்த் தூங்கிவிடுவாள். ஆரம்பத்தில்
தப்பாய்த் தெரியவில்லை என்றாலும் பிள்ளையின் பெற்றோருக்கு ஏதோ உறுத்த ஆறு
மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டதே, இன்னும் கருத்தரிக்கவில்லையே, ப்ளான்
பண்ணிட்டு இருக்கீங்களானு கேட்க, சில நாட்களில் பெண்ணின் அம்மா வருகை.

அவள் புக்ககம் அருகேயே வீடு ஒன்று எடுத்துத் தங்கிய அந்த அம்மா கொஞ்ச
நாட்களில் பெண்ணைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஒரு வாரத்தில்
அபார்ஷன் ஆகிவிட்டதாய்த் தகவல் தெரிவிக்க, பிள்ளையின் அப்பா, அம்மா
வருந்த, பிள்ளைக்கோ சந்தேகம். அப்பா, அம்மாவிடம் தாங்கள் இருவரும்,
கணவன், மனைவியாக ஒரு நாள் கூட வாழவில்லை; இரவில் தனித்திருந்தாலே ரொம்ப
வெட்கப் பட்டுக்கொண்டு விளக்கை அணைக்க மாட்டாள். ஒதுங்கியே படுப்பாள்
என்று சொல்லப் பிள்ளையின் தாய், தந்தைக்குக்குழப்பம். பெண்ணின்
நடத்தையில் சந்தேகம் வர சண்டை போட்டிருக்கின்றனர். பெண் வீட்டினருக்குக்
கோபம். அப்போது அந்தப் பையர் சாமர்த்தியமாகப் பெண்ணைப் பார்க்கச் சென்று
அவளை ஏதேதோ சொல்லிச் சமாதானமாகத் தனியே அழைத்துச் சென்று பெண்
மருத்துவரிடம் காட்டக் கூட்டிச் செல்லப் பெண் பிடிவாதம் பிடிக்க
வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று காட்டினார். பெண், பெண்ணே இல்லை என்று
தகவல். மருத்துவர் நல்லவேளையாக அரசாங்க மருத்துவர். சான்றிதழே
கொடுத்துவிட்டார். அதன் பின்னரும் இரு மருத்துவர்களிடம் காட்டிச்
சான்றிதழ் பெற்றாகி விட்டது. அவள் தந்தையும் வந்துவிட்டார். எப்படியோ
விவாகரத்து என நீதிமன்றம் போகவேண்டாம் எனக் கெஞ்சுகின்றனர்.
விவாகரத்துச் செய்யாமல் வேறொரு கல்யாணம் செய்துக்க முடியாது. அதற்கு
இந்தச் சான்றிதழ் முக்கியம். இரு பக்கமும் வாத, விவாதங்கள் சூடு
பறக்கிறது. என்ன நடக்கப்போகிறது எனப் புரியவில்லை. ஒரே குழப்பம்.
:((((((

Geetha Sambasivam

unread,
Apr 26, 2013, 11:18:02 PM4/26/13
to மின்தமிழ்
சமீபத்தில் நண்பர் ஒருத்தர் பதிவில் ஜோசியம் குறித்து எழுதி இருந்தார்.
ஆபரேஷனுக்குத் தயாராக இருக்கும் நோயாளி ஒருவர் ஜாதகம் பார்ப்பது குறித்த
கதை அது. அவர் அதை நகைச்சுவையாகவே எழுதி இருந்தார். ஆஸ்பத்திரியில்
ஜோசியரை வைத்து நோயாளியின் ஜாதகத்தைப் பார்ப்பதாகவும் ஆபரேஷன் சக்சஸ்
ஆகும் என்றாலே அட்மிஷன் என்றும் பொருள்படும்படியாகவும் கடைசியில் உண்மை
ஜாதகம் சரிவராமல், பொய்யான ஜாதகத்தைக் கொடுத்து ஆபரேஷனுக்கு அட்மிஷன்
வாங்குவதாகவும் கதை முடிந்திருக்கும். ஆனால் உண்மையிலேயே ஆயுர்வேத
மருத்துவ முறையில் ஜாதகம் மிகவும் முக்கியம். ஒருத்தரின் தோஷங்களை அந்த
ஜாதகத்தில் நடக்கும் கிரஹங்களின் போக்குவரத்தை வைத்துக் கணித்து இந்த
கிரஹத்தின் காரணத்தால் இந்த தோஷம் எனக் கண்டு பிடித்து அதற்கேற்றாற்போல்
மருந்து கொடுப்பார்கள். அல்லது ஆபரேஷன் போன்ற பெரிய விஷயங்களுக்குப்
பரிந்துரை செய்வார்கள்.

விளையாட்டு இல்லை; இதை நான் நேரிடையாகவே குஜராத் மாநிலம் ஜாம்நகரில்
உள்ள ஆயுர்வேதப் பல்கலைக் கழகத்தில் நடந்து வருவதை அறிந்திருக்கிறேன்.
சில ஆயுர்வேத மருத்துவர்கள் நோயாளியின் உடல்நிலையோடு அவர்களின்
ஜாதகத்தையும் கொண்டுவரச் சொல்லி அதையும் பார்த்துவிட்டே மருந்து
கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார்கள். மற்ற எந்தப் பொருத்தங்கள்
இருந்தாலும் இல்லாவிட்டாலும் நக்ஷத்திரப் பொருத்தமும், குழந்தை
பிறக்குமா, பிறக்காதா என்பதும் முக்கியமாய்ப் பார்க்கப்பட்டது. ஆகவே
திருமணத்திலும் ஜாதகம் குழந்தை பிறப்புக்கு மிக முக்கியமாகக்
கருதப்படுகிறது. அதிலும் போன பதிவில் சொன்ன மாதிரி பெண்ணாக இல்லை எனில்
ஏமாற்றப்பட்டிருந்தால் என்ன செய்வது? அப்படிப் பட்ட ஏமாற்றங்கள் நிகழாமல்
பெருமளவு ஜாதகங்கள் தடுத்து வந்ததாய்த் தெரிய வருகிறது. பெண்ணிற்கு
ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக்கொடுக்கும் அளவுக்கு உடல்நலம் இருக்கிறதா
என்பதை ஜாதகத்தைப் பார்த்தே கணிப்பார்களாம். அந்த நாட்களில் செயற்கை
ரசாயனச் சேர்க்கை என்பது இல்லை என்பதாலோ என்னமோ ஆண்களில் மலட்டுத் தன்மை
என்பது குறைவாகவே இருந்து வந்திருக்கிறது. இதனால் தானோ என்னமோ
பெண்ணிற்குக் குழந்தை பிறக்குமா என்பதை முக்கியமாய்த் தெரிந்து
வைத்துக்கொள்ள ஜோசியத்தின் உதவியை நாடி இருக்கின்றனர்.

பெண்ணின் மூலமே ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்து அவள் மூலமே
வளர்க்கப்பட்டு சமூகத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற காரணமாகவும்
இருந்திருக்கலாம். இப்போது நேற்றைய ஒரு செய்தியில் 29 வயதுப் பெண்
ஒருத்திக்குத் திருமணம் நிச்சயமாகி இருந்தது. அவளுக்கு மாதாந்திரப்
பிரச்னைகள் ஏற்பட ஆரம்பிக்கவே மருத்துவரிடம் போய்ப் பரிசோதனை
செய்திருக்கிறாள். மருத்துவப் பரிசோதனையில் அதிர்ச்சி தரும் தகவல்.
அந்தப் பெண்ணிற்கு மாதவிடாய் முடியும் தருவாயில் இருப்பதாக மருத்துவர்
கூற அதிர்ந்து போனாள் அந்தப் பெண். இப்போதைய பணி நேர மாற்றங்கள்,
பெண்கள் செய்யும் பணிகள், மன அழுத்தங்கள், சற்றும் உடல்நலம் பேணாமல்
வேலைக்காகக் கண்ட நேரம் கண் விழித்திருந்து சரியாக உணவு உண்ணாமை போன்ற பல
காரணங்களால் ஒரு சில பெண்களுக்கு இப்போது நாற்பது வயதைக் கடக்கும்
முன்னரே இம்மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றனவாம். ஆகவே பெண்களின் உடல்
நலமும், பூரண ஆரோக்கியமும், குழந்தைப் பிறப்புக்கு ஏற்றவளா என்ற
தகுதியும் திருமண வாழ்க்கைக்கு மிக முக்கியம்.

இப்போதெல்லாம் குழந்தை பிறக்குமா என்று மட்டும் பார்ப்பதில்லை. கூடவே
Rh-, Rh+ பரிசோதனையும் செய்துவிடுகிறார்கள். எங்கள் வீட்டிலேயே என்
பிரசவத்தில் ஏற்பட்ட அனுபவத்திற்குப் பின்னர் எங்கள் சித்தி பெண்கள், என்
மன்னி போன்றோருக்குக் குழந்தை பிறக்கும் முன்னர் இந்தப் பரிசோதனை
மேற்கொள்ளப் பட்டது. இப்போதெல்லாம் திருமணத்தின் போதே பெண் பார்த்து
நிச்சயம் செய்யும் முன்னரே இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது.
எனக்குத் தெரிந்து பெண்ணுக்கு Rh- என்பதால் அந்தப் பெண்ணை
நிராகரித்தவர்கள் உண்டு. விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறி இருந்தாலும்
மனிதர்கள் சிந்தனை பின் நோக்கித்தான்.

Geetha Sambasivam

unread,
Apr 30, 2013, 3:08:24 AM4/30/13
to மின்தமிழ்
ஜோசியம் பொய்யல்ல. ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கிரஹத்தின் பெயர் வந்த
காரணமே அந்த அந்த கிரஹத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாட்கள்
என்பதாலேயே. இப்படித் தான் ஏழு நாட்கள் வாரத்துக்கு வந்தது என்பதோடு,
மிச்சம் உள்ள இரண்டு கிரஹங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் ஒவ்வொரு
நாளிலும் அவர்களின் ஆதிக்கம் உள்ள ஒன்றரை மணி நேரத்தை ராகு காலம்,
எமகண்டம் எனக் கொடுத்திருக்கின்றனர். அதே போல் பெளர்ணமி அன்றும் அமாவாசை
அன்றும் கடல் அலைகள் உயர எழும்பிக் குதிக்கும். ஏனெனில் சந்திரனின்
ஆதிக்கம் அன்று அதாவது கதிர் வீச்சு அதிகமாய் இருக்கும் எனப்
படித்திருக்கோம் இல்லையா? அந்த தினங்களில் நம் உடலின் ரத்த ஓட்டமும்
அதிகரிக்கும் என்கின்றனர். சந்திரனின் இந்தக் கதிர் வீச்சு மனதோடு
தொடர்பு கொண்டது என்பதாலேயே சில மன நோயாளிகளுக்கு அமாவாசை, பெளர்ணமி
அன்று மனநோயின் தாக்கமும் அதிகமாய் இருக்கும்.

ஜோதிடம், வானசாஸ்திரம், கணிதம் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பு
கொண்டவையே. இவற்றை உலகுக்கு அளித்ததும் நாமே. நம் மூலமே நம்முடன்
வணிகம் செய்ய வந்த மற்ற நாட்டவருக்கு இவை சென்று பின் உலகம் முழுதும்
பரவியுள்ளது எனலாம். இவற்றை எல்லாம் கணித்த நம் ரிஷி முனிவர்கள் ஒன்றும்
தெரியாதவர்கள் அல்ல. பராசரர், அகத்தியர், புலிப்பாணி சித்தர்,
இடைக்காடர் போன்றோர் ஜோதிடம் குறித்த அரிய நூல்களை எழுதியுள்ளனர்.
அகத்திய நாடி மிகவும் சிறப்பானது. ஆனால் இன்றைய தினம் உண்மையான அகத்திய
நாடியைப் படித்துச் சொல்லும் தகுதி வாய்ந்த நபர்கள் இல்லை. இந்த
ஜோதிடத்தைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடமாகவே வைத்து விட்டால்
பின்னர் இதில் கலப்படமான வேலை செய்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல்
போவார்கள் என எண்ணுகிறேன். ஆனால் இதிலும் கலப்படம் இருப்பதாலேயே
பெரும்பாலோர் இதை ஏமாற்று என்கின்றனர். இந்தியாவில் ஒரு சில
பல்கலைக்கழகங்களிலும் தமிழ்நாட்டில் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திலும்
(இப்போ இருக்கா?) , சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திலும் ஜோதிடம் ஒரு பாடமாக
இருந்தது/இருக்கிறது.
http://www.sastra.edu/distanceeducation/AstrologyProgramme.asp காமராஜ்
பல்கலைக்கழகத்தில் தமிழில் இருந்தது என எண்ணுகிறேன்.

ஆதிகாலத்தில் கல்வி கற்றுக் கொடுக்கையிலேயே இவை எல்லாம் அவரவர்
விருப்பத்திற்கேற்பப் படிக்க முடிந்தது. கல்வி கற்றுக் கொடுப்பதும்,
மருத்துவம் பார்ப்பதும், ஜோசியம் பார்த்துச் சொல்வதும் ஒரு மாபெரும்
தர்மமாகவும், இலவசமாகச் சொல்வதுமாகவே இருந்து வந்த நாட்கள் உண்டு.
இப்போது இவை பணம் பண்ணும் வியாபாரமாக ஆகிவிட்டன. வான சாஸ்திரம் குறித்த
விஞ்ஞான வளர்ச்சி கடந்த முந்நூறு ஆண்டுகளாய்த் தான் இருந்து
வந்திருக்கிறது. ஆனால் நம் முன்னோர்கள் கோள்களின் சுழற்சியைத்
துல்லியமாய் எந்தவிதமான உபகரணங்களின் உதவியும் இல்லாமல் கண்டு
பஞ்சாங்கங்களில் கூறி இருக்கிறார்கள். ஒவ்வொரு வருஷமும் கிரஹணம் எப்போது
வரும் என்று கால நேரத்தோடு சரியான கணிப்பில் பஞ்சாங்கங்களில்
பார்க்கலாம். இவை குறித்த பல அரிய குறிப்புகள் நிறைந்த ஜோதிடக்
குறிப்புகள் நாளந்தா பல்கலைக் கழகத்தில் இருந்ததாகவும் அந்நியப்
படையெடுப்புக்களில் தீக்கிரையாக்கப் பட்டது போக எஞ்சியவையே இப்போது
இருப்பதாகவும் கூறுகின்றனர்.

அப்பாதுரை கூறி இருப்பது போல் முகத்தைப் பார்த்துச் சரியாகச் சொல்பவர்களை
நானும் கண்டிருக்கிறேன். அவர்கள் சொல்வது சரியாகவே இருக்கும். எங்கோ ஒரு
சிலர் பிழைப்புக்காக ஏமாற்று வேலைகள் செய்வதால் ஒரு அருமையான கலையை
ஒட்டுமொத்தமாக ஒதுக்குவது சரியல்ல. உண்மையான ஜோதிடர்கள் இன்றும்
இருப்பார்கள். அவர்களைக் கண்டறிய வேண்டும். ஜோதிடத்தைப் பாடமாக வைக்க
வேண்டும். கணக்கு நன்கு வரும் மாணாக்கர்கள் ஜோதிடத்திலும், வான
சாஸ்திரத்திலும் சிறந்து விளங்குவார்கள். என்னைப் பொறுத்த வரையிலும்
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் ஜோதிடத்தை நம்பியே இல்லை. அதே போல்
ஏற்கெனவே தெரிந்து கொண்டவை நடப்பதையும் பார்த்து வந்து கொண்டிருக்கிறேன்.
இது என் வாழ்க்கையில் மட்டுமல்லாமல் உறவினர், நண்பர்கள் வாழ்விலும்
நடக்கிறதைப் பார்க்கிறேன். ஆனால் நான் என்னோட ஜாதகத்தைத் தூக்கிக்
கொண்டு ஜோதிடரிடம் இன்றளவும் அலையாய் அலைந்தது இல்லை. அப்பாதுரை சொல்லி
இருப்பது போல் தானாக வந்த தகவல்களே. :))))

Geetha Sambasivam

unread,
May 2, 2013, 4:25:20 AM5/2/13
to மின்தமிழ்
கல்யாணம் பண்ணிப் பார்!
500 பவுன் நகை, 50 லக்ஷம் ரொக்கம், உயர்ந்த ரக மக்கள் வசிக்கும்
பகுதியில் ஆடம்பர பங்களா, ஒரு கார்(ஆடியா தெரியலை) இத்தனையும்
கேட்கிறாள் ஒரு தொலைக்காட்சித் தொடரில் மாமியார். என்ன தான் சொந்த
பிசினஸ் பண்ணினாலும் அம்பானியாகவே இருந்தாலும் 500 பவுன் நகை சாத்தியமா
தெரியலை. கல்யாணச் செலவு ஒரு கோடியைத் தாண்டுகிறது. இதை எல்லாம்
பார்க்கிறச்சே. இப்படி எல்லாம் சொல்லிக் கொடுக்கிறாங்களே, ஏற்கெனவே நம்
மக்கள் ஆடம்பரத்துக்குப் பழக்கப் பட்டுப் போயிருக்காங்களே, இப்போ இன்னும்
ஜாஸ்தியாகுமேனு தோணித்து. ஆனாலும் என்ன செய்ய முடியும்? நாம இங்கே
தனியா லபோ, திபோனு புலம்பிட்டு இருக்க வேண்டியது தான். இதிலே எது
குறைஞ்சாலும் கல்யாணம் இல்லைனு கண்டிஷன் வேறே.

இதிலே சீரியலில் அந்தப் பெற்றோருக்கு மூணு பெண்கள். இந்தப் பெண்ணுக்கு
வந்த நல்ல வேலையையும் அநாவசிய கெளரவம் பார்த்துக் கொண்டு அப்பா
வேண்டாம்னு சொல்லிட்டாராம். :))) ஏனெனில் பெண்கள் என்றால் அவருக்கு
உயிராம். அவரே உழைத்து சம்பாதித்து அந்தப் பணத்தில் பெண்கள் கவலை
இல்லாமல் வாழ்க்கை நடத்தணுமாம். அதுவும் எல்லாப் பெண்களையும் பெரிய
தொழிலதிபர்களுக்குத் தான் கொடுப்பார் போல! :)))))) ஜீவி சார்
வருங்காலத்து திருமணங்களையும் குறித்துச் சொல்லணும்னு கேட்டார்.
வருங்காலத்துத் திருமணம் இப்படி இருந்தால்??? ம்ஹ்ஹூம், சான்ஸே இல்லை. .
சீரியல் கதாநாயகியரைத் தவிர்த்து எந்தப் பெண்ணும் இதுக்கு
ஒத்துக்கமாட்டா . இப்போதெல்லாம் பெண்கள் மிகவும் விழிப்புடன்
இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அதுவும் இந்தக் கணினி யுகத்துப்
பெண்கள் நேரே போலீஸுக்குப் போயிடுவாங்க. மாம்பலத்தில் பாணிக்ரஹா திருமண
மண்டபத்தில் சில வருடங்கள் முன்னர் நடக்க விருந்த திருமணத்தின் மணப்பெண்
வித்யாவைப் போல. ஆனால் அந்த வித்யா செய்தது முட்டாள் தனம்.

திருமணம் நிச்சயம் ஆகி மாப்பிள்ளையோடு பேச்சு, வார்த்தையெல்லாம் இருந்து
வந்திருக்கிறது. திருமணத்துக்கு முதல்நாள் நிச்சயதார்த்தமும், இந்தக்
கால வழக்கப்படி ரிசப்ஷனும் நடந்திருக்கிறது. அப்போல்லாம் அந்தப் பெண்
சந்தோஷமாகவே இருந்திருக்கிறாள். ரிசப்ஷன் முடிஞ்சு மறுநாள்
கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டிய சாமான்களைத் தயார் செய்கையில்
வெள்ளி கூஜா அந்த வித்யாவுக்கு வாங்கி இருப்பது மாப்பிள்ளையின்
அம்மாவுக்குத் தெரிய வந்திருக்கிறது. அவங்க சாதாரணமாகச் சொல்வதாய்
நினைத்துக் கொண்டு, "எங்க வீட்டில் கூஜாவில் வரலக்ஷ்மி விரதத்தில் அம்மன்
முகம் வைப்பதில்லை. செம்பில் தான் வைப்போம். வெள்ளியில் செம்பாக வாங்கி
இருக்கலாமே!" என்று சொல்ல, பெண்ணின் தாய் மாமாவும் அதை யதார்த்தமாக
எடுத்துக் கொண்டு வாங்கிய ரசீது இருப்பதால் காலையில் கடை திறந்ததும்
மாற்றித் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

வேறு எதுவும் நடந்ததாய்த் தெரியவில்லை. இது எப்படி ஊதிப் பெரிசாக்கப்
பட்டதுனும் தெரியலை. எல்லாரும் படுத்துக் கொண்டதும், விடியற்காலை
மூன்றரை மணி நான்கு மணி அளவில் அந்தப் பெண் வித்யா எதிரே இருந்த காவல்
நிலையத்தில் போய்ப் புகார் கொடுத்துவிட்டாள். மாமனார் வீட்டில் வரதக்ஷணை
கேட்டுத் தொந்திரவு செய்வதாக. வேறு பெரியவர்கள் யாரும் இல்லாமல் பெண்ணே
நேரில் போயிருக்கிறாள் அவள் தோழிகளோடு. அந்தப் பெண்ணிற்கு வேறு ஏதேனும்
நோக்கம் இருக்குமா, இருந்திருக்கிறதா என்பது குறித்துத் தெரியவில்லை.
ஆனால் திரும்பத் திரும்பச் சொல்லவும், போலீஸ் கல்யாண மண்டபம் போக,
மாப்பிள்ளை வீட்டினருக்கு அதிர்ச்சி என்பதோடு, மத்திய அரசு அலுவலில்
இருந்த மாப்பிள்ளையின் தந்தை போலீஸ்காவலில், நல்லதொரு கம்பெனியில் இருந்த
மாப்பிள்ளையும் போலீஸ் காவலில். பிள்ளையின் அம்மா மட்டும் பெண் என்பதால்
ஜாமீனில் விடுதலை ஆனார். அவரும் ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை.

இதன் பின் விளைவுகளை நாளை பார்க்கலாம். உங்கள் கருத்துக்களை ஆவலுடன்
வரவேற்கிறேன். எத்தனை பேர் வித்யாவைப் பாராட்டறீங்க, எத்தனை பேர் அவள்
செய்தது தப்புனு சொல்றீங்கனு பார்க்கணும். :))))))

Geetha Sambasivam

unread,
May 5, 2013, 4:18:10 AM5/5/13
to மின்தமிழ்
சம்ப(ம)ந்தி சாப்பிடவே மாட்டாள்! இட்லியில் இருநூறு, ஜாங்கிரியில் முந்நூறு
இது எல்லாம் போகப்பல பெண்கள் இன்று முன்பே பழகி ஒருவரை ஒருவர் நன்கு
தெரிந்து கொண்டாலும் பின்னால் ஒத்துப் போவதில்லை. பல கல்யாணங்கள்
நிச்சயம் முடிந்து நின்று போயிருக்கிறது. பல கல்யாணங்கள் கல்யாணம் ஆகி
விவாகரத்தில் முடிகிறது. இன்று பெருமளவு விவாகரத்துத் தான்
காணப்படுகிறது. ஆனால் திரும்பத் திரும்பச் சொன்னாலும் இதையே வலியுறுத்த
வேண்டி உள்ளது. திருமணம் என்பது வெறும் புலன்களின் சுகத்தை
அனுபவிப்பதற்காக அல்ல. அதை ஆணோ, பெண்ணோ திருமணம் இன்றியே பெற்றுவிடலாம்.
இரு மனமும் ஒரு மனமாக இணைந்து அற வழியில் வாழ்க்கையை நடத்தவே திருமணம்
வேண்டும். இம்மாதிரித் திருமணங்களில் புலன் வேட்கை என்பது முக்கியம்
பெறாது. அல்லது வேட்கை தணிந்த பின்னரும் அவர்கள் அன்பு தொடரும்.

அதோடு தன் வம்சம் தழைக்கவேண்டியும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
அஸ்திக்கு ஒரு ஆணும், ஆசைக்கு ஒரு பெண்ணும் தேவை என்பார்கள். அஸ்தி என்ற
வடமொழிச் சொல்லுக்கு இருக்கிறது என்று பொருள். தன் வம்சம் தொடர்ந்து
இருக்க வேண்டி பிள்ளைக்குழந்தை பிறக்க வேண்டும். தன் வம்சத்தைச் சுமக்க
ஒரு பெண்ணை இன்னொருவர் நமக்குத் தந்தது போல் வேறொருவரின் வம்சத்தைச்
சுமக்க வேண்டி எனக்கு ஒரு பெண் குழந்தையும் வேண்டும் என்று தம்பதியர்
வேண்டிக் கொள்வார்கள். இருவருக்கும் இடையே மன ஒற்றுமை தான் முக்கியம்.
இந்தக் காலத்தில் விட்டுக் கொடுத்தல் என்றால் நான் அவ்வளவு இறங்கிப்
போகணுமா என்று நினைக்கிறார்கள். கெளரவம் பார்க்கின்றனர். நானும் தான்
படிச்சுச் சம்பாதிக்கிறேன். நான் என்ன மட்டமா எனப் பெண்ணும், அவள் தான்
இறங்கி வரட்டுமே என ஆணும் நினைக்கின்றனர்.


சகிப்புத் தன்மை அறவே இல்லை. இந்த விஷயத்தில் ஆண், பெண் பேதமில்லை.
குறைகளே அற்ற மனிதர் கிடையாது. நம் தாய், தந்தையரோடும்,
கூடப்பிறந்தவர்களோடும் நமக்குக் கருத்து வேறுபாடு வராமல் இருக்கிறதா?
அல்லது வெளியே வேலைக்கு என்று செல்லுமிடத்தில் கருத்து வேறுபாடு இல்லாமல்
இருக்கிறதா? வேலை நிலைக்க வேண்டி எத்தனையோ அவமானங்களைச் சகித்துக்
கொள்கின்றனர் பெண்கள். ஆனால் வீட்டில்?? சின்ன ஒரு விஷயத்துக்குக் கூடச்
சண்டை வந்துவிடுகிறது. வீட்டையும் பார்த்துக் கொண்டு வேலைக்கும் போகும்
பெண்கள் சதாவதானம் பண்ணத் தான் வேண்டி இருக்கும். ஆனால் வேலைக்கு
நிச்சயமாய்ப் போயாகணுமா என்ற முடிவையும் எடுக்கணும். அத்தியாவசியத்
தேவைகளுக்கு வேலைக்குப் போவது போய் இப்போதெல்லாம் ஆடம்பரச் செலவுகளுக்கு
ஈடு கட்டவும், குழந்தைகளுக்கு நினைத்ததை வாங்கிக் கொடுக்கவும் பணம்
தேவைப் படுகிறது. அதற்காக வேலைக்குப் போகிறார்கள். அல்லது அவர்கள்
"சுயம்" என்பதைத் திருப்தி செய்து கொள்ள வேலைக்குச் செல்கிறார்கள். இதை
எல்லாம் பெண்ணும், பிள்ளையும் இப்போதெல்லாம் திருமணம் நிச்சயம் ஆனதுமோ
அல்லது நிச்சயத்துக்கு முன்னரோ முடிவு செய்து கொள்கின்றனர். என்றாலும்
பலருக்கும் இதில் வேறுபாடுகள் இருக்கத் தான் செய்கின்றன.


திருமணம் நிச்சயம் ஆனதும் பெண்ணும், பிள்ளையும் பழக வேண்டாம் என அந்தக்
காலங்களில் தடுத்ததில் அர்த்தம் உள்ளது. திடீரென ஏதேனும் ஒரு காரணத்தால்
அந்தத் திருமணம் நடக்காமல் போய்விட்டால்?? இருவர் மனமும் பாதிப்புக்கு
உள்ளாகுமே! நிச்சயம் முடிந்து பழகிப் பின்னர் மாப்பிள்ளை அழைப்பு,
ரிசப்ஷன் என முடிந்து காலை கல்யாணம் என்னும்போது திருமணத்தை
நிறுத்துவதும் முறையல்ல. முதலிலேயே நம் எண்ணத்தைத் தெளிவாகச் சொல்லிவிட
வேண்டும். எத்தனை உறவினர் வந்திருப்பார்கள்? ஏதேனும் ஒரு குழுமத்தார்
பிள்ளை வீடு/அல்லது பெண் வீடு இந்தக் கல்யாணத்தை ஆவலுடன்
எதிர்பார்த்திருப்பார்கள் அல்லவா? மேலும் மண்டபச் செலவும், சாப்பாடுச்
செலவு என அனைத்தும் வீணாகுமே. சரியான காரணம் இருந்தால் நிறுத்துவது
முறையே. நம்மால் சமாளிக்க முடிந்த சின்னச் சின்னக் காரணங்களுக்காகக்
கல்யாணத்தை நிறுத்துவது சரியல்ல.

நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத் தேதியும் குறிச்சாச்சு. அடுத்துப்
பிள்ளை வீட்டிலும், பெண் வீட்டிலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள்
துவங்கும். அந்த நாட்களில் சீர் வரிசையாக முக்கியமாகப் பாத்திரங்களே
இடம் பெற்றன. அதே போல் திருமண விருந்திலும் பெரிய அளவில் உணவு வகைகள்
இடம் பெற்றிருக்காது. கிராமம் என்றால் கிராமத்தில் ஒரு வீட்டில்
திருமணம் எனில் திருமண வீடு இருக்கும் தெருவில் உள்ளவர்கள், மற்றும்
தெரிந்தவர்கள் அவரவரால் இயன்ற பொருட்களைக் கொடுத்து உதவுவார்களாம். பால்
மிஞ்சினால் திருமண வீட்டிற்கு வந்துவிடும். அந்த நாளில் குளிர்சாதனப்
பெட்டி எல்லாம் கிடையாது என்பதால் மரக்குடுவைகள் அல்லது மண் பானைகளில்
பாலை ஊற்றித் தயிர் தோய்த்து ஊர்க்குளத்தில் கொண்டு போய் மிதக்க விட்டு
விடுவார்களாம். வெகு நாட்கள் ஆனாலும் தயிர் புளிக்காதாம். இப்படித்
தயிர் சேகரித்துப் பலருக்கு அன்னதானமே செய்திருக்கின்றனர்.

அதே போல் திருமண வீட்டிலும் காலை ஆகாரம், இப்போதைப் போல் இட்லி, தோசை,
பூரி, இடியாப்பம் என்றெல்லாம் கிடையாது. ஆசாரக் காரர்கள், பெரியவர்கள்,
மற்றும் கல்யாண வீட்டினர் காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் விரதம்
போல் இருந்துவிட்டுத் திருமண முஹூர்த்தம் முடிந்ததுமே உணவு
உண்ணுவார்களாம். சிறு வயதினருக்கும், குழந்தைகளுக்கும், கைக்குழந்தை
உள்ள இளம்பெண்களுக்கும், பசி தாங்க முடியாதவர்களுக்கும் பழையது தான் காலை
ஆகாரமாகப் போடுவார்களாம். அதில் முதல்நாள் குழம்பு சுண்ட வைத்தது,
மேலும் வற்றல், வடகங்கள், ஊறுகாய் வகைகள் என இருக்குமாம். கல்யாணத்தில்
அதிகம் இடம்பெறும் இரண்டு முக்கிய உணவுகளில் ஆமைவடையும், போளியும் ஆகும்
என்கிறார்கள். இந்த போளியே மராட்டியர் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்த
ஒரு உணவுப் பண்டம் ஆகும். அது குறித்துப் பின்னர் ஆராய்ச்சி செய்யலாம்.

Geetha Sambasivam

unread,
May 6, 2013, 4:45:59 AM5/6/13
to மின்தமிழ்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
எங்கள் சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
வெகு சங்கோஜக்காரி எங்கள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
வெகு சங்கோஜக்காரி எங்கள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

இட்டிலியில் இருநூறு, ஜாங்கிரியில் முந்நூறு,
மைசூர்பாகில் நானூறு, தயிர்வடையில் ஐந்நூறு
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
இட்டிலியில் இருநூறு, ஜாங்கிரியில் முந்நூறு,
மைசூர்பாகில் நானூறு, தயிர்வடையில் ஐந்நூறு
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

புளியோதரையும் வெண்பொங்கலும் காராசேவும் கைமுறுக்கும்
திரட்டுப்பாலும் தேன்குழலும் விதம் விதமாகவே ஒரு கை பார்ப்பாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
புளியோதரையும் வெண்பொங்கலும் காராசேவும் கைமுறுக்கும்
திரட்டுப்பாலும் தேன்குழலும் விதம் விதமாகவே ஒரு கை பார்ப்பாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

குலைகுலையாக வாழைப்பழமும் கூடைகூடையாக திராட்சைப் பழமும்
டசன் டசனாக ஆப்பிள் பழமும் தட்டுத் தட்டாக ஆரஞ்சு பழமும்
போதாக்குறைக்கு பலாப்பழங்களும்
தின்னுத்தின்னு தீர்ப்பாள் அலுக்கவே மாட்டாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

குலைகுலையாக வாழைப்பழமும் கூடைகூடையாக திராட்சைப் பழமும்
டசன் டசனாக ஆப்பிள் பழமும் தட்டுத் தட்டாக ஆரஞ்சு பழமும்
போதாக்குறைக்கு பலாப்பழங்களும்
தின்னுத்தின்னு தீர்ப்பாள் அலுக்கவே மாட்டாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

அமெரிக்க பாதாம் அரேபியா பேரீச்சை இந்திய முந்திரி
ஈராக்கி பிஸ்தா காஷ்மீர அக்ரூட் உலர்ந்ததிராட்சை
குங்குமப்பூப் போட்ட கற்கண்டுப் பாலை
குடம்குடமாக குடித்தேத் தீர்ப்பாள்
தின்னாலும் கொண்டாலும் திருப்தியில்லாத
சம்பந்தி சாப்பிடவே மாட்டாள்

அமெரிக்க பாதாம் அரேபியா பேரீச்சை இந்திய முந்திரி
ஈராக்கி பிஸ்தா காஷ்மீர அக்ரூட் உலர்ந்ததிராட்சை
குங்குமப்பூப் போட்ட கற்கண்டுப் பாலை
குடம்குடமாக குடித்தேத் தீர்ப்பாள்
தின்னாலும் கொண்டாலும் திருப்தியில்லாத
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

வறுவறு சீவலும் வாசனைப்பாக்கும்
கவுளி கவுளியாய் கும்பகோண வெற்றிலையும்
ஜாதிக்காய், ஏலக்காய், கத்தைக்காம்பும்
புட்டிபுட்டியாகவே கோலி சோடாவும்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

வறுவறு சீவலும் வாசனைப்பாக்கும்
கவுளி கவுளியாய் கும்பகோண வெற்றிலையும்
ஜாதிக்காய், ஏலக்காய், கத்தைக்காம்பும்
புட்டிபுட்டியாகவே கோலி சோடாவும்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
வெகு சங்கோஜக்காரி எங்கள் சம்மந்தி
எங்கள் சம்மந்தி
ஆமா சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
எங்கள் சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

Geetha Sambasivam

unread,
May 6, 2013, 5:04:02 AM5/6/13
to thamiz...@googlegroups.com, மின்தமிழ்
अस्ति= to be, to live to exist (verb), இருக்க, ஆக

अस्थि= bone  kennel or stone(seed) of a fruit  (noun)

ஹிஹிஹி, அகராதியை எங்கேயோ வைச்சுட்டுத் தேட  இரண்டு நாள்.  ரங்க்ஸ் தினமும் புத்தக அலமாரியை ஒழிச்சு வைனு சொல்றார்.  எங்கே? எனக்குப் பிடிச்ச விதத்திலே கலைச்சு வைச்சிருக்கேன்.  எது எங்கே இருக்கும்னு எனக்குத் தான் தெரியும்.  அப்படியும் அகராதியைக் கண்டு பிடிக்க முடியலை!

இங்கே சொல்வது முதல் அஸ்தி. வெர்பல் ஃபார்ம்.  இரண்டாவது அஸ்தி இல்லை. அப்பாடா!  யாரங்கே , ஜோடா ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

2013/5/5 திவாஜி <agni...@gmail.com>
2013/5/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

> அஸ்திக்கு ஒரு ஆணும்,

அஸ்திக்கு எலும்பு என்று பொருள் உண்டு. 2 வது த.  இறந்த இரண்டாம் நாள்
காரியம் செய்யும் போது அஸ்தி சஞ்சயனம் என்கிறார்கள் இல்லையா? அதாவது
தனக்கு கர்மா செய்ய ஒரு ஆண் என்று நினைத்து இருக்கலாம்.
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



329.gif

Geetha Sambasivam

unread,
May 6, 2013, 7:13:23 AM5/6/13
to mint...@googlegroups.com
சில கல்யாணங்களில் கட்டாயமாய்ப் பாடறாங்க.  இதைப் பாடவும் நாதஸ்வரத்தில் நையாண்டி செய்வதுமாக இருக்கும்.

2013/5/6 amaithi cchaaral <amaithi...@gmail.com>
மேலே சொல்லியிருக்கும் சம்பந்திப்பாட்டை ஒரு பெண்கள் பத்திரிகையிலும் வாசிச்ச நினைவு. உங்க இழையில் முதல்வரியை நீங்க பகிர்ந்ததிலிருந்து முழுப்பாட்டையும் எப்போ பகிர்ந்துப்பீங்கன்னு வெயிட்டிங். இப்பவும் இதெல்லாம் பாடறாங்களா கீத்தாம்மா?

அன்புடன்,
சாந்தி மாரியப்பன்.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Geetha Sambasivam

unread,
May 8, 2013, 1:09:50 AM5/8/13
to மின்தமிழ்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே
ஸ்ரீராமனும் மணமகன் ஆனாரே
நம்ம ஜானகி மணமகள் ஆனாளே
வந்தவர்க்கும் பார்த்தவர்க்கும் ஆனந்தம்
சீதைக்கும் ராமனுக்கும் ஆனந்தம்

கெளரி கல்யாண வைபோகமே
விருத்தம்
-----------
க்ஷேமங்கள் கோரி வினாயகனைத் துதித்து
ஷங்கரனையும் கெளரியையும் வர்ணித்து
ஸ்ரீராமனையும் ஜானகியையும் வர்ணித்து
பல்லவி
--------
கெளரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே - 2 times
சரணம்
--------
வசுதேவ தவ பாலா
அசுர குல காலா
சசிவதன ரூபிணி
சத்யபாம லோலா -
கெளரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே

கொத்தோட வாழை மரம்
கொண்டு வந்து நிறுத்தி
கோப்புடைய பந்தலுக்கு
மேல் கட்டு கட்டி
கெளரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே

மாலை சார்த்தினாள்
மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பிலே
மையலாய் தையலாள்
மாமலர் கரத்தினால் -
மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பில

ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
ஆசை கூறி பூசுரர்கள்
பேசி மிக்க வாழ்த்திட
அன்புடன் இன்பமாய்
ஆண்டாள் கரத்தினால்
மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள், பூ - மாலை சார்த்தினாள்

கன்னூஞ்சல்
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
மனமகிழ்ந்தாள்
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள்
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
பொன்னூஞ்சலில் பூரித்து பூஷனங்கள் தரித்து
ஈஸ்வரனாரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ...
உத்த பெற்ற குமாரி நித்ய சர்வாலங்காரி
பக்தர்கள் பாப சமாரி பத்ம முக ஒய்யாரி
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ...
அசைந்து சங்கிலியாடி உசந்து ஊர்வசி பாட
இசைந்து தாளங்கள் போட மீனாக்ஷி பரியாள் கொண்டாட
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள் - கன்னூஞ்சல்

ரத்ன ஊஞ்சல்
ரத்ன ஊஞ்சலில் ஆடினாள் பத்மாசுதனை பாடினாள்
முத்து சரங்கள் குலுங்கிட ரத்ன மாலை அசைந்திட
சுற்றிலும் சகிகள் விளங்கிட மெத்தவும் மதுராம்பிகே - ரத்ன
மதிமுகம் மந்தகாசமாய் மன்னனிடத்தில் நேசமாய்
பாஸ்கரன் புகழ் ப்ரகாசமாய் பரதேவதை உல்லாசமாய் - ரத்ன

ஆடிர் ஊஞ்சல்
விந்தை நிறை செம்பவள கால்கள் நாட்டி
விளங்கும் உயர் மரகதத்தால் கொடுங்கைப் பூட்டி
அந்தமுள்ள நவரத்ன ஊஞ்சல் மீதே
அபிமனுடன் வத்சலையும் ஆடிர் ஊஞ்சல்
ஆடிர் ஊஞ்சல்
இந்திரையும் சசியும் ஒரு வடம் தொட்டாட்ட
சந்த்ரசேகரனும் உமையும் ஒருவடம் தொட்டாட்ட
தும்புரு நாரதரும் வீணை மீட்ட
ஸ்ரீரங்க நாதருடன் ஆடிர் ஊஞ்சல்
ஆடிர் ஊஞ்சல்
நலங்கிட வாரும் ராஜா
நலங்கிட வாரும் ராஜா நாணயம் உள்ள துரையே
முத்திழைத்த பந்தலிலே ரத்ன கோபமாட்டிருக்கு
வந்த ஜனம் காத்திருக்க வாரும் அய்யா நலங்கிடவே - நலங்கிட
பட்டு ஜாம காளமெத்தை பந்தலிலே விரித்திருக்கு
நாலு விதவாத்யங்களும் நாகரிகமாய் ஒலிக்க - நலங்கிட
எந்த ஊரு எந்த தேசம் எங்கிருந்து இங்கு வந்தீர்
மோகன புரம் தனிலே மோகினியைக் காண வந்தேன் - நலங்கிட

நலங்கிடுகிறாள் மீனலோசனி
நலங்கிடுகிறாள் மீனலோசனி
நாதருடன் கூடி
நலங்கிடுகிறாள் மீனலோசனி
நாரதரும் வந்து கானங்களை பாட
நானாவித தாளங்கள் போட - நலங்கிடுகிறாள்
சொர்ண தாம்பாளத்தை ஜோதியால் எடுத்து
சுந்தரேசர் கையில் கொடுத்து
பூபதி பாதத்தில் விழுந்து
புஷ்ப மாலைகளை அன்புடன் சார்த்தி - நலங்கிடுகிறாள்
சொர்ண பன்னீர் சொம்பை ஜோதியால் எடுத்தாள்
சுந்தரேசர் மேலே தெளித்தாள்
வாசனை கந்தம் பரிமளம் பூசினாள்
வணங்கி சாமரம் வீசினாள் - நலங்கிடுகிறாள்
போஜனம் செய்ய வாருங்கள்
மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கள்
நவ சித்ரமானதோர் கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கள்
வாழை மரத்துடன் வெட்டி வேர் கொழுந்து
மாவிலைத் தோரணம் பவழ ஸ்தம்பம்
நாட்டிய கூடம் பச்ச மரகதம்
பதித்த செவர்களும் பசும்பொன் தரையில்
பலவர்ண பொடியினால் பதித்த கோலத்தில்
நட்ட நடுவே குத்து விளக்கேற்றி
தூண்கள் தோறும் தூண்டா விளக்கும்
சுற்றிலும் தீபங்கள் மணிகளும் அசைய
பந்திபந்தியாய் பாயை விரித்து
உத்தரணியுடன் ஜலபாத்திரங்களும்
தலைவாழை இலை போட்டு தப்பாமல் இடம்பண்ணி
போஜனம் செய்ய வாருங்கள்
மும்மூர்த்திகளுடன் முனிவர்கள் தேவர்கள்
யக்ஷகின்னரர் கந்தர்வர்களும்
அஷ்டதிக்கு பாலகர்கள் சூழ
அந்தணர்களும் முன்பந்தியிலே
அணிஅணியாக அவரவர் இடத்தில்
அழகாய் இருந்தார்
அகல்யை திரௌபதி சீதை தாரை
மண்டோதரியுடன் பந்தடித்தார்போல் பட்டுகள் கட்டி
கெஜ்ஜை மெட்டிகள் கிலுகிலுங்கவே
முத்திரை மோதிரம் விரலில் கொண்டு
பசும்பொன் தூக்கில் பாயாசத்தை எடுத்து
பார்த்து பார்த்து பரிமாறவே வந்தார்
போஜனம் செய்ய வாருங்கள்
மாந்தயிர் பச்சடி தேங்காய்பூ கோசுமல்லி
இரங்கிக்காய் கிச்சடி பரங்கிக்காய் பச்சடி
விதம்விதமாகவே வற்றல் அப்பளம்
பாங்குள்ள கூட்டு டாங்கர் பகுத்தெடு
சிலாபிஞ்சு கறியும் பலாபிஞ்சு கறியும்
பாகற்காய் கசக்கல் கத்திரிக்காய் துவட்டல்
வாழைக்காய் வருவல் வாழைப்பூ துருவல்
குங்குருக்கு சுகமான சம்பா அரிசியென
மொத்த பருப்பும் புத்துருக்கு நெய்யும்
போஜனம் செய்ய வாருங்கள்
பொரிச்ச குழம்பு பூசணிக்காய் சாம்பார்
வெண்டைக்காய் மோர்க்கடி வெங்காய சாம்பார்
வாய்க்கு மிக ருசிக்கும் மிளகு ஜீரா ரசம்
மதுரமாய் இருக்கும் மைசூர் ரசமும்
பருப்புகள் சேர்த்த பன்னீர் ரசமும்
வேணுவோர்க்கெல்லாம் வேப்பம்பூ ரசமும்
குடிக்க மிக ருசிக்கும் கொட்டு ரசமும்
சூர்ய உதயம்போல் சீரும் அப்பளம்
சுக்ல உதயம் போல் ஜெவ்வரிசி கருவடாம்
அக்கார வடிசல் சக்கரைப் பொங்கல்
என்னென்ன சுண்டல் வகையான வடை
சுமசாலா வடை வெங்காய வடை
சொஜ்ஜி வடையுடன் நல்லெண்ணை வடை
தயிர் வடையும் பால் போளிகளும்
அனாரசம் அதிரசம் பதிர் பேணியுடன்
சேமியா ஹல்வா ஜிலேபி லட்டு
முத்து முத்தாய் இருக்கும் முந்திரி லாடு
ரம்மியமாய் இருக்கும் ரவா லாடு
பேஷா இருக்கும் பேசரி லாடு
குண்டுகுண்டாய் இருக்கும் குஞ்சா லாடு
பளபளவெனருக்கும் பயத்தமா லாடு
மைசூர் பாகுடன் பர்ஃபியும் சேர்த்து
போஜனம் செய்ய வாருங்கள்
பொரிகனி வர்கங்கள் பச்சை நாடாம்பழம்
தேன்கதளி பழம் செவ்வாழை பழம்
நேந்திரம் பழத்துடன் மாம்பழ தினுசுகள்
பலாப் பழத்துடன் வாடை பரிமளிக்கும்
ஆடைதயிர் வெண்ணை தங்காமல் சேர்த்து
பகாளாபாத், பல தினுசான சித்திரான்னங்களும்
ரஞ்சிதமாகிய இஞ்சி ஊறுகாய்
வெடுக்கென கடிக்கும் மாவடு ஊறுகாய்
பாவக்காய் ஊறுகாய் வேப்பிலைக்கட்டி
கொத்தமல்லிச் சட்னி மிளகாய்ப் பொடியுடன்
மிளகாய் பச்சடி
பந்தியில் பரிமாறினார்
மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
பார்த்துப் பரிமாறினார்

பொதுவான சில கல்யாணப்பாடல்கள்

ஸ்ரீராமா ஜெய ஜெய
ஸ்ரீராமா ஜெய ஜெய
சீதம்மா மனோகர
காருண்ய ஜலதே
கருணாநிதே ஜெய ஜெய
தில்லையில் வனம் தனிலே
ராமர் வந்த நாளையிலே
ராமரோட சேனையெல்லாம்
ராமரைக் கொண்டாட

சங்கு சக்ரம் தரித்துக் கொண்டு
தனுசைக் கையில் பிடித்துக் கொண்டு
கோதண்டம் தனைப் பிடித்து ராமர்
கோலாகலமாய் இருந்தார்
ஜனகரோட மனையில் வந்து
சீதையுடைய வில்லை முறித்து
ஜானகியை மாலையிட்டார்
ஜனகர் அரண்மனை தனிலே
ஸ்ரீராமா ஜெய ஜெய
சீதம்மா மனோகர
காருண்ய ஜலதே
கருணா நிதே ஜெய ஜெய
மன்மதனுக்கு மாலையிட்டாயே
மன்மதனுக்கு மாலையிட்டாயே
மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே
அடி மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே
ஜன்மம் அதில் சுகித்து நீராடி-மன்மதனுக்கு
மன்மதனுக்கு மாலையிட்டு
மாலைதனைக் கைப் பிடித்து
கனகநோன்பு நோற்றது போல்
கிடத்தது பாக்யமடி-மன்மதனுக்கு
செந்தாழை ஓடையிலே
மந்தாரை பூத்தது போல்
இந்திரனோ சந்திரனோ
சுந்தரனோ இவர்தானடி-மன்மதனுக்கு


மரபு விக்கியிலிருந்து நன்றியுடன்

Geetha Sambasivam

unread,
May 9, 2013, 6:20:01 AM5/9/13
to மின்தமிழ்
Inline image 1

ராமா கல்யாணமே வைபோகமே! சீதா கல்யாணமே வைபோகமே!


காமிராவை வெர்டிகலா வைச்சு எடுங்கனு வெங்கட் (நாகராஜ்) சொன்னதாலே அப்படி எடுத்தப்போக் கூட ராமரோட ஒரு பக்கத்திலே இருக்கும் விக்ரஹமும், கீழேயும் ஒரு பக்கத்து விக்ரஹங்கள் மட்டுமே வருது.  இன்னும் கொஞ்சம் பின்னால் போகணும் ஹவுடினி மாதிரி! :)))))))



Inline image 2


பின்னாலே எங்கே போறது? மூணடி?? மூன்றரை அடி பாசேஜ்! பின்னால் சுவர் தான். :))))  சுவத்தை ஊடுருவிக் கொண்டு ஹவுடினி மாதிரிப் போக முடியலை.  போனால் போகட்டும்.  இப்போ,


கல்யாணம் நிச்சயம் செய்தப்புறமா செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிடலாமா?

முதல்லே பத்திரிகை அடிக்கக் கொடுக்கணும்

தொலைதூரத்தில் இருக்கும் உறவினர், நண்பர்கள் விலாசங்கள் சேகரிக்கணும்.

அடுத்துப் பத்திரிகைகள் வந்ததும், கிட்ட இருக்கிறவங்களுக்குக் கல்யாணத்துக்குப் பதினைந்து நாட்கள் முன்னாடி கொடுக்கிறாப்போலும், தூரத்தில் இருக்கிறவங்களுக்கு, முதலில் ஒரு போஸ்ட் கார்ட், இப்போல்லாம் தொலைபேசி மூலம் தெரிவித்து, அவங்க வரவை உறுதி செய்து கொள்வது நல்லது.  ரயிலிலோ, விமானத்திலோ, பேருந்திலோ வரவங்க அவங்க பயணச்சீட்டை உறுதி செய்துக்க வசதி.  அப்புறமாப் பத்திரிகையை கையால் எழுதிய ஒரு அழைப்புக் கடிதத்தோடு அனுப்பி வைக்கணும்.  அதுக்கும் இப்போல்லாம் ப்ரின்ட் அவுட் எடுத்துக் கையெழுத்து மட்டும் போடறாங்க சிலர் அதுவும் போடறதில்லை.

பத்திரிகைகளில் விலாசம் எழுதி, ஸ்டாம்ப் மறக்காமல் ஒட்டி அனுப்ப என்றெ இரண்டு பேரைத் தனியா நியமிக்கணும்.

அடுத்துத் துணிமணிகள்.  முதல்லேயே அவசியமா வாங்க வேண்டியவை கல்யாணப் பெண்ணுக்கு என்ன என்ன என முடிவு செய்துக்கணும்.  ஒவ்வொருத்தர் கல்யாணம் வரைக்கும் ஒரு பட்டுப் புடைவை கூட எடுத்திருக்க மாட்டாங்க.  அப்படின்னா இப்போ நிறைய எடுக்கிறாப்போல் ஆயிடும்.  ஆகவே கல்யாணத்துக்கு முன்னாடியே ஒண்ணு, ரெண்டு பட்டுப் புடைவை கைவசம் இருந்தால் கல்யாணத்தின் போது கட்ட வசதியாக இருப்பதோடு (இரவல் கேட்க வேண்டாம்) கல்யாணத்தின் புடைவைச் செலவைக் கணிசமாகக் குறைக்கலாம்.  எப்படியும் மாப்பிள்ளை வீட்டில் ஒன்றிரண்டு எடுப்பாங்க என்பதால் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு என எடுத்தால் போதுமானது. (இது என் தனிப்பட்ட கருத்துப்பா, சண்டைக்கு வராதீங்க, பட்டுப்புடைவை என்னிக்கோ கட்டுவது கொஞ்சமா இருந்தால் போதும்னு என் எண்ணம்)  கல்யாணப்பெண்ணுக்கு உள்ளாடைகளில் இருந்து துண்டுகள், கைக்குட்டைகள், அழகு சாதனப்பொருட்கள், என எல்லாத்துக்கும் மறக்காமல் முடிவு செய்து செலவுத் திட்டத்திலே சேர்த்துடணும்.

அடுத்து மாப்பிள்ளைக்கு நீங்க வாங்கப் போற வேஷ்டி வகையறாக்கள். இவையும் வீட்டுப் புரோகிதரைக் கலந்து கொண்டு எப்படி வாங்கணும்னு கேட்டுக் கொண்டு வாங்கலாம்.  காசியாத்திரைக்கு உள்ள சாமான்கள், குடை, புத்தகம், செருப்பு, கம்பு போன்றவையும் இதில் அடங்கும். இப்போதெல்லாம் சமையல் ஒப்பந்தக்காரர்களே இவை கொடுத்துவிடுகின்றனர்.  ஆகவே தெரியலையே, விட்டுப் போச்சே என்ற பதட்டம் இருக்காது. :)

இதுக்கு அடுத்துப் பாத்திரங்கள், பக்ஷணம், அப்பளம், கருவடாம் போன்றவை.
இங்கே நல்லா வெயில் காயுது! யாரெல்லாம் கருவடாம் போட ரெடியா இருக்கீங்க?  அதுக்கப்புறமா கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி பக்ஷணம் செய்தால் போதும்.  அதுக்கு அடுத்தாப்போல் வருவோம்!  இன்னும் கல்யாண வேலை நிறைய இருக்கு.

ramr1.jpg
ramar2.jpg

Geetha Sambasivam

unread,
May 21, 2013, 5:37:19 AM5/21/13
to மின்தமிழ்
கல்யாணச் சேலை உனதாகும் நாளை!

திருமணத் தேதி குறிக்கப்பட்டுப் பத்திரிகைகள் அடிக்கக் கொடுக்கிறோம்.  அதிலே குறைந்தது இரண்டு தலைமுறையைக் குறிப்பிட்டால் தான் நாம் அனுப்புபவர்களுக்கு யாரிடமிருந்து பத்திரிகை வந்திருக்கிறது என்பது புரியும்.  பிள்ளைக்குக் கல்யாணம் எனில் பிள்ளையின் தந்தை, மற்றும் தாத்தா பெயரும் பூர்வீக ஊரும் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.  ஒரு சிலர் பிள்ளையின் தாய்வழித் தாத்தா பெயரையும் குறிப்பிடுவார்கள்.  அதிலும் தவறு இல்லை.  ஏனெனில் பிள்ளையின் அம்மா வழி உறவினர்களுக்கு எளிதில் புரியும்.  அதே போல் பெண்ணுக்கும் தந்தைபெயர் மற்றும் தாத்தாக்கள் இருவரின் பெயர், அவர்களின் பூர்விகம் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.  கூடிய வரையில் பத்திரிகை எளிமையாக இருந்தால் நல்லது. சிவப்பு, மஞ்சள் கலந்த வழுவழுப்பான ஆர்ட் பேப்பரில் அச்சிட்டாலே போதுமானது.  அதிலேயே ஆங்கிலத்திலும் அச்சிட வசதி இருக்கிறது. 



சிலநாட்கள் முன்னர் ஒரு அரங்கேற்றத்துக்குப் பத்திரிகை வந்தது.  குறைந்த பக்ஷமாக அந்தப் பத்திரிகையின் விலை ஐநூறு ரூபாயாக இருக்கணும். அவ்வளவு விலை உயர்ந்த பத்திரிகை.  இதில் எல்லாம் காசைப் போடுவது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது.  பத்திரிகை மங்களகரமாக இருந்தால் போதுமே!  அதுக்காகப் பெயர், விலாசம், கல்யாணம் நடக்கும் இடத்துக்கு வரும் வழி போன்றவை கூட அடிக்க முடியாத அளவுக்கு மோசமாவும் இருக்க வேண்டாம்.  அப்படியே தூக்கிப் போடணும் அவற்றை. :( அதுக்கப்புறமா "உங்கள் நல்வரவை எதிர்பார்க்கும்" நபர்களின் பெயர்கள்.  இது தேவையே இல்லை. பெண் வீட்டுக்கார முக்கியஸ்தர்களும், பிள்ளை வீட்டின் முக்கியஸ்தர்களும் அனைத்து உறவினரின் நல்வரவைக் கட்டாயம் எதிர்ப்பார்க்கத் தான் செய்வார்கள்;  செய்கிறார்கள்.  இதிலே பெயர் போடவில்லை எனில் ஒவ்வொரு குடும்பத்தில் சண்டையே வருகிறது.  ஆகவே நல்வரவை எதிர்பார்க்கும், நண்பர்களும் உறவினர்களும் என்று பொதுவாகப் போட்டுடலாம். வம்பே இல்லை. ஒண்ணுமே போடலைனால் இன்னும் நல்லது.  அடுத்து மறுபடியும் ஜவுளியைப் பார்க்கலாம்.  அவ்வளவு சீக்கிரம் இது முடியாது.

Inline image 1


பெண்ணிற்குக் கூறைப்புடைவை பொதுவாகப் பிள்ளை வீட்டில் தான் எடுக்க வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டு.  ஆனால் பெரும்பாலான பிள்ளை வீட்டினர் அதை ஒத்துக் கொள்வதில்லை.  முன்பெல்லாம் என்னோட பெரியப்பா பெண்கள் கல்யாணத்தில் எல்லாம் பெண் வீட்டில் மணப்பெண்ணுக்குப் புடைவை எடுப்பது என்பது ஒன்றோ அல்லது இரண்டோ தான் இருக்கும். ஊஞ்சல் புடைவையும், சாந்தி கல்யாணப்புடைவை என்ற முதலிரவுப் புடைவையும் தான் இருக்கும்.  மற்றப் புடைவைகள் நிச்சியதார்த்தம், கூறைப்புடைவை, நலுங்குப் புடைவை, கிரஹப்ரவேசப் புடைவை போன்ற நான்கு புடைவைகளும் பிள்ளை வீட்டிலேயே எடுப்பார்கள்.  ஏனெனில் பெண் கல்யாணம் ஆகி அவங்க வீட்டுக்கு வரப் போகிறாள்.  வீட்டுக்கு அழைக்கும் பெண்ணைப் புதுப்புடைவையோடு மங்கலப் பொருட்களைக் கொடுத்துத் தான் அழைப்பார்கள்.  அதோடு கூறைப் புடைவை மிகவும் முக்கியம்.  அதை முஹூர்த்தத்தின் போது பிள்ளைதான் பெண்ணிடம் கொடுத்துக் கட்டிக் கொண்டு வரச் சொல்லுவார்.  இது குறித்துப் பின்னாலும் வரும்.  அந்தப் புடைவை தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணுக்குப் பிள்ளை எடுத்துக் கொடுப்பதாகவே ஐதீகம்.  ஆகவே தான் பிள்ளை கையால் கொடுக்கச் சொல்லுவார்கள். அப்போது சொல்லப் படும் மந்திரங்களும் இதையே அறிவுறுத்தும். ஆனால் இன்றைய நாட்களில் அதையும் பெண் வீட்டினரே எடுக்கின்றனர்.


அடுத்து விளையாடல் எனப்படும் நலுங்குப்புடைவை.  இதை நாத்தனார் தான் செய்ய வேண்டும் என்பார்கள்.  நலுங்கு என்பது பிள்ளையும், பெண்ணும் ஒருவருக்கொருவர் கூச்சம் விலகிப் பழகிக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட சடங்கு.  இதைப் பெண்ணின் நாத்தனார் தான் ஏற்பாடு செய்வதாக ஐதீகம்.  ஆகவே நலுங்குக்கான சாமான்களும், விளையாட்டுப் பொருட்களும், நலுங்குக்கான புடைவையும் அவள் தான் வாங்குவாள்.  தன் சகோதரன் அவன் மனைவியோடு சந்தோஷமாக இருக்க வேண்டும்.  அதற்குத் தான் போடும் இந்த அச்சாரம் நன்மையாக இருத்தல் வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவள் தன் சகோதரன் மனைவிக்குப் புடைவை, வளையல், அழகு சாதனப் பொருட்கள், விளையாட்டு சாமான்கள், மங்கலப் பொருட்கள் என வாங்கித் தருவாள். இதன் மூலம் அவளுக்கு சகோதரன் மனைவியிடம் நெருக்கம் அதிகரிக்கும்.  கல்யாணப் பெண்ணுக்கும் நாத்தனாரிடம் அன்பு ஏற்படும். கல்யாணத்தின் ஒவ்வொரு சடங்கும் இப்படி இரு;குடும்ப உறவுகளையும் ஒன்றுக்கொன்று பிணைப்பதாகவே இருக்கும்.
Inline image 2
ஆனால் இப்போதெல்லாம் எல்லாப் புடைவைகளையும் பெண் வீட்டிலேயே எடுக்கின்றனர்.  இதனால் அவர்களுக்குச் சுமை கூடத்தான் செய்கிறது.  ஆனாலும் இப்படித்தான் நடக்கிறது.  கூறைப் புடைவையைக் கூடப் பிள்ளை வீட்டினர் ஒத்துக் கொள்வதில்லை. தஞ்சாவூர்ப் பக்கம் கிரஹப்ரவேசப் புடைவையும் கூடப் பெண் வீட்டிலே தான் பெண்ணுக்கு எடுக்க வேண்டும். ஆனால் சாஸ்திரப் படி பிரமசாரியானவன் திருமணம் செய்து கொள்ள உத்தேசித்ததுமே தன் திருமணத்திற்கான செலவை தானமாகத் தான் பெற வேண்டும்.  முன் காலங்களில் அரசர்களிடமோ அல்லது அரசரின் பிரதிநிதிகளிடமோ பெற்று வந்தனர். இதிலிருந்து பிள்ளை வீட்டினருக்கே திருமணச் செலவு என்பது புரிய வரும். இந்தக் காலங்களில் அது இயலாது என்பதால் முடிந்தவரை விவாகச் செலவைப் பிள்ளை வீட்டினரும் பகிர்ந்து கொள்ளலாம். 



இருங்க, இருங்க, இன்னும் துணிமணி எடுத்து முடியலை.  பெண்ணுக்கும் பிள்ளைக்கும் எடுப்பதோடு முடியற விஷயமா இந்த ஜவுளி எடுப்பது!!!! அடுத்துப் பரிவார தேவதைகளுக்கு எல்லாம் எடுக்கணுமே!  இதான் ரொம்பவே கஷ்டமான விஷயம். பெண் வீட்டில் பெண்ணைத் தவிர பெண்ணின் அம்மா, அத்தை, அப்பாவின் தம்பி அல்லது அண்ணன் மனைவியர், அம்மாவின் கூடப் பிறந்தவர்கள்னு ஒரு பெரிய லிஸ்டே இருக்கும்.  அதே போல் பையர் வீட்டிலும் இருக்கும்.  ஆக இந்த ஜவுளி விஷயத்தில் மட்டும் யாருமே தப்பிக்க முடியாது.  முன்னாலெல்லாம் இப்படி இல்லைனு என் அப்பா சொல்லிக் கேட்டிருக்கேன்.  முக்கியமாய்ப் பெண்ணின் அத்தை, பிள்ளையின் அத்தை, பெண்ணின் மாமி, பிள்ளையின் மாமி ஆகியோருக்கு மட்டுமே எடுப்பார்களாம்.  அதுவும் இரண்டு மூன்று அத்தைமார், மாமிமார் இருந்துவிட்டால் பணமாக ஓதிக் கொடுப்பார்களாம்.  பெண்ணுக்கு அத்தை அப்பக்கூடை வைப்பது என்றொரு வழக்கம் உண்டு.  அது பெண்ணின் அத்தை செய்வதால்  அவங்களுக்கு பதில் மரியாதையாகப் பிள்ளை வீட்டார் ஏதோ பணம் கொடுத்து வந்தது போய் இன்றைய  தினம் பட்டுப்புடைவையில் வந்து நிற்கிறது.  அதே போல் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் அவரவர் மாமா வீட்டு ஆசீர்வாதப் பணம் தான் முதலில் தருவாங்க.  அப்போ மாமாக்களுக்கும், பதில் மரியாதை உண்டு.  அது இன்று மாமாவுக்கும், மாமிக்கும் துணி எடுப்பதாக ஆகி விட்டிருக்கிறது.

அதைத் தவிரவும் தெரிந்தவர்கள், முக்கிய உறவினர்கள் என ஒரு சூட்கேஸ் நிறைய வேட்டி, புடைவைகளை வாங்கி வைத்துக் கொண்டு விநியோகம் செய்வதும் உண்டு. இது கொடுத்தாலும் கஷ்டம்;  கொடுக்கலைனாலும் கஷ்டம்.  பெரும்பாலும் நாம் கொடுப்பது வாங்கிக்கிறவங்களுக்குப் பிடிக்காது.  வேறே வழியே இல்லாமல் வாங்கிப்பாங்க.  நமக்கோ பெரிய செலவு செய்துட்டோமேனு இருக்கும்.  ஆக இப்படி இருபக்கமும் மனம் வருத்தம் அடைவதைத் தவிர்க்கலாம். கட்டாயமாய் மரியாதை செய்ய வேண்டியவங்களுக்குப் பணமாகக் கொடுத்துடலாம். என்ன வேணுமோ அதை வாங்கிப்பாங்க.  நமக்கும் கல்யாணச் சத்திரத்துக்கு மூட்டை தூக்கும் சுமை இல்லை.  முன்பெல்லாம் இதைக் கல்யாணத்தின் போது முதல்நாள் காலை அல்லது மாலை சாஸ்திரிகளிடம் கொடுத்து ஓதிக் கொடுக்கச் சொல்வார்கள்.  இப்போதெல்லாம் அவசரம்+நாகரிகம் கலந்து பத்திரிகை கொடுக்கும்போதே பாக்கு, பழம், பூவோடு புடைவை, வேஷ்டியையும் வைத்துக் கொடுத்துவிடுகின்றனர்.  இப்படி ஒரு வழக்கமே கிடையாது. பத்திரிகை கொடுக்கையில் மஞ்சள் கலந்த அல்லது குங்குமம் கலந்த அக்ஷதை தான் பத்திரிகையின் மேலே வைத்துத் தருவார்கள்.  இப்போதெல்லாம் அக்ஷதை கொண்டு வருவதே இல்லை.


சேலை.jpg
வஸ்த்ரகலா.jpg

Geetha Sambasivam

unread,
May 28, 2013, 7:54:59 AM5/28/13
to மின்தமிழ்
டோலி சஜாகே ரக்னா!

கல்யாணப் பெண்ணுக்கு உடைகள் வாங்குகையில், திருமணம் ஆகிச் செல்லும் பெண் குறைந்தது ஆறு மாதத்துக்காவது புகுந்த வீட்டில் இருந்து எதையும் கேட்டு வாங்கும் வண்ணம் விட மாட்டார்கள்.  ஆறு மாதத்துக்கான உடைகளோடு, மற்ற அத்தியாவசியப்பொருட்களையும், வாங்கிக் கொடுப்பார்கள்.  இதில்பவுடர், சோப்பு, சீப்பு, குங்குமம், மற்ற அழகு சாதனப்பொருட்கள் போன்றவையும் அடங்கும். எல்லாத்துக்கும் முதல்லே துணி எடுக்கக் கடைக்குப் போனதும் முதலில் வாங்க வேண்டியது பிள்ளையார் வேஷ்டி.  அப்புறமா அவங்க அவங்க குல தெய்வத்துக்குச் சாத்த வேண்டிய துணிகளை வாங்கி விட்டுப் பின்னரே மணப்பெண்ணுக்கும், மற்றவர்களுக்கான துணிமணிகளும் வாங்க வேண்டும்.  அதே போல் பாத்திரங்கள்.  திருமணம் ஆகித் தனிக்குடித்தனம் போகும் பெண்ணாக இருந்தால் அதற்கேற்றாற்போல் பாத்திரங்கள் வாங்கிவிடலாம்.  ஒரு சிலர் பின்னர் தனிக்குடித்தனம் போவார்கள்.  அப்போத் தனியாகச் செய்ய வேண்டும் என சில பிள்ளை வீட்டினர் கேட்பார்கள்.  அப்படியான இடமாக இருந்தால் கல்யாணத்துக்கு வைக்கும் பாத்திரங்களிலேயே சிலவற்றைத் தனியாக எடுத்து வைத்துவிட்டுப் பின்னர் கொடுக்கலாம்.  அதோடு புகுந்த வீட்டுப் பழக்கங்கள், பூஜை முறைகள் போன்றவற்றிற்கு ஏற்ற மாதிரியான சில பாத்திரங்களும் வாங்கும்படி இருக்கும்.

உதாரணமாகப் பூஜை சாமான்கள் மணி, சூடத்தட்டு, தீபக்கால், தூபக்கால் போன்றவையும் வாங்குவார்கள்.  சமையல் பாத்திரங்கள் அந்த அந்தக் காலத்துக்கு ஏற்றாற்போல் வாங்குவார்கள்.  இப்போது எல்லாம் மிக்சி, கிரைன்டர் போன்றவை, மைக்ரோவேவ் அவன், குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் போன்றவையும் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இடம் பிடிக்கின்றன. வெளிநாட்டில் அவரவர் சக்திக்கு ஏற்ப பரிசுப் பொருட்கள் வாங்கவென கிஃப்ட் வவுச்சராகக் கொடுப்பார்கள்.  திருமணம் ஆன தம்பதியர் அந்த வவுச்சரின் தொகைக்கேற்பத் தாங்கள் வாங்க வேண்டிய தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வார்கள்.  நம் நாட்டிலும் இம்முறையைக் கடைப்பிடிப்பது நல்லது.  இதனால் பெண் வீட்டினருக்குப் பெருமளவில் சுமை குறையும். மஹாராஷ்டிரா திருமணங்களிலும், குஜராத்தியர் திருமணங்களிலும்  திருமணத்துக்கு நாம் கொடுப்பது பரிசோ பணமோ பொதுவிலே தான் கொடுக்க வேண்டும். பெண் வீட்டினருக்குத் தனியாக, பிள்ளை வீட்டினர் தனியாக என வாங்கும் வழக்கம் அங்கில்லை.  இது தெரியாமல் ஒரு முறை குஜராத்தியர் திருமணத்தில் நீங்க பெண் வீட்டினரா, பிள்ளை வீட்டினரா எனக் கேட்க, அவர்கள் சிரித்ததோடு அல்லாமல்,


"இந்தப் பணம், பரிசு எல்லாம் பிள்ளை, பெண் இருவரையும் சார்ந்தது. நாங்க மொத்தமாய் வாங்கி அவர்களிடம் கொடுத்துடுவோம்.  ஒரு பைசா கூடப் பெண்ணின் அம்மா, அப்பாவுக்கோ, பிள்ளையின் அப்பா, அம்மாவுக்கோ போகாது.  திருமணத் தம்பதிகளிடம் அப்படியே ஒப்படைப்போம்.  அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கவும், குடும்பம் நடத்தவும் இந்தப் பணம் பயன்படும். "அப்படினு சொன்னார்கள்.  ஆச்சரியமாவே இருந்தது.  அதோடு வாங்கிக் கொடுப்பவர்களும் ஒருத்தருக்கொருத்தர் கலந்து பேசிக் கொண்டு எந்தப் பொருளும் இரண்டாம் முறையாக டூப்ளிகேட் இல்லாமல் வாங்கியும் கொடுக்கின்றனர். அல்லது பணமாய்க் கொடுத்து விடுகின்றனர். மஹாராஷ்டிராவில் திருமணத்துக்குப் பெண் வீட்டில் ஐம்பது பேர் என்றால் ஐம்பது பேர் தான்.  அதே போல் பிள்ளை வீட்டிலும் ஐம்பது பேர் தான் வரலாம்.  மொத்தம் நூறு பேர்தான் அழைப்பே கொடுப்பாங்க.  அழைப்பிதழ் யாருக்கெல்லாம் கொடுக்கணுமோ அதை முன் கூட்டியே தீர்மானித்துவிட்டு அதற்கேற்றாற்போல் அழைப்பிதழை அச்சிட்டுக் கொடுப்பார்கள்.  சமையல், சாப்பாடு எல்லாமும் அதற்கேற்றாற்போல் கச்சிதமாகவே இருக்கும்.  ஒரு நபர் கூட வந்தாலும் சரி, முன் கூட்டியே சொல்லிவிட வேண்டும் என்பதோடு யார் தரப்பில் வருகிறாரோ அவர்கள் செலவுக்கான பணத்தைக் கொடுக்க வேண்டும்.

ஆனால் இப்போல்லாம் மாறி இருக்கிறதாவும் கேள்விப் படுகிறேன்.  எல்லாரையும் பார்த்துட்டு அவங்களும் ஆடம்பரத் திருமணத்துக்கு மாறி இருக்கலாம். ஆனால் இங்கே குடியேறிய மராட்டியர்கள் திருமணம் முன்னெல்லாம் பத்துப் பதினைந்து நாட்கள் நடந்ததாகவும், இப்போது மூன்று நாள் திருமணமாக ஆகி இருப்பதாகவும் கூறுகின்றனர்.  அதோடு மூன்று முறை தாலி கட்டுவார்கள் எனவும் சொல்கின்றனர்.  முதல் நாள் ஒரு கருகமணி வைத்த தாலி, பின்னர் இரண்டாம் நாள் இரண்டாம் தாலி மஞ்சள் கயிற்றில்.  இந்தத் தாலியைப் பிள்ளைக்குப் பெண்ணும் கட்டுவாராம்.  பெண்ணுக்குப் பிள்ளையும் கட்டுவாராம்.  இருவருமே ஒருவருக்கொருவர் கட்டிக் கொள்வார்கள் என்கின்றனர்.  மூன்றாம் நாள் மீண்டும் இன்னொரு கருகமணி வைத்த தாலி பிள்ளை கட்டுவாராம்.  அப்போது பிள்ளையின் அம்மா பார்க்கக் கூடாது என்றொரு சம்பிரதாயம் இருப்பதாகவும், தாலி கட்டி முடிந்ததும், பெண்ணின் அம்மா பிள்ளையின் அம்மாவைப் போய்த் திருமணப் பெண் போல் அலங்கரித்து அழைத்து வந்து மணமக்களை அவங்க மடியிலே உட்கார வைத்து, வேடிக்கை, விளையாட்டுனு நடக்கும் எனவும் சொல்கின்றனர்.  இதுக்குக் காரணம் இன்னொரு பெண் தன்னோடு பிள்ளையைப் பங்கு போட வந்துட்டாளேனு அவங்களுக்கு மனது சங்கடப்படும் என்று சொல்கின்றனர்.   அநேகமாய் இது குறிப்பிட்ட ஒரு வகுப்பினருக்கானதாகவும் இருக்கலாம்.  இது ஒரு பத்திரிகைச் செய்தியில் படித்தது.

Inline image 1


ஆனால் பல வட இந்தியத் திருமணங்களில் பிள்ளையின் அம்மா சொந்தப் பிள்ளையின் திருமணத்தில் கலந்து கொள்வதில்லை.  பெரும்பாலானவர்கள் சொல்வது ஸ்ரீராமனின் திருமணத்திலும், அவர் தம்பியர் திருமணத்திலும் கோசலை, சுமித்ரை, கைகேயி மூவரும் கலந்து கொள்ளாததால் அதே நடைமுறையைக் கடைப்பிடிக்கிறோம் என்கின்றனர்.  பெண்ணைத் திருமணம் ஆனதுமே பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.  முன்பெல்லாம் பல்லக்குகளில் அனுப்பி வைத்திருக்கின்றனர்.  இப்போதெல்லாம் விளம்பரங்களில் பார்ப்பதோடு சரி.  :))))


படங்கள் உதவி: கூகிளார்
பல்லக்கு.jpg

Geetha Sambasivam

unread,
May 31, 2013, 5:59:43 AM5/31/13
to மின்தமிழ்
நாளாம், நாளாம் திருநாளாம், நங்கைக்கும், நம்பிக்கும் மணநாளாம்!
துணிமணிகள், பாத்திரம், பண்டம்னு வாங்கியாச்சு.  அடுத்து முக்கியமான ஒன்று திருமணம் நடைபெறப் போகும் இடம்.  முன்னெல்லாம் வீடுகள் பெரிதாக இருக்கும்.  ஒரு வீடு எனில் வாசல் திண்ணை இருபக்கமும், உள்ளே ரேழி, ரேழியில் ஒரு அறை, சில வீடுகளில் ரேழியில் இருந்தே மாடிக்குச் செல்லும்படிகள், பின்னர் கல்யாணக் கூடம், கூடத்தில் எதிரும் புதிருமாக இரு அறைகள், பின்னர் இரண்டாம் கட்டுக்குச் செல்லும் இன்னொரு ரேழி, அங்கேயும் வருஷாந்திர சாமான்களை வைக்க நெல்லுக்குதிரோ(சிலர் பத்தாயம் என்பார்கள்) அல்லது சின்னதாக சாமான் அறையோ இருக்கும்.  வருஷத்துக்கு வேண்டிய சாமான்கள் எல்லாம் அந்த அறையில் வைக்கப்பட்டு ஒரே மளிகைக்கடை வாசனை வந்து கொண்டிருக்கும்.  அதன் பின்னர் இரண்டாம் கட்டு, அங்கேயும் ஒரு அறை இருக்கும், இரண்டாம் கட்டுத் தான் அநேகமாய் வீட்டினர் அனைவரும் சாப்பாடுக்குக் கூடும் கூடமாகவும் இருக்கும்.  அது தாண்டி, முத்தம், சமையலறை என அமைந்திருக்கும்.  இரண்டாம் கட்டில் இருக்கும் முத்தம் சாப்பிட்டுக் கை  அலம்புவதற்காகவும், கூடத்தில் வெளிச்சம் வருவதற்காகவும் திறந்த முறையில் அமைக்கப்பட்டு, மேலே அழிக்கம்பிகளால் மூடப் பட்டுக் காணப்படும்.  அதைத் தாண்டித் தாழ்வாரம் என்னும் ஒரு சிறிய கூடத்தைத் தாண்டித் தான் சமையலறை.  இந்தத் தாழ்வாரம் தான் கறிகாய் நறுக்க, மாவு அரைக்க இயந்திரம், கல்லுரல், அம்மி போன்றவை இருக்கும் இடமாக இருக்கும். 

இதைத் தாண்டிச் சமையலறையில் கிழக்கே அடுப்புப் போட்டிருப்பார்கள்.  ஒரு பெரிய அடுப்பும், பக்கத்தில் கொடி அடுப்பு என்னும் துணை அடுப்புமாகக் காணப்படும்.  சமையலறை தாண்டிக் கொல்லையில் கிணற்றடி, முற்றம், பாத்திரங்கள் தேய்க்கும் இடம், துணிகள் தோய்க்கும் இடம், குளிக்கும் அறை, குளியலறை வாசலில் வெந்நீருக்கு என நிரந்தரமாக ஓர் அடுப்பு, அதற்கருகே கோட்டை அடுப்பு என்னும் பெரியதொரு அடுப்பு எல்லாம் இருக்கும்.  அநேகமாய் இது இல்லாத வீடுகளே இருக்காது.  ஆகவே வீட்டு வாசலிலேயே எப்போதும் போட்டிருக்கும் பந்தலைக் கொஞ்சம் பெரிதாகப் பக்கத்து வீடுகளையும் சேர்த்துப் போட்டுவிட்டு, அலங்காரங்கள் செய்வார்கள்.  அதோடு வீடுகளுக்கு வெள்ளை அடித்து, வாசல் சுவரில் காவிப்பட்டை, சுண்ணாம்பு அடிப்பார்கள்.  பின்னர் இது வீடு முழுதும் அடிக்காவிட்டாலும், கூடத்திலும், வாசலிலும் மட்டும் அடிக்கும் வழக்கம் இருந்து பின்னர் சத்திரங்களில் கல்யாணம்னு ஆனதும் அதுவும் போயாச்சு! :))))கல்யாணக் கூடத்திலே நடுவிலே எடுத்துக்கட்டினு மேலே இருந்து காற்றும், வெளிச்சமும் வர, மேல் மாடியிலே ஜன்னல்கள் அமைத்து அதன் மேல் செங்கல்கள் வைத்துச் சுண்ணாம்பு பூசி எடுத்துக் கட்டி இருப்பார்கள்.  இது எத்தனைக்கெத்தனை உயரமாக உள்ளதோ அவ்வளவுக்குக் கீழே கூடம் குளிர்ந்து காணப்படும்.  மேலே இருந்து காற்றும் வீசும்.  இந்த எடுத்துக்கட்டியின் நடுவிலேதான் கல்யாணப்பெண்ணும் பிள்ளையும் அமர்ந்து கொண்டு கல்யாணம் செய்துப்பாங்க.  கூட்டம் அதிகமா இருந்தால் சிலர் மேலே மாடிக்குப் போய் ஜன்னல் அருகிலே உட்கார்ந்த வண்ணம் கல்யாணத்தைப் பார்ப்பார்கள்.

இது எல்லாம் நான் சின்ன, ரொம்பச் சின்ன வயசா இருக்கிறச்சே நடந்தது.  கல்யாணக் கூடத்திலே கல்யாணம், உள்ளே சாப்பாட்டுக் கூடத்திலே சாப்பாடுனு நடக்கும். எல்லா வீடுகளும் கல்யாண விருந்தினர்களை வரவேற்கும்படி பெரிதாக இருக்காதே!  அப்போ கல்யாணத்தை அவரவர் வீட்டிலேயே வைத்துக் கொண்டால், சமையல், சாப்பாடு இன்னொரு வீட்டிலே நடக்கும்.  மாப்பிள்ளை வீட்டினருக்கு இன்னொரு தெரிஞ்சவங்க வீட்டைக் கேட்டு வாங்கிப்பாங்க.  அந்த வீட்டுச் சொந்தக்காரங்களும் இதுக்கு ஒத்துழைப்பாங்க.  கல்யாணச் சமையலுக்குத் தேவையான அரிசி, பருப்பு, வெல்லம், காய்கறிகள், பழங்கள் எல்லாம் சமையல் நடக்கும் வீட்டிலேயே ஒரு அறையை ஒழித்து அதிலே சேர்த்து வைப்பார்கள்.  பொறுப்பாக ஒருத்தரிடம் மட்டும் அதற்கான சாவியைக் கொடுத்து வைப்பார்கள். கல்யாணத்திலே சமையல்காரர்களுக்கு மட்டுமல்லாது, இப்போ போல் அல்லாமல் அந்தக் காலத்திலே உண்மையாகவே சுற்றமும், நண்பரும் ஒரு மாதம் முன்னராகவே போயிடுவாங்களா, அன்றாடமே சில கல்யாண வீடுகளில் ஐம்பதிலிருந்து நூறு பேருக்குள்ளாகச் சாப்பிடுவாங்க. அப்போலே இருந்தே இந்த சாமான் அறையைப் பார்த்துக்கும் முக்கியஸ்தருக்கு வேலை ஜாஸ்தியாயிடும்.

தஞ்சை ஜில்லாவில் இதை உக்கிராணம் என்று அழைக்கின்றனர்.  சமையல்காரர்களே அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து இந்த உக்கிராண அறைப் பொறுப்பைக் கொடுப்பதுண்டு.  இது சில சமயம் நன்மை என்றாலும் பெரும்பாலும் சரியாக வந்ததில்லை என்பதே என் கருத்தும் அனுபவமும்.  கல்யாணம் நடக்கும் வீட்டில் கல்யாணத்துக்குக் குறைந்தது பத்து நாட்கள் முன்னராவது முஹூர்த்தக்கால் நடுவது என்னும் விசேஷம் நடைபெறும்.  பெண்ணின் நக்ஷத்திரத்துக்கு ஏற்ப ஒரு நல்லநாளைப் பார்த்துப் புரோகிதரைக் கூப்பிட்டு, வீடு முழுதும் புண்யாஹவசனம் செய்து, பின்னர் மூங்கிலில் காவிப்பட்டை, சுண்ணாம்பு அடித்துத் தயாராக வைத்திருப்பார்கள்.  ஒரு சிலர் கல்யாண முருங்கை என்றும் சொல்கின்றனர்.  நுனியில் மாவிலைக்கொத்து வைத்து, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்து நுனியிலும் சந்தனம், மஞ்சள், குங்குமம் தடவி வைத்திருக்கும்.  அநேகமாய் ஈசான்ய மூலையில் தான் முஹூர்த்தக்காலை நடுவார்கள்.  சில வீடுகளில் முஹூர்த்தக்கால் நடுவதற்காகத் தோண்டப்பட்டிருக்கும் குழியில் பால் ஊற்றுகின்றனர்.  சிலர் புண்யாஹவசன நீரை ஊற்றுகின்றனர்.  காசுகளும் போடுவதுண்டு.  இதெல்லாம் அவரவர் வீட்டு வழக்கம் போல் செய்வார்கள்.  முஹூர்த்தக்காலை நட்டானதும்,அதையும் சேர்த்தே பந்தல் போடுவார்கள்.  திருமணம் நடைபெறுவதற்குள்ளாக அது துளிர்க்கவும் ஆரம்பிக்கும்.  இப்போதெல்லாம் இந்த வழக்கம் மறைந்து வருகிறது.  பெரும்பாலான சத்திரங்களில் பந்தல் எப்போதுமே இருக்கிறது.  அதோடு சேர்த்து ஒரு காலை முஹூர்த்தக்காலாக நிரந்தரமாக வைத்திருக்கிறார்கள்.  அதுவே போதும் என்பதே பெரும்பாலானோர் எண்ணம்.

இதற்கு உறவினர்கள் அனைவரையும், முக்கியமாகப் பெண்ணுக்கு மாமா, அத்தை போன்றோரை அழைப்பதுண்டு.  பின்னர் தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வழிபடுவார்கள்.  சில வீட்டு வழக்கப்படி முஹூர்த்தக்கால் நட்ட பிறகு கல்யாணப்பெண் வெளியே எங்கும் செல்லக் கூடாது.  தங்கக் கூடாது என்பார்கள்.  பொதுவாகவே திருமணம் நிச்சயம் ஆனதும் விரைவில் திருமணத்தை நடத்துவது நலம் என்றாலும் தற்காலங்களில் சத்திரம், சமையல் கேட்டரர் என்பவர்களின் செளகரியத்தைப் பார்த்துக் கொண்டு அதற்கேற்றாற்போல் முஹூர்த்தத் தேதியை மாற்றி அமைக்க வேண்டி உள்ளது என்பதே உண்மை.  சரி, இப்போ முஹூர்த்தக்கால் நட்டாச்சு.  அடுத்து என்ன வேலைனு பார்க்கலாம். பக்ஷணங்கள் செய்யணும்.  வடாம், வற்றல் தயாரிக்கணும்.  அப்பளங்கள் தயார் செய்யணும்.  இப்போ எல்லாம் உடனுக்குடன் கிடைத்தாலும் அந்தக் காலத்தில் எப்படிச் செய்தார்கள்னு பார்க்க வேண்டாமா?

இந்தப் பெண், பிள்ளை நிச்சயம் ஆனதும் என்ன செய்யணும் என்பதைக் குறித்தும் பார்க்கப் போகிறோம்.  யாரும் அடிக்க வராதீங்கப்பா! :)))))))




Geetha Sambasivam

unread,
Jun 4, 2013, 5:32:33 AM6/4/13
to மின்தமிழ்
அழகே உன்னை ஆராதிக்கிறேன்!
சத்திரம் பார்த்து ஏற்பாடு பண்ணியாச்சு அல்லது வீட்டில்கல்யாணம் நடத்த
ஏற்பாடு பண்ணியாச்சு. முக்கியமாய் நினைவு கூர வேண்டிய ஒரு விஷயம்
கல்யாணம் நிச்சயம் ஆனதும் குறைந்தது மூன்று மாதங்களுக்குள்ளாகக்
கல்யாணத்தை நடத்திடணும். தள்ளிப் போடக் கூடாது. தள்ளிப்போடுவதால்
பிரச்னைகள் வரலாம். திருமணமே நிற்கும் அளவுக்குப் போகலாம். அதோடு
பெண்ணும், பிள்ளையும் கல்யாணம் தான் நிச்சயம் ஆயாச்சே என அடிக்கடி
சந்திப்பது, தொலைபேசியில் பேசுவது போன்றவற்றைத் தவிர்த்தல் நலம்.
இதனாலும் பல பிரச்னைகள் வருகின்றன என்பதோடு திருமணங்கள் நின்றே
போயிருக்கின்றன. உறவினர் ஒருத்தர் பிள்ளைக்குத் திருமணம் நிச்சயம்
செய்தார்கள். நிச்சயதார்த்தத்துக்கே ஐந்து லக்ஷம் செலவு. பின்னே?? ஒரே
பிள்ளை! பிள்ளை கொஞ்சம் சாதாரணமான இந்தக் காலத்தில் பிற்போக்கும்
என்னும்படியான பழக்கங்களோடு இருந்திருக்கிறார். இத்தனைக்கும் ஐடியில்
தான் வேலை. அதோடு திருமணம் நிச்சயித்த பெண்ணோடு அடிக்கடி பேசவும்
முயற்சிக்கவில்லை. இதைக் கண்டு அந்தப் பெண் தானே தொலைபேசியில்
பிள்ளைக்கு அழைப்பு விடுத்திருக்கிறாள். தனியே சந்திக்க வேண்டும்
என்றும் சொல்லி இருக்கிறாள். திருமணம் நிச்சயம் தான் ஆகிவிட்டதே, பின்னர்
என்ன தடை என்பது மாதிரியும் கேட்டிருக்கிறாள்.

அந்தப் பிள்ளை சாதாரணமாகவே, "திருமணத்துக்கு முன்னரே சந்தித்துப் பேசிக்
கொண்டால் கல்யாணம் ஆனதும் என்ன புதுசா இருக்கும்?? உன்னை நானும், என்னை
நீயும் அப்போத் தான் நல்லாத் தெரிஞ்சுக்க முடியும். இப்போப் பேசுவது
என்ன இருந்தாலும் ஒரு ஜாக்கிரதை உணர்வோடு தான் பேசுவோம். மனம் விட்டுப்
பேசத் தாலிகட்டினால் தான் முடியும். ஆகையால் நான் வரலை." என்று சொல்ல
பிள்ளை முற்போக்காக இல்லைனு சொல்லிப் பெண் வீட்டில் நிச்சயித்த
திருமணத்தையே நிறுத்திவிட்டார்கள். அதிர்ச்சியில் மாரடைப்பு வந்து
பிள்ளையின் அப்பா இறந்துவிட்டார். ஆகவே பெண் பார்க்கையிலேயே இந்தப் பெண்
தான் என்பது நிச்சயமாய்த் தெரிந்துவிட்டால், ஒருவருக்கொருவர்
பேசிக்கொள்ளலாமா, வேண்டாமா என்பதை அப்போதே முடிவு செய்து கொள்ளுங்கள்.
பெற்றோர் சம்மதத்தோடு பேசுவது நல்லது. பேசுவதையானும் ஒத்துக்கொள்ளலாம்.
வெளியே சேர்ந்து செல்வதைத் தவிர்க்கவே வேண்டும். நிச்சயம் ஆன பெண்ணும்,
பிள்ளையும் சேர்ந்து வண்டியில் வெளியே போய் விபத்துக்கள் நேரிட்டு
அதனாலும் திருமணங்கள் நின்றது உண்டு.

திருமணம் நிச்சயமாகி ஆறு மாசம் கழிச்சுத் திருமணம் நடக்கையில் அந்தப்
பெண்ணும், பிள்ளையும் அதிகம் பழகிக் கடைசியில் ஒருவருக்கு ஒருவர்
பிடிக்காமல் போய் நின்ற திருமணங்களும் உண்டு. வேறு வழியில்லாமல் திருமணம்
செய்து கொண்டு பின்னர் விவாக ரத்துக்குப்போனவர்களும் உண்டு. இதை எல்லாம்
நினைவில் கொள்ள வேண்டும். இன்னொரு இடத்தில் பெண்ணும், பிள்ளையும்
பார்த்துக்கொண்டு திருமணம் நிச்சயம் செய்ய ஏற்பாடுகளை ஆரம்பிச்சாச்சு.
சத்திரம் கூட முடிவு செய்து விட்டார்கள். ஒரு நாள் தொலைபேசியில்
பேசும்போது பையன், பெண்ணிடம், கொஞ்சம் மாடர்னாக டிரஸ் செய்துக்கோ;
எனக்கு அதான் பிடிக்கும். இன்னமும் கர்நாடகமாய் இருக்கியே! நீ
இருக்கும் மல்டிநேஷனல் கம்பெனியில் மற்றப் பெண்களெல்லாம் எப்படி
இருக்காங்கனு சொன்னானாம். அது பெண்ணுக்குப் பிடிக்கவில்லை.
முக்கியமாய்க் கல்யாணத்துக்கு முன்னரே இப்படி அலங்கரிச்சுக்கோ; அப்படி
நடந்துக்கோனு சொன்னால் கல்யாணத்துக்கு அப்புறமா அடிமை வாழ்க்கை தான்னு
அந்தப் பெண் பெற்றோரிடம் முறையிடப் பெண்ணின் பெற்றோர் திருமண
நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விட்டார்கள். கல்யாணமும் நின்னு போயாச்சு.
ஆகவே அந்தக் காலங்களில் பெண்ணும், பிள்ளையும் சந்திக்க வேண்டாம் என்று
சொன்னதிலும் அர்த்தமில்லாமல் போகவில்லை. இவை எல்லாம் இந்தக் காலத்து
ஏற்றதாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்தக் காலத்துக்கு ஏற்ற
முக்கியமான ஒன்று என்னவெனில் பெண்ணும், பிள்ளையும் மருத்துவப் பரிசோதனை
செய்து கொள்ள வேண்டும். திருமணம் முடிந்து குடும்பம் நடத்த வீட்டுப்
பெரியவர்களின் அனுபவ வார்த்தைகளையும் இயன்றால் மருத்துவக் கவுன்சலிங்கும்
பெறலாம்.


பத்திரிகைகள் கொடுக்கக் கல்யாணப் பெண்ணே நேரில் செல்வது இப்போது
வழக்கமாகி இருக்கிறது. சில இடங்களில் பெண்ணும், பிள்ளையும் சேர்ந்தே
செல்கின்றனர். தன் தந்தையோடு கல்யாணப் பத்திரிகை கொடுக்கச் சென்ற பெண்,
விபத்து நேரிட்டு, நல்லவேளையா அந்தப் பெண்ணுக்கு ஒண்ணும் ஆகலை; தந்தைக்கு
அடிபட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து.... இத்யாதி....இத்யாதி! பெண்
வீட்டிற்குப் பிள்ளை வீட்டிலும், பிள்ளை வீட்டிற்குப் பெண் வீட்டிலும்
கல்யாணம் சொல்வது என்னும் வழக்கத்தை அநுசரித்து அவரவர் அச்சிட்ட
பத்திரிகைகளை அவரவர் உறவினருக்குக் கொடுக்க எடுத்துக் கொண்டு செல்வது
உண்டு. இது பொதுவான வழக்கம். எல்லாரும் கடைப்பிடிப்பது. பெண்ணின்
பெற்றோர் ஒரு நாள் வந்தால், பையரின் பெற்றோர் ஒரு நாள் செல்வார்கள்.
வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் குங்குமம், சர்க்கரை, கல்கண்டு இத்யாதி
சாமான்களோடுபோய்ப் பத்திரிகைகளைப் பங்கிட்டுக் கொள்வார்கள்.

இப்போ அடுத்து நாமப் பெண்ணும், பிள்ளையும் செய்துக்க வேண்டிய
முக்கியமானவைகளைப் பார்ப்போமா? டிடி, பக்ஷணங்களுக்குக் கொஞ்சம்
காத்திருக்கத் தான் வேணும். :)))) எல்லாத்தையும் விட முக்கியம் அழகு
செய்து கொள்வது. இப்போதெல்லாம் ப்யூட்டி பார்லரில் போய்த் தான்
அலங்காரம் செய்துக்கறாங்க. அல்லது ப்யூட்டிஷியன் சத்திரம்//வீடுகளுக்கே
வராங்க. திருமணம் நிச்சயம் ஆனதுமே ப்யூட்டி பார்லருக்குப் போகும்
பெண்கள் அங்கே பயன்படுத்தப்படும் பொருட்கள் எல்லாம் நல்ல தரமானவை தானானு
பார்த்துக்கணும். அல்லது சொந்தமான அழகு சாதனப்பொருட்களைக்
கொண்டுபோயிடணும்.

அங்கே எல்லார் முகத்திலும், உடலிலும் போட்டதை நமக்கும் போடுகையில்
பலருக்கும் ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜியாகி அரிப்பு, தடிப்பு, வீக்கம்
என்றெல்லாம் வருகிறது. கூடியவரை இயற்கையான முறையில் அழகு செய்து
கொள்ளலாம் என்றாலும் இன்றைய நாட்களில் எவரும் அதை ஒப்புக்
கொள்ளப்போவதில்லை. ஆகவே கூடியவரை அழகுசாதனப்பொருட்களாவது சொந்தமாக
இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஆயிரக்கணக்கில் ப்யூட்டி
பார்லருக்குக் கொடுக்கையில் ஒரு ஆயிரம் செலவு செய்து சொந்தமாக அழகுப்
பொருட்கள் வாங்குவதில் தவறே இல்லை. நம் தோல் பாதிப்படையாமல் இருக்கும்.
எத்தனையோ பெண்களுக்கு இந்த அழகு சாதனப்பொருட்களாலும் ப்யூட்டி
பார்லருக்குப் போனதினாலும் கல்யாண சமயத்தில் முகமே வீணாகிப்
போயிருக்கிறது. விசாரித்தால் ஒரு புராணமே வெளிவரும். :(

இப்போதெல்லாம் கல்யாணப் பிள்ளைக்கும் ப்யூட்டி பார்லர் அலங்காரம் உண்டு
என்பதால் இந்த விஷயத்தில் அவரும் கவனமாகவே இருக்க வேண்டும்.

Geetha Sambasivam

unread,
Jun 8, 2013, 7:50:38 AM6/8/13
to மின்தமிழ்
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!
ப்யூட்டி பார்லர் விஷயத்தில் பலரும் ஆமோதித்தாலும் பெண்ணும், பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா, வேண்டாமா என்பது குறித்த மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. பதிவில் பகிரவில்லை எனினும் குழுமங்களில் கருத்துப் பரிமாற்றங்கள் இருந்தன. கலாசார மாற்றங்கள் தேவையே என்றாலும் ஒட்டுமொத்தமாக நம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதும் சரியல்ல.  இதில் சிலர் இப்போது லிவிங் டுகெதர் வந்திருக்கிறதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். எல்லாம்  தொலைக் காட்சி தயவு! ஆனால் சிலர் நான் சொல்வது சரியே என்றும் சொல்கின்றனர்.  பேச்சு வார்த்தையில் மனவேறுபாடு ஏற்பட்டு ஒரு பெண் தற்கொலையே செய்து கொண்டதாகச் சொல்கிறார் நண்பர் ஒருத்தர்.  பெண்கள் இத்தனை கோழைகளாகவும்  இருக்கக் கூடாது.  எதையும் எதிர் கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். கல்யாணம் என்பதை இருவர் போட்டுக்கொள்ளும் ஒப்பந்தம் என்ற எண்ணமே இன்றைய  இளம் சமுதாயத்திடம் காணப்படுகிறது.  மேலும் கற்பனைகளும் பலவாறு உள்ளன.  அது எல்லாம் முடிந்து நிகழ்காலத்துக்கு மீண்டு வந்து உண்மையான வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கையில் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகம் ஆகிறது.

ஆகவே பெண், பிள்ளை இருவருமே தக்க அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது. விருப்பு, வெறுப்புக்கள் நிச்சயமாக மாறுபடும்.  குறைகள் இருபக்கமும் இருக்கும்.  குறைகளைப் பாராட்டாமல் பொதுவான நிறைகளை மட்டுமே பார்க்க வேண்டும். ஒத்துப் போகும் விஷயங்களில் மகிழ்ச்சி அடைய வேண்டும். பொதுவாக மருத்துவர்களில் இருந்து அனுபவம் வாய்ந்த அனைவரும் கூறுவது என்னவெனில் எல்லாவற்றையும் முதலிலேயே பேசி முடித்துவிட்டால் அப்புறம்பேச ஒன்றும் இருக்காது என்பதோடு ஆர்வமும் குறைந்துவிடும் என்பதே. மேலும் பேசிப் பழகிய ஒருவர் சொல்வது என்னவென்றால், என்னதான் கல்யாணத்துக்கு முன்னாடியே பேசிப் பழகினாலும் வாழ்க்கை என்று வாழப்போனபோது நிறைய வித்தியாசங்கள், மாறுபாடுகள் இருக்கத் தான் செய்தன என்பதே. என்னைப் பொறுத்த வரையில் இது எல்லாம் பெற்றோர் குழந்தைகளுக்குச் சிறு வயசில் இருந்தே கொண்டு வரும் பழக்க வழக்கங்களைப் பொறுத்தே அமைகின்றது. பல பெண்கள் இப்போது திருமணமே வேண்டாம் என்ற முடிவுடன் இருப்பதாகவும் சொல்கின்றனர்.  இதை எல்லாம் மீறி இல்வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.  சரி, இதை இத்தோடு நிறுத்திக் கொண்டு அடுத்து நாம் செய்ய வேண்டியதைப் பார்ப்போம்.

*********************************************************************************


கல்யாணத்துக்கான சாமான்கள் தயார் செய்யணும்.  இவற்றில் வற்றல், வடாம், அப்பளம் போன்றவையும் அடங்கும்.  முன்னாட்களில் எல்லாம் இவற்றை வீடுகளில் போட்டுக் கொடுப்பார்கள்.  நிறையச் செய்ய வேண்டிய காலங்களில் அக்கம்பக்கத்து வீட்டினர் வந்து உதவுவார்கள்.  உடல் சிரமத்தை ஒரு பொருட்டாக நினைக்காத காலம் அது. அப்பளம் இடுகையில் பாடுவதற்கெனச் சில பாட்டுக்களும் உண்டு. அவற்றில் முக்கியமானது லலிதாம்பாள் சோபனம்.  சகோதரி சுப்புலக்ஷ்மியால் தொகுக்கப் பட்ட இதைப் பாடிக்கொண்டே அப்பளம், வடாம், வற்றல் போன்றவை செய்வார்களாம்.  இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் ஒரு காரியத்தைச் செய்கையில் நல்ல எண்ணங்களே இருக்க வேண்டும் என்பதே.  உணவு தயார் செய்பவர்களும் நல்லதையே நினைக்க வேண்டும். அப்பளம், வற்றல்கள், வடாம்கள் எல்லாம் போடுவது கல்யாணச் சீரில் வைக்க மட்டுமின்றி விருந்தினருக்குப் பரிமாறவும் தேவைப் படும் ஒன்றாகவும் இருக்கும்.

Inline image 1
இப்போதெல்லாம் சமையல் கான்ட்ராக்டர்களே இந்தப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டு விடுகின்றனர். எல்லாருமே சரியாகக் கொடுப்பதாகச் சொல்ல முடியவில்லை.  ஆங்காங்கே இவர்களிலும் சிலர் கேட்டால் சரியாகக் கொடுப்பது என வைத்திருக்கின்றனர். சிலர் கேட்டாலும் இவ்வளவு தான் இந்த ரேட்டுக்கு எனச் சொல்வது என வைத்திருக்கின்றனர்.  மேலும் கல்யாணத்தில் பக்ஷணங்கள் செய்வது என்றொரு வழக்கம் உண்டு.  பெண் வீட்டிலேயே செய்யப்படும் இந்த பக்ஷணங்கள் பொதுவாக நல்ல நாள் பார்த்துச் செய்ய ஆரம்பிக்கப் படும்.  பக்ஷணங்கள் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைத்துக் கொழுக்கட்டை செய்து நிவேதனம் செய்து விநியோகம் செய்வார்கள்.  குல தெய்வப் பிரார்த்தனைகளும் உண்டு.  கல்யாணப் பத்திரிகை அடித்து வந்ததுமே பிள்ளையாருக்கு முதல் பத்திரிகை வைத்துவிட்டுப் பெண்ணை/பிள்ளையை அழைத்துக் கொண்டு குலதெய்வம் கோயிலில் சென்று பத்திரிகைகளை வைத்து வணங்கிப் பின்னர் விநியோகம் ஆரம்பிப்பார்கள். இது அவரவர் வீட்டு வழக்கப்படி செய்யப் படும்.
Inline image 2
அதே போல் பக்ஷணங்கள் தயார் செய்யவும் நாள் பார்த்து அன்று  மர உரல், அல்லது கல் உரலை அலம்பிச் சந்தனம், குங்குமம் வைத்து, உலக்கைக்கும் சந்தனம், குங்குமம் வைத்து உரலில் முதலில் நல்ல காய்ந்த மஞ்சளைப் போட்டுப் பொடியாக இடிப்பார்கள்.  இதுக்கு மஞ்சள் இடிக்கிறது என்று சொல்வதுண்டு.  ஐந்து, ஏழு, ஒன்பது என எண்ணிக்கையில் அனுபவம் வாய்ந்த சுமங்கலிகளைக் கூப்பிட்டு இடிக்கச் சொல்வார்கள்.  அதன் பின்னரே பக்ஷணங்கள் செய்ய ஆரம்பிப்பார்கள்.  இப்போதெல்லாம் காடரிங் கான்ட்ராக்டர்களே செய்வதால் அவங்க என்னிக்கு, எப்படிச் செய்யறாங்கனு எல்லாம் சொல்ல முடிவதில்லை.  பல கல்யாணங்களையும் ஒத்துக் கொள்வதால் ஒரு தொழிற்சாலை போல் ஒரு பக்கம் முறுக்குகள் சுத்தியவண்ணமாகவும், லட்டுகள் பிடித்த வண்ணமாகவும் இருக்கும் என்கின்றனர்.  ஒருமுறையாவது நேரில் போய்ப் பார்க்கணும்னு வைச்சிருக்கேன்.  எப்போ முடியும்னு தெரியலை.

நம்ம வீட்டு பக்ஷணங்கள் தான்.  எல்லாரும் வந்து எடுத்துக்குங்க.


மைசூர்.jpg
முறுக்கு.jpg

Geetha Sambasivam

unread,
Jun 26, 2013, 5:27:10 AM6/26/13
to mint...@googlegroups.com, Subashini Tremmel
பல நாட்களுக்குப் பின்னர் இந்த இழையையும் அதில் உங்கள் பதிலையும் இன்று தான் பார்க்கிறேன் சுபா.


//இந்த விஷயத்தை சாதாரண ஒன்றாக நினைத்து ஒதுக்கி விட்டு  போக மனம் வரவில்லை கீதா. நீங்கள் உங்கள் எழுத்துப் பதிவை தொடருங்கள். அதற்கு வாசிப்பவர்கள் கருத்துப் பதிந்து வருவோம். அதே வேளை இந்த விஷயத்தையும் சகஜம் தானே என் ஒதுக்கி விடாமல் கருத்துப் பரிமாற்றம் செய்வது தேவை என நான் நினைக்கின்றேன். தனி இழையில் தொடர்வதை நீங்கள் விரும்பினால் சொல்லுங்கள் அப்படியே செய்வோம்.//

தாராளமாய்க் கருத்துப் பரிமாற்றம் செய்யலாம்.  எனக்கு எந்தவிதமான மறுப்பும் கிடையாது. தனி இழையிலேயே தொடர்வோம்.  நன்றி சுபா, தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை வெளிப்படையாகப் பரிமாற்றம் செய்வது எனக்கு ஊக்கம் அளிக்கிறது.

2013/6/8 Subashini Tremmel <ksuba...@gmail.com>



இந்த விஷயத்தை சாதாரண ஒன்றாக நினைத்து ஒதுக்கி விட்டு  போக மனம் வரவில்லை கீதா. நீங்கள் உங்கள் எழுத்துப் பதிவை தொடருங்கள். அதற்கு வாசிப்பவர்கள் கருத்துப் பதிந்து வருவோம். அதே வேளை இந்த விஷயத்தையும் சகஜம் தானே என் ஒதுக்கி விடாமல் கருத்துப் பரிமாற்றம் செய்வது தேவை என நான் நினைக்கின்றேன். தனி இழையில் தொடர்வதை நீங்கள் விரும்பினால் சொல்லுங்கள் அப்படியே செய்வோம்.

நன்கு பழகிவிட்டால் ஒருவருக்கொருவர் உள்ள ஈர்ப்பு குறைந்து விடும் என்பது  ஒரு புறமிருக்க வாழ்க்கை என்பதில் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன என்பதனையும் சோயிக்க வேண்டியுள்ளது. திருமணம் பிள்ளை பெறுதல் உறவினர் என்பது மட்டுமே தனிமனித வாழ்க்கை என்ற வரையறை மாறி உலகம் வேறு வகையில் வளர்ந்து விட்டது. இதனை பார்க்க விரும்பாதவர்கள்  இதுதான் உலகம் என தங்கள் உலகத்திற்குள்ளேயே வாழ முயற்சிப்பர். ஆனால் அவர்களுக்காக உலகம் அப்படியே 19ம் நூற்றாண்டில் நின்று விடப்போவதில்லை. காலம் மாறிவிட்டது. வீட்டிற்குள் மட்டுமே இருந்த பெண்கள் எல்லா சமூகத்திலும்  தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்  கொண்டும் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டும் சமூகத்தில் அங்கம் வகித்தும் பல்வேறு வகையில் தங்கள் பங்களிப்பை இந்த உலகத்தில் செய்து வருகின்றனர். பெண்களின் பரப்பு என்பது வீடு என்ற ஒரு நிலையைக் கடந்து வெளி உலகத்திலும் இப்போது மறுக்க முடியாத இடத்தைப் பிடித்து நிற்கின்றது. 

பிரச்சனைகள் நிறம்பிய மனிதர்களோடு வாழ்வது சாதாரண விஷயமல்ல. திருமணத்திற்கு முன்னர் பழக வாய்ப்பு அமையும் போது ஏதாவது ஒரு வகையில் சில குறிப்பிடத்தக்க குணங்கள் வெளிப்படுவதும் அது எந்த வகையில் வாழ்நாள் முழுதும் பாதிப்பினைத்தந்து கொண்டிருக்கும் என்பதும்  திருமணத்திற்கு முன்னர் ஆண் பெண் இருவருமே யோசிக்க வேண்டிய ஒன்றே. குறையில்லாதவர்கள் யாரும் இலர். சிறு சிறு கருத்து வேறுபாடுகளையோ விருப்பு வெறுப்புகளையோ திருமண ஏற்பாடு முறிய ஒரு காரணமாக இருக்க வேண்டும் என நான் குறிப்பிடவில்லை. ஆனால் சில குறிப்பிடத்தக்க விஷயங்கள்  உள்ளன. அவை சாதாரண வகையில் மனதை தாக்குவதல்ல.  மாறாக அச்சத்தை உருவாக்கக் கூடியவை. ஆழமான அன்பை தரவேண்டிய மணவாழ்க்கை நரகமாகக் கூடிய நிலையும் ஏற்படும். இதனைத் தவிர்க்க  ஆரம்பத்திலேயே ஒருவரை ஒருவர் அறிந்திருக்க வாய்ப்பு அமைவது அவசியம் என்பதே என் கருத்து.

சுபா


Geetha Sambasivam

unread,
Jun 26, 2013, 5:32:15 AM6/26/13
to மின்தமிழ்
பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசமும், முறுக்கும். இது அநேகமா எல்லா வகுப்பினரும் செய்கின்றனர்.  பிராமணர்களுக்கு இதைத் தவிரவும் பருப்புத் தேங்காய் என்பது முக்கியம்.  வேடிக்கை என்னவெனில் ஒரு பார்சி கல்யாணத்திலும் கூட இம்மாதிரிக் கூம்பு வடிவ இனிப்புகள் (?)காணப்பட்டன.  பார்க்க படம். 

Inline image 1


இது மாதிரி ஒல்லியான கூம்பாக இல்லாமல் கொஞ்சம் நிதானமாகப் பருப்புத் தேங்காய் செய்வார்கள்.  அதில் மனோகரம் தான் அநேகமாய் முஹூர்த்தத்தின் போது வைக்கப் படும்.  இதைத் தவிரவும் மிட்டாய்ப் பருப்புத் தேங்காய் எனக் கலர் கலர் மிட்டாய்களை வைத்து சர்க்கரைப் பாகில் போட்டுப் பிடித்தது, முந்திரிப் பருப்புப் பருப்புத்தேங்காய், மைசூர்ப் பாகுப் பருப்புத் தேங்காய், பர்பி பருப்புத் தேங்காய், வேர்க்கடலைப் பருப்புத் தேங்காய், பொட்டுக்கடலைப்பருப்புத் தேங்காய் எனப் பலவிதங்களில் உண்டு. ஞாயிறன்று கலந்து கொண்ட ஒரு நிச்சயதார்த்தத்தில் உலர் பருப்பு வகைகளில், உலர் பழங்கள் வகைகள் சேர்த்துப்  பருப்புத் தேங்காய் வைத்திருந்தார்களாம்.  முதலில் தெரியவில்லை. தெரிந்திருந்ந்தால் படம் எடுத்து வந்திருப்பேன்.  வீட்டுக்கு வந்ததும் தான் தெரிய வந்தது. இந்த பக்ஷணங்கள் அனைத்தும் சீர் பக்ஷணங்கள் எனப்படும்.  முறுக்கு, தேன்குழல், அதிரசம் இது மூன்றும் எல்லாத் தரப்பினருக்கும் முக்கியமானவை. 



இதைத் தவீரவும் லட்டுவும், மைசூர்ப்பாகும் கட்டாயம் இருக்கும்.  இதற்கு மேலும் பக்ஷணங்கள் செய்வதும், வைப்பதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.  பொதுவாக மிக்சரும் பல கல்யாணங்களிலும் முன்னால் இடம்  பெற்று வந்தது.  இப்போதெல்லாம் யாரும் அதைச் சீண்டுவதில்லை.  இது காடரிங்காரங்க  மூலம் ஒப்பந்த அடிப்படையில் பக்ஷணங்கள் பண்ண ஆரம்பித்ததும் ஏற்பட்ட மாறுதல்.  முன்னெல்லாம் வீடுகளிலேயே செய்யும் போது முறுக்கு, தேன்குழல், அதிரசம், லட்டு தவிர, மைசூர்ப்பாகும் வீட்டிலேயே செய்து விடுவார்கள். கல்யாணத்திலே பந்திக்குப் போடும் பக்ஷணங்களாக லட்டும், மைசூர்ப்பாகும் இருந்தால் சமையல்காரர்கள் செய்கையில் சீருக்கும் வைக்க வேண்டும் என்று பெண் வீட்டார் கேட்டு வாங்குவார்கள்.  சமையல் நம் பொறுப்பில் சாமான்கள் வாங்கிப் போட்டுச் செய்தால் ஒவ்வொரு வேளைக்கும் போடும் ஸ்வீட்டில் ஒரு பங்கு பிள்ளை வீட்டுக்கும், பெண் வீட்டிற்கும் கொடுப்பது என்பது எழுத்தில் இல்லாத விதிமுறை. ஆக ஸ்வீட் நிறைய இருக்கும்.  கல்யாணம் முடிந்த அன்று மாலை அநேகமாய் மிக்சரும், கையில் ஒட்டாத சோன்பப்டி, பாதுஷா போன்ற ஸ்வீட்டும் தான் ஒரு காகிதப் பையில் போட்டு மாலை நடக்கும் ஒரே ஒரு மணி நேர ரிசப்ஷனுக்குக் கொடுப்பார்கள்.  ரிசப்ஷன் பத்தி எல்லாம் இன்னும் விரிவாக எழுதறேன். இப்போதைக்கு பக்ஷணம் சாப்பிடுவோம்.

Inline image 2

இப்போதெல்லாம் நிச்சயதார்த்தமே ஒரு சின்னக் கல்யாணம் போல் நடக்கிறது.  இது அநேகமாய்ப் பிள்ளை வீடுகளிலேயே நடைபெறும். தஞ்சை ஜில்லாவில்(பழைய தஞ்சை ஜில்லா) இதில் அநேகமாய்ப் பெண் வீட்டு ஆண்களும், பிள்ளை வீட்டு ஆண்களுமே கலந்து கொள்வார்கள் என என் மாமியார், மாமனார் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.  இதைப் பாக்கு, வெத்திலை மாத்தறதுனு சொல்லுவாங்களாம்.  பல கல்யாணங்கள் இப்படி வீட்டு வாசல் திண்ணையில் அவரவருக்குள் பேசி முடித்துக் கொண்டு, வெற்றிலை, பாக்கு மாற்றிக் கொண்டு பின்னர் வீட்டு மனிதர்களுக்குச் சொல்லப்பட்டதுண்டு என்கிறார்கள்.  இது குறித்து எனக்கு அவ்வளவாய்த் தெரியவில்லை. ஆனாலும் எனக்குத் தெரிந்து என் நாத்தனார் கல்யாணங்கள் என் மாமனார், அவர் வீட்டு ஆண்கள் மட்டுமே போய் நிச்சயம் செய்திருக்கின்றனர். இப்போது போல் எல்லாம் அப்போது விதவிதமான தட்டுக்கள் வைப்பதும் இல்லை.  வெறும் பருப்புத் தேங்காயும், மாப்பிள்ளைக்கு ஒரு வேஷ்டி, துண்டும்.  வேஷ்டி ஜரிகை வேஷ்டியாக இருக்கும்.  மாப்பிள்ளையோ, பெண்ணோ கலந்து கொள்வதும் இல்லை என்றார்கள்.  ஆனால் தென் மாவட்டங்களில் மாப்பிள்ளை தன் கல்யாண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்வார். 

மாப்பிள்ளையை வைத்துத் தான் தென் மாவட்டங்களில் நிச்சயம் செய்வார்கள். பெண் செல்வதில்லை. வைணவர்களில் பெண் வீட்டிலோ, பிள்ளை வீட்டிலோ அவரவர் வசதிப்படி செய்வதாகக் கூறுகின்றனர்.  பெண் வீட்டில் நடந்தால் நிச்சயதார்த்தம் என்றும், பிள்ளை வீட்டில் நடந்தால் லக்னப்பத்திரிகை வாசித்தல் என்றும் கூறுகின்றனர்.  எங்கள் வீட்டில் எல்லாம் லக்னப் பத்திரிகை வாசித்தல் என்பதே தான் சொல்வார்கள்.  பெண் வீடுகளில் நிச்சயம் நடத்தமாட்டார்கள். மேலும் முன்பெல்லாம் தஞ்சை ஜில்லாவில் கல்யணம் முடியும் வரை கை நனைப்பதில்லை எனச் சாப்பிடவே மாட்டார்கள். ஆனால் என் மாமியார், மாமனார் என்னைப் பெண் பார்க்க வந்திருந்தப்போ அதெல்லாம் பார்க்கவில்லை.  நிச்சயதார்த்தம் மட்டும் எளிமையாக என் அப்பா, இன்னும் அவரது நண்பர் ஓரிருவரோடு பாக்கு, வெற்றிலை மாற்றும் சடங்காக நடந்தது. அப்போதெல்லாம் நிச்சயம் முடிந்து ஒரு மாசத்துக்குள்ளாகக் கல்யாணம் நடந்துவிடும்.  சத்திரம் வாடகைக்கு எடுக்க வேண்டுமே என்ற கவலையோ, பக்ஷணங்கள் செய்தாக வேண்டுமே என்ற கவலையோ இருக்காது.  எல்லாத்துக்கும் உதவிக்கு ஆட்கள் ஓடி வருவார்கள். 

ஞாயிறன்று சென்றிருந்த நிச்சயதார்த்தத்தில் பெண்ணுக்குப் பிள்ளை வீட்டாரும், மாப்பிள்ளைக்குப் பெண் வீட்டாரும் மோதிரம் போட்டார்கள்.  முன்பெல்லாம் கல்யாணத்திலே மாப்பிள்ளை வீட்டார் நகை போட்டாலே பெரிய விஷயம். அதோடு மேல்நாட்டு முறையில் கேக் ஒரு முறைக்கு இருமுறை வெட்டிப் பட்டாசு வெடித்து, பலூன்களில் வண்ணக் காகிதச் சிதறல்களை வெடித்துக் கொட்ட வைத்துக் கொண்டாடினார்கள்.   இது மிகப் புதுமையாக இருந்தது.  பல நிச்சயதார்த்தங்கள் சென்றிருந்தாலும் நிச்சயம் முடிந்து பெண்ணும், பிள்ளையும் கேக் வெட்டிப் பார்க்கவில்லை.  காமிராவெல்லாம் எடுத்துப் போகவில்லை.  அதனால் படங்கள் பகிர முடியவில்லை.  சமீபத்தில் ஒரு குழந்தையின் முதலாம் ஆண்டு நிறைவுக்குச் சென்றிருந்தேன்.  சத்திரத்தில் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள்.  வைதிக முறைப்படியான கொண்டாட்டங்கள் முடிந்து காது குத்தியானதும், மிகப் பெரிய கேக்கில் ஒற்றை மெழுகுவர்த்தி வைத்துக் குழந்தையை ஊதச் சொல்லி, அது கையைச் சுட்டுக்கொள்ளாத குறை :( கேக் வெட்டி வந்தவர்களுக்கெல்லாம் கொடுத்தார்கள். கேக் வெட்டினவரைக்கும் சரி, மெழுகுவர்த்தியை மங்களகரமாக ஏற்றிவிட்டுக் கொண்டாடலாமே எனத் தோன்றியது.  அணைக்க வேண்டுமா?


download.jpg
parsi.jpg

Geetha Sambasivam

unread,
Jun 29, 2013, 8:18:17 AM6/29/13
to மின்தமிழ்

ஜோரான சேனி லட்டு, சுவையான சீனி புட்டு, இனி இஷ்டம் போல வெட்டு!
பருப்புத் தேங்காய் பற்றிச் சொல்கையில் ஒரு விஷயத்தை விட்டுட்டேன்.  திருநெல்வேலிக்காரர்கள் பருப்புத் தேங்காயைக் கூட்டில் அடைக்க மாட்டார்கள். பருப்புத் தேங்காய் செய்முறையும் தனியாக இருக்கும். அரிசி மாவு, உளுத்தமாவு, கடலைமாவு சேர்த்துக் கொஞ்சம் கனமான இழைகள் கொண்ட தேன்குழல்கள் செய்து, அதை வெல்லப் பாகில் சேர்ப்பார்கள்.  இது ஒரு பித்தளையில் ஆன அரை அடுக்கு நிறையச் செய்து வைத்து அதன் நடுவில் சின்னதாகக் கூம்பு போல் பருப்புத் தேங்காய் 2 பிடித்து வைப்பார்கள்.  முழு அடுக்கில் கிட்டத்தட்ட அப்போதைய ஒரு மூட்டை அரிசியை வடிக்கலாம் எனில் அரை அடுக்கில் அதில் பாதி வடிக்கலாம்.  அப்போ பருப்புத் தேங்காய் எவ்வளவு இருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விடுகிறேன்.
முன்னெல்லாம் ஒரு மூட்டை அரிசிக்கு பக்காப்படி ஐம்பது படி இருக்கும்.  இப்போ மூட்டைனு தருவது பத்து கிலோ, பதினைந்து கிலோ, இருபது, இருபத்தைந்து கிலோ பைகள்.  ஆகவே உங்கள் கணக்குப் பழைய முறையில் போடும் கணக்காக இருக்க வேண்டும். :)))) அதோடு பருப்புத் தேங்காய் வகைகளில் பூந்திப் பருப்புத் தேங்காயை மறந்துட்டேன். :))))

ஆச்சு, பக்ஷண வேலை முடிஞ்சாச்சு;  வடாம், வற்றல் போட்டாச்சு, துணி, மணி எடுத்துத் தைக்கக் கொடுத்தாச்சு.  எல்லாம் செய்த நாம் முக்கியமானதை விட்டுட்டோமோ?  இல்லை; அதெல்லாம் விடலை. என்னனு கேட்கறீங்களா?  அதான் சமையலுக்கு ஆள் போடுவது!  கல்யாணம் நிச்சயம் ஆனதுமே இப்போல்லாம் காடரிங் கான்ட்ராக்டரைப் பார்த்தாகணும்.  பல பெரிய கான்ட்ராக்டர்கள் சத்திரங்களில் திருமண முஹூர்த்தத் தேதிகளுக்கு முன் பதிவு செய்து வைத்துக் கொள்ளுகின்றனர்.  நாம் கூப்பிடும் கான்ட்ராக்டர் அப்படிச் சத்திரங்களில் முன் பதிவு செய்தவராக இருந்தால் அவரே சத்திரத்துக்கும் சேர்த்து நம்மிடம் பேசிவிடுவார். இல்லை எனில் சத்திரக்காரர்களை நம்மைச் சந்தித்துப் பேசச் சொல்லுவார்.  கல்யாணத் தேதி உறுதி செய்துவிட்டுச் சத்திரத்துக்கு அலையும் மக்கள் இப்படி ஒரு வசதியா என நினைத்துக் கொண்டு ஒத்துக்கொள்வார்கள்.  1996-ஆம் வருடம் நடந்த எங்கள் உறவினர் கல்யாணத்தில் அம்மாதிரி நடந்தது.  நல்லவேளையாகச் சத்திரம் நிறைய அறைகளோடு இருந்தாலும், சமையல், சாப்பாடு சோபிக்கவில்லை என்பதோடு சரியாகக் கவனிக்கவும் இல்லை. ஜூலை மாதம் கல்யாணம் நிச்சயம் செய்த பின்னர் செப்டம்பர் மாதத் தேதிகளில் சத்திரம் கிடைக்காமல், அக்டோபரில் சத்திரம் கிடைத்த முஹூர்த்தத் தேதிக்குக் கல்யாணம் மாற்றப் பட்டது.

பார்க்க இது வசதியாகத் தோன்றினாலும் சத்திரத்து நிர்வாகிகளுக்கும், சமையல் கான்ட்ராக்டர்களுக்கும் இடையில் எழுதப் படாத ஒப்பந்தம் இருக்கிறது. இப்போதெல்லாம் சத்திரங்கள் அடுத்த ஜனவரி 2014 முஹூர்த்தங்களையும் தாண்டி முன்பதிவு செய்யப்பட்டு விடுகிறது. அதோடு வாடகையும் அதிகம்.  மதுரையில் தானப்ப முதலி அக்ரஹாரத்தில் கண் ஆஸ்பத்திரி என அழைக்கப்படும் மங்கள நிவாஸில் திருமணம் நடத்த முதலில் பணம் வாங்கவில்லை.  வாங்க ஆரம்பித்த பின்னரும் குறைந்த தொகையே வாங்கினார்ர்கள்.  ஆனாலும் யாரும் அங்கே கல்யாணம் செய்ய முன்பதிவு செய்யமாட்டார்கள். அக்கம்பக்கத்து வீடுகளை இணைத்து வாசலில் பெரிய பந்தல் போட்டு மணல் பரப்பி மேடை அமைத்துக் கல்யாணம் செய்துவிடுவார்கள். அக்கம்பக்கத்து வீடுகளில் மனிதர்கள் அந்த அளவுக்கு உதவியாக இருப்பார்கள்.

இப்போதும் சமையல் காடரிங் ஆட்களிடம் விடாமல் சொந்தமாக சாமான்களை வாங்கிக் கொடுத்துச் சில கல்யாணங்கள் நடைபெறுகின்றன. இவற்றில் சாமான்களை நாமே சமையல்காரர்களுக்குக் கொடுக்கவேண்டும்.  அதற்கெனத் தனியாகப் பொறுப்பான ஒருத்தரை நியமிப்பார்கள். தஞ்சை ஜில்லாவில் இந்த அறையை உக்கிராணம் என்றே அழைப்பார்கள்.  பல கல்யாணங்களிலும் இந்த உக்கிராணம் பார்க்க சமையல்காரர்களே தங்களுள் ஒருத்தரை நியமிக்கச் சொல்வார்கள்.  இதை ஏற்காமல் வீட்டு மனிதரில் நெருங்கிய ஒருவரைச் சொல்வதும் உண்டு.  இம்முறையில் பின்னால் மிஞ்சும் மளிகை சாமான்களில் பிரிக்காதவற்றை நாம் வாங்கிய கடையிலேயே கொடுத்துவிடலாம். வீணாகும் பொருட்களான காய்கள், பழங்கள், வாழை இலை போன்றவை அக்கம்பக்கம் பகிர்ந்து கொடுத்தும் சில நாட்களுக்கு வரும். பிரித்த மளிகை சாமான்கள் வீட்டு உபயோகத்துக்கு வந்துவிடும்.  அவை குறைந்தது இரண்டு மாதங்களாவது ஓட்டும்படியாகவே இருக்கும்.

கல்யாணச் செலவில் தடுமாறி இருக்கும் குடும்பங்கள் இம்முறையில் ஓரிரு மாதங்களுக்கான செலவை ஈடுகட்ட முடியும்.  விறகிலிருந்து வாங்கிப்போடுவார்கள். இப்போது சாதாரணமாக ஒரு இனிப்பு, வடை, பாயசம், வறுவல், அப்பளம், ஒரு கறி, ஒரு கூட்டு, சாம்பார், ரசம், மோர்,சாதம், பருப்பு, ஊறுகாய் என்ற குறைந்த பக்ஷத் திட்டத்துக்கே ஒரு இலைக்கு நூற்றைம்பதில் இருந்து இருநூறு வரை, நாம் அழைக்கும் கான்ட்ராக்டரின் தரத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்திருக்கின்றனர். நாம் சாமான் வாங்கிச் செய்தால் இதில் பாதிப் பணம் கூட ஆகாது.  ஆனால் மேற்பார்வைக்குச் சரியான ஆட்கள் இருக்க வேண்டும். கல்யாணத்தன்றோ அல்லது முதல்நாளோ வைக்கும் ரிசப்ஷனில் போடப் படும் ஸ்பெஷல் சாப்பாடு, நாம் தேர்ந்தெடுக்கும் மெனுவைப் பொறுத்துக் குறைந்த பக்ஷம் முன்னூறு ரூபாயிலிருந்து இன்னும் மேலே தான் போகிறது.  அதோடு சில குறிப்பிட்ட சமையல் கான்ட்ராக்டர்கள் ரிசப்ஷனுக்கு வருபவர்களுக்கு உபசாரம் செய்ய எனத் தனியாகச் சில பெண்களை அழைத்து வருவார்கள்.
Inline image 1


அவர்கள் மருதாணி எனப்படும் மெஹந்தி இடுவது, வளையல் கொடுப்பது போன்றவற்றைப் பார்க்கின்றனர்.


Inline image 2

 இன்னொரு பக்கம் பழங்களைப் பிழிந்து எடுக்கும் ஜூஸ் ஸ்டால்கள் இவர்களின் கவனிப்பில் இருக்கும்.

Inline image 3

குழந்தைகளைக் கவர பஃபூன்கள், அல்லது டெடி, மிக்கி மவுஸ் முகமூடியில் ஆட்கள்,




Inline image 4


 பஞ்சு மிட்டாய், பீடா ஸ்டால், இது தவிர காஃபி, டீ, ஹார்லிக்ஸ், பூஸ்ட் ஸ்டால்,



Inline image 5
Inline image 6

     Inline image 7
இன்னொரு பக்கம் சாட் ஐட்டங்கள் உள்ள ஸ்டால், சமோசா அல்லது புதினா வடை, பாதாம், முந்திரிப் பருப்பு வகைகள் ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வருவார்கள்.  பின்னாலேயே வரிசையாக ஒவ்வொரு ஐடமாக வரும்.  இந்த வட இந்தியக் கலாசாரம் எப்போ தமிழ்நாட்டுக்கு வந்ததுனு புரியலை.  கிட்டத்தட்டப் பத்துவருடங்கள் வட இந்தியாவில் இருந்துட்டுப் பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்ததும் கல்யாணங்களில் கலந்து கொள்ளும்போது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது எங்களுக்கு. 


அதோடு பெண், பிள்ளை உடை அணியும் முறையும் வட இந்தியக் கலாசாரத்தில் தான். ஆனால் ஹிந்தியை மட்டும் வெறுப்போம்.  ஹிந்தி அரக்கினு பட்டமெல்லாம் கொடுப்போம்.  சாப்பாட்டில் வட இந்திய சாட் உணவு வகைகளும், மேல்நாட்டு பிட்சாவும், பர்கரும் தான் முதலிடம் பெறுகிறது.  இப்படியான சாட் வகைகளுக்கு என்றும் ஒரு ஸ்டால் இருக்கும்.  அங்கே பேல் பூரி, பானி பூரி,  வகைகள் இடம் பெறும்.  இது எல்லாம் சாப்பிட்டு முடிஞ்சு அதுக்கப்புறமா வரிசையிலே நின்னு பெண், மாப்பிள்ளைக்குப் பரிசு கொடுத்துவிட்டுச் சாப்பிடப் போனால் சாப்பாடே இறங்காது.  ஏற்கெனவே சாப்பிட்டது வயிற்றில் இருக்கும்.  இலையில் உட்கார்ந்துட்டு எழுந்துக்க வேண்டியது தான்.   ஏற்கெனவே நிறைஞ்ச வயித்திலே எதைப் போடமுடியும். ஆக மொத்தம் கொஞ்சம், கொஞ்சம் ருசி பார்த்துவிட்டு வருபவர்களே அதிகம்.  ஆனால் அதில் இடம் பெறும் உணவு வகைகள் நாற்பதுக்குக் குறையாது.  மெனு அடுத்த பதிவில் இடம் பெறும்.


juice.jpg
1bafoon.jpg
coffee.jpg
beeda.jpg
bangles.jpg
2beeda.jpg
candy.jpg

Geetha Sambasivam

unread,
Jul 2, 2013, 12:31:00 AM7/2/13
to மின்தமிழ்
கொத்தோடு வாழைமரம் கொண்டு வந்து கட்டி, கோப்புடைய பந்தலுக்கு மேல் கட்டு கட்டி!


ஆச்சு, கல்யாண வேலைகள் ஒவ்வொன்றாகச் செய்து வருகிறோம்.  துணிமணிகள் வேலை, நகைகள், பாத்திரங்கள் வாங்குவது முடிஞ்சாச்சு.  வற்றல், வடகம், அப்பளம் போட்டாச்சு.  பக்ஷணங்கள் செய்தாச்சு. இனி திரட்டுப்பால் பாக்கி.  அதைக் கடைசியில் தான் செய்யணும்.  முன்னாடியே செய்ய வேண்டாம்.  பாலை வேணா வாங்கிக் கொஞ்சம் கொஞ்சமாகக் காய்ச்சிக் குறுக்கிச்  சேர்த்துக் கொண்டு வருவோம்.  இப்போ அடுத்த வேலைகள், பந்தக்கால் முஹூர்த்தம், வீடுகளில் செய்ய வேண்டிய சுமங்கலிப் பிரார்த்தனை, சமாராதனை வகையறாக்கள்.  அதுக்கும் முன்னாடி பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை போட்டுடணும்.  அப்புறமாக் குலதெய்வத்துக்கு ஆராதனைகள் செய்துடணும்.  துணிமணிகள் வாங்கறச்சேயே வாங்கி வைச்சிருக்கும் பிள்ளையார் வேஷ்டி, குலதெய்வத்திற்கான துணிகள் எல்லாத்தையும் நேரில் சென்று கொடுத்து அபிஷேஹ ஆராதனைகளை முடிச்சுப் பத்திரிகைகளையும் கோயிலில் சாமி காலடியில் வைச்சு வாங்கிட்டு வந்துடணும்.  முதல் பத்திரிகை எப்போவுமே நம்ம நண்பருக்குத் தான்.  அதுக்கப்புறமா குலதெய்வங்களுக்குப் பத்திரிகை ஒதுக்கியதும், அவரவர் குடும்ப வழக்கப்படியான ஆசாரியர்களுக்கு அனுப்பி வைக்கணும்.  இது ரொம்ப முக்கியம்.  ஏனெனில் அவங்க கிட்டே இருந்து பிரசாதம் வரும்.  இந்தப் பிரசாதங்களை ஓதி இட்டுக் கொடுத்து ஆசார்ய சம்பாவனையும் முடிஞ்சப்புறமாத் தான் கல்யாணத்திலே மொய்யே  கொடுக்க ஆரம்பிக்கணும். அதிலும் முதல் மொய் இரண்டுபேருடைய  தாய் மாமன்களுடையதாகவே இருக்கும்.

மாமாவுக்கு எனத் தனியாப் பஞ்சாதியே இருக்கு.  அதைச் சொல்லி மாமன் சீரைக் கொடுத்ததும் அத்தை சீர் கொடுக்கணும்.  இது இரண்டுக்கும் பின்னரே முன்னெல்லாம் வந்திருக்கிறவங்க கொடுப்பாங்க.  இப்போல்லாம் தாலி கட்டியானதுமே கல்யாணமே முடிஞ்சுட்டாப்போல் வாழ்த்துகள், கைகுலுக்கல்கள், பரிசுகள் கொடுப்பது என நடக்கிறது.  இதை எல்லாம் விரிவாய்ப் பார்ப்போம்.  இப்போ அடுத்து நாம் செய்ய வேண்டியது பந்தக்கால் முஹூர்த்தம். முஹூர்த்தக்கால் நடுவது என்றும் சொல்லுவார்கள். பெண்ணின் நக்ஷத்திரத்துக்கு ஏற்ற திருமண முஹூர்த்தம் பார்ப்பது போலவே இங்கேயும் பெண்ணின் நக்ஷத்திரத்துக்கு ஏற்றாற்போல் முஹூர்த்தக்கால் நடவும் நாள் பார்ப்பார்கள்.  அதிகாலையில் சூரிய உதயத்துக்குச் சற்று முன்னர் நடக்கும். அக்கம்பக்கம், சுற்றத்தாரை அழைத்து காவிப் பட்டை, சுண்ணாம்பு அடித்த மூங்கில் காலில் உச்சியில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் வைத்த மஞ்சள் நனைத்த துணியைக் கட்டி மாவிலைக் கொத்து செருகி, ஈசானிய மூலையில் குழி தோண்டுவார்கள்.

Inline image 1
அதில் ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் சுமங்கலிகளைக் கொண்டு பால் விடச் செய்து தானியங்களைப் போட்டு, காசுகளையும் போடுவார்கள். இதைத் தான் அரசாணிக்கால் நடுவது என்று சொல்கிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் அது திருமண தினத்தின் போது நடக்கும் எனத் தெரிய வருகிறது.  ஆகவே வேறாகவும் இருக்கலாம்.  பந்தக்கால் முஹூர்த்தத்துக்கும் புரோகிதர் வருவார்.  முன்பெல்லாம் குடும்ப புரோகிதர்கள் இருந்து வந்ததால் அவர்களே நாளைப் பார்த்துச் சொல்லிச் சரியான நேரத்துக்கு வந்து எல்லாரையும் ஒன்று சேர்த்து நடத்திக் கொடுப்பார்.  இப்போதெல்லாம் புரோகிதர்களுக்கு மிகவும் கிராக்கியாக ஆகிவிட்டது.  இம்மாதிரிச் சின்ன நிகழ்ச்சிகளுக்கெல்லாம் குடும்ப புரோகிதர் வர மாட்டார்.  தன்னுடைய உதவியாளர்களை அனுப்பி வைத்தால் அதிர்ஷ்டம்.  இல்லை எனில் நாமே பார்த்துக்கணும். ஒரு சில வீடுகளில் இந்த விஷயம் பற்றி நன்கு தெரிந்தவர்கள் இருந்தால் அவர்கள் தலைமை ஏற்றுக் கொண்டு நடத்திக் கொடுப்பார்கள்.  பந்தல்காலை அனைவருமாகப் பிடித்துக் கொண்டு குழிக்குள்ளே இறக்குவார்கள். பின்னர் தேங்காய் உடைத்துக் கற்பூர ஆரத்தி எடுக்கப்படும்.

Inline image 2
வந்திருக்கும் விருந்தினர்களுக்கு இனிப்பு, இட்லி, வடையாகக் காலை ஆகாரம் கொடுத்து அனுப்புவார்கள்.  அல்லது வடை, பாயசத்துடன் சாப்பாடு போட்டு அனுப்புவார்கள்.  இப்போதெல்லாம் சத்திரங்களிலேயே கல்யாணங்கள் நடப்பதால் இதைக் குறித்து யாருக்கும் எதுவும் தெரியறதில்லை. இதுக்கப்புறமா அந்தக் காலை அஸ்திவாரமா வைத்துக் கொண்டு மற்றக் கால்களை நட்டுப் பந்தலைப் போடுவார்கள்.  பந்தலின் மேற்கூரை விதானத்தில் வெள்ளை சில்க் துணியால் மூடி காகிதப் பூக்களாலும் மற்ற அலங்காரப் பொருட்களாலும் அலங்காரங்கள் செய்வார்கள்.  பந்தலின் நாற்புறமும் காற்று வர விட்டிருக்கும் இடைவெளிகளில் பனங்குருத்து, தென்னங்குருத்துக்களால் தோரணங்கள் கட்டித் தொங்க விடுவார்கள்.  வசதி உள்ளவர்கள் சீரியல் வண்ண விளக்குகளாலும் அலங்கரிப்பார்கள்.  இப்போது கல்யாண மண்டபங்களில் இவை எல்லாம் நிரந்தரமாய்ச் செய்யப்பட்டிருக்கிறது.  ஆனாலும் ஒவ்வொரு கல்யாணத்திலும் இவற்றை நாம் பயன்படுத்துவதற்காகத் தனியாகக் கணிசமானதொரு தொகை மண்டப உரிமையாளர்களால் வசூலிக்கப்படுகிறது.  அடுத்து சுமங்கலிப் பிரார்த்தனை, சமாராதனை போன்றவற்றைப் பார்த்துட்டு உடனே சத்திரத்துக்குச் செல்லத் தயாராகுங்கள் எல்லோரும். 


பந்தல்கால்1.jpg
பந்தல்கால்2.jpg

Geetha Sambasivam

unread,
Jul 5, 2013, 5:22:56 AM7/5/13
to மின்தமிழ்

க்ஷேமங்கள் கோரி விநாயகனைத் துதித்து, சங்கரனையும் கெளரியையும் வர்ணித்து!


அடுத்து நாம் பார்க்கப் போவது சுமங்கலிப் பிரார்த்தனை அல்லது சுமங்கலி பூஜை.  ஒரு சில குடும்பங்களில் இது செய்வதில்லை.  அவரவர் வீட்டு வழக்கமாகவே இது இருந்து வருகிறது.  பெரும்பாலான பாலக்காட்டுத் தமிழர்கள் இதைக் கடைப்பிடிப்பதில்லை என்றாலும் அவர்களிலும் ஒரு சில குடும்பங்களில் வழக்கத்தில் இருந்து வருகிறது. இது அந்த அந்தக் குடும்பத்தில் இறந்து போன சுமங்கலிகளை நினைவு கூர்ந்து செய்யப்படும். இன்னும் சில குடும்பங்களில் வருடா வருடம் அந்த சுமங்கலி இறந்த திதியன்று செய்யப்படும் சிராத்தத்தின் மறுநாள் யாரேனும் ஒரு சுமங்கலியையோ அல்லது வீட்டில் கல்யாணம் ஆன பெண் இருந்தாலோ அழைத்துச் சாப்பாடு போட்டுப் புடைவை வைத்துக் கொடுப்பார்கள். இது ஒவ்வொரு வருடமும் நடைபெறும்.  இந்த சுமங்கலிப் பிரார்த்தனையில் சாப்பிட்டவர்கள் அன்றிரவு விரதமாக இருக்க வேண்டும் என்பார்கள்.  பெரும்பாலானவர்கள் இதை இப்போது கடைப்பிடிப்பதில்லை.   கல்யாணப் பெண்டுகளில் அப்படி ஒன்று இல்லை. ஆனால் திருமணங்கள் நடப்பதற்கு முன்னால் செய்யும் சுமங்கலிப் பிரார்த்தனையின் போது குறிப்பிட்ட வம்சத்தில் உள்ள முன்னோர்களில் சுமங்கலியாக இறந்த பெண்கள் மட்டுமில்லாமல், திருமணமே நடைபெறாமல் இறந்த கன்னிப் பெண்கள், சிறு பெண் குழந்தைகள் என அனைவரின் பெயர்களையும் தலைமுறை வாரியாக எழுதி வைத்துக் கொண்டு அன்று அவர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து வழிபாடுகள் செய்வது வழக்கம்.

இந்த சுமங்கலிப் பிரார்த்தனையும் பிராமணர்களில் மூன்று விதமாக நடைபெறும். அதில் எல்லாரும் பின்பற்றும் வழக்கமான முறையில் சுமங்கலி இலையின் படையலைச் சேர்த்து ஐந்து பேர், அல்லது ஒன்பது பேரை அழைத்துச் சாப்பாடு போடுவார்கள்.  இந்த இலை போடுவதும் சில வீடுகளில் இரட்டை இலை போடுவார்கள்.  இரண்டு புடைவைகள் வைப்பார்கள்.  சில வீடுகளில் ஒரே இலை தான்.  ஒரே புடைவைதான். இதெல்லாம் அவரவர் குடும்ப வழக்கத்தைப் பொறுத்தது. ஆனால் பொதுவாக ஒற்றைப்படையிலேயே சுமங்கலிகளின் எண்ணிக்கை அமையும். இன்னொன்று பூவாடைப் பொண்டுகள் என்பது.  இந்தப் பூவாடைப் பொண்டுகள் என்பது இந்தக்காலத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை.  என்றாலும் எங்கள் நண்பர் ஒருவர் வீட்டில் நடந்து வந்தது. எண்பதுகள் வரையிலும் நடந்ததை அறிவேன்.  இது எப்படி எனில் ஒரு வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்மணியைச் சிதையில் வைத்து எரிக்கையில் கட்டி இருந்த புடைவை இடுப்புக்கீழ் பாகம் முழங்கால் வரை எரியாது இருக்குமாம். இது எல்லா சுமங்கலியாக இறந்த பெண்களுக்கும் நடப்பது இல்லை.  மிகச் சிலருக்கு மட்டுமே இப்படிப் புடைவை எரியாமல் இருக்குமாம். அதை அந்தச் சமயம் அவர்கள் மடிசாராகக் கட்டி இருந்தால் அந்த பாகம் எரியாமல் இருக்குமாம். அப்படி எரியாமல் இருக்கும் புடைவையின் பாகத்தை மறுநாள் பால் ஊற்றச் செல்கையில் பார்த்து எடுத்து ஒரு பானையில் போட்டுக் கொண்டு வருவார்களாம்.

அதை வீட்டில் தனியாக ஒரு இடத்தில் வைத்து வழிபட்டு வருவார்கள் என்றும் சில குடும்பங்களில் வழிவழியாக இது தொடர்ந்து வரும் என்றும் சொல்கின்றனர். இவர்கள் இறந்த திதியன்று சிராத்தம் முடிந்ததும் மறுநாள் மிகவும் ஆசாரமாக சமையல், மற்ற ஏற்பாடுகள் செய்து, அதே போல் ஆசாரத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவருக்குப் புடைவை வைத்துக் கொடுப்பார்களாம். அதை வாங்கிக் கொள்கிறவர்கள் ஆசாரம் கடைப்பிடிக்கிறவர்களாகத் தான் இருக்க வேண்டுமாம். வீட்டில் உள்ளவர்களும் மிகவும் கவனமாகவே ஆசாரம் குறையாமல் எல்லாம் செய்வார்களாம். இது என் சிநேகிதி சொல்லிக் கேட்டது.  அவரின் மாமியார் கர்ப்பப் பை கான்சரில் இறந்தவரின் மடிசார் எரியவில்லையாம்.  இது அறுபதுகளின் கடைசியில் நடந்திருக்கிறது.  தோழி எனக்குச் சொன்னது எண்பதுகளில். ஆனால் அவர்கள் அண்ணன், தம்பி மூவர் சேர்ந்து இருக்கையில் தான் நடத்த வேண்டும் என்பதால் எப்படி நடத்துவார்கள் என்பதை நேரில் பார்த்ததில்லை.  வேறொரு குடும்பம், இவங்க அம்பத்தூரிலேயே இருந்தார்கள்.  இவங்க குடும்பத்தில் சுமங்கலிப் பிரார்த்தனையில் ஒன்பது பேர் கட்டாயம் இருக்கணும்.  அதில் ஏழு சுமங்கலிகள், ஒரு விதவை, ஒரு பிரமசாரிப் பையர்.  இதை அதிசயப் பொண்டுகள் என்று சொல்கின்றனர்.  ஆனால் சாப்பாடு விஷயத்தில் சமரசம் செய்து கொள்கின்றனர்.

 நான் பார்த்த திருமணத்தில் திருமணத்தன்று தாலி கட்டி முடிந்ததும் இவர்கள் ஒன்பது பேரையும் முதலில் வரிசையாக உட்கார்த்தி வைத்து சமையல்காரர்கள் சமைத்த சாப்ப்பாடையே போட்டுச் சாப்பிடச் சொல்லிப் பின்னர் அனைவருக்கும் தாம்பூலம் கொடுத்தார்கள். இதே போல் குஜராத்தியர் ஒருத்தரின் சதாபிஷேஹத்திலும் நடந்தது.  இதற்கு அவர்கள் கூறிய கர்ணபரம்பரைக் கதை.  ஏழு பிள்ளைகளைப் பெற்ற தாய் ஒருத்தி தன் ஏழு மருமகள்களையும் வேலை வாங்கிக் கொண்டு சாப்பாடு போடாமல் கண்டிப்பாக இருந்தாளாம்.  அவள் ஒருநாள் வெளியே சென்றிருக்கையில் மருமகள் அனைவரும் கூடி மாமியாருக்குத் தெரியாமல் நல்ல சாப்பாடு சமைத்துச் சாப்பிடும் வேளையில் மாமியார் வந்துவிட என்ன செய்வது எனப் புரியாமல் மருமகள்கள் பூஜை அறையில் அம்பிகையைப் பிரார்த்திக்க மாமியார் கண்ணெதிரே ஏழு பேரும் அம்மனோடு ஐக்கியம் அடைந்ததார்கள் எனச் சொல்லப் படுகிறது.  ஆகவே இதற்கு ஆசாரம் பார்க்க வேண்டாம் என்றும் நல்ல சாப்பாடு சாப்பிட நினைத்த மருமகள்களை நினைத்துக் கல்யாணச் சாப்பாடைப் போடுகிறார்கள் என்றும் கூறினார்கள்.  மேலும் அவர்களில் எவரும் சாஸ்திரோக்தமாக அல்லது சம்பிரதாயமாக மடிசார் வைத்துக் கட்டிக் கொள்ளவில்லை. விதவையை அழைப்பது அந்த மாமியாரை நினைத்து என நினைக்கிறேன். பிரமசாரி எதற்கு என்பது அவர்களுக்கும் சொல்லத் தெரியவில்லை.

ஆனால் பொதுவாக சுமங்கலிப் பிரார்த்தனை என்றால் சாமான்கள் கூட வீட்டில் ஏற்கெனவே வாங்கி வைத்திருப்பதைப் பயன்படுத்த மாட்டார்கள்.  தனியாகத் தான் வாங்குவது வழக்கம். சிராத்தம் அன்று எவ்வளவு சிரத்தையுடன் செய்கின்றார்களோ அதற்குச் சற்றும் குறையாமல் நடக்கும்.  ஆனால் சமையல் மட்டும் சிராத்த சமையலாக இல்லாமல் தேங்காய், துவரம் பருப்பு, மிளகாய், தனியா சேர்த்துச் செய்வார்கள்.  ஆனால் பொடியெல்லாம் வீட்டில் இருக்கும் பொடிவகைகளைப் பயன்படுத்த மாட்டார்கள்.  சில வீடுகளில் காய்களைக் கூட முதல் நாளே நறுக்கி வைக்கக் கூடாது.  சுமங்கலிப் பிரார்த்தனை அன்றுதான் நறுக்க வேண்டும். அதோடு பாயசம் இனிப்புப் போன்றவற்றில் வெல்லமே சேர்ப்பார்கள்.  சர்க்கரை சேர்க்க மாட்டார்கள். காய்களும் முட்டைக்கோஸ், பீன்ஸ், காரட், முள்ளங்கி, முருங்கைக்காய், உருளைக்கிழங்கு போன்ற காய்களைத் தவிர்த்துவிடுவார்கள்.  கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், புடலங்காய், சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, வாழைத்தண்டு, கொத்தவரை, பறங்கி, பூஷணி போன்ற நாட்டுக்காய்களே சேர்க்கப்படும். பாகற்காய் கசப்புச் சுவை என்பதால் சுமங்கலிப் பிரார்த்தனையில் சேர்ப்பதில்லை. வாழை, மா, பலா போன்ற முக்கனிகளும் அந்த அந்தப் பருவத்தை ஒட்டிச் சேர்ப்பதுண்டு.

சமையலில் அரிசியோடு தேங்காய் சேர்த்த  பாயசம், அல்லது பருப்புப் பாயசம், தயிர்ப்பச்சடி, மாங்காய்ப் பச்சடி, வாழைக்காய்க் கறி அல்லது பொடிமாஸ், ஒரு பருப்பு உசிலி, ஒரு கூட்டு, கலந்த சாதம், சேனை வறுவல், வடை, அதிரசம் அல்லது போளி அல்லது சுய்யம்/சுகியம்/சுய்யன் அல்லது சொஜ்ஜி அப்பம், அன்று புதிதாகப் போடப்பட்ட ஊறுகாய் அல்லது தேங்காய்த் துவையல், கொத்துமல்லித் துவையல், கலந்த சாதம் ஒன்று, பருப்பு, நெய், பிட்லை, மோர்க்குழம்பு, ரசம், மோர் ஆகியன இடம் பெறும்.  எங்கள் புகுந்த வீட்டில் அன்றைய தினம் கறி வகைகளே செய்யக் கூடாது. எல்லாக் காய்களிலும் கூட்டு வகைகள் தான் செய்ய வேண்டும். தனிக்கூட்டு என்றதொரு புளிக்கலவையைச் செய்து வைத்துக் கொண்டு, காய்களை வேக வைத்து அதில் தனித்தனியாகப் போட்டுக் கலக்க வேண்டும்.  ஆகவே பிட்லை இருக்காது.  மோர்க்குழம்பு மட்டுமே.  இந்தத் தனிக்கூட்டு செய்முறையை என்னுடைய சாப்பிடலாம் வாங்க வலைப்பக்கத்தில் காணலாம்.  சுமங்கலிப் பிரார்த்தனைக்கு நல்ல நாள் மற்றும் கிழமைகள் பார்க்க வேண்டும். ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஏற்றதாக இருந்தாலும் அன்றைய தினம் யோகம், திதி போன்றவையும் நல்லதாக இருக்க வேண்டும்.  மாசாமாசம் வரும் கரிநாளாக இருக்கக் கூடாது.


Geetha Sambasivam

unread,
Jul 7, 2013, 4:43:20 AM7/7/13
to மின்தமிழ்
 சுமங்கலிப் பிரார்த்தனைக்கு நாள் பார்த்தாச்சு!
சுமங்கலிப் பிரார்த்தனைக்கு நாள் பார்த்தாச்சு.  அடுத்து இதுக்குப் புடைவை எடுக்க வேண்டும்.  இதற்கும் நாள் பார்த்துத் தான் எடுப்பார்கள்.  அநேகமாய்க் கல்யாண ஜவுளி எடுக்கும் நல்ல நாளிலேயே நல்ல நேரத்தில் சுமங்கலிப் பிரார்த்தனைப் புடைவயும் எடுத்து விடுவார்கள்.  பிராமணர்களில் ஒன்பது கஜம் புடைவை தான் எடுக்க வேண்டும். இதற்கு அரக்கு, மஞ்சள், பச்சை,சிவப்பு, மெஜந்தா, ரோஜா நிறம் போன்ற கறுப்புக் கலக்காத வண்ணங்களிலேயே எடுப்பார்கள். கூடவே ரவிக்கைத் துணி எடுத்தாலும், புடைவையோடு சேர்த்து ரவிக்கைத் துணியை நனைத்து வைப்பதில்லை. ரவிக்கைத் துணியைத் தனியாகத் தான் கொடுப்பார்கள். பொதுவாக வீட்டில் பிறந்த பெண்களில் வயது முதிர்ந்த சுமங்கலியான அத்தைக்குத் தான் இது போய்ச் சேரும்.  கல்யாணப் பிள்ளையின் அல்லது கல்யாணப் பெண்ணின் இந்த அத்தையைத் தவிர வேறு மூத்த சகோதரிகள் திருமணம் ஆகி இருந்தாலும் அவர்கள் மணையில் சுமங்கலிகளுள் ஒருவராக அழைக்கப்படுவார். புடைவைக்கு எதிரே போடும் இலையைத் தவிர்த்த முதலாம் இலையில் அத்தையை உட்கார வைப்பார்கள்.  இரண்டாம் இலையில் வயது வாரியாக வீட்டில் பிறந்த மற்றப் பெண்களை உட்கார வைப்பார்கள்.  வீட்டில் பெண்கள் இல்லை எனில் அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ள பெண்மணிகளை அழைப்பது உண்டு.  ஆனால் புடைவை கொடுப்பது வீட்டுப் பெண்ணுக்கே அநேகமாய் கொடுப்பார்கள்.  அப்படி இல்லாமல் சிலர் அந்நியப் பெண்ணுக்கு வாங்கிக் கொடுப்பதாய்ப் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது அந்நியப் பெண்ணுக்குக் கொடுக்கலாம்.

இதில் தஞ்சைப் பக்கம் ஒரே ஒரு புடைவை தான்.  புடைவை இலையும் ஒன்றே.  ஆனால் மதுரைப் பக்கம் இரண்டு இலை போடுவார்கள்.  அத்தைக்குப் புடைவை எடுத்திருக்கிற மாதிரி வீட்டில் பிறந்த அடுத்த தலைமுறைப் பெண்ணும் கல்யாணமாகி இருந்தால் அவளுக்கும் புடைவை எடுத்திருப்பார்கள்.  பெரியப்பா பெண், சித்தப்பா பெண் போன்றோருக்கும் வாங்கிக் கொடுக்கும் வழக்கம் உண்டு. கல்யாணம் ஆகாமல் இறந்த பெண்ணை நினைத்து ஆறு கஜம் புடைவையும், கன்யாக் குழந்தைக்குப் பாவாடை, சட்டையும் எடுப்பதும் உண்டு. திருநெல்வேலிக்காரர்கள் வீட்டில் பிறந்த பெண்களுக்குப் புடைவை வைத்துக் கொடுப்பதில்லை.  வீட்டின் மூத்த மாட்டுப் பெண்ணிற்கே அந்தப் புடைவை போய்ச் சேரும். 2, 3 மருமகள்கள் இருந்தால் அவர்களுக்கும் புடைவை வாங்கி நனைக்காமல் வழிபாட்டில் வைத்து எடுத்துக் கொள்வார்கள்.  புதிய மருமகள் கல்யாணம் ஆகி வந்திருந்தால் அவளுக்கு அந்தப் புடைவையைக் கொடுப்பதும் உண்டு. மேலும் திருநெல்வேலிக்காரர்களில் சிலர் பெண்ணின் கல்யாணம் என்றால் பெண் கல்யாணத்திற்கு முன்னாலும், பிள்ளையின் கல்யாணம் என்றால் மருமகள் வந்த பின்னரும் சுமங்கலிப் பிரார்த்தனை நடத்துவார்கள்.  மதுரை, தஞ்சைப் பக்கங்களில் இரண்டு கல்யாணங்களிலும் முன்னாடியே நடத்திவிடுவார்கள்.  தவிர்க்க முடியவில்லை எனில் தான் பின்னால் நடக்கும். அப்போது சுமங்கலிப் பிரார்த்தனைக்காக ஒரு ரூபாய்க் காசை முடிந்து வைப்பது வழக்கம்.

காலை எழுந்து குளித்துவிட்டு,  கால்படி அரிசி, ஒரு ரூபாய்க் காசு, ஒரு சின்ன உருண்டை வெல்லம், மட்டைத் தேங்காய் எல்லாம் பிள்ளையாருக்கு வைத்துவிட்டு, ஒரு வெள்ளைத் துணியை மஞ்சள் கலந்த நீரில் நனைத்துப் பிழிந்து சற்றே, உலர்த்தி அதில் ஒரு ரூபாய்க் காசை முடிந்து கட்டி அம்மன் படத்தருகே வைப்பார்கள்.  இது சுமங்கலிப் பிரார்த்தனை இன்னும் நடக்கவில்லை; நிறைவேற்ற வேண்டும் என்பதை நினைவு கூர வைக்கும்.  சுமங்கலிப் பிரார்த்தனையின் போது அந்தக் காசை எடுத்துபுடைவைக் கலத்தோடு வைப்பார்கள்.  பிள்ளையாருக்கு வைப்பது எதற்கு எனில் எந்தக் காரியம் செய்தாலும் முதல் வழிபாடு அவருக்கே என்பது தான். அரிசி, வெல்லம் வைக்காமல் வெறும் ஒரு ரூபாய்க் காசைப் பிள்ளையாரிடம் வைத்துவிட்டும் முடிந்து வைப்பது உண்டு. அவரவர் செளகரியம்.

நேற்றைய பதிவில் பாலக்காட்டுத் தமிழர்களிடையே சுமங்கலிப் பிரார்த்தனை அவ்வளவு வழக்கம் இல்லை என்று சொன்னதைத் திட்டவட்டமாக மறுக்கிறார் நண்பர் திரு எஸ்.நீலகண்டன்.  குமரி மாவட்டத்துக்காரரான இவர் பாலக்காட்டுத் தமிழர்கள் தஞ்சை, திருநெல்வேலி, கன்யாகுமரி மாவட்டங்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் தான்.  ஆகவே அவர்களிலும் சுமங்கலிப் பிரார்த்தனை நிச்சயம் உண்டு என்றும் அவர் வீட்டிலேயே அவர் பாட்டி இருந்த காலத்தில் பூவாடைப் பொண்டுகள் எனப் பூவாடைப் பானை, "பாவுள்ளில்" வைத்திருந்ததாகவும் அதில் ஆறு பெண்களின் பெயர்கள் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.  அதை யாரும் சாதாரணமாகத் தொடக்கூடாது என்ற ஆசாரக் கட்டுப்பாடுகள் இருந்ததையும் நினைவு கூர்கிறார்.  அதிசயப்பொண்டுகள் பற்றியும் கேள்விப் பட்டிருப்பதாயும் நேரில் பார்த்ததாகவும் கூறுகிறார்.  மேலும் பொண்டுகள் இலையில் உட்கார்ந்து சாப்பிடுவதும் நான் ஏற்கெனவே இந்தப் பதிவில் கூறி இருப்பது போல் சில வீடுகளில் வீட்டுப் பெண்கள் தான் உட்காருவார்கள் எனவும் சில வீடுகளில் அது இல்லை என்பதையும் தெரிவிக்கிறார்.

புடைவை எடுத்தாச்சு. மற்றப் பெண்களுக்குக் கொடுக்க ரவிக்கைத்துணி, வளையல்கள், சீப்பு, கண்ணாடி, (முகம் பார்க்குமாறு இருத்தல் நலம்)மருதாணி, மஞ்சள் கிழங்கு அல்லது மஞ்சள் பொடி பாக்கெட்,குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம், இயன்றால் தேங்காய் போன்றவற்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.  முன்பெல்லாம் இதை ஓலைப் பெட்டியில் போட்டு வைத்திருப்பார்கள்.  ரவிக்கைத் துணியோடு ஓலைப்பெட்டியை வைத்துக் கொடுப்பார்கள்.  சிலர் முறத்தில் வைத்துக்கொடுப்பார்கள்.  இப்போதைய ப்ளாஸ்டிக் யுகத்தில் எல்லாம் ப்ளாஸ்டிக் தான். எல்லாம் தயாராக முன் கூட்டியே வாங்கி வைத்து இருக்கணும். அடுத்து எண்ணெய் கொடுப்பது.  சுமங்கலிகளை வீட்டுக்கு அழைத்து  சுமங்கலிப் பிரார்த்தனை அன்று காலை எண்ணெய் கொடுப்பதே வழக்கம். ஒரு சிலர் இப்போதெல்லாம் அவரவர் வீட்டிலேயே குளித்துவிட்டு வருவதாய்ச் சொல்வதால் வீடுகளுக்குச் சென்று எண்ணெய் கொடுப்பார்கள்.  எண்ணெய், சீயக்காய், மஞ்சள் தூள் கொடுப்பார்கள்.  எல்லாம் கொடுத்துவிட்டுக் குங்குமம் கொடுத்து அழைக்க வேண்டும். சுமங்கலிப் பிரார்த்தனை நடக்கும் வீட்டிலேயே இருந்தால் பெண்களை அமர வைத்து மஞ்சள், குங்குமம் கொடுத்து எண்ணெய் கொடுப்பார்கள்.ஆனால் அதற்கு முன்னால் செய்ய வேண்டியது ஒன்று இருக்கிறது.

இவ்வளவு தேவையா என்பவர்களுக்கு!  இந்தக் காலத்தில் யாருக்கும் தாம்பூலம் கொடுக்கையில் என்ன வைப்பது என்றே தெரியவில்லை.  மேலும் ப்ளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்பது நலம் என்பதற்காகவும் சொல்லி இருக்கேன்.  அதற்கு ஓலைப் பெட்டி கொடுக்கலாம். எவர்சில்வருக்குப் பித்தளை பரவாயில்லை. முன்பெல்லாம் எவர்சில்வரை இரும்போடு சேர்த்தி எனச் சொல்வார்கள்.  இப்போது ப்ளாஸ்டிக்கும், எவர்சில்வரும் தான்! அதோடு பலருக்கும் அவரவர் குடும்ப வழக்கம் தெரியறதில்லை. எந்த ஊரைச் சேர்ந்தவங்கனு தெரிஞ்சால் அந்த வழக்கத்தையும் பின்பற்றலாம். என்ன செய்யணும், எப்படிச் சமைக்கணும் என்றெல்லாம் பலரும் என்னிடம் கேட்டிருக்கின்றனர். எல்லாருக்காகவுமே இதைப் பதிவு செய்கிறேன்.


Geetha Sambasivam

unread,
Jul 8, 2013, 12:01:59 AM7/8/13
to மின்தமிழ்
பொண்டுகள் எல்லாம் வந்தாச்சு! இலையைப் போடுங்க!
சாப்பாடு மெனு ஏற்கெனவே கொடுத்திருக்கேன்.  ஸ்ரீராம் கவனிக்கவில்லை போலிருக்கு.  அதோடு எல்லார் வீட்டிலும் திரட்டுப் பால், போளி பண்ண மாட்டார்கள். திரு வைகோ அவர்கள் போளியும், திரட்டுப் பாலும் கேட்கிறார்.  இன்னும் கல்யாணத்துக்கே திரட்டுப்பால் பண்ணியாகவில்லை. :)))))


சுமங்கலிப் பிரார்த்தனை அன்று காலை சுமங்கலிப் பிரார்த்தனைக்குக் கொடுக்கவென வாங்கிய புடைவையை நனைக்க வேண்டும்.  அதுக்கு முன்னாடி புடைவையைக் கட்டிக் கொண்டு ஒரு பெண் அமர்ந்திருப்பது போல வைக்க வேண்டும்.  இதோ இப்படி. ஒன்பது கஜம் புடைவையை அதை எப்படிக் கட்டிப்பாங்களோ அப்படிக் கொசுவித் தலைப்பைச் சுத்திக் கொண்டு வந்து வைக்க வேண்டும்.  மற்றப் புடவைகள் அநேகமாய்ப் புதிதாகவே கொடுப்பார்கள். ஆகவே அவற்றை வைக்க வேண்டாம். என் பிறந்த வீட்டில் ஆறு கஜம் புடைவையும் , அதே போல் பாவாடை, சட்டையும் நனைக்க வைப்பதுண்டு என்பதால், அவற்றை இங்கே காணலாம்.

Inline image 1


எண்ணெய் கொடுக்கும் முன்னர் முதலில் அந்தப் புடைவையில் சந்தனம், குங்குமம் இட்டு,  மூன்று சொட்டு எண்ணெய் தெளித்து, சீயக்காய் கரைத்துத் தெளித்து, மஞ்சளும் அதே போல் தெளிக்க வேண்டும். இது நம் வீட்டில் மறைந்த சுமங்கலியே நேரில் வந்து வாங்கிக் கொண்டதாக ஐதீகம்.  அதன் பின்னரே அந்தப் புடவையை நனைத்து உலர்த்துவார்கள். அதே போல் ஆறு கஜம் புடைவை, பாவாடை, சட்டைக்கும் செய்து நனைக்க வேண்டும். இன்றைய தினம் முதலில் சாப்பிடுவது பெண்களே. :)) பெண்களுக்கே முன்னுரிமை.  கிழக்கு, மேற்காகக் கோலங்கள் போட்டு இலை போட வேண்டும். புடைவைக் கலத்தின் முன்னர் அவரவர் வீட்டு வழக்கம்போல் ஒரு இலையோ அல்லது இரண்டு இலைகளோ போடவேண்டும்.  மற்றப் பெண்களுக்கும் வரிசைக்கிரமமாக இலை போட்டுவிட்டுப் பெண்களுக்கு மஞ்சள் கொடுத்துக் கால் அலம்பி வரச் சொல்ல வேண்டும்.  வரும் பெண்களுக்குப் பூ, சந்தனம், குங்குமம் கொடுப்பார்கள். சில வீடுகளில் பொண்டுகள் இலை போட்டுப் பரிமாறும்வரையிலும் பெண்கள் ஒரு தனி அறையில் இருப்பார்கள்.  பின்னர் அவரவர் குடும்பத்தில் மறைந்த சுமங்கலிகளின் பெயரை வருடம், வயது வாரியாக எழுதி வைத்து வாசித்துவிட்டு அனைவரும் வந்து சாப்பிட்டுவிட்டு ஆசீர்வதிக்கும்படி கேட்டுக் கொண்டு கையைத் தட்டி அழைப்பார்கள்.


Inline image 2

ஆனால் பொதுவாக இலை போட்டுப் பரிமாறிவிட்டே பெயர்களைச் சொல்லும் வழக்கம் இருந்து வருகிறது.  பரிமாறுகையில் முதலில் புடைவைக்கலத்தில் பரிமாற வேண்டும்.  பின்னர் வரிசையாக வரும் எந்த உணவாக இருந்தாலும் புடைவைக் கலத்துக்குப் பரிமாறியே பின்னர் மற்றவர்களுக்குப் பரிமாற வேண்டும். அதோடு முடிக்கையில் வடக்குப் பக்கம் உட்கார்ந்திருக்கும் நபரிடம் முடிக்க வேண்டும். தெற்குப் பக்கம் முடிப்பது ஏற்றுக் கொள்வதில்லை. பின்னர் வீட்டின் மூத்த மருமகள் கையில் நீரை எடுத்துக் கொண்டு புடைவைக் கலத்தில் ஆரம்பித்துச் சுற்றிக் கொண்டு வந்து பின்னர் புடைவைக் கலத்திலேயே முடிக்க வேண்டும்.  வீட்டின் ஆண்கள், கல்யாணப் பிள்ளை ஆகியோர் நமஸ்கரிப்பார்கள்.  கல்யாணப் பெண் வீட்டில் நடக்கையில் அந்தப் பெண்ணும் ஒரு கன்யாப் பெண்ணாக அமர்ந்திருப்பாள். அதன் பின்னரே சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். புடைவைக் கலத்தில் இடப்படும் உணவைப் பின்னர் சுமங்கலிப் பிரார்த்தனை செய்யும் வீட்டின் மருமகள்கள் பிரசாதமாக எடுத்துக் கொண்டு பகிர்ந்து உண்பார்கள்.  சாப்பிட்டு முடிந்ததும், வித விதமான உணவுகளைச் சாப்பிட்டதற்கு செரிமானத்துக்காகச் சுக்கு, வெல்லம் சேர்த்துப் பொடி செய்து வைத்திருப்பார்கள் அதைக் கொடுப்பார்கள். பின்னர் பானகம், நீர் மோர் கொடுப்பார்கள்.  நேரம் நல்ல நேரமாக இருந்தால் அப்போதே வெற்றிலை, பாக்கு வைத்துக் கொடுத்துவிடுவார்கள்.  இல்லை எனில் நல்ல நேரம் வரும் மட்டும் தாமதித்துப் பின்னர் கொடுப்பார்கள்.

புடைவை கொடுத்ததும் அதைக் கட்டிக் கொண்டு வந்த பின்னர் அனைவருமே அந்தப் பெண்மணியை வயது வித்தியாசம் இல்லாமல் நமஸ்கரிப்பார்கள்.  அன்றைய தினம் அந்தப் பெண்மணி தான் அந்த வீட்டின் வயதான சுமங்கலியாகக் கருதப்படுவாள். மற்றப் பெண்களுக்கும் வாங்கிய ரவிக்கைத்துணியோடு மஞ்சள், வெற்றிலை, பாக்கு, குங்குமம், வளையல், சீப்பு, கண்ணாடி, மருதாணி போன்றவற்றோடு அவர்களால் இயன்ற பணமும் வைப்பார்கள். அது ஒரு ரூபாயிலிருந்து 5 ரூபாய் வரை இருக்கும்.  அன்றிரவு பொண்டுகளில் சாப்பிட்ட அனைவரும் எந்த உணவும் எடுத்துக்கொள்ளத் தடை இல்லை. (வெங்காயம், பூண்டு சேர்க்காமல்)  ஒரு சில கல்யாண வீடுகளில் மறுநாளே சமாராதனை செய்வார்கள். சிலர் சனிக்கிழமை, வியாழக்கிழமை என நாள் பார்த்துச் செய்வார்கள்.  பொதுவாகக் கல்யாணத்துக்கு நாள் நெருங்கி வந்தால் சுமங்கலிப் பிரார்த்தனைக்கு மறுநாளே செய்துவிடலாம்.


pudavi2.jpg
pudavai.jpg

Geetha Sambasivam

unread,
Jul 11, 2013, 9:25:28 PM7/11/13
to மின்தமிழ்
//தஞ்சாவூர்காரர் திருநெல்வேலியில் சம்மந்தம் கொண்டாலோ. அல்லது வேறு வேறு பழக்க வழக்கங்கள் உறவு நாடிச் சென்றாலோ கன்ஃப்யூஷன் ஏற்படாதா. ? எந்த ஊர் வழக்கம் செல்லுபடியாகும். இது சுமங்கலிப் பிரார்த்தனைக்கு அல்ல. மற்ற நடைமுறைகளுக்காக என்று கொள்ளும்போது யார்காம்ப்ரமைஸ் செய்வது.? எனக்கும் இது எல்லாம் தேவையா என்று கேள்வி உண்டு.//

ஜிஎம்பி சார் கேட்டிருக்கும் கேள்வி இது. ஒரு மாவட்டம் விட்டு இன்னொரு மாவட்டத்திலே திருமணம் செய்து கொண்டாலே குழப்பம் ஏற்படுமே என்று சந்தேகம் கொள்கிறார். முன்னெல்லாம் அருகிலுள்ள கிராமங்களிலேயே சம்பந்தம் செய்து கொள்வார்கள் தான்.  இல்லை என்று சொல்லவில்லை.  ஆனால் அதே சமயம் மிக அபூர்வமாக வேறு மாவட்டங்களிலும் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது.  என்னோட பெரியம்மா (அம்மாவின் அக்கா) தஞ்சை ஜில்லாக்காரர்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். அதற்கும் முன்னரே திருநெல்வேலிக்காரர்கள் பெண்ணை என்னோட பெரியப்பா ஒருத்தர் (அப்பாவின் அண்ணா) திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.  இதிலே எந்த ஊர் வழக்கம் செல்லுபடியாகும் என்பதற்கான கேள்வியே எழாது. பெண் எந்த ஊர்க்காரர்களின் மருமகளாகப் போகின்றாளோ அந்த ஊரின் , அந்த வீட்டின் வழக்கங்களும், நடைமுறைகளுமே அவள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படும்; கடைப்பிடிக்கப்பட வேண்டும். 

தினசரி சமையலில் வேண்டுமானால் பிறந்த வீட்டுப் பழக்கப்படி ஒரு நாள், புகுந்த வீட்டுப் பழக்கப்படி இன்னொரு நாள்னு சமைச்சுக்கலாம்.  தப்பில்லை.  ஆனால் முக்கியமான சிராத்தம், சமாராதனை, சுமங்கலிப் பிரார்த்தனை, ஶ்ரீமந்தம் போன்றவற்றில் புகுந்த வீட்டு நடைமுறைகளையே கடைப்பிடிக்க வேண்டும். அது தான் முறை. நான் பிறந்தது, வளர்ந்து படித்தது எல்லாம் மதுரை.  திருமணம் ஆகிப் போனதோ பழைய தஞ்சை மாவட்டத்துக் கும்பகோணம் அருகிலுள்ள கிராமம்.  பட்டிக்காடு என்றால் பட்டிக்காடு.  மின்சாரமே வரலை அப்போது.  கை விளக்குகள் தான்.  விறகு அடுப்பு தான்.  அதுவும் தென்னை ஓலை, மட்டைகளைப் போட்டு எரிப்பார்கள்.  ஏனெனில் அது தான் சுலபமாகக் கிடைக்கும்.  விறகுகள் இருந்தாலும் அதிகம் தென்னை மட்டைகள் தான். இதுதான் இப்படி என்றால் பேச்சிலும் நிறையவே மாறுதல்.  பள்ளிக்கூடத்தை, "பள்டம்" என்று சொல்வார்கள். கற்றுக்கொள்கிறேன், என்பதை, "கத்திக்கறேன்" என்பார்கள்.  இதெல்லாம் என்னனு புரியவே எனக்கு ஆறு மாசமாச்சு. ஆனால் இதெல்லாத்தையும் விடப் பழக்கங்கள் முற்றிலும் மாறுபட்டவை. அதுக்காகவெல்லாம் பயந்தால் முடியுமா? 

முக்கியமான சமயங்களில் புக்ககத்துப் பழக்கத்தையே கடைப்பிடிப்பேன். கடைப்பிடிக்கிறேன்.  இப்போது எனக்குப் புகுந்த வீடு, பிறந்த வீடு இரண்டு பக்கத்துப் பழக்கமும் நன்றாகவே தெரியும். ஆனால் இரண்டுக்கும் எக்கச்சக்கமாக வித்தியாசம்.   இதுக்காக யார் சமரசம் பண்ணிக்கிறது என்ற போட்டியெல்லாம் நினைச்சுக் கூடப் பார்த்ததில்லை.  முக்கியமான நேரங்களில் புக்ககத்து வழக்கப்படி செய்துவிட்டால் அப்புறம் நான் இருக்கிறபடியே இருக்கலாம் என்பதே  என் கருத்து. குல தெய்வ ஆராதனை, சிராத்தம், சமாராதனை, சுமங்கலிப் பிரார்த்தனை போன்றவற்றில் என் பிறந்த வீட்டு வழக்கத்தைக் கொண்டுவர மாட்டேன்.  இப்போதெல்லாம் நாடு விட்டு நாடு, மாநிலம் விட்டு மாநிலம் என்றெல்லாம் திருமணம் செய்து கொள்ளும் காலமாகி விட்டது.  உலகம் மிகக் குறுகி வருகிறது. கொஞ்சம் ஈகோவைக் கைவிட்டால் போதும்.  எல்லாம் நம் வசமே. 

மற்றபடி சுமங்கலிப் பிரார்த்தனை தேவையா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது எனப் புரியவில்லை.  எத்தனையோ தலைவர்களின் நினைவு நாட்கள், மதத் தலைவர்கள் நினைவு தினங்கள், அரசியல்வாதிகளின் நினைவு தினங்கள், சினிமா நக்ஷத்திரங்களின் நினைவு தினங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.  இது நம் நாட்டில் மட்டுமல்ல.  உலகம் முழுதும்.  அப்படி இருக்கையில் நம் குடும்பத்தில் பிறந்து மறைந்த அல்லது நம் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு வாழ்ந்து மறைந்த சுமங்கலிப் பெண்களை நினைவு கூர்தல் எந்த விதத்திலும் தவறில்லை என்பது என் கருத்து.  இவ்வளவு விமரிசையாகப் பெரிதாகப் பண்ண முடியாவிட்டாலும் அவர்களை நினைத்துக் குறைந்த பக்ஷம் ஒரே ஒரு பெண்ணிற்காவது சாப்பாடு போட்டுத் துணிகள் வாங்கித் தரலாம்.  நமக்கு இஷ்டமில்லை எனில் அத்தைகளுக்குக் கொடுக்காமல் வேறே யாரானும் ஏழை அந்நியப் பெண்ணிற்குக் கொடுக்கலாம்.  துணி கொடுத்தால் பிணி தீரும் என்பார்கள்.

Geetha Sambasivam

unread,
Jul 11, 2013, 9:27:55 PM7/11/13
to மின்தமிழ்
திருப்பதி மலை வாழும் வெங்கடேசா, அலர்மேல் மங்கை மகிழும் மணாளா!

சுமங்கலிப் பிரார்த்தனையில் புடைவை வைக்கும் கலத்தில் வீட்டில் உள்ள அனைவரின் நகைகளும் போட்டு அலங்கரிப்பதோடு திருமணப் பெண் வீட்டில் என்றால் பெண்ணின் நகைகளும், பிள்ளை வீட்டில் என்றால் கல்யாணப் பெண்ணிற்கு நகை வாங்கி இருந்தால் அதுவும், கூறைப்புடைவையும் வழிபாட்டில் வைக்கப்படும்.  இது எல்லாருக்கும் வழக்கம் இல்லை.  மிகச் சிலர் வீடுகளில் மட்டுமே வழக்கமாக இருக்கிறது.  ஆனால் வீட்டினரின் நகைகளைப் போட்டு அலங்கரிப்பது உண்டு.  மேலும் தஞ்சை ஜில்லாவில் அத்தைக்குப் புடைவை கொடுத்த பின்னர் அந்தப் புடைவையை அவர் கட்டிக் கொண்டு வந்து அனைவரும் நமஸ்கரித்த பின்னர் புடைவையை அவரிடம் அன்றே கொடுப்பதில்லை.  அவர் புடைவையை மாற்றிய பின்னர் சுமங்கலிப் பிரார்த்தனையில் வழிபட்ட புடைவையைக் கொடியில் போடுவார்கள்.  அன்றிரவு முழுதும் அந்தப் புடைவை கொடியில் இருக்கும்.  குடும்பத்துச் சுமங்கலிகள் அனைவரும் அன்றிரவு வந்து அந்தப் புடைவையை எடுத்துக் கட்டிக்கொள்வதாக ஐதீகம்.

Inline image 1

அடுத்து சமாராதனை.  பொதுவாக வெங்கடாசலபதி சமாராதனையே நடைபெறும்.  என்றாலும் மிகச் சிலர் வீடுகளில் அவரவர் குல தெய்வ ஆராதனையையே சமாராதனையாக நடத்துவார்கள். இது சனிக்கிழமைகளிலேயே நடைபெறும்.  என்றாலும் பல சமயங்களிலும் கல்யாணம் நடைபெறப் போகும் கிழமையைப் பொறுத்து திங்கள், புதன், வியாழன் போன்ற கிழமைகளில் வைப்பார்கள்.  சனிக்கிழமை தான் செய்ய வேண்டும் என்பவர்கள் கல்யாணத்திற்குச் சில நாட்கள் முன்னர் வரும் சனிக்கிழமையில் செய்துவிடுவார்கள். முன்பெல்லாம் ஒவ்வொரு வருடமும் வரும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் வீட்டுக்கு வீடு சமாராதனை நடைபெறும். சாப்பாடு வருபவர் எல்லாருக்கும் போடுவார்கள்.  சமாராதனைச் சாப்பாடு என்றே விசேஷமாகச் சொல்லப் படும்.

சாப்பாடு மெனு: சர்க்கரைப் பொங்கல்(இது தான் மிக முக்கியம்) தயிர்ப்பச்சடி, இனிப்புப் பச்சடி, வாழைக்காய்ப் பொடிமாஸ் அல்லது பொடி போட்ட கறி,  அவரைக்காய், முட்டைக்கோஸ் போன்ற காய்களில் தேங்காய் போட்ட கறி ஒன்று, பருப்பு உசிலி பீன்ஸ் அல்லது கொத்தவரையில். அவியல். அவியல் இல்லை எனில் கத்தரிக்காய்ப் பிட்லை, மோர்க்குழம்பு இருக்கும். ஒரு கலந்த சாதம், சனிக்கிழமை எனில் எள்ளுச் சாதம் தான் இருக்கும். அப்பளம் வீட்டில் செய்தது எனில் சேர்ப்பார்கள்.  சேனை அல்லது உருளை வறுவல், உளுந்து வடை,  ஊறுகாய் அன்று புதிதாய்ப் போட்டது, அவியல் என்றால் சாம்பார். பிட்லை என்றால் மோர்க்குழம்பு எனச் செய்வார்கள். ரசம், மோர்.  அன்று காலையே வழிபாடு நடைபெறும் இடத்தில் அல்லது பூஜை அறையில் என்றால் அங்கே மாக்கோலம் போட்டு படங்களைத் துடைத்துப்புஷ்பங்கள் சார்த்தி அலங்காரம் செய்வார்கள்.  பூஜைக்கு வேண்டிய மஞ்சள், குங்குமம், கற்பூரம், ஊதுபத்தி, சந்தனம், உதிரிப் பூக்கள், மாலை, துளசி, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் போன்றவை தயார் செய்வார்கள்.  


சில வீடுகளில் வெங்கடாசலபதிக்கும் மாவிளக்குப் போடுவதுண்டு.  அவர்கள்  மாவு இடித்து, வெல்லம், ஏலக்காய் கலந்து தயார் செய்து வைப்பார்கள்.  சாஸ்திரிகள் தான் வந்து பூஜை செய்யும் வழக்கம் இருந்தது.  அதிலும் முன்னெல்லாம் நான்கு அல்லது ஐந்து வைதீகர்கள் வந்து சங்கல்பம் சொல்லி, வீட்டினரின் கோத்திரம், பெயர், நக்ஷத்திரங்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு அனைவரின் பெயரையும் சொல்லிச் சங்கல்பம் செய்து வைத்து, சஹஸ்ரநாமம், அஷ்டோத்திரம் சொல்லிப் பூக்களாலும், துளசியாலும் அர்ச்சனை செய்வார்கள்.  இப்போது யாரும் வருவதில்லை.  வந்தாலும் வீட்டிலேயே சமைத்தாலும் வைதீகர்கள் சாப்பிடுவதில்லை. ஆகவே வீட்டு எஜமானரே சஹஸ்ரநாமம் படித்துப்பூஜை செய்து, அக்கம்பக்கத்து நண்பர்கள், உறவினர்கள் இவர்களில் ஐந்து ஆண்களை அல்லது நான்கு ஆண்களை வைதீகர்களாக மானசீகமாக நினைத்து வேண்டிக் கொண்டு முதல் பந்தியில் அமர வைப்பார்கள்.  இதற்கும் பொண்டுகள் முன்னாடி வைதீகர்களோடு சேர்ந்து சாப்பிட அமர வைப்பது உண்டு.  அதற்கு அலர்மேலு மங்காப் பொண்டுகள் என்று பெயர்.  சுமங்கலியை எண்ணெய்தேய்த்துக் குளிக்கச் செய்து, மடிசார் கட்டும் வழக்கம் இருந்தால் மடிசாருடன் பூஜை செய்து கொண்டிருக்கும்  சுவாமி படம் இருக்கும் இடம்/அல்லது பூஜை அறையில் வலப்பக்கமாகக் கோலம் போட்டு இலை போடுவார்கள்.  அன்று அந்தப் பெண்மணி அலர்மேல் மங்கையாக அவதாரம் எடுத்திருப்பார்.  வைதீகர்களோடு சேர்ந்து அந்தப் பெண்மணிக்கும் சாப்பாடு போடுவார்கள்.

சாப்பாடு முடிந்து வைதீகர்கள் ஆசீர்வாதம் பண்ணி அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், தக்ஷணை கொடுத்து முடிந்ததுமே மற்றவர்கள் சாப்பிடுவார்கள். கூடவே அலர்மேல் மங்காவுக்கும் அதே போல் வெற்றிலை, பாக்கு, தக்ஷணை உண்டு. இது எல்லாம் முடிஞ்சு அநேகமாய் மறுநாளே சத்திரத்துக்கு அல்லது கல்யாணம் நடக்கும் வீட்டுக்குப்போகிறாப் போல் அமையும்.  ஆகவே நாமும் அடுத்துப் போகப் போவது கல்யாணச் சத்திரத்துக்கே. 
வெங்கி.jpg

Geetha Sambasivam

unread,
Jul 13, 2013, 9:10:34 AM7/13/13
to மின்தமிழ்
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேரு விளங்க இங்கு வாழணும்


Inline image 1

பெரும்பாலும் திருமணங்கள் பெண் வீட்டிலேயே நடந்திருப்பதாகவே தெரிய வருகிறது.  இது குறித்துச் சங்க காலத்திலேயே திருமணம் நிகழுமிடம் பெண் வீடாகக் காட்டுகின்றனர். நல்ல நாளிலும் அதிகாலைப் பொழுதிலும் மணங்கள் நடைபெற்று வந்துள்ளன.  ஐங்குறுநூறு 399 ஆம் பாடலில் தலைவி உடன்போக்கு என்று சொல்லும் தலைவனோடு திருமணத்துக்கு முன்னரே வீட்டை விட்டுச் சென்றுவிடும் நிகழ்வு நடந்த பின்னரும் தலைவியின் தாய் தலைவனின் தாயிடம், உங்கள் வீட்டில் சிலம்பு கழித்தல் சடங்கு நடைபெற்று முடிந்துவிட்டது  ஆகையால் வதுவைச் சடங்கை எங்கள் வீட்டில் நடத்தவேண்டும் என்று கேட்பதாகக் கூறுகிறது.
399.
நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம்மனை வதுவை நன்மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ மற்றே வென்வேல்
மையற விளங்கிய கழலடிப் 
பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே.

முன்பெல்லாம் தாலி அல்லது திருமாங்கல்யம் என்பது இல்லை என்றே கூறுகின்றனர்.  இது எப்போது ஆரம்பித்தது என்று கூறமுடியவில்லை என்றாலும் ஆரம்பித்த காலத்தில் தால பத்ரம் என்னப்படும் பனை ஓலையையே ஒரு அடையாளமாகக் கட்ட ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது. தாலம் என்ற பனை ஓலையினால் செய்ததையே கட்டி வந்தவர்கள் அது அடிக்கடி பழுது ஆனதால் நிரந்தரமாக இருக்க உலோகங்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததாகவும், பின்னர் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கியதாகவும் தெரியவருகிறது.  ஆனால் தாலியின் அடையாளம் பொன்னோ, வெள்ளியோ அல்ல.  வெறும் ஒரு மஞ்சள்கிழங்கை எடுத்துக் கயிற்றால் முடிச்சுப் போட்டுவிட்டுக் கழுத்தில் கட்டினாலே அதுவும் தாலி தான். மஞ்சளைக் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சளை ஏற்றி இருப்பார்கள். தாலியின் உண்மையான அர்த்தமே மஞ்சளைக் கயிற்றில் முடிந்து கட்டுவதில் தான் உள்ளதே தவிர, எத்தனை பவுன் தங்கம் அல்லது செலவு ஆனது என்பதில் இல்லை.  சங்க காலத்தில் மகளிர் அணிந்த தாலியை வேப்பம்பழம் போல் இருந்ததால் இதைப் புதுநாண் என்று சொன்னதாகக் குறுந்தொகை 67 ஆம் பாடல் குறிப்பிடுகிறது.

67. பாலை - தலைவி கூற்று

உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்
பொலங்கல ஒருகா சேய்க்கும்
நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே. 
-அள்ளூர் நன்முல்லையார்.

 தாலி அணிந்த பெண்டிர் "வாலிழை மகளிர்" என வெள்ளி வீதியார் என்னும் புலவரால் குறிப்பிடப் படுகிறார்.  குறுந்தொகை 386

386. நெய்தல் - தலைவி கூற்று

வெண்மணல் விரிந்த வீததை கானல்
தண்ணந் துறைவன் தணவா ஊங்கே
வாலிழை மகளிர் விழவணிக் கூட்டும்
மாலையோ அறிவேன் மன்னே மாலை
நிலம்பரந் தன்ன புன்கணொடு
புலம்புடைத் தாகுதல் அறியேன் யானே. 
-வெள்ளிவீதியார்.

 சிலப்பதிகாரத்திலும் கோவலன் கண்ணகிக்குத் தாலி கட்டியதாயும் தெரிய வருகிறது.

நறுமலர்க் கோதைநின் நலம்பா ராட்டுநர்
மறுவின் மங்கல அணியே அன்றியும்
பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்

ஆகவே தாலி கட்டும் வழக்கம் இருந்திருந்திருக்கிறது என்பதும் தெரிய வருகிறது.  ஆனாலும் இதற்கு முக்கியத்துவம் அவ்வளவாய் இல்லை என்றே சொல்லலாம். அது குறித்துப் பின்னர் பார்க்கலாம். முற்காலத்துத் திருமணங்களிலும் கூட தாலி கட்டுவதை ஒரு அடையாளமாகவே கொண்டிருக்கின்றனர்.  ஆனாலும் அந்தத் தாலியைச் செய்யும் போது நல்ல நாள் பார்த்தே செய்திருக்கின்றனர். தாலி எனப்படும் திருமங்கல்யம் பெண் வீட்டிலும் ஒன்று, பிள்ளை வீட்டிலும் ஒன்று எனப் போடுவார்கள்.  சிலருக்கு ஒரே திருமங்கல்யம் தான் என எண்ணுகிறேன். என்றாலும் இதற்குப் பொன் உருக்குவதற்கு நல்ல நாள் பார்த்தே வீட்டுக்கு ஆசாரியை வரவழைத்துப் புத்தம் புதிய பொற்காசைக் கொடுத்து வீட்டில் வைத்து உருக்குவார்கள்.  அநேகமாகப் பிள்ளை வீட்டிலேயே நடக்கும் இந்தச் சடங்கு இப்போதெல்லாம் பெண் வீட்டில் கூட நடப்பதில்லை.  நகைக்கடையில் நல்ல நாள் பார்த்து ஆர்டர் கொடுப்பதோடு முடிகிறது.  ஆனாலும் பொன்னுருக்குவது என்பது என் கல்யாணத்தில் எங்கள் வீட்டில் வைத்து நடந்தது.

மணமகன் வீட்டில் நடத்துவது என்றால் ஆசாரிகள் தங்கத்தை உருக்கும் அடுப்புடன் வருவார்.  அதில் உமியோடு சிரட்டைக்கரியும் போடப் பட்டிருக்கும். கல்யாணப் பெண் அன்று மணமகன் வீட்டிற்குச் செல்ல மாட்டாள்.  ஆனால் பெண்ணின் உறவினர்களில் முக்கியமானவர்கள் கலந்து கொள்வார்கள்.  இதற்கும் பெண் வீட்டிலிருந்து சீர் கொடுப்பதுண்டு.  ஏதேனும் இனிப்பு வகை கொண்டு போவார்கள். மணமகன் வீட்டு வாசலில் அல்லது பொன்னுருக்குதல் நடைபெறும் இடத்தில் நிறைகுடம், குத்துவிளக்கு, பன்னீர்ச் செம்பு, குங்குமம், சந்தனம், தேங்காய், மாவிலைக் கொத்து, வெற்றிலை, பாக்கு, பழ வகைகள், மஞ்சள் கிழங்கு, தேசிக்காய் அறுகம்புல், புஷ்பவகைகள், ஒரு சட்டியில் நீர், விபூதி, குங்குமம், மஞ்சள் பொடி பிள்ளையார் பிடிக்க, சாம்பிராணி, கற்பூரம், மணி போன்றவை முக்கியம் ஆகும்.

பொன்னுருக்குவதற்காகப் புத்தம்புதிய தங்க நாணயம் வாங்கி வைத்திருப்பார்கள்.  அவரவர் குல வழக்கப்படி குலதெய்வத்தின் காலடியில் வைத்து எடுத்து வருவதும் உண்டு. அதைப் பொன்னுருக்கும் நாள் வரை பூஜை அறையில் வைத்திருப்போரும் உண்டு. பொன்னுருக்கும் நாளன்று நல்ல சுமங்கலியை அழைத்து, உபசாரங்கள் செய்து அந்தப் பொன்னை எடுத்து  மணமகனிடம் கொடுப்பார்கள்.  மணமகன் அதை ஆசாரியிடம் கொடுப்பார். ஆசாரி பிள்ளையார் பிடித்து விளக்கு ஏற்றி வைத்து, தூபதீபம் காட்டி, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் உடைத்து நிவேதனம் செய்து கற்பூரம் காட்டுவார். பின்னர் கடவுளை வேண்டிக் கொண்டு பொன்னை உருக்குவார். அது உருண்டையாக வரும்.  அதன் பின்னர் பிள்ளைக்கு மாமா இருந்தால் அவர் மீண்டும் தேங்காய் உடைத்து வழிபட்ட பின்னர் அந்தத் தேங்காய்த் தண்ணீரை விட்டு பொன்னுருக்கிய தணலை அணைப்பார். ஆசாரியார் அந்த உருண்டைப்பொன்னை எடுத்து வெற்றிலை, பாக்கு, பழம், பூ, மஞ்சள், தேசிக்காய் வைத்துப் பிள்ளையிடம் கொடுக்க அதை சபையினருக்குக் காட்டி விட்டு மணமகன் மீண்டும் ஆசாரியிடம் கொடுப்பார்.  ஆசாரியும் அதை வாங்கிக் கொண்டு சின்ன உளியால் ஒரு அடி அடித்து அதன் மேல் சந்தனம், குங்குமம் வைத்துப் பெற்றுக் கொள்வார். பின்னர் ஆசாரிக்குத் தக்க மரியாதைகள் செய்யப்படும்.  வந்திருப்போர் அனைவருக்கும் விருந்துபசாரம் நடைபெறும். இந்த விருந்துச் சாப்பாடு உள்ளூரில் இருந்தால் மணமகளுக்கும் கொடுத்து அனுப்பும் வழக்கம் உண்டு.

என் கல்யாணத்தில் இவை எதுவும் நடைபெறவில்லை எனினும் நல்ல நாள் பார்த்துத் தங்க நாணயம் வாங்கிக் கொடுத்துப் பொன்னுருக்குதல் நடந்தது.   ஆசாரியை வீட்டுக்கு வரவழைத்துப் பொன்னைக் கொடுத்துத் தாலி செய்யச் சொல்லிக் கொடுத்தார்கள்.  அன்று வீட்டில் வடை, பாயசத்துடன் விருந்தும் இருந்தது. முன்பெல்லாம் இந்தப் பொன்னுருக்கும் நாளன்றே முஹூர்த்தக்காலும் நட்டதாகத் தெரிய வருகிறது. இவை இரண்டும் நடந்த பின்னரே திருமணத்திற்கான பலகாரங்களைச் செய்ததாகவும் தெரியவருகிறது.  இதன் பின்னர் மணமகனும், மணமகளும் திருமணம் நாள் வரை ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது என்பது சம்பிரதாயம்.


தாலி.jpg

Geetha Sambasivam

unread,
Jul 15, 2013, 6:21:54 AM7/15/13
to மின்தமிழ்
பொண்ணு வந்தா, பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே!
பொதுவாகச் சத்திரம்/மண்டபம் பெண் வீட்டுக்கு அருகே தான் பார்ப்பாங்க. பிள்ளை வீட்டுக்காரங்க வெளியூர் எனில் அவர்களே கல்யாணத்துக்கு முதல் நாள் காலையில் சத்திரம் வந்து சேரும்படியான ஏற்பாடுகளைச் செய்து கொள்வார்கள்.  இதைச் சிலர் பெண் வீட்டினரின் தலையிலும் கட்டுவதுண்டு.  பிள்ளை வீட்டினர் எத்தனை பேரோ அத்தனை பேருக்கும் கல்யாணத்திற்கு வந்து, திரும்பிப் போக ஆகும் செலவைப் பெண் வீட்டினர் ஏற்பது உண்டு.  இந்தச் செலவெல்லாம் இப்போது இல்லை என்றாலும் மிக அரிதாகப் பார்க்கவும் முடிகிறது.   எங்கள் நண்பர் ஒருத்தரின் பெண்ணிற்கு ஒரு பிள்ளையைப் பார்த்தார்கள்.  ஜாதகம் பொருந்தி, பிள்ளை, பெண்ணுக்கும் பிடித்துப் போய்விட்டது.  பிள்ளை வீட்டார் போட்ட கண்டிஷன் என்னவென்றால் பிள்ளை இப்போது அமெரிக்கா திரும்பிவிடுவான்.  பின்னால் கல்யாணத்திற்குத் தான் வருவான்.  ஆகவே இப்போது திரும்பும் செலவு, மீண்டும் கல்யாணத்திற்கு வந்துவிட்டுப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு திரும்பும் செலவு ஆகியவற்றோடு பெண்ணிற்கு விசா எடுக்கும் செலவு எல்லாவற்றையும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கண்டிஷன்.  மூன்று பெண்களைப் பெற்ற அந்தத் தந்தை வேறு வழி இல்லாமல் அந்தக் கண்டிஷனுக்கு ஒத்துக் கொண்டார்.  பிள்ளைக்கு மூன்று வழி பயணச் செலவு, பெண்ணிற்குப் பிள்ளையோடு செல்லும்போது ஏற்படும் செலவு, விசாச் செலவு, கல்யாணச் செலவு என எக்க்கச்சக்கமாகச் செலவு ஆனது. வேண்டாம்னு வேறே வரன் பார்த்திருக்கலாமேனு கேட்டதுக்கு இப்போவே பெண்ணின் வயது 27 ஆகிவிட்டது. இன்னும் தாமதிக்கக் கூடாதுனு ஒத்துண்டோம்னு சொன்னார்.  இது சில வருடங்கள் முன்னர் நடந்தது.

பெண் வீட்டினர் செல்வதற்கு முன்னர் சமையல்காரர்கள் அங்கே சென்றுவிடுவார்கள். பெண் வீட்டில் இருந்து விஷயம் தெரிந்த யாரேனும் அங்கே சென்று சமையல்காரர்களுக்கு மறுநாள் என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள். சமையல்காரர்களும் அவர்கள் எந்த அளவிற்குத் தயார் நிலையில் இருக்கிறோம் என்று சொல்லுவார்கள்.  காடரிங் கல்யாணம் இல்லை எனில் சாமான்கள், காய்கறிகள், பழங்கள், மற்றப் பொருட்கள் வாங்கிச் சேமித்து வைத்திருக்கும் அறையை முக்கியமான நம்பகமான ஆள் ஒருத்தரை முன்னாலேயே போய் சாமான்களை எல்லாம் லிஸ்ட் படி வாங்கிச் சரிபார்த்து வைக்கச் சொல்லி அனுப்பி வைப்பார்கள்.  அந்த அறையின் சாவி அவரையும் இன்னொரு நம்பகமானவரையும் தவிர மறந்தும் கல்யாணப்பெண்ணின் தாய், தந்தையிடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.  அவர்கள் இருக்கும் வேலை முசுவில் சாவியை எங்காவது வைத்துவிட்டுத் தேடுவார்கள்.  ஒரு கல்யாணத்தில் சாவி கிடைக்காமல் உடைக்க வேண்டி ஆச்சு.

கல்யாணத்திற்கு முதல்நாள் காலையில் தான் சத்திரம்/மண்டபம் செல்ல நல்ல நேரம் பார்த்திருப்பார்கள். சத்திரம் செல்லும் முன்னர் இரு வீட்டினரும் அரிசியை ஊற வைத்து அரைத்து மாக்கோலம் போட்டு வைப்பார்கள். பிள்ளை வீட்டினர் உள்ளூராக இருந்தால் அவர்கள் சத்திரம் வரும் முன்னர் பெண் வீட்டினர் அங்கே சென்றுவிட வேண்டும்.  பிள்ளை வீட்டினர் வெளியூராக இருந்தால் அதிகாலையில் வருகிறாப்போல் ஏற்பாடுகள் பண்ணி இருப்பாங்க.  ஆகவே பெண் வீட்டினர் முதல்நாள் இரவே போய்விடலாம். எங்க பொண்ணுக்கு வெள்ளிக்கிழமை கல்யாணம்.  வியாழக்கிழமை அதிகாலை 5-15 மணிக்கு நல்ல நேரம் பார்த்திருந்தோம்.  பிள்ளை வீட்டினர் மும்பையாக இருந்தாலும் இரண்டு நாட்கள் முன்னரே வந்து மாம்பலத்தில் தங்கி இருந்தனர்.  அவர்களை ஏழரைக்கு எமகண்டத்துக்குப் பின்னர் போய் அழைத்து வந்தோம். எங்க பையருக்கு ஞாயிறன்று கல்யாணம். ஆனால் அந்த வருடம் எக்கச்சக்கமாக அடித்த புயலினாலும், மறுநாள் சனிக்கிழமை அன்று புதியதொரு புயல் நாமகரணம் செய்யப்பட்டிருந்ததாலும் வெள்ளி இரவே வந்திருந்த உறவினரோடு சத்திரத்துக்குப் போய்விட்டோம்.  பெண் வீட்டினரிடமும் தெரிவித்துவிட்டோம்.  அவர்களும் ஒத்துக்கொண்டனர்.  மறுநாள் தான் தெரிந்தது அது எத்தனை நல்லது என்று.  மறுநாள் ஏதோ திடீர் பந்த் நடக்க கல்யாணத்துக்கு வரவேண்டிய மற்ற உறவினர்கள் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல.  அதோடு மழை வேறு.

பொதுவாகக் கல்யாணம் உத்தராயணத்திலேயே வைப்பார்கள்.  தை மாதத்தில் ஆரம்பித்து, ஆனி மாதத்தோடு கல்யாணங்கள் முடிந்துவிடும்.  பின்னர் ஆவணி பரவாயில்லை என ஆரம்பித்து இப்போதுக் கடந்த பத்து வருடங்களாக ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலும் திருமணங்கள் நடக்கின்றன.  இந்த மாதத் திருமணங்களின் நாயகன், நாயகியர் பெரும்பாலும் வெளிநாட்டு வாசிகளாகவே இருப்பார்கள்.  என்றாலும் இப்போது உள்நாட்டினரும் செய்கின்றனர்.  வட மாநிலங்களிலும் இந்தக்கலாசாரம் பரவி உள்ளது.  ஆச்சு, நம்ம விஷயத்துக்கு வருவோம். சத்திரத்துக்குப் போய்ச் சேருவோம்,  பெண் வீட்டினரோ, பிள்ளை வீட்டினரோ சத்திரம் கிளம்பும் முன்னர் யாத்ரா தானம் என்ற ஒன்றைப் பண்ண வேண்டும். பொதுவாகக் கல்யாணப் பிள்ளை மட்டுமே செய்யும் இது இரு வீட்டினரும் செய்யலாம்.  பெண்ணின் சார்பில் பெண்ணின் தந்தை செய்யலாம். கல்யாணம் பண்ணி வைக்கக் கூடவே வரும் சாஸ்திரிகளே இதைப் பண்ணி வைப்பார். சாஸ்திரிகள் இப்போதெல்லாம் கூட வருவது என்பது பிள்ளை வீட்டினர் வெளியூரிலிருந்து வந்தால் மட்டுமே கூடவே அழைத்துவருவதோடு இருக்கிறது.  உள்ளூராக இருந்தால் அவர்கள் ஒவ்வொரு சடங்குக்கும் அந்த நேரத்துக்குத் தான் வருகின்றனர். 

Inline image 1
யாத்ராதானம் உள்ளூராகவே இருந்தாலும் சுப காரியங்கள் தொடங்கும் முன்னர் வேதம் படித்தவர்களுக்கு தானங்கள் செய்துவிட்டு ஆரம்பிப்பது மிக நல்லது. பெண் வீட்டுக்காரங்க முன்னால் போய் வரவேற்கத் தயாராக இருக்க வேண்டும் என்று சொன்னேன்.  இது பெண் வீட்டுக்காரங்க எடுத்து நடத்தும் கல்யாணங்களில் பொதுவாகக் காணப்படுவது.  சில சமூகங்களில் பிள்ளை வீட்டினர் கல்யாணச் செலவை ஏற்பார்கள்.  அப்போது பெண் மேள, தாளத்தோடு, சீர் வரிசைகளை உறவினர்கள் ஏந்திவரக் குதிரைகள் பூட்டிய சாரட்டிலோ, காரிலோ அழைத்து வரப்படுவாள். அதற்கு முன்னர் பெண்ணிற்குப் பெண் வீட்டிலும், பிள்ளைக்குப் பிள்ளை வீட்டிலும் முக்கிய உறவின்முறையினர் அலங்கரித்து அமர வைத்து நலுங்கு வைப்பார்கள். பின்னர் பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினரில் மூன்று சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். ஆரத்திக்குப் பணம் போடுவது உண்டு.  பணம் இத்தனை வேண்டும் என ஆரத்தி எடுக்கும் முக்கிய உறவின் முறைப் பெண்கள் கேட்டு வாங்கிக் கொள்வதும் உண்டு. ஆயிற்று.  இப்போது நம்ம கல்யாணத்தில் பெண் வீட்டினர் முன்னாடி வந்தாச்சு.  எல்லாரும் சாமானைத் தூக்கிண்டு உள்ளே போகிறாப்போல் கல்யாணப் பெண் போக முடியாது.  அவளை ஆரத்தி எடுத்து சுற்றிக் கொட்டி வலக்காலை முன் வைத்து வரச் சொல்லுவார்கள்.  இப்போதெல்லாம் இந்த ஆரத்தி வேலையையும் காடரிங்காரர்கள் பொறுப்பில் இருந்தாலும் ஆரத்தி எடுக்கப் பெண்ணின் அத்தை, மாமி, பாட்டி சுமங்கலியாக இருந்தால் பாட்டி என அழைக்கப்படுவார்கள். இது எல்லாம் கல்யாணத்திற்கு முதல்நாள் ஆரத்திக்கு.  மறு நாள் ஆரத்திக்கு பிள்ளை வீட்டினர் ஒருத்தர், பெண் வீட்டினர் ஒருத்தர் என எடுக்க வேண்டும் என்பது எழுதப் படாத சட்டம்.

அடுத்து மாப்பிள்ளை வரப் போகிறார் தயாராக இருக்கவும்.  மாப்பிள்ளை வந்ததும் விரதம் ஆரம்பிக்கும்.  நாந்தியெல்லாம் உண்டு. ஆகவே ரொம்பப் பசிச்சால் டிபன் சாப்பிட்டுடுங்க.  பெண், பெண்ணின் அப்பா, அம்மா, அவங்க கோத்திர தாயாதிகள், பையர், பையரின் அப்பா, அம்மா, கோத்திர தாயாதிகள் சாப்பிட முடியாது.   எல்லாம் முடிஞ்சதும் மத்தியானமாத் தான் சாப்பாடு! :))))மத்தவங்க டிபன் சாப்பிட்டுக்கலாம்.

படத்துக்கு நன்றி: ஹுசைனம்மா! :))))))


பொட்டி வண்டி.jpg

Geetha Sambasivam

unread,
Jul 16, 2013, 6:18:51 AM7/16/13
to மின்தமிழ்
கல்யாணப்பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்
அம்மோய், பூவோடு வருமே, பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல்!

இதை முன்னரே குறிப்பிட்டிருக்கணும், எப்படியோ மறந்திருக்கேன்.  கல்யாணப் பெண்ணிற்கு எத்தனை நகைகள் வாங்கிப் பூட்டினாலும், கைகளில் கூடவே கண்ணாடி வளையல்களும் அணிவிப்பார்கள்.  இதை ஒரு சடங்காகவே சிலர் செய்வார்கள்.  வைணவர்களில் ஒரு சாரார் கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன்னர் ஒரு நல்ல நாள் பார்த்து அக்கம்பக்கம் சுமங்கலிகளை அழைத்துப் பெண்ணைப் புத்தாடை அணிந்து அமர வைத்து, சந்தனம், குங்குமம் பூசி வளையல்களை அணிவிக்கச் செய்வார்கள்.  பெண்ணின் தோழிகளும் இதில் பங்கு பெறுவர். சுமங்கலிகளுக்கும், பெண்ணின் தோழிகளுக்கும் வெற்றிலை, பாக்கு, இனிப்புக் கொடுப்பது உண்டு.  மற்ற பிராமணரில் குறிப்பிட்ட சில ஊர்களில் இதைத் தோழிப்பொங்கல் எனச் செய்வார்கள்.  அன்று தான் கல்யாணப் பெண்ணிற்கு மாமன் சீரும் கொடுப்பார்கள்.  பெண்ணை அவள் தோழிகளோடு  நல்ல நாள் பார்த்து மாமன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விதவிதமான உணவுகள் செய்து, பெண்ணிற்குப்புத்தாடை மற்றும் மாமனால் இயன்ற பல சீர்களையும் கொடுத்து முதல் மாலையை மாமன் கைகளால் போடச் செய்துப் பெண் வீட்டில் கொண்டு விடுவார்கள். 

வசதி படைத்தவர்கள் மேள, தாளத்தோடு செய்வார்கள்.  இதெல்லாம் இப்போது இல்லை.  முன்பெல்லாம் சின்ன கிராமங்கள் அல்லது சின்ன ஊர்களில் நடந்து வந்ததால் அன்று காலையே பெண்ணை நதிக்கரைக்கு அல்லது குளக்கரைக்கு அழைத்துச் சென்று ஸ்நானம் செய்யச் சொல்லிப் புத்தாடை அணிவித்து ஊர்வலமாகத் தோழிகள் சூழ அழைத்து வருவார்கள்.  அப்போது வீட்டுக்கு வீடு பெண்ணிற்கு ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிப்பது உண்டு.  மேலும் அப்போதெல்லாம் பெண்கள் மிகச் சிறு வயது.  இப்போதெல்லாம் குறைந்த பக்ஷம் 25 என்றிருந்தது இப்போது 27, 30 என ஆகிவிட்டதால் வளர்ந்த விபரம் தெரிந்த பெண்களுக்கு இதற்கெல்லாம் இயல்பான கூச்சம் வந்துவிடுகிறது.  எனவே காலப்போக்கில் இவை சுத்தமாய் மறைந்தொழிந்து போய் விட்டது.. இதைக் கல்யாணத்திற்கு நாலைந்து நாட்கள் முன்னரே செய்வார்கள். வட ஆற்காடு மாவட்டத்தில் சில குடும்பங்களில் பெண்ணின் அத்தை இம்மாதிரி கல்யாணப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து விருந்து படைத்து உபசரிக்கும் வழக்கம் இருக்கிறது.  அம்பத்தூரில் இருக்கையில் எதிர்வீட்டில் நடந்து பார்த்திருக்கேன்.  இதன் பின்னரே பெண் சத்திரம்/மண்டபம் அல்லது கல்யாணம் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவாள்.  

கல்யாண அமர்க்களத்தில் சீப்பை மறந்த கதையாகத் திரட்டுப்பால் காய்ச்ச மறந்துட்டோம்.  ஆனால் பெண்ணின் மாமி மறக்காமல் காய்ச்சி எடுத்துட்டு வந்துட்டாங்க.  .  திரட்டுப் பால் காய்ச்சும்போது பொங்கி வழியாமல் இருக்க அதனுள் ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டுவிட்டுக் காய்ச்சினால் பொங்கி வழியாது. பால் நன்கு திரண்டு வந்த பிறகே சர்க்கரை சேர்க்கணும்.  திருநெல்வேலிப் பக்கம் தேங்காய்த் திரட்டுப் பால் மிகவும் பிரபலம். அவங்க இரண்டு வகையும் செய்வாங்க.  நம்ம கல்யாணத்திலும் ரெண்டு வகையும் வைச்சுப்போமே! :))))

பெண் வீட்டினர் போய்ச் சேர்ந்ததுமே சீர் வகைகளை அலங்கரித்து வைக்க வேண்டும். முன்னெல்லாம் அப்படியே பெட்டியோடு, பக்ஷணங்கள் கூடைகளில் வைக்கப்பட்டு கூடையோடு கொடுப்பார்கள்.  யாரும் அதிகமாய் அலட்டிக் கொண்டதில்லை. பெரும்பாலும் வெயில் காலத்திலேயே கல்யாணம் நடக்கும் என்பதால் பக்ஷணங்கள் நமுத்தும் போகாது.  ஆனால் இப்போதெல்லாம் காடரிங்காரர்கள் மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட பெட்டிகளில் கொடுத்துவிடுகிறார்கள் என்பதோடு ஒவ்வொன்றையும் தனித்தனி பாக்கிங்காகவும் வைக்கின்றனர்.  ஆகவே விநியோகம் செய்ய வசதி. பிள்ளை வீட்டினர் தங்கும் இடத்தில் அவர்களுக்கு ஏற்ற வசதிகள் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.  முன்னெல்லாம் பல்பொடி, சோப்பு, தேங்காய் எண்ணெய், பவுடர் டப்பா, குங்குமம், சாந்து, சீப்பு போன்ற பொருட்கள் அங்கே அவர்கள் வரும் முன்னர் வைக்க வேண்டும்.  அதோடு பெண்ணிற்குக் கொடுக்க வேண்டிய பாத்திரங்கள், டப்பாக்கள், சம்புடங்கள் ஆகியவற்றில் மளிகை சாமான்களை நிரப்பி அங்கே அடுக்கி வைப்பார்கள். இதற்கு அங்கமணிச் சீர் என்று பெயர். அரிசி, பருப்பில் இருந்து ஆரம்பித்து சர்க்கரை, காப்பிப் பொடி, தேயிலைப்பொடி, ஏலக்காய், முந்திரிப்பருப்பு, கிராம்பு வரை எல்லாமும் இருக்கும்.  இதோடு சேர்த்து ஏற்கெனவே செய்த அப்பளம், வடாம், வற்றல் போன்றவற்றையும் வைப்பார்கள். பக்ஷணங்களும் இடம் பெறும். 
Inline image 1

பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.  எவர்சில்வர் புழக்கத்திற்கு வந்த பின்னர் அவை அதிகமாகக் காணப்படுகின்றன.  அதற்கு முன்னர் பித்தளை, செம்பு, வெண்கலம், வெள்ளி, ஈயத்தில் ரசச் சொம்பு போன்றவையே.  இந்த ஈயச் சொம்பில் தான் தீபாவளி மருந்தும் கிளறி வைத்திருப்பார்கள்.  வகை வகையாகக் கல்யாணச் சாப்பாடு சாப்பிடுவதால் ஜீரணத்துக்குனு நினைக்கிறேன். எல்லா ஏற்பாடுகளும் பிள்ளை வீட்டினர் வரும் முன்னரே செய்திருக்க வேண்டும்.  பிள்ளை வீட்டினர் வராங்களா, தகவல் கிடைத்ததும், ஆரத்தியை எடுத்துக் கொண்டு வாசலில் தயாராக நிற்க வேண்டும்.  காடரிங்காரர்கள் எனில் அவர்கள் காடரிங்கில் ஃபோட்டோவும் அடக்கம்.  இல்லை எனில் பெண் வீட்டினர் ஏற்பாடு செய்ய வேண்டும். 

 ஆச்சு, அதோ வந்தாச்சு பிள்ளை வீட்டினர்.  பெண்ணின் அம்மா, அப்பா, மற்றும் சித்தப்பா, சித்தி முறை உறவுகள், பெண்ணின் பாட்டி, பெண்ணின் மாமா, மாமி, அத்தை, அத்தை கணவர் போன்ற முக்கிய உறவினர் முன்னே நின்று வரவேற்பார்கள். முன்னெல்லாம் ஆரத்தி சுற்றி பெண்வீட்டு முக்கியஸ்தரான மாமாவோ தாத்தாவோ மாலை போட்டுக்  கைலாகு கொடுத்து மாப்பிள்ளையை அழைப்பார்கள்.  இப்போது காடரிங் காரர்கள் பிள்ளையின் அம்மா, அப்பா, பிள்ளை, பிள்ளையின் சகோதரி, சகோதரி கணவர் ஆகியோருக்கு ஸ்பெஷல் மாலை போட்டு, பிள்ளை, பிள்ளையின் அம்மா, அப்பா, சகோதரி ஆகியோரைத் தனியாக நிற்க வைத்து ஆரத்தி எடுத்து, மேலிருந்து பலூன்கள் தானாக/அல்லது வெடிக்க வைத்துப் பூக்கள் கொட்டுவது போல் ஏற்பாடு செய்து வரவேற்கின்றனர்.  அன்று பிள்ளை வீட்டினரோடு வரும் அனைவருக்கும் சிறு குழந்தை உட்பட அனைவர் கழுத்திலும் ஒரு சின்ன மாலையைப் போட்டுடறாங்க.  சம்பங்கிப் பூக்கள்னு நினைக்கிறேன்.  வாசனையிலிருந்து அப்படித் தான் தெரிஞ்சது. :)))) நல்லவேளையாப் பெண்ணின் மாமி காய்ச்சிக் கொண்டு வந்த திரட்டுப்பாலை ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் போட்டு வைத்திருந்து  பின்னர் பெண்ணின் அம்மா பிள்ளையின் அம்மா கையில் திரட்டுப் பால் அடங்கிய பாத்திரத்தைக் கொடுப்பாங்க.  



15 marriage gifts.jpg

Geetha Sambasivam

unread,
Jul 18, 2013, 4:01:55 AM7/18/13
to மின்தமிழ்
நாளாம், நாளாம், திருநாளாம், நங்கைக்கும், நம்பிக்கும் மண நாளாம்!

Inline image 1

கல்யாண மேடை. இது விரதம் செய்வதற்கு முன்னர் எடுத்த படம். :)))) போட்டோவில் இருப்பது என் அப்பா, அம்மா, இடப்பக்கம் எங்கள் தாத்தா(அப்பாவின் அப்பா) வலப்பக்கம் அவங்க குலதெய்வம் மூங்கிலணை காமாட்சி அம்மன், நடுவே சாய்பாபா.

இந்தத் திரட்டுப்பால் பெண்ணின் அம்மாவால் கொடுக்கப்படுவது தென் மாவட்டங்களில் கிடையாது.  இப்போதும் இருக்கிறதாகத் தெரியவில்லை.  ஆனால் தஞ்சை மாவட்டத்தில் இது மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.  இது கொடுக்கவில்லை எனில் கோபம் கொள்ளும் சம்பந்தி வீட்டாரை முன்பெல்லாம் காணமுடியும். சண்டையே வரும். இப்போது சென்னையில் பலதரப்பட்டவர்களும் வசிப்பதில் காடரிங்காரர்களால் இது எல்லா மாவட்டக்காரர்களாலும் பின்பற்றப் படுவதைக் காண முடியும்.  பொதுவாகச் சீர் வரிசையில் சமையலுக்குத் தேவைப்படும் பாத்திரங்கள் தவிர, வெண்கலம், பித்தளைப்பாத்திரங்களில் தாம்பாளம், குத்துவிளக்கு, குடம், சொம்புகள், அரிக்கும் சட்டி, பொட்டுப் போட்ட மைசூர் வாணாய் எனப்படும் பாத்திரம், அடுக்கு வகைகள், பித்தளை ட்ரம், வாளி, வெண்கலப்பானைகள், அளக்கும் படி போன்றவை அவரவர் வசதிக்கு ஏற்பக் கொடுக்கப்படும்.  படியை முக்கியமாய்க் கொடுப்பார்கள்.  இப்போதெல்லாம் எவர்சில்வரிலேயே படி வந்து விட்டதால் அநேகமாய் அதில் வாங்குவதை வழக்கமாய்க் கொண்டிருக்கின்றனர்.  படி முக்கிய விசேஷங்களுக்குத் தேவைப்படும். நிறைநாழி வைக்க, ஏற்றி இறக்க எனப் பலவிதங்களிலும் பயன்படும் என்பதால் படி எல்லா அளவுகளிலும் வாங்கி இருப்பார்கள். வெள்ளிப் பாத்திரங்களில் பஞ்சாத்திரம், உத்தரணி, சந்தனப் பேலா, குங்குமச் சிமிழ், சின்னத் தட்டு, பன்னீர்ச்செம்பு(தேவையானால்)விளக்கு, கூஜா அல்லது சொம்பு(வரலக்ஷ்மி விரதத்திற்குக்கலசம் வைக்க) பெரிய சாப்பிடும் தட்டு, பால் இடும் கிண்ணம் போன்றவை முக்கியமாக அடங்கும்.  மற்றவை அவரவர் விருப்பமும், வசதிக்கும் ஏற்பக் கொடுப்பார்கள். மிக மிக வசதி உள்ளவர்கள் வெள்ளிக் குடம், வெள்ளித் தேங்காய் போன்றவை கொடுக்கின்றனர்.  இதெல்லாம் கொஞ்சம் ஆடம்பரமாகத் தோன்றும். வெள்ளி கொடுக்க இயலாதவர்களும் உண்டு.


மாப்பிள்ளையை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றதும் அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்து உபசாரங்கள் செய்து பின்னர் விரதம் ஆரம்பிக்க அவர்களின் செளகரியத்தைக் கேட்க வேண்டும்.  சிலர் வீட்டிலேயே (உள்ளூராக இருந்தால்) குளித்துவிட்டு வந்திருப்பார்கள்.  இல்லை எனில் அவர்கள் குளித்து முடித்துத் தயாராக வந்ததும் விரதம் ஆரம்பிக்க வேண்டும். முதலில் மணமகன் செய்யப் போகும் விரதத்தைப்பார்க்கப் போகிறோம்.  இதை அஷ்ட விரதம் என்றும் பூர்வாங்கம் என்றும் கூடக் கூறுகின்றனர். பிள்ளையின் வித்யா காலம் முடிந்துவிட்டது என்றாலே பிரமசரியம் முடிந்து கிரஹஸ்தாசிரமத்திற்குத் தயாராகிவிட்டான் என்றே பொருள். ஆனால் இந்தக்காலங்களில் குருகுல வாசம் என்பதெல்லாம் இல்லை என்பதோடு அவரவர் பொருளாதார அடிப்படையிலும் திருமணங்கள் தாமதம் ஆகின்றன.  எனினும் இந்த விரதம் செய்வதை விடாமல் கடைப்பிடிக்கின்றனர்.  இது அவரவர் சார்ந்துள்ள வேத சாகையைப் பொறுத்து வேத அத்யயனம் செய்வதையே சுருக்கமாக அஷ்ட விரதம் என்று அழைக்கின்றனர்.  இந்த சம்பிரதாயம் ஒவ்வொரு வேதக்காரர்களுக்கும் அவரவர் வேதத்தை ஒட்டி மாறுபடும்.


ரிக் வேதக்காரர்களுக்கு முதலில் ஸம்ஹிதை,  பிராம்மணம், ஆரண்யகம், உபநிஷத் என அத்யயனம் செய்துவிட்டுப் பின்னர் ஸம்ஹிதா பாகத்திற்கு பத பாடம், கிரம பாடம், ஜடா பாடம் முடித்து மலா-சிகா-ரேகா-த்வஜம்-தண்டகம்-ரதம்-கனம் என்னும் விக்ருதி பாடங்களை அத்யயனம் செய்வார்கள்.  பாஷ்யங்களும் படிக்கப்படும், யக்ஞம் முதலியவற்றை உலக நன்மைக்காகவும் தானும் நலமாக வாழவும் வேண்டிக் கொண்டு வழி செய்து கொள்வான் பிரமசாரி.


யஜுர் வேதத்தில் ப்ராபாத்ய, செளம்ய, ஆக்னேய, வைஸ்வேதேவ என்ற நான்கு, பின்னர் பூர்வம், உத்தரம் என இரு பிரிவுகள் ஆக மொத்தம் எட்டுப்பகுதிகளின் சாகைகள் அத்யயனம் செய்யப்பட்டு பதம், கிரமம், ஜடா பாடம், கனபாடம், வர்ண கிரமம் என்பது செய்யப்படும். 


ஸாமவேதத்தில் த்ராஹ்யான சூத்ரங்களைப் (எங்க புக்ககத்தின் சூத்ரம் இதுவே) பின்பற்றுபவர்களுக்கும் எட்டுப் பிரிவுகள் உண்டு. அவை உபநயனம், கோதானம், வ்ராதிகம், ஆதித்யம், மஹாநாம்நிகம், உபநிஷத், பெளதிகம், பிரமசாமம் ஆகியன.  ப்ரக்ருதி, ஊஹம், ரஹஸ்யம், ஆரணம், பூரவார்ச்சிகம், உத்ரார்ச்சிகம், பதம், லக்ஷணம் முதலிய எட்டு பிராமணங்களின் கிரந்தங்களும் அத்யயனம் செய்யப்படும்.  இதை இங்கே இவ்வளவு விளக்கமாய்ச் சொல்வதின் காரணம், எழுதி வைத்துக் கொண்டால் அவரவர் வீட்டுத் திருமணத்தின் போது சாஸ்திரிகளிடம் கேட்டு நிச்சயம் செய்து கொள்ளலாம்.  ஒவ்வொரு பகுதியும் ரிஷி தர்ப்பணம், ஹோமம் போன்றவற்றோடு தொடங்கி வேதத்தின் அந்தக் குறிப்பிட்ட பகுதி தொடர்பான சில கர்மாக்களையும் செய்து உத்ஸர்ஜனம் செய்வார்கள்.  இப்படி வேதத்தின் எல்லாப் பகுதிகளையும் கற்பதே அஷ்ட விரதம் எனப்படும். வேத அத்யயனம் முறையாகக் கற்றிருந்தால் இந்த அஷ்ட விரதம் எனப்படுவது தேவையில்லை என்பது ஒரு சாரார் சொல்கிறார்கள்.  ஆனாலும் அத்யயனம் செய்தவர்களும் இதைச் செய்கின்றனர்.


இப்போது வேதம் கற்றவர்கள் மிகச் சிலரே இருப்பதால் அனைவருக்கும் இது அவசியம் என்பது தெரிய வருகிறது. இதன் கடைசியில் வருவதே ஸமாவர்த்தனம்.  ஸமாவர்த்தனம் என்றால் முடிவு, முடிப்பது எனப் பொருள்.  இது குருகுலத்தில் இருந்து பிரமசாரி வீடு திரும்பும் கால கட்டத்தைக் குறிக்கும்.  இந்த அஷ்ட விரதத்தைக் கல்யாணத்திற்கு முதல்நாள் தான் செய்வது என்பது இப்போது ஏற்பட்ட சம்பிரதாயம் ஆகும்.  இதை எப்போது வேண்டுமானாலும் குருகுல வாசம் முடியும் சமயம், விவாஹம் செய்து கொள்வதற்கு நான்கைந்து மாதங்கள் முன்னர் என்று செய்யலாம். ஆனால் இப்போதெல்லாம் இளைஞர்களுக்கு நாற்காலி உத்தியோகம் என்பதால் அவர்கள் கல்யாணத்திற்கு லீவு எடுப்பதால் முதல்நாள் கட்டாயம் அஷ்ட விரதம் செய்யணும் என வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் இப்போதெல்லாம் மணமகனை காயத்ரி மந்திரம் சொல்லச் சொல்லிவிட்டு புரோகிதர்களே இதைச் சொல்லி முடித்துவிடுகின்றனர். இதை முடித்ததும் மணமகன் மந்திரோக்தமாக ஸ்நானம் செய்யணும்.  ஆனால் அதெல்லாம் இப்போச் செய்யறதில்லை.  இந்நிலையில் இருக்கும் பிரமசாரியை ஸ்நாதகன் என அழைக்கின்றன்னர்ர்.  பிரமசரியத்தைக் கடந்தாலும் இன்னும் கிரஹஸ்தாசிரமத்தில் நுழையவில்லை.  இப்போது அவன் அநாஸ்ரமியாக இருக்கிறான்.  ஆகவே உடனடியாகத் திருமணம் செய்து வைக்கணும் என ஏற்பாடுகள் நடக்கும்.


விரத விபரங்கள் தொடரும்!  வேதங்கள் பற்றிய குறிப்புகளுக்கு நன்றி: காமகோடி தளம், தெய்வத்தின் குரல், ரா.கணபதி.


மேடை.jpg

Geetha Sambasivam

unread,
Jul 18, 2013, 11:39:12 PM7/18/13
to மின்தமிழ்
மன்னாதி மன்னன் மாப்பிள்ளை ஆக, மாப்பிள்ளை ஆக!

உபநயனத்தின் போது இடுப்பில்கட்டும் முளஞ்சிக்கயிறு அல்லது முஞ்சிப்புல்லை இப்போத்தான் அவிழ்க்கணும். அதையும் சும்மாவானும் அவிழ்த்து எறிய முடியாது.  மந்திரங்கள் சொல்லி மந்திரோக்தமாகவே அவிழ்க்கணும்.  ஆனால் இப்போ யார் இடுப்பிலும் மொளஞ்சிக்கயிறு இருக்காது.  அப்படின்னா என்னனு கேட்பாங்க. :))) அதன் பிறகு வபனம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஸ்நானம் முடித்து ஆசாரியர் ஆசீர்வதித்துக் கொடுக்கும் வேஷ்டியைப் பஞ்சகச்சமாகக் கட்டிக் கொள்ள வேண்டும்.  அதற்கு முன்னர் புதியதாகப் பூணூலை மாற்ற வேண்டும்.  பிரமசாரிக்கு ஒரே பூணூல் தான்.  இப்போது அவன் திருமணம் செய்து கொள்ளப் போவதால் இரண்டு உபவீதங்களை அணிவான். அதே போல் இது வரை ஒற்றை வேஷ்டி தான்.  இப்போது இரட்டை வேஷ்டி கட்டிக் கொண்டு அதையும் பஞ்சகச்சமாகக் கட்டிக் கொண்டு மேல் உத்தரீயம் அணிவிக்கப் படுவான். இப்போது அவன் வாசனாதி திரவியங்களையும் பயன்படுத்தத் தடை இல்லை.  அதனால் தான் கண்ணுக்கை மை, நெற்றியில் பொட்டு, சந்தனம், குங்குமம் என்றெல்லாம் வைக்கின்றனர். அதோடு இல்லாமல் அவன் கல்வி கற்றவன் என்பதைக் குறிக்கும் வகையில் கையில் சுவடிகளை முன்பு வைத்திருந்தது போக இப்போது ஏதேனும் ஒரு புத்தகம் கொடுக்கப்படுகிறது.  அநேகமாக ராமாயணம், அல்லது பகவத் கீதை புத்தகமே கொடுப்பார்கள். சமுதாயத்தில் அவனுக்கும் இந்தத் திருமணத்தின் மூலம் ஏற்படப் போகும் அந்தஸ்தைச் சுட்டிக் காட்டும் வகையில் கையில் ஒரு தடி, விசிறி, குடை, செருப்பு போன்றவற்றையும் அணிவான்.  இவை எல்லாம் பெண் வீட்டுக்காரர்களாலேயே கொடுக்கப்படுகிறது.   இப்போது காடரிங்காரர்களின் பொறுப்பில் இவையும் ஒன்று.  இது கல்யாணத்தன்று காசி யாத்திரைக் கோலத்தில் நடப்பது. என்றாலும் விஷயத்தின் தன்மையைக் குறித்து இன்றே சொல்லி விட்டேன்.

Inline image 1


அடுத்த முக்கியமான ஒரு விஷயம் ஸமிதா தானம்.  பிரமசாரிகள் தினம் தினம் ஸமிதா தானம் செய்யவேண்டும். இப்போது பிரமசாரி கிருஹஸ்தனாக ஆகப் போவதால் அந்திம ஸமிதாதானம் செய்ய வேண்டும்.  இது அனைத்து வேதக்காரர்களுக்கும் கிடையாது.  ஸாமவேதிகளுக்கு மட்டுமே உண்டு.  இதை முடித்ததும், அந்த அக்னியைப்பாதுகாத்து ஆயுள் பரியந்தம் தினம் தினம் ஒளபாஸனம் செய்ய வேண்டும். (என் மாமனார் எவ்வளவோ இதற்கு முயன்றார்.  ஆனால் என் கணவரின் பணி நிமித்தமாக, பல ஊர்களுக்கு ஏற்படும் மாற்றல் காரணமாக இதை ஏற்க முடியவில்லை.) அடுத்து நாந்தி ஸ்ராத்தம்.


Inline image 2

நாந்தீ என்றாலே மகிழ்ச்சி என்றே பொருள் வரும்.  சுப சடங்குகள் செய்கையில் அதன் தொடக்கத்தில் செய்யப்படும் ஒரு பிரார்த்தனை இது. பித்ருக்களுக்குச் செய்தாலும் இதுவும் தேவர்களுக்குச் செய்யப்படும் வழிபாடுகளைப் போலவே மங்களமான ஒன்றே.  என்றாலும் பலரும் இதை அச்சானியம் எனக் கருதிச் செய்வதில்லை. நம் மீது உள்ள பிரியத்தாலும் அன்பாலும் பித்ருக்கள் நாம் அழைக்காமலேயே நம் சந்ததிகளை ஆசீர்வதிக்க வருவதாக ஐதீகம்.  ஆகையால் அப்போது வேத அத்யயனம் செய்த பிராமணர்களுக்கு திரவியங்கள் கொடுத்து, சாப்பாடு போட்டு தக்ஷணை கொடுப்பார்கள்.  வஸ்திரமும் கொடுக்கலாம்.


Inline image 3


ஆனால் இந்த நாந்தி ஸ்ராத்தம் செய்யும் வீடுகளில் கோத்திரக்காரர்கள் மட்டுமே சாப்பாடு சாப்பிடலாம் என்றொரு விதி இருப்பதால் பலரும் இதைச் சாப்பாடு போட்டுப் பண்ணாமல் ஹிரண்ய ரூபமாக அரிசி வாழைக்காய், தக்ஷணை, வஸ்திரம் கொடுத்துச் செய்கின்றனர்.  மேலும் கல்யாணச் சத்திரங்களிலேயே கல்யாணம் நடப்பதால் நாந்தி ச்ராத்தம் செய்தவர்களுக்கு எனத் தனிச் சாப்பாடு இப்போதெல்லாம் பண்ணுவதில்லை.  எங்க கல்யாணத்தில் தனியாக மடிச் சமையல் என்றிருந்தது.  ஆகையால் நாங்க ஒரு ஐம்பது பேர் அந்தச்  சாப்பிட்டோம். எங்க பெண், பிள்ளை கல்யாணங்களிலும் தனிச் சமையல் ஏற்பாடு செய்திருந்தோம். ஆகவே பிரச்னை இல்லை. ஆனாலும் அரிசி, வாழைக்காய் தான் கொடுக்கப்பட்டது.

இதன் பின்னர் கல்யாணப் பிள்ளை கூஷ்மாண்ட ஹோமம் செய்வார். பொதுவாய்க் கூஷ்மாண்டம் என்றால்  பூஷணிக்காய் என்றாலும் இங்கே குறிப்பிடுவது அதுவல்ல.  இது விவாஹம் ஆகும் முன்னரே செய்யவேண்டும்.  இந்த ஹோமம் பெண் வயதுக்கு வந்த பின்னர் திருமணம் செய்து கொள்வதற்குப் பிராயச்சித்தமாகச் செய்யப்படுவது.  இதனால் தோஷங்கள் ஏற்படாது என்கிறார்கள். மேலும் ருதுவான பெண் எத்தனை முறை ருதுவாகி இருக்கிறாளோ அத்தனை முறையும் கோதானம் செய்ய வேண்டும் என்று விதி.  ஆனால் இப்போது எல்லாமும் தக்ஷணை தான் என்பதோடு இந்த கூஷ்மாண்ட ஹோமத்தை விபரம் தெரிந்த வெகு சிலரே செய்கின்றனர்.  கல்யாணப் பெண்ணும் உபவாசம் இருந்து வயதுக்கு வராத கன்னிக் குழந்தைப் பெண்ணுக்கு ஏதேனும் பொருளை அல்லது ஆபரணத்தைத் தானமாகத் தருவாள். இந்தக் கூஷ்மாண்ட ஹோமம் ப்ராயச்சித்த ஹோமம் என்பதால் வருடா வருடம் செய்யும்  ச்ராத்தத்திற்கு முதல்நாள் கூடச் செய்பவர்கள் உண்டு. விவாஹத்திற்கு முதல்நாள் இதைக் கட்டாயமாய்ச் செய்யவேண்டும் என்பது விதி. அதோடு அக்னி ஹோத்ர அக்னியில் செய்யாமல் ஒளபாசன அக்னியிலேயே செய்ய வேண்டும்.  ஒளபாசன அக்னியில் செய்யும் கர்மாக்களையே ஹோமங்கள் என அழைக்கிறோம்.  இப்போதெல்லாம் யார் வீட்டிலும் ஒளபாசன அக்னி இல்லாததால் அவ்வப்போது மூட்டும் லெளகீக அக்னியிலும் செய்யலாம். அக்னி ஹோத்ர அக்னியில் செய்வதெல்லாம் யாகங்கள். இவை ஸ்ரெளத கர்மாக்கள் எனவும், மேலே சொன்ன ஹோமங்கள் ஸ்மார்த்த கர்மாக்கள் எனவும் அழைக்கப்படும்.
homam.jpg
நாந்தீ2.JPG
நாந்தீ.jpg

Geetha Sambasivam

unread,
Jul 20, 2013, 5:16:38 AM7/20/13
to மின்தமிழ்
மணமேடை தன்னில் மணமே காணும் திருநாளைக் காண வாராயோ!
அடுத்துப் பெண்ணிற்குச் செய்ய வேண்டியவற்றைப் பார்க்கலாம்.  பெண்ணிற்கு ஏற்கெனவே ஜாதக கர்மா முதலியன நடந்திருந்தாலும் கல்யாணத்திற்கு முதல்நாள் திரும்பவும் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.  எனக்கெல்லாம் நடக்கவில்லை. ஆகையால் செய்யாததற்குப் பிராயச் சித்தம் செய்வார்கள். தன் பின்னர் புண்யாஹவசனம் செய்வார் பெண்ணின் தந்தை. புண்யாஹவசனம் செய்த ஜலத்தினால் பெண்ணிற்குப்ப்ரோக்ஷணம் செய்து அவளை நேருக்கு நேர் பார்த்து உச்சி முகர்ந்து, (சின்ன வயசில் செய்யலையோ?) வலது காதில் அவளுடைய பெயரைச் சொல்லச் சொல்லுவார்கள்.  பெண்ணிற்குத் தொட்டில் போடுகையில் என்ன பெயர் வைத்தார்களோ அந்தப் பெயரைத் தான் சொல்ல வேண்டும்.  ஒரு சிலர் தொட்டிலின் போது வைத்த பெயரால் கூப்பிடுவதில்லை.  கூப்பிடத் தனிப் பெயர் இருக்கும்.  இப்போது என் தொட்டில் பெயர் சீதாலக்ஷ்மி.  கூப்பிடுவது தான் கீதா. ஆகையால் திருமணப் பத்திரிகையிலும், கல்யாணத்தின்போது ஜாதககர்மா செய்யும் போதும் சீதாலக்ஷ்மி என்ற பெயரே சொல்லுவார்கள். அப்புறமா அன்னப்ராசனம்.  ஹிஹிஹி, எட்டு மாசத்தில் செய்ய வேண்டியது. அந்தக் காலத்திலே எல்லாம் பெண்கள் குழந்தைகளா இருக்கிறச்சே கல்யாணம் நடந்திருக்கு.  இப்போ வயது வந்த பின்னர் நடக்கும் கல்யாணங்களிலும் இதைப் பார்க்கையில் கொஞ்சம் வேடிக்கையாத் தான் இருக்கும்.  தயிரும், நெய்யும் கலந்து அன்னப்ப்ராசனம் செய்வித்துப் பின்னர் நெல்லில் பெயரை எழுத வேண்டும். இது அத்தனையும் பெண்ணின் அப்பா செய்வார்.

அடுத்தது பெண்ணிற்கு முக்கியமானது கங்கணதாரணம். பிள்ளைக்கும் உண்டு என்றாலும் பெண்ணின் கங்கண தாரணத்தை முக்கியமாகச் சொல்லுவார்கள்.  திருமணம் நிச்சயம் ஆனதுமே சங்கல்பம் செய்து கொண்டு கங்கணம் என்னும் ரக்ஷை கட்டிக் கொள்வார்கள்.  இது கட்டிக் கொண்டுவிட்டால் பின்னர் ஆறு தாண்டி, கடல்தாண்டி, வெளியே செல்லக் கூடாது.  அதனாலோ என்னமோ தெரியலை கல்யாணத்திற்கு முதல்நாள் தான் இப்போல்லாம் கங்கணதாரணம் நடைபெறுகிறது.  பிராமணருக்குக் கல்யாணத்திற்கு முதல்நாள் எனில் மற்ற சமூகத்தினருக்குக் கல்யாணத்தன்றே நடக்கிறது.  இது கல்யாணப் பெண், பிள்ளை இருவருக்கும் உண்டு.  துர்தேவதைகள் அண்டாத வண்ணமும், ஆஸெஸம் எனப்படும் தீட்டு முதலியவை அவர்களைப் பாதிக்காது என்றும் இந்த ரக்ஷை பாதுகாப்பதாகச் சொல்லுவார்கள்.  ரக்ஷை கட்டிக் கொண்டதும் வீட்டை விட்டே வெளியே செல்லத் தடையும் விதிப்பார்கள்.  ஆனால் இந்தக் காலங்களில் அன்று மாலை தான் ரிசப்ஷனுக்காகப் பெண் ப்யூட்டி பார்லர் போகும்படி ஆகிறது.  மிகச் சிலரே கல்யாணச் சத்திரத்துக்கு ப்யூட்டி பார்லரில் இருந்து ஆட்களை வரவழைக்கின்றனர்.  பெண்ணுக்கு இடக்கையிலும், ஆணுக்கு வலக்கையிலும் இந்த ரக்ஷை தரிக்க வேண்டும்,  கல்யாணம் முடிந்தப்புறமும் இது கையில் இருக்கும்வரை இருக்கலாம்.  தப்பில்லை.  பெண் வீட்டிலும் நாந்தி சிராத்தம் செய்வது உண்டு.  அது குறித்து போன பதிவிலேயே குறிப்பிட்டு விட்டேன்.

அடுத்த முக்கியமான ஒன்று பாலிகை தெளித்தல்.(அங்குரார்ப்பணம்) எனச் சொல்லுவார்கள்.  இது முழுக்க முழுக்க இரு வீட்டுப் பெண்களாலும் செய்யப்படும்.  இது கல்யாணத்திலும், உபநயனம் எனப்படும் பூணூலிலும் உண்டு. பயிர்கள் நன்கு செழித்து வளர்வது போல் திருமணம் நன்கு நடந்து அந்தக் குடும்பமும் நன்கு செழித்து வளர்வதற்காகச் செய்யப்படும் ஒரு பிரார்த்தனை இது. திருமணம் நடைபெறும் தினத்திற்கு முன்னர் வரும் ஒற்றைப்படையான தினத்தில் மந்திரோக்தமாகச் செய்யப்படும் ஒன்று இது. உதாரணமாக வெள்ளிக்கிழமை கல்யாணம் எனில் அதற்கு முந்தைய புதன், திங்கள் ஆகியன ஒற்றைப்படை தினமாக வரும். பாலிகைகள் தெளித்தலின் போது பயன்படுத்தப்படும் மண் கலசத்திற்குப் பாலிகா என்று பெயர்.  மண் கலசத்திலேயே பாலிகைகளைத் தெளிப்பார்கள். கூரான இலைகளையுடைய பயிருக்கும் பாலிகா என்ற பெயர் வரும். மண் கலசங்களில் ம்ந்திரோக்தமாகத் தெளிப்பார்கள்.  விதைகள் தெளிக்கையில் தனித்தனியாக மந்திரம் சொல்வார்கள்.  இந்த உறவு நன்கு பல்கிப் பெருகி வளரவேண்டி, ப்ரஹ்மா, இந்திரன், யமன், வருணன், ஸோமன் ஆகிய தேவதைகள், பரிவாரங்களை ஆவாஹனம் செய்து ஓஷதி என்னும் வேத மந்திரங்களையும், ஸூக்தமும் சொல்லி ஜபித்துப் பாலிகையைத் தெளிப்பார்கள். இதற்குத் தனியாக ஏதும் சாமான்கள் தேவையில்லை.  ஐந்து பாலிகைக் கிண்ணங்கள்/மண் கலசங்கள், முளைக்க வைத்த ஊறிய தானியங்கள், கொஞ்சம் பால் ஆகியவையே தேவை.

தெளித்த பின்னர் பஞ்சகவ்யத்தைப் ப்ரோக்ஷணம் செய்து மண்ணைப் போட்டு மூடுவார்கள்.  பின்னர் ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் சுமங்கலிகளைக் கொண்டு பாலிகை விதைகள் ஊற வைத்த ஜலத்தை அப்பாலிகைகளில் தெளிக்கச் சொல்லுவார்கள்.  ஆனால் பெரும்பாலோர் அதில் இருக்கும் விதைகளையும் சேர்த்தே தெளிக்கின்றனர்.  இது கூடாது என்பதையும் ஜலம் மட்டுமே தெளிக்க வேண்டும் என்பதையும் எங்க வீட்டுக் கல்யாணங்களிலேயே அறிந்து  கொண்டேன். ஊற வைத்த தான்யங்களைத் தெளிப்பது கர்த்தாக்கள் மட்டுமே.  அதாவது பிள்ளையின் அப்பாவும், பெண்ணின் அப்பாவும் மட்டுமே.  பாலிகையைக் கரைக்கும்வரை அதற்கு யாரேனும் ஒரு சுமங்கலியை விட்டு நீர் வார்த்து விளக்கேற்றி, வழிபட்டு, நிவேதனம் செய்யச் சொல்வார்கள். இதைப் பெண் வீட்டில் தனியாகவும், பிள்ளை வீட்டில் தனியாகவும் செய்ய வேண்டும்.  இரு பாலிகைகளும் திருமணத்திற்குள் நன்கு வளர்ந்து விவாஹம் ஆன ஐந்தாம் நாள் நதியில் அல்லது குளக்கரையில் கரைப்பார்கள்.  அப்போதும் மந்திரங்களால் ஆவாஹனம் செய்த பிரம்மாதி தேவர்களை அதிலிருந்து எழுந்தருளப் பண்ணிப் பின்னரே நதியில் கரைக்க வேண்டும்.

(ஆனால் இப்போதெல்லாம் கல்யாணத்துக்கு முதல்நாள் தான் பெரும்பாலான கல்யாணங்களில் பாலிகை தெளிக்கப்படுகிறது.  பெண்ணின் தந்தை, பிள்ளையின் அப்பா போன்றோருக்கு இது குறித்த தெளிவு இல்லாததால் இதைக் குறித்து அதிகம் பொருட்படுத்துவது இல்லை.  பாலிகைகளில் நீர் தெளிக்க அழைக்கும் பெண்களோ எனில் ஊற வைத்த விதைகளைத் தான் தாங்கள் தெளிக்க அழைப்பதாக நினைத்துக் கொண்டு அவ்வாறே செய்கின்றனர்.  ஒரு சில புரோகிதர்கள் மட்டுமே தண்ணீரை ஊற்றினால் போதும் என்கின்றனர்.  பொதுவாக இதைக் குறித்துப் புரோகிதர்களும் தெளிவு செய்வதில்லை.  நான் தற்செயலாக அறிந்து  கொண்டேன்.)

 இதன் பின்னர் ஆரத்தி எடுப்பார்கள்.  இந்த ஆரத்தி எடுப்பது பிள்ளை வீட்டினர் தனியாகவும், சில சமயம் அவங்களுக்கு முன்னாடியே முடிஞ்சுடும். பெண் வீட்டினர் தனியாகவும் ஆரத்தி எடுப்பார்கள்.  கல்யாணத்தன்று தான் பொதுவில் ஆரத்தி.

Geetha Sambasivam

unread,
Jul 23, 2013, 12:51:10 AM7/23/13
to மின்தமிழ்
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம், வீடெங்கும் மாவிலைத் தோரணம்!

திருமண சம்ஸ்காரங்களில் இரு வீட்டாரின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. எல்லாச் சமூகங்களிலும் இரு வீட்டார் பங்கு என்பது முக்கியமானது.  முன் பதிவுகளில் சொல்லப்பட்டவை பிராமணர்களுக்கு என்றால் மற்ற சமூகத்திலும் சம்பிரதாயங்கள் இல்லாமல் போகவில்லை. ஒவ்வொருத்தருக்கும் அவரவர் குடும்ப, குல வழக்கப்படியான சம்பிரதாயங்கள் கட்டாயமாகவே கடைப்பிடிக்கப் படுகின்றன.  மற்ற சமூகத்தினரில் பொன்னுருக்குதல் என்னும் திருமாங்கல்யத்துக்குப் பொன்னுருக்குவதை மாப்பிள்ளை வீட்டில் செய்வதை இன்னமும் பலர் கடைப்பிடிக்கின்றனர்.  அதன் பின்னரே கன்னிக்கால் ஊன்றுதல் என்னும் பந்தக் கால் முஹூர்த்தம் நடைபெறுகிறது.  இது அநேகமாய் இரண்டு வீடுகளிலும் ஒரே நாள் ஒரே நேரம் அவரவர் வீடுகளின் ஈசான்ய மூலையில் கன்னிக்கால் ஊன்றப்பட்டு நடைபெறும்.  இதற்குப்பெரும்பாலும் கல்யாண முள்முருங்கை மரத்தின் கொம்புகளே பயன்படுத்தப் படுகின்றன. வீட்டுக்கு மூத்த முதியவர் ஒருவரால் அந்தக் கொம்பின் நுனியில் மஞ்சள் பூசப்பட்டு மாவிலைக்கொத்து கட்டப்பட்டு ஒரு துணியில் செப்புக்காசும் முடிந்து வைக்கப்பட்டு ஊன்றப்படும். பின்னர் மற்றவை அனைவருக்கும் இருப்பது போல் நவதானியம், காசுகள், நவமணிகள் போன்றவற்றை இட்டு 3 சுமங்கலிப் பெண்களால் பால் ஊற்றப்பட்டுக் கீழே பூமியிலிருந்து கொம்பு தெரியும் அடிப்பக்கம் திருநீறு, குங்குமம், சந்தனம் பூச்சப்படும்.. ஒரு சிலர் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வழிபட்டும் பந்தக்கால் ஊன்றுகிறார்கள்.  இது அவரவர் குடும்ப வழக்கப்படி செய்வார்கள்.  பந்தக்கால் ஊன்றிய பின்னர் இரு வீட்டினரும் எந்தவிதமான துக்க நிகழ்விலும் பங்கெடுக்க மாட்ட்டார்கள்.


மற்ற சமூகத்திலும் முளைப்பாலிகை போடுவது உண்டு.  ஆனால் இது அநேகமாய்ப் பெண் வீடுகளிலேயே நடைபெறும். மூன்று அல்லது ஐந்து மண் கலசங்க்களில் மண் பரப்பி நீர் ஊற்றிப் பாலில் ஊற வைத்த நவதானியங்களை 3 அல்லது ஐந்து சுமங்கலிப் பெண்கள் தூவிவிட்டுப் பாலும், நீருமாய்க் கலந்து விடுவார்கள்.  மூன்று முறைகள் விதை தெளிப்பார்கள்.  பின்னர் வீட்டின் பூஜையறையில் அவை வைக்கப்பட்டிருக்கும்.  திருமணதினத்தன்று மணவறைக்குக் கொண்டு செல்வார்கள்.  அநேகமாகப் பிள்ளை வீட்டினர் பொன் உருக்கும் தினத்தன்று பெண் வீட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். "

"சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்துஇள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை
முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரிகூந்தல் பொலன்நறுங் கொடிஅன்னார்" 60

எனச் சிலப்பதிகாரத்தில் வருவது போல் முளைப்பாலிகை என்பது பல ஆயிரம்  ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே இருந்து வருவது தெரிகிறது.  மற்றப்படி பந்தல் அமைப்பது, அலங்காரங்கள் செய்வது, சத்திரங்களில் கல்யாணம் நடந்தால் தாங்கள் இருக்கும் வீடுகளிலும், சத்திரத்திலும் குலை தள்ளிய வாழைமரங்களைக் கட்டுவது போன்றவை நடக்கும்.  வாழை ஒரே முறை குலை தள்ளினாலும், அதன் சந்ததியானது தொடர்ந்து  வரும்.  அதைப் போல் நம் வாழ்க்கையிலும் திருமணம் என்பது ஒரே முறை தான் ஆனாலும் நம் சந்ததியும் வாழையடி வாழையாகத் தொடர வேண்டும் என்பதைச் சுட்டவே மங்களமாக வாழைமரம் கட்டுவார்கள். பாக்கு மரங்களாலும் அலங்கரிக்கப்படும்.  பாக்குக் கொத்துக் கொத்தாகக் காய்ப்பதால் தம்பதிகள் ஒற்றுமையாக இருந்து பல நன் மக்களைப் பெற்று மகிழ்வோடு வாழவேண்டும் என்பது இதன் ஐதீகம். தென்னை மரத்தின் தேங்காயும் இப்படியே தென்னை மரம் கற்பகத் தருவாகக் கருதப் படுவதால் திருமணத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.

Inline image 1

ஆயிற்று, விரதம் முடிந்து அனைவரும் ஓய்வு எடுத்துண்டாச்சா?  மதியம் இரண்டு மணிக்குக் காஃபி குடிப்பவர்களுக்குக் காஃபியும், தேநீர்க்காரங்களுக்குத் தேநீரும் அளிக்கப்படும்.  சரியா மூணு மணிக்கு டிஃபன் இலை போடுவதாகத் தலைமை சமையல்காரர் சொல்லி இருக்கார்.  ஆகவே எல்லாரும் டிஃபன் சாப்பிட்டுட்டு அலங்காரங்கள் முடிந்து நிச்சயதார்த்தத்துக்குத் தயாரா இருக்கணும்.  சரியா? :))


பெண்ணின் அம்மா நிச்சயதார்த்தம் நடைபெறப் போவதாக அனைவரையும் வந்து அழைத்துவிட்டுச் செல்வார்.  அதே போல் பெண்ணின் அப்பாவும் ஆண்கள் தரப்பில் சொல்லுவார்.

மாப்பிள்ளை அழைப்பு உண்டா?  ஆஹா, உண்டு, உண்டு.  நிச்சயம் உண்டு.  அலங்கரிக்கப்பட்ட கார் அல்லது சாரட் வண்டி ஏற்பாடு பண்ணணுமே!  பண்ணியாச்சு!  அதிலே பாதி வழியிலே பெண் போய்க் கூட உட்கார்ந்து சத்திரம் திரும்பும்போது வருவாளே, பெண்ணைத் தயார் செய்ய வேண்டாமா?

 இல்லை, பிள்ளை வீட்டில் அது பழக்கம் இல்லையாம்.  சும்மா சத்திரத்து வாசலிலே ஆரத்தி எடுத்துப் பிள்ளையை உள்ளே அழைக்கையில் சேர்த்து உட்கார வைத்துப் படம் பிடிச்சால் போதும்னு அபிப்ப்ராயப் படறாங்க. 

அப்படியா, சரி அப்படியே செய்துடலாம்.  இதில் எல்லாம் வருத்தம் வரக்கூடாது.

ரெண்டு பேருக்கும் மாலை போட ஆனை வந்திருக்கு! என்ன ஆனையா?? ஆனையைக் கட்டி யார் தீனி போடறது? 

அட, அதெல்லாம் பெண்ணின், பிள்ளையின் நண்பர்கள் ஏற்பாடாம்!

அது சரி, நிச்சயம் சத்திரத்திலா? கோவிலிலா? 

அதான் மாப்பிள்ளை அழைப்பு உண்டுனு சொல்லிட்டீங்களே, அதனாலே பிள்ளைக்கு  மாப்பிள்ளை அழைப்பு டிரஸ் கொடுப்பதை  அங்கே வைச்சுண்டு மாப்பிள்ளை அழைத்துச் சத்திரம் திரும்பியதும் நிச்சயம் வைச்சுக்கலாமா? நேரம் ஆயிடாதோ?

அப்போ ஒண்ணு செய்யலாம்.  இரண்டு வீட்டினரும் தனித் தனிக் காரில் கோயிலுக்குப் போயிட்டு வந்து, இங்கே நிச்சயம் முடிந்து மாப்பிள்ளை அழைக்கலாம்.

இல்லை, இல்லை, இங்கே சத்திரத்து வாசலிலேயே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு.  இரண்டு வீட்டுக்காரங்களும் அங்கே போயிட்டு வந்துடுங்க. அப்புறமா நிச்சயம் பண்ணிக்கலாம். 

அப்பாடா, சாஸ்திரிகள் சரியாத் தான் சொல்லி இருக்கார், அப்படியே செய்துடலாம்.  சீக்கிரமா நிச்சயதாரத்தத்துக்குத் தயாராகுங்கப்பா எல்லாரும்.  அதுக்குள்ளே நிச்சயதார்த்ததுக்கு வேண்டியவற்றைத் தயார் பண்ணிடுங்க யாரானும்'

Inline image 2
அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்.  நீங்க நிம்மதியா கோயிலுக்குப் போய்ப் பிரார்த்தனை பண்ணிட்டு வாங்க.


பாலிகை படம் நன்றி: அகோபிலம் தளம்.

நிச்சயதார்த்த அலங்காரம் படம் சொந்தம்! :))


பாலிகை.jpg
nichayam2.JPG

Geetha Sambasivam

unread,
Jul 24, 2013, 12:28:46 AM7/24/13
to மின்தமிழ்
மாப்பிள்ளை அழைப்பு, மாலை டிஃபன், இரவு உணவு மெனு! :)))


மாலை மூன்று மணிக்கு டிபன் கொடுக்கப்படும். இரவு ஏழு மணி வரையிலும் வரவங்களுக்குக் கொடுக்கச் சொல்லிப் பெண் வீட்டார் கட்டளை. ஆகவே அது வரைக்கும் டிபன் கொடுக்கப்படும்..

Inline image 1

ஸ்வீட் அசோகா,


Inline image 2

 ஜாங்கிரி (பெண் வீட்டார் விருப்பம் 2 ஸ்வீட்)

Inline image 3Inline image 4

அடை, அவியல்
Inline image 5

போண்டா, சட்னி

Inline image 6
சேமியா கிச்சடி, கொத்சு,

காஃபி, டீ, ஹார்லிக்ஸ், பூஸ்ட், பால்.



இரவு உணவு  ஏழரை மணியிலிருந்து பத்து மணி பத்தரை மணி வரை.

பால் பாயசம்

வெள்ளரிக்காய்த் தயிர்ப்பச்சடி,

பாசிப்பருப்பு கோசுமலி

கடலைப்பருப்பு கோசுமலி(இனிப்பு)

முட்டைக்கோஸ் கறி

கத்தரிக்காய்  ஸ்டஃப் செய்த எண்ணெய்க் கறி,

பூஷணிக்காய்க் கூட்டு,

உருளைக்கிழங்கு வறுவல்,

அப்பளம்

Inline image 7
ஆமைவடை,

Inline image 8
போளி,

Inline image 9
மைசூர்ப்பாகு,

எலுமிச்சை ஊறுகாய்

சாதம், பருப்பு, நெய்

வெண்டைக்காய், குடைமிளகாய், முருங்கைக்காய் போட்டு சாம்பார்

தக்காளி ரசம்,

மோர்.


போளியும், மைசூர்ப்பாகும் நம்ம கைவண்ணம் தான். பயப்படாமல் சாப்பிடலாம். :))))

மத்ததுக்கு நன்றி கூகிளாண்டவர்!



மைசூர்ப்பாகு.jpg
சேமியா கிச்சடி.jpg
அடை.jpg
ஆமவடை.jpg
போண்டா.jpg
ஜிலேபி.jpg
போளி.jpg
அசோகா.jpg
அவியல்.jpg

Geetha Sambasivam

unread,
Jul 24, 2013, 12:30:30 AM7/24/13
to மின்தமிழ்
வீட்டில் அடுத்தடுத்து விருந்தினர் வருகை, இடை விடாத தலைவலி ஆகிய காரணங்களால் முழுமையாக இணையத்தில் பங்கெடுக்க முடியவில்லை. அவ்வப்போது வந்து போகிறேன்.  பொறுத்துக் கொள்ளவும்.  நன்றி.



Geetha Sambasivam

unread,
Aug 2, 2013, 6:03:14 AM8/2/13
to மின்தமிழ்
பொண்ணு வந்தா, பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே!(கல்யாணப் பதிவுகள்)

Inline image 1

இது சத்திரத்தில் வாசிக்கையில் எடுத்த படம்.  அட்ஜஸ்ட் செய்துக்குங்க. :)))))


நாதஸ்வரக் காரர்கள் நன்கு அனுபவித்துப் பாடிக் கொண்டு வந்தனர். கூடவே ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்தது.  இதைத் தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஜானவாசம் என்று சொல்வார்கள். வட மாநிலங்களிலோ பிள்ளை வீட்டில் இருந்து மணமகள் வீட்டுக்கு வருவதே இம்மாதிரியான அலங்கரித்த வண்டிகளில் தான்.  இதை "பராத்" என்று சொல்வார்கள்.  இந்த பராத்தோடு வரும் பிள்ளை வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் பெண் வீட்டினர் தகுந்த சன்மானங்கள் செய்வது வழக்கம். எத்தனை நபர்கள் வருகின்றனரோ அத்தனை நபர்களுக்கும் பரிசுகள் கொடுத்தே ஆகவேண்டும். அது புடைவை போன்ற துணிகளாகவோ, வெள்ளிக்காசு, தங்கக்காசு போன்றவையாகவோ இருக்கும்.  ஆச்சு, நம்ம ஊர்வலம் சத்திரத்தை நெருங்கி விட்டது.  அதோ யாரோ வேகமாப் போறாங்களே யார் அது?  அட பெண்ணின் சித்தியா?  எதுக்கு இவ்வளவு வேகமாப் போறாங்க!

சத்திரத்துக்குள்ளே வேகமாய்ப் போன பெண்ணின் சித்தி மணப்பெண் தங்கி இருக்கும் அறைக்குப் போய் அவள் வருங்காலக் கணவனை மணமகனின் ஆங்கில முறைப்படியான உடையில் காணவேண்டி அழைக்கிறாள்.  முன்னெல்லாம் இம்மாதிரிப் பெண்கள் வெளிவந்து பார்க்க இயலாது.  ஆகவே மாடியில் எங்காவது தோழிகள் சிலரோடு நின்று கொண்டு பார்ப்பார்கள்.  சில சமயம் தெரியும்.  பல சமயங்களிலும் பந்தல் மறைக்கும். :))) ஆனால் இப்போதெல்லாம் பெண்ணை இன்னொரு காரில் சற்றுத் தூரம் அழைத்துச் சென்று ஊர்வலம் நடக்கும் பாதையில் சென்று அங்கேயே பெண்ணையும் சேர்த்து உட்கார்ந்து வரச் சொல்லி சத்திரம் வரை அழைத்து வருகின்றனர். இது ஜானவாசம் நடக்கும் கல்யாணங்களில் மட்டுமே.  பெரும்பாலான கல்யாணங்களில் ஜானவாசமே நடப்பதில்லை.  ஜானவாசத்தின் மூலம் கல்யாணப்பிள்ளை பலருக்கும் அறிமுகம் ஆகின்றான்.  ஒரு வேளை பிள்ளையின் நடத்தைகள் சரியில்லாமல் இருந்தாலோ, அல்லது ஏற்கெனவே திருமணம் ஆகி அதை மறைத்திருந்தாலோ இம்மாதிரி ஜானவாசத்தின் மூலம் வெளிப்படுவது உண்டு.  வெளிப்பட்டும் இருக்கிறது.  அதன் பின்னரும் முஹூர்த்தத்தை நிறுத்தாமல் சொந்தக்காரப் பிள்ளைகளில் ஒருவரை மணமகனாக அழைத்துத் திருமணத்தை நடத்துவது உண்டு. நம்ம கல்யாண ஊர்வலம் சத்திரத்து வாசலுக்கு வந்தாச்சு.  பெண்ணும் சத்திரத்து வாசலுக்கு வந்துவிட்டாள்.  கூடவே வந்த ஆனையும் அவளுக்கும் மாலையிடுகிறது.  கொஞ்சம் பயந்து கொண்டே மாலையை ஏற்ற மணப்பெண் பின் மணமகன் அருகே சென்று அமர்கிறாள்.  இருவரையும் சேர்த்து வைத்துப் படங்கள் பிடிக்கப்படுகின்றன. பின்னர் இருவரும் இறங்கி சத்திரத்தின் உள்ளே செல்கின்றனர்.

பின்னர் பெண்ணிற்கு நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.  பெண்ணை அமர வைத்துப் பெண்ணின் அப்பா, அம்மா பிள்ளையார் பூஜை செய்து வழிபட்டுப் பின்னர் மந்திரோக்தமாக பிள்ளையின் தாய், தகப்பனோடு நிச்சயம் செய்து கொள்கின்றனர். இந்தப் பையருக்குத் தன் பெண்ணை நாளை கன்யாதானம் செய்து கொடுக்கப் போவதாய் அறிவிப்பார். பின்னர் பெண்ணுக்குப் பிள்ளை வீட்டார் புடைவை வைத்துக் கொடுக்கின்றனர்.  அதைக் கட்டிக்கொள்ள நாத்தனார் துணையோடு பெண் செல்வாள்.  கட்டிக் கொண்டு வந்ததும், "தலைப்பை நீளமாய் விட்டுக்கோ" என்று சொல்லியே அனுப்பி இருப்பார்கள்.  அதன் படியே நீளத் தலைப்போடு புடைவை கட்டிக்கொண்ட பெண் வந்ததும். முன்னெல்லாம் முழுசா மட்டைத் தேங்காய் வைப்பார்கள்.  இப்போல்லாம் தேங்காய்க் கீத்தை வைக்கிறாங்களானு தெரியலை.  சின்னதாக ஒரு எலுமிச்சை அளவுக்கு முடிச்சைக் கொடுக்கிறாங்க.  குடும்ப பாரத்தைச் சுமக்கறாளா இல்லையானு தெரிஞ்சுக்கவோ? இது விஷயம் முந்தாநாள் எங்க வீட்டுக்கு சாஸ்திரிகள் வந்தப்போ கேட்டு வைச்சுக்க நினைச்சு மறந்துடுச்சு.  மீண்டும் கேட்டுச் சொல்றேன். அந்தப் புடைவையின் முந்தானையில் நடுவே அந்தப் பெரிய முடிச்சை வைச்சுக் கட்டி,  இடுப்பில் சொருகிக் கொள்ளச் சொல்வார்கள்.  பெண் அந்த முடிச்சைக் கட்டிக் கொண்ட வண்ணமே குனிந்து நமஸ்கரிக்க வேண்டும்.  இப்போல்லாம் காலத்துக்கு ஏற்றாற்போல் இதெல்லாம் குறைந்துவிட்டது.  பெண்ணின் நிச்சயம் முடிந்ததும் இப்போதெல்லாம் ஃபோட்டோ செஷன் ஆரம்பிக்கிறது.

என்ன தான் மறுநாள் ரிசப்ஷன் இருந்தாலும், அதுக்கு இப்போல்லாம் வட இந்திய பாணி உடை என்பதால் இந்த உடையோடு பெண், பிள்ளை இருவரும் அவரவர் சொந்தங்களோடும், தனியாகவும் படம் எடுத்துப்பாங்க..  நமக்கு இந்த ஃபோட்டோ வெளிச்சமே அலர்ஜி.  உடம்புக்கு ஆகாது.  ஆகவே சாப்பிடப் போகலாம் வாங்க, காலம்பர சீக்கிரமா எழுந்து தயாராகணும் இல்லையா!

நாளைய காலை டிபன் மெனு
Inline image 2

கோதுமை அல்வா,


Inline image 3

பைனாப்பிள் கேசரி,


உளுந்து வடை,,
Inline image 4
இட்லி, சாம்பார், சட்னி,

Inline image 5
பொங்கல்
Inline image 6

உ.கி. மசால் தோசை, தக்காளிச் சட்னி, கொத்துமல்லிச் சட்னி.


படங்கள் உதவி: கூகிளார்.  நாதஸ்வரக் காரர்கள் படம் சொந்தக்காரர்கள் கல்யாணத்தில் எடுத்தது.  :)))


பொங்கல்.jpg
அல்வா.jpg
இட்லி,வடை.jpg
இசை.jpg
தோசை.jpg
பைனாப்பிள்.jpg

Geetha Sambasivam

unread,
Aug 10, 2013, 5:05:31 AM8/10/13
to மின்தமிழ்
காசிக்கு, காசிக்கு, காசிக்குப்போகும் சந்நியாசி!

Inline image 1

கல்யாணம் இன்னிக்கு.  காலையிலேயே சீக்கிரம் எழுந்தாச்சு. எல்லாருக்கும் காலைக் காஃபி வந்ததா? முன்னெல்லாம் குறைஞ்ச பட்சமாகச் சின்னதாக 150 மி.லி. பிடிக்கும் எவர்சில்வர் தம்ளரில் காஃபி கொடுத்தாங்க.  ஆனால் இப்போது அதுவும் கடந்த பத்து வருஷங்களாகச் சின்னதான டிஸ்போசபிள் கப்பில் கொடுக்கிறாங்க.  பிடிக்கக் கூட முடியாது.  பிடித்து வாயருகே கொண்டு போக முடியாமல் சிரமப்படறவங்க பலரைப்பார்த்திருக்கேன். அத்தனை சூடாகக் குடிக்க முடியாதவங்களும் உண்டு.  (வெளியே போனால் எல்லாம் டிஸ்போசபிள் கப்பிலே காஃபியோ, டீயோ கொடுக்கிறவங்க கிட்டே நாங்க எங்க தம்ளரை நீட்டிடுவோம். கல்யாணங்களில் கூட!)  அவங்களுக்கு ஆத்திக் குடிக்க இன்னொரு டிஸ்போசப்பிள் கப் கொடுக்கலாம்.  அல்லது ரயில்வேயில் கொடுக்கிறாப்போல் பேப்பர் கப் 200 பிடிக்கிறாப்போல் வாங்கி (அதைத் தண்ணீர் குடிக்கத் தராங்க) அதில் முக்கால் பாகம் ஊற்றிக் கொடுக்கலாம்.  மேலும் இன்னொரு விஷயம், காலை முதல் காஃபியே இம்மாதிரிச் சின்ன உத்தரணியில் கொடுப்பது பலருக்கும் அரை மனது தான்.  இதிலே போய் மிச்சம் பிடிக்கிறாங்க பாருனு சமையல் கான்ட்ராக்டரைக் குறை சொல்வாங்க.  நேரடியாக் குற்றம் சாட்டுகிறவங்க ரொம்பவே கம்மி.  ஆனால் நானெல்லாம் கான்ட்ராக்டர் கிட்டே பேச்சு, வார்த்தையின் போதே சொல்லிடுவேன்.  காலைக் காஃபி தம்ளரில் தான் கொடுக்கணும்.  அதன் பின்னர் தம்ளர் கேட்கிறவங்களுக்கு அதிலே தான் கொடுக்கணும்னு கண்டிஷன் போட்டுடுவேன்.  சாப்பாடுகளுக்கு ஆகும் செலவைப்போல் மூன்று மடங்குக்கும் அதிகமாகத் தான் கான்ட்ராக்டர்கள் வாங்கறாங்க.  ஆகக் கூடி அவங்களுக்கு இதிலே லாபம் தான் அதிகம் இருக்கும்.  இதிலே ஒரு கல்யாணத்தில் மிச்சம் ஆகும் பொருட்களையும், பலகாரங்களையும் வைத்து இன்னொரு கல்யாணத்தில் அட்ஜஸ்ட் செய்வதையும் நேரிலேயே பார்த்திருக்கிறேன். மிகச் சிலரே மிஞ்சும் சாப்பாடை ஆசிரமங்கள், அநாதை விடுதிகள் எனக் கொடுக்கின்றனர்.  இதை எல்லாக் கான்ட்ராக்டர்களும் கடைப்பிடிக்கணும்.  சாப்பிடறவங்க வாயாலே பெண்ணையும், பிள்ளையையும் வாழ்த்துவாங்களே!  அதுக்காகவே கொடுக்கலாம்.  இப்போ நம்ம கல்யாணத்துக்கு வருவோமா?

அடுத்துப் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் மங்கள நீராட்டு.  இதைப் பெண்ணின் அத்தையோ, பிள்ளையின் அத்தையோ இருவருக்கும் எண்ணெய் வைத்தோ, அல்லது தனித்தனியாக எண்ணெய் வைத்தோ ஆரம்பித்து வைப்பார்கள்.  அத்தைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.  இது குறித்து ஜீவி சார் சொன்ன கருத்து வந்து சேரவில்லை. :( பெண்ணும், பிள்ளையும் குளித்து முடித்ததும் அலங்காரம் ஆரம்பிக்கும்.  பெண் எப்போதுமே அலங்காரப் ப்ரியை என்பார்கள்.  ஆகவே பெண்ணின் அலங்காரம் அதிசயமெல்லாம் இல்லை.  பையரின் அலங்க்காரம் தான் முக்கியம் இப்போ. அதைப் பார்ப்போம். மாப்பிள்ளையின் இந்த அலங்காரத்திற்குப் பரதேசிக் கோலம் என்று சொல்வார்கள்.  ஆனால் உண்மையில் இத்தனை நாட்கள் படிப்பு, படிப்பு என இருந்த மாணவன் இப்போது தான் திருமணத்திற்குத் தகுதி பெற்றவனாகியதால் ஆடை, அலங்காரங்கள் செய்து கொள்கிறான்.  ஆனால் இந்தக் காசி யாத்திரை குறித்துப் பல கதைகள் நிலவுகின்றன.  ஒரு சிலர் இது தான் திருமண பந்தத்திலே இருந்து தப்பிக்கப் பிள்ளைக்குக் கிடைத்தக் கடைசிச் சந்தர்ப்பம் எனவும், வேறு சிலர் மாணவன் காசிக்குப் படிக்கச் செல்கையில் பெண் வீட்டார் வழி மறித்து எங்க பெண்ணைத் திருமணம் செய்து தருகிறேன் என்று சொல்வதால் பிள்ளை திரும்பி விடுகிறான் எனவும் சொல்கின்றனர்.  இன்னும் சிலர் பையர் நேரடியாக வானப்ரஸ்தம் மேற்கொள்ளக் கிளம்புவதாகவும் அதைத் தடுத்துப்பெண்ணின் தந்தை தன் பெண்ணைக் கொடுப்பதாகவும் சொல்கின்றனர்.  அதற்காகவே வெயிலில் இருந்து பாதுகாக்கச் செருப்பு, துஷ்ட மிருகங்களை அடக்கத் தடி, மழை, வெயிலில் பாதுகாப்புக்குக் குடை,, அவன் அறிவு பெறப் , புத்தகங்கள் எல்லாம் கொடுப்பதாகச் சொல்கின்றனர்.  ஆனால் காசி யாத்திரை எனப்படும் பரதேசிக் கோலத்தின் அர்த்தம் இது எதுவுமே இல்லை என்பதே உண்மை. அதோட இல்லாமல் இதைத் தவிர்க்க வேண்டியவற்றின் பட்டியலிலும் கூறி இருக்கிறார்கள். :)))) உண்மையான பொருள் புரியாததால் பல அனர்த்தங்கள். முதல்நாள் லக்னப் பத்திரிகை வாசிப்பதால் மறுநாள் இந்தச் சடங்கு தேவையற்றது என்பது ஒரு கருத்து.  பெண்ணை நிச்சயம் செய்வது பெரியோர்கள் தான்.  இப்போத் தான் நிச்சயத்தில் பெண்ணும், பிள்ளையும் கலந்து கொள்கின்றனர்.  பொதுவாகப் பெரியோர்களே நிச்சயம் செய்கின்றனர்.  அதன் பின்னரே மணமகனுக்கு முறைப்படி தெரிவிக்கப்படுவதாய் ஐதீகம். அதனாலேயே இந்தக் காசி யாத்திரையை எல்லா சமூகத்தினரும் விடாமல் கடைப்பிடிக்கிறாங்களோனு நினைக்கிறேன். :)))))

முன்பெல்லாம் மாணவன் குருகுலத்தில் படித்து வந்தான். ஸமாவர்த்தனம் என்னும் கான்வகேஷன் நடந்த பின்னரே காசிக்கும் யாத்திரை சென்று வருவான். காசியாத்திரை போய் வரும் கட்டத்தில் மாணாக்கனை "ஸ்நாதகன்" எனச் சொல்கின்றனர்.  படிக்கும் காலத்தில் மாணவன் குருவுக்கு அடங்கியவனாக பிக்ஷை எடுத்து உணவு உண்ணும் வழக்கத்தோடு இருந்து வந்தான்.  வயிறு நிறையச் சாப்பிடலாம்.  ஆனால் அவற்றில் புலனை ஈர்க்கும் விஷயங்கள் இருத்தல் கூடாது.  ஒற்றை வேஷ்டி தான் கட்டிக் கொள்ள வேண்டும்.  வெற்றிலை, பாக்கு,போன்றவையோ சந்தனம் போன்ற வாசனாதித் திரவியங்களோ, பயன்படுத்துதல் கூடாது.  இப்போதும் நியம நிஷ்டையோடு இருக்கும் பிரமசாரிகள் வெற்றிலை, பாக்குப் போட மாட்டார்கள்.  உணவின் ருசியைக் குறித்துக் குறை சொல்ல மாட்டார்கள். ஏனெனில் சுகத்தில் மனம் போக ஆரம்பித்தால் கல்வியில் குறைபாடு ஏற்படும்.  பனிரண்டு வருஷங்கள் இப்படி இருந்து குருகுல வாசத்தை முடித்த மாணவனை கிரஹஸ்தாசிரமம் ஏற்க வேண்டும் என்பது தர்ம சாஸ்திரம் சொல்லும் ஆலோசனை.  ஆகவே அவன் இல்லறம் ஏற்க வசதியாக இப்போது ஆடை, மாலை, சந்தனம், குங்குமம், குடை, தடி, விசிறி, செருப்பு போன்றவை பயன்படுத்துவதோடு வாசனாதி திரவியங்களும் பயன்படுத்துவான்.  அவன் படித்தவன் என்பதை உலகோருக்குக் காட்டும் வண்ணம் கையில் ஒரு புத்தகம், (முன் காலங்களில் சுவடிகள்) இருக்கும்.  பார்க்கப் போகும் பெண்ணின் கண்களுக்கு அழகனாகத் திகழ வேண்டாமா?  ஆகவே அவன் தன்னைத் தானே அழகு படுத்திக்கொள்வதோடு உறவினரும் உதவுகின்றனர்.  ஆசாரியரும் இனி அவனுக்கு ஒற்றை வேஷ்டி தேவையில்லை எனப் பஞ்சகச்சம் பரிந்துரைக்கிறார்.

இல்லறம் விரும்பும் மாணவன் தானாகப் பெண்ணைக் கேட்டுப் பெற முடியாது என்பதால் தக்கவர்களை அணுகி அவர்கள் மூலம் பெண்ணைத் தேர்ந்தெடுக்கிறான்.  அப்போது தான் பெண்ணின் தகப்பனார் அவன் குலம், கோத்திரம் மட்டுமல்லாது படிப்புப் போன்ற தகுதிகளையும் அவன் விருப்பத்தையும் நன்கு அறிந்து கொண்டு தான் தன் பெண்ணை அந்தப் பிள்ளைக்கே தருவதாக ஒத்துக் கொள்கிறார்.  ஆனானப்பட்ட பரமசிவனுக்கே சப்தரிஷிகள் அனைவருமாகச் சென்று ஹிமவானிடம் பெண் கேட்க வேண்டி இருந்ததே! பெண்ணைக் கொடுப்பதன் மூலம் அத்தனை நாட்கள் பெண்ணிடம் தனக்கிருந்த உரிமையை  அகற்றி மணமகனிடம் ஒப்படைக்கிறார் பெண்ணின் தந்தை.  இதுவே பரதேசிக் கோலம் என்று இன்றைய நாட்களில் ஒரு கேலிக்கூத்தாக மாறிவிட்டிருக்கிறது.  உண்மையில் பெண்ணை உரியவரிடம் ஒப்படைக்கும் ஒரு நிகழ்வே காசியாத்திரை அல்லது பரதேசிக்கோலம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.  இத்தோடு ஸமாவர்த்தனம் நிறைவு அடைகிறது.  அடுத்து டும் டும் மேளம் கொட்டிக் கல்யாணச் சேதிதான்.


ஹிஹிஹி, படத்துக்கு மன்னாப்புக் கேட்டுக்கிறேன்.   திட்டாதீங்க. யாருக்கானும்  பிடிக்கலைனா எடுத்துடறேன். :)))))) இங்கே எடுக்க முடியாது.  மன்னாப்பு, மன்னாப்பு! 

காசியாத்திரை எனப்படும் பரதேசிக் கோலம் குறித்த விளக்கங்களுக்கு நன்றி காமகோடி தளம். 


காசியாத்திரை.jpg
360.gif

Geetha Sambasivam

unread,
Aug 21, 2013, 5:33:26 AM8/21/13
to மின்தமிழ்
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்!


மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே
மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்

Inline image 1

இந்தக் காசியாத்திரை என்னும் பரதேசிக் கோலம் பெரும்பாலான சமூகங்களின் பின்பற்றப் படுகிறது. ஆனால் சில சமூகங்களில் பெண்ணின் தந்தைக்குப் பதிலாக சகோதரர் சென்று மாப்பிள்ளையை அழைத்து வருகிறார்.  ஆயிற்று.  இப்போ நாம் நடத்தும் கல்யாணத்திலே காசியாத்திரை முடிஞ்சு மாப்பிள்ளைக்குப் பெண்ணைத் தரேன்னு பெண்ணின் அப்பா உறுதி மொழி கொடுத்துட்டார்.  அடுத்தது இப்போப் பெண் வரணும். அடுத்து மாலை மாற்றல் நடக்கும்.  தாய்மாமன்கள் மாலை எடுத்துக் கொடுக்கப் பிள்ளையும், பெண்ணும் மாலை மாற்றிக் கொள்வார்கள். அதன் பின்னர் பெண்ணின் கையைப் பிள்ளையின் கையில் கொடுத்துப் பிடிக்கச் சொல்வார்கள்.  இதிலே சிலருக்கு அபிப்பிராய பேதங்கள் இருக்கின்றன.  இப்போத் தான் பெண்ணும், மாப்பிள்ளையும் முதல் முதல் ஒருவர் கையை  ஒருத்தர் பிடிக்கணும்.  ஆனால் மிகவும் சாஸ்திரங்களை ஆராய்ந்து பார்க்கும் சிலர் விவாஹங்களில் காசி யாத்திரை எனப்படும் பரதேசிக் கோலமும், மாலை மாற்றுதலும், பெண்ணும், பிள்ளையும் பாணிக்ரஹணத்துக்கு முன்னர் ஒருவர் கையை மற்றவர் பிடிப்பதும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர். அவர்கள் கருத்து முதன் முதல் பெண்ணும், பிள்ளையும் கையைப் பிடிக்கையில் லக்னம் நன்றாக இருக்க வேண்டும் என்றும், சுப முஹூர்த்த லக்னத்திலேயே கையைப் பிடிக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர்.  மேலும் மாலை  மாற்றுதலும், ஊஞ்சலும்  கூடத் திருமணம் முடிந்த பின்னரே நடக்க வேண்டும் என்பதும் அவர்கள் கருத்து.  ஏனெனில் இதற்குப் பின்னரும் திருமாங்கல்ய தாரணம் ஆனாலும் திருமணங்கள் நின்றிருக்கின்றன என்பதால் முதலிலேயே இதை எல்லாம் செய்யக் கூடாது. பின்னர் பெண்ணின் வாழ்வும், பிள்ளையின் வாழ்வும் பாதிப்புக்கு ஆளாகலாம் என்பது அவர்கள் கூற்று.


ஏனெனில் திருமாங்கல்யதாரணம் என்பது ஒரு சடங்கே தவிர அதற்கு வேத பூர்வமான மந்திரங்கள் கிடையாது.  வெறும் ஸ்லோகம் தான் என்கின்றனர்.  வேத பூர்வமான மந்திரங்களைச் சொல்லி நடக்கும் சப்தபதி ஆனாலே திருமணம் ஆனதாக அர்த்தம்.  அதற்கு முன்னர் திருமணம் நடந்துவிட்டதாகச் சட்டத்திலேயே இல்லை. மேலும் திருமாங்கல்ய தாரணம் ஆனதும் மொத்த விருந்தினரும் கலைந்தும் சென்றுவிடுகின்றனர்.  உண்மையான விவாகச் சடங்குகள் பின்னரே நடப்பதால் அவற்றுக்கு சாட்சிகள் இல்லை.  நல்ல வைதீகமான பெரியோர்கள் இந்தச் சடங்குகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.  ஆகவே முஹூர்த்த காலம் கழியும் முன்னரே சப்தபதி உட்பட எல்லா முக்கியச் சடங்குகளையும் செய்வதே உண்மையில் விவாஹம்.  நாம் ஒவ்வொன்றாகப் பார்க்கத் தான் போகிறோம்.  அப்போது அவற்றின் முக்கியத்துவம் நமக்கும் புரியும். மேலும் முன்னெல்லாம் மாயவரத்துக்கு அருகிலுள்ள கொறநாடு என்னும் கூறைநாட்டில் சிவப்பில் கட்டம் போட்ட நூல் புடைவைகளையே திருமணத்திற்குப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். கைத்தறி நெசவில் நெய்யப்பட்ட அந்தப் புடைவை தான் திருமணத்தின் போது பெண்ணுக்குக் கட்டிக் கொள்ளப் பிள்ளை வீட்டாரால் கொடுக்கப்படும்.  இப்போது போல் பட்டெல்லாம் இல்லை.  கூறை நாட்டுப் புடைவை என்பதால் கூறைப்புடைவை என்று சொல்ல ஆரம்பித்தது இன்று அதன் பெயரே கூறைப்புடைவை என்றே ஆகிவிட்டது.  கொற நாட்டுக் கூறைப்புடைவை என்பதை அனைவருமே மறந்தாச்சு. 

சரி, இப்போ மேலே உள்ளவை எல்லாம் நமக்கு  அறியாத விஷயங்கள் என்பதால் அறியத் தந்தாச்சு.  ஆனால் நாம் எடுத்துச் செய்யும் கல்யாணத்தில் பெண் வீட்டுக்காரங்களும், பிள்ளை வீட்டுக்காரங்களும், முதலில் பெண்ணும், பிள்ளையும் கையைப் பிடிக்கும் முன்னர் மாலை மாற்றிக் கொள்ள அழைத்துச் சென்றுவிட்டனர்.  அதோ, பெண்ணின் தாய் மாமனும், பிள்ளையுடைய தாய் மாமாவும் தயாராக வந்து விட்டனர்.  முன்னெல்லாம் சின்னக் குழந்தைகளாக இருந்ததாலும், மாலைகள் சில சமயங்களில், பல சமயங்களிலும் குழந்தைகளை விடப் பெரியதாக இருந்ததாலும் தாய் மாமாக்கள் குழந்தைகளைத் தோளில் சுமந்து கொண்டு மாலை மாற்ற வைப்பார்கள்.. ஆனால் சில வீடுகளில் இன்றும் அதை ஒரு கட்டாயமாகக் கடைப்பிடிப்பது பார்க்கவே சரியாய் இல்லை.  நாம்  நடத்தற கல்யாணத்திலே மாமாக்கள் மாலையை எடுத்துக் கொடுக்கிறாங்க.  அவங்க மாலை மாத்தறாங்க.  ஆஹா, இது என்ன, பெண் மாலை போடப் போடுகையில் மாப்பிள்ளையின் தோழர்கள் பிள்ளையை இழுத்துக் கொண்டு பின்னே, பின்னே, செல்கின்றனரே!  ஆம், இது ஒரு விளையாட்டு.  கல்யாணத்தின் நாணம், சங்கோஜம் ஆகியவை இருவருக்கும் இல்லாமல் சகஜ பாவம் வரவழைக்க வேண்டி நடத்தப்படும் சடங்கு எனலாம்.  பெண்ணின் தோழிகள் பெண்ணை முன்னே அழைத்துச் சென்று வம்படியாக மாப்பிள்ளையைக் குனிய வைத்துப் பெண்ணை மாலையைப் போட வைப்பார்கள். அடுத்துப் பெண்ணின் முறை.  பெண் இப்போது பின்னே செல்ல, மாப்பிள்ளை மாலையைப் பெண்ணின் கழுத்தில் தூக்கி எறிய, பெண்ணின் தோழிகள் ஒத்துக்கொள்ளாமல் வாதம் செய்யப் பின்னர் பிள்ளை மீண்டும் பெண்ணை அருகே வரச் சொல்லி மாலையைப் போடுகிறார்.  கூப்பிட்டதும் போகிறாயானு தோழிகள் கத்தப் பெண்ணோ சிரிக்கிறாள்.

Inline image 2


மாலை மாற்றி ஆச்சு;  நாதஸ்வரத்தில் நையாண்டிப் பாடல்! மாலை மாற்றினாள், கோதை மாலை மாற்றினாள்.  என்று பாடுகிறார்கள் நாதஸ்வரக் காரர்கள். இங்கே ஒருத்தர் அதைப் பாட அதை நையாண்டி செய்கிறார் மேளக்காரர். அதற்குள்ளாகப் புரோகிதர்கள் முஹூர்த்த நேரம் நெருங்குவதாக எச்சரிக்கை கொடுக்கப் பிள்ளையின் கையில் பெண்ணின் கையை ஒப்படைத்து ஊஞ்சலுக்கு அழைத்துச் செல்கின்றனர்.  வலக்கால் முன்னே வைத்துப் பெண்ணும், பிள்ளையும் ஊஞ்சலுக்குச் செல்கின்றனர்.  மாலை மாற்றுதல் என்பது சாஸ்திரம் அல்ல என்றாலும் சாஸ்திரத்தைச் சேர்ந்ததொரு சம்பிரதாயமாகக் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.  மேலும் ஆண்டாள் தினம் ஒரு மாலை கட்டி அரங்கனுக்குச் சாற்றியதையும், பார்வதி மாலை கட்டி பரமேஸ்வரனுக்குக் காத்திருந்ததையும் அறிந்திருக்கிறோம்.  ஆகவே மாலை மாற்றுதல் முக்கியத்துவம் பெறுகிறது.  பெரும்பாலான தஞ்சை ஜில்லாக் கல்யாணங்களில் இந்த மாற்று மாலை என்பது பச்சையும், வெள்ளை நிறப் பூக்களையும் வைத்துக் கட்டப்பட்டதாக இருக்கும். பொதுவாக முல்லை, மல்லிகை போன்ற பூக்களால் ஆன மாலையையும் மாற்று மாலைகளாகப் பயன்படுத்துவார்கள்.  அடுத்து ஊஞ்சல்.



2013/8/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>
காசியாத்திரை.jpg
kasi yathirai.jpg
ராமன்.jpg
360.gif

Geetha Sambasivam

unread,
Sep 1, 2013, 11:35:18 PM9/1/13
to மின்தமிழ், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், இல்லம் (your HOME), Geetha Sambasivam
நண்பர்கள் சிலரின் வேண்டுகோளுக்காகக் கீழே உள்ள பாடல் தொகுப்பு இணைக்கப் படுகிறது.

மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
பூ மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்

மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே

மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
ஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட

அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால்

மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
பூ மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்


மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்

கீழே உள்ள ஊஞ்சல் பாட்டு மரபு விக்கியில் இருந்து எடுக்கப்பட்டது.




சித்திரமான நலுங்கைசிறப்பாக யானுரைக்கப்
பத்தியும் மிகத்தருவாய் பாலதொந்திக் கணபதியே.

தங்கமே இந்தநிலமே சாமி
சுந்தராபுரி செல்வமே

மதுராபுரி வீதியிலே சாமி
மதிச்சால் ஓடிவாரும்

உரியில் வெண்ணைதிருடி சாமி
மத்தாலடி பட்டீர்

மதுராபுரி வீதியிலே சாமி
மதிச்சால் ஓடிவாரும்

உரியில்வெண்ணை சிந்திற்றோ சாமி
உன்கமலமுகம் வாடிற்றோ
சித்திராபுரி வீதியிலே சாமி
சிரித்தால் ஓடிவாரும்
கட்டகய ரில்லையே சாமி
உனையடிக்க மனமில்லையே
துஷ்டத்தனம் வெறுத்து சாமி
துரையே ஓடிவாரும்
நெற்றிசுற்றி யசைய சாமி
முகம்வேர்க்க பெண்கள் நகைக்க
மங்களஞ்சேர் கிருஷ்ணா சாமி
மாயவரே ஓடிவாரும்

தங்கமே இந்தநலமே சாமி
சுந்தராபுரி செல்வமே
அஷ்டாக்ஷரப் பொருளே சாமி
அடியேன் ஓடிவாரேன்

வேறு.
நலுங்கிடராம்மா மதுரைமீனாக்ஷிக்கு
நலுங்கிடராம்மா

ஆதிறட்நாலுபொய்கை அபரஞ்சிபீண்டிலா
கோதைநாச்சியாரம்மா கொலுண்டாக்கா நலுங்கிட
மல்லிகைமுல்லையுடன் மணமுள்ளயிருவாட்சி
செண்பகமலருடன் சிவசுந்தரர்க்கு நலுங்கிட

வேறு.

நலுங்கிடவாரும் பிராணநாதா நாழியாச்சுதே
அம்மிமிதித்து அருந்ததிப்பார்த்து நலுங்கிட

அழுந்தத்தாலி கட்டினீரே
பன்னீருஞ்சந்தனமும் பரிமளமிகப்பூசி நலுங்கிட
பூச்சக்ரவர்த்தி புண்ணியபுருஷா
உனக்குநான் செய்குவேன் நலுங்கிட

வேறு.

ஸ்ரீராம ஜெய ஜெய சீதாமனோகர
காருண்யசாகர கருணா ஜெய ஜெய ஸ்ரீராம
சீதையாரும் ரகுபதியும் சிங்காசன மேலிருத்தி
நலுங்கிட வேணுமென்று நாகரீகமாத ரெல்லாம் ஸ்ரீ
புண்யமான பாத்திரத்தில் புட்பமதை தானெடுத்து
கன்னிமார்கள் கொண்டுவந்து காணவந்தாரகுபதியை ஸ்ரீ
மந்தாரைமுல்லைசரம் மருக்கொழுந்துபிச்சிச்சரம்
முல்லைமலரல்லிச்சரம் முடித்தார்களிருபேரும் ஸ்ரீ

(Missing one page here)

பஞ்சபூதப்பலகை கப்பலாய் சேர்த்து, பாங்கான வோங்கார பாய்மரமும்கட்டு, அஞ்செழுத்தைக் கட்டிசரக்காக வைத்து, செந்தக்கால்சரக்கை சீனியாய் வைத்து செம்மாந்திகளும் ஆனந்தவெள்ளம் கண்டமாய்ப்போகுதே அலங்காரக் கப்பல்.

பண்டுளமாலையணி பலராஜருடன் கப்பலுக்கு, அந்தமுள்ள தீவுகளில் இருக்கும் அதிசயமாய் சரக்குகளைகொண்டு மிகத்தானேத்தி கோலவழிகப்பல் நடந்திடவே

முடுகு

சந்தணஞ் செஞ்சந்தணஞ் சூதாலிங்கம் தவறாதகருநாவிவெண்ணாவிவீரம் பண்ணானசாரம் பவவீரகுதிரை பாஷாண வெள்ளைபாஷாண எரியன்பாஷாண குக்கில்நேராணகெந்தகம் நெல்லிக்காய் கெந்தகம் ரோதகட்டாழை கிழவீரங்கி கிழமூக்கு தேவதாரக்கட்டையீய ஊசிக் கரந்தமிலவங்க வங்கங் கருவங்கத் தங்கந்துய்யமாய் பூலங்கெட்டம் பூலாங்கிழங்கும் கொம்பரக்கு மெழுகுங்கோறோசனை நல்ல குங்குமப்பூவு,

வெட்டுடாவெட்டு மரமும்முத்துக்கள் நட்டு ஈட்டம் பாத்து வெங்கலப்பானையை வண்டிமேலேத்து அஞ்சங்கி பீரங்கிடண்டடித்து, வனபேரி கனபேரிகை வாங்கிகோடு, மாணாம்புச்சாவடிக் கோபுரங்கட்டி, மலையேரிப் பார்க்கலாம் வைகுண்ட கப்பல்.

சம்மந்தி ஏசல்

அடிப்பட்டாளே சம்மந்தி உதைப்பட்டாளே, வடக்குத் தெருவிலே வாழைக்காய்திருடி வாழைமட்டையால் பூசைபட்டாளே, அடிப்பட்டாளே சம்மந்தி உதைப்பட்டாளே தெற்குத்தெருவிலே தேங்காய் திருடி தென்ன மட்டையால் பூசைகள் பட்டாளே, அடிபட்டாளே சம்மந்தி உதைப்பட்டாளே மேலத்தெருவிலே மிளகாய்திருடி பனைமட்டையால்

(missing one page here)

இராகம் பைரவி.

வச்சிரவைடூரியத்தால் பலகைசேர்த்து
மரகதத்தினாலிழைத்த கால்கள் நாட்டி
உச்சிதரத்தினம்பதிக்க கொடுங்கைபூட்டி
உகந்துசாரங்கராச றாடீரூஞ்சல்
மகண்டமகரகண்டி பதக்கமின்ன
காதுதோடுகம்மல்சரம் பளபளென்ன
சங்குசக்கரங்கை சாரங்கம்தரித்தநாதன்
மங்கைகோமளவல்லியுடன் மனமகிழ்ந்து
பங்கஜாட்சருக்கும்பிதா ஆடீரூஞ்சல்
பார்புகழுங்குடந்தைவாச றாடீரூஞ்சல்

வேறு

செண்டாடினாள் ரங்கநாயகி ஸ்ரீநிவாசருடன்
மண்டலமெல்லாம் புகழும் மங்கைநாயகருடன்
குண்டுமல்லிகை குமுகுமெனவே குளிரபந்து களவரெடுக்கவே
மண்டலமெலாம் புகழும் ரங்கநாயகருடன்
தங்கவொட்டியாணம் தளதளென சரிகைப்புடைவை பளபளெனவே
நெத்தியிலிட்டகஸ்தூரிபொட்டு நிலைகட்டிகளையசையவே

கதவுதிறக்கிற பாட்டு

1. செந்திருவதனம்பெண் மங்கயரேவுந்தன்
செம்பொன்கதவைத் திறமானேயடி
இன்பக்குயிலன்னமே இப்போதே

2. கதவைத்திறவென்று யிதமாகக்கூறினீர்
கட்டழகாவுந்தன் ஊரென்னசுவாமி
உமக்கிட்டதிரு நாமத்தின்பேரென்ன

3. பேரென்னவெனக்கேட்பார் மகளேயெந்தன்
காரணிவைகுந்தத் தானடிவளர்
சோரநாதக் கள்வநானடி


http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-11-28-19-55-14/2008-11-28-19-55-57/2009-10-13-14-53-28/2009-10-13-14-53-58

நன்றி மரபு விக்கி



Geetha Sambasivam

unread,
Sep 1, 2013, 11:36:54 PM9/1/13
to மின்தமிழ்

கல்யாணத்தில் முஹூர்த்தம் முடிந்ததும் விருந்து மெனு!

அரிசி, தேங்காய் சேர்த்து அரைத்த வெல்லப்பாயசம்


தயிர்ப் பச்சடி

ஸ்வீட் பச்சடி

வாழைக்காய் கறி(பாரம்பரிய முறையில்)

பீன்ஸ் பருப்பு உசிலி

அவியல்

வாழைக்காய்  வறுவல்/சேனை வறுவல்

அப்பளம்

பதிர்பேணி சுண்டக் காய்ச்சிய குங்குமப் பூப் போட்ட பாலோடு

முட்டைக்கோஸ் வடை

லட்டு

வாழைப்பழம்

மாங்காய் ஊறுகாய்


சாதம், பருப்பு, நெய்

கத்திரிக்காய், பறங்கிக்காய், பூஷணிக்காய், குடைமிளகாய் சாம்பார்

மோர்க்குழம்பு, வெண்டைக்காய் போட்டு

பைன் ஆப்பிள்  ரசம்

மோர், தயிர் மண் குடுவைகளில்

படத்துக்கு நன்றி: கூகிளார்!

எல்லாரும் இருந்து நல்லா வயிறாரச் சாப்பிட்டுட்டுப் போங்கப்பா


கன்னூஞ்சல்  ஆடி  இருந்தார்(2)
காஞ்/ச/ன   மாலை  மன மகிழ்ந்தார் (2)
பொன்னூஞ்சலில்  பூரித்து  பூஷணங்கள் தரித்து(2)
மன்னாதி  வேங்கடேஷன்  அலமேலு  மங்கையுடன்  (கன்னூ)
(ஈஸ்வரனார்  இடத்தில்   ஆ/சை/கள்  ரொம்ப  வைத்து

அசைந்து  சங்/கி/லி   ஆட  உசந்து  ஊர்வசி  பாட
இசைந்து  தாளங்கள்  போட/ஈஸ்வ/ர/னார்  கொண்டாட (கன்னு)

உத்தமி  பெற்ற  குமாரி/நித்ய ஸர்வா/லங்காரி
பக்தர்கள்  பாப  ஸம்ஹாரி  பத்ம  /முக/ஒய்/யாரி     (கன்னூ

லாலி   சாரங்கேச   லாலி   சாரங்கேச

லாலி  ஜகதீசா  லாலி   ஜகதீசா
லாலி  கோ/மள   வல்/லீசா 

சாம முதல்   வேதங்களை (2)  சங்கிலியால்  கட்டி(2)
தாளமுத்து  மாலைகளை   (2) சரம் சரமாய் பூட்டி     (லாலி)

ஓங்கார  ப்ரணவம்தனை   (2)  ஊஞ்சலாய்  அமைத்து
உத்தமர்க்கு  உத்தமராம்(2)  ஆடீர்   ஊஞ்சல்

பிள்ளை  --இந்த  பிள்ளை தனை(2)  பெற்றோம்  என்று  களிக்க
பெருமையில்  யசோதை   இன்னும்   (2)  ஒரு  சுற்று  பெருக்க   (லாலி)

 அரவன்  முடி  மேல்  நின்று  அபிநயங்கள்  பிடிக்க(2)
அரங்க மா நகரி ல் , வந்து  (2)  காலை  நீட்டி  படுத்தான்  ( லாலி)

தண்ணார்தன்  வளைநிழலில்(2)
தலைவன்  முகம்   காண
தந்திரங்கள் கோ தை  செய்ய (2)  ஆடீர்  ஊஞ்சல்  (லாலி)

பாலாலே  காலலம்பி(2)  பட்டாலே  துடைத்து(
மணி தேங்காய்  கை கொடுத்து(2) மஞ்சள் நீர் சுழற்றி-----(லாலி)

கொத்தோடு வாழை மரம்(2) கொண்டு வந்து நிறுத்தி(2)
கோப்புடைய  பந்தலின் கீழ்(2) ஆடுவதைக் காணீர் (லாலி)

தங்கமய பந்தலிலே (2) வெள்ளி மணி ஊஞ்சல்(2)
ரங்கனுடன்  ஆண்டாளும்
(சொக்கனுடன் மீனாட்சி)   ஆடுவதைக் காணீர்  (லாலி)

முத்துமணி  பந்தலிலே /ரத்ன மய ஊஞ்சல்(2)
ஸ்ரீ ராமருடன் சீதையுமே (2) ஆடுவதைக் காணீர்  (லாலி)

ஜோதிர்மய பந்தலிலே(2) புஷ்ப மய ஊஞ்சல்
கோதையுடன் ஸ்ரீ ரங்கன் ஆடுவதைக் காணீர் லாலி



Geetha Sambasivam

unread,
Sep 6, 2013, 5:31:13 AM9/6/13
to மின்தமிழ்
ஆஹா, மங்கள மேளம் கொட்டி முழங்க மணமகள் வந்தாள் தங்கத் தேரிலே!
இந்த மாலை மாற்றுதல், ஊஞ்சல், பெண்ணின் கையை மாப்பிள்ளை பிடிப்பது போன்றவை அனைத்துமே பாணிகிரஹணத்துக்குப் பின்னர் நடத்த வேண்டும் என்பது கலாசாரப் பற்றுடைய வைதீக/ஆன்மிகவாதிகளின் கருத்து.  ஆனால் பிராமண சமூகத்தைத் தவிர மற்ற சமூகங்களில் இவை எல்லாம் பின்னாலேயே நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. பிராமணர்களில் மட்டுமே இவற்றை முன்னால் நடத்திவிடுகின்றனர். இனி நாம் நடத்தும் கல்யாணத்தைப் பார்ப்போம்.  பெண்ணும், பிள்ளையும் மாலை மாற்றிக் கொண்டு ஒருவர் கையை இன்னொருவர் பிடித்துக் கொண்டு ஊஞ்சலுக்குச் செல்கின்றனர்.  ஊஞ்சல் சிறிது நேரம் ஆட்டப்பட்டு கன்னூஞ்சல் பாட்டுக்கள் குழுமியிருக்கும் உறவினராலும், நாதஸ்வரக் காரர்களின் நையாண்டி மேளத்தாலும் பாடப்படும். பின்னர் மீண்டும் புரோகிதர் நேரப் பற்றாக்குறையை நினைவூட்டுவார்.  சில கல்யாணங்களில் முஹூர்த்தம் நடக்க நிறையவே நேரம் இருக்கும். அப்போது கொஞ்சம் சாவகாசமாகவே அனுபவித்துச் செய்வார்கள்.  பலருக்கும் அவரவர் திருமண நினைவுகள் வரும்.  திருமணம் ஆகாதவர்களுக்கோ அவரவர் திருமணத்தில் எப்படி நடக்க வேண்டும் என்று யோசித்துக் கொள்வார்கள்.

இப்போது பெண் வீட்டு, பிள்ளை வீட்டின் மூத்த சுமங்கலிகளால் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் திருஷ்டி கழிக்கப் படும்.  இதைப் பச்சைப்பிடி சுற்றுதல் என்பார்ர்கள். இது ஒரு விதத்தில் இரு வீட்டுப் பெண்டிரும் கலந்து கொள்ளும் நிகழ்வாகவும், அதே சமயம் சாஸ்திர சம்மதம் பெற்றும் விளங்குகிறது.  ஆபஸ்தம்ப ரிஷி திருமணங்களில் ஆண்கள் செய்யும் காரியங்கள் மட்டுமில்லாமல் பெண்கள் பங்கு பெறும் விதமாகவும் இருந்தாக வேண்டும் எனக் கூறி இருப்பதாகச் சொல்வார்கள். இன்னொரு விதத்தில் பஞ்சபூதங்களின் பிரதிநிதியாக மாலை, ஜலம், தீபம், பாடல்கள், அன்ன உருண்டைகள் ஆகியவற்றின் மூலம் பெண்ணையும், மாப்பிள்ளையையும் இயற்கையோடு இயைந்ததொரு இல்வாழ்வுக்குத் தயார் செய்து, இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளில் இருந்து காக்கும்படி வேண்டிக் கொண்டு பஞ்சபூதங்களையும் பிரார்த்திப்பதாய்க் கொள்ளலாம்.  இதில் நீர் ஆகிய அப்பு செல்வத்தையும், தீபம் ஆகிய அக்னி அறியாமையை அகற்றி ஜோதியாகிய அறிவையும்/ஞானத்தையும், மலர்கள் விண்ணையும், பாடல் வாயுவையும் குறிப்பதோடு நீண்ட ஆயுளையும், திறமையையும் ஏற்படுத்தும்.  அன்ன உருண்டைகளோ பூமியில் விளையும் உணவுப் பொருட்களின் பிரதிநிதியாகச் செயல்பட்டு மணமக்களின் வாழ்க்கையில் செழிப்பும், உறுதியாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டும்.

இதிலே சொல்லி உள்ளபடி முதலில் பெண்ணின் அம்மா, பிள்ளையின் அம்மா இருவரும் மணப் பெண், மணமகன் கால்களில் பால் தெளித்து, அவர்கள் இருவருக்கும் பால், பழம், சர்க்கரை சேர்த்து உண்ணவும் கொடுப்பார்கள்.  அதன் பின்னர் மஞ்சள் பொடி, குங்குமம் ஆகியவற்றால் பிடித்த அன்ன உருண்டைகளை வைத்துப் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் சுற்றிப் போடுவார்கள்.  பிரக்ஷிணமாக மூன்று முறையும், அப்பிரதக்ஷிணமாக மூன்று முறையும் சுற்றுவார்கள். எல்லாத் திசைகளிலும் போடுவார்கள்.  ஒரு சிலர் விளையாட்டாக அங்கே நிற்பவர் மேல் விட்டு எறிவதும் உண்டு. ஒரே கலகலப்பும், விளையாட்டுமாக இருக்கும். பெண் வீட்டுக்காரர்கள் பிள்ளை வீட்டுக் காரங்களையும், பிள்ளை வீட்டுக்காரங்க பெண் வீட்டினர் மேலும் எறிந்து விளையாடுவதுண்டு.  பெண் வீட்டினரில் ஐந்து பேர் எனில், பிள்ளை வீட்டினரிலும் ஐந்து பேர் சுற்றுவார்கள்.  சுற்றி முடிந்ததும், பெண்ணின் அம்மா இதற்கென வாங்கி இருக்கும் அரிக்கும் சட்டி, அல்லது திருப்பத்தூர் வாணாயில் விளக்கின் முகத்தை வைத்துப் புடைவைத் தலைப்பால் மூடிக் கொண்டு செல்ல, பிள்ளையின் அம்மா கல்யாணத்துக்கு வாங்கி இருக்கும் செம்பில் நிறைய நீர் எடுத்துக் கையால் சுற்றிக்கொண்டே பின்னே வர, பெண்ணின் அத்தை, பாட்டி அல்லது பிள்ளையின் அத்தை, பாட்டி எவரேனும் ஒருவர் அல்லது இவர்களில் எவர் மூத்தவரோ அவர் பின்னே செல்வார்.


அப்போது பெண்ணின் கையிலும், பிள்ளையின் கையிலும் மட்டைத்தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், 11௹, 21௹, 51௹ என அவரவர் சக்திக்கு ஏற்பப் பணம் கொடுத்திருப்பார்கள்.  சுற்றி முடிந்ததும், மிச்சம் இருக்கும் சாத உருண்டைகளை அந்தச் செம்பு நீரில் கரைத்துப் பெண்ணின் அம்மாவும், பிள்ளையின் அம்மாவும் ஆரத்தி போல் சுற்றிக் கீழே கொட்டுவார்கள்.  பெண், பிள்ளை இருவர் கையிலும் கொடுக்கப்பட்ட தேங்காய் வெற்றிலை, பாக்கை மேளகாரர்களுக்குக் கொடுக்க வேண்டும்.  அதன் பின்னர் பொதுவாகப் பெண்ணின் கையைப் பிள்ளை பிடித்துக் கொண்டு தான் உள்ளே மணமேடைக்குச் செல்வது வழக்கம்.  என்றாலும் ஒரு சில குறிப்பிட்ட ஊர்களில் முக்கியமாய் வட ஆற்காடு மாவட்டம்/சேலத்தில் சில குடும்பங்களில் பெண்ணின் கையைப் பெண்ணின் மாமியாரும், பிள்ளையின் கையைப் பிள்ளையின் மாமியாரும் பிடித்துக் கொண்டு மணமேடைக்கு அழைத்துச் செல்வார்கள்.  இது பிராமண சமூகத்தில் நடப்பது.  மற்ற சமூகங்களில் பிள்ளையின் சகோதரியும், அவள் கணவரும் முறையே பெண்ணையும், மாப்பிள்ளையையும் மணமேடைக்கு அழைத்துச் செல்வார்கள். இனி வைதீகர்களின் வேலைகள் ஆரம்பிக்கும்.  அதைக் கொஞ்சம் விரிவாகவே பார்க்கப் போகிறோம்.  இது தான் மிக முக்கியமானது. :)



Geetha Sambasivam

unread,
Sep 6, 2013, 5:34:04 AM9/6/13
to மின்தமிழ்
குணமிருக்கும் குலமகளே வா, வா!
Inline image 1

வல்லி நினைவூட்டினாங்க.  கல்யாணப் பிள்ளை காசியாத்திரைனு செல்கையில் பிள்ளையின் அம்மா, அப்பா, மாமாக்கள், அத்தைகள் போன்ற உறவினரும் கூடச் செல்வார்கள்.  பிள்ளையின் மாமாவோ அத்தை கணவரோ குடை பிடித்துச் செல்வார்கள்.  பிள்ளையின் அம்மா கையில் கூரைப்புடைவை மற்றும், திருமாங்கல்யம் கோர்க்கப்பட்ட மஞ்சள் கயிறு,  முஹூர்த்தப் பருப்புத் தேங்காய் உள்ள  தட்டு இருக்கும்.  கனம் அதிகமாக இருந்தால் பிரிச்சு பருப்புத் தேங்காயை ஒரு தட்டிலும், புடைவை, திருமாங்கல்யம், பெண்ணுக்கு பிள்ளை வீட்டினர் நகை போட்டால் அவை இன்னொரு தட்டிலும் வைத்து முக்கிய உறவினர் எடுத்துச் செல்வார்கள்.  பிள்ளையின் அம்மா கையில் கட்டாயமாய் கூறைப்புடைவை இருக்கும். பிள்ளையின் சகோதரியோ மாலை தன் சகோதரனும், சகோதரன் மனைவியும் நலுங்கில் விளையாடுவதற்கான விளையாட்டுப் பொருட்களோடு, சகோதரன் மனைவிக்காகப் புதுச் சேலையும் எடுத்து வைத்து அவற்றை ஒரு தட்டில் வரிசைப்படுத்தி அலங்கரித்து எடுத்து வருவாள்.   இவற்றோடு எல்லாரும் இப்போ மணமேடைக்குப் போயாகிவிட்டது.  இப்போ கன்யாதானம் நடைபெறப் போகிறது.  அனைவரும் கொஞ்சம் கவனமாக இருக்கவும்.

கல்யாணத்திற்கு வந்திருக்கும் நிறைந்த சபையில், பெரியோர்களின் முன்னிலையில் வேத மந்திரங்களின் கோஷத்தோடு நடைபெறும் கன்யாதானம். பெண் இருந்தாலே வீடு முழுமை பெறும் என்பது மறுக்கவோ/மறைக்கவோ முடியாத உண்மை.  இதைத் தான் மநுவும் சொல்லி இருக்கிறார்.  க்ருஹத்தில் முக்கியமானவள் க்ருஹணீ என்னும் பெண்ணுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கார்.  இருங்க, இருங்க, மநு அப்படி எல்லாம் சொல்லலைனு சொல்றவங்களுக்கு!  அதைத் தனியா வைச்சுப்போமா? மநு சொன்னதை யாருமே சரியாப் புரிஞ்சுக்கலை என்பதே உண்மை என்பதோடு இப்போ நிறுத்திப்போம். பெண்ணின் அப்பா பிள்ளையாரை வேண்டிக்கொண்டு மஹாவிஷ்ணுவைப் பூஜிப்பார்.  இங்கே இப்போது மாப்பிள்ளை தான் மஹாவிஷ்ணு சொரூபம்.  ஆகவே மாப்பிள்ளைக்குத் தான் ஆசனம் கொடுத்து வரவேற்று, பெண்ணின் அம்மா துணை செய்ய அவர் பாதங்களை அலம்பித் துடைத்து, பாலிட்டு, சந்தனம் குங்குமம் வைப்பார்கள்.  இதுக்கு எனப் பாலிடும் கிண்ணம்னு வெள்ளியிலே வாங்கி மாப்பிள்ளைக்குக் கொடுத்திருப்பாங்க. பின்னர் கிழக்கே பார்த்துப் பெண்ணின் அப்பா நிற்கப் பிள்ளை எதிரே மாமனாரைப் பார்த்துக் கொண்டு நிற்பார். பெண் தந்தை மடியில் அமர்ந்திருப்பாள். பெண்ணின் அம்மாவும் அருகே இருப்பார்.

இப்போக் கன்யாதானம் நடைபெறுகையில் பெண்ணின் பெயரையும், பிள்ளையின் பெயரையும் மூன்று முறை சொல்லுவார்கள்.  மூன்று முறை சொல்வதன் மூலம் அது முழுமை பெறுகிறதாக ஐதீகம்.  அனைத்துப் பெரியோர்களுக்கும் தெரியும்படியாகப் பெண்ணின் கொள்ளுத்தாத்தா, தாத்தா, அப்பா ஆகியோரின் பெயரை வரிசைக்கிரமமாகச் சொல்வார்கள்.  உதாரணமாக எங்க பெண்ணின் கல்யாணத்தில், என் மாமனாரின் அப்பா பெயர் ஶ்ரீநிவாசன்.  ஆகவே ஶ்ரீவத்ஸ கோத்திர, ஶ்ரீநிவாச சர்மாவின் கொள்ளுப் பேத்தியும், குஞ்சிதபாதம் ஐயரின் பேத்தியும், சாம்பசிவ ஐயரின் பெண்ணும் ஆன என்று சொல்வார்கள்.    அதே போல் பிள்ளை தரப்பிலும் பிள்ளையின் கொள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா ஆகியோரின் பெயர்கள் சொல்லி இன்னாரின் கொள்ளுப்பேரன், இன்னாரின் பேரன், இன்னாரின் மகன் என அறிவிக்கப்படும்.  இவருக்கு எங்கள் மகளை முழு மனதோடு தாரை வார்த்துக் கொடுக்கிறேன்னு அப்பா சொல்வார்.  மாப்பிள்ளைப் பெண்ணை தானம் வாங்கிக் கொள்வார். பின்னர் புதுப்பாயில் அமர்ந்து கொண்டு அக்னி வளர்க்கச் செல்வார்கள்.  பெண்ணின் அப்பா மாப்பிள்ளைக்கு மதுபர்க்கம் என்னும் தயிரில் தேன் கலந்த திரவத்தைக் கொடுப்பார்.  பசுமாடு தானம் கொடுக்கணும்னும் ஐதீகம்.  ஆனால் கொடுக்கிறதில்லை.  இந்த மதுபர்க்கம் தான் மாப்பிள்ளைக்கு ஆகாரம்.  என்றாலும் சிலரோட சம்பிரதாயப்படி இதன் பின்னர் மாப்பிள்ளைக்குச் சாப்பிடவும் கொடுப்பாங்க. எங்களுக்கெல்லாம் பெரிய  நாமம் தான்! :)))) அடுத்து மாப்பிள்ளைப் பெண்ணுக்குச் சில சுத்தி சமஸ்காரங்கள் செய்யணும்.


Inline image 2

அப்போது பெண்ணைத் தகப்பன் மடியில் அமர்த்தி இருப்பார்கள்.  மாப்பிள்ளை மந்திரங்கள் சொல்லிக் கொண்டே தர்ப்பைப்புல்லால் பெண்ணின் புருவ மத்தியைத் தடவி அதை மேற்குத் திசையில் போடுவார். தர்ப்பையால் செய்யப்பட்டதொரு பிரிமணையை/ வளையத்தைப் பெண்ணின் தலையில் வைத்து அதன் மேல் நுகத்தடியை வைப்பார்கள். அதன் மேல் பெண்ணின்கழுத்தில் கட்டப்படவிருக்கும் தாலிக்கயிற்றில் திருமங்கல்யம் கோர்க்கப்பட்டிருக்கிறதை தங்கத் தாலியை அதிலுள்ள இடைவெளியில் வைத்து ஐந்து முறை மந்திரங்கள் ஜபிக்கப்பட்ட நீரை ஊற்றுவார்கள்.  இதை புரோகிதர்கள் சொன்னாலும் அந்த மந்திரங்களைத் திரும்பச் சொல்லிச் செய்வது எல்லாம் கல்யாண மாப்பிள்ளையே.  மந்திரங்களின் பொருள் என்னவென்றால், இந்தத் தங்கம் ஒன்று, பத்தாக நூறாக உன் குடும்பத்தில் பெருகட்டும்.  மந்திரங்களால் ஜபிக்கப்பட்ட இந்தப் புனித நீரால் உன் திருமண வாழ்க்கை/இல்லற வாழ்க்கை மேம்படட்டும். உன் குடும்பம் செழுமை பெற்று வளரட்டும்.  உன் கணவனுக்கு உன்னை நீ அர்ப்பணிப்பாயாக!

ஒரு சிலர் தங்கம் மட்டும் வைத்தால் போதும்.  தாலியை வைக்கணும்னு இல்லைனு சொல்றாங்க.  ஆனால் அந்த நேரத்தில் சுலபமாகக் கிடைப்பது தங்கத் தாலி தான் என்பதால் தங்கத்தாலியையே வைக்கிறாங்கனு நினைக்கிறேன். பின்னர் மணமகன் மந்திரங்கள் ஓதப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட கூறைப்புடைவையைப் பெண்ணிற்குக் கொடுப்பார்.  அதாங்க கூறைப்புடைவை.  அந்தப் புடைவையைக் கட்டிக் கொண்டு பெண் வந்த பின்னரே மற்ற சம்ஸ்காரங்கள் ஆரம்பம்.  இந்தக் கூறைப்புடைவையைக் கட்டிக்கொள்ள/அதாவது கட்டிவிடப் பெண்ணின் நாத்தனாரைத் தான் அனுப்புவாங்க.  இதெல்லாம் ஒருத்தருக்கொருத்தர் இம்மாதிரி நெருங்குவதன் மூலம், உறவின் அந்நியோந்நியம் இன்னும் இறுகும் என்பதற்காக ஏற்படுத்தப் பட்டிருக்கலாம்.  இப்போல்லாம் இது கட்டிவிடனு தனியாகப் பணம் கொடுத்து ஆளை வரவழைக்கிறாங்க.  இன்னும் ப்யூட்டி பார்லர் காரங்களுக்குக் கூறைப் புடைவை கட்டிவிடத் தெரியலை.

ஆச்சு, பெண் புடைவை கட்டிக்கப்போயாச்சு.  இங்கே எல்லாரும் வெட்டி அரட்டை அடிக்காம ஏதோ வேதகோஷம் சொல்லிட்டு இருக்காங்க.  அதுவரை நல்லது.  பெண் புடைவை கட்டிண்டு வரட்டும்.  இப்போத் தான் அனைவராலும் பல முறை விமரிசிக்கப்பட்டு ஏற்கெனவே இதுக்கு விளக்கம் கொடுத்த முக்கியமான மந்திரங்கள் வருகின்றன. அதை கொஞ்சம் விரிவாகவே அடுத்த பதிவில் பார்ப்போம்.

மற்ற சமூகங்களில், முக்கியமாக வைணவர்களில் பெண்ணின் தலை அலங்காரம் ஆண்டாள் கொண்டையாக மாற்றப்படும்.  ஆண்டாளைப் போல் வலப்பக்கம் கொண்டை போட்டுப் பின்னால் பின்னித் தொங்கவிட்டு அலங்கரித்து ஒன்பது கஜம் புடைவை கட்டிப் பெண்ணை அழைத்து வருவார்கள்.  தெலுங்கு பிராமணர்களிலும், மற்ற சில சமூகங்களிலும் வெள்ளையில் மஞ்சள் நீரால் நனைத்த நூல் புடைவையை உள் கச்சம் போட்டு இடப்பக்கத் தலைப்போடு கட்டிக் கூட்டி வருகிறார்கள்.  நம் தமிழ்நாட்டிலேயே பிராமணரல்லாத மற்ற சமூகங்களில் கொஞ்சம் அரக்கு, கொஞ்சம் பிங்க் என்று சொல்லும்படியான ஒரு வர்ணத்தில் நூலால் ஆன கைத்தறிப் புடைவையைத் தான் கட்டிக் கொள்கிறாள் மணப்பெண்.  தமிழ்நாட்டுப் பிராமண சமூகத்தில் மட்டுமே ஆடம்பரமாகப் பட்டுப்புடைவை கட்டிக் கொள்கின்றனர்.  :))))))


Inline image 3



அழைப்பு.jpg
மாங்கல்யம்.jpg
திருமணம்.jpg

Geetha Sambasivam

unread,
Sep 8, 2013, 4:46:29 AM9/8/13
to மின்தமிழ்
கெட்டி மேளம் கொட்டக் கொட்ட! ஒரு சில மந்திரங்களின் அர்த்தங்கள்.
ஆச்சா, பெண் புடைவை கட்டிக் கொண்டு வந்தாச்சு.  இப்போச் சில சடங்குகளைப் பிள்ளை செய்யணும். திருமாங்கல்யதாரணம் நடக்கப் போகிறது.  கூறைப்புடைவை கட்டிக் கொண்டு வந்த பெண் தன் தகப்பன் மடியில் அமர்ந்து கொள்கிறாள்.  இதுவும் ஒரு சம்பிரதாயமாகவே இருக்கணும்.  அந்தக்காலங்களில் சின்னக் குழந்தைகளைப் பிடித்துத் திருமணம் செய்வித்திருக்கின்றனர்.  குழந்தைகள் ஓடிவிடாமல் இருக்க (ஹிஹிஹி) குழந்தையைத் தந்தை மடியில் வைத்து அமுக்கிக் கொண்டு இருந்திருக்கணுமோ?  அது ஒரு கட்டாயமாகவே ஆகிவிட்டது.  இப்போ மணமேடையில் பெண் வீட்டுப் பிள்ளை வீட்டு முக்கியஸ்தர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு திருமாங்கல்யதாரணத்தைப் பார்க்க விடமாட்டார்கள்.  பெண் புடைவை கட்டிக் கொண்டு வரதுக்கு முன்னாலேயே எல்லார் கிட்டேயும் புடைவை, திருமாங்கல்யத்தைக் காட்டி ஆசிகள் வாங்கி இருப்பாங்க.  அதே போல் பெண்ணின் மேல், பிள்ளையின் மேல் பொழியவும் மலர்கள், உதிரிப்பூக்கள், அக்ஷதை ஆகியன வழங்கப்படும்.  இப்போல்லாம் மேலே பலூன்கள் கட்டிக் குறிப்பிட்ட நேரத்தில் அதை வெடிக்கச் செய்து பூக்கள், கலர்ப்பேப்பர்கள் எனக் கொட்ட வைக்கின்றனர்.  அதே சமயம் சத்திரத்துக்கு வெளியே பெண்ணின்/பிள்ளையின் நண்பர் கூட்டம் ஒன்று சேர்ந்து ஆயிரம் வாலா, பத்தாயிரம் வாலாக்கள் எல்லாம் வெடிக்கிறதும் உண்டு.  இவ்வளவு அமர்க்களத்துக்கும் இந்தத் தாலி கட்டுதல் வெறும் சம்பிரதாயமான ஒன்றே.  அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை. 



 ஒருவேளை தமிழ் சினிமா, தமிழ் சீரியலின் தாலி சென்டிமென்டினால் முக்கியத்துவம் அடைந்ததோ என்னமோ நாம் அறியோம் பராபரமே.  அப்போது சொல்லப்படும் மாங்கல்யம் தந்துநானே என்பது மந்திரமும் அல்ல.  ஒரு ஸ்லோகமே.  ஹிஹிஹி, ஆனால் இந்தத் தாலி கட்டி முடிஞ்சதுமே உற்றார், சுற்றார் அனைவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்வதோடு, பெண்ணின் கையைப் பிள்ளையின் கையையும் குலுக்கிக் கொண்டு பரிசுகளைக் கொடுத்து அவர்களைத் திருமண சாஸ்திரபூர்வமான சடங்குகளைச் செய்ய விடுவதில்லை.  ஆகவே இப்போதெல்லாம் தாலி கட்டும் முன்னர் மேள சப்தம், கூடி இருப்போர் பேசும் சப்தம் அனைத்தையும் நிறுத்திவிட்டு அறிவிப்புச் செய்கிறார்கள்.  பாணி கிரஹணம் முடிந்து சப்தபதி முடிந்து, பெண்ணும், பிள்ளையும் தனியாக ஒரு நாற்காலியில் அமர வைக்கப்படுவார்கள்.  அப்போ உங்கள் சந்தோஷத்தைத் தெரிவிக்கலாம்னு சொல்லிடறாங்க.  எனெனில் பாணிகிரஹணம் என்னும் முக்கிய நிகழ்ச்சி சுப லக்னைத்தில் நடைபெற வேண்டும்.  சாஸ்திரப்படியும், தர்மப்படியும் இப்போத் தான் பெண்ணின் கையைப் பிள்ளை பிடிக்க வேண்டும்.  அதே போல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதே கன்யாதானத்தின் பின்னரே.  தாலியில் பிள்ளை ஒரு முடிச்சுப் போட்டதும் பாக்கி இரு முடிச்சுக்களைப் பிள்ளையின் சகோதரி போடுவது ஒரு சம்பிரதாயமே. 



ஆச்சு, திருமாங்கல்யதாரணம் ஆச்சு.  இப்போ மந்திரம் சொல்லி பெண்ணின் இடுப்பிலே தர்ப்பையால் ஆன கயிற்றை மூன்று முறை சுத்திவிடுவாங்க.  இப்போத் தான் பெண்ணின் கையைக் குவித்து வைக்கச் சொல்லிக் கட்டை விரலோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு அக்னி கிட்டே அழைத்துச் செல்வார் கட்டைவிரலை ஏன் சேர்த்துப் பிடிக்கணும் என்றால் கட்டை விரலை மட்டும் ஆண்பாலில் "அங்குஷ்ட" என்பார்கள்.  மற்ற நான்கு விரல்கள் பெண்பாலில், "அங்குளீ" எனப்படும்.  ஆகவே ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் இரண்டும் வேண்டும் எனில் எல்லா விரல்களையும் சேர்த்துப் பிடிக்க வேண்டும் எனவும், பெண் மட்டும் வேண்டும் எனில் நான்கு விரல்களையும், பிள்ளை மட்டும் எனில் கட்டை விரலை மட்டும் எனச் சொல்வார்கள்.   ஆனால் பொதுவாக எல்லா விரல்களையுமே சேர்த்தே பிடிக்கச் சொல்வார்கள்.  நாம் தியானம் செய்கையில் சின்முத்திரை காட்டி அமர்வது, சக்தியும் சிவமும் சேர்ந்த ஐக்கியத்தைக் குறிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். 


 புதுப்பாயிலே பிள்ளையின் வலப்பக்கம் பெண் அமர்ந்து அக்னிகாரியம் ஆரம்பிச்சதும் ஹோமம் செய்வார்கள்.  எப்போவுமே இம்மாதிரியான வைதீக காரியங்கள் செய்கையில் பெண் பிள்ளையின் வலப்பக்கமாகவே இருக்க வேண்டும்.  மற்ற நேரம் இடப்பக்கம்.  அக்னியின் எதிரே நிற்கும் இந்தப் பெண் புனிதமானவள், ஆரோக்கியத்துடனும், செல்வ வளத்துடனும், கணவனோடும் குழந்தைகளோடும் இவள் வாழ்க்கை வளம்பெற வேண்டும் எனப் பிரார்த்திப்பார்கள்.  இப்போத் தான் அக்னி பகவானிடம் வேண்டிப்பாங்க.  பதினாறும் பெத்துப் பெருவாழ்வு வாழ்கனு கேள்விப் படறோமில்லையா?  அப்படித் தான்.  ஆனால் இங்கே பதினாறு குழந்தைகள்னு அர்த்தமில்லை.  அதோடு இந்த மந்திரங்கள் வேறே பலராலும் விமரிசிக்கப்படும் ஒன்றாக இருந்து வருகிறது.  அதன் உண்மையான அர்த்தம் முன்னேயே என்னோட இந்த வலைப்பக்கத்தில் எழுதி இருக்கேன்.  அதை மீள் பதிவு செய்து விடுகிறேன்.  நாளை பார்க்கலாம். 

பெண் குழந்தை பிறந்ததில் இருந்து கல்யாணம் வரை உள்ள காலத்தை மூன்றாகப் பிரித்து ஒவ்வொரு காலத்துக்கும் ஒரு தேவன் அவளுக்குப் பாதுகாவலனாக இருப்பதாய்ச் சொல்வார்கள்.  இது எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் பொருந்தும்.  முதல் பிரிவின் பாதுகாவலன் சோமன், இரண்டாவது பிரிவின் பாதுகாவலன் கந்தர்வன், மூன்றாவது பிரிவின் பாதுகாவலன் அக்னியே ஆவான்.  இதன் பின்னரே பெண்ணானவள் கணவனை அடைகிறாள்.  இந்த ஒவ்வொருவருக்கும் அக்னி மூலமாகவே கணவனும், மனைவியுமாகச் சேர்ந்தே தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர். இப்போது 16 விதமான கோரிக்கைகளைக் கல்யாண மணமகன் வைக்கிறான்.  அவையாவன:

1.சோமனுக்கு நன்றி தெரிவித்து ஹவிர் அளிப்பது

2. கந்தர்வனுக்கு நன்றி தெரிவித்து ஹவிர் அளிப்பது

3. அதே போல் அக்னிக்கும் நன்றி, ஹவிர் அளிப்பது

4. பிறந்த வீட்டிலிருந்து, புதிய வீடான புக்ககம் வந்திருக்கும் இந்தப் பெண்ணை சந்தோஷமாக வைக்கும் தகுதியை வேண்டுவது.  பிறந்த வீட்டு சந்தோஷம் குறையாமல் பெண்ணை மகிழ்ச்சியாக வைத்திருக்கப் பிரார்த்திப்பது.

5. இந்தப் பெண்ணைத் தேர்ந்தெடுக்க உதவிய இந்திரனுக்கு நன்றி தெரிவிப்பதோடு அவனால் சகல செளகரியங்களும் உண்டாகப் பிரார்த்திப்பது.

6. இல்லறத்த நல்லறமாக நடத்தவும், ஆரோக்கியமான குழந்தைகளைச் சுலபமாகப் பெற்றெடுக்கவும் பிரார்த்திப்பது. ஒரே குழந்தையோடு நிற்காமல் பல குழந்தைகள் பிறக்கவும், எல்லாவற்றிற்கும் மேல் மனைவியின் கடைசிக் குழந்தையாகக் கணவனை அவள் நினைக்கவும் பிரார்த்திப்பது.

7. ஏற்கெனவே வியாதிகள் இருந்தாலோ, இனி வியாதிகள் தோன்றாவண்ணமோ பாதுகாக்க வேண்டுவது.  குழந்தைகள் மூலமும் மணப்பெண்ணுக்குத் துன்பம் வராமல் பாதுகாக்க வேண்டுவது.

8. இருவரும் இனி ஒருவர் என்பதால் இருவரின் பிரார்த்தனையும் இனி ஒன்றே.  இந்த அக்னி சாக்ஷியாக கிருஹஸ்தன் ஆன மணமகன் தன்னிடம் உள்ள குறைகளை நீக்கி நிறைவானவனாக ஆக்கும்படியும் பெண்ணின் தேஜஸ் வளரவும், பெண்ணைச் சந்தோஷமாக வைக்கும்படியான ஆரோக்கியத்தைத் தனக்குத் தரும்படியும் பிரார்த்திப்பான். நீண்ட ஆயுளும், அறிவும், ஆரோக்கியமும் உள்ள குழந்தைகளையும் வேண்டுவான்.

9. எத்தனை சொத்து, செல்வம், நிலம், நீச்சு இருந்தாலும் குழந்தைச் செல்வத்துக்கு ஈடாகாது.  அத்தகைய குழந்தை பாக்கியம் இருவருக்கும் ஏற்பட வேண்டிப் பிரார்த்திப்பது. அதோடு தன் குழந்தைகளுக்கும் குழந்தை பிறந்து அதையும் நாங்கள் இருவரும் சேர்ந்து பார்க்கும் அனுகிரஹத்தையும் வேண்டுவது.

10. மணமகள் இரவில் கணவனோடு வாக்குவாதமோ, சண்டையோ செய்யாமல், தலையை விரித்துப் போட்டுக்கொண்டு அழுது கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யாமல் இருக்கும்படியாகவும் வேண்டிக்கொள்வதோடு அவளை அந்த நிலைக்குத் தள்ளும்படியான ஈன நிலைக்குத் தன்னைத் தள்ளாதிருக்கவும், என்றென்றும் மனைவியை மகிழ்வோடு வைத்திருக்கும் சக்தியையும் கொடுக்கும்படி வேண்டுவது.

11. இன்று திருமண நாள்.  இன்றிருக்கும் அதே சந்தோஷம் அவள் என்னோடு வாழும் எல்லா நாட்களிலும் தொடர்ந்து இருக்க வேண்டும்.  அவள் கிழவியானாலும் அவள் மனம் மகிழ்ச்சியோடேயே இருக்க வேண்டும்.  அவள் மனம் திருப்தியோடு கிளை, கிளையாக வளரும் வாரிசுகளைப் பார்த்து மகிழ வேண்டுவது.

12.  இந்தப் பெண்ணின் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு தேவர்கள் காக்கின்றனர். நான் கொடுத்த கூறைப்புடைவையை இவள் உடுத்தியதிலிருந்து இவளை பிரஹஸ்பதி எனும் குரு காத்து வருகிறான்.  இவளை நாலாபக்கங்களில் இருந்தும் விஸ்வே தேவர் குழு காத்து வரட்டும்.

13. குழந்தையே பிறக்காத மலடியாக இவளை ஆக்காதே.  அல்லது அகால மரணம் அடையும் குழந்தைகளைப் பிறக்க வைக்காதே. குழந்தைகளை நினைந்து இவள் கவலைப்படும்படியும் செய்யாதே.  வாடிய பூவைத் தூக்கி எறிவது போல் இவள் துயர்களும் தூக்கி எறியப் பட வேண்டும்.

14. வருணனிடம்  தான் செய்த பிரார்த்தனைகள் மூலம் பல்வேறு தேவர்கள், தேவதைகள் மூலம் கிடைத்த பொருட்களை எல்லாம் நிரந்தரமாக்கி இழப்பில்லாமல் இருக்கப் பிரார்த்திப்பது.

15. அக்னியிடம் மட்டுமில்லாமல் மற்ற தேவர்களிடமும் கேட்டதற்காக அக்னியைக் கோபம் கொள்ளாதிருக்கப் பிரார்த்திப்பது.  மேலும் மற்ற தேவர்களையும் கேட்டதற்காக அக்னியும் சும்மா இருக்காமல் மற்ற தேவர்களோடு சேர்ந்தே அருள் புரியப் பிரார்த்திப்பது.  வருணனும், அக்னியும் மிக முக்கியம், நெருப்பும், நீரும் இன்றி இவ்வுலகு இல்லை.  உற்பத்தியால் ஏற்படும் வளர்ச்சி அக்னியும் வருணனும் சேர்ந்தால் தான் கிடைக்கும்.  ஆகவே  இருவருடைய அருளையும் வேண்டிப் பிரார்த்திப்பது.

16. சநாதன தர்மத்தின் ஆரம்பம், முடிவு இரண்டும் அக்னி.  இடையேயும் அக்னி.  ஆகவே பிறக்கையில், வாழ்கையில், போகையில் என அக்னி இல்லாமல் வாழ்நாள் கழிவதில்லை.  எனவே மணமகனும், மணமகளும் ஜீவிக்கும் வரையிலும் கூட இருந்து அனுகிரஹம் செய்யும்படி அக்னியை வேண்டுவார்கள்.

இப்போது அடுத்த பதிவில் விமரிசனத்துக்கு உட்பட்ட மந்திரத்தையும் அதன் அர்த்தத்தையும் காணலாம். 


பதிவுக்கு உதவிய பதிவுகள்:  தெய்வத்தின் குரல், காமகோடி தளம்.

விவாஹம்: திரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்



மேலே உள்ள  இரண்டும் திரு திருமூர்த்தி வாசுதேவனால் எழுதப்பட்ட பதிவுகள். 



Geetha Sambasivam

unread,
Oct 4, 2013, 3:56:40 AM10/4/13
to மின்தமிழ்

கல்யாணத்தில் மந்திரங்கள் சொல்லும் பொருள் என்ன? ஒரு பார்வை!

வேதங்கள் பற்றியும் மந்திரங்கள் பற்றியும் நமக்குத் தெரிந்தவை மிகக் குறைவு. அதன் மூலம் அவற்றால் ஒரு பயனும் இல்லை என்று முடிவு கட்டுகிறோம். ஆனால் அது அப்படி இல்லை. வேதங்களில் சொல்லாத விஷயமே இல்லை. அரசன், செய்ய வேண்டிய கடமையைப் பற்றிக் கூறும் அர்த்த சாஸ்திரம், உத்தமமான மருத்துவ முறையைப் பற்றிக் கூறும் ஆயுர்வேத சாஸ்திரம், சிற்பங்கள் வடிக்கும் முறை பற்றியும் கோவில் களின் விதி முறைகளையும் பற்றிக் கூறும் சிற்ப சாஸ்திரம், ஆகம சாஸ்திரம் இவற்றை எல்லாம் நாம் படிக்காமல் விட்டு விட்டோம்.தப்புத் தப்பாக அர்த்தம் செய்து கொள்கிறோம். ஆயுர்வேத மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து மேன்மேலும் முன்னேற்றி இருக்க வேண்டிய ஒர் வைத்தியம் ஆயுர்வேத மருத்துவம். ஆனால் நாம் இதில் பின் தங்கி விட்டோம். அந்தக் காலத்தில் ரண சிகிச்சை முறை ஆயுர்வேதத்தில் இருந்திருக்கிறது. ஸுஸ்ருதர் என்பவர் இதைப் பற்றி எழுதி இருக்கிறார். வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் நம் சாஸ்திரங்களில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து விஞ்ஞானத்தில் முன்னேறி விட்டார்கள்.


 சில வருடங்களுக்கு முன்னால் சென்னைத் தொலைக்காட்சியில், "Vedhik Science" "Vedhik Maths" என்று இரண்டையும் பற்றி ஒரு நிகழ்ச்சி சனிக்கிழமைகளில் மாலை வேளையில் வந்து கொண்டிருந்தது. எத்தனை பேருக்கு அது தெரியும் என்பது சந்தேகமே. மிகப் பயனுள்ள ஒர் நிகழ்ச்சி. அதைப் பார்த்தவர்கள் கட்டாயம் புரிந்து கொண்டிருப்பார்கள் தற்காலத்திலும் அவை ஏற்கத் தக்கவை என்று. சீனாவிலிருந்து வந்தது என்று ஒரு கணக்கு முறையைப் பற்றிப் பைத்தியமாக அலைகிறோம். குங்ஃபூ, கராத்தே போன்றவை ஜப்பானில் இருந்து வந்தது என்று கற்றுக் கொள்கிறோம். ஆனால் நம்முடைய செல்வங்களான கலரி, சிலம்பம், வர்மம் போன்றவை பற்றி யாருக்குத் தெரியும்? சிலம்பம் என்றால் சினிமாவில் வருவது தான் என்று நினைப்பார்களே தவிர, நிஜ வாழ்வில் இப்படி ஒரு விளையாட்டு இருந்ததே இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. நம்மைப் பற்றி நாமே குறைவாக நினைக்காமல் நம்முடைய முன்னோர்கள் சொல்லிச் செய்த ஒவ்வொரு காரியமும் அர்த்தமுள்ளது என்று நினக்க வேண்டும்.இப்போது திருமணங்களில் வரும் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். திருமணம் நடக்கும் போது மணமகனிடம் சொல்வது போல் அமைந்த ஒரு மந்திரம்:

"ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர:
த்ரூதீயோ அக்னிஷ்டேபதி:
துரீயஸ்தே மனுஷ்யஜா:
என்று ஒரு மந்திரம். வெளிப்படையாகப் பார்த்தால் பெண் முதலில் சோமன் என்னும் சந்திரனிடமும், பின் கந்தர்வர்களிடமும், பின் அக்னியிடமும் இருக்கிறாள், அக்னியிடம் இருந்து இந்தப் பெண்ணை உனக்குத் தருகிறேன்" என்று அர்த்தம் வரும்.

ஆனால் இதன் உண்மையான அர்த்தம் எல்லாருக்கும் புரிவது இல்லை. நான் புத்தகங்களில் இருந்தும், எங்கள் வீட்டுக் கல்யாணங்களில் இருந்தும் கேட்டுத் தெரிந்து கொண்டது என்ன என்றால்: பெண் குழந்தை பிறந்ததில் இருந்து திருமணம் வரை இருக்கும் காலத்தை மூன்றாகப் பிரித்துச் சொல்கிறார்கள். முதல் பாகத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவர் ஸோமன். இது சந்திரனைக் குறிக்கும். சந்திரன் குளிர்ச்சியும் மகிஷ்ச்சியும் அளிப்பவன். தேவர்கள் பலசாலியாக இருப்பதற்கு எப்படிச் சந்திரனின் அருள் தேவையோ அது போல பூமி வளம் பெறுவதற்கும் சந்திரனின் அருள் தேவை. அவன் அருளால் உலக ஆரோக்கியத்திற்கு உகந்த வகையில் பருவங்கள் உருவாகிறது. பூமி, வலுவும் வளமும் பெறுகிறது. அவன் அருளால் பெண்ணின் குழந்தைப் பருவம் ஆரோக்கியமானதாகவும், வளம் பொருந்தியதாகவும் இருக்கும். இதற்குச் சந்திரனின் அருள் தேவை. மேலும் ஆயுர்வேத முறைப்படியும், சோமம் என்றால் "கபம்" என்றும் ஒரு பொருள் உண்டு. பிறந்த குழந்தைக்கு இருக்கும் அதிகக் கபத்தினால் தொல்லைகள் கொடுக்காமல் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவன் ஸோமன். மேலும் குழந்தை பிறந்து சிலவருடங்கள் வரை தாயின் கண்காணிப்பில் இருக்கும். தாயின் மென்மையான அணுகுமுறையைக் கூட ஸோமனின் உதாரணத்துக்குச் சொல்லலாம். வளர்கையில் பெண்ணின் குணமும், குரலும், மாறி அழகு அதிகரிக்கிறது. பெண் கனவு காண ஆரம்பிக்கிறாள். இதில் இருந்து அவளைக் காத்து நல்வழிக்குத் திருப்பும் பொறுப்பு கந்தர்வர்களுடையது. அதாவது தாய், தந்தை இருவரும் சேர்ந்து பெண்ணைக் கண்காணிக்கிறார்கள். அவளுடைய அழகுக்குக் காரணனான கபத்தை மட்டுப் படுத்தி அவளைத் தன்னிலை பெறச் செய்வது கந்தர்வர்கள் பொறுப்பு. அழகும், பருவமும் சேர்ந்து விட்டால் பின்னால் ஏற்படும் உணர்வுகளுக்கும் அவளுடைய துணை தேடும் நினைவுகளுக்கும் காரணம் அக்னி. இந்தச் சமயத்தில் தான் பெண் அந்த அக்னியைப் போல இருக்க வேண்டும். அவள் நினைவுகளும், கனவுகளும் அவளைச் சுட்டுப் பொசுக்காமல் அவளைப் பாதுகாப்பவன் அக்னி. அந்தப் பாதுகாப்பு உணர்வு அவளுக்குத் தோன்றக் காரணமாக இருப்பவன் அக்னி. ஏனென்றால் சிருஷ்டியின் மூலமே பெண்ணால்தான். தன்னிச்சையாகச் செயல் படும் தகுதி அவளுக்கு இருந்தாலும் அவள் ஜாக்கிரதையாகத் தன் குடும்பம், சமூகம் என்ற உணர்வுகளோடு ஆரோக்கியமான சிந்தனைகளோடு செயல் படுவதற்குக் காரணம் அக்னி. 


பெண்ணினம் காப்பாற்றப் பட்டால் அத்தனை தர்மங்களும் காப்பாற்றப் படும். ஆகவே திருமணம் ஆகும் வரை அவளைக் காக்கும் பொறுப்பை அக்னி ஏற்றுக் கொண்டு மணமகனிடம் மணப் பெண்ணை ஒப்படைக்கிறார். ஆகவே தான் திருமணங்கள் அக்னி சாட்சியாகவும் நடைபெறுகிறது. மணமகன், மணமகள் இருவரும் சேர்ந்து ஸோமன், கந்தர்வன், அக்னி இவர்கள் மூவருக்கும் முறைப்படி அவர்களுக்குப் பூஜை செய்து வணங்கி வழி அனுப்புவார்கள். முறையே சந்திரனுக்குப் பிடித்த பழத்தை ஒரு குழந்தைக்கும், கந்தர்வனுக்கு வேண்டிய ஆடை, அலங்கரம், வாசனைத் திரவியம் போன்றவைகளுக்கு மணமகன், மணமகள் ஆடைகளில் இருந்து நூல் எடுத்தும், அக்னிக்குப் பிரியமான நெய்யும் கொடுத்து வழி அனுப்புவார்கள். இதில் அவர்கள் இதுவரை செய்த தவறுகளை மன்னிக்கவும், மேலும் இனித் தவறு செய்யாமல் இருக்கவும் இருவரும் வேண்டும் வேண்டுதலும் இருக்கும். அக்னி பரிசுத்தமானது. அவன் பாதுகாப்பில் இருந்த பெண்ணும் சுத்தமானவள். அப்பழுக்கற்றவள். ஆகையால் நாம் சந்தேகமே இல்லாமல் வேதங்களும் மந்திரங்களும் கூறும் உண்மையைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.  


இதை இன்னமும் விரிவாக எழுத நினைச்சேன்.  நேரம் இல்லை. :( அதோடு அவசரம் வேறே. படிச்சுட்டுப் பின்னூட்டம் போட்டு வைங்க.  மெதுவாப் பார்க்கிறேன். 



Geetha Sambasivam

unread,
Oct 4, 2013, 3:58:45 AM10/4/13
to மின்தமிழ்
சப்தபதியின் போது சொல்லும் மந்திரங்களின் அர்த்தம்!


Inline image 1


மணமகனையும், மணமகளையும் அப்படியே உட்கார்த்தி வைத்துப் பல நாட்கள் ஆகிவிட்டது.  கடைசியா பாணிக்ரஹணம் குறித்துப் பார்த்தோம்.  மணமகன் தன் வலக்கையால் மணமகளின் கரத்தைப் பிடிப்பதற்கும் நான்கு மந்திரங்கள் உண்டு.  பிராமணர் தவிர மற்ற சமூகங்களில் இதன் பின்னரே மாலை மாற்றலும் நடக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.  இதன் பின்னர் அக்னிக்கு வடக்கே மணமகன் மணப்பெண்ணின் வலக்கையைப் பிடித்தவாறே அவள் வலக்காலைத் தன் இடக்கையால் தொட்டுக் கிழக்கே பார்த்தோ அல்லது வடக்குத் திசையிலேயோ பாதத்தை எடுத்து வைத்து அவளுடன் நடந்து செல்லவேண்டும்.  ஒவ்வொரு அடிக்கும் ஒரு மந்திரம் உண்டு.  7 அடிகள் எடுத்து வைக்க வேண்டும்.  சாஸ்திரப் படி ஏழு அடிகள் ஒருத்தருடன் எடுத்து வைத்து நடந்தால் அவர் நம் நண்பர் ஆகிவிடுவார் என்று ஆகிறது.  சாவித்திரி சத்யவானின் உயிரைக் காப்பாற்ற வேண்டி யமதர்ம ராஜனோடு இப்படித் தான் ஏழடிகள் எடுத்து வைத்துப் பின்னர் யமனின் நண்பன் என்ற ஹோதாவில் அவனிடமே வரங்களை வேண்டிப் பெற்றுத் தன் கணவனின் உயிரையும் மீட்டு வருவாள் என்று படித்திருக்கிறோம் அல்லவா!  அதே போல் இங்கே மணமகளோடு சேர்ந்து ஏழடி எடுத்து வைக்கும் மணமகன் தன் மனைவியைத் தன் சிநேகிதியாகவே கருத வேண்டும்.  இத்தனையும் செய்கையில் பிடித்த வலக்கையை விடவே கூடாது.  இது தான் திருமணத்தின் முக்கியக் கர்மாவாகும்.  சட்டப்படியும் இந்த சப்தபதி ஆனாலே திருமணம் நிறைவு பெற்றுத் திருமணம் சட்டரீதியாகவும் செல்லுபடி ஆகும்.

மந்திரங்கள் என்று சொன்னாலும் இன்னொரு விதத்தில் இது மணமகன் - மணமகள் இடையே நடக்கும் உரையாடல் என்றும் சொல்லலாம்.  மணமகன் தன் மனைவியிடம் தாங்கள் இருவரும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு வாசகத்தைப் பேசுவான்.

முதல் அடி: நீ என் வீட்டுக்கு வருகிறாய்.  மஹாலக்ஷ்மி போன்ற உன் வரவால் என்ன் குலம் விருத்தி அடையட்டும்.  நீ மட்டும் சந்தோஷம் அடையாமல் என்னையும் சந்தோஷப் படுத்தப் போகிறாய்.  எல்லாவற்றிலும் முக்கியமான உணவுப் பொருட்கள் உன்னால் விருத்தி அடைந்து நீ என் இல்லம் வரும்போது நிறைந்து இருக்க அந்த மஹாவிஷ்ணு அருளட்டும்.

இரண்டாம் அடி:காக்கும் கடவுளான மஹாவிஷ்ணு என் வீட்டில் வந்து இருப்பதற்கு வேண்டிய உடல் வலிமையை உனக்குத் தரட்டும்.  அவன் அருளால் உன் எண்ணங்கள் நிறைவேறட்டும்.

மூன்றாம் அடி: நாம் இருவரும் சேர்ந்து வாழப்போகும் இந்தப் புதிய வாழ்க்கையில் சாஸ்திர சம்பிரதாயங்களையும் அவற்றால் ஏற்படுத்தப்பட்ட சட்ட, திட்டங்களை மீறாமலும், கடமையுடன் நாம் செயலாற்றும்படியும், அதற்கான நம்பிக்கைக்காகவும் இறைவன் நம்முடன் ஒத்துழைப்பானாக!

நான்காம் அடி: இவ்வுலக வாழ்க்கையின் இன்ப, துன்பங்களை நாம் இருவரும் முழுமையாக அனுபவிக்க வேண்டும்.  அனைத்துச் சுகங்களும் என்னோடு சேர்ந்த உனக்கும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்.

ஐந்தாம் அடி: சுக,போகங்களை அனுபவிக்கத் தேவையான வீடு, வாசல், நிலம், கால்நடைச் செல்வங்கள் போன்றவையும் நிறைந்து இருக்குமாறு கடவுள் அருளட்டும்.

ஆறாம் அடி: பருவகால மாற்றங்களினால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்கள் நம்மைத் தாக்கினால் வாழ்வின் சுவை குன்றாமல் அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை நம் மனங்களுக்குத் தருமாறு அந்தக் கடவுள் அருளட்டும்.

ஏழாம் அடி:  நம் வாழ்க்கையில் வெறும் சுகத்தை மட்டுமே பார்க்க மாட்டோம்.  எல்லாவற்றையுமே அனுபவிப்போம்.  அதற்கு அடிப்படையான இயற்கைச் சக்திகளான, மழை, வெயில், பனி போன்றவை அந்த அந்தப் பருவத்தில் தவறாமல் ஏற்படுவதற்கு உதவி புரியும் கண்ணுக்குத் தெரியாத மாபெரும் சக்தியை வணங்கவும், அதற்குச் செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் நாம் இருவரும் சேர்ந்து நிறைவேற்றவும் ஆண்டவன் அருளட்டும்.

இவ்வாறு திருமண வாழ்க்கையில் ஈடுபடும் மணமகனும், மணமகளும் தங்கள் வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் உலக க்ஷேமத்துக்கும் சேர்த்துப் பிரார்த்திப்பான். இதன் மூலம் இருவருக்கும் மனத்தெளிவு உண்டாகி ஆன்மிகப் பாதையில் செல்ல வேண்டிய பக்குவம் ஏற்படும்.  இந்தப் பிறவியின் கடமைகளை ஆற்றவேண்டுமானால் இயற்கைச் சக்திகளும் உதவ வேண்டும் அல்லவா? அதற்கும் கடமைப்பட்டிருப்பதால் அவற்றுக்கும் சேர்ந்து நன்றிக்கடனை வேள்விகள், பூஜைகள் மூலம் நிறைவேற்றுவார்கள் தம்பதியர்.  இப்படி அறம் சார்ந்த வாழ்க்கையே இல்லறம் எனப்பட்டது.



சப்தபதி.jpg

Geetha Sambasivam

unread,
Oct 4, 2013, 7:58:45 AM10/4/13
to தமிழ் சிறகுகள்
நான் பஞ்சாக்னி வித்யை காரிகை எல்லாம் படித்தது இல்லை.  ஆனால் பஞ்சாக்னி குறித்து மட்டும் ஓரளவுக்குத் தெரியும்.  இது நம் பிராணன், அபாநன், வ்யாநன், உதாநன், சமாநன்  ஆகியவற்றோடு இந்தப் பஞ்சாக்னி சம்பந்தப்பட்டது.  அவை ஒவ்வொன்றும் நம் உடலில் இந்தப்  பஞ்சப் பிராணன் இருக்கும் இடங்களில் வைக்கப்பட்டு இருத்தல் வேண்டும்.  ஆழ்ந்து படித்தோமானால் ஒவ்வொன்றும் தெளிவான ஆன்மிகப் பாதையில் இட்டுச் செல்லும்படி இருக்கும்.  இன்றைய கால கட்டத்தில் வெறும் சடங்காகி விட்டது. 

 பஞ்சாக்னிகள்  என்பவை:

கார்ஹபத்யம்:  குலதெய்வம் போன்றது.  இல்லறத்தில் ஈடுபட்டிருக்கும் வைதிகனுக்கு இது முக்கியமாக எரிந்து கொண்டிருக்க வேண்டும்.

ஆஹ்வனீயம்: ஆஹூதிகள் அளிப்பதற்கென ஏற்படுத்தப்பட்டது. 

தக்ஷிணாக்னி: சந்தோஷம் தரக் கூடியது. தென் திசையில் நிறுவப்படும்.

ஸப்யம்:  சாக்ஷிரூபமாக இருப்பதால் இறைவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்த்துவது.

ஆவஸத்யம்:  வீட்டிற்கு மங்களங்களைத் தரும் அக்னி

கடைசி இரண்டு அக்னிகளும் மிகவும் விஷயம் தெரிந்தவர்களாலேயே சேர்க்கப்படும்.  இவை அனைத்தும் விடாமல் எரிந்து கொண்டிருப்பதே சரியான முறை.  அக்னிஹோத்ரிகள் என இவர்களையே நாம் சொல்வோம்.   இல்லறத்தார்களால் இந்த யாகங்கள் தொடர்ந்து செயல்படுவது போலவே(உலக க்ஷேமத்துக்காக)  நம் உடலில் பஞ்சப் பிராணன்களும் தொடர்ந்து செயல்படும்.  பிராண சக்திகள் ஓய்வதில்லை என்பதைச் சுட்ட ஏற்படுத்தப்பட்டவை என்றும் கூறலாம்.  இது கொஞ்சம் எளிமையா விளக்கம் தான்.  ரொம்பவும் விளக்கிச் சொல்லுவது சரியாக இருக்காது.  ஏனெனில் இந்த அக்னி எல்லாம் பரம்பரையாக வரும்.  விளக்கங்கள் நிறைய இருக்கும்.  இழையின் நோக்கம் மாறுபடும் என்பதோடு இவை அவரவர் குரு மூலம் விஷயங்களை நன்கு புரிந்து கொண்டு எதற்காகச் செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொண்டு செய்யவேண்டியது. கவனம் தேவை. 


2013/10/4 nandhitha kaapiyan <nandh...@yahoo.com>

இந்த மந்திரம் கல்யாணங்களில் ப்ரதான ஹோமம் என்ற பகுதியில் வருவதல்லவா? இது தொடர்பாகப் பஞ்சாக்னி வித்யைக் காரிகையிலும் உள்ளது, ஆனால் அங்கு வேறு விதமான பொருள் தருகிறார்கள். விவரமாக எழுத வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா



From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Sent: Friday, October 4, 2013 1:26 PM
Subject: Re: என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Reply all
Reply to author
Forward
0 new messages