தினம் ஒரு பாடல்

29 views
Skip to first unread message

AKR

unread,
Mar 19, 2010, 2:38:48 PM3/19/10
to il...@googlegroups.com
வாழ்க்கைப் போராட்டத்திலே வலிமையுள்ளவன் செல்வச்சீமானாகவும் வலிமையற்றவன் அச்சீமானிடம் கைகட்டி சேவகம் புரிபவனாகவும் இருப்பது உலகெங்கிலும் தொன்றுதொட்டு நிலவி வரும் வாக்கை முறையாகும். இத்தகைய சீமான்களை முதலாளி என்றும், ஐயா என்றும் எஜமான் என்றும் பல விதமாக மற்றவர் மரியாதையுடன் அழைப்பதும் வழக்கில் இருந்து வருகிறது. இத்தகைய எஜமானர்கள் பொதுவில் ஒவ்வொரு கிராமத்திலும் பிறரை விடவும் மிகவும் அதிகப்படியான விளை நிலங்களுக்குச் சொந்தக்காரராகவும் ஊரிலேயே அனைவரிலும் செல்வம் நிறைந்தவராகவும் இருப்பார். சில எஜமானர்கள் சுயநலாவாதிகளாகவும் தன்னை அண்டிப் பிழைப்பவர்களையே சுரண்டுவதுடன் அவர்களுக்குப் பெரும்பாலும் இன்னல்களையே பரிசாகத் தருபவராகவும் இருப்பதுண்டு. இதற்கு மாறாகப் பலர் பரோபகாரிகளாகவும் தன்னை அண்டியிருப்பவரைக் காக்கும் தயாள சிந்தையுள்ளவர்களாவும் இருப்பதும் உண்டு.
 
சாமான்யர்களுள் ஒருவனாக விளங்கும் ஆண்மகனைக் காதலிக்கும் பெண்ணைவிட இத்தகைய எஜமானர்களைக் காதலிக்கும் பெண்கள் தனது காதலனின் மேல் மிக்க மரியாதையும் அன்பும் கொண்டவளாக இருத்தல் இயல்பு.
 
இத்தகையதொரு கிராமச் சூழலை மிகவும் சுவாரஸ்யமான விதத்தில் படமாக்கி நம்க்கு எஜமான் திரைப்படத்தின் வடிவில் வழங்கியுள்ளனர் தமிழ்த் திரியுலக சிற்பிகள்.
 
 
திரைப்படம்: எஜமான்
இயற்றியவர்:
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
ஆண்டு: 1993
 
கங்கணகணவென கிண்கிணி ம்ணிகளும் ஒலிக்க ஒலிக்க
எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் மொழி முழங்க முழங்க
ஒரு சுயம்வரம் நடக்கிறதே இது சுகம் தரும் சுயம்வரமே
 
ஆஆஆ ஆஆஆ.
 
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே
 
ஆஆஆ ஆஆஆஆஆ அஅஆஆஆ ஆஆஆஆஆ
 
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
 
தனனனனனா தனனனனனா தனனனனனா தனனனன னானானானானா
 
சுட்டுவிரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்
உன்னடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்
உன்னுதிரம் போல் நானே பொன்னுடலில் ஓடுவேன்
உன்னுடலில் நான் ஓடி உள்ளழகைத் தேடுவேன்
போதை கொண்டு நின்றாடும் செங்கரும்பு தேகம்
முந்தி வரும் தேன் வாங்கிப் பந்தி வைக்கும் நேரம்
அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு வம்புகள் என்ன வரம்புகள் விட்டு?
 
ஆஆஆ ஆஆஆஆஆ அஅஆஆஆ ஆஆஆஆஆ
 
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே
இணையான இளமானே துணையான இளமானே
 
ஆஆஆ ஆஆஆஆஆ அஅஆஆஆ ஆஆஆஆஆ
 
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
 
கட்டில் இடும் சூட்டோடு தொட்டில் கட்டு அன்னமே
முல்லைக் கொடி தரும் அந்தப் பிள்ளைக்கனி வேண்டுமே
உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா?
என்னுடைய தாலாட்டில் கண்மயங்கித் தூங்கவா
 
ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே
ஆறு ஏழு கேட்டாலும் பெற்றெடுப்பேன் நானே
முத்தினம் வரும் முத்துதினம் என்று
சித்திரம் வரும் விசித்திரம் என்று
 
ஆஆஆ ஆஆஆஆஆ அஅஆஆஆ ஆஆஆஆஆ
 
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Mar 21, 2010, 2:27:18 PM3/21/10
to il...@googlegroups.com
உலகில் எத்தனையோ அழகிய பெண்கள் இருப்பினும் அவர்கள் அனவருள்ளும் தான் காதலிக்கும் பெண்ணே ஒரு காதலனுக்குச் சிறந்த அழகியாகத் தெரிவாள். அதே போல் அப்பெண்ணுக்கும் பிற ஆடவர் அனவருள்ளும் தன் காதலனே மிகவும் அதிக அழகுள்ளவனாகத் தெரிவான். இது இயற்கையின் நியதி. தன் காதலியை விடவும் வேறு ஒரு பெண் அதிக அழகாக இருப்பதாக ஒருவன் எண்ணுவானாகில் அவனது காதல் உண்மைக் காதலல்ல என்பது திண்ணம்.
 
காதல் தெய்வீகமானது. கண்கள் வழியே கருத்தினிற் கலந்து உயிருடன் ஒருமிப்பது உண்மைக் காதல். இத்தகைய காதல் கொண்ட ஆண்மகனது உள்ளம் தனது காதலியின் அழகை வர்ணிக்கையிலும் அதிலொரு தெய்வீகத் தன்மையை உணர்வது சிறப்பு.
 
ஒரு பெண் நாணம் காரணமாகத் தன் காதலைத் தன் காதலனிடமும் வாய்விட்டுத் தெரிவிக்க மாட்டாள். அதற்கு மாறாகத் தன் உள்ளத்திலுள்ள காதல் உணர்வுகள் அனைத்தையும் தனது கண்களாலேயே அவனுக்கு உணர்த்தி விடுவாள். அந்தக் கண்ஜாடை கண்ட ஆண் அதற்கு மேல் உறங்குவதேது.
 
உண்மைக் காதலின்றி ஆண்களை அலைக்கழிப்பதையே பொழுதுபோக்காகக் கொண்ட சில மாதர்களும் இருக்கிறார்கள். அவர்களது கண் ஜாடை உண்மைக் காதல் கொண்ட பெண்ணின் கண் ஜாடையை விட ஆயிரம் மடங்கு மேலான மயக்கத்தை ஆண்களுக்கு அளிக்கவல்லது. அத்தகைய ஒரு பெண்ணின் கண் பேசும் மொழியைக் காதல் என்று நம்பித் தூக்கமில்லாமல் அவள் பின்னே அலைந்து அவமானப் படும் ஆண்களும் நிறைய உளர்.
 
ஆதலால் இளைஞர்களே, ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் உள்ளங்களை உங்கள் உண்மைக் காதலிக்காக அல்லது மனைவிக்காகவென்று இருக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். எச்சரிக்கை!
 
 
திரைப்படம்: அன்பே வா
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
 
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்
நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்
 
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
 
எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்
 
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
 
இடையோ இல்லை இருந்தால் முல்லைக்
கொடி போல் மெல்ல வளையும் சின்னக்
குடை போல் விரியும் இமையும் விழியும்
பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள் திருமுகம் மேலே குளிர்ப்
புன்னகை வருவதினாலே நிலவோ மலரோ எதுவோ
 
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்
 
ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
அவள் தான் சொல்லத் துடித்தாள்
ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
அவள் தான் சொல்லத் துடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று
கண்ணால் சொல்லி முடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று
கண்ணால் சொல்லி முடித்தாள்
அந்தக் காதலன் முகம் தொடுவானோ?
இந்தக் காதலி சுகம் பெறுவாளோ
கனவோ நனவோ எதுவோ?
 
நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்
 
நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Mar 23, 2010, 12:05:14 PM3/23/10
to il...@googlegroups.com
ஒரு பெண் தாயாகியதும் அவள் இவ்வுலகில் அனைத்திலும் அரிய உறவாகக் காண்பது தான் பெற்ற சேயையே. அப்பெண் ஏழையாக இருந்தாலும் தன் பிள்ளைக்கு வாழ்வின் வசதிகள் அனைத்தும் மிகவும் உயர்ந்தவையாகவே இருத்தல் வேண்டுமென விரும்புவாள். தன் வயிறு பசி பட்டினியால் வாடிக் கிடந்தாலும் தன் குழந்தைக்கு வயிறு வாடாமல் தக்க நேரத்தில் எவ்வாறாகிலும் உணவிடுவாள். தன் ரத்தத்தையே பாலாக்கிக் கொடுப்பதன்றோ தாய்மை. தன் சகோதரர்களிடம் ஒரு பெண் மிகவும் எதிர்பார்ப்பது தன் பிள்ளைக்குத் தன் சகோதர்கள் பொருளுதவி செய்தும் பரிசுகளை வழங்கியும் அவர்களை மகிழ்ச்சியிலாழ்த்த வேண்டும் என்பதுவே.
 
கல்யாணி எனும் பெண் விதிவசத்தால் இளம் வயதிலேயே கணவனை சாலை விபத்தில் பரிகொடுத்த நிலையில் கைக்குழந்தையுடன் மிகவும் துன்புற்று ஏழ்மை நிலையில் வாடுகையில், பொருளீட்ட வேண்டி வெளிநாட்டுக்குச் சென்றிருக்கும் தன் அண்ணன்மார்கள் திரும்பி வருவர், தன் பிள்ளைக்குத் தக்க உதவிகள் செய்து அப்பிள்ளைக்குக் கல்வி பயிற்றுவிக்க ஆவன செய்வர் எனும் நம்பிக்கையுடன் தான் ஏழ்மையில் வாடிய போதும் தன் பிள்ளையாகிலும் நல்வாழ்வு வாழவேண்டும் எனும் ஆசை மனம் முழுதும் நிரம்பியவளாய் தன் மனதில் தோன்றும் எண்ணங்களைத் தாலாட்டாகப் பாடிப் பிள்ளையைத் தொட்டிலிலிட்டுத் தூங்க வைக்கும் மனமுருக்கும் காட்சி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் திரைப்படமான பராசக்தி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
 
 
திரைப்படம்: பராசக்தி
இயற்றியவர்: கலைஞர் மு. கருணாநிதி
இசை: R. சுதர்சன்
பாடியவர்: T.S. பகவதி
ஆஅண்டு: 1952
 
கொஞ்சு மொழி சொல்லும் கிளியே - செழும்
கோமளத் தாமரைப் பூவே
கொஞ்சு மொழி சொல்லும் கிளியே - செழும்
கோமளத் தாமரைப் பூவே - ஒரு
வஞ்சமில்லா முழு மதியே - இன்ப
வானில் உதித்த நல்லமுதே
 
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ
 
மாமன்மார் மூவர் தம்பி - நல்ல
வாழ்வளிக்க வருவார் - உனக்கு
மாமன்மார் மூவர் தம்பி - நல்ல
வாழ்வளிக்க வருவார் - உன்
மாம்பழக் கன்னத்திலே - முத்த
மாரி பொழிந்திட வருவார் - உன்
மாம்பழக் கன்னத்திலே - முத்த
மாரி பொழிந்திட வருவார்
 
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ
 
மாணிக்கப் பாலாடை - பச்சை
மாமணித் தொட்டிலுடன்
மாணிக்கப் பாலாடை - பச்சை
மாமணித் தொட்டிலுடன் - வெள்ளை
யானையும் வாகனமாய் - மாமன்
தருவார் சீதனமாய் - உன்தன் மாமன்
தருவார் சீதனமாய்
 
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ
 
வெள்ளியினால் செய்த ஏட்டில் - நல்ல
வைர எழுத்தாணி கொண்டு
வெள்ளியினால் செய்த ஏட்டில் - நல்ல
வைர எழுத்தாணி கொண்டு
தெள்ளு தமிழ்ப் பாடம் எழுத - உன்னைப்
பள்ளியில் சேர்த்திட வருவார் - மாமன்
அள்ளி அணைத்திட வருவார்
 
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

akr

unread,
Apr 3, 2010, 3:36:36 PM4/3/10
to இல்லம் (your HOME)
"ஸ்வதர்மம்" என்ற சொல்லுக்கு மதவாதிகள் தங்கள் மதத்தின் சம்பிரதாயங்களை
அனுஷ்டிப்பது என்று விளக்கம் கூறுவர். ஆனால் இப்பதத்தை நன்கு ஆராய்ந்து
பார்க்கையில் அதன் உண்மைப் பொருள் விளங்கும். ஒருவன் செய்ய வேண்டிய
தலையாய கடமை தன்னை நம்பியிருப்பவரைக் காப்பதாகும். ஒரு குடும்பத்தலைவனை
நம்பி அவனது தாய் தந்தையர், மனைவி மக்கள் மற்றும் உற்றார் உறவினர்
யாவரும் வாழ்கின்றனர். இவர்களை முதலில் காப்பாற்ற ஆவன செய்த பின்னரே
அக்குடும்பத் தலைவன் இவர்களைத் தவிர்த்த பிறருக்கு உதவி செய்யப்
புகலாகும். தன்னை நம்பியுள்ளவர்களைக் காக்கத் தவறிப் பரோபகாரியாக
விளங்குவதில் ஆபத்து உள்ளது.

தன்னை நம்பி வாழ்வோரைக் காப்பதுவே ஸ்வதர்மம். தன்னை நேரடியாகச்
சார்ந்திராதவரைக் காக்கும் செயலைப் பரதர்மம் என்று சொல்வர்.

இது இவ்வாறிருக்க, தங்களது குடும்பத்தினும் மேலாகத் தனது ஊராரையும்
நாட்டு மக்களையும் உலக நன்மையையும் கருதும் சில உத்தமர்களும் உலகில்
அவ்வப்போது அவதரித்து அனைவரையும் காக்கின்றனர் என்பதும் கண்கூடான
உண்மையே. நமது தேசம் அந்நியருக்கு அடிமைப்பட்டிருந்த காலத்தில் நம்
தலைவர்கள் பலர் தங்கள் குடும்பம் பட்டினியால் வாடும் நிலையில் இருந்தும்
தம் குடும்பத்தைப் பற்றிய கவலையில் மூழ்கிடாமல் தேசத்தைப் பற்றியும்
ஊராரைப் பற்றியுமே பெரிதும் சிந்தித்து அவர்களின் துயர் துடைப்பதற்கே
முதலிடம் கொடுத்து வந்திருக்கின்றனர்.

இவர்களது சிந்தனையில் ஊராரும் நாட்டு மக்களும் இன்புற்று வாழ வழி வகை
செய்வதே ஸ்வதர்மம், தனது குடும்பம் எனும் குறுகிய வட்டத்தில் அடைபட்டு
செயல்புரிவது சுயநலம் ஆகும்.

அத்தகைய மஹாத்மாக்களுள் ஒருவரே நமது சின்னக் கவுண்டர்.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/chinna-kavundar/antha-vaanathapola.php

திரைப்படம்: சின்னக் கவுண்டர்


இயற்றியவர்: கவிஞர் வாலி

இசை: இசை ஞானி இளையராஜா
பாடியவர்: இளையராஜா

அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே - பனித்
துளியப் போல குணம் படச்ச தென்னவனே
மஞ்சளிலே ஒரு நூலெடுத்து
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு? அது மன்னவன் பேரு

அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே - பனித்
துளியப் போல குணம் படச்ச தென்னவனே

மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி
வாரி வாரித் தூத்தும் இனி யாரு உனக்கு நாதி?
பாசம் வைத்ததாலே நீ பயிரைக் காத்த வேலி
பயிரைக் காத்த போதும் வீண் பழியைச் சுமந்த நீதி
சாமி வந்து கேட்டிடுமா வீண் பழியைத் தீர்த்திடுமா?

விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு? அது மன்னவன் பேரு

அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே - பனித்
துளியப் போல குணம் படச்ச தென்னவனே

நெஞ்சம் என்னும் கூடு அதில் நெருப்பு வைத்ததாரு?
துன்பம் வந்த போதும் அதைத் துடைப்பதிங்கு யாரு?
கலங்கும் போது சேறு அது தெளியும் போது நீரு
கடவுள் போட்ட கோடு அதத் திருத்தப் போவதாரு?
வெந்த புண்ணும் ஆறிடுமா? வேதனை தான் தீர்ந்திடுமா?

விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு? அது மன்னவன் பேரு

அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே பனித்
துளியப் போல குணம் படச்ச தென்னவனே

மஞ்சளிலே ஒரு நூலெடுத்து
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு? அது மன்னவன் பேரு

அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே பனித்
துளியப் போல குணம் படச்ச தென்னவனே


ஆகிரா
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Apr 6, 2010, 4:35:27 PM4/6/10
to il...@googlegroups.com
இவ்வுலகில் நிலையாமை ஒன்றே நிலையானதென்னும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும் உண்மையை உணராமல் மனிதர்களாகிய நாம் என்றென்றும் பணம் சம்பாதிப்பதிலும், நம் உடலுக்கும், உடலின் உணர்வையே பெரும்பாலும் கொண்டு விளங்கும் மனதுக்கும் இன்பம் தரும் பொருட்களையும் வசதிகளையும் அடைவதிலும் நம் காலத்தைக் கழிக்கிறோம். இத்தகைய செயல்பாட்டினால் முன்னோர் அறிவுறுத்திய நல்ல கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டுப் பாப காரியங்களையும் செய்யத் துணிகிறோம். பலருடன் கருத்து வேறுபாடுகளை வளர்த்து நல்லுறவை இழக்கிறோம். இதன் விளைவாக மனம் கெட்டு அதனால் உடல் தளர்ந்து தீராத நோய்களுக்காளாகி, பல விதத்தில் ஈட்டிய பணமும் வசதிகளும் தரவல்ல சுகங்களை அனுபவிக்க இயலாத நிலையையும் அடைகிறோம். இன்பம் தரும் என எண்ணி ஈட்டிய பொருள் பயனற்றதாகிவிட்ட நிலையிலும் எவ்வாறாகிலும் நம்மை வாட்டுகின்ற நோய்களிலிருந்து குணமடைந்து நாம் விரும்பிய சுகங்களை அடைய வேண்டும் எனும் எண்ணத்திலேயே மீதமுள்ள வாழ்நாளையும் இது நாள் வரையில் ஈட்டிய பொருளையும் வீணாக்கி என்றோ ஒரு நாள் எவ்விதப் பயனுமின்றி வருந்தி மடிகிறோம்.
 
உலக வாழ்வு நிலையற்றதெனும் உண்மையை உணர்ந்த ஞானிகள் இத்தகைய துன்மார்க்கத்தினின்றும் விலகி, பொருளின் மேல் பற்றை நீக்கி உலக நன்மைக்காகப் பாடுபடுவதையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்கின்றனர். இத்தகைய ஞானிகள் தாங்கள் என்றும் நிலையான ஆத்மார்த்தமான இன்பத்தைப் பெறுவதுடன் தன்னை நாடி வருவோர்க்கும் தாம் பெற்ற இன்பத்தைப் பெற வழி காட்டுகின்றனர். இதனிடைய பலர் காவியுடையும் தெய்வீக சின்னங்களையும் தரித்து, எப்பொழுதும் ஞான மார்க்கம் தொடர்பானவற்றையே பிறருக்கு உபதேசம் செய்து, முற்றும் துறந்த முனிவர்களைப் போல் வேஷமிட்டு ஊரையும் உலகத்தையும் ஏமாற்றும் பல ஆஷாடபூதிகளையும் நாம் அவ்வப்போது அறிகிறோம். அத்தகைய வேடதாரிகளளைப் பற்றிய அறிவு நமக்கு உண்டாவதற்கு முன்னரே நம்மையும் அறியாமல் நம்மில் பலர் இத்தகைய வேடதாரிகளை மெய் ஞானிகள் என்று நம்பி ஏமாறுவதும் உண்டு.
 
ஞான மார்க்கத்துக்கான வழியைத் திருவள்ளுவர் முதலான ஞானியர் தெளிவாக வகுத்துத் தந்துள்ள நிலையில் நாம் வேறு யாரையும் இதற்காக நாட வேண்டுவதில்லை.
 
 
இரவும் பகலும்
இயற்றியவர்: ஆலங்குடி சோமு
இசை: டி.ஆர். பாப்பா
பாடியவர்: எஸ்.ஏ. அசோகன்
 
எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்
எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்
 
பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி
பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி
பிறந்து வந்த நாள் முதலாய்ப் பேராசையுடன் உறவாடி
இறந்தவனே - அப்படி
 
எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்
 
தாயாரின் வேதனையில் பிறக்குறான் - மனுஷன்
தன்னாலே துடிதுடிச்சு எறக்குறான்
தாயாரின் வேதனையில் பிறக்குறான் - மனுஷன்
தன்னாலே துடிதுடிச்சு எறக்குறான் - இடையில்
ஓயாத கவலையிலே மிதக்கிறான் - இடையில்
ஓயாத கவலையிலே மிதக்கிறான் - ஒரு நாள்
உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான் - ஒரு நாள்
உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான் - அப்படி
 
எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்
 
இளமையிலே சில நாள் முதுமையிலே சில நாள்
இளமையிலே சில நாள் முதுமையிலே சில நாள்
இன்பத்திலே சில நாள் துன்பத்திலே சில நாள்
அன்னையும் மனைவியும் அருமைப் பிள்ளையும்
அன்னையும் மனைவியும் அருமைப் பிள்ளையும்
கண்ணீர் சிந்திடவே கடைசி வழி ஒரு நாள்
கடைசி வழி ஒரு நாள் அப்படி
 
எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Apr 9, 2010, 4:15:11 PM4/9/10
to il...@googlegroups.com
பொதுவில் ஒரு மதத்தைச் சார்ந்தவர் அம்மதத்தினருள் சிறந்து விளங்கும் ஞானியரைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அதிசயங்களப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசுதல் வழக்கம். ஒரு ஞானியாகவோ மஹானாகவோ ஒருவர் திகழ வேண்டுமெனில் அவர் குறிப்பிடத்தக்க அற்புதங்களை நிகழ்த்தியிருக்க வேண்டுமென்னும் கருத்து உலகெங்கிலுமுள்ள மாந்தரிடையே நிலவி வருகிறது. அதிசயமெனவும் அற்புதமெனவும் இவர்கள் கருதுவது பெரும்பாலும் இயற்கைக்கு மாறாக இயற்கை நியதியை மீறிச் செயல்படும் திறமையையே. நம் கண் முன்னே பரந்து விரிந்த இந்த உலகெங்கிலும் காணுமிடம் யாவும் நிரம்பிக் கிடக்கும் எண்ணற்ற அதிசயங்களை நாம் கண்டாலும் இவற்றை அதிசயங்கள் என ஒப்புக்கொள்ள நம் மனம் முன்வருவதில்லை. இதன் காரணம் அறியாமையயே ஆகும்.
 
நீ கண்ட அதிசயங்கள் யாவை என்று எவரேனும் என்னைக் கேட்டால் நான் கூறுவதாவது, தினம் தோறும் இணய வாழியே முன் பின் அறிமுகமில்லாத எண்ணற்ற அன்பர்கள் என்னிடம் மிகுந்த அன்பு கொண்டு நான் எழுதும் பிதற்றல்களையும் படித்து, அவைகுறித்த தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, எனது சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் நிலையே என்பேன்.
 
உலகின் எங்கோ ஒரு மூலையில் சக மனிதர் ஒருவர் துன்புறுவதை அறிகையில் நாமெல்லோரும் ஒருமித்த மனதோடு அவர் துன்பம் நீங்கி இன்புற வேண்டுமென மனமுருகப் பிரார்த்தனை செய்கின்றோம். நம்மில் அனேகர் அவ்வாறு துன்பப் படுவோர் துயர் துடைக்கத் தேவையான பொருளாதார உதவிகளையும் திரட்டித் தருகின்றனர். நாட்டு நிலை குறித்தும் இந்த உலகை எதிர்நோக்கியுள்ள அபாயங்கள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டு உலகம் உய்யப் பாடுபடும் பாதையிலும் நாம் பயணம் மேற்கொண்டுள்ளோம். இவையாவும் குறிப்பிடத் தக்க அதிசயங்கேளேயன்றோ?
 
இது இவ்வாறிருக்க இளம் காதல் ஜோடி ஒன்று அதிசயம் பற்றி என்ன கூறுகிறது எனக் கேட்போமா?
 
 
திரைப்படம்: ஜீன்ஸ்
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: ஏ.ஆர். ரெஹ்மான்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சுஜாதா மோஹன்
ஆண்டு: 1998
 
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்று நல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ என்தன் அதிசயம்
கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஓஓ
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம் ஓஓ
 
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்று நல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ என்தன் அதிசயம்
 
ராரார ராரார ராரார ராரார ராரார ராரார ரா ஓஓ
ராரார ராரார ராரார ராரார ராரார ராரார ரா ஓஓ
 
ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் ஒரு
வாசமுள்ள பூவைப் பார் பூவாசம் அதிசயமே
அலை கடல் தந்த மேகத்தில் சிறு
துளி கூட உப்பில்லை
மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம் போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே
 
கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஓஓ
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம் ஓஓ
 
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்று நல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ என்தன் அதிசயம்
 
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
 
பெண்பாற் கொண்ட சிறு விரல்கள்
இரு கால் கொண்டு நடமாடும்
நீ தானென் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள் ஒரு
வாய் பேசும் பூவே நீ எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெரிக்கும் கன்னங்கள்
வாய் துடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கை கொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற க்ரீடம் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே
 
கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஓஓ
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
 
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்று நல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ என்தன் அதிசயம்
 
ராரார ராரார ராரார ராரார ராரார ராரார ரா ஓஓ
ராரார ராரார ராரார ராரார ராரார ராரார ரா ஓஓ
_________________________
http://www.mazhalaigal.com/
Reply all
Reply to author
Forward
0 new messages