தன்னை நம்பி வாழ்வோரைக் காப்பதுவே ஸ்வதர்மம். தன்னை நேரடியாகச்
சார்ந்திராதவரைக் காக்கும் செயலைப் பரதர்மம் என்று சொல்வர்.
இது இவ்வாறிருக்க, தங்களது குடும்பத்தினும் மேலாகத் தனது ஊராரையும்
நாட்டு மக்களையும் உலக நன்மையையும் கருதும் சில உத்தமர்களும் உலகில்
அவ்வப்போது அவதரித்து அனைவரையும் காக்கின்றனர் என்பதும் கண்கூடான
உண்மையே. நமது தேசம் அந்நியருக்கு அடிமைப்பட்டிருந்த காலத்தில் நம்
தலைவர்கள் பலர் தங்கள் குடும்பம் பட்டினியால் வாடும் நிலையில் இருந்தும்
தம் குடும்பத்தைப் பற்றிய கவலையில் மூழ்கிடாமல் தேசத்தைப் பற்றியும்
ஊராரைப் பற்றியுமே பெரிதும் சிந்தித்து அவர்களின் துயர் துடைப்பதற்கே
முதலிடம் கொடுத்து வந்திருக்கின்றனர்.
இவர்களது சிந்தனையில் ஊராரும் நாட்டு மக்களும் இன்புற்று வாழ வழி வகை
செய்வதே ஸ்வதர்மம், தனது குடும்பம் எனும் குறுகிய வட்டத்தில் அடைபட்டு
செயல்புரிவது சுயநலம் ஆகும்.
அத்தகைய மஹாத்மாக்களுள் ஒருவரே நமது சின்னக் கவுண்டர்.
http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/chinna-kavundar/antha-vaanathapola.php
திரைப்படம்: சின்னக் கவுண்டர்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: இசை ஞானி இளையராஜா
பாடியவர்: இளையராஜா
அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே - பனித்
துளியப் போல குணம் படச்ச தென்னவனே
மஞ்சளிலே ஒரு நூலெடுத்து
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு? அது மன்னவன் பேரு
அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே - பனித்
துளியப் போல குணம் படச்ச தென்னவனே
மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி
வாரி வாரித் தூத்தும் இனி யாரு உனக்கு நாதி?
பாசம் வைத்ததாலே நீ பயிரைக் காத்த வேலி
பயிரைக் காத்த போதும் வீண் பழியைச் சுமந்த நீதி
சாமி வந்து கேட்டிடுமா வீண் பழியைத் தீர்த்திடுமா?
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு? அது மன்னவன் பேரு
அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே - பனித்
துளியப் போல குணம் படச்ச தென்னவனே
நெஞ்சம் என்னும் கூடு அதில் நெருப்பு வைத்ததாரு?
துன்பம் வந்த போதும் அதைத் துடைப்பதிங்கு யாரு?
கலங்கும் போது சேறு அது தெளியும் போது நீரு
கடவுள் போட்ட கோடு அதத் திருத்தப் போவதாரு?
வெந்த புண்ணும் ஆறிடுமா? வேதனை தான் தீர்ந்திடுமா?
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு? அது மன்னவன் பேரு
அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே பனித்
துளியப் போல குணம் படச்ச தென்னவனே
மஞ்சளிலே ஒரு நூலெடுத்து
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு? அது மன்னவன் பேரு
அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே பனித்
துளியப் போல குணம் படச்ச தென்னவனே