Re: கல்வித் தகவல் மற்றும் செய்திகள்..!

31 views
Skip to first unread message

Sankaranarayanan Devarajan

unread,
Jul 22, 2010, 1:16:27 PM7/22/10
to tamila...@googlegroups.com, nallana...@googlegroups.com, namp...@googlegroups.com, tamil2...@googlegroups.com, il...@googlegroups.com

இலவச பாடசாலை துவக்க விழா

புதுச்சேரி : காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஏழை மாணவர்கள் பயன் பெறும் வகையில் இலவச பாடசாலை துவக்க விழா நடந்தது. முதலியார்பேட்டை இளைஞர் காங்., சார்பில் அதே பகுதியில் நடந்த பாடசாலை துவக்க விழாவிற்கு புதுச்சேரி மற்றும் போக்குவரத்து கூட்டுறவு சங்க தலைவர் துளசி வையத்தரசு தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தொழிற்சங்க தலைவர் அம்மைநாதன், காங்., கட்சி ராமலிங்கம், மாநில மாணவர் காங்., பொது செயலர் இளம்பருதி, முதலியார்பேட்டை பொது செயலர் வடிவேல் மற்றும் பலர் பங்கேற்றனர்.

காரைக்கால் : காரைக்கால் என்.ஐ.டி.,யில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கின

காரைக்கால் : காரைக்கால் என்.ஐ.டி.,யில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கின. அகில இந்திய அளவில் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி.,) 20 செயல்பட்டு வருகின்றன. இந்த கல்வியாண்டில் கூடுதலாக 10 புதிய என்.ஐ.டி.,க்கள் உருவாக்க மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதில் ஒன்று, புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல், என்.ஐ.டி.,க்கு சமீபத்தில் அடிக்கல் நாட்டினார். என்.ஐ.டி.,க்கான புதிய கட்டடம் அமையும் வரை, தற்காலிகமாக காரைக்கால் அண்ணா அரசு கலை கல்லூரியில் உள்ள நான்கு வகுப்பறைகளை பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்லூரியின் இயற்பியல், வேதியியல் ஆய்வகங்களை என்.ஐ.டி., மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி சுற்றுலா விருந்தினர் விடுதி அறைகள் முழுவதும் என்.ஐ.டி., மாணவர்கள் விடுதியாக பயன்படுத்தவும், மாணவியர் விடுதிக்காக கோட்டுச்சேரியில் நான்கு குடியிருப்புகள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. என்.ஐ.டி., முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கின. இதற்கான துவக்க விழா நேற்று மாலை நடந்தது. திருச்சி என்.ஐ.டி.,யின் டீன் சிதம்பரம் சிறப்புரையாற்றினார். இதுவரை 64 மாணவர்கள் இந்த என்.ஐ.டி.,யில் சேர்ந்துள்ளனர். இன்று (22ம் தேதி) முதல் நான்காம் கட்ட சேர்க்கைக்கான கவுன்சிலிங் துவங்குகிறது.

திருச்சி அண்ணா பல்கலை துணைவேந்தர் பொறுப்பேற்பு


திருச்சி: திருச்சி அண்ணா பல்கலை புதிய  துணைவேந்தராக தேவதாஸ் மனோகரன் நேற்று பொறுப்பேற்றார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்த ஆசிரிய தம்பதி மனோகரன்- விமலா ஆகியோரின் மகன் தேவதாஸ் மனோகரன். நாகர்கோவில் எஸ்.எல்.பி., மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பு, திருச்சி துவாக்குடி ஆர்.இ.சி.,யில்  சிவில் இன்ஜினியரிங், சென்னை அண்ணா பல்கலையில் முதுகலை மற்றும் பி.ஹெச்.டி., ஆகிய படிப்புகளை முடித்தார். சென்னை அண்ணா பல்கலையில் மூத்த பேராசிரியராக பணிபுரிந்தார். சென்னை அண்ணா பல்கலை ஆய்வுத்துறை உறுப்பினர், கோவை ஜி.சி.டி., அகாடமிக் கவுன்சில் உறுப்பினர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை பாடத்திட்டக்குழு உறுப்பினர் உட்பட ஏராளமான பொறுப்புகளை வகிக்கிறார். திருச்சி அண்ணா பல்கலை துணைவேந்தராக நேற்று மதியம் தேவதாஸ் மனோகரன் பொறுப்பேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அண்ணா பல்கலையில் மாணவர், ஆசிரியர், உறுப்புக் கல்லூரிகளுக்கு என 19 புதிய திட்டங்களை அமல்படுத்தி, அவற்றை உடனடியாக செயல்படுத்த உள்ளோம். அறிவுக்கு வயது ஒரு பொருட்டல்ல. இன்றைய சூழலில் ஈடுபாடு மற்றும் தாக்கத்துடன் பயிற்றுவிக்கக் கூடிய ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகளவில் தேவைப்படுகிறது. பொறியியல் மீது ஈடுபாடுடைய ஓய்வுப்பெற்ற பொறியியல் மற்றும் பல்துறை வல்லுநர்களை வரவேற்கிறோம். அவர்கள் கவுரவ பேராசிரியர்களாக அண்ணா பல்கலையில் நியமனம் செய்யப்படுவர். அவர்களை கல்வி மேம்பாட்டுக்கான ஆலோசகர்களாவும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தமிழ் பேச பயம்! அண்ணா பல்கலையில் பொறுப்பு வகித்தவர்கள் மருந்துக்கு கூட தமிழில் பேசமாட்டர். ஆனால், தற்போது பொறுப்பேற்ற தேவதாஸ் மனோகரன் ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விக்கு கூட அருமையான தமிழில் பதிலளிக்கிறார். அவரிடம், ""தமிழில் பேசினால் கேவலம் என்று நினைக்கும் இளைய தலைமுறைக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?'' என்று கேட்ட போது, ""தமிழில் பேசினால் கேவலம் என நினைக்கவில்லை. தமிழில் பேசினால் தவறாகி விடுமோ என்று தான் பயப்படுகின்றனர். செம்மொழி மாநாட்டுக்கு பின் அந்நிலை மாறிவிட்டது. பொறியியல் படிப்பை தமிழில் படிக்க வாய்ப்பும், தமிழில் படித்தவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் அரசு அளித்துள்ளது,'' என்றார்.



--
Always with Affection...
S.Devarajan.
http://www.engalalummudiyum.blogspot.com/
http://engalsakthi.blogspot.com/
www.kalvithagaval.co.cc/


Sankaranarayanan Devarajan

unread,
Jul 22, 2010, 1:30:43 PM7/22/10
to tamila...@googlegroups.com, nallana...@googlegroups.com, namp...@googlegroups.com, tamil2...@googlegroups.com, il...@googlegroups.com


மாவட்ட கால்பந்து போட்டி : வி.கே.புரம் பள்ளி சாம்பியன்


ஆழ்வார்குறிச்சி : கடையத்தில் நடந்த மேல்நிலைப் பள்ளிகளுக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் வி.கே.புரம் புனித மரியன்னை பள்ளி முதலிடம் பெற்று சுழற்கோப்பையை வென்றது.
கடையம் கால்பந்து கழகத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி விழா, பரிசளிப்பு விழா மற்றும் முழுமதி விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி புல்வெளி மைதானத்தில் நடந்த 6ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் சுழற்கோப்பைக்கான கால்பந்து போட்டியில் 16 பள்ளி அணிகள் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்கள் நடந்த இப்போட்டிகளில் வி.கே.புரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியும், பாப்பாகுடி நியூ லைப் அணியும் மோதியதில் வி.கே.புரம் புனித மரியன்னை பள்ளி சுழற்கோப்பையை வென்றது. இரண்டாமிடத்தை பாப்பாகுடி நியூ லைப் அணியும், மூன்றாமிடத்தை கடையம் சத்திரம் பாரதி பள்ளியும் பெற்றது. போட்டிக்கு நடுவராக வராகபுரம் சுந்தர், சாத்தூர் சரவணன், முதலியார்பட்டி முருகன், தென்காசி ஜான், கடையம் ரிமா, மணி ஆகியோர் செயல்பட்டனர்.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட விளையாட்டு அதிகாரி சேவியர் ஜோதிசற்குணம் தலைமை வகித்தார். தலைமையாசிரியர்கள் குமரன், டேனியல், மூத்த கால்பந்து வீரர்கள் ஆர்.பி.நடராஜன், டி.எஸ்.எம்.ரவீந்திரன் முன்னிலை வகித்தனர். கோவிந்தபேரி ஞானம் மறவா நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஸ்டீபன் வரவேற்றார்.
இலஞ்சி ஆர்.பி.பள்ளி பணிநிறைவு தலைமையாசிரியர் கல்யாணி சிவகாமிநாதன் வாழ்த்தி பேசினார். கடையம் பஞ்., தலைவர் சண்முகம், டாக்டர் நிம்ராட், தயாள் இசக்கிநாராயணன் ஆகியோர் மாவட்ட விளையாட்டு அதிகாரி சேவியர் ஜோதிசற்குணத்திற்கு விளையாட்டு சிற்பி, பாரதி லயன்ஸ் சங்க தலைவர் சண்முகவேலுவிற்கு சமுதாய சிற்பி விருது வழங்கினர்.
கால்பந்து போட்டியில் இரண்டாமிடம் பெற்ற பாப்பாகுடி நியூலைப் பள்ளிக்கு கல்யாணி சிவகாமிநாதனும், மூன்றாமிடம் பெற்ற கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் ராணுவவீரர் குணவரதனும் பரிசுகள் வழங்கினார்.
அரசு பொதுத்தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எபினேசர்பால், மாரிசெல்வம், ஜெகன், மகேஸ்வரன், ரமேஷ்கனி, சாம், மணிகண்டன், வீரபுத்திரன், வெய்க்காலிபட்டி புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் லூசிசெல்வா, திவ்யா, மாலதி, ஆஸ்வின் பென்னோலா, பக்யா, மகேஸ்வரி ஆகியோருக்கு முழுமதி விருதினை மாவட்ட விளையாட்டு அதிகாரி சேவியர் ஜோதிசற்குணம் வழங்கினார்.
கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பில் முதலிடம் பெற்ற ஜெகன், 10ம் வகுப்பில் முதல் இரு இடங்கள் பெற்ற முத்துராஜ், ராமசுப்பிரமணியன், எட்வேர்பாசில், சத்திரம் பாரதி மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் ஜூலியானா ஜெனிபர், கனிமொழி, சிவகாமி ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. கடையம் கால்பந்து கழகம் தங்கராஜ், முப்புடாதி, சுந்தர், சரவணன், மணிகண்டன், கெங்கமுத்து, இசக்கிமுத்து, தங்கராஜ், ஹரி ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
ரிமா நன்றி கூறினார். முப்பெரும் விழா ஏற்பாடுகளை மூத்த கால்பந்து வீரர்கள் ஆர்.பி.நடராஜன், டி.எஸ்.எம்.ரவீந்திரன், எஸ்.பி.குணவரதன் மேற்பார்வையில் கால்பந்து கழக தலைவர் மெரிபால், செயலாளர் கிறிஸ்துதாஸ், பொருளாளர் ஜெயராஜ், துணைத் தலைவர்கள் ஸ்டீபன், பிரபாகரன், தாமஸ், துணைச் செயலாளர் ரிமா, கண்ணன் உறுப்பினர்கள் தளவாய், அருள், வினோத், பிரகாஷ், சதிஷ் ஆகியோர் செய்திருந்தனர்.


இலவச தொழிற்கருவி வழங்கல் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்...


ஊட்டி : "இலவச தொழிற்கருவி வழங்கும் திட்டத்துக்கு, பயனாளிகள் விண்ணப்பிக்க வேண்டும்' என அழைப்பு விடப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர்கள், தொழிற்கல்வி பயின்று தொழில் செய்ய ஆர்வம் உள்ளோருக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச தொழிற்கருவி வழங்குவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்கு, தையல் இயந்திரம், இஸ்திரிப் பெட்டி, தச்சுக்கருவிகள், ஊட்டி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம் மூலம் வழங்கப்பட உள்ளதால், தகுதியானவர்கள், சாதி, வருமானம் இருப்பிடம் மற்றும் தொழிற்கருவி பெற்றதற்கான சான்றுகளுடன், "மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், ஊட்டி' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

சத்திரிய மகளிர் பள்ளிகள் நூற்றாண்டு விழா


விருதுநகர்: விருதுநகர் சத்திரிய மகளிர் பள்ளிகளின் நூற் றாண்டு நிறைவு விழா இன்று முதல் துவங்கி நான்கு தினங்கள் நடைபெறுகிறது. இன்று சத்திரிய மகளிர் மேல் நிலைப்  பள்ளி வளாகத்திலுள்ள கலையரங்கில் காலை 10 முதல் 12 மணி வரை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியைகள் மற்றும் ஆசிரியைகளை பாராட்டி கவுரவித்தல்.  எஸ்.என்.பி. 
ஜெயசிங் தலைமை வகிக்கிறார். பேராசிரியை பெரியதாய் வாழ்த்திப் பேசுகிறார். ஜூலை 23ல்  காலை 10 முதல் 12 மணிவரை சாதனை படைத்த பழைய மாணவிகளை பாராட்டி கவுரவித்தல்.  தொழிலதிபர் பிரபாகர் தலைமை வகிக்கிறார்.ஜூலை 24 ல்  காலை 10 முதல் 12 மணி வரை சேவை புரிந்த முன்னாள் நிர்வாகிகளைப் பாராட்டி கவுரவித்தல்.முன்னாள் எம்.எல்.சி., ஆனந்தம் தலைமை வகிக்கிறார்.சுகி. சிவம் சிறப்புரையாற்றுகிறார்.  ஏற்பாடுகளை சத்திரிய மகளிர் பள்ளிகளின் நிர்வாக குழுவினர் செய்துள்ளனர்.

Sankaranarayanan Devarajan

unread,
Jul 22, 2010, 1:36:35 PM7/22/10
to tamila...@googlegroups.com, nallana...@googlegroups.com, namp...@googlegroups.com, tamil2...@googlegroups.com, il...@googlegroups.com

கல்வித் தகவல்

மாலை நேரக்கல்லூரி பிற்பட்ட மாணவர்களுக்கு உதவி தொகை


ராமேஸ்வரம்: மாலை நேரக்கல்லூரியில் படிக்கும் பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் காரைக் குடி அழகப்பா பல்கலைக்கழகம் சார்பில் பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் மற்றும் தொண்டியில் மாலை நேரக்கல்லூரி இயங்கி வருகிறது. சொந்த ஊர்களில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சிலர் வெளியூர்களில் உயர் கல்வி படிக்க வசதி முடியாது படிப் பையே நிறுத்தி விடுகின்றனர்.  வெளியூரில் சென்று படிக்க முடியாத மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் கல்லூரி படிப்பை படிக்க வசதியாக மாலை நேரக்கல்லூரி துவங்கப் பட்ட நிலையில், கல்வி உதவித்தொகை கிடைக்காததால் வசதியில்லாத பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இதிலும் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கல்விக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அரசால் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாலை நேரக்கல்லூரியில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப் பட்டால், மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் பட்டப்படிப்பை தொடர வாய்ப்புள்ளது.  கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ள மாவட்டத்தில் இயங்கி வரும் மாலைநேரக்கல்லூரியில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யோகா போட்டியில் மாணவர்கள் சாதனை


கரூர்: மாநில அளவில் ஈரோட்டில் நடந்த யோகாசனப் போட்டியில் கரூர் கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி மாணவி ஆர்த்தி பல்வேறு போட்டியில் வெற்றிபெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம், தங்க பெண்மணி பட்டம் பெற்றார். மாணவியை நேரி ல் அழைத்து கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி பாராட்டினார். தாந்தோணிமலை அன்பாலயத்தை சேர்ந்த கண் பார்வையற்ற, காது கேளாத பள்ளி மாணவர்கள் 15 பேர், அதே போட்டியில் பங்கேற்று வெவ்வேறு இனங்களில் இரண்டு பேர் முதல் பரிசு பெற்றனர். அவர்களையும் கலெக்டர் பாராட்டினார். டி.ஆர்.ஓ., முனிரத்தினம் உட்பட பலர் உடனிருந்தனர்.

வி.ஏ.ஓ., தேர்வுக்கு இலவச பயிற்சி



சிவகங்கை: வி.ஏ.ஓ., தேர்வுக்கு சிவகங்கையில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சிவகங்கை மனிதவள மைய இயக்குனர் கற்பூரசுந் தரபாண்டியன் அறிக்கை: இதில் கலந்து கொள்ள விரும்புவோர், சிவகங்கை கே.ஆர்.மேல்நிலைப்பள்ளியில் விண்ணப் பங்களை பெறலாம். விண்ணப்பங்களை வரும் 30 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நுழைவு தேர்வு நடக்கும்.  விபரம் வேண்டுவோர், "04575 - 244 156' எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது.



 

Sankaranarayanan Devarajan

unread,
Jul 23, 2010, 11:31:03 AM7/23/10
to tamila...@googlegroups.com, nallana...@googlegroups.com, namp...@googlegroups.com, tamil2...@googlegroups.com, il...@googlegroups.com

 

.தமிழ் பல்கலையில் ஆட்சிமன்ற கூட்டம்


தஞ்சாவூர்: தஞ்சை தமிழ் பல்கலையில் துணை வேந்தர் ராசேந்திரன் தலைமையில் ஆட்சிமன்றக்குழு கூட்டம் நடந்தது.
தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை செயலர் முத்துசாமி, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் எழிலரசு, உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் குணசேகரன், உறுப்பினர் எம்.எல்.ஏ., துரைசந்திரசேகரன், வளர்தமிழ் புலத்தலைவர் சித்திரபுத்திரன், அறிவியல் புலத்தலைவர் தெய்வநாயகம், மொழிப்புலத்தலைவர் ராமநாதன், பாளையங்கோட்டை தமிழறிஞர் பரமசிவன் ஆகியோர் பங்கேற்றனர். உலக தமிழ் செம்மொழி மாநாடு நடந்ததன் தொடர்ச்சியாக தமிழ் பல்கலைக்கழகம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், தமிழ் செம்மொழி வளர்ச்சிக்கான பணிகளை பல்கலைக் கழகத்தின் மூலம் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது.

.மாணவ, மாணவிகளுக்கு மூலிகை செடி வழங்கல்


வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி தெற்கு எஸ்.கே.அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் ஆயிரத்து 820 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூலிகை ஆராய்ச்சி அபிவிருத்தி அறக்கட்டளை சார்பில் மூலிகை செடிகள் வழங்கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன், உதவித்தலைமை ஆசிரியர் இளங்கோவன், சித்த மருத்துவர்கள் வெங்கடாசலம், சண்முகம், அறக்கட்டளை உதவி இயக்குனர் மதியழகன் உட்பட பலர் பங்கேற்றனர். இதுபோல, தேத்தாக்குடி தெற்கு சரசுவதி உதவி தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் 280 பேருக்கு ஞாபக சக்தியை உண்டாக்கும் வல்லாரை, கரிசாலை போன்ற மூலிகை செடிகள் வழங்கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர் ரகுபதி, பெற்றோர்கள் ரெங்கசாமி, சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மாநில கூடைப்பந்து அணிக்கு மாணவிகள் தேர்வு


சிவகங்கை : மதுரையில், 19 வயதுக்கு உட்பட்ட, மாநில கூடைப்பந்து அணிக்கான தேர்வு நடந்தது. இதில் சிவகங்கை புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முத்துலட்சுமி, கிருஷ்ணவேணி தேர்ச்சி பெற்றனர்;  சென்னையில் நடக்கும் போட்டிகளில், மாநில அணி சார்பில் பங்கேற்பர். மாணவிகளை தாளாளர் மார்க்கரேட் சகாயமேரி, தலைமை ஆசிரியை பிரின்சிலி, பயிற்சியாளர்கள் தேவதாஸ், வேலவன், உடற்கல்வி ஆசிரியர்கள் அழகுமீனாள், சரவணபாலாஜி பாராட்டினர்.





Sankaranarayanan Devarajan

unread,
Jul 23, 2010, 11:38:05 AM7/23/10
to tamila...@googlegroups.com, nallana...@googlegroups.com, namp...@googlegroups.com, tamil2...@googlegroups.com, il...@googlegroups.com


கம்பன் கழக ஆண்டு விழா : புதுகையில் துவக்கம்


புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கம்பன் கழகத்தின் 35வது ஆண்டு விழா (23ம் தேதி) துவங்கி 3 நாள் நடக்கிறது. நகர்மன்ற அரங்கில் நடைபெறவுள்ள முதல் நாள் விழாவுக்கு ரவிச்சந்திரன் தலைமை வகிக்கிறார். கம்பன் கழகத் தலைவர் ராமையா வரவேற்கிறார். புதுச்சேரி கம்பன் கழகத் தலைவர் கோவிந்தசாமி, வேலூர் கம்பன் கழகத் தலைவர் குப்புசாமி முதலியார், மாவட்ட வர்த்தகக் கழகத் தலைவர் சின்னப்பா, காரைக்குடி கம்பன்கழகச் செயலாளர் பழனியப்பன் உட்பட பலர் பங்கேற்கின்றனர். இரண்டாவது நாள் நடக்கவுள்ள பாராட்டரங்க நிகழ்ச்சியில் திருச்சி எம்.பி., குமார், முன்னாள் அமைச்சர் ரகுபதி, எஸ்.பி., மூர்த்தி, நகர்மன்றத் தலைவர் ராமதிலகம், துணைத் தலைவர் நைனாமுகம்மது, நகராட்சி கமிஷனர் பாலகிருஷ்ணன், ஸ்டேட் பாங்க் முதன்மை மேலாளர் பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்கின்றனர். மூன்றாவது நாள் நடைபெறவுள்ள கவியரங்க நிகழ்ச்சிக்கு கவிஞர் மூபா தலைமை வகிக்கிறார். கவிஞர்கள் கவிதைப்பித்தன், தங்கம்மூர்த்தி, ரேவதி, இனியன் உமாமகேஸ்வரி, இளங்கோவன், கஸ்தூரிநாதன் கவிச்சுரம் நிகழ்த்துகின்றனர். விழா நாட்களில் வழக்காடு மன்றம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சியும் நடக்கிறது.

மேலப்பெருமழைக்கு உத்தமர் காந்தி விருது : மக்கள் ஒத்துழைப்புடன் பஞ்., தலைவர் சாதனை


திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா முத்துப்பேட்டை யூனியனைச் சேர்ந்த மேலப்பெருமழை பஞ்சாயத்தில் 300 குடும்பங்களைச் சேர்ந்த 1,100 பேர் வசிக்கின்றனர். ராஜமாணிக்கம் 1996ல் போட்டியிட்டு பஞ்சாயத்து தலைவராக வென்றபோது, கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக கிராம மக்கள் ஒத்துழைப்புடன் ஒழித்தார். 2001ம் ஆண்டு தேர்தலில் போட்டியின்றி அவரே தேர்வு செய்யப்பட்டார். அவர் பணியாற்றிய காலத்தில் நமக்கு நாமே திட்டத்தில் குளம் தூர்வாரி, சுற்றுச்சுவர், படித்துறை கட்டினார். நூலகம், மருத்துவமனை, கிராம அங்காடி, திருமண மண்டபம் உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தார். அனைத்து வீடுகளிலும் பாதுகாக்கப்பட்ட கழிப்பிட வசதி செய்து கொடுத்து சுற்றுச்சூழலை காத்தமைக்காக 2006ம் ஆண்டு ஜனாதிபதி அப்துல்கலாமிடம் இருந்து நிர்மல் புரஷ்கார் விருது பெற்றார். தற்போது, அவரது மனைவி வேதவல்லி 2006 தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாயத்து தலைவராக உள்ளார்.

நிர்மல் புரஷ்கார் விருது பெற்ற தொகையில் வணிக வளாகம், கிராமம் முழுவதும் தென்னை மரம் வளர்த்து வருவாய்க்கு வழி செய்ததுடன், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கி, அதற்குரிய கட்டணம் முறையாக வசூலிக்கப்படுகிறது. கோவில் திருவிழாவில் ஜாதி, மத பேதமின்றி, அனைவரும் ஒன்று என்ற அடிப்படையில் கோவிலுக்கு சென்று வருகின்றனர். "அரசின் மதுக்கடையை இப்பஞ்சாயத்து எல்லைக்குள் திறக்கக்கூடாது' என தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்தப்படுகிறது. 2008-09ம் ஆண்டுக்கான உத்தமர் காந்தி விருது தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துக்களில் தேர்வு செய்யப்பட்ட 15 பஞ்சாயத்துக்களில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் மேலப்பெருமழை மட்டுமே பெற்றுள்ளது. ஜூலை 19ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின் இதற்கான விருதையும், ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை பஞ்சாயத்து தலைவர் வேதவல்லியிடம் வழங்கினார்.  ""ஐந்து லட்சம் ரூபாயும், கூடுதலாக ஐந்து லட்சம் ரூபாயும் சேர்த்து 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அனைத்து மக்களுக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொளள உள்ளோம். கிராம மக்களும், பஞ்சாயத்து கவுன்சிலரும், துணைத்தலைவர் ரவிச்சந்திரன், எழுத்தர் தங்கமணி உட்பட அனைவரும் ஒருமித்த கருத்துடன் செயல்படுவதால் இது சாத்தியமாயிற்று,'' என பஞ்சாயத்து தலைவர் வேதவல்லி தெரிவித்தார்.

.தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ


பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரியில் சென்னையை சேர்ந்த ஆப்செக்ட் பிரான்டர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் சார்பில் கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது. கேம்பஸ் இன்டர்வியூவை தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் நீலராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர். கல்லூரி டீன் சேகர் வரவேற்றார். கேம்பஸ் இன்டர்வியூவை தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் துவக்கி வைத்தார்.

தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரி, சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரி, சாரநாதன் இன்ஜினியரிங் கல்லூரி, எம்.ஏ.எம்., இன்ஜினியரிங் கல்லூரி, ஜே.ஜே., இன்ஜினியரிங் கல்லூரிகளை சேர்ந்த 2010ம் ஆண்டு பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் 250 பேர் கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கேற்றனர். சென்னை ஆப்செக்ட் பிரான்டர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் உதவி மேலாளர் மகேந்திரகுமார் மற்றும் நவீன்குமார், திவாகரன் மாணவ, மாணவியரை இன்டர்வியூ செய்தனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சார்லஸ், வேலைவாய்ப்புத்துறை தலைவர் சேகர் ஆகியோருடன் இணைந்து அனைத்துத் துறை ஒருங்கிணைப்பாளர்களும் செய்திருந்தனர்.  ஒருங்கிணைப்பாளர் சாந்தி நன்றி கூறினார்.

வீரர்களுக்கு கோப்பை

சென்னை: நாகப்பட்டினத்தில் நடந்த மாநில அளவிலான பால் பாட்மின்டன் போட்டியில் வெற்றி பெற்ற எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக விளையாட்டு வீரர்களுக்கு, பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து, கோப்பை வழங்கினார்.




 

Sankaranarayanan Devarajan

unread,
Jul 23, 2010, 11:48:40 AM7/23/10
to tamila...@googlegroups.com, nallana...@googlegroups.com, namp...@googlegroups.com, tamil2...@googlegroups.com, il...@googlegroups.com

ஆஸ்திரேலியா "லா ட்ரோப்' பல்கலைக்கழகத்துடன் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்









சென்னை: மாணவர்கள் பரிமாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியா "லா ட்ரோப்' பல்கலைக்கழகத்துடன் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை எஸ்.ஆர். எம்., பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியா நாட்டின் விக்டோரியா நகரிலுள்ள "லா ட்ரோப்' பல்கலைக்கழகத்துடன் மாணவர்கள் மற்றும் ஊழியர்களை பரிமாறிக் கொள்வது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சி எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாநாட்டு அரங்கில் நடந்தது. ஒப்பந்தத்தில் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் சார்பில் பதிவாளர் சேதுராமன், லா ட்ரோப் பல்கலைக்கழகத்தின் சார்பில் டீன் பிரையன் மெக்கா ஆகியோர் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.
மாணவர்கள் மற்றும் ஊழியர்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் கூட்டுக்கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதே ஒப்பந்தத்தின் நோக்கம். இவ்வொப்பந்தத்தின்படி ஒரு செமஸ்டருக்கு 2 மாணவர்கள் வீதம், ஆண்டுக்கு 4 மாணவர்கள் பரிமாறிக் கொள்ளப்படுவர். ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சில ஆண்டுகள் படிக்கும் மாணவர்கள் மீதமுள்ள காலத்தை மற்றொரு பல்கலைக்கழகத்திற்கு சென்று படித்து அந்தப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவர். இவ்வொப்பந்தம் ஐந்தாண்டு காலத்திற்கு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ஒப்பந்தக் காலம் நீட்டிக்கப்படும்.
நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக இணை துணைவேந்தர் கணேசன், புரோ ஹோஸ்ட் பொன்னவைக்கோ, பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொடர்புகள் துறை டீன் கோபால், "லா ட்ரோப்' பல்கலைக்கழக முதுநிலை சர்வதேச அலுவலர் நந்திலஷ்மணன், தெற்கு ஆசிய மேலாளர் அமிதா மல்ஹோத்ரா, தெற்காசிய சர்வதேச வளர்ச்சி மேலாளர் மனோஜ்குமார் வடவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கேரம் போட்டியில் சாம்பியன் பட்டம்
















மதுரை: ஈரோட்டில் நடந்த மாநில கேரம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மதுரை சாரதாவித்யாவனம் பள்ளி மாணவி சுவேதாவிற்கு முதல்வர் பிரேமா பரிசு வழங்கினார்

கல்லூரியில் மாணவியர் பேரவை

மதுரை: மதுரை சேர்மத்தாய் வாசன் பெண்கள் கல்லூரியில் மாணவியர் பேரவையை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி முதல்வர் மாரீஸ்குமார் துவக்கி வைத்தார். அருகில் கல்லூரி தலைவர் சிவசுப்ரமணியன், முதல்வர் கவுசல்யா.

650 மாணவ, மாணவியருக்கு இலவச சீருடை












மதுரை: செங்கப்பட‌ை அரசு மேல்நிலைப் பள்ளியில் 650 மாணவ, மாணவியருக்கு இலவச சீருடைகளை காங்கிரஸ் மாவட்ட பொரளாளர் கே.சீனிவாசன் வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் வேல்ராஜ், ராஜகுமாரசாமி, ராதாகிருஷ்ணன், ஆகியோர் உடன் இருந்தனர்.


தொழில் நுண்ணறிவு' குறித்த கருத்தரங்கு

கோவை: "தொழில் நுண்ணறிவு' குறித்த கருத்தரங்கு சரவணம்பட்டி, பி.பி.ஜி.,தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். கல்லூரிச் சேர்மன் தங்கவேலு தலைமை வகித்தார். ஆஸ்திரேலியாவிலுள்ள "சிண்டி' தொழில்நுட்பப் பல்கலை பேராசிரியர் டேனியல் சந்திரன் பேசுகையில், ""வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கு ஈடாக இந்திய கல்வி நிறுவனங்கள் தமது கல்வித்தரத்தையும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும்,'' என்றார். கருத்தரங்கில், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


Sankaranarayanan Devarajan

unread,
Jul 23, 2010, 11:56:29 AM7/23/10
to tamila...@googlegroups.com, nallana...@googlegroups.com, namp...@googlegroups.com, tamil2...@googlegroups.com, il...@googlegroups.com

விமானப்படை பள்ளி ஆசிரியர்களுக்கு கணித பாடத்தில் புதிய கற்றல் முறை

கோவை: டில்லியிலுள்ள விமானப்படை பள்ளிகளின் இயக்குனரகம் சார்பில், விமானப்படை பள்ளி ஆசிரியர்களுக்கு கணித பாடத்தில் புதிய கற்றல் முறையை செயல்படுத்துவது குறித்த இரண்டு நாள் பயிலரங்கு, கோவை விமானப்படை நிர்வாகவியல் பயிற்சிக் கல்லூரியில் நடந்தது.  இதில், விமானப்படை பள்ளிகளை சேர்ந்த 40 ஆசிரியர்கள் பங்கேற்றனர். நிறைவு விழாவில் கோவை, விமானப்படை நிர்வாகவியல் பயிற்சிக் கல்லூரியின் ஏர்கமாடோர் அஜய்மசான், ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். டில்லியிலுள்ள விமானப்படை தலைமையகம் மற்றும் ஆக்ஸ் போர்டு பல்கலை பிரஸ் ஆகியவை, பயிலரங்கு ஏற்பாடுகளை செய்தனர்.

"தங்கும் பூமி தாங்குமா?' கட்டுரையில் திறமை

குன்னூர் : உலக மக்கள் தொகை  கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. உலக மக்கள் தொகை நாளை முன்னிட்டு, ஜேசிஐ., குன்னூர் கிங்ஸ் சார்பில், "தங்கும் பூமி தாங்குமா?' என்ற தலைப்பில், குன்னூர் வட்டாரப் பள்ளி மாணவ, மாணவியரிடையே கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. புனித மேரீஸ், அன்னாள், புல்மோர், அறிஞர் அண்ணா, சாந்தி விஜயா பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மேல்நிலைப் பிரிவில் புனித மரியன்னை பள்ளி மாணவி ஜெயஸ்ரீ, சாந்தி விஜயா பள்ளி ரூபிணி, புனித அன்னாள் பள்ளி கீர்த்தி, நடுநிலைப் பிரிவில் புனித மரியன்னை பள்ளி பூரணி, புல்மோர் மெட்ரிக்., பள்ளி நவீன், அன்னாள் பள்ளி ரஞ்சிதா,    உயர்நிலைப் பிரிவில் அன்னாள் பள்ளி நூரி இர்பானா, மரியன்னை பள்ளி டோலி, சாந்தி விஜயா பள்ளி அபினயா முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.பரிசளிப்பு நிகழ்ச்சியில், புனித அன்னாள் பள்ளி தலைமை ஆசிரியை மரிய கொரட்டி தலைமை வகித்தார். ஜேசிஐ., குன்னூர் கிங்ஸ் மண்டல செயலர் லட்சுமி நாராயணன், தலைவி ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தனர். உதவித் தலைவர் அலெக்ஸ், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம்


மானாமதுரை : சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறார், நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த அன்பு சார்லஸ் (49). சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வந்த அவர் கூறியதாவது: கிராமத்தில் தந்தை விவசாயம் செய்து வந்தார். காவிரியில் கர்நாடகா தண்ணீர் தர மறுக்கும் போது கஷ்டத்தை அனுபவித்தோம். தண்ணீர் கிடைக்க மாற்று வழி என்ன என்ற தேடலின் போது, சுற்றுச்சூழல் மாசு பற்றி தெரிந்து கொண்டேன். சேலம், திருப்பூர், கோவையில் நொய்யல், பவானி ஆறுகள் சாயக்கழிவுகளால் மாசடைந்து வருவதின் தாக்கம், விழிப்புணர்வு பணியில் ஈடுபட காரணமாக இருந்தது.
கடந்த 2005 ஏப்., 22 ம் தேதி, நாமக்கல்லில் இருந்து பயணம் புறப்பட்டேன்; இதுவரை 33 ஆயிரத்து 700 கி.மீ., பயணம் செய்துள்ளேன்; 20 மாநிலங்களில் 4,100 பள்ளிகளில் பிரசாரம் செய்துள்ளேன். இரவில் ஏதாவது ஒரு கிராமத்தில் தங்குவேன். அங்கு இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுகாதார வாழ்க்கை பற்றி பேசுவேன்.
வாகா எல்லை முதல் கவுகாத்தி வரை; காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்துள்ளேன். "மொபைல் போன் டவர்' களால் பூச்சி, பறவை இனங்கள் அழிந்து வருகின்றன. இதனால்,  மொபைல் போன் வைத்து கொள்ளவில்லை, என்றார்.




Vridhachalempillay Subramaniam

unread,
Jul 25, 2010, 9:19:37 PM7/25/10
to il...@googlegroups.com, tamila...@googlegroups.com, nallana...@googlegroups.com, namp...@googlegroups.com, tamil2...@googlegroups.com
     சபாஷ்  !    இந்த  புது சிந்தனையாளரான  துணை வேந்தர் அவர்களுக்கு  வரவேற்பு கூறு முகமாய்  உங்கள் எல்லோருக்கும் நன்றி கூறி  அந்தப் பல்கலை  கழகத்திற்கு    உங்களால்  ஆன   தமிழ் சார்புள்ள  கருத்துக்களை   வாரி , வாரி  வழங்குமாறு  எல்லா தமிழன்பர்கள்  சார்பிலும் எனது சொந்த  சார்பிலும்  வேண்டிக்கொண்டு  இந்த செய்தி மடலைத்  துவக்கி வைக்கிறேன்.

                                நன்றி   சங்கரனாராயண்  தேவராஜன் அவர்களே !

                                  உங்கள்  நற்பணி தொடருட்டும்  !  வாழ்க  வளமுடன் !

                                    தமிழ்பால்  காமுற்ற  வி  சு  எனும்   விசும்பன்  .

2010/7/22 Sankaranarayanan Devarajan <sankarad...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "ILLAM [இல்லம்], your HOME".
To post to this group, send email to il...@googlegroups.com
To unsubscribe from this group, send email to illam-un...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/illam?hl=en



--
 Dr. Vridhachalempillay  SUBRAMANIAM.,MA.,Ph.D.,

UNESCO FELLOW - CURRICULUM CONSULTANT  ON   PEDAGOGY., TEACHER DEVELOPMENT &  EDUCATIONAL  MANAGEMENT NEEDS.
( MOBILE No.: 00+91+9444042771 )
Reply all
Reply to author
Forward
0 new messages