"என்னங்க நீங்க நலமா"?
பிரியமாகக் கேட்டேன்.
"எப்படிடா இருக்கே சுகு"
என் உள்மனம் கேட்டது ,
பூங்கொத்து சினிமா ,,,,,
நடிகனுக்கு ஒரு விழா.,,,,
கூட்டத்தில் நானும் ஒருத்தி ,
என் மனதில் உன்னை இருத்தி !
இன்று உன் அருகில் வரமுடியுமா?
ஆட்டோகிராப் கேட்கமுடியுமா?
அன்று உன் அணைப்பில் நான்!
இன்று ஒரு மூலையில் நான் !
என்னைக்காதலித்தது அந்தக்காலம்.
மறந்து போனது இந்தக்காலம் .
உன் புகழின் உச்சி .
என் மனதில் குளிர்ச்சி .
உன்னை மாற்றியது
பணமும் புகழும் .
என்னை உதறியது.
உன் திமிரும் .கர்வமும்.
உன் முகத்தை மகனிடம் காண்கிறேன்
நீதான் தந்தை என சொல்லவும் கூசுகிறேன் ,
கூடவே வந்தது மனத்தின் கனம்
என்ன சொல்வது! ஆண்களின் இனம் !
அன்புடன் விசாலம் .
விசாலத்தின் சிறு கவிதை, உன்மையில் சினிமாத்துரையில் நடந்துகொண்டுதான் இருக்கிறது மிகவும் பிரபலமான ஒரு நடிகர் (வில்லன், ஹீரோ, குணசச்சித்திர நடிகர், திரைப்பட தயாரிப்பாளர்) பல படங்களில் நடித்தவரின் உண்மையிது ..... அவரை சினிமாவில் முன்னுக்கு கொண்டுவர அவர் மனைவி பெருங்கஷ்டப்பட்டார், ஆனால் அவர் நல்ல நிலைக்கு வந்தவுடன் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார் இது பற்றி பல நாளேடுகளில் வந்தது குறிப்பிடதக்கது ....... எத்தனையோ பெண் விடுதலைத் தலைவர்கள் வந்த போதிலும் பெண்ணினம் எப்போதும் ஆணின் ஆதிக்கத்தில் கொடுமைப்படுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது இந்த நிலை மாறவெண்டும் தாய் குலத்தை மேம்படுத்தவேண்டும் அன்புடன் கருவை இராமசாமி --- On Tue, 25/11/08, vishalam raman <rvis...@gmail.com> wrote: |