Fwd: தினம் ஒரு பாடல்

36 views
Skip to first unread message

AKR Consultants

unread,
Jun 16, 2015, 3:00:54 PM6/16/15
to il...@googlegroups.com
தினம் ஒரு பாடல்

மங்கையரை மலர்களுக்கொப்பிடுவதுண்டு, அவர்கள் மலர்களைப் போல மென்மையான உடலும் மனமும் கொண்டு மலர்களைப் போல வாழ்வில் மணம் பரவச் செய்யும் மேன்மையினால். ஒவ்வொரு ஆணின் வாழ்விலும் ஒரு பெண் வந்து வாழ்க்கைத் துணையாக அமைந்த பின்னரே வாழ்வு மலர்கிறது, வாரிசுகள் பிறக்கின்றன. குடும்பம் அமைகின்றது, இல்லறம் செழிக்கின்றது. தன் மனதுக்கிசைந்த பெண்ணை விரும்பிக் காதலித்து மணமுடித்து உடன் சேர்ந்து வாழும் வாழ்வு அமையப்பெற்ற ஆண்கள் பிற ஆண்களைக் காட்டிலும் மிகவும்  கொடுத்து வைத்தவர்கள் என்பதில் ஐயமில்லை ஏனெனில் இருவர் மனமும் ஒருங்கிணைந்த நிலையில் தொடங்கித் தொடரும் வாழ்வில் தங்குதடைகள் எத்துணை வரினும் இருவரும் கூடி முயன்று அவற்றை வெல்லுவது மிக எளிது. 

கணவன் மனைவி உறவு முன்பின் அறிமுகமில்லாத ஆண் பெண் பாலரிடையே உருவாகுகையில் அத்தகைய மனம் ஒன்று பட்ட நிலை எய்துவது சற்றுக் கடினமே. இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு கருத்து வேறுபாடுகள் உருவாவதைத் தவிர்த்து ஒற்றுமையாக வாழப் பழகுவதே பெரிய சவாலாக அமைகிறது. எவ்வளவு பெரிய பிரச்சினைகள் எழுந்த போதிலும் அவற்றைத் தீர்த்துக்கொண்டு ஒன்றாக வாழ்வதே குறிக்கோளாகக் கொண்டு இருவரும் விட்டுக்கொடுத்து ஒருவர் மற்றவர் நலனைப் பெரிதென எண்ணி சுயநல உணர்வை அகற்றி வாழப்பழகுகையில் அங்கே இல்லற உறவு மிகவும் மேம்படுகிறது, வாழ்வில் வெற்றி காண வழி பிறக்கிறது. இருமனம் ஒன்றுபட்டு இணைந்து வாழும் முறைமையைக் கற்றுத்தேர்ந்த தம்பதியருக்குத் தம் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது எளிதாகவும் இனிதாகவும் அமைகிறது. 

கணவன் மனைவியரிடையே கருத்து வேறுபாடு எழுந்து அதைப் பெரிது படுத்தி இருவரும் ஒற்றுமையின்றி சண்டையிட்டுக்கொள்ளும் நிலை உருவாக விட்டால் அவர்களது சிறு பிரச்சினைகளையும் சமாளிப்பது மிகவும் கடினமானதாகிவிடுகிறது. ஒற்று பட்டு வாழப் பழகாத தம்பதியினர் தம் பிள்ளைகளை முறையாக வளர்க்க முடியாமல் தவிப்பதுண்டு. பல சமயங்களில் குழந்தைகளின் வாழ்க்கை தடம் மாறி நெறி கெட்டுத் தவறான வழியில் குழந்தைகள் செல்ல ஏதுவாகிறது. கணவனும் மனைவியும் ஒற்றுமையாய் வாழப் பழகிக்கொண்டால் இவ்வுலகமே சொர்க்கமாகிறது இல்லையேல் நரகமாகிறது.

முற்காலத்தில் அரசகுமாரர்களும் அரசகுமாரிகளும் காதல் வயப்பட்டு சரித்திரம் படைத்ததுண்டு. அவர்களும் உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் இன்பம் போல வேறில்லை என்பதை உணர்ந்து காதலைப் புனிதமாகக் கருதிப் போற்றினர். அத்தகைய அரச பரம்பரைகளைப் பின்னணியாகக் கொண்டு பல திரைப்படங்கள் தமிழிலும் பிற மொழிகளிலும் வெளிவந்துள்ளன. அக்கதைகளில் காதல் காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்து இன்னிசையும் நடனமும் ஒன்று கலந்து வடிவமைக்கப்பெற்றதால் மீண்டும் மீண்டும் கண்டு களிக்க விருப்பம் ஏற்படும் வகையில் திரைப்படங்கள் அமைந்தன. 

நம் கதாநாயகி, "இந்தப் புறா ஆட வேண்டுமானால் இளவரசர் பாட வேண்டும்." என்று கேட்க அவளது காதலனான இளவரசன், "ஓ, பாட வேண்டுமா?" என்று கேட்டுவிட்டுப் பாடுகிறான்.


திரைப்படம்: சாரங்கதாரா
பாடலாசிரியர்: ஏ. மருதகாசி
இசை: ஜி. ராமநாதன்
பாடியோர்: : டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1958

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெலாம் நானறிவேனே
வா வா ஓடி வா!

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெலாம் நானறிவேனே
வா வா ஓடி வா!
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே

இசையினில் மயங்கியே இன்புறும் அன்பே வா
ஆஆஅ ஆ ஆஆஅ ஆ ஆஆஅ ஆ ஆஆஆஆஆ
இசையினில் மயங்கியே இன்புறும் அன்பே வா
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெல்லாம் நானறிவேனே
வா வா ஓடி வா!
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே

சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி
விந்தைகள் புரிந்தாய் நானறியாமலே
சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி
விந்தைகள் புரிந்தாய் நானறியாமலே
மந்திரக் கண்ணாலே தந்திர வலை வீசும்
சுந்தர வடிவே உன் துணை காணவா!
மந்திரக் கண்ணாலே தந்திர வலை வீசும்
சுந்தர வடிவே உன் துணை காணவா!
இந்திர வில் நீயே சந்திர ஒளி நீயே!
இந்திர வில் நீயே சந்திர ஒளி நீயே!
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெல்லாம் நானறிவேனே
வா வா ஓடி வா!
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே

--


AKR Consultants

unread,
Jun 19, 2015, 3:19:05 PM6/19/15
to il...@googlegroups.com
ஆயுள் முழுவதும் பொருளீட்டுவதிலேயே பெரும்பான்மையான நேரத்தை செலவிடும் நாம் அவ்வாறு பாடுபட்டு ஈட்டிய பொருளை வாழ்க்கை சிறக்கப் பயன்படுத்துகிறோமா என எண்ணிப் பார்த்தோமெனில் அனேகமாக நூற்றுக்குத் தொண்ணூறு பேர்களுக்கு மேல் இல்லையெனும் எண்ணத்தையே பெறுவார்கள். இதன் காரணம் பொருள் சேர்க்க செலவிடும் நேரத்தில் அப்பொருளை எவ்வாறு செலவிடுவது என்று திட்டமிடவும்  அவ்வாறு திட்டமிடும் செலவுகள் முறையானவை தானா, நமக்கும் பிறருக்கும் நன்மை பயக்கத் தக்கவையா என ஆழ்ந்து சிந்தித்து செயல்படுவோர் எவ்வளவு குறைந்த பொருளை ஈட்டினாலும் அதனால் மகிழ்ச்சியடைவர். மாறாக ஈட்டும் பொருளை மதுவருந்துதல் போன்ற தவறான பழக்கத்தினால் வீணடித்து சிற்றின்ப நாட்டத்தில் வாழ்வைக் கழிப்போர் விரைவில் பெருந்துன்பமுற்று மகிழ்ச்சியை இழப்பர். 

மதுவிலக்கு நம் தமிழ்நாட்டில் 1971 வரை அமுலிலிருந்த போதிலும் கள்ளச் சாராய வியாபாரம் ஆங்காங்கே நடந்து கொண்டுதானிருந்தது. இருப்பினும் மது அருந்துவோர் வெகு சிலரே இருந்தனர். எவரேனும் மது அருந்தி விட்டுத் தெருவில் நடந்தால் போலீஸ்காரர் அவரை ஊதச் சொல்லி சாராய வாடை வந்தால் கைது செய்வதுண்டு. இருப்பினும் மதுவின் கெடுதலை எடுத்துச் சொல்லி மக்களை நல்வழிப்படுத்தும் விதமாகப் பல திரைப்படக் கதைகள் அக்காலத்தில் அமைந்திருந்தன.  மதுவிலக்கு அமுலிலிருந்த போதும் மதுவிலக்கு பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்டி சாராயத்தின் கொடுமைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் விதத்தில் அரசு செயல்பட்டு வந்தது. 

1972ஆம் ஆண்டு மதுவிலக்கு தளர்த்தப்பட்டு கள்ளுக் கடைகளும் சாராயக் கடைகளும் பெட்டிக்கடைகளுக்கீடாக மது விற்பனையில் மும்முரம் காட்டித் தமிழகத்தில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களைக் குடிகாரர்களாக்கி அவர்கள் உழைத்து ஈட்டும் பணத்தில் பெரும் பகுதியை மதுவருந்துவதற்காகவே செலவு செய்ய வைக்கும் நிலை அன்று முதல் இன்றுவரை நீடிக்கிறது. மதுவின் கெடுதியை மக்களுக்கு எடுத்துச் சொல்லி விளங்க வைக்கும் பணியில் அரசு சிறிதளவும் அக்கரை காட்டாமல் சாராய சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கிறது.

மதுவை ஆரம்ப காலத்தில் அற்ப சந்தோஷத்திற்காகப் பயன்படுத்தியவர்கள் நாளடைவில் மதுவிற்கடிமையாகி மது அருந்தாமல் சிறிது நேரமும் இருக்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டு, தன் வருவாய் மட்டுமின்றித் தன் குடும்பத்தாரின் பொருட்களையும் விற்று மதுவைக் குடிக்குமளவுக்கு அறிவு மழுங்கித் தன்னிலை குலைந்து நடைபிணமாக மிக இழிவான வாழ்க்கை நடத்துகின்றனர். இத்தகைய மது அடிமைகள் பெரும்பாலோர் மதுவிற்காகத் தம் ஓட்டுரிமையையும் அடமானம் வைக்கின்றனர். அதனாலேயே மீண்டும் மீண்டும் நாட்டை ஆளும் உரிமையை சமூக விரோதிகள் அடைந்து மக்கள் விலைவாசி ஏற்றத்தாலும் சமூக சீர்கேடுகளாலும் பெரும் அவதியுறும் நிலை நிலவுகிறது. 

இவ்வாறு மதுவுக்கு அடிமையான தொழிலாளிகள் பலர் தங்களது குழந்தைகளை முறையாக வளர்த்த இயலாமல் அவதிப்படுகின்றனர். பெரும்பாலோரது குழந்தைகள் பள்ளிப் படிப்பைத் தொடர வழியின்றிக் குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்து தம் குடும்பங்களைக் காக்கும் கடமையை இளம் வயதிலேயே சுமக்க வேண்டிய நிலை வருகிறது. தாய்மார்களும் தம் கணவன்மார்கள் குடிகாரர்களாக சீரழிந்து கிடக்கும் நிலையில் பல வீடுகளில் குற்றேவல் புரிந்து தம் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு அவதியுறுகின்றனர். இந்தப் பாழாய்ப் போன மதுவை அருந்தி மயங்கிக் கிடக்கும் நிலையிலிருந்து மக்கள் என்று மீள்கின்றனரோ அன்றே அரசு நல்லரசாக இருக்க வாய்ப்பு வரும். அதுவரை சங்கடங்கள் மேலும் தொடருமேயன்றி விடிவு காலம் விரைவில் வாராது.


திரைப்படம்: அன்பு எங்கே
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: வேதா
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1958

எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே
எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே

உத்தமமான மனிதர்களைத்தான்
உலகம் புகழுது ஏட்டிலே இந்த
உலகம் புகழுது ஏட்டிலே

அர்த்த ராத்திரி பனிரெண்டு மணிக்கு
ஆடிக்கொண்டே நுழைவதை
அகப்பட்டதெல்லாம் தூக்கி எறிந்து
ஆர்ப்பாட்டங்கள் செய்வதை
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்
வெட்கம் வருவது இல்லையா?
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்
வெட்கம் வருவது இல்லையா?
சின்னையா நீ சொல்லையா
சின்னையா நீ சொல்லையா

எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே

அன்னமுமிட்டுத் தாலாட்டி
ஆசையோடு வளர்த்தாள் - அந்த
அன்னையரின் எண்ணம் தன்னைக்
கனவினிலே வளர்த்தே
முன்னவர் போல் பெயரெடுத்து
முறையோடு வாழும்
முடிவு கொள்வீர் வாழ்வினில் நாளும்
துணை புரிவேன் நானும் தினம்
துணை புரிவேன் நானும்

எத்தனை கோடி பணமிருந்தாலும் 
நிம்மதி வேண்டும் வீட்டிலே 
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே

AKR Consultants

unread,
Jun 25, 2015, 3:35:09 AM6/25/15
to il...@googlegroups.com
தினம் ஒரு பாடல்

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!
அறம் வளர்ந்திடுக! மறம் மடிவுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தேயத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

என மஹாகவி பாரதியார் வாழ்த்திய நம் செந்தமிழ் நாடு இன்று என்ன நிலையிலிருக்கிறது என எண்ணிப் பார்க்கையில் என் மனம் மிகவும் வேதனையுறுகிறது. காரணம் செந்தமிழ் நாடு செழிப்பாக விளங்கிய காலமொன்று இருந்தது அதனைப் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி செய்கையில். கல்வி பட்டப் படிப்பு வரை முற்றிலும் இலவசமாக்கினார் காமராஜர். அதன் பின் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து மேற்படிப்பு படிப்போருக்கு மாதா மாதம் உதவித்தொகையாக மிகவும் கணிசமான தொகை வழங்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யம் இருக்கவில்லை. அரசாங்கம் அநாவசியச் செலவுகள் செய்யவில்லை. விலைவாசி கட்டுக்குள் இருந்தது. விவசாயிகள் செழிப்பாக இருந்தனர். உணவுப் பொருட்கள் அனைவருக்கும் மிகவும் மலிவான விலையில் கிடைத்தன.

சிறு தொழில்கள் சிறப்புற நடந்தன. வறுமை அறவே இருக்கவில்லை. இந்தியனாய் இரு, இந்தியப் பொருட்களை வாங்கு என அந்நாளில் மஹாத்மா காந்தி வகுத்த கொள்கை கடைபிடிக்கப் பட்டது. வேலைவாய்ப்பு அனைவருக்கும் கிட்டியது. அரசுப் பணியில் சேருவதற்குத் தகுதி அடிப்படையில் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. வியாபாரிகள் நியாயமாக வியாபாரம் செய்த காலம் அது. பேராசை இல்லாத நேர்மையான வணிகம் நடந்தது.

ஆற்று மணற்கொள்ளை அறவே இல்லை. சாராயம் இல்லை, சச்சரவுகள் இல்லை. சாதிச் சண்டைகள் இல்லை. அரசாங்கம் தன் கடமையைத் தவறாமல் செய்தது. அரசு அதிகாரிகளும் காவல் துறையினரும் கடமை தவறாமல் மக்களுக்கு சேவை செய்தனர். ஆசிரியர்கள் மிகவும் அக்கரையாகப் பள்ளிகளில் கல்வி போதித்தார்கள். பெரும்பாலான கல்விக் கூடங்கள் தனியார் நடத்திய போதிலும் அரசு அவற்றுக்கு உதவியது. ஆசிரியர்களின் மாத சம்பளம் மற்றும் பராமரிப்புக்கென அரசு ஒவ்வொரு பள்ளிக்கும் கணிசமான தொகையை உதவியாக வழங்கியது.

ரேஷன் கடைகள் இருக்கவில்லை. அனைத்துப் பொருட்களும் வெளிச் சந்தையிலேயே நியாய விலையில் கிடைத்தன.  அரசு மருத்துவ மனைகள் மிகவும் சிறப்பாக இயங்கியதுடன் சகலருக்கும் இலவச மருத்துவ உதவியுடன் சத்தான உணவும் தினம் தோறும் வழங்கப்பட்டு வந்தது. என் இளைய சகோதரியை என் தாயார் 1963ஆம் வருடம் அரசு மருத்துவமனையிலேயே அன்று பெற்றெடுத்தார். தெருக்கள் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டன. வியாதிகள் அதிகம் இருக்கவில்லை. எனக்குச் சிறு காயங்கள் விளையாடுகையில் பட்டபோது சிறுவனான நானே அரசு மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை பெற்றது இன்றும் என் மனதில் நீங்காமல் நிழலாடுகிறது.

1964ஆம் வருடம் நாம் 6ஆம் வகுப்பு பயில்கையில் எனது பள்ளிக் கட்டணம் ஆண்டு முழுவதற்குமாக ரூ 5/- அன்று ஒரு இட்டிலி விலை 3 நயா பைசாக்கள். அரிசி விலை 1 கிலோ 50 நயா பைசாக்கள். பொதுக் குழாய்களில் தண்ணீர் தவறாமல் வந்தது. ஊர் மக்கள் யாவரும் அதிலிருந்தே குடிதண்ணீர் பெற்றுச் சென்றனர். பெட்ரோல் விலை 1 லிட்டருக்கு 50 நயா பைசாக்கள். அன்று அம்பாசடர் கார் விலை ரூ 20,000/- இன்று ஒரு மொபெட் கூட வாங்க முடியாது அவ்விலையில்.

இத்தகைய விலைவாசி உயர்வுக்குக் காரணம் ஊழல். ரூ 1 விலையுள்ள பொருட்கள் அரசாங்கத்தால் ரூ 100, ரூ 1000 என அதிக விலைக்கு மக்கள் பணத்தில் வாங்கப் படுகின்றன. செய்யாத வேலைகளை செய்ததாக எழுதி செலவுக்கான பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர் அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் பிற அரசியல்வாதிகளும். தெருவில் நடக்கையில் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது, காரணம் அடைப்பெடுக்கப்படாத சாக்கடைகள், அள்ளப்படாத குப்பை மேடுகள். சுகாதாரத்துக்கென அரசு ஒதுக்கும் பணம் முழுவதும் வெகு சிலரால் கபளீகரம் செய்யப்பட்டு. வீட்டின் முன்னுள்ள குப்பையை அள்ள வேண்டுமெனில் அதற்கு ஒவ்வொரு வீட்டாரும் தனியே லஞ்சம் தர வேண்டியுள்ளது.  பள்ளிகளில் தமது குழந்தைகளைச் சேர்க்க ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் பல்லாயிரம் ரூபாய்கள் கட்டணமாகவும் கட்டாய நன்கொடையாகவும் பள்ளிக்குச் செலுத்த வேண்டியுள்ளது. உடல் நிலை சரியில்லாமல் ஒருவர் மருத்துவமனையில் ஒரு நாள் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறவே அவர் ஆயுள் முழுவதும் சேர்த்து வைத்த சேமிப்புத் தொகை செலவழிந்து விடுவதோடு மேலும் கடன் வாங்க வேண்டிய கட்டாய நிலை பூதாகரமாக மிரட்டுகிறது.

சிறு குறுந்தொழில்கள் அனைத்தும் முடக்கப்பட்டு நாட்டின் தொழில்கள் அன்னியப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துத் தரப்பட்டுள்ளது தடையில்லா மின்சார வசதிகளுடன் ஆனால் நம் மக்கள் அன்றாடம் மின்வெட்டால் மிகவும் அவதியுறுகின்றனர். குடிநீர் மாசுபட்டு பாட்டில்களில் கொள்ளை லாபத்துக்கு விற்கப்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் கொகோகோலா, பெப்சி முதலிய குளிர் பான வகைகள் தயார் செய்யும் அந்நிய நாட்டு நிறுவனங்கள் நிலத்தடி நீரைப் பெருமளவில் உறிஞ்சி சுற்று வட்டாரத்தில் விளைநிலங்கள் பாழ்படக் காரணமாவதுடன் நாட்டு மக்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் விஷப் பொருட்களைப் பானத்தில் கலந்து விற்பனை செய்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆலைக் கழிவு நீர் ஆற்றில் தாராளமாகக் கலக்க அனுமதிக்கின்றனர் லஞ்சம் வாங்கிக் கொண்டு.

அரசுத் துறை நிறுவனங்களில் லங்க ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஒரு ரேஷன் கார்டு வாங்க வேண்டுமானாலும் அதற்குக் கையூட்டாகப் பெருந்தொகை தர வேண்டியுள்ளது. காவல் துறை மக்களைப் பாதுகாப்பதற்குப் பதில் மக்களைச் சுரண்டி வன்முறை அரசியல் செய்யும் ஆட்சியாளர்களது ஏவல் துறையாகவே செயல்படுகிறது. நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கி ஆண்டுகள் பலவான போதும் நீதி கிடைக்காமல் மக்கள் அவதியுறுகின்றனர். சமுதாய சீர்கேடுகளையும் அரசுத் துறையின் அலட்சியப் போக்கையும் குறித்து யாரிடம் புகார் அளித்தும் பயனில்லா நிலை நிலவுகிறது.

இந்நிலை மாறி நம் செந்தமிழ் நாடு சுபிட்சம் பெற வேண்டும். அதற்கு என்ன செய்வதென்றே நமக்குத் தெரியவில்லை. காரணம் மக்களிடையே ஒற்றுமை இல்லை. சாதி மத ரீதியிலும் ஏழை, பணக்காரன் என்ற பேதத்தாலும் மக்கள் பிளவுபட்டு வலுவிழந்த நிலையில் உள்ளனர். அனைவரும் பேதங்களை மறந்து ஒற்றுமையாய் அநீதிகளை எதிர்த்துப் போராடினால் மட்டுமே தமிழ்நாடு பழைய சிறப்பை மீண்டும் அடைய வாய்ப்புள்ளது. இல்லையேல் அழிவு உறுதியே.


திரைப்படம்: மஸ் மாலினி
இசை: சலூரி ராஜேஸ்வர ராவ், பாரூர் எஸ். அனந்தராமன்
பாடியவர்: டி.வி. ரத்தினம்
ஆண்டு: 1947

செந்தமிழ் நாடு செழித்திடவே 
செந்தமிழ் நாடு செழித்திடவே 
செல்வமும் வாழ்வும் தழைத்திடவே தெய்வ
செந்தமிழ் நாடு செழித்திடவே 
செல்வமும் வாழ்வும் தழைத்திடவே தெய்வ
செந்தமிழ் நாடு செழித்திடவே

தேனொடுபாலும் பெருக்கெடுத்தோடி
ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ
தேனொடு பாலும் பெருக்கெடுத்தோடி
திருமகள் பாதமும் சூடி 
தேனொடு பாலும் பெருக்கெடுத்தோடி
திருமகள் பாதமும் சூடி நம்

செந்தமிழ் நாடு செழித்திடவே 
செல்வமும் வாழ்வும் தழைத்திடவே தெய்வ
செந்தமிழ் நாடு செழித்திடவே

மாதம் மும்மாரி மழை பொழிந்தே
மாதம் மும்மாரி மழை பொழிந்தே
மாநிலத்தோர் பசி தீர்த்தே
மாதம் மும்மாரி மழை பொழிந்தே
மாநிலத்தோர் பசி தீர்த்தே
காதல் மணாளனை கருதியே நாடி
காதல் மணாளனை கருதியே நாடி
களித்துக் கூடியே பாடி ஆடி நம்

செந்தமிழ் நாடு செழித்திடவே 
செல்வமும் வாழ்வும் தழைத்திடவே தெய்வ
செந்தமிழ் நாடு செழித்திடவே
Reply all
Reply to author
Forward
0 new messages