இல்லத்திற்கென்றுமே இன்றியமையாத மழலைகளையெல்லாம் தனது செல்வங்களாக்கி மாசற்ற குணமும்
, யாவரும் மெச்சிப் புகழுமாறு மெய்ஞானம் , விஞ்ஞானம்,கலைஞானம் அவையனைத்திலுமே விசாலமான தேர்வு கொண்ட எனதன்புத் தங்கை திருமதி விசாலம் வாழ்க வாழ்க வாழ்க! என்றென்றுமே கடவுள் அவருடனேயே இருப்பார்பலநாட்களுக்குப் பிறகு திரும்பி வந்த
'கிறுக்குத் தாத்தா' சீனு அந்தச்சீமாட்டியை இவ்வாறு கேட்க விரும்புகிறான் :"சங்கீதத்தின் இன்றியமையாத்தன்மையைப் பற்றி சொல்லும்பொழுது தங்களருமைச் சகோதரியைப் பற்றி தாங்கள் எழுதியதை கண்களில் நீர் மல்கியவாறு படித்தேன். அவர் இப்பொழுது எப்படியிருக்கிறாரெனத்தெரிந்துக் கொள்ள் ஒரு ஆவல் இருக்கிறது
".இதையடுத்து என்னைப் பற்றி சிரு தகவல்கள் அறிவிக்க விரும்புகிறேன் .இந்த வயதிலும் என் இருதையத்தைவிட்டு நீங்காது நிலைத்திருக்கும் வருத்தங்கள் இரண்டு
. முதலாவது: தனது இஷ்டப்படி தனக்கு வேண்டியவர்களையெல்லாம் போட்டோ எடுத்த எனது அண்ணன் (என்னைவிட 9/10 வயது மூத்தவன்) என்னுயிருக்குயிரான எனதன்னையின் ஒரு போட்டோ கூட எடுத்து வைக்காதது. இரண்டாவது: என் தந்தையின் ஸ்தானத்தில் எனதண்ணணை வைத்து வளர்ந்தேன். அவரது இஷ்டப்படியெல்லாம் வளர்ந்து வந்த என்னை முறைப் படி சங்கீதம் கற்க அனுமதிக்கவில்லை .அம்மா போனபிற்கு அடுத்தவருடமோ எப்பொவோ எனக்குச் சரியாக நினைவிற்கு வரவில்லை
.எங்கள் வீட்டு மொட்டை மாடியில் என்னை உக்காரவைத்து என்னுடைய் அண்ணா ஒரு போட்டோ எடுத்தார்
. அப்பொழுது எனக்கு எவ்வளவு வருத்தமாகவும் சிறிது கோபமாகவக்வும் இருந்தது என்றுச் சொல்லத்தேவையில்லை.ஓரு ஆச்சரியம் என்னவென்றால் வெகு நாட்களாக என்னிடமிருந்த அந்த போட்டோவை
அட்லாண்டாவிலிருக்கும் எனது பெண்ணுடைய ஆல்பத்தில் பத்திரப் படுத்தி வைத்திருக்கிறாள் .அம்மாதிரு பல போட்டோக்கள் அவளது ஆல்பத்திலி இருந்தது எனக்கு மிக்க் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது
. நான் 18/19 வயதில் வரைந்திருந்த என்னுடைய படம் அதில் இருந்தது. (அக் காலங்களில் ' தாறு மாறாக' 'தனக்குத் தோன்றியப்டி செய்த பொழுது போக்கில் வரைவதும் (watercolor) உண்டு.மேற்சொன்ன இரு படங்களையும் இத்துடன் அனுப்பலாம் எனத் தோன்றியது
. அனுப்பிகிறேன்.தொந்தரவாக இருந்தால் மன்னிக்கவும்
. படங்களையும் பதிவிரக்கம் செய்து கொள்ள வேண்டாம்.சீனு
பி
.கு. மேற்சொன்ன ஆல்பத்திலிருந்த வேறு சில படங்களை ஆகிரா அவர்களுக்கு அனுப்புவதற்கு பதிலாக எப்பொழுதும் போல் 'எடாகொட' மாக 'மழலைகள் குழுவிற்கு அனுப்பிவிட்டேன். உலகமெல்லாம் ஒப்புக்கொள்ளும் ஒரே உண்மையான சங்கீதத்திற்கும் எனக்கும் வளர்ந்து கொண்டு வந்திருக்கும் ஒரு மாதிரியான தொடர்பைப் பிறகு இதே தொடரில் எழுதுகிறேன்.--
V.Shrinivas (Seenu)
(Seenu)