ஆனால் இன்றைய உலகில் எதுவுமே பணத்தைக் கொண்டுதான்
தீர்மானிக்கப்படுகிறது. எதற்கும் பணம் தேவைப்படுகிறது. மனம் இருந்தால்
கூட, பாசமிருந்தால் கூட, கையில் பணமில்லாவிடில் எங்கே மருத்துவம்
பார்ப்பது? மருத்துவ செலவுகளோ, அதிகமாகிவிட்டன. அவர்களுக்கு அது ஒரு
வியாபார வாய்ப்பு. அங்கேயும் "Finance Management " ஒரு சிறப்பதிகாரம்!!
அனுபவ அறிவு இல்லாத வகையில் எதுவொன்றுக்கும் இயந்திரங்களை நம்ப
வேண்டியயநிலை. அவையோ அதீத செலவு வகையறாக்கள். என்ன சொல்வது? யாரைக் குறை
சொல்வது?
பட்டினத்தார் கூடத் தவறாகப் பாடிவிட்டார் என நினைக்கிறேன். "காதற்ற
ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே" என்றாரே தவிர, வைத்தியம், வைதீகம்
இவற்றுக்கெல்லாம் பணம் இன்றி என்ன செய்வது? போனவருக்குக் சொர்கமோ நரகமோ
13 நாட்கள் காரியம் செய்து, சாங்கியங்கள் நடத்தி கடையேற்றும் வரை
எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்படுகிறதே. இல்லாவிட்டால் இறந்த உயிர்கள்
பிசாசாக அல்லவோ அலைவதாக நமது சாத்திரங்கள் சொல்கிறது.
"இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான்; அதை
இருப்பவனும் எண்ணிப் பார்த்து வருந்திட்டான் " என்பதுதான் இன்றைய நிலை.
போட்டிகள் நிறைந்த இவ்வுலகில், அலுவலகப் பணியில் விடுப்பு எடுப்பது கூட
அவ்வளவு எளிதான ஒன்றல்லவே!
அதிலும் வயதானவர்கள் என்றால், இனி இருந்து என்ன பண்ணப்போகிறார்கள்; இனி
இருந்தால் பிரச்சினைதான் என்று சொல்வது ஒன்றும் புதிதல்லவே!
எல்லாவற்றிக்கும் காரணம் பொருள்தான்!
ஆதி சங்கரரைப் போல சாதாரண மனிதர்களின் தேவைகளை உணர்ந்தவர்கள் யாருமில்லை.
அவர் சன்நியாசிதான் எனினும் தனக்குப் பிச்சையிட முடியாது வருந்திய
கிழவிக்கும் பொன்மழை பொழிய வேண்டியவரன்றோ!!
"பொருளில்லார்க்கு புவிமிசை வாழ்வும்
போற்றும் நன்நிலையுமில்லை! அன்று
அருளது வேண்டிய ஆதி சங்கரரும் வாழ்வில்
பொருளதன் சிறப்புணர்ந்து போற்றியவரன்றோ!!"
"பணம் உன்கையில் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது!!
பணம் உன்னிடம் இல்லையென்றால், உன்னை ஒருவருக்கும் தெரியாது"
இந்நிலை எல்லோருக்கும் வரக்கூடியதுதான். எனவே அந்திமக் காலத்திற்காக,
சேமிப்பு மிக அவசியம். ஆண்டவனிடத்து "application" எல்லாம் தரலாம். ஆயுள்
காப்பீட்டுக் கழகத்திற்கும் mediclaim இவற்றுக்கும் apply பண்ணுவது சாலச்
சிறந்தது. மனமில்லாதவருக்கும், பணம் (அநாமத்தாக) வருமானால் செலவு செய்து,
"என்ன பண்றது; பணத்தைத் தண்ணியா செலவு செய்தும் பயனில்லே" எனக் கணக்கு
காட்ட உதவும்.
அது ஏனோ தெரியவில்ல; இந்த மாமியார் - மருமகள் உறவு இவ்வளவு மோசமாக
எடுத்துக்காட்டப்படுகிறது. அது சரி அது என்ன "ரெய்கி" நானறிந்தவரை அது
ஒரு உயிர் காக்கும் கலை என்பது. உங்கள் சொற்கள், ஒரு எதிர்மறைப் பொருளைத்
தருகிறதே! சகோதரியை விட்டுச் சற்று விலகியிருக்க வேண்டும் போலிருக்கிறதே!
அன்புடன்
செபரா
"உறவும் பிறவும் ஒரு கணப் பொழுதில்
மறக்கச் செய்வதும் மரணம்தானே!
இறப்பின் சிறப்பு இதுவென்றானபின்
ஏங்குவதேனோ இனியென் மனமே!!"
உற்றமும் சுற்றமும் ஒருநாள் அழுவர்;
பெற்றோராயின் பேசிடப் பத்துநாள்!
மற்றவர் வந்தவர் மறுகணம் மறந்திட;
கொற்றவன் இங்கே கூற்றுவனாகிட!
பெற்றதும் உற்றதும் பேசிட விழைவதும்
அற்றது பொருளெனின் அன்றே மறைந்திடும்;
கற்றவராயினும், காலத்தின் கட்டாயம்
இற்றது உறவென இதயம் இறுகுவர்!!
"மரணம் ஒரு மாமருந்தா?" - செபராவின்
கவிதைத்தொகுப்பிலிருந்து
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே - பிழைக்கும்
மனிதனில்லே ...
இறப்பை குறித்து சில சிந்தனைகள் உண்டு. இந்த சந்தர்பத்தில் முன்
வைக்கிறேனே என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.
இறப்பை குறித்து யாரும் அஞ்சத்தேவை இல்லை.
ஆன்மீகவாதியோ அல்லது நாஸ்திகவாதியோ.
இதை உணர கொஞ்சம் நேரம் செலவிட்டு யோசனை செய்தால் போதும்.
நாத்திகவாதி:
இறந்த பின் நீ இருக்கப்போவதிலை. மனம் இறந்துவிடும். அதனால் துயரப்பட
முடியாது. வேதனைப்பட முடியாது. வலி கிடையாது. பின் ஏன் அஞ்ச வேண்டும்?
ஆன்மீகவாதி:
இறப்பது இந்த உடலே. ஆன்மா அழிவதில்லை. அது மீண்டும் மீண்டும்
பிறப்பெடுக்கும். அதனால் இறப்பை குறித்து பயப்படுவது பொருள் அற்றது.
பின் ஏன் நாம் பயப்படுகிறோம்?
முன் ஒரு முறை ஒரு குழுவில் இது குரித்து ஒரு கேள்வியை முன் வைத்தேன்.
ஒரு வேளை யமன் வந்து "உன் வாழ் நாள் முடிந்து போய் விட்டது. போகலாம் வா"
என்று கூப்பிட்டால் யார் போகத்தயாராக இருக்கிறீர்கள்?
பலர் பயந்து போய் என்ன இப்படியெல்லாம் கேட்கிறாய் என்றார்கள்.
(இந்த கருத்தை கொண்டு ஒரு அழகான கதைகூட வலைப்பூ ஒன்றில் படித்தேன்)
ஏன் என்றால் நாம் முக்கால்வாசி பேர் நாம்தாம் ஏதோ காரியங்கள் செய்வதாக
நினைக்கிறோம். நாம்தாம் குடும்பத்தை காப்பாத்துகிறோம். நாம்தான்
குழந்தைகளை வளர்க்கிறோம்; இப்படி பல கற்பனைகள்.
நாம் இல்லாவிட்டலும் இந்த வேலைகளை வேறு யாரோ செய்து விடுவார்கள்.
ஏனெனில் காரியங்கள் இறைவன் சங்கல்பத்தால்தான் நடை பெறுகிறன. நம்மால்
அல்ல. நாம் ஒரு கருவி மட்டுமே! யார் இதை உணர்கிறார்களோ அவர்கள் எப்போதுமே
கிளம்ப தயாராக இருப்பார்கள்!
உடம்பு அதிகம் படுத்துகிறது என்று ஒருவர் அவருடைய ஆன்மீக வழிகாட்டியிடன்
முறையிட்டாராம். அதற்கு அவர் இந்த சரீரம் ரிப்பேர் ஆகிவிட்டது. புதிதாக
தருகிறேன் என்றாராம்.. கூட இருந்தவர்கள் குணமாகிவிடும் என்று சொன்னதாக
நினைத்தனர். பக்தர் மகிழ்ச்சியுடன் போய் விட்டார். அன்றிரவு மேலுலகமும்
போய்விட்டார்!
கடைசியாக ப்ராக்டிகல் சிந்தனை ஒன்று.
லிவிங் வில் என்று ஒன்று உள்ளது.
அதன்படி நாம் இறக்கும் தருவாயில் மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று
கட்டுப்படுத்த முடியும்.
ஸ்ட்ரோக் வந்ததா? நான் நிம்மதியாக போக வேண்டும். மருத்துவர் வர வேண்டாம்.
மருத்துவ மனை வேண்டாம். சிபி ஆர் வேண்டாம் என்றெல்லாம் நாம் எழுதி வைக்க
முடியும். அது சட்ட ரீதியாக மற்றவர்களை கட்டுப்படுத்தும்.
பல நடுத்தர குடும்பங்கள் இன்று மருத்துவ மனையில் சேர்த்துவிட்டு
சக்திக்கு மீறி செலவு செய்து கஷ்டப்படுகிறார்கள். செலவு செய்வது
சக்திக்கு மீறியது என்று தெரிந்தாலும் மற்றவர்கள் ஏதேனும் சொல்வார்களோ
என்று பயந்து செய்கிறார்கள். யோசித்து பார்த்தால் அவர்கள் அப்படி செலவு
செய்வதை அந்த நோயாளியே விரும்ப மாட்டார். சிகித்சையால் அவரும் படாத பாடு
படுவார்.
இதற்கு ஒரே தீர்வு நாம் கடைசி காலத்தில் எப்படி போக வேண்டும் என
தீர்மானித்து அதை எழுதி வைத்து மற்றவர்களுக்கும் சொல்லி வைப்பதே.
நான் எனக்கு அப்படித்தான் செய்திருக்கிறேன். நோ சிபி ஆர்; செயற்கை
சுவாசம் வேண்டாம், என்று.
விசாலம் அம்மை குணமடைந்து மேலும் தொண்டாற்ற இறை அருள் வேண்டி,
திவா
2008/2/4 vishalam raman <rvis...@gmail.com>:
> நம்பிக்கையில் முதலில் எழுதியது,,,,,,
>
--
My blogs: http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
2008/2/4 GEETHA SAMBASIVAM <siva...@gmail.com>:
> அருமை திவா, அருமையான சிந்தனை, இப்படி யோசிக்கக் கூட முடியலை என்னால், ரொம்ப
> ரொம்ப அருமையா இருக்கு. வாழ்த்துகள்.
"அனாயாசேன மரணம் வினா தைன்யேன ஜீவனம்
தேஹி மே க்ருபயா சம்போ த்வயி பக்திமசஞ்சலாம்."
சட்டென்று போக வேண்டும்; வறுமை இல்லாமல் வாழ வேண்டும்; உன் மீது
சஞ்சலமில்லாத பக்தி இருக்க வேண்டும். இவற்றை இறைவனே, கருணை கூர்ந்து
எமக்கு தருவாயாக!
திவா
2008/2/5 Natarajan kalpattu N <knn...@gmail.com>:
> இறப்பைப் பற்றி அருமையான சிந்தனைகள்.
--
My blogs: http://nallaseithi.blogspot.com/