Fwd: தினம் ஒரு பாடல்

43 views
Skip to first unread message

AKR Consultants

unread,
Nov 2, 2015, 10:02:39 AM11/2/15
to il...@googlegroups.com
கொள்ளைக்காரர்களும், கொலைகாரர்களும், போதை மருந்து விற்பவர்களும், பெண்களின் கற்பைச் சூறையாடுவோரும் இன்னும் இத்தகைய பெரும் குற்றவாளிகளும் அரசியலில் இருக்க நாடு நாசமாய்ப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனாலும் நம் மக்களில் பெரும்பாலோர் தங்களுக்கென்ன என்று தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று விதவிதமாக உண்டு களிப்பதிலும், வேறு பல கேளிக்கைகளிலும் ஈடுபட்டுப் பொழுதைக் கழிக்கின்றனர். பலர் அன்று முதல் இன்றுவரை தேர்தலில் ஓட்டுப் போடுவதற்குக் காசு பெருகின்றனர். இவர்களில் அனேகர் குடிகாரர்களே. குடிக்கு ஒருவன் அடிமையாகிவிட்டால் எதையும் அடமானம் வைக்கத் தயங்க மாட்டான். பெண்டாட்டி தாலியையும் ஏன் பெண்டாட்டி பிள்ளை குட்டிகளையுமே விற்றும் குடிப்பதுவே அவனது குறிக்கோளாக இருக்கும்.

அத்தகைய மிகப் பயங்கரமான சாராயத்தைப் பல ஆண்டுகளாக அரசு விற்பனை செய்து இன்று ஆண்டொன்றுக்கு ரூ. 20,000 கோடிக்கு மேல் சாராய விற்பனை அதிகார பூர்வமாகக் கொடி கட்டிப் பறக்கிறது. இதனால் குடல் வெந்து செத்து மடிந்தோர் ஏராளம். மிகவும் பரிதாபகரமான நிலைமையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுத் தம் வீடு, வாசல், சொத்து, சுகம் அனைத்தையும் விற்று வைத்தியம் பார்த்தும் குற்றுயிருக் கொலையுயிருமாக நடைபிணமாக வாழ்வோர் ஏராளம்.

இத்தகைய இழிநிலைகளை மக்களுக்குக் கொண்டு செல்ல நம் நாட்டுப் பத்திரிக்கைகளுக்கும், செய்தி நிறுவனங்களுக்கும் நேரமில்லை ஏனெனில் அவர்கள் தங்கள் வருமானத்திற்காக மக்களைச் சுரண்டி வாழும் பெரும் பணக்கார வர்க்கத்தினரிடமிருந்து பெறும் பணத்திற்காக மக்கள் கவனத்தை திசை திருப்பி வருகின்றனர். இந்நிலையில் சாராயத்தின் கேட்டினைப் பலர் உணர்ந்து போராடி வருகின்றனர். அத்தகைய போராளிகளுள் ஒருவர் இயற்றிப் பாடிய பாடல் இன்றைய பாடலாக வருகிறது.

இதில் வெட்கக் கேடு என்னவெனில் இப்பாடலைப் பாடியவரான கோவன் என்பவரை தேசதுரோகக் குற்றம் சுமத்திக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தமிழக அரசு.

உலை வாயை மூடலாம். ஊர் வாயை மூட முடியுமா? இப்பாடலை தயைகூர்ந்து தமிழ்நாட்டு நலன் கருதி நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டு சாராய சாம்ராஜ்யத்தின் கோரப் பிடியிலிருந்து தமிழகம் மீள உதவுமாறு சிரம் தாழ்த்தி, இரு கரம் கூப்பி வேண்டிக் கொள்கிறேன்.


ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம்
ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸிலே உல்லாசம்
ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம்
ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸிலே உல்லாசம்

இட்டிலி ஒத்த ரூவா கக்கூசு அஞ்சு ரூவா
பட்டே சோறு அஞ்சு ரூவா பருப்பு வெலெ நூறு ரூவா
இட்டிலி ஒத்த ரூவா கக்கூசு அஞ்சு ரூவா
பட்டே சோறு அஞ்சு ரூவா பருப்பு வெலெ நூறு ரூவா
பாட்டில் தண்ணி பத்து ரூவா படிக்கப் பீசு லட்ச ரூவா
பாட்டில் தண்ணி பத்து ரூவா படிக்கப் பீசு லட்ச ரூவா நீ
வாழ வச்ச தெய்வமுன்னு கூவலேன்னாக் கொன்னுறுவா

ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம்
ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸிலே உல்லாசம்

படிக்க உடாமே உஸ்கூல மூடுறான்
குடிக்க ஒயின் ஷாப்பே கோயிலாண்டே தொறாக்கிறான்
படிக்க உடாமே உஸ்கூல மூடுறான்
குடிக்க ஒயின் ஷாப்பே கோயிலாண்டே தொறாக்கிறான்
மாசம் ஒரு நாத்தான் மண்ணெண்ணெ ஊத்துறான்
மாசம் ஒரு நாத்தான் மண்ணெண்ணெ ஊத்துறான் இந்த
நாசமத்த கடையெ மட்டும் மிட்நைட்டுல தான் சாத்துறான்

சும்மாக் கெடந்த ஊருக்குள்ளே கடைய வச்சான்
ஆணு பொண்ணு அத்தன பேரையுங் குடிக்க வச்சான்
சும்மாக் கெடந்த ஊருக்குள்ளே கடைய வச்சான்
ஆணு பொண்ணு அத்தன பேரையுங் குடிக்க வச்சான்

ஆட்டுக்குட்டி ஃபேனு மிக்சி அள்ளித் தந்த அம்மா ஆட்சி
தெருத் தெருவாக் கடைய வச்சி குடுத்ததெல்லாம் புடுங்கிக்கிச்சி
ஆட்டுக்குட்டி ஃபேனு மிக்சி அள்ளித் தந்த அம்மா ஆட்சி
தெருத் தெருவாக் கடைய வச்சி குடுத்ததெல்லாம் புடுங்கிக்கிச்சி
கேக்காம வாரிக் கொடுக்கும் ஆட்சிடா
கேக்காம வாரிக் கொடுக்கும் ஆட்சிடா இடுப்பு
வேட்டியையும் புடுங்கிக் கிட்டுப் போச்சிடா

ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம்
ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸிலே உல்லாசம்

தமிழகத்தின் பாருக்கெல்லாம் தலைக்காவிரி மிடாசு
குடிமகன் மொட்டையானா கலெக்டருக்கு சபாசு
தமிழகத்தின் பாருக்கெல்லாம் தலைக்காவிரி மிடாசு
குடிமகன் மொட்டையானா கலெக்டருக்கு சபாசு
பாரெல்லாம் அதிமுக குண்டாசு 
பாரெல்லாம் அதிமுக குண்டாசு இதுக்கு
ஆல் டைமு செக்யூரிட்டி போலீசு

ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம்
ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸிலே உல்லாசம்

ஐஏஎஸ்ஸு ஐபிஎஸ்ஸு ஆள் படைக்கு சம்பளம்
போலீசு போலீசு செலவு அயிட்டம் ஏராளம்
ஐஏஎஸ்ஸு ஐபிஎஸ்ஸு ஆள் படைக்கு சம்பளம்
போலீசு போலீசு செலவு அயிட்டம் ஏராளம்
அம்மா வந்து போனா அந்த செலவே பயங்கரம்
அம்மா வந்து போனா அந்த செலவே பயங்கரம்
சும்மா கேனத்தனமா மூட சொன்னா அவுங்க
ஃப்யூச்சரெல்லாம் இன்னாவும்?

oorukkooru saaraayam thaLLaatudhu thamizhakam
ooththik kotuththa uththamikku pOyaSilE ullaasam
oorukkooru saaraayam thaLLaatudhu thamizhakam
ooththik kotuththa uththamikku pOyaSilE ullaasam

ittili oththa roovaa kakkoosu anju roovaa
pattE sORu anju roovaa paruppu vele nooRu roovaa
ittili oththa roovaa kakkoosu anju roovaa
pattE sORu anju roovaa paruppu vele nooRu roovaa
paattil thaNNi paththu roovaa patikkap peesu latcha roovaa
paattil thaNNi paththu roovaa patikkap peesu latcha roovaa nee
vaazha vachcha theyvamunnu koovalEnnaak konnuRuvaa

oorukkooru saaraayam thaLLaatudhu thamizhakam
ooththik kotuththa uththamikku pOyaSilE ullaasam

patikka utaamE uSkoola mootuRaan
kutikka oyin shaappE kOyilaaNtE thoRaakkiRaan
patikka utaamE uSkoola mootuRaan
kutikka oyin shaappE kOyilaaNtE thoRaakkiRaan
maasam oru naaththaan maNNeNNe ooththuRaan
maasam oru naaththaan maNNeNNe ooththuRaan indha
naasamaththa kataiye mattum mitnaittula thaan saaththuRaan

summaak ketandha oorukkuLLE kataiya vachchaan
aaNu poNNu aththana pEraiyung kutikka vachchaan
summaak ketandha oorukkuLLE kataiya vachchaan
aaNu poNNu aththana pEraiyung kutikka vachchaan

aattukkutti fEnu miksi aLLith thandha ammaa aatchi
theruth theruvaak kataiya vachchi kutuththadhellaam putungikkichchi
aattukkutti fEnu miksi aLLith thandha ammaa aatchi
theruth theruvaak kataiya vachchi kutuththadhellaam putungikkichchi
kEkkaama vaarik kotukkum aatchitaa
kEkkaama vaarik kotukkum aatchitaa ituppu
vEttiyaiyum putungik kittup pOchchitaa

oorukkooru saaraayam thaLLaatudhu thamizhakam
ooththik kotuththa uththamikku pOyaSilE ullaasam

thamizhakaththin paarukkellaam thalaikkaaviri mitaasu
kutimakan mottaiyaanaa kalektarukku sapaasu
thamizhakaththin paarukkellaam thalaikkaaviri mitaasu
kutimakan mottaiyaanaa kalektarukku sapaasu
paarellaam adhimuka kuNtaasu 
paarellaam adhimuka kuNtaasu idhukku
aal taimu sekyooritti pOleesu

oorukkooru saaraayam thaLLaatudhu thamizhakam
ooththik kotuththa uththamikku pOyaSilE ullaasam

aiEeSSu aipieSSu aaL pataikku sampaLam
pOleesu pOleesu selavu ayittam EraaLam
aiEeSSu aipieSSu aaL pataikku sampaLam
pOleesu pOleesu selavu ayittam EraaLam
ammaa vandhu pOnaa andha selavE payangaram
ammaa vandhu pOnaa andha selavE payangaram
summaa kEnaththanamaa moota sonnaa avunga
fyoochcharellaam innaavum?


-- 


AKR Consultants

unread,
Nov 7, 2015, 9:15:06 AM11/7/15
to il...@googlegroups.com
தினம் ஒரு பாடல்:

மனித வாழ்வு மாயமானது. பிறப்பும் தெரிவதில்லை, இறப்பும் தெரிவதில்லை. இடையில் உயிர் உடலில் ஒட்டுக்கொண்டிருக்கும் சொற்ப காலமே வாழ்க்கை. நீண்ட ஆயுளுடன் தீர்க்காயுசாய் வாழ்க என மூத்தோர் வாழ்த்தினாலும் அந்நீண்ட ஆயுள் முடிகையில் ஆயுள் சொற்பமே என்பது ஒவ்வொருவரும் உணர்வர். காலம் மிகவும் வேகமாகக் கடந்து போகிறது. இளமை விரைவில் மாறி முதுமை எய்தி மரணத்தை நோக்கியே ஒவ்வொரு ஜீவனும் உலகில் பிரயாணம் செய்வது இயற்கை நியதி. அத்தகைய இயற்கை நியதியை வென்று மரணமில்லாப் பெருவாழ்வு வாழும் வழியொன்று நிச்சயம் உண்டு. அதுவே இறை பக்தி.

எம்மதத்தவராயினும் தம் விருப்பத்திற்குரிய இறையை வழிபடுதலே ஆணவம் அகன்று மெய்யறிவுண்டாக ஒரே வழி. நமக்குப் பொருளின் மீதும், சிற்றின்பத்தின் மேலும் பிற பெருமைகள் பேசிக்கொள்வதில் கிடைக்கும் ஏதோ இனம் புரியாத ஒரு திருப்தி உணர்வினாலும் ஆணவம் உண்டாகிறது. அத்தகைய ஆணவம் மாயையை உண்மை என நம்மத் தூண்டி மெய்யறிவைச் சிதைக்கிறது. அவ்வாறு ஆணவ மாயையில் மூழ்கித் தம் அறிவை இழப்போர் அப்பிறவியில் கடைத்தேறுவது கடினமே. ஜென்மம் கடைத்தேற வேண்டுமெனில் ஆணவம் அகல வேண்டும். 

ஆணவம் அகல ஆண்டவன் துணை வேண்டும்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்.

என்று ஒன்றே முக்காலடியில் இறை வழிபாட்டின் இன்றியமையாமையை தெய்வப் புலவர் தெளிவாக விளக்கியுள்ளார்.

"புல்லாகி, பூண்டாகி, புழுவாகி, மரமாகி
பல்விருகமாகி பறவையாய், பாம்பாய்
கல்லாய்,மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரராகி செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்'' என்கிறார் மாணிக்கவாசகர்.

ஒவ்வொரு மதத்திலும் இறை வழிபாட்டின் மேன்மை தெள்ளத் தெளிய விளக்கப்பட்டுள்ளதால் மக்கள் நம்பிக்கையோடு வழிபாடு செய்து வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுபட்டு மேலான பரகதியடைய ஏதுவாகிறது.  கிரித்தவர்கள் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் மற்றும் கிரிஸ்துமஸ் முதலான ஒவ்வொரு விசேஷ தினத்தன்றும் தவறாமல் தேவாலயத்துக்குச் சென்று இறைவனை வழிபடுகின்றனர். முஸ்லிம்கள் தினந்தோறும் ஐந்து முறை குறிப்பிட்ட நேரங்களில் அவர்கள் எங்கிருந்த போதிலும் அங்கிருந்தே மண்டியிட்டு எல்லாம் வல்ல இறையை வணங்கி வழிபடுகின்றனர். இவர்கள் அனைவரும் ஆணவம் அகன்று நல்லறிவு பெற வேண்டியே இறைவனை வழிபடுகின்றனர். சிலர் அறியாமையால் பொன்னும் பொருளும் நிலையற்ற பிற இன்பங்களும் அடைய வேண்டியும் வழிபடுவதுண்டு. எவ்வாறு வழிபட்டாலும் நல்வழி நடந்து அன்புடன் அனைவருடனும் நட்புறவுடன் பழகி நேர்மையாக வாழ்வதே பெருந்தவமாகும்.

பலவிதமான இன்னல்களும் இன்பங்களும் அனுபவிக்கும் வாழ்வில் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு முறையாவது இறையருளை வேண்டித் தொழுவது நன்மை பயக்கும்.


திரைப்படம்: திருநீலகண்டர்
ராகம்: கமாஸ்
தாளம்: ஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: பபநாசம் சிவன்
எம்.கே. தியாகராஜ பாகவதர்

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற

ஓரு நாள் ஆஆஆஆ ஆஆஆ

வெறு நாளாக்கி ஈஈஈ ஈஈஈஈ
வெறு நாளாக்கிப் பின் ஜனநாதித் துயர்
வெறு நாளாக்கிப் பின் ஜனநாதித் துயர்
வேலைக்குள் மூழ்கி வீண் காலம் கழிக்காமல்
வேலைக்குள் மூழ்கி வீண் காலம் கழிக்காமல்

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற

ஓரு நாள் ஆஆஆஆ ஆஆஆஆ

பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெருமையான பெரும் வெள்ளம் ஓஓஓஓ ஓஓஓஓஓ
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெருமையான பெரும் வெள்ளம் இதைக்
கண்டு நெஞ்சில் ல்ல்ல்ல் ல்ல்ல்ல்ல் இதைக்
கண்டு நெஞ்சில் மோகம் கொண்டு சென்று சாடிக்
கடல் மூழ்காதே பெரும் பள்ளம் இதைக் 
கண்டு நெஞ்சில் மோகம் கொண்டு சென்று சாடிக்
கடல் மூழ்காதே பெரும் பள்ளம் தனில்
கொண்டமிழ்த்தி விடுமே
கொண்டமிழ்த்தி விடுமே பள்ளம் தனில்
கொண்டமிழ்த்தி விடுமே பின் கரை
கொள்ள வெகு வருத்தமே பள்ளம் தனில்
கொண்டமிழ்த்தி விடுமே பின் கரை 
கொள்ள வெகு வருத்தமே ஏஏஏ ஏஏஏஏஏ ஏஏஏ ஏஏஏஏஏ
கொண்டமிழ்த்தி விடுமே பின் கரை 
கொள்ள வெகு வருத்தமே முனிவர்
தொண்டு செய் சிவபதமே நினைந்தால்
தொண்டு செய் சிவபதமே நினைந்தால்
தோணியாகி வுருமே ஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ
தோணியாகி வுருமே ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ அதனால்

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற

ஓரு நாள் ஆஆஆஆ ஆஆஆஆ
Reply all
Reply to author
Forward
0 new messages