THURSDAY, 10 SEPTEMBER 2015 19:13
லிங்கா விவகாரம் இன்னும் முடிக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் யார் யார்? என்பதை சற்று தாமதமாக தெரிந்து கொண்ட ரஜினி, கடும் கோபத்திலிருக்கிறாராம்.
நம்ப வைத்து கழுத்தறுக்கிற இவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் துடித்து வருகிறாராம். இந்த விவகாரம் தொடர்பாக அண்மைகாலமாக சிலர் பேசும் பேச்சுகளும், அடுத்தவர்களை தூண்டிவிடுகிற நம்பிக்கை துரோகங்களும் அவருக்கு வாய்ஸ் ஃபைலாகவே போய் சேருகிறதாம். எல்லாம் வாட்ஸ் அப் தந்த வரம். அவரது ரீயாக்ஷன் அதே தந்திரத்தோடு இருக்கக் கூடும் என்கிறார்கள். சொல்ல முடியாது. இன்னும் சில வாரங்களில் “ரஜினி திடீர் முடிவு” என்றொரு செய்தி வெளிவந்தால் அதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. இதற்கிடையில் அவரது புதுப்படத்திற்காக மலேசியா செல்வதாக முடிவெடுத்தார்கள் அல்லவா? உடல்நிலை ஒத்துழைக்காது என்பதால், சென்னையிலேயே மலேசியாவில் நடக்கும் போர்ஷன்களை எடுத்துவிட சொல்லிவிட்டாராம். சாலைகள், பில்டிங்குகள், மற்றும் சாலையில் அவர் நடந்து செல்லும் காட்சிகள் மட்டும் தனியாக வேறொரு சந்தர்ப்பத்தில் எடுத்துக் கொள்ளப்படுமாம். அதுவரைக்கும் இங்கு பிரமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் செட்டில்தான் படப்பிடிப்பு.