![]() |
| ஈழத்தில் லட்சத்திர்க்கு மேல். |
![]() |
| இதைத்தானே கேட்டாய் பாலகுமாரா .... |
க. உதயகுமார்
வயிறு காய்ந்த மனிதர்களை எப்படி உங்களால் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கச் சொல்ல முடியும் ? எழுந்து நிற்கவேணும் அவன் உடம்பில் தெம்பிருக்க வேண்டுமா இல்லையா ? இல்லை இல்லை நீ இந்தியன் . நீ வறுமை கோட்டுக்கு கீழே இருந்தால் என்ன .? சிவப்பு விளக்கு சுழலும் மகிழ்வுந்தில் பயணிக்கும் நான் சொல்கிறேன் விறைப்பாக எழுந்து நில் . உன் தங்கை ராணுவத்தால் கற்பழிக்கப் பட்டாளா , பரவாயில்லை பிறகு அழுதுகொள். இப்போதைக்கு நீ எழுந்து நின்று தேசிய கொடியை உயரப் பறக்கவிடு . நான் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் சொந்த மகளிடம் படுப்பதை போல சொந்த மக்களின் பணத்தை களவாடினால் நீ எழுந்திருக்க மாட்டாயா ..? ஹ்ம்ம் சொல் "வந்தே மாதரம் " . எங்கள் சட்டம் நாங்கள் தாயை கூட்டிகொடுத்தால் கூட நின்று வேடிக்கை பார்க்கும் , ஆனால் நீ ஆளுவோரை எதிர்த்து ஒரு கருத்துப் படம் வரைந்தாலோ , காட்டில் வாழும் பழங்குடி இன மக்களுக்கு, எங்களை எதிர்த்து எங்கள் ஈவு இரக்கமற்ற அரக்கத்தனத்தை எதிர்க்கும் பழங்குடி இன மக்களுக்கு வைத்தியம் பார்த்தாலோ உன் விலா எலும்பை எங்கள் சட்டம் உடைத்து நொறுக்கும்.
என்னது ..? இன்னமும் ஒரு சகோதரி ராணுவத்தினை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கிறாளா ..? அவள் கிடக்கிறாள் ..நீ வா நாம் சுதந்திர தினம் கொண்டாடுவோம் .
என்ன...? தண்ணி வேண்டுமா ...? இல்லை இல்லை இப்போதைக்கு முடியாது . இப்போதைக்கு உங்கள் மாநிலத்தில் தேர்தல் எதுவும் இல்லை . அப்படியே தேர்தல் வரும்போதும் , நாங்கள் உங்களுக்கு தண்ணீர் பெற்றுத் தருவோம் என்று நரம்பு புடைக்க பேசுவோம் . தண்ணீர் தருவது கொஞ்சம் கஷ்ட்டம் தான் .
என்ன ..? உங்கள் ஊரில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்களா ? பிறந்தால் எல்லோரும் சாக வேண்டிதானே ... செத்தவன் செத்தான் அதை விடு ..இந்தா இந்த கொடியை உன் சட்டையில் குத்திக்கொள் .
என்னது ..? உன் தொப்புள் கொடி உறவுகள் செத்து மடிகிறார்களா ...? உன்னை பற்றியே எனக்கு கவலை இல்லை , இதில் என்ன தொப்புள் கொடி உறவு ? ஒருவேளை நீ இத்தாலி விந்துக்கு பிறந்திருந்தால் எங்கள் செங்கோல் உன்னை காக்க நீளும் . நீ தமிழன் தானே ...பிறகென்ன கூச்சல் போடுகிறாய் . வழியும் குருதியை துடைத்துவிட்டு எனக்கு வந்தனம் செய் .
.
.
.
நண்பர்களே சொல்லுங்கள் ...நான் என்ன காரணத்திற்காக சுந்தந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்று சொல்லுங்கள் .
பாவேந்தர் பாரதிதாசன் சொல்லுவாரே
"சித்திரச்சோலைகளே--உமைநன்கு
திருத்த இப் பாரினிலே--முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
உங்கள் வேரினிலே! என்று ....அந்த ரத்தம் சொரிந்த வேர்களை நான் இந்நாளில் நினைத்துப் பார்க்கிறேன் . அடிமை சங்கிலியை அறுத்தெறிய எத்தனை வீரர்கள் அன்று ரத்தம் சொரிந்தனர் என்று மட்டுமே இந்நாளில் நினைக்கத்தோன்றுகிறது . இன்னொருவன் வந்து எமை ஆளுதல் தகுமோ என உயிர் தந்து தியாக தழும்பேற்ற அம்மாந்தர்களின் சுயநலமற்ற வாழ்வை மட்டுமே நினைவுகூரத் தோன்றுகிறது . இவையல்லாமல் இந்நாளை கொண்டாடித் தீர்க்க வேண்டிய காரணம் எதுவும் எனக்கு கிடைக்கவில்லை .
சுதந்திர தினம் என்ற நாளை நினைவுகூர முடிகிறது . ஆனால் அந்நாளை கொண்டாடவேண்டிய யாதொரு நியாயமான காரணங்களும் இருப்பதாக தோன்றவில்லை . மண்ணை காக்க தன் உயிர் ஈந்த அந்த வீரர்களை எந்நாளும் தொழுகிறோம் . க்யூபா விடுதலைக்கு போராடியவனை போற்றுகிற நாங்கள் இந்த மண்ணின் விடுதலைக்கு போராடி போராடி இந்த மண்ணிலேயே மக்கி உரமானவர்களை எப்படி நினைக்காமல் போற்றாமல் தொழாமல் போய் விடுவோம் . அதை நாங்கள் எப்போதும் செய்கிறோம் . ஆனால் இந்த நாளை நீ கொண்டாடத் தான் வேண்டும் என்றால் ஒரே ஒரு காரணம் சொல்லுங்கள் . சுதந்திரக் கொடியை குத்திக் கொள்ளச் சொல்கிறீர்கள் . ஆனால் அந்த கொடியை குத்திக் கொள்ள சட்டையே இல்லாத பல்லாயிரம் மக்கள் வாழுகிற நாட்டில் கொண்டாட்டம் ஒரு கேடா ?
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் எங்கள் பூலிதேவனையும் ஊமைத்துரையையும் ராணி மங்கம்மாளையும் நீங்கள் திட்டமிட்டு மறைத்தீர்கள் . ஆனால் நாங்கள் அப்படி எந்த பாகுபாடும் இன்றி போராட்ட வீரர்கள் எல்லோரையும் நேசிக்கிறோம் . எங்களுக்கு கட்டபொம்மனைப் போலத்தான் பகத் சிங்கும் . எங்களுக்கு சுப்ரமணிய சிவாவை போலத்தான் சுகதேவும் . பாரதிக்கும் தாகூருக்கும் நாங்கள் வித்யாசம் பார்த்ததே இல்லை . நாங்கள் உங்களைப் போல இல்லை . நாங்கள் எப்போதும் நியாயமாக நடந்திருக்கிறோம் . ஆனால் கொண்டாட எங்களை அழைக்காதீர்கள் . சொந்த இன மக்களை கூண்டோடு வாரிக் கொடுத்துவிட்டு ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறோம் . இழவு வீட்டில் புகுந்து "ஹ்ம்ம் கொண்டாடு கொண்டாடு " என்று சொல்கிறீர்களே ..இது அநியாயமில்லை ? வெளிநாட்டில் உன் சகோதரன் செத்தால் இங்கேன் ஒப்பாரி வைக்கிறாய் வந்து ஜன கன மன பாடு என்று சொல்வதில் என்ன ஞாயம் இருக்கிறது ?
"எல்லோரும் அமரநிலை எய்தும் நன்னெறியை இந்தியா உலகிற்கு அளிக்கும் ! ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும் !" என்று பாடினான் செந்தமிழ் புலவன் பாரதி . பாரதி சொன்னதை போல இந்தியா மற்ற நாடுகளுக்கு நன்னெறி எதுவும் கொடுத்ததா என்று எனக்கு தெரியவில்லை . ஆனால் ஈழ மண்ணிற்கு என்ன கொடுத்தது என்பது உலகிற்கே தெரியும் .தாலி அறுத்தவன் ஒருவன் . தாலியை அறுக்க கத்தி கொடுத்தவன் ஒருவன் . தாலி அறுத்தவனை கத்தி கொடுத்தவன் இந்த மண்ணுக்கே கூப்பிட்டு விருந்து வைக்கிறான் . நாங்கள் தொண்டை கிழிய கத்தினோம் . "பண்பட்ட வரலாறு கொண்ட இந்தியா இப்படி ஈரம் இல்லாமல் நடக்கக்கூடாது . அவனுக்கு துணை போகாதே" என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதோம் . எங்களை அப்போது எட்டி உதைத்து விட்டு , இப்போது நீயும் இந்தியன் தான் வா வந்து எங்களோடு கொண்டாடு என்று சொல்கிறீர்களே ..இது அடுக்குமா ? நீங்கள் எங்கள் ஈரக்குலையில் சொருகிய கத்தியை இப்போது எடுத்துவிட்டு வா வந்து கொண்டாடு என்று சொல்கிறீர்கள் . ஆனால் நீங்கள் குத்திய இடம் சீழ் பிடித்து புரையோடி வலிக்கிறதே . வலியோடும் நான் வந்து கொண்டாடத் தான் வேண்டுமா ?
பாரதி என்றொரு கவிஞன் .பெருங்கவி அவன் . சுதந்திர தேவி நின்னை மறக்கிலேனே என்று உருகி உருகி பாட்டெழுதி செத்துப்போன எங்கள் பாட்டுக்காரன் . அவனொரு கவிதை எழுதினான் . அதை அப்படியே கீழே வாசியுங்கள் .
தொண்டு செய்யும் அடிமை! - உனக்குச்
சுதந்திர நினைவோடா?
பண்டுகண்ட துண்டோ - அதற்குப்
பாத்திர மாவாயோ?
ஜாதிச் சண்டை போச்சோ? - உங்கள்
சமயச் சண்டை போச்சோ?
நீதிசொல்ல வந்தாய் - கண்முன்
நிற்கொ ணாது போடா!
அச்சம் நீங்கி னாயோ? - அடிமை!
ஆண்மை தாங்கினாயோ?
பிச்சைவாங்கிப் பிழைக்கும் - ஆசை
பேணுத லொழித்தாயோ?
கப்ப லேறுவாயோ? - அடிமை!
கடலைத்தாண்டு வாயோ?
குப்பை விரும்பும்நாய்க்கே - அடிமை!
கொற்றத் தவிசுமுண்டோ?
ஒற்றுமை பயின்றாயோ? - அடிமை!
உடம்பில் வலிமையுண்டோ!
வெற்றுரை பேசாதே – அடிமை!
வீரியம் அறிவாயோ?
சேர்ந்து வாழுவீரோ? உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ?
சோர்ந்து வீழ்தல்போச்சோ - உங்கள்
சோம்பரைத் துடைத்தீரோ?
வெள்ளை நிறத்தைக் கண்டால் - பதறி
வெருவலை ஒழித்தாயோ?
உள்ளது சொல்வேன்கேள் - சுதந்திரம்
உனக்கில்லை மறந்திடடா.
நாடு காப்பதற்கே - உனக்கு
ஞானஞ் சிறிதுமுண்டோ?
வீடுகாக்கப் போடா – அடிமை!
வேலைசெய்யப் போடா!
சேனை நடத்துவாயோ? - தொழும்புகள்
செய்திட விரும்பாயோ?
ஈனமான தொழிலே - உங்களுக்கு
இசைவதாகும் போடா!
பாரதி வெகுண்டு உனக்கு சுதந்திரம் அனுபவிக்க தகுதி இல்லை என்று பட்டியலிட்ட எல்லா காரணங்களும் இங்கே இன்னும் இருக்கிறதா இல்லையா ? பாரதியின் இந்தப் பாடலை விடவும் நான் என்ன சொல்லப் போகிறேன் .
இப்போதும் சொல்கிறேன் . வெள்ளையனிடம் இருந்து இந்த மண்ணை மீட்க போராடிய எல்லா வீரர்களையும் தியாகிகளையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன் . இந்த நாளை கொண்டாடத் தயாரில்லை .
![]() |
|
|
|
##1968 Olympics Black Power salute ## 1968 ஆம் ஆண்டு, 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் வென்ற ஆப்பிரிக்க- அமெரிக்க தடகள வீரர்கள் டாமி ஸ்மித், ஜான் கார்லஸ், பதக்கம் பெறும்போது பாடப்பட்ட தேசியகீதத்தின் போது, கையில் கறுப்பு பட்டைகளோடு "(BLACK SALUTE)கறுப்பு வணக்கம்" வைத்தார்கள்; ##வாழ்க தன்மானம்; வாழ்க போராட்ட உணர்ச்சி |
On 8/16/12, Snabak Vinod (SV) <snaba...@gmail.com> wrote:
> **
>
>
> <http://www.facebook.com/Anandhi.Chennai>
> Anandhi Thangam <http://www.facebook.com/Anandhi.Chennai>
>
> ##1968 Olympics Black Power salute ##
> 1968 ஆம் ஆண்டு, 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் வென்ற ஆப்பிரிக்க- அமெரிக்க தடகள
> வீரர்கள் டாமி ஸ்மித், ஜான் கார்லஸ், பதக்கம் பெறும்போது பாடப்பட்ட
> தேசியகீதத்தின் போது, கையில் கறுப்பு பட்டைகளோடு "(BLACK SALUTE)கறுப்பு
> வணக்கம்" வைத்தார்கள்;
>
> ##வாழ்க தன்மானம்; வாழ்க போராட்ட உணர்ச்சி
>
> --
> அன்பு இனியது.
> அன்பில் விளையும் இன்பம் இனியது.
> இன்பத்தில் பாடும் தமிழ் இனியது.
>
--
அன்புடன்
சி.பாலமுருகன்
- தூக்கமும் உணவும் மனிதனின் உடல் நலத்தை தீர்மாணிக்கின்றன. -.
யாருக்காக சிங்கார சென்னை? (Singaara Chennai) 1
http://www.youtube.com/watch?v=X8YN-oTiWL0
யாருக்காக சிங்கார சென்னை? (Singaara Chennai) 2
http://www.youtube.com/watch?v=2wPmcxXBdGY