Re: [பண்புடன்] Re: கூடங்குளம்

24 views
Skip to first unread message

Snabak Vinod (SV)

unread,
Aug 14, 2012, 9:55:58 AM8/14/12
to பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள், Save_Tamils, இளவேனில்
இவர்களுக்கு எண்ணத் தேவை வந்தது? இதனால் இவர்களுக்கு என்ன ஆதாயம்? ஏன் இந்த அரசியல் போராட்டம்? அனைத்துப் பொருளாதாரத் தேவைகளும் பூர்த்தியான இவர்கள், கல்வி, நல்ல வேலையில் இருக்கும் இவர்கள் ஏன் தெருவில் இறங்கி தமிழர்களின் அரசியல் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும்? விழிப்புணர்வை ஏற்படுத்தத் துடிக்க வேண்டும்?
 
மாதம் ஒருமுறையோ வருடம் இரண்டுமுறையோ அநாதை/முதியோர் ஆசிரமம் சென்றால் தங்களின் சமுதாய அக்கறை முடிந்துவிட்டது என்றும் நினைக்கும் நண்பர்கள் மத்தியில், சில பேர் ஒருபடி மேலே போய் அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தில் ஒருநாள் பங்குபெற்று அரசியல் என்றாலே ஊழல்வாதிகள் என்று அரசியல்வாதிகள் மட்டும் குறைசொல்லி தனது அரசியல் கடமை முடிந்துவிட்டது எனத் தப்பித்துப் போகும் நண்பர்கள் மத்தியில் இவர்கள் ஏன் தொடர்ந்து போராட வேண்டும்??
 
தகவல் தொழில்நுட்பத் துறையில் இருக்கும் சில நண்பர்களால் ஈழத் தமிழர்களின் மீது நடத்தப்பட்ட இன அழிப்புப் போரால் வெகுண்டெழுந்து தங்களின் குரலை ஓங்கி அரசின் காதில் ஒலிக்க உருவாக்கப்பட்ட அமைப்பு, தொடர்ந்து அரசியல் உரிமைகள் மறுக்கப்படும் தமிழினம் மீட்க்கப்பட ஏதாவது செய்தாக வேண்டும் என்று தொடங்கப்பட்ட அமைப்பு "Save Tamils" இயக்கம்.
 
ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், சிங்களப் பேரினவாத அரசிற்கு இன அழிப்பிற்கான தண்டனைக்கிடைக்கவும், முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனைக்காகவும், மானுட எதிரி அணு உலைத் திணிப்பு பிரச்சனைக்காகவும், காவிரி பாலாறு நதிநீர் பிரச்சனைக்காகவும், மழைநீரை சேர்த்து மாசைச் சுத்தப்படுத்தி நன்னீராக்கும் ஆற்றின் தோலை உறிக்கும் மண் திருட்டு, திடத் திரவக் கழிவுகளால் மேலும் மேலும் மாசுபடும் ஆறுகள் பிரச்சனைகளுக்காகவும், விவசாயம் தொழில் வளர்ச்சிக்காகவும், ஒடுக்கப்பட்டோருக்காகவும், சாதி ஒழிப்பிற்காகவும், தமிழர் உரிமை மீட்பிற்க்காகவும் என தமிழர் நலன்களுக்காக தொடர்ந்து அரசியல் வழியில் போராடிவருகிறது இந்த அமைப்பு... கிடைக்கும் நாட்களில் எல்லாம் பலக் கருத்தரங்குகள், கண்காட்சிகள், ஆய்வரங்கங்கள், கவனத்தை ஈர்க்கும் போராட்டங்கள் நடத்திவருகிறார்கள்...
 
கடந்த ஆகஸ்டு ஆறாம் நாள் அணுசக்தி எதிர்ப்பு தினமும் கூடங்குளம் அணுஉலையினால் வரும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வும் சென்னையில் பல இடங்களில் நிகழ்ந்தது. அதனைப் பற்றிய பதிவு இங்கே பகிர்ந்துள்ளேன். இளைஞர்கள் பலர் இதில் இணைந்து நமது சமூகத்திற்காக உழைக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள், அது மேலும் உற்சாகமூட்டம். நன்றி.
 
 

ஆகஸ்டு 6 உலக அணுசக்தி எதிர்ப்பு தினம்



இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்ட போரில் 1945 ஆகஸ்டு ஆறாம் நாள் ஹிரோஷிமா வான்வெளியில் அமெரிக்க போர் விமானங்களைக் கண்ணுற்ற ஜப்பானிய‌ ராணுவம் வழக்கமான தமது அபாய ஒலியின் எச்சரிக்கையோடு அன்றைய தினத்தின் அலுவல்களை முடித்துக் கொண்டது. வரலாற்றின் மிகப்பெரிய அநீதி அமெரிக்க ராணுவத்தால் மிகக்கொடூரமாக அன்று நிகழ்த்தப்பட்டது. 1,60,000 மக்கள் புழுக்களைப் போல உடனடியாக செத்து மடிந்தனர். ஹிரோஷிமா நகரமே தரை மட்டமானது. ஹிரோஷிமா குண்டு வீச்சைத் தொடர்ந்து தொடர்ந்து பல ஆண்டுகள் அணுக்கதிர் வீச்சின் கோர முகத்தால் பல லட்சம் மக்கள் புற்றுநோயினாலும் இன்னும் பல கொடிய தோல் வியாதிகளினாலும் மரணித்தனர்.



சமகாலத்தில் வல்லரசு என தம்மைக் கூறிக்கொள்ளும் பெரியண்ணன் நாடுகளனைத்தும் இடுப்பிலே அணுகுண்டைக் கட்டிக் கொண்டு பேட்டை ரவுடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இருப்பை விட அதிகமாகிப் போன யுரேனியத்தை விற்க இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் சந்தை அவர்களுக்கு தேவையாயிருக்கிறது. அணுக்கொள்முதல்,அணு வியாபாரம் ஆகியவற்றின் மூலம் பெருமுதலாளிகள் லாபம் சம்பாதிக்கவும் அதற்கு உறுதுணையாக‌ அடிவருடி உதவவும் ஒரு அதிகார வர்க்கமே காத்திருக்கிறது. கிடைத்த‌ எலும்புத் துண்டுகளுக்கு ராஜ விசுவாசமாக‌ நாடு முழுவதும் பெட்டிக்கடைகள் போல அணு உலைகளை நிறுவி அம்முதலாளிகளுக்கு காணிக்கையாக்க திட்டமிடுகின்றது அரசு இயந்திரம். அணுகுண்டுகள் அணு உலைகளாக வேடமணிந்து திரண்டெழுந்து மேடையேறுகின்றன.






ஹிரோஷிமா நாகசாகியின் நினைவுகளை இன்றைய தலைமுறை மறந்திருந்தால் மீண்டும் அவர்களுக்கு நினைவூட்டுதல் சமூக மனிதர்களின் கடமையாயிருக்கிறது. அணுகுண்டும் அணு உலையும் வெடித்தால் ஒன்றே என்ற உண்மையை செர்னோபிலும் ஃபுகுஷிமாவும் ஏற்கனவே தலையில் அடித்து சத்தியம் செய்து விட்டன. உலகெங்கும் அணு உலைகளுக்கெதிரான கருத்தியல் தோன்ற ஆரம்பித்து விட்டது.அணுசக்தியை முற்றிலுமாக கைவிட பல நாடுகள் உறுதி மேற்கொண்டு விட்டன. ஜப்பானில் அணு உலைகளை மூட அரசு உத்தரவிட்டால் மக்கள் வீதியில் இறங்கி கொண்டாடுகின்றனர். சூரிய ஒளியையும் காற்றையும் நம்பி மின்சாரம் தயாரிக்க பெருமளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. வெற்றியும் கிட்டுகிறது. இந்திய அரசின் சிற்றறிவுக் கிட்டங்கி மட்டும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அல்லது ஒரு சமுதாயத்தை பலியிட்டு இன்னொரு சமுதாயத்தை வாழ வைக்க தலைப்படுகிறது.






அதற்காகத் தான் களமிறங்கினோம். மக்களிடம் பேச நினைத்தோம். ஆகஸ்டு 5, 6 சென்னையின் வெவ்வேறு இடங்களில் குழுக்களாகப் பிரிந்து நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்குண்டு கிடக்கும் எந்திர மனிதர்களுக்கு அணுசக்தியின் தீங்குகளைச் சொல்வோமென்று உறுதி பூண்டோம்.





ஆகஸ்டு 5 ஞாயிற்றுக்கிழமை மாலை தாம்பரம் ரயில் நிலையம், கேம்ப் ரோடு, மேடவாக்கம் பகுதிகளில் சேவ் தமிழ்சின் 11 தோழர்களும், வேளச்சேரி பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 7 தோழர்களுமாக மூன்று குழுக்கள் பிரிக்கப்பட்டது.ஹிரோஷிமா நினைவு தினமான ஆகஸ்டு 6 காலை மாலை இருவேளைகளிலும் இருகுழுக்களாக பிரிந்து களப்பணியில் இறங்கினோம். தகவல் தொழில் நுட்ப மையமான டைடல் பூங்காவில் 8 தோழர்களும், சோழிங்க நல்லூர் நாற்கர சந்திப்பில் 6 தோழர்களுமாகச் சென்று மக்களைச் சந்தித்தோம்.


மாத முதல் ஞாயிற்றுக்கிழமை.சம்பள வாரம்.பிரம்மச்சர்ய ஐ.டி ஊழியர்களின் தலைமையகமான வேளச்சேரி நடையும் கையுமாகவே இருந்தது.வார இறுதியின் உச்சகட்ட பரபரப்பில் சிலர் துண்டறிக்கைகளை வாங்கி ஆர்வமுடன் பார்த்தனர்.சற்றே இளைப்பாறிக் களைத்த சில முகங்கள் நம்மை அலட்சியப்படுத்திக் கடந்தன. மெட்ரோ ர‌யில் ப‌ணிக்காக‌வும் க‌ட்ட‌ட‌ வேலைக‌ளுக்காக‌வும் உழைத்து உழைத்து உருக்குலைந்து போன‌ வ‌ட‌ மாநிலத் தொழிலாள‌ர்க‌ள், தாமாகவே முன்வந்து அந்த துண்டறிக்கைகளைப் பெற்றனர். சில கலாமிஸ்ட்டுகள் தாம் வாங்கிய மஞ்சள் சிட்டை ராக்கெட்டாக்கி சேற்றில் விட்டு தம்மை ஒரு ப்ரோ நியூக்ளியராக பறை சாற்றினர். அணுகுண்டு வீச்சிலும் அணு உலை வெடிப்பிலும் நிராதரவாகிப் போன பச்சிளம் குழந்தைகளை, எண்ணிப்பார்க்கவோ அதைப்பற்றி பேசவோ யாரேனும் வருவார்களா என்ற‌ காத்திருப்பு நம் தோழர்களின் கண்களில் நிரந்தரமாக குடியிருந்தது. வெவ்வேறு பகுதிகளில் முகாமிட்டிருந்த தோழர்கள் அனைவரும் இரவு 7.30 மணிக்கு மேல் வேளச்சேரியில் ஒன்றிணைந்தோம். அடுத்த நாள் பரப்புரைகளுக்கான‌ திட்டமிடுதல்கள், விவாதங்கள், தேநீர் என சந்திப்பு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீண்டு பிறகு கலைந்தது.








புதிய வியூகமும் புதிய மனநிலையுமாக புத்துணர்ச்சியுடன் மறுநாள் திங்கள் காலை,டைடல் பூங்காவிலும் சோழிங்க நல்லூர் பிரதான சிக்னல் அருகிலும் இரு வெவ்வேறு குழுக்களாக‌ முகாமிட்டோம். ஷாப்பிங் மால்கள், பெச‌ன்ட் ந‌க‌ர் பீச், பில்லா2 என வார இறுதியில் கிறங்கிக் கிடக்கும் ஐ.டி நடுத்தரவர்க்கத்தை, பேருந்துகளும் பறக்கும் ரயில்களும் திங்கட் கிழமை காலை மொத்தமாக வந்து ராஜிவ் காந்தி சாலையில் கொட்டுகின்றன‌. அவசரமாக விரையும் அந்த வேக மனிதர்களை இரண்டு நொடிகள் நிறுத்தி வைப்பதற்கு பிரத்யேக முகமூடிகளும் வித்தியாசமான பதாகைகளும் போதுமானதாக இருக்கவில்லை. இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை மாலையை போல் வெறுமை சூழாமல், பலர் தாமாகவே முன்வந்து துண்டறிக்கைகளை வாங்கி கொண்டனர்.பள்ளி செல்லும் குழந்தைகள் பதாகைகளை விட ஸ்கீரீம் முகமூடிகளை ஆர்வத்தோடு பார்த்தனர். திருவான்மியூர் ரயில் நிலையம் நிரம்பி வழிந்தது. டைடல் சிக்னல் அருகே கவன ஈர்ப்பு மிகுதியாக இருந்தது. நமது தோழர் ஒருவர் அணு வெடிப்பால் மரணித்ததைப் போல சாலையில் படுத்து நடித்தது நல்ல கவன ஈர்ப்பைப் பெற்றுத் தந்தது.வழக்கம் போல ஹிரோஷிமா பற்றியோ அணு உலைகளைப் பற்றியோ யாரும் பேச முன்வரவில்லை. இது எதிர்பார்த்த ஒன்று தான்.








முதலாளித்துவ அரசுகள் கட்டமைத்த அணு எதிர்ப்பு போராட்டங்களுக்கெதிரான பொதுபுத்தி, ஊடங்களின் தொடர்ச்சியான பொய்ப் பிரச்சாரம் என முற்றிலுமாக மழுங்கடிக்கப்பட்ட ஒரு பொருளை ஊதி ஊதி மக்களிடையே கொண்டு போய்ச் சேர்க்கும் சிரத்தை நம் அனைவருக்கும் இருக்கிறது. அந்நெருப்புக்கான சிறு பொறிகளைத் தூண்டுவே இத்தகைய முகாம்களின் நோக்கமாக நாம் கருத வேண்டியிருக்கிறது. அணுசக்தி என்பது மனித சமுதாயத்தால் கட்டுப்படுத்த முடியாத ஒரு வினை. அவ்வினையிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுக்கும் ஒரு கூட்டத்தை தெளிய வைக்க வேண்டிய அவசியம் இங்கிருந்து தான் தொடங்குகிறது.
















Posted by Save Tamils Movement

Snabak Vinod (SV)

unread,
Aug 17, 2012, 4:18:11 AM8/17/12
to பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள், Save_Tamils, இளவேனில்
அணு உலை எதிர்ப்பு ‍ ஓராண்டு நிறைவு சிறப்புக் கட்டுரை...
 

இடிந்தகரை - பற்ற வைத்த நெருப்பும் கடந்து வந்த பாதையும்

அ.மு.செய்யது வியாழன், 16 ஆகஸ்ட் 2012 11:02

'ஒன்று கூடுவார்கள்! கோஷமிடுவார்கள்! பின் கலைந்து சென்று விடுவார்கள்' என்று எகத்தாளமாக நினைத்த ஒரு போராட்டம், நாளாக நாளாக தீவிரமடையத் தொடங்கியது குறித்து அவர்கள் கலக்கமடைந்திருக்கக் கூடும். என்ன செய்து இவர்களை ஒடுக்குவது? வெளிநாட்டு சதி என்று பரப்புரை செய்வோமா? செய்தார்கள். அந்நிய‌ சக்திகளிடமிருந்து இவர்களுக்குப் பணம் வருகிறது என்று ஊடகங்கள் முழுதும் விஷத்தைக் கக்கினார்கள். போராடும் மக்களில் பெரும்பான்மை கிறிஸ்துவர்கள். முடிந்தது வேலை. ஆகவே பரப்புங்கள்! கிறிஸ்துவ மிஷினரியின் சதி என. பரப்பினார்கள். எளிய மக்களை கடித்துக் குதற‌ இந்துத்துவ நரிகளை அவிழ்த்து விட்டார்கள். அப்போதும் அம்மக்கள் காயத்தோடு களத்தில் நின்றார்கள்.

koodankulam_sava_oorvalam_641

ஒரு போதும் அவர்களுக்கு மாநிலத்தின் மற்ற பகுதி மக்களிடமிருந்து ஆதரவோ அனுதாபமோ கிடைத்து விடக்கூடாது. அந்நியப்படுத்துங்கள்! எப்படியேனும் தனிமைப்படுத்துங்கள் அவர்களை. இம்முறை "தேசத்துரோகி" என்ற பட்டம். நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பவர்கள் என்ற முத்திரை. நக்சலைட்டுகளோடு தொடர்பு என குதித்தார்கள். கிடைத்தது தீவிரவாத முத்திரை. அப்போதும் அக்கூட்டம் சிதறி ஓடவில்லை. லத்தியடிகளுக்கோ துப்பாக்கிகளுக்கோ பயந்த கூட்டமா அது. ஊடகங்கள் முழுதும் ஒரு மக்கள் சமூகமே "போராட்டக்காரர்களாக" சுருக்கப்பட்டது. பட்டி தொட்டிகளிலும் சந்து பொந்துகளிலும் எங்கு மின்சாரம் தடைபட்டாலும், 'அந்த உதயகுமார அடிங்கடா!' என்று டீக்கடை முதல் ஐ.டி நிறுவனங்கள் வரை மின் தடையால் கொந்தளித்துப் போயிருந்த ஒரு சமூகத்தை பேச வைத்தார்கள். எல்லாவற்றையும் எதிர்கொண்டார்கள் அம்மக்கள். எதிர்கொள்ள வேண்டிய‌ கட்டாயமிருந்தது அவர்களிடம். எப்படியேனும் இந்த அணு உலையை மூடியாக வேண்டும். இல்லையேல் கூண்டோடு மரணத்தை தழுவியாக வேண்டும். ஏனெனில் தப்பியோடுவதற்கு அவர்களுக்கு வேறு நிலங்கள் இல்லை. எமக்கான கல்லறைகளை எழுப்பி விட்டு அணு உலைகளை கட்டுங்கள் என்றுரைத்தவாறு, தொடங்கிய நாள் முதலாக இன்று வரை இம்மியளவு கூட பின்வாங்காமல் உறுதியாக போராடிக் கொண்டிருக்கின்றனர் அந்தக் கடலோர மக்கள்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது. 25 வருடங்களுக்கு முன்பே இவ்வெதிர்ப்பு தொடங்கி விட்டாலும் முழு புரிதலோடு ஒரு மக்கள் திரள் போராட்டமாக எழுச்சி பெற்றது கடந்த வருடம் இதே தேதியில் தான். வரலாற்றின் ஒவ்வொரு பக்கங்களிலும் அழுத்தமான முத்திரையைப் பதிவு செய்து கொண்டிருக்கும் அம்மக்கள் சென்ற‌ ஓராண்டில் கடந்து வந்த பாதை, ஒரு சராசரி மனிதனின் மன எல்லைகளுக்கு அப்பாற்பட்டு நெஞ்சுரம் கொண்ட மனிதர்களால் கட்டமைக்கப்பட்டது. 144 தடை உத்தரவு, இராணுவ முற்றுகை, பொய்ப்பிரச்சாரம், வழக்குகள், சிறை வாசம், தொடர்ச்சியான மன உளைச்சல் எதுவாக இருப்பினும் எல்லாவற்றையும் ஒரு கை பார்ப்போம் என்பது தான் அவர்களின் அசைக்க முடியாத கடைசி நம்பிக்கையாக இருக்கிறது.

போராட்டக்காரர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்றெல்லாம் கேள்வியெழுப்பியவர்கள் அக்குற்றத்தை நிருபீத்தார்களா? போராட்டக்குழு தங்கள் போராட்டச் செலவீனங்களையும் கணக்குகளையும் வெளிப்படையாக பொதுவெளியில் சமர்ப்பித்தார்களே! அதை ஏன் இந்த அரசும் ஊடகங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. பணம் கொடுத்ததாக விமானம் ஏற்றி அனுப்பப்பட்ட ஜெர்மானியர் ஹெர்மனை ஏன் விசாரிக்காமல் விட்டுவிட்டார்கள்? அவர் பேசினால் ஆளும் இந்திய அரசின் பொய்கள் அம்பலமாகி விடும் என்பதால் தானே? நக்சலைட்டுகளோடு தொடர்பு, தீவிரவாதிகளின் ஊடுருவல் என்றெல்லாம் செய்தி வெளியிட்டார்களே? அச்செய்தியெல்லாம் இப்போது எங்கே? முடிந்தவரை போராட்டத்தை ஒடுக்கியாகி விட்டது ஆகவே இப்போது அந்த பொய்ப் பிரச்சாரம் தேவைப்படாது என்ற காரணம் தானே? பொதுக்கருத்துக்கு எதிராகப் பேசினால் ஓட்டுகளைப் பொறுக்க முடியாது என்று வாய் திறக்காத ஓட்டுப்பொறுக்கி அரசியல் நரிகள் இன்று வரை மெளனிகளாகவே நீடிக்கின்றனரே? கூடன்குளம் அடையாள அரசியல் முடிந்து விட்டது என்று நினைத்து விட்டார்களோ? எண்ணிறந்த குற்றச்சாட்டுகளும் பொய் வழக்குகளும் போலிப் பரப்புகளும் இப்போது என்ன ஆனது?  அணு உலை திறந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்களே. எத்தனை ஆயிரம் மெகாவாட் இதுவரை உற்பத்தி செய்திருக்கிறார்கள் அணு உலையிலிருந்து.

koodankulam_sava_oorvalam_642

எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் தான் இருக்க முடியும். அரசின் எல்லா புளுகு மூட்டைகளும் அவிழ்ந்து இப்போது புளுத்து நாறுகிறது என்ற பதில் மட்டுமே.

மக்களின் அச்சம் தீரும் வரை அணு உலை திறக்கப்படாது என சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த "உங்களில் ஒருத்தி" ஜெயலலிதா, சங்கரன் கோவில் இடைத்தேர்தல் நடந்த அடுத்த நாளே அணு உலை திறக்கப்படும் என அறிவிக்கிறார். இது எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் தமிழக அரசு நியமித்த விஞ்ஞானிகள் குழு கடைசி வரை போராடும் மக்களை சந்திக்கவேயில்லை. மக்களின் அச்சமும் தீர்க்கப்படவில்லை. மேலும் அம்மக்களை சமனப்படுத்த‌ பல கோடி லஞ்சத்திட்டங்களும் சலுகைகளும் அறிவிக்கப்படுகின்றன.

சர்வதேச அணுசக்தி முகமையின் விதிப்படி, பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தாமல் எரிபொருளை நிரப்ப இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க முடியாது. ஆனால் கடந்த ஜூன் 9 அன்று அணு உலை அருகே சுற்றியுள்ள கிராமங்களில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சியும் ஒத்திகையும் நடத்தப்பட்டு விட்டதாக அணுசக்தி துறை அறிவித்திருக்கிறது. அணு உலைக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது இடிந்தகரை. அடுத்த ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருப்பவை கூடங்குளம், வைராவிகிணறு, செட்டிகுளம், ஸ்ரீரங்கநாராயாணபுரம், பெருமணல், கூத்தப்புளி ஆகியவை. இந்த எந்த கிராமத்திலும் ஒத்திகை நடத்தப்படவில்லை. அணு உலையிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நக்கநேரியில் கண்ணில் தென்பட்ட மக்களிடம் கதீர்வீச்சிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அயோடின் மாத்திரைகளை சாப்பிடுமாறு மட்டும் அறிவுரை வழங்கி விட்டு அணு உலை அதிகாரிகளும் மாவட்ட அதிகாரிகளும் சென்று விட்டனர். இது தான் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடந்த லட்சண‌ம்.

அணு உலை 1 மற்றும் 2 ஆகியவற்றில் விபத்து நடந்தால் காப்பீடு வழங்க முடியாது என்ற ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் கூடங்குளத்தில் நிறுவப்படும் உலைகளின் அமைப்பு பற்றிய ஒரு ஆபத்தான தகவல் அம்பலமாகியிருக்கிறது. ரியாக்டர் பிரஷர் வெஸ்சல் எனப்படும் அணு உலை அழுத்தக் கொள்கலனில் நடுவே எந்த வெல்டிங்கும் இருக்காது என்று 2006ல் ரஷ்யாவுடன் செய்து கொண்ட‌ ஒப்பந்த ஆவணங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது அணு சக்தி கட்டுப்பாட்டு வாரியம் கொள்கலனில் இரு இடங்களில் வெல்டிங் உள்ளதாக சொல்கிறது. இப்படி வெல்டிங் செய்யப்படும் இடங்களில் வெல்டிங் பொருட்கள் பலவீனமானவை என்பதால் பெரும் விபத்துக்கு வாய்ப்பிருப்பதாக முன்னர் கருதப்பட்டு, புதிய உலை வடிவமைப்புகளில் வெல்டிங் இல்லாத கொள்கலன்கள் உருவாக்கப்பட்டன. கூடங்குளத்துக்கு வழங்கப்படுவது அதி நவீன உலை என்று சொல்லப்பட்டது. ஆனால் பழைய மாதிரி வெல்டிங் உள்ள கலன்களே நிறுவப்பட்டுள்ளன. ஆனால் எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அந்த வடிவமைப்பை மாற்றுவதற்கும் சாத்தியமில்லை. ஆக வடிவமைப்பிலும் கோளாறு, காப்பீடும் கிடையாது என்ற ஆபத்தான சூழ்நிலையில் தான் அணு உலை இயக்கப்பட்டு வருகிறது.

koodankulam_sava_oorvalam_640

அணு உலை திறக்கப்பட்டால் நாட்டில் வளமும் செல்வமும் கொழிக்கும் என்று கொண்டாடிய அரசுகள், சென்ற வாரம் அணுசக்தி தலைவர் கூறிய "மூன்று மாதங்களுக்குப் பிறகும் 300 மெகாவாட் தான் தயாரிக்க முடியும்" உண்மையை தெளிவு படுத்த வேண்டும். அணுசக்தித் தலைவரின் வாக்குறுதிகள் இவ்வாறிருக்க, மத்திய அமைச்சர் நாராயணசாமி தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் "அணு உலை இன்னும் பத்து நாளில் மின் உற்பத்தியை தொடங்கும்" என்று சொல்லும் படி பழக்கப்பட்டிருக்கிறார். அணு உலை இல்லையேல் மின்சாரம் இல்லை என்ற பொய்ப்பிரச்சாரம் இன்று காற்றாலை மின் உற்பத்தியால் தவிடு பொடியாகியிருக்கிறது. அணு மின்சாரம் ஒன்றே மாற்று என்ற தவறான கருத்தியல் அம்பலமாகியிருக்கிறது. மாற்றுவழிகளிலும் மின்சாரம் கிடைக்கும் என்ற உண்மை சாமானிய மக்களுக்கும் புரிந்திருக்கிறது.

போராடும் மக்களை இந்திய அரசு கொஞ்சம் குறைத்து மதிப்பிட்டிருக்க வேண்டும். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்த்த ஒவ்வொரு நாளும் ஆளும் மத்திய மாநில‌ அரசுகளுக்கு அவர்கள் தொடர்ந்து பாடம் புகட்டிக் கொண்டே இருக்கின்றனர். உண்ணாவிரதம் மட்டுமே எப்படி ஒரு போராட்ட வடிவமாக வெற்றி பெற முடியும் என சந்தேகித்த மற்ற புரட்சியாளர்கள் கூட புருவம் உயர்த்தும் வண்ணம், ஒவ்வொரு நாளும் புதிய புதிய‌ போராட்ட உத்திகளை தொடர்ந்து கையிலெடுத்து அவர்கள் நடத்தி வருகின்றனர். உண்ணாவிரதம் மட்டுமே அவர்களின் போராட்ட வழிமுறை இல்லை. நீதிமன்றங்கள் மூலமும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழு தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறது.

சாதாரண மக்களால் என்ன சாதித்து விட முடியும் என்று வாதிட்டவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை வாய் திறக்காத இந்திய அணு சக்திக் கழகத்தை, தன்னளவிலான நிலைப்பாட்டை எடுத்துரைக்குமளவுக்கு இறங்கி வர வைத்தவர்கள் அவ்வெளிய‌ மக்கள். சிறு வன்முறையைக் கூட கையிலெடுக்காது அநீதமான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்கள். அதிகார வர்க்கத்தின் குறியீடாக எழுந்து நிற்கும் அணு உலையின் தீங்குகளை இன்று உலகிற்கே கற்பித்துக் கொண்டிருப்பவர்கள். சர்வதேச அணுசக்தி எதிர்ப்பு இயக்கங்கள் இடிந்தகரை மக்களின் போராட்டங்களை கவனத்தோடு கற்று வருகிறார்கள். அவர்கள் பற்ற வைத்த இந்நெருப்பு இந்தியாவில் எங்கெல்லாம் அணு உலைகள் முளைக்கின்றனவோ அங்கெல்லாம் எழுச்சி மிக்க போராட்டங்கள் வெடிக்க காரணமாக அமையப் போகிறது. உலகின் கடைசி அணு உலை மூடப்படும் வரை இப்போராட்டங்கள் ஓயப்போவதில்லை.

Snabak Vinod (SV)

unread,
Sep 4, 2012, 2:31:40 PM9/4/12
to நட்புடன், இளவேனில், தமிழ் சிறகுகள், Save_Tamils
 
Tirunelveli செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 04, 11:22 AM IST
 
 
கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு
 நல்லதொரு விடிவுகாலம் பிறக்கும்: டாக்டர் ராமதாஸ் பேச்சு
ராதாபுரம், செப்.4-

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் நடத்தி வரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று 386-வது நாளாக நீடிக்கிறது. நேற்று நடந்த போராட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார். இதில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

அணு உலைகளால் மக்களுக்கு ஆபத்து வரும் என்று கூறி ஒரு ஆண்டுக்கும் மேலாக கூடங்குளம் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தியாவில் வேறு எங்கும் இது போன்றதொரு போராட்டம் நடந்தது இல்லை.

கூடங்குளம் பகுதி மக்களின் கோரிக்கை நியாயமானது. கூடங்குளம் அணு மின் நிலையத்தை செயல்படுத்தவும், யுரேனியம் எரிபொருள் நிரப்பவும் சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப் போவதாக கூறியிருக்கிறார்கள். நீதிமன்ற தீர்ப்பைக் காட்டிலும் மக்கள் தீர்ப்புதான் முக்கியமானது. கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்று இப்பகுதி மக்கள் கூறி வருகிறார்கள். ஆனால், அதைப்பற்றி பரிசீலிக்காமல், விஞ்ஞானப்பூர்வ தகவல் தராமல், அணு உலை பாதுகாப்பானது.என்பதை மட்டும் திரும்ப திரும்ப கூறி, கூடங்குளம் திட்டத்தை திணிக்கிறார்கள். வளர்ந்த நாடுகள் அணுமின் நிலையங்களால் ஏற்படும் தீங்கினை புரிந்து கொண்டு, புதிய அணு உலைகளை நிறுவுவதை நிறுத்தி விட்டார்கள். இயங்கி வரும் அணு உலைகளை மூடி வருகிறார்கள்.

எனவே இந்த போராட்டத்துக்கு நல்லதொரு விடிவு கிடைக்கும். என்னை எப்போது அழைத்தாலும் மீண்டும் வந்து போராட்டத்தில் பங்கேற்க தயாராக உள்ளேன் என்றார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச் செயலாளர் வியனரசு மற்றும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

Snabak Vinod (SV)

unread,
Sep 4, 2012, 2:33:36 PM9/4/12
to பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள், இளவேனில், Save_Tamils

Give up KKNPP: Ramadoss

Staff Reporter

 
If the Central and the State governments are for the welfare of the people, they, like the developed nations that are closing down the nuclear power programmes in a phased manner, should have chosen to give up the Kudankulam Nuclear Power Project, Pattali Makkal Katchi founder S. Ramadoss has said.

Unique protest

Addressing the anti-KKNPP protestors at Idinthakarai on Monday evening, Dr. Ramadoss said the nation had never witnessed such an “intense but peaceful agitation” in any part of the country in the past.

Like the developed nations that were gradually closing down the nuclear power programmes, Indian Government should also have scrapped the KKNPP and the Tamil Nadu Government should have pressed this demand if they were really concerned about people’s welfare.

Since the protesters were so intelligent and had understood very well the demerits of nuclear energy, they were fighting against it for the past several months.

“Valiant soldiers”

“The recent judgement by Madras High Court (on granting permission for fuel loading) has not dashed the hopes of these protesters, who have planned to go for an appeal in the Supreme Court and hence they are valiant soldiers,” he lauded.

PMK leader G.K. Mani accompanied Dr. Ramadoss.

Snabak Vinod (SV)

unread,
Sep 5, 2012, 2:22:27 PM9/5/12
to பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள், இளவேனில், Save_Tamils
ஒரு வழக்கு... ஒரு வரலாறு! - கீழவெண்மணி முதல் கூடங்குளம் வரை!      

செவ்வாய்க்கிழமை, 04 செப்டம்பர் 2012 10:47

 

aara-13கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கப்படக் கூடாது என்று வலியுறுத்தி கடந்த ஒரு வருடத்துக்கும் மேல் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அப்பகுதி மக்கள்!
வெறும் கோஷங்கள், எதிர்ப்புக் கூச்சல்கள் மட்டுமல்ல...!
அணுமின் நிலையம் அமைத்தால் நாட்டுக்கும் என்னென்ன தீங்குகள் நேரிடும் என்பதை அறிவியல் பூர்வமாகவும், இதற்கு முன் உலகில் நடந்த அணு விபத்துகளை முன் வைத்தும் மிகப் பெரும் அறிவோடு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இடிந்தகரை மக்கள்!
ஆனால்... மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் இதுவரை போராட்டக் காரர்களின் ஒரு கேள்விக்குக் கூட ஆதாரபூர்வமாக உறுதியான உண்மையான பதிலை அளிக்கவில்லை!
மாறாக... இந்தியா முழுவதும் இருக்கும் மின்வெட்டை சாக்காக வைத்து, மின்சார உற்பத்திக்கு அணுமின் நிலையம் வேண்டும் என்று சொல்லிவருகிறார்கள்.
மேலும் அரசு அமைத்த குழுவோடு பேச்சுவார்த்தைக்கு சென்ற போராட்டக் குழுவினர் தாக்கப்பட்டனர். இடிந்தகரையைச் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அங்குள்ள சிறுகுழந்தை பால் குடிக்கக் கூட முடியாமல் சித்ரவதைக் கொடுமைகளை அரங்கேற்றியது இந்திய-தமிழக போலீஸ்!

இந்த நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி உள்ளிட்ட பல எழுத்து பூர்வ அனுமதிகள் நிலுவையில் இருக்கும் நிலையில்... கூடங்குளத்தில் யுரேனியம் நிரப்பும் பணியை மேற்கொள்ள அறிவிப்பு வெளியிட்டது இந்திய அணுசக்தி ஆணையம்.

aara-11இதை போராட்டக்காரர்கள் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்திடம் முறையிட...  ‘அதற்குள் உங்களுக்கு என்ன அவசரம்?’ என்ற ரீதியில் மத்திய அரசையும் அணுசக்தி ஆணையத்தையும் கேள்வி மேல் கேட்டது நீதிமன்றம்!‘
ஆனால்... அடுத்த சில நாட்களுக்குள் அதே சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கேட்டு நாட்டு நலனில் அக்கறைகொண்டவர்களும், அணுசக்தி எதிர்பாளர்களும், கூடங்குளம் போராட்டக் காரர்களும் திகைத்துப் போய்விட்டனர்.
அப்படி என்னதான் சொன்னது சென்னை உயர்நீதிமன்றம்?
நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.துரைசாமி ஆகியோர் தங்கள் தீர்ப்பில்...
‘‘கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதற்கு பலர் இடம் வழங்கியபோது அதை எதிர்த்து யாரும் கோர்ட்டில் வழக்கு தொடரவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு அணுமின் நிலையத்திற்கு அனுமதி அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டபோதும் அதை எதிர்த்து யாரும் வழக்குத் தொடரவில்லை.
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பாக உயர்மட்ட நிபுணர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதை இந்த கோர்ட் ஏற்றுக் கொள்கிறது. மேலும் அணுமின்நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் அணு கழிவுகள் குறித்து மத்திய அரசு தெரிவித்த வாதத்தை இந்த கோர்ட் ஏற்றுக் கொள்கிறது. அணுக்கழிவுகள் அகற்றப்படுவது குறித்து மத்திய அரசின் கருத்தை மக்கள் அறியும் வகையில் வெளியிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது. அதையும் இந்த கோர்ட் ஏற்றுக் கொள்கிறது. இந்த காரணங்களை கருத்தில் கொண்டு கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய தடையில்லா சான்றிதழை தடைவிதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
அணுசக்தி பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் நிபுணர்குழுவின் பரிந்துரையை செயல்படுத்தாமல் அணுமின்நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு தடைவிதிக்கக் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்கிறோம். அணுமின் நிலைய உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு எந்த தடையும் இல்லை. அதுபோல அணுமின் நிலைய செயல்பாட்டுக்கும் எந்த தடையும் இல்லை.
aara-12முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூடங்குளம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார். அவற்றை நிறைவேற்ற வேண்டும்’’ என்பதுதான் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு!
அதாவது... ஆபத்து என்றால் பாதிக்கப்படுபவர்கள் ஏன் முன்னாலேயே வழக்கு தொடரவில்லை? தாமதமாக வழக்குத் தொடர்ந்தது தவறு என்ற ரீதியில் தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம். மேலும் அப்துல் கலாம் அவர்களின் கருத்துக்களை அப்படியே பிரதிபலித்துள்ளனர் நீதிபதிகள்!
ஒரு மாநிலத்தின் வருங்கால சந்ததிகளின் நலன் பற்றிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இது!
ஏனோ... இந்தத் தீர்ப்பைப் படித்தவுடன் வரலாற்றின் பக்கங்களில் படிந்திருக்கும் 1973 ஏப்ரல் 6ம் தேதி மனக் கண்முன் வந்துபோகிறது!
ஆம்... அன்றும் இதே சென்னை உயர்நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியது!
அது எதற்காக என்றால்?
1968 டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை ஏசுநாதர் பிறந்த நாள் விழா. உலகெங்கும் கொண்டாப்படும் திருவிழா. மக்கள் அனைவரும் திருநாளை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க தஞ்சை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்துக்கு மட்டும் மிகப் பெரும் எழவாக முடிந்தது.
aara-14அன்று தஞ்சை மாவட்டம் நிலப் பிரபுக்களின் கொடுங்கோல் பிடியில் இருந்தது.
அப்போது கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களை ஒன்று திரட்டி விவசாயிகளின் கூலி உயர்வுக்காக போராடியது. அதன்படி அன்றைய காலகட்டத்தில் வழங்கப்படும் கூலியை விட அரை லிட்டர் நெல் அதிகம் கூலியாகக் கேட்டு தொழிலாளர்கள் போராடினார்கள்.
இன்றைய நாகை மாவட்டம் கீழவேளூர் அருகே இருக்கும் கீழவெண்மணி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்களை இந்த காரணத்துக்காக மிராசுதார்கள் அன்று கிறிஸ்துமஸ் அன்று மாலை பிடித்துச் சென்றார்கள். கட்டிவைத்து அடித்தார்கள்!
இதைக் கேட்டு வெகுண்ட தொழிலாளர்கள் கூட்டமாகப் போய் கட்டி வைக்கப்பட்டிருந்த தங்கள் தோழர்களை அவிழ்த்துக் காப்பாற்றி ஊர்வந்து சேர்ந்தனர்.
எப்படியும் மிராசுதார்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று தெரியும். ஆனால் இப்படி என்று தெரியாது!
ஆம் .  அன்று இரவு கீழவெண்மணி கிராமத்துக்குள் மிராசுதார் கோபாலகிருஷ்ண நாயுடுவின் ஆட்கள் துப்பாக்கிகளோடு  நுழைந்தார்கள். ஆண் தோழர்களுக்கும அவர்களுக்கும் இடையே கடும் சண்டை நீடித்தது. இதில் காயம்பட்ட தோழர்கள் சிதறி ஓட.. எஞ்சியவர்களை அந்த ஊரின் ஓரத்தில் இருந்த ராமையா என்ற தொழிலாளரின் குடிசைக்குள் அடைத்தார்கள் மிராசுதார்களின் ஆட்கள்.
N.T._VANAMAMALAIமொத்தம் 44 பேர். அதில் முதியவர்களும் உண்டு... சிசுக்களும் உண்டு. மாதாம்பாள் என்ற தாயின் மார்பில் பால் குடித்துக் கொண்டிருந்தது பச்சிளம் குழந்தை. அந்தக் குழந்தையையும் சேர்த்து தீவைத்துக் கொளுத்தினார்கள். அந்த ராமையாவின் குடிசைக்குள் 44 உயிர்கள் கருகி கரிக்கட்டைகளாகி எலும்புக் கூடுகளாகிப் போயினர்.
இந்த கொடுமை உலகையே அதிரவைத்தது. அப்பொழுது கோவை நகரத் தொழிலாளி வர்க்கமும், வேலூர் பீடித் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தார்கள். கம்யூனிஸ்டு இயக்கத்தினர் கண்டனக் குரல் எழுப்பினார்கள் ஜனநாயக உணர்வு கொண்ட பாட்ரியாட், நியுஏஜ் போன்ற டெல்லிப் பத்திரிகைகள் நாட்டுக்கே அவமானம் என்று கவலையோடு கண்டித்து எழுதின.
நாகப்பட்டினம் செஷன்ஸ் கோர்ட்டில் கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்ட மிராசுதார்கள் குற்றவாளிகள் என்று நீதிபதி குப்பண்ணன் தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மிராசுதார்கள் தரப்பு அப்பீல் செய்தது!
எரிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக மூத்த  வழக்கறிஞர் என்.டி.வானமாலை வாதாடினார்.
அதன் மீதான தீர்ப்பைதான் 1973 ஏப்ரல் 6&ம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி வீராச்சாமி வாசித்தார்.
“பதிவான சாட்சியங்களைப் பரிசீலித்ததில் குற்றவாளிகள் மீது குற்றத்தை நிரூபிக்க வாதிகள் தரப்பில் (பிராசிகேஷன் தரப்பில்) தவறி விட்டதாக நீதிபதிகள் முடிவுக்கு வரவேண்டி இருப்பதாக உணர்கிறார்கள். இதன் காரணமாகப் கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்ட்ட பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். பிராசிகேஷன் தரப்பு சாட்சிகளில் உள்ளடங்கிய குறைபாடுகள் இருப்பதால் நிரபராதிகளாக உள்ள நபர்கள் தண்டிக்கப்பட்டு விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறோம்’‘ என்ற நீதிபதி மேலும் தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
venmani_kodumai_copy_copy‘‘இவ்வளவு அதிக சொத்து வைத்திருக்கும், கார் வைத்திருக்கும் கோபாலகிருஷ்ண நாயுடு போன்றவர்கள் குற்றம் செய்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே அவர்கள் குற்றம் செய்திருக்க மாட்டார்கள்’’ என்பதுதான் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு.
இந்த சம்பவம் பற்றி சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்து ராமையாவின் குடிசை என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்தார் இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார்.
அதில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள், நாகை மாவட்ட அன்றைய மருத்துவத் துறை அதிகாரிகள்,
குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவை எப்படியெல்லாம் பாதுகாத்தோம் என்று குற்ற உணர்வு தாங்கமுடியாமல் பல வருட மனப் புழுக்கத்தைக் கொட்டியிருந்தார்கள்.
ஆக... நீதிமன்றத் தீர்ப்பே பின்னாளில் கேள்விக் குறியானது!
இப்போது கூடங்குளம் தீர்ப்பைப் பற்றிக் கேட்கிறபோது...
ஏனோ கீழவெண்மணி தீர்ப்பு ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது!

 

Snabak Vinod (SV)

unread,
Sep 6, 2012, 2:26:45 PM9/6/12
to பண்புடன், நட்புடன், Save_Tamils, இளவேனில், தமிழ் சிறகுகள்
06 Sep 2012 04:41:21 PM IST

இந்தியாவுக்கு யுரேணியம் தர முன்வந்துள்ள ஆஸ்திரேலியாவில் அணு உலைகளே இல்லை: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

சென்னை, செப். 6: இந்தியாவுக்கு யுரேணியம் தர முன்வந்துள்ள ஆஸ்திரேலியாவில் ஒரு அணு உலைகூட இல்லை என்பதை தமிழக மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என கூடங்குளத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் சிறுவர் சிறுமிகள் தெரிவித்தனர்.
கூடங்குளத்தில் அணு உலைகளில் எரிபொருள் நிரப்புவதை உடனடியாக தடை செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வரைச் சந்தித்து மனு கொடுப்பதற்காக, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் கூடங்குளத்திலிருந்து பெண்களும், பள்ளி சிறுவர் சிறுமிகள் 20 பேரும் சென்னை வந்துள்ளனர்.

முன்னதாக அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:
கூடங்குளம் மக்களின் அச்சம் தீறும் வரை அணு உலைகளில் யுரேணியம் நிரப்பக் கூடாது என முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். இன்னும் எங்களின் அச்சம் தீறவில்லை. ஆனால், அணு உலைகளில் யுரேணியம் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் எங்கள் குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. அணுக் கழிவுகளும், வெப்ப நீரும் கடலில் விடப்படும்போது, கடல்வாழ் உயிரனங்கள் செத்துப்போகும். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் கதிர் வீச்சு அபாயமும் உள்ளது.
எனவே, அணு உலைகளில் எரிபொருள் நிரப்புவதை உடனடியாக தடுத்து நிறுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்று வழியில் மின்சாரம் தயாரிக்க முயற்சிக்க வேண்டும் என்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் பள்ளி மாணவ மாணவிகள் விக்னேஷ், ஹசினா, லைசிஸ்கா, ஜோசுவா, விஜின் ஆகியோர் கூறியது:
இந்தியாவுக்கு யுரேணியம் தர ஒப்புக்கொண்டுள்ள ஆஸ்திரேலியாவில் ஒரு அணு உலை கூட இல்லை. அந்நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள ஆஸ்திரேலிய அரசு, இந்திய மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அணு உலைகளில் பயன்படுத்துவதற்காக யுரேணியம் தர முன்வந்திருப்பது எந்த விதத்தில் நியாயம்.
அணு மின் உற்பத்திக்கு எதிராக எங்களுடைய பெற்றோர் 400 நாள்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், எங்களின் போராட்டங்களை அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
இதனால், பள்ளிக்குச் செல்லும் எங்களால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. மின்சாரம் தயாரிக்க ஏராளமான வழிகள் இருக்கும்போது, மக்களின் உடல் நலனை பாதிக்கும் அணு மின் உற்பத்திக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இதுதொடர்பாக முதல்வரைச் சந்தித்து முறையிடுவதற்காகத்தான் இப்போது சென்னை வந்துள்ளோம். மேலும், கூடங்குளத்தில் வசிக்கும் எங்களை கதிர் வீச்சு அபாயத்திலிருந்து காப்பாற்ற ஆதரவு அளிக்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இரு மகள்கள் மற்றும் ரஷ்யா, ஆஸ்திரேலியா குடிமக்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம் என்றனர்.

Dinamani

Snabak Vinod (SV)

unread,
Sep 6, 2012, 2:28:14 PM9/6/12
to பண்புடன், நட்புடன், Save_Tamils, இளவேனில், தமிழ் சிறகுகள்
எங்கள் எதிர்காலத்தை காத்திடுங்கள். முதல்வருக்கு 'கூடங்குளம் குழந்தைகள்' கடிதம்...

சென்னை வந்துள்ள இடிந்தகரை குழந்தைகள் பின்னாலேயே காவல் துறையும் பயணிக்கிறது. அவர்களை தீவிரவாதிகளை கண்காணிப்பது போல் கண்காணிக்கிறது.

பள்ளிக் குழந்தைகள் மீதுகூட இரக்கம் காட்டாத அரசு! http://www.youtube.com/watch?v=1Hzl6bDWbdE&feature=youtu.be

Snabak Vinod (SV)

unread,
Sep 10, 2012, 5:40:51 AM9/10/12
to panb...@googlegroups.com
 
Idinthakarai update: Sahaya Initha, councilor got severely injured. shelson got injured in throat. He Along with antony admitted to idinthakarai hospital. Kennedy
Had his hand broken.
Several Children got fainted due to the tear gas. Children who took shelter in the school was surrounded by the police.
Fifty people stranded in a single house fearing police. police threw the water cans near the church and urinated in the place.

Snabak Vinod (SV)

unread,
Sep 10, 2012, 6:17:14 AM9/10/12
to பண்புடன், நட்புடன், Save_Tamils, இளவேனில், தமிழ் சிறகுகள்

இந்திய‌ அணு உலைக‌ள் வெடித்தால்...

ப.நற்றமிழன் திங்கள், 10 செப்டம்பர் 2012 10:27  
இந்தியாவில் அணு உலைகள் வெடித்தால் என்ன‌ ஆகும், இந்த‌ பேர‌ழிவின் போது யார் இழ‌ப்பீடு வ‌ழ‌ங்குவ‌து, எவ்வ‌ள‌வு வ‌ழ‌ங்குவ‌து என்ப‌து தொட‌ர்பான ஒரு ச‌ட்ட‌த்தை பாராளும‌ன்ற‌த்தில் கொண்டுவ‌ர‌ உள்ள‌து. அதாங்க‌ "அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌ம் 2010". இந்த‌ ச‌ட்ட‌த்திலுள்ள‌ சாத‌க‌, பாத‌க‌ங்க‌ளை ப‌ற்றி பார்ப்போம்...
அணு உலை ஆத‌ரவு நண்பர்கள் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வி -‌ ஏங்க‌ ம‌கிழுந்து(Car), பேருந்து, தொட‌ருந்து(Train) கூட‌ தான் அடிக்க‌டி விப‌த்திற்குள்ளாகுது அதுக்காக‌ நாம‌ அதில‌ போகாம‌ இருக்கோமா ? ஏங்க‌ அணு உலை விப‌த்து ந‌ட‌ந்துருன்னு ப‌ய‌ப்ப‌டுறீங்க‌ன்னு, அவ‌ர்க‌ளுக்கான‌ ப‌திலை அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌த்தின் முத‌ல் வ‌ரியிலேயே சொல்லியிருக்காங்க‌
இந்த சட்டம் அணு உலை அழிவால் பாதிக்கப்படும் பின்வருபவர்களுக்கும் பொருந்தும்.
அ) இந்தியாவின் கடல் எல்லைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ளவர்களுக்கும்
ஆ) இந்தியாவின் கடல் எல்லைகளுக்குள்ளே உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்குள்ளே இருப்பவர்களுக்கும்.
இ)இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பலில் பயணம் செய்பவர்களுக்கும்
ஈ) இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கும்
உ)இந்தியாவின் சட்ட எல்லைக்குள் செயற்கை தீவில் இருப்பவர்களுக்கும், செயற்கை தீவவை உருவாக்கிவருபவர்களுக்கும்..(பிரிவு-1)
ஒரு மகிழுந்து விபத்தினாலோ, பேருந்து விபத்தினாலோ இந்தியாவின் கடல் எல்லைக்கு வெளியில் இருப்பவர்கள் அதாவது அண்டை நாடுகளில் இருப்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், கப்பலிலோ, விமானத்திலோ அந்த நேரம் பயணம் செய்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அது ம‌ட்டுமின்றி அணு உலை விப‌த்து அடுத்து வ‌ரும் த‌லைமுறைக‌ளையும் பாதிக்க‌க்கூடிய‌து. செர்னோபில்லில் நடந்தது போல ஒரு அணு உலை விப‌த்து நடந்தால் அணு உலையை சுற்றி இருக்கும் இலட்சக்கணக்கான மக்களை இந்திய அரசால் வெளியேற்ற முடியுமா? அல்லது விபத்தை கட்டுபடுத்ததான் முடியுமா, சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்தை கூட கட்டுபடுத்த முடியாத அளவில் தான் இந்த அரசிடம் உள்ள தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.மேலும் செர்னொப்பில் விபத்து ந‌ட‌ந்து ப‌ல‌ ப‌த்தாண்டுக‌ள் ஆன‌பின்ன‌ரும் அணு உலையிலிருந்து வெளியேறும் க‌திர்வீச்சு ப‌ன்ம‌ட‌ங்காக‌வே உள்ள‌து. செர்னோபில் ஆலையும் அதைச் சுற்றியுள்ள நிலத்திலும் இனி எக்காலத்திலும் மக்களால் வாழமுடியாது. செர்னோபில்லை சுற்றியுள்ள‌ இட‌ங்க‌ளில் இன்றும் பிற‌க்கும் குழ‌ந்தைக‌ள் க‌திர்வீச்சினால் ஏதோ ஒரு நோயினால் தொட‌ர்ந்து பாதிக்க‌ப்ப‌ட்டே வ‌ருகின்றார்கள்(1). செர்னோபில் விப‌த்து ந‌ட‌ந்த‌து 1986 ஏப்ரலில் என்ப‌தை நினைவில் கொள்க‌.
சில‌ விள‌க்க‌ங்களை இந்த‌ இட‌த்தில் சொல்வ‌து ச‌ரியாக‌ இருக்கும்..
கூடங்குளம் அணு உலையை உதாரணமாகக்கொண்டு சில விளக்கங்கள் உங்களுக்காக-
அணு உலை நிர்வாகி (Operator) - NPCIL (Nuclear power corporation india ltd)
அணு உலை வழங்குநர்(Suplier) -இர‌சியா.
அப்துல்க‌லாம் முத‌ல் நார‌ய‌ண‌சாமி வ‌ரை சொல்லி வ‌ரும் இந்தியாவில்  கட்டப்படுகின்ற‌ அணு உலைக‌ள் எல்லாம் 100 விழுக்காடு பாதுகாப்பான‌து, சுனாமி, பூக‌ம்ப‌ம் போன்ற‌ இய‌ற்கை பேர‌ழிவுக‌ளை தாங்கும் ச‌க்தி கொண்ட‌து என்று சொல்லிவரும் வேளையில், "அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌ம் 2010" இதற்கு நேர் மாறாக சொல்கின்றது.
அ) இயற்கை பேரழிவினால்(T-Sunami, நிலநடுக்கம்...) அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்கு யாரும் பொறுப்பல்ல.
ஆ) ஆயுத மோதலினாலோ, உள் நாட்டு போரினாலோ, பயங்கரவாதத்தினாலோ அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்கு யாரும் பொறுப்பல்ல.
இ) அணு உலை விபத்தினால், அருகில் கட்டப்பட்டுவரும் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதற்கு அணு உலை நிர்வாகம் பொறுப்பல்ல. (பிரிவு 5)
அதாவ‌து அணு உலை விப‌த்து ந‌ட‌ந்தால் யாரும் பொறுப்ப‌ல்ல‌ என்று ம‌றைமுக‌மாக‌ சொல்லுகின்றார்க‌ள். இந்த சரத்துகள் எல்லாம் இந்திய அணுசக்தி ஆணையத்தை காப்பாற்ற மட்டும் சேர்க்கப்பட்டவைய‌ல்ல, அடுத்து இந்தியாவில் அணு உலைகளை நிர்வகிக்க வருகின்ற‌ ரிலையன்ஸ், டாடா, அதை கட்டும் பன்னாட்டு நிறுவனங்களையும் பெரிதும் மனதில் வைத்தே இந்த‌ ச‌ட்ட‌ம் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இது ஒரு ம‌க்க‌ள் விரோதச் ச‌ட்ட‌மாகும்.
புகுசிமா அணு உலை விப‌த்திற்கு ஆழிப்பேர‌லை(T-Sunami) தான் காரண‌ம் என்று தான் நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோம், ஆனால் ச‌ப்பான் அர‌சு நிய‌மித்த‌ உண்மை அறியும் குழு சொன்ன‌து புகுசிமா அணு உலை விப‌த்திற்கு கார‌ண‌ம் ம‌னித‌ த‌வ‌றே என. இதுவே இந்தியாவாக‌ இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை வாசகர்கள் கணிப்பிற்கே விட்டுவிடுகின்றேன். மேலும் அணு உலை விப‌த்து என்ப‌து மிக‌ மோச‌மான‌ பேர‌ழிவை ஏற்ப‌டுத்த‌க்கூடிய‌து. இது போன்ற‌ விப‌த்திற்கு கார‌ண‌ங்க‌ளாக‌ நில‌ந‌டுக்க‌ம் போன்ற‌ கார‌ண‌ங்க‌ளை மிக‌ எளிதாக‌ ம‌த்திய‌, மாநில‌ அர‌சுக‌ள் சொல்லிவிட்டு தங்க‌ள் பொறுப்பிலிருந்து ந‌க‌ர்ந்துவிடவே வாய்ப்புக‌ள் அதிக‌ம்.
சில‌ நாட்க‌ளுக்கு முன்னால் வ‌ந்த‌ செய்தியில் ப‌யங்கர‌‌வாதிக‌ள் சில‌ர் கல்பாக்கம் அணு உலையை த‌க‌ர்க்க‌ திட்ட‌மிட்டுள்ள‌தாக‌ கூறினார்க‌ள். இதையெல்லாம் முன்ன‌ரே உண‌ர்ந்து தானே என்ன‌வோ 2010லேயே ப‌யங்கர‌‌வாதிக‌ள் அணு உலையை தாக்கினால் அந்த‌ விப‌த்திற்கு யாரும் பொறுப்ப‌ல்ல‌ என்று ச‌ட்ட‌த்தை வ‌டிவ‌மைத்துள்ள‌து ம‌த்திய‌ அர‌சு.
மேலும் இந்த‌ ச‌ட்ட‌த்தின் ப‌டி அணு உலை விப‌த்து சிறிதா, பெரிதா என்று கூற‌ வேண்டிய‌து இந்திய‌ அணுச‌க்தி ஆணைய‌ம். 1947லிருந்து இதுவரை அவ‌ர்க‌ளுடைய‌ ந‌ட‌வ‌டிக்கையை பார்ப்போமேயானால் இதுவரை எந்த‌ அணு உலையிலும் சிறிய‌ அள‌வில் கூட‌ விப‌த்து ந‌ட‌ந்த‌தாக‌க்கூட‌ அவ‌ர்க‌ள் இதுவரை முதலில் ஒப்புக்கொண்டதேயில்லை, பல போராட்டங்களுக்கு பின்னர் தான் , அவையெல்லாம் மிகச்சிறிய விபத்துகள், இனிமேல் இதுபோன்று நடக்காது என்று ஆரூடம் கூறுவார்கள். ஆனால் இதே கால‌க‌ட்ட‌த்தில் இந்திய‌ அணு உலைக‌ளில் ந‌ட‌ந்த‌ விப‌த்துக‌ளின் ப‌ட்டிய‌ல் இதோ....
"1984ல் இயங்கத்தொடங்கிய கல்பாக்கம் அடுத்த சில வருடங்களுக்குள் 200 முறை பல்வேறு சிக்கல்களினால் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஒரு விபத்து நடந்து அது பற்றி பத்திரிகைகளில் செய்தி கசிந்து சூழல் ஆர்வலர்கள் குரலெழுப்பியபின்னர் ஒப்புக் கொள்வதுதான் அணுசக்தித் துறையின் வாடிக்கை. இப்படி கல்பாக்கத்தில் விபத்துகள் நடந்து ஆறு மாதம் கழித்து அவர்கள் ஒப்புக் கொண்ட சில விபத்துகள் இதோ: 1986 மார்ச்: கதிரியக்கம் உள்ள கனநீர் 15 டன் அளவுக்கு கசிந்து கொட்டியது. இதில் இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு ரிப்பேர் செய்தார்கள். கொட்டியதில் ஏழு டன் நீரைத்தான் திரும்பத் திரட்ட முடிந்தது. கசிந்ததே அவ்வளவுதான் என்று பொய் சொன்னார்கள். 1986 ஆகஸ்ட் 14: எரிபொருள் பண்டிலில் சிக்கல் ஏற்பட்டது. உலகில் எப்போதும் எங்கேயும் இதுவரை இப்படி ஒரு சிக்கல் வந்ததே இல்லை என்று அப்போதைய அணுசக்தித் தலைவர் ராஜா ராமண்னா குறிப்பிட்டார். 1986ல் தங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை, மிகவும் ஆபத்தாக இருக்கிறது என்று சொல்லி 200 தற்காலிக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். நவம்பர் 20ந்தேதி கல்பாக்கம் நகர்புற‌ கூட்டுறவு மளிகைக்கடையில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மளிகைப் பொருட்களை எடுத்து எரித்தார்கள். காரணம் அவை கதிரியக்கக் கழிவுகள் ஏற்றும் லாரிகளில் தவறுதலாக ஏற்றிக் கொண்டுவரப்பட்டவை. எவ்வளவு அலட்சியம், பொறுப்பின்மை பாருங்கள் ! 1987- எரிபொருள் நிரப்பும்போது ரியாக்டரின் மையப்(கோர்) பகுதி சேதமடைந்தது. 1991- கன நீரின் கதிரியக்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 1999- 42 ஊழியர்களுக்கு கடும் கதிர்வீச்சு ஏற்பட்டது. 2002 – கதிரியக்கம் உள்ள 100 கிலோ சோடியம் காற்றுவெளிச்சூழலில் கலந்தது. 2003 – கடும் கதிர்வீச்சுக்கு 6 ஊழியர்கள் உள்ளானார்கள்.
இந்தியா முழுக்க இதே கதைதான். ராஜஸ்தான் உலையில் ஜூலை 1991ல் ஒரு கூடம் கட்டினார்கள். அதற்கு பெயிண்ட் அடிக்க‌ வந்தவ மாதோலால் என்ற தொழிலாளி கலப்பதற்கு தண்ணீர் தேடினார். குழாயில் தண்ணீர் வரவில்லை. பீப்பாய் பீப்பாயாக கன நீர் வைத்திருந்தது. அந்தக் கதிரியக்கம் உள்ள கனநீரை தவறாக எடுத்து பெயிண்ட் அடிக்கக் கலந்தார். உலகிலேயே மிக விலை உயர்ந்த‌ பெயிண்ட்டிங் அதுதான். கன நீர் விலை பல லட்சம் ரூபாய்கள். வேலை முடிந்ததும் அந்த நீரிலேயே மோதிலால் முகம் கழுவினார். தகவல் தெரிந்ததும் அதிகாரிகள் வந்து பெயிண்ட் அடித்த சுவரில் கதிர்வீச்சு இருக்கும் என்பதால் அதை சுரண்டச் செய்தார்கள். மாதோலால் என்ன ஆனார் என்பது தெரியாது. கர்நாடக கைகா உலையில் 2009ல் கதிரியக்கம் உள்ள டிரிட்டியம் கலந்த நீரைக் குடித்த 55 ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
காக்ரபுர், நரோரா, கல்பாக்கம் என்று பல இந்திய அணு உலைகளிலும் டர்பைன் சிறகுகள் உடைவது, எண்ணெய்க் கசிவு, கன நீர் கசிவு, ஹைட்ரஜன் வாயு, சோடியம் கசிவு என்று பல விபத்துகள் நடத்துள்ளன. ஒவ்வொரு விபத்தும் மிகப் பெரிய அணு உலை விபத்தை ஏற்படுத்திவிடும் ஆபத்து உடையவை. அப்படி ஆகாமல் தப்பித்துக் கொண்டிருப்பது தற்செயல்தான். நரோராவில் 1993ல் நடந்த விபத்தில் அணு உலை கொதித்து உருகி பெரிய விபத்து ஏற்படும் விளிம்பிலிருந்து தப்பியிருக்கிறோம். டர்பைன் உடைந்ததில் தொடங்கிய விபத்து ஹைட்ரஜன் வாயு கசிவாக மாறி, அடுத்து எண்ணெய் கசிந்து தீப்பற்றி , பரவிய தீயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அணு உலை எந்தக் கொதி நிலையில் இருக்கிறது என்பதே தெரியாமல் தவித்து சிரமப்பட்டு பிழைத்த விபத்து அது. 2012 சூன் மாத இறுதியில் ராஜஸ்தானில் உள்ள அணு உலையிலிருந்து டிரிட்டியம் கசிந்ததால் 38 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு கட்டத்திலும் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரியாக உள்ளன என்று அதிகாரிகள் சொன்ன ஒவ்வொன்றிலும் தவறு நடந்து விபத்து வளர்ந்தது".(2)(3)(4)
இந்திய‌ அணு சக்‌தி ஆணைய‌ம் விப‌த்து என்று அறிவித்த‌ பிற‌கு ம‌த்திய‌ அர‌சு ஒரு விசாரணைக் குழுவை அமைக்கும், அந்த‌ விசாரணைக் குழுவே இழ‌ப்பீடு தொட‌ர்பாக தீர்ப்பு எடுக்கும், இந்த‌ தீர்ப்பின் மேல் க‌ருத்து சொல்ல‌வோ, அந்த‌ தீர்ப்பை மாற்ற‌வோ இந்தியாவில் எந்த‌ நீதிம‌ன்ற‌த்திற்கும் அதிகார‌ம் இல்லை. ஐந்திலிருந்து ப‌த்தாண்டுக‌ள் செய‌ல்ப‌டும் இந்த‌ விசாரணைக் குழு க‌லைக்க‌ப்ப‌ட்ட‌ பின்ன‌ர் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ம‌த்திய‌ அர‌சிட‌ம் முறையிட‌ வேண்டும். இந்தியாவில் பாதிக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளுக்கு அபூர்வ‌மாக‌ கிடைக்கும் ஒரு சில‌ தீர்ப்புகள் நீதிம‌ன்ற‌ங்க‌ள் மூல‌மாக‌ கிடைக்கின்ற‌ன‌, ஆனால் அந்த‌ வாய்ப்பும் இந்த‌ ச‌ட்ட‌த்தின் மூல‌ம் ம‌றுக்க‌ப்ப‌டுகின்ற‌து. இது மிக‌ப்பெரிய‌ அநீதியாகும். இந்தியாவின் தற்போதைய‌ அணு உலை சந்தையின் மதிப்பு 6 இலட்சம் கோடி ரூபாய் என்பதை இங்கே நினைவு கூற விரும்புகின்றேன். ம‌த்திய‌ அர‌சு அமைக்கும் விசாரணைக் குழுவும், ம‌த்திய‌ அர‌சும் ச‌ரியான‌ முறையில் இழ‌ப்பீடு வ‌ழ‌ங்குமா? என்பதை பார்க்கும் முன்னர் போபாலில் நடந்த பேரழிவிற்கு இந்த‌ அர‌சு எப்ப‌டி வினையாற்றிய‌து என்ப‌தை ச‌ற்றே பார்ப்போம்.
1984 ஆம் ஆண்டு போபாலில் ஏற்ப‌ட்ட‌ விபத்திற்கு அவ‌ர்கள்(யூனியன் கார்பைடு) கொடுத்த‌ கொஞ்ச‌ ப‌ண‌த்தை கூட அரசு பத்திரமாக இன்னும் வ‌ங்கியில் தான் வைத்துள்ளார்க‌ள். பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான இழப்பீடு இன்னும் சென்ற சேரவில்லை.  அதே போல 28 ஆண்டுகள் ஆகியும் அந்த‌ ஆலை க‌ழிவுக‌ளை அர‌சு இன்னும் அக‌ற்றக்கூட‌ இல்லை. இதனால் அந்த பகுதியின் நிலத்தடி நீர் மக்கள் குடிப்பதற்கு பயனற்ற நிலைக்கு சென்றுவிட்டது. இன்னும் ஆறு மாத‌த்திற்குள் அந்த‌ க‌ழிவுக‌ளை அக‌ற்ற‌ வேண்டும் என்று உச்ச‌ நீதிம‌ன்ற‌ம் த‌ன‌து தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ள‌து. இது போன்ற‌ ப‌ல‌ தீர்ப்புகள் இதற்கு முன்னர் வ‌ந்துள்ளன. அவற்றை எல்லாம் செவி மடுக்காத அரசு, இந்த‌ தீர்ப்பை உட‌னே செவிம‌டுத்து ஆலைக‌ழிவுக‌ளை உட‌னே அக‌ற்ற‌ப்போவதும் இல்லை. ஒரு பேர‌ழிவு ஏற்ப‌டும் பொழுது இந்திய‌ அர‌சு எப்ப‌டி செய‌ல்ப‌டும் என்ப‌த‌ற்கு போபால் நிக‌ழ்வு ஒரு சாட்சியாகும்.
இந்த‌ ச‌ட்ட‌த்தில் அணு உலையை கட்டுபவர்களையும் மிகச்சிறிய அளவில் பாதிக்கக்கூடிய‌ ஒரே பிரிவு 17, அதாவ‌து அணு உலை விப‌த்திற்கு கார‌ண‌ம் அணு உலையை க‌ட்டிய‌வ‌ர்க‌ள், அந்த‌ பொருட்க‌ளை வ‌ழ‌ங்கிய‌வ‌ர்க‌ள் என்று தெரிந்தால் அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து இழ‌ப்பீட்டை அணு உலையை நிர்வ‌கிக்கும் அமைப்பு வாங்க‌ முடியும். கூட‌ங்குள‌த்தில் க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ 1,2 அணு உலைக‌ளுக்கு இந்த‌ பிரிவு செல்லாது. மேலும் கூடங்குளத்தில் க‌ட்ட இருக்கும் 3,4,5,6 அணு உலைக‌ளையும், தாங்கள் கட்ட இருக்கும் அணு உலைகளூக்கும்  இந்த‌ பிரிவில் இருந்து விலக்கு வேண்டுமென 100% விழுக்காடு பாதுகாப்பான‌ அணு உலைக‌ளை க‌ட்டும் இர‌சியாவும், அமெரிக்கா, பிரான்சு போன்ற‌ நாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளும் இந்தியாவை வ‌ற்புறுத்தி வ‌ருகின்ற‌ன‌ என்ப‌தை அணு உலையை ஆத‌ரிக்கும் அனைத்து ந‌ண்ப‌ர்க‌ளும் தெரிந்து கொள்ள‌வேண்டும்.
இது ம‌ட்டுமின்றி அதிக‌ப‌ட்ச‌ இழ‌ப்பீடாக‌ அர‌சு நிர்ண‌ய‌த்திருப்ப‌து 1500 கோடி ரூபாய். புகுசிமா அணு உலை விப‌த்தினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ இட‌ங்க‌ளை ச‌ரிசெய்ய‌ குறைந்த‌ ப‌ட்ச‌ம் 72 ஆயிர‌ம் கோடி ரூபாய் ஆகும் என்று சப்பான் அர‌சு சொல்கின்ற‌து.(5) அது போன்ற‌ ஒரு விப‌த்து இந்தியாவில் ந‌ட‌ந்தால் 1500 கோடி ரூபாயை ம‌ட்டுமே இர‌சியாவோ, அமெரிக்காவோ, அல்ல‌து ரிலைய‌ண்சோ, டாட்டாக்க‌ளோ கொடுப்பார்க‌ள் மீத‌முள்ள‌ 70ஆயிர‌ம் கோடி ரூபாய்க‌ளும் ம‌க்க‌ளின் வ‌ரிப்ப‌ண‌த்தில் இருந்தே எடுக்கப்படும்.
அதாவ‌து இர‌சியாவும், ம‌ற்ற‌ நாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளும் கூறுவ‌து என்ன‌வென்றால் அணு உலை க‌ட்டுவ‌த‌ன் மூல‌ம் உருவாகும் இலாப‌ம் முழு‌க்க‌ அவ‌ர்க‌ளுக்கு, அத‌னால் விப‌த்து ஏற்ப‌ட்டு யாரேனும் பாதிக்க‌ப்பட்டால் நாங்கள் ஐந்து பைசா கூட தரமாட்டோம் என்கின்றார்கள். அப்படியே அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டால் கூட அரசு நிர்ணியத்திருக்கும் 1500 கோடி ரூபாய் என்பது மொத்த இழப்பீட்டில் வெறும் 2 விழுக்காடு தான் என்பதே புகுசிமா விபத்து நமக்கு சொல்லும் உண்மை.
இலாப‌ம் முத‌லாளிக்கு, பாதிப்பும், ந‌ட்டமும்  ம‌க்க‌ளுக்கு என்று முதலாளிகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு  இந்த‌ ம‌க்க‌ள் விரோத‌ ச‌ட்ட‌த்தை வ‌டிவ‌மைத்துள்ளது, இந்திய‌ அரசு.
இந்த‌ ம‌க்க‌ள் விரோத‌ ச‌ட்ட‌த்தை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்; தேசிய , புரட்சிகர ,சனநாயக அரசியல் இயக்கங்கள் ஒன்றிணைந்து மக்களைத் திரட்டி இக்கொடிய சட்டத்தை எதிர்ப்போம், ம‌க்க‌ளின் அடிப்ப‌டை ச‌ன‌நாய‌க‌ உரிமைக‌ளை பெறுவ‌த‌ற்காக‌ போராடுவோம்.
.......
ந‌ன்றி: ஞானி (இந்தியாவில் இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ அணு உலை விப‌த்துக‌ள் தொட‌ர்பான‌ ப‌குதி ஞானியின் "ஏன் இந்த உலை வெறி" என்ற க‌ட்டுரையிலிருந்து எடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அக்கட்டுரைக்கான‌ இணைப்பை கீழே கொடுத்துள்ளேன்).
த‌ர‌வுக‌ள்:

இந்தியாவில் அணு உலைகள் வெடித்தால் என்ன‌ ஆகும், இந்த‌ பேர‌ழிவின் போது யார் இழ‌ப்பீடு வ‌ழ‌ங்குவ‌து, எவ்வ‌ள‌வு வ‌ழ‌ங்குவ‌து என்ப‌து தொட‌ர்பான ஒரு ச‌ட்ட‌த்தை பாராளும‌ன்ற‌த்தில் கொண்டுவ‌ர‌ உள்ள‌து. அதாங்க‌ "அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌ம் 2010". இந்த‌ ச‌ட்ட‌த்திலுள்ள‌ சாத‌க‌, பாத‌க‌ங்க‌ளை ப‌ற்றி பார்ப்போம்...

அணு உலை ஆத‌ரவு நண்பர்கள் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வி -‌ ஏங்க‌ ம‌கிழுந்து(Car), பேருந்து, தொட‌ருந்து(Train) கூட‌ தான் அடிக்க‌டி விப‌த்திற்குள்ளாகுது அதுக்காக‌ நாம‌ அதில‌ போகாம‌ இருக்கோமா ? ஏங்க‌ அணு உலை விப‌த்து ந‌ட‌ந்துருன்னு ப‌ய‌ப்ப‌டுறீங்க‌ன்னு, அவ‌ர்க‌ளுக்கான‌ ப‌திலை அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌த்தின் முத‌ல் வ‌ரியிலேயே சொல்லியிருக்காங்க‌

இந்த சட்டம் அணு உலை அழிவால் பாதிக்கப்படும் பின்வருபவர்களுக்கும் பொருந்தும்.

அ) இந்தியாவின் கடல் எல்லைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ளவர்களுக்கும்
ஆ) இந்தியாவின் கடல் எல்லைகளுக்குள்ளே உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்குள்ளே இருப்பவர்களுக்கும்.
இ)இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பலில் பயணம் செய்பவர்களுக்கும்
ஈ) இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கும்
உ)இந்தியாவின் சட்ட எல்லைக்குள் செயற்கை தீவில் இருப்பவர்களுக்கும், செயற்கை தீவவை உருவாக்கிவருபவர்களுக்கும்..(பிரிவு-1) 

ஒரு மகிழுந்து விபத்தினாலோ, பேருந்து விபத்தினாலோ இந்தியாவின் கடல் எல்லைக்கு வெளியில் இருப்பவர்கள் அதாவது அண்டை நாடுகளில் இருப்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், கப்பலிலோ, விமானத்திலோ அந்த நேரம் பயணம் செய்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அது ம‌ட்டுமின்றி அணு உலை விப‌த்து அடுத்து வ‌ரும் த‌லைமுறைக‌ளையும் பாதிக்க‌க்கூடிய‌து. செர்னோபில்லில் நடந்தது போல ஒரு அணு உலை விப‌த்து நடந்தால் அணு உலையை சுற்றி இருக்கும் இலட்சக்கணக்கான மக்களை இந்திய அரசால் வெளியேற்ற முடியுமா? அல்லது விபத்தை கட்டுபடுத்ததான் முடியுமா, சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்தை கூட கட்டுபடுத்த முடியாத அளவில் தான் இந்த அரசிடம் உள்ள தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.மேலும் செர்னொப்பில் விபத்து ந‌ட‌ந்து ப‌ல‌ ப‌த்தாண்டுக‌ள் ஆன‌பின்ன‌ரும் அணு உலையிலிருந்து வெளியேறும் க‌திர்வீச்சு ப‌ன்ம‌ட‌ங்காக‌வே உள்ள‌து. செர்னோபில் ஆலையும் அதைச் சுற்றியுள்ள நிலத்திலும் இனி எக்காலத்திலும் மக்களால் வாழமுடியாது. செர்னோபில்லை சுற்றியுள்ள‌ இட‌ங்க‌ளில் இன்றும் பிற‌க்கும் குழ‌ந்தைக‌ள் க‌திர்வீச்சினால் ஏதோ ஒரு நோயினால் தொட‌ர்ந்து பாதிக்க‌ப்ப‌ட்டே வ‌ருகின்றார்கள்(1). செர்னோபில் விப‌த்து ந‌ட‌ந்த‌து 1986 ஏப்ரலில் என்ப‌தை நினைவில் கொள்க‌.

சில‌ விள‌க்க‌ங்களை இந்த‌ இட‌த்தில் சொல்வ‌து ச‌ரியாக‌ இருக்கும்..

கூடங்குளம் அணு உலையை உதாரணமாகக்கொண்டு சில விளக்கங்கள் உங்களுக்காக-
அணு உலை நிர்வாகி (Operator) - NPCIL (Nuclear power corporation india ltd)
அணு உலை வழங்குநர்(Suplier) -இர‌சியா.
அப்துல்க‌லாம் முத‌ல் நார‌ய‌ண‌சாமி வ‌ரை சொல்லி வ‌ரும் இந்தியாவில்  கட்டப்படுகின்ற‌ அணு உலைக‌ள் எல்லாம் 100 விழுக்காடு பாதுகாப்பான‌து, சுனாமி, பூக‌ம்ப‌ம் போன்ற‌ இய‌ற்கை பேர‌ழிவுக‌ளை தாங்கும் ச‌க்தி கொண்ட‌து என்று சொல்லிவரும் வேளையில், "அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌ம் 2010" இதற்கு நேர் மாறாக சொல்கின்றது.
அ) இயற்கை பேரழிவினால்(T-Sunami, நிலநடுக்கம்...) அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்கு யாரும் பொறுப்பல்ல.
ஆ) ஆயுத மோதலினாலோ, உள் நாட்டு போரினாலோ, பயங்கரவாதத்தினாலோ அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்கு யாரும் பொறுப்பல்ல.
இ) அணு உலை விபத்தினால், அருகில் கட்டப்பட்டுவரும் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதற்கு அணு உலை நிர்வாகம் பொறுப்பல்ல. (பிரிவு 5)
அதாவ‌து அணு உலை விப‌த்து ந‌ட‌ந்தால் யாரும் பொறுப்ப‌ல்ல‌ என்று ம‌றைமுக‌மாக‌ சொல்லுகின்றார்க‌ள். இந்த சரத்துகள் எல்லாம் இந்திய அணுசக்தி ஆணையத்தை காப்பாற்ற மட்டும் சேர்க்கப்பட்டவைய‌ல்ல, அடுத்து இந்தியாவில் அணு உலைகளை நிர்வகிக்க வருகின்ற‌ ரிலையன்ஸ், டாடா, அதை கட்டும் பன்னாட்டு நிறுவனங்களையும் பெரிதும் மனதில் வைத்தே இந்த‌ ச‌ட்ட‌ம் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இது ஒரு ம‌க்க‌ள் விரோதச் ச‌ட்ட‌மாகும்.

புகுசிமா அணு உலை விப‌த்திற்கு ஆழிப்பேர‌லை(T-Sunami) தான் காரண‌ம் என்று தான் நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோம், ஆனால் ச‌ப்பான் அர‌சு நிய‌மித்த‌ உண்மை அறியும் குழு சொன்ன‌து புகுசிமா அணு உலை விப‌த்திற்கு கார‌ண‌ம் ம‌னித‌ த‌வ‌றே என. இதுவே இந்தியாவாக‌ இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை வாசகர்கள் கணிப்பிற்கே விட்டுவிடுகின்றேன். மேலும் அணு உலை விப‌த்து என்ப‌து மிக‌ மோச‌மான‌ பேர‌ழிவை ஏற்ப‌டுத்த‌க்கூடிய‌து. இது போன்ற‌ விப‌த்திற்கு கார‌ண‌ங்க‌ளாக‌ நில‌ந‌டுக்க‌ம் போன்ற‌ கார‌ண‌ங்க‌ளை மிக‌ எளிதாக‌ ம‌த்திய‌, மாநில‌ அர‌சுக‌ள் சொல்லிவிட்டு தங்க‌ள் பொறுப்பிலிருந்து ந‌க‌ர்ந்துவிடவே வாய்ப்புக‌ள் அதிக‌ம்.
சில‌ நாட்க‌ளுக்கு முன்னால் வ‌ந்த‌ செய்தியில் ப‌யங்கர‌‌வாதிக‌ள் சில‌ர் கல்பாக்கம் அணு உலையை த‌க‌ர்க்க‌ திட்ட‌மிட்டுள்ள‌தாக‌ கூறினார்க‌ள். இதையெல்லாம் முன்ன‌ரே உண‌ர்ந்து தானே என்ன‌வோ 2010லேயே ப‌யங்கர‌‌வாதிக‌ள் அணு உலையை தாக்கினால் அந்த‌ விப‌த்திற்கு யாரும் பொறுப்ப‌ல்ல‌ என்று ச‌ட்ட‌த்தை வ‌டிவ‌மைத்துள்ள‌து ம‌த்திய‌ அர‌சு.

மேலும் இந்த‌ ச‌ட்ட‌த்தின் ப‌டி அணு உலை விப‌த்து சிறிதா, பெரிதா என்று கூற‌ வேண்டிய‌து இந்திய‌ அணுச‌க்தி ஆணைய‌ம். 1947லிருந்து இதுவரை அவ‌ர்க‌ளுடைய‌

 ந‌ட‌வ‌டிக்கையை பார்ப்போமேயானால் இதுவரை எந்த‌ அணு உலையிலும் சிறிய‌ அள‌வில் கூட‌ விப‌த்து ந‌ட‌ந்த‌தாக‌க்கூட‌ அவ‌ர்க‌ள் இதுவரை முதலில் ஒப்புக்கொண்டதேயில்லை, பல போராட்டங்களுக்கு பின்னர் தான் , அவையெல்லாம் மிகச்சிறிய விபத்துகள், இனிமேல் இதுபோன்று நடக்காது என்று ஆரூடம் கூறுவார்கள். ஆனால் இதே கால‌க‌ட்ட‌த்தில் இந்திய‌ அணு உலைக‌ளில் ந‌ட‌ந்த‌ விப‌த்துக‌ளின் ப‌ட்டிய‌ல் இதோ....
"1984ல் இயங்கத்தொடங்கிய கல்பாக்கம் அடுத்த சில வருடங்களுக்குள் 200 முறை பல்வேறு சிக்கல்களினால் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஒரு விபத்து நடந்து அது பற்றி பத்திரிகைகளில் செய்தி கசிந்து சூழல் ஆர்வலர்கள் குரலெழுப்பியபின்னர் ஒப்புக் கொள்வதுதான் அணுசக்தித் துறையின் வாடிக்கை. இப்படி கல்பாக்கத்தில் விபத்துகள் நடந்து ஆறு மாதம் கழித்து அவர்கள் ஒப்புக் கொண்ட சில விபத்துகள் இதோ: 1986 மார்ச்: கதிரியக்கம் உள்ள கனநீர் 15 டன் அளவுக்கு கசிந்து கொட்டியது. இதில் இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு ரிப்பேர் செய்தார்கள். கொட்டியதில் ஏழு டன் நீரைத்தான் திரும்பத் திரட்ட முடிந்தது. கசிந்ததே அவ்வளவுதான் என்று பொய் சொன்னார்கள்.

1986 ஆகஸ்ட் 14: எரிபொருள் பண்டிலில் சிக்கல் ஏற்பட்டது. உலகில் எப்போதும் எங்கேயும் இதுவரை இப்படி ஒரு சிக்கல் வந்ததே இல்லை என்று அப்போதைய அணுசக்தித் தலைவர் ராஜா ராமண்னா குறிப்பிட்டார். 1986ல் தங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை, மிகவும் ஆபத்தாக இருக்கிறது என்று சொல்லி 200 தற்காலிக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். நவம்பர் 20ந்தேதி கல்பாக்கம் நகர்புற‌ கூட்டுறவு மளிகைக்கடையில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மளிகைப் பொருட்களை எடுத்து எரித்தார்கள். காரணம் அவை கதிரியக்கக் கழிவுகள் ஏற்றும் லாரிகளில் தவறுதலாக ஏற்றிக் கொண்டுவரப்பட்டவை. எவ்வளவு அலட்சியம், பொறுப்பின்மை பாருங்கள் ! 1987- எரிபொருள் நிரப்பும்போது ரியாக்டரின் மையப்(கோர்) பகுதி சேதமடைந்தது. 1991- கன நீரின் கதிரியக்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 1999- 42 ஊழியர்களுக்கு கடும் கதிர்வீச்சு ஏற்பட்டது. 2002 – கதிரியக்கம் உள்ள 100 கிலோ சோடியம் காற்றுவெளிச்சூழலில் கலந்தது. 2003 – கடும் கதிர்வீச்சுக்கு 6 ஊழியர்கள் உள்ளானார்கள்.

இந்தியா முழுக்க இதே கதைதான். ராஜஸ்தான் உலையில் ஜூலை 1991ல் ஒரு கூடம் கட்டினார்கள். அதற்கு பெயிண்ட் அடிக்க‌ வந்தவ மாதோலால் என்ற தொழிலாளி கலப்பதற்கு தண்ணீர் தேடினார். குழாயில் தண்ணீர் வரவில்லை. பீப்பாய் பீப்பாயாக கன நீர் வைத்திருந்தது. அந்தக் கதிரியக்கம் உள்ள கனநீரை தவறாக எடுத்து பெயிண்ட் அடிக்கக் கலந்தார். உலகிலேயே மிக விலை உயர்ந்த‌ பெயிண்ட்டிங் அதுதான். கன நீர் விலை பல லட்சம் ரூபாய்கள். வேலை முடிந்ததும் அந்த நீரிலேயே மோதிலால் முகம் கழுவினார். தகவல் தெரிந்ததும் அதிகாரிகள் வந்து பெயிண்ட் அடித்த சுவரில் கதிர்வீச்சு இருக்கும் என்பதால் அதை சுரண்டச் செய்தார்கள். மாதோலால் என்ன ஆனார் என்பது தெரியாது. கர்நாடக கைகா உலையில் 2009ல் கதிரியக்கம் உள்ள டிரிட்டியம் கலந்த நீரைக் குடித்த 55 ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

காக்ரபுர், நரோரா, கல்பாக்கம் என்று பல இந்திய அணு உலைகளிலும் டர்பைன் சிறகுகள் உடைவது, எண்ணெய்க் கசிவு, கன நீர் கசிவு, ஹைட்ரஜன் வாயு, சோடியம் கசிவு என்று பல விபத்துகள் நடத்துள்ளன. ஒவ்வொரு விபத்தும் மிகப் பெரிய அணு உலை விபத்தை ஏற்படுத்திவிடும் ஆபத்து உடையவை. அப்படி ஆகாமல் தப்பித்துக் கொண்டிருப்பது தற்செயல்தான். நரோராவில் 1993ல் நடந்த விபத்தில் அணு உலை கொதித்து உருகி பெரிய விபத்து ஏற்படும் விளிம்பிலிருந்து தப்பியிருக்கிறோம். டர்பைன் உடைந்ததில் தொடங்கிய விபத்து ஹைட்ரஜன் வாயு கசிவாக மாறி, அடுத்து எண்ணெய் கசிந்து தீப்பற்றி , பரவிய தீயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அணு உலை எந்தக் கொதி நிலையில் இருக்கிறது என்பதே தெரியாமல் தவித்து சிரமப்பட்டு பிழைத்த விபத்து அது. 2012 சூன் மாத இறுதியில் ராஜஸ்தானில் உள்ள அணு உலையிலிருந்து டிரிட்டியம் கசிந்ததால் 38 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு கட்டத்திலும் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரியாக உள்ளன என்று அதிகாரிகள் சொன்ன ஒவ்வொன்றிலும் தவறு நடந்து விபத்து வளர்ந்தது".(2)(3)(4)

 

இந்திய‌ அணு சக்‌தி ஆணைய‌ம் விப‌த்து என்று அறிவித்த‌ பிற‌கு ம‌த்திய‌ அர‌சு ஒரு விசாரணைக் குழுவை அமைக்கும், அந்த‌ விசாரணைக் குழுவே இழ‌ப்பீடு தொட‌ர்பாக தீர்ப்பு எடுக்கும், இந்த‌ தீர்ப்பின் மேல் க‌ருத்து சொல்ல‌வோ, அந்த‌ தீர்ப்பை மாற்ற‌வோ இந்தியாவில் எந்த‌ நீதிம‌ன்ற‌த்திற்கும் அதிகார‌ம் இல்லை. ஐந்திலிருந்து ப‌த்தாண்டுக‌ள் செய‌ல்ப‌டும் இந்த‌ விசாரணைக் குழு க‌லைக்க‌ப்ப‌ட்ட‌ பின்ன‌ர் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ம‌த்திய‌ அர‌சிட‌ம் முறையிட‌ வேண்டும். இந்தியாவில் பாதிக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளுக்கு அபூர்வ‌மாக‌ கிடைக்கும் ஒரு சில‌ தீர்ப்புகள் நீதிம‌ன்ற‌ங்க‌ள் மூல‌மாக‌ கிடைக்கின்ற‌ன‌, ஆனால் அந்த‌ வாய்ப்பும் இந்த‌ ச‌ட்ட‌த்தின் மூல‌ம் ம‌றுக்க‌ப்ப‌டுகின்ற‌து. இது மிக‌ப்பெரிய‌ அநீதியாகும். இந்தியாவின் தற்போதைய‌ அணு உலை சந்தையின் மதிப்பு 6 இலட்சம் கோடி ரூபாய் என்பதை இங்கே நினைவு கூற விரும்புகின்றேன். ம‌த்திய‌ அர‌சு அமைக்கும் விசாரணைக் குழுவும், ம‌த்திய‌ அர‌சும் ச‌ரியான‌ முறையில் இழ‌ப்பீடு வ‌ழ‌ங்குமா? என்பதை பார்க்கும் முன்னர் போபாலில் நடந்த பேரழிவிற்கு இந்த‌ அர‌சு எப்ப‌டி வினையாற்றிய‌து என்ப‌தை ச‌ற்றே பார்ப்போம்.

1984 ஆம் ஆண்டு போபாலில் ஏற்ப‌ட்ட‌ விபத்திற்கு அவ‌ர்கள்(யூனியன் கார்பைடு) கொடுத்த‌ கொஞ்ச‌ ப‌ண‌த்தை கூட அரசு பத்திரமாக இன்னும் வ‌ங்கியில் தான் வைத்துள்ளார்க‌ள். பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான இழப்பீடு இன்னும் சென்ற சேரவில்லை.  அதே போல 28 ஆண்டுகள் ஆகியும் அந்த‌ ஆலை க‌ழிவுக‌ளை அர‌சு இன்னும் அக‌ற்றக்கூட‌ இல்லை. இதனால் அந்த பகுதியின் நிலத்தடி நீர் மக்கள் குடிப்பதற்கு பயனற்ற நிலைக்கு சென்றுவிட்டது. இன்னும் ஆறு மாத‌த்திற்குள் அந்த‌ க‌ழிவுக‌ளை அக‌ற்ற‌ வேண்டும் என்று உச்ச‌ நீதிம‌ன்ற‌ம் த‌ன‌து தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ள‌து. இது போன்ற‌ ப‌ல‌ தீர்ப்புகள் இதற்கு முன்னர் வ‌ந்துள்ளன. அவற்றை எல்லாம் செவி மடுக்காத அரசு, இந்த‌ தீர்ப்பை உட‌னே செவிம‌டுத்து ஆலைக‌ழிவுக‌ளை உட‌னே அக‌ற்ற‌ப்போவதும் இல்லை. ஒரு பேர‌ழிவு ஏற்ப‌டும் பொழுது இந்திய‌ அர‌சு எப்ப‌டி செய‌ல்ப‌டும் என்ப‌த‌ற்கு போபால் நிக‌ழ்வு ஒரு சாட்சியாகும். இந்த‌ ச‌ட்ட‌த்தில் அணு உலையை கட்டுபவர்களையும் மிகச்சிறிய அளவில் பாதிக்கக்கூடிய‌ ஒரே பிரிவு 17, அதாவ‌து அணு உலை விப‌த்திற்கு கார‌ண‌ம் அணு உலையை க‌ட்டிய‌வ‌ர்க‌ள், அந்த‌ பொருட்க‌ளை வ‌ழ‌ங்கிய‌வ‌ர்க‌ள் என்று தெரிந்தால் அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து இழ‌ப்பீட்டை அணு உலையை நிர்வ‌கிக்கும் அமைப்பு வாங்க‌ முடியும். கூட‌ங்குள‌த்தில் க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ 1,2 அணு உலைக‌ளுக்கு இந்த‌ பிரிவு செல்லாது. மேலும் கூடங்குளத்தில் க‌ட்ட இருக்கும் 3,4,5,6 அணு உலைக‌ளையும், தாங்கள் கட்ட இருக்கும் அணு உலைகளூக்கும்  இந்த‌ பிரிவில் இருந்து விலக்கு வேண்டுமென 100% விழுக்காடு பாதுகாப்பான‌ அணு உலைக‌ளை க‌ட்டும் இர‌சியாவும், அமெரிக்கா, பிரான்சு போன்ற‌ நாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளும் இந்தியாவை வ‌ற்புறுத்தி வ‌ருகின்ற‌ன‌ என்ப‌தை அணு உலையை ஆத‌ரிக்கும் அனைத்து ந‌ண்ப‌ர்க‌ளும் தெரிந்து கொள்ள‌வேண்டும்.    

இது ம‌ட்டுமின்றி அதிக‌ப‌ட்ச‌ இழ‌ப்பீடாக‌ அர‌சு நிர்ண‌ய‌த்திருப்ப‌து 1500 கோடி ரூபாய். புகுசிமா அணு உலை விப‌த்தினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ இட‌ங்க‌ளை ச‌ரிசெய்ய‌ குறைந்த‌ ப‌ட்ச‌ம் 72 ஆயிர‌ம் கோடி ரூபாய் ஆகும் என்று சப்பான் அர‌சு சொல்கின்ற‌து.(5) அது போன்ற‌ ஒரு விப‌த்து இந்தியாவில் ந‌ட‌ந்தால் 1500 கோடி ரூபாயை ம‌ட்டுமே இர‌சியாவோ, அமெரிக்காவோ, அல்ல‌து ரிலைய‌ண்சோ, டாட்டாக்க‌ளோ கொடுப்பார்க‌ள் மீத‌முள்ள‌ 70ஆயிர‌ம் கோடி ரூபாய்க‌ளும் ம‌க்க‌ளின் வ‌ரிப்ப‌ண‌த்தில் இருந்தே எடுக்கப்படும்.  அதாவ‌து இர‌சியாவும், ம‌ற்ற‌ நாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளும் கூறுவ‌து என்ன‌வென்றால் அணு உலை க‌ட்டுவ‌த‌ன் மூல‌ம் உருவாகும் இலாப‌ம் முழு‌க்க‌ அவ‌ர்க‌ளுக்கு, அத‌னால் விப‌த்து ஏற்ப‌ட்டு யாரேனும் பாதிக்க‌ப்பட்டால் நாங்கள் ஐந்து பைசா கூட தரமாட்டோம் என்கின்றார்கள். அப்படியே அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டால் கூட அரசு நிர்ணியத்திருக்கும் 1500 கோடி ரூபாய் என்பது மொத்த இழப்பீட்டில் வெறும் 2 விழுக்காடு தான் என்பதே புகுசிமா விபத்து நமக்கு சொல்லும் உண்மை.

இலாப‌ம் முத‌லாளிக்கு, பாதிப்பும், ந‌ட்டமும்  ம‌க்க‌ளுக்கு என்று முதலாளிகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு  இந்த‌ ம‌க்க‌ள் விரோத‌ ச‌ட்ட‌த்தை வ‌டிவ‌மைத்துள்ளது, இந்திய‌ அரசு.

இந்த‌ ம‌க்க‌ள் விரோத‌ ச‌ட்ட‌த்தை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்; தேசிய , புரட்சிகர ,சனநாயக அரசியல் இயக்கங்கள் ஒன்றிணைந்து மக்களைத் திரட்டி இக்கொடிய சட்டத்தை எதிர்ப்போம், ம‌க்க‌ளின் அடிப்ப‌டை ச‌ன‌நாய‌க‌ உரிமைக‌ளை பெறுவ‌த‌ற்காக‌ போராடுவோம்.

.......
ந‌ன்றி: ஞானி (இந்தியாவில் இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ அணு உலை விப‌த்துக‌ள் தொட‌ர்பான‌ ப‌குதி ஞானியின் "ஏன் இந்த உலை வெறி" என்ற க‌ட்டுரையிலிருந்து எடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அக்கட்டுரைக்கான‌ இணைப்பை கீழே கொடுத்துள்ளேன்).

த‌ர‌வுக‌ள்:

Snabak Vinod (SV)

unread,
Sep 10, 2012, 2:17:52 PM9/10/12
to நட்புடன், இளவேனில், Save_Tamils, தமிழ் சிறகுகள்


---------- Forwarded message ----------
From: Asif Meeran AJ <asifm...@gmail.com>
Date: 2012/9/10
Subject: Re: [பண்புடன்] கூடங்குளம்
To: panb...@googlegroups.com


கூடன்குளம் தொடர்பாக ஏசியாநெட் வானொலியில் இன்று நேயர்களுடன் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக இத்தகு போராட்டங்கள் நடப்பதாகவும், நாட்டின் வளர்ச்சிக்கு அணு உலை மிக அவசியமென்றும், அப்துல் கலாமே சொல்லி விட்டதால் பாதுகாப்பு பற்றி பிரச்னை இல்லையென்றும், தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லாமல் போக அணு உலை அவசியமென்றும், பணம் வாங்கிக் கொண்டு மக்களைப் போராட வைக்கிறார்கள் என்றும் அவரவர்கள் பேசிக் கொண்டிருக்க நிகழ்ச்சியில் நேரடியாகக் கலந்து கொண்டு நான் பேசினேன்

தமிழக அரசியல் கட்சிகள் இம்மக்களுக்கு ஆதரவில்லை என்பதையும், அணு உலை செயல்பட்டாலும் தமிழ்நாட்டுக்கு முழுமையாக மின்சாரம் கிடைத்து தமிழக் மின்வெட்டு தீர்வது கடினமென்பதையும், பணம் கொடுத்து வரவ்ழைக்கப்படுவதாகச் சொல்வதற்கான ஆதாரத்தை எவரும் இதுவரை சொல்லாததையும், தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் அணு உலைக்கு ஆதரவளிப்பதையும் சொன்னேன்

இந்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அந்தப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மட்டுமே என்று ஒருவர் குறை சொன்னார். அதற்கு பதிலளிக்கும்போது தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால்தான் மீனவர்கள் போராடுகிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை மீனவனாகப் பிறந்து விட்டால் ராமேஸ்வரத்திலும் சரி, கூடன் குளத்திலும் சரி அவன் உயிருக்கும் வாழ்வாதரத்திற்கும் உத்தரவாதமில்லை என்றேன்

அணு உலை சிக்கலானதா இல்லையா என்ற கேள்விகளுக்குள் நுழைய நான் முற்பட மாட்டேன்.ஆனால், அவர்களின் ஆதங்கத்தை செவி கொடுத்து கேட்க அரசுகள் தவறி விட்டன. 15000 கோடி முடக்கப்பட்ட நிலையில் இத்திட்டத்தை கைவிடுவது அரசுக்கு நட்டமென்பவர்கள் 2ஜி அலைக்கற்றை ஊழலில் நிலக்கரி ஊழலிலுமாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பைப்பற்றிக் கொஞ்சம் சிந்திக்க வேண்டுமென்றேன்

இது ஜனநாயக நாடு என்பதால் நிச்சயம் இந்த அணு உலையை மக்கள் எதிர்ப்பையும் மீறி அரசு செயல்படுத்தவே செய்யும். அணு உலை இயங்கக் கூடும். ஆனாலும், தங்கள் வாழ்வுரிமைக்காக அரசு அதிகார வர்க்கத்தை எதிர்த்துத் துணிச்சலாக நிற்கும் அந்த மக்களைப் பாராட்டுகிறேன் அந்தப் போராட்டத்தை தங்களது சுயநலனுக்காக எதிர்ப்பவர்கள் பட்டியலில் நான் இருக்கவும் மாட்டேன். I salute the people of koodankulam for their courage என்று முடித்தேன்

மலையாளம், தமிழ் ஆங்கிலம் என்று கலந்து பேசினேன். நிகழ்ச்சி முடிந்ததும் நிகழ்ச்சியை வழங்கிஅய் நண்பர் பிஜுவும் நிலைய இயக்குனர் ரமேஷ் பய்யனூரும் மிகச் சிறப்பாக போராட்டம் குறித்துப் பேசியதாகச் சொன்னார்கள். ஏதோ.. என் மக்களுக்காக என்னால் முடிந்தது

J.P Josephine

unread,
Oct 29, 2012, 8:36:33 PM10/29/12
to ilav...@googlegroups.com
வாழ்த்துக்கள்

2012/9/10 Snabak Vinod (SV) <snaba...@gmail.com>

--
அன்பு இனியது.
அன்பில் விளையும் இன்பம் இனியது.
இன்பத்தில் பாடும் தமிழ் இனியது.



--
Thanking you,
With Regards and Warm wishes,
J.P. Josephine Baba

Reply all
Reply to author
Forward
0 new messages