|
|
கல்யாணம் பண்ணும் முன் பெண்ணிடம் கவணிக்க வேண்டியது |

சாரயச் சாவுகளை நேரில் கண்டிருக்கிறேன் என்பதால் அதன் வீரியமும், விளைவுகளும் நன்றாக தெரியும். கணவன் இருக்கிறான், தகப்பன் இருக்கிறான் என எதைப் பற்றியும் கவலையில்லாமல் இருந்த வாழ்க்கையில், சட்டென நிகழும் மரணத்தால் ஏற்படும் மாற்றங்கள் எழுத்தால் கொண்டுவர முடியாதவை. அந்த மரணங்கள் உலகமறிய தாய்மார்களை உழைக்கும் நிலைக்கும், படிப்பை ஒதுக்கிவிட்டு குழந்தைகள் குடும்ப
பாரம் சுமக்கும் நிலைக்கும் கொண்டுவந்துவிடுகிறது.
ஆனால் மக்களைப் பற்றி கவலை கொள்ள வேண்டியவர்கள் பணம் ஈட்டுவதில் மட்டுமே கவணமாக உள்ளார்கள். தமிழ்நாட்டில் தெருவுக்கு தெரு தண்ணீர் பம்புகள் இருக்கிறதோ இல்லையோ, தமிழன் தண்ணியடிக்க டாஸ்மார்க் கடைகள் இருக்கின்றன. கோவில்களில் கூட்டம் இருக்கிறதோ இல்லையோ, டாஸ்மார்க்குகளில் கூட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. திருவிழா சமயங்களில் 200 கோடிக்கும் 300 கோடிக்கும் விற்பனை செய்ய வேண்டுமென அரசே வற்புறுத்துகிறது. கள்ளச்சாராயம் விற்பதும், கள் குடிப்பதும் குற்றம், அதனால் அரசிற்கு வருமானம் இல்லை என வருத்தம் கொள்கின்றார்கள்.
கருப்பு சாமிக்கும், முனி சாமிக்கும் பக்தர்கள் பாட்டில்களை படைக்கின்றனர் என ஒரு புறம் நாத்திகர்களின் கோசம் கேட்டுக்கொண்டிருக்கையில், புதிய ரக சரக்குகளை அறிமுகம் செய்து குடிமகன்களை குசிப்படுத்தபோவதாக செய்திகள் வருகின்றன. அரசே மதுபானம் விற்பதை எதிர்த்த ஒரே அரசியல்வாதி ராமதாஸ். தனிப்பட்ட அரசியலுக்காக எதிர்த்தார் என்றாலும், உண்மையில் சந்தோசமாகவே இருந்தது. அவரும் இப்போது அடக்கிவாசிக்கிறார். அடுத்த கூட்டணிக்காக அரசியல்வாதிகள் மாறுவது இது ஒன்றும் புதிதல்ல. எனினும் மதுக்கடையில் புரளுகின்ற பணத்தில் இருக்கும் மகாத்தமா நிச்சயம் நம்மை மன்னிக்கமாட்டார் என்பது மட்டும் உறுதி.
முன்பெல்லாம் ஆண்கள் மட்டுமே மதுஅருந்தி வந்தனர். இப்போது எல்லாவற்றிலும் சரிநிகராய் இருக்க வேண்டும் என பெண்களும் மது அருந்த தொடங்கிவிட்டார். மேலை நாடுகளின் கலாச்சாரம் மெதுவாக இங்கும் பரவதொடங்கிவிட்டது. கால்சென்டர்களுக்கு முன்னால் இருக்கும் பொட்டிக்கடையில் பெண்கள் புகைப்பிடிப்பதும், கல்லூரிப் பெண்கள் மது அருந்துவம் இயல்பாகிக் கொண்டிருக்கிறது. அதை பறைசாற்றும் விதமாக நண்பன் அனுப்பிய மின்னஞ்சல்.
மூஞ்சிய மட்டும் பார்த்து ஏமாந்திடதிங்க !. :-)
இவங்கள கல்யாணம் பண்ணா நம்ம குவாட்டர், கட்டிங்ல பங்கு கேப்பான்களே... :-)
முன்னாடிலாம் பொண்ணு பார்க்க போகும் போது பொண்ண பாட சொல்லுவாங்க, ஆனா இப்போலாம் ஊத சொல்லணும் போல இருக்கு.. :-)
"The positive thinker sees the invisible, feels the intangible, and achieves the impossible."